jaga flash news

Saturday 31 October 2020

ஆரோக்கிய_குறிப்புகள்

#ஆரோக்கிய_குறிப்புகள்

குதிகால், பாதம், கெண்டைக்கால், மூட்டு, தொடை ஆகிய இடங்களில் ஏற்படும் வலியைப்போக்கும் திறமை பெற்றது வெற்றிலை நெல்லி ரசம்.*

*தேவையான பொருட்கள்:*

*முழு நெல்லிக்காய் 10,*
*வெற்றிலை 20,*
*கொத்தமல்லி இலை ஒரு கைப்பிடி* 
*கறிவேப்பிலை ஒரு கைப்பிடி,* 
*காய்ந்த மிளகாய் 4,*
*பூண்டு 6 பல்,*
*வால் மிளகு ஒரு டீஸ்பூன்*
*சீரகம் ஒரு டீஸ்பூன்,*
*மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்,* 
*நல்லெண்ணெய் 2 டீஸ்பூன்,*
*உப்பு தேவைக்கேற்ப.*

*செய்முறை:*

*நெல்லிக்காயை விதை நீக்கி சாறு எடுக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, வெற்றிலை மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.*

*வெறும் சட்டியில் காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு, பொடியாக நறுக்கிய பூண்டு, ஒன்றிரண்டாகத் தட்டிய வால்மிளகு, சீரகம் ஆகியவற்றை போட்டு இளம் சிவப்பாக வறுக்கவும்.*

*பின்னர், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, வெற்றிலை, கொத்தமல்லி இலையை அதில் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.*

*நன்றாக வதங்கியதும் விழுதாக அரைத்துக்கொள்ளவும். ஒரு சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள விழுதைப் போட்டு வதக்கவும்.*

*அதில் நெல்லிக்காய் சாறு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து  அடுப்பை மிதமாக எரியவிடவும். கொதிக்கும் பக்குவம் வந்ததும், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடாமல் கீழே இறக்கவும்.*

*பயன்கள்:-*

*இந்த நெல்லி ரசத்தை குடிப்பதன் மூலம் குதிகால் வலியை எளிதில் குறைப்பதோடு, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இதயநோயாளிகளுக்கும் ஏற்ற உணவாக அமைகிறது.*

*எலும்பு புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

 தயிரின் 20 அற்புத மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!

1. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.

2. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.

3. தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.

4. குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான்.

5. பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32% பால்தான் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.

6. பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.

7. த‌‌யி‌ரி‌ல் இரு‌க்கு‌ம் பா‌க்டீ‌ரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.

8. பாலில் LACTO இருக்கிறது. தயிரில் இருப்பது LACTOBACIL. இது ஜீரண சக்தியை தூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது.

9. வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் சொல்வார்கள்.

10. அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது வெந்தயம் + தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும்.

11. பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவுவகைகளை சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் ‘ரயித்தா’ சாப்பிடுகிறோம்.

12. மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.

13. வெண்ணெய் காய்ச்சி இறக்கும் பொழுது சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும்.

14. புளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலை முடி மிருதுவாக இருக்கும்.

15. தயிர் புளிக்காமல் 2-3 நாள் இருக்க தேங்காய் சிறிய துண்டாக்கி சேர்த்தால் புளிக்காது

16. வெண்டைகாய் வதக்கும் பொழுது ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்தால் நிறம் மறாமல், பிசுபிசுக்காமல் இருக்கும்.

17. வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது.

18. மண்ணெண்ணெய் வாசம் போக தயிர் கொண்டு கை கழுவலாம்.

19. மோராக கடைந்து உப்பு,கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம்.

20. தயிருடன் + சர்க்கரை சேர்த்து கலக்கி லஸ்ஸியாக உண்ணலாம்.

சனி பெயர்ச்சி27.12.20.6.29am

27.12.2020 அன்று காலை 6.29க்கு வாக்கிய பஞ்சாங்கபடி சனி பெயர்ச்சி நடக்கிறது தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு சனி மாறுகிறார்

மேசம் ராசிக்கு கர்ம சனி
ரிசபம் ராசிக்கு அஷ்டம சனி முடிகிறது
மிதுனம் ராசிக்கு அஷ்டம சனி தொடக்கம்
கடகம் கண்டக சனி துவங்குகிறது
சிம்மம் ராசிக்கு ஜெய சனி
கன்னி ராசிக்கு புண்ணிய சனி
துலாம் ராசிக்கு அர்த்தாஷ்டம சனி
விருச்சிக ராசிக்கு ஏழரை சனி முடிகிறது
தனுசு ராசிக்கு ஏழரை சனியில் ஜென்ம சனி முடிகிறது
மகரம் ராசிக்கு ஜென்ம சனி
கும்பம் ராசிக்கு ஏழரை சனி துவக்கம்
மீனம் ராசிக்கு லாப சனி

சனி பகவான் தரும் கர்மயோகம்»

«சனி பகவான் தரும் கர்மயோகம்»»


ஒரு மனிதனுக்கு கர்மயோகத்தை வழங்குவதில் நவகிரகங்களில் சனிபகவானுக்கு முதல் இடம் உண்டு.அதனால்தான் சனிபகவானை நாம் சனி ஈஸ்வரன் என உலகெல்லாம் ஞானமார்க்கத்தால் வழிநடத்தும் சிவனுக்கு அடுத்தபடியாக அழைக்கிறோம்.

கர்மயோகம் என்பது

ஒருவன் தன் இல்லற வாழ்வின் சுகதுக்கங்களில் மனம் தளராது ஈடுபட்டு அதன் மூலமாக வாழ்வின் உள்ளார்ந்த அர்த்தத்தையும் ,உறவின் நிலைகளையும் அறிந்து கொள்வது ஆகும்.இதன் மூலம் ஞானநிலையை அடைவது அதாவது லொளகீக வாழ்வில் ஈடுபட்டு அதன்மூலம் வாழ்வின் ஆத்மார்த்த நிலையை அடைவதாகும்.

இந்த கர்ம யோகத்தை சாதரண சராசரி மனிதனுக்கும் வாரி வழங்குவதில் சனி பகவானுக்கு முன்னுரிமை அளிப்பது ஏன் என்பதை இப்போது விரிவாக பார்ப்போம்.

ஒருவன் ஜெனன காலத்தில் பால்வீதியில் என்ன நட்சத்திரம் உலாவி வருகிறதோ அந்த நட்சத்திரத்தினை கொண்டு அதாவது அந்த நட்சத்திரத்தின் பாதத்திற்கு ஏற்ப (சில நட்சத்திரங்களுக்கு இரண்டு ராசி வரும்)    ஒருவருக்கு ஜென்ம ராசி கண்டறியப்படுகிறது என்பது சோதிடம் அறிந்த அனைவருக்கும் தெரியும்.இந்த நட்சத்திர அதிபதிக்குரிய திசையை செல் கழித்து மீதமிருப்பதை ஜென்ம திசையாக கொள்ளப்படுகிறது.

ஒரு மனிதனை வழிநடத்துவதில் #ஜென்மதிசைக்கு பங்குண்டு.அவனுக்கு நடைபெறும் திசை அடிப்படையில் இன்ப துன்பங்களை அடைவதைப்போல அம்மனிதனை வாழ்வை வழிநடத்துவதில் #கோசாரத்திற்கும் பெரும் பங்கு உண்டு.எனவே ஒருவனது வாழ்வில் நடந்த மற்றும் நடக்கபோகின்ற மாற்றங்களுக்கும்,ஏற்ற இறக்கங்களுக்கும் இந்த ஜென்ம திசை மற்றும் கோசாரப்பலன் இரண்டையும் அவனது சாதகத்தில் பார்த்து அவ்விரண்டிற்கும்  ஏற்றார்போல கிரகநிலை ஆய்ந்து ஒருவருக்கு சோதிடராகிய நாம் பலனளிக்கவேண்டும்.

சரி விஷயத்திற்கு வருகிறேன்.இதில் கோசரப்பலன் என்பது ராசியை அடிப்படையாக கொண்டு வானவீதியில் கிரகங்கள் ஒரு ராசியிலிருந்து மற்றொரு பெயர்ச்சி அடைவதால் மனிதனுக்கும்,உலகியலுக்கும் ஏற்படும் மாற்றங்களை விளக்குவது ஆகும்.இதனையே நாம் சனிபெயர்ச்சி,குருபெயர்ச்சி...என அழைக்கிறோம்.

இவ்வித பெயர்ச்சியினால் அவரவர் சாதக கட்டத்தில் கிரகநிலை மற்றும் ராசிக்கு ஏற்ப அவர் வாழ்வில் மாற்றங்கள் நடைபெறும் என்பதாலும்,இயற்கை நிகழ்வுகளுக்கும் மாற்றங்கள் உருவாகும் என்பதாலும் இவ்வித பெயர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் ஊடகங்களால் கொடுக்கப்படுகிறது.இவ்வித பெயர்ச்சியால் சொல்லப்படும் பலன்கள் யாவும் பொதுப்பலன்களே அவரவர் ராசி,கிரகநிலை மற்றும் ஜென்ம திசைக்கு ஏற்ப பலன்களிலில் மாறுபடும்.எனவே செய்திதாள்களில் பொதுபலனைப் படித்துவிட்டு அதுபோல நடைபெறவில்லை என சோதிட துறையை குறைகூறி திரியவேண்டாம்.ஒவ்வொறு பெயர்ச்சி பலனை திறன் வாய்ந்த சோதிடரிடம் உங்களது சாதகத்தில் உள்ள கிரகநிலை மற்றும் திசைக்கு ஏற்றார்போல பலனை எடுத்துக்கொள்ளவேண்டும்.

திசை மற்றும் கோசார பலன் இரண்டும் உடன்பாடாக இருக்கும் பட்சத்தில்தான் யோகங்கள் அதிகம் உண்டாகும்.இரண்டில் ஒன்று பாதிக்கப்பட்டால் ஒன்று மற்றதன் பலனை குறைக்கும்.இரண்டும் பாதிக்கப்பட்ட நிலையில் அதிக கஷ்டங்களை மனிதன் அனுபவிக்கவேண்டும்.இது விதிப்பலன் ஆகும்.இதற்கு பரிகாரம் அதற்குரிய அதிதேவதைகளிடமும் ,குலதெய்வத்திடமும் சரணடைவதை தவிர வேறுவழியில்லை.

இவ்வாறாக சனிபகவான் ஒரு ராசிக்கு இரண்டரை ஆண்டுகள் வீதம் பணிரெண்டு ராசிகளையும் முப்பது ஆண்டுகள் முதல் சுற்றில் சுற்றி வருகிறார்.ஒரு மனிதனுக்கு சனி பகவான் ஆனவர் அவரது ராசியை மையமாக கொண்டு வலம் வருவதில் ராசிக்கு பணிரெண்டு ,ஜென்மராசி மற்றும் இரண்டாமிடம் ஆகிய மூன்று ராசிகளை கடப்பதையே #ஏழரைச்சனி என்கிறோம்.

அதாவது ராசிக்கு பணிரெண்டாமிடத்தில் வரும்போது அதனை #விரயச்சனி என்கிறோம்.இந்த ராசியில் சனிபகவான் இருந்துகொண்டு அவனுக்கு பலவிதங்களில் விரயங்களை தந்து அவனை ஆட்டிபடைக்கிறார்.எவ்வளவு பெரிய கோடீஸ்வரனையும் உருட்டி தரைநிலைக்கு கொண்டு வருகிறார்.எவ்வளவு அறிவாளிகளையும் புத்திபிசக வைத்து தவறான முடிவை எடுக்கவைக்கிறார்.

அடுத்து ஜென்ம ராசிக்கு வருவதை #ஜென்மசனி என்கிறோம்.சாதரணமாக எதை தொட்டாலும் விளங்காதவனை மக்கள் " சனியன் பிடித்தவன் "என அழைப்பதுண்டு.ஏனெனில் ஜென்மசனி பிடித்தவன் அடையும் பலவித இன்னல்களை அனைவரும் பார்த்ததாலே சாதரணமாக யோகமில்லதவனை அவ்வாறு அழைக்கிறார்கள்.

இறுதியாக #பாதசனி ராசிக்கு இரண்டாமிடத்தில் இரண்டரை ஆண்டுகள் இருப்பதையே பாதசனி என்கிறோம்.இதில் ஒரளவு சனியின் துன்பங்கள் குறையும் என்றாலும் ஏற்கெனவே விரய மற்றும் ஜென்மசனியால் உலுக்கிய புயலால் அடைந்த சேதங்களை சரி செய்யவே இந்த இரண்டரை ஆண்டுகள் பிடிக்கும் என்பதால் இந்தபாத சனியிலும் பெரிய நன்மைகள்  ஏதும் பெரிதாக கிடைக்கப்போவதில்லை.

இவ்வாறாக இந்த மூன்று ராசிகளையும் சனிபகவான் கடந்து செல்லும் ஏழரை ஆண்டுகளையே நாம் ஏழரை சனி என அழைக்கிறோம்.இந்த ஏழரைச்சனியும் ஒரு மனிதனுக்கு மூன்றுமுறை சுற்றி வருகிறது.முதல் ஏழரைச்சுற்றை #மங்குசனி என்றும்,இரண்டாவது ஏழரை சுற்றை #பொங்குசனி என்றும் ,மூன்றாவது ஏழரைச்சுற்றை #மரணச்சனி எனவும் அழைக்கிறோம்.

இதில் முதல் ஏழரைச்சுற்றில்தான் அதிக கஷ்டங்களை தந்து ஒரு மனித வாழ்வில் கஷ்டம் என்றால் என்ன எனவும்,யார் உண்மையான நண்பன் மற்றும் யார் உண்மையான பாசமுள்ள உறவுகள் என வாழ்வின் பல உன்னத விஷயங்களை ஒருவனுக்கு உணர்த்தி அவனது இல்லற வாழ்விலிருந்தே அவன் ஞானத்தை அதாவது "கர்மயோகத்தை "அடையவைக்கும்.எனவேதான் நாம் அனைவரும் நமக்கு பலவித இன்னல்களை தந்து அவ்வித ஏழரைசனிக்கு பிறகு பாடம்பெற்று அதற்குபிறகு வாழ்வினை சரியான பாதைக்கு நகர்த்தி செல்ல உதவுதால்தான் சனிபகவானை "#சனீஸ்வரன் என மக்களால் அழைக்கப்படுகிறது.

சிலநேரங்களில் ஜெனன காலத்தில் மிக குறைவான காலங்கள் பாதசனியில் இருந்து முதல் சுற்றை சிறுவயதில் முடித்தவற்களுக்கு இரண்டாவது சுற்று ஏழரைசனியே முதல்சுற்றைப்போல இன்னல்களை தரும்.

யோனிப்பொருத்தம்

#யோனிப்பொருத்தம்:-
திருமணப் பொருத்தத்தில் முக்கியமாக பார்க்கப்படும் 10 பொருத்தங்கள் தச பொருத்தங்கள் எனப்படும் அதில் கயிறு என்னும் ரஜ்ஜு பொருத்தத்திற்கு அடுத்தபடியாக யோனிப் பொருத்தம் மிக முக்கியமாகக் கருதப்படுகிறது அதாவது ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு மிருகத்தின் யோனியை அடையாளமாக வைத்து முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்

 இதில் நட்பு , பகை யோனி சம யோனிகள் என்று வகைப்படுத்தி உள்ளார்கள் . இருவருக்கும்பகை யோனிகளாயின்சேர்க்கக்கூடாது என்பது விதி .
மேலும் ஆண் பெண் யோனிகள் இருவகைகளாகவும்பிரிவு படுத்தி உள்ளார்கள்.
இருவருக்கும் ஆண் யோனிகளாக இருந்தாலும் , இருவருக்கும்பெண்யோனிகளாக இருந்தாலும் சமம் என்று எடுத்துக்கொள்ளலாம்.
 ஆணுக்குஆண் யோனியும் பெண்ணுக்கு பெண் யோனியும் இருந்தால்உத்தமம் .
ஆண் பெண் இருவருக்கும் மாறி இருந்தால் அதாவது ஆணுக்கு பெண் யோனியும் பெண்ணுக்கு ஆண் யோனியும் அமைந்திருந்தால் அதமம் சேர்க்கக்கூடாது என்ற விதியும் உண்டு எல்லா விதிகளைப் போலவும் இதற்கும் சில விதிவிலக்குகளும் உண்டு.

