jaga flash news

Sunday, 21 September 2025

ஆடி, தை அமாவாசை தர்ப்பணத்திற்கும், புரட்டாசி அமாவாசை தர்ப்பணத்திற்கும் என்ன வித்தியாசம்?


ஆடி, தை அமாவாசை தர்ப்பணத்திற்கும், புரட்டாசி அமாவாசை தர்ப்பணத்திற்கும் என்ன வித்தியாசம்?
ஆடி அமாவாசை, தை அமாவாசையில் கொடுக்கும் தர்ப்பணத்திற்கும் மகாளய அமாவாசையில் கொடுக்கும் தர்ப்பணத்திற்கும் என்ன வித்தியாசம் என்பதை பார்க்கலாம். இதை தெரிந்து கொண்டு இந்த மகாளய புண்ணிய அமாவாசையில் மறக்காமல் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுங்கள்.


மகாளய அமாவாசை இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் நாம் நம் முன்னோர்களுக்கு நம்மால் முடிந்த வரையில் தர்ப்பணம் செய்து படையலிட்டு வழிபட வேண்டும். அவரவர் குடும்ப வழக்கத்தின்படி இதை செய்யலாம்.


spirtuality mahalaya amavasya 2025 2025
Also Read
Mahalaya Amavasai Do's and Don'ts: மகாளய அமாவாசைக்கு என்னென்ன செய்யக் கூடாது! வாசலில் கோலமிடலாமா?
"Mahalaya Amavasai Do's and Don'ts: மகாளய அமாவாசைக்கு என்னென்ன செய்யக் கூடாது! வாசலில் கோலமிடலாமா?"
இந்த பூமிக்கு நாம் 3 கடன்களை செய்ய வந்திருக்கிறோம். தேவ ருணம், ரிஷி ருணம், பித்ரு ருணம். தேவ ருணம் என்பது நாம் பூஜை செய்வதால் அது கழிந்து விடுகிறது. ரிஷி ருணம் எப்படியெல்லாம் நாம் வழிபட வேண்டும் என்பதை ரிஷிகள் சொல்லி நாம் செய்கிறோம்.

Powered By Logo
Gold Price குறையுமா? | America வெளியிட்ட ஒரு அறிவிப்பு! இப்போது Gold வாங்கலாமா? காத்திருக்கலாமா?
பித்ருருணம் என்பது தாய், தந்தையர் உயிருடன் இருக்கும் வரை அவர்களின் பேச்சை கேட்டு நடப்பது, அவர்கள் மறைந்த பிறகும், அவர்கள் கூறியதை பின்பற்றுவதாகும். அது போல் தர்ப்பணம் எனும் கடமையையும் செய்ய வேண்டும். மாதாமாதம் தர்ப்பணம் கொடுக்க முடியாவிட்டாலும் மகாளய அமாவாசைக்கு கொடுப்பது நல்லது.

ஆண்டுதோறும் தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை என 3 அமாவாசைகள் முக்கியமானது. இந்த மூன்று அமாவாசைகளிலும் முக்கியமாக திதி கொடுக்க வேண்டும். அதில் மகாளய அமாவாசைக்கு கொடுக்கும் திதி மட்டும் வித்தியாசமானது.

Recommended For You
Mahalaya Amavasya 2025: மகாளய அமாவாசை என்றால் என்ன? புரட்டாசி மாதத்தில் வருவதற்கு என்ன சிறப்பு?
"Mahalaya Amavasya 2025: மகாளய அமாவாசை என்றால் என்ன? புரட்டாசி மாதத்தில் வருவதற்கு என்ன சிறப்பு?"
தை, ஆடி அமாவாசைகளில் கொடுக்கும் திதியானது சம்பந்தப்பட்டவருக்கு மட்டும் போய் சேர கூடியது. உதாரணமாக, அப்பா, அம்மாவுக்கு திதி கொடுப்பதாக இருந்தால் அவர்களுக்கு மட்டும் இந்த திதி போகும். ஆனால் மகாளய அமாவாசை அன்று திதி கொடுத்தால் 21 தலைமுறையினருக்கும் திதி கொடுத்த புண்ணியத்தை கொடுக்கும்.


உங்கள் தலைமுறைகளில் யாராவது முன்னோர்களுக்கு திதி கொடுக்காமல் விட்டு அதனால் பித்ரு சாபம் இருந்தாலும் மகாளய அமாவாசைக்கு திதி கொடுத்தால் அந்த சாபம் நீங்கி உங்கள் வீடுகளில் சுபிட்சம் உண்டாகும்.

