jaga flash news

Saturday, 22 November 2025

திருமண வயது – பரல்கள் வைத்து எப்படிக் காண்கிறார்கள்?

திருமண வயது – பரல்கள் வைத்து எப்படிக் காண்கிறார்கள்?

* சர்வாஷ்டவர்க்கத்தில் சுக்கிரன் (சுக்ரன்) இருக்கும் ராசியில் எத்தனை பரல்கள் இருக்கிறதோ, அந்த எண்ணை வயதாகக் கொண்டு, அந்த வயதில் திருமண வாய்ப்பு அதிகம் என்றுக் கூறுவார்கள். 

* லக்னத்திலிருந்து 7‑ஆம் வீட்டிற்கு (களத்திரஸ்தானம்) வரையிலான வீடுகளின் பரல்களை கூட்டி, அந்த எண்ணை முக்கிய திருமண வயது/காலமாக எடுத்துக் கொள்கிறார்கள். 

Tuesday, 11 November 2025

மந்திரங்களை எழுதுவது


  "ஓம்", "ஸ்ரீ கணேசாய நமஹ", "ஜெய் ஸ்ரீ ராம்", "ஹரி ஓம்" போன்ற ஆன்மீக மந்திரங்களை கார், பைக், லாரி போன்ற வாகனங்களின் முன்புறம் அல்லது பின்புறத்தில் எழுதுவது இன்று பலரின் வழக்கமாகியுள்ளது. ஆனால், இது சாஸ்திரப்படி சரியா? புனிதத்தைக் காக்கும் முயற்சியா அல்லது அவமதிப்பா? - என்ற கேள்விக்கு, குஜராத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற ஆன்மீக குரு சுவாமி பிரேமானந்த மகாராஜ் தன் கருத்தை பகிர்ந்துள்ளார்.

 "மந்திரங்களை எழுதுவது தவறல்ல, ஆனால் அவற்றை மரியாதையுடன் கையாள வேண்டும். ஓம் என்பது பிரபஞ்சத்தின் அடிப்படை ஒலி; அது சிவத்தையும் சக்தியையும் குறிக்கும் சின்னம். எனவே, அந்த மந்திரங்களை தரையை நோக்கி, சேறு அல்லது சகதியால் மாசுபடும் இடங்களில் எழுதுவது தவறு. வாகனத்தின் கீழ்புறம், பம்பர் அல்லது அடித்தளத்தில் எழுதுவது சாஸ்திரத்திற்கு ஒவ்வாதது. ஆனால், விண்ட்ஷீல்டின் மேல்மூலை, டாஷ்போர்டின் தூய இடம், சைடு மிரர் போன்ற மதிப்புடன் பார்க்கப்படும் இடங்களில் சிறிய ஸ்டிக்கர் அல்லது தாயத்தை வைத்துக் கொள்ளலாம். முக்கியமாக, மந்திரத்தை அலங்காரமாக அல்ல, பக்தியுடனும் நம்பிக்கையுடனும் எழுத வேண்டும்," என அவர் கூறினார்.



அவர் மேலும் விளக்குகையில், "தந்திர சாஸ்திரங்கள் படி, யந்திரம் மற்றும் மந்திரம் எப்போதும் மேல் நோக்கி இருக்க வேண்டும். கீழ்நோக்கி இருந்தால் அதன் சக்தி குறையும் என்பது நம்பிக்கை. ஆனாலும், நவீன காலத்தில் ஆன்மீகத்தை வாழ்க்கையிலிருந்து பிரிக்கக் கூடாது. வாகனத்தில் மந்திரம் இருப்பது ஓட்டுநருக்கு மனஅமைதியையும் உளவியல் காப்பையும் அளிக்கிறது. அது சாலையில் கோபம், வேகம், சண்டை போன்றவற்றை குறைக்க உதவுகிறது," என்றார்.


"சிலர் வாகனங்களில் 'ஜெய் ஸ்ரீ ராம்', 'இயேசு மட்டுமே தெய்வம்', 'ஓம் நமஹ சிவாய' போன்ற மந்திரங்களை மற்ற மதத்தினருக்கு சவால் விடும் தொனியில் எழுதுகின்றனர். இது ஆன்மீகம் அல்ல, அது அக்கிரமம். மந்திரம் என்பது அமைதி, காப்பு, ஆசீர்வாதம். அதனை ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாது." சிறிய அளவில் ஓம் அல்லது கணபதி ஸ்டிக்கர் போன்றவற்றை வாகனத்தின் மேல் பகுதியில் வைத்துக் கொள்ளலாம்; பூஜை செய்தபின் தாயத்து வைப்பது சிறந்தது; தினசரி வாகன பூஜை செய்யும் பழக்கம் நல்லது. அதேவேளை, பெரிய எழுத்துகளில் ஹூட் அல்லது பம்பரில் எழுதுவது தவறு; மந்திரத்தின் அருகே புகைபிடித்தல், வசைபாடுதல் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்.


