jaga flash news

Friday 26 April 2024

வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?

வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?
இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு வீடு அல்லது ஒரு சொத்தினை நீங்கள் வாடகைக்கு எடுத்து பயன்படுத்துகிறீர்கள் என்றால் அந்த உரிமையாளரிடம் நீங்கள் சட்டப்படி வாடகை ஒப்பந்தம் மேற்கொள்வது அவசியமாகும். இந்த வாடகை ஒப்பந்தம் இருதரப்பிலும் உள்ள அனைத்து நிபந்தனைகளும் இடம்பெற்ற ஒரு சட்டப்பூர்வ ஆவணமாக கருதப்படுகிறது. ரியல் எஸ்டேட்டில் பணத்தைக் கொட்டும் NRI-கள்..பின்னணி என்ன? பொதுவாக வாடகை ஒப்பந்தங்கள் நான்கு வகையில் போடப்படுகின்றன. 1. வணிக நோக்கத்துக்காக மேற்கொள்ளப்படும் வாடகை ஒப்பந்தம் , 2. குடியிருப்புகள் 3.தனிப்பட்ட ஒரு அறை , 4. ஒன்றுக்கும் மேற்பட்டோர் ஓரிடத்தை பகிர்ந்து பயன்படுத்துவது. இந்த நான்கு வகைகளில் வாடகை ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. ஆனால் பொதுவாக இந்த மாதிரியான வாடகை ஒப்பந்தங்களின் காலம் என்பது 11 மாதங்கள் மட்டுமே. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். நமது அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு 17 பதிவு சட்டம் 1918-இன் படி வாடகை ஒப்பந்தத்தின் காலம் என்பது ஓராண்டுக்கு கீழ் இருந்தால் அதனை பதிவு செய்ய தேவையில்லை. எனவே தான் பொதுவாக இது போன்ற வாடகை ஒப்பந்தங்கள் 11 மாதங்கள் மற்றும் அதற்கு குறைவான காலத்திற்கு மட்டுமே போடப்படுகின்றன. இதனை பதிவு செய்ய இரு தரப்பினரும் அலைய வேண்டிய தேவை இருக்காது. குறிப்பாக வாடகை ஒப்பந்தத்தை பதிவு செய்வதற்கான பதிவு கட்டணம் நாம் செலவிட வேண்டிய தேவையில்லை. நீண்ட கால அடிப்படையில் நீங்கள் ஒப்பந்தம் போடும்போது அதற்கான பதிவு கட்டணம் அதிகமாக இருக்கும். இதுபோல 11 மாத காலத்திற்கு மட்டுமே ஒப்பந்தங்களை போடும்போது உரிமையாளர்களுக்கு அது சாதகமாக உள்ளது. குறிப்பாக வாடகை உயர்வு மற்றும் வாடகை காலத்தை முடிவுக்கு கொண்டு வருவது ஆகியவற்றுக்கான சுதந்திரம் உரிமையாளர்களுக்கு கிடைக்கிறது. மறுபுறம் வாடகைக்கு குடியிருப்பவர்கள் முத்திரை வரி அல்லது பதிவு செலவுகளை செய்ய வேண்டிய தேவை இருக்காது.
 ஆனால் நீண்ட கால அடிப்படையில் ஒரு இடத்தை வாடகைக்கு பயன்படுத்தப் போகிறீர்கள் எனில் ஒப்பந்தம் செய்து அதனை முறையாக பதிவு செய்வது இரு தரப்புக்குமே நல்லது என்கின்றனர் வழக்கறிஞர்கள். இந்தியாவில் வாடகை ஒப்பந்தம் உரிமையாளருக்கும், வாடகைக்கு வருபவருக்கும் சட்ட ரீதியான பாதுகாப்பை தரக் கூடியது. ஒப்பந்தமானது வாடகைக்கு குடியிருப்பவர் மற்றும் உரிமையாளர் ஆகிய இரு தரப்பும் பரஸ்பரம் ஒப்புக் கொண்ட விஷயங்களை மட்டுமே கொண்டிருக்க வேண்டும் என்கின்றனர். வாடகைக்கு குடியிருப்பவர் வீட்டின் மீது உரிமை கொண்டாடாமல் இருக்க, வாடகை ஒப்பந்தத்தை பதிவு செய்வது முக்கியம். அதே போல வீட்டை காலி செய்வது பற்றி எத்தனை நாட்களுக்கு முன் கூற வேண்டும் என்பது கட்டாயம் இடம்பெற வேண்டும் என்கின்றனர் வழக்கறிஞர்கள். .

நிர்வாணமாக ஏன் குளிக்கக்கூடாது?



நிர்வாணமாக ஏன் குளிக்கக்கூடாது? ஜோதிடம் கூறும் காரணம் இதோ!
நிர்வாணமாக ஏன் குளிக்கக்கூடாது? ஜோதிடம் கூறும் காரணம் இதோ!
குளிக்கும்போது சில விதிகளை கடைபிடிப்பது மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது. இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நல்லது.




ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் காலை கண் முழிப்பதில் இருந்து இரவில் படுக்கைக்கு செல்லும் வரை செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள் பல உள்ளன. சமைப்பது, சாப்பிடுவது, வேலைக்கு செல்வது, குளிப்பது, நகம் வெட்டுவது என அனைத்து வேலைகளும் முக்கியம். நம் வாழ்க்கையில் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் சில நடைமுறைகள் உள்ளது. அதை நமது முன்னோர்கள் காலம் காலமாக கடைப்பிடித்து வருகின்றனர்.





நமது முன்னோர்களும் சரி… நமது பெற்றோர்களும் சரி.. காலை எழுந்தவுடன் குளிக்க வேண்டும் என கூறுவார்கள். அதுவும், இன்னும் சில வீடுகளில் சமைப்பதற்கு முன் குளிக்க வேண்டும் என்ற விதியை கடைபிடிப்பார்கள். அது நம்மில் பலர் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், குளிப்பதற்கு சில விதிகள் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?

