jaga flash news

Wednesday 30 June 2021

சிந்தித்து செயல்பட்டால் வெற்றி உறுதி ..

#எலி சாதாரணமாக இருக்கும்போது மரத்தால் ஆன பொருட்களை ஓட்டை போட்டு நாசம் செய்யும். 

அதே எலி அதற்கென வைக்கப்பட்ட மரப்பொறியில் சிக்கிக் கொண்டால், எப்படி தப்பிக்கலாம் என பயத்தில் அங்கும் இங்கும் அலையுமே தவிர, மற்ற மரப்பொருட்களை ஓட்டை போட்டது போல, இம்மரப் பொறியையும் ஓட்டை போட்டு வெளியில் சென்று விடலாம் என யோசிக்கவே யோசிக்காது. 

ஆமாம், இப்படி யோசித்தால், அதிகபட்சம் ஐந்து நிமிடத்தில் பொறியையே ஓட்டை போட்டு வெளியேறி விடும். ஆனால், மரப்பொறியில் சிக்கிய எலியை நீங்கள் ஐந்து நாட்கள் அப்படியே வைத்திருந்தாலும், அது தன்னால் வெளிவர முடியாத ஏதோவொரு பொறியில் அடைத்து வைத்து விட்டது போன்றே அங்கும் இங்கும் அலைபாயும். 

நம்மை யாரும் காப்பாற்ற மாட்டார்களா என ஏக்கத்தோடு பார்க்கும்.

குட்டியாக இருக்கும் #யானையை சின்ன சங்கிலியால் கட்டி வைப்பார்கள் ஆரம்ப நாட்களில் போராடும் சங்கிலியை அறுக்க முடியாது யானை பெரிதாக வளர்ந்து விடும் அதே குட்டி சங்கிலி ஒரே இழுவையில் சங்கிலி சுக்கு நூறாகிவிடும் ஆனால் முயற்ச்சி செய்யாது 
காரணம் சங்கிலி அறுபடாது என்கிற எண்ணம் அதன் மூளையை மழுங்கடித்தவிடும்

அதற்கே உயிர் பிழைக்க வழி தெரிந்தாலும்  அந்த பதட்டத்தில் அதனது மூளை வேலை செய்யாது.

மனிதனும் பல நேரத்தில் இப்படித்தான் பல பிரச்சினைகளிலிருந்து வெளியே வர தெரிந்தும் பொறுமை இல்லாததால் தனது வாழ்க்கையை துறக்கிறான்.

பிரான்ஸ் மன்னர் மாவீரன் நெப்போலியன் புரட்படையினரால் கைது செய்யபட்டு செயின்ட் ஹெலினா தீவில் தனிமையில் அடைக்கபட்டார் அவரை பார்க்க வந்த அவரது நண்பர் ஒரு சதுரங்க போர்டும் காயின்களும் கொடுத்துவிட்டு போனார் தனிமையில் சதுரங்கத்தில் விளையாடியே நாட்களை கழித்து இறந்தும் போனார் சிறிது காலத்திற்கு முன் அவர் விளையாண்ட சதுரங்க அட்டையை பிரான்ஸ் அரசு ஏலம் விட்டது அதை வாங்கிய நபர் அதை பிரித்து பார்த்த போது ஹெலீனா தீவிலிருந்து தப்பிப்பதற்கான வரைபடம் இருந்தது எப்பேற்பட்ட திறமையான மாவீரன் ஆனால் இனிமேல் தப்பிக்க முடியாது என்ற எண்ணமே நெப்போலியனை அடுத்த கட்ட நகர்விற்கு செல்ல முடியாமல் தடுத்து விட்டது...

சிந்தித்து செயல்பட்டால் வெற்றி உறுதி ..

Sunday 27 June 2021

தொழில் பிரச்சினைகள் தீரும்

வன்னி மரத்தடியில் இருக்கும் வினாயகரை சனிக்கிழமை வழிபட தொழில் பிரச்சினைகள் தீரும்


துர் சக்திகள் விலகி, நல்ல சக்திகள் வந்தடையும்..!!

தினம் மாலை 6 மணிக்கு மண் சட்டி விளக்கில் இலுப்பை எண்ணெயில் விளக்கு ஏற்ற அந்த வீட்டில் துர் சக்திகள் விலகி, நல்ல சக்திகள் வந்தடையும்..!!

 

ஆண் ராசிகள்,பெண் ராசிகள். .

ஆண் ராசிகள் எல்லாம் கொஞ்சம் முரட்டு ராசிகள் ,முன்கோபம் ,பிடிவாதம் ,
கடும் உழைப்பு ,கம்பீரம் கொண்ட ராசிகளாக இருக்கும்

மேசம்,மிதுனம்,சிம்மம்,துலாம்,தனுசு,கும்பம் இவைகள் ஆண் ராசிகள்..இவற்றில் பெண்கள் பிறந்தால் ஆண்களை போல் துணிச்சல் தைரியத்துடன் செயல்படுவார்கள்.

பெண் ராசியில் ஆண்கள் பிறந்தால் பணிந்தும் ,பொறுமையுடனும் செயல்படுவார்கள் ரிசபம்,கடகம்,கன்னி,விருச்சிகம்,மகரம்,மீனம் பெண் ராசிகள்..பெண் ராசிகளில் பெண்கள் பிறந்தால் அவர்கள் அழகை இன்னும் மெருகூட்டும்...நளினம்,அழகு மேம்படும்.

உதாரணமா மேசம் ராசி ,மேச லக்னத்தில் ஒரு பெண் பிறந்தால் ராசி லக்னம் இரண்டும் ஆணாக இருப்பதால் என்னாகும்..? நெஞ்சுல ஏறி உட்கார்ந்துக்கிட்டு மூஞ்சியில ஓங்கி குத்துறாய்யா அந்த குத்து..எவனாவது காப்பாத்துனானா..? என புருசன் கதற வேண்டியதுதான்..

ஆண் ராசியில் பிறந்த பெண்கள் தைரியம் ,துணிச்சலுடன் வாழ்வில் நிறைய போராடி ஜெயிப்பார்கள்.

