jaga flash news

Saturday 29 August 2015

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? (ஒரு அறிவியல் பூர்வமான அலசல்)



படித்து பாருங்கள் உங்களுக்கு மெய்
சிலிர்த்துபோகும் !!
கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்?
(ஒரு அறிவியல் பூர்வமான அலசல்)
இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட்
கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள
வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும்
கோயில்களுக்கு மட்டும் தான் இது.
பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது.
எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்.:
பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த
கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்கு புறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி.
கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும்.
முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.
இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும்
பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும்.
நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும். அது எதற்கு தெரியுமா? அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.
அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும்
தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும்
ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும். இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி. ரெகுலராய் கோயிலுக்கு செல்லும்
ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த கோயிலில் கிடைக்கும்
என்று.
அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும்
காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான்
மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட
சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.
மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும்.. அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்).. அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.
அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும்
அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும்
கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம். இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு,
தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள்
செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும்
எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய்
போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம்
செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது..
அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த
எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள்,
கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்),
குங்குமப்பூ (சேஃப்ரான்), கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம்
ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல்
எங்கும் கிடைக்காது. இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட
அதில் உள்ள மகிமை மிக அதிகம்.
தை ரெகுலராய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை. இதை மூன்று தடவை கொடுக்கும்
காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த
உடம்பை புண்ணியமாக்க; மீதி இரண்டு சொட்டு உங்கள்
உடம்பை பரிசுத்தமாக்க.
இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும்
இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அற்புதமான கலவை தான் இந்த தீர்த்தம்.
கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.
கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும்
போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக
எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த
ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள். அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும்
அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும்
போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம்
இது தான். கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில்
சேரும் என்பது ஐதீகம்.
பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.
நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய
நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை கூட
கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார்
சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம்
இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன்
எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம். இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.
கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட்.
எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில்
ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும்
சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் இந்த கோயிலின்
மூலஸ்தானம்.
அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்த பரிகாரத்திற்கும் ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டென்றால்
அது மிகையாகது..
கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.
அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம்
கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட
லைட்னிங் அரெஸ்டர்ஸ்..
அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும்
இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும்
இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர். அது போக கோயில்
கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால்
எல்லா ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும் ஒரு சிறப்பு விஷயம். இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும்
ஒரு இயற்கை விஷயம் தான். நல்ல மானிடர்..
இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும். சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான்..
கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும்
சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது.. சில கோயில்களில்
இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த
எனர்ஜி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற
மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில் டெக்னாலஜி...

Friday 28 August 2015

கடக லக்கினம்

பிரகஸ்பதி எனும் தேவ குரு கடகத்தில் இருந்து, குரு வட்டமான சிம்ம ராசிக்கு பெயர்ச்சி பெற்று இருப்பது, வரவேற்க்கதக்க அம்சமாகவே ஜோதிடதீபம் கருதுகிறது,ராசியை அடிப்படையாக கொண்டு இந்த குரு பெயர்ச்சி பலன்களை சிந்திப்பதை விட, சுய ஜாதகத்தை இயக்கும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு, நடைபெறும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சமம் ஏற்று நடத்தும் பாவகங்களுடன் குரு பகவானின் தொடர்புகளை ( அமர்வு மற்றும் பார்வை ) கொண்டு சுய ஜாதக பலனை கணிதம் செய்யும் பொழுது ஜாதக ரீதியான துல்லியமான பலன்களை காண இயலும், இனி மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு குரு பகவான் வழங்கும் பலன்களை ஆய்வுக்கும் சிந்தனைக்கும்  எடுத்துகொள்வோம் அன்பர்களே!

கடக லக்கினம் :


கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 4ம் ராசியான கடகத்தை லக்கினமாக கொண்ட அன்பர்களே! தங்களுக்கு தற்பொழுது நடைபெறும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சமம் 2,6,8,10ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் கிழ்கண்ட பலன்கள் குரு பெயர்ச்சியின் காரணமாக குரு பகவான் தங்களுக்கு வாரி வழங்குவார், 2ம் பாவகமான சிம்மத்தில் அமர்ந்து இருக்கும் குரு பகவான் கடக இலக்கின அன்பர்களுக்கு கை நிறைவான வருமான வாய்ப்புகளையும், இனிமையான  பேச்சு திறனையும் வாரி வழங்குவார், குடும்பத்தில் சிறு சிறு குழப்பங்கள் வந்த போதிலும் இறுதியில் நன்மையே விளையும், திருமண வாய்ப்புகள் கைகூடி வரும், இது வரை திருமணம் ஆக அன்பர்களுக்கு நல்ல வரணும் வதுவும் அமையும், கலை துறையிலும், மருத்துவ துறையிலும் உள்ள அன்பர்களுக்கு  எதிர் பாராத வெற்றிகளும் லாபங்களும் வந்து குவியும், ஆய்வுகள் மூலம் தொழில் நுட்பம் சாந்த விஷயங்களில் பல புதுமை படைப்புகளை இளைய சமுதாயத்தை சார்ந்த கடக இலக்கின அன்பர்கள்  கண்டறிந்து சாதனை செய்வார்கள், கல்வியில் புகழ் பெறுவார்கள், தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகளை பெரும் யோக காலமாக கடக இலக்கின அன்பர்களுக்கு இந்த குறு பெயர்ச்சி அமையும்.


2ல் அமர்ந்த குரு தனது 5ம் பார்வையாக சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்தை வசீகரிப்பது கடக லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, 6ம் பாவக வழியில் இருந்து குறுகிய கால வெற்றிகளை தங்கு தடை இன்றி வாரி வழங்குவார், எதிரிகள் மூலம் லாபமும், எதிரிகளின் செயல்கள் கடக இலக்கின அன்பர்களுக்கு சாதகமாக அமைந்து நன்மையை செய்யும், உடல் ரீதியான குறிப்பாக வயிறு சார்ந்த தொல்லைகள் அதிக அளவில் வரும்  என்பதால் உணவு பழக்க வழக்கத்தில் மிகுந்த கட்டுபாடும், சுகாதாரத்தையும் கடைபிடிப்பது நலம் தரும், தீய பழக்க வழக்கங்களில் இருந்து விடுபட இது ஒரு சரியான நேரமாக கடக இலக்கின அன்பர்கள் கருதலாம், தன்னை விட வயதில் அதிகம் உள்ள பெரிய மனிதர்களிடம் மிகுந்த மரியாதையுடனும், பணிவுடன் நடந்துகொள்வது கடக இலக்கின அன்பர்களுக்கு மிகுந்த நன்மையை தரும், தொழில் ரீதியாக சிறு சிறு அதிர்ஷ்டங்கள் தொடர்ந்து கிடைத்த வண்ணமே இருக்கும், தேர்வு மற்றும் வழக்குகளில் வெற்றியும், சொத்து சுக சேர்க்கையும் உண்டாகும்.

2ல் அமர்ந்த குரு தனது 7ம் பார்வையாக ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்தை வசீகரிப்பது கடக லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, புதையல் யோகம் கிட்டும், புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையை தங்கு தடையின்றி தரும், திடீர் விபத்துகளையும், தன்னம்பிக்கை குறையும் விதத்திலான சூழ்நிலைகள் உருவாகும், வாழ்க்கை துணை வழியில் இருந்து பொருளாதார இழப்புகளை கடக இலக்கின அன்பர்கள் தவிர்க்க இயலாது, இன்சூரன்ஸ் போனஸ் போன்றவற்றில் இருந்து நல்ல லாபமும் பொருளாதார உதவியும் கிடைக்கும், பயணங்களில் அதிக கவனமுடன் இருப்பது கடக இலக்கின அன்பர்களுக்கும் அவரை சார்ந்தவர்களுக்கும் நன்மை பயக்கும், பொது காரியங்கள் மற்றும் ஜாமீன் தருவதை தவிர்ப்பது அதிக நலன் தரும், பாதுகாப்பற்ற பயணங்களினால் விபத்தும் உடல் நல குறைவும் உண்டாகும் என்பதால், வாகனங்களை பாதுகாப்புடன் இயக்குவது சகல நிலைகளில் இருந்தும் நன்மை தரும், முன் பின் அறிமுகம் அற்ற நபர்களினால் அதிக தொல்லைகளுக்கு ஆளாகும் சூழ்நிலையை தரும், கடக லக்கினத்தை சார்ந்த பெண்கள் அதிக கவனமுடன் இருப்பது நல்லது.

2ல் அமர்ந்த குரு தனது 9ம் பார்வையாக ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்தை வசீகரிப்பது கடக லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, தொழில் ரீதியான வெற்றிகளை வாரி வழங்கும், ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்யும் அன்பர்களுக்கு இனி வரும் ஒரு வருடம் அதிரடியான வெற்றி வாய்ப்புகளை வாரி வழங்கும், சமூகத்தில் மதிப்பு மரியாதை உயரும், சுய முன்னேற்ற சிந்தனைகள் மிக பெரிய வெற்றிகளை வாரி வழங்கும், தீர்கமான செயல் திறன் மூலம் லாபம் பெரும் யோக காலம் இது, புகழ் மிக்க பொறுப்புகளை அலங்கரிக்கும் யோகத்தை தரும், புதிய பதவிகள் அல்லது பதவி உயர்வு என கடக இலக்கின அன்பகளுக்கு தகுதிக்கு உகந்த பொறுப்புகள் தேடி வரும், உடலும் மனமும் ஒருங்கே செயல்பட்டு சரியான ஒத்துளைப்பை வழங்கும், இதன் மூலம் கடக இலக்கின அன்பர்களின் லட்சியங்கள் நிறைவேறும், விளையாட்டு துறையில் உள்ள அன்பர்களுக்கு நல்ல வெற்றிகள் கிடைக்கும், நினைக்கும் எண்ணங்கள் யாவும் பலிதம் பெரும்.  ஜீவன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நன்மைகளையும், லாபங்களையும் அபரிவிதமாக கடக இலக்கின அன்பர்களுக்கு இந்த குரு மாற்றம் வாரி வழங்கும் என்பதால் கடக்க லக்கினத்தார் 100% விகித மகிழ்ச்சியை பெறலாம்.

