jaga flash news

Thursday, 8 May 2025

நட்சத்திரம் vs லக்கி நம்பர்

அசுவனி, 6
பரணி,10 
கார்த்திகை,20 ரோகிணி,32 மிருகசீரிடம்,22 திருவாதிரை,12 புனர்பூசம், 8
பூசம், 32
ஆயிலியம், 45
மகம்,42
 பூரம், 64
உத்திரம்,56 
அஸ்தம்,54 
சித்திரை, 79
சுவாதி,39 
விசாகம்,97 
அனுஷம்,68 
கேட்டை, 88
மூலம்,87 
பூராடம்,73 
உத்திராடம்,92 திருவோணம்,90 அவிட்டம்,85 
சதையம்,93
பூரட்டாதி,89 உத்திரட்டாதி,95 
ரேவதி16


Ashwini:6
Bharani: 10
Krittika: 20
Rohini: 32
Mrigashira: 22
Ardra:12
Punarvasu: 8
Pushya: 32
Ashlesha: 45
Magha: 42
Purva Phalguni: 64
Uttara Phalguni: 56
Hasta:54
Chitra: 79
Swati: 39
Vishakha: 97
Anuradha: 68
Jyeshtha: 88
Mula: 87
Purva Ashadha: 73
Uttara Ashadha: 92
Shravana: 90
Dhanishta: 85
Shatabhishak: 93
Purva Bhadrapada: 89
Uttara Bhadrapada: 95
Revati: 16

Tuesday, 29 April 2025

சிலந்தி வலைகள்


வீட்டில் சிலந்தி வலை இருக்கா? விரட்டி விட்டாலும் மீண்டும் வருதா? பணம் கையில் நிக்காது.. இதை பாருங்க
 வீட்டில் சிலந்தி வலை இருப்பது நல்லதா? கெட்டதா? சிலந்திகள் வீட்டிற்குள் ஆகாத பூச்சியினமானும்.. வாஸ்துபடி வீடுகளில் சிலந்தி வலை இருந்தால், பணம் நிற்காது.. சிலந்தி வலைகள் எதிர்மறை ஆற்றலை வீட்டிற்குள் ஈர்க்கக்கூடியவை.. எவ்வளவு பணம் சம்பாதித்தாலும், அவை கரைந்து கொண்டேயிருக்கும். சிலந்திகள் வீட்டிற்குள் இருப்பதால் வேறு என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்? சிலந்திகளை அகற்ற என்ன செய்யலாம்?


சிலந்தி வலைகள் எப்போதுமே நல்ல விஷயமாக கருதப்படுவதில்லை.. வீட்டில் எதிர்மறை ஆற்றலை, நெகட்டிவ் எனர்ஜியை அதிகப்படுத்திவிடும்.. ஒற்றுமையாக இருக்கும்போதுகூட, பிரிவினைக்குள் ஆளாக நேரிடும்..




நிதிநிலை பற்றாக்குறை
தேவையில்லாமல், பணம் கரைந்து கொண்டேயிருக்கும்.. காரணமே இல்லாமல் கோபப்படுவது, சோம்பல், குழப்பம், பதட்டம் அனைத்துமே ஏற்படும். அதாவது, வீட்டிற்குள் சிலந்தி வலைஇருந்தால், நிதிநிலை பற்றாக்குறை, செலவுகள், வீண் விரயம் ஏற்படும்.. படுக்கை அறையில் சிலந்தி வலைகள் இருந்தால், அது தம்பதியிடையே பிணக்கத்தை தரும்.


பூஜை அறையில் சிலந்தி வலை இருந்தால், குடும்பத்தில் தீரா கஷ்டங்கள் ஏற்படும். சமையலறையில் சிலந்தி வலை பின்னப்பட்டிருந்தால், குடும்பத்தில் யாருக்காவது உடல்நலம் பாதிக்கப்படலாம். எனவே, சுத்தம் செய்து, சிலந்தி வலைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

சிலந்தி வலைகள்


அப்படி சுத்தம் செய்தும் மீண்டும் மீண்டும் சிலந்திகள் வீட்டிற்குள் வந்தால், புதினா எண்ணெய் பயன்படுத்தலாம்.. காரணம், சிலந்திகளுக்கு புதினா வாசனை பிடிக்காது. சில துளிகள் புதினா எண்ணெயை நீரில் கலந்து, ஜன்னல்கள், கதவுகள், மற்றும் சிலந்தி வலை பின்னும் இடங்களில் தெளித்துவிடலாம்.


Thursday, 24 April 2025

முடவாட்டுக்கால் சூப்...


முடவாட்டுக்கால் சூப்பை குடிங்க! கம்பை தூக்கி போட்டுட்டு நடங்க! சூப் செய்வது எப்படி?
முடவாட்டுக்கால் சூப்பை எப்படி தயார் செய்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் அந்த முடவாட்டுக்காலில் என்னென்ன நன்மைகள் இருக்கின்றன என்பதையும் பார்க்கலாம். முட்டி வலியால் அவதிப்படுவோருக்கு இது ஒரு வரப்பிரசாதம்.


mudavattukaal
இந்த சூப்பை குடித்தால் வயதானாலும் முட்டி வலி வராது என்கிறார்கள். இந்த முடவாட்டுக்கால் 4000 வியாதிகளை குணப்படுத்தும் என சொல்கிறார்கள். இதை சைவ ஆட்டுக்கால் என்றும் சொல்கிறார்கள்.


இது குடித்தால் ஆட்டுக்கால் போன்ற சுவையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த கிழங்கு பாறைகளுக்கு இடுக்கே வளரக் கூடியது. இது மலைப் பகுதிகளிலும் குளிர்பிரதேசங்களிலும் மட்டுமே வளரக் கூடியது.


தமிழகத்தில் எங்கு
இந்த கிழங்கு தமிழகத்தில் கொல்லிமலையிலும் சேரவராயன் மலையிலும் கிடைக்கிறது. இதற்கு வேர்கள் கிடையாது. இந்த கிழங்குகள் செம்பு, தங்கம், இரும்பு, கால்சியம், பாறைகளில் இருக்கும் சிலிக்காவை உறிஞ்சும் தன்மை கொண்டது. வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை விரட்ட சித்தர்கள் இதை 48 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தனர்.