கணவன் ஒத்துழைப்பு இல்லாவிட்டாலும் ஒற்றை ஆளாய் பொறுப்பை சுமந்து குடும்பத்தை தூக்கி நிறுத்துவதும் இந்த பெண்கள்தான் !!

Friday 25 June 2021

நீர்கொண்டர் பரம்பரை தலை கட்டு...

1.குருவப்ப நாயுடு
2. வெங்கட்ராம நாயுடு
3.ரங்கப்ப நாயுடு
4. கிருஷ்ணாம நாயுடு
5. வெங்குடுசாமி நாயுடு
6. நாராயணசாமி நாயுடு

இன்பத் தமிழ்...!

இன்பத் தமிழ்...!
தொடர்ந்து படியுங்கள்...

1. அந்தி, சந்தி: 
அந்தி : மாலை நேரத்திற்கும் , இரவுக்கும் இடையில் உள்ள பொழுது. 
சந்தி: இரவு நேரத்திற்கும் , காலை நேரத்திற்கும் இடையில் உள்ள விடியல் பொழுது.

 2. அக்குவேர், ஆணிவேர் :
அக்குவேர் : செடியின் கீழ் உள்ள மெல்லியவேர். 
ஆணி வேர்: செடியின் கீழ் ஆழமாக செல்லும் வேர்.

3. அரை குறை:
அரை : ஒரு பொருளின் சரி பாதி அளவில் உள்ளது.
குறை : அந்த சரிபாதி அளவில் குறைவாக உள்ளது.

 4. அக்கம், பக்கம்:
அக்கம்: தன் வீடும், தான் இருக்கும் இடமும்.
பக்கம்: பக்தத்தில் உளவீடும், பக்கத்தில் உள்ள இடமும்.

5. அலுப்பு சலிப்பு :
அலுப்பு: உடலில் உண்டாகும் வலி.
சலிப்பு: உள்ளத்தில் ஏற்படும் வெறுப்பும், சோர்வும்.

 6. ஆட்டம் பாட்டம் :
ஆட்டம் : தாளத்திற்கு தகுந்தவாறு ஆடுவது.
பாட்டம் : ஆட்டத்திற்குப் பொருத்தமில்லாமல் பாடுவது.

7. இசகு பிசகு:
இசகு: தம் இயல்பு தெரிந்து ஏமாற்றுபவர்களிடம் ஏமாறுதல்.
பிசகு: தம்முடைய அறியாமையால் ஏமாறுதல்.

8. இடக்கு முடக்கு: 
இடக்கு : கேளியாக நகைத்து, இகழ்ந்து பேசுதல்.
முடக்கு : கடுமையாக எதிர்த்து, தடுத்துப் பேசுதல்.

9. ஏட்டிக்குப் போட்டி :
ஏட்டி: விரும்பும் பொருள் அல்லது செய்வது. ( ஏடம் : விருப்பம்) போட்டி : விரும்பும் பொருள், செயலுக்கு எதிராக வருவது.

10. ஒட்டு உறவு : 
ஒட்டு : இரத்த சம்பந்தம் உடையவர்கள்.
உறவு : கொடுக்கல் சம்பந்தமான வகையில், நெருக்கமானவர்கள்.

11. கடை கண்ணி :
கடை: தனித் தனியாக உள்ள வியாபார நிலையம்.
கண்ணி : தொடர்ச்சியாக அமைந்த கடைகள் , கடை வீதிகள்.

12. கார சாரம் : 
காரம் : உறைப்பு சுவையுள்ளது.
சாரம்: காரம் சார்ந்த சுவையுள்ளது.

13. காடு கரை :
காடு : மேட்டு நிலம் (முல்லை). 
கரை : வயல் நிலம் .( மருதம், நன் செய் , புன்செய்).

14.காவும் கழனியும்:
கா : சோலை.
கழனி: வயல். (மருதம் ).

15. கிண்டலும் கேலியும்: 
கிண்டல் : ஒருவன் மறைத்த செய்தியை அவன் வாயில் இருந்து வாங்குவது.
கேலி : எள்ளி நகைப்பது.

16. குண்டக்க மண்டக்க :
குண்டக்க : இடுப்புப்பகுதி, 
மண்டக்க: தலைப் பகுதி,
சிறுவர்கள் கால் பக்கம், தலைப்பக்கம் எது எனத் தெரியாமல் தூக்குவது,
வீட்டில் அந்தந்தப் பொருள் அங்கங்கே இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் இருப்பது.

17. கூச்சல் குழப்பம்:
கூச்சல் : துன்பத்தில் சிக்கி வாடுவோர் போடும் சத்தம். (கூ - கூவுதல்)
குழப்பம்: துன்பத்தின் மத்தியில் உண்டாகும் சத்தத்தைக் கேட்டு, வந்தவர்கள் போடும் சத்தம்.

18. சத்திரம் சாவடி :
சத்திரம் : இலவசமாக சோறு போடும் இடம் ( விடுதி ).
சாவடி: இலவசமாகத் தங்கும் இடம்.
 
19.தோட்டம் துரவு , தோப்பு துரவு :
தோட்டம் : செடி, கொடி, கீரை பயிரிடப்படும் இடம்.
தோப்பு : கூட்டமாக இருக்கும் மரங்கள்.
துரவு: கிணறு.

20. நகை நட்டு :
நகை : பெரிய அணிகலன்கள் (அட்டியல், ஒட்டியாணம்.)
நட்டு : சிறிய அணிகலன்கள்.

21. நத்தம் புறம்போக்கு :
நத்தம் : ஊருக்குப் பொதுவான மந்தை...
புறம்போக்கு : ஆடு, மாடு மேய்வதற்கு அரசு ஒதுக்கிய நிலம்.

22. நேரம் காலம் :
நேரம் : ஒரு செயலைச் செய்வதற்கு நமக்கு வசதியாக அமைத்துக் கொள்வது.
காலம் : ஒரு செயலைச் செய்வதற்கு பஞ்சாங்க அடிப்படையில் செய்ய முற்படும் கால அளவு.

23. நொண்டி நொடம் :
நொண்டி : காலில் அடிபட்டோ, குறையால் இருப்பவர்.
நொடம் : கை, கால் செயலற்று இருப்பவர்.

