jaga flash news

Thursday 16 January 2014

Build your Immunity - எதிர்ப்பு சக்தியை கூட்டுங்கள்

Build your Immunity - எதிர்ப்பு சக்தியை கூட்டுங்கள்



               In order to achieve things in this world we should be alive. To be alive we should be healthy.  To be healthy our IMMUNE SYSTEM, the defending mechanism in our body should be build up strong. How is that possible ?

               It is possible in an easy way. In the books written by Siddhars, the great Tamil Mystics. They have a solution for turning their bodies into super immunity, so that they can be free from diseases and do their research from alchemy to astronomy without bodily suffering. They achieved this some 2000 years back. 

               So it possible for people like us. Yes, in their medicinal research books they have mentioned. Usually Siddhars or Tamil Mystics used to write their findings with the grace of Lord Muruga in Tamil Langauage and also as poems. One such poem deal with this topic.

               As it is given in Tamil Language, I will write up here the instructions given in the poem on what to do to get immunity.

Medicine: Indian Neem Tree Leaf. (not the grown green leaf but the brown tender leaf usually seen in the tip of the bark).

Day: On Nov 20, 2013 one should pluck 5 to 6 leaves from the neem tree, which has more juice in it and eat it raw anytime between 6.00 a.m to 10.00 a.m before taking any breakfast or hot drinks.

How many days: For a total of 27 days one should eat it like this way. 

This is the only simple solution. Many of you might ask why on Nov 20, 2013. It is because on the day of Nov 20, 2013, Mrigasirisha nakshatra shows up. If you can check in Indian calendar you will find it. 

It is only said that on the lunar month of karthiga in mrigasirisha nakshatra one should start eating the tender neem leaves continuing up to 27 days.  Nov 20, 2013 is that day according to solar calendar. For each year it might be different in solar calendar.

The Siddhars call this as Vembu karpam. Vembu means neem, karpam means medicine.

Try it and don’t miss the day because you will have to wait for one more year to do this.
 
horoscience

உலகத்தில் நாம் நமது கடமைகளை செய்ய நாம் உயிரோடு இருக்க வேண்டும். உயிரோடு இருக்க நாம் உடல் வலிமையோடு இருக்க வேண்டும். வலிமையோடு இருக்க நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை கூட்ட வேண்டும். எப்படி அதை செய்வது, அது சாத்தியமா ? சாத்தியம் தான்.

நமது தமிழ் சித்தர்கள் அதற்கு பாடல்களாக தங்கள் கண்டுபிடிப்புகளை இயற்றியுள்ளனர்.

தானவனாம் வேம்பினுட கற்பந்தன்னைத்
   தாரணியில் சித்தர்களே சாற்றக்கேளு
மானதொரு கார்த்திகையாம் மாதந்தன்னில்
   வாழ்மிருக சீரிடமும் பூஷந்தன்னில்
ஏனமுதற் ஜலமிக்க கொழுந்தைக்கிள்ளி
   இன்பமுடன் தின்றுவா யிருபத்தேழ்நாள்
ஆனதொரு சர்ப்பங்கள் தீண்டினாலும்
   அதுபட்டுப் போகுமப்பா அறிந்துகொள்ளே.

- கருவூரார்.


கருவூரார் சித்தர் கூறுவது போல், கார்திகை மாதத்தில் வரும் மிருகசிரிசம் அல்லது பூசம் நட்சத்திர நாளில் வேப்ப மர இலை கொகழுந்தை கிள்ளி தொடர்ந்து 27 நாட்களுக்கு மென்று வர, உடலில் எதிர்ப்பு சக்தி கூடும்.

வரும் நவம்பர் 20 ஆம் நாள் மிருகசிரிசம் நட்சத்திரம் மதியம் வரை இருக்கும், 23 ஆம் நாள் பூச நட்சத்திரம் அதிகாலை 1.53 வரை இருக்கும்(ஆதலால் 23 உகர்ந்த நாள் இல்லை). உங்கள் நாட்காட்கடி பாருங்கள் புரியும்.