300 ரூபாய்
இந்த கிழங்கு ஒரு கிலோ 300 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதை 6 மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம் என்கிறார்கள். ஆனால் பிரிட்ஜில் வைக்கக் கூடாது. ஃபேன் காற்றில் வைக்கக் கூடாதாம். குழந்தைகளின் வாத நோய்க்கு இது அருமருந்து. கழுத்து வலி, தோள்பட்டை வலி, முதுகு வலி போன்றவற்றை குணப்படுத்தும். முடக்குவாதம் வந்து முடங்கியவர்கள் இந்த கிழங்கின் சூப் வைத்துக் குடிக்கலாம்.


மூட்டு வலி
மூட்டு வலி, முழங்கால் வலி, குதிகால் வலி, கெண்டைக்கால் வலி, தசை பிடிப்பு உள்ளிட்டவைகளுக்கு இந்த கிழக்கு அற்புதமான மருந்து. கர்ப்பப்பை சுருங்குதல், சிறுநீரகம் சுருங்குதல், உள்ளுறுப்பு சுருங்குதல், புற்றுநோய் உள்ளிட்டவைகளுக்கு நல்ல மருந்து என்கிறார்கள். முடவாட்டுக்கால் கிழங்கை போட்டு குழந்தையை குளிக்க வைத்தால் வாத நோய் நீங்கும்.

சுடுநீரில் போட்டு குளிக்கணும்
இந்த கிழங்கில் உள்ள முடி போன்ற தோலை எடுத்து சுடுநீரில் போட்டு குளித்து வந்தால் தோல் அலர்ஜி, தேம்பல், அரிப்பு போன்றவை நீங்கும். ஏற்காட்டிற்கு சுற்றுலா வரும் மக்கள் இந்த முடவாட்டுக்கால் சூப்பை வாங்கி குடிக்கிறார்கள். அருவிக்கு சென்றுவிட்டு வருவோர் இந்த சூப்பை குடித்தால் புத்துணர்ச்சி பெறுகிறார்கள் என்கிறார்கள்.


கொடைக்கானல்
அது போல் கொடைக்கானலில் பூம்பாறையிலிருந்தும் இந்த முடவாட்டுக்கால் பல்வேறு இடங்களில் விற்கப்படுகிறது. இந்த முடவாட்டுக்காலை எப்படி சூப் வைக்கலாம் என்பதை பார்க்கலாம்.

தோல் சீவி
முடவாட்டுக்காலின் தோலை சீவி நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த முடவாட்டுக்காலை வெட்டினால் அதிலிருந்து திரவம் வரும். அப்படியென்றால் அது ஃபிரஷ்ஷாக இருக்கிறது என்று அர்த்தம். தோல் நீக்கிய முடவாட்டுக்காலை துண்டு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

20 நிமிடங்கள்
அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து சின்ன வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, மிளகு , சீரகம், கருவேப்பிலை சேர்த்து விழுதாக அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கனமான பாத்திரத்தில் இந்த விழுதை சேர்த்து தேவையான அளவுக்கு தண்ணீர் விட்டு, உப்பு போட்டு 20 நிமிடங்களாவது கொதிக்க வைக்க வேண்டும்.

கரம் மசாலா
பிறகு அந்த சூப்பில் சிறிது கரம் மசாலைா போட்டு கொதி வந்ததும் அடுப்பை அணைந்துவிட்டு வடிக்கட்டிக் கொள்ளவும். வடிகட்டியதில் கொத்தமல்லி தழை தூவி, தேவைப்பட்டால் மிளகுத் தூளையும் சேர்த்து சூடாக குடிக்கலாம். இவ்வாறு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடித்து வரலாம் என்கிறார்கள். இந்த கிழங்கு சென்னையில் கூட விற்பனைக்கு வந்துள்ளது.


மேலும் இதை ஏற்காடு, கொடைக்கானல் வியாபாரிகளிடம் இருந்து ஆன்லைனில் கூட வாங்கிக் கொள்ளலாம். இந்த சூப் குடித்ததும் ஒரு மணி நேரத்திற்கு எதையும் சாப்பிடக் கூடாது. மேலும் இதை கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாது என்கிறார்கள்.


Sunday, 20 April 2025

பாம்புகள் பால் குடிக்குமா?


பாம்புகள் பால் குடிக்குமா? புற்றுக்கு பால் வைப்பது ஏன்? இந்த சம்பவத்திற்கு பின்னால் இருக்கும் நம்பிக்கையையும் உண்மையையும் அறிவியல் காரணங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.


இதுகுறித்து சமூகவலைதளத்தில் யுவி என்பவர் செய்திருந்த பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ் சினிமாவில் பாம்பு புற்றிலிருந்து வந்து பால் குடிக்கின்றன காட்சியை வைத்து இந்த கேள்வியை கேட்டுள்ளீர்கள் என்று நான் கருதுகிறேன்.


பாம்புகளின் சட்டையை பார்த்துள்ளீர்களா? பாம்புகள் தோல் உரிக்காவிட்டால் என்னவாகும்?
"பாம்புகளின் சட்டையை பார்த்துள்ளீர்களா? பாம்புகள் தோல் உரிக்காவிட்டால் என்னவாகும்?"
பாம்பு பால் குடிக்குமா என்ற கேள்விக்கு அறிவியல் காரணத்தை அறியும் முன் இந்து சமயத்தோடு இந்த கேள்வி தொடர்புடையதால் முதலில் இந்து சமயத்திலிருந்து பதிலை தொடங்குகிறேன்.


இந்து சமய புராணத்தின்படி நம்பப்படும் காரணங்கள்
சிவன் மற்றும் பாம்பு மற்றும் பால் தொடர்பான ஒரு இந்து புராணம் இருப்பதாக நான் நம்புகிறேன். இந்து மதத்தில் பால் மிகவும் புனிதமானதாகவும் தூய்மையானதாகவும் கருதப்படுகிறது.