பகை யோனிகள் வகைப்படுத்துவதில் சில முரண்பாடுகள் உள்ளன உதாரணமாக புலிக்கு:- பசு எருமை மான் நாய் ஆடு இவைகளை சிலர் பகையோனிகளாக குறிப்பிடுகிறார்கள் ஆனால் புலிக்கு நேரடி பகை பசு மட்டுமே என்கிறார்கள் சி.ஜி ராஜன் போன்ற மூலநூல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

நேரடி பகை யோனிகள்
 குதிரைக்கு ×எருமை 
யானைக்கு ×சிங்கம்
 குரங்குக்கு ×ஆடு 
பாம்புக்கு ×எலி ,கீரி
நாய்க்கு ×மான்
 பூனைக்கு ×எலி 
பசுவுக்கு× புலி 
நேரடிப்பகை யோனிகள் ஆகும்.
எனவே நேரடி பகை யோனிகளை மட்டுமே இணைக்கக் கூடாது.
 ஆண்-பெண் பேதங்கள் பெண் நட்சத்திரத்தில் இருந்து 13 நட்சத்திரத்திற்கு மேல் ஆண் நட்சத்திரம் அமைந்திருந்தால் முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை.
பொதுவான நட்சத்திரப் பொருத்தத்தை விடவும்ஜாதக ரீதியாகவும் ஆராய்ந்து முடிவு செய்யலாம்.

யோனி பொருத்தம் என்பது புத்திர பாக்கியத்தை பற்றி அறிய உதவும் என்று குறிப்பிடப்படுகிறது.

நட்சத்திர பொருத்தங்களில்
 மகேந்திரப் பொருத்தம் 
ராசி பொருத்தம்
 ராசி அதிபதி பொருத்தம் நாடிப்பொருத்தம்
 பால் விருட்ச பொருத்தம் ஆகியவைகளும் புத்திர பாக்கியத்தை பற்றி அறிய உதவுவது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
எனவே இதில் மூன்று அல்லது மூன்றுக்கு மேல் இருந்தால் புத்திர பாக்கியத்தை வலுப்படுத்தும் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
சிலர் யோனி பொருத்தத்தை அன்யோன்யம் தாம்பத்திய சுகம் அறிய உதவுவது என்றும் சிலர்கூறுகிறார்கள் ஆனால் அதற்குரிய விளக்கங்கள் உறுதியாக இல்லை. அப்படியே எடுத்துக் கொண்டாலும் ஜாதக ரீதியாகவும் ஆராய்வதே சிறந்த முறையாகும்

பொதுவாக புத்திர பாக்கியத்தை பற்றி அறிய 5ஆம் இடம் ஐந்தாம் அதிபதி, குரு மற்றும் 9-ஆம் இடம் கர்மம் செய்யக்கூடிய ஸ்தானம் ஆகிய பத்தாமிடம் கர்ம காரகர்கள் செவ்வாய் சனி ஆகியவைகளையும் நன்கு ஆராய்ந்து இறுதி முடிவு செய்ய வேண்டும்.
அன்யோன்யம் தாம்பத்திய சுகத்தை பற்றிய அறிய
மூன்றாம் இடம் ஏழாமிடம் பதினொன்றாம் இடம்
 ஆகிய காம திரிகோண ஸ்தானங்களையும்சுக்கிரன் மற்றும் செவ்வாய்களின் நிலைகளையும் ஆராய்ந்து இறுதி முடிவு செய்ய வேண்டும்.
நட்சத்திரப் பொருத்தத்தை விட ஜாதகப் பொருத்தமும் அதிமுக்கியம்

சிந்திப்போம்! சந்திப்போம்!


     🌹🌹🌹🌹🙏👍🌹🌹🌹🌹🌹🌹

பயண விரும்பி

மூன்றில் ராகு இருக்கும் ஜாதகர் ஒரு பயண விரும்பி, 

தொழில் கூட பயணம் செய்யும் தொழில் ஆக பலருக்கு அமைகிறது,, அல்லது விருப்ப பட்டு அமைத்து கொள்கிறார்கள்,,

மார்கெட்டிங் சம்பந்தமாக ஓரு இடம் விட்டு இன்னொரு இடம் சென்று communicate செய்யும் தொழில் ஆக அமைகிறது,, 

மற்றும் வாகன ஓட்டுனர் தொழில்

 (ஆட்டோ,taxi,van,) சிலர் சொந்த வாகனம் வாங்கி ஓட்டுதல் ,வாடகை வண்டி ஓட்டுதல், இது போன்று பெரும்பாலும் அமைகிறது,,,, 

லக்ன நட்சத்திரம் அல்லது ராசி நட்சத்திரம் சுக்ரன் ராகு சாரத்தில் நின்றால் ஒன்றுக்கு மேற்பட்ட car,van,bus,lorry, என்று டிராவல்ஸ் ,, transport business செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிட தக்கது,,3 என்பது முயற்சி ஸ்தானம் ராகு என்பது பயண காரகன்,, காற்று காரகன்,,

3இல் ராகு அமர தொழில் முயற்சி பயணம் சம்பந்தமாக தேர்ந்தெடுக்க நலம்


பரிகாரம் பற்றிய சிறிய விளக்கம்

பரிகாரம் பற்றிய சிறிய விளக்கம்:

சாதாரணமாக கோவில் சென்று வழிபடுவது வேறு ,,,

பரிகாரம் பரிகாரதிற்காக கோவில் சென்று வழிபாடு செய்வது வேறு,,,

, பரிகாரம் என்று செய்தால் அதை மீண்டும் மீண்டும் செய்து கொண்டே இருக்க வேண்டும்,,

(மீண்டும் மீண்டும் என்றால் நிறைய கேள்விகள் வரும்,)

புரியும் விதமாக 

அதாவது உதாரணமாக துர்க்கை அம்மனுக்கு விளக்கு போடுங்கள் என்போம் 48 நாள் ஒரு மண்டலம் செய்யுங்கள் என்போம்,, ஜாதகரும் செய்வார் கொஞ்சம் பிரச்சனையில் இருந்து விடுபடுவார் விடுபட்ட பின்னர் துர்க்கை அம்மனை மறந்து விடுவார்,,, 

மறந்த பின்னர் என்ன ஆகும் மறுபடியும் பிரச்சினை கொடுக்க ஆரம்பிக்கும்,, அந்த சமயத்தில் மீண்டும் 48 நாள் பூஜை ஆரம்பிக்க வேண்டும்,,

பரிகாரம் என்பது நம்மை கடிக்க வரும் சிங்கத்திற்கு போடும் இறைச்சி துண்டு,,, மாதிரி

சிங்கம் இறைச்சியை தின்று பசியாரி ஓய்வு எடுக்கும்,, மீண்டும் சிங்கம் பசிக்கும் போது நம்மை கடிக்க வரும்,, கையில் இறைச்சி இருந்தால் போடலாம் இல்லை எனில் அட்டாக் பண்ணிரும்,, அது போல தான்,, பரிகாரம் என்பது தற்காலிகமாக தப்பிக்க உதவும் ஓரு இறை வழி.,, பிரச்சினைகள் ஓயாது கிரகங்கள் ஓய்வது இல்லை,

உதாரணமாக காளகஸ்தி  கோவில் சென்று பரிகாரம் செய்வது,, அல்லது 
ஒரு சர்ப்ப பிரதிஷ்டை பரிகாரம் செய்வது இதெல்லாம் ராகு கேது  கொஞ்ச நாள் கொஞ்ச வருடம் நிம்மதியாக விட்டு வைகும்,, பின்னர் பிரச்சினை கொடுக்க ஆரம்பிக்கும்,, மீண்டும் சர்ப பிரதிஷ்டை செய்ய வேண்டுமா என்றால் இல்லை,, அந்த சிலை இருக்கும் இடத்திற்கு அடிக்கடி சென்று பூஜை செய்வது போதும்,, அதாவது அந்த பிரதிஷ்டை செய்த சிலை குல தெய்வத்திருக்கு சமம் ஆகும்,
 

ஒரு குழுவில் கேட்க பட்ட கேள்வி :

எனக்கு நீண்ட நாட்களாய் ஒரு சந்தேகம்.தயவு செய்து ஆசான்கள் யாரும் குதர்கம் என்று எண்ண வேண்டாம்..
ஜாதகத்தில் தோஷ பரிகாரம் செய்கிறோமல்லவா,உதாரணத்திற்கு ஜனன ஜாதகத்தில் செவ்வாய் தோஷத்திற்கான பரிகாரம் செய்கிறோம் என்று வைத்து கொள்வோம்..பரிகாரத்திற்கு பின்பும் அதே கிரகங்கள் அதே இடத்தில்தானே ஜாதகத்தில் இருக்கும்..பரிகாரம் பலனளித்ததா என எங்கனம் அறிந்து கொள்வது..
தயவு செய்து தவறாக எண்ணாமல் பதிலளிக்கவும,,

பதில்:

சுய ஜாதகத்தில் இருக்கும் கிரகம் மீது கோட்சார கிரகங்கள் சஞ்சரிக்கும் போது தான் பிரச்சினை வரும்,,, கோட்சார கிரகங்கள் பயணம் செய்யும் போது தான் உங்கள் சுய ஜாதக பலன் வேலை செய்யும்,, சுக்ர தசை உங்கள் லக்னத்திற்கு நன்மை செய்யும் என்று எடுத்து கொள்வோம் 20 வருடமும் நன்மை செய்கிறதா இல்லயே கோட்சார சுக்ரன் சஞ்சரிக்கும் வீடு பகை நீசம் உச்சம் என்று மாறி மாறி பயணம் செய்யும் போது தான் நன்மை தீமை செய்து வருகிறது, 

எந்த கிரகத்திற்கு பரிகாரம் செய்ய போகிறோம் அந்த பாவத்திற்கு பரிகாரம் செய்ய போகிறோம் அந்த பாவத்துக்கு அந்த கிரகம் கோட்சாரதில் நல்ல இடத்தில் இருக்கிறதா என்பதை பொறுத்தே பரிகாரம் வேலை செய்யும் ஒரு ஜோதிடர் ஒரு பரிகாரம் சொன்னார் பரிகாரம் செய்தும் மாற்றம் இல்லை என்று சொல்வதுண்டு அது இதனால் தான் ,,

பரிகாரம் செய்யாமல் கூட சில பிரச்சினைகள் தானே மறைந்து போகிறது அதுவும் எதனால் கோட்சார கிரகம் சஞ்சரிக்கும் வீடு சாதகமாக அமைவதால் தான்,

உதாரணமாக தற்போது கால புருசனுக்கு 2,8, இல் சார்ப்பங்கள் இருக்கிறது இந்த கால கட்டத்தில் மேஷம், ரிஷபம், விருச்சிகம், துலாம், லக்ன ராசி காரர்களுக்கு சர்ப்ப தோசம் பரிகாரம் செய்ய நிவர்த்தி அடையும்,, அதே போல குரு தனுசில் இருந்து மிதுனம் சிம்மம் பார்வை செய்கிறார் குழந்தை வேண்டி பரிகாரம் செய்ய இந்த லக்ன ராசிக்கு அது வேலை செய்யும்,,

ஒரு கிரகம் நமக்கு யோக தசை நடத்தும் போது நல்ல பலன் வந்து கொண்டே இருக்கும் அஸ்டமசனி, அர்த்தாஷ்டம சனி என்று கோட்சார சனி சாதகமிலா பலனை கொடுக்க தான் செய்கிறது,,

பரிகாரம் செய்த பின்னரும் சுய ஜாதக அமைப்பு இல் கிரகம் மாறுவது இல்லை ஆனால் கோட்சார கிரகம் தினம் மும், மாத மாதமும், வருட வருடமும், மாரத்தான் செய்கிறது,,,,

சுக்ரன்+கேது சேர்க்கை பாசான யோகம் ஆகும்

சுக்ரன்+கேது சேர்க்கை பாசான யோகம் ஆகும்,,

 இந்த சேர்க்கை ராசியில் இருந்தால் chemical , மருந்து, உரம், சம்பந்த பணி அல்லது chemical புகை, மருந்து தொழில் சாலை, மெடிகல் கடை, சம்பந்த மான இடங்களில் தொழில் சார்ந்து அமைகிறது,,

இதே சுக்ரன்+கேது சேர்க்கை நவாம்சத்தில் இருப்பின் தற்கொலை எண்ணங்கள் வரும்,

 அல்லது குடும்ப ரத்த உறவுகளில் யாரேனும் தற்கொலை செய்கிறார்கள்,, 

சுக்ரன் கேது சேர்க்கை நவாம்ச லக்னத்தில் இருந்து 7இல் இருந்தால் வாழ்க்கை துணை தற்கொலை எண்ணம், 
அல்லது நெருங்கிய நண்பர் தற்கொலை,

,5 இல் இருந்தால் குழந்தைகள் எதேனும் விசதை விளையாட்டாக வாயில் வைக்கும் நிலை, அல்லது பெற்ற தாயே குழந்தைக்கு விசம் ஊட்டும் நிலை,

2 இல் இருப்பின் குடும்பத்தில் யாரேனும் தற்கொலை,,

6 இல் இருப்பின் நமது எதிரி யாரேனும் திடீர் தற்கொலை, அல்லது chemical, மருந்து துறையில் பணி, இப்படி ஒவ்வொரு பாவத்திற்கு பாஸான யோகம் அளித்து வருகிறது,,

இந்த பாஷாண யோகத்தை முறியடிக்கும் பரிகாரம் ஒன்றே ஒன்று,, யானை கோமியம் வீட்டை சுற்றி 6 வருடத்திற்கு ஒரு முறை யாவது தெளிக்க வேண்டும்,, 

அதே போல ராசி கட்டத்தில் 4 இல் மாந்தீ இருந்தாலும் இந்த பரிகாரம் செய்வது நல்லது,,

 பதிவு மனதை சுடும் பதிவு தான் என்பதை நான் அறிவேன்,, இனிமேல் தற்கொலை யாரும் செய்ய கூடாது என்ற அடிப்படை இல் பரிகாரதுடன் பதிந்து இருக்கிறேன்,, 

இந்த சேர்க்கை எப்போது பாஷாண யோகமாக வெளிப்பட்டு தற்கொலைக்கு தூண்டுகிறது என்றால் முக்கியமாக கேது புத்தி சுக்ர புத்தி காலங்களிலும் நடக்கிறது,, மற்றும் அஷ்டம அதிபதி தசயில்  தசை நாதன் இருக்கும் வீட்டில் இருந்து எண்ணி வர கேது அல்லது சுக்ரன் 6,8,12, இல் இருப்பின் சம்பவம் நிகழ்த்துகிறது,,(ராசி கட்டம்)

விருச்சிக நவாம்சத்தில் சுக்ரன்+கேது சேர்க்கை இருப்பின் தற்கொலை எண்ணம் எளிதில் வருகிறது,,

மற்றும்

தற்கொலை செய்ய மனம் தூண்ட படுகிறது எனில் மிருத்யுஞ்ச மந்திரத்தை படியுங்கள்,,அல்லது பாடல் இருப்பின் ஒலிக்க விடுங்கள்,, எமன் தூரமாக போய்விடுவார்,,

அதிவேக வாகனம் இயக்கும் நண்பர்களும் இதை ஒலிக்க செய்வது நல்லது விபத்துகள் மட்டு படும்,,

மற்றும் இந்த பிறப்பில் தற்கொலை செய்தால் மீண்டும் மனித பிறவி கொடுப்பார்,,அதில் மீண்டும் தற்கொலை செய்ய மனம் தூண்டும் என செய்வது,, எப்போது பிறவியை முடிப்பது ,, தற்கொலை ஒரு முட்டாள் தனம்,,

இறைவன் கொடுத்த மூச்சு காற்று அவனே நிறுத்த வேண்டும் தவிர நமக்கு உரிமை இல்லை,,

ஒரு கிரகம் நம்மை பிரச்சினைக்கு தள்ளுகிறது எனில் இன்னொரு கிரகம் காப்பாற்ற ரெடியாக இருக்கும்,,, அது வரை பொறுமை வேண்டும்,

கிரகங்களுக்கு பகை நட்பு என்று எதற்கு இருக்கிறது,, இதற்குத்தான்,,,

காப்பாற்றும் காப்பாற்றும் என்று நினைத்தால் கை விட படார்,,,

நாம் என்ன நினைக்கிறோமோ அதை தான் இந்த பிரபஞ்சம் கொடுக்கிறது,, இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்,,,,,

ஓம் நீல லோகிதாய நமக சதிஷ் குமார்

அளவுக்கு மீறீனால் அமிர்தமும் நஞ்சு

*அளவுக்கு மீறீனால் அமிர்தமும் நஞ்சு*

⭕ பச்சரிசி அதிகமானால்- சோகை நோய்

⭕ அச்சுவெல்லம் அதிகமானால் _ அஜீரணம்

⭕ பலகாரம் அதிகமானால் - வயிற்று வலி

⭕ இஞ்சி அதிகமானால் - மென் குரலும் இறுக்கமாகும்

⭕பழைய சோறு, கஞ்சி அதிகமானால் - வாயு, வயிற்று பொறுமல் ஏற்பட்டு கை கால்வலிக்கும்

⭕ தேங்காய் அதிகமானால் - சளி, பித்தம், வறட்டு இருமல் உண்டாகும்

⭕ மாங்காய் அதிகமானால் - வயிறு கட்டும் சளி வளரும், இடுப்புவலிவரும், பித்தம் அதிகமாகும்.