குறிப்பு : 

கடக இலக்கின  அன்பர்களே ! தற்பொழுது தங்களுக்கு நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட 
2,6,8,10 ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே, தங்களுக்கு மேற்கண்ட குரு பகவானின், கோட்சார நன்மைகள் அல்லது தீமைகள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும்  திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் 2,6,8,10ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் எவ்வித நன்மையும், தீமையும் நடைபெறாது என்பதை கவனத்தில் கொள்க.
  

இந்த குரு மாற்றத்தின் மூலாம் 50% யோக பலன்களை அனுபவிக்கும் லக்கினத்தை சார்ந்தவர்கள் என்ற முறையில் தங்களது கடக லக்கினமே இரண்டாம் இடத்தை பெறுகிறது

விருச்சிக லக்கினம் :

பிரகஸ்பதி எனும் தேவ குரு கடகத்தில் இருந்து, குரு வட்டமான சிம்ம ராசிக்கு பெயர்ச்சி பெற்று இருப்பது, வரவேற்க்கதக்க அம்சமாகவே ஜோதிடதீபம் கருதுகிறது,ராசியை அடிப்படையாக கொண்டு இந்த குரு பெயர்ச்சி பலன்களை சிந்திப்பதை விட, சுய ஜாதகத்தை இயக்கும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு, நடைபெறும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சமம் ஏற்று நடத்தும் பாவகங்களுடன் குரு பகவானின் தொடர்புகளை ( அமர்வு மற்றும் பார்வை ) கொண்டு சுய ஜாதக பலனை கணிதம் செய்யும் பொழுது ஜாதக ரீதியான துல்லியமான பலன்களை காண இயலும், இனி மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு குரு பகவான் வழங்கும் பலன்களை ஆய்வுக்கும் சிந்தனைக்கும்  எடுத்துகொள்வோம் அன்பர்களே!

விருச்சிக லக்கினம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 8ம் ராசியான விருச்சிக ராசியை லக்கினமாக கொண்ட அன்பர்களே! தங்களுக்கு தற்பொழுது நடைபெறும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சமம் 10,2,4,6ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் கிழ்கண்ட பலன்கள் குரு பெயர்ச்சியின் காரணமாக குரு பகவான் தங்களுக்கு வாரி வழங்குவார், ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்தில் அமர்ந்துள்ள குரு பகவான் தங்களுக்கு ஜீவன ரீதியான முன்னேற்றத்தையும், தொழில் அனுபவங்களையும் வாரி வழங்குவார், செய்யும் தொழில் சார்ந்த கல்வியினை பெறுவதற்கு சரியான நேரமிது, கல்வி துறையில் பணியாற்றும் அன்பர்களுக்கு நல்ல முன்னேற்றமும், பதவி உயர்வும் உண்டாகும், மேலும் கல்வி துறையில் புகழும் அந்தஸ்து கௌரவம் கிடைக்க பெறுவீர்கள், தங்களின் சார்ந்த முயற்ச்சிகள் யாவும் நிறைவான நன்மைகளை வாரி வழங்கும், வேலைவாய்ப்பில் முன்னேற்றமும், வெளிநாடு சென்றுவரும் யோகமும் இனிவரும் ஒரு வருட  காலத்தில் நிச்சயம் அமையும், மருத்துவ துறையில் உள்ள அனபர்களுக்கு எதிர்பாரத லாபமும் தொழில் முன்னேற்றமும் உண்டாகும், புதிய கண்டுபிடிப்புகள் மூலம் தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகளை பெரும் யோகத்தை தரும்.

10ல் அமர்ந்த குரு தனது 5ம் பார்வையாக குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்தை வசீகரிப்பது விருச்சிக லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, குடும்பத்தில் மகிழ்ச்சியும் அளவில்லா தன வரவையும் வாரி வழங்கும், புதிய வருமான வாய்ப்புகள் தங்களுக்கு தேடி வரும், பேச்சு திறமையின் மூலம் நல்ல வாய்ப்புகளையும், முன்னேற்றங்களையும் பெறுவதற்கு உண்டான சந்தர்ப்பங்கள் கூடி வரும், இதுவரை திருமணம் ஆகாத அன்பர்களுக்கு திருமணம் வாய்ப்புகள் கூடி வரும், நல்ல இல்லற வாழ்க்கை அமையும்,  சமூதாயத்தில் உள்ள பெரிய மனிதர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்க பெறுவீர்கள், அரசியல் பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்களுக்கு ஏற்றமிகு யோக காலமாக கருதலாம், புதிய பொறுப்புகள் தங்களை தேடி வரும், எதிரிகளின் செயல்கள் தங்களுக்கு சாதகமாக அமையும், சரளமான வாத திறமையும், சமயோசித புத்திசாலித்தனமும் தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தையும், எதிர்பாராத பதவிகளையும் பெற்று தரும், இனி வரும் ஒரு வருடம் கை நிறைவான வருமானத்தை தங்கு தடையின்றி வாரி வழங்கும்.

10ல் அமர்ந்த குரு தனது 7ம் பார்வையாக சுக ஸ்தானமான 4ம் பாவகத்தை வசீகரிப்பது விருச்சிக லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, புதிய  சொத்துகள் வண்டி வாகனம், மண் மணை யோகத்தை தரும், கட்டுமான துறையில் உள்ள அன்பர்களுக்கு தொழில் ரீதியான வளர்ச்சி மிகவும் அபரிவிதமாக அமையும், சுய முயற்ச்சியின் மூலம் சகல விதமான நன்மைகளையும் முன்னேற்றத்தையும் வாரி வழங்கும், தனது பெயரில் உள்ள சொத்துகளை விற்று பெரிய தன வரவையும், புதிய தொழில் முதலீடுகளையும் செய்யும் யோகத்தை தரும், இது வரை விற்பனை செய்ய இயலாத சொத்துகளை இனிவரும் ஒரு வருட காலத்தில் நல்ல லாபத்திற்கு விற்க ஏதுவான சூழ்நிலை அமையும், தங்களின் மனதில் உள்ள எண்ணங்கள் யாவும் நடைமுறைக்கு வரும், தங்களின் திட்டமிடுதல்களும், லட்சியங்களும் நிறைவேறும்.

10ல் அமர்ந்த குரு தனது 9ம் பார்வையாக சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்தை வசீகரிப்பது விருச்சிக லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, 6ம் பாவக வழியில் இருந்து அதிக அளவில் உடல் தொந்தரவுகளை தரக்கூடும், வயிறு சார்ந்த பிரச்சனைகளும், பித்தம் சார்ந்த தொந்தரவுகளும் அதிக அளவில் துன்பத்தை தரக்கூடும், எதிரிகள்  மூலம் எதிர்பாராத முன்னேற்ற தடைகளை சந்திக்கு சூழ்நிலை தரும், கடன் தொந்தரவுகள்  எதிர்பாராத நேரங்களில் தங்களின் மன நிம்மதியை கேள்விக்குறியாக்கும், புதிய கடன்களை வாங்கும் பொழுதும், மற்றவர்களுக்கு ஜாமீன் இடும் பொழுதும் அதிக கவனமாக இருப்பது நலம் தரும், சிறு பயணங்கள் மூலம் நல்ல லாபம் கிட்டும், மருந்து மருத்துவ உபகரணங்கள் மூலம் எதிர்பாராத நல்ல லாபங்களை பெறுவதற்கு உண்டான சூழ்நிலைகள் உருவாகும், தொழில் புரிவோருக்கும், ஒரு இடத்தில் பணியாற்றும் அன்பர்களுக்கும் எதிர்பாராத இன்னல்கள் ஏற்ப்பட அதிக வாய்ப்புண்டு என்பதால் யாவரிடமும் பகைமை பாராட்டாமல் நடந்துகொள்வது நலம் தரும்.

குறிப்பு : 

விருச்சிக லக்கின  அன்பர்களே ! தற்பொழுது தங்களுக்கு நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட10,2,4,6ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே, தங்களுக்கு மேற்கண்ட குரு பகவானின், கோட்சார நன்மைகள் அல்லது தீமைகள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும்  திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் 10,2,4,6ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் எவ்வித நன்மையும், தீமையும் நடைபெறாது என்பதை கவனத்தில் கொள்க.
  

இந்த குரு மாற்றத்தின் மூலாம் 90% யோக பலன்களை அனுபவிக்கும் லக்கினத்தை சார்ந்தவர்கள் என்ற முறையில் தங்களது விருச்சிக லக்கினமே இரண்டாவது  இடத்தை பெறுகிறது,

மகர லக்கினம்

பிரகஸ்பதி எனும் தேவ குரு கடகத்தில் இருந்து, குரு வட்டமான சிம்ம ராசிக்கு பெயர்ச்சி பெற்று இருப்பது, வரவேற்க்கதக்க அம்சமாகவே ஜோதிடதீபம் கருதுகிறது,ராசியை அடிப்படையாக கொண்டு இந்த குரு பெயர்ச்சி பலன்களை சிந்திப்பதை விட, சுய ஜாதகத்தை இயக்கும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு, நடைபெறும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சமம் ஏற்று நடத்தும் பாவகங்களுடன் குரு பகவானின் தொடர்புகளை ( அமர்வு மற்றும் பார்வை ) கொண்டு சுய ஜாதக பலனை கணிதம் செய்யும் பொழுது ஜாதக ரீதியான துல்லியமான பலன்களை காண இயலும், இனி மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு குரு பகவான் வழங்கும் பலன்களை ஆய்வுக்கும் சிந்தனைக்கும்  எடுத்துகொள்வோம் அன்பர்களே!