நம்முடைய ஆத்மா எல்லா கர்மங்களிலிருந்தும் விடுபட்டுள்ளது. சிவனுக்கு நம் ஆத்மாவை வெவ்வேறு காலத்திலிருந்து விடுவித்து, நித்தியத்தை (மோக்ஷத்தை) வழங்குவதற்கான அதன் பிரதிநிதித்துவம்.



இரண்டாவது காரணம், தேவர்கள் அமிர்தத்தை பால் பெருங்கடலில் இருந்து துடைக்க விரும்பியபோது, வாசுகி கயிற்றைக் கசக்கினார்.

மற்றொரு காரணம்
பால் இறைவன் சிவனிடமிருந்து வருகிறது.
வேத காலத்தில், மக்கள் சிவலிங்கத்தை வணங்கத் தொடங்கியபோது. பால் வழங்குவதன் மூலம், சிவன் பாம்புகளைச் சுற்றிலும் வாழ்கிறார் என்றும் பால் அந்த பாம்புகளால் நுகரப்படும் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள்.

பாம்புகளுக்கு பால் வழங்கினால் இறைவன் சிவன் மகிழ்ச்சி அடைவான் என்பது ஒரு புதிய கோட்பாடாக மாறியதுடன், புராணம் நாகபஞ்சாமியில் பாம்புகளுக்கு பால் கொடுக்கும் ஒரு மரபுவழி சடங்காக மாறியது.


நாக பஞ்சமி
இந்த கேள்விக்கு பின்னால் உள்ள முக்கிய காரணம் இதுதான். நாக பஞ்சமிக்கு முன்பு பாம்பு மந்திரவாதிகள் அல்லது பாம்பாட்டிகள் பொதுவாக தங்கள் பாம்புகளுக்கு தண்ணீர் மற்றும் உணவைக் கொடுப்பதில்லை.

எனவே, அந்த குறிப்பிட்ட நாளில், பாம்புகளுக்கு பாலை வைக்கின்றனர். பல நாள் நீர் அருந்தாமல் பாம்புக்கு கடுமையாக நீரிழப்பு ஏற்பட்டு இருக்கும். கடுமையாக நீரிழப்பு ஏற்பட்டால் அது நல்லதல்ல.

பாம்பு பாலைக் கண்டதும் நீரிழப்பை தவிர்க்க ஒருவேளை பாம்பு பாலை குடிக்கலாம். அடிப்படையில், அவர்களுக்கு பால் குடிப்பதைத் தவிர வேறு வழியில்லை, ஏனென்றால் அது உயிர் வாழும் வேண்டும். பின்னர், பாம்பு அதை ஜீரணித்துவிட்டால், அது மீண்டும் பாலை குடிக்காது.

அறிவியல் ரீதியான காரணங்கள்
பால் என்பது பாலூட்டிகளால் தங்கள் சந்ததியினருக்கு உணவளிக்க பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இது பாலூட்டியின் வரையறுக்கும் பண்பு.
பாம்புகள் ஊர்வன. அவர்களுக்கு பால் சுரப்பிகள் இல்லை. அவைகளால் பாலை உற்பத்தி செய்ய முடியாது.

எனவே பால் குடிப்பதற்கு பரிணாம ரீதியாக சுட்டிக்காட்டப்படவில்லை. பாம்புகள் அனைத்து மாமிச உண்ணிகள். அவை மற்ற உயிரினங்களை சார்ந்து மட்டுமே வாழ முடியும்.

அவற்றின் உணவு வகையான எலிகள், பூச்சிகள், முட்டைகள், தவளைகள், தேரைகள் மற்றும் நத்தைகள் வரை இருக்கும்.

பாம்பு ஒருபோதும் உணவு, தண்ணீருக்கு பதிலாக பால் குடிப்பதில்லை. பாம்புகள் பால் குடிக்கும் என்பதற்கு அறிவியல் சான்றுகள் இல்லை. இவ்வாறு அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.



Wednesday, 9 April 2025

சாணக்ய நீதி: கணவன் - மனைவி உறவில் வயது வித்தியாசம் எவ்வளவு இருக்க வேண்டும்?



சாணக்ய நீதி: கணவன் - மனைவி உறவில் வயது வித்தியாசம் எவ்வளவு இருக்க வேண்டும்?



சாணக்கியர் இந்தியாவில் வாழ்ந்த ஒரு சிறந்த அரசியல்வாதி மற்றும் ராஜதந்திரி ஆவார். இவர், அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் ஆழ்ந்த அறிவைக் கொண்டவர். பலரும் வாழ்க்கையில் சாணக்கியரின் நெறிமுறைகளை பின்பற்றுகின்றனர். அப்படி கணவன் மனைவிக்குள் எவ்வளவு வயது வித்தியாசம் இருக்க வேண்டும், எது வாழ்க்கைக்கு சிறந்தது என்பது பற்றி அவர் கூறிய கருத்துக்களை பார்க்கலாம்


குடும்பத்தில் முக்கிய உறவு என்றால் அது திருமண பந்தம் தான். பலரும் தங்கள் வாழ்க்கையில் கணவன் - மனைவி உறவு நீடிக்க என்ன செய்ய வேண்டும் என கருத்து கேட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் டைவர்ஸ் கலாச்சாரமும் அதிகரித்து வருகிறது. இப்படி ஒரு சூழலில் இந்த பிரச்சனைகளுக்கு வயது வித்தியாசம் காரணமாக இருக்கலாமா என்ற பேச்சுக்களும் எழுந்து வருகிறது. குடும்பம் என்றாலே கணவன் - மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் இருக்க தான் செய்யும். ஆனால் சிலர் வீடுகளில் அது அதிகமாக இருப்பதால் என்ன செய்வதென தெரியாமல் இருப்பார்கள்.