⭕கோதுமையைசூட்டு உடம்புள்ளவர்கள் அதிகம உண்டால் - வயிறு வீங்கும், குடல் இரையும், பித்தம் அதிகமாகும்

⭕ பாதாம் பருப்பு அதிகமானால் - வாய் சுவை மாறும் பித்த அதிகமாகும். வயிறு மந்தமாகும்.

⭕ முற்றிய முருங்கை சாப்பிட - வாயு சளி உண்டாகும்

⭕ எருமைப்பால் அதிகம் குடிக்க - கிட்னி கல், அறிவு மங்கும்

⭕ மிளகு - உடம்பில் சக்தி இல்லாதவர்கள். அதிகம் உண்டால் வெப்பம் உண்டாகும்.

⭕ மிளகாய் அதிகமானால் -வெப்பமுண்டாகும், சளி அதிகரிக்கும், விந்து கெடும்.

⭕ காபி அதிகமானால் - கை நடுங்கும் பித்தம் அதிகமாகும். கண்ணெரியும், நெஞ்சு உலரும் ஆண்மை கெடும்.

⭕ டீ அதிகமானால் - உடல் நடுங்கும் கை கால் வீக்கமாகும், காய்ச்சல், வீக்கம், பசியின்மை, விந்து அழியும்

⭕ எலுமிச்சை அதிகமானால் - பாண்டு நோய், இதயம் ஆகியவை பாதிக்கும்.

⭕ எள்ளு அதிகமானால் - பித்தம் செரியாமை உண்டாகும்.

⭕ உப்பு அதிகமானால் - எலும்பு உருக்கும், உயிர் விந்தை குறைக்கும்

⭕ வெங்காயம் அதிகமானால் - தலைவலிக்கும், அறிவழிக்கும், சளி பெருகும்

⭕ குங்குமப்பூ அதிகமானால் - மதியழக்கும், ரத்தம் வெளுக்கும், கருவில் இருக்கும் குழந்தைஉறுப்புகளை கோணலாக்கும்.

⭕ வெள்ளை பூண்டு அதிகமானால்- ரத்தம்
கொதித்து பொங்கும், கரு அழிக்கும். குடல் எரிக்கும், ஆண் தன்மை இழக்கும்

*அளவுக்கு மீறீனால் அமிர்தமும் நஞ்சு*

எண்டார்பின், செரோடோனின், டோபமைன் மற்றும் ஆக்ஸிடோசின் இந்த நான்கும்தான் நம் உடலினுள்ளேயே இருக்கும் ‘மகிழ்ச்சி’ ஹார்மோன்கள்

எண்டார்பின், செரோடோனின், டோபமைன் மற்றும் ஆக்ஸிடோசின் இந்த நான்கும்தான் நம் உடலினுள்ளேயே இருக்கும் ‘மகிழ்ச்சி’ ஹார்மோன்கள். இவற்றை ஆக்டிவ் மோடில் வைத்துக் கொண்டால், எப்போதும் மனதையும், உடலையும் மகிழ்ச்சியோடு வைத்துக் கொள்ளலாம். சரி... இந்த ஹார்மோன்கள் உடல் ரீதியாக என்னென்ன வேலைகளைச் செய்கின்றன?

எண்டோர்பின்

எண்டார்பின்கள்(Endorphins) உடலின் வலியை கட்டுப்படுத்துபவை. இயற்கையாகவே உடலில் வலி நிவாரணிகளாக செயல்பட்டுக் கொண்டிருப்பவை. காட்டுவாசியாக ஆரம்பத்தில் மனிதன் இருந்தபோது நம் முன்னோர்கள் மிருகங்களிடமிருந்து தப்பிக்க ஓடும்போது எண்டார்பின்கள் உடலில் தானாகவே உற்பத்தியாகின்றன. இன்றோ, நாம் உடற்பயிற்சி செய்யும்போது மட்டுமே காற்றோட்ட மண்டலங்களில் எண்டார்பின்களை உற்பத்தி செய்யும் நிலையில் இருக்கிறோம்.

வலி தரும் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டாலும், எண்டார்பின் உற்பத்தி காரணமாக பயிற்சிக்குப்பின் ஃப்ஷ்ஷாக உணர்கிறோம்.எப்படி எண்டார்பின் உற்பத்தியை அதிகரிக்கலாம்?

கடுமையான உடற்பயிற்சிகளை செய்யும்போது, நம் உடலின் இயல்பான வலி நிவாரணிகளான எண்டார்பின்களை தூண்டுவதன் மூலம் நாட்பட்ட வலியை சமாளிக்க உதவுகிறது. எண்டார்பின்கள் வலியைப் போக்குவதில்லை. மாறாக வலி தெரியாமல் செய்கிறது அவ்வளவே. அடுத்து காரமான உணவை சாப்பிடும்போது, நாக்கிலுள்ள ரிசப்டார்கள், வலியை ஒத்த சமிக்ஞைகளை நமது மூளைக்கு அனுப்பி எண்டார்பின் உற்பத்தியை தூண்டுகிறது.

செரோடோனின்

செரோடோனின்(Serotonin) பற்றாக்குறையால் எரிச்சல், மன அழுத்தம் ஏற்படலாம். செரோடோனின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதன் மூலம் நல்ல மன நிலையை பெற முடியும்.

எப்படி செரோடோனின் உற்பத்தியை அதிகரிக்கலாம்?

நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளவேண்டும். நமக்கு நடக்கும் கெடுதல்களை மீண்டும் மீண்டும் நினைத்து வருந்துவதை விடுத்து, கடந்த காலங்களில் நடந்த நல்ல நிகழ்வுகளை அசைபோடுவது அல்லது நிகழ்காலத்தில் கிடைக்கும் மகிழ்ச்சித் தருணங்களுக்கு நன்றி செலுத்துவது போன்ற நேர்மறையான எண்ணங்கள் நம் மூளையில் செரோட்டோனின் உற்பத்தியை அதிகரிக்கும்.

வெட்டவெளியில் தோலில் சூரிய ஒளி படுமாறு நிற்பதால், உடலுக்கு கிடைக்கும் ‘டி’ வைட்டமின் செரோட்டோனின் உற்பத்தியை அதிகரிக்க உதவி புரியும் என்கிறது அறிவியல். இதனால்தான் மனம் சோர்வாக இருக்கும்போது வெளியில் சென்றால் நம் மனநிலையில் மாற்றம் ஏற்படுவதை உணர முடியும்.

கடுமையான பயிற்சிகள் எப்படி எண்டார்பின் உற்பத்திக்குத் தேவைப்படுவதைப்போல ஏரோபிக் பயிற்சிகள் போன்ற மிதமான உடற்பயிற்சிகள் செரோட்டோனின் உற்பத்தியைத் தூண்டுவதோடு பயிற்சிக்குப்பிறகும் மன அமைதி நீடித்து இருக்கும்.

டோபமைன்

மகிழ்ச்சிக்கு காரணமான டோபமைன்(Dopamine) ஒரு இலக்கை நோக்கி முயற்சிக்கும்போது தூண்டப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட இலக்கை அடையும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஊக்குவிக்கிறது.

அந்த இலக்கை அடையும்போது கிடைக்கும் பாராட்டுகள், பரிசுகள் மேலும் மகிழ்ச்சியை அதிகரிக்கும். நினைவுத்திறன், செயலாற்றல் ஆகியவற்றுக்கும் டோபமைன் உற்பத்தி தேவைப்படுகிறது. மனிதனின் செயல் ஒருங்கிணைப்பிற்கு ‘டோபமைன்’ தேவை. அளவுக்கதிகமான டோபோமைன் உற்பத்திக் குறைவு ஒருவருக்கு நடுக்கு வாத நோயை ஏற்படுத்துகிறது.

எப்படி டோபமைன் உற்பத்தியை அதிகரிக்கலாம்?

அவ்வப்போது எளிதில் அடையக்கூடிய சின்னச்சின்ன இலக்குகளை வகுத்துக்கொள்வது, டோபமைன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். உடற்பயிற்சிகள் செய்வதால் செரோடோனினுடன் டோபமைன் அளவுகளும் உயரும். இலக்கை அடைவதோடு டோபமைன் தொடர்புடையதாக இருப்பதால் மூளை விளையாட்டுக்களை தொலைவு அல்லது கால இலக்குகள் நிர்ணயித்து விளையாடும்போது டோபமைன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யலாம்.

ஆக்சிடோசின்

‘காதல் ஹார்மோன்’ என்ற பெருமையைப் பெற்ற ஆக்சிடோசின்(Oxytocin) ஹார்மோன் உடல் தொடர்பின் மூலமாக வெளிப்படுகிறது. ஹைபோதலாமஸால் மூலம் உற்பத்தியாகும் ஆக்சிடோசின் மற்றும் பிட்யூட்டரி சுரப்பி மூலம் சுரக்கிறது. உறவில் நீடித்த அன்பையும், நம்பிக்கையையும் வளர்த்துக் கொள்ள ஆக்சிடோசின் முக்கியம்.

இந்த ஹார்மோன் பிரசவத்திலும் ஒரு முக்கிய பங்கு வகிப்பதோடு, ஆண் இனப்பெருக்கத்துடனும் தொடர்புடையது. பிரசவ வலியில் இருக்கும் பெண்களுக்கு கருப்பை தசைகளை சுருங்கச்செய்து பிரசவ வலியைத் தூண்டச் செய்கிறது. குழந்தை பிறந்தபின் தாய்ப்பாலை சுரக்கச் செய்வதும் இந்த ஆக்சிடோசினின் வேலை. இதனால்தான் பிறந்த குழந்தையை தாயின் மார்போடு அணைத்துக் கொள்ள அறிவுறுத்துகிறார்கள்
மருத்துவர்கள்.

ஆக்சிடோசினை எப்படி அதிகரிக்கச் செய்யலாம்?

தசைகளுக்கு மசாஜ் செய்வது உடல் தளர்விற்கு உதவுவதோடு நம் உடலமைப்பில் ஒரு நீடித்த நல் உணர்வை கொடுக்கக்கூடிய ஆக்சிடோசினை அதிகரிக்கவும் செய்கிறது. இருக்கவே இருக்கு ‘கட்டிப்பிடி வைத்தியம்’. குடும்பத்தில் பிள்ளைகள், மனைவி, கணவன் மட்டுமில்லை நண்பர்களையும் அப்பப்போ கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தலாம். அவர்களையும் சந்தோஷப்படுத்தி, நாமும் சந்தோஷமடையலாமே. ‘ஆக்சிடோசின்’ உறவுப்பாலத்தை வலிமையாக்கும் பொக்கிஷம் என்பதை மறந்துவிடாதீர்கள்!

நரம்புகள் வலுப்பெற உதவும் உணவுகள்

ட்டச்சத்துக் குறைவான உணவுகளைச் சாப்பிடுவது அல்லது அதிகமாகச் சாப்பிடுவது இரண்டுமே நரம்புகளுக்கு நல்லதல்ல. ஊட்ட உணவு சரிவர உடலுக்குக் கிடைக்கவில்லை என்றால், `பெர்னீஷியஸ் அனீமியா’ (Pernicious Anemia) எனும் ரத்தத்தையும் நரம்பையும் பாதிக்கும் நோய் நிச்சயம் வரும். வைட்டமின் பி 12 குறைவால் ஏற்படும் இந்த நோய் புற நரம்புகளில் வலுவைக் குறைய வைத்து, ஆரம்பத்தில் பாதம், கை, கால் எரிச்சல் எனத் தொடங்கி, தள்ளாட்டம், வலுக்குறைவு எனக் கொடுத்துவிடும்.

உணவு, பசிக்காக மட்டுமல்ல; ருசிக்காக மட்டுமல்ல. விருந்தாகவோ, மருந்தாகவோகூட அல்ல. அதையும் தாண்டி அர்த்தமுள்ளது. உடலுக்குத் திறனை உருவாக்க உதவும். கூடியவரை நோயில்லா நல்வாழ்வு பெற்றிட உதவும் அமுது இது. ஆறிய கஞ்சியோ, லோப்ஸ்டர் மீன் துண்டோ எதுவாக இருந்தாலும், உணவும் நம் மனித வாழ்வின் அடித்தளம். எல்லாம் வணிகமயமாகிவிட்ட சூழலில் இன்றைக்கு உணவு ஒரு மிகப் பெரிய ஆயுதமாகிவிட்டது. கொஞ்சம் கவனமாக நம் பாரம்பர்ய உணவு விஷயங்களை, நவீன அறிவியலின் துணைகொண்டு மீட்டெடுக்கத் தவறும் பட்சத்தில், தலைவாழை இலையில், பச்சை கலர் மாத்திரைகள் பதினைந்தைப் போட்டு, வைட்டமின் சிரப் ஊற்றிப் பிசைந்து, வேண்டுமானால் தொட்டுக்கொள்ள லேகியம், தாகத்துக்கு கஷாயம் என உணவு வாழ்க்கை, தலைகீழாக மாறிவிடும். எனவே, காய், கனி, கீரைகளைக் காதலிப்போம். தினை, ராகி, குதிரைவாலி முதலிய சிறுதானியங்கள் மீது அலாதிப் பிரியம் வைப்போம். நம் தாத்தா-பாட்டி செய்து தந்த உணவு வகைகளை, புதுப்பொலிவுடன் அலங்காரமாகச் செய்து ஆரவாரமாகப் பரிமாறிடுவோம். 

நரம்பு வலுப்பெறவும் நரம்பியல் நோய்கள் தீரவும் என்னென்ன சாப்பிடலாம்... பார்க்கலாமா? 

* கோழியின் ஈரல் உள்ளிட்ட அசைவ உணவுகளில்தான் வைட்டமின் பி 12 அதிகம் இருக்கிறது. பால், முட்டையில் குறைவாக இருக்கிறது. பிற காய்கறிகளில் பி 12 இல்லை. இதனால்தான், தீவிர மரக்கறியாளருக்கு (வெஜிட்டேரியன்) பெர்னீஷியஸ் அனீமியா நோய் வர வாய்ப்பு அதிகம். அதற்கான அறிகுறிகள், கை, கால் எரிச்சல். இந்தப் பிரச்னையைத் தவிர்க்க, இவர்கள் பால் பொருட்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம்.

* நரம்பு மண்டலம் வலுப்பெற்றிருக்க பழங்கள் மிக அவசியம். தற்போது உலகமெங்கும் அதிகமாகிவரும் முதுமையில் வரக்கூடிய ‘அல்சீமர் நோய்’ எனும் மறதி, வலுக்குறைவு, தடுமாற்றம் நமக்கு வரமல் இருக்க வேண்டுமா? 40 வயதில் இருந்து தினமும் ஒரு முறை ஏதேனும் பழங்களை அவசியம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

* பொன்னாங்கண்ணிக்கீரை, மணத்தக்காளிக்கீரையை பகல் உணவில் சேர்த்துக்கொள்வது நரம்புகளுக்கு நல்லது. 

* இரவில் ஒரு சிட்டிகை சாதிக்காய் தூள் சாப்பிடுவது நரம்பு வலுப்பெற உதவும். 