ஆமாம்… உண்மைதான் குளிப்பதற்கு என வேத சாஸ்த்திரத்தில் சில முறை இருப்பதாக கூறப்படுகிறது. குளிக்கும் போது தவறுதலாக நாம் செய்யும் சில விஷயங்கள் நமக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.


இந்து மத சாஸ்திரங்களின்படி ஒருவர் குளிக்கும் போது நிர்வாணமாக குளிக்கக் கூடாது என கூறப்படுகிறதாம். ஆனால், நம்மில் பலர் குளிக்கும் போது ஆடைகள் எதுவும் அணியாமல் தான் குளிப்போம். நிர்வாணமாக குளிப்பதால் வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படும் என கூறப்படுகிறது.


காலம் காலமாக ஆடை அணியாமல் குளித்தால் தீய சக்திகள் வீட்டிற்குள் நுழையும் என்ற ஐதீகம் உள்ளது. இதனால், குளிப்பவரின் மனமும், வீடும் பாதிக்கப்படும். எனவே, குளிக்கும் போது உடலில் ஏதாவது ஆடை அணிய வேண்டும் என கூறப்படுகிறது.


இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், ஆடை இல்லாமல் குளித்தால் லட்சுமி தேவி கோபப்படுவாள் என்பதும் ஐதீகம். இதனால், அவர்களின் பொருளாதார நிலை பாதிக்கப்படும். ஆடை என்றால், சுடிதார், சேலை, சட்டை அல்ல. குறைந்த பட்சம் டவலில் போர்த்தியாவது குளிப்பது அவசியம் என அறிவியல் கூறுகிறது.


மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் நிர்வாணமாக குளித்தால், சில சமயங்களில் உங்களுக்கு பித்ரு தோஷம் ஏற்படும் எனவும் கூறப்படுகிறது. நீங்கள் நிர்வாணமாக குளித்தால் முன்னேர்கள் கோபப்படுவார்கள். இதனால், வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.




நிர்வாணமாக குளிப்பதற்குப் பின்னால் மற்றொரு புராண உண்மை உள்ளது. கோபிகைகள் நீராடும் போது அவர்களின் ஆடைகளை கிருஷ்ணர் மறைத்தார். பிறகு, கோபியர்கள் அவரிடம் கெஞ்சிய பிறகு அவர் ஆடைகளை கொடுத்தார். இதன் அர்த்தம், கிருஷ்ணர் கோபியர்களிடம் ஒருபோதும் நிர்வாணமாக நீராடக்கூடாது என்பதை உணர்த்துவதாக கூறப்படுகிறது.


குளிப்பதற்கு பின்னால் உள்ள மற்றொரு சுவாரஷ்யமான விஷயம் என்ன என்றால், முன்பெல்லாம் கழிப்பறைகள் வீட்டை விட்டு தள்ளி இருக்கும் அல்லது குளிப்பதற்காக மிடுக்காய் வைத்து ஒரு கழிப்பறை வைத்திருப்பார்கள். அப்படி அதற்கு ஏதாவது பூச்சிகள் வந்தால், நம்மால் அப்படியே வெளியில் ஓடி வர முடியாது என்பதால் இதை கூறியுள்ளனர்.


தற்போது எல்லாவீடுகளிலும் அறைக்கு அரை கழிப்பறை உள்ளது. இருப்பினும் சில அவசர சூழ்நிலைகளில் நம்மால் அப்படியே வெளியே வர முடியாது என்பதால் மட்டுமே இது கூறப்படுகிறது.


Thursday 25 April 2024

வீட்டில் வளர்க்கக் கூடாத மரங்கள்


வீட்டில் வளர்க்கக் கூடாத மரங்கள் என்னென்ன தெரியுமா?
நம் வீட்டில் அழகுக்காக மரம், செடி, கொடிகள் வளர்ப்பது என்பது சாகஜமான விஷயமேயாகும். இருப்பினும் சில மரங்கள் எதிர்மறை ஆற்றலை உருவாக்குவதால் அவற்றை வீட்டில் வைக்கக்கூடாது என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட சில மரங்களைப் பற்றித்தான் இந்தப் பதிவில் காண உள்ளோம்.

வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டில் அரசமரம் வைப்பது தீங்கு விளைவிக்கும். இதனால் பணப் பிரச்னை மற்றும் பண விரயம் ஏற்படலாம். வீட்டின் அருகிலே புளியமரம் இருக்கக் கூடாது. அப்படியிருக்கும் இடத்தில் வீடு கட்டுவதைத் தவிர்த்து விடுவது நல்லது. தென்னை மரத்தை வீட்டில் ஒற்றைப்படையில் வைக்கக்கூடாது. தென்னை மரத்தை ஜோடியாகத்தான் வளர்க்க வேண்டும்.

பனைமரம் இருக்கும் வீட்டில் பணப்பற்றாக்குறை ஏற்படுவது மட்டுமில்லாமல், தலைக்கு மேல் கடனும் ஏறிக்கொண்டே போகும். இலந்தை மரத்தை ஒருபோதும் வீட்டில் வைக்ககூடாது. இது வீட்டின் அமைதியை சீர்குலைக்கும்.

நாவல் மரத்தை வீட்டில் வளர்க்கக் கூடாது என்று சொல்வதற்குக் காரணம், அது மிகவும் குளிர்ச்சியான தன்மை வாய்ந்த மரம் என்பதால் நச்சு பூச்சுகளை கவர்ந்திழுக்கக் கூடிய தன்மையை உடையது. அதனால் அந்த பூச்சுக்கள் வீட்டிற்குள்ளும் வரும் என்பதால் இவ்வாறு சொல்லப்பட்டது.

அத்தி மரத்தையும் வீட்டில் வளர்க்கக் கூடாது என்று சொல்வதற்குக் காரணம், இது வௌவால்களுக்கு மிகவும் பிடித்த பழம் என்பதால் நிறைய வௌவால்கள் வரும். அதனால் நோய்கள் ஏற்படும் என்பதால் சொல்லப்பட்டது.

