jaga flash news

Thursday, 28 August 2025

கொத்தவரங்காய்

 கொத்தவரங்காய் மற்றும் கொத்தவரை பிசின் பல்வேறு வடிவங்களில் ஏற்றுமதி செய்யப்படுகிறது
நீங்களும் கொத்தவரங்காயை உணவாக உட்கொண்டிருக்கலாம். ஆனால், இந்தியாவுக்கு பல கோடி டாலர்களை ஈட்டித்தரும் இந்தக் காய், அமெரிக்காவுக்கு பெரிய அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

கொத்தவரங்காய், இந்தியாவில் காய்கறியாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்தக் காய்களிலிருந்து பெறப்படும் விதைகளைக் கொண்டு கொத்தவரை பிசின் என்ற பொருள் தயாரிக்கப்படுகிறது.

பொடி வடிவில் உள்ள கொத்தவரை பிசின், பல்வேறு தொழில்களில் திரவங்களை கெட்டியாக்கும் ஸ்டெபிலைசர் (Stabilizer) மற்றும் இணைப்பு பொருளாக (Binder) பயன்படுத்தப்படுவதால் அதற்கு பெரும் தேவை உள்ளது.

புதைபடிவ எரிபொருள் (Fossil Fuel) எடுக்கும் தொழிலில் கொத்தவரை பிசின் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, ஷேல் வகை பாறைகளிலிருந்து ஹைட்ராலிக் ஃப்ராக்சரிங் (Hydraulic Fracturing) என்ற செயல்முறையை பயன்படுத்தி பூமியிலிருந்து எரிவாயு மற்றும் கச்சா எண்ணெயை எடுக்க இது பயன்படுத்தப்படுகிறது.

இந்த செயல்முறையில், கொத்தவரை பிசின் உள்ளிட்ட பிற பொருட்களின் கலவை பாறைகளின் விரிசல்களில் செலுத்தப்படுகிறது, இதனால் எண்ணெய் மற்றும் எரிவாயுவை சீராக வெளியேற்ற முடியும்.


விசேஷ தினங்களில் வீடுகளில் மாவிலைத் தோரணம் கட்டப்படுவதன் ரகசியம்!





விசேஷ தினங்களில் வீடுகளில் மாவிலைத் தோரணம் கட்டப்படுவதன் ரகசியம்!
The secret of constructing the Mavilai Thorana
Mavilai Thoranam



வீட்டின் நுழைவு வாயிலில் மாவிலைகளால் தோரணம் கட்டுவது மரியாதைக்குரிய கலாசார பண்பாடாகக் கருதப்படுகிறது. இது தொன்றுதொட்டு பின்பற்றப்பட்டு வரும் ஒரு பாரம்பரிய வழக்கமாகும். பசுமையான மாமரத்து இலைகள் வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளை உள்வாங்கிக்கொண்டு, சுற்றுப்புறங்களில் உள்ள காற்றை தூய்மைப்படுத்தவும், வீட்டிற்குள் செழிப்பையும் நேர்மறை அதிர்வுகளையும் கொண்டு வர உதவுவதாக நம்பப்படுகிறது.

மாவிலையின் முக்கியத்துவத்தையும் சிறப்பையும், பகவத் கீதை மற்றும் வேறு பல புராண இலக்கியங்களிலும் கூறப்பட்டுள்ளது. ‘ஒவ்வொரு வீட்டின் வாயிலிலும் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. பெரிய தண்ணீர்ப் பானைகள், வண்ண வண்ணத் துணிகள், முத்துச் சரங்கள், பூ மாலைகள் மற்றும் மாவிலைத் தோரணங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தன.


The secret of constructing the Mavilai Thorana
வீட்டிற்குள் நேர்மறை அதிர்வுகளையும், கடவுளின் ஆசிகளையும், செழிப்பையும் வரவேற்க நுழைவு வாயிலில் மாவிலைத் தோரணம் கட்டப்பட்டு வந்தது. வீட்டிற்குள் வரும் செல்வத்திற்கு அதிபதியான மஹாலக்ஷ்மியையும் மற்ற விருந்தினர்களையும் தூய மனதுடன், மரியாதை கொடுத்து வரவேற்பதை சுட்டிக்காட்டும் அடையாளமாகவும் மாவிலைத் தோரணம் கருதப்படுகிறது. 'நுழைவு வாயிலை பூக்களாலும் இலைகளாலும் அலங்கரித்து வைப்பது, மங்கலகரமான ஆன்மிக உணர்வைக் காட்டுகிறது. வீட்டில் உள்ளவர்கள், அவர்களுக்கு கடவுளால் வாரி வழங்கப்பட்ட மன அமைதியையும் வளங்களையும் அனுபவிக்க தயாராகி விட்டனர் என்று அந்த அலங்காரம் கூறுவது போலவும் உள்ளது' என புராண இலக்கியம் கூறுகிறது.

மாவிலைகள் பல கடவுள்கள் மற்றும் பெண் தெய்வங்களுடன் தொடர்பு கொண்டுள்ளன என இந்து புராணத்தில் கூறப்படுகிறது. வாழ்வில் வளம் பெருக உதவும் பெண் தெய்வமான மஹாலக்ஷ்மிக்கும் மற்றும் போர் புரியவும், வாழ்வை செழிப்புறச் செய்யவும் உதவும் கடவுளான முருகனுக்கும் மாவிலைகளுடனான தொடர்பு குறிப்பிடத்தக்கது. வீட்டில் மாவிலைத் தோரணம் தொங்குவது, அந்த வீட்டிலுள்ள நபர்களுக்கு அதிர்ஷ்டம், வாழ்வில் முன்னேற்றம் மற்றும் வளங்களை கொண்டுவரும். சிறப்பான அறுவடை மற்றும் வளமான வாழ்விற்கான அடையாளமாக மாவிலை விளங்குவதால், பச்சை நிற, மா இலைகளை வீட்டில் தோரணமாகக் கட்டித் தொங்க விடுங்கள் என முருகக் கடவுள் மக்களிடம் கூறியதாக நம்பப்படுகிறது. அப்போதிருந்து, மாவிலை மிக மங்கலகரமானதாக கருதப்பட்டு போற்றப்பட்டு வருகிறது.


The secret of constructing the Mavilai Thorana
பச்சை மா இலைகள் மரத்திலிருத்து தண்டுடன் வெட்டப்பட்ட பிறகும், தொடர்ந்து சிறிது நேரத்திற்கு ஸ்டார்ச் தயாரிக்கும் (Photosynthesis) செயலை செய்து கொண்டிருக்கும். அதாவது, கார்பன்டை ஆக்ஸைடை உள்ளிளுத்து ஆக்ஸிஜனை வெளியேற்றிக் கொண்டிருக்கும். இதனால் சுற்றுப்புறத்தில் உள்ள காற்று சுத்தமடைந்து சுவாசிக்கத் தகுந்ததாக மாறுகிறது.

மா இலை ஆன்டி பாக்டீரியல், ஆன்டி மைக்ரோபியல் மற்றும் பூச்சிகளை விரட்டும் குணங்கள் உடையது. மாவிலைத் தோரணம் ஈ, கொசு போன்ற பூச்சிகள் வீட்டிற்குள் நுழையாமல் தடுக்க உதவும். இந்த இலைகளில் உள்ள ஆல்கலாய்ட், சப்போனின்,

ஃபிளவனாய்ட் போன்ற கூட்டுப் பொருட்கள் தீங்கு தரும் பல வகையான பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுத்து நிறுத்த உதவி புரிகின்றன. மா இலைகளின் பச்சை நிறம் மனதுக்கு அமைதி தரும். மா இலைகளாலான தோரணத்தை வாசலில் தொங்க விட்டால் டென்ஷன் குறையும். மனம் புனிதத் தன்மை பெறும். பாரம்பரியம் திரும்பும். வீட்டின் மதிப்பு உயரவும், ஆன்மிக விழிப்புணர்வடையவும் வழி கிடைக்கும்.

இந்த பாரம்பரியம் மிக்க பழங்கால வழக்கத்தை நாம் அனைவரும் பின்பற்றி ஆரோக்கியம், நல்லிணக்கம் மற்றும் புனிதம் பெறுவோம்.

#Quintype

Wednesday, 27 August 2025

மருதாணியின் மகிமை தெரியுமா?


மருதாணியின் மகிமை தெரியுமா? அம்பிகையே சிறுமி ரூபத்தில் வந்த கதையும்  மருதாணியின் மகிமை குறித்து உங்களுக்கு தெரியுமா? அம்பிகையே மருதாணி வைத்துக் கொள்ள சிறுமி ரூபத்தில் வந்தது தெரியுமா? கையில் சிவப்பு நிறத்துடன் அம்மனுக்கு பூஜை செய்ய வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.


இதுகுறித்து நானறிந்த ஆன்மீகம் எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: அம்பிகைக்கு உகந்த வாசனை பொருட்களில் ஒன்று மருதாணி ஆகும். வெறும் கைகளோடு பூஜை செய்வதை விட அம்பிகைக்கு உகந்த சிவப்பு வண்ணத்தோடும், நல்ல வாசனையோடும் நம் கைகளில் மருதாணி வைத்து கொண்டு அம்பாளுக்கு தூப, தீப, ஆராதனைகள் செய்யும் போது தேவி இன்னும் மகிழ்கிறாள். மற்ற காலங்களில் வைத்து கொள்ளாவிட்டாலும் நவராத்ரி காலங்களில் ஆவது அவசியம் வைத்துக் கொண்டு பூஜிக்கலாம்.


spirtuality maruthani
சிறந்த அம்பாள் பக்தையாக விளங்கிய ஒரு பெண்மணிக்கு தனது கணவருக்கு வயிற்றில் ஏற்பட்ட பிரச்சனைக்கு மருத்துவமனை அணுக அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என்றும் இருப்பினும் உயிர் பிழைப்பது கடினம் என்றும் தேதி வைத்துவிட்டனர். மிகவும் வருத்தப்பட அந்த பக்தை ஒரு ஸ்ரீவித்யா உபாசகரை நாடினார். அந்த பக்தையாக அம்பாளிடம் பிரார்த்தித்த உபாசகர் 5 வெள்ளிக்கிழமைகள் கோயிலுக்கு சென்று வரும் சுமங்கலி பெண்களுக்கு மருதாணி வைத்து வேண்டிகொள்ளுமாறு சொன்னார்.

4 வெள்ளிக்கிழமைகள் செய்தானது. 5 ஆம் வாரம் ஆலயத்திற்கு சோதனையாக ஒருபெண்களும் வரவில்லை, பயந்த பக்தை அம்பாளை பிரார்த்தித்தாள். கருணை கொண்ட அம்பிகை சிறு பெண் (பாலா) ரூபத்தில் கோயிலுக்குள் ஓடி வந்தாள். அக்கா எனக்கு மருதாணி வச்சிவிடறீங்களா? என கொஞ்சி மழலையாக கேட்டாள். சுமங்கலிக்கு தானே வைக்க வேண்டும், வந்ததோ சிறு பெண் என தயங்கிய பக்தை அம்பாள் மீது பாரத்தை போடு விட்டு, ஆடம் பிடித்த குழந்தைக்கு கைகளில் கொப்பி கொப்பியாக மருதாணி வைத்து விட்டு, நான் கொஞ்சம் மருதாணி தருகிறேன்.

நீ சென்று உன் அம்மாவுக்கும் வைத்து விடு என்று கேட்டுக்கொள்ள அப்படியே செய்யவதாக சொல்லிவிட்டு ஆலயம் விட்டு ஓடிவிட்டாள். வீட்டிற்கு வந்து அம்பாள் மீது பாரத்தை போடு விட்டு மறுநாள் அறுவைசிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டு, சோதனை செய்த போது மருத்துவர்கள் வியந்தனர்.


புற்றுநோயாக மாற இருந்த செல்கள் அனைத்தும் சாதாரண செல்களாக மாறிவிட்டதாகவும் அறுவை சிகிச்சை தேவையில்லை என்றும் கூறிவிட்டனர். வியந்த நன்றிப் பெருக்கோடு ஸ்ரீவித்யா உபாசகரிடம் சென்று சுவாமி நான் 5 ஆம் வாரம் பூர்த்தி செய்ய முடியவில்லை சுமங்கலிக்கு வைக்கல. ஆனாலும் அம்பாள் திருவருள் மூலம் கணவர் நலம் பெற்றார் என்றார்.

அப்போது சிரித்த ஸ்ரீவித்யா உபாசகர், வந்தது சாஃஷாத் அம்பிகை தான் என்றும், அவளுக்கே மருதாணி வைக்கும் பெரும் பேறு உன் பக்தியால் கிடைத்தது என்று கூறினார். கண்ணீர் மல்க அம்பிகைக்கு நன்றி சொன்னார் அந்த பக்தை.. நாமும் அம்பாளை பூஜிக்கும் தருணம் மருதாணி வைத்துக்கொள்ளலாம், நவராத்ரி காலங்களில் இல்லத்திற்கு வரும் பெண்களுக்கும் மருத்துவ குணம் நிறைந்த மருதாணி வைத்துவிடலாம். அம்பிகை அருள் பெறலாம்.. ஜெய ஜெய ஜெகதாம்பிகே ஜெய ஜெய காமாக்ஷி!