நம் முன்னோர்கள் நம் வீடு தேடி வந்து நமது தர்ப்பணத்தை ஏற்றுக் கொள்ளும் அமாவாசைதான் புரட்டாசி அமாவாசை. சூரிய உதயத்திற்கு பிறகுதான் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். பகல் 12 மணிக்குள் தர்ப்பணம் கொடுத்து முடித்துவிட வேண்டும்.

You May Also Like
Mahayala Amavasai 2025: மகாளய அமாவாசை! தர்ப்பணம் கொடுக்க உகந்த நேரம் எது? சூரிய ஓரையை விடாதீங்க!
"Mahayala Amavasai 2025: மகாளய அமாவாசை! தர்ப்பணம் கொடுக்க உகந்த நேரம் எது? சூரிய ஓரையை விடாதீங்க!"
வாழைக்காய், அரிசி தானம் கொடுப்போருக்கு வாழ்க்கையில் உணவுக்கு பஞ்சமே இருக்காது என்பார்கள். மறந்து போனவனுக்கு மகாளம் என்பார்கள். அது போல் பெற்றோர்களின் திதி தெரியாதவர்கள் புரட்டாசி அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுக்கலாம். நம் முன்னோர்கள் ஆசி இருந்தால் எந்த தீயவினைகளும் நம்மை அண்டாது என்பதை மறக்காதீர்கள்.

மகாளய அமாவாசை அன்று வெங்காயம், வெள்ளைப் பூண்டு, முருங்கைக்காய், முள்ளங்கி போன்ற காய்கறிகள் சேர்க்காமல் சமையல் செய்து விரதம் இருந்து அன்னதானம் செய்துவிட்டு சாப்பிட வேண்டும். மகாளய அமாவாசை அன்று எள்ளையும் சுத்தமான தண்ணீரையும் கரைத்து விடுவதுதான் சிறப்பு.

இவ்வாறு நாம் இறைக்கும் நீரானது, எத்தனையோ கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள பித்ரு லோகத்தை அடைகிறது. தர்ப்பணம் கொடுப்பதில் மிகவும் முக்கியமானது பிண்டதானம். மூன்று தலைமுறை முன்னோர்கள் அல்லது 21 தலைமுறை முன்னோர்களை நினைத்து அந்த எண்ணிக்கையில் கருப்பு எள், நெய், தேன் ஆகியவற்றை சாதத்துடன் அல்லது மாவுடன் கலந்து உருண்டைகளாக பிண்டம் பிடித்து வைத்து அதை முன்னோர்களுக்கு அர்ப்பணித்து பிறகு அதை நீர் நிலைகளில் எடுத்துச் சென்று கரைக்க வேண்டும்.



Thursday, 4 September 2025

திருமணத்தில் பந்தக்கால் ஊன்ற இதுதான் காரணம்


கல்யாண வீடுகளில் முகூர்த்தக்கால் நடுவது ஏன் தெரியுமா? திருமணத்தில் பந்தக்கால் ஊன்ற இதுதான் காரணம்

பெரியோர்களால் சுற்றம் சூழ நடத்தப்படும் திருமணம் அங்கீகரிக்கப்பட்ட திருமணம் என்பதை குறிப்பதற்காகவே, திருமணத்திற்கு முன்பு பந்தக்கால் அல்லது முகூர்த்தக்கால் ஊன்றப்படும் வழக்கம் நம்முடைய வழக்கத்தில் இருந்து வருகிறது. இப்படி முகூர்த்த கால் நடப்பட்ட பிறகு துக்க நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ள கூடாது என்ற கட்டுப்பாடும் நடைமுறையில் இன்றுவரை உள்ளது. திருமண வைபவங்களில் இந்த முகூர்த்தக்கால் ஊன்றப்பட என்ன காரணம்? இவைகளை பற்றி சுருக்கமாக பார்க்கலாம்.


அன்றைய அரசர்கள் ஆட்சி புரிந்த காலத்தில் திருமணம் செய்யும்போது அரசனுக்கும் அழைப்பிதழ் அனுப்புவார்கள். அப்படி அழைப்பு தந்த அனைவரின் திருமணத்துக்கும் அரசரால் சென்றுவர இயலாது.



ஆணைக்கோல் ஆசீர்வாதம்
அதனால் தன்னுடைய சார்பாக அவர் ஆணைப்படி ஆணைக்கோலை அனுப்பி வைப்பார். அரசரின் ஆணைக்கோல் வந்துவிட்டால் அரசனால் அந்தத் திருமணம் அங்கீகரிக்கப்பட்டதாக நினைத்து அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள்.. அரசு ஆணைக்கோல் என்பதே பின்னாளில் மருவி, அரசாணைக்கோல் ஆகிவிட்டது..


