jaga flash news

Tuesday 15 October 2024

குறள் 969:

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.

Like the wild ox that, of its tuft bereft, will pine away, Are those who, of their honour shorn, will quit the light of day
அதிகாரம் - 97 - மானம்
மு.வரதராசன் விளக்கம்
தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர்வாழாத கவரிமானைப் போன்றவர் மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவர்.

பப்பாளி சாப்பிடும்போது இந்த பொருட்களை தெரியாம கூட தொடாதீங்க

 பப்பாளி சாப்பிடும்போது இந்த பொருட்களை தெரியாம கூட தொடாதீங்க... இல்லனா உங்களுக்குத்தான் ஆபத்து...! பழங்கள் ஆரோக்கியமானவை என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. பழங்கள் சமச்சீர் உணவின் இன்றியமையாத ஒரு பகுதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பழங்கள் உடலின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கவும், சோர்விலிருந்து மீட்கவும், நாள் முழுவதும் செயல்பட தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்குகின்றன. அதிக நார்ச்சத்து, குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ், இனிப்பு சுவை மற்றும் வசீகரமான நிறம் ஆகியவை நிறைந்த பப்பாளி போன்ற பழங்கள் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முதல் செரிமான ஆரோக்கியம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவது வரை, எளிதில் கிடைக்கக்கூடிய இந்த பழம் அனைத்து வயதினரும் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டிய பழங்களில் ஒன்றாகும். 
 பப்பாளியின் அதிகபட்ச நன்மைகளைப் பெறவும், அதனால் ஆபத்துகள் ஏற்படாமல் இருக்கவும் சில உணவு வகைகளுடன் அதை இணைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 
 பப்பாளி சாப்பிடுவது நல்லது? நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு வயது வந்தவர் ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு துண்டுகள் பப்பாளி சாப்பிடலாம், இது புரதத்தை உடைக்க உதவுகிறது மற்றும் நடுத்தர அளவிலான பப்பாளியில் சுமார் 120 கலோரிகள், 30 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 2 கிராம் புரதம் உள்ளது. பப்பாளியை ஏன் அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்? நிபுணர்களின் கூற்றுப்படி, பப்பாளி நார்ச்சத்து மற்றும் பப்பெய்ன் போன்ற நொதிகளின் வளமான மூலமாகும், இது அதிக அளவில் உட்கொள்ளும் போது,​​வயிற்றுப் புறணியை எரிச்சலடையச் செய்யலாம் அல்லது தளர்வான மலத்தை ஏற்படுத்தலாம். நார்ச்சத்து தண்ணீரை உறிஞ்சுகிறது, எனவே போதுமான நீரேற்றம் மற்றும் அதிக நார்ச்சத்து உட்கொள்வது வழக்கமான தன்மையை மேம்படுத்துவதற்கு பதிலாக மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். " சிட்ரஸ் பழங்கள் ஆரஞ்சு மற்றும் திராட்சைப்பழம் போன்ற சிட்ரஸ் பழங்களுடன் பப்பாளியை கலந்து பழ சாலட்டை மக்கள் அடிக்கடி செய்கிறார்கள். இந்த பழங்கள் கொண்ட சாலட்டை சாலையோரங்களிலும் நாம் பார்க்கலாம். இந்த இரண்டு பழங்களிலுமே வைட்டமின் சி நிறைந்திருப்பதால், அசிடிட்டி அல்லது நெஞ்செரிச்சலுக்கு வழிவகுக்கலாம். அதிக புரதமுள்ள உணவுகள் பப்பாளியில் புரதத்தை உடைக்க உதவும் என்சைம்கள் நிறைந்துள்ளன, மேலும் அவற்றை அதிக புரத உணவுகளுடன் சேர்க்கும்போது,​​​​அவை சில உயர் புரத உணவுகளின் செரிமானத்தில் தலையிடக்கூடும். செரிமான பிரச்சனைகளைத் தடுக்க, அதிக அளவு இறைச்சி, மீன் அல்லது டோஃபுவுடன் பப்பாளியை சேர்ந்து சாப்பிடுவதைத் தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது. "நாம தினமும் சாப்பிடுற இந்த உணவுகளில் ஆபத்தான மைக்ரோபிளாஸ்டிக் அதிகம் இருக்காம்... பார்த்து சாப்பிடுங்க...!" புளித்த உணவுகள் நிபுணர்களின் கூற்றுப்படி, நன்கு புளித்த உணவுகளை பப்பாளியுடன் கலக்கக்கூடாது. அவற்றில் புரோபயாடிக்குகள் உள்ளன, மேலும் பப்பாளியின் என்சைம்கள் அவற்றுடன் கலந்தால், அவை செரிமானத்தை சீர்குலைக்கலாம் அல்லது இரைப்பை குடல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். பால் பொருட்கள் நீங்கள் பப்பாளி மில்க் ஷேக் அல்லது ஸ்மூத்தி குடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தால், அதை உடனடியாக நிறுத்த வேண்டும். நிபுணர்களின் கூற்றுப்படி, பால் பொருட்கள் மற்றும் பப்பாளியை ஒன்றாக இணைப்பது நல்லதல்ல. பப்பாளியில் பாப்பைன் மற்றும் சைமோபபைன் போன்ற நொதிகள் உள்ளன, இது பாலை சுருட்டி, செரிமான அமைப்பின் செயல்பாட்டை சீர்குலைக்கும். இந்த கலவையானது வீக்கம், வாயு மற்றும் பிடிப்புகள்போன்றவற்றை ஏற்படுத்தலாம்.  அப்ப இந்த பழங்களை அடிக்கடி வாங்கி சாப்பிடுங்க...  தொடர்ச்சியாக இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல வைட்டமின் கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.. 

