tag:blogger.com,1999:blog-4793133223147577903.post6703363830695786547..comments2024-03-28T08:02:38.445-07:00Comments on Neerkondar Entammal Venkudusamy Naidu: உடம்பானது உயிர் எடுத்து வந்ததா? அல்லது உயிரானது உடம்பு எடுத்துக் கொண்டு வந்ததா?njagadeedsan9@gmail.comhttp://www.blogger.com/profile/02325139747448195862noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4793133223147577903.post-26672292948293608832023-05-23T10:41:20.614-07:002023-05-23T10:41:20.614-07:00அய்யா நமஸ்காரம். வாய்ப்பு கிடைக்கும்போது, இதற்கு ...அய்யா நமஸ்காரம். வாய்ப்பு கிடைக்கும்போது, இதற்கு மாற்றொரு விளக்கமும் பகிர்கிறேன் அய்யா. திருச்சிற்றம்பலம்.jansi kannanhttps://www.blogger.com/profile/05595853966148321257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4793133223147577903.post-75420853306652590012023-05-23T10:38:37.028-07:002023-05-23T10:38:37.028-07:00அய்யா...தங்களின் இப்பதிவுக்கு அடியேனின் விளக்கம்.....அய்யா...தங்களின் இப்பதிவுக்கு அடியேனின் விளக்கம்...!<br /><br />Tue. 23, May, 2023 at 10.00 pm<br /><br />*உயிர் :* <br /><br />*எது உயிர் ?*<br /><br />*உயிர் என்றொரு பொருள் உண்டா ?*<br /><br />உடம்பில் நாள்தோறும் இன்பத் துன்ப உணர்வுகளும், அநுபவங்களும் ஏற்படு கின்றன. அவற்றை அறிந்து அநுபவிக் கின்ற பொருள் ஒன்று இருத்தல் வேண்டும் அல்லவா ?<br /><br />உடம்பே அவற்றை அறிந்து அநுபவிக் கிறது என்று கூறலாமா ?<br /><br />உடம்போ அறிவற்ற சடம். ஆகையால் அது இன்ப தூன்பங்களை அறியும் என்றலும்,அநுபவிக்கும் என்றலும் பொருந்தாது. அப்படித்தானே.<br /><br />உடம்பு அநுபவிக்கவில்லை என்பதால்,<br />உடம்பினுள்ளே உடம்பிற்கு வேறாய ஒரு பொருள் இருத்தல் வேண்டும், அது அறிவுப் பொருளாய் இருத்தல் வேண்டும்...அல்லவா.<br /><br />அந்த அறிவுப் பொருளே, இன்ப துன்பங்களை நுகர்கிறது எனல் வேண் டும். "அப்பொருளே உயிர் என்று சொல்லப்படுகிறது."<br /><br />சரி... <br /><br />உயிர் என்று பொதுவாக ஒப்புக் கொள்ளப்படுகின்ற பொருள் எது ?<br /><br />உடம்பிற்கு வேறானதாய், உடம்பைத் தனக்கு இடமாகக் கொண்டு அறிந்து வருகின்ற அறிவுப் பொருளே... உயிர் என்பது பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்ட கருத்து. <br /><br />"யான்" எனத் தன்னை நோக்கி அறியும் அறிவே "உரிர்" என்று சொல்லலாம்.<br /><br />ஏதேனும் ஒன்றைச் செய்யும்பொழு<br />தும், அறியும் பொழுதும், "நான்" இதனைச் செய்கின்றேன்; நான் இதனை அறிகின்றேன் என உணர்வு நிகழ்கிறது. இங்கு "நான்" என்றது உயிரைக் குறிக்கும்.<br /><br />உயிர், ஆன்மா என்பன ஒருபொருட் சொற்கள்.<br /><br />அடுத்து...;<br /><br />"உடம்பு உயிர் ஆகுமோ ?"<br /><br />அறிவு, உடம்பிலே நிகழ்வதாலும், உடம்பிலன்றி வேறிடங்களில் அது நிகழக் காணாமையாலும், உடம்புதான் உயிர் அல்லது ஆன்மாவாகும் என்று ஒரு சாரார் கூறுவர். .. <br /><br />அதனை எப்படி மறுப்பது ? <br /><br />இதற்கு பல காரணங்கள் காட்டி அதனை மறுக்க முடியும்.