jaga flash news

Thursday 31 December 2015

ருத்திராட்ச மாலை யார் அணியலாம்

ருத்திராட்ச மாலை யார் அணியலாம்
ருத்திராட்ச மாலை யார் அணியலாம் என் நண்பர் ஒருவர் யார் வேண்டுமானாலும் அணியலாம் என்றார் எனக்கு பல சந்தேகம் இருந்தது
அவருக்கு அந்த அளவுக்கு என் சந்தேகத்திற்கு விடை கொடுக்க முடியவில்லை
பார்த்தேன் நம் கூகிள் வாத்தியார் உதவியோடு இனையம் சுற்றினேன்
எனக்கு கிடைத்த தகவலை விட இன்னொரு விசயம் இனித்தது
நீ ருத்திராட்சம் பற்றி முழுவதுமாய் தெரிய வேண்டும் என்று விரும்ப ஆரம்பித்து விட்டாலே நீ கொஞ்சம் கடவுளை நெருங்க ஆரம்பித்து உள்ளதாய் அந்த கட்டுரை கூறியது
பலர் எழுதிய கட்டுரை இது ஓவ்வொன்றாய் படியுங்கள் என் முக்கியமான சந்தேகம் இந்த மாலை அணிந்தால் ஆண் பெண் இனையலாமா என்ற என் சந்தேகம் தெளிவானது
ஆம் அது ஒரு பெரிய விசயம் இல்லை அணிந்து கொள்ளலாம்
பெண்கள் தீட்டு சமயத்திலும் அணிந்து கொள்ளலாம்
ஆனால் மாமிசம் சாப்பிட கூடாது மாமிசம் நான் சாப்பிட மாட்டேன் என்கிற லட்சியம் இருப்பவர்கள் போட்டு கொள்ளலாம்
என்னால் இன்னும் அந்த நிலை அடைய முடியவில்லை
காரணம் மனம் அதுவாக மாமிசம் தின்னும் ருசியை மறக்க வேண்டும் கட்டாயப்படுத்தும் எதுவும் மிக சரியான விசயம் இல்லை எனவே அந்த நிலை அடைந்த பின் கண்டிப்பாய் நானும் அணிவேன்
சரி கட்டுரைகளை படியுங்கள் மிக சிறந்த கட்டுரை தொகுப்பு இது
பாலகுமாரன் சொன்னது போல் இந்த கட்டுரை யார் படிக்க வேண்டும் என்கிற அமைப்பு உள்ளதோ அவர்களே படிப்பார்கள் அவர்கள் கண்ணில் மட்டும் இது படும் என்பார்
இதேதான் நான் படிக்கும்போதும் எனக்கு சொல்லப்பட்டது
எனவே கண்டிப்பாக படியுங்கள் மனம் முதிர்ச்சி அடையும்
கட்டுரை என் ஒன்று
ருத்ராட்ஷத்தின் - மகிமை
ருத்ராட்ஷம் எவ்வாறு தோன்றியது?
சிவபெருமான் கண்களிலிருந்து தோன்றியது ருத்ராட்ஷம். அதை அணிபவரை அவர் கண்போலக் காப்பாற்றுவார். எனவே அனைவரும் கண்டிப்பாக ஐந்து முகம் ஒரு ருத்ராட்ஷமாவது எப்போதும் கண்டிப்பாக அணிந்தீருக்க வேண்டும்
ஆப்படியானால் யார் வேண்டுமானாலும் ருத்ராட்ஷம் அணியலாமா?
ஆமாம்! ருத்ராட்ஷத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம். நீர் பருகும் போதும், உணவு உண்ணும்போதும், தூங்கும்போதும் எல்லாக்காலத்திலும் ருத்ராட்ஷம் அணிந்திருக்க வேண்டும் என்று சிவபெருமானே கூறியுள்ளதாக சிவபுராணம் தெரிவிக்கிறது.
சிறுவர், சிறுமியர் ருத்ராட்ஷம் அணிவதால் அவர்களின் படிப்புத் திறமை பளிச்சிடும். ருத்ராட்ஷத்தை பெண்கள் அணிந்தால் தீர்க்க சுமங்களியாக மஞ்சள் குங்குமத்தோடு வாழ்வார்கள். இதனால் அவர்களுடைய கணவருக்கும் தொழிலில் வெற்றியு்ம் இல்லத்தில் லட்சுமி கடாசமும் நிறைந்திருக்கும். ஆகையால் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணியவேண்டும்.
சுத்தபத்தமாக இருப்பவர்கள் தான் ருத்ராட்ஷம் அணிய வேண்டும் என்று சொல்கிறார்களே?
குளித்தவர்கள்தான் சோப்பு உபயோகப்படுத்த வேண்டும் என்று யாராவது சொல்வார்களா? ஆரோக்கியம் உள்ளவனுக்குத்தான் மருந்து: நோயில் தவிப்பவனுக்கு கிடையாது, என்று எவரேனும் சொன்னால் ஏற்றுக்கொள்வோமா? அது போலத்தான் சுத்தமாக இருப்பவர்கள்தான் ருத்ராட்ஷம் போட்டுக்கொள்ள வேண்டும் என்று சொல்வதும்.
ருத்ராட்ஷம் அணிந்தால்தான் மனமும், உடலும் தூய்மை அடையும். எனவே உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்ளாமல் நம்பிக்கையோடு ருத்ராட்ஷம் அணிந்து கொள்ளுங்கள். எப்படி மருந்துக்குப் பத்தியம் அவசியமோ அதுபோல ருத்ராட்ஷம் அணிபவர்களும் மது அருந்துதல், புகை பிடித்தல், புலால் உண்ணுதல் போன்றவற்றை படிப்படியாக விட்டுவிட முயற்சிக்க வேண்டும். (முக்கியமாக மாடு, பன்றி மாமிசம் எப்போதும் சாப்பிடக்கூடாது).,
ருத்ராட்ஷத்தில் முகமா? அப்படியென்றால் என்ன? யார், யார் எத்தனை முகம் கொண்ட ருத்ராட்ஷம் அணியலாம்?
ருத்ராட்ஷத்தின் குறுக்கே அழுத்தமான கோடுகளைக் காணலாம், இதற்குத்தான் முகம் என்று பெயர். ஐந்து கோடுகள் இருந்தால் ஐந்து முகம். ஆறு கோடுகள் இருந்தால் ஆறு முகம் என்று இப்படியே கணக்கிட வேண்டியதுதான். எத்தனை முகம் என்பதைக் கண்டுபிடிக்க எவ்வித முன் அனுபவமும் தேவையில்லை. கண்ணால் சாதாரணமாகப் பார்த்தாலேயே தெரியும்.
அதுமட்டுமல்ல, எல்லா இடங்களிலும் எளிதில், மிகமிக சகாயமான விலையில் கிடைக்கும் ஐந்து முக ருத்ராட்ஷம் அணிவதே போதுமானது. பகவானின் திருமுகம் ஐந்து. நமச்சிவாய ஐந்தெழுத்து. பஞ்சபூதங்கள் ஐந்து (நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம்).நமது கை கால் விரல்கள் ஐந்து. புலன்கள் ஐந்து. ஆகையால் மிக அதிகமாக ஐந்து முக ருத்ராட்ஷத்தையே படைக்கின்றார். ஆகையால் ஐந்து முக ருத்ராட்ஷங்கள் அணிவதே மிகச் சிறப்பு. இதை ஆண், பெண் மற்றும் குழந்தைகள் என சகலமானவர்களும் அணியலாம். ஐந்து முக ருத்ராட்ஷத்திலேயே மற்ற எல்லா முக ருத்ராட்ஷங்களினால் கிடைக்கின்ற பலன்களும் அடங்கிவிடும்.
பெண்கள் ருத்ராட்ஷம் அணியக்கூடாது என சிலர் சொல்கிறார்களே?
பெண்களின் பெருந்தெய்வமாக விளங்குபவள் ஆதிபராசக்தி அவள் ருத்ராட்ஷம் அணிந்திருப்பதை, கொந்தளகம் சடை பிடித்து விரித்து பொன்தோள் குழை கழுத்தில் கண்டிகையின் குப்பை பூட்டி என்று விவரிக்கிறது (அருணாசலபுராணம் (பாடல் எண் 330) பழி, பாவம் முதலியவற்றை முழுவதுமாகத் தீர்த்துக் கட்டுகிற திருநீறையும், ருத்ராட்ஷத்தையும் தனது திருமேனி முழுவதிலும் அகிலாண்டேஸ்வரி அணிந்து கொண்டாளாம். பராசத்திக்கு ஏது பழியும், பாவமும்? நமக்கு வழி காட்டுவதற்காகத்தானே அம்பிகையே ருத்ராட்ஷம் அணிந்து கொள்கிறாள்!. எனவே பெண்கள் தாராளமாக அம்பிகை காட்டும் வழியைப் பின்பற்றி ருத்ராட்ஷம் அணிய வேண்டும். மேலும், சிவ மஹாபுராணத்திலும் பெண்கள் கட்டாயம் ருத்ராட்ஷம் அணிய வேண்டும் என்று சிவபெருமானே வலியுறுத்தியுள்ளார்.
எல்லா நாட்களிலும் பெண்கள் ருத்ராட்ஷம் அணியலாமா?
பெண்கள், தங்களுடைய தாலிக் கொடியில் அவரவர் மரபையொட்டி சைவ, வைணவச் சின்னங்களைக் கோர்த்துதான் அணிந்திருக்கின்றனர். அதை எல்லா நாட்களிலும் தானே அணிகிறார்கள்? சில பெண்கள், யந்திரங்கள் வரையப்பட்ட தாயத்து போன்றவற்றையும் எப்போதும் அணிந்திருப்பதுண்டே? இவற்றைப் போல் ருத்ராட்ஷத்தையும் எல்லா நாட்களிலும் கழற்றாமல் அணிய வேண்டும். ருத்ராட்ஷம் வாழும் இந்த உடம்பிற்காக அல்ல. உயிரின் ஆத்மாவிற்காகவே சிவபெருமானால் அருளப்பட்டது.
ருத்ராட்ஷம் கண்டிப்பாக அணிய வேண்டுமா?
இன்று பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை ஆண் - பெண் இருபாலரும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிய வேண்டும். ஏனெனில் நம்மைப் படைத்ததே பாவங்களைப் போக்கி சிவபெருமானின் திருவடியை அடைவதற்காகவே நம் வாழ்க்கையில் வரும் கஷ்டம், வேதனை, துன்பம், வலி இவைகளிலிருந்து விடுபடுவதற்காகவே ருத்ராட்ஷம் அணிய வேண்டும். ருத்ராட்ஷம் அணிந்தால் மறுவிறவி இல்லை மஹா பேரானந்தமே. ருத்ராட்ஷம் அணிவதை சிலபேர் நீ அணியக்கூடாது சுத்தமானவர்கள் தான் அணிய வேண்டும் என்று சொல்வார்கள், அதைப் பொருட்படுத்தக் கூடாது. இறைவனுக்கு ஒருவர் மீது கருணை இருந்தால் மட்டுமே ருத்ராட்ஷம் கழுத்தில் அணியும் பாக்கியம் கிடைக்கும். ருத்ராட்ஷம் முழுக்க முழுக்க சிவபெருமானுடையது. சிவபெருமான் கண்களை விழித்து 1000 வருடங்கள் கடும் தவம் இருந்து அவர் கண்களில் இருந்து தோன்றியதே ருத்ராட்ஷம். ருத்ராட்ஷத்தை அணிந்து கொண்டவர்கள் சிவ குடும்பத்தில் ஒருவராவார். சிவபெருமான் தன் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு கஷ்டத்தையும், துன்பத்தையும் கொடுப்பாரா?. அதனால் யார் என்ன சொன்னாலும் கண்டிப்பாக ருத்ராட்ஷத்தை அணியவேண்டும். ருத்ராட்ஷதை அணிந்த பின் எந்த சூழ்நிலையிலுமே கழற்றவே கூடாது. நீங்கள் இப்பொழுது எப்படி வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கின்றீர்களோ அதேபோல் வாழ்ந்தால் போதும் இதில் எவ்வித மாற்றத்தையும் செய்யத் தேவையில்லை. நெற்றியில் திருநீறு அணிந்து ஓம் நமசிவாய சொல்லி வந்தாலே போதுமானது.
நீத்தார் கடன் (திதி), பெண்கள் தீட்டு, கணவன் - மனைவி இல்லறதாம்பத்யம் நேரங்களில் ருத்ராட்ஷம் அணியலாமா?
முக்கியமாக இம்மூன்று விஷயங்களுமே இயற்கையானதே. இதில் எந்த நிகழ்ச்சியும் செயற்கையானதே கிடையாது. நீத்தார் கடன் போன்றவற்றை செய்யும் போது அதை செய்விப்பவரும், செய்பவரும் ருத்ராட்ஷம் அணிந்திருப்பது அவசியம். இதனால் பித்ருக்களின் ஆன்மாக்கள் மகிழும் என்று சிவபெருமானே உபதேசித்திருக்கிறார். இனியும் ஏன் சந்தேகம் ஆகையால் இம்மூன்று நிகழ்ச்சிகளின் போது கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணியலாம். அதனால் பாவமோ, தோஷமோ கிடையாது.
சரி ருத்ராட்ஷத்தை அணிந்து கொண்டேன், இதன் பலன்கள் தான் என்ன?
நிராடும் போது ருத்ராட்ஷம் அணிந்திருந்தால் கங்கையில் குளித்த புண்ணியம் கிடைக்கும் என்கின்ற புராணங்கள், கங்கையில் மூழ்கினால் பாவம் போகும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். பாவங்களினால் தான் நமக்குக் கஷ்டம் உண்டாகிறது. ருத்ராட்ஷம் அணிவதால் கொடிய பாவங்கள் தீரும். இதனால் நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களும் படிப்படியாகக் குறைந்து விடும்.
மேலும் ருத்ராட்ஷம் அணிபவருக்கு லஷ்மி கடாஷ்சமும், செய்யும் தொழிலில் மேன்மையும், சகலவிதமான ஐஸ்வர்யங்களும் ஏற்பட்டு பகவானின் பேரின்பமும், ஆனந்தமும் கிடைக்கும் என்று சிவ மஹா புராணம் அறுதியிட்டுக் கூறுவதையும் கருத்தில் கொள்க.
இது மட்டுமல்ல ருத்ராட்ஷம் அணிவதால் இதய நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்றவற்றின் தீவிரம் குறைவதாக வெளிநாட்டவர்களின் ஆய்வுகள் கூறுகின்றன. எனவே தூங்கும்போதும் கூட ருத்ராட்ஷத்தைக் கழற்றி வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், வேலை வாய்ப்பு இல்லாதவர்களும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிந்து தினந்தோறும் 108 முறை எழுத்தாலோ மனதலோ பஞ்சாட்சரத்தை சொல்லிவந்தால் 18 மாதத்தில் மேற்கூறிய பிரார்த்தனைகள் நிறைவேறும்.
ருத்ராட்ஷம் அணிவதால் கடவுளின் கருணை கிட்டுமா?
சர்வ நிச்சயமாக அவன் அருளாலே அவன் தால் வணங்கி அவர் கருணை செய்தால்தான் அவருடைய நாமத்தைக்கூட நாம் சொல்ல முடியும். அப்படியிருக்க அவர் ருத்ராட்ஷத்தையே நமக்கு அளித்துள்ளாரே அதனால் திருநீறு தரித்தல், ருத்ராட்ஷம் அணிதல், பஞ்சாட்சர மந்திரமான "ஓம் நமசிவாய" உச்சரித்தல், இம்மூன்றும் ஒரு சேரச் செய்து வந்தால் முக்தி எனும் மஹா பேரானந்தத்தை அடைவீர். இம்மூன்றும் இந்து தர்மங்கள், தர்மத்தை விடாதவர்களை இறைவன் கைவிடமாட்டார். மேலும் நவகிரஹங்கள் நன்மையே செய்யும், (ஏழரைச் சனி, அஷ்டமச்சனி, ராகு-கேது) தோஷத்தின் தாக்கங்கள் குறையும். ருத்ராட்ஷம் அணிந்திருக்கும் வேலையில் உயிர் பிரிந்தால் சிவபெருமான் திருவடியை அடைந்து நற்கதி எற்படும். பேய், பிசாசு, பில்லி, சூனியம், மந்திரம், தந்திரம், இவை அனைத்தும் ருத்ராட்ஷம் அணிந்திருப்பவர்களை ஒன்றுமே செய்யமுடியாது. ஆகையால் ஒவ்வொருவரும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிய வேண்டும். ஒருவர் ஏழுஜென்மங்கள் தொடர்ந்து புன்னியம் செய்திருந்தால் மட்டுமே அவர்களுக்கு ருத்ராட்ஷம் அணியும் மஹா பாக்கியம் கிடைக்கும்,.
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான
தத்துவனே
இத்தனை மேன்மைகள் இருந்தும் சிலர் திருநீறு, ருத்ராட்ஷம் அணியத் தயங்குகிறார்களே?
உலகில் மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் அவர்களின் மத சின்னங்களை அணிய வெட்கப்படுவதில்லை. நாம் நமது மதச் சின்னங்களாகிய விபூதி, ருத்ராட்ஷம் மற்றும் நமசிவாய என்ற ஜபம் ஆகியனவற்றை ஏன் விடவேண்டும்? இதற்காக யாராவது நம்மைக் கேலி பேசினாலும் பொருட்படுத்தக்கூடாது. அப்படிப் பேசுகிறவர்களா நமக்குச் சோறு போடுகிறார்கள்? அவர்களா நம்மைக் காப்பாற்றுகிறார்கள்? ஆனால் மதச் சின்னங்களை அணிந்து நமசிவாய என்று எல்லாக் காலத்திலும் சொல்லிக் கொண்டிருப்பவர்கள சிவபெருமான் நிச்சயம் காப்பாற்றுவார். அவரவர், தங்கள் வாழ்க்கையிலேயே இதை அனுபவப் பூர்வமாக உணரலாம். ருத்ராட்ஷம் அணிபவர்கள் கண்டிப்பாக எந்த சூழ்நிலையிலும், ருத்ராட்ஷதைக் கழற்றவே கூடாது. யார் என்ன சொன்னாலும் அதைப் பொருட்படுத்த வேண்டாம். சிவபெருமானின் அனுக்கிரஹமும், ஆசீர்வாதமும் இருந்தால் மட்டுமே ஒருவருக்கு ருத்ராட்ஷம் கிடைக்கும். இத்தனை மேன்மைகள் இருந்தும் இதனைப் படித்துப் பார்த்துத் தெரிந்த பின்பும் மனிதராகப் பிறந்தவர்கள் ருத்ராட்ஷம் அணியவில்லை என்றால் அவர்கள் இப்பிறப்பிற்கே பிரயோஜணமில்லாமல் போய்விடுவார்கள் ஆகையால் கண்டிப்பாக ஒவ்வொருவரும் ருத்ராட்ஷம் அணிய வேண்டும் இந்த ருத்ராட்ஷ சேவையை என் உயிரினும் மேலாக கருதி இலவசமாக செய்கிறேன் அதனால் தயுவு செய்து ருத்ராட்ஷம் வாங்கி ஒரு விநாடி நேரம் கூட கழற்றாமல் எப்பொழுதும் அனிந்திருப்பவர்கள் மட்டுமே உங்கள் முகவரியை SMS செய்யவும் ருத்ராட்ஷத்தை வாங்கி வீட்டு பூஜை அறையிலோ, சுவாமி படத்திலோஅணிந்துவிட்டால் மஹா பாவம் ருத்ராட்ஷத்தை அணிந்துவிட்டு கழற்றிவிட்டால் மிக மஹா பாவம். உங்களால் அணிய முடியவில்லை என்றால் எங்கள் முகவரிக்கு திருப்பி அனுப்பி விடவும் மற்றவர்களுக்காவது உதவும் ஒம் நமசிவாய
"திருச்சிற்றம்பலம்"
முக்கியகுறிப்பு :
மனநிலை பாதித்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், ஆதரவற்றவர்கள், நோயுற்றவர்கள், பிரார்த்தனை வைப்பவர்கள், கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிய வேண்டும். ஏனெனில் அவர்களை சிவன் தன்கண்போல் காப்பார்.
பத்ம புராணம் கூறவது:
"எவன் ஒருவன் சைவனானாலும், வைஷ்ணவனானாலும், சாக்தனானாலும், காணாபத்யனானாலும், சௌரனானாலும் இறக்கும் தருவாயில் சிரசில் ருத்ராட்ஷத்தை தரித்திருப்பானாகில், எல்லா பாபங்களினின்றும் விடுபட்டு மறு பிறவியில் சகல சுகங்களையும் அனுபவித்து மோக்ஷத்தை கிரமமாய் பெறுவான்".. பத்ம புராணத்தில் பரமேஸ்வரன் தன் குமாரனாகிய கார்திகேயனுக்கு ருத்ராக்ஷத்தின் மகிமையை வர்ணிக்கிறார். ருத்ராக்ஷத்தைப் பார்ப்பது லக்ஷம் பங்கு புண்ணியாமானால், அதனை அணிவது அதினினும் 10 கோடி பங்கு புண்ணியத்தைப் பயக்கும்.
ருத்ராக்ஷம் தீர்த்தங்களிலும் விசேஷமான தீர்த்தம் என கருதப்படுவதால் அதை அணிந்து கொண்டு செய்யும் பூஜை, ஜபம், தானம், பிதுர்கடன்கள் எல்லாம் நூறு மடங்கு விசேஷ பலனைக் கொடுக்கும். ருத்ராக்ஷத்தால் புனிதமாக்கப்பட்ட நீரை உடலில் தெளித்துக்கொள்ளவேண்டும். ஆகர்ஷண சக்தி பெற்ற இந்த ருத்ராக்ஷம் அணிபவருக்கு அவர்கள் நல்ல மனிதர்களைச் சந்திக்கையில் அவர்களது நல்ல சக்திகளை ஆகர்ஷிக்கும் சக்தி உண்டாகும்.
கட்டுரை எண் இரண்டு
சைவப் பெருமக்களுக்குத் திருநீறு, உருத்திராட்சம், ஐந்தெழுத்து என்ற மூன்றும் இன்றியமையாதவை.
* திருநீறு, விபூதி, பஸ்மம், பசிதம், சாரம், இரட்சை என்ற பல பெயர்களை உடையது திருநீறு. ஆன்மாக்களின் பாவங்களையெல்லாம் நீறு செய்வதனால் திருநீறு; பஸ்மம்.
* விமேலான; பூதிஐஸ்வர்யம். மேலான ஐஸ்வர்யத்தை தருவதால் விபூதி. அறியாமை அழியும்படி சிவஞானமாகிய சிவ தத்துவத்தை விளக்குவதால் பசிதம். ஆன்மாக்களின் மல மாசினைக் கழுவுவதால் சாரம். ஆன்மாக்களைத் துன்பத்தினின்றும்
நீக்கி ரட்சிப்பதனால் ரட்சை.
*""நீறில்லா நெற்றி பாழ்'' என்று அவ்வையார் கூறுகிறார். திருநீற்றை அன்புடன் பூசுவோர், எல்லா நோய்களும் நீங்கப் பெறுவர். அவ்வாறு பூசாதோர் நோய்வாய்ப்பட்டு செத்துப்பிறந்து உழலுவார்கள்.
"நோய்களுக்கும் அஞ்சேன்; பிறப்புக்கும், இறப்புக்கும் அஞ்சேன்; திருநீறு பூசாதவர்களைக் கண்டால் அஞ்சுகிறேன்'' என்கிறார் பாண்டிநாட்டு முதலமைச்சராகிய மாணிக்கவாசகர்.
* மனிதனுக்கு மிகவும் தேவையானவை ஐந்து பொருட்கள். 1. நல்வாக்கு. வாக்கு செல்வாக்குடையதாகவும், இனிமையுடையதாகவும் அமைதல் வேண்டும். 2. இனிய பால்சோறு. 3. நல்லார் இணக்கம். 4. உயர்ந்த நற்குணங்கள். 5. குறைவில்லாத செல்வம். இந்த ஐந்தும் ""சிவாய நம'' என்று ஜெபித்து திருநீறு தரிப்பதனால் எளிதில் கிட்டும்.
* திருநீற்றை ஒருவருக்குத் தரும்போதும், நம் பூசிக்கொள்ளும்போதும் சிவபெருமானுடைய ஐந்தெழுத்தை அன்புடன் ஓதுதல் வேண்டும். இந்தக் காரணத்தினால் திருநீற்றுப் பஞ்சாட்சரம் என்ற ஒரு பெயரும் அமைந்தது.
(வாரியார் சொற்பொழுவிலிருந்து.)
--------------------------------------------------------------------------------------------------------------------------
ஆன்மீக ஆன்மா அன்பர்களுக்கு
இந்த பதிவை ஒருவர் படிக்கிறார் எனில் அதற்கு அவர்கள்
நற்காரியங்கள் செய்திருக்க வேண்டும் இதை படித்த பின் ருத்ராட்சம்
அணிந்துகொள்வர் எனில் இறைவன் அவர்கள் மீது கருணை
செய்திருக்க வேண்டும் ஏனெனில் ருத்ராட்சம் அணிந்து இருப்பவர்கள்
அனைவரும் சிவ குடும்பமே சிவ குடும்பத்தில் ஒருவர் ஆவார்.
பூர்வ ஜென்மத்தில் ஒரு ஆன்மா புன்னியம் செய்திருந்தால் தான்
ருத்ராட்சம் கழுத்தில் அணியும் பாக்கியம் கிடைக்கும் .
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது
பல பிறவிகள் எடுத்த பிறகே இந்த மானிடப்பிறவியை அடைகிறோம்.
சிவபுராணத்தில் "புல்லாகிப், பூடாய்ப், புழுவாய், மரமாகிப், பல்விருக
மாகிப், பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப், பேயாய்க்
கணங்களாய் வல்லசுரர், ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ
நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்
எம்பெருமான் மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்!
என்ற பாடல் வரிக்கேற்ப நாம் பல பிறவி கஷ்டங்களை கடந்து
வந்துள்ளோம். உலகில் மொத்தம் 84 நான்கு லட்சம் உயிரினங்கள்
உள்ளது அதில் கடைசி பிறப்பு தான் மானிட பிறவி.
ஒரு அறிவு புல் பூண்டு மரம் செடி கொடிகள்!
இரண்டு அறிவு நீரில் வாழ்பவை மீன் தவளை முதலை நண்டு!
மூன்று அறிவு நிலத்தில் ஊர்பவை பாம்பு பல்லி ஓணான்!
நான்கு அறிவு வானில் பறப்பவை மயில் குயில் கழுகு புறா காகம்!
ஐந்து அறிவு ஆடு மாடு சிங்கம் புலி யானை எருமை நாய் பூனை!
ஆறு அறிவு ஆண் பெண், திருநங்கை
என்று இந்த ஆறு அறிவும் ஒன்று முதல் எண்பத்தி நான்கு லட்சம் முடிய
பிறந்து இறந்து இறந்து பிறந்து 8399999 வரை மற்ற உயிரினங்களாக
வாழ்ந்து 8400000 லட்சம் எண்ணும்போது தான் மானிடப் பிறவி
அதுவும்
8399999 இறந்த பிறந்து வாழும்போது இதில் ஏதாவது
ஒரு பிறப்பில் புண்ணிய காரியம் செய்து இருந்தால்தான் மானிட பிறவி
கிடைக்கும் அப்படி பட்ட அரிதான மனித பிறவி எடுத்து பிரயோஜனம்
இல்லாமல் போய்விடகூடாது என்பதற்காகத்தான் இறைவன் நம்மீது
கருணை கொண்டு தேவர்களுக்கு கூட கிடைக்காத மஹா
பொக்கிஷம்மான
திருநீறு ருத்ராட்சம் பஞ்சாட்சரம்
அருளியுள்ளார் இவைகளை பயன் படுத்தி பயன்பெறலாம் இதை என்
அனுபவத்தில் அனுபவித்து சொல்லுகின்றேன்.
சிலர் சொல்லுவார்கள் சுத்தமாக இருப்பவர்கள் தான் ருத்ராட்சம்
அணிய வேண்டும் என்று?
ஆம் சுத்தம் என்பது மனதை சுத்தமாக வைத்துக்கொள்வது பிறர்க்கு
தும்பம் தராமல் இருப்பது பிறரின் சொத்துக்களை அபகரிப்பது
பொறாமை படுவது கொலை கொள்ளை கற்பழிப்பு திருடுவது
நம்பிக்கை துரோகம்
செய்வது பிறருக்கு தண்டனை தருவது தண்டிப்பது பொய் சாட்சி
சொல்வது இதைப்போன்ற சுத்தம் இல்லாத மனிதநேயம் இல்லாத
காரியங்கள் செய்பவர்கள் தான் ருத்ராட்சம் அணிய கூடாது. தர்மம் மனிதாபிமானம் மரியாதை கனிவு அன்பு கருணை பக்தி
பிரதோஷம் அன்று ஆலயம் செல்வது இதுபோன்ற நல்ல
நற்காரியங்களை செய்பவர்கள் ருத்ராட்சம் கண்டிப்பாக
1000000000000000% மடங்கு அணியலாம் நாம் பிறந்ததின் பயனும்
பெறலாம்.
உதாரணத்திற்கு
63 நாயன்மார்கள் பெரியபுராணம் படியுங்கள் தெளிவு கிடைக்கும்
வெற்றி நிச்சயம்.
திருநீறு (நெற்றியில்) தரித்தல் ருத்ராட்ஷம் (கழுத்தில்) அனிதல்
பஞ்சாட்சர மந்திரம் (ஓம் நமசிவாய மனதில்) உச்சரித்தல் இம்மூன்றும்
ஒருவர் ஒரு சேரச் செய்வார் எனில் அவர்கள் இல்லத்தில்
ஐஸ்வர்யங்கள் பெறுகும்
இறைவனின் (சிவபெருமானின்) கருணை கிடைக்கப்பெறும்.
4 முகம் 5முகம் 6முகம் ருத்ராட்சம் எங்கு வாங்கினாலும்
ஒரிஜினல்ளாகத் தான் இருக்கும் ஏனெனில் அதன் விலை 5ருபாய்
முதல்
15ருபாய் வரைதான்.