24. பற்று பாசம் :
பற்று : நெருக்கமாக உறவு கொண்டுள்ளவர்கள்.
பாசம் : பிரிவில்லாமல் மரணம் வரை சேர்ந்து இருப்பது...

25. பழக்கம் வழக்கம் :
பழக்கம் : ஒருவர் ஒரே செயலைப் பல காலமாகச் செய்வது.
வழக்கம் : பலர் ஒரு செயலைப் பலகாலம் (மரபுவழியாக ) கடைப்பிடித்துச் செய்வது.

26. பட்டி தொட்டி :
பட்டி: கால்நடைகள் (ஆடுகள்) வளர்க்கும் இடம் (ஊர்).
தொட்டி : மாடுகள் அதிமாக வளர்க்கும் இடம்.

27. பேரும் புகழும் : 
பேர் : வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் உண்டாகும் சிறப்பு பெருமை. 
புகழ்: வாழ்விற்குப் பிறகும் நிலை பெற்றிருக்கும் பெருமை.

28. பழி பாவம் :
பழி: நமக்குத் தேவையில்லாத , பொருத்தமில்லாத செயலைச் செய்தால் இக்காலத்தில் உண்டாகும் அபச் சொல்.
பாவம் : தீயவை செய்து மறுபிறப்பில் நாம் அனுபவிக்கும் நிகழ்ச்சி.

29. பங்கு பாகம்:
பங்கு: கையிருப்பு. பணம், நகை, பாத்திரம்.( அசையும் சொத்து).
பாகம் : வீடு, நிலம். அசையாச் சொத்து.

30. பிள்ளை குட்டி:
பிள்ளை : பெதுவாக ஆண் குழந்தையைக் குறிக்கும்.
குட்டி: பெண் குழந்தையைக் குறிக்கும்.

31. வாட்டம் சாட்டம் : 
வாட்டம் : வளமான தோற்றம், வாளிப்பான உடல்.
சாட்டம் : வளமுள்ள தோற்றம், தோற்றப்பொலிவு.

*படித்ததில் பிடித்தது

Tuesday 22 June 2021

கோயம்புத்தூரின் பல இடங்களின் பெயர் எப்படி வந்தது என்ற சுவாரசியமான தகவல்களை காண்போம்.....

கோயம்புத்தூரின் பல இடங்களின் பெயர் எப்படி வந்தது என்ற சுவாரசியமான தகவல்களை காண்போம்.....

ஒப்பணக்கார வீதி :

விஜயநகர பேரரசில் சேனைகளில் வேலை பார்த்த பலிஜா சமூகத்தினர் பணம் ஒப்புவிக்கும் ( பணம் பட்டுவாடா) பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.அவர்கள்தான் இந்த பெயருக்கு காரணமான ஒப்பணக்காரனர்கள். பணத்தை ஒப்புவிக்கும் பலிஜா சமூகத்தினர் குடியேறியதால் ஒப்பணக்கார வீதி என்ற பெயர் வந்தது.

R.S புறம்:

1903ல் கோவையில் வேகமாகப் பரவிய பிளேக் நோயால் ஏரளமான உயிர்பலிகள் நிகழ்தன. எண்ணற்றோர் தங்கள் இருப்பிடங்களை காலி செய்து இடம் மாறினர்.மேலும்,மக்கள் நெருக்கம் மிகுந்த நகரில் சுகாதாரக் குறைபாடுகள் அதிகம் இருந்தது.எனவே நகரை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது.அப்போது மேட்டுபாளையம் ரோடு மற்றும் தடாகம் ரோடுக்கு இடையே இருந்த பல நூறு ஏக்கர் நிலத்தை வாங்கிய நகரசபை நிர்வாகம் அதை மனைகளாகப் பிரித்தது.பின் அப்பகுதிக்கு கோவை நகராட்சி மன்றத் தலைவராக இருந்த இரத்தினசபாபதி முதலியாரின் பெயர் வைக் கபட்டது.ரத்தின சபாபதிபுரம் என்னும் பெயர் சுருங்கி ஆர்.எஸ்.புறம் என்று ஆயிற்று.

சபர்பன் ஸ்கூல்:

பிளேக் நோய் காரணமாக நகரம் விரிவாக்கப்பட்டபோது ஆர்.எஸ்.புறம்,கெம்பட்டி காலனி,தேவாங்கப் பேட்டை உள்ளிட்ட புற நகரங்கள் உருவாக்கப் பட்டன.அந்த நாளில் பிராமணர்களுக்காக உருவாகப்பட்ட ராம்நகரும் கூட ஒரு புறநகரமே. அந்த புற நகரில் ஏற்படுத்தபட்ட பள்ளி என்பதால் சப்-அர்பன் பள்ளி என்று அழைக்கபட்டது.அது மருவி சபர்பன் பள்ளியாயிற்று.

சுக்கிரவார் பேட்டை& தேவாங்க பேட்டை:

கன்னடம் மற்றும் தெலுங்கில் "சுக்கிர வராம்" என்றால் வெள்ளிக்கிழமை என்று பொருள்.கடைகள் நிறைந்த வியாபாரப் பகுதியை "பேட்டை" என்பார்கள். அன்றைய நாளில் வெள்ளிக்கிழமை தோறும் சந்தை கூடிய இடத்திருக்கு பெயர்தான் சுக்கிரவார் பேட்டை. தேவாங்க செட்டியார் அதிகம் வசித்த பகுதியில் நெசவுத் தொழிலும் புகழ் பெற்று விளங்கியதால் தேவாங்கப் பேட்டை ஆயிற்று.

டவுன்ஹால் :

விக்டோரியா ராணி பதவியேற்று 50 ஆண்டுகள் ஆனதை நினைவூட்டும் வகையில் 1887ல் கோவை நகராட்சியின் மையப்பகுதியில் நகர மண்டபம் ஓன்று கட்டப்பட்டது. 1892 இல் திறக்கப்பட்ட அந்த மண்டபம் இருந்த இடம்தான் டவுன்ஹால் என்று அழைக்கப்பட்டது.