மகர லக்கினம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் ராசியான மகர ராசியை லக்கினமாக கொண்ட அன்பர்களே! தங்களுக்கு தற்பொழுது நடைபெறும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சமம் 8,12,2,4ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் கிழ்கண்ட பலன்கள் குரு பெயர்ச்சியின் காரணமாக குரு பகவான் தங்களுக்கு வாரி வழங்குவார், 8ல் அமர்ந்த குரு பகவான் தங்களுக்கு, அவசர கதியில் செய்யும் காரியங்களில் தடைகளையும் தாமதங்களையும் தருவார், சுய கட்டுபாடு மற்றும் தன்னம்பிக்கை இழக்கும் சூழ்நிலைகளை தரக்கூடும், பதட்டத்தில் செய்யும் காரியங்கள் மிகப்பெரிய இழப்புகளை ஏற்ப்படுத்தும், வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது அதிக கவனமுடன் இருப்பது நலம் தரும், எதிர்பாராத விபத்துகளை சந்திக்கும் சூழ்நிலையை தரும், வெளிநாடுகளில் இருந்து நல்ல வருமான வாய்ப்பை பெற்று தருவார், அதிக அளவில் முதலீடு செய்யும் பொழுது மிகுந்த கவனம் தேவை, வாழ்க்கை துணை மற்றும் தொழில் முறை கூட்டாளிகள் வழியில் இருந்து சிறு சிறு வீண் விரையங்கள் ஏற்ப்பட வாய்ப்பு உண்டு, மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் இருப்பது தங்களுக்கும் தங்களை சார்ந்தவர்களுக்கும் மிகுந்த நன்மையை தரும், வெளிவட்டார பழக்க வழக்கங்கள் அதிகரிக்கும், வேற்று மதத்தினர் மற்றும் வேற்று மொழி பேசும் அன்பர்கள் வழியில் இருந்து யோக வாழ்க்கை உண்டாகும், தொழில் அமைப்பில் இருந்து எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாக அதிக வாய்ப்பு உண்டு, உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை, புதிய சொத்துகள் மற்றும் புதிய பொருட்கள் வாங்க சந்தர்ப்பங்கள் அதிக அளவில் ஏற்ப்படும்.

10ல் அமர்ந்த குரு தனது 5ம் பார்வையாக விரைய ஸ்தானமான 12ம் பாவகத்தை வசீகரிப்பது மகர லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, பெரிய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் வந்த போதிலும் மிகுந்த எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் சந்திக்கும் சூழ்நிலையை தரும், தேவையில்லாத அவப்பெயர் ஜாதகரை தேடி வரக்கூடும் என்பதால், அனைத்து தரப்பு மக்களிடமும் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துகொள்வது நல்லது, தன்னை விட வயதில் அதிகம் உள்ள பெரிய மனிதர்களின் மிகுந்த மரியாதையுடன் நடந்துகொள்வதும், பணிவு காட்டுவதும் முன்னேற்றத்தை தரும், மேலும் பெரியோர்களின் ஆலோசனை படி ஜீவன வாழ்க்கை மேற்கொள்வதும், காரியங்கள் ஆற்றுவதும் சீரான வளர்ச்சியை தரும், பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்கள் எதிர்பால் அமைப்பினரிடம் அதிக கவனமும் எச்சரிக்கையுடன் நடந்துகொள்வது வீண் அவ பெயரை தவிர்க்க உதவும், முன்னோர்களின் ஆசியை நாடுவது காரியங்களில் ஏற்ப்படும் தடைகளை தகர்த்தெறியும், ஆன்மீக பெரியோர்களின் ஆசிர்வாதமும், புனித திருத்தலங்களின் வழிபாடும் தங்களின் வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றத்தை வாரி வழங்கும்.

10ல் அமர்ந்த குரு தனது 7ம் பார்வையாக குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்தை வசீகரிப்பது மகர லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, கை நிறைவான வருமான வாய்ப்பை வாரி வழங்கும், இதுவரை வாரா நிலுவை தொகைகள் திடீரென கைக்கு வந்து சேரரும், நிலபுலன்கள், சொத்துகளை விற்று அதிக லாபம் பார்க்கும் யோகம் உண்டாகும், முதலீடு செய்த இடங்களில் இருந்து அதிக படியான வருமானங்கள் வந்து சேரும், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும், சுப நிகழ்சிகள் தங்குதடையின்றி நடைபெறும், பிரிவு நிலையில் இருந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள், குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும், மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும், முற்போக்கு சிந்தனையுடன் சகல காரியங்களிலும் வெற்றியை பெரும் யோக காலமாக இந்த குரு பெயர்ச்சி அமையும், மனதில் நினைத்த எண்ணங்கள் யாவும் நடைபெறும், நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும், பொழுதுபோக்கு கேளிக்கை அம்சங்களில் அதிக ஈடுபாடு, பல இடங்களில் இருந்து வரும் ஆதரவு , உறவுகளின் ஒத்துழைப்பு, கூட்டு முயற்ச்சியின் மூலம் தொழில் வெற்றி மற்றும் விருத்தி பெரும் யோகம், நல்ல வேலையாட்கள் மூலம் அபரிவிதமான் தொழில் வளர்ச்சி மற்றும் தன்னிறைவான வருமானம் என 2ம் பாவக வழியில் இருந்து அறிவு சார்ந்த வெற்றிகளை குவிக்கும் யோகம் உண்டாகும்.

10ல் அமர்ந்த குரு தனது 9ம் பார்வையாக சுக ஸ்தானமான 4ம் பாவகத்தை வசீகரிப்பது மகர லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, புதிய சொகுசு வண்டி வாகனம் மற்றும் புதிய வசதி மிக்க வீடு வாங்கும் யோகத்தை தரும், தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் பணியாற்றும் அன்பர்களுக்கு அபரிவிதமான முன்னேற்றமும், வருமான வாய்ப்புகளும் உண்டாகும், கனரக தொழில் மற்றும் உலோகம் சார்ந்த தொழில்களில் உள்ள அன்பர்களுக்கு அபரிவிதமான முன்னேற்றம் உண்டாகும், பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்களுக்கு திடீர் பதவிகள் தேடிவரும், அரசு துறையில் குறிப்பாக கல்வி,மருத்துவம்,நிர்வாகம் சார்ந்த துறைகளில் பணியாற்றும் அன்பர்களுக்கு, எதிர்பாராத அதிர்ஷ்டங்களும் வருமான வாய்ப்புகளும் வந்து குவியும், பயணங்களின் மூலம் நல்ல லாபமும் முன்னேற்றமும் உண்டாகும், சுகபோக வாழ்க்கைக்கு உண்டான வசதி வாய்ப்புகள் அனைத்தும் இந்த குரு பெயர்ச்சியின் மூலம் தாங்கள் தடையின்றி பெறும் யோகம் உண்டாகும், கனிம பொருட்கள் ரசாயன பொருட்கள் மூலம் நல்ல லாபமும் முன்னேற்றமும் உண்டாகும், இதுவரை போராடிய விஷயங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும், பல தொழில் செய்யும் வாய்ப்புகள் வந்து சேரரும், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான துறையில் உள்ள அன்பர்களுக்கு எதிர்பாராத தன சேர்க்கையும் முன்னேற்றமும் உண்டாகும்.

குறிப்பு : 

மகர லக்கின  அன்பர்களே ! தற்பொழுது தங்களுக்கு நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட8,12,2,4ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே, தங்களுக்கு மேற்கண்ட குரு பகவானின், கோட்சார நன்மைகள் அல்லது தீமைகள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும்  திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் 8,12,2,4ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் எவ்வித நன்மையும், தீமையும் நடைபெறாது என்பதை கவனத்தில் கொள்க.
  

இந்த குரு மாற்றத்தின் மூலாம் 90% யோக பலன்களை அனுபவிக்கும் லக்கினத்தை சார்ந்தவர்கள் என்ற முறையில் தங்களது மகர லக்கினமே மூன்றாவது இடத்தை பெறுகிறது

குருப்பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 கன்னி

குருப்பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 கன்னி

குரு பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 கன்னி

உத்திரம் 2,3,4 ஆம் பாதம்,அஸ்தம் 4ஆம் பாதம்,சித்திரை 1,2 பாதங்கள் 

அன்பான ,கலகலப்பான கன்னி ராசி நண்பர்களே..புதனின் ராசியில் பிறந்ததால் அறிவும்,அன்பும்,நிரம்ப பெற்றவர்கள்..தானும் சந்தோசமாக இருக்க வேண்டும் மற்றவர்களையும் சந்தோசப்படுத்த வேண்டும்..என நினைக்கும் உயர்ந்த உள்ளம் படைத்தவர் நீங்கள்..எதற்கும் அலட்டிகொள்ளாமல் ,மற்றவர் பிரச்சினைக்கும் நல்ல ஆலோசனை சொல்வதி கெட்டிக்காரர் நீங்கள்..உங்களுக்கு இப்போது வரப்போகும் குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்..? என பார்ப்போம்..