முற்கள் இருக்கும் செடிகளை வீட்டில் வளர்க்கக் கூடாது. கள்ளிச்செடி துரதிர்ஷ்டத்தையும், கஷ்டத்தையும் தரும் என்று கூறுகிறார்கள்.


வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண் பிள்ளைகள் இருந்தால் கருவேப்பிலை மரத்தை வளர்க்கலாம். அப்படியில்லையேல் கருவேப்பிலை மரம் வளர்க்கக் கூடாது என்று சொல்லப்படுகிறது. அப்படி மீறி வளர்த்தால் அந்தப் பிள்ளை நோய்வாய்ப்படும், வாழ்க்கையில் கஷ்டம் ஏற்படும், இல்லற வாழ்க்கையில் சந்தோஷம் ஏற்படாது என்று கூறுகிறார்கள். உடனே காய்ந்து விடக்கூடிய தாவரங்களையோ செடிகளையோ வீட்டில் வளர்க்கக் கூடாது. உதாரணத்திற்கு காகிதப்பூ எதிர்மறையான சக்திகளை ஈர்க்கக் கூடியது என்று சொல்லப்படுகிறது.


சிவப்பு நிற அரளியை வீட்டில் வைப்பதால் குடும்பத்திற்குள் சண்டை சச்சரவு வரும். அதனால் அதை வீட்டில் வைப்பதை தவிர்க்கவும். தாழம்பூ செடி, செண்பக மரம் ஆகியவற்றிலிருந்து வரும் அதிக மணம் நாகங்களை கவரக்கூடியது என்பதால் அதை வீட்டில் வைக்கக் கூடாது என்று கூறுவார்கள். முருங்கை மரத்தை வீட்டின் வாசல் அருகில் வைக்ககூடாது. வீட்டின் பின்புறத்தில் வைப்பதே சிறந்ததாகும்.

அகத்தியர், ‘புனைச்சுருட்டு’ என்னும் நூலில் எந்தெந்த செடிகளை வீட்டில் வைக்கக்கூடாது என்று கூறுகிறார் என்பதைப் பார்க்கலாம். பருத்தி, அகத்தி, பனை, நாவல், அத்தி, எருக்கு, வெள்ளெருக்கு, புளியமரம், கருவேலம், முருங்கை, கல்யாண முருங்கை,கள்ளி, கருவூமத்தை, வில்வம், இலவம், உத்திராட்சம், உதிரவேங்கை ஆகிய 17 மரங்களை வீட்டில் வைக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.

நம்முடைய வீடு வாஸ்துப்படி கட்டியிருந்தாலும், சில நேரங்களில் நோய், பணக்கஷ்டம், சண்டை போன்ற பிரச்னைகள் வரக்கூடும். அதற்குக் காரணம் நாம் சில நேரங்களில் விவரம் அறியாமல் இதுபோன்ற வீட்டில் வைக்கக் கூடாத மரம், செடியை வைத்திருப்பதே காரணமாக இருக்கும். எனவே, அதைப் புரிந்து கொண்டு செயல்பட்டால் செழிப்பாக வாழலாம்.

 

Wednesday 24 April 2024

காலணிகள் மற்றும் செருப்புகளை எந்த திசையில் வைக்க வேண்டாம்



தப்பி தவறி கூட இந்த திசையில் காலணிகளை விடாதீர்கள்.. பண கஷ்டம் வருமாம்!
தப்பி தவறி கூட இந்த திசையில் காலணிகளை விடாதீர்கள்.. பண கஷ்டம் வருமாம்!
Footwear Vastu Tips |
இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. வாஸ்து சாஸ்திரத்தில், காலணிகள் கழற்றி வைப்பது பற்றியும் கூறப்பட்டுள்ளது. காலணிகள் மற்றும் செருப்புகளை தலைகீழாக வைத்திருப்பது வீட்டில் எதிர்மறை சக்தியை அதிகரிக்குமாம்.



இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் உண்டு. வீடு கட்டுவது முதல் அதன் அலங்காரம் வரை அனைத்திற்கும் வாஸ்து முக்கியம். அதே போல, வீட்டில் காலணி வைப்பது முதல் ஆடை பராமரிப்பு வரை வாஸ்து முக்கியம். செருப்பு, ஷூ போன்றவற்றை தலைகீழாக வைக்கக் கூடாது என்று வீடுகளில் அடிக்கடி பெரியவர்கள் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். ஏனென்றால் அது அபசகுனமாக கருதப்படுகிறது.


இப்படி செய்வதால் குடும்பங்களில் தகராறுகள் தலைதூக்கும் என்பது ஐதீகம். வாஸ்து சாஸ்திரத்தில் ஷூ மற்றும் செருப்புகளை வீட்டில் வைக்க சில விதிகள் கூறப்பட்டுள்ளது. வீட்டில் ஷூ மற்றும் செருப்புகளை கழற்றும் போதும், வைக்கும்போதும் என்னென்ன விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும் என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.


வடகிழக்கு திசையில் காலணிகள் மற்றும் செருப்புகளை வைக்க வேண்டாம் : நம்மில் பலர் காலணிகளை இஷ்டத்திற்கு எங்காவது கழட்டி வைப்போம். ஆனால், அது நல்லது அல்ல என்பது உங்களுக்கு தெரியுமா?. வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் காலணிகள் மற்றும் செருப்புகளை வடக்கு அல்லது கிழக்கு திசையில் வைக்கக்கூடாது என கூறப்படுகிறது. ஏனென்றால், இது வீட்டில் எதிர்மறை சக்தியை அதிகரிக்கும்.


வடக்கு அல்லது கிழக்கு திசையில் ஷூ மற்றும் செருப்புகளை கழற்றினால் அன்னை லக்ஷ்மி கோபப்படுவார் என கூறப்படுகிறது. இது வீட்டின் பொருளாதார நிலையை பலவீனப்படுத்துகிறது. அதுமட்டும் அல்ல, வீட்டில் வறுமையை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலை மோசமடையலாம்.