ஆகவே , நவம்பர் 20 ஆம் தேதி ஆரம்பித்து 27 நாட்கள் காலையில் உணவுக்கு முன் 6.00 - 10.00 மனிக்குள் நல்ல நீர் பதம் உள்ள வேப்பங் கொழுந்த்தை மென்று உண்டு வரவும்.


இது வேம்பு கற்பகம் என்று சித்தர்களால் சொல்லப்படும். முயற்சி செய்யுங்கள், இல்லை என்றால் அடுத்த வருடம் கார்த்திகை மாதம் வரை காத்திருக்க வேண்டும்.

Wednesday 15 January 2014

‘யாழ் இனிது குழல் இனிது என்பர் தம்மக்கள் மழலைச் சொல் கேளாதோர்’ குழந்தைகளைப் பேச வைக்க வழிகள்

‘யாழ் இனிது குழல் இனிது என்பர் தம்மக்கள் மழலைச் சொல் கேளாதோர்’ என்றார் வள்ளுவர். வள்ளுவனின் வார்த்தைகளுக்கேற்ப, உங்கள் குழந்தைகள் மழழை பேச்சில் மயங்கி இருக்கும் நீங்கள் அவர்கள் எப்போது பேசுவார்கள் என்று நிச்சயம் காத்துக் கொண்டு தான் இருப்பீர்கள்.
அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தையின் வளரும் பருவத்திற்கு ஏற்ப வளர்ச்சிகளை அவர்கள் பெறுகின்றனரா என்று கவனித்துக் கொண்டு தான் இருப்பார்கள். சில குழந்தைகள் விரைவாக பேசி விடுவார்கள். அவர்களுக்கு தங்கள் குழந்தை, மழழை மொழியில் அழகாக பேசுவதை கேட்கும் போது அவர்களுக்கு கிடைக்கும் ஆனந்தத்திற்கு அளவு கிடையாது. ஆனால் சிலர் அந்த குறிப்பிட்ட காலத்தில் பேசுவதில்லை. இவர்கள் மற்ற குழந்தைகளை காட்டிலும் சிறிது நாட்கள் கழித்து தான் பேசுவார்கள்.
இந்த சமயத்தில் தான் நமது குழந்தையை எப்படியாவது பேச வைக்க வேண்டும் என்று எண்ணுவீர்கள். அதுமட்டுமல்லாமல் அதற்கான முயற்சிகளையும் எடுத்துக் கொண்டு வருவீர்கள். குழந்தைகள் பேசுவது அவர்கள் வளரும் மற்றும் வெளிப்படுத்தப்படும் வெவ்வேறு சூழல்களுக்கேற்ப மாறுபாடுகின்றது. குறித்த காலத்தில் பேசாத குழந்தைகளை நாம் உடனடியாக ஒரு நல்ல மருத்துவரிடம் அல்லது பேச்சு சிகிச்சை தருபவரிடம் கூட்டிச் சென்று அதன் காரணங்களை கண்டறிய வேண்டியுள்ளது.
மருத்துவ ரீதியான காரணங்களை தவிர்த்து வேறு எந்த வித காரணமாக இருந்தாலும் நம்மால் கட்டாயம் குழந்தைகளை பேச வைக்க முடியும். உங்கள் குழந்தைக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கி சிறிது முயற்சி செய்தால் போதும் அவர்களை பேச வைத்திட முடியும். இதற்கு பல வழிகள் உள்ளன. அதற்கு செய்ய வேண்டிய முயற்சிகளை பற்றி இங்கு குறிப்பிட்டுள்ளோம்.
அனைவருடனும் பழக விடுங்கள்
உங்கள் குழந்தையை அனைவருடனும் பழக விட வேண்டும். இதுவே நீங்கள் பெருமளவில் முயற்சி செய்யாமல் அவர்களை பேச வைத்திட சிறந்த வழியாகும். மற்ற குழந்தைகளுடனும் விளையாட விடும் போது பேச்சு தானாக நிச்சயம் வரும். இவ்வாறு செய்வதால் உங்கள் குழந்தை மற்றவர்களிடம் பேசுவதன் அவசியத்தை ஏற்படுத்த முடியும் மற்றும் உங்களுடைய முயற்சிகள் இல்லாமலேயே அவர்கள் பேசத் தொடங்குவார்கள்.