"வாகனம் கடவுளின் தேர் அல்ல, ஆனால் கடவுளின் காப்பு தேவைப்படும் இடம். மந்திரம் எழுதுவது என்பது அப்பாவின் ஆசீர்வாதம், அம்மாவின் பிரார்த்தனை, குடும்பத்தின் பாதுகாப்பு வேண்டுதல் போன்ற புனிதமான உணர்வுகளுடன் இருக்க வேண்டும். அதை மரியாதையுடன் வைத்தால் அது சாஸ்திரத்திற்கும் ஆன்மீகத்திற்கும் ஏற்பாகும்."


அத்துடன், இந்திய சாலை போக்குவரத்து விதிகளின்படி, விண்ட்ஷீல்டில் எழுத்துகள் ஓட்டுநரின் பார்வையை மறைக்கக் கூடாது என்பதையும் அவர் நினைவூட்டினார். எனவே, மந்திர ஸ்டிக்கர்கள் மேல் மூலையில் மட்டுமே வைக்க அனுமதி உள்ளது. "ஓம் பூர்ணமத: பூர்ணமிதம்... பூர்ணாத் பூர்ணமுதச்சதே..." - பூரணமான பாதுகாப்பும் அமைதியும் ஒவ்வொரு பயணத்திலும் நிலைத்திருக்கட்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



Wednesday, 5 November 2025

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 7 உணவுகள் பற்றி இங்கு அறிந்து கொள்வோம்.


குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 7 உணவுகள் பற்றி இங்கு அறிந்து கொள்வோம்.

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 7 உணவுகள் பற்றி இங்கு அறிந்து கொள்வோம்.

உங்கள் குடலின் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்கள் செரிமானம் உங்கள் உணவுப் பழக்கத்தின் கண்ணாடியாகும். குடல் நுண்ணுயிர் (அல்லது மைக்ரோபயோட்டா) எனப்படும் உங்கள் குடலில் உள்ள பெரும்பாலான பாக்டீரியாக்கள் நுண்ணுயிரிகளாகும். உங்கள் ஆரோக்கியத்துக்கு, உங்கள் உணவுக்கும் பாக்டீரியாவுக்கும் இடையே தொடர்பை வைத்திருப்பது முக்கியம். இந்த பாக்டீரியாக்கள் உங்கள் வயிற்றில் ஒரு ஆரோக்கியமான சூழலை பராமரித்தால் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கு உதவும்.


ப்ரீபயாடிக்குகள், உங்கள் வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களுக்கு உணவளிக்க உதவும் உணவுகள். சூப்பர்ஃபுட்ஸ் மற்றொரு உணவுக் குழுவாகும். சூப்பர்ஃபுட்கள் ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் உங்கள் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும் என்றும் கருதப்படுகிறது. உங்கள் குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் சில சத்தான சூப்பர்ஃபுட்களை நாங்கள் பகிர்ந்துள்ளதால்


சிறந்த குடல் ஆரோக்கியத்துக்காக உங்கள் உணவில் சேர்க்க வேண்டிம் 

1. பூண்டு

பூண்டு அதன் சுவையான சுவை காரணமாக பெரும்பாலான உணவு வகைகளில் சமையலில் மிக முக்கியமான அங்கம் வகிக்கிறது. அல்லிசின், செலினியம், பாஸ்பரஸ், கால்சியம், துத்தநாகம், குரோமியம், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கள் சி மற்றும் பி காம்ப்ளக்ஸ் ஆகியவற்றிலும் அதிகமாக உள்ளது. பூண்டில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. பூண்டு கல்லீரலையும் பித்தப்பையையும் சுத்தப்படுத்துகிறது. நோயெதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்துகிறது, எல்டிஎல் கொழுப்பைக் குறைக்கிறது, குடலில் உள்ள ஒட்டுண்ணிகளைக் கொல்லுகிறது.

2. பச்சை இலை காய்கறிகள்

வைட்டமின் சி, கே, பி காம்ப்ளக்ஸ், ஃபோலிக் அமிலம், பீட்டா கரோட்டின், இரும்பு, அயோடின், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், சல்பர் மற்றும் குளோரோபில் ஆகியவற்றில் நிறைந்திருப்பதைத் தவிர, இலை கீரைகள் வலுவான ப்ரீபயாடிக் விளைவைக் கொண்டுள்ளன. அழற்சி எதிர்ப்பு உணவாக இருப்பதுடன், இலை கீரைகள் ஐபிஎஸ் மற்றும் கிரோன் நோய் போன்ற செரிமான மண்டல நிலைமைகளை தணிக்கும். கீரை போன்ற உணவுகளை சாலடுகள், பாஸ்தா, மிருதுவாக்கிகள் அல்லது கறிகளில் பருப்பு போன்ற மற்ற சூப்பர்ஃபுட்களுடன் சேர்த்துக்கொள்ள முயற்சிக்கவும்.

3. எலுமிச்சை

எலுமிச்சையில் பெக்டின் நார்ச்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எலுமிச்சை முழு உடலுக்கும் ஒரு அற்புதமான இயற்கை சுத்தப்படுத்தி மற்றும் ஆரோக்கியமான நோயெதிர்ப்பு அமைப்புக்கு உதவுகிறது. சிறிது எலுமிச்சை சாறுடன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீர் நாள் தொடங்க சிறந்த வழி. இது சாதாரண குடல் இயக்கங்களை ஆதரிக்கிறது. குடல் இயக்கமான பெரிஸ்டால்சிஸ்ஸை தூண்டுவதற்கு உதவுகிறது.