கோட்டை மேடு :

டவுன்ஹால்க்கு பின்புறம் கோட்டை இருந்தது.பிரிட்டிஷ் மற்றும் மைசூர் படைகளுக்கு இடையே நடந்த யுத்தத்தில் சிக்கி அந்தக் கோட்டை சின்னபின்னமானது.1782ல் திப்புவின் உத்தரவின் பேரில் இந்த கோட்டை தரைமட்டமாக்கப்பட்டது.அந்த கோட்டை இருந்த இடம்தான் இன்றைய கோட்டை மேடு.

ராஜா வீதி :

ஆசிரியர்ப் பயிற்சி பள்ளியும்,பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் இயங்கும் கட்டடம்தான் அன்றைய மதோராஜா மஹால்.மைசூர் அரசின் அதிகாரியான அந்த மதோராஜா,அந்த வீதியில் குடியிருந்து ஆட்சி செலுத்தியதால் அந்த வீதிக்கு ராஜாவீதி என்று பெயர்.

காட்டூர் :

அவினாசி ரோடு மேம்பாலம் முதல் வட கோவை சிந்தாமணி வரையில் முன்பொரு காலத்தில் பனங்காட்டுக் குளம் என்ற குளம் இருந்தது.நாளிடைவில் அந்த குளம் அழிய,குளமிருந்த இடத்தில் பனை மரங்கள் வளர்க்கப்பட்டன.நாளிடைவில் பனை மரங்கள் நிறைந்த காடாக மாறியதால் பனங்காட்டூர் என்றாயிற்று. நாளிடைவில் அது மருவி காட்டூர் என்றாயிற்று.

"கோயம்புத்தூர்" பெயர்க்காரணந்தெரியுமா உங்களுக்கு..?

நம் கவியரசர் கண்ணதாசனவர்கள்
கூறுகின்ற விளக்கத்தை பாரீர்.

கன்னியரின் இதழழகை கோவையென்பார்!
கனிமழலை முழுவடிவை கோவையென்பார்!
தேன்தமிழில் திருக்கோவை நூலொன் றுண்டு.
திறமான கவிதொகுத்த கோவை யுண்டு.

இந்நகரை “கோவை” என ஏனழைத்தார்?
எழில்கோயம் புத்தூர் என்றேன் படைத்தார்?
என்கருத்தை யான்சொல்வேன்! தமிழறிந்தோர்
இதுதவறென் றுரைத்தாலும் தவறே யாக!

வஞ்சியர்கள் விளையாடும் வஞ்சி நாட்டின்
மன்னருக்கு மக்களென இருவர் வந்தார்.
செஞ்சரத்து வில்லவனாய் வடபாற் சென்ற
செங்குட்டுவன் ஒருவன்.
தமிழெடுத்து
அஞ்சிலம்பை யாத்தணித்த இளங்கோ அண்ணல்
அடுத்தொருவன்.
இவ்விருவர் குறிப்பும் பார்த்து
பிஞ்சுமகன் அரசாவான் என்றுரைத்தான்
பேதையொரு வேதாந்தி.

அதனைக்கேட்டு
முன்னவனே நாடாள வேண்டுமென்று
முடிமாற்றி உடைமாற்றி இளங்கோ அண்ணல்
தன்னாட்டின் எல்லையிலோர் குடிலமைத்தான்.
தனியாக சாத்தனுடன் தங்கிவிட்டான்.

அந்நாளில் இளங்கோவன் அமைத்த புத்தூர்
அங்கோவன் புத்தூராய்ப் பேரெடுத்து
இந்நாளில் கோயம் புத்தூ ராயிற்று..!

இயல்பான உருமாற்றம் சரிதச் சான்று!

நீலமலைச் சாரலிலே நிலம் விரித்து
நெளிந்துவரும் தென்றலினை வளையவிட்டுப்
பால்போன்ற இதயத்தைப் பிள்ளை யாக்கிப்
பண்பினையும் அன்பினையும் துணைவர் ஆக்கி
வாழுங்கள் எனவிட்டாள் தமிழ் மூதாட்டி!

வாழ்கின்றார் கோவையிலே நல்ல மக்கள்!
சூழ்கின்ற பண்பெல்லாம் கோவையில்தான்!
சுவையெல்லாம் பண்பெல்லாம் கோவையில்தான்!
ஏனுங்க! என்னவுங்க! ஆமா முங்க!
இருக்குங்க! சரியிங்க! பாக்க வாங்க!
மானுங்க! வேணுங்களா! வாங்கிக் கோங்க!
மலைப் பழமும் இருக்குங்க! எடுத்துக்கோங்க!
தேனுங்க! கையெடுங்க! சாப்பிடுங்க!
திருப்பூரு நெய்யுங்க! சுத்த முங்க!
ஏனுங்க! எழுந்தீங்க! உக்காருங்க!
ஏ, பையா! பாயசம் எடுத்துப் போடு!

அப்பப்பா! கோவையிலே விருந்து வந்தால்
ஆறுநாள் பசிவேண்டும்!
வயிறும் வேண்டும்!
தப்பப்பா! கோவைக்கு வரக்கூடாது!
சாப்பாட்டி னாலேயே சாக டிப்பார்!
ஒப்பப்பா இவருக்கு வள்ளல் ஏழ்வர்!

உயர்வப்பா இவர்நெஞ்சம் ஊற்றின் தேக்கம்!
கொடுத்தவரை பாடுவ தெம்குல வழக்கம்
கொடைக்கெனவே படையெடுத்தோர் புலவர் பல்லோர்
இனித்தசுவைப் பழங்கொடுத்த வள்ளல் பற்றி
இயன்றவரை பாடிவிட்டாள் ஔவைத்தேவி
தனித்தனியே கனிவைத்துத் தேனும் வைத்துத்
தந்தானைப் புகழ்ந்தானே கம்பன் அன்றும்
கொடுத்தவனைப் புகழ்வதுதான் புலவன் பாட்டு
குறையெதற்கு?

Monday 21 June 2021

ஒரு நாயகமாய் - பாசுரம்

ஒரு நாயகமாய் - 
பாசுரம்:
ஒருநா யகமாய் ஓடவுலகுட னாண்டவர்,
கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்,
பெருநா டுகாண இம்மையிலே பிச்சை தாம்கொள்வர்,
திருநா ரணன்தாள் காலம் பெறச்சிந் தித்துய்ம்மினோ.