மருதாணி வைத்த பிறகு அந்த பெண்ணின் கை நன்றாக சிவந்தால், தன் கணவர் தன் மேல் நல்ல பாசமாக இருக்கிறார் என்பதை புரிந்துக் கொள்வாளாம். வெள்ளிகிழமையில் மருதாணியை ஸ்ரீமகாலஷ்மியை மனதில் நினைத்துக் கொண்டு கையில் அணிந்துக் கொண்டால், எந்த துன்பங்களும் நெருங்காது. ஸ்ரீமகாலஷ்மியின் அருளாசியும் பரிபூரணமாக கிடைக்கும். தேவி சரணம் ! ஸ்ரீ மாத்ரே நமஹ ! இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தங்கம், வெள்ளி நகைகளை ஏன் இளஞ்சிவப்பு காகிதத்தில் சுற்றி தருகிறார்கள் தெரியுமா?


தங்கம், வெள்ளி நகைகளை ஏன் இளஞ்சிவப்பு காகிதத்தில் சுற்றி தருகிறார்கள் தெரியுமா? என்னனு தெரிஞ்சுக்கோங்க!

நகைக் கடைகளில் தங்கம் அல்லது வெள்ளி வாங்கும்போது அதை இளஞ்சிவப்பு நிறக் காகிதத்தில் வைத்து தருவார்கள்.
1/5
 பொதுவாக, நகைக் கடைகளில் தங்கம் அல்லது வெள்ளி வாங்கும்போது அதை இளஞ்சிவப்பு நிறக் காகிதத்தில் வைத்து தருவார்கள். இதை நாம் அனைவரும் கவனித்திருப்போம். இது பாரம்பரியமா? அல்லது இதற்குப் பின்னால் ஏதேனும் சிறப்புக் காரணம் இருக்கிறதா என்று நீங்கள் யோசிக்கலாம். இந்தக் கேள்விக்கான பதிலை, உரிமையாளர்  கூறியுள்ளார். அதுகுறித்து இந்தப் பதிவில் விரிவாகத் தெரிந்துகொள்வோம்.
பொதுவாக, நகைக் கடைகளில் தங்கம் அல்லது வெள்ளி வாங்கும்போது அதை இளஞ்சிவப்பு நிறக் காகிதத்தில் வைத்து தருவார்கள். இதை நாம் அனைவரும் கவனித்திருப்போம். இது பாரம்பரியமா? அல்லது இதற்குப் பின்னால் ஏதேனும் சிறப்புக் காரணம் இருக்கிறதா என்று நீங்கள் யோசிக்கலாம். இந்தக் கேள்விக்கான பதிலை,  உரிமையாளர்  கூறியுள்ளார். அதுகுறித்து இந்தப் பதிவில் விரிவாகத் தெரிந்துகொள்வோம்.
advertisement
2/5
 கூற்றுப்படி, தங்கம் அல்லது வெள்ளி நகைகளை இளஞ்சிவப்பு காகிதத்தில் சுற்றித் தருவதற்குப் பின்னால் எந்தக் காரணமும் இல்லை. பொதுவாக, இளஞ்சிவப்பு காகிதம் வெள்ளியின் பளபளப்பை அதிகரிக்கிறது. இந்த நிறம் வெள்ளியின் நிறத்துடன் ஒரு தனித்துவமான வேறுபாட்டை உருவாக்குகிறது. இது நகைகளை மிகவும் கவர்ச்சிகரமானதாகவும் பிரகாசமாகவும் காட்டுகிறது என்றார்.
தீரஜ் பாயின் கூற்றுப்படி, தங்கம் அல்லது வெள்ளி நகைகளை இளஞ்சிவப்பு காகிதத்தில் சுற்றித் தருவதற்குப் பின்னால் எந்தக் காரணமும் இல்லை. பொதுவாக, இளஞ்சிவப்பு காகிதம் வெள்ளியின் பளபளப்பை அதிகரிக்கிறது. இந்த நிறம் வெள்ளியின் நிறத்துடன் ஒரு தனித்துவமான வேறுபாட்டை உருவாக்குகிறது. இது நகைகளை மிகவும் கவர்ச்சிகரமானதாகவும் பிரகாசமாகவும் காட்டுகிறது என்றார்.
advertisement
3/5
 மேலும், இளஞ்சிவப்பு நிறம் வெள்ளியின் பளபளப்பை அதிகரிக்கிறது. இந்த வண்ணக் காகிதத்தில் வெள்ளி அல்லது தங்கத்தைச் சுற்றி வைக்கும்போது, ​​நகைகள் இன்னும் பிரகாசிக்கின்றன. ஆகையால், வாடிக்கையாளர்களுக்கு இது இன்னும் அழகாகத் தெரிகிறது என்று   கூறியுள்ளார்.
மேலும், இளஞ்சிவப்பு நிறம் வெள்ளியின் பளபளப்பை அதிகரிக்கிறது. இந்த வண்ணக் காகிதத்தில் வெள்ளி அல்லது தங்கத்தைச் சுற்றி வைக்கும்போது, ​​நகைகள் இன்னும் பிரகாசிக்கின்றன. ஆகையால், வாடிக்கையாளர்களுக்கு இது இன்னும் அழகாகத் தெரிகிறது என்று   கூறியுள்ளார்.

4/5
 இளஞ்சிவப்பு நிறத்திற்கு பதிலாக பிற வண்ணக் காகிதங்களைப் பயன்படுத்தினால், வெள்ளி அவ்வளவு பிரகாசிக்காது என்று விளக்குகிறார். குறிப்பாக, வெள்ளைக் காகிதம் வெள்ளி நிறத்தைக் குறைத்து அதை அதிகமாகக் காட்டுகிறது. மற்ற வண்ணங்கள் நகைகளின் பளபளப்பைக் குறைத்து மந்தமாகக் காட்டும். இளஞ்சிவப்பு காகிதம் மட்டுமே வெள்ளியின் பளபளப்பைச் சரியாக எடுத்துக்காட்டுகிறது. அதனால்தான் நகைக்கடைக்காரர்கள் வெள்ளி நகைகளுக்கு இந்த இளஞ்சிவப்பு காகிதத்தை குறிப்பாகத் தேர்வு செய்கிறார்கள்.
இளஞ்சிவப்பு நிறத்திற்கு பதிலாக பிற வண்ணக் காகிதங்களைப் பயன்படுத்தினால், வெள்ளி அவ்வளவு பிரகாசிக்காது என்று தீரஜ் பாய் விளக்குகிறார். குறிப்பாக, வெள்ளைக் காகிதம் வெள்ளி நிறத்தைக் குறைத்து அதை அதிகமாகக் காட்டுகிறது. மற்ற வண்ணங்கள் நகைகளின் பளபளப்பைக் குறைத்து மந்தமாகக் காட்டும். இளஞ்சிவப்பு காகிதம் மட்டுமே வெள்ளியின் பளபளப்பைச் சரியாக எடுத்துக்காட்டுகிறது. அதனால்தான் நகைக்கடைக்காரர்கள் வெள்ளி நகைகளுக்கு இந்த இளஞ்சிவப்பு காகிதத்தை குறிப்பாகத் தேர்வு செய்கிறார்கள்.


5/5
 இந்த இளஞ்சிவப்பு காகிதம் வெள்ளிக்கு மட்டுமல்ல, தங்க நகைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில், இது தங்கத்தையும் பளபளப்பாகக் காட்டுகிறது என்று   கூறுகிறார். இந்த நிறம் வெள்ளி மற்றும் தங்கத்தின் பளபளப்பை மேம்படுத்தி நகைகளை மிகவும் கவர்ச்சிகரமானதாகக் காட்டுவதற்கு மட்டுமே பயன்படுகிறது. இதற்கு வேறு எந்தச் சிறப்புக் காரணமும் கிடையாது.
இந்த இளஞ்சிவப்பு காகிதம் வெள்ளிக்கு மட்டுமல்ல, தங்க நகைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில், இது தங்கத்தையும் பளபளப்பாகக் காட்டுகிறது என்று   கூறுகிறார். இந்த நிறம் வெள்ளி மற்றும் தங்கத்தின் பளபளப்பை மேம்படுத்தி நகைகளை மிகவும் கவர்ச்சிகரமானதாகக் காட்டுவதற்கு மட்டுமே பயன்படுகிறது. இதற்கு வேறு எந்தச் சிறப்புக் காரணமும் கிடையாது.

Tuesday, 26 August 2025

சபரியின் கதை

சபரியின் கதை
எந்த எதிர்பார்ப்பும் இன்றி, குருவின் வார்த்தைக்கு மதிப்பளித்து, அவரது வாக்கில் முழு நம்பிக்கை வைத்து, காலக்கெடுவைப் பற்றித் துளியும் சிந்திக்காமல் குரு உபதேசித்த 'ராம' மந்திரத்தை வாழ்நாள் முழுவதும் ஜபித்த 'சபரி' என்னும் பெண்மணி போற்றுதலுக்குரியவள். எட்டு வயதுச் சிறுமியான சபரிக்குத் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தன. வேடுவப் பெண்ணான காட்டுவாசி சபரியின் தந்தை மற்றும் காட்டுவாசிகள் புடைசூழ சபரியின் வீட்டில் விருந்து அமர்க்களப்பட்டது.

விருந்துக்காகக் கொண்டுவரப்பட்ட ஆயிரம் ஆடுகளைக் கண்டு அதிர்ந்து போனாள் சபரி. அந்தச் சின்னஞ்சிறு சிறுமியின் உள்ளத்தில் கருணை ஊற்றெடுத்தது. ஆடுகளை வெட்டி விருந்துண்ண வேண்டாம் என மன்றாடினாள். ஆனால், சிறுமியின் குரல் எவர் காதிலும் விழவில்லை. ஆடுகள் வெட்டப்படுவதைக் காண விரும்பாத அவள், வீட்டை விட்டு வெளியேறினாள். கால் போன போக்கில் 'நாராயண' மந்திரத்தை உச்சரித்தபடியே நடந்தவள், கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள மதங்க மகரிஷியின் ஆசிரமத்தை வந்தடைந்தாள்.

வந்தவள் களைப்பு மிகுதியால் ஆசிரமத்தின் நுழைவாயில் அருகில் உறங்கிப் போனாள். வழக்கமாக அதிகாலையிலேயே எழுந்துவிடும் சபரி, மறுநாள் விரைவில் எழுந்து முன்தினம் கண்ட கங்கைக் கரைக்குச் சென்றாள். கங்கை செல்லும் வழி நெடுகிலும் கல்லும் முள்ளும் இருப்பதைக் கண்டு அவையனைத்தையும் அப்புறப்படுத்தி, பின் நீராடச் சென்றாள்.

கங்கைக் கரைக்கு வரும் வழி நெடுகிலும் மிகவும் சுத்தமாக இருப்பதைக் கண்ட மதங்க மகரிஷி, தன் சீடர்களிடம் விசாரித்தார். ஒரு சிறுமி முன் இரவில் ஆசிரமம் வந்து, வாசல் அருகில் உறங்கியதையும், பின் கங்கை செல்லும் வழியைச் சுத்தப்படுத்தியதையும், தற்போது கங்கையில் குளித்துக்கொண்டிருப்பதையும் அவர்கள் தெரிவித்தனர்
Powered By Logo

Skip
ஆந்திராவில் ஒரு கல் கிடைத்தாலும் கோடி.. வைர வேட்டையில் கிராம மக்கள் | Diamond in Kurnool
சபரியின் கதை
எந்த எதிர்பார்ப்பும் இன்றி, குருவின் வார்த்தைக்கு மதிப்பளித்து, அவரது வாக்கில் முழு நம்பிக்கை வைத்து, காலக்கெடுவைப் பற்றித் துளியும் சிந்திக்காமல் குரு உபதேசித்த 'ராம' மந்திரத்தை வாழ்நாள் முழுவதும் ஜபித்த 'சபரி' என்னும் பெண்மணி போற்றுதலுக்குரியவள். எட்டு வயதுச் சிறுமியான சபரிக்குத் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தன. வேடுவப் பெண்ணான காட்டுவாசி சபரியின் தந்தை மற்றும் காட்டுவாசிகள் புடைசூழ சபரியின் வீட்டில் விருந்து அமர்க்களப்பட்டது.

விருந்துக்காகக் கொண்டுவரப்பட்ட ஆயிரம் ஆடுகளைக் கண்டு அதிர்ந்து போனாள் சபரி. அந்தச் சின்னஞ்சிறு சிறுமியின் உள்ளத்தில் கருணை ஊற்றெடுத்தது. ஆடுகளை வெட்டி விருந்துண்ண வேண்டாம் என மன்றாடினாள். ஆனால், சிறுமியின் குரல் எவர் காதிலும் விழவில்லை. ஆடுகள் வெட்டப்படுவதைக் காண விரும்பாத அவள், வீட்டை விட்டு வெளியேறினாள். கால் போன போக்கில் 'நாராயண' மந்திரத்தை உச்சரித்தபடியே நடந்தவள், கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள மதங்க மகரிஷியின் ஆசிரமத்தை வந்தடைந்தாள்.