4. முழு தானியங்கள்

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக, முழு தானியங்கள் நமது உணவில் பிரதானமாகச் செயல்பட்டு வருகின்றன. உங்கள் செரிமான அமைப்பு சீராக செயல்பட வேண்டுமானால், உங்கள் வழக்கமான உணவில் முழு தானியங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பிற நுண்ணூட்டச்சத்துக்கள் முழு தானியங்களில் ஏராளமாக உள்ளன. தானிய இழைகள் உங்கள் குடலுக்கு உதவியாக இருக்கும், ஏனெனில் அவை உங்கள் ஆரோக்கியமான குடல் பாக்டீரியாவை வளர்க்கும் ப்ரீபயாடிக்குகளாக செயல்படுகின்றன. மலத்தை மென்மையாக்குவதன் மூலம், முழு தானியங்கள் மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவுகின்றன.

5. சியா விதைகள்

சியா விதைகளில் உணவு நார்ச்சத்து அதிகம் உள்ளது. சியா விதைகள் சாப்பிட்ட பிறகு வயிற்றில் ஒரு ஜெல் போன்ற பொருளை உருவாக்குகிறது, இது ஒரு ப்ரீபயாடிக் ஆக செயல்படுகிறது. இது குடலில் நன்மை பயக்கும் பாக்டீரியா தாவரங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. கூடுதலாக, அவற்றின் நார்ச்சத்து மலச்சிக்கலை அகற்ற உதவுகிறது.

6. கொய்யா

இந்தப் பழத்தின் மிருதுவான தன்மையும் இனிப்பு-புளிப்புச் சுவையும் வயிற்றுப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு உதவக்கூடும். நார்ச்சத்து மற்றும் வைட்டமின்களின் சிறந்த ஆதாரம் கொய்யா. இது குடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நன்மை பயக்கும். கொய்யா விதைகள் ஒரு சக்திவாய்ந்த மலமிளக்கியாகும், இது எளிதாக குடல் இயக்கத்தை எளிதாக்குகிறது. இந்த புத்துணர்ச்சியூட்டும் பழம் ஒரு கோடை-சன்னி நாளுக்கு ஏற்றது .


7. தயிர்

தயிர் மிகவும் பாப்லர் குடல் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாகும். உயிருள்ள, நன்மை பயக்கும் பாக்டீரியா என்றும் குறிப்பிடப்படும் புரோபயாடிக்குகள், தயிரில் ஏராளமாக உள்ளன. தயிர் புளித்த பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது, இது செரிமானத்தை மேம்படுத்தவும் ஆரோக்கியமான செரிமான மண்டலத்தை பராமரிக்கவும் உதவுகிறது. தயிர் ஒரு ஆரோக்கியமான காலை உணவாகும். தயிரை பழத்துடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

உங்கள் குடல் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் கட்டுக்குள் இருப்பதை உறுதிசெய்ய, இந்த சத்தான சூப்பர்ஃபுட்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்

Tuesday, 4 November 2025

புத்திர தோஷம் என்றால் என்ன?


புத்திர தோஷம் என்றால் என்ன?
          ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும் முழுமை பெற வைப்பது குழந்தை செல்வமே. திருமணமான ஒவ்வொரு தம்பதியினரும் அடுத்து எதிர்பார்ப்பதும் ஓரு குழந்தையைத்தான். ஏழை முதல் பணக்காரர் வரை எல்லோருமே தனக்கு ஒரு வாரிசு பிறப்பதை  பெரிய பாக்கியமாகக் கருதுகின்றார்கள்.  யாருமே தங்களுக்கு குழந்தை செல்வம் வேண்டாம் என்று மனதளவில் கூட நினைப்பதில்லை. என்பதே உண்மை. ஆனால், இல்லை ஒரு பிள்ளை என்று ஏங்குபவர்கள்  பலர் உண்டு இவ்வுலக வாழ்க்கையில்

          நடைமுறையில் தம்பதிகளுக்கு குழந்தை பிறக்காத யோகத்தை புத்திர தோஷம் என்று சொல்கிறார்கள். ஆனால் ஜோதிடப்படி குழந்தை பெற்ற பின்னரும் அந்த பிள்ளை இடையிலேயோ அல்லது வாலிப வயதிலேயோ இறந்து போனாலும் அது புத்திர தோஷமே. சில பெற்றோர்களுக்கு பிள்ளைகளே அவமான சின்னமாய் ஆகிவிடுவதுண்டு. சில பிள்ளைகளால் கோர்ட், கேஸ் என பெற்றோர்கள் அலைய நேரிடும். இதுவும் புத்ர தோஷமே!. பிள்ளைகளால் தீராத சண்டை சச்சரவுகளில் சிக்கி சீரழிந்து நிம்மதியை இழக்க வைக்கும் யோகமும் சிலருக்கு அமைவதுண்டு.  இதுவும் புத்ர தோஷமே. சிலருக்கு பிள்ளைகளால் ஏராளமான செலவுகளை தொடர்ந்து ஏற்படுத்தி பெற்றோரகளுக்கு கடுமையான விரயங்களையும் சோகத்தையும் கண்ணீர் சிந்த வை்ப்பதையும் புத்திர தோஷம் என்றே சொல்லலாம்.