ஷூ மற்றும் செருப்புகளை வைக்க சரியான திசை எது? : வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஷூ மற்றும் செருப்புகளின் அலமாரி எப்போதும் வீட்டில் தெற்கு அல்லது மேற்கு திசையில் இருக்க வேண்டும். வெளியில் இருந்து வீட்டுக்குள் வரும்போது, ​​தெற்கு அல்லது மேற்கு திசையில் மட்டுமே காலணிகள் மற்றும் செருப்புகளை கழற்றி வைக்கவும். வீட்டின் பிரதான வாசலில் காலணிகள் மற்றும் செருப்புகளை கழற்றக்கூடாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.


காலணிகளை தலைகீழாக வைக்க வேண்டாம் : வாஸ்து சாஸ்திரங்களின்படி, காலணிகள் மற்றும் செருப்புகளை வீட்டில் ஒருபோதும் தலைகீழாக வைக்கக்கூடாது. இவ்வாறு செய்வதால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும். இது குடும்பத்தின் மகிழ்ச்சியையும் அமைதியையும் சீர்குலைக்கிறது. அதனால் தான் ஷூ, செருப்புகளை தலைகீழாக வைக்கக் கூடாது என கூறப்படுகிறது. இதனால், வீட்டில் வறுமை ஏற்படும்.


Sunday 21 April 2024

கனவுகளுக்கு என்ன மாதிரியான பலன்கள்


 நாம் எந்தெந்த கனவுகளுக்கு என்ன மாதிரியான பலன்கள் நமக்கு கிடைக்கப் போகிறது என்பது குறித்து பார்க்கலாம். மனிதர்கள் கனவில் கண்டால், கட்டிடங்களை கனவில் கண்டால்,பொருட்களை கனவில் கண்டால், பஞ்சபூதங்கள் கனவில் வந்தால், பறவைகள் கனவில் வந்தால், தானியங்கள் கனவில் வந்தால், விலங்குகள் கனவில் வந்தால், கோவில்கள் கனவில் வந்தால் என நிறைய கனவு பலன்கள் உள்ளது. அதில் இப்போது கோயில்களில் இந்த மாதிரியான கனவுகள் வந்தால் என்ன பலன் அது சாதகமாக பாதகமா என்பது குறித்து பார்க்கலாம்.

கோயில்கள் பற்றிய கனவுகள் உங்களுக்கு வந்தால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என்று அர்த்தமாம். கோயிலுக்குள் போக முடியாமல் கூட்டத்தில் சிக்கி தவிப்பது போல கனவு கண்டால் எதிர்பாராத பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டு அவதிப்பட போகிறீர்கள் என்பது இந்த கனவின் அர்த்தமாம்.

கோயில்களில் தனியாக இருப்பது போல கனவு கண்டால் தொழிலில் தேக்கம் இருக்கிறது அல்லது இருக்கப் போகிறது என்பது அர்த்தமாம். கோயில் நடை திறந்து அதில் நீங்கள் செல்வது போல கனவு கண்டால் நீங்கள் நினைக்கும் காரியம் 100% வெற்றி பெறும் அதில் எந்த சந்தேகமும் இல்லை என்பதை உணர்த்துமாம்.

கோயில் கருவறைக்கு சென்று கடவுளுக்கு மாலை அணிவிப்பது போல கனவு கண்டால் உங்களுக்கு லாபம் கிட்டும் பணம் பொருள் செல்வம் செழிக்கும் உங்களுக்கு மிகப்பெரிய வெற்றி கிட்டும் என்பது அர்த்தமாம்.

கடவுளை கனவில் கண்டால் பிரச்சனைகள் உங்களை விட்டு அகலும் என்று அர்த்தமாம். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். திருமண யோகம் கைகூடும். திருமண தடைகள் அனைத்தும் நீங்கும். உங்களை தோற்கடிக்க யாராலும் முடியாது. கடவுளை நீங்கள் கனவில் கண்டால் இத்தனை பலன்களும் உங்களை வந்து சேருமாம்.

காளி தீபம் உங்கள் கனவில் கண்டால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இருக்கும் அல்லது சண்டை சச்சரவுகள் நிகழ வாய்ப்பு அதிகம் உள்ளது என்பது அர்த்தமாம்.

கோபுரத்தை நீங்கள் கனவில் கண்டால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய கொள்கையை கடைப்பிடிக்க போகிறீர்கள் அதன் மூலம் உங்கள் வாழ்க்கை பிரகாசமாக போகிறது என்பது அர்த்தமாம். அதேபோல உங்கள் பாவங்களும் நீங்குமாம்.

கோயிலில் பிரசாதம் வாங்குவது போல கனவு கண்டால் உங்களுக்கு சிலரால் பிரச்சனை ஏற்பட போகிறது என்பது அர்த்தமாம்.

கோயில் தெப்பக்குளம் உங்கள் கனவில் கண்டால் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். நீங்கள் கடல் தாண்டி போகப் போகிறார்கள் என்ற அர்த்தம்.

கடவுளிடம் பேசுவது போல நீங்கள் கனவு கண்டால் மிகவும் சுபம் உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் அகலும் இறைவன் உங்கள் வீட்டிலேயே இருக்கிறார் என்று அர்த்தமாம்.

கோயில் தேர் கனவில் கண்டால் உங்களைத் தேடி இறைவன் வருகிறான் என்று அர்த்தமாம் நீங்கள் நினைத்தது கை கூடும். வெகு சீக்கிரத்தில் எத்தனை தடைகள் வந்தாலும் இறைவன் உங்களுடன் இருப்பார்.

Friday 19 April 2024

அரைஞாண்கயிறு அணிந்து கொள்வது ஏன் தெரியுமா?


அரைஞாண்கயிறு அணிந்து கொள்வது ஏன் தெரியுமா? எந்த கலர் கயிறை அணியலாம்?
 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அரைஞாண்கயிறு கட்டுவது ஏன் என்பது தெரியுமா? இதில் அடிவயிற்று பகுதிக்கான அனைத்து நலன்களும் இருக்கிறது.



