முடவாட்டுக்கால் சூப்பை குடிங்க! கம்பை தூக்கி போட்டுட்டு நடங்க! சூப் செய்வது எப்படி?
முடவாட்டுக்கால் சூப்பை எப்படி தயார் செய்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் அந்த முடவாட்டுக்காலில் என்னென்ன நன்மைகள் இருக்கின்றன என்பதையும் பார்க்கலாம். முட்டி வலியால் அவதிப்படுவோருக்கு இது ஒரு வரப்பிரசாதம்.
mudavattukaal
இந்த சூப்பை குடித்தால் வயதானாலும் முட்டி வலி வராது என்கிறார்கள். இந்த முடவாட்டுக்கால் 4000 வியாதிகளை குணப்படுத்தும் என சொல்கிறார்கள். இதை சைவ ஆட்டுக்கால் என்றும் சொல்கிறார்கள்.
இது குடித்தால் ஆட்டுக்கால் போன்ற சுவையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த கிழங்கு பாறைகளுக்கு இடுக்கே வளரக் கூடியது. இது மலைப் பகுதிகளிலும் குளிர்பிரதேசங்களிலும் மட்டுமே வளரக் கூடியது.
தமிழகத்தில் எங்கு
இந்த கிழங்கு தமிழகத்தில் கொல்லிமலையிலும் சேரவராயன் மலையிலும் கிடைக்கிறது. இதற்கு வேர்கள் கிடையாது. இந்த கிழங்குகள் செம்பு, தங்கம், இரும்பு, கால்சியம், பாறைகளில் இருக்கும் சிலிக்காவை உறிஞ்சும் தன்மை கொண்டது. வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை விரட்ட சித்தர்கள் இதை 48 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தனர்.
300 ரூபாய்
இந்த கிழங்கு ஒரு கிலோ 300 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதை 6 மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம் என்கிறார்கள். ஆனால் பிரிட்ஜில் வைக்கக் கூடாது. ஃபேன் காற்றில் வைக்கக் கூடாதாம். குழந்தைகளின் வாத நோய்க்கு இது அருமருந்து. கழுத்து வலி, தோள்பட்டை வலி, முதுகு வலி போன்றவற்றை குணப்படுத்தும். முடக்குவாதம் வந்து முடங்கியவர்கள் இந்த கிழங்கின் சூப் வைத்துக் குடிக்கலாம்.
மூட்டு வலி
மூட்டு வலி, முழங்கால் வலி, குதிகால் வலி, கெண்டைக்கால் வலி, தசை பிடிப்பு உள்ளிட்டவைகளுக்கு இந்த கிழக்கு அற்புதமான மருந்து. கர்ப்பப்பை சுருங்குதல், சிறுநீரகம் சுருங்குதல், உள்ளுறுப்பு சுருங்குதல், புற்றுநோய் உள்ளிட்டவைகளுக்கு நல்ல மருந்து என்கிறார்கள். முடவாட்டுக்கால் கிழங்கை போட்டு குழந்தையை குளிக்க வைத்தால் வாத நோய் நீங்கும்.
சுடுநீரில் போட்டு குளிக்கணும்
இந்த கிழங்கில் உள்ள முடி போன்ற தோலை எடுத்து சுடுநீரில் போட்டு குளித்து வந்தால் தோல் அலர்ஜி, தேம்பல், அரிப்பு போன்றவை நீங்கும். ஏற்காட்டிற்கு சுற்றுலா வரும் மக்கள் இந்த முடவாட்டுக்கால் சூப்பை வாங்கி குடிக்கிறார்கள். அருவிக்கு சென்றுவிட்டு வருவோர் இந்த சூப்பை குடித்தால் புத்துணர்ச்சி பெறுகிறார்கள் என்கிறார்கள்.
கொடைக்கானல்
அது போல் கொடைக்கானலில் பூம்பாறையிலிருந்தும் இந்த முடவாட்டுக்கால் பல்வேறு இடங்களில் விற்கப்படுகிறது. இந்த முடவாட்டுக்காலை எப்படி சூப் வைக்கலாம் என்பதை பார்க்கலாம்.
தோல் சீவி
முடவாட்டுக்காலின் தோலை சீவி நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த முடவாட்டுக்காலை வெட்டினால் அதிலிருந்து திரவம் வரும். அப்படியென்றால் அது ஃபிரஷ்ஷாக இருக்கிறது என்று அர்த்தம். தோல் நீக்கிய முடவாட்டுக்காலை துண்டு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
20 நிமிடங்கள்
அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து சின்ன வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, மிளகு , சீரகம், கருவேப்பிலை சேர்த்து விழுதாக அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கனமான பாத்திரத்தில் இந்த விழுதை சேர்த்து தேவையான அளவுக்கு தண்ணீர் விட்டு, உப்பு போட்டு 20 நிமிடங்களாவது கொதிக்க வைக்க வேண்டும்.
கரம் மசாலா
பிறகு அந்த சூப்பில் சிறிது கரம் மசாலைா போட்டு கொதி வந்ததும் அடுப்பை அணைந்துவிட்டு வடிக்கட்டிக் கொள்ளவும். வடிகட்டியதில் கொத்தமல்லி தழை தூவி, தேவைப்பட்டால் மிளகுத் தூளையும் சேர்த்து சூடாக குடிக்கலாம். இவ்வாறு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடித்து வரலாம் என்கிறார்கள். இந்த கிழங்கு சென்னையில் கூட விற்பனைக்கு வந்துள்ளது.
மேலும் இதை ஏற்காடு, கொடைக்கானல் வியாபாரிகளிடம் இருந்து ஆன்லைனில் கூட வாங்கிக் கொள்ளலாம். இந்த சூப் குடித்ததும் ஒரு மணி நேரத்திற்கு எதையும் சாப்பிடக் கூடாது. மேலும் இதை கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாது என்கிறார்கள்.
No comments:
Post a Comment