வாக்கிய பஞ்சாங்கப்படி 5.7.2015 அன்றும் திருக்கணித பஞ்சாங்கப்படி 14.7.2015 அன்றும்  கடக ராசியில் இருந்து சிம்மம் ராசிக்கு குரு பெயர்ச்சியாகிறார்..உங்கள் ராசிக்கு இதுவரை 11 ஆம் இடமாகிய லாபஸ்தானத்து சென்ற குரு பகவான் இப்போது உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமாகிய 12 ஆம் இடத்துக்கு வருகிறார்...எது கிடைக்க வேண்டும் என் எதிர்பார்க்கிறீர்களோ அது கிடைக்காது ..யாரை நம்பி இருக்கிறீர்களோ அவரால் நல்ல பலன்கள் கிடைக்காது....வருமானம் குறையும்...கெட்ட பெயர் உண்டாக நிறைய வாய்ப்பிருப்பதால் கொஞ்சம் கவனமா இருந்துகிட்டா தப்பில்லை என்கிறார் குரு.

சென்ற குரு பெயர்ச்சி உங்களுக்கு லாபத்தில் அமர்ந்து சிலருக்கு புது வாகனம்,இடம்,வீடு கட்டுதல் வாங்குதல் போன்ற சந்தோசமான அனுபவங்களை கொடுத்திருப்பார்...இந்த வருடம் அது சம்பந்தமான செலவுகளை,பிரச்சினைகளை உண்டாக்குவார்...12 ஆம் இடத்து குரு அலைச்சல் அதிகம்..பலன் குறைவு...உழைப்பு அதிகம்..நல்ல பெயர் வருமானம் குறைவு...உங்க ராசிக்கு சனியால் எந்த தொந்தரவும் இல்லை..ஏழரை சனியும் எப்பவோ முடிஞ்சிருச்சி...ராசிக்கு குரு அவ்வளவு யோகம் தரக்கூடியவர் இல்லை..அவர் மறைவது ஒரு விதத்தில் நல்லதுதான் என்றாலும் மருத்துவ செலவினங்களை உண்டாக்குவார் என்பதும்,தொழில் நிலையில் ம்ந்தத்தை உண்டாக்குவார் சேமிப்பை கரைப்பார் என்பது ம் கவலை தரும் விசயம்தான்..

ஜாதகத்தில் பாவகிரகங்களின் திசாபுத்தி நடப்போருக்கு போன தடவை என்னத்த லாபகுரு மட்டும் கொடுத்தார்..பின்னி பெடல் எடுத்தார் என புலம்பினால் ,லாபகுருவே ஒன்றும் செய்யாத போது,12ஆம் இடத்து குரு இருமடங்கு மோசமான பலன்களையே தரும்...

ஜாதகத்தில் நல்ல திசாபுத்தி நடந்தால் மட்டும் சமாளிக்கலாம்..இருப்பினும் 12ஆம் இடத்து குரு சுபகாரியங்கள் செய்ய தடங்கல்கள்,தாமதத்தை உண்டாக்கினாலும் 8.1.2016 முதல் 8.5.2016 வரையிலன காலகட்டம் குரு வக்கிரம் என்பதால் அப்போது உங்களுக்கு லாபஸ்தான குரு செயல்படுவார் அது உங்களுக்கு அதிர்ஷ்டமான காலம் என்றே சொல்லலாம்..வருமனம் அதிகம் உண்டாகும் தடைகள்,தாமதம் எல்லாம் உடையும்,சுபகாரியங்கள் தடையின்றி நடைபெறும்.தொழில் சிறப்பாக நடக்கும்.

முதல் 6 மாத காலங்கள் மட்டும் இந்த குரு பெயர்ச்சி பாதகமாக செயல்படும் எனவே செவ்வாய் அல்லது வியாழக்கிழமையில் முருகன் கோயிலில் நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடவும் நல்லதே நடக்கட்டும்..

செல்வவளம் உண்டாக

சர்வ ஜன வசிய எந்திரம்,மூலிகை சாம்பிராணி,மகாலட்சுமி கலசம்  போன்ற பிரச்சினைகளை தீர்க்க கூடிய செல்வவளம் தரும் ஆன்மீக பொருட்களை உருவாக்கி விற்பனை செய்து வருகிறோம்... பல நண்பர்கள் இதனை நம்மிடம் பெற்றனர்.. அதன் மூலம் பல நன்மைகளை அடைந்தனர்..பல பிரச்சினைகள் தீர்ந்தது..  ஒரு கவசம் போல் பாதுகாப்பு தருகிறது என போனிலும், நேரிலும் பாராட்டிய நண்பர்களுக்கு நன்றி.மேலும் இதனை பெறவும்,விபரங்களை அறியவும், இங்கு க்ளிக் செய்யவும்..நன்றி..!!

குரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016 மேசம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016 மேசம்

மன்மத வருடம் ஆனி மாதம் 20 ஆம் நாள் 5.7.2015 ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்கு மகம் நட்சத்திரம் முதல் பாதத்தில் சிம்ம ராசிக்கு குரு பெயர்ச்சியாகிறார்..இது கோயில்களில் பின்பற்றப்படும் வாக்கிய பஞ்சாங்க தேதியாகும்..

திருக்கணித பஞ்சாங்கப்படி ஆனி மாதம் 29 ஆம் நாள் 14.7.2015 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை  காலை 6.23 க்கு சிம்ம ராசிக்கு குரு பெயர்ச்சியாகிறார்..

மேசம் ராசி அசுவினி,பரணி,கிருத்திகை முதல் பாதம் வரை பலன்கள்;

அன்பான மேசம் ராசி நண்பர்களே....கடந்த ஒரு வருடமாக மேசம் ராசிக்கு நான்காம் இடத்தில் குரு இருந்தார்..இப்போது ராசிக்கு ஐந்தாம் இடத்திற்கு மாறியிருக்கிறார் ..4ல் குரு இருந்தபோது,அஷ்டம சனியும் உடன் இருந்ததால் மன உளைச்சல்,சொத்து சம்பந்தமான வில்லங்கம்,கடன் வாங்கி வீடு கட்டுதல்,பழுது பார்த்தல்,மருத்துவ செலவுகள்,வாகனம் வாங்குதல் போன்றவை செய்திருப்பீர்கள் ..ஒருசிலர் விபத்தையும் சந்தித்திருப்பார்கள்...செய்யாத தவறுக்கு கெட்ட பெயரும் உண்டாகியிருக்கும்..தொழில் மந்த நிலை வருமான குறைவு இருந்திருக்கும் ...பெருசா எதுவும் செய்யலைங்க..பெருசா எதுவும் கிடைக்கலைங்க..என்பதுதான் பல மேச ராசியினரின் பதிலாக இருக்கும்...

இந்த சூழலில் ராசிக்கு ஐந்தாம் இடம் என்பது குருபலம் ஆகும் இது பனபலம்,செல்வாக்கு பலத்தையும் ,எதிலும் வெற்றி எனும் தடையில்லாத வெற்றியை சொல்கிறது எனவே இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பானதாகும்..நல்லவை பல நடக்கும்.

உங்களுக்கு அதிர்ஷ்ட,யோகமான வீடாகிய சிம்மத்துக்கு குரு வருவது பல பெரிய மனிதர்களின் ஆதரவை கிடைக்க செய்யும்..அதன் மூலம் பல ஆதாயங்களும் கிடைக்கும்...ராசிக்கு ஐந்தாம் இடத்துக்கு வரும் குரு அங்கிருந்து உங்க ராசிக்கு பாக்யஸ்தானம்,லாபஸ்தானம்,ஜென்மராசி ஆகிய முக்கிய ஸ்தானங்களை பார்வை செய்வதால் இவையெல்லாம் பலம் அடையும்...14.7.2016 முதல் 7.1.2018 முடிய நீங்கள் நினைத்தவை தடையின்றி நிறைவேறும் லாபம் இருமடங்காகும்..வரவேண்டிய பனம் வந்து சேரும்..தொழில் மந்த நிலை மாறி சுறுசுறுப்பு உண்டாகும்....

உடல்நலனில் இதுவரை இருந்து வந்த தொந்தரவுகள்,பிரச்சினைகள் தீரும்..நல்ல மருத்துவர் கிடைப்பார்...பாதியில் நிற்கும் வீட்டு வேலைகள் நடக்கும்..திருமண முயற்சிகள் இனி தாமதம் இல்லாமல் நடந்தேறும்..கடன் பிரச்சினைகள் குறையும்..பதவி உயர்வு கிடைக்கும்...வேலைவாய்ப்பு சரியான முறையில் அமையாமல் சிரமப்பட்டவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.வெளிநாடு செல்லும் வாய்ப்பும் சிலருக்கு அமையும்.வீட்டில் புதிய ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள்..வாகனங்கள் வாங்கலாம்..ஆனால் அஷ்டம சனி நடப்பதால் கவனம் தேவை.

குழந்தைகளுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்..பெண்கள் நினைத்தபடி வேலைவாய்ப்பு பெறுவர் சிலருக்கு அரசு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.தங்கம் சேரும்..பணப்புழக்கம் அதிகரிக்கும்.கணவன் மனைவி ஒற்றுமை பலமடையும்.மேற்க்கல்வியில் இருந்த தடைகள் விலகும்...

வசதி வாய்ப்பு,அந்தஸ்து கூடுதல் ஆவதால் வாடகை வீட்டில் குடி இருந்தவர்கள் சொந்த வீட்டுக்கு செல்லும் வாய்ப்பும்,பழைய பிரச்சினைகள் தீரும் காலமாகவும் இது இருக்கும்.

8.1.2016 முதல் 8.5.2016 வரை காலகட்டம் குரு வக்கிர காலம் என்பதால் இந்த காலம் அவ்வளவு நல்ல பலன் தராது அஷ்டம சனி பலன் கூடுதலாகிவிடும்..எனவே கவனம் தேவை....மீண்டும் 9.5.2016 முதல் 10.8.2016 வரை காலகட்டம் குரு நல்ல பலன்களை கொடுக்க துவங்கிவிடுவார்...லாபஸ்தானம்,ஒன்பதாம் இடத்தை குரு பார்ப்பதால் அரசு உத்யோகத்தில் இருப்பவர்களுக்கும் வியாபாரிகளுக்கும் பிரச்சினைகள் குறைந்து வேலை பளு குறைந்து வியாபாரம் நல்லபடியாகவே நடக்கும்...நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும் காலம் இது..