Tuesday 29 December 2015

கொத்தமல்லி,புதினா,வெந்தயக் கீரை

கொத்தமல்லி
நாட்டுக் கொத்தமல்லி விதையைத் தரையில் சிறிது தேய்த்து, ஒருநாள் ஊறவைத்த பிறகு மண்ணில் தூவி, விதைகள் தெரியாதபடி மண்ணால் மறைக்க வேண்டும். 10 நாட்கள் தண்ணீர் தெளித்துவந்தால், கொத்தமல்லி நன்கு வளரும். தேவைப்படும்போது, தழையை மட்டும் கிள்ளிக்கொள்ளலாம். அவை மீண்டும் வளர்ந்துவிடும்.
பலன்கள்: கொத்தமல்லியை சாறு எடுத்தோ, கஷாயமாக்கியோ குடித்தால், நச்சு நீக்கும்; டானிக்காகச் செயல்படும்; கல்லீரல் சுத்தமாகும்; கல்லீரல் பலப்படும். கொத்தமல்லிக்கு, பூஞ்சைத் தொற்றுக்களைக்கூட குணமாக்கும் வல்லமை உண்டு. கொத்தமல்லி இலைகளை அரைத்து, தேனுடன் கலந்து பூசினால், சருமத் தொற்றுக்கள் குணமாகும்.
---
புதினா
கடையில் வாங்கிய புதினா கட்டுகளிலிருந்து இலையைப் பயன்படுத்துவோம். தூக்கிஎறியப்படும் அந்தப் புதினா தண்டுகளை நட்டுவைக்கலாம். இதற்கு நேரடி சூரியஒளி தேவை இல்லை. சன் ஷேடு கிடைத்தாலே போதும்.
பலன்கள்: புதினாவில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருக்கிறது. நார் சத்துக்கள் நிறைந்துள்ளன. வாய் துர்நாற்றம் இருக்காது. பசி எடுக்காதவர்களுக்கும் பசி எடுக்கும். புதினா டீ சுறுசுறுப்பையும் புத்துணர்ச்சியையும் அளிக்கும்.
----
வெந்தயக் கீரை
வீட்டில் இருக்கும் வெந்தயத்தை ஊறவைத்து, மறுநாள் மண்ணில் புதைத்து, சிறிது தண்ணீர் தெளிக்கவும். வெந்தயக்கீரை இரு வாரங்களுக்குள்ளேயே வளர்ந்துவிடும். இதை ஜன்னல் ஓரங்களில் வளர்க்கலாம். நாள்தோறும் தண்ணீரைத் தெளித்து வந்தாலே, நன்கு வளரும்.
பலன்கள்: வெந்தயக்கீரை உடலுக்குக் குளிர்ச்சி தரும். அல்சர் பிரச்னையைக் குறைக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. மோருடன் வெந்தயக் கீரை சாற்றைக் கலந்து குடிக்க, தொண்டை முதல் குடல் வரை பலன் கிடைக்கும்.

கோலம் போடுதலில் மறைந்துள்ள அர்த்தங்கள் என்னவென்று பார்ப்போம்.

