tag:blogger.com,1999:blog-4793133223147577903.post6893425073786959857..comments2024-03-29T03:10:09.101-07:00Comments on Neerkondar Entammal Venkudusamy Naidu: !!"தீபம் ஏற்றும் முறை"!!njagadeedsan9@gmail.comhttp://www.blogger.com/profile/02325139747448195862noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4793133223147577903.post-19489996075880108252023-03-18T09:10:56.899-07:002023-03-18T09:10:56.899-07:00வளைக்கை மட நல்லார் மா மயிலை வண் மறுகில்
துளக்கு இல...வளைக்கை மட நல்லார் மா மயிலை வண் மறுகில்<br />துளக்கு இல் கபாலீச்சுரத்தான் தொல் கார்த்திகை நாள்<br />தளத்து ஏந்து இளமுலையார் தையலார் கொண்டாடும்<br />விளக்கீடு காணாதே போதியோ ? பூம்பாவாய் !<br /><br />இதன் பொருள்....!<br /><br />வளை − வளையல்<br /><br />மறுகு − தெரு<br /><br />வண்மை − தெருவினர் கொடைவளம்<br /><br />துளக்கு − அசைவு, தளர்வு<br /><br />இல் − இல்லாத (இறைவனை நோக்குங்கால் வருத்தமில்லாதவன்; இதே கபாலீச்சரத்தைக் குறித்தால்...அசைவில்லாத, தளர்வில்லாத )<br /><br />தளத்து − சாந்தினை<br /><br />கார்த்திகைத் திருவிளக்கீட்டு விழாவின் தொன்மையைப் பழந்தமிழ் நூல்களிலும், சிவாகம புராணங்களிலும் காணலாம்.<br /><br />இப்பாடலின் கருத்து....!<br /><br />வளையல் அணிந்த கற்புடைய பெண்டீர் வாழும் மயிலை கபாலீச்சரத்தில் சிவபெருமான் கோயில் கொண்டுள் ளான்.<br /><br />அத்திருக்கோயிலில் கார்த்திகைத் திருநாள் அன்று சிறுமிகளும், மாதர்களும் விளக்குகளை வரிசையாக ஏந்தி நின்று வழிபாடு செய்வார்கள். <br />அந்த விளக்கீடு விழாவை காணாமல் பூம்பாவையே நீ செல்வாயோ ? மாட்டாய்.<br /><br />See ! It is Civan, our Lord in Thiru -my-laap-poor, a sacred place. In the city of <br />Thiru-my-laap-poor lovely young damsels <br />who wear bangles in their hands live in large numbers.<br /><br />They live in streets of riches and stead fastness. Here our Lord Civan is manifest in the temple of Kabaleechcharam, which is a very happy place.<br /><br />In the Tamil month of Kaarthikai there takes place a famous festival of lights.<br />During this festival many young girls, well breasted and decorated with sandal paste participate very joyfully.<br /><br />They hold in their hands beautifully lighted lamps and go round the interior premises of he temple, singing on our Lord songs of praise.<br /><br />Oh ! Young girl poombaavai !<br /><br />Is it your destiny that you must leave this place without witnessing and participating in all these temple rituals and festivals ?<br /><br />THIRU-CH-CHITRAM-BALAM<br />திருச்சிற்றம்பலம்<br /><br />Jansikannan60@gmail.com.jansi kannanhttps://www.blogger.com/profile/05595853966148321257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4793133223147577903.post-85600193655759898362023-03-18T09:10:14.804-07:002023-03-18T09:10:14.804-07:00See it is Mayilai, a sacred place, full of palaces...See it is Mayilai, a sacred place, full of palaces, surrounded by honey-filled caulophyllum, a coastal area of natural forests. <br /><br />Our Lord Civan called here Kabaaleeswarar, desires to manifest Himself in the temple called Kabaaleech -charam.<br /><br />In this city mainly round the temple young peacocks move about making sounds.<br /><br />In this temple festivals take place in particular periods. Here very close devotees and sacred scholars gather to do their rituals, and worship.