Translation:

Once he ruled the world as one sovereign
Soon the masses behold him seeking offerings
Bitten by stray-dogs 'n holding broken urns.
So rush to mull the feet of Thirunaranan!




பதம் பிரித்தது:

ஒரு நாயகமாய் ஓட உலகுடன் ஆண்டவர்
கரு நாய் கவர்ந்த காலர், சிதைகிய பானையர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்.
திரு நாரணன் தாள் காலம்பெறச் சிந்தித்து உய்ம்மினோ.

பொழிப்புரை:

பூமண்டலம் முழுமைக்கும் அத்விதீயப்ரபுவாய் வெகுகாலமளவும் உலகங்களை யெல்லாம் அரசாட்சி புரிந்தவர்கள் (ஒரு காலவிசேஷத்திலே தரித்ரர்களாகி) கரிய நாய்களால் கவ்வப்பட்ட கால்களையுடையவராயும் உடைந்த பிச்சைப் பாத்திரத்தையுடைவர்களாயும் ஆகி உலகமெல்லாம் திரண்டுவந்து காணும்படியாக இப்பிறவியிலேயே தாங்களே பிச்சை யெடுப்பர் (செல்வத்தின் தன்மை இத்தகையதாதலால்) திருநாராயணனுடைய திருவடிகளை விரைவாக தியானித்து உஜ்ஜூவியுங்கோள்

Sunday 20 June 2021

ஜாதகத்தில் உள்ள எல்லா தோஷங்களையும் போக்கும் வழிபாடு.

*🛑 🛑 ஜாதகத்தில் உள்ள எல்லா தோஷங்களையும் போக்கும் வழிபாடு.*

வருடம் ஒரு முறை என்ன வேலை இருந்தாலும் ஒதுக்கி விட்டு தகப்பன் வழி அத்தனை ரத்த சம்பந்தங்களும் ஒன்று சேர்ந்து குலதெய்வத்தை வழிபாடு செய்யுங்கள். கஷ்டங்களும் கவலைகளும் பறந்து போகும்.

குலதெய்வ வழிபாடு
ஜாதகத்தில் உள்ள எல்லா தோஷங்களையும் பித்ரு பூர்வ புண்ய ஸ்தானத்தின் காவல் தெய்வங்களான உங்கள் குல தெய்வம் நிற்கும்.

உங்களுக்கு 365 நாட்கள் என்பது உங்களின் குல தேவதைகளுக்கு ஒரு நாள். அவர்கள் உங்களிடம் கேட்பது லட்ச லட்சமாய் பணமில்லை. உங்கள் கையால் ஒரு சாதாரண அபிஷேகம். ஒரு வஸ்த்ரம். ஒரு கவளம் அரிசி வெல்லம் கலந்த உணவு.
வருடம் ஒரு முறை என்ன வேலை இருந்தாலும் ஒதுக்கி விட்டு தகப்பன் வழி அத்துனை ரத்த சம்பந்தங்களும் ஒன்று சேர்ந்து வழிபாடு செய்யுங்கள். கஷ்டங்களும் கவலைகளும் பறந்து போகும்.

கோள்களால் ஏற்படும் தோஷங்களெல்லாம் குலதெய்வத்தால் குறைவில்லாமல் தீர்ந்து போகும். கோள் செய்யாததை குலதெய்வம் செய்ய வைக்கும்.

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே.
தாலாட்டு பாடும் அன்னையின் அன்பும்
தந்தை அன்பின் பின்னே.

தகப்பனின் கண்ணீரை
கண்டோரில்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

என்னுயிர் அணுவில்
வரும் உன்னுயிர் அல்லவா.
மண்ணில் வந்த நான்
உன் நகல் அல்லவா.
காலங்கள் கண்ட பின்னே
உன்னை கண்டேன்

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே.
தாலாட்டு பாடும் அன்னையின் அன்பும்
தந்தை அன்பின் பின்னே.

கண்டிப்பிலும் தண்டிப்பிலும்
கொதித்திடும் உன் முகம்.
காய்ச்சல் வந்து படுக்கையில்
துடிப்பதும் உன் முகம்.

அம்பாரியாய் ஏற்றிக்கொண்டு
அன்று சென்ற ஊர்வலம்.
தகப்பனின் அணைப்பிலே
கிடந்ததும் ஓர் சுகம்.

வளர்ந்தவுமே யாவரும்
தீவாய் போகிறோம்.
தந்தை அவனின் பாசத்தை
எங்கே காண்கிறோம்.

நமக்கெனவே
வந்த நண்பன் தந்தை.

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே.
தாலாட்டு பாடும் அன்னையின் அன்பும்
தந்தை அன்பின் பின்னே

கசகசா மருத்துவ குணங்கள் பயன்கள்.....

கசகசா மருத்துவ குணங்கள் பயன்கள்.....

கசகசா… நம்ம ஊர் மளிகைக் கடைகளில் சர்வசாதாரணமாக கிடைக்கும் உணவுப்பொருள். ஆனால், இதை வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வளைகுடா நாடுகள் கசகசாவுடன் வருபவர்களுக்கு கடுமையான தண்டனையை கொடுத்து வருகிறது.

சொந்த ஊரில் இருந்தவரை, மணக்க, மணக்க மசாலாவுடன் சாப்பிட்டு பழகிய நம்ம ஊர் இளைஞர்கள், வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் செல்லும்போது, ஊறுகாய் பாட்டில்களுடன், கசகசாவையும் எடுத்துச் சென்றதற்காக தண்டனை விதிக்கப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது. 

எந்தவொரு பொருளையும் அளவாக சாப்பிட்டால் அது நன்மையை தரும். 

அளவுக்கு மீறி எந்த உணவுப் பொருட்களை உட்கொண்டாலும் அது நமக்கு தீமையே கொடுக்கும்.

கசகசா எப்படி கிடைக்கிறது?

வெள்ளை, சிவப்பு, வெளிர் சிவப்பு, வெளிர் நீலம் ஆகிய வண்ணங்களில் அழகான பூக்களைப் பூக்கிறது. இப்பூக்களிலிருந்து பச்சைநிற 4-6 செமீ உயரமும், 3-4 செமீ விட்டமும் கொண்ட கோளவடிவிலான காய்கள் தோன்றுகின்றன. 