* தேநீரில் லவங்கப்பட்டை போட்டுக் குடிப்பது, நரம்புகளுக்கு நலம் தரும். 

* நரம்பு பாதுகாப்புக்கு, எல்லா உணவிலும் மஞ்சள் தூள், வெந்தயத்தை மறக்காமல் சிறிதளவாவது சேர்க்க வேண்டும்.

* வயோதிகத்தில் நரம்பு வலுப்பெற அமுக்கிராங்கிழங்குப் பொடியை 1/2 தேக்கரண்டி அளவு பாலில் கலந்து இரவில் 45 நாட்கள் சாப்பிடவும்.

* ஓரிதழ் தாமரைப் பொடி, பூனைக்காலிப் பொடி நரம்பை வலுப்படுத்தும் மூலிகை உணவுகள். மருத்துவர் ஆலோசனையுடன் சாப்பிடுவது பார்கின்சன் நோய் உள்ளிட்ட பல நரம்பு நோய்களை ஆரம்பநிலையிலேயே களைந்துவிடும்

ஹோரை

ஹோரை அறிந்து நடப்பவன் எதிலும் வெற்றிபெறுவான் என்பது சித்தர் வாக்கு. சுப நிகழ்ச்சிகளான திருமணம், கிருகப்பிரவேசம், வீடு குடித்தனம் செல்ல, சீமந்தம், பொருள் வாங்க விற்க, பெண் பார்ப்பது, பதவியேற்பது, குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்துதல், வேலைக்கு விண்ணப்பிப்பது, வங்கி கணக்கு துவங்குதல், இல்லற சம்பந்தமான காரியங்களை ஜாதகரின் லக்னத்திற்கு, ராசிக்கு அடுத்து சுபஹோரை என்கிற ஒருமணி நேரம் மிக முக்கியமானதாகும்.*

குரு, சுக்கிரன், சந்திரன், புதன் நல்ல ஹோரைகள் மற்ற சூரியன், செவ்வாய், சனி நல்ல ஹோரைகள் அல்ல. ஒவ்வொரு ஓரையில் என்ன என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.

சூரிய ஓரை*

சுபகாரியங்கள் செய்ய மற்றும் புதிதாக எந்த அலுவல்களையோ செயல்களை இந்த சூரியன் ஓரை ஏற்றதல்ல. ஆனால் இந்த ஓரையில் உயில் சாசனம் எழுத, பெரியோர்கள் ஆசிபெற, மற்றவரின் சிபாரிசு பெற, மற்றவர்களிடம் ஆலோசனை பெற, அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள், வழக்கு தொடர்பான விஷங்களை மேற்கொள்ளச் சிறப்பானதாக இருக்கும். இந்த ஓரை நடக்கும் நேரத்தில் பொருள் ஏதேனும் காணாமல் போனால் கிடைப்பது அரிது. அப்படிக் கிடைக்குமானால் மிகவும் தாமதித்து அப்பொருளின் நினைவு மறைந்தபின் கிழக்கு திசையில் கிடைக்கலாம்.

சந்திர ஓரை*

சந்திர ஓரை காலத்தில் எல்லா சுபகாரியங்களையும் செய்யலாம். குறிப்பாகப் பெண்கள் தொடர்புகொண்ட சுப விசேஷங்கள் மிகவும் ஏற்ற காலம் இது. இந்த ஓரைகளில் புதிய தொழில் தொடங்க, வர்த்தகம் தொடங்க, வியாபார விஷயமாகவோ பிரயாணம் மேற்கொள்ளலாம், ஆன்மீக யாத்திரை செய்யலாம், பெண் பார்ப்பது மற்றும் திருமணம் விழாக்கள், சீமந்தம், மொட்டையடிப்பது, காது குத்துதல், வெளிநாடு செல்ல, பதவி ஏற்பது, பேச்சுவார்த்தை செய்யலாம், வேலை விண்ணப்பிப்பது, சேமிப்பு துவங்குதல் ஆகியவற்றை மேற்கொள்ளலாம். அதிலும் வளர்பிறை காலத்தில் சந்திரன் ஓரையும் மிகவும் நல்ல நேரமாகக் கருதப்படுகிறது. இந்த ஓரையில் எந்தப்பொருள் காணாமல் போனாலும் கிடைக்காது.

செவ்வாய் ஓரை*

இந்த செவ்வாய் அசுப கிரகம், எல்லாக் கிழமையில் வரும் இந்த ஓரை எந்தவித நல்ல காரியங்களும் செய்ய உகந்த நேரமல்ல. செவ்வாய் ஓரையானது யுத்தம், பொருள் அழிவு, நோய், விபத்து, ஆகியவற்றை உண்டாக்கும். இருப்பினும் இந்த ஓரையில் நிலம் வாங்குவது விற்பது பற்றிய பேச்சு வார்த்தை, ஒப்பந்தம் போடுவது, ரத்த தானம், உறுப்பு தானம், மருத்துவ உதவிகள் செய்வது, ஆயுதப் பிரயோகத்தைப் பயன்படுத்தி யுத்தம் செய்யலாம். பல போர்கள் முற்காலத்தில் இந்த ஓரையில் செய்வார்கள். செவ்வாய் பெரிய அழிவுக்கு உரிய கிரகம் என்பதாலும், அதிகாரத்தைப் பிரயோகம் செய்து சமாதான கட்டுக்குள் கொண்டுவர முடியாது. இந்த ஓரையில் தெய்வீகத் தொடர்பான விஷயங்களையோ, முருகரை அம்பாளை வழிபடலாம். இந்த ஓரை நேரத்தில் பொருள்கள்
காணாமல் போனால் சீக்கிரம் முயன்றால் தெற்கு திசையில் கிடைத்துவிடும்.

புதன் ஓரை*

புதன் என்றவுடன் அனைவரும் புத்தி என்று தெரியும். இந்த ஓரையில் புத்தியைப் பலப்படுத்தும் கல்வி சேர்க்கை, தகவல் தொடர்பு, நிலம் வாங்க, பெண் பார்க்க, திருமணம், ஜோதிடம் பார்க்க மற்றும் பேச, கதை கட்டுரைகள் மற்றும் எழுத்துத் தொடர்பான வேலை தொடங்குவதற்கும், நற்காரியங்கள் ஆரம்பிக்க, வாங்கி சேமிப்பு, வழக்குப் பதிவு ஆலோசிப்பதற்கும் ஏற்ற நேரம் ஆகும். சுப காரியங்கள் செய்யலாம். நேர்மையான விஷயங்களைப் பற்றிப் பேசவும் முடிவெடுக்கவும் இந்த நேர உகந்தது. பயணங்கள் மேற்கொள்ளவும் செய்யலாம். இந்த ஓரையில் காணாமல்போகும் விரைவில் அதிக சிரமமின்றி கிடைத்து விடும். திருமணம் விஷயமாகப் பேச்சு வார்த்தைகள் நடத்தக் கூடாது.

குரு ஓரை*

குரு ஓரையில் தொடங்கும் எல்லாவித நற்காரியம் முக்கிய வெற்றியில் முடியும், நல்ல லாபம் கிடைக்கும் மற்றும் சந்தோஷம் ஏற்படுத்தும். இந்த ஓரையில் எல்லாவகை சுப காரியங்களுக்கு மிகவும் ஏற்ற நேரம், திருமணம், குரு உபதேசம் ஆசீர்வாதம் பெற, புது வேலைக்குச் சேர, வியாபாரம், மருத்துவம் பார்க்க, விவசாயம் செய்ய நல்லது. ஆடை மற்றும் பொருள்கள் வாங்கவும், தங்கம் வாங்க, சட்டத்திற்கும் ஏற்ற காரியங்கள், வீடு மனை வாங்கச் சரியான முழு சுப ஓரை ஆகும். இந்த நேரத்தில் காணாமல்போன பொருள்களைப் பற்றி வெளியில் சொன்னாலே போதும் உடனே கிடைத்துவிடும்.

சுக்கிர ஓரை*

சுக்கிர என்பவன் போகக் காரகன் அதனால் ஆடம்பரமான வாழ்க்கை வாழத் தேவையான அடுக்குமாடி அல்லது கட்டிய வீடு, புது வாகனம், ஆடை, வெள்ளி ஆபரணம் மற்றும் வீட்டிற்கு வேண்டிய அலங்கார பொருள்கள், நட்பு, காதல் புரிவதற்கு, கேளிக்கை நிகழ்ச்சிகள், பெண்கள் தொடர்பான சகல காரியங்களிலும், விவசாயத்திற்கும், பயணங்கள் செய்ய, பெண் பார்க்க, சாந்தி முகூர்த்தத்திற்கு மிக முக்கிய ஓரையாகும். இந்த ஓரையில் காணாமல் போன பொருள் மேற்கு திசையில் சில நாள்களில் கிடைக்கும்.

சனி ஓரை*

இது ஒரு அசுப கிரக ஓரை அதனால் இந்த ஓரையில் தான் சிறை வாசம், சண்டை, எதிரிகளால் துன்பம் போன்றவை ஏற்படும். எந்தவித சுபகாரியங்களும், அறுவைச்சிகிச்சை செய்தல் மற்றும் புதிதாக எந்த வேலையும் செய்யக்கூடாது. இருப்பினும் பொருள் சேர்க்கை பற்றிப் பேசவோ, கடனை அடைப்பதற்கு முயற்சியோ, பழைய வீடு, வாகனம் மற்றும் இயந்திரம் வாங்க, பூர்வ ஜென்ம பாவம் தீர்க்க, உழைப்பு பற்றிய பேச்சு வார்த்தையோ, சட்டப்பூர்வமான விஷயங்களைப்பற்றி முடிவெடுக்கவோ, மரம் செடி நடுதல், நடைப்பயணம் துவங்க நல்லது. இந்த ஓரையில் காணாமல்போன பொருள் கிடைக்காது கிடைத்தாலும் பல வருடம் கழித்து எதிர்பாராத விதமாகக் கிடைக்கலாம். சனிக்கிழமை அன்று சந்திர ஓரை தவற்றை ஏற்படுத்தும்…..

ஜோதிடர்களுக்கு ஹோரையை வைத்துத்தான், நல்ல நாளில் முக்கிய நல்ல நேரத்தைக் கணக்கிடவே முடியும். இன்னும் ஓரை பற்றிச் சொல்லவேண்டுமானால் வெள்ளிக்கிழமை, குரு ஹோரையைத் தேர்ந்தெடுக்கக்கூடாது. சிலநேரங்களில் ஹோரை தோஷத்தினால் பாதிப்பு ஏற்படும். நம்மை அறியாமலே ஓரைகளின் கதிர்வீச்சை உணர முடியும் அதற்கேற்ப முற்காலத்தில் “கட்டளைக் கலித்துறையில்” எந்தெந்த ஓரையில் பிறந்தால் எவ்வாறெல்லாம் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. ஹோரை என்பது காலத்தின் ரகசிய கணக்கு, அதனைத் தெரிந்துவைத்துச் செயல்பட்டால் நல்லது. ஒருவருக்கு இந்த சுப ஹோரைகள் மிக மோசமான தசை, புத்தி காலத்திலும் நமக்கு உதவ முற்படும், இதனால் நற்பலனையும் மற்றும் சந்தோஷத்தையும், அள்ளித்தரும் என்பது முன்னோர்கள் வாக்கு

எந்த திதியில் எந்த வேலை செய்யலாம் ?

நாம் ஆரம்பிக்கும் வேலைகள் எதுவாக இருந்தாலும் அதை நல்ல நேரம் பார்த்து ஆரம்பிப்பது வழக்கம்.  நாம் ஆரம்பிக்கும் வேலைகள் எதுவாக இருந்தாலும் அதை நல்ல நேரம் பார்த்து ஆரம்பிப்பது வழக்கம். அதே நேரம் எந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற்றி கிடைக்கும் என்பதையும் ,அந்த திதிக்குரிய அதிதேவதை யார் என்பதையும் தெரிந்துக் கொண்டு செய்யும் போது கூடுதல் பலன்களைப் பெறலாம். 

பிரதமை் திதிக்கு அதிபதி அக்னி பகவான்.உலோகம், மரம் இவைகளில் சிற்ப வேலைகள், பாய் முடைதல்,போன்றதும் ஆயுதம் கத்தி போன்றது செய்யவும் நல்லது.

துதியை திதிக்கு அதிபதி துவஷ்டா தேவதை.விவாஹம், யாத்திரை, தேவதா பிரதிஷ்டை, ஆபரணம் தயாரித்தல், வீடு கட்டுதல் நல்லது.

திருதியை திதிக்கு அதிபதி பார்வதி.வீடு கட்டுதல், கிரஹ பிரவேசம்,பெண் பார்த்தல் போன்றதுக்கு உகந்த திதி ஆகும்.

சதுர்த்தி திதியின் அதிபதி விநாயகர். வதம் செய்தல், மந்திரகட்டு, தெய்வகார்யம் மட்டும் செய்ய ஏற்ற திதி.  சதுர்த்தி திதியில் நற்காரியம் செய்ய ஒரு மாதத்தில் அது பின்னமாகும், ஆனால் சங்கடகர சதுர்த்தியும் ,ஞாயிறு அன்று வரும் சதுர்த்தி திதியும் இதற்கு விதி விலக்கு.

 பஞ்சமி திதியின் அதிபதி சர்ப்பம். இத்திதியில் செய்யும் கார்யம் நிலைத்து நிற்கும் என்பது ஐதீகம் என்பதால்,அனைத்து விஷயத்துக்கும் எடுத்து கொள்ளலாம்.
 

சஷ்டி திதியின் அதிபதி முருகன். வேலைக்கு சேர, பசுமாடு வாங்க, வீடு வாங்க, வாகனம் வாங்க, மருந்து தயாரிக்க நல்லது. 
சப்தமி திதியின் அதிபதி சூரியன்.வீடுகட்ட, உபநயனம், விவாஹம், தேவதா பிரதிஸ்டை, இடம் மாற்றம், முன்னோர் கர்மாக்களை செய்ய உகந்தது.

அஷ்டமி திதியின் அதிபதி சிவபெருமான்.யுத்தம், தான்யம், வாஸ்து, சிற்பம், ரத்தினம், ஆபரணம், கிரையம் செய்ய மற்றும் கோவில் பூஜைக்கு உகந்த திதி இது.

நவமி திதியின் அதிபதி பாராசக்தி.பகைவரை சிறைபிடிக்க, பகைவரை அழிக்க உகந்தது.

தசமி திதியின் அதிபதி ஆதிசேஷன்.தர்மகார்யம் செய்யவும், நாகதேவனுக்கு ராகுகேது பரிகாரம் செய்யவும், சரீரம் ஆரோக்கிய முயற்சி, மங்களகரமான காரியம் செய்ய உகந்தது இந்த திதி.

ஏகாதசி திதியின் அதிபதி தர்ம தேவதை.பொதுவாக உபவாசம் இருக்க உகந்தது இந்த திதியில்,விவாஹம், விவசாயம், ஆபரணம், வாஸ்து சாந்தி, சிற்பம் ஆகியவைகளை செய்யலாம்.

துவாதசி திதியின் அதிபதி விஷ்ணு.சுபசெலவுகள், தர்ம காரியம், அனைத்தும் செய்யலாம். திருவோணம் இணையும் துவாதசி மட்டும் விதி விலக்கு.

திரயோதசி திதியின் அதிபதி மன்மதன்.அனைத்தும் செளபாக்கியமான மங்களகரமான காரியம், நாட்டியம், ஆபரணம், வாகன பயிற்சி செய்யலாம். நீண்ட கால திருமண தடை இருக்கும் வரன் இந்த திதியில் பெண் பார்க்க திருமணம் சீக்கிரம் கைகூடும், திருமண தடையை நீக்கும் பரிகாரம் செய்ய உகந்த திதி ஆகும்.

சதுர்தசி திதியின் அதிபதி கலிபுருஷன்.பல் சீரமைத்தல்,தைலம் தேய்க்க, யாத்திரை செல்ல உகந்தது.
 

வளர்பிறையில் நாராயணனை வணங்கி வர வேண்டும்.

தேய்பிறையில் சிவபெருமானை வணங்கி வரவேண்டும்.

