Monday, 30 June 2025

செல்வத்தை அள்ளித்தரும் கற்றாழை : வீட்டில் எந்த திசையில் நடவேண்டும் தெரியுமா? |


செல்வத்தை அள்ளித்தரும் கற்றாழை : வீட்டில் எந்த திசையில் நடவேண்டும்விளம்பரம்

வாஸ்து படி, வீட்டில் கற்றாழை செடியை வைத்திருப்பது மிகவும் மங்களகரமான ஒன்றாக கருதப்படுகிறது.இந்த செடியை நடும் போது சில விஷயங்களில் கவனம் செலுத்துவது அவசியம்.

கற்றாழைச் செடியை சரியான திசையில் நடுவது லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தை எப்போதும் கொண்டு வரும்.

செல்வம் பெருகும். இந்த செடி வீட்டில் இருந்தால், குடும்பம் முழுவதும் செழிப்புடன் இருக்கும். அவர்களின் புகழும், கௌரவமும் அதிகரிக்கும்.


கற்றாழை எந்த திசையில் நட வேண்டும்?
வீட்டில் கற்றாழை செடியை நடும் போது திசை மிகவும் முக்ககியம். அதற்கு நாம் குறிப்பாக சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

அப்போதுதான் லட்சுமி தேவியின் அருளைப் பெற முடியும். இதற்கு கற்றாழை செடியை எப்போதும் கிழக்கு திசையில்தான் நட வேண்டும். இந்த திசையில் ஒரு கற்றாழை வைப்பது மன அமைதியைத் தருகிறது.

செல்வத்தை அள்ளித்தரும் கற்றாழை : வீட்டில் எந்த திசையில் நடவேண்டும் தெரியுமா? | Which Direction Plant A Aloe Vera Increase Wealth

வீட்டை வடக்கு அல்லது கிழக்கு திசையில் உயர்த்தினால் நேர்மறை ஆற்றல் கிடைக்கும். உடல்நலக் கோளாறுகள் நீங்கும். வாழ்க்கையில் முன்னேற்றம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றை நீங்கள் விரும்பினால், மேற்கு திசையில் கற்றாழை செடியை நடலாம்.


இந்த செடியை நடுவதற்கு மேற்கு திசை மிகவும் உகந்தது என நிபுணர்கள் கூறுகின்றனர் . இது வாழ்க்கையில் வெற்றி மற்றும் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புகளை வழங்குவதாக நம்பப்படுகிறது.

மேலும் கற்றாழை செடியை தென்கிழக்கு மூலையில் வைத்தால் வருமானம் அதிகரிக்கும். மேற்கு திசையில் வைத்தால் உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.


 
நேர்மறை ஆற்றல்

கற்றாழை செடியை சரியான திசையில் வைப்பது வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலைக் கொண்டுவருகிறது. எதிர்மறை ஆற்றல் அகற்றப்படுகிறது.

நீங்கள் நிதி பிரச்சனைகள் மற்றும் தீய சக்திகளால் பாதிக்கப்பட்டிருந்தால், வீட்டில் ஒரு கற்றாழை செடியை சரியான திசையில் வைக்கவும்.

செல்வத்தை அள்ளித்தரும் கற்றாழை : வீட்டில் எந்த திசையில் நடவேண்டும் தெரியுமா? | Which Direction Plant A Aloe Vera Increase Wealth

இது வீட்டில் வளர்க்க எளிதான மற்றும் சிறந்த தாவரங்களில் ஒன்றாகும். வீட்டின் பால்கனியில் வைத்தால், எதிர்மறை ஆற்றல்கள் வீட்டிற்குள் நுழைய முடியாது.


கற்றாழை செடி வளர மிகவும் எளிதானது. கற்றாழை செடி ஒன்றை நட்டால் போது அது அந்த இடம் முழுவதும் வளர்ச்சி அடையும். அதனால்தான் பானையில் ஒரே ஒரு கற்றாழை செடியாவது இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

வீட்டில் வைத்திருப்பது உடல் நலத்திற்கு நல்லது. உடல்நலக் குறைவால் அவதிப்படுபவர்கள் கற்றாழையை படுக்கையறையில் வைக்கலாம்.


 


இந்த திசையில் கற்றாழை வைக்க கூடாது
வடமேற்கு திசையில் வைத்தால் பல பிரச்சனைகள் ஏற்படும். வாஸ்து படி இந்த திசை நிதி பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அசுப பலன்களைத் தரும். இதனால் அந்த திசையை தவிர்ப்பது நல்லது.


 செல்வத்தை அள்ளித்தரும் கற்றாழை : வீட்டில் எந்த திசையில் நடவேண்டும் தெரியுமா? | Which Direction Plant A Aloe Vera Increase Wealth


Thursday, 26 June 2025

சாப்பிட்டவுடன் செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன?


சாப்பிட்டவுடன் சுடசுட காபி குடிக்க பிடிக்குமா? இதேபோல் செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன? தெரிஞ்சுக்கோங்க!