சிறப்பு பரிகாரம்;நீங்கள் பிறந்த நட்சத்திரம் வரும் நாளில் உங்கள் குலதெய்வம் கோயில் சென்று 16 விதமான அபிசேகம் செய்து பொங்கல் வைத்து வழிபடவும்...செவ்வாய் தோறும் முருகனை வழிபட்டு வரவும்..
----------

செல்வவளம் உண்டாக

சர்வ ஜன வசிய எந்திரம்,மூலிகை சாம்பிராணி,மகாலட்சுமி கலசம்  போன்ற பிரச்சினைகளை தீர்க்க கூடிய செல்வவளம் தரும் ஆன்மீக பொருட்களை உருவாக்கி விற்பனை செய்து வருகிறோம்... பல நண்பர்கள் இதனை நம்மிடம் பெற்றனர்.. அதன் மூலம் பல நன்மைகளை அடைந்தனர்..பல பிரச்சினைகள் தீர்ந்தது..  ஒரு கவசம் போல் பாதுகாப்பு தருகிறது என போனிலும், நேரிலும் பாராட்டிய நண்பர்களுக்கு நன்றி.மேலும் இதனை பெறவும்,விபரங்களை அறியவும், இங்கு க்ளிக் செய்யவும்..நன்றி..!!

குருப்பெயர்ச்சி பலன்கள் 2015-2016 மீனம்

குருப்பெயர்ச்சி பலன்கள் 2015-2016 மீனம்

குருப்பெயர்ச்சி பலன்கள் 2015-2016 மீனம்

பூரட்டாதி 4ஆம் பாதம், முதல் உத்திரட்டாதி,ரேவதி முடிய பிறந்த மீனம் ராசி நண்பர்களே 

வரும் 14.7.2015 ஆம் தேதி நடைபெறும் குருப்பெயர்ச்சியால் தங்களின் மீன ராசிக்கு 6ஆம் இடமான ருண ரோக சத்ரு ஸ்தானத்துக்கு குரு பகவான் பெயர்ச்சியாகிறார்...

குருபதியும் ஆறில் ஏற,கெடுதி மிக செய்வான்
மகாபலியாம் மன்னன் சீரப்பாசிறைக்கூடம் சென்றாரப்பா’’

என புலிப்பாணி முனிவர் ஆறாம் இடத்து குரு கெடுதி தரும் என பாடியிருக்கிறார்..மீனம் ராசிக்கு குரு ராசி அதிபதி மட்டுமல்ல..பத்தாம் அதிபதியும் கூட குருதான் தொழில் ஸ்தானாதிபதி மறைவதால் தொழிலில் திடீர் சிக்கல்கள் உண்டாகும்,..தொழில் மந்தமடையும் வருமானம் தடங்கலாகும் என்ற நிலை அடிக்கடி உண்டானாலும் குரு பார்வை தொழில் ஸ்தானத்தின் மீது இருப்பதால் முற்றிலும் பாதிக்காது...வாக்கு தன ஸ்தானமாகிய இரண்டாமிடத்தையும் குரு பார்ப்பதால் வருமானம் குறைவின்றி நடக்கும்...

குரு தன் ஐந்தாம் பார்வையால் தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் வியாபாரிகளுக்கு முன்னேற்றம் உண்டாகும் உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வூண்டாகும் ஆறாம் இடத்து குரு உடல் ஆரோக்கியத்தில் சிக்கலை உண்டாக்கு சிறு விபத்துக்கள் ,அறுவை சிகிச்சைகள் செய்யும் சூழல்,புதிதாக கடன் வாங்குதல்,புதிய எதிரிகளையோ பகையையோ உண்டாக்கிக்கொள்ளும் சூழல் உண்டாகும்..

குரு மறைந்தால் செல்வாக்கு மறையும் செல்வாக்கு எதனால் மறையும் கெட்ட பெயர் உண்டானால்தான் செல்வாக்கு மறையும் எனவே நெருங்கிய உறவுகளிடம் கவனமாக நடந்துகொள்ளுங்கள்..12ஆம் இடத்தை குரு பார்ப்பதால் சம்பாதிக்கும் பணமெல்லாம் சுப விரயம் ஆகும் வாய்ப்புகளே அதிகம்..வீடு கட்டுதல்,வீடு பழுதுபார்த்தல்,மனை வாங்குதல் போன்றவை செய்தால் சுப செலவுகளாகி விடும்..புதிய வங்கிக்கிடன் வாங்கினால் கூட ஆறாமிடத்து குரு தொல்லைகளில் இருந்து தப்பிக்கலாம் இல்லையெனில் மருத்துவ செலவு உண்டாக்க கூடிய தோசம் தொடரும்...பிள்ளைகளுக்கு சுபகாரியம் செய்தாலும் வீட்டில் விருந்து நடத்தினாலும்,சுபவிரயமே.

குடும்ப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமை உண்டாகும் பிரிந்தவர்கள் ஒன்று சேர்வர்...இருவருக்குமிடையே இருந்து வரும் பிரச்சினைகள் குறைய துவங்கும் ....உங்கள் சொன்ன சொல்லை காப்பாற்ற இக்காலகட்டத்தில் நிறைய போராட வெண்டி வரும் ..சில போராட்டத்துக்கு பின் நீங்களே வெல்வீர்கள்..முடிந்தவரை சவாலோ,வாக்கோ கொடுத்துவிடாதீர்கள் அதை காப்பது மிக கடினம்...அதிக அலைச்சல் ,பலவிதமான தடைகளை தாண்டிதான் ஒரு காரியத்தை இந்த நேரத்தில் செய்து முடிக்க முடியும்.

சிலருக்கு வீண் தொல்லைகள்,பங்காளி பிரச்சினை,முன்னோர் சொத்து வில்லங்கம்,குலதெய்வ கோயில் பிரச்சினை,சொத்து தகராறு மூலம் கோர்ட் படியேறும் சூழல் வரலாம்..அண்ணன் தம்பிகள் சித்தப்பா பெரியப்பா இவர்கள் மூலம் இப்போது வாக்குவாதம் ,கலவரம்,வாக்குவதம் உண்டாகும் கலம் என்பதால் முடிந்தவரை சுமுகமாக பேசி முடிக்கப்பாருங்கள் வீண் சவடால் விட்டு தேரை இழுத்து நீங்களே தெருவில் விட்டுவிடாதீர்கள்...

கடன் கொடுத்தால் திரும்பி வராது கடன் வாங்கினால் வட்டி கட்டுவதே பெரும் சிரமம்...ஜாமீன் கையெத்து போட்டு யாருக்கேனும் நண்பர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் செய்தால் ,அந்த பணத்தை நீங்கள்தான் கட்டியாக வேண்டும் உங்கள் நண்பர் கட்ட மாட்டார் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்..

உங்கள் குடும்பத்தினருக்கு பாதிப்பில்லை ஆனால் பழைய பிரச்சினைகள் எல்லாம் கிளறி விட்டு தொல்லை கொடுக்கும் ஆட்களால் உங்கள் மனதுதான் சிறிது வருத்தமுண்டாகும் காலமாக இந்த குருப்பெயர்ச்சி இருக்கும்..

குரு வக்ரமாகும் காலத்தில் 8.1.2016 முதல் 8.5.2016 வரையிலான காலகட்டம் குரு வக்ரம்...பெரிய பாதிப்புகள் இருக்காது வருமானமும் நன்றாக இருக்கும் தொழிலும் நல்ல சுறுசுறுப்பாக இருக்கும்..

29.1.2016ல் ராகு கேது பெயர்ச்சி வருகிறது அது உங்கள் ராசிக்கு மட்டும் அஷ்டலட்சுமி யோகமாக அமைகிறது...6ஆம் இடத்து குருவுடன் ராகு சேர்வது ராஜயோகம்..எனவே ராகு பெயர்ச்சிக்கு பின் சிலருக்கு ஒட்டு மொத்த கடனும் அடைந்துவிடலாம் தொழிலில் பல மடங்கு லாபம் வரும் வாய்ப்பும் உண்டு..

சிலர் வெளிநாட்டில் பெரிய சம்பளத்துடன் செட்டில் ஆவார்கள்..நீண்ட காலமாக எதிர்பார்த்து கொண்டிருக்கும் பெரிய விசயங்கள் சுலபமாக கையில் கிடைத்து உங்களை இன்ப அதிர்ச்சியில் தள்ளும்...தொழில்,வேலை இல்லாமல் அமைந்தவர்களுக்கு உறுதியா நிலையானதாக அமைத்து கொடுக்கும்..அரசு வேலை சிலருக்கு அமையும் பெரிய இடத்து வரன்கள் அமைந்து இந்த ராசி பெண்கள் மகிழ்ச்சியாக புதிய வாழ்க்கை துவங்குவர்.

செல்வவளம் உண்டாக

ஸ்ரீதனவசிய எந்திரம்,மூலிகை சாம்பிராணி,மகாலட்சுமி கலசம்  போன்ற பிரச்சினைகளை தீர்க்க கூடிய செல்வவளம் தரும் ஆன்மீக பொருட்களை உருவாக்கி விற்பனை செய்து வருகிறோம்... பல நண்பர்கள் இதனை நம்மிடம் பெற்றனர்.. அதன் மூலம் பல நன்மைகளை அடைந்தனர்..பல பிரச்சினைகள் தீர்ந்தது..  ஒரு கவசம் போல் பாதுகாப்பு தருகிறது என போனிலும், நேரிலும் பாராட்டிய நண்பர்களுக்கு நன்றி.மேலும் இதனை பெறவும்,விபரங்களை அறியவும், இங்கு க்ளிக் செய்யவும்..நன்றி..!!