குழந்தை பிறந்ததும் தீட்டு கழித்தவுடன் வெள்ளியிலோ அல்லது கருப்பு, சிகப்பு கயிறிலோ தாயத்தை கோர்த்து அரைஞாண்கயிறு கட்டும் வழக்கம் இருக்கிறது.



What is the use of Araignankayiru which is tied around hip
இது குழந்தைகள் மட்டும் இல்லாமல் பெரியவர்களும் கடைசி வரை கட்டிக் கொள்கிறார்கள். இதற்கு பல்வேறு மருத்துவக் காரணங்கள் உள்ளன. ஆண்களுக்கு சிறுநீரகத்திலிருந்து வரும் ரத்தக் குழாய்களும் விதைப்பையிலிருந்து வரக் கூடிய ரத்தக் குழாய்களும் ஒன்று சேரும் இடமே அடிவயிறுதான்.


அதனால்தான் அரைஞாண்கயிறு கட்டுகிறார்கள். இப்படி கட்டுவதால் குடல் இறங்காமல் இருக்கும். முக்கியமாக விதைப்பையை பாதுகாக்கத்தான் இது கட்டப்படுகிறது. அரைஞாண்கயிறு கட்டுவதால் அடிவயிற்றுப்பகுதிகளுக்கு கீழ் இருக்கும் உறுப்புகளுக்கு ரத்தம் செல்கிறது. வெள்ளியில் கூட அரைஞாண்கயிறு கட்டலாம்.

அது கட்டுவதால் உடல் சூட்டை தணிக்கும். பெண்களுக்கு அரைஞாண்கயிறு தேவையில்லாத ஒன்று என்கிறார்கள். அதாவது வயிறு பகுதி பெரிதாக ஆகாமல் இருக்க கட்டிக் கொள்ளலாம். சில பெண்கள் கைகளில் கூட தாயத்தை கட்டிக் கொள்கிறார்கள். குழந்தையின் தொப்புள் கொடியை காய்ந்தவுடன் அதை தாயத்தில் சொருகி, அரைஞாண்கயிறாக கட்டிக் கொள்கிறார்கள்.

ADVERTISEMENT
இதனால் குழந்தையை கெட்ட சக்தி அண்டாது. மருத்துவக் காரணங்கள் இருந்தாலும் அந்த காலத்தில் ஆண்கள் கோவணம் கட்டிக் கொள்ள இந்த கயிறு உதவியாக இருந்தது. அது போல் கிராமப்புறங்களில் நீச்சல் கற்றுத் தர அரைஞாண் கயிற்றில் சேலை கட்டி இறக்கிவிடுவார்கள். பெல்ட் கண்டுபிடிக்கப்படாமல் இருந்த காலத்தில் அரை டிரவுசரை கீழே விழாமல் பிடித்துக் கொள்ள இந்த கயிறு உதவியாக இருந்தது.

அது போல் வயல்வெளிகளில் வேலை செய்யும் போது பாம்பு கடித்துவிட்டால் உடல் முழுவதும் விஷம் பரவாமல் இருப்பதை தடுக்க இந்த அரைஞாண் கயிறு தேவைப்படுகிறது. மேலும் குழந்தைகளுக்கு கட்டும் போது குழந்தையின் எடை குறைந்தால் அது இந்த அரைஞாண் கயிறு இளகுவதில் இருந்து தெரியும். கயிறு டைட்டானால் குழந்தையின் உடல் எடை அதிகரித்துள்ளது என தெரியும். இந்த அரைஞாண்கயிறு கண் திருஷ்டியை போக்கவும் பயன்படுகிறது. இது கருப்பு, சிவப்பு நிறங்களில் கிடைக்கிறது. அவரவர் தேவைக்கேற்ப இதை கட்டிக் கொள்ளலாம்.


Thursday 18 April 2024

தண்ணீர் எப்போது குடிக்க வேண்டும்?சாப்பிடும் முன்பு ,பின்பு


சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கலாமா? சாப்பிடும் முன் பருகலாமா? தண்ணீர் எப்போது குடிக்க வேண்டும்? அடடே
சாப்பிடும் முன்பு தண்ணீர் குடிக்கலாமா? சாப்பிட்டதுமே தண்ணீர் குடிக்கலாமா? உணவு நிபுணர்கள் சொல்வது என்ன?


தண்ணீர் என்பது எப்போதுமே நமக்கு பலத்தையும், ஆற்றலையும் தரக்கூடியது.. குடல் பகுதியின் சீரான செயல்பாட்டுக்கு தண்ணீர் மிகவும் அவசியம்.. இதனால் செரிமானம் எளிதாகிறது.. உடலிலுள்ள கழிவுகளும், நச்சுக்களும் நீங்குகின்றன.. இதில் வெந்நீரை குடிப்பது கூடுதல் நன்மைகளை தருகிறதாம்.


Can we drink water while eating and which is the Suitable time to drink water while taking food
கலோரிகள்: கலோரி இல்லாத தண்ணீரை குடிப்பது தேவையற்ற கலோரிகளை உட்கொள்வதில் இருந்து பாதுகாக்கிறது. அதேசமயம், நாம் குடிக்கும் தண்ணீரின் அளவும் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகின்றன..


இதில் சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்கள். எனவே, 30 நிமிடங்களுக்கு முன்பு ஒரு கிளாஸ் தண்ணீரை குடிக்க சொல்கிறார்கள். காரணம், சரியான நீரேற்றமானது, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறதாம்.. செரிமானமும் சீராக நடக்கிறதாம்.. ஊட்டச்சத்து உறிஞ்சுதலும் தடையில்லாமல் நடக்கிறதாம். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், சாப்பிடுவதற்கு முன்பு குறிப்பிட்ட அளவு தண்ணீரை குடிக்கலாம் என்கிறார்கள்.