<br /><br />The servitors happily serve food for those devotees who have gathered in the temple.<br /><br />Oh ! Young girl Poombaavai ! Is it your fate (destiny) to leave this world without witnessing the above grand functions in the temple ? )<br /><br />இன்றும் இந்நிகழ்ச்சி இத்திருக்கோயி லில் நிகழும் பிரமோற்சவத்தில் எட்டாம் திருநாளில் நிகழ்கின்றது.<br /><br />மேற்கு வாயிலுக்குச் சற்றே வடபால் திருஞானசம்பந்தப் பெருமானின் திருவுருவம், குடத்தின் மேல் பூம்பாவை அமர்ந்துள்ள உருவத்தினையும் கண்டு மகிழலாம்.<br /><br />தெற்குப் பிரகாரத்தில் சிங்கார வேலர் சந்நிதி அற்புதமாக உள்ளது.<br /><br />இறைவி சந்நிதியும் அவ்வாறே ! இறைவன் காண்போர் பரவசம் அடையும்படி வீற்றுள்ளார். மேற்குப் பார்த்த சந்நிதி.<br /><br />பங்குனி மாதத்தில் இக்கோயிலில் நிகழும் 63 நாயன்மார் உற்சவம் மிகச் சிறப்புடையது. <br /><br />திருக்கோயிலுக்கு மேற்கே அழகிய குளம் உள்ளது. பிரதோஷம் மிகச் சிறப்பாக நடைபெறும்.<br /><br />மற்றுமொரு பாடல் வரிகள்...<br /><br />விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.. <br /><br />இதன் முழுப் பாடல்....<br /><br />வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்<br />துளக்கில் கபாலீச்சரத்தான் தொல் கார்த்திகை நாள்<br />தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்<br />விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.jansi kannanhttps://www.blogger.com/profile/05595853966148321257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4793133223147577903.post-50115795993554425592023-03-18T09:09:15.453-07:002023-03-18T09:09:15.453-07:00இதிற்குறித்த திருவிழா. பூரட்டாதியில் நிகழ்வது.
இ...இதிற்குறித்த திருவிழா. பூரட்டாதியில் நிகழ்வது.<br /><br />இது திங்கள் முதலாக ஒவ்வொன்றிலும் நிகழ்த்தும் திருவிழாச் சிறப்பு .<br /><br />போதியோ − போவாயோ ? (வருவாய் என்றவாறு.)<br /><br />இதன் கருத்து.....<br /><br />தேன் நிறைந்த புன்னை மலர்ச் சோலை கள் நிறைந்த பதியே மயிலையம் பதியாம். அப்பதியினை விரும்பி கோயில் கொண்டு அமர்ந்தவனே.... சிவபெருமான். <br /><br />அவன் தன்னுடைய சிவகணத்தார்க்கு உணவளித்துப் பூரிக்கும் சிறப்பினைக் காணாது பூம்பாவையே நீ போவாயோ ? மாட்டாய். எழுந்து வருவாயாக...!<br /><br />*ஞானசம்பந்தாரின் அற்புத நிகழ்ச்சி அல்லவா ?*jansi kannanhttps://www.blogger.com/profile/05595853966148321257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4793133223147577903.post-91499129953417595082023-03-18T09:06:49.021-07:002023-03-18T09:06:49.021-07:00இதன் பொருள்....!
மட்டு − கள்
கானல் − கடற்கரை...இதன் பொருள்....!<br /><br />மட்டு − கள்<br /><br />கானல் − கடற்கரைச் சோலை<br /><br />மடமயிலைக் கட்டு − இளமயில்கள் ஆர்ப்புமிக்க ஊரில் உள்ள திருக்கோயில். (மயிலார்ப்பூர் என்பதன் மரூஉ மயிலாப்பூர்.)<br /><br />இட்டம் − இஷ்டம் (திருவுள்ளத்தன்பு)<br /><br />ஊர்... மயிலை, மயிலாப்பூர்.<br />கோயில்... கபாலீச்சரம்.<br /><br />ஒட்டிட்ட பண்பு − இது அத்துவிதக் கலப்பு. அதாவது... "உணரப்படுவாரோடு ஒட்டிவாழ்தி" "ஒட்டியவனுளமாகில்லான்".<br /><br />உருத்திர பல்கணத்தார் − மாகேசுரர். அடியவர்.<br /><br />மதிசூடும் அண்ணலடியார்தமை அமுது செய்வித்தல்.<br /><br />கண்ணினால் அவர் "நன்விழாப்பொலிவு கண்டார்தல்"<br /><br />அட்டு என்றால்.... திருவமுது அமைத்து.<br /><br />இட்டல் − இடுதல் (நட்டல் − நடுதல் போல) <br />jansi kannanhttps://www.blogger.com/profile/05595853966148321257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4793133223147577903.post-10361201484832264342023-03-18T09:03:37.802-07:002023-03-18T09:03:37.802-07:00Sat. 18, Mar. 2023 at 7.12 pm.