எல்லா பிரச்சினைகளும் தீர எளிமையான பரிகாரம் ;ஜோதிடம்

எல்லா பிரச்சினைகளும் தீர எளிமையான பரிகாரம் ;ஜோதிடம்

எல்லா பிரச்சினைகளும் தீர எளிமையான பரிகாரம் ;ஜோதிடம்

அதிகாலை 4.30 முதல் காலை 7.30 வரை சூரிய உதயத்தில் பிராண வாயு பூமியில் நிறைந்திருக்கும்.இக்காலங்களில் மூளைக்கு மனப்பாட பயிற்சி ,உடலுக்கு உடற்பயிற்சி அளித்தால் சக்ல உள் உறுப்புகளும் ஆக்சிஜனை குடித்து வலுவாகும்..இளம் சூரிய ஒளியையும் தோலின் துவாரங்களின் வழியே ஆக்சிஜனுடன் பரவுவது ஹைப்போ தலமசையும்,உயிர் ஹார்மோன் சுரக்கும் பினியல்,பிட்யூட்டரி,தைராய்டு அட்டிரனல் சுரப்பிகளையும் வலுப்படுத்தும்.அன்று முழுவதும் சோம்பலும் வராது.கண் ,குரல்,முகப்பொலிவு போன்ரவை உண்டாகி சர்வஜன வசியம் உண்டாகும்...

அதிகாலையில் எழுதல் தினசரி ஆறுமுறை தியானம் செய்தல் ,உடற்பயிற்சி,மெள்னவிரதம்,சிக்கனப்பழக்கம், போன்றவை மன உறுதியை வளர்க்கும்..சோம்பலை போக்கும்.தீய கிரக திசாபுத்தியை சமாளிக்கும் அறிவு மனோபலம் தரும்..ஏழரை சனி,அஷ்டம சனி,அஷ்டம குரு இவற்றுக்கு பயப்பட தேவையில்லை...

உயிரை வளர்க்கும் விதம் அறிந்தே உடலை வளர்த்தேனே என்று திருமூலர் கூறியது போலவே பக்தி உஷ்ணத்தால்தான் உயிர் சக்திகளை உடலில் பலப்படுத்த முடியும் உள்ளத்தில் உள்ளவன் கட-உள்.

செவ்வாய் கெட்டால் வாகனத்தால் பிரச்சினை,வீண் வம்பு,கோர்ட் கேஸ் பிரச்சினை உண்டாகிறது சனி கெட்டால் சோம்பல்,சோர்வு உண்டாகிறது சந்திரன் கெட்டால் நிம்மதி கெடுகிறது சூரியன் ஆரோக்கியம் கெடுகிறது புதன் கெட்டால் அறிவு கெடுகிறது...குரு கெட்டால் செல்வாக்கு கெடுகிறது மரியாதை கெடுகிறது..சுக்கிரன் கெட்டால் சுகம் கெடுகிறது 

..இவ்வாறு நவகிரகங்கள் தரும் தொல்லைகளை சமாளிக்க மன உறுதி உடல் உறுதி வசியம்..அதற்கு அதிகாலை எழுதல்,தியானம் ,யோகா,உடற்பயிற்சிகள் செய்தல்,வழிபாடு பிரார்த்தனைகள் இவைகள்தான் உதவும்....புலம்பிக்கொண்டே இருப்பதும்,கவலைப்பட்டுக்கொண்டே இருப்பதும் மன உறுதியை குலைத்து பிரச்சினைகளை மேலும் அதிகரிக்க செய்யும்...இதனால் உற்சாகம் கெட்டு வசிய சக்தி நீங்கி விடுகிறது...

கவலை,புலம்பலைவிட்டு தள்ளிவிட்டு உள்மனம்,உளுறுப்புகள்,மன ஆர்ரலை பெருக்கிக்கொள்ளுங்கள்..நவகிரகங்களை சமாளித்து வெற்றி பெறுவோம்...

பிறந்த லக்னப்படி முன்னேற்றம் உண்டாக பரிகாரங்கள்

ஜோதிடம்;பிறந்த லக்னப்படி முன்னேற்றம் உண்டாக பரிகாரங்கள்

ஜாதகத்தில் நாம் எந்த லக்னத்தில் பிறந்திருக்கிறோமோ அதுதான் உயிர் ஸ்தானம்..நம் குணத்தை செய்ல்பாடுகளை ,தன்னம்பிக்கையை,செயல்பாட்டை குறிக்கும் இடம் லக்னம்..ஒவ்வொரு லக்னமும் ஒரு பஞ்ச பூத தன்மையை குறிக்கும்.

.நம் லக்னம் கெட்டால் நம் வாழ்வில் பல வெற்றிகளை தடுத்து தோல்விகளையே தருகிறது..தாழ்வு மனப்பான்மை அதிகரித்துவிடுகிறது ..கிணற்று தவளை போல பலர் தங்கள் வாழ்வை சுருக்கி கொள்வதற்கு லக்னம் வலிமை இழப்பது ஒரு முக்கிய காரணம் ஆகும்...லக்னம் வலுவடைந்தவர் சமூகத்தில் அந்தஸ்து அடைகிறார்..லக்ன யோகர்கள் பலம் அடைவோர் மாவட்ட அளவில் புகழ் அடைவார்..லக்ன கேந்திராதிபதிகள் பலம் அடைவோர் பல ஆயிரக்கணக்கான மக்களிடம் புகழ் அடைகிறார்...நல்ல திசாபுத்திகள் நடந்தால் இன்னும் உன்னதமான பலன்களை அடைகிறார்..

லக்னாதிபதி லக்னத்துக்கோ சந்திரனுக்கோ 6,8,12ல் மறைந்து போனால் ,அல்லது நீசம்,வக்ரம்,அஸ்தமனம் ,பகை கிரகங்களுடன் சேர்தல்,பகை வீடுகளில் இருந்தால் என்ன பரிகாரம் என பார்ப்போம்.

12 ராசிகள் நீர், நிலம், நெருப்பு காற்று என்ற அடிப்படையில் நான்கு வகையாக நம் முன்னோர் பிரித்திருக்கின்றனர்..

நீர் ராசிகள் :- கடகம் , விருச்சிகம் , மீனம்
காற்று ராசிகள் :- மிதுனம், துலாம், கும்பம்
நிலம் ராசிகள் :- ரிஷபம், கன்னி,மகரம்
நெருப்பு ராசிகள் :- மேஷம், சிம்மம்,தனுசு

மேற்க்கண்ட ராசிகளில் எது உங்கள் லக்னமாக வருகிறதோ அந்த லக்னத்துக்குண்டான பஞ்சபூத ஸ்தலத்தை தரிசனம் செய்தால் உங்கள் லக்ன தோசம் நிவர்த்தியாகும்...

பஞ்சபூத ஸ்தலங்கள்;

மண் -காஞ்சிபுரம்
நீர்-திருவானைக்காவல்
நெருப்பு-திருவண்ணாமலை
காற்று -ஸ்ரீகாளஹஸ்தி
ஆகாயம் -சிதம்பரம்

உங்கள் லக்னம் மிதுனம் என்றால் மிதுனம் காற்று ராசி ..எனவே அதர்குறிய ஸ்ரீகாளஹஸ்தி சென்று உங்கள் பிறந்த நட்சத்திர நாளில் வழிபட்டால் முன்னேற்றம் உண்டாகும்..

விதி,கதி,மதி என சொல்லப்படும் லக்கினம்,சூரியன்,சந்திரன் எது பலமாக இருக்கிரதோ அது எந்த ராசியை குறிக்கிறதோ அதற்குறிய கோயிலும் சென்று வரலாம்..சனி எந்த ராசியில் இருக்கிறதோ அதற்குறிய வழிபாட்டை செய்தால் தொழில் நன்றாக இருக்கும்...என்ன திசை இப்போது நடக்கிறதோ அந்த திசாநாதன் இருக்கும் ராசி மற்றும் அதன் அதிபதி எந்த ராசியில் இருக்கிறதோ அந்த கோயில் சென்றாலும் சிறப்பு..பஞ்சபூத கோயில்கள் பின்னால் இருக்கும் சூட்சுமமும் இதுதான்...

ஆவணி மாதத்தில் சிசேரியன் மூலம் குழந்தை பிறக்க நல்ல நேரம்

ஆவணி மாதத்தில் சிசேரியன் மூலம் குழந்தை பிறக்க நல்ல நேரம்

ஆவணி மாதத்தில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறக்க நல்ல நேரம்

ஆஸ்பிடல்ல,சிசேரியன்னு சொல்லிட்டாங்க, தேதி முடிவு செய்யனும் சார்,
டாக்டர் ஒருவாரம் டைம் கொடுத்திருக்கார்...அதுக்குள்ள ஒரு நல்ல நாள் பார்த்துட்டு வாங்க சிசேரியன் செஞ்சிடலாம் என சொன்னார்...நல்ல நேரம் சொல்லுங்க என போன் செய்தும் ,மெயில் மூலமும்,நேரிலும் கேட்பவர்கள் அதிகமாகிவிட்டனர்..அவர்களுக்காக இந்த ஆவணி மதத்தில் நல்ல நேரம் கொடுத்துள்ளென்...ராசி நட்சத்திரம் கூட இதில் இருக்கிரது...குழந்தையின்,தந்தை,தாய் ,மூத்த குழந்தை இருப்பின் அவர்களது நட்சத்திரம் இடம் பெறாமல் பார்த்துக்கொள்ளவும்...ஒரே ராசி தந்தைக்கும் குழந்தைக்கும் தவிர்க்கவும்.