ஆட்டோக்களில் ஏன் 4 சக்கரங்கள் இல்லை?



ஆட்டோக்களில் ஏன் 4 சக்கரங்கள் இல்லை? இதற்கு என்ன காரணம் தெரியுமா?
ஆட்டோக்களில் ஏன் 4 சக்கரங்கள் இல்லை? இதற்கு என்ன காரணம் தெரியுமா?
கூட்டம் அதிகமான நெரிசலான பகுதிகளில் கார், பஸ் போன்ற வாகனங்களை விடவும் ஆட்டோக்கள் எளிதாக சென்று விடும்.

 இந்தியாவில் ஆட்டோக்களை கணிசமான அளவு பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தியாவில் ஆட்டோக்களை கணிசமான அளவு பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்

 குறைந்த செலவில், பெரும்பாலான இடங்களில் ஆட்டோ பயன்பாட்டிற்கு உள்ளதால் ஆட்டோ பயணம் பொதுமக்களை கவர்ந்துள்ளது.

குறைந்த செலவில், பெரும்பாலான இடங்களில் ஆட்டோ பயன்பாட்டிற்கு உள்ளதால் ஆட்டோ பயணம் பொதுமக்களை கவர்ந்துள்ளது

 
பஸ், இரயில் போன்ற பொது போக்குவரத்து மற்றும் தனி நபர் வாகன பயன்பாடுகள் அதிகரித்தாலும் அதே அளவு ஆட்டோக்களும் எண்ணிக்கையில் உயர்ந்துள்ளன.


 
மற்ற கார்கள், வாகனங்களைப் போன்று ஆட்டோவுக்கு ஏன் 4 சக்கரங்கள் இல்லை? 3 சக்கரங்கள் மட்டுமே ஏன் பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கான காரணம் தெரியுமா?


 
நான்கு சக்கரங்களை விட மூன்று சக்கரங்கள் கொண்ட வாகனத்தை வடிவமைத்தால் செலவு குறையும்.




 
4 சக்கரங்களை விட 3 சக்கர வாகனம் அளவில் சிறியதாக இருக்கும் என்பதால் குறுகலான பகுதிகளிலும் வளைந்து சென்று விடும். மேலும் எளிதாகவும் பார்க்கிங் செய்து விடலாம்.


 கூட்டம் அதிகமான நெரிசலான பகுதிகளில் கார், பஸ் போன்ற வாகனங்களை விடவும் ஆட்டோக்கள் எளிதாக சென்று விடும். இதற்கு அந்த 3 சக்கர அமைப்புதான் முக்கிய காரணம்.

கூட்டம் அதிகமான நெரிசலான பகுதிகளில் கார், பஸ் போன்ற வாகனங்களை விடவும் ஆட்டோக்கள் எளிதாக சென்று விடும். இதற்கு அந்த 3 சக்கர அமைப்புதான் முக்கிய காரணம்.


 
அளவில் சிறியதாக இருப்பதால் ஆட்டோ எஞ்சின்களை இயக்க மற்ற வாகனங்களை விட குறைவான எரிபொருள் போதுமானது.


 
மூன்று சக்கர வாகனம் பொதுவாக பயணிகள் அல்லது பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்படுகிறது.


 
இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அனைத்து வகையான போக்குவரத்திலும் வாகனத்தை விரைவாக முன்னோக்கி நகர்த்த முடியும்.


 
ஆட்டோக்கள் முக்கியமாக சாமானியர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே குறைந்த செலவையும் அதிக லாபத்தையும் பெறுவதே இதன் நோக்கம். இந்த அடிப்பைடயில்தான் ஆட்டோக்கள் 3 சக்கரம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளன.


தாய்ப்பால் நிறுத்த ஆலோசனைகள்



பொதுவாக, ஒரு குழந்தை தத்தி நடக்க முயலும் போதே, தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துவது பற்றி முடிவெடுப்பது அவசியம். தாய்ப்பால் பழக்கத்தை நிறுத்த, சில ஆலோசனைகள்: எப்படி சில உணவு முறைகளால் தாய்ப்பாலை அதிகரிக்கலாமோ, அதே போல் குறைக்கவும் செய்யலாம். புரோட்டீன் உணவுகளை தாய் குறைப்பதன் மூலம், இயற்கையாகவே தாய்ப்பால் குறையும். திடீரென பால் நிறுத்தப்படுவதால், ஹார்மோன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். இதனால் தாயின் உடல் சிறிது பாதிக்கப்படலாம். சிலநேரங்களில் பால் கொடுக்காமல், தாயின் மார்பக பகுதியில் வலி ஏற்படும். குழந்தையின் மனநிலையும் பாதிக்கும்.