வளர்பிறை எனும் சுக்கில பட்ஷத்தில் மட்டும் சுபகார்யம் செய்யலாம் தேய்பிறையில் சுபகாரியம் தவிர்க்க வேண்டும்.

அமாவாசைக்கு முதல் நாளில், நம் முன்னோர் மற்றும் இறந்தவர்களுக்குண்டான காரியம் மட்டும் செய்ய வேண்டும்.

பௌர்ணமியில் செய்ய கடவுள் வழிபாடு மட்டும் செய்யலாம். யாகம் , மங்களகரமான காரியம், விருத்தி தரும். மருந்துண்ணல் , திருமண நிச்சயம், தேவதா பிரதிஷ்டை போன்றதை செய்யலாம்.

காளான்'.:

உடல் எடையைக் குறைக்க உதவும் 'காளான்'.:

சைவ உணவுகளில் பெரும்பாலானோருக்கு மிகவும் பிடித்தமான உணவு காளான். காளானில் அதிகமான புரோட்டீன் இருப்பதால் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதும்கூட. காளான் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் என்பது குறித்து பார்க்கலாம்...

► காளானில் குறைவான கலோரிகள் இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் காளான் உதவும். 

► அதேநேரத்தில் காளானில் விஷக் காளான்கள் பல உள்ளன. எனவே, காளான் வாங்கும்போது, உண்ணக்கூடிய காளான் தானா என பார்த்து வாங்க வேண்டும்.

► எந்தவகையான காளானாக இருந்தாலும் வெதுவெதுப்பான தண்ணீரில் நன்றாக சுத்தம் செய்தபின்னர் சமைப்பது நல்லது. 

► காளானை நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும்போது மிக எளிதாக ஜீரணம் ஆகிவிடும். 

► வாரத்திற்கு ஒருமுறை காளான் சாப்பிட்டு வந்தால் ஓரிரு மாதங்களில் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்று பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

► குறிப்பாக இளம்வயதினர் காளானை அதிகளவு உட்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

► புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கவும், மாரடைப்பு வராமல் தடுக்கவும் உதவுகிறது.

► உயர் அல்லது குறைந்த ரத்த அழுத்தம் ஏற்படுவதை குறைகிறது. ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.

► உடல் கொழுப்பைக் குறைகிறது. பெண்களுக்கு கருப்பை நோய்கள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. 


► இவ்வளவு பயன்கள் இருந்தாலும் சிலர் காளான் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. தாய்ப்பாலை வற்ற வைக்கும் என்பதால் தாய்மார்கள் காளான் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் வயதானவர்களும் காளான் வகைகளில் ஒரு சிலவற்றை மட்டும் எடுத்துக்கொள்வது நல்லது.

Friday 30 October 2020

பல வகை அரிசிகள்

பச்சரிசி மற்றும் புழுங்கல் அரிசி தவிர பல வகை அரிசிகள் உள்ளன. அவற்றின் பலன்களை தெரிந்து கொள்ளலாம்.:

*கருப்பு கவுனி அரிசி - புற்றுநோயை வராமல் தடுக்கும். இன்சுலினை சுரக்க உதவும்.    

*காலாநமக் அரிசி - மூளை, நரம்பு மண்டலத்தை சீராக்கி ரத்தத்தை சுத்திகரிக்கும்.  
 
*பிசினி அரிசி - மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும்.  
 
*கார் அரிசி - தோல் நோய் சரியாகும்.
    
*தங்க சம்பா அரிசி - பல், இதயம் வலுவாகும்.    

*மூங்கில் அரிசி - மூட்டுவலி, முழங்கால் வலியை போக்கும்.

*கிச்சிலி சம்பா அரிசி - இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்தை தந்து உடலை வலுவாக்கும்.  
 
*குழியடிச்சான் அரிசி - தாய்ப்பால் ஊறும்.
   
*காட்டுயானம் அரிசி - நீரிழிவு, மலச்சிக்கல், புற்றுநோயை வராமல் தடுக்கும்.  
 
*குதிரைவாலி அரிசி - தசைகள், எலும்புகள் வலுவாகும். ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பை போக்கும்.  
 
*வரகரிசி - உடல் பருமனை குறைத்து மலச்சிக்கலை தடுக்கும். சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.
   
*சீரகச் சம்பா அரிசி - எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.    

*சாமை - உடல் வறட்சி மற்றும் ஆண்மை குறைவை போக்கும். வயிறு சம்பந்தமான நோய்களைத் தடுக்கும். ரத்த சோகையை நீக்கும்.    

*கைக்குத்தல் அரிசி - புற்றுநோய், சிறுநீர் கல் வராமல் பாதுகாக்கும். உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.    

*மாப்பிள்ளை சம்பா அரிசி - நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை அதிரிக்கும்.   
 
*சூரக்குறுவை அரிசி - உடல் பருமனை போக்கும்.    

*குள்ளகார் அரிசி - ரத்தத்தை சுத்தமாக்கி தோல் நோய்களை குணமாக்குகிறது.    

*இலுப்பை பூசம்பார் அரிசி - பக்கவாதத்திற்கு நல்லது. கால் வலியை சரியாக்குகிறது.
   
*கருத்தக்கார் அரிசி - மூலம், மலச்சிக்கலை போக்குகிறது.

வேப்ப எண்ணெய் (Neem Oil) மருத்துவ சிறப்புகள்

மருந்தாகும் வேப்ப எண்ணெய் (Neem Oil) மருத்துவ சிறப்புகள்

◆தினமும் வேப்ப எண்ணெய் அல்லது வேப்ப விதை தூளை முகத்தில் தடவி வர தோல் சுருக்கங்கள் மறைந்து இளமையான தோற்றத்தை பெறலாம்.

◆வேப்ப எண்ணெய் தடவுவதால் தோல் மென்மையாக இருக்கும்.
தோலில் ஏற்படும் அரிப்பு மற்றும் சிரங்குகளை வேப்ப எண்ணெய் போக்கும்.

◆குளிர்காலங்களில் ஏற்படும் தோல் வெடிப்பை வேப்ப எண்ணெய் சரிசெய்யும்.

◆காயம் ஏற்பட்ட இடத்தில் வேப்பஎண்ணெய் தடவினால் சீக்கரம் காயம் சரியாகும்.

◆வேப்ப எண்ணெயில் அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளததால் கிருமி தோற்று ஏற்படுவதை தடுக்கிறது.

◆வேப்ப எண்ணெய் தினமும் பயன்படுத்தினால் முகத்தில் கரும்புள்ளிகள் மறையும்.

◆படர் தாமரை, கருவளையம் ஆகியவற்றை வேப்ப எண்ணெய் மருந்தாக பயன்படுகிறது.

◆தேங்காய் எண்ணெயில் கொஞ்சம் வேப்பெண்ணெய் கலந்து கூந்தலுக்கு தடவி வர பொடுகு தொல்லை நீங்கும்.

◆தினமும் வேப்ப எண்ணெய்யை தலையில் தடவினால் அடர்த்தியான கூந்தலை பெறலாம்.

◆வேப்ப எண்ணெய் அஜீரண கோளாறு மற்றும் வயிற்று புண்ணுக்கு உகந்தது
வேப்ப எண்ணெய் வாய் துர்நாற்றத்தை போக்குகிறது.

◆வேப்ப எண்ணெய் புற்று நோய் உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.

◆வேப்ப எண்ணெய்யை உடலில் தடவி படுத்தால் கொசு தொல்லையில் இருந்து விடுபடலாம். வேப்ப எண்ணையில் விளக்கை ஏற்றினால் கொசுகள் வீட்டை விட்டு ஓடிவிடும்.

◆சில சொட்டு வேப்ப எண்ணெயை நீர் சேமித்து வைக்கும் தொட்டியில் தெளித்தால் கொசு புழுக்கள் உருவாவதை தடுக்கலாம்.

இயற்கை முறைக்கு மாறுவோம்! ஆரோக்கியமாக வாழ்வோம்!

• ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலக்கிக் குடித்தால் வயிற்று வலி மாயமாய் மறைந்துவிடும்.
• உடல் பருமனைக் குறைக்க இரவு ஒரு ஸ்பூன் ஓமத்தைத் தண்ணீரில் போட்டு, காலையில் வடிகட்டி ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து குடித்து வந்தால் போதும்.
• அவரை இலையை அரைத்து தினமும் காலையில் முகத்தில் தடவி வந்தால், முகத்தில் இருக்கும் தழும்புகள், முகப்பருக்கள் நீங்கிவிடும்.
• பால் கலக்காத தேநீரில் தேன் விட்டுக் குடித்தால் தொண்டைக்கட்டு சரியாகும்.
• சுக்கைத் தூளாக்கி எலுமிச்சைச் சாறில் கலந்து தின்றால் பித்தம் குறையும்.
• மூட்டு வலியா? தேங்காய் எண்ணெய் - எலுமிச்சைச் சாறை கொதிக்கவிட்டு ஆறியபின் மூட்டுக்களில் தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும்.
• துளசி இலை போட்ட நீரை தினசரி குடித்து வந்தால் ஞாபகமறதி நீங்கி மூளை பலம் பெறும்.
• மிளகுத் தூளுடன் நெய், வெல்லம் கலந்து உருண்டையாக்கி சாப்பிட்டுவர தொண்டைப்புண் குணமாகும்.
• வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, பனங்கற்கண்டு சேர்த்து வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
• பொடித்த படிகாரத்தை தூள் செய்து அதைக் கொண்டு வாரம் மூன்று முறை பல் தேய்த்து வந்தால் பற்களின் கறை, இரத்தம் வடிதல், வாய் துர்நாற்றம் நீங்குவதோடு பல் ஈறுக்கும் வலு கொடுக்கும்.
• வயிற்றுப் போக்கு அதிகமாக இருந்தால் ஜவ்வரிசியை சாதம் போல வேகவைத்து மோரில் கரைத்து உப்பு போட்டு சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும். வயிற்றில் வலியும் இருக்காது.
• உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள், தினசரி ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டு வந்தால் உடம்பு பலம் பெறும்.
• வாயில் புண் இருந்தால் வயிற்றிலும் இருக்கலாம். தினமும் காலையிலும் மாலையிலும் தேங்காய் பாலில் தேனை விட்டுச் சாப்பிட்டால் புண் ஆறிவிடும்.
• அஜீரணத்திற்கு இரண்டு ஸ்பூன் கருவேப்பிலைச்சாறை ஒரு டம்ளர் மோரில் கலந்து குடித்தால் அஜீரணம் நீங்கும்.
• அதிக தலைவலி இருக்கும்போது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மூடிக் கொதிக்க வைத்து இறக்கி இரண்டு ஸ்பூன் காபி பவுடர் போட்டு ஆவி பிடித்தால் தலைவலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.
எளிய இயற்கை வைத்தியம்
1. வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
2. வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.
3. புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.
4. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.
5. சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.
6. அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.
7. உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.
8. வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.
9. கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.
10. எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.
நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
11. எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.
12. கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.
13. எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.
14. கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.
15. தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.
16. வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும்.
17. பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.
18. வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
19. தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.
20. வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.
21. வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.
22. ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும்.
23. சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.
24. அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
25. விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.
26. கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.
27. சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.
28. நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.
29. வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.
30. பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.
31. புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.
32. பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
33. கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.
34. சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.
35. முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.
47. கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.
37. நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.
38. பல் கூச்சம் இருந்தால் புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.
39. படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.
40. நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.
41. நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.
42. இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.
43. மலச்சிக்கலுக்கு இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
44. கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.
45. வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.
46. ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.
47. கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.
48. சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
49. கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும்.
50. தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.
51. தம்ளர் மோருடன் சிறிது பெருங்காயத்தூள்,உப்புச் சேர்த்து குடித்தால் சரியாகும்.
52. வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.
53. சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.
54. ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.
55. அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.
இயற்கை முறைக்கு மாறுவோம்! ஆரோக்கியமாக வாழ்வோம்!

அருகம்புல்

அருகம்புல் தோல் நோய்களை குணப்படுத்த கூடியது, 

கண் எரிச்சலை சரிசெய்யும் தன்மை கொண்டது,

 வயிற்றுப் போக்கை நிறுத்தக் கூடியது,

 புண்களை ஆற்றவல்லது.

 வயல்வெளி, புல்வெளியில் வளரக்கூடிய அருகம்புல்லில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன.

இதன் மீது நடப்பதால் உடலுக்கு புத்துணர்வு கிடைக்கிறது.

 நரம்பு நாளங்களை தூண்டக் கூடியது. 

ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டது.

 உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. 

அருகம்புல்லை பயன்படுத்தி தோல் நோய்களுக்கான மருந்து தயாரிக்கலாம்.

மருத்துவப் பயன்கள்...

அருகம் புல் உடல் தாது வெப்பு அகற்றித் தாகம் தணிப்பானாகவும், சிறுநீர் பெருக்கியாகவும் பயன்படுகிறது...

அருகம்புல்லில் நீர்விடாமல் சாறு எடுக்கவும். 

இதை 2 சொட்டு விடும்போது மூக்கில் இருந்து வரும் ரத்தம் நிற்கும்.

அருகம்புல் சாறு 100 மில்லி அளவுக்கு குடித்துவர மாதவிலக்கின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு கட்டுக்குள் வரும்.

பல்வேறு நன்மைகளை கொண்ட அருகம்புல், ரத்தத்தை சுத்தப்படுத்தி தோல்நோய்கள் வராமல் தடுக்கிறது. 

கோடை வெயிலுக்கு அருகம்புல் சாறு குடிக்கும்போது உடல் குளிர்ச்சி அடையும்.

அருகம்புல் சாறு 50 மில்லி எடுக்கவும். இதனுடன் புளிப்பில்லாத கெட்டி தயிர் சேர்க்கவும். இதை காலை, மாலை குடித்துவர வயிற்றுபோக்கு, வெள்ளைப்போக்கு சரியாகும்.

அருகம்புல்லை பயன்படுத்தி உடல் சூட்டை தணிக்க கூடிய, குடலில் ஏற்படும் புண்களை ஆற்றக்கூடிய மருந்து தயாரிக்கலாம்.

 தேவையான பொருட்கள்: அருகம்புல் சாறு, மிளகுப்பொடி, நெய். 

ஒரு பாத்திரத்தில் அரை ஸ்பூன் நெய் விட்டு சூடுபடுத்தவும். இதனுடன் அருகம்புல் சாறு சேர்க்கவும். பின்னர், நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதனுடன் சிறிது மிளகுப்பொடி சேர்க்கவும்.  லேசாக கொதித்தவுடன் இறக்கி விடவும். தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்க்கவும். இது உடல் உஷ்ணத்தை குறைக்கும்.

வெட்டை நோய்க்கு மருந்தாகிறது. வயிற்று புண்களை ஆற்றும். சிறுநீர் பெருக்கியாக விளங்குகிறது. கைகால் வீக்கத்தை போக்குகிறது. மருந்துகளை அதிகளவில் எடுத்துக்கொள்வதாலும், வெளியில் அடிக்கடி சாப்பிடுவதாலும் ஏற்படும் புண்களை அருகம்புல் சாறு ஆற்றும். எளிதில் நமக்கு கிடைக்க கூடிய அரும்கபுல் நோயற்ற வாழ்வுக்கு சிறந்தது.

நோய் நீக்கும் உடல் தேற்றியாகவும், காமம் பெருக்கியாகவும் செயற்படும்.

கணுநீக்கிய அருகம்புல் 30 கிராம், மாதுளை இலை 30 கிராம் அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி 50 மி.லி. அளவாக 3 மணி நேரத்திற்கு ஒருமுறை குடித்து வந்தால் காது, மூக்கு, ஆசனவாய் இரத்த ஒழுக்கு நிற்கும்.

வெப்பம் தணியும், மாத விலக்குச் சிக்கல் நீங்கும்.
கணுநீக்கிய அருகம்புல் 30 கிராம் வெண்ணெய் போல் அரைத்துச் சம அளவு வெண்ணெய் கலந்து 20 முதல் 40 நாள்கள் வரை சாப்பிட உடல் தளர்ச்சி நீங்கி உறுதி படும்.