இவை போஸ்தக்காய் என்றழைக்கப்படுகிறன. போஸ்த்தக்காய் இளமையாக இருக்கும் போது (விதைகள் உருவாகும் தருணத்தில்) அதனுடைய வெளிப்புறத் தோலினைக் கீறும் போது வெள்ளைநிற பால் போன்ற திரவம் வெளியேறுகிறது.

இத்திரவமே ஓபியம், ஹெராயின், மார்பின் உள்ளிட்ட போதைப் பொருள்கள் தயார் செய்யப் பயன்படுத்தப் படுகின்றது. இத்திரவம் மருந்துப் பொருட்கள் செய்யவும் பயன்படுத்தப் படுகிறது.

 பச்சைநிற போஸ்த்தக்காய் முற்றி பழுப்பு நிறத்திற்கு மாறியதும் உள்ளிருக்கும் விதைகளே கசகசாவாகப் பயன்படுத்தப் படுகின்றன. ஒரு பாப்பி தாவரத்திலிருந்து 10,000 – 60,000 வரையிலான கசகசாவிதைகள் பெறப்படுகின்றன.

கசகசாவின் மருத்துவ குணங்களைப் பற்றி பார்ப்போம்

வயிற்று போக்கு

வயிற்று போக்கு ஏற்படும் நேரத்தில் சிறிதளவு கசகசாவை வாயிலிட்டு மென்று சிறிதளவு நீர் குடித்து வர வயிற்றுபோக்கு நிற்கும்.

உடல் வலிமை பெற

கசகசா, முந்திரி பருப்பு, பாதம் பருப்பு இவற்றை வகைக்கு 100 கிராம் அளவு எடுத்து பொடியாக்கி காலை, மாலை என இருவேளை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து உண்டுவர உடல் வலிமை பெறும்.

தூக்கமின்மை பிரச்சனை

தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்கள் இரவு நேரங்களில் கசகசாவை பாலில் அரைத்து உண்டால் தூக்கம் நன்றாக வரும்.

நீரிழிவு நோய்

கசகசாவை துவையலாக அரைத்து உண்டு வந்தால் உடல் வலிமை பெறும். நீரிழிவு நோய் கட்டுப்படும். தூக்கம் நன்றாக வரும். நரம்புகள் வலுவாகும். விந்து கட்டும். உடல் வலிமை பெறும். ஆண்மை பெருகும். உடல் பொலிவு பெறும். நரம்புகள் பலம் பெறும்.

மாதவிடாய்

மாதவிடாய் முடிவுக்கு வரும் மேனோபாஸ் காலகட்டத்தில் பெண்களுக்கு உடல் வறண்டுபோகும். கண்களை சுற்றி கருவளையமும் சுருக்கமும் உண்டாகும். உடல் பலமும் குறையும். அப்போது கசகசா மற்றும் பாதாம்பருப்பை அரைத்து பாலில் கலந்து பருகலாம்.

கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க

கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும். அதிலுள்ள ஒலியீக் ஆசிட், லினோலியிக் ஆசிட் போன்ற அமினோ அமிலங்கள் மாரடைப்பைத் தடுத்து, பக்கவாதத்தில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.

வாய் புண்கள் குணமடையும்

கசகசா விதைகள் உடலுக்கு குளிர்ச்சி அளித்து வாய் புண்களுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு வாய் புண்களை விரைவில் ஆற்றுகின்றன. உலர்ந்த தேங்காய், பொடித்த சர்க்கரை மிட்டாய், நில கசகசா விதைகள் ஆகியவற்றை நன்கு கலந்து கொள்ளவும். வாய் புண்களிலிருந்து உடனடி நிவாரணம் பெற, இக்கலவையை ஒரு சிறு சிறு துண்டுகளாக செய்து, மிட்டாய் போல மென்று சுவைத்து சாப்பிடுவதன் மூலம் வாய் புண்கள் விரைவில் குணமடையும்.

ஆற்றலை அதிகரிக்கிறது

உடலுக்கு ஆற்றல் அளிக்கும் சிறு ஊட்டச்சத்துக்களான சிக்கலான கார்போஹைட்ரேட்கள் கசகசா விதைகளில் அடங்கியுள்ளது. இந்த விதைகள் கால்சியம் சத்தை உறிஞ்சி உடல் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றன.

தினமும் 6 மிளகை மென்று தின்றால் வைரஸ் நோய்கள் உங்க கிட்ட நெருங்கவே நெருங்காதாம்

தினமும் 6 மிளகை மென்று தின்றால் வைரஸ் நோய்கள் உங்க கிட்ட நெருங்கவே நெருங்காதாம்!

1 day ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
19SHARES
Download Now & Watch Free
விளம்பரம்

இந்தியாவின் தனித்துவமான மசாலா பொருட்களில் மிளகுக்கு என்று தனி இடம் உள்ளது. இந்தியாவின் வரலாறுக்கும், மிளகுக்குமே சுவராஸ்யமான தொடர்பு உள்ளது. ஏனெனில் ஆங்கிலேயர்கள் முதன் முதலில் மிளகை கொள்முதல் செய்யத்தான் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தார்கள்.

அந்த அளவிற்கு அனைத்து நாட்டினரையும் ஈர்க்கும் குணம் மிளகுக்கு உள்ளது. இது கொடி வகையை சேர்ந்ததாகும். இதன் சிறுகனிகள் பூத்த ஆறு முதல் எட்டு மாதங்களில் அறுவடைக்கு வரும்.

இது தவிர மிளகின் கொடி, இலை மற்றும் வேர் முதலியன பயன் தரும் பாகங்களாகும். மிளகு வாணிகம் மிக லாபகரமானதாக இருப்பதனால், மிளகை ‘கருப்புத் தங்கம்’ என்று குறிப்பிடுகின்றனர். பண்டைக் காலத்தில் இப்பகுதியில் பணத்திற்கு பதிலாக மிளகை உபயோகப்படுத்தியதாக வரலாறு கூறுகிறது.