சாணக்கியர், மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு கணவன் மனைவிக்கு இடையே வயது வித்தியாசம் அதிகமாக இருக்கக்கூடாது என்றும், இருவருக்கும் இடையே பெரிய வயது வித்தியாசம் இருந்தால், திருமண வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்படும் எனவ்ம் தெரிவித்துள்ளார். கணவன் மனைவிக்கு இடையிலான உறவு மிகவும் புனிதமானது என்றும், இந்த பந்தத்தைப் பேணுவதற்கு, கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் தேவைகளைப் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். மேலும், கணவன் - மனைவி இடையே அன்பும் நல்லிணக்கமும் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்றும் சாணக்கியர் கூறுகிறார்.






அறிவியல் ரீதியாக, இந்திய சமுதாயத்தில், கணவன் - மனைவியின் வயதில் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் இடைவெளி ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஆண் குழந்தைகளை விட பெண்ணின் வயது குறைவாக இருக்க வேண்டும் என்று சமூகமும் கூறுகிறது. அதுதான் இந்திய திருமண கட்டமைப்பில் உருவாக்கி வைத்துள்ளது. ஆனால், சில நேரங்களில் இந்த இடைவெளி 10 முதல் 15 ஆண்டுகள் வரை இருக்கும்.

Thursday, 3 April 2025

70 வயதை கடந்தாச்சா? இந்த 3 விட்டமின் உணவுகள் முக்கியம்


70 வயதை கடந்தாச்சா? இந்த 3 விட்டமின் டி உணவுகள் முக்கியம்:
70 வயதை கடந்தபின்பு அனைவரும் கட்டாயம் சாப்பிட வேண்டிய வைட்டமின் டி சத்துக்கள் நிறைந்த உணவுகள்
 

எலும்பு உறுதி 

70 வயதுக்கு மேல் எலும்புகள் பலவீனமாகும். அப்போது எலும்பு முறிவு, தேய்மானம், வலி போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று ஹீல் யுவர் ஹார்ட் யூடியூப் பக்கத்தில் டாக்டர் ராமசாமி கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.

70 வயதுக்கு மேல் உடலில் வைட்டமின் டி குறைபாடு இருக்கும். அப்படி இருக்கும்போது நாம் நீண்ட நேரம் வெயிலில் இருக்க வேண்டும். 

அதேபோல பால், முட்டை போன்றவற்றை தினசரி எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் ஆரஞ்சு பழம் சாப்பிட வேண்டும். விட்டமின் டி அதிகம் உள்ள உணவுகளை எடுத்து கொள்வது அவசியம்.

தினமும் ஒரு துண்டு சீஸ் சாப்பிடுவது உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கும். பாலாடைக்கட்டியில் கால்சியம் மட்டுமின்றி, வைட்டமின் டி நிறைந்துள்ளது.

கீரையில் புரதம், கால்சியம், வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் உங்கள் எலும்புகளை வலுவாக்கும். உங்கள் தினசரி கால்சியம் தேவையில் நான்கில் ஒரு பங்கை ஈடுகட்ட ஒரு நாளைக்கு ஒரு கப் கீரை சாப்பிட்டால் போதும்.



Sunday, 30 March 2025

வெற்றிலை...


சுகரை கட்டுப்படுத்தும் வெற்றிலை...
ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைப்பதற்கு வெற்றிலையின் பயன்பாடு முக்கியத்துவம் வாய்ந்தது. மனஅழுத்தம் போக்குவது முதல் நீரிழிவு நோய் தடுப்பது வரை வெற்றிலையின் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

வெற்றிலையை நம்மில் பலரும் பூஜைக்கு மட்டுமே பயன்படுத்துவோம். ஆனால், வெற்றிலையில் எவ்வளவு நன்மைகள் உள்ளன என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைப்பதற்கு வெற்றிலையின் பயன்பாடு முக்கியத்துவம் வாய்ந்தது. மனஅழுத்தம் போக்குவது முதல் நீரிழிவு நோய் தடுப்பது வரை வெற்றிலையின் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

100 கிராம் வெற்றிலையில் 1.3 மைக்ரோகிராம் அயோடின் உள்ளது. 4.6 மைக்ரோகிராம் பொட்டாசியம், 2.9 மைக்ரோகிராம் வைட்டமின் ஏ, 13 மைக்ரோகிராம் வைட்டமின் பி1, 0.89 மைக்ரோகிராம் நிக்கோடினிக் அமிலம் ஆகியவை உள்ளது.

வெற்றிலையில் வைட்டமின்கள் சி, பீட்டா கரோட்டின், தாது பொருட்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டிமைக்ரோபியல் பண்புகள் உட்பட பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. மேலும், வெற்றிலையில் நார்ச்சத்தும் புரதமும் அதிகளவில் உள்ளன. வெற்றிலை என்றாலே நோயெதிர்ப்பு சக்திதான் என்கிறார் மருத்துவர் சாலை மருதமலை முருகன்.

வெற்றிலை, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. இது உடலில் உள்ள அமில அளவைக் குறைக்கிறது. வயிறு தொடர்பான பிரச்னைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. இது மலச்சிக்கலைப்போக்க உதவுகிறது. வெற்றிலையை நசுக்கி, ஓரிரவு தண்ணீரில் ஊறவைக்கவேண்டும். காலையில் எழுந்தவுடன், தண்ணீரை வடித்து வெறும் வயிற்றில் பருகவேண்டும்.

வெற்றிலையின் சிறப்புத்தன்மை அதன் காரம்தான். அதனை உட்கொள்ளுவதால் வயிற்றில் கார அமிலத்தன்மை சீர்படுத்துவதில் வெற்றிலை முக்கிய பங்கு வகிக்கிறது. செரிமான குறைபாடுகள், ஜீரண மண்டலம் தொடர்பான பிரச்னைகளில் வெற்றிலையில் உள்ள கார அமிலத்தை சரி செய்யக்கூடிய வேதிப்பொருட்கள் ஆண்டி அல்சருக்கு சிறந்த மருந்தாக செயல்படுகிறது. கல்லீரல் இருக்கக்கூடிய நோய் எதிர்ப்பு தன்மையை வெற்றிலை மேம்படுத்துகிறடு என்கிறார் மருத்துவர் சாலை மருதமலை முருகன்.