அருகம்புல்லை சிறு துண்டுகளாக வெட்டி பசையாக அரைத்து எடுக்கவும். இந்த பசையுடன் மஞ்சள் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை பூசுவதால் அரிப்பு, சொரி சிரங்கு, படர்தாமரை, வியர்குரு சரியாகிறது. தோல் நோய்களுக்கு மருந்தாகும்.

 அருகம்புல், அக்கி கொப்புளங்கள், சொரியாசிஸ்சை குணப்படுத்துகிறது.

அருகம்புல்லை துண்டுகளாக நறுக்கி நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் வடிகட்டி ஊறல் நீரை மட்டும் எடுக்கவும். இதனுடன் காய்ச்சிய பால் சேர்த்து காலை, மாலை குடித்துவர கண் எரிச்சல், அரிப்பு போன்றவை சரியாகும்.

அறிவு மிகுந்து முக வசீகரம் உண்டாகும்.அருகம்புல் 30 கிராம், கீழாநெல்லிச் 15 கிராம் இவற்றை மையாய் அரைத்துத் தயிரில் கலக்கிக் காலையில் குடிக்க வெள்ளை, மேக அனல், உடல் வறட்சி, சிறுநீர் தாரையில் உள்ள புண்ணால் நீர்கடுப்பு, சிறுநீருடன் இரத்தம் போதல் ஆகியவை தீரும்.

அருகம்புல் 30 கிராம் அரைத்துப் பாலில் கலந்து பருகி வர இரத்த மூலம் குணமடையும். 

வேண்டிய அளவு புல் எடுத்து சிறிதளவு மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் தடவி சில மணி நேரம் கழித்துக் குளித்து வரச சொறி, சிரங்கு, அடங்காத தோல் நோய், வேர்குரு, தேமல், சேற்றுப்புண், அரிப்பு, வேனல் கட்டி தீரும்.

அருகம் வேர் 30 கிராம், சிறுகீரை வேர் 15 கிராம், மிளகு 5 கிராம், சீரகம் 5 கிராம், ஒரு லிட்டர் நீரில் சேர்த்துக் கால் லிட்டராகக் காய்ச்சி, பால், கற்கண்டு கலந்து பருக மருந்து வீறு தணியும்.

 ( மருந்து வீறு கடும் மருந்து களை உட்கொள்வதால் பல் சீழ் பிடித்து, வாய் வயிறு வெந்து காணப்படுதல்) அருகம்புல் 100 கிராம், மிளகு 75 கிராம், சீரகம் 50 கிராம், இடித்து 1 லிட்டர் நல்லெண்ணையில் போட்டு 15 நாள்கள் கடும் வெயிலில் வைத்து 45, 90, 150 நாள்கள் தலையில் தடவி வரக் கண்நோய்கள் தீரும்.

ஒரு கிலோ அருகம்புல் வேரை ஒன்றிரண்டாய் இடித்து 8 லிட்டர் நீரில் இட்டு ஒரு லிட்டராக வற்றக் காய்ச்சி வடித்து ஒரு லிட்டர் நல்லெண்ணைய் கலந்து அமுக்கிராக் கிழங்கு, பூமிச் சர்க்கரைக் கிழங்கு வகைக்கு 20 கிராம் பால் விட்டு நெகிழ அரைத்துக் கலக்கிச் சிறுதீயில் பதமுறக் காச்சி வடித்து எடுத்த எண்ணெயை (அறுகுத்தைலம்) கிழமைக்கு ஒரு முறை தலையில் இட்டு அரைமணி கழித்துக் குளித்து வர வாதம், பித்தம், நெஞ்சுவலி, வயிற்றெரிச்சல், உடல் வறட்சி, மூலச்சூடு, தலைவெப்பு, நீர்க்கடுப்பு ஆகியவைத் தீரும்.

 அருகம் வேர், நன்னாரி வேர், ஆவரம் வேர்ப்பட்டை, குமரி வேர் வகைக்கு 50 கிராம் 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி வடித்து 100 மி.லி. யாக நாளைக்கு 5 வேளை கொடுக்க மது மேகத்தால் உண்டான மிகு தாகம் தணியும்.

உமிழ்நீர்

சக்கரை நோயை வைத்து
இந்தியாவில் 700 மருந்து நிறுவனங்கள் ஆண்டுக்கு பல இலட்சம் கோடி ரூபாய்களை அள்ளி செல்கின்றனர்.

இனிமேலாவது இதற்கு செலவு செய்யும் பணத்தை உணவுக்காக செலவு செய்தால் உறுதியாக வேளாண்மை செழிக்கும் .

இதற்கான அரு மருந்து நம்மிடமே உள்ளது.

சக்கரை நோய்க்குக் காரணம் இன்சுலின் ஒழுங்காகச் சுரக்காதது தான்;

ஆனால், இயற்கையாகச் சுரக்க ஒரே மருந்து எது?

உமிழ்நீர் தான்.

சக்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன தொடர்பு உண்டு என்பதைப் பார்ப்ப்போம்.

உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான்,
கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டும் இயற்கை மருந்து.

 
உமிழ்நீர் எனும் இயற்கை மருந்தை நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவுடன், அதிக அளவு எடுத்துக் கொண்டனர். 
 
வாழ்வதற்காக  உண்டனர்.

அதனால்தான் பொறுமையுடனும்
 அமைதியுடனும்
 பொறுப்புடனும் உணவருந்தினர்.

அதனால் அவர்கள் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்து வயிற்றுக்குள் சென்றது.

 கூடுதல் உமிழ்நீரைச் சுரக்கச் செய்வதற்காக *ஊறுகாயைச்* சிறிதளவு எடுத்துக் கொண்டனர்.

அதேபோல் உணவு உண்பதற்கு
30 நிமிடம் முன்னதாகவும்

 உணவு உண்டபின் 30 நிமிடம் கழித்தும்

 நாம் *கடலைமிட்டாய் , வெல்லம் , பனங்கற்கண்டு,  பனங்கருப்பட்டி* இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டால் கட்டாயம் *உமிழ்நீர் நன்கு சுரக்கும்.*

நம் முன்னோர்களுக்கு உமிழ்நீரின் அருமை தெரிந்திருந்ததால் ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர்.

தூண்டல், துலங்கல் என்ற விதியின் படி *உமிழ்நீர் என்ற தூண்டுதலால் இன்சுலின் என்ற துலங்கல்* சுரக்கப்படுகிறது. 
 
நமது வாழ்க்கையின் வேகம் அதிகரித்து விட்டது.

 உணவு சாப்பிடும் வேகமும் அதிகரித்துவிட்டது.
 வாழ்க்கைக்கான சாப்பாடு என்ற மனநிலை மாறி,

 சாப்பிடுவதும் ஒரு 'வேலை'தான் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம்.
 
உணவை ரசித்து, ருசித்து; உமிழ்நீர் கலந்து சாப்பிடாமல்,

 அவசர அவசரமாக வாயில் போட்டு விழுங்குகிறோம். 

நாம் விழுங்கும் உணவில் உமிழ்நீர் இல்லாததால், அந்த உணவுக்கு இன்சுலின் சுரக்காது.

உணவிலுள்ள குளுக்கோசு, கிளைக்கோசனாக மாறாமல், அது சக்கரையாகவே இரத்தத்தில் தங்கிவிடும்.

நாளடைவில் அது *சக்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயாக* மாறிவிடுகிறது.
 
சக்கரை நோய்க்கு மிகச்சிறந்த இயற்கை மருந்து நம் வாயில் ஊறும் உமிழ்நீர்தான்.

 எனவே,
நாம் சாப்பிடும் ஒவ்வோர் உணவிலும் உமிழ்நீர் கலந்து சாப்பிடப் பழகிக் கொள்ள வேண்டும்.
 
நாம் குடிநீர் அல்லது தேநீர் அருந்தினால் கூட உமிழ்நீர் கலந்துதான் வயிற்றிற்குள் அணுப்ப வேண்டும்.

 நீரிழிவு நோய் எனும் செயற்கையான நோயை *உமிழ்நீர் எனும் இயற்கையான மருந்து* கொண்டு அழித்து ஒழிப்போம்.
.

மீனம்

##மீனம்

கால புருசனுக்கு 12ஆவது வீடு மீனம் * ஆகும்,, இதன் அதிபர் கிரகத்தில் மிக பெரிய கிரகம் குரு ஆகும்,,அதில் 27ஆவது நட்சத்திரமாக ரேவதி நட்சத்திரம் அமர்ந்துள்ளது,,, இதன் அதிபதி புதன் ஆவார்,, இதன் யோனி நில வாழ் உயிரி மிக பெரிய விலங்கு யானை (பெண் யோனி)ஆகும் குரு பகவானின் வாகனமும் யானைதான்,.புதன் மீன ராசியில் நீசம் ஆகிறார்,, வாத்தியாரிடம் (குரு வீட்டில்) மாணவன் (புதன்)அடங்கி இருக்க வேண்டும் அல்லவா,, அதன் பொருட்டு நீசம் ஆகிறார்,,,

சனி , குரு, புதன்,மூவரும் கர்மா காரர்களே,,,

நிகழ்கால பாவங்களுகுறிய  தண்டனையை குருபகவான் சனியிடம்  நம்மை போட்டு கொடு க்க தயங்குவது இல்லை, சமீபத்தில் தங்கம் திருடிய ஸ்வப்னா சுரேஸ் மிதுன ராசி மிதுன ராசிக்கு குரு பார்வை கிடைக்கும் சமயத்தில் மாட்டிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது, குரு தவறு செய்து இருந்தால் போட்டு கொடுக்கும் குணம் கொண்டவர்,, புதன் பகவான் நமது புணர் ஜென்ம கணக்கு வழக்கை சணியிடம் ஒப்படைக்கிறார்,, புதன் கணக்கு பிள்ளை ,,வங்கியில் கூட,casier வேலை பார்ப்பவர் புதன் ஆதிக்கம் பெற்றவர்கள்தான் மற்றும்  தங்கள் ஜாதகத்தை ஆராய்ந்து கொடுப்பது கூட புதன் ஆதிக்கம் பெற்ற ஜோதிடர் தான்,, புதன் பலம் இல்லை என்றால்,பணத்தை என்னும் வேலை,,மற்றும் கணித வளம், எழுத்து வளம், எல்லாமே குறைந்து போகும், கல்விக்கு அறிவுக்கு காரகம், புதன் தானே,, அவர் எழுதுற கர்மா கணக்கு படி தான் சனி நம்மை துண்டாடுவார்,,

இந்த 12ஆம் வீடு மோட்ச வீடு ஆகும் இங்கு அமர்ந்து இருக்கும் நட்சத்திரங்கள் 

பூரட்டாதி (குரு)
உத்திரட்டாதி (சனி)
ரேவதி (புதன்)

இதே போல மீன திரிகோண வீடு கடகம், விருச்சிகம்,, இதுவும் மோட்ச வீடு தான்,, இங்கும் குரு, சனி,புதன் , நட்சத்திரங்கள் தான் இருக்கும்,
கடகம் (புனர்பூசம், பூசம், ஆயில்யம்,)
விருச்சிகம் (விசாகம், அனஸ்ஸம், கேட்டை)

சனி என்பவர் ஜட்ஜ் 
புதன் பூர்வீக கர்மா கணக்கு பிள்ளை
குரு பிறந்த முதல் கடந்தகால, நிகழ்ந்தகால, எதிர்கால,கணக்கு வாத்தியார்,,, இந்த இருவரும் இந்த கணக்குகளை ஜட்ஜ் க்கு சமர்ப்பணம் செய்கிறார்கள்,,

நீதி மன்றத்தை எடுத்து கொள்ளுங்கள் கைதியின் case report எடுத்து ஒருவர் வைப்பார் ,, அவர் தான் புதன்,,

Judge பக்கத்துல ஒரு டவாலி இருப்பார் அவர் தான் குரு,,இந்த டவாளி கூட 3 முறை கைதியை அழைப்பர் 3 குரு எண் ஆகும்

மீன அதிபதி குரு மிக பெரிய வாத்தியார், மிகப்பெரிய யானை வாகனம் யானையில் வலம் வருவார்,, தேவ குருவும் இவரே,

மீன குரு சண்டன் என்றும், தனுசு குரு பிரசண்டன் என்றும் அழைக்க படுகிறார்கள்,,இவர்கள் எல்லா கோவிலும் இருக்கிறார்கள்,,, கோவில் வாயிலில் துவார பாலகர்கள் என்று இருவர் இருப்பார்கள்,, அவர்கள் தான் இந்த மீனம் சண்டன்,, தனுசு பிரசண்டன் , ,, தனுசு பிரசண்ட இறைவன் ஒருவனே என்று சொல்லும் விதமாக ஒரு விரல் நீட்டி இருப்பார் ,,

 மீன சண்டன் இரு கையும் விரித்து வைத்து இருப்பார் (மோட்சம் ) சாகும் போது ஒன்றும் கொண்டு போக போவதில்லை என்று உணர்த்தும் விதமாக இருப்பார்,,

ஜோதிடத்தில் இன்னும் புரியும் விதமாக சொன்னா அரண்மனை ய கற்பனை பண்ணி கொள்ளுங்கள்,,,(இது யாவரும் அறிந்ததே)

 சிம்ம ராஜா கடகம்  ராணி

மிதுனம் கன்னி (புதன் அதிபதி)கணக்காளர் அமைச்சர் மந்திரி மார்கள்

துலாம் ரிஷபம் (சுக்ரன் அதிபதி)கஜானா அமைச்சர்

மேஷம் விருச்சிகம்(செவ்வாய் அதிபதி) படை தளபதிகள் ,, சிப்பாய்,

மீனம் , தனுசு (குரு அதிபதி)வாயில் காப்பாளர்கள் ,,,(துவார பாலகர்கள்)

கும்பம் மகரம் இவர்கள் வம்பு வழக்கு சம்பந்தமாக வரும் மக்கள்,, சனி மக்களை குறிக்கும்,

ஆனால் அரசியலில் சூரியன் முதலமைச்சர், குரு மந்திரி தான் மாற்றம் இல்லை 
 
அரசன் ஆக இருந்தாலும் அவன் கர்மா படி கர்மா காரகன் ஜட்ஜ் இடம் வந்து தான் ஆகனும்,,

மேலே சனியை ஜட்ஜ் என்று சொல்லி விட்டு கீழே சிம்மம் ராஜா என்று சொல்லி இருக்கிறேன் குழப்பம் வேண்டாம்,, அரசன் தப்பு செஞ்சாலும் ஜட்ஜ் கிட்ட வந்து நின்னுதன் ஆகனும்,, அரசியல் வாதிகள் கோர்ட் வாசலில் நின்று தான் ஆக வேண்டும்,,

மீனம் நம் பாதத்தை குறிக்கும் கால்கள் தான் உடலில் பிரதான உறுப்பு, கால்கள் இல்லை எனில் என்னதான் செய்ய முடியும்,,,

கால்களில் தான் உடலில் இருக்கும் அத்தனை நரம்புகளும் முடிகிறது,, அத்தனை எடையும் தாங்கும் உறுப்பு கால் பாதங்கள் ஆகும்,
, அடி பாதங்களில் அனைத்து உள்ளுறுப்புகளை யும் இணைக்கும் நரம்புகள் முடிவடையும் இடம் பாதங்கள் ஆகும்,, பாதம் மீன ராசியை குறிக்கும்,, அது மட்டும் அல்ல இங்கு பாதங்களில் தான் புத்திர பாக்கியம் அருளும் accupreccure புள்ளிகள் உள்ளன,, படத்தில் காணுங்கள் கர்ப்ப பை நரம்புக்கு,மற்றும் ஃபெலோப்பியன் tube நரம்பு க்கு மற்றும் ஆண்களின் புரோஸ்டேட் சுரப்பி யய் இணைக்கும் நரம்பு புள்ளிகள் எல்லாமே இங்குதான் இருக்கிறது,, ஃபெலோப்பியன் tube area கவனியுங்கள் கொலுசு அணிந்த மாதிரி இருக்கிறது,, இந்த புள்ளிகளை அழுத்தி கொண்டும் தொட்டு கொண்டும் இருக்க வெள்ளியை அணிகலனாக,,பயன் படுத்துகிறர்கள்,,பெண்கள் ,,