பலருக்கும் சாப்பிட்டவுடன் சுடசுட டீ அல்லது காபி குடிக்க பிடிக்கும். சிலருக்கு குளுகுளு ஜூஸ் குடிக்க ரொம்ப பிடிக்கவும். ஆனால் இவ்வாறு செய்வது நம் ஜீரண மண்டலத்தை பெரிதும் பாதிக்கும் என்பதை தெரியாமல் இந்த பழக்கத்தை தொடர்ந்து செய்து வருகின்றனர். அந்த வகையில் இதேபோல் சாப்பிட்டவுடன் செய்யக்கூடாத பழங்கள் என்னென்ன


குளியல்: சாப்பிட்டவுடன் குளிப்பதை ஒருபோதும் செய்யாதீர்கள். சாப்பிட்டு முடித்தவுடன் உடல், வயிறில் உள்ள உணவை ஜீரணம் செய்யும் வேலையில் இறங்கிவிடம். அப்போது நாம் குளிப்பதால் ஜீரணம் செய்யும் வேலையை தடுத்தி நிறுத்துவது போல் ஆகிவிடும். சாப்பிட பின் 2 மணிநேரம் கழித்து குளிப்பது நல்லது என கூறுகின்றனர்.


வொர்கவுட்: அதிகம் சாப்பிட்டுவிட்டோம் அல்லது காலையில் உடற்பயிற்சி செய்ய மறந்துவிட்டோம் என்று ஏதாவதொரு காரணத்திற்காக உணவு சாப்பிட்டபின் வொர்கவுட் செய்வது உடலுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். இது தவறான யோசனை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆக கொஞ்சம் ரெஸ்ட் எடுப்பது நல்லது.


ஜூஸ்: சாப்பிட்டவுடன் ஃப்ரெஷ் ஜூஸ் அல்லது கூலிங்காக பெப்சி, கொக்கோகோலா போன்ற பானங்களை குடிப்பது ஜீரண சக்தியை பலவீனமாக்கும். உணவை ஜீரணம் செய்யும் அமிலங்கள் உற்பத்தி செய்வதை இது தடுப்பதாக கூறுகின்றனர். ஆகவே உணவுக்கு பின் ஜூஸ் குடிப்பதை தவிர்த்திடுங்கள்.


தூக்கம்: சிலருக்கு சாப்பிட்டவுடன் தூக்கம் வரும்.. உடனே தூங்க சென்றுவிடுகின்றனர். இப்படி செய்வதால் உணவு ஜீரணமாவதில் தாமதம் ஏற்பட்டு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வார காரணமாக அமைந்துவிடும்.


புகைபிடித்தல்: சிலருக்கு சாப்பிட்டவுடன் சிகிரெட் பிடிக்கும் பழக்கம் இருக்கும். அப்போது தான் சாப்பிட்டது போல் இருக்கும் என்றும் கூறுவர். இவ்வாறு செய்வது உணவு ஜீரணமாவதை தாமதமாக்கும். அஜீரண கோளாறு ஏற்படும். ஆகவே உணவுக்கு பின் புகைபிடித்தல் தீங்கு விளைவிக்கும்.
பால்

காபி, டீ: நம்மில் பலருக்கும் இந்த பழகும் இருக்கும். உணவுக்கு பின் சுடசுட காபி அல்லது டீ சாப்பிடுவது ஜீரணத்தை அதிகப்படுத்தும் என்று எண்ணுகின்றனர். ஆனால் உண்மையில் டீ, காபி உணவில் உள்ள சத்துக்கள் உடலால் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. செரிமான பிரச்சனை ஏற்பட காரணமாக அமைப்பும். ஆகவே உணவுக்கு பின் டீ, காபிக்கு நோ சொல்லிவிடுங்கள்.


பிரிந்துள்ள தம்பதி ஒன்று சேர உதவும் குறுமிளகு பரிகாரம்!


பிரிந்துள்ள தம்பதி ஒன்று சேர உதவும் குறுமிளகு பரிகாரம்! கணவன் மனைவி கட்டாயம் செய்ய வேண்டியது.. செம
கணவன் மனைவி இடையே புரிதல் என்பது மிக அவசியமாகும். இந்த புரிதல் இல்லாமல்தான், சண்டை, சச்சரவு, பிளவு ஏற்பட்டு, விவாகரத்து வரை சென்றுவிடுகிறது. சிலசமயம், ஈகோ காரணமாகவே, வன்முறை சம்பவங்களும் நடந்துவிடுகின்றன. இதனால் குழந்தைகளின் எதிர்காலம்தான் வீணாகின்றன. சரியான புரிதல் இல்லாததால் பிரிந்து வாழும் தம்பதி, மீண்டும் ஒற்றுமையுடன் இணக்கமாக வாழக்கூடிய எளிய பரிகாரங்களை நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். அதில் ஒருசிலவற்றை பார்ப்போம்.