கோலம் போடுதலில் மறைந்துள்ள அர்த்தங்கள் என்னவென்று பார்ப்போம்.
கோலம் பலவகைப்படும். பிறந்த குழந்தையை வரவேற்க தொட்டில் கோலம்; சுபிட்சத்தை வரவேற்க இருதய கோலம், வட்டக் கோலம், பாம்புக் கோலம், மனை கோலம். கம்பிக் கோலம், தந்திரிக் கோலம், புள்ளிக் கோலம் என அடுக்கிக் கொண்டே போகலாம்.
கோலம் ஒருவகை யந்திரமாகக் கருதப்படுகிறது. அதனாலே இவை வீட்டு வாசலில் வரையப்பட்டன. மேலும் மார்கழியின் போது கோலம் போடுவது அவசியம் என்பதற்கு முக்கியக் காரணமும் உண்டு.
மார்கழி மாதத்தில் பூமத்திய ரேகையில் பல மாற்றங்கள் நிகழ்வதாக கூறுகின்றனர். இந்த மார்கழி அதாவது டிசம்பர் மாதத்தில் சூரியன் தெற்கிலிருந்து வடக்கிற்கும், ஜூன் முதல் நவம்பர் வரை வடக்கிலிருந்து தெற்கிற்கும் சூரியனின் ஓட்டம் மாறுகிறது.
இந்த மாற்றத்தின் போது பூமியினுடைய சக்தி நிலையில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த மார்கழியில் சூரியன் தட்சிணாயணத்திலிருந்து உத்தராயணத்திற்கு நகர்கிறது.
இந்த சக்தி மாற்றத்தின் போது தேவையான அறிவு, ஞானம் இருந்தால், அப்போது ஏற்படும் சக்தி சூழ்நிலையை, நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.
அதில் ஒரு வழிமுறைதான் இந்த கோலமிடுதல். காலையில் எழுந்து வாசலில் சாணம் பூசுவது, தூசி பறக்கும் மண்ணை திட்டமாக்குவதோடு கோலம் கலையாமல் இருக்க உதவுகிறது. ஆனால் இதில் மறைந்திருக்கும் அர்த்தம் என்னவென்றால் சாணம் ஒரு கிருமிநாசினி. இது நம் வீட்டு வாசலில் இருக்கும் கிருமிகளைக் கொல்லும்.
மேலும் சூரிய உதயத்திற்கு முன் வாசலில் கோலமிடுவது நம் உடலுக்குத் தேவையான முழுமையான பிராணவாயுவை கொடுக்கிறது. இது நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும்.
காலையிலேயே குனிந்து நிமிர்ந்து கோலம் போடுவது உங்களின் உடலில் இருக்கும் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. மேலும் இது ஒருவகை யோகாசனமும் கூட. இடுப்பை வளைத்து, கால்களை நேராக்கி, தலையை குனிந்து கோலமிடுதல் யோகாசனமாகும். இது உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
மேலும் கோலமிடும் போது நம்முடைய சிந்தனை ஒருநிலைப்படுத்தப்படுகிறது. கோலத்தின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலை, ஒரு புள்ளியிலிருந்து இன்னொரு புள்ளி என கோடுகளால் இணைக்கும் கோலம் உங்கள் சிந்தனையை ஒருநிலைப்படுத்தவோடு உங்கள் சிந்ததனைச் சிதறல்களை குறைக்கும் ஒரு பயிற்சியாகும். அனுதினமும் நீங்கள் இந்தப் பயிற்சியை செய்யும் போது நீங்கள் தெளிந்த சிந்தனை உடையவராக உருவாகுகிறீர்கள்.
மேலும் இந்த புள்ளிக் கோலத்தை போடும் போது உங்கள் கண் ஒரு புள்ளியை கூர்ந்து கவனிப்பதால் உங்களின் கண்பார்வையும் அதிகரிக்கின்றது. இது உங்கள் கண்களுக்கு நீங்கள் கொடுக்கும் இன்னொரு பயிற்சியாகும். அதனால்தான் நம்முடைய பாட்டிகளின் கண்பார்வை நம்மை விட கூர்மையாக இருக்கும்.
மேலும் அரிசி மாவில் கோலமிடுவது ஒரு வகை தானமே. மார்கழி மாதம் என்பது பனி, மழைக்காலம் என்பதால் எறும்பு, சிறு பூச்சிகள், மற்றும் குருவிகளுக்கு இந்த அரிசி மாவு உணவாக மாறுகிறது. கோலம் என்பது மனிதனின் உடலுக்கு நன்மை அளிக்கும் அதேவேளையில் விலங்குகளுக்கும் உணவாகட்டும் எனற தத்துவம் இந்தியர்களின் பழக்க வழக்கங்களில் மட்டுமே காணப்படும் உயரிய பண்பாகும்.
இனியும் உங்கள் வீட்டு வாசலில் ஸ்டிக்கர் கோலத்தை அலங்காரத்திற்கு ஒட்டாமல், அர்த்தமுள்ள அரிசி கோலத்தைப் போட பழகிக்கொள்ளுங்கள்.
உங்கள் வீடு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தாலும் பிரச்சனை இல்லை. உங்கள் வீட்டின் முன் இருக்கும் சிறிய வாசலில் சிறிய கோலமிட்டு அனுதினமும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

பிரம்ம முகூர்த்தம் சிறப்பு தெரியுமா .............

பிரம்ம முகூர்த்தம்
சிறப்பு தெரியுமா .............
🌼சூரியன் உதித்தெழுவதற்குநாற்பத்தெட்டு நிமிடங்களுக்கு முன் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகின்றது.
🌼பிரம்ம 10 முகூர்த்தம் என்பது பிரம்ம நான்முகனைக் குறிக்கின்றது.
🌼 படைத்தற் தொழிலைப் புரியும் நான்முகன் தன்னுடைய நாவில் சரஸ்வதியை அமரச் செய்து 24 கலைகளையும் படைத்தார்.
🌼பிரம்ம முகூர்த்ததில் திருமணம், பிரம்ம முகூர்த்ததில் வீட்டு கிரஹப்பிரவேசம் என்று கூறுவோம்.
🌼அதனால், பிரம்ம முகூர்த்தத்தின்மகத்துவம் பற்றி முழுதாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எல்லோருக்குமே இருக்கும்.
🌼காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள்ளான வேளைக்கு பிரம்ம முகூர்த்தம் என்று பெயர். இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும் எழுந்திருப்பதே சற்றேறக்குறைய மறுபிறவிதானே! எனவே, ஒவ்வொரு நாளும் காலையில் மறு பிறவி பெறுவதை சிருஷ்டி (படைத்தல்)என்றுசொல்லலாம்.
🌼இத்தொழிலைச் செய்பவர் பிரம்மா. எனவே இவரது பெயரால், விடியற்காலைப் பொழுதை பிரம்ம முகூர்த்தம் என்று வைத்துள்ளார்கள்.
🌼 பிரம்ம முகூர்த்த வேளைக்கு திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. இதஎப்போதுமே சுபவேளை தான். இந்நேரத்தில் எழுந்து குளித்து இறைவழிபாட்டைச் செய்து
நமது வேலைகளைச் செய்ய துவங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான்
🌼பிரம்ம முகூர்த்தத்தில், வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் என்பது ஐதீகம்
🌼உபாசனைக்கு காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்பது முக்கியமானதொரு கடமையாகும். இக்காலம் ஜீவன்களை எழச்செய்வது போல மந்திரங்களையும்எழச் செய்கின்றது.
🌼மந்திரங்கள் ஜெபிப்பவனுடைய மனதிலிருந்து படிப் படியாக அவனுடைய நுண் அலைகளை ஒலி அலைகளாக மேலே எழுப்பிச் செபம் செய்பவனது மந்திர ஒலியானது வெளிப்படச் செய்கிறது.
🌼 இவ்வாறு பிரம்மமுகூர்த்தத்தில் அவன் செய்யும் ஜெபம் அவன் செல்லும் இடமெங்கும் அவனை அறியாமலே நன்மைகளை விளைவிக்கின்றது.
🌼அதிகாலையில் எழுவதும், படிப்பதும் சிறந்தது என பெரியவர்கள் கூறுவார்கள். இதை இன்று விஞ்ஞானமும் ஏற்றுக் கொண்டுள்ளது.
🌼இந்துக்கள் அதிகாலையில் எழுந்து வீடு வாசல் பெருக்கி, நீர் தெளித்து கோலமிடுவார்கள்
எமது புராண இதிகாசங்களில் முனிவர்கள் அதிகாலையில் நீராடித், தியானத்தில் இருந்ததை அறிகின்றோம்.
🌼அவர்களது அமான்ய சக்தியையும் அவற்றைக் கொண்டு அவர்கள் செய்த விந்தைகளையும் படித்திருக்கின்றோம். அவற்றை நாம் முழுமையாக நம்பாவிடினும் பிரம்ம முகூர்த்தத்திற்கு அபாரசக்தி ஒன்றுள்ளது என்பதை உணர்வு பூர்வமாக அனுபவித்து அறியலாம்.
🌼இன்று விஞ்ஞானம் கூறும் இவ்வுண்மையை அன்று அஞ்ஞானம் அனுபவபூர்வமாக வெற்றிக் கண்டுள்ளது🌼

உலகை மாயை என்கிறார்கள். அது எப்படி?

உலகை மாயை என்கிறார்கள். அது எப்படி?
------------------------------------------
முதலில் மாயை என்றால் என்னவென்பதை தெளிவாக புரியவேண்டும். நிஜத்தில் இல்லாத ஒரு பொருள் இருப்பதாக "மனதால் கற்பனை செய்யப்டுவதே" மாயை ஆகும்.
உதாரணமாக, வீதியில் செல்கிறோம் ஒரு பாம்பு அசையாமல் உள்ளது. அருகில் சென்று பார்த்தல் அது பாம்பல்ல வெறும் கயிறு என்ற தெளிவு வருகிறதல்லவா. இதில் இல்லாத பாம்புதான் மாயை.
வெய்யிலில் கானல்நீர், மரத்தில் பேய், கம்பத்தில் திருடன், அசையும் துணியில் ஆவி............ முதலியவை மாயை. இவை எதுவுமே நிஜத்தில் இல்லை. ஆனால் இருப்பதைப்போன்ற ஒரு தோற்றத்தை மனம் கற்பனை செய்கிறது. இவை மட்டுமா, நம்மிடமும் எத்தனை எத்தனை மாயை?
கவுரவம், மானம், அவமானம், அந்தஸ்து, ஜாதி, மதம், இனம்,................. இவைகளில் ஏதாவது ஒரு பொருளை காட்டுங்கள் பாப்போம்? இவை எதுவுமே நிஜத்தில் இல்லை. அனால் மனதில், நம் கற்பனையில் உள்ளது. மானம் போயிற்று என்று கதறுகிறார்கள். ஆனால் அது எங்கே போனதென்றும், அதன் வடிவம் என்னவென்றும் தான் தெரியவில்லை.
கவுரவம் செத்துவிட்டது என்கிறார்கள். அது உயிருடன் இருந்தபோது எப்படி இருந்ததென்றுதான் யாராலும் காண முடியவில்லை. என்னே அறியாமை. என்னே முட்டாள்தனம்.
அதே போலத்தான் உலகமும். இல்லாத உலகை இருப்பதாய் நாம் காண்பதால் அது மாயை.
என்ன உலகம் இல்லையா? அப்போது பார்க்கும் நாங்கள் முட்டாளா? என்கிறீரா!!!
பொறுங்கள்.
உண்மையில் உலகம் என்ற தனிப்பொருள் இல்லை. இருப்பதாக நாம்தான் கற்பனை செய்கிறோம்.
நம் சரீரத்தை பாருங்கள். தலை,கைகள்,கால்கள்,உள்ளுறுப்புகள் என்று பல உள்ளன. ஆனால் கூர்ந்து சிந்தித்தால் இவை பல அல்ல. ஒரே வகையான அனந்தகோடி உயிரணுக்களின் கூட்டமைப்பு தான் நம் உடல் என்பது. ஒரே வகையான செல்களின் கூட்டால் தோன்றும் பலதான அமைப்புதான் நம் சரீரம். இங்கு அனைத்து செல்களும் ஒன்றோடு ஒன்று இணைந்து ஒரு உருவத்தை உண்டாகுவதால், நாம் "ஒரே சரீரமாகதான்" கருதுகிறோம்.
அவ்வாறே, எண்ணற்ற கோள்களும், நட்சத்ரங்களும், விண்கற்களும், எத்தனை எத்தனையோ சூரிய சந்திரர்களும், அசையும் அசையாதவைகளும், இன்னும் என்னெனவோ பொருட்கள் ஒன்று சேர்ந்து இருக்கும் வடிவம் தான் பிரபஞ்சம் அல்லது ப்ரஹ்மம் என்று கூறப்படுவது. இருக்கும் அனைத்துமே ஒன்றோடு ஒன்று ஈர்புவிசை, உஷ்ணம், சீதளம், வெளி, காற்று, ஆகாயம், சூனியம் முதளியவையால் இணைக்கப்பட்டே உள்ளன. ஒன்றேயான இப்பிரபஞ்சத்தை பலதாக பாவிப்பது மாயையாகும்.
அவ்வாறே பிரம்மத்தைதவிர வேறு அல்லாததை, பிரம்மத்தை உலகமாக நாம் பாவிப்பது, கற்பனை செய்வது மாயை. பிரம்மத்தில் உலகம் என்பது நம் கற்பனை. உலகம் நம் கற்பனை. ஆகவே உலகம் மாயை!!!

விளக்கு துலக்க நல்ல நாள்

விளக்கு துலக்க நல்ல நாள்
குத்துவிளக்கை ஞாயிறு, திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் துலக்குவது நல்லது. இதற்கு காரணம் உண்டு. திருவிளக்கில் திங்கள் நள்ளிரவு முதல் புதன் நள்ளிரவு வரையில் தனயட்சணி (குபேரனின் பிரதிநிதியான பதுமநிதியின் துணைவி) குடியிருக்கிறாள். செவ்வாய், புதன் கிழமைகளில் விளக்கை கழுவினால் இவள் வெளியேறிவிடுவாள் என்பது ஐதீகம். வியாழன் நள்ளிரவு முதல் வெள்ளி நள்ளிரவு வரை விளக்கில் குபேர சங்கநிதி யட்சணி (குபேரனின் பிரதிநிதியான சங்கநிதியின் துணைவி) குடியேறுகிறாள். எனவே வெள்ளிக்கிழமை துலக்குவதைத் தவிர்த்து, வியாழன் முன்னிரவில் துலக்குவது நல்லது.
விளக்கு துலக்கும் நாட்களுக்குரிய பலன்
ஞாயிறு - கண் நோய் குணம், பார்வை பிரகாசம்.
திங்கள் - மனசஞ்சலம், குழப்பம் நீங்குதல், மன அமைதி, தீர்க்கமாக முடிவெடுக்கும் பண்பு வளர்தல்.
வியாழன் - குருபார்வையால் கோடி நன்மை, மன நிம்மதி.
சனி - வீட்டிலும், பயணத்திலும் பாதுகாப்பு, இழந்த பொருள் கிடைத்தல்.
தீபத்தை குளிர வைக்கும் முறை
பொதுவாக தீபம் ஏற்றினால் எண்ணெய் முழுவதும் தீர்ந்து, தீபம் தானாக அணையும் வரை விட்டு விடக் கூடாது. இது கெடுதலைக் கொடுக்கும். தீபம் ஏற்றியதிலிருந்து தீபத்தை குளிர வைக்கும் வரை விளக்கில் எண்ணெய் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
விளக்கை குளிர்விக்கும் போது, கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது. வாயால் ஊதி அணைக்கக்கூடாது.
பூவால் குளிர்விக்கலாம். தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம். இதற்கென பித்தளை குச்சிகள் கடைகளில் கிடைக்கின்றன.
தீபத்தை குளிர வைக்க, திரியின் அடிப்பகுதியை (எண்ணெய் அமிழ்ந்திருக்கும் நுனியை) ஓம் சாந்த ஸ்ரூபிணே நம என்று சொல்லி பின்புறமாக இழுக்க வேண்டும். அப்பொழுது தீச்சுடர் சிறிது சிறிதாக குறைந்து திரி எண்ணெயில் அமிழ்ந்து தீபம் குளிரும்.

Thursday 24 December 2015

விஸ்வகர்மா என்றால் யார் ?