பொதுவாக, வீடுகளில் திருமணம் என்றாலே, முகூர்த்த நாளுக்கு 5 நாட்களுக்கு முன்பு வீட்டின் ஈசான்ய மூலையில் பந்தக்கால் நடுவார்கள்.. இந்த பந்தக்கால் நடுவதற்கு மூங்கில் மரம், துளிர்விடும் பலா மரம், கல்யாண முருங்கை போன்றவைகளில் ஏதாவது ஒன்று பயன்படுத்துவார்கள்.

பச்சை மூங்கில்
இதற்கு காரணம், மூங்கில் அல்லது துளிர்விடும் பலா மரம் செழித்து வளர்வது போல, மணமக்களும் தங்கள் வாழ்க்கையில் செழித்து வளர வேண்டும் என்பதே இதன் அர்த்தமாகும்.. பெரும்பாலும் பச்சை மூங்கிலை வெட்டி முகூர்த்தக்கால் நடப்படுகிறது. ஏனென்றால், மூங்கிலைப் போல் வம்சம் விருத்தி அடைய வேண்டும் எனவும், இரு பக்கம் வாழை மரம் கட்டுவார்கள். வாழையடி வாழையாக குடும்பம் வளரவேண்டும் என்பதற்காகவும் இம்முறை கடைப்பிடிக்கப்படுகிறது.



அதேபோல, சிவனுக்குரிய திசையாக ஈசானிய மூலை கருதப்படுவதால், சிவனின் அருளுடன் திருமணம் நடந்து முடிக்கவே வடகிழக்கு மூலையில் பந்தக்கால் நட்டு வைக்கப்படுகிறது.

முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி
திருமணம் மட்டுமல்லாமல், சுப நிகழ்ச்சிகள், கோவில்களில் திருவிழாக்கள் துவங்குவதற்கு முன்பும் பந்தக்கால் அல்லது முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நடத்தப்படுகின்றன..

அப்படி பந்தக்கால் வைக்கும்போது, மேற்கண்ட மரத்திலுள்ள ஒரு கிளையை வெட்டி அதிலுள்ள இலைகளை அகற்றிவிட்டு அந்த மரத்தின் நுனியில் ஐந்து மாவிலைகளை மஞ்சள் பூசிய கயிறால் கட்டிவிட வேண்டும்.. பிறகு, மஞ்சள் பூசி, சந்தனம், குங்குமம் வைத்து, ஒரு வெள்ளை துணியில் செப்புக்காசை முடிந்து நடவேண்டும்..


மஞ்சள் பிள்ளையார்
பந்தக்கால் நடும் குழியில் பூக்கள் சாத்தி, தேங்காய் உடைத்து சாம்பிராணி கற்பூரம் காட்டி பூஜை செய்ய வேண்டும். பிறகு, அந்த குழிக்குள் நவதானியங்களையும், பாலையும் ஊற்றுவார்கள்.. பிறகு, மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து வெற்றிலை பாக்கு மற்றும் பழம் வைத்து தேங்காய் உடைத்துத் தீபம் காட்டி பிறகு பந்தக்காலை நிலத்தில் ஊன்றுவார்கள்..

பந்தக்கால் நட்ட பிறகும்கூட, பந்தல் போடும் வேலையும் தொடர்ந்து செய்வார்கள்.. பிறகு உறவினர்களுடன் சேர்ந்து இருவீட்டாரும் அவரவர் வீட்டில் விருந்து சாப்பிடுவார்கள்.. ஆனால், முகூர்த்தக்கால் ஊன்றிய பின் இருவீட்டாரும் திருமணச் சடங்குகள் முடியும் வரை எந்தவிதமான துக்க நிகழ்ச்சிகளிலும் பங்குபெறுதல் கூடாது என்பார்கள்.

பிரம்மா, விஷ்ணு, சிவன் மும்மூர்த்திகள்
இது பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளையும் வழிபட்டு தொடங்குவதாக தாத்பர்யமாகும். அதாவது முகூர்த்த காலின் அடிப்பாகத்தில் பிரம்மாவையும், நடு பாகத்தில் விஷ்ணுவையும், உச்சியில் பரமேஸ்வரனையும் தியானித்து, ஆவாஹணம் செய்து அந்த விழா நடந்தேறும் வரை இவர்கள்தான் துணையிருந்து காத்தருள வேண்டும் என்ற பிரார்த்தனையை முன்வைத்துத்தான் முகூர்த்தக்கால் என்பது நடப்படுகிறது.