ஒருவரது ஜாதகத்தில் இரண்டாம் இடமும், ஏழாவது இடமும் பலமிழந்து காணப்பட்டாலும், எட்டாம் இட அஷ்டம ஸ்தானம் கெட்டுப்போனாலும் குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது என்பார்கள்.



முரண்பாடுகள் - பிணக்குகள்
கணவன், மனைவிக்குள் நிலவும் முரண்பாடுகளை சரிசெய்ய, உப்பு + மிளகு இரண்டும் சிறந்த பரிகாரமாக உள்ளது. பிறரை வசியம் செய்யக்கூடிய தன்மையும், அன்பால் ஈர்க்கும் சக்தியும் இந்த பொருட்களுக்கு உண்டு.


கல் உப்பு மற்றும் மிளகிற்கு எதிர்மறை எண்ணங்களை மாற்றும் சக்தி இருக்கிறது.. வீட்டில் நிலவும் எதிர்மறை ஆற்றல்களை விரட்டி, தெய்வ ஆற்றலை பரப்பக்கூடிய தன்மை கொண்டதாகும். எனவேதான், தாந்திரீகம், மாந்திரீகம் போன்றவற்றில் உப்பு, மிளகு இரண்டுமே தவிர்க்க முடியாதவையாக உள்ளது..

குறுமிளகுகள்
அந்தவகையில், தம்பதிகளுக்குள் நிலவும் பூசலை அகற்ற, ஒரு கண்ணாடி டம்ளரில் முக்கால் பாகம் தண்ணீரை கொள்ள வேண்டும். முழு மிளகாக 27 எண்ணிக்கையில் எடுத்து கொள்ள வேண்டும். அதேபோல 27 முழு கல் உப்பையும் எடுத்து கொள்ள வேண்டும்.



தங்களது இணையின் பிணக்குகள் நீங்க வேண்டும் என்று மனதார வேண்டி, ஒவ்வொரு கல் உப்பு, மிளகையும் தண்ணீரில் போட வேண்டும். இறுதியாக டம்ளர் தண்ணீரை ஓடும் நீரில் அல்லது சிங்க்கில் கொட்டிவிடலாம். இதனால், விரைவில் பலன் கிடைக்கும்.


பெரியவர்கள் ஆசீர்வாதம்
பிரிந்துள்ள தம்பதிகள், உறவுகளுடன் இணைந்து சிவபெருமானுக்குரிய சோமவார விரதத்தை மேற்கொள்ளலாம். முழுமையாக விரதமிருக்க முடியாவிட்டாலும், நீர், பழச்சாறு உட்கொண்டு, இந்த விரதத்தை கடைப்பிடிக்கலாம்.

முன்பு வீட்டிலுள்ள பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெற்று, தொடர்ந்து 21 திங்கட்கிழமைகளில் இந்த விரதத்தை முடிக்கும்போது, தம்பதிக்குள் ஒற்றுமை ஏற்படும்.. மாங்கல்ய தோஷம், களத்திரதோஷம் இருந்தாலும் நீங்கிவிடும். இந்த விரத நாட்களில் சிவ-பார்வதிக்குரிய மந்திரங்களை ஜெபிக்கலாம்.


அர்த்தநாரீஸ்வர மந்திரம்
ஓம் ஹும் ஜும் சஹ அர்த்தநாரீஸ்வர ரூபே ஹ்ரீம் ஸ்வாஹா இந்த மந்திரத்தை சொல்வதன் மூலமும் பிணக்குகள் தீர்ந்து புரிதல் உண்டாகும். திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரரை வணங்கி வந்தாலும் விரைவில், தம்பதிகள் ஒன்று சேரலாம்.


அதேபோல, தினமும் அதிகாலையில் பூஜையறையில் கிழக்கு திசையில் அமர்ந்து ''ஓம் சௌம் பார்வதி தேவி நமஹ'' என்ற மந்திரத்தை 54 அல்லது 108 முறை சொல்வதாலும் பலன் கிட்டும்.

மந்திரங்கள் - ஜெபம்
''ஓம் க்லீம் ஸ்ரீ ரதி தேவி சமேத ஸ்ரீ காமதேவாய நமஹ'' என்று 3 முறை பிரார்த்திப்பதாலும் தம்பதிக்குள் சண்டைகள் விலகி ஒற்றுமை நிலவ தொடங்கும். அதேபோல, தம்பதிக்குள் ஒற்றுமை ஏற்பட தினமும் சுந்தர காண்டம் பாராயணம் செய்யலாம்.

திருவாரூர் மாவட்டம் குடவாசலில் உள்ள ஸ்ரீவைகுண்ட நாராயணப் பெருமாள் கோவில், திருவாஞ்சியம் கோவில்களுக்கு சென்று வழிபடலாம். ரோஜா நிறத்தில் இருக்கும் சிவலிங்கத்தை வீட்டில் வைத்து தினமும் பூஜை செய்தால் கணவன், மனைவி ஒற்றுமை அதிகமாகும்.