          பெற்றோர்களுக்கு பிள்ளைகளால்  ஏற்படும் தொல்லைகளே புத்ர தோஷம் ஆகும்.. அந்த தொல்லைகளைப் பொருத்து பல வகைகளாக பிரிக்கலாம்.

குழந்தை இல்லை! - புத்ர சோகம்!:- பிள்ளைகளே பிறக்காத யோகம் இருந்தால்- இதனால் தம்பதிகளுக்கு கவலை உண்டாகும். இந்த பிள்ளை இல்லாததால் ஏற்படும் “புத்ர சோகமும்” ஒரு புத்ர தோஷமே! இதை சோக புத்ர  தோஷம் எனலாம். பிள்ளை பேறு இல்லாத காரணத்தினால் பல வகைகளிலும்  மருத்துவ ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் ஜோதிட மந்திர  பூஜை ரீதியாகவும் பணம் நிறைய செலவு செய்தும் பிள்ளை பிறக்காமல் போவதை  விரய புத்திர  தோஷம் எனலாம்

          இப்படி பிள்ளை பிறக்காத காரணத்தினால் சமுதாய மக்களாலும் நண்பர்களாலும் உறவினர்களாலும்  பழி சொல்லுக்கும் அவமானத்துக்கும் உள்ளாக நேரிடும்.

குழந்தை இல்லா நிலை உருவாக காரணங்கள்

          ஒரு நல்ல திறன் உள்ள கருவகம் (கரு முட்டை) உருவாக தேவையான அனைத்துச் சத்துக்களும் ஒரு பெண்ணின் உடம்பில் இருக்க வேண்டும். அவள் உண்ணும் உணவிலிரு்து தேவையான சத்துக்களை உருவாக்கும் திறன் அந்த பெண்ணின் உடலிற்கு இருக்க வேண்டும்.  அதற்கு நவக்கிரஹங்களின் துணை இருக்க வேண்டும். பெண்ணின் உடலில் எந்த வகையான சத்துக்கள் குறைபாடு இருக்கிறது என்பதை ஜாதகம் காட்டி கொடுத்துவிடும். அனைத்துச் சத்துக்களையும் உருவாக்கும் வல்லமை உடலில் இருந்தும் அந்த சத்துக்களை கருவகம் உருவாக்கும் இடங்களுக்கு செல்லாமல் வேறு வழிகளில் அத்தகைய சத்துக்களை  உடல்கள் பயன்படுத்திக் கொண்டாலும் திறனுள்ள கருவகம் உருவாகுதில் சிக்கல் ஏற்படுகிறது. உதாரணமாக கடினமாக உடல் உழைப்பு செய்வோருகக்கு எலும்பு சார்புடைய சத்துக்களும் நரம்பு சார்புடைய சத்துக்களும் நிறைய செலவாகி இருக்கும். அதை ஈடு செய்ய உடல் முன்னுரிமை கொடுக்குமானால் பிள்ளைகள் உருவாகும் கருவகங்களுக்கு அத்தகைய சத்துக்கள் போதுமானளவுக்கு கிடைக்காது போகும். சிலர் அலுவலகங்களில் கடுமையாக மூளைக்கு வேலை தருவார்கள். இவர்களுக்கு அடுத்து சாப்பிடும் உணவுகளில் இருந்து மூளைக்கு தேவையான சத்துக்கள் அவரது உடல் தயாரித்து மூளைக்கு அனுப்பிவிடும். இந்த சமயத்தில் கருவகங்களுக்கு மூளைக்க தேவையான சத்து குறைபாடு உருவாகும். சிலருக்கு இப்படி மனிதர்கள் அன்றாடம் பல்வேறு வழியிலும் உடலிலுள்ள சத்துக்களை வேலை செய்வதன் மூலம் விரையம் செய்கிறார்கள். இதனால் சூரியன்,புதன்,சுக்ரன்,சந்திரன்,செவ்வாய்,குரு,சனி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றோ அல்லது இரண்டோஅல்லது மூன்றோ சத்துக்கள் குறையும் நிலை ஏற்படலாம்.

புதன் - நரம்பு மற்றும் தோல் சார்ந்த சத்துக்களை தயாரிக்க துணைசெய்வது
சூரியன் - மூளை சார்ந்த சத்துக்களை தயாரிக்க துணை செய்வது
சந்திரன்-உடலில் இருக்கும் நீர் சார்ந்த சத்துக்களை தயாரிக்க துணை செய்வது
சுக்ரன்- பிறக்கப் போகும் குழந்தையின் அடுத்த தலைமுறைக்குத் தேவையான இனப்பெருக்கம் சார்ந்த சத்துக்களை தயாரிக்க துணை செய்வது
செவ்வாய் - இரத்தம் சார்ந்த சத்துக்களை தயாரிக்க துணை செய்வது
குரு - இதயம் சார்ந்த சத்துக்களை தயாரிக்க துணை செய்வது
சனி- எலும்பு சார்ந்த சத்துக்களை தயாரிக்க துணைசெய்வது

          இந்த சத்துக்கள் எல்லாம் போதுமான அளவுக்கு உடம்பில் இருந்தால் மட்டுமே நல்லதொரு திறன் உள்ள கருவகம் உருவாகும். இதைப்போலவே ஆணுக்கும் சகல சத்துக்களும் இருக்க வேண்டும்.  இவற்றில் எந்த சத்துக்கள் பற்றாக் குறையாக உள்ளதோ அத்தகைய தொந்தரவுகள் குழந்தை உருவாகுவதில் தடைகளை ஏற்படுத்தும்.