விஸ்வகர்மா என்றால் யார் என்று
பார்ப்போம்?
ரிக் வேதத்தில் பல இடங்களில் விஸ்கர்மாவைப்
பற்றிய குறிப்பு காணப்படுகிறது. ரிக்
வேதம் 10.81, 10.82 போன்ற ஸ்லோகங்களில்
விஸ்வகர்மாப் பற்றிய விஷயங்கள் உள்ளன.
(1) முழு உலகத்தையும் வடிவமைத்த தேவ
சிற்பி விஸ்வகர்மா.
(2) உலகத்தின் முழு முதல் தோற்றுவிக்கும்
சக்தியாகவும், உலகத் தந்தையாகவும்
விளங்குபவர் தனது அனைத்துப்
புறங்களிலும் விழிகளையும்,
வதனங்களையும், புஜங்களையும்,
பாதங்களையும் உடையவர்.
மஹாபாரதம், ஹரிவம்சம் போன்ற மஹா
காவியங்கள் “கலைகளின் தேவன்.
ஆயிரக்கணக்கான தொழில்நுட்பங்களை
விளைவிப்பவர், கடவுளர்களின் சிற்பி,
மிகவும் முதல்தரமான, மேம்பட்ட,
தலைமையான தொழில் நிபுணர்,
அணிகலன்களில் புதுமைகளைப்
புகுத்துபவர், முடிவும்-அழிவும் அற்ற
நிலையான இறைவன்.” என்று விராட் விஸ்வ
ரூபத்தைப் புகழ்கின்றன.
(3) தெய்வங்களின் வசிப்பிடங்களையும்,
அவர்களது வாகனங்களையும்,
ஆயுதங்களையும், பறக்கும் இரதங்களையும்
வடிவமைத்த என்ஜீனியர் ஆவார்.
விஸ்வகர்மாவின் பரம்பரை
விஸ்வகர்மாவின் புதல்வராக ஐவரை, வாயு
புராணம் நான்காம் அத்தியாத்தில்
கூறப்பட்டுள்ளது.
1) மனு :
விஸ்வகர்மாவின் தலைமகன். அங்கீரஸ் என்ற
முனிவரின் மகளாகிய காஞ்சனையை
மணந்தவர். மனித குலத்தின் சிருஷ்டிகர்த்தா.
பிற்காலத்தில் மனுவின் பெயரினால்
அறியப்பட்ட அரசன் நீதிபரிபாலனையில்
தன்னிகரில்லாது திகழ்ந்ததனால் நீதிக்கே
இலக்கணம் வகுத்து, மனுநீதி சாஸ்திரம்
என்னும் பெரும் நூலை சிருஷ்டித்தார்.
ஆங்கிலச் சொற்கள் Man , Hu man , Wo man
போன்றவைகளுக்கு இவரே காரணகர்த்தா
என்பது சிந்தனைக்குரியதே ! ஆங்கிலத்தை
இங்கிலீஷ் என்று கூறினாலும், பல உலக
மொழிகளில் இன்றும் ஆங்கிரஸ் என்றே
குறிப்பிடுகிறார்கள்.
2) மயன் :
விஸ்வகர்மாவின் இரண்டாம் மகன் இந்திரஜால
சிருஷ்டி கர்த்தா என்று புகழப்படுபவர். பராசர
முனிவரின் மகளாகிய சுசனை இவரது
மனைவி. பராசர முனிவர் ஜோதிட சாஸ்திரம்
எழுதியவர்.
3) த்வஷ்டா:
விஸ்வகர்மாவின் மூன்றாவது மகன். கெளசிக
மஹரிஷியின் மகளான ‘ஜெயந்தி’யை
மணந்தார்.
4) சில்பி :
ப்ருஹூ முனிவரின் புத்ரி
கருணாவை மணந்தவர்.
5) தைவக்ஞர் (அ) விஷ்வக்ஞர் :
ஜெய்மினி முனிவரின் மகளான சந்திரிகா
இவரது மனைவி.ஜெய்மினி முனிவர்
ஜெய்மினி சூத்திரம் என்ற ஜோதிட சாஸ்திர
நூலை எழுதியவர்.
விஸ்வகர்மாவின் கோத்திரங்கள்
1) மனுவின் வழித்தோன்றல்கள்
(இரும்பு தொடர்பான வேலையில் ஈடுபடும்
கலைஞர்கள்) – சானக ரிஷி கோத்திரம் – ரிக்
வேதம்
2) மயன் வழித்தோன்றல்கள் (மர வேலைக்
கலைஞர்கள்) – ஸநாதன ரிஷி கோத்திரம் –
சாம வேதம்
3) த்வஷ்டா வழித்தோன்றல்கள் – (உலோகத்தில்
தேர்ந்த கலைஞர்களுக்கு) – அபுவனஸ ரிஷி
கோத்திரம் – யஜூர் வேதம்
4) சில்பி வழித்தோன்றல்கள் (கல்லில்
கலைவண்ணம் காண்போருக்கு) – ப்ரத்னஸ
ரிஷி கோத்திரம் – அதர்வ வேதம்
5) விஷ்வக்ஞர் வழித்தோன்றல்கள் – (பொன்னில்
எண்ணத்தைப் பொறிப்போருக்கு) –
ஸூபர்ணஸ ரிஷி கோத்திரம் – ப்ரணவ வேதம

ஸ்கந்த குரு கவசம் என்றால் என்ன? அதன் பயன் யாது?

ஸ்கந்த குரு கவசம்
என்றால் என்ன? அதன்
பயன் யாது?
கவசம் என்பது உடலைப்
பாதுகாக்கும்
உலோகத்தாலான ஒரு
சட்டை. சண்டையிடும்
வீரர்கள் உடலில் காயம்
ஏற்படாமலிருக்க அணிந்து
கொள்வார்கள். இதுபோல்,
இயற்கையினாலும்
எதிரிகளாலும்
தீயசக்திகளாலும் நம்
உடலுக்கும் மனத்திற்கும்
காயம் ஏற்படாமலிருக்க
மந்திரத்தினால் கவசம்
செய்து கொள்வது
(பாதுகாத்துக்
கொள்வது) எல்லா
சமூகத்தினரிடமும், எல்லா
மொழிகளிலும்
கூறப்பட்டுள்ள ஒன்றாகும்.
சிவகவசம், விஷ்ணு கவசம்,
துர்கா கவசம், சுப்ரமண்ய
கவசம் என பலவாறாக
உள்ளன. தேவராய
சுவாமிகள் கந்தசஷ்டி
கவசமும், ஸ்கந்த குரு
கவசமும் தமிழில்
எழுதியுள்ளார். ஸ்கந்த
குரு கவசத்தை
பாராயணம் செய்தால் நம்
உடல்
பாதுகாக்கப்படுவதுடன்
தீயவழிகளில் செல்லாமல்
மனதையும்
பாதுகாக்கும்.

மனிதனுக்கு மூன்றாவது கண் .

மனிதனுக்கு மூன்றாவது கண் .
-------------------------------------------

{ நெற்றிக்கண் - ஞானசுரபி - Pineal Gland
மூல-நெற்றி-பிடரி-உச்சிகண் }
முன்றாவது கண் திறப்பது அனைவருக்கும்
சாத்தியமே..... நம்பிக்கை இல்லயா....? இந்த
பதிவை படியுங்கள்.

மனித இனம் இழந்து கொண்டு இருக்கும் ஒரு
சக்தியே இந்த Pineal Gland . சித்தர்கள் ,
யோகிகள் அந்த காலத்தில் அடைந்த
யோகத்தை என் இன்று மனிதானால் அடைய
முடியவில்லை ? என்றாவது யோசித்து
உள்ளீர்களா ?

அன்று சித்தர்கள் செய்த விடயங்களையே
இன்று வரை ஆச்சரியமாக அமானுடமாக
பேசிக்கொண்டு இருக்கிறோம் .ஏன் இன்று
நம்மால் அந்த நிலையை அடைய
முடியவில்லை ?

Pineal Gland இந்த சுரபி மனிதனின் நெற்றி
போட்டு மத்தியில் மூளையின் உள்ளே உள்ள
சிறு பாகம் .இந்த சுரபியை தான் சிவனின்
நெற்றி கண்ணாகவும் , புத்தினின்
ஞானமாகவும் மற்றும் பல புராணங்களில்
மறைமுகமாக கூறி உள்ளனர் .
உணவுகட்டுபாடு , தியானம் , மனதை ஒரு
நிலை படுத்துதல் , முச்சு பயிற்சி போன்ற
வற்றை கைபற்றிவந்தால் இந்த சுரபி தானாக
வேலை செய்ய துடங்கும் .. உடம்பில் உள்ள
மற்ற சக்கரங்களும் இதனுடன் இணைந்தே
உள்ளது .. ஆங்கிலத்தில் இதை "Soul Seed
"என்று அழைப்பார்கள் அதாவது ஆன்மாவின்
விதை . இந்த pineal gland உறுப்பின் முலமே
நாம் நமது ஆன்மாவை அடைய முடியும்
(Energy Body ). சுருக்கமாக சொல்ல போனால்
மதங்கள் அனைத்தும் நாம் தான் கடவுள் என்ற
பெரிய உண்மையை மறைக்க
உருவாக்கப்பட்டவையே .

சித்தர்கள் உணவு உண்ணாமல் , பருகாமல்
உயிர்வாழ்ந்ததின் ரகசியம் பிரபஞ்ச ஷக்தி ..
இந்த பிரபஞ்ச ஷக்தி நாம் துங்கும் பொழுது
நம் உச்சன் தலை மூலம் இறங்கி நம் உடல்
முழுவதும் பரவும் .. இது போதிய அளவில்
நம்மால் பெற முடியாததாலே தான் நாம் வேறு
உணவுகளை நாடி செல்கிறோம் . இந்த
பிரபஞ்ச சக்தியை அதிக அளவில் அடையும்
வழி தான் தியானம் .

நாம் நமது ஆன்மாவில் இருந்து இந்த
உலகிற்கு இந்த உடலில் ஒரு அனுபவத்திற்க்கா
க வந்துள்ளோம் . நமது உண்மையான உடல்
நினைவுகள் அனைத்தும் அந்த
ஆன்மாவிலேயே உள்ளது .இந்த Pineal GLand
மட்டுமே நமது திட உடலுக்கும்
ஆன்மாவிற்கும் உள்ள ஒரு வழி பாலம் என்று
கூட சொல்லலாம் .. இந்த பாலம் சிதைக்க
பட்டால் ?

இந்த Pineal Gland மூலம் தான் நம்மால்
அடுத்த பரிணாமத்தை அடையமுடியும்
(உண்மையான மேம்பட்ட பரிணாமம் என்று
கூட சொல்லலாம் ) . இது தான் மனித
குலத்தின் குறிக்கோளை அடைய ஒரே வழி .

என்ன ஆயிற்று இன்றைய மனிதனின் Pineal
Gland ?உலக அரசுகள் ( அதன் பின்னிருக்கும்
இல்லுமினாட்டி )நமது உணவு பொருள்களில்
நஞ்சை கலந்தது இந்த pineal gland ஐ முடக்க
பார்க்கின்றன .. இந்த Pineal GLand இன் எதிரி
FLuride என்னும் வேதி பொருள் .. உடலில்
எந்த இடத்தில் நீங்க Fluride
இருந்துகொன்டாலும் இந்த pinealgland அதை
ஈர்த்துகொள்ளும் ..பிறகு Pineal Gland
இதனால் பாதிக்கப்படும் . இந்த FLuride
அமெரிக்கனாட்டின் குடி தண்ணீரில் பரவலாக
கலக்கபடுகிறது , நாம் பயன் படுத்து பல
பொருள்களில் மறைமுகமாக கலக்கப்பட்டு
அதை சிதைவுற செய்கிறார்கள் குறிப்பாக
நமது பற்பசையில் (toothpaste ) இல் இது
அதிக அளவுகளில் கலக்க படுகிறது .

மூலக்கண்
------------------
முதுகுத்தண்டிற்குக் கீழ் சிறுநீர்த்
துவாத்திற்கும் மலத்துவாரத்திற்கும்
இடையில் “மூலக்கண்” உள்ளது. மூலாதாரம்,
உந்தி, அடிமூலம், கீழ்மூலம், குடிலை என்று
இதைப் பலவிதமாகச் சொல்லலாம். இதில்
அடங்கியிருக்கும் கருவின் நிலை ஒரு
கூடையினால் மூடப்பட்ட விளக்கின்
நிலையில் ஒத்து இருக்கிறது. இதை மேல்
நோக்கிக் கொண்டுவர ஏக்கத்தோடு அறிவு
காத்திருக்கிறது.

நெற்றிக்கண்
---------------------
நமது இரண்டு கண்களுக்கும், மூக்கின் மேல்
சுழி முனைக்கும், புருவங்களின் இடைநடுவே,
சிறு ஊசித்துவாரத்தில் பத்தில் ஒரு பாக
அளவில் மிக நுட்பமாக இருக்கும்
துவாரத்திற்கு “நெற்றிக்கண்” என்று பெயர்.

இதை மிக இலேசாக சவ்வு மூடிக்கொண்டிருக
்கிறது.
இடுப்புக்குக் கீழ்ச் சிறுநீர் துவாரத்திற்கும்,
மலத்துவாரத்திற்கும் இடையேயுள்ள
மூலாதாரத்தில் ஊரும் விந்தாகிய குண்டலினி
சக்தியை முதுகுத்தண்டு எலும்புக்குள் மிகச்
சிறிய துவாரத்தின் உள்ளே கூடிப் பிடரிப்
பின்புறத்திலிருந்து “நெருப்பாறு
மயிர்ப்பாலம்” என்றும் ரம்பப் பற்களைப் போல்
சேர்ந்துள்ள சிரசின் நடு உச்சி மண்டை
ஓட்டுக்குள் உள் வழியாகக் குருவின் பரிச
உணர்ச்சியிலும், நுட்ப விவேகத்
திறமையாலும், குண்டலினியை எழுப்பிக்
கொண்டு வந்தால் நெற்றிக்கண்
திறக்கப்படுகிறது.நெற்றிக்கண்ணைத்
திறப்பதற்கு, அறிந்த ஞானாசிரியரோடு
இருபது வயதிற்குமேல் அறிவோடு, விந்தும்,
தன் ஞாபகமும் கலந்தால்தான்
முடிகிறது.இந்தக்கண் திறந்திருந்தால்
அறிவிற்கு உணர்ச்சி நன்றாய்த் தெரியும். இதை
வாசி [பிராணயாமம்] என்ற மூச்சுப்
பயிற்சியாலும், மற்ற யோகங்களாலும் திறக்க
முடியாது.

நெற்றிக்கண் திறந்தபின் பிடரிக்கண்ணிலும்
உச்சிக்கண்ணிலுமுள்ள வலம்புரிச் சுற்றும்
ஆறாதாரத்தின் அறிவுப் பெருக்கமும் சோம
வட்டமும் நன்றாய் தெரியும். நெற்றிக்
கண்ணால் பல விஷயங்களை உணர முடியும்,
பின் அதை அணுபோகத்தாலேயே அறிய
முடியும்.

நெற்றிக்கண்ணை வணங்காதவர்கள் யாருமே
இல்லை. இந்த இடத்தை வணங்குகிறோமென்ற
ு அவர்களுக்கு தெரியாமலேயே ‘சலாம்’
என்றும், ‘வந்தனம்’ என்றும், ‘நமஸ்காரம்’
என்றும், ‘கும்பிடுகின்றேன்’ என்றும்
சொல்லியும் தங்கள், தங்கள் மத
ஆசாரங்களுக்குத்தக்கபடி பொட்டிட்டும்,
விபூதி அணிந்தும், நாமம் இட்டும், தங்கள்
தங்கள் கையையும், சைகைகளையும்,
நோக்கங்களையும் காட்டுகின்றனர். அரசாங்கத்
தன்மை பிறப்பதும், தடுக்க முடியாத வீரமும்,
கோபமும், ஏற்படும் போது தத்தம் மூக்கு
முனையைப் பார்த்தால் சாந்தம்
ஏற்பட்டுவிடும்.

ஒரு மனிதனிற்கு உடம்பில் சூடு இல்லாமற்
போனால் முன் சொன்னபடி நெற்றிக்கண்ணை
ஞாபகத்தில் நினைத்தால் சூட்டை உற்பத்தி
செய்து கொள்ளலாம். இந்த இடத்தில் பிறக்கும்
சொற்கள் சமீப காலத்தில் பலித்தே தீரும். மிகப்
பொல்லாதவனையும் அவன் நல்லவனாக
வேண்டும் என்று அந்த இடத்திலிருந்து
நினைத்தால் அவன் அப்பொழுதோ, அண்மைக்
காலத்திலோ நல்லவனாகித் தீருவான் என்பது
திண்ணம். ஆகையால் தான் இந்த இடத்திற்கு
ஆக்கினை ஸ்தானம் என்று பெயர்.
ஆணவமழிவதற்கும், ஆணவம் உண்டாவதற்கும்
உரிய இந்த இடத்தை நல்ல நினைவுகளுக்கு
உபயோகித்துக் கொள்ளுங்கள்.

நெற்றிக்கண் பயன்கள்:
------------------------------------
பாலகனாயிருக்கும் போது பக்தியைத்
தேடவும், வாலிப காலத்தில் யோகத்தில்
ஈடுபடவும், வாலிபங்கடந்து முதியவராகும்
போது நாஸ்திக ஞான அறிவு விளக்கம்
பெறவும், மனிதன் ம்யற்சிக்க வேண்டும்.

எட்டாதே என்று ஒரு ஏமாளி சொல்வானானால்
எட்டும் என்று வைராக்கிய தீரன்
சொல்லுவான். நெற்றிக்கண் திறப்பது என்பது
தற்கலத்தில் உள்ள வெல்டிங் வேலையைப்
போன்று அறுக்கவோ, ஒட்ட வைக்கவோ
முடியாததைப் போல் ஒப்பிடப்படுகிறது.

ஒரு அரசனுக்கு ஞானமானது
கிடைத்துவிட்டால் அது உலகத்துக்கே
பயன்படுகிறது. ஒரு யுத்தத் தலைவனுக்குக்
கிடைத்தாலோ அது வேகத்தோடு பரவுகிறது.
ஒரு குடும்பத்தலைவன் பெற்றகாலத்து
ஒழுக்கத்தையும் குடும்பவாழ்க்கையில் ஒரு
நிம்மதியையும் கொடுக்கிறது.