Tuesday, 24 June 2025

Germany stores

Edeka : The name itself is a shortened form of "Einkaufsgenossenschaft der Kolonialwarenhändler im Halleschen Torbezirk zu Berlin," which means "Purchasing Cooperative of Colonial Goods Retailers in the Hallesches Tor district of Berlin".
Aldi means Albrecht Discount. It's a shortened form of the German "Albrecht-Diskont," combining the founders' last name, Albrecht, with the word "Diskont," meaning discount. The name reflects the store's origin as a German discount supermarket chain.
Rewe (stylized as REWE; German pronunciation: [ˈʁeːvə]) is a supermarket chain in Germany and the main brand of Rewe Group headquartered in Cologne
English, "Lidl store" refers to a discount grocery store chain that originated in Germany. Lidl is known for its focus on providing a wide range of products, including groceries and other household items, at competitive prices. The name "Lidl" is actually the surname of a former business partner of the founder, Josef Schwarz, according to CyprusScene.com, and the company was named after him. 

Saturday, 21 June 2025

அபரிமிதமான பண வரவுக்கு வாஸ்துபடி காமதேனு


அபரிமிதமான பண வரவுக்கு வாஸ்துபடி காமதேனுவை வீட்டில் வைக்க சரியான திசை...
காமதேனு படத்தை வீட்டில் எந்த இடத்தில் எந்த திசை பார்த்து வைத்தால் வீட்டில் செல்வம் பெருகும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

பசுவை நாம் லட்சுமி கடாட்சம் பொருந்திய அமைப்பாகவும், பொன், பொருள் சேர்க்கை தரக்கூடிய அதிர்ஷ்டமாக பார்க்கிறோமோ அதே போல தேவலோகத்தில் அனைத்து பசுக்களின் தாயாக காமதேனு பார்க்கப்படுகிறது. காமதேனு என்பது சகல ஐஸ்வர்யம், லட்சுமி கடாட்சம், பொன், பொருள் யோகம் மற்றும் அபரிமிதமான பண வரவை தரக்கூடிய காமதேனு விளங்குகிறது. நாம் இதை கல்வி நிறுவனங்கள், ஜவுளி மற்றும் பண வரவு அதிகம் உள்ள கடைகளில் பார்த்திருப்போம். இதற்கு காமதேனு தரக்கூடிய பலன்களே முக்கிய காரணமாகும். அந்தளவிற்கு அதிர்ஷ்டம் அடிக்கும். எனவே காமதேனு படத்தை வீட்டின் எந்த இடத்தில் எந்த திசை பார்த்து வைக்க வேண்டும் என இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.




காமதேனு அமைப்பு
காமதேனு கன்றுடன் இருப்பது போன்ற அமைப்பை வாங்க முயற்சிக்கவும். அதிலும் குறிப்பாக கன்று காமதேனுவின் மடியில் பால் குடிப்பது போல் இருந்தால் கூடுதல் சிறப்பு. இப்படியான காமதேனு படம் இருந்தால் வீட்டிற்கு அள்ள அள்ள குறையாத செல்வமும் வளமும் கிடைக்கும். வீட்டில் உள்ள குழந்தைகள் நல்ல நிலையில் இருப்பார்கள். ராஜயோக வாழ்க்கை வாழ்வீர்கள். லட்சுமி கடாட்சம் பொருந்திய படமாக தேடி வாங்குங்கள்.

காமதேனு நன்மைகள்
காமதேனு படத்தை வீடு மற்றும் அலுவலகத்தில் மாட்டிக் கொள்ளலாம். வீட்டில் மகிழ்ச்சியையும் அலுவலகத்தில் தொழில் முன்னேற்றத்தையும் தரும். நாம் வைக்கும் இடத்தை பொருத்து காமதேனு செயல்படும். வீட்டில் வைத்தால் கணவன் - மனைவி உறவு, ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் சண்டை இருக்காது. பிரச்னை இருக்கும் குடும்பத்தின் வீட்டில் இந்த படத்தை மாட்டினால் பிரச்னை குறையும். சுபகாரியங்கள் தடையின்றி நல்லபடி நடக்கும்.


அலுவலகத்தில் காமதேனு படம் வைத்தால் தொழில் முன்னேற்றம் ஏற்படும், லாபம் இரட்டிப்பாகும்.
படம் உடைந்து அல்லது கீறல் இருக்க கூடாது. வீட்டில் ஏற்கெனவே இருக்கும் படம் பழசாகி விட்டால் அதை மாற்றிவிடவும்.
காமதேனு படம் வைக்கும் திசை
காமதேனுவின் தலை வீட்டிற்குள் நோக்கியவாறு வைப்பது நல்லது. வீட்டில் வடக்கு திசையில் காமதேனு படத்தை மாட்டுங்கள். வட மத்திய பகுதியில் அமைக்கவும். வட கிழக்கு திசையிலும் மாட்டிக் கொள்ளலாம். இப்படி வைத்தால் நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிபெறும்.