ஜாதக ரீதியாக வாரிசு யோகம்
 

          ஒருவரின் 5ம் இடம் பலமாக அமைந்திருந்தால் குழந்தை பாக்கியம் பெறலாம். குரு பகவான் புத்திர காரகன் என்பதால் அவர் பலமாக அமைந்திருப்பதும் நல்லது. அதுபோல 5ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றாலும், கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்றாலும் சிறப்பான புத்திர பாக்கியம் உண்டாகும். ஜென்ம லக்னத்திற்கு 5ம் பாவம் சிறப்பாக அமைய வேண்டும் அது போலவே சந்திரனுக்கு 5ம் பாவமும் பலமாக அமைந்து விட்டால் குழந்தை பாக்கியம் அமைய எந்தத் தடையும் இருக்காது. அதுபோலவே 5ம் வீட்டையும், 5ம் வீட்டதிபதியையும் குரு பகவான் பார்வை செய்தால் குழந்தை செல்வம் சிறப்பாக அமைந்து மகிழ்ச்சியை உண்டாக்கும். 5ம் வீட்டில் சுப கிரகம் இருப்பதும், சுபர் பார்வை பெறுவதும் சிறப்பானது என்பது போல 5ம் அதிபதி பாவியாக இருந்தாலும் வலுப்பெற்று அமைந்து சுபர் பார்வை பெறுவது சிறப்பான புத்திர பாக்கியத்தை ஏற்படுத்தும்.


          5ம் ஸ்தான அதிபதி 6ல் இருந்தால் எதிரிகளின் சாபத்தினாலும் அல்லது ஜாதகர் நோய்வாய்பட்டிருப்பதானாலும் புத்திர தோஷம் ஏற்படுகிறது.
5க்குரியோன் 8ல் இருப்பதும் சிறப்பாகாது. 12ல் இருப்பதும் புத்திரனால் ஏற்படும் சோகத்தையும் விரயத்தையும் குறிக்கும். 5ல் ராகு இருந்தாலும் கேது இருந்தாலும் புத்திர தோஷம் ஏற்படுத்துகிறது. ஆனால் எந்த வகையிலாவது சுபர் சம்பந்தம் பெறும்பொழுது இந்த தோஷம் நிவர்த்தியாகிறது.
5க்குரியோன் நீசமானாலும் பாவிகள் சேர்க்கை பெற்றாலும் பாவிகள் பார்வை பெற்றாலும் புத்திர சோகம் உருவாகிறது. 9மிடம் நன்றாக இருந்தாலும் . 9மிடத்து அதிபதிகளுக்கு நல்ல சம்பந்தம் இருந்தாலும், 5மிடத்துக்கு சுபர் சேர்க்கை சுபர் பார்வை இருந்தாலும் புத்திர தோஷத்திலிருந்து தப்பிக்கலாம்.
உடலுக்கும் மனசுக்கும் மூளைக்கும் போதிய அளவு ஓய்வு கொடுப்பதுடன் தேவைப்படும் சத்துக்கள் கொண்ட உணவுகளை உண்பதனாலும் புத்ரதோஷ பிரச்சனைகளிலிருந்து மீளலாம்.


கர்ப்ப பிராப்தம் தரும் பரிகார தலங்கள்

            திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோயில், கும்பகோணம்-தஞ்சை சாலையில் பாபநாசம் அருகே இருக்கிறது இந்த கோயில். குழந்தை பாக்யதடை, அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுமேயானால் அவர்கள் இந்த கோயிலுக்கு சென்று அம்பாளை வணங்கி வரலாம். அங்கு தரப்படும் பசுநெய், விளக்கெண்ணெய் பிரசாதத்தை முறைப்படி அருந்திவர தோஷ நிவர்த்தி யாகி  புத்திரயோகம்  சிறப்பாக கிடைக்கும்.


கருவளர்ச்சேரி அகிலாண்டேஸ்வரி கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. கரு நன்கு வளர இந்த அம்மனை வணங்கிவர வேண்டும். கும்பகோணம்-திருவாரூர் ரோட்டில் இருக்கும் மருதாநல்லூர் கிராமத்தை அடுத்து இந்த கோவில் இருக்கிறது. இந்த  அம்மனை வணங்கி வர  புத்திர பாக்யம் உண்டாகும். இங்கு தரப்படும் மஞ்சள் பிரசாதம் மிகவும் சக்தி வாய்ந்தது.