மனிதன் ஆண்டவனை அறியவோ,
ஆண்டவனாகப் போவதோ நெற்றிக்கண்
உணர்வால் பெறப்படும். உடம்பில் பல
வியாதியின் காரணமாக ஏற்படும் வலியை
நெற்றிக்கண்ணில் நாட்டம் வைத்து அந்த
உணர்ச்சியோடு உறங்கிவிட
வியாதியனைத்தும் தீரும்.

"கடத்திலோர் இடத்தில் கறந்த ஞானப்பாலை
கனலான மூலக்கனலால் மூட்டி மூட்டிக்
கம்ப நுனிவழியாய்க் கண்மூக்கு மத்தியில்
ஊட்டி ஊட்டிக்
கருத்திற்கிசைந்த சுவையைக் கபாலம் ஏற்றி
ஏற்றித்
தன்மணிபோல ரசமணி திரள திரளக்
கண்ணுக்கு தெரியாத திரை ஆறும் தன்
திறமையால் திறக்கத் திறக்கத்
தன் காரணத்தைத் தானே தெரியலாமே."

"என் சொல்லை நெஞ்சால் கேளுங்கள், மிக
தைரியசாலிகள் ஆவீர்கள்
நெற்றியால் கேளுங்கள், மரணபயத்தை நீக்கிக்
கொள்வீர்கள்
தலையால் கேளுங்கள், அறிவாய்
பிரகாசிப்பீர்கள்
துரித நிதானத்தோடு நிதானியுங்கள்,
உங்களில் நீங்கள் எல்லாம் அறிவீர்கள்."

பிடரிக்கண்
--------------------
பின் மூளையின் நடு இடமே பிடரிக்கண். இந்த
இடத்தில் முதுகெலும்பின் உள் வழியாய்
நெற்றிக்குக் கருவாகிய விந்து எனும்
குண்டலினி வரும்போது இந்த இடத்தை
உராய்ந்து கொண்டு வருவதால், அங்கு
ஏற்படும் வெப்பத்திற்குச் சோமவட்டம் என்று
பெயர். இப்பின் மூளையில்தான் நாம்
கேட்டதும், பார்த்ததும், நினைத்ததும்,
நுகர்ந்ததுமான எல்லாப்பதிவுகளும்,
அணுக்களாகப் பதிந்து இருக்கின்றன.

உச்சிக்கண்
-----------------
"தென்னாடும் வடநாடும் கண்ணிடை
நடுநாடும்
கீழ்மூலநாடும் அறிவமுத நாடும்,
கூடிக்குலாவும்
நன்னாடு அந்நாடு என்னாடு சென்னி நாடே.

தொட்டேன் தொட்டுத் தொட்டு எல்லாம்
விட்டெ விட்டேன் பின் ஒன்றைத் தொட்டேன்
அதை விடமுடியா மேல்நிலை சென்றேன்
அது எது? அதுவே என்னிலை உணர்வு."
தலைக்குமேல் நடு மண்டை ஓட்டிற்குள்ளே
அமைந்துள்ள இடமே உச்சிக்கண். நெற்றிக்கண்
வழியாய் விந்தாகிய குண்டலினி இந்த
இடத்தில் வந்து அழுத்துவதே உணர்வாகும்.
இதனால் ஏற்படும் இன்பமே பேரின்பம்.

உச்சிக்கு விந்து போகக்கூடிய வழி, தூண்டில்
முள்ளின் நாவைப்போல் இருப்பதால்
குருவில்லாமல் செய்யும் தவங்களால் விந்து
உச்சிக்குச் சென்றால், சத்துள்ள விந்துவாய்
இருந்து, பித்த உடம்பாய் இருந்தால்
தலைப்பாரம், நோவு, துன்பம் தொந்தரவுகள்
ஏற்படும். சிலபேர்கள் அறிவின்
உணர்ச்சிக்கெட்டுப் பைத்தியக்காரனைப்
போலாகிவிடுவார்கள்.

DMT - Dimethyltryptamine
------------------------------------
இது உலகின் அனைத்து நாடுகளிலும் தடை
செய்யப்பட்ட ஒரு போதைப்பொருள் ..

அதுவும் அமெரிக்க நாட்டில் Class -1 ரக
போதை பொருள் .. இதை பயன்படுத்தினால்
பேச்சே கிடையாது உங்களை கைது செய்து
விடுவார்கள் .. அவ்வளவு பெரிய போதை
பொருளா என்று எண்ணாதீர்கள் ..

இந்த வேதி பொருள் உலகில் உள்ள எல்லா
உயிரினங்களிலும் உள்ளது முக்கியமாக
தாவரங்கள் . ஆழ்ந்த தியானத்தின் பொழுது
நமது Pineal gland சுரக்கும் ஒரு வேதி
பொருளே இந்த DMT .

ஆம் இயல்பாக சுரக்க வேண்டிய திறனை
இல்லுமினடிகள் சூழ்ச்சியால் உணவு
பொருள்களின் மூலம் குறைத்து விட்டார்கள் .

அதே போல் நமது பாரம்பரிய
தானியங்களையும் அழித்து மரபணு
மாற்றப்பட்ட விதிகளையும் , காய்
கனிகளையும் அளித்து பசுமை புரச்சி என்ற
பெயரில் தாவரங்கள் மூலம் நமக்கு
வரவேண்டிய Dimethyltryptamine யை
தடுத்து விட்டார்கள் .
எனவே இன்னும் 2,3 தலை முறைகளுக்கே
இந்த PIneal gland மனித இனத்திற்கு ஓரளவு
செயல்திறனுடன் இருக்கும் . அதன் பின் வரும்
மனித இனத்துக்கு appendix சதை போல
தேவை ஆற்ற பொருளாகி விடும் .

இந்த DMT யை தயார் செய்து உட்கொண்டால்
என்ன நடக்கும் ?
அமெரிக்க பழங்குடியினர் அதிலும் Shamans
(பேய் ஓட்டுபவர்கள் ) வேறு உயர்நிலை
உயிர்களிடம் தொடர்பு கொள்ள பயன்படுத்தி
உள்ளனர் .
இந்த DMT யை சிலருக்கு கொடுத்து
ஆராய்ச்சிகள் நடத்த பட்டது அவர்கள்
அனைவரும் ஒரே வகையான அனுபவத்தை
அடைந்ததாக கூறுகிறார்கள் .

வேறு ஒரு உயிரினங்களை கண்டோம் , ஒரு
சிலர் புத்தர் ,மற்றும் சில கடவுள்களை
கண்டதாகவும் கூறி உள்ளனர் அது போதை
என்று ஒதுக்கி விட முடியாது . யோசித்து
பாருங்கள் அந்த காலத்தில் சித்தர்கள் கடும்
தவத்தின் முலமே கடவுள்களை
உணர்ந்துள்ளனர் .கடம் தவம் இந்த வேதி
பொருளை தான் மூலையில் உற்பத்தி
செய்கிறது .
இந்த DMT தொட்டாசினுங்கியின் வேர்களில்
அதிக அளவில் உள்ளது .

இந்த அறிய உறுப்பை கொண்ட கடைசி
தலைமுறை நாமாக கூட இருக்கலாம் .. மீடியா
வில் காட்டப்படும் பல என்னசிதரல்களை
தவிர்த்து தியானத்தை கடை பிடித்து ,
இயற்க்கை உணவுகளை உண்டால் நாமும்
அந்த நிலையை அடையலாம் .
நமது இரண்டு கண்களுக்கும், மூக்கின் மேல்
சுழி முனைக்கும் புருவங்களின் இடைநடுவே
சிறு ஊசித்துவாரத்தில் பத்தில் ஒரு பாக
அளவு மிக நுட்பமாக இருக்கும் துவாரத்திற்கு
“நெற்றிக்கண்” என்று பெயர். இதை மிக
இலேசான சவ்வு மூடிக்கொண்டிருக்கிறது.

இடுப்புக்குக் கீழ்ச் சிறுநீர்த் துவாரத்திற்கும்
மலத் துவாரத்திற்கும் இடையேயுள்ள
மூலாதாரத்தில் ஊறும் விந்தாகிய குண்டலினி
சக்தியை முதுகந்தண்டு எலும்புக்குள் உள்ள
மிகச் சிறிய துவாரத்தின் உள்ளே கூடிப் பிடரிப்
பின்புறத்திலிருந்து நெருப்பாறு மயிர்ப்பாலம்
என்னும் ரம்பப் பற்களைப் போல் சேர்ந்துள்ள
சிரசின் நடு உச்சி மண்டை ஓட்டுக்குள் உள்
விவேகத்திறமையாலும், குண்டலினியை
எழுப்பிக் கொண்டு வந்தால் நெற்றிக்கண்
திறக்கப்படுகிறது.

குண்டலினி சக்தியின் பிரதிபலிப்பு நம்
தோற்றத்தில் பார்ப்பதென்றால், கண்ணுக்கு
நேரே நான்கடி தூரத்தில் ஒரு நாக்கு பூச்சி
அளவில் சிறு வளைவுகளும் சிறு கால்களைப்
போன்ற கிளைகளும் 3 1/2 முதல் 4 அங்குல
நீளத்தில் ஒன்று அல்லது இரண்டு
தெரியவரும். இதில் சில பிரகாச அணுக்கள்
கசகசா அளவில் இணைந்திருப்பதையும்
பார்க்கலாம். இவை ஒரே நிலையாய் நிலைத்து
நிற்கா, மேல்நோக்கிச் சென்று கொண்டே
இருக்கும். தோன்றுவதும், பின் மறைவதும்
இதன் தொழில். பக்தர்கள் யாவரும்
இதைப்பார்க்கலாம்.

நெற்றிக்கண்ணைத் திறப்பதற்கு அறிந்த
ஞானாசி¡¢யரோடு இருபது வயதிற்குமேல்
அறிவோடு விந்தும், தன் ஞாபகமும் கலந்தால்
தான் முடிகிறது. இந்தக் கண் திறந்திருந்தால்
அறிவிற்கு உணர்ச்சி நன்றாய்த் தெரியும். இதை
வாசி (பிரணாயாமம்) என்ற மூச்சுப்
பயிற்சியாலும் மற்ற யோகங்களாலும் திறக்க
முடியாது. நெற்றிக்கண் திறந்தபின்
பிடரிக்கண்ணிலும் உச்சிக்கண்ணிலுமுள்ள
வலம்புரிச் சுற்றும் ஆறாதாரத்தின்
அறிவுப்பெருக்கமும் சோம வட்டமும் நன்றாய்
தெரியும். நெற்றிக் கண்ணால் பல
விஷயங்களை உணரமுடியும். பின் அதை,
அனுபோகத்தாலேயே அறிய முடியும்.

நெற்றிக்கண்ணை வணங்காதவர்கள் யாருமே
இல்லை. இந்த இடத்தை வணங்குகின்றோமென
்று அவரவர்களுக்குத் தெரியாமலேயே
சலாமென்றும், வந்தனமென்றும்,
நமஸ்காரமென்றும், கும்பிடுகின்றேனென்றும்,
சொல்லியும்; தங்கள் தங்கள் மத
ஆசாரங்களுக்குத்தக்கபடி பொட்டிட்டும்,
விபூதி அணிந்தும், நாமம் இட்டும் தங்கள்
தங்கள் கையையும், சைகையையும்,
நோக்கங்களையும் காட்டுகின்றனர்.
அரசாங்கத்தன்மை பிறப்பதும், தடுக்க
முடியாத வீரமுங் கோபமும் பிறப்பதும்
அங்கிருந்தேயாகும். மிகுந்த கோபம்
ஏற்படும்போது தத்தம் மூக்கு முனையைப்
பார்த்தால் சாந்தம் ஏற்பட்டுவிடும்.

இந்த இடத்தில் பிறக்கும் சொற்கள் சமீப
காலத்தில் பலித்தே தீரும். மிகப்
பொல்லாதவனையும் அவன் நல்லவனாக
வேண்டுமென்று அந்த இடத்திலிருந்து
நினைத்தால் அவன் அப்பொழுதோ, அண்மைக்
காலத்திலோ நல்லவனாகியே தீருவான் என்பது
திண்ணம். ஆகையால்தான் இந்த இடத்திற்கு
ஆக்கினை ஸ்தானம் என்று பெயர்.
ஆணவமழிவதற்கும், ஆணவம் உண்டாவதற்கும்
உரிய இந்த இடத்தை நல்ல நினைவுகளுக்கு
உபயோகித்துக் கொள்ளவேண்டும்.
மனிதன் ஆண்டவனை அறியவோ
ஆண்டவனாகப் போவதோ நெற்றிக்கண்
உணர்வால் பெறப்படும். உடம்பில் பல
வியாதியின் காரணமாக ஏற்படும் வலியை
நெற்றிக்கண்ணில் நாட்டம் வைத்து அந்த
உணர்ச்சியோடு உறங்கிவிட
வியாதியனைத்தும் தீரும். இப்படி அனேக
காரியங்கள் தானே உண்டாகும் சந்தர்ப்பங்களும்
உண்டு.

பெரிய பெரிய சிற்பிகள் சித்தரிக்கும்
சிலைகளுக்குங்கூட அச்சிலைகளின் மீது
அன்பும், விசுவாசமும், பயபக்தியும்
மக்களிடத்தில் கூட்டுவதற்கு வேண்டி
அச்சிலைக்கு நெற்றிக்கண் திறப்பது என்று ஒரு
சடங்கை பெரிய விசேடமாகக்
கொண்டாடுவதுண்டு. இதைச் செய்ய அந்தச்
சிலையை உருவாக்கிய சிற்பியை விட்டு
வேறொரு ஆச்சாரியாரைக் கூப்பிடுவார்கள்.

அவன் அச்சிலைக்கு நெற்றிக்கண் திறந்து
விட்டதாகப் பாவனை காட்டுங் காலத்தில்
வருடக்கணக்கில் சித்தரித்த சிற்பியும்
அச்சிலையை வணங்க ஆரம்பிக்கிறான்.
அதுபோன்று எப்படிப்பட்ட அறிஞனாயிருந்தால
ும் அவனுக்கும் ஒரு குரு அவசியம். ஆகவே
நெற்றிக்கண் உணர்வு உண்டாக்கக் குருவும்,
சிந்தனையும், வயதும் அவசியமாகும்.
உலகில் பலர் பலவிதமாகச் சொல்லுவார்கள்.

அனுபவமில்லாதவர்கள் சொற்களைக்
கேட்பதைவிட, அனுபவமுடையவர்கள்
சொற்களைக் கேட்பது உங்களுக்கு நலமாகும்.
நாயகன் செயல் நாயகன் செயலென்று
நழுவவிடாமல், நல்லறிவாய் நாட்டம்
கொண்டீர்களானால் நல்ல இடத்தில் நாயகனும்
நாமும் ஒன்றே.

அதுபோல் உலகத்தில் மிகுதியான குணங்கள்
உள்ளன. அந்த குணங்களுக்குரியவர் பலராவர்.
அவர்களை நீங்கள் குறை சொல்லாமல்
அவர்களிடத்தில் உள்ள நல்ல குணங்களை
மட்டும் கிரகித்துக்கொள்ளுங்கள்.

கடலில் உள்ள மீனானது கடல் உப்பில்
சாராததுபோல் உலகத்திலுள்ள
நல்லடியார்களாகிய நீங்கள்,
உலகத்திலுள்ளதீய செயல்களில் சாரவே
மாட்டீர்கள்.

இரு கண்கள் தவிர மூன்றாவதாக ஒரு கண்
உண்டென கிழக்கத்திய நம்பிக்கை குறிப்பாக
இந்துக்களின்
அசைக்க முடியாத நம்பிக்கை எம்பெருமான்
சிவன்
முக்கண்ணன் என போற்றி துதிக்க .
படுவது நாம் அறிந்ததே அதே போல
திபெத்தில் மூன்றாம் கண் திறக்க சிறப்பு
பயிற்சி முறைகள் உள்ளதாகவும் அறிகிறோம் .

அனால் மூன்றாம் கண் எனபது என்ன
கற்பனையா இங்கே கடவுளே கற்பனை என்று
ஒரு வாதம் இருக்கையில் அவருடைய
மூன்றாம் கண் நிஜமா என கேட்க்கும்
அன்பர்களும் உண்டு ஆனாலும் இந்த
மூன்றாம் கண் எனபது பாமரனுக்கு இது
உண்டா உண்டெனில் இதன் செயல் பாடுகள்
என்ன எவ்வாறு இதனை திறப்பது கிழக்கின்
இந்த நம்பிக்கை நீண்ட காலமாக வெறும்
கட்டுக்கதை என்றே மற்றவர்களால்நம்பப்பட்டு
வந்ததுஆனால் மேற்குலகம் சில ஆய்வுகளின்
மூலம் கூறுவது மூன்றாம் கண் எனபது
உண்டு அதன் பெயர் பெனியல் சுரப்பி ஒரு
பட்டாணிஅளவேகாணப்படும் இந்த பீனியல்
சுரப்பிய நமது மூன்றாம் கண் எனப்படுகிறது .