குருவின் ஆதிக்கம் பெற்றது வடக்கு பகுதி. அங்கு நாம் காமதேனு படம் வைக்கும் போது அபரிமிதமான பொருளாதார வளர்ச்சி ஏற்படும். சமூகத்தில் நன்மதிப்பு கிடைக்கும்.

வட கிழக்கு திசையில் காமதேனு படம் மாட்டுவதால் பண வரவு, தெளிவான சிந்தனை, எண்ண ஓட்டம் கிடைக்கும்.
தென் மேற்கு திசையில் காமதேனு படத்தை வைக்காதீர்கள். அப்படி செய்தால் வீட்டிற்கு வரவு குறைந்து செலவு அதிகமாகும்.
தென் கிழக்கில் மாட்டினால் ஆரோக்கிய சீர்கேடு, வம்பு வழக்கு, கணவன் மனைவி உறவில் பிரச்னை ஏற்படும்.
காமதேனு படத்தை யாருக்கும் பரிசளிக்காதீர்கள். அப்படி செய்தால் உங்கள் செல்வம் குறையும்.

உங்கள் அருகிலுள்ள மலிவான வீடுகள் – உங்களுக்கு பொருந்தக்கூடிய விளம்பரங்களை பாருங்கள்
ரியல் எஸ்டேட் | தேடல் விளம்பரங்கள்
|
Sponsored
கிழக்கு தாம்பரம் அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனைக்கு உள்ளன
Flats Sale
|
Sponsored
துபாயில் வில்லா விற்பனைக்கு உள்ளது (விலைகளைப் பாருங்கள்)
Villas in Dubai | Search ads
|
Sponsored
மாடுலர் கிச்சன் விலை 2025 (விருப்பங்களைப் பார்க்கவும்)
Modular Kitchen | Search ads
|
Sponsored
வடபழனியில் 2BHK பிளாட் விற்பனைக்கு உள்ளது (விலைகளைச் சரிபார்க்கவும்)
2BHK Flats For Sale in Vadapalani | Search Ads
|
Sponsored
नोएडा में बिक्री के लिए 3बीएचके फ्लैट की कीमतें आपको आश्चर्यचकित कर सकती हैं!
Flats For Sale in Noida
|
Sponsored
Most Searched
சித்திரை திருவிழா
ராகு கேது பெயர்ச்சி
தமிழ் புத்தாண்டு ராசிபலன்
பங்குனி உத்திரம்
திருமண பொருத்தம்
ரஜ்ஜு பொருத்தம்
Kamdhenu cow
Kamdhenu Vastu tips





HerZindagi
உணவு
ஸ்டைல்
ஆரோக்கியம்
பெண்கள் ஸ்பெஷல்
HZ குழுவினர்
The Daily Jagran
About Us
T&C
சமூக ஊடகத்தில் எங்களோடு இணையவும
HerZindagi

Copyright © 2025 Her Zindagi

This Website Follows The DNPA’s Code Of Conduct

For Any Feedback Or Complaint, Email To compliant_gro@jagrannewmedia.com


Close ad
Ad

காமதேனு பசு மற்றும் கன்று படத்தை வீட்டில் வைப்பதால் என்ன பலன்

காமதேனு பசு மற்றும் கன்று படத்தை வீட்டில் வைப்பதால் செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம். வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் உண்டாகும், மேலும் நேர்மறை ஆற்றல் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
பலன்கள்:
செல்வ வளம்:
காமதேனு பசு மற்றும் கன்று படத்தை வீட்டில் வைப்பது செல்வத்தை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
மகிழ்ச்சியும் செழிப்பும்:
இந்த படத்தை வீட்டில் வைத்திருந்தால், வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் உண்டாகும் என்று நம்பப்படுகிறது.
நேர்மறை ஆற்றல்:
காமதேனு பசு மற்றும் கன்று படத்தை வீட்டில் வைத்திருப்பது, வீட்டிற்கு நேர்மறை ஆற்றலை கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது.
குடும்ப ஒற்றுமை:
காமதேனு கன்றுடன் இருப்பதால், குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
குழந்தை பாக்கியம்:
சிலரது நம்பிக்கையின் படி, குழந்தை பேறு இல்லாத தம்பதியினருக்கு, காமதேனு கன்றுடன் கூடிய படத்தை வீட்டில் வைத்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.
காமதேனு படத்தை வைக்கும் முறை:
காமதேனு படத்தை பூஜை அறையில் வைக்கலாம் அல்லது வீட்டின் தென்கிழக்கு மூலையில் வைக்கலாம் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
கூடுதல் தகவல்கள்:
காமதேனு கன்றுடன் பால் குடிக்கும் படத்தை வைப்பது மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது.
பசு மற்றும் கன்று சிலைகளை ஒன்றாக வைப்பது நல்லது.
காமதேனு படத்தை வைத்து தினமும் வழிபடுவதும், மந்திரம் சொல்வதும் நல்லது என்று கூறப்படுகிறது.

வாலி, சுக்ரீவனை துன்புறுத்தி துரத்திய போது பலசாலியான அனுமன் ஏன் உதவவில்லை?