வெற்றிலையில் இருக்கும் மருத்துவப் பயன்பாடு மட்டும் 250-க்கும் மேல் உள்ளது. மருத்துவ குறைபாடுகளுக்கு மருந்தாக பயன்படுகிறது வெற்றிலை. பாரம்பரிய முறைப்படி குழந்தைகளுக்கு சலி, இருமல் மூச்சுநிற்றல் போன்ற பிரச்னை இருந்தால் வெற்றிலையை நல்லெண்ணெய்யில் தடவி விளக்கில் வாட்டி நெஞ்சுப்பகுதியில் நீவி விடுவார்கள். அப்படி செய்யும்போது, இருமல், சளி போன்ற நோய்கள் ஓடிவிடும். குழந்தைகளுக்கு செரிமான பிரச்னை, வயிற்று வலிக்கு வெற்றிலைச் சாறு உடன் 5 மில்லி தேன் கலந்து கொடுக்கும்போது சரியாகிறது என்கிறார் மருத்துவர் சாலை மருதமலை முருகன்.


Friday, 21 March 2025

6 சேர்க்கையால்...

 6  சேர்க்கையால்...
6 கிரக சேர்க்கையால் உலகளவில் ஏற்படப்போகும் மாற்றங்கள்! - விளக்குகிறார் ஆன்மிக ஜோதிடர் பவானி ஆனந்த்
சனி, ராகு சேர்க்கை அதனுடைய ராசியில் ஏற்படும்போது சனீஸ்வரர் தனது வீட்டைவிட்டு வெளியேறுவார். திரும்ப தனது வீட்டிற்கு வர 25 வருடங்கள் ஆகும். அதேபோல் ராகுவிற்கு முழு பலமும் கும்ப ராசியில் உண்டு. சனியும் ராகும் வீடு மாறும்போது இடையே சந்தித்துக்கொள்வார்கள். அதற்கு சங்கர்ஷனம் என்று பெயர்.
ஒவ்வொரு தனிப்பட்ட நபரின் வாழ்க்கையும் தனித்து இருப்பதுதான் மனிதர்களுக்குண்டான சிறப்பு. ஒவ்வொருவரின் வாழ்க்கைமுறை மற்றும் தனிப்பட்ட உறவுகள் குறித்த அம்சங்கள் ஜோதிடத்தில் காரகங்கள் என குறிப்பிடப்படுகிறது. இந்த காரகங்களை பொருத்து வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்கள் நடைபெறும். அப்படி பல காரகங்கள் ஒன்றாக இணைந்து வரக்கூடியதுதான் கிரகச் சேர்க்கை என்று சொல்லப்படுகிறது. அதாவது, சில கிரகங்கள் ஒரே கோணத்தில் வரும்போது அவற்றிற்கான பலன்களும் விளைவுகளும் மாறிக்கொண்டே போகும். அப்படி கடந்த 2019ஆம் ஆண்டு பல கிரக சேர்க்கை ஒரே ராசியில் நடைபெற்றது. அப்போது உலகளவில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. அதன்பிறகு இந்த ஆண்டு மீன ராசியில் 6 கிரக சேர்க்கை நடக்கவிருக்கிறது. தற்போது நடக்கவுள்ள இந்த கிரக சேர்க்கையால் உலகளவில் பல்வேறு தாக்கங்கள் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. இந்த ஆண்டு என்ன மாதிரியான தாக்கங்கள் ஏற்படும்? அதிலிருந்து விடுபட என்ன செய்யவேண்டும் 

எந்தெந்த கிரகங்கள் எந்த ராசியில் எப்படி சேரப்போகிறது?
இது உலகில் பல பெரும் மாற்றங்களின் துவக்கமாக இருக்கப்போகிறது. 2019ஆம் ஆண்டு இறுதியில் இதேபோல் பல கிரக சேர்க்கைகள் தனுசு ராசியில் ஏற்பட்டது. அதற்கு பின்பு உலகத்தில் ஏற்பட்ட நிகழ்வுகளை நாம் அனைவருமே நன்கு அறிவோம். ஒரு கிரக சேர்க்கை ஏற்பட்டால் ஏதேனும் ஒரு வகையில் உலகில் மாற்றங்கள் துவங்கும். எனவே அதற்கேற்ப நாம் முன்னமே தயாராகிவிட்டால் நம் வாழ்க்கையில் பெரும் பாதிப்புகள் வராமல் தடுக்கலாம். 29.03.2025 அன்று சூரிய கிரகணம் வரவிருக்கிறது. ஏற்கனவே மீன ராசியில் ராகு நிலைபெற்றிருக்கிறார். ராகு என்றாலே பேராசைத்தன்மையை குறிக்கக்கூடியது. ஸ்வர்பானு என்று சொல்லக்கூடிய அசுரன் பாதி உடலை இழந்து தலையுடன் இருக்கிறான். எந்த அளவில் நிறுத்தவேண்டும் என்பதை புரிந்துகொள்ள அதற்கு வயிறு இல்லாததால் தலையை பொருத்தவரை எல்லாவற்றையும் உட்கொள்ள வேண்டுமென ஆசைப்படும். உதாரணத்திற்கு, ஒருவர் ஜாதகத்தில் செவ்வாயும் ராகுவும் சேர்க்கையில் இருந்தால் நிலம் சார்ந்தவற்றில் அதிக ஈடுபாடு இருக்கும். நிலத்தில் முதலீடு செய்துவிடுவர். ஆனால் எவ்வாறு வெளியேறவேண்டுமென்ற வித்தை தெரியாது. அதேபோல் சனியும் ராகுவும் சேர்ந்தால் உலகத்திற்காக உழைத்துக்கொண்டே இருப்பார், ஆனால் தன்னைப்பற்றி சிந்திக்க நேரம் இருக்காது. அதுபோல் செவ்வாய் ராகு சேர்க்கை இருக்கக்கூடியவர்தான் எலான் மஸ்க். அவர் பொருளாதார தேடலில் சென்றுவிட்டார். ஆனால் பெருந்தலைவர் காமராஜர் தனக்கென்று எதையும் செய்யாமல் மக்களுக்காக செய்தார்.