ராமநாதபுரம் மாவட்டம் தண்ணீர் இல்லாத மாவட்டமா? உண்மை என்ன.. இதை பாருங்க ராமநாதபுரம் மாவட்டம் தண்ணீர் இல்லாத மாவட்டமா? உண்மை என்ன.. இதை பாருங்க
வறட்சி: வறட்சியை தடுக்க தண்ணீர் குடிக்க நேரிடுகிறது என்றாலும், சாப்பிடும்போது தண்ணீர் குடித்துவிட்டால், செரிமானம் பாதிக்கப்படும் என்கின்றன ஆய்வுகள்.. செரிமான சுரப்புகளின் தாக்கம் குறைந்துவிடும்.. அத்துடன் உள்ளே விழுங்கும் உணவும், முழுமையாக செரிமானம் ஆகாமல், மந்தம், உப்புசம், பசியின்மை போன்றவற்றை ஏற்படுத்திவிடக்கூடும். முக்கியமாக, குழந்தைகள் சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடித்தால், அவர்கள் வழக்கமாக சாப்பிடும் அளவு குறைவதற்கான வாய்ப்பு உள்ளதாம்..


சாப்பிடும்போது அதிகளவில் தண்ணீர் குடிக்காமல் இருக்க வேண்டுமானால் இருக்க வேண்டுமானால், உணவில் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம். சாப்பிட்டு முடித்ததுமே தண்ணீர் குடிக்கக்கூடாதாம்.. சிறிது நேரம் கழித்து தண்ணீர் குடிப்பதே செரிமானத்துக்கு உகந்ததாக இருக்குமாம்.

காலையில் எழுந்து பல்லை துலக்கியதுமே! ஒரே கல்ப்பாக ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்கலாமா? காலையில் எழுந்து பல்லை துலக்கியதுமே! ஒரே கல்ப்பாக ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்கலாமா?
குளிர்ந்த நீர்: சாப்பிடும்போது, குளிர்ச்சியான தண்ணீர் குடிப்பதும், செரிமான மண்டலத்திலுள்ள என்சைம் செயல்திறனை குறைத்துவிடுமாம்.. இதனால், உடலில் நச்சுக்கள் உருவாக வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள். அதனால், சாப்பிடும்போது, சோடா, ஜில் ஜூஸ், காபி இவைகளை குடிக்க வேண்டாம் என்கிறார்கள்.


ஆனால் சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடித்தால் உடல் பலவீனம் அடையும் என்று ஆயுர்வேதம் சொல்கிறது..அதேபோல, சாப்பிடும்போது சிறிது தண்ணீரை குடிப்பது தவறில்லை, செரிமான மண்டலத்துக்கு நல்லது, உணவுகளை உடைப்பதற்கும் இந்த தண்ணீர் உதவியாக இருக்கும் என்று ஆயுர்வேதம் சொல்கிறது.

ஆயுர்வேதம்: அதேபோல, சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பதால் சீரான செரிமானம் தடைப்பட்டு உடல்பருமன் அதிகரிக்கும் என்பதால், சாப்பிட்டு 30 நிமிடம் கழித்தே தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிறது ஆயுர்வேதம்.


Wednesday 17 April 2024

பனை நுங்கு...

உடல்நலம் பனை நுங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க! கோடைகாலம் வந்து விட்டாலே உடல் சூட்டினால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படக் கூடும். இந்நிலையில் வெயில் காலத்தில் நுங்கு வரத்தும் அதிகரித்துவிடும். எங்கு பார்த்தாலும் நுங்கு வியாபாரம் களைகட்டத் தொடங்கும். மக்களும் வெயில் சூட்டை தனிக்க, தாகத்தைத் தனிக்க நுங்கு உண்பார்கள். அதற்காக மட்டுமல்லாமல் அது உடலுக்கு இன்னும் பல நன்மைகளைக் கொடுக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? நுங்குவின் பொதுவான பயன்பாடுகள் குறித்து பொதுவான பலன்கள் அனைவருக்கும் தெரியும் என்றாலும், பெண்களுக்கு நுங்கு அருமருந்தாக அமைந்துள்ளது என்கிறார்கள்.. அந்த அளவுக்கு அதில் மருத்துவ பலன்கள் நிறைந்துள்ளதாம். வெயில் காலத்தை தவிர, நிறைய பேர் இதைப் பெரிதாக கண்டுகொள்வதில்லை... ஆனால், எந்த காலத்திலும், கட்டாயம் சாப்பிட வேண்டிய பழம்.. எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். காலநேரம் கிடையாது. இதில் உள்ள மருத்துவ நன்மைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம். நுங்கில் வைட்டமின் பி, இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துகள் இருந்தாலும், இந்த பழத்தில் குறைந்த கலோரி மற்றும் அதிக நீர்ச்சத்து இருக்கிறது.. அதனால்தான் நுங்கை சாப்பிட்டவுடன், வயிற்றை நீண்ட நேரம் நிரப்புகிறது.. எடை இழப்பு முயற்சியில் இருப்பவர்கள் இதனை அதிகம் சேர்த்து கொள்வதற்கு இதுதான் அடிப்படை காரணம் என்கிறார்கள்.. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்துவதில் நுங்கு வல்லமை கொண்டது... அதிலும், பனை நுங்கிற்கு கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் உண்டு. பனை நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி பசியை தூண்டுவதோடு, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு இரண்டிற்குமே மருந்தாக பயன்படுகிறது. வயிற்று கோளாறுகளை சரி செய்வதில் நுங்கு நல்ல பலனை தரும். மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு ஆகிய இரண்டு பிரச்சனைகளில் சிக்கியவர்கள் நுங்கு தாராளமாக சாப்பிடலாம். நுங்கை ஐஸ் ஆப்பிள் என செல்லமாகவும் அழைக்கிறார்கள். நுங்கு வெயிலின் தாக்கத்தை குறைக்க மனிதனுக்கு கிடைத்த அருமருந்தாகும். இது வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தந்து உடலை சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது. பனை நுங்கிற்கு கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் உண்டு. உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்களுக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. பனை நுங்கை சாப்பிட்டால் அவர்கள் தாகம் அடங்கும். கர்ப்பிணிகள் நுங்கு சாப்பிட்டால், செரிமானம் அதிகரிப்பதுடன், மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு நல்ல மருந்தாகும். நுங்கில் காணப்படும் அந்த்யூசைன் எனும் இரசாயனம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கட்டிகள் வருவதை தடுக்கும் சக்தி கொண்டது. பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடைக்காலத்தில் ஏற்படும் வேர்க்குரு நீங்கும். நுங்கு, குடல் புண்ணை ஆற்றும் தன்மை உடையது. கோடையில் வெயில் கொப்பளம் வராமல் தடுக்க, நுங்கு சாப்பிடுவது அவசியம். பெரியோர்கள், இளம் நுங்கினை மேல்தோல் நீக்காமல் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இந்த நுங்கின் நீரை தடவினால் வேர்க்குரு மறையும். நுங்கு அதிகம் சாப்பிட்டால், உடலின் நீர்ச்சத்து அதிகரித்து, வெயிலினால் ஏற்படும் மயக்கம் குறையும். வயிற்றுப் புண், வயிற்றுப் பிரச்னை, மலச்சிக்கல், உடல் சோர்வு , தோல் நோய்கள், கல்லீரல் பிரச்னை, அஜீரணக் கோளாறு, ஆற்றல் குறைவு போன்ற பிரச்னைகளையும் இந்த நுங்கு சுளை சரி செய்யலாம். கர்ப்பிணிகளும் இந்த நுங்கை உண்டால் மலச்சிக்கலை குறைக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். அசிடிட்டி பிரச்னையும் இருக்காது. நுங்கு சுளைகளை இளநீரில் ஊற வைத்து உண்டால் அத்தனை ருசியாகவும், குளிர்சியாகவும் இருக்கும். கூடுதல் சுவைக்கு சர்க்கரை தேவைப்பட்டால் ஒரு ஸ்பூன் சேர்த்துக்கொள்ளலாம்.