ஆவணி 4 -வெள்ளி -சுவாதி -துலாம் ராசி-துலாம் லக்னம் -10.00 முதல் 10.30 வரை காலை 

ஆவணி 9 -26.8.2015 -புதன் -பூராடம் -தனுசு ராசி-துலாம் லகனம் -காலை 10 முதல் 11 வரை 

ஆவணி 10 -27.8.2015 -வியாழன் -உத்திராடம் -மகரம் ராசி -துலாம் லக்னம் -காலை 10 முதல் 11 வரை 

ஆவணி 12 -29.8.2015 -சனி-அவிட்டம் -கும்பம் ராசி-துலாம் லக்னம் -10.30 முதல் 11 காலை வரை 

ஆவணி 13 -30.8.2015 ஞாயிறு -சதயம் -கும்பம் -துலாம் லக்னம் -10 முதல் 11 வரை காலை 

ஆவணி 14 -31.8.2015 -திங்கள் -உத்திரட்டாதி -மீனம் -துலாம் லக்னம் -10 முதல் 10.30 வரை 

ஆவணி 15 -1.9.2015 -செவ்வாய்-ரேவதி -மீனம் ராசி -துலாம் லக்னம் -10.30 முதல் 11.00 காலை

ஆவணி 18 -4.9.2015 -வெள்ளி -கிருத்திகை -ரிசபம் ராசி-விருச்சிகம் லக்னம் -12 முதல் 1.00 பகல்

ஆவணி 21-7.9.2015-திங்கள் -திருவாதிரை -மிதுனம் ராசி-துலாம் லக்னம் -9.00 முதல் 10 காலை

ஆவணி 22-8.9.2015 செவ்வாய்-புனர்பூசம்-மிதுனம் -விருச்சிகம் லக்னம் -11 முதல் 12 வரை

ஆவணி 23 -9.9.2015 -புதன் -பூசம்-கடகம்ராசி  -துலாம்-9.00 முதல் 10 வரை காலை

ஆவணி 28-14.9.2015-திங்கள் -உத்திரம்-கன்னிராசி-துலாம்-காலை 9 முதல் 10 வரை

ஆவணி 29-15.9.2015-செவ்வாய்-ஹஸ்தம்-கன்னிராசி -விருச்சிகம் லக்னம் -காலை 11 முதல் 12 வரை

ஆவணி 31-17.9.2015-வியாழந்சுவாதி-துலாம்ராசி -விருச்சிகம்- காலை 11 முதல் 12 வரை

திருமண காலம் எப்போது வரும்

திருமண காலம் எப்போது வரும்..? ஜோதிட விளக்கம்

திருமணம் எப்போது நடக்கும் என ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஜோசியரிடம் சென்றால், கன்னி ராசியா..? போன வருசம் எல்லாம் குரு பலம் இருந்தது இப்போ ராசிக்கு 12ல் மறைஞ்சிருச்சே ..குருபலம் இல்லியே இனி அடுத்த வருசம்தான் என சர்க்கரை இல்லை போங்கன்னு சொல்ற ரேசன் கடைக்காரர் மாதிரி சொல்லிவிடுவார்...இது பல ஜோசியர்கள் சொல்லும் குரு பலம் கணக்கு...கோட்சார குருவை மட்டும் வைத்துக்கொண்டு திருமண காலத்தை கணக்கிட முடியாது.இன்னும் சில கணக்குகள் இருக்கின்றன...

கோட்சாரத்தில் நகர்ந்து வரும் குரு,பிறந்த ஜாதகத்தில்  ஏதாவது சுபகிரகங்களுடன் சேர்ந்துவிட்டாரா..கோணம்,திரிகோனம் அந்தஸ்து பெறுகிறாரா..? என பார்க்கனும்.திசை என்ன புத்தி என்ன..? புத்திநாதன் திசாநாதனுக்கு எத்தனாம் இடம்..? களத்திர காரகன் யார்..? அவருக்கும், புத்திநாதனுக்கும் உள்ள சம்பந்தம் எல்லாம் பார்க்கனும்...

சுக்கிர புத்தி,ஏழுக்குடையவன் புத்தி,பாக்யாதிபதி புத்தி நடந்தா ..அவர்கள் திசாநாதனுக்கு கெடாமல் இருந்தால், அந்த புத்தி முடிவதற்குள் திருமனம் நடந்துவிடும்..குருபலம் இல்லாவிட்டாலும் இது நடக்கும்...குருபலம் இருப்பவர்கள் மட்டும்தான் திருமணம் செய்கிறார்களா என்ன..? திருப்பதி,திருச்செந்தூர்,திருத்தணி,திருப்பரங்குன்றம்  முகூர்த்த நாளில் போய் பார்த்தால் ஆயிரக்கணக்கான ஜோடிகள் திருமணம் செய்கின்றனர்...எல்லோருக்கும் குருபலம் இருக்கிறதா என்ன..? 

7க்குடையவன் புத்தி நடந்தால் ,உடலுறவுக்கான காலம் காதலுக்கான காலம் என அறியலாம்...அது தற்போதைய நம் சமூக பழக்கத்துக்கு ஏற்றவாறு திருமணம் எனும் பந்தம் உண்டாக்கி ,நடத்தி வைக்கிறது.

லக்னம்,லக்னாதிபதி 7ஆம் இடம்,7ஆம் அதிபதி இவர்களுக்கு கோட்சார குருவின் பார்வை அல்லது சேர்க்கை பெறுகிற காலமும் திருமணம் நடைபெறும்..சந்திரனுக்கு 2,5,7,9,11 ல் கோட்சார குருவின் சஞ்சாரம் திருமணத்தை ஏற்படுத்திக்கொடுக்கும்..

ஜாதகத்தில் மாந்தி

ஜாதகத்தில் மாந்தி என்பது நம்ம தமிழ்நாட்டில் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை..ஆனா கேரளாவில் அதை முக்கியமாக எடுத்துக்குவாங்க..சனி புத்திரன் மாந்தி ..எனவே சனியை போலவே மாந்தியும் பலன் தரும் என்பார்கள்..அதாவது ஜூனியர் சனிபகவான் .

இவர் ஜாதகத்தில் எங்கெங்கு நின்றால் என்னென்ன பலன்களை தருவார் என பொதுவாக பார்ப்போம்...இதை அப்படியே எடுத்துக்கொள்ள தேவையில்லை..சுபருடன் சேர,சுபர் பார்க்க நல்ல பலனும் உண்டாகும்.

மாந்தி நின்ற ராசிநாதனும் மாந்தியுடன் கூடிய கிரகங்களும் சனி போல கெடுப்பர்.லக்னத்தில் நிற்க நோய் உண்டாகும்.ஊனம் உண்டாகும்...அதிக மன சோர்வு,உடல் சோர்வு கெட்ட குணநலன்,கெட்ட நண்பர்கள் சேர்க்கை உண்டாகும் .

லக்னத்துக்கு 2ல் நிற்க,மோசமான பேச்சு ,வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டா இருக்கும்.நஷ்டம் அதிகம் சந்திப்பார்...சிலர் மிக கருமியாகவும் இருப்பர்..குடும்ப வாழ்வில் சோதனைகள் அதிகம் உண்டாகும்.

3ல் நின்றால் தனக்கு பின் பிறந்த இளைய சகோதரன் ,சகோதரிகளுடன் பகை உண்டாகும் அல்லது அவர்கள் முன்னேற இயலாமல் வாழ்க்கையில் போராடி கொண்டிருப்பர்.

4ல் நின்றால் இவர் பிறந்த காலத்தில் தாயார் மிகவும் துன்பப்பட்டிருப்பார்...பிற்காலத்தில்தான் அவருக்கு சுகம் உண்டு.இவருக்கு நிறைய அலைச்சல் உண்டாகும்...முறையான சுகம் கிடைப்பதில் தடங்கல் ,சொத்துக்களில் சிக்கல் காணப்படும்.

5ல் மாந்தி புத்திர தோசம்..குழந்தைகளால் கவலை,ஏமாற்றம் எந்த காரியம் தொட்டாலும் தடங்கல் தாமதம் உண்டாகும்..

6ல் நிற்க ,சுற்றம் நட்பு பகையாகும் எதுக்கெடுத்தாலும் கையை ஓங்கி விடுவார் ..வம்பு,வழக்குகளை சந்திக்க நேரும்

7ல் நிற்க,களத்திர தோசம்..கணவன் /மனைவி குணநலன் கெடுகிறது...வாக்குவாதம் அதிகரிக்கும்.

8ல் மாந்தி அவமானம் அடிக்கடி சந்தித்தல் ,உடல் ஆரோக்கியம் கெடுதல் ,அதிர்ஷ்டமின்மை

9ல் மாந்தி பூர்வீகம் கெடுகிறது...தந்தையுடன் மனக்கசப்பு...எதையும் குதர்க்கமாக பேசி தன்னை கெடுத்துக்கொள்ளுதல் 

10ல் மாந்தி தொழில் மேன்மை,பதவி,புகழ் கிடைக்கும்

11ல் நிற்க ,எப்போதும் தன லாபம்

12ல் நிற்க,தூக்கமின்மை,அடிக்கடி பயணம் ,தீய கனவுகள்

27 நட்சத்திரத்திற்கும்சகல காரியங்களும் வெற்றி உண்டாகும்

27  நட்சத்திரத்திற்கும்    ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நட்சத்திர மாலா ஸ்தோத்திரம்ொடுக்கப்பட்டுள்ளு..இு ஸ்ரீ ிசங்கால் இயற்றப்பட்ட சக்ி வாய்ந்த மந்திராகும்..கீழே உள்ள ஸ்லோகத்தை தினம் பாராயணம் செய்து வர சகல காரியங்களும் வெற்றி உண்டாகும் 
.
கல பாக்யங்களையும் அளிக்கும் ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்திரம்
 
1. அஸ்வினி
  
 