Recommended For You
யோகம் தரும் வில்வ காய் விளக்கு பரிகாரம்.. ஊமத்தம் இலையில் தீபம் ஏற்றினாலே செல்வம் மகிழ்ச்சி பெருகும்
"யோகம் தரும் வில்வ காய் விளக்கு பரிகாரம்.. ஊமத்தம் இலையில் தீபம் ஏற்றினாலே செல்வம் மகிழ்ச்சி பெருகும்"

வந்தவள் களைப்பு மிகுதியால் ஆசிரமத்தின் நுழைவாயில் அருகில் உறங்கிப் போனாள். வழக்கமாக அதிகாலையிலேயே எழுந்துவிடும் சபரி, மறுநாள் விரைவில் எழுந்து முன்தினம் கண்ட கங்கைக் கரைக்குச் சென்றாள். கங்கை செல்லும் வழி நெடுகிலும் கல்லும் முள்ளும் இருப்பதைக் கண்டு அவையனைத்தையும் அப்புறப்படுத்தி, பின் நீராடச் சென்றாள்.

கங்கைக் கரைக்கு வரும் வழி நெடுகிலும் மிகவும் சுத்தமாக இருப்பதைக் கண்ட மதங்க மகரிஷி, தன் சீடர்களிடம் விசாரித்தார். ஒரு சிறுமி முன் இரவில் ஆசிரமம் வந்து, வாசல் அருகில் உறங்கியதையும், பின் கங்கை செல்லும் வழியைச் சுத்தப்படுத்தியதையும், தற்போது கங்கையில் குளித்துக்கொண்டிருப்பதையும் அவர்கள் தெரிவித்தனர்.

கங்கைக் கரையை அடைந்த மகரிஷி, சிறுமி சபரி குளித்துவிட்டு 'நாராயண' மந்திரத்தை ஜபித்தபடி நின்றுகொண்டிருந்ததைக் கவனித்தார். அச்சிறுமியைக் கண்ட மாத்திரத்தில், பின்னால் நடக்கப் போவதை அவர் தீர்க்கதரிசனமாக அறிந்தார். ஸ்ரீமன் நாராயணன் அடுத்து எடுக்கப்போகும் ஸ்ரீராம அவதாரத்தில், இச்சிறுமியின் வயது முதிர்ந்த காலத்தில் தானே வந்து தரிசனம் அளிக்கப் போவதைக் கண்டார். அச்சிறுமியின் பாக்கியத்தை எண்ணி மெய்சிலிர்த்தார். கரையேறிய சபரியை மகரிஷி அழைத்தார். "மகளே... நீ யார்?"

சபரியின் கதை
எந்த எதிர்பார்ப்பும் இன்றி, குருவின் வார்த்தைக்கு மதிப்பளித்து, அவரது வாக்கில் முழு நம்பிக்கை வைத்து, காலக்கெடுவைப் பற்றித் துளியும் சிந்திக்காமல் குரு உபதேசித்த 'ராம' மந்திரத்தை வாழ்நாள் முழுவதும் ஜபித்த 'சபரி' என்னும் பெண்மணி போற்றுதலுக்குரியவள். எட்டு வயதுச் சிறுமியான சபரிக்குத் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தன. வேடுவப் பெண்ணான காட்டுவாசி சபரியின் தந்தை மற்றும் காட்டுவாசிகள் புடைசூழ சபரியின் வீட்டில் விருந்து அமர்க்களப்பட்டது.

விருந்துக்காகக் கொண்டுவரப்பட்ட ஆயிரம் ஆடுகளைக் கண்டு அதிர்ந்து போனாள் சபரி. அந்தச் சின்னஞ்சிறு சிறுமியின் உள்ளத்தில் கருணை ஊற்றெடுத்தது. ஆடுகளை வெட்டி விருந்துண்ண வேண்டாம் என மன்றாடினாள். ஆனால், சிறுமியின் குரல் எவர் காதிலும் விழவில்லை. ஆடுகள் வெட்டப்படுவதைக் காண விரும்பாத அவள், வீட்டை விட்டு வெளியேறினாள். கால் போன போக்கில் 'நாராயண' மந்திரத்தை உச்சரித்தபடியே நடந்தவள், கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள மதங்க மகரிஷியின் ஆசிரமத்தை வந்தடைந்தாள்.

Recommended For You
யோகம் தரும் வில்வ காய் விளக்கு பரிகாரம்.. ஊமத்தம் இலையில் தீபம் ஏற்றினாலே செல்வம் மகிழ்ச்சி பெருகும்
"யோகம் தரும் வில்வ காய் விளக்கு பரிகாரம்.. ஊமத்தம் இலையில் தீபம் ஏற்றினாலே செல்வம் மகிழ்ச்சி பெருகும்"

வந்தவள் களைப்பு மிகுதியால் ஆசிரமத்தின் நுழைவாயில் அருகில் உறங்கிப் போனாள். வழக்கமாக அதிகாலையிலேயே எழுந்துவிடும் சபரி, மறுநாள் விரைவில் எழுந்து முன்தினம் கண்ட கங்கைக் கரைக்குச் சென்றாள். கங்கை செல்லும் வழி நெடுகிலும் கல்லும் முள்ளும் இருப்பதைக் கண்டு அவையனைத்தையும் அப்புறப்படுத்தி, பின் நீராடச் சென்றாள்.

கங்கைக் கரைக்கு வரும் வழி நெடுகிலும் மிகவும் சுத்தமாக இருப்பதைக் கண்ட மதங்க மகரிஷி, தன் சீடர்களிடம் விசாரித்தார். ஒரு சிறுமி முன் இரவில் ஆசிரமம் வந்து, வாசல் அருகில் உறங்கியதையும், பின் கங்கை செல்லும் வழியைச் சுத்தப்படுத்தியதையும், தற்போது கங்கையில் குளித்துக்கொண்டிருப்பதையும் அவர்கள் தெரிவித்தனர்.

கங்கைக் கரையை அடைந்த மகரிஷி, சிறுமி சபரி குளித்துவிட்டு 'நாராயண' மந்திரத்தை ஜபித்தபடி நின்றுகொண்டிருந்ததைக் கவனித்தார். அச்சிறுமியைக் கண்ட மாத்திரத்தில், பின்னால் நடக்கப் போவதை அவர் தீர்க்கதரிசனமாக அறிந்தார். ஸ்ரீமன் நாராயணன் அடுத்து எடுக்கப்போகும் ஸ்ரீராம அவதாரத்தில், இச்சிறுமியின் வயது முதிர்ந்த காலத்தில் தானே வந்து தரிசனம் அளிக்கப் போவதைக் கண்டார். அச்சிறுமியின் பாக்கியத்தை எண்ணி மெய்சிலிர்த்தார். கரையேறிய சபரியை மகரிஷி அழைத்தார். "மகளே... நீ யார்?"

You May Also Like
வாஸ்து புருஷன் யாருன்னு தெரியுமா? ஒன்றரை மணி நேரம் தான் விழித்திருப்பார்.. வாஸ்து நாளில் மறக்காதீங்க
"வாஸ்து புருஷன் யாருன்னு தெரியுமா? ஒன்றரை மணி நேரம் தான் விழித்திருப்பார்.. வாஸ்து நாளில் மறக்காதீங்க"
"ஆச்சார்ய ரிஷி முனிவருக்கு என் பணிவான நமஸ்காரங்கள். நான் காட்டுவாசி வேடுவனின் மகள். என் பெயர் சபரி. தீண்டத்தகாதவளான நான், உங்கள் ஆசிரமம் என்று அறியாமல் களைப்பு மிகுதியால் உறங்கிவிட்டேன். என்னை நீங்கள் மன்னித்தருள வேண்டும்" என்றாள் சபரி.

"குழந்தாய்! நாங்கள் செய்த பாக்கியத்தால் நீ இந்த ஆசிரமத்திற்கு வந்துள்ளாய். நீ இனி இந்த ஆசிரமத்திலேயே தங்கலாம்! பகவான் ஸ்ரீமன் நாராயணன், ஸ்ரீராமனாக அவதரிக்க உள்ளார். அந்த ஸ்ரீராமன் உன்னைத் தேடி இந்த ஆசிரமத்திற்கு வந்து தரிசனம் தருவார். ஸ்ரீராம தரிசனம் கிடைக்கப்பெறும்வரை நீ 'ஸ்ரீராம' என்று ராம நாமத்தை ஜபித்து வருவாயாக!" என்று உளம்கனிந்து சொன்னார்.

"ஆச்சார்ய குருவே, மிக்க நன்றி. தங்கள் கட்டளைப்படி நடப்பேன்! என்னை ஆசீர்வதியுங்கள்." "மங்களம் உண்டாகட்டும் குழந்தாய்!" என்று அவளை ஆசீர்வதித்தார் மகரிஷி. அதுமுதல் சிறுமி சபரி ராம நாமத்தை இடைவிடாது ஜபித்து வந்தாள். சபரியைக் காணாத அவளது தந்தை அவளைத் தேடி ஆசிரமத்திற்கே வந்துவிட்டார். தன் மகள் அங்கிருப்பதைக் கண்டு மனம் மகிழ்ந்தார். சபரியின் விருப்பப்படியே ஆடுகள் அனைத்தையும் விடுவித்துவிட்டதாகவும், வீடு திரும்புமாறும் கேட்டுக்கொண்டார்.

மதங்க மகரிஷி, சபரியின் பெருமையை அவள் தந்தைக்கு உணர்த்தி, அவள் ஆசிரமத்திலேயே இருக்கட்டும் என்று கூற, அவள் தந்தை ஆச்சரியப்பட்டு சபரியை ஆசீர்வதித்துவிட்டுச் சென்றார். சபரிக்கு மிகவும் பிடித்த பழம் இலந்தைப் பழமாகும்.

ஆசிரமத்திலிருந்து வெகு தொலைவில் இலந்தை மரக்காடுகள் இருந்தன. தினந்தோறும் அங்கு சென்று கூடை நிறையப் பழங்களைக் கொண்டுவந்து தானும் உண்டு ரிஷி குமாரர்களுக்கும் கொடுத்து உண்ணச் செய்வாள்.

காட்டிலுள்ள இலந்தை மரங்களில் மிக ருசியான பழக் கொட்டைகளைத் தேர்வு செய்து, மதங்க மகரிஷி ஆசிரமத்தைச் சுற்றி அக்கொட்டைகளை விதைத்தாள். சபரியின் வருகைக்குப் பிறகு ஆசிரமமே ஒளி பெற்றது. காலம் உருண்டோடியது. மதங்க மகரிஷி சமாதி அடைந்தார். எட்டு வயதுச் சிறுமி என்பது கடந்து முதியவளாகிவிட்டாள் சபரி. இன்னமும் ராம நாமத்தை விடாது உச்சரித்துக்கொண்டிருந்தாள்.

ஒருநாள் ஒரு ரிஷி முனி சபரியிடம், "அன்னையே, தாங்கள் அனுதினமும் ஜபிக்கும் ஸ்ரீராமன் சூரிய குலத்தில் அவதரித்து, பால பருவத்தில் விசுவாமித்திர ரிஷியுடன் சென்று, அவருக்கு இடையூறு செய்த அசுரர்களை அழித்து, பின்னர், சிவதனுசை இரண்டு துண்டுகளாக்கி, ஜனக மகாராஜாவின் புதல்வி சீதையை மணந்து, பட்டாபிஷேக வைபவத்திற்கு முன்பு இளைய தாயாரின் உத்தரவை ஏற்று வனம் சென்றார்.

வனத்தில் அரக்கன் ராவணன்Powered By Logo

Skip
ஆந்திராவில் ஒரு கல் கிடைத்தாலும் கோடி.. வைர வேட்டையில் கிராம மக்கள் | Diamond in Kurnool
சபரியின் கதை
எந்த எதிர்பார்ப்பும் இன்றி, குருவின் வார்த்தைக்கு மதிப்பளித்து, அவரது வாக்கில் முழு நம்பிக்கை வைத்து, காலக்கெடுவைப் பற்றித் துளியும் சிந்திக்காமல் குரு உபதேசித்த 'ராம' மந்திரத்தை வாழ்நாள் முழுவதும் ஜபித்த 'சபரி' என்னும் பெண்மணி போற்றுதலுக்குரியவள். எட்டு வயதுச் சிறுமியான சபரிக்குத் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தன. வேடுவப் பெண்ணான காட்டுவாசி சபரியின் தந்தை மற்றும் காட்டுவாசிகள் புடைசூழ சபரியின் வீட்டில் விருந்து அமர்க்களப்பட்டது.