நெஞ்சுச்சளிக்கு

நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு. ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் தினமும் 6 மிளகை மென்று தின்பது சிறந்தது.

தொற்று நோய்

தினமும் 6 மிளகை மென்று தின்றால் உடலிலுள்ள கிருமிகளை அழிப்பதோடு தொற்று நோய்கள், ஜுரம் போன்ற நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது.

மலட்டு தன்மை

இன்று நாம் உண்ணும் உணவுகள் விஷத்தன்மை நிறைந்ததாக இருக்கிறது. இவற்றை உண்பதால் சில ஆண்களுக்கு மலட்டு தன்மை ஏற்படுத்துகிறது. தினமும் 6 மிளகை மென்று தின்றால் ஆண்களின் மலட்டு தன்மையை போக்க வல்லது.

பற்கள்

தினமும் 6 மிளகை மென்று தின்றால் பற்கள் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். வாயில் ஈறுகளின் வீக்கம், பல்சொத்தை கிருமிகள் உற்பத்தி போன்றவற்றை தடுக்க மிளகு சிறந்த மருந்தாக உள்ளது.

ரத்த அழுத்தம்

நாற்பது வயதை நெருங்குபவர்கள் அனைவருக்கும் ரத்த அழுத்த உள்ளது. தினமும் 6 மிளகை மென்று தின்றால் ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து கொள்ள முடியும்.

மிளகின் மருத்துவ குணங்கள்:

  • கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின், தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் உள்ளன
  • மிளகு சித்த மருத்துவ முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
  • சளி, கோழை, இருமல் நீக்குவதற்கும் நச்சு முறிவு மருந்தாகவும் பயன்படுகிறது.
  • மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும் தன்மையும் உடையது.
  • உடலில் உண்டாகும் காய்ச்சலைப் போக்கும் தன்மை உடையது.
  • இது காரமும் மணமும் உடையது. உணவைச் செரிக்க வைப்பது.
  • உணவில் உள்ள நச்சுத் தன்மையைப் போக்க வல்லது

Saturday 19 June 2021

சடாரி !

சடாரி !

வைணவக் கோயில்களில் பெருமாளை சேவித்த பிறகு, பக்தர்களுக்கு ஆசிர்வாதம் செய்ய சடாரி என்ற மகுடத்தைத் தலையில் வைப்பார்கள். சற்று கவனித்துப் பார்த்தால்,அதன் மேல் இரண்டு பாதச்சுவடுகள் பொறிக்கப்பட்டிருக்கும். அதென்ன திருமுடியின் மேல் திருவடி?. பெருமாளை சேவிக்கிறோம், துளசி தீர்த்தம் ஆனப் பிறகு, சடாரி வைத்துக் கொள்கிறோம். அதன் பின்னணியை பற்றி அறிந்துக் கொள்வோம்.

ஒருமுறை, தான் வாசம் செய்யும் வைகுண்டத்தில் ஸ்ரீமந் நாராயணன் சயன நிலைக்குச் செல்ல ஆயத்தமாகும் சமயம், தன்னுடைய சங்கு, சக்கரம், திருமுடி ஆகியவற்றை எடுத்து, ஆதிசேஷன் மீது வைத்தார். திடீரென தன்னை தரிசிக்க வந்த முனிவர்கள் குரல் கேட்டு, பாம்புப் படுக்கையில் இருந்து அவசரமாக எழுந்து சென்ற பரந்தாமன், வழக்கத்துக்கு மாறாக தன் பாதுகைகளை ஆதிசேஷன் அருகில் சயன அறைக்குள்ளேயே விட்டுவிட்டார்.

ஆதிசேஷன் மீது ஒய்யாரமாக சங்கும், சக்கரமும், கிரீடமும் அமர்ந்திருந்தன. ஆனால், அருகிலேயே பாதுகைகளும் இருந்தது அவற்றுக்குப் பிடிக்கவில்லை. சங்கும் சக்கரமும் பாதுகைகளைப் பார்த்து, "கவுரவத்தால் உயர்ந்த நாங்கள் இருக்கும் இடத்தில், தூசியிலே புரளும் பாதுகைகளான நீங்கள் எப்படி இருக்கலாம்?" என்று கேட்டன. "இது எங்கள் தவறில்லை. பகவான்தான் எங்களை இங்கே விட்டுச் சென்றார்" என்றன பாதுகைகள். பகவான் திருமுடியை அலங்கரிப்பவன் நான். கரங்களை அலங்கரிப்பவர்கள் சங்கும், சக்கரமும்! ஆதிசேஷன் மீது அமரும் அருகதை எங்களுக்கு மட்டுமே உண்டு. பாதங்களை அலங்கரிக்கும் கேவலமான பாதுகைகளான உங்களுக்கு இங்கே இருக்க அருகதை இல்லை. உங்கள் வழக்கமான இடத்துக்குப் போய்விடுங்கள் என்று, கோபத்துடன் சொன்னது கிரீடம். இதுவரை பொறுமையாக இருந்த பாதுகைகள், கிரீடம் இப்படிச் சொன்னதும் கோபத்துடன், "நாங்கள் பாதங்களை அலங்கரிப்பவர்கள்தான். ஆனால், கேவலமானவர்கள் அல்ல. மகரிஷிகளும் தேவர்களும் பகவானின் பாதங்களில் தங்களின் திருமுடிகள் படும்படி நமஸ்கரித்து வணங்குகிறார்களே தவிர, உங்களைத் தழுவித் தரிசிப்பதில்லை. புனிதமான திருவடிகளை அலங்கரிக்கும் நாங்களும் புனிதமானவர்கள்தான்" என்று பதிலுக்கு வாதிட்டன.