மைலாப்பூர்...!
...Sat. 18, Mar. 2023 at 7.12 pm.<br /><br />மைலாப்பூர்...!<br /><br />திருமயிலை, மயிலை, மயிலாப்பூர் என்று அழைப்பதுண்டு.<br /><br />உமையம்மை மயிலுரு கொண்டு பூசித்ததால்... இப்பெயர் பெற்றது.<br /><br />மயிலுடன் தொடர்புடைய இடங்கள் நம் தமிழகத்தில் நான்கு.<br /><br />மயில் பூசித்து புகழ் பெற்றத் தலங்கள் இரண்டு.<br /><br />ஒன்று... அன்னை கற்பகாம்பிகை மயிலுருவாய் இருந்து *கபாலீச்சுரனைத்* தொழுத மயிலாப்பூர்.<br /><br />மற்றொன்று....அசுர குலத் தலைவனான *சூரபன்மன்* மயில் உருவில் குன்றாக மாறி, முருகனின் அருள் வேண்டி தவம் இருந்த மயிலம்.<br /><br />அடுத்து.... <br /><br />மயில் எம்பெருமான் கந்தவேளை நினைத்து மகிழ்ந்தாடிய இடங்கள் ஒன்று *திருமயிலாடி.* <br /><br />மற்றொன்று... *மயிலாடுதுறை.*<br /><br />இச்செய்தியை... இக்கோயிலின் வடக்குப் பிரகாரத்தில் உள்ள மயிலம்மை பூசிக்கும் இலிங்கமூர்த்தி விளக்கும்.<br /><br />இராமபிரான் பூசித்துப் பேறு பெற்றமை பற்றி... ஐப்பசி ஓணத்தில் திருவிழா நடந்ததாகப் புராணத்தில் கூறப்பட்டுள்<br />ளது. <br /><br />வாயிலார் நாயனார் அவதாரத் தலம்.<br />இவர் சந்நிதி தெற்குப் பிரகாரத்தில் வட முகமாய் உள்ளது.<br /><br />சிவநேசர் என்ற வணிகர் குல அடியாரின் தன் மகளாய்த் தோன்றிய...<br />*பூம்பாவை* எனும் பெண், அரவு தீண்டி இறக்க, அடியாரும் அப்பூம்பாவை, திருஞானசம்பந்தப் பெருமானுக்கே உரியவர் என்று எண்ணி இருந்தமை யால், மகளைத் தகனம் செய்து... எலும்பினையும், சாம்பலையும், ஒரு பானையில் சேகரித்து வைத்திருந்தார்.<br /><br />சம்பந்தப் பெருமான் இப்பதிக்கு எழுந்தருளியபோது, அவர்பால் சிவநேசர் தம் மகள் பற்றியச் செய்தியைக் கூறினார்.<br /><br />உடன் பெருமானும்......<br />மட்டிட்ட புன்னையங்கானல் எனும் திருப்பதிகம் பாடி.. அனைவரும் வியப்புறும்படி... மாண்ட பூம்பாவையை உயிருடன் வரச் செய்தார்.<br /><br />( இப்பதிகத்தை அடியேன் தங்களுக்கு முழுமையாக அளிக்கிறேன்...!<br /><br />கை மட நல்லார் மா மயிலை வண் மறுகில்<br />துளக்கு இல் கபாலீச்சுரத்தான் தொல் கார்த்திகை நாள்<br />தளத்து ஏந்து இளமுலையார் தையலார் கொண்டாடும்<br />விளக்கீடு காணாதே போதியோ ? பூம்பாவாய் !<br /><br />jansi kannanhttps://www.blogger.com/profile/05595853966148321257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4793133223147577903.post-26631297135296761622023-03-18T08:59:47.220-07:002023-03-18T08:59:47.220-07:00அய்யா..வெ. சாமி அவர்களுக்கு நமஸ்காரம்.அய்யா..வெ. சாமி அவர்களுக்கு நமஸ்காரம்.jansi kannanhttps://www.blogger.com/profile/05595853966148321257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4793133223147577903.post-24808872401411159842023-01-01T09:48:55.050-08:002023-01-01T09:48:55.050-08:00Mon. 02, Jan. 2022 at 4.02 am.