இதனால் தாய்ப்பால் நிறுத்தும் போது, கவனத்துடன் செயல்பட வேண்டும். திட்டமிட்டு, மெதுவாக குழந்தையை தாய்ப்பால் குடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுவிக்க வேண்டும். இதுவே இருவருக்கும் நல்லது. ஏனெனில் திடீரென நிறுத்துவதால் குழந்தை மற்றும் அம்மா இருவருக்கும், உடலில் சில உபாதைகள் ஏற்படும். முக்கியமாக திடீரென நிறுத்தினால், தாயின் மார்பக குழாய் அடைபட்டு, வீக்கம் அடையும். மார்பக வலி போன்றவற்றை ஏற்படுத்தும்.

ஆகவே குழந்தைகளுக்கு முன்பு அடிக்கடி பால் கொடுப்பதை நிறுத்திவிட்டு, மதிய வேளையில் இருமுறை கொடுத்தால், அந்த நேரம் ஒரு முறை வேறு ஏதாவது உணவு கொடுத்தும், மறுமுறை தாய்ப்பால் கொடுத்தும் வர வேண்டும். இதை செய்யும்போது, போக, போக தாய்ப்பாலை நிறுத்திவிட்டு, மறக்க வைக்கலாம்.

மார்பகங்களைப் பார்க்க குழந்தையை அனுமதிக்க வேண்டாம். அவர்கள் முன்னிலையில் உடை மாற்றுவது போன்ற செயல்களை தவிர்ப்பது நல்லது.

குழந்தையுடன் சேர்ந்து குளிப்பதை தவிர்க்க வேண்டும். அவர்கள் தாயின் மார்பகத்தை பார்ப்பதால், மீண்டும் அவர்களுக்கு தாய்ப்பால் நினைவுக்கு வரும் வாய்ப்புள்ளது. குழந்தையை தூக்கி நடக்கும் போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவர்கள் மார்பக பகுதியை தொடாதவாறு பார்த்து கொள்ளவும். அவ்வாறு தூக்கும்போது குழந்தையிடம் ஏதாவது பேசிக் கொண்டு, அவர்களின் கவனத்தை மாற்ற வேண்டும். உங்கள் குழந்தைகளை திசை திருப்புவதால், அவர்களை எளிதில் தாய்ப்பால் மறக்க செய்யலாம்.

அதிலும் வெளியே அழைத்துச் செல்வது, அவர்களுக்கு பிடித்த பாடல்களை கேட்க வைப்பது, பிடித்த செயல்களை செய்யத் தூண்டுவது போன்ற செயல்களால், தாய்ப்பாலை மறந்துவிடுவர். இரவில் படுக்கும்போது, அவர்களை வெளியே வாக்கிங் அழைத்து செல்வது, கதை சொல்லி அதில் அவர்களின் ஆர்வத்தை தூண்டுவது என்றெல்லாம் செய்து மறக்க வைக்கலாம்.

பால் கொடுக்கும் போது, அழகான பாட்டிலில் கொடுக்கலாம். அந்த பாட்டிலை, தாயானவள் குழந்தைக்கு கொடுக்கும் போது அதனை வர்ணித்தோ அல்லது வேறு யாரிடமாவது கொடுத்துவிடுவோம் என்று பயமுறுத்தியோ கொடுக்கலாம். ஏனெனில் பொதுவாக சில குழந்தைகள், அவர்களுக்குரிய பொருளை மற்றவர்களுக்கு கொடுக்க மாட்டார்கள். சில குழந்தைகள் தாயின் அரவணைப்பில் இருந்தால்தான் பால் குடிப்பார்கள், அப்போது தாயானவள் குழந்தையை மடியில் போட்டு அரவணைத்து, பாட்டிலின் மூலம் பாலைக் கொடுக்கலாம்.

Monday 14 October 2024

வெஸ்டர்ன் டாய்லெட்டுகளில் இரண்டு பட்டன்கள் இருப்பது ஏன்?... எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?



வெஸ்டர்ன் டாய்லெட்டுகளில் இரண்டு பட்டன்கள் இருப்பது ஏன்?... எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?

பொது கழிவறைகளை அதிகமான மக்கள் பயன்படுத்துவார்கள் என்ற சூழலில், அவர்களது பிறப்புறுப்பானது டாய்லெட் சீட் மீது உரசுவதை தவிர்க்கும் வகையிலும், சிறுநீர் அதிகம் தெறித்து விடாமல் இருக்கவும் இவ்வாறு இடைவெளி விடப்படுகிறது.


 .

வீடுகளில் உள்ள வெஸ்டர்ன் டாய்லெட் அமைப்பிற்கும், பொது கழிவறைகளில் உள்ள வெஸ்டர்ன் டாய்லெட் அமைப்பிற்கும் வித்தியாசம் இருப்பதை நீங்கள் எப்போதாவது பார்த்தது உண்டா? அதாவது, பொது கழிவறைகளில் உள்ள டாய்லெட் சீட்களில் சிறிய இடைவெளி ஒன்று இருக்கும். அதுவே வீடுகளில் உள்ள டாய்லெட் சீட்டுகளில் எந்த இடைவெளியும் இருக்காது.