விருந்துக்காகக் கொண்டுவரப்பட்ட ஆயிரம் ஆடுகளைக் கண்டு அதிர்ந்து போனாள் சபரி. அந்தச் சின்னஞ்சிறு சிறுமியின் உள்ளத்தில் கருணை ஊற்றெடுத்தது. ஆடுகளை வெட்டி விருந்துண்ண வேண்டாம் என மன்றாடினாள். ஆனால், சிறுமியின் குரல் எவர் காதிலும் விழவில்லை. ஆடுகள் வெட்டப்படுவதைக் காண விரும்பாத அவள், வீட்டை விட்டு வெளியேறினாள். கால் போன போக்கில் 'நாராயண' மந்திரத்தை உச்சரித்தபடியே நடந்தவள், கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள மதங்க மகரிஷியின் ஆசிரமத்தை வந்தடைந்தாள்.

Recommended For You
யோகம் தரும் வில்வ காய் விளக்கு பரிகாரம்.. ஊமத்தம் இலையில் தீபம் ஏற்றினாலே செல்வம் மகிழ்ச்சி பெருகும்
"யோகம் தரும் வில்வ காய் விளக்கு பரிகாரம்.. ஊமத்தம் இலையில் தீபம் ஏற்றினாலே செல்வம் மகிழ்ச்சி பெருகும்"

வந்தவள் களைப்பு மிகுதியால் ஆசிரமத்தின் நுழைவாயில் அருகில் உறங்கிப் போனாள். வழக்கமாக அதிகாலையிலேயே எழுந்துவிடும் சபரி, மறுநாள் விரைவில் எழுந்து முன்தினம் கண்ட கங்கைக் கரைக்குச் சென்றாள். கங்கை செல்லும் வழி நெடுகிலும் கல்லும் முள்ளும் இருப்பதைக் கண்டு அவையனைத்தையும் அப்புறப்படுத்தி, பின் நீராடச் சென்றாள்.

கங்கைக் கரைக்கு வரும் வழி நெடுகிலும் மிகவும் சுத்தமாக இருப்பதைக் கண்ட மதங்க மகரிஷி, தன் சீடர்களிடம் விசாரித்தார். ஒரு சிறுமி முன் இரவில் ஆசிரமம் வந்து, வாசல் அருகில் உறங்கியதையும், பின் கங்கை செல்லும் வழியைச் சுத்தப்படுத்தியதையும், தற்போது கங்கையில் குளித்துக்கொண்டிருப்பதையும் அவர்கள் தெரிவித்தனர்.

கங்கைக் கரையை அடைந்த மகரிஷி, சிறுமி சபரி குளித்துவிட்டு 'நாராயண' மந்திரத்தை ஜபித்தபடி நின்றுகொண்டிருந்ததைக் கவனித்தார். அச்சிறுமியைக் கண்ட மாத்திரத்தில், பின்னால் நடக்கப் போவதை அவர் தீர்க்கதரிசனமாக அறிந்தார். ஸ்ரீமன் நாராயணன் அடுத்து எடுக்கப்போகும் ஸ்ரீராம அவதாரத்தில், இச்சிறுமியின் வயது முதிர்ந்த காலத்தில் தானே வந்து தரிசனம் அளிக்கப் போவதைக் கண்டார். அச்சிறுமியின் பாக்கியத்தை எண்ணி மெய்சிலிர்த்தார். கரையேறிய சபரியை மகரிஷி அழைத்தார். "மகளே... நீ யார்?"

You May Also Like
வாஸ்து புருஷன் யாருன்னு தெரியுமா? ஒன்றரை மணி நேரம் தான் விழித்திருப்பார்.. வாஸ்து நாளில் மறக்காதீங்க
"வாஸ்து புருஷன் யாருன்னு தெரியுமா? ஒன்றரை மணி நேரம் தான் விழித்திருப்பார்.. வாஸ்து நாளில் மறக்காதீங்க"
"ஆச்சார்ய ரிஷி முனிவருக்கு என் பணிவான நமஸ்காரங்கள். நான் காட்டுவாசி வேடுவனின் மகள். என் பெயர் சபரி. தீண்டத்தகாதவளான நான், உங்கள் ஆசிரமம் என்று அறியாமல் களைப்பு மிகுதியால் உறங்கிவிட்டேன். என்னை நீங்கள் மன்னித்தருள வேண்டும்" என்றாள் சபரி.

"குழந்தாய்! நாங்கள் செய்த பாக்கியத்தால் நீ இந்த ஆசிரமத்திற்கு வந்துள்ளாய். நீ இனி இந்த ஆசிரமத்திலேயே தங்கலாம்! பகவான் ஸ்ரீமன் நாராயணன், ஸ்ரீராமனாக அவதரிக்க உள்ளார். அந்த ஸ்ரீராமன் உன்னைத் தேடி இந்த ஆசிரமத்திற்கு வந்து தரிசனம் தருவார். ஸ்ரீராம தரிசனம் கிடைக்கப்பெறும்வரை நீ 'ஸ்ரீராம' என்று ராம நாமத்தை ஜபித்து வருவாயாக!" என்று உளம்கனிந்து சொன்னார்.

"ஆச்சார்ய குருவே, மிக்க நன்றி. தங்கள் கட்டளைப்படி நடப்பேன்! என்னை ஆசீர்வதியுங்கள்." "மங்களம் உண்டாகட்டும் குழந்தாய்!" என்று அவளை ஆசீர்வதித்தார் மகரிஷி. அதுமுதல் சிறுமி சபரி ராம நாமத்தை இடைவிடாது ஜபித்து வந்தாள். சபரியைக் காணாத அவளது தந்தை அவளைத் தேடி ஆசிரமத்திற்கே வந்துவிட்டார். தன் மகள் அங்கிருப்பதைக் கண்டு மனம் மகிழ்ந்தார். சபரியின் விருப்பப்படியே ஆடுகள் அனைத்தையும் விடுவித்துவிட்டதாகவும், வீடு திரும்புமாறும் கேட்டுக்கொண்டார்.

மதங்க மகரிஷி, சபரியின் பெருமையை அவள் தந்தைக்கு உணர்த்தி, அவள் ஆசிரமத்திலேயே இருக்கட்டும் என்று கூற, அவள் தந்தை ஆச்சரியப்பட்டு சபரியை ஆசீர்வதித்துவிட்டுச் சென்றார். சபரிக்கு மிகவும் பிடித்த பழம் இலந்தைப் பழமாகும்.

ஆசிரமத்திலிருந்து வெகு தொலைவில் இலந்தை மரக்காடுகள் இருந்தன. தினந்தோறும் அங்கு சென்று கூடை நிறையப் பழங்களைக் கொண்டுவந்து தானும் உண்டு ரிஷி குமாரர்களுக்கும் கொடுத்து உண்ணச் செய்வாள்.

காட்டிலுள்ள இலந்தை மரங்களில் மிக ருசியான பழக் கொட்டைகளைத் தேர்வு செய்து, மதங்க மகரிஷி ஆசிரமத்தைச் சுற்றி அக்கொட்டைகளை விதைத்தாள். சபரியின் வருகைக்குப் பிறகு ஆசிரமமே ஒளி பெற்றது. காலம் உருண்டோடியது. மதங்க மகரிஷி சமாதி அடைந்தார். எட்டு வயதுச் சிறுமி என்பது கடந்து முதியவளாகிவிட்டாள் சபரி. இன்னமும் ராம நாமத்தை விடாது உச்சரித்துக்கொண்டிருந்தாள்.

ஒருநாள் ஒரு ரிஷி முனி சபரியிடம், "அன்னையே, தாங்கள் அனுதினமும் ஜபிக்கும் ஸ்ரீராமன் சூரிய குலத்தில் அவதரித்து, பால பருவத்தில் விசுவாமித்திர ரிஷியுடன் சென்று, அவருக்கு இடையூறு செய்த அசுரர்களை அழித்து, பின்னர், சிவதனுசை இரண்டு துண்டுகளாக்கி, ஜனக மகாராஜாவின் புதல்வி சீதையை மணந்து, பட்டாபிஷேக வைபவத்திற்கு முன்பு இளைய தாயாரின் உத்தரவை ஏற்று வனம் சென்றார்.

வனத்தில் அரக்கன் ராவணன், சீதாதேவியைக் கவர்ந்து சென்றுவிட்டான். சீதையைத் தேடித் தென்முகமாக வந்துகொண்டிருக்கும் ஸ்ரீராமன், தற்போது நம் ஆசிரமத்துக்கு அருகாமையில் உள்ள வனத்தில் இருப்பதாக அறிகிறோம். நம் ஆச்சாரியார் கூறியபடி ஸ்ரீராமன் நம் ஆசிரமம் தேடிவரும் வேளை நெருங்கிவிட்டது என்றே தோன்றுகிறது," என்று கூறி நெகிழ்ந்தார்.

சபரியின் கண்களில் கண்ணீர். ஸ்ரீமன் நாராயணனை மகாலட்சுமியோடு சேவிக்கக் கற்றுக்கொடுத்திருந்தார் அவளுடைய தந்தை. ஆனால், ஸ்ரீமன் நாராயணனின் அவதாரமான ஸ்ரீராமன் வரும்போது சீதாதேவி இல்லாமலா அவரைச் சேவிப்பது? என்று வேதனையடைந்து தன் குருவைப் பிரார்த்தித்தாள். ஆசிரமத்து வாசலில் இலந்தை மரங்களில் பழங்கள் ஏராளமாக இருந்தன. அவையும் ஸ்ரீராமனின் வருகைக்காகக் காத்திருக்கின்றனவோ?

மறுநாள் வழக்கம்போல கங்கையில் குளிக்கச் சென்றாள். குளித்துக் கரையேறியதும் ரிஷி குமாரர் ஒருவர் ஓடிவந்து, "ஸ்ரீராமன் ஆசிரமம் வந்துள்ளார். சபரிக்காகக் காத்திருக்கிறார்" என்று கூறினார். முதியவளான சபரியின் நடையில் வேகம் கூடியது. சபரி ஆசிரமத்துள் நுழையும்போதே, ஸ்ரீராமபிரான் ஓடிவந்து, அவளைக் கைத்தாங்கலாகப் பற்றிக்கொண்டு அமரச் செய்தான். ஆசிரமத்து வாயிலில் பழுத்துத் தொங்கிய இலந்தைப் பழங்களை இரண்டு கைகளாலும் அள்ளி வந்த சபரி, அதை அப்படியே ஸ்ரீராமன் கையில் கொடுத்து அவரை வலம் வந்தாள்.

ஸ்ரீராமனின் காலடியில் விழுந்து சேவித்தாள். "பிரபோ, என் குருவின் வாக்கு இன்று பூர்த்தியானது. அவர் எனக்கு உபதேசித்த ராம நாமத்தால் உன் தரிசனம் கிடைத்தது. ஸ்ரீராமா, உன்னைத் தனியாகச் சேவிக்க என் மனம் இடம்தரவில்லை. என் தந்தை 'மகாலட்சுமியோடுதான் ஸ்ரீமன் நாராயணனைச் சேவிக்க வேண்டும்' என்று சொல்லிக்கொடுத்திருக்கிறார். என் குரு சொன்னபடி, ஸ்ரீமன் நாராயணனின் அவதாரமாகிய ஸ்ரீராமா, சீதாதேவி இன்றி நான் எப்படிச் சேவிப்பது என்று குழம்பினேன்.

என் குருநாதர் எனக்கு அறிவுறுத்தியபடி, 'பத்ரி' என்றால் இலந்தை. இலந்தைப் பழமோ மகாலட்சுமி ஸ்வரூபம். ஆகவேதான் உன் கையில் இலந்தைப் பழத்தைக் கொடுத்து சீதாதேவியோடு என் ராமனை நான் சேவிக்கிறேன். என் தந்தையின் விருப்பமும் என் குருநாதரின் ஆசியும் உன்னை மகிழ்வோடு சேவிக்கப் பாக்கியமாயிற்று. ஸ்ரீராமா, சீதையைப் பிரிந்துவிட்டோமே என்று துயர் கொள்ள வேண்டாம்.

இங்கிருந்து சற்றே தொலைவில் வானரப் படைகளின் மகாராஜாவான சுக்ரீவன் இருக்கிறார். அவருடைய உதவியோடு சீதை உன்னிடம் திரும்பி வருவாள். சீதை உன் அருகில் இருக்கப் பட்டாபிஷேகம் சிறப்பாக நடக்கும். இது உறுதி" என்று கூறினாள். புன்னகையோடு அவளுடைய ஆலோசனைகளை ஏற்றுக்கொண்ட ஸ்ரீராமன், சபரியிடமிருந்து விடைபெற்றான். ஸ்ரீராமனைக் கண்ட மகிழ்ச்சியில் இன்னமும் உத்வேகத்தோடு ராம நாமத்தை ஜபிக்க ஆரம்பித்தாள் சபரி.

சபரி, ஸ்ரீராமனிடம் தனக்கு 'முக்தி' கொடு என்று கேட்கவில்லை. ஏனெனில், எவ்வித எதிர்பார்ப்புமின்றி இறைவனைத் தொழுவது மட்டுமே நம் கடமை என்று அவள் தந்தை உபதேசித்திருக்கிறார். ஸ்ரீராமனும் சபரிக்கு ஏதும் வரம் அளிக்கவில்லை. ஏனெனில், அவளிடம் இருக்கும் 'ராம நாமமே' எதையும் பெற்றுத் தந்துவிடும் என்று அறிவார்.

ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் 96 கோடி முறை ராம நாமத்தைக் கூறி, ஸ்ரீராமனின் தரிசனத்தை ஒரு கணம் காணப்பெற்றார். சபரி, ஸ்ரீராமன் அவதரிக்கும் முன்னரே குருவின் உபதேசம் பெற்று ஸ்ரீராம நாமத்தை உச்சரித்து, தன் வாழ்நாளையே ராம நாமத்திற்காக அர்ப்பணித்தாள் என்றால் அது மிகையல்ல.

ஸ்ரீராம ஜெயம்!


Sunday, 24 August 2025

12 வாரத்தில் மாத்திரை போடாம கொலஸ்ட்ராலை குறைக்கணுமா?

12 வாரத்தில் மாத்திரை போடாம கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? கொலஸ்ட்ரால் பிரச்சனை என்பது உலகளவில் ஏராளமானோர் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் ஒன்றாகும். கொலஸ்ட்ரால் பிரச்சனையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அதைக் கட்டுப்படுத்த முயற்சிக்காவிட்டால், பின் அந்த கொலஸ்ட்ரால் இரத்தக்குழாய்களில் படிந்து, நாளடைவில் மாரடைப்பு போன்ற இதய நோய்களின் அபாயத்தை அதிகரித்து, உயிருக்கே உலை வைத்துவிடும். அதற்காக கொலஸ்ட்ரால் முழுமையாக ஆபத்தானது என்று நினைக்க வேண்டாம். நமது உடலுக்கு கொலஸ்ட்ராலும் அவசியம். இந்த கொலஸ்ட்ராலை நமது உடலே தினமும் உற்பத்தி செய்யும். இது தவிர நாம் சாப்பிடும் உணவுகளின் மூலம் கூடுதலாக உடலில் கொலஸ்ட்ரால் சேரும் போது, அது ஒரு கட்டத்தில் கெட்ட கொலஸ்ட்ராலாக உடலில் படிய தொடங்கிவிடும். இப்படி உடலில் சேரும் கெட்ட கொலஸ்ட்ராலைக்  மாத்திரை போடாமலேயே கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் உணவுகள் குறித்து பகிர்ந்துள்ளார். இந்த உணவுகளுடன், ஒருசில விஷயங்களை தொடர்ந்து 12 வாரங்கள் பின்பற்றி வந்தால், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க முடியும் என்றும் கூறியுள்ளார். இப்போது கொலஸ்ட்ராலைக் குறைக்க டாக்டர் கூறியுள்ள அந்த உணவுகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பழக்கங்கள் எவையென்பதைக் காண்போம். அதில் அவர் கூறியதாவது, "கொழுப்பு இல்லாமல் நம்மால் உயிர் வாழவே முடியாது. கொலஸ்ட்ரால் என்பது மிகவும் அவசியம் மற்றும் அத்தியாவசியம். ஆனால் அதற்கும் ஒரு அளவு உள்ளது. நமது உடலில் HDL கொழுப்பு இருந்தால் மிகவும் நல்லது. LDL என்னும் கெட்ட கொலஸ்ட்ரால் 100 mg/dL இருந்தால் பிரச்சனை இல்லை. 100-க்கு அதிகமாகும் போது, இரத்தக்குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும் காரணங்களுள் முக்கியமான ஒன்றாகிறது." என்று கூறினார். கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும் உணவுகளும்.. பழக்கங்களும்.. ஓட்ஸ் "ஓட்ஸில் ஒரு ரகசியமான ஆயுதம் ஒன்று உள்ளது. அது தான் பீட்டா க்ளுக்கன். இந்த பீட்டா க்ளுக்கன் என்பது ஒரு கரையக்கூடிய நார்ச்சத்து. ஓட்ஸில் நீரை ஊற்றியதும், அது வழவழப்பாக, ஜெல்லி போன்று மாறுகிறது. இப்படிப்பட்ட ஓட்ஸ் உடலுக்குள் செல்லும் போது, குடலில் உள்ள நீருடன் சேர்ந்து ஒரு வழவழப்பான திரவமாக மாறி, உடலில் உள்ள கொலஸ்ட்ராலை உறிஞ்சி, உடலில் இருந்து வெளியேற்றுகிறது. தினமும் வெறும் 3 கிராம் பீட்டா க்ளுக்கானை எடுத்தால், இது 1 1/2 கப் ஓட்ஸில் உள்ளது. இது கெட்ட கொலஸ்ட்ராலை 5-10 சதவீதம் குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே அரிசியை குறைத்துவிட்டு, ஓட்ஸை எடுத்தால் கிடைக்கும் நன்மை தான் இது" என்று . பூண்டு "பூண்டில் அல்லிசின் உள்ளது. இது கல்லீரல் சுரக்கும் கொலஸ்ட்ரால் உற்பத்தியைக் குறைக்கும் திறன் கொண்டது. தினமும் 2 பல் பூண்டு சாப்பிட்டால், 5% கொழுப்புக்களை கரையக்கூடிய திறன் உள்ளது. ஆனால் ஒரு நிபந்தனை என்னவென்றால், பச்சையான பூண்டில் தான் அல்லிசின் உள்ளது. சமைக்கும் போது, அந்த அல்லிசின் கரைந்து போகும். அதற்காக வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் என்பதில்லை, உடலுக்கு தொந்தரவு செய்யாத வகையில் 1 பல் பூண்டை காலை உணவுடன் சாப்பிட்டாலே போதும்" என்று டாக்டர் கூறினார். கடல் மீன்கள் "கடல் மீன்களில் EPA மற்றும் DHA போன்ற ஒமேகா-3 கொழுப்புகள் அதிகமாக உள்ளன. இந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க உதவுகிறது. இந்த ஒமேகா-3 கொழுப்புகள் மீன்களில் அதிகம் இருந்தாலும், கேப்ஸ்யூல் வடிவிலும் கடைகளில் விற்கப்படுகிறது. இது தவிர வால்நட்ஸ், ஆளி விதைகள் போன்றவற்றிலும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன." என்று கூறினார். வெந்தயம் தினமும் இரவு வெந்தயத்தை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் வெந்தயத்தை உட்கொண்டு வந்தால், வெந்தயத்தில் இருந்து சபோனின் என்னும் கெமிக்கல் வெளியிடப்படுகிறது. இந்த சபோனின் பித்த நீருடன் சேர்ந்து கொலஸ்ட்ரால் உடலுடன் உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது. தினமும் 10 கிராம் வெந்தயத்தை உட்கொண்டு வந்தால், அது 14 சதவீதம் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது. என்று . மஞ்சள் மற்றும் மிளகு மஞ்சளில் உள்ள குர்குமின், மிளகில் உள்ள பெப்பரின், கெட்ட கொலஸ்ட்ரால் குறைக்க பெரிதும் உதவுகின்றன. LDL கொழுப்புக்கள் ஆக்ஸிஜனேற்றம் அடைவது என்பது நல்லதல்ல. இப்படி கெட்ட கொலஸ்ட்ரால் ஆக்ஸிஜனேற்றம் அடைவதை மஞ்சளும், மிளகும் தடுக்கிறது. என்று டாக்டர் கூறினார். கறிவேப்பிலை "காலையில் தினமும் கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், உடலுக்கு கார்பசோல் அல்கலாய்டுகள் கிடைக்கும். இது மெட்டபாலிசத்தை அதிகரித்து, கெட்ட கொலஸட்ராலை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க உதவுகிறது. கூடவே புரோட்டீன், வெந்தயக்கீரை, க்ரீன் டீ போன்றவையும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும்." என்று டாக்டர் கூறினார். நடைப்பயிற்சி "ஓய்வு நிலையில் இதயத் துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 70 முறை துடிக்கும். அதுவே ஒரு வேகமான நடைப்பயிற்சிக்கு பின் இதயத் துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 100/110 முறை துடிக்கும். இப்படி இதயத் துடிப்பு அதிகரிக்கும் போது, கல்லீரலில் HMG-CoA ரிடக்டேஸ் நொதியின் உற்பத்தியைத் தடுக்கிறது. இந்த HMG-CoA ரிடக்டேஸ் நொதி தான் கெட்ட கொலஸ்ட்ரால் உற்பத்திக்கு தேவையான நொதி. எனவே தினமும் நடைப்பயிற்சியை மேற்கொள்ளும் போது, இதயத் துடிப்பு அதிகரிக்கிறது. HMG-CoA ரிடக்டேஸ் நொதியின் உற்பத்தி குறைகிறது. இதன் மூலம் கெட்ட கொழுப்பின் அளவு 5-10 சதவீதம் குறைகிறது. வாரத்திற்கு 150 நிமிடங்கள் நடந்தால், உடலில் 20 சதவீதம் நல்ல கொழுப்பு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது." என்று டாக்டர் கூறினார். நல்ல தூக்கம் கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் குறைய வேண்டுமானால், இரவு நேரத்தில் நல்ல இருட்டான அறையில், மிருதுவான தலையணையில், சரியான வெப்பநிலையில் நிம்மதியான தூக்கம் என்பது மிகவும் அவசியம். கொழுப்புக்கள் குறைய இது மிகவும் முக்கியம். ஏனெனில் சரியான தூக்கம் கிடைக்காவிட்டால், உடலில் கார்டிசோல் என்னும் மன அழுத்த ஹார்மோன் அளவுகள் அதிகரித்து, கொலஸ்ட்ராலை குறைய விடாமல் தடுக்கும். அதுவே நல்ல தூக்கத்தை 7-8 மணிநேரம் மேற்கொண்டால், மன அழுத்த ஹார்மோன்கள் குறைந்து, கொலஸ்ட்ராலும் குறையும்" என்று டாக்டர் கூறினார். மேலும்... "இதுவரை கூறிய உணவுகளை உட்கொண்டு, நடைப்பயிற்சி, நல்ல தூக்கத்துடன், தினமும் 5 பாதாமை ஊற வைத்து, தோலுடன் சாப்பிடலாம். இதுவும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும். அதோடு இரவு 7 மணிக்கு முன் இரவு உணவை முடித்துவிட வேண்டும். பச்சையாக பூண்டு சாப்பிட முடியாவிட்டால், தேனுடன் சேர்த்து சாப்பிடலாம். சுண்டல் வகைகளை தினசரி உணவில் சேர்த்து வாருங்கள். தினமும் 1/2 மணிநேர வாக்கிங்கை தவறாமல் மேற்கொள்ளுங்கள். யோகாவை செய்யுங்கள். முடிந்தால் சைக்கிளிங், நீச்சல் பயிற்சியை மேற்கொள்ளுங்கள். தினமும் 8-10 டம்ளர் நீரை தவறாமல் குடியுங்கள். மன அழுத்தத்தைக் குறையுங்கள். ஆப்பிள், ஆரஞ்சு, அவகேடோ போன்ற பழங்களை அதிகம் உட்கொண்டு வாருங்கள்." என்றும் டாக்டர் கூறினார். எனவே நண்பர்களே! உங்களுக்கு உடம்பில் கொலஸ்ட்ரால் அதிகம் இருந்து, அதை எளிய வழியில் குறைக்க நினைத்தால்,   உணவுகளை உட்கொண்டு, பழக்கவழக்கங்களை பின்பற்றி வாருங்கள். அதுவும் தொடர்ந்து 12 வாரங்கள் பின்பற்றி வந்தால், கொலஸ்ட்ரால் நன்கு குறைவதைக் காணலாம். 

Saturday, 23 August 2025

பூமியிலிருந்து வைகுண்டம் எங்கே இருக்கிறது? எப்படி போக வேண்டும் தெரியுமா?

 
பூமியிலிருந்து வைகுண்டம் எங்கே இருக்கிறது? எப்படி போக வேண்டும் தெரியுமா?
வைகுண்டம் என்கிறார்களே அது பூமியிலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பது தெரியுமா? வைகுண்டம் கூப்பிடும் தூரத்தில் இருக்கிறது என்கிறார்களே அது உண்மைதானா என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.


 மன்னன் ஒருவனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. வைகுண்டம் என்று சொல்கிறார்களே, அது பூமியிலிருந்து எவ்வளவு தூரம்? என்பதே மன்னனின் சந்தேகம்.



அவையைக் கூட்டி சபையிலுள்ள பண்டிதர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டான். அவர்கள் அவரவர் அறிவுக்கு எட்டிய வரை, வைகுண்டம் எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதைக் குறிப்பிட்டனர்.


மன்னன் திருப்தியடையவில்லை. அப்போது சபையிலிருந்த விதூஷகன் எழுந்து, மகாராஜா! வைகுண்டம் கூப்பிடும் தூரத்தில் உள்ளது என்றான்.

இதற்கு ஆதாரம் என்ன? என்று மன்னன் கேட்டான். உடனே விதூஷகன், கஜேந்திரன் எனும் யானையை முதலை பிடித்தபோது, ஆதிமூலமே என்று கூவி அழைத்தது அந்த யானை. அதன் குரல் கேட்டு க்ஷண நேரத்தில் மகாவிஷ்ணு அங்கே தோன்றி, கஜேந்திரனைக் காப்பாற்றினார். இது உண்மை எனில், வைகுண்டம் கூப்பிடும் தூரத்தில் இருக்கிறது என்பதும் உண்மைதானே? என்று பதிலளித்தான்.


பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நாமமே அவ்வளவு சக்தி வாய்ந்தது. ஹரி நாமத்தால் காப்பாற்றப்பட்டவர்கள் பலர் சபையோர் கரகோஷமிட்டு வாழ்த்தினர். மன்னன் மனமகிழ்ந்து விதூஷகனுக்குப் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.


எனவே கலியுகத்தின் தாரக மந்திரம்

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

 
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

என தினமும் 108 முறை இந்த நாமத்தை ஜபம் செய்யவும். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Thursday, 21 August 2025

கடிகாரம் வாஸ்து


கடிகாரங்களை இங்கே மாட்டி வைக்காதீங்க.. கடிகாரத்தை பரிசாக தரக்கூடாதா?   கடிகாரம் வாஸ்து
வீட்டில் பயன்படுத்தக்கூடிய வழக்கமான பொருட்களை சரியாகவும், முறையாகவும் வைத்திருந்தாலே தேவையற்ற சிக்கலை குடும்பத்தில் தவிர்த்துவிடலாம். அந்தவகையில் சுவர் கடிகாரம் மிக முக்கியமானது. தவறான திசை, தவறான இடம், தவறான கடிகாரம் போன்றவற்றினால் எழக்கூடிய பிரச்சனைகள் ஏராளம். இதுகுறித்து வாஸ்துவில் விரிவாகவே சொல்லப்பட்டுள்ளது. வீட்டின் நிதி சிக்கல் தீர வேண்டுமானால் கடிகாரங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்வது அவசியம். அவைகளை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.


கடிகாரங்களை வடக்கு பக்கமுள்ள சுவற்றில் மாட்டி வைக்க வேண்டும். அந்த கடிகாரம் தெற்கு பார்த்தவாறு இருந்தால், வீட்டில் பொருளாதார சிக்கல் ஏற்படாது.. அதிம், வடக்கு பக்கத்தில் வட்ட வடிவமுள்ள கடிகாரங்கள் மாட்டினால் இரட்டிப்பு நன்மைகள் கிடைக்குமாம். ஏனென்றால், குபேரருக்கு உரிய திசை இதுவென்பதால், நிதி நிலைமை வளமாக இருக்கும்.



ஒருவேளை வடக்கு திசையில் கடிகாரம் வைக்க முடியாமல் போனால், கிழக்கு திசை சுவற்றில் மாட்டி வைக்கலாம்.. அதாவது மேற்கு திசையை பார்த்தவாறு கடிகாரம் இருக்க வேண்டும்.. இப்படி வைத்தாலும் செல்வம் தடையின்றி குடும்பத்திற்குள் வரும்.. ஏனென்றால், குபேரனை உள்ளடக்கிய இந்திரனின் திசை இதுவாகும்.


சத்தம் எழுப்பும் கடிகாரங்கள்
1 மணி நேரத்திற்கு ஒருமுறை மணி அடித்து சத்தம் எழுப்பும் கடிகாரமாக இருந்தால் கிழக்கு திசையில் மாட்டி வைக்கலாம்.

வடக்கு, கிழக்கு திசையில் முடியாமற்போனால், வடகிழக்கு திசையிலும் வைக்கலாம். இங்கு நேர்மறை ஆற்றல் பரவும்.. ஆனால், தெற்கு திசையில் மட்டும் கடிகாரத்தை மாட்டக்கூடாது.


தெற்கு எம தர்மனின் திசை என்பதால், இத்திசையில் கடிகாரத்தை மாட்டுவது, நம்முடைய ஆயுட்காலத்தை எம தர்மன் குறைக்க ஏதுவாகும். எனவே இத்திசையில் கடிகாரங்கள் மாட்டுவதை தவிர்க்க வேண்டும் என்கிறார்கள்..

பரிசாக கடிகாரங்களை தரலாமா
தென்பகுதியில் மட்டுமல்ல, படுக்கை அறையில் கடிகாரம் மாட்டி வைக்கக்கூடாது.. நிலைக்கதவுக்கு மேல் புறமும் கடிகாரத்தை மாட்டக்கூடாது.. வாசலுக்கு வெளிப்புறமும் கடிகாரத்தை மாட்டி வைக்கக்கூடாது.. பால்கனி சுவரிலும் கடிகாரத்தை மாட்டக்கூடாது.


உங்களைவிட குறைந்த வயதுடையவர்களுக்கு கடிகாரத்தை பரிசாக தரலாம்.. ஆனால், உங்களைவிட அதிக வயதானவர்களுக்கு கடிகாரத்தை பரிசாக தந்துவிடக்கூடாது.


நீலம், கருப்பு, ஆரஞ்சு நிற கடிகாரங்களை பயன்படுத்தக்கூடாது.. மஞ்சள், பச்சை அல்லது வெளிர் பழுப்பு நிற கடிகாரத்தை வாங்கலாம்.. வெள்ளை, மஞ்சள் மற்றும் இளம் பச்சை நிறங்களில் கடிகாரங்கள் இருக்குமானால் நேர்மறையான சக்திகளை வீட்டிற்குள் ஈர்க்க செய்யும்.

எப்போதுமே கடிகாரங்கள் அழுக்காக, தெளிவற்று இருக்கக்கூடாது.. கடிகாரங்கள் ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும்.. பழுதான கடிகாரங்கள், பேட்டரியில்லாத கடிகாரங்கள், விரிசல் விழுந்த கடிகாரங்களை வீட்டில் வைத்திருக்ககூடாது.

கிழக்கு திசை - ஆரோக்கியம்
நேரத்தை அதிகப்படுத்தி வைக்கலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் குறைவான நேரத்தை வைக்கக்கூடாது.. சரியான நேரத்தில் கடிகாரத்தை இயங்கவிட வேண்டும்.

கிழக்கு திசையில் கடிகாரத்தை வைப்பதால், உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பார்கள்.. ஏனென்றால், கிழக்குத் திசை என்பது சொர்க்கத்தின் அதிபதி இந்திரனின் திசை. இந்திரன் தேவாதி தேவன் தேவர்களுக்கெல்லாம் தலைவன். குபேரன், வாயு, வருணன், அக்னி என அனைவரும் இந்திரனுக்குள் அடக்கம் என்கின்றன புராணங்கள். வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியம் அற்புதமாக இருக்க வேண்டும் என்றால் கிழக்கு பக்கம் உள்ள சுவற்றில் கடிகாரத்தை மாற்ற வேண்டும்.

வடக்கு சுவரில் கடிகாரம்
இப்படி கிழக்குப்பக்க சுவற்றில் நீங்கள் மாட்டும் கடிகாரம், பிரவுன் கலர் அதாவது மரச்சாமான்களின் வண்ணத்தில் இருந்தால் மிகவும் நல்லது. வீட்டில் இடம் இருக்கிறது என்பதற்காக எல்லா இடங்களிலும் கடிகாரங்களை மாட்டி வைக்கக்கூடாது..

ஒருவேளை நீங்கள் வடக்கு நோக்கிய சுவரில் ஒரு கடிகாரத்தை மாட்டினால் அந்தச் சுவருக்கு நீலம் அல்லது வானம் நீல வண்ணம் பூசலாம். ஏனென்றால், அந்த திசை நீர் திசையை குறிக்கிறது.. அங்கு கடிகாரத்தை மாட்டி வைக்கும்போது, நேர்மறை ஆற்றல் பெருகும்..

படுக்கையறையில் சுவர் கடிகாரத்தை மாட்டக்கூடாது என்பார்கள்.. அப்படியே மாட்டி வைக்க வேண்டிய தேவை இருந்தால், வடக்கு மற்றும் கிழக்கு திசையில் மட்டுமே நிறுவ வேண்டும்.


Tuesday, 19 August 2025

ஏலக்காய் டீ....

டீ-யில் ஒரு போதும் ஏலக்காய் சேர்த்து குடிக்காதீங்க.. அதில் எவ்வளவு பிரச்சனை இருக்கு தெரியுமா..?

ஏலக்காய் டீ நல்ல சுவையை மட்டுமல்ல, நல்ல வாசனையையும் கொண்டுள்ளது. இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. ஆனால் ஏலக்காய் நல்லது என்றாலும், சில நேரங்களில் அது சிலருக்கு ஆபத்தானதாக இருக்கலாம். சில உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் ஏலக்காய் டீ குடித்தால் அதிக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
நம் நாட்டில் பலர் காலையில் எழுந்தவுடன் தேநீர் அருந்தும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். அந்தவகையில் ஒவ்வொருவரும் டீ -யை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப தயார் செய்து குடிக்கின்றனர். அப்படி சிலர் ஸ்ராங்கான டீ-யை விரும்புகிறார்கள், மற்றவர்கள் மசாலா டீ, இஞ்சி டீ மற்றும் ஏலக்காய் டீ ஆகியவற்றை விரும்பிக் குடிப்பார்கள். ஏலக்காய் டீ நல்ல சுவையை மட்டுமல்ல, நல்ல வாசனையையும் கொண்டுள்ளது. இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. ஆனால் ஏலக்காய் நல்லது என்றாலும், சில நேரங்களில் அது சிலருக்கு ஆபத்தானதாக இருக்கலாம். சில உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் ஏலக்காய் டீ குடித்தால் அதிக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்
பித்தப்பைக் கற்கள் உள்ளவர்கள்: பித்தப்பைக் கற்கள் உள்ளவர்கள் ஏலக்காய் டீ குடிப்பது நல்லதல்ல. ஏலக்காய் பித்தப்பையில் உள்ள கற்களை மேலும் எரிச்சலடையச் செய்யும். இது பித்தப்பையில் பிடிப்புகளை ஏற்படுத்தி வலியை அதிகரிக்கும். அதற்கு பதிலாக சாதாரண டீ அல்லது மூலிகை டீ குடிப்பது நல்லது. உங்களுக்கு பித்தப்பைக் கற்கள் இருந்து ஏலக்காய் டீ குடிக்க விரும்பினால், மருத்துவரை அணுகுவது நல்லது.
கர்ப்பிணிப் பெண்கள் : பொதுவாக கர்ப்பிணிகள் ஏலக்காயை அதிகமாக உட்கொள்ளக்கூடாது. எனவே டீயில் அதிகமாக ஏலக்காய் போட்டுக் குடிப்பது மிகவும் ஆபத்தானது. இது கருச்சிதைவு அபாயத்தை அதிகரிக்கும். உணவில் அதன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது நல்லது. அதேபோல், பாலூட்டும் தாய்மார்கள் ஏலக்காயை அதிகமாக உட்கொள்ளக்கூடாது
ஒவ்வாமை உள்ளவர்கள் : சிலர் ஏலக்காயை சகித்துக்கொள்வதில்லை, இது ஒவ்வாமையை ஏற்படுத்தும். அத்தகையவர்கள் அதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். நீங்கள் ஏலக்காய் டீ குடித்தால், தோல் வெடிப்பு, அரிப்பு அல்லது சுவாசப் பிரச்சினைகள் ஏற்படலாம். ஏலக்காய் சாப்பிட்ட பிறகு அல்லது டீ குடித்த பிறகு உங்கள் உடலில் ஏதேனும் அசாதாரண மாற்றங்கள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
நீரிழிவு பிரச்சினைகள் : ஆராய்ச்சியின் படி, ஏலக்காய் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. இருப்பினும், நீங்கள் உங்கள் இரத்த சர்க்கரையை குறைக்க மருந்துகளை எடுத்துக்கொண்டால், அதிகமாக ஏலக்காய் டீகுடிப்பது உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து லோ சுகர் ஆக்கும். இது மிகவும் ஆபத்தானது. அதனால்தான் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துபவர்கள் ஏலக்காய் டீ குறித்து கவனமாக இருக்க வேண்டும்
இரத்த மெலிவு மருந்துகள் : ஏலக்காய் இயற்கையான இரத்த மெலிவு பண்புகளைக் கொண்டுள்ளது. அதாவது இது இரத்தத்தை மெலிவுபடுத்துகிறது. நீங்கள் ஏற்கனவே இரத்த மெலிவு மருந்துகளை எடுத்துக்கொண்டால், ஏலக்காய் டீ குடிப்பது உங்கள் ஆபத்தை அதிகரிக்கும். இரத்தப்போக்கு ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும். அத்தகைய மருந்துகளை உட்கொள்பவர்கள் எந்த மசாலாப் பொருட்களையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு மருத்துவரை அணுக வேண்டும்.

Monday, 18 August 2025

Eiger Ambassador Express

Eiger Ambassador Express

The history of this cogwheel locomotive (type He 2/2) is closely linked to the development of the Jungfrau region and the conquest of the Eiger North Face. Built in 1913 as the eleventh example of this type, it first made its debut at the Swiss National Exhibition in 1914. Its maiden voyage followed in 1915. It served as a rescue vehicle during the tragically failed attempt to climb the Eiger North Face in 1936. It also played a key role in the 2008 film "Nordwand," which recounts the tragedy. Most recently, the locomotive operated as part of the nostalgic train "Eiger Ambassador Express to the Jungfraujoch - Top of Europe." Today, it offers visitors to the Top of Europe flagship store the opportunity to experience the experience of traveling in the pioneering days of Alpine tourism.