மீனம் என்ற ராசி கடலை குறிக்கக்கூடியது. கால புருஷ தத்துவத்தில் 12ஆம் இடம் மீனம். இது காலை குறிக்கக்கூடியது. அதாவது பாதத்தை குறிக்கும். உடலின் முழு எடையையும் அது தாங்கக்கூடியது. கால புருஷ தத்துவத்தில் கடகம், விருச்சிகம் மற்றும் மீனம் ஆகிய 3 ராசிகளை நீர் ராசிகள் என்று சொல்கிறோம். அதில் கடகம் என்றால் ஒரு ஆற்றையோ, குளத்தையோ அல்லது தாய்மையையோ குறிக்கும். இதில் குரு உச்சமடைந்து விடுவார். அதுவே விருச்சிகம் தேங்கிய நீர்நிலையை குறிக்கும். அதுவே மீனம் என்று சொன்னால் பெரும்கடலை குறிக்கும். சமீபகாலமாக கடலிலிருந்து விசித்திரமான உயிரினங்கள் வெளியே வருவது குறித்து நாம் செய்திகளில் பார்க்கிறோம். எனவே இயற்கை ஏதோ ஒரு செய்தியை உணர்த்துகிறது. மீனம் என்பது குரு மட்டும் ஆட்சி செய்யக்கூடிய வீடு கிடையாது. கேதுவின் தன்மை அதில் உண்டு. ஆனால் தனுசு என்பது குருவின் ஆளுகைக்கு மட்டும் உட்பட்ட ஒரு வீடு. நீர் ராசிகளை பொருத்தவரை அவர்கள் மிகவும் சென்டிமென்ட்டாக இருப்பார்கள். மீன ராசியில் சுக்கிரன் உச்சம்பெற்று, புதன் நீச்சமடைகிறது. புதன் என்பது வங்கிகள், பொருளாதாரம், லாஜிஸ்டிக், பங்குச்சந்தை போன்றவற்றை குறிக்கும். சுக்கிரன் என்று சொன்னால் அது வசதி, மனைவி மற்றும் வெள்ளியை குறிக்கும். ராகுவும், சனியும் உடலில் வாத நோயையும் காற்றின் தத்துவத்தையும் குறிக்கக்கூடியவர்கள். வருகிற கிரகண காலத்தில் சனி, ராகு, சூரியன், புதன், சுக்கிரன் மற்றும் சந்திரன் ஆகியோர் ஒன்றாக வரப்போகிறார்கள். கூடவே உபகிரகம் என்று சொல்லக்கூடிய சனீஸ்வரரின் மகனான மாந்தியும் வரப்போகிறார். இப்படி 7 கிரக சேர்க்கைகள் நடக்கப்போகிறது. இதில் உபகிரகமானது மற்ற 6 கிரகங்களின் பலத்தில் 75 சதவீதத்தை எடுத்துவிடக்கூடியது. இதற்கு சமுத்திர மந்தனம் என்று பெயர். ஏற்கனவே 1991இல் மகரத்திலும் 2002இல் ரிஷபத்திலும் இதுபோன்றதொரு சேர்க்கை இருந்தது. அப்படியிருக்கையில் இப்போது மட்டும் ஏன் பயப்படவேண்டுமென எல்லாரும் கேட்பார்கள். சனி, ராகு சேர்க்கை அதனுடைய ராசியில் ஏற்படும்போது சனீஸ்வரர் தனது வீட்டைவிட்டு வெளியேறுவார். திரும்ப தனது வீட்டிற்கு வர 25 வருடங்கள் ஆகும். அதேபோல் ராகுவிற்கு முழு பலமும் கும்ப ராசியில் உண்டு. சனியும் ராகுவும் வீடு மாறும்போது இடையே சந்தித்துக்கொள்வார்கள். அதற்கு சங்கர்ஷனம் என்று பெயர். இது மார்ச் 15ஆம் தேதிமுதல் துவங்குகிறது. அப்போதே சூழல் மாற துவங்கிவிட்டது என்பதை எல்லாரும் புரிந்துகொள்ள வேண்டும்.



கிரக சேர்க்கையால் உயரும் தங்கம் விலை மற்றும் ஷேர் மார்க்கெட் முதலீட்டில் கவனம் தேவை

6 கிரக சேர்க்கை தங்கம் மற்றும் ஷேர் மார்க்கெட்டில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?
உலக ஜாகத்தை எடுத்துக்கொண்டால் குருவும், சூரியனும்தான் தங்கத்தின் விலையை தீர்மானிப்பதாக சொல்வார்கள். எப்போதெல்லாம் சூரியனும் குருவும், சனீஸ்வரராலோ அல்லது கேதுவாலோ பாதிக்கப்படுகிறார்களோ அப்போதெல்லாம் தங்கத்தின் விலையில் பெரும் ஏற்றம் ஏற்படும். தற்போது 6 கிரகங்களுடன் உபகிரகமும் சேர்ந்து 29ஆம் தேதிமுதல் ஏழாக இருக்கப்போகிறது. இதுபோன்ற சூழலில் புதன் வக்கிரமடைகிறது. இந்த சூழலில் பங்குச்சந்தை முதலீட்டில் மிகுதியான கவனம் தேவை. 2019ஆம் ஆண்டு இறுதியில் ஏற்பட்ட கிரக சேர்க்கை எங்கே என்று பார்க்கவேண்டும். தனுசில் ஏற்பட்டதால் 9ஆம் இடமான அதை வழிகாட்டுதல் என்று சொல்வார்கள். அதன் நேரெதிர் ராசியான மிதுனத்தில் பாதிப்பை உண்டாக்கியது. அது காற்று ராசி என்பதால், காற்று செல்லக்கூடிய தொண்டையில் ஏற்பட்ட பாதிப்பானது உலகெங்கும் செல்லக்கூடிய விமான பயணங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்படி கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பை மறக்கமுடியாது.