           திருவாலங்காடு சிவன் - ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திரத்தன்று சென்னைக்கு அருகே உள்ள திருவாலங்காடு போய்  சிவனை வணங்கி, அன்றைய தினம் தாம்பத்ய உறவு வைத்துக் கொண்டால் புத்திர யோகம் சிறப்பாக உண்டாகும்.

         கும்பகோணம்-மன்னார்குடி சாலையில் நீடாமங்கலம் பேருந்து நிலையத்திற்கு அருகில் புத்திர பிராப்தி தரக்கூடிய  சந்தானராமன் ஆலயம் இருக்கிறது. இங்கு ராமபிரான் சந்தான யோகம் தந்தருள்கிறார். இங்கு ஒவ்வொரு மாதமும் புனர்பூச நட்சத்திர நாளில் விசேச அபிஷேகங்கள் நடைபெறும்போது ராமனை வழிபடுவது மிகவும் நன்று.

          குழந்தை  என்பது தேவை தான்! அதன் அருகாமை என்பது அவசியம் தான்! அதற்காக குழந்தை  இருந்தால் தான் வாழமுடியும் என்பது கிடையாது! தனக்கு குழந்தை இருக்காது  என்று உறுதியாக தெரிந்த பிறகு அதை நினைத்து காலமுழுவதும் அழுதுக்கொண்டு  இருப்பது பைத்தியகாரத்தனம்!  குழந்தை இல்லாத எத்தனையோ தம்பதியினர் தானும்  சந்தோசமாக வாழ்கிறார்கள் மற்றவர்களையும் ஆனந்தமாக வாழவைக்கிறார்கள்.



புத்திர தோஷம் ஏன், எதனால்?




புத்திர தோஷம் ஏன், எதனால்? பெண் குழந்தை மட்டும் இருந்தாலும் தோஷமா? வாரிசால் பயனில்லை என்றாலும் புத்திர தோஷமா? தோஷங்கள்...பரிகாரங்க




களத்திர தோஷம் என்னும் திருமணத் தடை உண்டாக்கும் தோஷம் பற்றி கடந்த பதிவில் பார்த்தோம். இந்தப் பதிவில் "புத்திர தோஷம்" என்னும் "குழந்தை பாக்கியம்" பெறுவதற்கு ஏற்படும் தடை தாமதங்கள் ஏன் ஏற்படுகின்றன? அதை எப்படி நிவர்த்தி செய்யலாம்? என பார்ப்போம்.


நம் ஒவ்வொருவருக்கும் ஜாதகம் எழுதும் பொழுது முதல் பக்கத்தில்.... முதலில் எழுதுவது..!



"ஜெனனி ஜென்ம சௌக்யானாம் வர்த்தனி குல சம்பதாம்
பதவி பூர்வ புண்யானாம்
லிக்யதே ஜென்ம பத்ரிகா"


என்ற இந்த செய்யுள்தான் முதலில் எழுதப்படும். இதற்கான முழு விளக்கம்... "இந்த ஜென்மம் எடுக்கும்பொழுது செளகரியமாகப் பிறந்தவனே, குலம் காக்க வந்தவனே, இது பூர்வ ஜென்ம புண்ணியத்தால் கிடைத்தது. அதை இந்த ஜாதகப் புத்தகத்தில் குறித்து வைக்கிறேன்" என்று பொருள்.



இப்படி ஒரு மனிதன் பிறக்க பூர்வபுண்ணியம் என்னும் ஸ்தானம் பலமாக இருந்தால் மட்டுமே வாரிசு என்பது உண்டாகும். இந்தப் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்பது ஜாதகத்தில் 5ம் இடத்தை குறிக்கும். இந்த 5-ம் இடம் புத்திர பாக்கியத்தையும் குறிக்கக் கூடியது. இப்போது அந்தச் செய்யுளின் பொருள் முழுமையாக புரிந்து இருக்கும். எவருக்கு பூர்வ புண்ணியம் பலமாக இருக்கிறதோ அவருக்கு வாரிசு கிடைக்கும். தாமதமாகக் கிடைத்தாலும் வாரிசு உறுதி என்பதை இந்த 5ம் இடத்தை வைத்து அறிந்து கொள்ள முடியும்.

ஒவ்வொரு உயிரினமும் தன்னுடைய பிறப்பின் நோக்கமாக தன்னுடைய சந்ததி தொடர்ச்சி என்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. இது அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும். அந்த வகையில் ஒரு மனிதனுக்கு புத்திர பாக்கியம் உண்டா இல்லையா என்பதை வெறுமனே ஐந்தாம் இடத்தை வைத்து முடிவு செய்துவிட முடியாது. 5ம் இடம் 7ம் இடம் 9ம் இடம் 12-ம் இடம் என இந்த பாவகங்களையும் பார்க்கப்பட வேண்டியது அவசியம்.


இங்கே நான் தருகின்ற விளக்கமானது உங்கள் ஜாதகத்தை கையில் வைத்துக்கொண்டு படித்துப் பார்த்தாலே மிக எளிதாக புரிந்து கொள்வீர்கள்.