அவர்களுடன் பேசுங்கள்
எப்போதும் வேலை வேலை என்று இருந்தால் குழந்தைகளை பேச வைக்க வெகு நாட்களாகி விடும். குழந்தைகளுடன் பேசும் போது தான் அவர்களும் பேச கற்றுக் கொள்கின்றனர். அவர்களுக்கு என்ன புரியப் போகின்றது என்று தவறாக எண்ணி விடாதீர்கள். நீங்கள் சும்மாவாவது அவர்களிடம் பேசும் போது, அவர்கள் அதற்கு பதில் அளிக்கத் தொடங்குவார்கள்.
அனைத்து பெயர்களையும் செல்லித் தருதல்
உங்கள் வீட்டிலுள்ள ஒவ்வொரு பொருளின் பெயரையும் குறிப்பிட்டு பேசுவது நல்ல யோசனையாகும். அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா போன்ற அழைக்கும் சொற்களையும் எப்போதும் கூறி கொண்டு அவர்களையும் சொல்ல வையுங்கள். நீங்கள் கேட்பது அவர்களுக்கு விரைவாக புரிந்து விடும். இதுவே உங்கள் குழந்தையை பேச வைக்க சிறந்த வழியாகும்.
இரவு நேரக் கதைகள்
ஒருவேளை உங்கள் குழந்தை இன்னும் பேசாமல் இருந்தால் இரவு நேரத்தில் படுக்கைக்கு செல்லும் போது கதைகளை படித்து காட்டுங்கள். இதுவும் உங்கள் குழந்தையின் பேச்சுத்திறனை வெளிப்படுத்தும் சிறந்த முயற்சியாக அமைகின்றது. இதை செய்தால் உடனடியாக வித்தியாசம் காண முடியாது ஆனால் உங்களுக்கு நல்ல ஒரு பதில் கிடைக்கும் வரை முயற்சி செய்வதை விட்டு விடாதீர்கள்.
சத்தத்தை திரும்பச் சொல்வது
ஆடு, மாடு, நாய் மற்றும் பறவைகள் ஆகியவற்றின் சத்தத்தை அவர்களுக்கு சொல்லிக் காட்டுங்கள். நல்ல சங்கீதம் மற்றும் குழந்தைகளுக்கான பாடல்களை கேட்க விடுங்கள். இதை அவர்கள் கேட்டு திரும்பச் சொல்லும் வரை பொறுமையுடன் காத்திருங்கள். அவர்கள் கேட்டதை ஒரு நாள் நிச்சயம் சொல்லுவார்கள்.
குழந்தைப் பாடல்கள்
இந்த பாடல்களை குழந்தைகளுக்கு போட்டு காண்பிக்கலாம் மற்றும் பாடியும் காட்டலாம். அவர்கள் சாப்பிடும் போதும் மற்றும் குளிக்கும் போது இதை செய்யலாம். இதை திரும்பத் திரும்ப கேட்கும் போது அவர்களும் ஒரு நாள் அதை பாடுவார்கள். குழந்தைகளை பேச வைக்க இதுவும் ஒரு வழியாகும்.
திருப்பி சொல்லச் சொல்லுங்கள்
வெறும் பேச்சு மட்டும் போதாது. அவர்களையும் திருப்பிச் சொல்ல சொல்லுங்கள். சிறிய வார்த்தைகளை சொல்லிக் கொண்டே இருங்கள். அது குழந்தையின் பெயராகவும் கூட இருக்கலாம், அந்த பெயரை கொண்டு இரவு நேர கதைகளில் ஏதேனும் ஒரு கதையை சொல்லலாம். இது அவர்களுக்கு நிச்சயம் புரியும். இதை எல்லாம் கேட்கும் குழந்தைகள் வெகு சீக்கிரம் பேசி விடுவார்கள்.