மீனம் பெண் ராசி ,, வெள்ளி சுக்ரன் ஐ குறிக்கும், மீனத்தில் சுக்ரன் உச்சம்,,

மெதுவாக தினமும் தன் குருவான பாதங்களை அமுக்கி விட்டாள் போதும் வருடம் வருடம் புத்திரர்கள் பிறந்து கொண்டுதான் இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை,,ஒரு சைக்கிள் எடுத்தாலும் சரி அதில் காற்று இருக்கா இல்லையா என்று செக் பண்ணுவோம் ஆனால் உழைக்க கால்கள் அதிக முக்கியம் ஆனால் அதை கவனிப்பது இல்லை, பாதங்களை கவனித்தால் நம் உடலுக்கு வியாதி வரவே வராது என்று அடித்து சொல்ல முடியும் எல்லா உள்ளுறுப்புகளின் நரம்புகளும் இங்குதான் முடிகிறது,,

ரேவதி நட்ச்திரத்திரா மரம் இலுப்பை மரம் 

இலுப்பை மர பூ மார்பில் வைத்து கட்ட தாய்ப்பால் சுரக்கும் இதன் காயை உடைத்தல் பால் வரும் அதை வென் புள்ளியில் தடவலாம், சரியாகும், இதன் பழம் மல சிக்களை தீர்க்கும்

ரேவதி நட்சத்திர யோனி பெண் யானை ஆகும்,,

யானைக்கு உணவு வழங்குவது அவ்வளவு கோடி புண்ணியங்கள் இருக்கிறது,, குழந்தை இல்லாதவர்கள் யானைக்கு பழங்கள் கொடுத்தல், உணவு கொடுத்தல், அல்வா கிண்டி கொடுத்தல், இவை யாவும் குழந்தை தடையை நிவர்த்தி செய்யும்,,ஊருக்குள் பெண் யானையை பாகன் ஓட்டி வருவான் அந்த சமயத்தில் பாகனுகு காசு கொடுபதை விட யானைக்கு உணவு கொடுத்து விடுங்கள்,,,,,

பெண் யானை விசுவாசமாக இருக்கும்,, பாகணுகு விசுவாசமாக இருக்கும், அதிக யாபக சக்தி, தாய்மை பாசம்,, அதிக அறிவுடன் இருக்கும்,, இதே போல தான் ரேவதி நட்சத்திர நபர்களும் இருப்பார்கள், புதன் நட்சத்திரம் அறிவுடன் செயல்படுவார்கள், கதை எழுதுவார்கள், கவிதை எழுதுவார்கள், சிந்தனை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்,,இவர்களுக்கு,, அமைதியாக காயை நகர்த்தி வெற்றி காண்பார்கள்,,

பரணி ஆண் யானை(மேஷம் ஆண் ராசி) போருக்கு பயன்படுத்தினார்கள் 
ரேவதி பெண் யானை(மீனம் பெண் ராசி) ஊருக்கு கோவிலுக்கு பயன்படுத்தி வருகிறார்கள்,, யானை தந்தம் அதிக மருத்துவ குணம் கொண்டது அதன் வால் முடி மிக பெரிய விலை போகும், பொன் பொருள் சேர்க்கைக்கு குரு இருக்கும் வீட்டை ஆராய்வது வழக்கம்,,

ராசி குறியீடு vector ஆகும்,மற்றும் இரு மீன்கள்,,

Vector. ஒன்னு direction மற்றொன்று magnetude
ஒரு மீன் direction இன்னொரு மீன் magnetude

இந்த கணித அடிப்படையில் தான் பறவயும் பறக்கிறது அது பறக்கும் போது பார்த்தால் கூட v shape தெரியும்,,

நீரில் ஊர்ந்து செல்லும் கப்பலும் ,, காற்றில் பறந்து செல்லும் விமானமும் vector கணக்கீடு வைத்து தான் கண்டும்பிடிதார்கள்,, விமானத்தை கண்டு பிடித்தவர்கள் கூட ரைட் சகோதரர்கள் (இரு மீன்கள் வந்து விட்டதா)(பறவையை கண்டான் விமானம் படைத்தான்)

கப்பலை மேல் இல் இருந்து பார்த்தால் v shape தெரியும், நீர் மூழ்கிக் கப்பல் மற்றும் விமானத்தை பார்க்கும் போது பெரிய திமிங்கலம் போல தெரியும்,,,, இதனால் என்னவோ
மீனம் ராசி காரர்கலுக்கு பயணம் மிகவும் பிடிக்கும்,, ஒரு இடத்தில் இருக்க மாட்டார்கள், இவர்களின் பயணம் தூரம் எல்லாமே வியப்பாக தான் இருக்கும்,, பெரும்பாலும் வெளிநாடு பயணம் மேற்கொள்வார்கள்,, வெளிநாடு பயணத்தி க்கும் 12 ஆம் வீட்டை ஆராய்வோம் கால புருசனின் 12 ஆம் வீடு மீனம் ,,

நமது நாட்டில் இருக்கும் நீர்மூழ்கி கப்பலி பெயர்

ஐ. என். எஸ்.சக்ரா - 3 

நமது உடலில் 3 ஆவது சக்ரம் மணிபூரகம் சக்ரம் ஆகும் இதை குரு ஆட்சி செய்கிறார்,,, குரு நமது அடிவயிறு குறிக்கும்,, நம் நாட்டு தேசிய கொடி நடுவில் இருக்கும் சக்கரம் உம் விசாக நட்சத்திர குறியீடு விசாகம் குரு நட்சத்திரம் ,,

எண் கணிதம் இட்டு மீன ராசியை இன்னும் சொல்லி கொண்டே செல்லலாம்,, பதிவு நீளும்,,


விருச்சிகம்

விருச்சிகம்:

விருச்ச +யுகம்: அதாவது பாதாள உலகம் 

விருச்சமரம் என்பது 

கற்பக மரம்= கற்பு +அகம் =பணை மரம்

கால புருசனுக்கு 8ஆம் வீடு ஆண் (சிவ) லிங்கத்தை குறிக்கும்,, 
இங்குதான் கேது பகவான் உச்சம் பெறுவார், ஞானம் தேடுதல்,,

எல்லாருக்கும் ஞானம் உடனே கிடைத்து விடுமா?? இல்லை,

 துலாம் ராசி கால புருசனுக்கு 7 இங்கு சுக்ரன் ஆட்சி சுக்ரன் காரகம் கொண்ட திருமணத்தை கடக்க வேண்டும் தாம்பத்ய வாழ்க்கையை கடக்க வேண்டும் தாம்பத்யம் அறவே வெறுத்தால் தான் ஞானம் பிறக்கும்,,, அதாவது ஆன்மீக தேடல் மூலம் ஞானம்,,

விருச்சிகம் வீடு என்பது நமது உடலில் மர்ம அவயங்கள் குறிக்கும் பாவகம் ஆகும் .ஒரு பெண்ணிடமோ ஆணிடமோ பழகுகிறோம் அவர்களை எளிதில் அடைய முடியுமா முடியாது,, 16 வயது இல் இருந்து கல்யாணம் வரை காத்திருக்கிரோம் ,, அந்த கற்பை தானம் செய்ய அவ்வளவு நாள் காத்திருக்க வேண்டி உள்ளது,
 விருச்சிகம் ராசி புதயல் என்றும் சொல்ல படுகிறது ,, எதிர்பால் இன பெண்ணின் மர்ம உறுப்பு ஆணுக்கு புதயல் தானே, புதயல் எளிதாக கிடைத்து விடுமா,,,,, கேது உச்சம் ஆகும் வீட்டின் ஞானம் உடனே கிடைக்குமா,,, கிடைக்காது, மிக பொறுமையாக தேட வேண்டும்.

விருச்சிக ராசியில் எந்த கிரகம் இருந்தாலும் அதன் காரகம் தாமதம் தான் ஆகும்,, சுக்ரன் நின்றால் கல்யாணம் தாமதம்

, சூரியன் நின்ற பிறரால் மதிக்க தக்க மனிதனாக வாழ தாமதம் ஆகும்,

 சனி இருந்தால் தொழிலில் கொடி கட்டி பறக்க தாமதம் ஆகும்,,, சிலருக்கு கல்யாணமும் தாமதம்,

 புதன் இருந்தால் பாடத்தில் தேர்ச்சி அடைய தாமதம் ஆகும்,

 குரு இருந்தால் ஆசிரியர் போல அவரின் பேச்சை பிறர் மதிக்க தாமதம் ஆகும்,,, 

செவ்வாய் இருந்தால் விதி விலக்கு ,, செவ்வாய் காரகம் எளிதில் கிடைக்கும், மிக எளிதில் கிடைக்கும்,,

கால புருசனுக்கு 8 ஆம் பாவம் அஷ்டம ஸ்தானம் ,, 

,,,8 என்றால் அஷ்டமம் காலபுருசனுகு 8 ஆம் வீடு விருசிகம் வீடு,,8 என்றால் அஷ்டமி திதி 9 என்றால் நவமி திதி கால புருசனுக்கு 9 ஆம் வீடு தனுசு,,

அஷ்டமி தினத்தில் செவ்வாய் காரகம் என்ன என்ன இருக்கிறதோ அந்த சம்பந்தமான காரகம் 100,% வெற்றி அடையும்,,,, அஷ்டமி தினத்தில் எதுவும் தொடங்க கூடாது தான் செவ்வாய் காரகம் விதி விலக்கு உண்டு,

முக்கியமாக கராத்தே, களரி, குத்து சண்டை, வாள் சண்டை, குதிரை பயிற்சி, அஷ்டாங்க யோகா பயிற்சி, உடல் பயிற்சி, ஜிம், இது போன்ற வகுப்பில் சேருதல்,போலீஸ் அகாடமி பயிற்சியில் சேருதல், மிலிட்டரி அகாடமி பயிற்சியில் சேருதல், எல்லாமே வெற்றி பெறும்,, இவை எல்லாம் போராட்டம், அதாவது உடல் ஆரோக்கியமாக  இருக்க நோய் களை விரட்ட போராட்டம், நாடும் வீடும் நலமாக இருக்க இராணுவ,, காவல் போராட்டம், இவை எல்லாமே விருச்சிக வீட்டின் வெற்றிகள்,,,,,

விருச்சிக  ராசியிலும் சரி விருச்சிக நவாம்சத்தில் உம் சரி 2,3 கிரகம் இருந்தால் அவர் போராளியாக இருப்பார் போராடியாவது நல்ல வாழக்கை நல்ல பெயரை பெற்று விடுவார்,, வாழ்க்கையில் போராட்டம் இருக்கும்,,

 விருச்சிகத்தில் ஞான காரகன் கேது உச்சம் அடைகிறார்,,, கேதுவின் நட்சத்திரங்கள் அஸ்வினி, மகம், மூலம்,,, இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிக பெரிய வரலாற்றை உருவாக்கி இருப்பார்கள்,,

Example சேகுவாரா அஸ்வினி நடசத்திரம்,

ஹிட்லர் மூலம் நட்சத்திரம்,,

ஜெய லலிதா அவர்கள மகம், நட்சத்திரம்,,,

இவர்கள்  ஜாதகத்தை பார்த்தாலும் விருச்சிக ராசி கட்டத்தில் ராசியிலும் அல்லது நவாம்சத்தி லோ,, கண்டிப்பா கிரகங்கள் நிற்கும்,,...,,,, மிக பெரிய வெற்றியும் நல்ல பெயரையும்  எடுதார்கள் அல்லவா,,, கேது நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விருச்சிக ராசி கட்டத்தில் எந்த கிரகம் இருந்தாலும் அது புதயல் மாதிரி தான் உங்கள் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து போராடினால் வெற்றி உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும்,,,

விருட்ச மரம் அதாவது கற்பக மரம்,=பனை மரம்,

விருச்சி கம் என்றால் பாதாள உலகம், பனை மர கள்ளு குடித்தால் போதை ஏறும் பொதுவாக மது அருந்தினால் இந்த உலகத்தையே மறந்து இருப்பார்,, வேறு உலகில் இருப்பார்கள்,சுய நிலையில் இருக்கமாட்டார்கள், தெரிந்தது தானே, 

இன்னும் சில அகோரிகள்,, சிவ அடிகள்,, ஞானம் தேட கஞ்சா அடிப்பார்கள் எல்லாமே இந்த விருச்சிகம் எனும் பாதாள உலகத்தில் கேதுவின் ஞானம் என்ன என்று தேடி கொண்டுதான் இருக்கிரார்கள்,,

விருச்சிகம் ஆண் லிங்கத்தை குறிக்கும் 

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் இந்த பனை கள்ளு,பதநீர், பனை வெல்லம், எல்லாமே நமது ஆண் குறியை வலிமை ஆக்கும், மற்றும் தாம்பத்ய உறவை நீட்டிகும், உறுப்பு வளர்ச்சியை குறைக்க விடாது, ஒரு பானை மரம் முழுமையாக வளர்ச்சி அடைய 40 வருடம் ஆகும் 40 வயதில் இருந்தே ஆணின் ஆணுருருப்பு சோர்ந்து போக ஆரம்பிக்கும் 40 வயதில் இருந்து இந்த பனை மர பயன்பாட்டை பின்பற்றினால் எப்போதும் குமரன் தான்,, மற்றும் பானை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு விந்துவின் தரத்தை மிக வேகமாக தரமாக்கும்,

 பனம்பழம்   தின்றால் பித்தம் அதிகமாகி காமம் பெருகும்,, மற்றும் பனை மரத்தில் கட்டிய வீடுகள் எத்தனை வருசம் வேணும்னாலும் தாங்கும்,, பனை மரத்தில் அவ்வளவு ரகசியம் உள்ளது,, இதை நாம் வளர்க கூடாது, என்று அரசே வெட்டுகிறது,, பனை மரம் தண்ணீரை குறைவாக உறிஞ்சும், ஆனால் நிலத்திற்கு வலிமை சேர்த்து விடும், நிலத்தடி நீரை குறைக்க விடாது, அது போல பனை நுங்கு, பனை பலம், சாப்பிட விந்து எண்ணிக்கை ஒரு போதும் குறையாது,, 

கற்பக விருச மரம் (பனை)குழந்தை இல்லதவருகு மிக பெரிய மருந்து,,

ஆன்மீகத்தில் கற்பக விருட்சாம்பிகை,, காலப்போக்கில் கற்பகராட்சாம்பிகை என்று மருவி போய் விட்டது,,.

கற்பகவிருட்சாம்பிகை அம்மனை வண்கினால் பிள்ளை பேரு கிடைக்கும் என்றும் சொல்ல படுகிறது,, அதற்கு ஸ்தித்திரம் கூட உண்டு,, பின்பற்றுங்கள்.

பனை மரம் ஏறி தொழில் நடத்தும் 80 வயது முதியவர் உடல் இன்னும் 6 பேக் காட்சி அளிக்கும்,, இதை மறுக முடியாது பனை பதநீர் குடிபவன் சாகும் வரை நல்ல ஆண்மை திறனுடன் இருப்பார் என்பதில் ஐய்யம் இல்லை,,

விருட்சிகம் வீரு நடை போடும் ,, புதயலை பொறுமையாக தேடுவோம் 


சந்திர நாடி.....