இதனை ஆன்மாவின் இருக்கை என
குறிப்பிடுகிறார் இதன் அமைவிடமானது நமது
மூளையின் இரு சமபாகங்களின் நடுவே
காணப்படுகிறது ஏறத்தாழ புருவ மத்தி
எனலாம்
இந்த சுரப்பி கூம்பு வடிவில் காணப்படுகிறது
இதை குறித்து கொள்ளுங்கள் சிவா
பெருமானின் நெற்றி கண் எவ்வாறு
செங்குத்தாக வேல் போல தோற்றத்தில்
காணப்படுமோ அந்த வடிவத்தில் இந்த சுரப்பி
மிக பாதுகாப்பாக மூளையின் முதுகெலும்பு
அருகே காணப்படுகிறது .

இந்துக்களின் ஆக்ஞா அதாவது நெற்றி
சக்கரத்துடன் தொடர்பு உடையாதாக
கருதப்படுகிறது இந்த நெற்றி கண் திறப்பதன்
மூலம் ஞானம் முன்னறிவித்தல் போன்ற
சித்துக்கள் தோன்றுவதாக நமது இந்துக்களின்
நம்பிக்கை இந்த சுரப்பி
நமது தூக்கம் மற்றும் விழிப்பு பருவ கால
மாற்றங்களை கட்டு படுத்துகிறது .

இந்த பீனியல் சுரப்பி ஒளியின் மூலம் தூண்ட
ப்படுகிறது இந்த பீனியல் சுரப்பியே
மெலடோன் எனும் திரவத்தை சுரக்கிறது இந்த
திரவம் நமது உடலின் நோய் எதிர்ப்பு
சக்தியை அதிகரிக்கிறது மன அழுத்தத்தை
குறைப்பதுடன் நமக்கு
நோய் ஏற்படுத்தும் வைரஸ் போன்ற
கிருமிகளை எதிர்க்கும் சக்தியையும்
கொடுக்கிறது .

இந்த சுரப்பி தூக்கம் மற்றும் தியானத்தின்
சுரக்கிறது அதாவது மனம் அமைதியான
நிலையில் ஒளியை கண்களால் கண்டவுடன்
இது சுரப்பதை நிறுத்தி விடுகிறது அதவாது
இரவு வேலை பார்பப்வர்களிடையே
காணப்படும் ஒரு வித மன தளர்வு நோய்
எதிர்ப்பு தன்மை குறைவு இதன் காரணம்
அவர்கள் தொடர்ந்து
வெளிச்சத்திலேயே இருப்பதன் காரணமாக இதன்
மெல்டன் சுரப்பது மிக குறைந்து போவதனால்
குண்டலினி யோகம் மூலம் இந்த சுரப்பியை
தூண்ட முடியும் .

நமது மெய்ஞானம் இந்த சுரப்பியை
தூண்டுவதன் மூலம் ஞானம் அதாவது
பேரின்பம் அடையலாம் என கூறுகிறது
காமனை எரித்ததும் முப்புரங்களை
சாம்பலாக்கியதும் நம்
பெருமான் நெற்றி கண் மூலம் என்கிறது
புராணம் அதாவது பேரின்பத்தை அடைந்த பின்
காமம் இன்ன பிற தீய எண்ணங்களை எரிப்பது
என நாம் பொருள் கொள்ளலாம்
இன்னொரு முறையிலும் சொல்லலாம் .

இந்த சுரப்பி நமக்கு தன்னம்பிக்கை
எண்ணங்களையும் நல்ல சிந்தனைகளையும்
தோற்றுவித்து தேவையற்ற எண்ணங்களை
எரித்துவிடுகிறது இந்த மூன்றாவது கண்ணை
தூண்டுவதன் மூலம் முக்காலத்தை அறியும்
தன்மை மேலும் விழிப்புணர்வு போன்றவை
கிடைப்பதாக கூறப்படுகிறது.

குண்டலினி தியானம் மூலம் இந்த
மூன்றாவது கண்ணை தூண்டலாம் இன்னும்
சொல்வது
எனில் குருமார்கள் தீட்சை அளிக்கும்
பொருட்டு புருவ மத்தியில் ஆசீர்வாதம்
செய்வதும் இதன் பொருட்டே என
நினைக்கிறேன் .

குண்டலினியை மேலோற்றுவதன் மூலம்
இந்த ஆக்கினை சக்கரத்தை இயங்க செய்து
அளவில்லா ஆனந்தத்தையும் ஞானத்தையும்
பெறலாம் நாம் நமது முன்னோரின் சிந்தனை
சொத்துக்களை மூட நம்பிக்கை என்றும் வேறு
பெயரிலும் கேலியும் போலி என்று
ஒதுக்கியுமே பல நல்ல விசயங்களை இழந்து
விட்டோம் இனி இருப்பதாவது காப்போம் .

பில்லி, சூன்யம், வைப்பு, செய்வினை

பில்லி:-
ஒருவரை உடல்
ரீதியிலும் உள்ள
ரீதியிலும் செயல்
ரீதியிலும் ஈர்த்து
மந்திரவாதி தனது
கட்டுப்பாட்டிற்கு கொண்டு
வந்து தனது விருப்பப்படி
செயலாற்ற வைப்பதே
பில்லி ஆகும்.
சூனியம்:-
சூனியம் என்றாலே
வெறுமை என்று
அர்த்தம்.அதாவது ஒருவனை
உடல் ரீதியிலும், உள்ள
ரீதியிலும்,
செயல்பாட்டிலும்,
பொருளாதாரத்திலும்
ஒன்றும் இல்லாமல்
ஆக்குவதற்கு சூனியம்
என்று பெயர். சூனியத்தின்
மூலம் எவருக்கும்
எத்தகைய கெடுதியையும்
செய்துவிடலாம், எவரை
வேண்டுமானாலும்
அழித்து விடலாம், கை,
கால்களை முடக்கி
விடலாம்,
சம்மந்தப்பட்டவருக்கு
தெரியாமல் அவர் வயிற்றில்
மருந்தை செலுத்தி
விடலாம், கருவில் வளரும்
குழந்தையை கொன்று
விடலாம், கர்ப்பத்தை
கலைத்து விடலாம், நோய்
பிடிக்க செய்து விடலாம்...
இப்படியே ஏராளமான
கெடுதிகளை
சூனியத்தின் மூலம்
செய்து விட முடியும்.
ஏவல்:-
ஏவல் என்பதற்கு கட்டளை
இடுதல் என்று
அர்த்தமாகும். தனது
விருப்பத்திற்கு ஏற்ப
செயல்படும்படி கட்டளை
இடுவதற்கு ஏவல் என்று
பெயர்.
செய்வினை:-
தனது சொந்த
வினையின்படி
செயலாற்றும் ஒருவனை
மாந்திரீக முறையில்
பலவழிகளில்
திசைதிருப்பி கேட்டு,
அழிந்து போக
வைப்பதாகும். இந்த
செய்வினை
பொருளாதார ரீதியிலும்,
உடல் ஆரோக்கிய ரீதியிலும்
கஷ்டங்கள் கொடுப்பதாகும்.
வைப்பு:-
மாந்த்ரீக ரீதியிலோ,
மருத்துவ ரீதியிலோ, ஒரு
பொருளைக் கொடுத்து
உன்ன வைத்தோ உடலில்
தடவியோ, அவர்களுக்கு
உடல் ரீதியிலும்,உள்ள
ரீதியிலும்,பொருளாதார
ரீதியிலும் கெடுதல்
செய்வதையே வைப்பு
என்கிறோம்.
ஒருவருக்கு பில்லி,
சூன்யம், வைப்பு, செய்வினை, வைக்க
வேண்டும் என்றால்
அவருடைய ஜதகமோ புகைப்படமோ,
வியர்வை நனைந்த அல்லது
ரத்தம் நனைந்த துணியோ,
தலை முடி, காலடி
மண்ணோ, விந்தணு பட்ட
துணியோ தேவைப்படும்.

Wednesday 23 December 2015

இதையெல்லாம் பேசக்கூடாது!

இதையெல்லாம் பேசக்கூடாது!
ஏழைகளுக்கு முன்னால் நின்று கொண்டு உனது செல்வம் பற்றி பேசாதே!
நோயாளிகளுக்கு முன் நின்று கொண்டு உன் ஆரோக்கியத்தைப் பற்றி பேசாதே!
பலகீனமானவனுக்கு முன்னால் நின்று உனது பலம் பற்றி பேசாதே!
மகிழ்ச்சியை இழந்தோருக்கு முன்னிருந்து கொண்டு உனது சந்தோஷத்தைப் பற்றி பேசாதே!
சிறைக்கைதிக்கு முன் நின்றிருந்து உனது சுதந்திரத்தை பற்றி பேசாதே!
அனாதைக்கு முன் நின்று கொண்டு உனது தந்தையைப் பற்றி பேசாதே!
இதையெல்லாம் பேசினால் அவர்களது காயங்களை இதற்கு மேல் அவர்களால் சுமக்க முடியாது போய்விடும்!

தண்ணீர் தத்துவம்

தண்ணீர் தத்துவம்
ராமகிருஷ்ண பரமஹம்சர் கோயிலில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தார். பிரார்த்தனை முடிந்து உபதேசம் செய்ய ஆரம்பித்தார். அப்போது ஒரு சீடர் அவரிடம், “சுவாமி, நாம் ஏன் கோயிலுக்கு வந்து கடவுளை வழிபட வேண்டும்? அவரவர் வீட்டில் இருந்தபடியே வணங்கிக்கொள்ளக் கூடாதா?’’ என்று கேட்டார்.
‘‘அப்படியா?’ என்று கேட்ட பரமஹம்சர், ‘‘உனக்கு விளக்கமாகச் சொல்கிறேன். அதற்கு முன் எனக்குக் கொஞ்சம் குடிக்கத் தண்ணீர் கொண்டு வா,’’ என்று சீடரிடம் கேட்டார்.
சீடர் உடனே ஓடிப்போய் ஒரு சொம்பில் தண்ணீர் பிடித்துக் கொண்டு வந்தார். அதைப் பார்த்த பரமஹம்சர், ‘‘என்னப்பா இது, நான் குடிக்கத் தண்ணீர் கேட்டால் நீ சொம்பைக் கொண்டு வந்திருக்கிறாயே?’’ என்று கேட்டார்.
சீடருக்கு ஒன்றும் புரியவில்லை. தயங்கியபடியே சொன்னார். ‘‘சுவாமி, தண்ணீரைக் கைகளில் பிடித்துக்கொண்டு வந்தால் ஒழுகிப் போய்விடுமே, அதனால்தான் சொம்பில் பிடித்துக் கொண்டு வந்தேன்’’ என்றார்.
‘‘பக்தியும் அப்படித்தான்,’’ சுவாமி விளக்கினார். ‘‘வீட்டில் பிரார்த்தனை செய்யும்போது நம் மனம் பல விஷயங்களில் அலைபாயும். அதை ஒரு நிலையில் நிறுத்த முடியாது. ஆனால் கோயிலில் சுற்றுச்சூழல் அமைதியாக பக்தி மயமாகவே இருப்பதால் இங்கே மனம் ஒருமைப்படும்.’’

துளசி

பகவான் ஸ்ரீமன் நாராயணனை அர்சிப்பதற்கு துளசி தலமே மிகவும் சிறந்ததாகும். துளசியை ஹரிக்கொழுந்து என்றும் வில்வத்தை சிவக்கொழுந்து என்றும் அழைப்பார்கள். ஹரித்துழாய், துளவு, குல்லை, வளம், விருத்தம், பிருந்தா என பலப் பெயர்களைக் கொண்ட துளசி செடியின் அடிப்பாகத்தில் சகல புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன.
எனவே துளசியை புண்ணிய தலமாகக் கருதி நமது இல்லங்களில் அதனை வலம் வருவது, பூஜைகள் செய்வது, நீருற்றி வளர்ப்பது ஆகியவற்றை செய்துவருகின்றோம்.
துளசி செடியில் பல வகைகள் உண்டு. அவை நற்துளசி, கருந்துளசி, நாய்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி என்று பல வகைகள் உண்டு. இவற்றில் நற்துளசி, கருந்துளசி இரண்டை மட்டுமே பூஜைக்கு உரியதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
நமது இல்லங்களில் சாளக்கிராமத்திற்கு துளசி தளத்தையும், சிவ லிங்கத்திற்கு வில்வ தளத்தையும் கொண்டு பூஜை செய்வது மிகவும் நல்ல பலன்களைக் கொடுக்கும்.
இத்தகைய பெருமைகள் வாய்ந்த துளசி செடியை நமது இல்லங்களில் வளர்த்து பூஜை செய்து நல்ல பலன்களைப் பெறுவோமாக.

மொக்க தத்துவம்:

மொக்க தத்துவம்:
1. பிறப்பு ஒரு முறை,
இறப்பு ஒரு முறை,
காதல் ஒரு முறை, 
வாழ்க்கை ஒரு முறை
ஆனால்
சாப்பாடு மட்டும் தினமும் மூன்று முறை
அதனால் கூச்சப்படாமல் சாப்டுங்க, ஆரோக்கியமா இருங்க
2. விடியும் வரை தூங்குவது தூக்கம் அல்ல,
நம்மால் முடியும் வரை தூங்குவதுதான் தூக்கம்
அதனால் நல்லா தூங்குங்க.
3. யாருடைய இதயத்தையும் உடைத்து விடாதீர்கள்,
ஏனெனில் அவர்களுக்கு இருப்பது ஒரே ஒரு இதயம்
அதற்கு பதில்.
அவர்களின் எலும்பை உடையுங்கள், அது 206 உள்ளது.....
எந்த பொருளை வாங்க சென்றார்களோ அதை மட்டும் வாங்கி வந்த பெண் இன்னும் உலகில் பிறக்கவில்லை....
இப்போ கேள்வி பதில் நேரம்:
1. மண்புழுவுக்கு ஏன் கால் இல்லைன்னு தெரியுமா ..?
அதுக்கு கால் போட்டா மாண்புழு ஆகிடும்ல
அதனால போடுறதில்லை.!

2. எறும்பு ஏன் பல்லு விளக்குறது இல்லைன்னு தெரியுமா ..?
ஏன்னா அது வாய் சைசுக்கு இன்னும் பிரஷ் கண்டுபுடிக்கலயாம்
3. லைப்ல ஒண்ணுமே இல்லனா போர் அடிக்கும்,
தலைல ஒண்ணுமே இல்லனா?
பளபளன்னு க்ளார் அடிக்கும்
டவுட்டோ டவுட்:
1. இங்கிலீஷ்ல பெரிய ABCD சின்ன abcd இருக்குற மாதிரி
தமிழ்ல ஏன் இல்ல ..?
2. கொசுவுக்கு கொம்பு இருக்கா .?
3. இருமல் வந்தால் இருமுவிங்க,
காய்ச்சல் வந்தால் காய்ச்சுவிங்களா?
4. நாம வெய்யில்ல நடந்து போகும்போது நம்ம நிழல் கீழே விழுதுல,
அப்படி விழும் போது அதுக்கு வலிக்காதா ..?
5. மஞ்சத்தண்ணிக்கும் பச்சத்தண்ணிக்கும் என்ன வித்தியாசம்?

கோலமிடும் முன்

கோலமிடும் முன் கவனிக்கவேண்டியவை
வீட்டு வாசலில் சூரிய உதயத்திற்கு முன் சாணம் தெளித்து கூட்டி கோலமிடவேண்டும். கணவன் வீட்டிலிருந்து வெளியே செல்வதற்கு முன் இடவேண்டும். வீட்டு வெளி முற்றம்,பூஜை அறை, சமையல் அறை மற்றும் துளசி மாடம் முதலிய இடங்களில் கோலமிடவேண்டும். சுப காரியங்களுக்கு ஒற்றை கோடு கோலம் போடக்கூடாது. அசுப காரியங்களுக்கு இரட்டை கோடு கோலம் போடக் கூடாது. வேலையாட்களை கொண்டு கோலம் போடக்கூடாது.
அரிசி மாவினால் கோலமிட்டாள் லட்சுமிகரம் தாண்டவமாடும். அதிலும் நடுவே காவி நிறம் இட்டு கோலம் போட்டால் தாயாருடன் பகவானும் வீட்டில் வாசம் செய்வார்.

நிச்சயமாக திருமணம் நடக்கும் என்பதை நிர்ணயம் செய்வது எப்படி?