சைவ சித்தாந்தம்......Mon. 02, Jan. 2022 at 4.02 am.<br /><br />சைவ சித்தாந்தம்....!<br /><br />* கன்மம் என்பது....<br />*உயிர்கள் செய்த நல்வினை, தீவினை.*<br /><br />* நல்வினையின் வேறு பெயர்.... <br />*புண்ணியம்.*<br /><br />* தீவினையின் வேறு பெயர்....<br />*பாவம்.*<br /><br />* புண்ணியத்தால் விளையும் பயன்.... <br />*இன்பம்.*<br /><br />* பாவத்தால் விளையும் பயன்....<br />*துன்பம்.*<br /><br />* கன்மத்தின் இரு வகைகள்.....<br />*காரண கன்மம், காரிய கன்மம்.*<br /><br />* காரண கன்மம் என்பது....<br />*கேவல நிலையில் முதன் முதலாக விளைந்த மூலகன்மம்.*<br /><br />* காரண கன்மத்தின் வேறு பெயர்....<br />*மூலகன்மம்.*<br /><br />* காரிய கன்மம் என்பது....<br />*காரண கன்மத்தால் விளைந்த கன்மம்.*<br /><br />* காரிய கன்மத்தின் இருவகைகள்....<br />*நல்வினை, தீவினை.*<br /><br />* நல்வினை என்பது....<br />*ஒரு உயிர் மற்ற உயிர்க்கு மனம், வாக்கு காயங்களால் செய்த நன்மை.*<br /><br />* தீவினை என்பது....<br />*ஒரு உயிர் மற்ற உயிர்க்கு மனம், வாக்கு காயங்களால் செய்த தீமை.*<br /><br />* வினையின் மூவகைகள்....<br />*ஆகாமியம், சஞ்சிதம், பிராரத்தம்.*<br /><br />* ஆகாமிய வினையின் தமிழ்ப் பெயர்....<br />*வருவினை.*<br /><br />* சஞ்சித வினையின் தமிழ்ப் பெயர்....<br />*தொல்வினை.*<br /><br />* பிராரத்த வினையின் தமிழ்ப் பெயர்...<br />*ஊழ்வினை.*<br /><br />* ஆகாமிய வினை என்பது....<br />*முன்வினைப் பயனை நுகரும் போது விளைந்து பின்பு வர விருக்கும் வினை.*<br /><br />* சஞ்சித வினை என்பது....<br />*நுகரப்படாத ஆகாமிய வினைகளின் குவியல்.*<br /><br />* பிராரத்த வினை என்பது ....<br />*சஞ்சித வினைக் குவியலிலிருந்து எடுத்து ஒரு பகுதியாய் நிகழ் பிறவியில் ஊட்டப்படும் வினை.*<br /><br />* உயிருக்கு வினைப் பயனை ஊட்டுவது..... *இறைவன்.*<br /><br />* ஊட்டப்படும் மூவகை வினைப் பயன்....<br />*ஆதி தைவிகம் , ஆதி பெளதிகம் , ஆதி ஆன்மீகம்.*<br /><br />* ஆதி தைவிகம் என்பது....<br />*தெய்வத்தால் வரும் வினைப் பயன்.*<br /><br />* ஆதி பெளதிகம் என்பது....<br />*பஞ்ச பூதங்களால் வரும் வினைப்பயன்.*<br />*ஆதி ஆன்மிகம் என்பது....<br />*உயிர்களால் வரும் வினைப்பயன்.*<br /><br />மீண்டும் சந்திக்கலாம்...!<br /><br />Jansikannan60@gmail.com.<br /><br />jansi kannanhttps://www.blogger.com/profile/05595853966148321257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4793133223147577903.post-19808645487421302712018-11-07T08:53:36.154-08:002018-11-07T08:53:36.154-08:00This comment has been removed by the author.jansi kannanhttps://www.blogger.com/profile/05595853966148321257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4793133223147577903.post-84446924117497490692018-07-11T21:35:23.503-07:002018-07-11T21:35:23.503-07:00This comment has been removed by the author.jansi kannanhttps://www.blogger.com/profile/05595853966148321257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4793133223147577903.post-49914157305718615102018-07-11T02:11:56.220-07:002018-07-11T02:11:56.220-07:00This comment has been removed by the author.jansi kannanhttps://www.blogger.com/profile/05595853966148321257noreply@blogger.com