சந்திர நாடி என்பது கோச்சார சந்திரனை மையமாக வைத்துப் பார்ப்பதே சந்திர நாடி அதாவது பிறந்த காலகிரகங்களின் மீது கோட்சார சந்திரன் பயணிக்கும் போது என்ன பலன் நடக்கும் என்பதை துல்லியமாக சொல்லி விடலாம் இதற்கு கணிதம் எல்லாம் தேவையில்லை முதலில் ஜாதகருடைய பெயர்,பாலினம் ஆணா, பெண்ணா,ஜாதகருடைய வயது பிறந்த தேதி நேரம் கண்டிப்பாக இருக்கணும்.அடுத்து கிரக காரகத்துவம்
ராசி காரகத்துவம்,கிரகச்சேர்க்கை,
கிரகங்களின்பலம்,பலவீனம்,பாவக காரகத்துவம்,ஒரு தனித்த கிரகப் பார்வை, ஒரு கிரகத்தின் பார்வையை பெற்ற கிரகத்தின்பார்வை,மற்றும் கோச்சாரம்,தசா புத்தி இது மட்டும் இருந்தால் போதும்.முதலில் பிறந்த காலக்கிரகங்களை இராசி கட்டத்தில் அடைவு செய்துகொள்ளவேண்டும்,
பின்பு கோச்சார கிரகங்களை வெளிக் கட்டத்தில் வரிசையாக எழுத வேண்டும்,
அதன்பின்பு என்ன திசாபுத்தி அந்தரம் நடப்பில் உள்ளது என்பதையும் குறித்துக் கொள்ள வேண்டும்.முதலில் கோச்சார சந்திரன் பிறந்த காலங்களில் எதன் மேல் பயணிக்கிறது என்று பார்க்கவேண்டும்.ஒருவேளை அந்த வீட்டில் கிரகம் இல்லை என்றால்
கோச்சார சந்திரனின் பார்வையில் ஏதாவது கிரகம் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.முதலில் சேர்ந்த கிரகம் வேலை செய்யும் அடுத்து பார்த்த கிரகம் உதாரணமாக:இன்று சந்திரன்
மீனத்தில் உத்திரட்டாதியில் ஓடிக்கொண்டிருக்கிறது.இன்று ஒருவர் ஜாதகம் பார்க்க வருகிறார் என்று வைத்துக்கொள்வோம் அவருடைய ஜாதகத்தில் பிறந்த கால சனி மீனத்தில் உள்ளது கூடவே பிறந்த காலச் சந்திரனும் இருக்கிறது வேறு எந்த கிரகத்தின் சேர்க்கையோ பார்வையோ கிடை யாது அதனால் சனியின் காரகத்துவத்தையும் சந்திரனின்
காரகத்துவத்தையுமே பலனுக்கு எடுத்துக்கொள்ளவேண்டும்
லக்னம் மிதுனம் வருபவர் நிச்சயமாக தொழிலையும் வருமானத்தையும் பற்றிதான் கேள்வி இருக்கும்
சந்திரன்+சனிபுனர்பூ சுப காரியத்தை கடைசி நேரத்தில் நிறுத்தி வைக்கும் சுய
தொழிலில் ஆர்வம் அதிகமாக இருக்கும்
லக்னத்திற்கு 4,6,8,12ல் சந்திரன்இருந்தால் சொந்தத் தொழில் வெற்றியைத் தராது மிகப்பெரிய இழப்பை தரும் தொழில் நன்மை நல்ல ஸ்தானத்தில் அமைந்தால் அது சிறப்பான புனர்பூ இந்த ஜாதகருக்கு
சனி திசை சனி புத்தி அந்தரம் வரும் போது மிகச் சிறப்பாக இருக்கும்.
கோச்சார சந்திரனை வைத்து முக்காலத்தையும் அறியலாம்.அதாவது
கோச்சார சந்திரன் பயணிக்கக்கூடிய ராசி நிகழ்கால ராசி,எந்த ராசியைக் கடந்து வந்ததோ அது கடந்த கால ராசி,
எந்த ராசியை தொடப் போகிறதோஅது எதிர்காலம் இதை வைத்து நடந்து முடிந்த பலன்களையும், நடக்கும் பலன்களையும்,நடக்கப்போகும் பலன்களையும்,எளிமையாகச் சொல்லலாம்

விருந்தும் மருந்தும் மூன்று நாளுக்கு" என்ற பழமொழியின் பொருள்🦚

🦚 "விருந்தும் மருந்தும் மூன்று நாளுக்கு" என்ற பழமொழியின் பொருள்🦚

#விருந்துக்கு மூன்று நாட்கள்  *பெண்கிரகங்களின் கிழமைகளான* 
♥திங்கள்
♥புதன்
♥வெள்ளி

#மருந்துக்கு மூன்று நாட்கள்
 *ஆண் கிரகங்களின் கிழமைகளான*
♦ஞாயிறு 
♦செவ்வாய் 
♦வியாழன்.

Thursday 29 October 2020

அருந்தமிழ் மருத்துவம் 500

இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டு
பிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான் , 
இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும், 

இப்பாடல் 
அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது

சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்
    தமிழ் மருத்துவ அறிவுரைப்பா
 
மூளைக்கு வல்லாரை
  முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
   எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்
  பசிக்குசீ  ரகமிஞ்சி
கல்லீரலுக்கு  கரிசாலை
  காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை
  காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
  தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான்
  நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு  முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய் 
  மூட்டுக்கு முடக்கறுத்தான் 
அகத்திற்கு  மருதம்பட்டை
  அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு  எள்ளெண்ணை
  உணர்ச்சிக்கு  நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
   கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

கருப்பைக்கு அசோகுபட்டை
  களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
  குரலுக்கு  தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை
  வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு  தாமரைப்பூ
  சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை

 கக்குவானுக்கு வசம்புத்தூள்
  காய்ச்சலுக்கு  நிலவேம்பு                           
விக்கலுக்கு மயிலிறகு
   வாய்ப்புண்ணிற்கு
மணத்தக்காளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
  நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ  
   வெட்டைக்கு சிறுசெருப்படையே 

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
  சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
   நஞ்செதிர்க்க அவரிஎட்டி 

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
    குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
  பெருவயிறுக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு  எலுமிச்சைஏலம்
  கழிச்சலுக்கு தயிர்சுண்டை 
அக்கிக்கு வெண்பூசனை
  ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி
   விதைநோயா கழற்சிவிதை 
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
  புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
  கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
  கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு
   உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
   உடல் மறக்க இலங்கநெய்யே

அருந்தமிழர் வாழ்வியலில்
  அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
  அறிந்தவரை உரைத்தேனே!!

2021ம் #ஆண்டில் #தமிழகத்தில் #23அரசு #விடுமுறைதினங்கள்

#2021ம் #ஆண்டில் #தமிழகத்தில் #23அரசு #விடுமுறைதினங்கள்

ஜனவரி 1 வெள்ளிக்கிழமை, ஆங்கில புத்தாண்டு

ஜனவரி 14 வியாழக்கிழமை, பொங்கல்

ஜனவரி 15 வெள்ளிக்கிழமை, திருவள்ளுவர் தினம்

ஜனவரி 16 சனிக்கிழமை, உழவர் திருநாள்

ஜனவரி 26 செவ்வாய்க்கிழமை, குடியரசு தினம்

ஏப்ரல் 1 வியாழக்கிழமை, வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு

ஏப்ரல்2 வெள்ளிக்கிழமை, புனித வெள்ளி

ஏப்ரல்13 செவ்வாய்க்கிழமை, தெலுங்கு வருட பிறப்பு

ஏப்ரல்14 புதன்கிழமை, தமிழ் புத்தாண்டு மற்றும் டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினம்

ஏப்ரல்25 ஞாயிற்றுக்கிழமை, மகாவீரர் ஜெயந்தி

மே1 சனிக்கிழமை மே தினம்

மே14 வெள்ளிக்கிழமை, ரம்ஜான்

ஜூலை21  புதன்கிழமை பக்ரீத்

ஆகஸ்ட்15 ஞாயிற்றுக்கிழமை, சுதந்திர தினம்

ஆகஸ்ட்20 வெள்ளிக்கிழமை, மொகரம்

ஆகஸ்ட்30 திங்கட்கிழமை, கிருஷ்ண ஜெயந்தி

செப்டம்பர்10 வெள்ளிக்கிழமை, விநாயகர் சதுர்த்தி

அக்டோபர்2 சனிக்கிழமை, காந்தி ஜெயந்தி

அக்டோபர்14 வியாழக்கிழமை, ஆயுத பூஜை

அக்டோபர்15- வெள்ளிக்கிழமை, விஜயதசமி

அக்டோபர்19 செவ்வாய்க்கிழமை, மிலாதுநபி

நவம்பர் 4  வியாழக்கிழமை, தீபாவளி

டிசம்பர் 25 சனிக்கிழமை கிறிஸ்துமஸ்

வாய் துர்நாற்றம் ஏற்பட காரணம் என்ன?

வாய் துர்நாற்றம் ஏற்பட காரணம் என்ன?

◆வறட்சியான வாய்

வாய் துர்நாற்றம் அடிப்பதற்கு வாய் வறட்சியும் ஒரு காரணம். பொதுவாக இந்த நிலையானது வாயின் வழியாக சுவாசிக்கும் போது ஏற்படும். இப்படி வறட்சி அடைவதால், வாயில் உள்ள எச்சில் வறண்டு துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே எப்போதும் மூக்கின் வழியாக சுவாசித்துப் பழகுங்கள்.

◆சரியான மௌத் வாஷ்

மௌத் வாஷ் பயன்படுத்தினால் வாய் துர்நாற்றம் அடிக்காமல் இருக்கும் என்று நினைக்கலாம். ஆனால் சரியான மௌத் வாஷ் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக ஆல்கஹால் குறைவாக உள்ள மௌத் வாஷ்களை பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், அதுவே கடுமையான துர்நாற்றத்தை வீசும்.

◆மூக்கு ஒழுகல்

சளி அல்லது மூக்கு ஒழுகல் இருந்தால், மூக்கின் வழியாக சுவாசிக்க முடியாமல், வாயின் வழியாக சுவாசிப்போம். மேலும் காய்ச்சல் இருந்தால் வாய் துர்நாற்றம் அதிக அளவில் இருக்கும்.

◆காலை உணவு

பெரும்பாலானோர் காலையில் அலுவலகத்திற்கு நேரம் ஆகிவிட்டது என்று காலை உணவை உட்கொள்ளாமல் கூட செல்வார்கள். ஆனால் காலை உணவை சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருந்தாலும், வாய் துர்நாற்ற பிரச்சனையால் அவஸ்தைப்படக்கூடும். எனவே சரியான வேளையில் உணவுகளை உட்கொண்டு வர வேண்டும்.

◆கார்போஹைட்ரேட் குறைவான உணவு

டயட் என்ற பெயரில் உண்ணும் உணவில் கார்போஹைட்ரேட் குறைவாக இருந்தாலும், வாய் துர்நாற்றம் ஏற்படும். எனவே சரியான முறையில் கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை எடுத்து வாருங்கள்.

◆ஆல்கஹால்

சாதாரணமாக ஆல்கஹால் பருகினாலேயே நாற்றம் வீசும். ஏனெனில் ஆல்கஹால் வாயை வறட்சியடையச் செய்து, வாய் துர்நாற்றத்தை அதிகரிக்கிறது. ஆகவே ஆல்கஹால் பருகுவதை நிறுத்துங்கள்.

◆உணவில் சேர்க்கும் பொருட்கள்

உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கும் பூண்டு மற்றும் வெங்காயத்தை சாப்பிட்டால் கூட, வாய் துர்நாற்றம் வீசும். ஆகவே இத்தகைய உணவுப் பொருட்களை உட்கொண்ட பின்னர் புதினா அல்லது சோம்பை வாயில் போட்டு மெல்லுங்கள். வாய் துர்நாற்றம் வீசாமல் இருக்கும்.

◆தண்ணீர் குடியுங்கள்

முக்கியமாக தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். அப்படி போதிய அளவில் தண்ணீரை குடிக்காமல் இருந்தால், அது கூட வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். மேலும் தண்ணீரானது வாய் வறட்சியை தடுப்பதுடன், எச்சில் உற்பத்தியை அதிகரிக்கும்.

◆கல்லீரல் கோளாறு

இன்னொரு காரணம் என்னவென்றால், கல்லீரலில் பிரச்சனை இருந்தாலும், வாய் துர்நாற்றம் வீசும். எனவே வாயை நன்கு பராமரித்து வந்து, மேற்கூறியவற்றை பின்பற்றிய பின்னரும் வாய் துர்நாற்றம் அதிக அளவில் இருந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள். ஏனெனில் உடலில் அம்மோனியாவானது அதிகம் உற்பத்தி செய்யப்படுவதால் தான் வாய் துர்நாற்றம் வீசுகிறது

எம தீபம்

தீபாவளிக்கு முதல் நாள் எம தீபம் என ஒருநாள் வருகிறது இதை அநேகம் பேர் அறிந்திருக்கவில்லை.சூட்சுமமான சக்தி வாய்ந்த ஆயுள் பலத்தை அதிகரித்து கொள்ள கூடிய இந்த பரிகாரத்தை குறிப்பிட்ட சமுதாயத்தினர் மட்டும் வழி வழியாக செய்து வந்திருக்கின்றனர்.

சகோதரனை சந்தோசப்படுத்தி தானும் தன் கணவனும் நீண்ட ஆயுளுடன் வாழ செய்து கொள்ளும் பரிகாரம் 

தீபாவளிக்கு முதல் நாளில் சகோதரனுக்கும் அவரது மனைவிக்கும் விருந்து அளித்து தன் கைப்பட பரிமாறி புது துணி எடுத்துகொடுத்து ஆசிர்வாதம் பெற வேண்டும் தீர்க்க சுமங்கலியாக நீண்ட ஆயுளுடன் வாழ்க என சகோதரன் மஞ்சள் கலந்த பச்சரிசி தூவி வாழ்த்த வேண்டும்.அன்று மாலை சகோதரி தன் வீட்டுக்கு சென்று தெற்கு நோக்கி ஒரு தீபத்தை ஏற்ற வேண்டும்.இதை வாசலில் வைக்கவும் இதனால் எமன் தன் பாசகயிறை இந்த சகோதரி குடும்பத்தின் மீது வீச தயங்குவான்

Wednesday 28 October 2020

எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க செய்யும் உணவு முறைகள்...!

எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க செய்யும் உணவு முறைகள்...!

எலும்புகள்தான் உடலின் அசைவுகளைச் சுலபமாக்குகின்றன. 

சிறு வயது முதல் உடல் உழைப்பு சீராக உள்ளவர்களுக்கு எலும்புத் தேய்மானம் சற்றுக் குறைவாக இருக்கும். 

உடல் உழைப்பு குறைவாக இருப்பவர்களுக்கு எலும்புத் தேய்மானம் அதிகமாக ஏற்படும்.

பொதுவாக ஆண், பெண் இருவருக்கும் 30 முதல் 35 வயது வரை எலும்பு நல்ல வலிமையாக இருக்கும். 

பிறகு எலும்பின் அடர்த்தி குறைய ஆரம்பிக்கும்.

பால் சாப்பிட்டால் எலும்பு நல்ல வலிமை பெறும். பாலில் வைட்டமின்கள், புரதம் மற்றும் பொட்டாசியம் உள்ளன. 

இவை அனைத்தும் ஆரோக்கியமான எலும்புக்கு உதவிபுரிகின்றன. 

தயிர், மோர் போன்ற உணவுகளையும் எடுத்துக்கொள்ளலாம்.

எலும்புகளுக்கு எந்த அளவுக்கு கால்சியம் அவசியமோ, கால்சியத்தைக் கிரகிக்க வைட்டமின் டி-யும் அவசியம்.

தினமும் காலை மற்றும் மாலை வேளையில் அரை மணி நேரம் சூரிய ஒளி நம் சருமத்தில் பட்டாலே, வைட்டமின் டி கிடைத்துவிடும்.

மீன் சாப்பிடுவதாலும் எலும்பு ஆரோக்கியமாக இருக்கும். 

மீனில் வைட்டமின் பி மற்றும் இ, கால்சியம், இரும்பு, மக்னீசியம் அடங்கியுள்ளன. 

எலும்பு வலிமையாக இருக்க, பேரீச்சம்பழமும் சாப்பிடலாம்.

ஆரஞ்சுப் பழத்தில், கால்சியம் மற்றும் வைட்டமின் சி நிறைவாக உள்ளன. 

இதுவும், எலும்புக்கு வலிமை தரும். 

வைட்டமின் சத்துக்கள் நிறைந்த பழங்கள் சாப்பிடுவதாலும், எலும்புகளுக்கும் தசைக்கும் வலிமை கிடைக்கும்.

முட்டையில் உள்ள புரதம் மற்றும் வைட்டமின் சத்துக்கள் எலும்பு மற்றும் தசைகளை வலிமை பெறச் செய்கின்றன. 

போன்ற அசைவ உணவுகள் உட்கொள்வதாலும் எலும்புகளுக்கும் தசைக்கும் வலிமை கிடைக்கும்.

அதிக உடல் எடை எலும்பு மூட்டுக்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி, தேய்மானத்தை விரைவுபடுத்தும். 


உடல் பருமனானவர்கள் எடையைக் குறைப்பதன் மூலம் முதுகெலும்பு, கால் மூட்டுகளில் தேய்மானம் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கலாம்.