திருமண ரகசியங்கள்
நிச்சயமாக திருமணம் நடக்கும்
என்பதை நிர்ணயம் செய்வது
எப்படி
ஆண் ஜாதகம்
1, ஆண் ஜாதகத்தில்
லக்னாதிபதிக்கு 1,5,9-இல்
அல்லது 2,12-இல் அல்லது
7-இல் 7-க்குடையவன் நின்றிருக்க
7-க்குடையவனுக்கு திரிகோணத்தில்
கேது
இல்லாமல் இருக்க வேண்டும்.
2, ஆண் ஜாதகத்தில் குருவுக்கு
1,5,9-இல் அல்லது 2,12-இல்
அல்லது 7-இல்
சுக்கிரன் நின்றிருக்க,
சுக்கிரனுக்கு திரிகோணத்தில் கேது
இல்லாமல் இருக்க
வேண்டும்.
3, 7-க்குடையவனும்,
லக்னாதிபதியும் அடுத்தடுத்த
ராசிகளiல் நின்றால்
திருமணம் நிச்சயம்
நடைபெறும்.
4, 7-க்குடையவனும்,
லக்னாதிபதியும்
ஒருவருக்கொருவர்
திரிகோணமாக
நின்றால் திருமணம் நிச்சயம்
நடைபெறும்.
5, 7-ஆம் பாவ அதிபதி
லக்னத்திற்கு கேந்திரத்தில்
( 1-4-7-10 )
நின்றிருந்தால் திருமணம்
நிச்சயம் நடைபெறும்.
6, 7-ஆம் பாவ அதிபதி
குருவாக அமைந்து லக்னத்திற்கு
கேந்திரத்திலோ (
1-4-7-10 ) அல்லது திரிகோணத்திலோ
( 1,5,9 ) நின்றிருந்தால்
திருமணம்
நிச்சயம் நடைபெறும்.
7, 7-ஆம் பாவ அதிபதி
செவ்வாயாக அமைந்து
லக்னத்திற்கு கேந்திரத்திலோ
அல்லது 6-ஆம் வீட்டிலோ அல்லது
10-ஆம் வீட்டிலோ நின்றிருந்தால்
திருமணம் நிச்சயம்
நடைபெறும்.
8, 7-ஆம் பாவ அதிபதிபதி
சனியாக அமைந்து, லக்னத்திற்கு
கேந்திரத்திலோ
அல்லது 4-ஆம் வீட்டிலோ அல்லது
11-ஆம் வீட்டிலோ நின்றிருந்தால்
திருமணம் நிச்சயம்
நடைபெறும்.
9, 7-ஆம் பாவ அதிபதியும்,
லக்னாதிபதியும் இணைந்து எந்த
பாவத்திலிருந்தாலும்
திருமணம் நிச்சயம்
நடைபெறும்.
10, 7-ஆம் பாவ அதிபதியும்
லக்னாதிபதியும்
ஒருவருக்கொருவர் சம
சப்தமாக
இருந்தாலும் திருமணம்
நிச்சயம் நடைபெறும்.
11, 7- ஆம் பாவாதிபதியும்,
லக்னாதிபதியும் பரிவர்த்தனை
பெற்று
நின்றிருந்தால் திருமணம்
நிச்சயம் நடைபெறும்.
மேற்கண்ட விதிகளில் ஒரு
விதியாவது ஜாதகருக்கு
பொருந்தி
வருமானால்
நிச்சயம் திருமணம் ஆகும். எனக்
கூறலாம்.
பெண் ஜாதகம்
1, பெண் ஜாதகத்தில்
லக்னாதிபதிக்கு 1,5,9-இல்
அல்லது 2,12-இல் அல்லது
7-இல் 7-க்குடையவன் நின்றிருக்க
7-க்குடையவனுக்கு திரிகோணத்தில்
கேது
இல்லாமல் இருக்க வேண்டும்.
2, பெண் ஜாதகத்தில்
சுக்கிரனுக்கு 1,5,9-இல் அல்லது
2,12-இல் அல்லது 7-
இல் செவ்வாய்
நின்றிருக்க, செவ்வாய்க்கு
திரிகோணத்தில் கேது இல்லாமல்
இருக்க வேண்டும்.
மேற்கண்ட விதிகளiல் ஒரு
விதியாவது ஜாதகருக்கு
பொருந்தி
வருமானால்
நிச்சயம் திருமணம் ஆகும். எனக்
கூறலாம்.
திருமணம் எளிதில் கைகூடாத
ஜாதகம்
1, 7-க்குடையவன் நின்ற ராசிக்கு
6,8-இல் லகனாதிபதி
நின்றால் திருமணம்
எளiதில் கைகூடாது.
திருமணத்திற்குப் பின் கணவன்
மனைவியிடையே கருத்து
வேறுபாடு உண்டாகும்.
2, 7-க்குடையவன் நின்ற ராசிக்கு
4,10-இ னாதிபதி நின்றாலும்
திருமணம்
எளiதில் கைகூடாது.
3, 7-க்குடையவன் 3,6,9,12-ஆம்
பாவங்களiல் நின்றால்
திருமணம் ஆவது
கடினமாகும்.
4, 7-க்குடையவன் 2,5,8,11-ஆம்
பாவங்களiல் பல
சிரமங்களுக்குப் பின்
திருமணம் நடைபெறும்.
திருமணத்தடை
1, ஆண் பெண் இருவருடைய
ஜாதகங்களiல் களத்திர
பாவம் என்பது ஏழாம்
பாவமாகும்.
2, ஆண்களுக்கு
களத்திரகாரகன்
சுக்கிரனாகும்.
பெண்களுக்கு
களத்திரகாரகன்
செவ்வாய் ஆகும்.
3, ஒருவருக்கு திருமணமே
நடக்காமல் நிரந்தரமாக
தடைபடுவதற்கு
காரணமான ஜோதிட விதிகள்
கீழே தரப்பட்டுள்ளன.
திருமணத்தடை ஆண் ஜாதகம்
1, லக்னாதிபதி நின்ற ராசிக்கு
4,6,8,10-இல் ஏழாம் வீட்டு
அதிபதி நிற்பது.
2, குரு நின்ற ராசிக்கு 4,6,8,10-
இல் சுக்கிரன் நிற்பது.
3, ஏழாம் வீட்டு அதிபதி நின்ற
ராசிக்கு 1,5,9-இல் அல்லது 2-
இல் கேது
நிற்பது.
4, சுக்கிரன் நின்ற ராசிக்கு
1,5,9-இல் அல்லது 2-இல் கேது
நிற்பது.
5, 7-ஆம் வீட்டில் ராகு அல்லது
கேது நின்றால் திருமணத்தில் தடை
ஏற்படும்.
6, 7-க்குடையவனோடு ராகு அல்லது
கேது சேர்ந்திருந்தால்
திருமணத்தில்
தடை ஏற்படும்.
7, அதிர்ஷ்ட வசமாக அவருக்கு
திருமணம் நடந்தாலும், அவர்
எத்தனை
திருமணம் செய்து
கொண்டாலும்
அத்தனை திருமணங்களும்
தோல்வியில்
முடியும்.
8, மேற்கண்ட விதிகளiல்
நான்கிற்கு மூன்று விதிகள்
பொருந்தி வருமாயின்
அந்த பெண் நபருக்கு
எளiதில் திருமணம் கைகூடாது.
திருமணத்தடை பெண்
ஜாதகம்
1, லக்னாதிபதி நின்ற ராசிக்கு
4,6,8,10-இல் ஏழாம் வீட்டு
அதிபதி நிற்பது.
2, சுக்கிரன் நின்ற ராசிக்கு
4,6,8,10-இல் செவ்வாய்
நிற்பது.
3, ஏழாம் வீட்டு அதிபதி நின்ற
ராசிக்கு 1,5,9-இல் அல்லது 2-
இல் கேது
நிற்பது.
4, செவ்வாய் நின்ற
ராசிக்கு 1,5,9-இல் அல்லது 2-
இல் கேது நிற்பது.
5, மேற்கண்ட விதிகளiல்
நான்கிற்கு மூன்று விதிகள்
பொருந்தி வருமாயின்
அந்த பெண் நபருக்கு
எளiதில் திருமணம் கைகூடாது.
6, அதிர்ஷ்ட வசமாக அவருக்கு
திருமணம் நடந்தாலும், அவர்
எத்தனை
திருமணம் செய்து
கொண்டாலும்
அத்தனை திருமணங்களும்
தோல்வியில்
முடியும்.
தசா புத்திரீதியாக திருமணம்
நடைபெறும் காலம்
1, லக்னாதிபதியின் தசா,
புத்திகள்.
2, 7-க்குடையவனின் தசா
புத்திகள்.
3, 7-இல் நின்ற கிரகத்தின
தசா புத்திகள்.
4, 7-க்குடையவனின் சாரம்
பெற்ற கிரகங்களiன் தசா
புத்திகள்.
5, 7-இல் நின்ற கிரகத்தின்
சாரம் பெற்ற
கிரகங்களiன் தசா புத்திகள்.
6, லக்னத்தில் நின்ற கிரகத்தின்
தசா புத்திகள்.
7, லக்னாதிபதியின் சாரம்
பெற்ற கிரகங்களiன் தசா
புத்திகள்.
8, லக்னத்தில் நின்ற கிரகத்தின்
சாரம் பெற்ற
கிரகங்களின் தசா புத்திகள்.
9, குரு நின்ற ராசிக்குக் 7-
குடையவனின் தசா புத்திகள்.
10, குரு நின்ற ராசிக்குக் 7-
குடையவனின் தசா புத்திகள்.
11, 7-க்குயைவனோடு இணைந்த
கிரகங்களiன் தசா புத்திகள்.
12, சுக்கிரனோடு இணைந்த
கிரகங்களiன் தசா புத்திகள்.
13, பெண் ஜாதகத்தில்
செவ்வாய்யோடு இணைந்த
கிரகங்களiன் தசா
புத்திகள்.
14, சுக்கிரனுக்கு 7-க்குடையவனின்
தசா புத்திகள்.
15, சுக்கிரனுக்கு 7-இல் நின்ற
கிரகங்களiன் தசா புத்திகள்.
திருமணம் எப்போது
ஆண் ஜாதகம்
1, ஆணுடைய பிறப்பு ஜாதகத்தில
உள்ள சுக்கிரனுக்கு 1,5,9-இல்
அல்லது
3,7,11-இல் அல்லது 2,12-இல்
கோட்சார குரு சஞ்சரிக்கும்
காலத்தில்
திருமணம் நடைபெறும்.
பெண் ஜாதகம்
2, பெண்ணுடைய பிறப்பு
ஜாதகத்தில் உள்ள
செவ்வாய்க்கு 1,5,9-இல்
அல்லது3,7,11-இல் அல்லது
2,12-இல் கோட்சார குரு
சஞ்சரிக்கும் காலத்தில்
திருமணம் நடைபெறும்.
உறவில் திருமணமா அல்லது
அன்னியத்தில் திருமணமா?
உறவில் திருமணம்
1, பிறந்த ஜாதகத்தில்
லக்கினத்திற்கு 7-ஆம் பாவ
அதிபதி 2,6,10-மற்றும்3,7,11-ஆம்
பாவங்களுடன்
தொடர்பு
கொண்டால்( சேர்க்கை
அல்லது பார்வை )
உறவில் திருமணம் நடக்கும்.
2, 7-இல் புதன், சனி சுக்கிரன்,
ஆகிய கிரகங்கள் இணைந்து
நிற்பது அல்லது
இம் மூன்றும் கிரகங்களும் 7-ஆம்
வீட்டை பார்ப்பது அல்லது இம்
மூன்று
கிரகங்களும 7-க்குடையனைப்
பார்ப்பது உறவில் திருமணம்
நடக்கும்.
3, 7-க்குடையவன் 2,6,10-அல்லது
3,7,11-ஆம் வீடுகளiல் தனித்து
நின்று
1,5,9,4,8,12-க்குடையவர்களiன்
தொடர்பு இல்லாமல்
இருப்பது.
4, 7-க்குடையவன் 2,6,10,3,7,11-
ஆம் வீடுகளiல் நின்று
2,6,10,3,7,11-ஆம்
வீட்டு அதிபதிகளுடன் மட்டும்
தொடர்பு
கொண்டு நிற்பது.
5, 7-ஆம் பாவத்தின்
2,6,10,3,10,11-க்குடையவர்கள்
இணைந்து நிற்பது.
6, 7-ஆம் பாவத்திற்கு
1,5,9,4,8,12-க்குடையவர்களiன்
தொடர்பு இல்லாமல்
இருப்பது.
அன்னியத்தில் திருமணம்
1, பிறந்த ஜாதகத்தில்
லக்கினத்திற்கு 7-ஆம் பாவ
அதிபதி 1,5,9-மற்றும்
4,8,12-ஆம் பாவங்களுடன்
தொடர்பு
கொண்டால் ( சேர்க்கை
அல்லது பார்வை
) அன்னியத்தில் திருமணம்
நடக்கும்.
2, 7-இல் சூரியன்,
செவ்வாய், சந்திரன், குரு
ஆகிய கிரகங்கள் இணைந்து
நிற்பது அன்னியத்தில் திருமணம்
நடக்கும்.
3, 7-ஆம் பாவத்திற்கு
2,6,10,3,7,11-க்குடையவர்களiன்
தொடர்பு இல்லாமல்
இருப்பது.
4, 7-க்குடையவன் 1,5,9,4,8,12-ஆம்
பாவங்களiல் நின்று
2,6,10,3,7,11-ஆம்
அதிபதிகளுடன்
தொடர்பு இல்லாமல்
இருப்பது.
5, 7-க்குடையவன் 1,5,9,4,8,12-ஆம்
பாவங்களiல் நின்று
1,5,9,4,8,12-ஆம்
வீட்டு அதிபதிகளுடன் மட்டும்
தொடர்பு
கொண்டு நிற்பது.
6, 1,5,9,4,8,12-க்குடையவர்கள்
எல்லோரும் 1,5,9,4,8,12-
பாவங்களiல் நிற்பது.
7, 1,5,9,4,8,12-ஆம்
பாவாதிபதிகள் எல்லோரும்
இணைந்து ஆம் பாவத்தில்
இருப்பது.
தாய் வழி திருமணம்
7-ஆம் பாவ அதிபதி 2,6,10-
ஆம் பாவங்களுடன்
தொடர்பு
பெற்றால்
திருமணம் தாய் வழியில்
நடக்கும்.
தந்தை வழி திருமணம்
7-ஆம் பாவ அதிபதி 3,7,11-
ஆம் பாவங்களுடன்
தொடர்பு
பெற்றால்திருமணம் தந்தை
வழி திருமணம் நடக்கும்.
அத்தை மகளை திருமணம்
செய்பவர்
1, 7ஆம் பாவத்தில் 3-
க்குடையவன் நின்றால் அத்தை
மகள் மனைவியாக
அமைவாள்.
2, 7-ஆம் பாவத்தில் 11-
க்குடையவன் நின்றாலும் அத்தை
மகள் மனைவியாக
அமைவாள்.
தாய்மாமன் மகளை திருமணம்
செய்பவர்
1, 7-ஆம் பாவத்தில் 6-
க்குடையவன் நின்றால்
தாய்மாமன் மகள்
மனைவியாக
அமைவாள்.
2, 7-ஆம் பாவத்தில் 10-
க்குடையவன் நின்றால்
தாய்மாமன் மகள்
மனைவியாக அமைவாள்.
அக்கா மகளை திருமணம்
செய்ப்பவர்
1, 7ஆம் பாவத்தில் 3-
க்குடையவன் நின்றால்
ஜாதகன் தன் மூத்த
சகோதரியின் மகளை மணப்பான்.
அக்காள் தங்கை இருவரையும்
திருமணம் செய்பவர்
1, 7-ஆம் பாவத்தில் 5,7-
க்குடையவர்கள் சேர்க்கைப்
பெற்று நின்றால்
ஜாதகன்
அக்காள் தங்கை இருவரையும்
மணப்பான்.
2, 7-ஆம் பாவத்தில் 7,9-
க்குடையவர்கள் சேர்க்கைப்
பெற்று நின்றால்
ஜாதகன்
தன் மனைவியின் தங்கையையும்
மணப்பான்.
மனைவியின் தோழியை திருமணம்
செய்பவர்
1, 7-க்குடையவன் 3,11-இல்
நின்றால் ஜாதகன் தன்
சகோதரியின் தோழியை
மணப்பான்.
அன்னிய ஜாதி அல்லது
அன்னிய மதத்தை திருமணம்
செய்பவர்
1, 7-இல் ராகு நின்றால்
அன்னிய ஜாதி அல்லது
அன்னிய மதத்தைச் சேர்ந்த
பெண்னை மணக்க
நேரிடலாம்.
எதிர் வீட்டில் வசிக்கும்
பெண்ணை திருமணம்
செய்பவர்
1, 7-க்குடையவனும்
லக்னாதிபதியும் சம
சப்தமாக நின்றால்
ஜாதகதர் தன்
வீடடிற்கு எதிர் வீடடில் வசிக்கும்
பெண்ணை மணக்கும்
வாய்ப்பு உண்டு.
கணவன் / மனைவி அமைவது
உள்ளுரிலா அல்லது
வெளியூரிலா