வாரிசு அல்லாதோருக்கும் உயிலில் சொத்துக்களை எழுதி வைக்க முடியுமா?

வாரிசு அல்லாதோருக்கும் உயிலில் சொத்துக்களை எழுதி வைக்க முடியுமா? அப்படியா?
பத்திரப்பதிவு, நிலம், வீடு, சொத்து விவகாரங்களில் அடிக்கடி பயன்படுத்தும் சொல் உயில்.. இதற்கான அர்த்தம் தெரியுமா? உயில் எழுத வேண்டுமானால் அதற்கான வழிமுறைகள் என்னென்ன தெரியுமா?


ஒருவர் தன்னுடைய சொத்துக்களை தன் வாழ்நாளுக்கு பிறகு, தன்னுடைய உறவினர்களுக்கு சேரும்படி எழுதி வைக்கும் பத்திரமே "உயில் பத்திரம்" ஆகும்..


Are these the Major Points of preparing a Will document and Importance of Will Settlement
ஆனால் சிலர், உயிலும், செட்டில்மென்ட் பத்திரமும் ஒன்றுதான் என நினைக்கிறார்கள். ஒருவர் தனக்கு சொந்தமான சொத்துகளை, தனக்கு பிறகு இன்னொருவருக்கு எழுதி வைப்பது உயில்.. இது முழுக்க முழுக்க சுயநினைவுடன் மட்டுமே எழுத முடியும்.. தன்னுடைய சொத்துக்களை அவரது விருப்பத்தின் அடிப்படையில், வாரிசுகளுக்கு அவரது விருப்பப்படி, பிரித்து எழுதி வைக்கப்படுவதுதான் செட்டில்மென்டு பத்திரம் ஆகும்.


விதிமுறை என்ன: அதேபோல, உயில்களை வாரிசுகளுக்கு மட்டுமே எழுதி வைக்க வேண்டும் என்பதில்லை.. தனக்கு விருப்பமானவர்கள் அல்லது டிரஸ்ட்களுக்கும் எழுதி வைக்கலாம்..

ஒருவேளை வாரிசு இருந்தும், அவர்களை தவிர்த்து பிறருக்கும் எழுதி வைக்கலாம். அப்படி எழுதி வைத்தால் வாரிசுகளால் அதை கேள்வி கேட்கவோ, எதிர்க்கவோ முடியாது. அதுக்காக, வாரிசுகளுக்கு எழுதி வைத்தால், அந்த சொத்து மனைவிக்கு கிடைக்கும் என்றும் அர்த்தம் கிடையாது.

நாமினி: அவசியமிருந்தால், வாரிசுக்கு எழுதி வைக்கும்போது, மனைவியையும் ஒரு பங்குதாரராக சேர்த்து உயில் எழுதினால் சிறந்தது.. அல்லது வாரிசுதாரரையே நாமினியாக நியமித்துவிட்டால், வருங்காலத்தில் சிக்கல்கள் எதுவும் இருக்காது.


உயில் எப்போது செல்லுபடியாகிறது? எதற்காக சுயநினைவுடன் இருக்கும்போதே உயில் எழுதப்படுகிறது? உயில் எழுதியே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லாவிட்டாலும், அந்த சொத்துக்களால், பிற்காலத்தில், குடும்பத்தில் ஒருவருக்கும் எந்தவிதமான பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே, முன்கூட்டியே எழுதி வைக்க நேரிடுகிறது. எனினும், அவரது மரணத்துக்கு பிறகே இது உயிலாக கருதப்படும்.

சுயநினைவு: குடும்பங்கள் பிரியவும், சிதையவும், இந்த சொத்துக்கள்தான் பல இடங்களில் முக்கிய காரணமாக இருந்து வருகின்றன. ஒருவேளை சொத்தை எழுதி வைக்காமல், சம்பந்தப்பட்டவர் இறக்க நேரிடுமானால்,சொத்தை பிரித்துக்கொள்வதிலும் பல தகராறுகள், வன்முறைகள் வெடித்துவிடுகின்றன. இது தொடர்பாக நீதிமன்றத்தையே நாடினாலும்கூட, உடனடியாக தீர்வை எதிர்பார்க்க முடியாது. எனவேதான், ஒருவர் உயிருடன் இருக்கும்போதே, சுயநினைவுடன் சொத்தை பிரித்து எழுதி வைத்து விடுவார்கள்.