வாலி, சுக்ரீவனை துன்புறுத்தி துரத்திய போது பலசாலியான அனுமன் ஏன் உதவவில்லை? 

 வாலி, சுக்ரீவனைத் துன்புறுத்தி கிஷ்கிந்தையை விட்டுத் துரத்தியபோது ஆஞ்சநேயர் ஏன் சுக்ரீவனுக்கு உதவவில்லை? என்பது குறித்து ஸ்ரீராமபிரானே சொல்வதை கேளுங்கள். ஆஞ்சநேயரின் வரலாற்றை அகத்தியருக்கு சொல்லியிருக்கிறார்.

இணையத்தில் வந்தது என கூறி நானறிந்த ஆன்மீகம் எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஸ்ரீராமருக்கு, அகத்தியர் விளக்கிய 


ஸ்ரீராமபிரானின் பட்டாபிஷேகக் கொண்டாட்ட வைபவங்கள் முடிந்த பின், ஆசுவாசமாக ஸ்ரீராமபிரான்- ராவணாதியரின் பலம், தபம், வரம் முதலியவை பற்றிய சந்தேகங்களை அகத்திய மாமுனிவர் விளக்குவதாக, ஸ்ரீவால்மீகி ராமாயணத்தின் உத்தரகாண்டம் அமைந்திருக்கிறது.

ஸ்ரீராமர், ஒரு நியாயமான கேள்வியை எழுப்புகிறார்: "வாலி மிகுந்த பலசாலிதான். ராவணனையே தோற்கடித்து அவனைத் தனது கையில் இடுக்கிக்கொண்டு பல சமுத்திரங்களுக்கும் சென்று தனது நித்ய கர்மானுஷ்டானங்களைச் செய்து, ராவணனுக்குச் சொல்ல முடியாத துன்பத்தை அளித்தான். இருப்பினும் ஆஞ்சநேயன் - வாலி, ராவணன் இவர்களையும்விட மிகப் பலம் வாய்ந்தவர். அப்படியிருந்தும் வாலி, சுக்ரீவனைத் துன்புறுத்தி கிஷ்கிந்தையை விட்டுத் துரத்தியபோது ஆஞ்சநேயர் ஏன் சுக்ரீவனுக்கு உதவவில்லை?" என்று அகத்தியரிடம் கேட்கிறார்.

அப்போதுதான் ஸ்ரீராமருக்கு, ஆஞ்சநேயரின் வரலாற்றைக் கூறுகிறார் அகத்தியர்.

"அஞ்சனாதேவிக்கு ஆஞ்சநேயர் பிறந்தபோதே, மிகுந்த பலசாலியான குழந்தையாக விளங்கினார். அஞ்சனாதேவி, குழந்தைக்கு ஆகாரம் கொண்டு வரச் சென்றிருந்தபோது, மிகவும் பசியுடன் இருந்த குழந்தை ஆஞ்சநேயன், சூரியனை ஒரு பழம் என்று நினைத்து அதைப் பறித்து உண்ண விரும்பி சூரியனை நோக்கி வானில் பாய்ந்தார்.


ஆனால் சூரியன், ஸ்ரீராமபிரானுக்கு இந்த ஆஞ்சநேயன் உதவி செய்ய வேண்டுமென்பதை உணர்ந்து, குழந்தைக்குத் தீங்கு எதுவும் செய்யவில்லை. ஆனால், அன்றைக்குச் சூரிய கிரகணம். ராகு, சூரியனை விழுங்குவதாக ஏற்பாடு.

தனக்குப் போட்டியாக சூரியனை நெருங்கும் ஆஞ்சநேயனைப் பார்த்து வெகுண்ட ராகு, இந்திரனிடம் சென்று முறையிட்டார் (ஏனெனில், சூரியனைப் பிடிக்க விரும்பிய அனுமன், ராகுவையும் பிடிக்க முயன்றார்).

இந்திரன், ராகுவையும் அழைத்துக் கொண்டு மிகுந்த கோபத்துடன் அனுமனை அணுக, அவர் ஐராவதத்தையும் ஒரு பெரிய பழமென்று நினைத்து அதை நோக்கிப் பாய்ந்தார். இதனால் இன்னும் கோபமுற்ற இந்திரன், குழந்தை என்றும் பார்க்காமல், அனுமனைத் தனது வஜ்ராயுதத்தால் அடித்தார். அடியுண்ட அனுமன் இடது தாடை உடைபட்டு விழுந்தார். இறந்தது போலவே கிடந்தார்.

தனது மகன் இந்திரனால் தாக்கப்பட்டு உயிரிழந்ததுபோல் கிடந்ததைக் கண்டு வருந்திய வாயு பகவான், அந்தக் குழந்தையைத் தனது மடியில் கிடத்தியவாறு தனது இயக்கத்தை நிறுத்திவிட்டார். வாயுவின் இயக்கம் இல்லாததால், அனைத்து ஜீவராசிகளும் மிகவும் துன்பப்பட்டனர். இதற்கு தேவர்களும் கந்தர்வர்களும்கூட விதிவிலக்கல்ல. எனவே, அனைவரும் பிரம்மாவிடம் சென்று முறையிட அவர் அனைவரையும் அழைத்துக் கொண்டு வாயு பகவானிடம் வந்தார்.