The history of this rack railway locomotive (type He 2/2) is closely linked to the de-velopment of the Jungfrau region and the conquest of the Eiger North Face. Built in 1913 as the eleventh example of this type, it first came into the spotlight in 1914 at the Swiss National Exhibition. Its maiden journey took place in 1915. In the tra-gically failed Eiger North Face ascent of 1936, it was used as an emergency vehicle. And in the 2008 film "North Face", which retells the tragedy, it played an important role. Recently, the locomotive operated as part of the "Eiger Ambassador Express" vintage train up to the Jungfraujoch - Top of Europe. Today, it gives visitors to the Top of Europe flagship store the opportunity to feel like they are travelling back to the pioneering days of Alpine tourism

Tuesday, 5 August 2025

குளியலறையில் பக்கெட்டை இப்படி திருப்பி வைங்க.. பாத்ரூமில் இந்த பொருள் இருந்தாலே பணக்கஷ்டம் வராதத



குளியலறையில் பக்கெட்டை இப்படி திருப்பி வைங்க.. பாத்ரூமில் இந்த பொருள் இருந்தாலே பணக்கஷ்டம் வராத
சென்னை: நம்முடைய வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை சரியான வகையில், சரியான திசையில் வைத்திருந்தாலே, குடும்பத்தில் ஏற்படக்கூடிய நெருக்கடிகளை தவிர்க்கலாம் என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள். பூஜையறை, சமையலறை, படுக்கையறை, கழிவறைகள் என ஒவ்வொரு அறைகளுக்கும் ஒவ்வொரு வாஸ்து சொல்லப்பட்டுள்ளது. அந்தவகையில், குளியலறையில் பயன்படுத்தப்படும் பொருட்களின் நிறம் குறித்தும் வாஸ்துவில் கூறப்பட்டுள்ளது.


எப்போதுமே கழிப்பறை இருக்கையானது, மேற்கு அல்லது வடமேற்கில் இருக்க வேண்டும்... குளியலறையும் வீட்டின் வடக்கு அல்லது வடமேற்கு மூலையில் இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும், தெற்கு, தென்கிழக்கு அல்லது தென்மேற்கு திசையில் குளியலறையை அமைக்க கூடாது.. அதாவது, சமையலறைக்கு எதிரே அல்லது அதற்கு அடுத்ததாக குளியலறை வரக்கூடாது..


. ஒரு விஷயத்தில் மட்டும் கவனம்"
பாத்ரூமில், ஸ்விட்ச் போர்டு, கீசர், எக்ஸாஸ்டிங் ஃபேன் போன்ற மின்சாதன பொருட்களை தென்கிழக்கு திசையில் வைக்கலாம்.


குளியலறை எப்படி பராமரிக்க வேண்டும்
குளியலறையை சிலர் வாரத்திற்கு ஒருநாள், 2 நாள் கழுவிவிடுவார்கள்.. அப்படி இருக்கக்கூடாது.. தினமும் பாத்ரூமை கழுவிவிடுவதால், பணத்தட்டுப்பாடு வீட்டிற்குள் ஏற்படாமல் இருக்கும்.

கழிவுகள் குளியலறையில் சேராமல் இருந்தாலே குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியமும் தழைக்கும்.. அதேபோல குளியலறை சுவர்களும், டைல்ஸ்களும், நீல நிறத்தில் இருப்பது சிறப்பு வாய்ந்தது.

நீலநிறம், பச்சை கலர் நல்லது
பாத்ரூமில் பக்கெட்டுகள், மக்குகளையும் நீலநிறத்தில் உபயோகிப்பது நல்லது. அல்லது பச்சை நிற வாளிகள், மக்குகளை பயன்படுத்தலாம். டைல்ஸ்களையும் பச்சை நிறத்தில் பதிக்கலாம். ஆனால், கருப்பு நிறத்தை மட்டும் குளியலறைக்குள் எந்த ரூபத்திலும் பயன்படுத்தக்கூடாது என்பார்கள்.


பக்கெட், வாளிகளை காலியாக வைத்திருக்காமல் நீர் நிறைந்திருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும்.. ஒருவேளை குழாயில் தண்ணீர் வராத சூழலில் பக்கெட்டுகளை கவிழ்த்து வைக்கலாம்.. எப்போதும் பாத்ரூம் கதவுக்கு முன்னால் கண்ணாடியை வைக்கக் கூடாது.. வடக்கு அல்லது கிழக்கு சுவரில் கண்ணாடியை பொருத்துவது நல்லது..

குளியலறையின் கதவுகளை மூடி வைத்திருக்க வேண்டும்.. ஒருசிலர் காற்றோட்டத்துக்காக திறந்து வைப்பார்கள்.. குளியலறையின் கதவு திறந்திருந்தால், நெகட்டிவ் எனர்ஜி வீட்டிற்குள் ஊடுருவிவிடும்.. எனவே குளியலறை ஜன்னல்களை திறந்துவைத்துவிட்டு, கதவினை மூடி வைத்திருக்க வேண்டும்.



தோஷம் தரும் செயல்கள்
இந்நிலையில், போபாலை சேர்ந்த ஜோதிடர் வாஸ்து ஆலோசகர் பண்டிட் ஹிதேந்திர குமார் ஷர்மா சமீபத்தில் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில் குளியலறை தொடர்பான சில வாஸ்து குறிப்புகளைப் பற்றியும் விரிவாகவே கூறியிருந்தார். அதன் சுருக்கம்தான் இது:

"குளியலறை எப்போதுமே ஈரமாக வைத்திருக்கக்கூடாது.. அப்படியிருந்தால் வாஸ்து தோஷத்திற்கு வழிவகுத்துவிடும்.. இது நிதி நெருக்கடியில் கொண்டுவந்து விட்டுவிடும்.. எனவே, வாஸ்து தோஷத்தை குறைக்க வேண்டுமானால், பாத்ரூமை பயன்படுத்திய பிறகு, நன்றாக உலர விட வேண்டும்.. இதனால் வாஸ்து தோஷம் ஏற்படாது..

குளியலறை, கழிப்பறை
இதேபோல, வீட்டில் இடத்தை மிச்சப்படுத்த ஒரே இடத்தில் குளியலறை மற்றும் கழிப்பறை கட்டினால், அதுவும் வாஸ்து தோஷத்திற்கு வழிவகுத்துவிடும்.. இது உங்கள் வாழ்க்கையில் உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தும்.. ஒருவேளை, ஒரே இடத்தில் குளியலறை மற்றும் கழிப்பறை இருக்க வேண்டுமானால், இரண்டிற்கும் இடையே ஸ்கிரீன் போல போட்டுவிட வேண்டும்.

எப்போதுமே குளியலறையில் படிகாரம் வைப்பது நல்லது.. காரணம், குளியலறை தொடர்பான வாஸ்து தோஷத்தை இந்த படிகாரம் நீக்கும்.. அதேபோல, பூச்சிகளின் தாக்கத்தை குறைக்கவும், குளியலறையில் படிகாரத்தை வைக்கலாம். ஆனால், படிகாரத்தை யாரும் பார்க்காத இடத்தில் வைக்க வேண்டும்.

பயன்தரும் படிகாரம்
இந்த படிகாரத்தை வீட்டில் வைப்பதினால் வாஸ்து தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் குறைவதுடன் மகிழ்ச்சியும், அமைதியுடன் செல்வமும் அதிகரிக்கும்..

கழிவறையில் மட்டுமல்ல, தூங்குவதற்கு முன்பு, ஒரு சிறிய கருப்பு துணியில் படிகாரத்தை கட்டி தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் கெட்ட கனவுகள் எதுவும் நெருங்காது
பயமில்லாமல் நிம்மதியாகவும் தூங்க முடியும். வீட்டில் துடைக்க பயன்படுத்தும் நீரிலும், குளிக்கும் நீரிலும் படிகாரத்தை சேர்க்கலாம்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.



Monday, 4 August 2025

குழந்தைகளுக்கு எந்த வயதில் ஜாதகம் எழுத வேண்டும்?

குழந்தைகளுக்கு எந்த வயதில் ஜாதகம் எழுத வேண்டும்? 
குழந்தைகளுக்கு ஜாதகம் எழுதுவது ஒவ்வொரு குடும்பத்தின் நம்பிக்கை மற்றும் வழக்கத்தை பொறுத்து மாறுபடலாம். ஆனால் குழந்தைகளுக்கு எந்த வயதில் ஜாதகம் எழுத வேண்டும் 


குழந்தைகளுக்கு ஜாதகம் எப்போது எழுத வேண்டும்?

குழந்தைகளுக்கு ஜாதகம் எப்போது எழுத வேண்டும்?
ஜாதகம் என்பது ஒருவரின் பிறப்பு நேரத்தில் வானத்தில் உள்ள கோள்களின் நிலைப்பாடுகளைக் கொண்டு வரையப்படும் ஒரு வரைபடமாகும். ஒவ்வொரு கோளும் எந்த ராசியில், எந்த வீட்டில் இருந்தன என்பதை இந்த கணிப்பு விளக்குகிறது. இந்திய ஜோதிட முறைப்படி ஒருவரின் ஜாதகத்தை வைத்து அவர்களது கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள முடியும். ஒருவருடைய ஆளுமை, உடல்நலம், கல்வி, தொழில், திருமணம், செல்வம், உறவுகள் போன்ற வாழ்வின் பல்வேறு அம்சங்களை ஆராய ஜாதகம் உதவுகிறது. ஆனால் தற்போது பலருக்கும் ஜாதகம் எழுதுவது குறித்து பல சந்தேகங்கள் நீடிக்கிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு எந்த வயதில் ஜாதகம் எழுத வேண்டும், பலன்கள் எப்போது பார்க்க வேண்டும் என்பது குறித்து பல குழப்பங்கள் நீடிக்கிறது.







ஜாதகம் எழுதுவதற்கு பின்பற்றப்படும் இரு முறைகள்

ஜாதகம் எழுதுவதற்கு பின்பற்றப்படும் இரு முறைகள்
பொதுவாக ஜாதகம் எழுதுவதற்கு இரண்டு முறைகள் பின்பற்றப்படுகின்றன. சில குடும்பங்களில் குழந்தைகள் பிறந்த உடனேயே அவர்களுடைய ஜாதகத்தை எழுத வேண்டும் என்று கருதுகின்றனர். இது குழந்தையின் நட்சத்திரம், ராசி, ஆரம்ப கால வாழ்க்கைப் பலன்களை அறிந்து கொள்ள உதவும். மேலும் குழந்தையின் பெயரை தேர்ந்தெடுப்பதற்கும் இது உதவலாம். சிலர் குழந்தை பிறந்த 10 முதல் 12 வயது வரை ஜாதகத்தை கணக்கிட்டு பார்க்க கூடாது என்று கருதுகின்றனர். இது குழந்தைகள் வளரும் நிலை என்பதால் அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் இயற்கையான நிகழ்வுகள் என்றும், ஜாதகம் பார்த்து பயப்பட தேவையில்லை என்றும் கருதுகின்றனர். இந்த நிலையில் பிரபல ஆன்மீக சொற்பொழிவாளரான தேச மங்கையர்க்கரசி குழந்தைகளுக்கு எப்போது ஜாதகம் எழுத வேண்டும் என்பது பற்றிய விரிவான விளக்கங்களை அளித்துள்ளார்.

 ஆண்டுகளுக்குப் பின் சனி பகவான் உருவாக்கும் விபரீத ராஜயோகம்.. இந்த ராசிகளுக்கு கஷ்டம் தீரப் போகுது
 ஆண்டுகளுக்குப் பின் சனி பகவான் உருவாக்கும் விபரீத ராஜயோகம்.. இந்த ராசிகளுக்கு கஷ்டம் தீரப் போகுது


குழந்தைகள் பிறந்த உடனேயே அந்த நேரத்தை குறித்து வைத்துக்கொண்டு ஒரு ஜோதிடரை அணுகி நேரத்தைக் கொடுத்தால் அவர் ராசி, நட்சத்திரம், திதி, நேரம் ஆகிய அனைத்தையும் குறித்து கொடுத்துவிடுவார். ஆனால் இந்த தகவல்களை அடிப்படையாக வைத்து கட்டம் போட்டு ஜாதகம் எப்போது எழுத வேண்டும் என்கிற சில பொது நியதிகள் உள்ளன. சில குடும்ப வழக்கத்தில் குழந்தைகள் பிறந்த உடனேயே ஜாதகம் எழுதுவது வழக்கம். அந்த வழக்கம் உள்ளவர்கள் குடும்ப வழக்கத்தை மறக்காமல் பின்பற்றுங்கள். முன்னோர்கள் சொல்லிக் கொடுத்ததை மாற்றக்கூடாது. அதே சமயம் இது போன்ற குடும்ப வழக்கம் தெரியாதவர்கள் பொது நியதியை பின்பற்ற வேண்டும்.