 

இதற்கான காரணம் சுகாதாரம் தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், பொதுமக்கள் சிலரிடம் இந்த வித்தியாசம் குறித்து கேட்டபோது அவர்களிடம் சரியான பதில் கிடைக்கவில்லை. சிலர் இதுகுறித்து பேசும்போது, “முன்பக்கமாக டாய்லெட் சீட்டை திறப்பதற்கு ஏதுவாக இதுபோன்று இருக்கலாம் அல்லது டாய்லெட் சீட் கவர் வருவதற்கு ஏதுவாக இதுபோன்று இடைவெளி விடப்பட்டிருக்கலாம்’’ என்று கூறினர்.



 .

ஆனால், பொது கழிவறைகளை அதிகமான மக்கள் பயன்படுத்துவார்கள் என்ற சூழலில், அவர்களது பிறப்புறுப்பானது டாய்லெட் சீட் மீது உரசுவதை தவிர்க்கும் வகையிலும், சிறுநீர் அதிகம் தெறித்து விடாமல் இருக்கவும் இவ்வாறு இடைவெளி விடப்படுகிறது.



 பாதுகாப்பாக 
 அதேபோல, இந்த இடைவெளி இருப்பதால் பெண்கள் எளிமையாக சுத்தம் செய்து கொள்ள உதவியாக அமையும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து சர்வதேச பிளம்பிங் மற்றும் மெக்கானிக்கல்   கூறுகையில், “பெண்கள் கழிவறையை பயன்படுத்தி முடித்ததும், டாய்லெட் சீட்டில் கை படாமல் தங்களுடைய அந்தரங்க பகுதி மற்றும் அதையொட்டிய பகுதிகளை சுத்தம் செய்து கொள்ள இந்த இடைவெளி அமைப்பு உதவியாக இருக்கும்’’ என்று தெரிவித்தார்.


அதே சமயம், இதுபோன்ற இடைவெளி கொண்ட டாய்லெட் சீட்களை தயாரிப்பதற்கான உற்பத்தி செலவுகள் குறைவாக இருக்கும் என்றும், அதனால் பொது கழிவறைகள் என்று வருகிறபோது விலை குறைவான டாய்லெட் சீட் வாங்கி பொருத்தப்படலாம் என்றும் பொதுமக்களில் சிலர் கருதுகின்றனர்.


 

வெஸ்டர்ன் டாய்லெட்டில் இரண்டு பட்டன்கள் இருப்பது ஏன்: டாய்லெட் சீட் அமைப்பில் உள்ள வித்தியாசம் எப்படி பலருக்கு புரியாத ஒன்றாக இருக்கிறதோ, அது போலவே டாய்லெட்டில் உள்ள டூயல் பட்டன் அமைப்பு எதற்கு என்று புரியாத நிலை நிலவுகிறது. பொதுவாக டாய்லெட் பயன்படுத்தி முடித்த பிறகு, தண்ணீர் விட்டு சுத்தம் செய்வதற்காக, தண்ணீர் டேங்க் மீதுள்ள இரட்டை பட்டன்களில் ஏதோ ஒன்றை அழுத்தும் பழக்கம் மக்களிடையே உள்ளது.

 எந்த பட்டனை அழுத்தினாலும் தண்ணீர் வரும் என்ற நிலையில், பெரும்பாலான மக்கள் அதை பிரித்துப் பார்ப்பதில்லை. சிலர் பெரிய பட்டன் அழுத்துவதே சிறப்பானது என்ற நோக்கத்தில் எப்போதுமே அதை உபயோகம் செய்கின்றனர். ஆனால், உண்மையில் இந்த இரண்டுக்கும் வேறுபாடு உண்டு.





 தண்ணீர் டேங்கின் சிறிய பட்டனை அழுத்தும்போது குறைவான தண்ணீர் வரும். பெரிய பட்டனை அழுத்தும்போது நிறைய தண்ணீர் வரும். பொதுவாக சிறுநீர் கழிக்கும் சமயத்தில் ஃப்ளஷ் அவுட் செய்ய குறைவான தண்ணீர் போதுமானது. அந்த சமயத்தில் சிறிய பட்டனை உபயோகிக்க வேண்டும். அதுவே மலம் கழிக்கும் சமயத்தில் அதிக தண்ணீர் விட்டு ஃப்ளஷ் அவுட் செய்ய வேண்டும். அந்த தருணத்தில் பெரிய பட்டனை பயன்படுத்த வேண்டும்.




வீட்டிற்கு தினமும் காகம் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா..?



வீட்டிற்கு தினமும் காகம் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா..?  சாஸ்திரம் சொல்வது இதுதான்!
வீட்டிற்கு தினமும் காகம் வருவது நல்லதா என்று இந்த பதிவில் பார்க்கலாம்.