திமுக, தேர்தல் பத்திரம், டெஸ்லா கார்.. பிரதமர் மோடி பேட்டியில் பகிர்ந்த 3 விஷயங்கள் திமுக, தேர்தல் பத்திரம், டெஸ்லா கார்.. பிரதமர் மோடி பேட்டியில் பகிர்ந்த 3 விஷயங்கள்
ஒருவர் தான் சொந்தமாக சம்பாதித்ததை, தனக்குரிய சொத்துக்களை மட்டுமே உயிலாக எழுதி வைக்க முடியும்.. பூர்வீக சொத்தாக இருந்தாலும் அதை யாருக்கும் உயிலாக எழுத முடியாது, பிரித்து எழுதி வைக்கவும் முடியாது..

உயில் எழுதும் முறை: சொத்தை, யாருக்கு, எவ்வளவு தருவது என தீவிரமாக யோசித்து முடிவெடுக்க வேண்டும். இதில் 2 சாட்சி கையெழுத்துக்கள் முக்கியம். ஆனால் சாட்சி கையெழுத்து போடுபவர்கள், உயிலுக்கு சம்பந்தம் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். உயிலில் டாக்டர் மற்றும் வக்கீல்களின் சாட்சி கையெழுத்து அவசியம்.

நீங்கள் எழுதிய உயிலை ரத்து செய்யலாம், திருத்தம் செய்யலாம்.. இதற்கு முத்திரைத்தாள் தேவைப்படாது.. சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்து, பதிவு செய்துகொள்ளலாம்.. அரசு நிர்ணயம் செய்துள்ள பதிவு தொகையை மட்டும் செலுத்தி, பதிவு செய்துகொள்ளலாம்.


Saturday 13 April 2024

பம்பளிமாஸ்

 உடலுக்கு சக்தி தரும் பம்பளிமாஸ் பழம்  கோடை காலத்தில் பம்பளிமாஸ் பழம் சாப்பிடுவது உடல் சூட்டினைத் தணிக்கும் என்று உணவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதில் உள்ள வைட்டமின் சத்தும், கால்சியம் சத்து உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை அளிப்பதோடு, கோடைகால சோர்வினை போக்குகிறது. பம்பளிமாஸ் பழம் சாத்துக்குடி, ஆரஞ்சு வகையைச் சேர்ந்தது. இந்தப் பழம் பச்சை நிறத்தில் பெரிய பந்து போல இருக்கும். முற்றின காயின் மேல் இளம் மஞ்சள் நிறத்தில் மாறும் அதுதான் பழம். இதன் தோல் அழுத்தமாக காணப்படும். உள்ளே சாத்துக்குடிபோல சுளைகள் இருக்கும். சிலவகை வெள்ளைச் சுளைகளைக் கொண்டிருக்கும். சிலவற்றின் சுளைகள் ரோஸ் நிறத்தில் காணப்படும். இந்த இரண்டு வகைப் பழங்களின் குணமும் ஒன்றுதான். இதில் புளிப்பு, இனிப்பு என இரண்டுவகை உண்டு. இதில் புளிப்புவகையை விட இனிப்பு வகையே சிறந்தது. இது அனைத்து காலங்களிலும் கிடைக்காது அதற்கென உள்ள சீசனில் மட்டுமே கிடைக்கும். இது குளிர்ச்சி நிறைந்தது எனவே சளி, சீதாள தேகம் உள்ளவர்கள் இதனை சாப்பிடக்கூடாது. உடல் சூடு தணியும் இந்தியாவின் இந்த அதிசய கிணறு நீங்க எப்ப சாகப்போறீங்கனு சொல்லுமாம். இந்த கிணறுகிட்ட நீங்க போவீங்களா? கோடைக்காலத்தின் அதிக வெயிலில் அலைபவர்கள், அதிக சூடுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்களின் உடல் வெகு விரைவில் வெப்பமடையும். இவர்கள் பம்பளிமாஸ் பழத்தை சாறு குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்பட்டவர்கள் பம்பளிமாஸ் பழத்தை சாறு எடுத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு ஏற்படுவது குறையும். வைட்டமின் எ, கால்சியம் இந்த பழத்தில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது. கண் பார்வைக் கோளாறுகள் நீங்க வைட்டமின் ‘ஏ’ சத்து அவசியம். இந்த வைட்டமின் ‘ஏ‘ சத்துக் குறைவதால் மாலைக் கண் நோய் ஏற்பட வாய்ப்புண்டு. இக்குறைகளை களைய பம்பளிமாஸ் பழம் சிறந்த மருந்தாகும். காரட் எப்படி கண்களை காக்கிறதோ அதேபோல் பம்பளிமாஸ் பழமும் காக்கும். பம்பளிமாஸ் பழத்தில் சுண்ணாம்புச் சத்தும் உள்ளதால் பித்த சூட்டை அகற்றும். சக்தி தரும் பம்பளிமாஸ் நோய் பாதிப்பினால் உடல் இளைத்துப்போனவர்கள் மதிய நேரத்தில் பம்மளிமாஸ் பழத்தை சாப்பிடலாம். இதனால் உடல் பலமடையும், சோர்வு நீங்கும். மஞ்சள் காமாலை நோயின் தாக்கம் குறைய பம்பளிமாஸ் பழம் நல்லது. இப்பழம் கிடைக்கும் காலத்தில் அதிகம் வாங்கி சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை நோய் ஏற்படாமல் தடுக்கலாம். இரத்தத சோகையைப் போக்கும் குணம் பம்பளிமாஸ் பழத்திற்கு உண்டு. இந்தப் பழத்தின் சுளைகளை மதிய உணவுக்குப்பின் தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தச் சோகை குறைபாடு நீங்கும். -