ஒரு ஜாதகத்தில் லக்னத்திலிருந்து எண்ணி வரும் 5-ம் இடமும் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்றும் புத்திர ஸ்தானம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த புத்திர ஸ்தானத்திற்கு அதிபதியாக வரக்கூடிய கிரகம் எந்த வகையிலும் கெட்டுப்போகாமல் இருக்க வேண்டும் மேலும் பாவ கிரகங்களோடு இணைந்து இருக்கவும் கூடாது. அதுமட்டுமல்லாமல் லக்னத்திற்கு பகை பெற்ற கிரகமாகவும் இல்லாமல் இருக்கவேண்டும். இவை அனைத்தையும் முழுமையாக கவனிக்கப்பட வேண்டும். அது மட்டுமல்லாமல் புத்திர பாக்கியத்தை அருளக் கூடிய குரு பகவான் ஐந்தாம் இடத்தில் இருக்கக்கூடாது. அதாவது தனித்து இருக்கக்கூடாது. தனித்து இருக்குமாயின் அது காரகோ பாவ நாஸ்தி என்னும் அடிப்படையில் புத்திர பாக்கியத்தைக் கெடுக்கும்.

ஐந்தில் சூரியன் இருந்தால் ஆண் குழந்தை நிச்சயமாக உண்டு. அதுவே சந்திரன் அங்கே இருந்தால் பெண் குழந்தை பாக்கியம் உண்டு. செவ்வாய் இருக்குமாயின் வாரிசு உண்டு. புதன் இருந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுக்கிரன் இருந்தாலும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சனி பகவான் இருந்தால் தாமதமாகும். ராகு இருந்தால் அளவற்ற குழந்தை பாக்கியம் உண்டாகும். இந்த ராகுவால் கிடைக்கக்கூடிய புத்திர பாக்கியத்தைப் பற்றி பிறகு பார்ப்போம். அந்த 5ம் இடத்தில் கேது இருந்தால் புத்திர பாக்கியம் தாமதமாகும். இப்படி கிரகங்கள் ஐந்தாம் இடத்தில் அமர்ந்தால் என்ன பலன் என்பதைத் தெரிந்து கொண்டிருப்பீர்கள்.



அதுமட்டுமல்லாமல் இந்த ஐந்தாம் அதிபதி 6 மற்றும் எட்டாம் இடங்களில் மறைந்து போனால் புத்திர பாக்கியம் தாமதமாகும். மேலும் இந்த ஐந்தாம் அதிபதி கேது ஓடு இணைந்திருந்தாலும் புத்திரபாக்கியம் தாமதமாகும். 5ம் அதிபதி சூரியனுடன் இணைந்து அஸ்தங்கம் அடைந்தாலும் அல்லது சூரியனிடம் இருந்து விலகி வக்கிரம் பெற்றாலும் புத்திர பாக்கியம் தாமதமாகும். இவை அனைத்தும் கிரகங்களின் நிலை பற்றி கணக்கில்கொண்டு கவனிக்கப்பட வேண்டியதாகும்.

மேலும், மேலே சொன்னபடி 7ம் இடம் 9ம் இடம் 12-ம் இடம் இந்த இடங்களையும் கவனிக்க வேண்டியதாகிறது. அதன்படி 7-ம் இடம் என்பது தாம்பத்திய நிறைவு பற்றி சொல்லக்கூடியது. அந்த 7ம் இடம் பலமாக இருக்க வேண்டும். மேலே சொன்ன கிரக விளக்கங்கள் இந்த ஏழாம் இடத்திற்கும் பொருந்தும். ஏழாம் அதிபதி எந்த வகையிலும் கெட்டுப்போகாமல் இருக்க வேண்டும். அப்போதுதான் தாம்பத்தியம் சிறப்பாக இருக்கும். ஏழாம் இடத்தில் சூரியன் இருந்தால் ஆணின் உயிரணுக்களின் வீரியம் குறைந்து விந்து நீர்த்துப்போகும். சந்திரன் இருந்தாலும் இதே பிரச்சினைதான் உண்டாகும். செவ்வாய் இருந்தால் நல்ல வீரியமுள்ள உயிரணுக்கள் உண்டாகும். புதன் இருந்தால் சிறப்பாக இருக்கும். ஆனால் உயிரணுக்கள் சற்று வேகம் குறைந்ததாகவும் இருக்கும்.

குரு இருந்தால் உயிரணுக்கள் சிறப்பாக இருக்கும். சுக்கிரன் இருந்தால் உயிர் அணுக்கள் நீர்த்துப் போவது மட்டுமல்லாமல், பெண்ணின் கர்ப்பப் பையிலும் நீர்த் தன்மை அதிகமாக இருக்கும். இதன் காரணமாகவே புத்திர பாக்கியம் தாமதப்படும் வாய்ப்பு உள்ளது. இதே தன்மை சந்திரனுக்கும் பொருந்தும்.



ஏழாம் இடத்தில் சனி இருந்தால் உயிரணுக்களில் வீரியம் மந்தமாக இருக்கும், அதுவே ராகு இருந்தால் உயிரணுக்களின் எண்ணிக்கை அளவற்றதாக இருக்கும். புத்திர பாக்கியமும் நிறைவாகக் கிடைக்கும். கேது இருந்தால் உயிரணுக்கள் வெகுவாகக் குறைந்துவிடும். புத்திர பாக்கியம் தாமதமாகும் வாய்ப்பு உள்ளது. இவை அனைத்தும் பொதுவான பார்வையாகும். இந்த கிரகங்களுக்கு துணையாக வேறு ஒரு கிரகம் சேருமாயின் இந்த நிலை மாறும் வாய்ப்பு உள்ளது.