இறந்து கிடந்த குழந்தையைக் கண்டு, பரிதாபமும் இரக்கமும் கொண்ட பிரம்மா தனது கரத்தால் அதைத் தடவிக் கொடுக்கவும், அனுமன் மீண்டு எழுந்தார். பிரம்மா அனைத்து தேவர்களையும் நோக்கி, 'இந்தக் குழந்தையால்தான், ராவணன் முதலிய அரக்கர்களால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பத்தைத் தீர்க்க முடியும். அதனால் இவனுக்கு வேண்டிய அளவு நல்ல வரமளியுங்கள். அதன்மூலம் வாயு பகவானும் திருப்தி அடைவார்' என்று சொன்னார்.

இதன்பின்னர் சூரியன், தனது ஒளியில் 100-ல் ஒரு பங்கை ஆஞ்சநேயருக்கு அருளினார். மேலும், தானே அனுமனுக்கு வேதங்கள், சாஸ்திரங்கள் அனைத்தையும் போதித்து, கல்வியில் சிறந்தவனாகச் செய்வதாக ஒப்புக் கொண்டார்.

வருணன் - காற்றாலோ, நீராலோ அவருக்கு மரணம் ஏற்படாது என்றார். யமதர்மன், யம தண்டத்திலிருந்தும் நோய்களினின்றும் அனுமன் பாதிக்கப்பட மாட்டார் என வரமருளினார். குபேரன், அனுமன் யுத்தத்தில் சோர்வே அடைய மாட்டார் என்றார். சிவபெருமான், தனது அஸ்திரங்களினாலோ, தனது கரங்களினாலோ மரணம் ஏற்படாது என்றார்.

விஸ்வகர்மா, தன்னால் இதுவரை செய்யப்பட்ட ஆயுதங்களாலோ, இனிமேல் தான் செய்யும் ஆயுதங்களாலோ ஆஞ்சநேயர் பாதிக்கப்பட மாட்டார் என்றார். பிரம்மதேவர், ஆஞ்சநேயர் சிரஞ்சீவியாக இருப்பார் என்றும், பிராமணர்களால் சாபம் அளிக்கப்பட மாட்டார் என்றும் அருளினார். மேலும், அனுமன் தான் விரும்பிய வடிவம் எடுக்கவும், ஒருவரிடமும் பயமோ, யுத்தத்தில் தோல்வியோ அடைய மாட்டார். நினைத்த இடத்துக்கு நினைத்த வேகத்தில் அவரால் செல்ல முடியும் என்றும் வரமளித்தார். இந்த வரங்களினால் திருப்தியுற்ற வாயு பகவான் தனது இயக்கத்தைத் தொடங்கினார்.

தனக்களிக்கப்பட்ட வரங்களால் பெருமை கொண்ட அனுமன், காட்டில் தவம், யாகம் செய்துவந்த முனிவர்களுக்கு விளையாட்டாக மிகவும் தொல்லை கொடுக்கவே, அவர்கள் அனுமனுக்குத் தனது பலம் தெரியாமல் இருக்கவும், யாராவது அதைப் பற்றி நினைவுறுத்தினால் மட்டுமே அதை அவர் உணர முடியும் என்று சொல்லி, அவர் தனது உண்மையான பலத்தைப் பற்றி அறியாதவாறு செய்துவிட்ட படியால்தான், ஆஞ்சநேயரால் தனது பலத்தை உணர்ந்து சுக்ரீவனுக்கு உதவ முடியாமல் போனது" என்று ஸ்ரீராமபிரானுக்கு விளக்குகிறார் அகத்தியர். இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.


Wednesday, 18 June 2025

அசைவம் சாப்பிட்டு கோயிலுக்கு ஏன் போகக்கூடாது தெரியுமா?


அசைவம் சாப்பிட்டு கோயிலுக்கு ஏன் போகக்கூடாது தெரியுமா? பூஜை செய்யலாமா? ஆன்மீகம் சொல்லும் உண்மை என்ன

  
சென்னை: அசைவம் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு போகக்கூடாது என்று சொல்கிறார்களே என்ன காரணம் தெரியுமா? அசைவ உணவுகளை சாப்பிட்டுவிட்டு வீட்டிலுள்ள பூஜைகளை செய்யலாமா? அசைவம் சாப்பிட்டுவிட்டு திடீரென கோவிலுக்கு போக வேண்டி நேர்ந்தால் என்ன செய்வது? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்ப்போம்.


நம்முடைய உணவுக்கும், மனதிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உதாரணத்துக்கு தயிர் அதிகமாக சாப்பிட்டால் சிலருக்கு தூக்கம் வருவது போல தோன்றும், காரம் அதிகமாக சாப்பிட்டால் கோபம் வருவது போல தோன்றும்..