உள்ளுரில் அமையும் கணவன் /
மனைவி
1, 7-க்குடையவனும்
லக்னாதிபதியும் ஒரே ராசியில்
இணைந்திருந்தால் தாரம்
உள்ளூரிலேயே அமையும்.
2, 7-ஆம் பாவ அதிபதி நின்ற
ஸ்திர ராசியானால் தாரம்
உள்ளூரிலே அல்லது
தன் ஊருக்கு மிகவும் அருகிலுள்ள
ஊரிலோ அமையும்.
வெளயூரில் அமையும்
கணவன் மனைவி
7-ஆம் பாவ அதிபதி நின்ற
ராசி சர ராசியானால்
தாரம் வெளiயூரில்
அதாவது
வெகு தொலைவில்
உள்ள ஊரில் அமையும்.
கொஞ்சம்
தொலைவில் அமையும்
கணவன் மனைவி
1, 7-ஆம் பாவ அதிபதி நின்ற
ராசி உபய ராசியானால்
கொஞ்சம்
தொலைவில்
உள்ள ஊரில் அமையும்.
இரண்டாம் தாரமாகச்
செல்லும் பெண்கள்
1, பெண்கள் ஜாதகத்தில்
செவ்வாய்க்கு 1,5,9-இல்
அல்லது 2-இல் கேது
இருந்தால் அந்தப் பெண்
ஏற்கனவே திருமணமாகி
விவாஹுரத்தான ஆணை
திருமணம் செய்து
கொள்ள நேரிடும்.
2, அவ்வாறு செய்த
கொண்டால் அந்தப்
பெண்ணைப்
பொருத்தவரை ஒரே ஒரு
திருமணம் தான்.
3, அவளுடைய
கணவனுக்குத்தான் இவள்
இரண்டாம் தாரம் அவ்வாறு
அமையாமல் அவளுடைய
கணவனுக்கு அவள் முதல்
தாரமாக இருந்தால்
பிரிவினை ஏற்பட்டு
இன்னொருவனை
மணக்க நேரிடும்.
4, இதனால் அந்தப்
பெண் ஒன்றுக்கு மேற்பட்ட
திருமணம் செய்து
கொள்ள
வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
5, பெண்கள் ஜாதகத்தில்
7-க்குடையவனுக்கு 1,5,9-இல்
அல்லது 2-இல் கேது
நின்றாலும் மேற்கண்ட
பலன்கள் நடக்க வாய்ப்புண்டு.
மனைவி அவள் வீட்டிற்கு ஒரே
பெண்ணா
ஆண் ஜாதகம்
1, ஆண் ஜாதகத்தில் சுக்கிரன்
நின்ற ராசிக்கு 1,7,2,12-இல்
எந்த கிரகமும்
இல்லையென்றால் மனைவி
அவள் வீட்டிற்கு ஒரே
பெண்ணாக இருப்பாள்.
2, பெரும்பாலும் உடன்
பிறந்தாவர்கள் யாரும்
இருக்கமாட்டார்கள்.
3, திருமணத்திற்குப் பின்
ஜாதகருக்கு மனைவி
வீட்டாருடன் எந்த வித
தொடர்பும் இருக்காது.
4, ஆண் ஜாதகத்தில் 7-
க்குடையவன் நின்ற ராசிக்கு
1,7,2,12-இல் எந்த
கிரகமும் இல்லையென்றால்
மனைவி அவள் வீட்டிற்கு ஒரே
பெண்ணாக
இருப்பாள்.
5, திருமணத்திற்குப் பின்
ஜாதகருக்கு வாழ்க்கைத்
துணைவரின் வீட்டாருடன்
எந்த வித தொடர்பும்
இருக்காது.
பெண் ஜாதகம்
1, பெண் ஜாதகத்தில்
செவ்வாய் நின்ற
ராசிக்கு 1,7,2,12-இல் எந்த
கிரகமும்
இல்லையென்றால்
கணவன் அவன் வீட்டிற்கு ஒரே
பிள்ளையாக இருப்பான்.
2, பெரும்பாலும் உடன்
பிறந்தாவர்கள் யாரும்
இருக்கமாட்டார்கள்.
3
, திருமணத்திற்குப் பின்
ஜாதகிக்கு கணவன்
வீட்டாருடன் எந்த வித
தொடர்பும் இருக்காது.
4, பெண் ஜாதகத்தில் 7-
க்குடையவன் நின்ற ராசிக்கு
1,7,2,12-இல் எந்த
கிரகமும் இல்லையென்றால்
கணவன் அவன் வீட்டிற்கு ஒரே
பிள்ளையாக
இருப்பான்.
5, திருமணத்திற்குப் பின்
ஜாதகருக்கு வாழ்க்கைத்
துணைவரின் வீட்டாருடன்
எந்த வித தொடர்பும்
இருக்காது.
கணவன் / மனைவி குடும்பம்
சிறியதா பெரியதா
என்பதை
கண்டறிதல்
ஆண் ஜாதகம்
1, ஆண் ஜாதகத்தில் சுக்கிரன்
நின்ற ராசிக்கு 1,7,2,12-ஆம்
இடங்களiல்
அமர்ந்துள்ள கிரகங்களiன்
எண்ணிக்கை 4-க்கு மேல்
இருந்தால் மனைவியின்
குடும்பம் பெரிய
குடும்பமாக இருக்கும்
2, 4-க்கு குறைவாக இருந்தால்
மனைவியின் குடும்பம் சிறிய
குடும்பமாகும்.
3, ஆண் ஜாதகத்தில் 7-
க்குடையவன் நின்ற ராசிக்கு
1,7,2,12-ஆம்
இடங்களiல் அமர்ந்துள்ள
கிரகங்களiன் எண்ணிக்கை 4-க்கு
மேல் இருந்தால்
மனைவியின் குடும்பம் பெரிய
குடும்பமாக இருக்கும்.
4, 4-க்கு குறைவாக இருந்தால்
மனைவியின் குடும்பம் சிறிய
குடும்பமாகும்.
பெண் ஜாதகம்
1, பெண் ஜாதகத்தில்
செவ்வாய் நின்ற
ராசிக்கு 1,7,2,12-ஆம்
இடங்களiல்
அமர்ந்துள்ள கிரகங்களiன்
எண்ணிக்கை 4-க்கு மேல்
இருந்தால் மனைவியின்குடும்பம்
பெரிய குடும்பமாக
இருக்கும்.
2, 4-க்கு குறைவாக இருந்தால்
மனைவியின் குடும்பம் சிறிய
குடும்பமாகும்.
3, பெண் ஜாதகத்தில் 7-
க்குடையவன் நின்ற ராசிக்கு
1,7,2,12-ஆம்
இடங்களiல் அமர்ந்துள்ள
கிரகங்களiன் எண்ணிக்கை 4-க்கு
மேல் இருந்தால்
மனைவியின் குடும்பம் பெரிய
குடும்பமாக இருக்கும்.
4,,4-க்கு குறைவாக இருந்தால்
மனைவியின் குடும்பம் சிறிய
குடும்பமாகும்.
கணவன் / மனைவியின் வீடு
அமைந்த வீதியைக் கண்டறிதல்
ஆண் ஜாதகம்
ஆண் ஜாதகத்தில் சுக்கிரன்
அல்லது ஏழுக்குடையவன் நின்ற
ராசியைக்
கொண்டு மனைவியின்
வீடு அமைந்திருக்கும் வீதியைபற்றி
அறியலாம்.
பெண் ஜாதகம்
பெண் ஜாதகத்தில்
செவ்வாய் அல்லது
ஏழுக்குடையவன் நின்ற ராசியைக்
கொண்டு மனைவியின்
வீடு அமைந்திருக்கும் வீதியைபற்றி
அறியலாம்.
1, மேசம் - கிழ மேல் வீதி, வடக்குப்
பார்த்த வாசல் உள்ள வீடு
2, ரிசபம் - தென் வடல் வீதி,
கிழக்குப் பார்த்த வாசல்
உள்ள வீடு
3, மிதுனம் - கிழ மேல் வீதி,
தெற்குப் பார்த்த வாசல்
உள்ள வீடு
4, கடகம் - தென் வடல் வீதி,
மேற்குப் பார்த்த வாசல் உள்ள
வீடு
5, சிம்மம் - கிழ மேல் வீதி,
வடக்குப் பார்த்த வாசல்
உள்ள வீடு
6, கன்னி - தென் வடல்
வீதி, கிழக்குப் பார்த்த வாசல்
உள்ள வீடு
7, துலாம் - கிழ மேல் வீதி,
தெற்குப் பார்த்த வாசல்
உள்ள வீடு
8, விருச்சிகம் - தென் வடல்
வீதி, மேற்குப் பார்த்த வாசல்
உள்ள வீடு
9, தனுசு - கிழ மேல் வீதி, வடக்குப்
பார்த்த வாசல் உள்ள வீடு
10, மகரம் - தென் வடல்
வீதி, கிழக்குப் பார்த்த வாசல்
உள்ள வீடு
11, கும்பம் - கிழ மேல் வீதி,
தெற்குப் பார்த்த வாசல்
உள்ள வீடு
12, மீனம் - தென் வடல்
வீதி, மேற்குப் பார்த்த வாசல்
உள்ள வீடு
கணவன் அல்லது மனைவியுடன்
பிறந்தவர்களின் எண்ணிக்கையை
தோராயமாக கண்டறியும் முறை
ஒன்றை பர்ப்போம்
ஆண் ஜாதகம்
1, ஆண் ஜாதகத்தில் ராசிக்
கடடத்தில் சுக்கிரனுடன் ஒரே
ராசியில் சேர்க்கைப்
பெற்று நிற்கும் கிரகங்கள்
எத்தனையோ அத்தனைபேர்
மனைவியுடன்
பிறந்தவர்களாவர்.
2, ஆண் ஜாதகத்தில் ராசிக்
கட்டத்தில் ஏழுக்குடையவனுடன் ஒரே
ராசியல்
சேர்க்கைப் பெற்று நிற்கும்
கிரகங்கள் எத்தனையோ அத்தனைபேர்
மனைவியுடன் பிறந்தவர்கள்
ஆவர்.
பெண் ஜாதகம்
1, பெண் ஜாதகத்தில்
ராசிக் கட்டத்தில்
செவ்வாய்யுடன் ஒரே
ராசியில்
சேர்க்கைப் பெற்று நிற்கும்
கிரகங்கள் எத்தனையோ அத்தனைபேர்
கணவனுடன்
பிறந்தவர்களாவர்.
2, பெண் ஜாதகத்தில்
ராசிக் கட்டத்தில்
ஏழுக்குடையவனுடன் ஒரே ராசியல்
சேர்க்கைப் பெற்று நிற்கும்
கிரகங்கள் எத்தனையோ அத்தனைபேர்
கணவனுடன்
பிறந்தவர்கள் ஆவர்.
கணவன் / மனைவி அமையும் திசையை
கண்டறிதல்
ஆண் ஜாதகம்
ஆண் ஜாதகத்தில் ராசிக்
கட்டத்தில் சுக்கிரன் அல்லது
ஏழுக்குடையவன் நின்ற
ராசியைக் கொண்டு
மனைவி அமையும் திசையை
அறியலாம்.
பெண் ஜாதகம்
பெண் ஜாதகத்தில்
ராசிக் கட்டத்தில்
செவ்வாய் அல்லது
ஏழுக்குடையவன்
நின்ற ராசியைக்
கொண்டு மனைவி
அமையும் திசையை அறியலாம்.
ராசி கணவன் / மனைவி அமையும்
திசை
மேஷம் கிழக்கு
ரிஷபம் கிழக்கு
மிதுனம் தென் கிழக்கு
கடகம் தெற்கு
சிம்மம் தெற்கு
கன்னி தென் மேற்கு
துலாம் மேற்கு
விருச்சிகம் மேற்கு
தனுசு வட மேற்கு
மகரம் வடக்கு
கும்பம் வடக்கு
மீனம் வட கிழக்கு
உங்கள் கணவன் மனைவியின்
ஜென்ம நட்சத்திரத்தை
தெரிந்து
கொள்ளலாம்
ஆண் அல்லது பெண்
ஜாதகங்களில்
1, 7-ஆம் வீட்டின் அதிபதியின்
மூன்று நட்சத்திரங்கள்
2, 7-ஆம் வீட்டில் உள்ள
கிரகங்களiன் மூன்று
நட்சத்திரங்கள்
3, 7-ஆம் வீட்டை பார்த்த
கிரகங்களiன் மூன்று
நட்சத்திரங்கள்
4, 7-ஆம் வீட்டதிபதியுடன்
இணைந்த கிரகங்களiன் மூன்று
நட்சத்திரங்கள்
5, 7-ஆம் வீட்டை அதிபதியைப்
பார்த்த கிரகங்களiன் மூன்று
நட்சத்திரங்கள்
6, 7-ஆம் வீட்டு அதிபதி எந்த
ராசியில் இருக்கின்றானோ
அந்த ராசியின்
அதிபதியின் மூன்று
நட்சத்திரங்கள்
7, இவர்களiல் ஏதாவது ஒரு
கிரகத்தின் நட்சத்திரமே வரப்போகும்
கணவன்
அல்லது மனைவியின் ஜென்ம
நட்சத்திரமாக அமையும்.
கணவன் / மனைவிக்கு ஆயுள்
பலத்தை கண்டறிதல்
ஆண் ஜாதகம்
1, ஆண்கள் ஜாதகத்தில்
சுக்கிரன் நின்ற ராசிக்கு 1,5,9-
அல்லது 2-இல் ராகு
நின்றால் மனைவிக்கு ஆயுள்
குறைவு.
2, ஆண் ஜாதகத்தில் 7-
க்குடையவன் நின்ற ராசிக்கு
1,5,9-அல்லது 2-இல்
ராகு நின்றால் மனைவிக்கு
ஆயுள் குறைவு.
பெண் ஜாதகம்
1, பெண் ஜாதகத்தில்
செவ்வாய் நின்ற
ராசிக்கு 1,5,9-அல்லது 2-இல்
ராகு
நின்றால் கணவனுக்கு ஆயுள்
குறைவு.
2, பெண் ஜாதகத்தில் 7-
க்குடையவன் நின்ற ராசிக்கு
1,5,9-அல்லது 2-இல்
ராகு நின்றால் கணவனுக்கு
ஆயுள் குறைவு.
சேர்ந்து வாழ்ந்தால் ஏற்படும்
மரணங்கள்
1, மேற்கண்ட தோசமுடைய
ஜாதகர்கள் தங்கள்
வாழ்க்கைத் துணையுடன் ஒரே
வீட்டில் தொடர்ந்து 6-
வருடங்களுக்கு மேல் சேர்ந்து
வாழ்ந்தால் விரைவில்
வாழ்க்கை துணைக்கு மரணம்
ஏற்படும்.
2, அவ்வாறு இல்லாமல்
இருவரும் ஒரே இடத்தில்
வசிக்காமல்
அவ்வப்பொழுது
சிறிது காலம் மட்டும் சேர்ந்து
இருந்து விட்டு பிறகு
தொழில்,
வியாபாரம்,
உத்தியோகம் நிமித்தமாக
வெவ்வேறு ஊர்களiல்
வசிக்க நேரிட்டால் வாழ்க்கைத்
துணையின் ஆயுளுக்கு பங்கம்
ஏற்படாது.
3, நீண்ட காலம்
வாழ்ந்திருக்க வாய்ப்புண்டு.
4, கணவன், மனைவி இருவரும்
தொடர்ந்து இருவரும்
தொடர்ந்து 6-
வருடங்களுக்கு மேல் ஒரே வீட்டில்
சேர்ந்து வசித்தால் துணைவருக்கு
ஆயுள்
பங்கம் ஏற்படுவதைக் தடுக்க
முடியாது. துணைவருக்கு திடீர்
மரணம்
ஏற்படலாம்.
மனைவி உத்யோகம் பார்ப்பவரா
ஆண் ஜாதகத்தில்
பார்க்கவும்
1, 4,8,10,11-அதிபதிகள்
4,8,10,11-இல் இருப்பது.
2, குரு சந்திரன் இணைந்து கேந்திரம்
திரிகோணம் பெறுவது அல்லது
2-இல்
இருப்பது.
3, சுக்கிரன் சந்திரன் இணைந்து
அல்லது சுக்கிரன் புதன்
இணைந்து கேந்திர
திரிகோணம் பெறுமானால்
மனைவி உத்தியோகம் பார்க்கும்
நிலை.
4, செவ்வாய் 4,8,12-ம்
வீட்டோடு தொடர்பு
கொள்வது.
5, 7-ஆம் அதிபதி 2-ல் இருப்பது
அல்லது 2-ஆம் இடத்தைப்
பார்ப்பது
6, 4,11-ஆம் அதிபதிகள் ஆட்சி,
உச்சம் பெறுவது
7, 7,10-ஆம் அதிபதிகள்
சம்பந்தம் பெறுவது.
8, சுக்கிரன், சனி சம்பந்தம்
அதாவது சேர்க்கை பார்வை
பெறுவது உத்யோகம்
பார்க்கும் மனைவி அமையும்.
9, 7-க்குடையவன் 4,8,12-ஆம்
இடங்களiல் நின்றால்
உத்தியோக பார்க்கும்
பெண் மனைவியாக
அமைவாள்.
10, 7-குடையவனோடு 4,8,12-
க்குடையவர்கள் சேர்க்கைப்
பெற்றாலும்
உத்யோகம் பார்க்கும் பெண்
மனைவியாக அமைவாள்.