ஸ்ரீமதாத்மனே குணைகஸிந்தவே நம:சிவாய 
  
தாமலேச தூதலோக பந்தவே நமசிவாய
   
நாம சோஷிதா நமத் பவாந்தவே நமசிவாய
  
பாமரேதர ப்ரதாத பாந்தவே நமசிவாய
 

2. பரணி
 
 
கால பீதவிப்ரபால பாலதே நமசிவாய 
சூல பின்ன துஷ்ட தக்ஷபாலதே நம: சிவாய
மூல காரணீய கால காலதே நமசிவாய
பாலயாதுனா தயாலவாலதே நமசிவாய

3. கிருத்திகை
 
இஷ்ட வஸ்து முக்யதான ஹேதவே நமசிவாய 
துஷ்டதைத்யவம்சதூமகேதவே நமசிவாய
ஸ்ருஷ்டி ரக்ஷணாய தர்ம ஸேதவே நமசிவாய 
அஷ்ட மூர்த்தயே வ்ருஷேந்ர கேதவே நமசிவாய
 

4. ரோஹிணி
 

ஆபதத்ரி பேத டங்க ஹஸ்ததே நமசிவாய 
பாப ஹாரி திவ்ய ஸிந்து மஸ்ததே நமசிவாய
பாப தாரிணே லஸன்ந மஸ்ததே நமசிவாய 
சாப தோஷ கண்டன ப்ரசஸ்ததே நமசிவாய
 

5. ிருகிரீடம்
 

வ்யோம கேச திவ்ய ஹவ்ய ரூபதே நமசிவாய 
ஹேம மேதி னீ தரேந்ர சாப தே நமசிவாய
நாம மாத்ர தக்த ஸர்வ பாபதே நமசிவாய 
காமிநைக தாந ஹ்ருத்துராபதே நமசிவாய
 

6. திருவாதிரை

ப்ரம்ம மஸ்தகாவலீ நிபத்ததே நமசிவாய 
ஜிம் ஹகேந்ர குண்டல ப்ரஸித்ததே நமசிவாய
ப்ரம்மணே ப்ரணீத வேத பந்ததே நமசிவாய 
ஜிம்ஹ கால தேஹ தத்த பந்ததே நமசிவாய
 

7. புனர்பூசம்
 

காமநாசனாய சுத்த கர்மணே நமசிவாய 
ஸாம கான ஜாயமான சர்மணேநமசிவாய
ஹேம காந்தி சாக சக்ய வர்மணே நமசிவாய 
ஸாம ஜாஸூராங்க லப்த சர்மணே நமசிவாய
 

8. பூசம்
 

ஜன்ம ம்ருத்யு கோரதுக்க ஹாரிணே நமசிவாய 
சின்மயை கரூப தேஹ தாரிணே நமசிவாய
மன்மனோ ரதாவ பூர்த்தி காரிணே நமசிவாய 
மன்மனோகதாய காம வைரிணே நமசிவாய
 

 9. ஆயில்யம்
 

யக்ஷராஜ பந்தவே தயாளவே நமசிவாய 
ரக்ஷ பாணி சோபி காஞ்ச நாளவே நமசிவாய
பக்ஷிராஜ வாஹ ஹ்ருச் சயாளவே நமசிவாய 
அக்ஷி பால வேத பூத தாளவே நமசிவாய
 

10. மகம்
 

தக்ஷ ஹஸ்த நிஷ்ட ஜ்õத வேதஸே நமசிவாய 
அக்ஷராத்மனே நமத்பி டௌ ஜஸே நம சிவாய
தீஷித ப்ரகாசிதாத்ம தேஜஸே நமசிவாய 
உக்ஷராஜ வாஹதே ஸதாம் கதே நமசிவாய
 

11. பூரம்
 

ராஜிதாசலேந்ர ஸாநு வாஸிநே நமசிவாய 
ராஜமான நித்ய மந்த ஹாஸினே நமசிவாய
ராஜகோர காவ தம்ஸ பாஸினே நமசிவாய 
ராஜராஜ மித்ரதா ப்ரகாசினே நமசிவாய
 

12. உத்திரம்
 

தீனமான வாளி காம தேனவே நமசிவாய 
ஸூந பாண தாஹ த்ருக் க்ருசானவே நமசிவாய
ஸ்வாநு ராக பக்த ரத்ன ஸானவே நமசிவாய 
தானவாந்தகார சண்ட பானவே நமசிவாய
 

13. ஹஸ்தம்
 

ஸர்வ மங்களா குசாக்ர சாயினே நமசிவாய 
ஸர்வ தேவதா கணாத் சாயினே நமசிவாய
பூர்வ தேவ நாச ஸம்விதாயினே நமசிவாய 
ஸர்வ மன் மனோஜ பங்க தாயினே நமசிவாய
 

14. சித்திரை
 

ஸ்தோக பக்திதோபி பக்த போஷிணே நமசிவாய 
மாகரந்த ஸாரவர்ஷ பாஸிணே நமசிவாய
ஏகபில்வ தானதோபி தோஷிணே நமசிவாய 
நைகஜன்ம பாப ஜால சோஷிணே நமசிவாய
 

15. ஸ்வாதி
 

ஸர்வ ஜீவரக்ஷணைக் சீலினே நமசிவாய 
பார்வதீ ப்ரியாய பக்த பாலினே நமசிவாய
துர்விதக்த தைத்ய ஸைன்ய தாரிணே நமசிவாய 
சர்வரீச தாரிணே கபாலினே நமசிவாய
 

16. விசாகம்
 

பாஹிமாமுமா மனோக்ஞ தேஹதே நமசிவாய 
தேஹிமே பரம் ஸிதாத்ரி தேஹதே நமசிவாய
மோஹி தர்ஷி காமினீ ஸமுஹதே நமசிவாய 
ஸ்வேஹித ப்ரஸன்ன காம தோஹதே நமசிவாய
 

17. அனுஷம்
 

மங்களப் ரதாயகோ துரங்கதே நமசிவாய 
கங்கையா தரங்கி தோத்த மாங்காதே நமசிவாய
ஸங்கத ப்ரவிருத்த வைரி பங்கதே நமசிவாய 
அங்கஜாரயே கரே குரங்கதே நமசிவாய
 

18. கேட்டை
 

ஈஹித க்ஷண ப்ரதாந ஹேதவே நமசிவாய 
அக்னி பால ச்வேத உக்ஷ கேதவே நமசிவாய
தேஹ காந்தி தூத ரௌப்ய தாதவே நமசிவாய 
கேஹ துக்க புஜ்ஜ தூமகேதவே நமசிவாய
 

19. மூலம்
 

திரியக்ஷ தீன ஸத்க்ருபா கடாக்ஷதே நமசிவாய 
தக்ஷ ஸப்த தந்து நாச தக்ஷதே நமசிவாய
ருக்ஷராஜ பானு பாவகாக்ஷதே நமசிவாய 
ரக்ஷமாம் ப்ரஸன்ன மாத்ர ரக்ஷதே நமசிவாய
 

20. பூராடம்
 

அந்ரி பாணயே சிவம் கராயதே நமசிவாய 
ஸங்கடாத் விதீர்ண கிம்கராயதே நமசிவாய
  
பங்க பீஷிதா பயங்கராயதே நமசிவாய 
பங்க ஜாஸனாய சங்கராயதே நமசிவாய
 

21. உத்ிராடம்
 

கர்மபாச நாச நீலகண்டதே நமசிவாய 
சர்ம தாய நர்ய பஸ்ம கண்டதே நமசிவாய
  
நிர்ம மர்ஷி ஸேவி தோப கண்டதே நமசிவாய 
குர்மஹே நதீர்ந மத்விகுண்டதே நமசிவாய
 

22. திருவோணம்
 

விஷ்ட பாதிபாய நம்ர விஷ்ணவே நமசிவாய  
சிஷ்ட விப்ர ஹ்ருத்குஹா வரிஷ்ணவே நமசிவாய
 
இஷ்ட வஸ்து நித்ய துஷ்ட ஜிஷ்ணவே நமசிவாய 
கஷ்ட நாசனாய லோக ஜிஷ்ணவே நமசிவாய
 

23. அவிட்டம்
 

அப்ரமேய திவ்ய ஸூப்ரபாவதே நமசிவாய 
ஸத்ப்ரபன்ன ரக்ஷண ஸ்வபாவதே நமசிவாய
  
ஸ்வப்ரகாச நிஸ்துலா நுபாவதே நமசிவாய
விப்ர டிம்ப தர்சிதார்த்ர பாவதே நமசிவாய
 

24. சதயம்
 

ஸேவ காயமே ம்ருட ப்ரஸாதினே நமசிவாய 
பவ்ய லப்ய தாவக ப்ரஸீத தே நமசிவாய
 
பாவ காக்ஷ தேவ பூஜ்ய பாததே நமசிவாய
 
தாவ காங்க்ரி பக்த தத்த மோத தேநமசிவாய
 

25. பூரட்டாதி
 

 
புக்தி முக்தி திவ்ய தாய போகினே நமசிவாய 
 
சக்தி கல்பித ப்ரபஞ்ச பாகினே நமசிவாய
  
பக்த ஸங்கடாபஹர யோகினே நமசிவாய 
யுத்த ஸன்மனஸ் ஸரோஜ யோகினே நமசிவாய
 

26. உத்தரட்டாதி
 

 
அந்த காந்த காய பாப ஹாரிணே நமசிவாய 
 
சம்தமாய தந்தி சர்ம தாரிணே நமசிவாய
  
ஸந்த தாச்ரிவ்யதா விதாரிணே நமசிவாய 
 
ஜந்து ஜாத நித்ய ஸெளக்ய காரிணே நமசிவாய
 

27. ரேவதி
 
சூலினே நமோ நம: 
கபாலினே நமசிவாய 
பாலினே விரிஞ்சி துண்ட மாலினே நமசிவாய
லீலனே விசேஷ முண்ட மாலிநே நமசிவாய 
சீலினே நம ப்ரபுண்ய சாலினே நமசிவாய