மந்தத்தன்மை
அதுபோல அசைவ உணவுகளை சாப்பிடும்போது, அது மந்தநிலையை ஏற்படுத்திவிடும். உடல் மட்டுமல்ல, மனமும் சுத்தமாக இருக்க வேண்டும்.. கோயிலுக்கு செல்லும்போதும் மனம், உடம்பு சுத்தமாக இரக்க வேண்டும். மனதளவில் மந்தத்தன்மையை வைத்துக் கொண்டு, கோயிலுக்குள் சென்றால், அங்குள்ள சக்திகளை உணர முடியாது..


ஏனென்றால், அசைவ உணவுகள் சூட்சும சக்தியை உணரும் ஆற்றலை குறைத்துவிடுமாம். எனவேதான், எளிய உணவுகளை அதாவது விரைந்து ஜீரணமாக கூடிய உணவுகளை சாப்பிட்டுவிட்டு கோயிலுக்கு போக சொல்வார்கள்.

இரக்க குணம்
இதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.. இரக்க குணம் நிறைந்த இடத்தில் நிச்சயம் பக்தி இருக்கும். பக்தி உள்ள இடத்தில் கடவுளும் இருப்பார் என்பதால் அசைவம் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு செல்ல கூடாது என்கிறார்கள்.

ஒருவேளை அசைவ உணவை சாப்பிட்ட பிறகு கோயிலுக்குச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டால், சாப்பிட்ட 3 அல்லது 4 மணி நேரத்திற்கு பிறகு குளித்துவிட்டு கோயிலுக்கு செல்வது நல்லது. முனீஸ்வரன், சுடலை மாடன் போன்ற அசைவ உணவு படையல்களை ஏற்கின்ற கிராம தெய்வங்கள், காவல் தெய்வங்கள் இருக்கும் கோயில்களுக்கு அசைவ உணவு சாப்பிட்டு செல்வதால் எந்த ஒரு பாதகங்களும் இல்லை.

பூஜையறை விளக்குகள்
ஆனால், அசைவம் சாப்பிட்டுவிட்டு வீட்டின் பூஜையறை விளக்குகளையும் ஏற்றக் கூடாது.. மறுநாள் குளித்து, வீட்டை சுத்தம் செய்துவிட்டுதான் விளக்கு ஏற்ற வேண்டும்.. அசைவம் சாப்பிட்டுவிட்டு பக்தி புத்தகங்களைகூட படிக்க கூடாது என்பார்கள்.

அதுபோலவே, ருத்ராட்சம் அணிந்து கொண்டு அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.. ஒருவேளை பெண்கள் ருத்ராட்சம் அணிந்திருந்தாலும், சமைக்கும் நேரங்களில் தவிர்த்துவிட்டு, பூஜை நேரங்களில் மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.


Sunday, 15 June 2025

தனுசு ராசியில் சூரியன், புதன் மற்றும் சுக்கிரன்

தனுசு ராசியில் சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் சேர்க்கை இருந்தால், அது ஒருவருடைய ஜாதகத்தில் பலவிதமான பலன்களைத் தரலாம். இது பொதுவாக ஒருவரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி, வெற்றி, மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. குறிப்பாக, இந்த சேர்க்கை கல்வி, கலை, மற்றும் சமூக வாழ்க்கையில் சிறந்து விளங்க உதவும். 
இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கையால், ஒரு நபர் புத்திசாலியாகவும், ஆற்றல் மிக்கவராகவும், சமூகத்தில் பிரபலமாகவும் இருப்பார். இவர்கள் தைரியமாகவும், தன்னம்பிக்கையுடனும் இருப்பார்கள். கலை மற்றும் இலக்கியத்தில் ஆர்வம் இருக்கும். இவர்கள் தங்கள் வாழ்க்கையில் பல சாதனைகளைச் செய்வார்கள். 
சூரியன்:
சூரியன் ஒருவரின் ஆளுமை, தலைமைப் பண்பு, மற்றும் ஆற்றலைக் குறிக்கிறது. தனுசு ராசியில் சூரியன் இருப்பது, ஒருவரை தைரியமானவராகவும், தன்னம்பிக்கை உள்ளவராகவும் ஆக்கும்.
புதன்:
புதன் ஒருவரின் அறிவு, தொடர்பு, மற்றும் பேச்சுத் திறனைக் குறிக்கிறது. தனுசு ராசியில் புதன் இருப்பது, ஒருவரை புத்திசாலியாகவும், நல்ல பேச்சாளராகவும் ஆக்கும்.
சுக்கிரன்:
சுக்கிரன் ஒருவரின் காதல், அழகு, மற்றும் கலைத் திறனைக் குறிக்கிறது. தனுசு ராசியில் சுக்கிரன் இருப்பது, ஒருவரை கலைகளில் ஆர்வம் உள்ளவராகவும், சமூகத்தில் பிரபலமாகவும் ஆக்கும்.
இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கையால், ஒரு நபர் தன் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், வெற்றியையும் அடைவார்.