காகங்களில் பொதுவாக மூன்று வகையான காக்கை வகைகள் உள்ளன. அதாவது, உடல் முழுவதும் கருமை நிறம் கொண்ட அண்டங்காக்கை வகை. அதன் பின் கழுத்தில் சாம்பல் நிறம் கொண்ட மணி காக்கை. அதோடு அனைவராலும் அதிசயமாக பார்க்கப்படும் அரிதான வெள்ளை காக்கை. அந்த வகையில் வீட்டிற்கு தினமும் காகம் வருவது நல்லதா என்று இந்த பதிவில் பார்க்கலாம்.


சனி பகவானின் வாகனமாக திகழும் காகங்கள் நமது ஜாதகத்தோடு மிகவும் தொடர்புடையதாக உள்ளது. மேலும், பித்ருக்களின் வடிவமாக காக்கைகள் உள்ளன. அதாவது நம் முன்னோர்கள் அதாவது இறந்து போனவர்கள் நம்மிடையே காகங்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது நாம் அனைவரும் ஆழமாக நம்பக்கூடிய ஒன்றாகும்.


அதேபோல், காகங்களும் நாம் அளிக்கும் உணவுகளை பெற்றுக் கொண்டு பித்ருக்களின் வடிவமாக நமக்கு ஆசிகளையும் வழங்குகிறது. அதாவது காக்கைகள் பற்றி யாரும் ஒரு மூடநம்பிக்கை என்று எளிதில் கடந்து விட முடியாது. காகங்களின் குறிப்புகளை உணர்ந்து அதன் பலன்களை அறியலாம்.


ஒரு கருப்பு காகம் (அண்டங்காக்கை) தனிப்பட்ட முறையில் நமது வீடுகளில் அமர்ந்து கரைகிறது என்று சொன்னால் அது மிக தீய சகுனம் ஆகும். அதேபோல் ஒரு மனிதனின் தலை மேல் ஒரு காக்கை தொட்டுவிட்டால் அதுவும் தீய சகுனம் நமக்கோ நமது குடும்பத்தாருக்கும் ஏதோ ஒரு ஆபத்து நிகழ்வதற்கான அறிகுறியாகும்.



அதேபோல வெள்ளை காகங்கள் காகங்களை பார்ப்பது ஜோதிட கணிப்பின்படி ஒரு தீய சகுனத்தை குறிப்பதே ஆகும். குறிப்பாக ஒரு வெள்ளை காகம் ஆனது தனியாக தென்பட்டால் அது நாட்டிற்கும் தீய சகுனத்தை குறிப்பதே ஆகும் என்று தெரிவித்தார் ஜோதிட கணிப்பு சாஸ்திரங்கள் கூறுகின்றன.


நாட்டுப்புறக் கலைகளின் 
அதனைத் தொடர்ந்து மணி காக்கை என்று கூறப்படும் கழுத்தில் சாம்பல் நிறம் கொண்ட காக்கைகள் வீட்டில் அமர்ந்து கரைவது நல்ல சகுனத்திற்கு உகந்ததாகும்.


மணி காகம் தினந்தோறும் வீட்டிற்கு வந்து செல்வது நன்மை பெருகி வீடு வளர்ச்சி பாதையில் செல்வதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவ்வாறு தினந்தோறும் காகம் வீட்டிற்கு வந்தால் வீட்டில் ஏதோ நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் என்றும் ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.


Sunday 13 October 2024

Do not speak to hurt others. Do you know why?




Motivation
அடுத்தவர்கள் மனம் புண்படும்படி பேசக்கூடாது. ஏன் தெரியுமா?
Do not speak to hurt others. Do you know why?


சிலருக்கு அடுத்தவர்களிடம் எப்படிப் பேசவேண்டும் என்ற இங்கிதம் தெரியாது. மற்றவர்கள் மனம் புண்படும்படி பேசிவிட்டு சென்று விடுவார்கள். ஆனால், மனம் புண்பட்டவர்களுக்கு அது ஆறாத வடுவாகிவிடும். எனவே, எப்போதும் மற்றவர்களிடம் கனிவாகப் பேச வேண்டியது மிகவும் அவசியமாகும். இதைப் புரிந்துக் கொள்ள ஒரு குட்டி கதையைப் பார்ப்போம்.

ஒரு நாள் அந்த நாட்டினுடைய அரசர் பக்கத்து நாட்டு அரசருக்கு செய்தி அனுப்ப தன் நாட்டிலிருந்து யாரை தூதுவராக அனுப்புவது என்று யோசித்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் அவருக்கு தன் நாட்டிலிருக்கும் குள்ள மந்திரியை அனுப்பலாம் என்ற யோசனை வருகிறது.

என்ன தான் அந்த மந்திரி உயரத்தில் குறைவாக இருந்தாலும், பயங்கரமான புத்திசாலி. அதனால், இவரை அங்கு அனுப்பினால்தான் சரியாக இருக்கும் என்று மன்னர் யோசித்து அவரையே அனுப்பி வைக்கிறார்.