மேலும் ஒன்பதாம் இடம் என்பது பாக்கியஸ்தானம் ஆகும், அதாவது அனைத்து விதமான செல்வாக்கையும் கிடைக்கச் செய்யும் இடமாகும், அனைத்து விதமான மதிப்பு, மரியாதை, கௌரவம் அந்தஸ்து என மனிதனின் பெருமைக்குரிய விஷயங்களை குறிக்கும் இடமாகும். ஒன்பதாமிடம் வலுத்திருக்க வேண்டும். அப்படி வலுவாக இருந்தால் புத்திர பாக்கியம் கிடைப்பதில் தடை இல்லாமல் இருக்கும்.

மேலும் 12-ம் இடம் என்பது தாம்பத்திய சுகத்தைத் தெரிவிக்கும் இடமாகும். அந்த இடம் மிக வலுவாக இருக்க வேண்டும். 12ம் இடத்தில் பாவ கிரகங்கள் இருக்கக் கூடாது... ராகுவைத் தவிர! பனிரெண்டாம் இடத்தில் சூரியன் இருந்தால் அளவான தாம்பத்தியம் இருக்கும். சந்திரன் இருந்தால் சிற்றின்ப ஆசை அதிகமாக உண்டாகும். செவ்வாய் இருந்தால் தாம்பத்தியத்தில் முரட்டுத்தனமும், இணை வெறுக்கக்கூடிய அளவிலும் இருக்கும்.

புதன் இருந்தால் மிக நேர்த்தியான அன்பான தாம்பத்தியம் இருக்கும். குரு இருந்தால் அளவான, ஒழுக்கமான தாம்பத்தியம் இருக்கும். சுக்கிரன் இருந்தால் அளவற்ற சுகம் உண்டாகும். சனி இருந்தால் தாம்பத்தியத்தில் நிறைவு உண்டாகாது. ராகு இருந்தால் அளவற்ற போகத்தை ஏற்படுத்தித் தரும். கேது இருந்தால் தாம்பத்திய ஆசை வெகு குறைவாகவே இருக்கும். இப்படி 12-ம் இடமும் குழந்தை பாக்கியத்திற்கான ஆய்வுக்கு உட்பட்டதே..!

பொதுவாக புத்திர தோஷம் என்றால் குழந்தை பாக்கியம் இல்லாமல் போவது மட்டுமே புத்திரதோஷம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் வாரிசுகள் இருந்தும் அவர்களால் எந்தப் பயனும் இல்லாமல் போனாலும் அதுவும் தோஷத்தில்தான் சேரும். அதுமட்டுமல்லாமல் இறுதிக் காலத்தில் பிள்ளைகள் அருகில் இல்லாமல் போனாலும் அதுவும் புத்திர தோஷத்தைக் குறிக்கும். மேலும் பெற்றோர்களை தவிக்க விடும் பிள்ளைகளைப் பெற்றாலும் அதுவும் தோஷத்தில் சேரும். எனவே புத்திர தோஷம் என்றால் குழந்தையின்மை என்பது மட்டுமல்லாமல் இப்படிப்பட்ட பிள்ளைகள் இருந்தால் அதுவும் தோஷத்திலேயே சேரும்.

அதேபோல ஆண் வாரிசு இல்லாமல் பெண் பிள்ளைகள் மட்டும் இருந்தாலும் அதுவும் ஒரு வகையில் தோஷத்தைத் தருவதாகும். ஏனென்றால் குலதெய்வ வழிபாடு முதல் மேலும் பல காரியங்களுக்கு ஆண் வாரிசுகளால் மட்டுமே தொடர முடியும்..! பெண் பிள்ளைகள் கணவர் வீட்டாருக்கு மட்டுமே உட்பட வேண்டியதாகவும், அவர்களுடைய வழித் தோன்றல்களை மட்டுமே கவனிக்க வேண்டியதாகவும் இருக்கும். குலதெய்வ வழிபாட்டைத் தொடர முடியாமல் போனால் அதுவும் ஒருவகையில் தோஷத்தைத் தருவது தான்.


புத்திர தோஷம் ஜாதகம் எப்படி இருக்கும் ?



புத்திர தோஷம் ஜாதகம் எப்படி இருக்கும் ?

ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்திற்கு ஐந்தாவது இடமும் அந்த ஐந்தாம் இடம் அதிபதி 6,8 12ஆம் இடத்தில் சென்றாலும், அந்த அதிபதியுடன் ராகு, கேது,சனி சேர்ந்தாலும், அந்த அதிபதி நீச்சம் ஆனாலும், அந்த அதிபதிக்கு சாரம் கொடுத்தவர் நீச்சம் ஆனாலும், 100% புத்திரர் தோஷமே. இதில் குரு பார்த்தாலும் சரி, வளர்பிறை சந்திரன் பார்த்தாலும் சரி, புத்திர தோஷம், புத்திர தோஷமே.