இப்போது மீனத்திற்கு நேரெதிர் ராசியான கன்னி ராசியில் தாக்கத்தை ஏற்படுத்தும். இது கடன் துறை, வங்கி, என்.வி.எஃப்.சி, பேங்கிங் செக்டார் போன்றவற்றை குறிக்கும். அதேபோல் இது விவசாயத்தையும் குறிக்கும் என்பதால் உணவுப்பொருட்களிலும் கவனம் செலுத்தவேண்டும். கன்னி ராசி என்றால் கால புருஷ தத்துவத்தில் 6ஆம் வீடான வயிற்றை குறிக்கக்கூடியது. புதன் என்றால் வேலையையும் குறிக்கும். எனவே பங்குச்சந்தையில் மிகுதியான கவனம் தேவை. அரசாங்கம் சொல்லக்கூடியதைக் கேட்டு அதில் மட்டுமே முதலீடு செய்யவேண்டும். போலியான விளம்பரங்களை நம்பி எதிலும் தவறான முதலீடு செய்துவிட வேண்டாம். க்ரிப்டோகரன்சியை நம்பி பணத்தை இழக்கவேண்டாம். தங்கத்தின் விலை தற்போது ஏறிக்கொண்டே போனாலும் அக்டோபருக்கு பிறகு இதே விலையேற்றம் இருக்குமா என்று சொல்வது சிரமம்தான். எனவே கடனை வாங்கி எதிலும் முதலீடு செய்யவேண்டாம். ஏனென்றால் குருவானது 2026ஆம் ஆண்டு கடகத்தை கடந்தபின் தங்கத்தின் மதிப்பு இதுபோன்று இருக்குமா என்றும் சொல்லமுடியாது. எனவே புதிய முதலீடுகளை செய்யவேண்டாம். 90 நாட்கள் நிலம் சார்ந்தவற்றில் முதலீடு செய்வது நல்லதல்ல. வேலையில் இருப்பவர்கள் வார்த்தைகளை விட்டு வேலையை விட்டுவிட வேண்டாம். வேலையிடத்தில் பொறுமையாக இருக்கவேண்டும். அப்படி வேலையை விட்டால் அதன்பிறகு வரக்கூடிய 5, 6 மாதங்களுக்கு முன்கூட்டியே தயார் செய்துகொள்ளுங்கள். இது உலகம் முழுவதும் பொருந்தும். அடுத்து குரு மிதுனத்தில் பிரவேசம் செய்து திருவாதிரையில் இருப்பார். திருவாதிரை ராகுவின் நட்சத்திரம் என்பதால் உலகம் முழுவதுமுள்ள மக்களுக்கு வேலை மாற்றங்களில் சிரமம் இருக்கும்.


கிரக சேர்க்கை அபாயங்களிலிருந்து தப்பிக்க ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றுதல் - பெற்றோரை வழிபடல்

6 கிரக சேர்க்கைகளால் எந்த ராசிகள் கவனமாக இருக்கவேண்டும்?
சிம்மம் மற்றும் கன்னி ராசிக்காரர்களுக்கு உடல்நலனில் கவனம் தேவை. முழு உடல் பரிசோதனை வேண்டுமானால் செய்துகொள்ளலாம். மருத்துவரின் ஆலோசனைப்படி உணவு உண்ணவேண்டும். அடுத்து கணவன் - மனைவி விவாதத்தில் அதிகம் ஈடுபட வேண்டாம். அமைதியாக கடந்து சென்றுவிடுவது நல்லது. துலாம் ராசிக்காரர்களுக்கு மருத்துவரீதியாக கவனம் தேவை. உணவு உண்ணுவதிலும் மிகுதியான கவனம் இருக்கவேண்டும். அதேபோல் கன்னி ராசிக்காரர்கள் பிசினஸ் பார்ட்னர்களிடம் சண்டை போடவேண்டாம். புதிய பார்ட்னர்ஷிப்பில் இறங்க நினைப்பவர்களுக்கு யோசனை தேவை. மனைவியுடன் பேசும்போது வார்த்தையில் கவனம் தேவை. விருச்சிக ராசிக்காரர்கள் குழந்தைகளின் நலனில் சற்று கூடுதல் கவனத்தை செலுத்தவும். தனுசு ராசிக்காரர்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள மருத்துவரை சென்று பார்க்கவேண்டும். வீட்டை தூய்மையாக வைத்துக்கொள்ளவும். ஹவுஸ் லோன் போட நினைத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். பக்கத்து வீட்டுக்காரர்களிடம் வார்த்தையை விடவேண்டாம். வண்டியை கவனமுடன் ஓட்டவும். மகர ராசிக்கார்கள் அதிகம் போன் பேசவேண்டாம். சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட வேண்டாம். கும்ப ராசிக்காரர்கள் குடும்பத்தில் சண்டை சச்சரவுகளை தவிர்த்துவிடவும். மீன ராசிக்காரர்களுக்கு பரிவர்த்தனை யோகம் இருப்பதால் பயப்படவேண்டாம். எனவே ஆலய வழிபாட்டில் கவனம் செலுத்தி உங்களை நீங்களே பார்த்துக்கொள்ள வேண்டும். மேஷ ராசிக்காரர்களுக்கு வேலை இடங்களில் சண்டை சச்சரவுகள் வேண்டாம். யாராவது தவறாக பேசினால்கூட அமைதியாக கையாளவும். தூக்கத்திற்கு நேரம் செலவு செய்யுங்கள். கால் பாதம் போன்ற பகுதிகளின் ஆரோக்கியத்திற்கு மருத்துவரை அணுகி அவ்வப்போது சரிபார்த்துக்கொள்ளவும். தனுசு ராசிக்காரர்கள் உயர் அதிகாரிகளிடம் பேசும்போது கவனமாக இருக்கவும். கருத்து வேறுபாடுகள் வேண்டாம். மிதுன ராசிக்காரர்கள் இருக்கிற வேலையில் பயங்கர அழுத்தம் இருந்தாலும் 90 நாட்கள் வேலையை விட்டுவிட வேண்டாம். கடக ராசிக்காரர்கள் மிக மிக கவனமாக இருக்கவேண்டிய காலகட்டம் இது. பெற்றோரின் ஆசி கட்டாயம் தேவை. எனவே அவ்வப்போது பெற்றோர்களை நினைத்து பிரார்த்தனைகளை செய்யவும். ஆரோக்கியத்திலும் முதலீடுகளிலும் கவனம் செலுத்தவும். இதில் மிகவும் கவனமாக இருக்கவேண்டியவர்கள் கடகம், கன்னி மற்றும் சிம்மம். கும்பமும் மீனமும் ஓரளவு கவனமுடன் இருக்கவேண்டும்.