ஆனால், பக்கத்து நாட்டு அரசருக்கு ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. அடுத்தவர்கள் மனதை புண்படுத்திப் பேசுவதை ஒரு பழக்கமாக வைத்திருந்தார். இப்போது தூதுவராக வந்த குள்ள மந்திரியைப் பார்த்து பக்கத்து நாட்டு அரசர், ‘உங்கள் நாட்டில் உன்னை விட உயரமான தூதுவன் யாருமேயில்லையா?’ என்று எல்லோர் முன்னிலையிலும் அரசவையில் கிண்டல் செய்து சிரிக்கிறார்.

அதற்கு குள்ள மந்திரி கூறுகிறார், ‘எங்கள் நாட்டுக்கென்று ஒரு வழக்கம் இருக்கிறது. அந்த வழக்கத்திற்கு ஏற்ற மாதிரிதான் என்னை இங்கு அனுப்பியிருக்கிறார்கள்’ என்று சொல்கிறார். அரசரும், ‘அப்படி என்ன வழக்கம்?’ என்று கேட்கிறார்.



அதற்கு மந்திரி சொல்கிறார், ‘புத்திசாலியான அரசர்கள் இருக்கும் நாட்டிற்கு புத்திசாலியான தூதுவர்களை அனுப்புவார்கள். முட்டாள் அரசர்கள் இருக்கும் நாட்டிற்கு முட்டாள் தூதுவர்கள் அனுப்புவார்கள். எங்கள் நாட்டிலேயே வடிகட்டின முட்டாள் நான்தான். அதனால் தான் என்னை இங்கே அனுப்பியிருக்கிறார்கள்’ என்று கூறும் பொழுது அரசர் பதில் பேச முடியாமல் தலைக்குனிந்து நின்றார். இப்போதுதான் அரசருக்கு அவர் இவ்வளவு நாள் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்பதே புரிந்தது.


இந்த கதையில் வந்ததுப்போலத்தான், அடுத்தவர்கள் மனதைப் புண்படுத்தி அதன் மூலம் சந்தோஷப்பட நினைத்தால், கடைசியில் அவமானப்பட்டு நிற்க வேண்டிய நிலையே ஏற்படும். இதை உணர்ந்துக் கொண்டு மற்றவர்களிடம் இனிமையான வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்துங்கள். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முயற்சித்துப் பாருங்களேன்.



இந்தியாவில் சூரியன் முதலில் உதிக்கும் மாநிலம் எது தெரியுமா..?



இந்தியாவில் சூரியன் முதலில் உதிக்கும் மாநிலம் எது தெரியுமா..? பலருக்கும் தெரியாத தகவல்!
இந்தியாவில் சூரியன் முதலில் உதிக்கும் மாநிலம் எது தெரியுமா..? பலருக்கும் தெரியாத தகவல்!
இந்தியாவில் சூரியன் முதலில் உதிக்கும் மாநிலம் எது என்பது குறித்து பார்க்கலாம்.



பரந்து விரிந்த உலகத்தில் பல்வேறு அதிசயங்கள் உள்ளன. பூமியின் சுற்றளவு, சூரியன், நிலவு என அனைத்தும் வியப்பிற்குள்ளானவை. இத்தகைய அபூர்வமான இயற்கையின் எல்லைகளை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்


பூமியின் சுற்றளவு, வானத்துக்கும் பூமிக்குமான தொலைவு, கடல் மட்டம், உயர்ந்த மலை முகடுகள் என புவிசார்ந்த பல ஆராய்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இவை அனைத்தும் நம் அன்றாட வாழ்வில் மிகவும் முக்கியமானவை. அரசு தேர்வுகளில் இத்தகைய கேள்விகள்தான் பெரும்பாலும் கேட்கப்படுகின்றன.


இந்நிலையில் அத்தகைய கேள்வி ஒன்றுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் எந்த மாநிலத்தில் முதலில் சூரியன் உதிக்கும் என்பதுதான் கேள்வி. இதற்கு பலருக்கும் விடை தெரியாது.



இந்தியாவில் சூரியன் முதலில் உதிக்கும் மாநிலம் அருணாச்சல பிரதேசம். அன்ஜாவ் மாவட்டத்தில் உள்ள டோங் என்ற கிராமத்தில்தான் முதலில் சூரியன் உதயமாகிறது. இந்த ஊர் இந்தியாவின் ஜப்பான் என்று அழைக்கப்படுகிறது.




 கடல்மட்டத்திலிருந்து சுமார் 1,200 மீட்டர் உயரத்தில் அருணாச்சல பிரதேசத்தின் அஞ்சோவில் ஆறு மற்றும் மலைகளால் சூழப்பட்ட கிராமம் டோங் ஆகும். சீனாவுக்கும், மியான்மருக்கும் இடையில் இது அமைந்துள்ளது. பிரம்மபுத்திராவின் துணை நதியான லோஹித்தின் சங்கமம் இதற்கு மேலும் சிறப்பை கூட்டும்விதமாக அமைந்துள்ளது.

கடல்மட்டத்திலிருந்து சுமார் 1,200 மீட்டர் உயரத்தில் அருணாச்சல பிரதேசத்தின் அஞ்சோவில் ஆறு மற்றும் மலைகளால் சூழப்பட்ட கிராமம் டோங் ஆகும். சீனாவுக்கும், மியான்மருக்கும் இடையில் இது அமைந்துள்ளது. பிரம்மபுத்திராவின் துணை நதியான லோஹித்தின் சங்கமம் இதற்கு மேலும் சிறப்பை கூட்டும்விதமாக அமைந்துள்ளது.