<br /><br />உடம்பு தான் உயிர் என்றால் "யான் உடம்பு" என்றல்லவா கூற வேண்டும்... அப்படி யாரேனும் கூறுகிறார்களா ? இல்லையே... "எனது உடம்பு" என்று உடம்பைத் தமது உடைமைப் பொருளாகவே கூறுகின்றனர்.<br /><br />இதிலே நாம் அறிவது, உடம்பு உடைமைப் பொருளே என்பதும், அது உயீராகாது என்பதும் விளங்கும்.<br /><br />சரி...<br /><br />"யான் பருத்து விட்டேன்; யான் மெலிந்து விட்டேன்" என்று கூறீவது வழக்கமாக உள்ளது. இவ்வழக்கில் யான் என்பது உயிரையும், பருத்தல், மெலிதல் என்பன உடம்பையும் கூறித்தல் வெளிப்படையானது.<br /><br />இவ்வுலக வழக்கு, உயிர் என்பது உடம்பே என்ற அவர்கள் கருத்தை அல்லவா ஆதரிப்பதாக உள்ளது ? இவ்வழக்கிற்கு எவ்வகையில் விளக்கம் கூறி அவர்களை மறுப்பது ?<br /><br />மாந்தர் இயல்பு என்னவென்றால்.... அவர்கள் தமக்கு வேறாக உள்ள பொருள்களையும், அவற்றின் மீது கொண்ட அளவு கடந்த பற்றின் காரணமாகத் தம் உயிராகவே நினைப்பர்.<br /><br />அப்பொருள்கள் தமக்கு வேறானவை என்பதை எண்ணாமல், அவற்றைத் தாமாகவே மதிப்பர். மனைவி, பிள்ளைகள் முதலியோர் தமக்கு வேறானவர்கள் என்று யாரேனும் எண்ணிப் பார்க்கிறார்களா ? இல்லை.<br /><br />அவர்களைத் தாமாக மதித்து, அவர்களுக்கு வருகீன்ற, இன்ப துன்பங்களைத் தம்முடையவனாகக் கொண்டு, மகிழ்ச்சியும், வருத்தமும் அடைகிறார்கள்.<br /><br />"என் உயிரே" என்று அவர்களை அழைத்து சீராட்டுகிறார்கள்.<br /><br />தம் உயிராகக் கருதும் அளவுக்கு அவர்களோடு ஒற்றுமைப்பட்டு நிற்கின்ற காரணத்தாலேயே "என் உயிரே" என்பன போன்ற "மயக்க மொழிகளைக்" கூறுகிறார்கள் .<br /><br />இம்முறையிலேயே மக்கள் தமக்கு வேறாயுள்ள உடம்பையும், அவற்றின் மேல் உள்ள பற்றுக் காரணமாகத் தாமாகவே மதித்து, உடம்பிற்கு ஏற்படும் பெருக்கம், மெலிவு முதலியவற்றைத் தமக்கு ஏற்பட்டனவாகக் கொண்டு, "நான் பருத்து விட்டேன்; நான் மெலிந்து விட் டேன் என்றெல்லாம் கூறுகிறார்கள்.<br /><br />இவ்வாறு உடம்பின் தன்மையைத் தன்மேல் ஏற்றிக் கூறுவனவாகிய இம்மொழிகளைக் காட்டி, "உடம்பே உயிர் அல்லது ஆன்மா என்று கூறுவது பொருந்தாது.<br /><br />"யான் எனப்படுகின்ற உயிர், காணப்படுகின்ற பருவுடம்பின் வேறேயாகும். இது சைவ சித்தாந்த முறை. <br /><br />இன்னும் இத்தலைப்பிற்கு விளக்கங்கள் கூறிக் கொண்டே போகலாம் அய்யா.<br /><br />Jansikannan60@gmail.com<br />jansi kannanhttps://www.blogger.com/profile/05595853966148321257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4793133223147577903.post-67211047078839470572023-05-23T09:26:06.896-07:002023-05-23T09:26:06.896-07:00அய்யா, வெ.சாமி அவர்களே, சைவ சித்தாந்தம் கற்ற பின்ன...அய்யா, வெ.சாமி அவர்களே, சைவ சித்தாந்தம் கற்ற பின்னர் தான், தங்களின் இப்பதிவு எனக்கு புரிந்திருக்கிறது.. என் கவனத்திற்கும் இப்போதான் இப்பதிவு புலப்பட்டிருக்கிறது.jansi kannanhttps://www.blogger.com/profile/05595853966148321257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4793133223147577903.post-83715867723406599312018-08-05T01:31:26.627-07:002018-08-05T01:31:26.627-07:00This comment has been removed by the author.jansi kannanhttps://www.blogger.com/profile/05595853966148321257noreply@blogger.com