கிரக சேர்க்கையால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும்?
எந்தவொரு காலகட்டத்திலும் பெற்றோரை மதிப்பவர்கள், எங்கே கிரகங்கள் இருந்தாலுமே அனுக்கிரகத்திலே தப்பித்துவிடுவார்கள். உலக ஜாதகத்தை எடுத்துக்கொண்டால் நாம் இருக்கும் இடத்தின் ஜாதகம்தான் 90% பேசும், தனிப்பட்ட ஜாதகம் என்பது 10% தான். இது உலகெங்குமே கவனமாக இருக்கவேண்டிய காலகட்டம். எனவே அசாத்தியமான காரியத்தையும் சாதிக்கக்கூடிய ஆஞ்சநேயருக்கு, வடைமாலை சாற்றி வணங்குவது மிகமிக நல்லது. இதை செய்ய முடியாவிட்டால் தாய், தந்தை மற்றும் குருவின் பாதங்களை மனதார நினைத்து வணங்கலாம். இதை தினமும் செய்தாலே பெரிய தாக்கங்கள் நம்மை ஒன்றும் செய்யாது. 


மனைவி என்பவள் யார்?



மனைவி என்பவள் யார்?

கடல் சொன்னது: மனைவி என்பவள் கணவன், துக்கத்தில் இருக்கும் போதெல்லாம் அவனைத் தன் மடியில் ஏந்தி ஆறுதல் சொல்பவள்.

வானம் சொன்னது: மனைவி என்பவள் கணவளின்

ஒவ்வொரு துக்கத்தையும் தனதாக எண்ணி கண்ணீர் வடிப்பவள்.

பூமி சொன்னது: மனைவி என்பவள் கணவனின் மணிமகுடம் ஆவாள். கணவன் அதில் பதியப்பட்டு இருக்கும் வைரம்.

காற்று சொன்னது: மனைவி கணவனின் ஆடையாகவும் கணவன் மனைவியின் ஆடையாகவும் இருக்கிறார்கள்

மழை சொன்னது: மனைவி என்பவள் கணவன் சிறப்பாக வாழ்ந்து சொர்க்கம் செல்ல ஆசைப்படுகிறாள்.

சொர்க்கம் சொன்னது: மனைவி இல்லாமல் கணவன் சொர்க்கம் செல்ல எந்த முகாந்திரமும் இல்லை.

இறைவன் கூறினான்: மனைவி என்பவள் என் தரப்பில்

இருந்து ஒவ்வொரு கணவனுக்கும் வழங்கப்பட்ட விலை உயர்ந்த பொக்கிசம் ஆகும்-

அவனே வாழும் சொர்க்கம்... சொர்க்கம். அவளுடன் வாழும் வாழ்க்கையே சொர்க் மனைவியை நேசித்து மகிழுங்கள் கணவன்மார்களே!

Saturday, 8 March 2025

பங்குனி மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள்

இந்த பங்குனி மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன, எந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் உங்களுக்கு சாதகமாக இந்த பங்குனி மாதம் முழுவதுமாக அமர்ந்திருக்கிறார். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் நடக்கும். திடீர் வெளியூர் பயணங்கள் உண்டாகும். பிள்ளைகள் போக வேண்டும் என நினைத்த இடங்களுக்குச் சென்று வருவீர்கள். ராசிநாதனாகிய செவ்வாய் 11 ஆம் இடத்தில் அமருவதால் திடீர் பணவரவு, செல்வாக்கு உண்டாகும். விலையுயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்.

செவ்வாய் சனி பகவானுடன் சேர்வதால் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. மேஷ ராசிக்காரர்கள் அபிராமி அந்தாதி கேட்பது நல்ல பலன்களைத் தரும், 49, 50, 75 ஆவது பாட்டை படிப்பது நல்ல பலன்களைத் தரும். பிள்ளைகள் விஷயங்களில் கோபதாபம் இல்லாமல் நடந்துகொள்வது நல்லது. பிள்ளைகளிடம் மனம் விட்டுப் பேச வேண்டும். பிள்ளைகளுக்கு தேவையான விஷயங்களை செய்து கொடுப்பது நல்லது. எதிரிகள் விஷயத்தில் இருந்து வந்த பதட்டங்கள் முழுமையாக குறையும்.

வழக்கு போன்ற விஷயங்களில் ஜெயிக்கும் யோகம் உண்டு. திடீர் யோகங்கள், அதிர்ஷ்டம் உண்டாகும். தேக ஆரோக்கியத்தில் முதுகு தொடர்பான பிரச்சனைகள், சளி பிரச்சனைகள் ஏற்படும். உள்ளூர், வெளியூர், தொலைதூரப் பயணங்கள், குடும்பத்தில் நல்ல காரியங்கள், அனுகூலங்கள், சுப விரைய பிராப்தம், வீடு கட்டுவது போன்றவற்றை செய்வீர்கள்.

உத்தியோகத்தில் அற்புதமான ஏற்றத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும். அனுகூலமான காலகட்டமாக இருக்கும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவில் மேன்மையைக் காண்பீர்கள். எதிர்பார்க்காத இடங்களில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். இதுவரை இருந்து வந்த அனைத்து பதட்டங்களில் இருந்தும் விடுதலை அடைவீர்கள். பெரிய மகான்களை சந்திப்பது, குருமார்களை சந்திப்பது, தெய்வ காரியத்தில் ஈடுபடுவது, தொழிலில் தள்ளிக் கொண்டு போன காரியங்ளை செய்து முடிப்பீர்கள்.