12 வயது வரை பலன்கள் பார்க்கக்கூடாது

12 வயது வரை பலன்கள் பார்க்கக்கூடாது
அதன்படி ஆண் குழந்தையாக இருந்தாலும் பெண் குழந்தையாக இருந்தாலும் குழந்தை பிறந்து ஓர் ஆண்டு நிறைவடைந்த பின்னரே ஜாதகம் எழுத வேண்டும். ஜாதகம் எழுதி முடித்த பின்னர் குழந்தைகள் இரண்டு அல்லது மூன்று வயது ஆன உடனேயே ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஜோதிடர்களை அணுகி பலன்கள் கேட்பது கூடாது. பல ஜோதிடர்கள் இளம் வயது பாலகர்களுக்கு பலன்கள் கூறுவது கிடையாது. ஏதாவது உடல்நலப் பிரச்சனை அல்லது பிற பிரச்சனைகள் என்றால் மட்டுமே குழந்தைகளின் ஜாதகத்தை ஜோதிடரிடம் காண்பித்து பலன்கள் பார்க்க வேண்டும். எந்த பிரச்சனையும் இல்லை என்றால் 12 வயது வரை பலன்கள் பார்க்கக் கூடாது. பாலகர்களாக இருப்பவர்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் தெய்வ சங்கல்பத்தின்படியே நடப்பதால் குழந்தைகளுக்கு ஜோதிடப் பலன்கள் பார்த்தால் கூடாது.


தேவைப்படும் பட்சத்தில் மட்டும் பார்க்கலாம்

தேவைப்படும் பட்சத்தில் மட்டும் பார்க்கலாம்
அதேசமயம் பெண் குழந்தைகளுக்கு இதில் சில விதிவிலக்குகள் உண்டு. பெண் குழந்தைகள் பிறந்து ஒரு வயதில் ஜாதகம் எழுதி வைத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் பூப்படையும் வயது வரை பலன்கள் பார்த்தல் கூடாது. அதே சமயம் பூப்படைந்த பின்னர் அந்த நேரத்தை குறித்துக்கொண்டு ருது ஜாதகம் எழுதி வைத்துக்கொள்ள வேண்டும். சில மணமகன் வீட்டார் ருது ஜாதகம் கேட்கும் பட்சத்தில் இது பின்னாளில் பலனளிக்கலாம். ஆண் குழந்தைகளுக்கு ஜாதகம் எழுதி அதை பூஜை அறை அல்லது பீரோவில் வைத்து விடுதல் நல்லது. 12 வயது முடிந்த பின்னர் பலன்கள் பார்க்கலாம். அதுவும் தேவை ஏற்பட்டால் மட்டுமே பார்க்க வேண்டும். வெளிநாடு செல்லுதல், வேலைக்காக பிற இடங்களுக்குச் செல்லுதல், உயர் படிப்பு போன்ற அவசர தேவைகளுக்காக ஜாதகத்தை வெளியில் எடுக்கலாம். இல்லையென்றால் திருமணத்தின் போது பொருத்தம் எடுப்பதற்கு வெளியில் எடுத்தால் போதுமானது என தேசமங்கையர்கரசி விளக்கியுள்ளார்.




இறுதியாக,
ஆண் குழந்தைகளாக இருந்தாலும், பெண் குழந்தைகளாக இருந்தாலும் ஒரு வயது பூர்த்தியான பின்னரே ஜாதகம் எழுத வேண்டும்.
 
எந்தக் குழந்தையாக இருந்தாலும் 12 வயது வரை பலன்கள் பார்க்கக் கூடாது. 12 வயதிற்கு மேல் ஏதாவது தேவைகள் இருந்தால் மட்டுமே பார்க்க வேண்டும்.
 
ஒருவேளை 12 வயதிற்குள் குழந்தைகளுக்கு அடிக்கடி ஏதாவது உடல்நலப் பிரச்சினைகள் அல்லது பிற பிரச்சனைகள் ஏற்பட்டால், அந்த சமயத்தில் மட்டும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.
 
பெண் குழந்தைகளாக இருந்தால் பூப்படையும் தருணத்தில் ருது ஜாதகம் எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்.
 
எந்த தேவையும் ஏற்படவில்லையென்றால் இரு குழந்தைகளுக்கும் திருமணத்தின் போது பொருத்தம் பார்ப்பதற்கு ஜாதகத்தை வெளியில் எடுத்தால் போதுமானது.

Saturday, 2 August 2025

உடல் எடையைக் குறைக்க ஜிம் செல்வோர் கவனத்திற்கு.. இளநீர் குடிக்கக் கூடாதாம்.. ஏன் தெரியுமா?



உடல் எடையைக் குறைக்க ஜிம் செல்வோர் கவனத்திற்கு.. இளநீர் குடிக்கக் கூடாதாம்.. ஏன் தெரியுமா?

 
வெயிலுக்கு இதமாக இளநீர் குடிப்பது உடலுக்குப் புத்துணர்ச்சியை கொடுக்கும் என்று சொல்லப்பட்டாலும், அது அனைவருக்கும் ஏற்றதல்ல என்று தெரிய வந்துள்ளது. இளநீரைப் பருகுவது சில தரப்பினருக்கு நன்மையை விட அதிகளவில் சிக்கலைக் கொடுக்கும் என்றும் தெரிய வந்துள்ளது. அதுகுறித்து முழு விவரங்களை பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் என்னதான் வடகிழக்கு பருவமழை நெருங்கினாலும், வெயில் மட்டும் குறைந்தபாடில்லை. இதனால் பொதுமக்கள் பலரும் வெயிலுக்கு இதமாக இளநீர் குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இளநீர் தாகத்தைப் போக்கி புத்துணர்ச்சியை அளிப்பதோடு, ஜீரண சக்தியையும் அதிகரிக்கும். குறிப்பாக உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை அளிக்கும் என்று பார்க்கப்படுகிறது.


Who Should Avoid Drinking Tender Coconut Water Health Risks amp amp Expert Advice


ஆனால் இளநீர் அனைத்து தரப்பினருக்குமானது அல்ல என்று தெரிய வந்துள்ளது. குறிப்பிட்ட சதவிகித மக்களுக்கு நன்மையை விடத் தீமையையும் கொடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி சிறுநீரக பிரச்சனைகள் இருப்போர் இளநீர் குடிப்பதை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் இளநீரில் அதிகளவிலான பொட்டாசியம் இருக்கிறது.


இதனால் சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள் தங்களது உடலில் இருந்து பொட்டாசியத்தை வெளியேற்ற சிரமங்களைச் சந்திக்க நேரிடும். அதிகளவிலான பொட்டாசியம் உடலில் கலந்தால், அது இதயத்துடிப்பைப் பாதிக்கும் நோய்களுக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் நீரிழிவு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இளநீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் உடல் எடையை குறைக்க விரும்பி லோ - கலோரி டயட் இருப்பவர்கள் இளநீர் அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் இளநீரில் 45 முதல் 60 கலோரிகள் வரை இருந்தாலும், அது உடல் எடையை அதிகரிக்க கூடியதாகும். இதனால் இளநீர் அருந்துவதற்குப் பதிலாக, இந்த தரப்பினர் சாதாரண தண்ணீரையே குடிப்பதே நல்லது.




அதேபோல் தொடர்ச்சியாக மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் நபர்கள் இளநீர் அருந்துவதற்கு முன்பாக மருத்துவரை அணுக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால் சில மருந்துகள் உட்கொண்ட பின், அது உடலில் செயல்படுவதை இளநீர் தடுக்கக் கூடும். அதிகளவில் பொட்டாசியம் இருப்பதால், அந்த மருந்துகளின் செயல்பாட்டுக்கு சில சிக்கல் உருவாகும் என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து, உடல் அலர்ஜி ஏற்படும் நபர்கள் இளநீர் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தீவிரமாக உடற்பயிற்சி மேற்கொண்ட பின், உடலுக்கு பொட்டாசியத்தை விடவும் சோடியம் தான் முக்கியமான எலக்ட்ரோலைட்டாகும். இளநீரில் குறைந்த அளவிலான சோடியம் மட்டுமே உள்ளது. அதிகளவில் பொட்டாசியம் தான் இருக்கிறது.

இளநீருக்கு பதிலாக ஆப்பிள், வாழைப்பழம், பப்பாளியில் அதிக சோடியம் உள்ளது. இதனால் அடுத்த முறை இளநீர் குடிப்பதற்கு முன்பாக இதனை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாகக் காலையில் உடற்பயிற்சியில் ஈடுபட்ட பின் இளநீர் பருகும் நபர்கள், இனி மாற்று பழவகைகளைச் சாப்பிடுவது அவர்களின் உடல்நலத்திற்குப் பயனளிக்கும் என்று பார்க்கப்படுகிறது.



தினமும் உணவளிக்கும் மனித முகங்களை காக்கைகள் நினைவில் வைத்திருக்குமா?


தினமும் உணவளிக்கும் மனித முகங்களை காக்கைகள் நினைவில் வைத்திருக்குமா?
காக்கைகள் எதிர்மறையான அனுபவங்களை மட்டும் தான் நினைவில் கொள்ளுமா? என்று கேட்டால், நேர்மறையான அனுபவங்களையும் அவை நினைவில் வைத்திருக்கின்றன. உணவு வழங்கிய அல்லது அச்சுறுத்தாத நபர்களை சந்திக்கும் போது அவை அமைதியாக அருகில் இருக்கின்றன.



பொதுவாக காக்கைகள் நம் அன்றாட பார்க்கக்கூடிய ஒரு பறவை இனமாகும். இவை மற்ற பறவைகளைக் காட்டிலும் அதிக அறிவாற்றல் திறனுக்காக தனித்துவம் பெற்றவை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்பிட்ட நபர்கள் காகத்தை ஏதேனும் தொந்தரவு செய்தாலோ அல்லது அன்பாக உணவு பரிமாறினாலோ அதனை காக்கைகள் நினைவில் கொள்வதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

காகங்களால் மனித முகங்களை பல ஆண்டுகளுக்கு நினைவில் வைத்திருக்க முடியும் என்றும் தங்களுக்கு அச்சுறுத்தல் விளைவித்தவர்களையும் அன்பாக நடத்தியவர்களையும் வேறுபடுத்தி அறிய முடியும் என்றும் ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.



தினமும் உணவளிக்கும் மனித முகங்களை காக்கைகள் நினைவில் வைத்திருக்குமா? -  அடடே தகவல்!
கோர்விடே என்ற இனத்தைச் சேர்ந்த காகங்கள் உணர்ச்சி மற்றும் அறிவாற்றலுக்காக பெயர் பெற்றவையாக விளங்குகின்றன. வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ஜான் மார்ஸ்லைஃப் மற்றும் அவரது குழுவினர் நடத்திய ஆய்வில் காக்கைகள் தனிப்பட்ட மனித முகங்களை அடையாளம் கண்டு அவற்றைக் கடந்த கால நினைவுகளுடன் தொடர்புபடுத்துவதை உறுதிப்படுத்தி உள்ளனர்.

எப்படி சாத்தியம்?

2006 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த ஆராய்ச்சியில் ’குகை மனிதன்’ முகமூடி அணிந்து பல காக்கைகளைப் பிடித்து அவற்றிற்கு அடையாளம் காணும் வகை ஒரு குறியீடு செய்கிறார். பின்னர் அந்த முகமூடியை அணிந்த எவரையும் அல்லது வேறு யார் முகமூடி அணிந்திருந்தாலும் காக்கைகள் கடுமையாக தாக்கி கூட்டமாக எதிர்த்துள்ளன.

சாதாரணமாக இருப்பவர்களை அவை புறக்கணித்துள்ளன. இந்த சோதனை கிட்டத்தட்ட 2.7 ஆண்டுகள் நீடித்துள்ளன. பிடிக்கப்படாத காக்கைகளும் இந்த தாக்குதலில் இணைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

காட்டு காக்கைகளிடம் நடத்தப்பட்ட மூளை பரிசோதனைகளில் இந்த நடத்தை நரம்பியல் அடிப்படையிலானது என்று கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு முகமூடி அணிபவர்களை பார்க்கும்போது அவைகளுக்கு மூளையில் பயத்துடன் தொடர்புடைய பகுதிகள் செயல்பட்டுள்ளன. இதிலிருந்து தான் காக்கைகள் தாக்குதலில் ஈடுபட தூண்டப்படுகின்றன என்று கண்டறிந்துள்ளனர்.

காக்கைகள் எதிர்மறையான அனுபவங்களை மட்டும் தான் நினைவில் கொள்ளுமா? என்று கேட்டால், நேர்மறையான அனுபவங்களையும் அவை நினைவில் வைத்திருக்கின்றன. உணவு வழங்கிய அல்லது அச்சுறுத்தாத நபர்களை சந்திக்கும் போது அவை அமைதியாக அருகில் இருக்கின்றன. சில சமயங்களில் காக்கைகள் அன்பானவர்களுக்கு அவை தூக்கி வரும் பொருள்களை, பரிசாக அங்கே விட்டு செல்வதாகவும் அந்த ஆராய்ச்சி குழு தெரிவிக்கின்றது.