இந்த டோங் கிராமத்தில் நாட்டின் எந்த பகுதிகளையும் விட ஒரு மணி நேரம் முன்னதாகவே சூரியன் உதித்துவிடும். அதேபோல ஒரு மணி நேரம் முன்னதாகவே சூரியன் அஸ்தமனம் ஆகிவிடும். இதற்காகவே இப்பகுதி சுற்றுலா பயணிகளிடையே பிரபலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


உலகில் அதிக நிலம் வைத்திருக்கும் ஒரே குடும்பம்... யார் தெரியுமா?


உலகில் அதிக நிலம் வைத்திருக்கும் ஒரே குடும்பம்... யார் தெரியுமா?
உலகில் அதிக நிலம் வைத்திருக்கும் ஒரே குடும்பம்... யார் தெரியுமா?
Mass Land | ஒவ்வொரு மனிதனும் தான் இறப்பதற்குள் குறைந்தது நிலத்தை வாங்கி அதை சொந்தம்கொண்டாட வேண்டும் என்று ஆசைப்படுகிறான்.

 மனிதன்  ஆற்றங்கரைகளில் தங்கி விவசாயம் செய்து வாழ ஆரம்பித்த காலத்தில் இருந்து மனிதன் நிலத்தின் மீது உரிமை கொள்ள ஆரம்பித்தான் என்று சொல்லலாம். ஒவ்வொரு மனிதனும் தான் இறப்பதற்குள் குறைந்தது  நிலத்தை வாங்கி அதை சொந்தம் கொண்டாட வேண்டும் என்று ஆசை படுகிறான். உலகில் அதிக நிலம் யார் வைத்திருக்கிறார்கள் ? எவ்வளவு நிலம் இருக்கும் என்று நீங்கள் யோசித்ததுண்டா? அதை பற்றி தான் இப்போது உங்களுக்கு சொல்ல இருக்கிறோம்.

மனிதன்  ஆற்றங்கரைகளில் தங்கி விவசாயம் செய்து வாழ ஆரம்பித்த காலத்தில் இருந்து மனிதன் நிலத்தின் மீது உரிமை கொள்ள ஆரம்பித்தான் என்று சொல்லலாம். ஒவ்வொரு மனிதனும் தான் இறப்பதற்குள் குறைந்தது  நிலத்தை வாங்கி அதை சொந்தம் கொண்டாட வேண்டும் என்று ஆசை படுகிறான். உலகில் அதிக நிலம் யார் வைத்திருக்கிறார்கள் ? எவ்வளவு நிலம் இருக்கும் என்று நீங்கள் யோசித்ததுண்டா? அதை பற்றி தான் இப்போது உங்களுக்கு சொல்ல இருக்கிறோம்.


 உலகில் அதிக நிலம் கொண்டவர்கள் நமக்கு மிகவும் பரிச்சயமாவார்கள் தான். சொல்ல போனால் இவர்களிடம் ஒரு காலத்தில் பாதி உலகமே இருந்தது என்று சொல்லலாம். இன்று பாதி உலகத்தின் ஆட்சி அதிகாரம்  இல்லை.ஆனால் நிலங்கள் வாங்கி அதன் அதிகாரங்களைக் கொண்டுள்ளனர். யார் என்று கண்டுபிடித்து விட்டீர்களா?

உலகில் அதிக நிலம் கொண்டவர்கள் நமக்கு மிகவும் பரிச்சயமாவார்கள் தான். சொல்ல போனால் இவர்களிடம் ஒரு காலத்தில் பாதி உலகமே இருந்தது என்று சொல்லலாம். இன்று பாதி உலகத்தின் ஆட்சி அதிகாரம்  இல்லை.ஆனால் நிலங்கள் வாங்கி அதன் அதிகாரங்களைக் கொண்டுள்ளனர். யார் என்று கண்டுபிடித்து விட்டீர்களா?



 இங்கிலாந்தின் அரச குடும்பம் தான் உலகிலேயே அதிகமான நிலங்களை சொத்து வைத்திருப்பவர்களாம். கிராமப்புற விவசாய நிலங்கள் , காடுகள், நகர்ப்புறங்களில் நிலம், வீடுகள் மற்றும் ஆடம்பரமான சந்தை வளாகங்கள் . கடல் கரைகள் கூட அவர்களுக்கு இருக்காம். உலகம் முழுவதும் அவர்களது நிலங்களையும் சொத்துக்களையும் கவனிக்க தனி ஒரு நிறுவனம் இயங்கி வருகிறதாம்.

இங்கிலாந்தின் அரச குடும்பம் தான் உலகிலேயே அதிகமான நிலங்களை சொத்து வைத்திருப்பவர்களாம். கிராமப்புற விவசாய நிலங்கள் , காடுகள், நகர்ப்புறங்களில் நிலம், வீடுகள் மற்றும் ஆடம்பரமான சந்தை வளாகங்கள் . கடல் கரைகள் கூட அவர்களுக்கு இருக்காம். உலகம் முழுவதும் அவர்களது நிலங்களையும் சொத்துக்களையும் கவனிக்க தனி ஒரு நிறுவனம் இயங்கி வருகிறதாம்.


 குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால்  பிரிட்டனின் மன்னர் மூன்றாம் சார்லஸ் ஆவார். அவரது தாயார்  இரண்டாம் எலிசபெத் ராணி இறந்த பின்னர் மன்னராக முடிசூட்டப்பட்ட இவர் தான் உலகின் அதிக நிலங்களுக்கு சொந்தக்காரர். அவர் இந்தச் சொத்தின் உரிமையாளராக இருந்தாலும், அவர் அதன் தனிப்பட்ட உரிமையாளர் அல்ல. அவர் மன்னராக இருக்கும் வரை, இந்த சொத்து அனைத்தும் அவரது சொத்தாக கருதப்படும்.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால்  பிரிட்டனின் மன்னர் மூன்றாம் சார்லஸ் ஆவார். அவரது தாயார்  இரண்டாம் எலிசபெத் ராணி இறந்த பின்னர் மன்னராக முடிசூட்டப்பட்ட இவர் தான் உலகின் அதிக நிலங்களுக்கு சொந்தக்காரர். அவர் இந்தச் சொத்தின் உரிமையாளராக இருந்தாலும், அவர் அதன் தனிப்பட்ட உரிமையாளர் அல்ல. அவர் மன்னராக இருக்கும் வரை, இந்த சொத்து அனைத்தும் அவரது சொத்தாக கருதப்படும்.


Tips to keep Apple fresh in snacks box



ஸ்நாக்ஸ் பாக்ஸில் ஆப்பிள் துண்டுகள் ஃப்ரெஷா இருக்கணுமா? அரை ஸ்பூன் தேன் போதும்; இதை ஃபாலோ பண்ணுங்க!
ஸ்நாக்ஸ் டப்பாவில் நாம் கொண்டும் போகும் ஆப்பிள் பழங்கள் கெடாமல் இருக்க என்ன செய்வது? என்றும், அவற்றை எப்படி பாதுகாப்பாக எடுத்துச் செல்லலாம் என்றும் இங்குப் பார்க்கலாம்.
 

Tips to keep Apple fresh in snacks box in tamil 
ஸ்நாக்ஸ் டப்பாவில் இருக்கும் ஆப்பிள் கலர் மாறாமல் ஃப்ரெஷா அப்படியே இருக்க இங்கு டிப்ஸ் பார்க்கலாம்.


பொதுவாக வெளியில் பல இடங்களுக்கு செல்லும் நாம் உணவுகள் மற்றும் ஸ்நாக்ஸ்களை டப்பாவில் அடைத்து வைத்து எடுத்துச் செல்வோம். ஆனால், நாம் கொண்டு செல்லும் இந்த உணவுகள் சில சமயங்களில் கெட்டுக் போய்விடும். இதனால் நாம் பட்னி இருக்கும் சூழல் நிலவும். 

இந்நிலையில், ஸ்நாக்ஸ் டப்பாவில் நாம் கொண்டும் செல்லும் உணவு மற்றும் பழங்களை கெட்டுப்போகாமல் இருப்பதற்கான டிப்ஸ்களை நாம் தினந்தோறும் இங்கு பார்த்து வருகிறோம். அந்த வகையில், ஸ்நாக்ஸ் டப்பாவில் நாம் கொண்டும் போகும் ஆப்பிள் பழங்கள் கெடாமல் இருக்க என்ன செய்வது? என்றும், அவற்றை எப்படி பாதுகாப்பாக எடுத்துச் செல்லலாம் என்றும் இங்குப் பார்க்கலாம். 

ஸ்நாக்ஸ் டப்பாவில் இருக்கும் ஆப்பிள் துண்டுகள் ஃப்ரெஷா இருக்க டிப்ஸ் 

வெளி இடங்களுக்கு செல்லும் போதோ அல்லது குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் போதோ ஆப்பிளை கட் செய்து ஸ்நாக்ஸ் டப்பாவில் அடைத்துக் கொடுப்போம். உணவு இடைவேளையின் போது அவற்றை திறந்து பார்த்தால், அவற்றின் நிறம் அப்படியே மாறிப் போயிருக்கும். இந்நிலையில், ஸ்நாக்ஸ் டப்பாவில் இருக்கும் ஆப்பிள் கலர் மாறாமல் ஃப்ரெஷா அப்படியே இருக்க இங்கு டிப்ஸ் பார்க்கலாம். 


ஒரு ஆப்பிள் எடுத்து அதனை சாப்பிடும் அளவுக்கு சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பிறகு, அவற்றை தண்ணீர் நிரப்பட்ட சிறிய பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும். பிறகு அவற்றுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து கொள்ளவும். இந்தக் கலவையை அதே ஸ்பூனால் நன்கு கலந்து விடவும். இவற்றை சில வினாடிகள் அப்படியே விட்டு விடவும். பிறகு அவற்றை ஸ்நாக்ஸ் டப்பாவில் போட்டு எடுத்துக் கொண்டு செல்லலாம்.