கிரீடத்துடன், சங்கும், சக்கரமும் சேர்ந்து கொண்டதால், தனித்து நின்ற பாதுகைகளால், ஏளனப் பேச்சைத் தாங்கிக்கொள்ள முடியாமல்,பகவான் எப்போது வருவார். அவரிடம் முறையிடலாம் என்று கலங்கி காத்து நின்றன. பகவான் வந்தார். அவர் பாதத்தில் கண்ணீர் சிந்தி, பாதுகைகள் முறையிட்டன. "இங்கே நடந்ததை நான் அறிவேன். என் சன்னதியில் ஏற்றத் தாழ்வுகள் கிடையாது என்பதை உணராமல், கிரீடமும் சங்கும் சக்கரமும் கர்வம் கொண்டு, புனிதமான உங்களைத் தூற்றியதற்கான பாவ பலனை அனுபவிக்க வேண்டி வரும். தர்மத்தை நிலைநாட்ட ,ஸ்ரீராமாவதாரம் நிகழும்போது, சக்கரமும் சங்கும் என சகோதரர்களாக பரதன், சத்ருக்னன் என்ற பெயர்களில் அவதரிப்பார்கள். அந்த அவதாரத்தில் நான் அரச பதவியை ஏற்று சிம்மாசனத்தில் அமர முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படும். அப்போது இந்தத் திருமுடியை சிம்மாசனத்தில் வைத்து அதன் மீது பாதுகைகளான உங்களை வைத்து, சங்கும் சக்கரமும் 14 வருடங்கள் உங்களைப் பூஜிப்பார்கள். அவரவர் வினைக்கேற்ப அவரவர் தேடிக் கொள்ளும் பயன் இது" என்றார் பகவான்.

பகவான் சிரசை அலங்கரிக்கும் திருமுடி, ஒருவகையில் உயர்ந்தது என்றால், அவரின் திருப் பாதங்களை அலங்கரிக்கும் பாதுகைகளும் மற்றொரு வகையில் உயர்ந்தவையே. சடாரியை நம் தலையில் வைத்துக்கொள்ளும்போது நம்முடைய 'நான்' என்ற ஆணவம், அகங்காரம் அழியவேண்டும்,என்பதே சடாரி சாதித்தலின் பின்னணியில் உள்ள தாத்பரியம்.

இனி நாம் கோவிலுக்கு செல்லும் போது,இதை நம் குழந்தைகளுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்.நம் இந்து மதத்தின் சம்பிரதாயங்களுக்குப் பின் வாழ்வியல் தத்துவங்கள் அடங்கியுள்ளது என்பதை நாம் உணர்ந்துப் போற்ற வேண்டும்.


Thursday 17 June 2021

கோவிலுக்கு செல்வது ஏன்?


8 வடிவ நடை பயற்சி.

தினமும் காலையில் 2 கிராம்பு… எவ்ளோ நன்மை தெரியுமா?

ஆரோக்கிய நன்மைகள் தரும் கிராம்பு தினமும் இரண்டு சாப்பிட்டால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும்இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், மக்கள அனைவரும் பெரும் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள மக்கள் அனைவரும் இயற்கை பொருட்களை நாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எவ்வளவுதான் மருந்துகள் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டாலும் இயற்கை பொருட்களில் உள்ள நலன்களை பெறுவது தான் உடலுக்கு உண்மையான சக்தியை கொடுக்கும்.

அந்த வகையில், இந்திய மருத்துவத்திலும், ஆயுர்வேதத்திலும் இயற்கையின் அதிக ஆரோக்கியம் நிறைந்த கிராம்பு அதிக நன்மைகளை கொடுக்கிறது. கிராம்பில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், உடலில் இரத்த வெள்ளை அணுக்களை அதிகரிக்க உதவுகிறது. மேலும் உங்கள் உடலை நோயிலிருந்து பாதுகாக்கவும், நோய்ஏதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பெரிதும் உதவுகிறது. செரிமான பிரச்சினைகளுக்கு தீர்வும் கொடுக்கிறது. கல்லீரல் தான் உங்கள் உடலை நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது. மேலும் கல்லீரலின் செயல்பாட்டை ஆரோக்கியமாக்க, தினமும் கிராம்பு சாப்பிடுவது நன்மை பயக்கும். மேலும் கிராம்புகளில் இருக்கும் யூஜெனோல் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. பல்வலி உள்ளவர்கள் கிராம்பு எண்ணெய் பயனபடுத்தினால் பல்வலியை தீர்க்கும். பல் வலி, ஈறுகளில் வலி இருந்தாலும் அந்த இடத்தில் கிராம்பு வைத்தால் வலியைத் தீர்க்கும்.

கிராம்புகளில் இருக்கும் யூஜெனோல் வலி நிவாரணி மற்றும் அழற்சி எதிர்ப்பு திறன்களையும் கொண்டுள்ளது. வலி நிவாரணத்திற்காக நீங்கள் அவற்றை உட்கொள்ளலாம் மேலும் தலைவலி உள்ளவர்கள், கிராம்பை பயன்படுத்தாலம். பாலுடன் கிராம்பு தூள் கலந்து குடிக்கலாம். கிராம்பு எண்ணெய்யை நுகர்ந்தால் கூட நிவாரணம் கிடைக்கும். கிராம்பில் ஃபிளாவனாய்டுகள், மாங்கனீசு மற்றும் யூஜெனோல் உள்ளதால், எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

காலையில் எழுந்தவுடன்  2 கிராம்புகளை வாயில் அப்படியே வைத்திருந்தால் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அகற்றும். பற்களின் ஈறுகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. கிராம்பு மற்றும் துளசி பயன்படுத்தி வீட்டில் மவுத்வாஷையும் தயார் செய்யலாம். நீரிழிவு நோயாளிகள், தினம் உணவில் கிராம்பு சேர்த்து உண்ணும்போது உடலில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது.  இரத்தத்தின் சர்க்கரை சமநிலை செய்கின்றன

Saturday 12 June 2021

தீர்க சுமங்கலி பவா என்றல் என்ன?

🌼  *தீர்க சுமங்கலி பவா என்றல் என்ன? அறிந்துகொள்ளுங்கள்*

🌼 தீர்க சுமங்கலி பவா.....! 
என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்.
🌼 திருமணத்தில் ஒன்று,
🌼 60 வயது ஷஷ்டியப்த பூர்த்தியில் ஒன்று,
🌼 70 வயது பீமரத சாந்தியில் ஒன்று,
🌼 80 வயது சதாபிஷேகத்தில் ஒன்று,
🌼 96 வயது கனகாபிஷேகத்தில் ஒன்று!

🌼 இவைகள் பற்றி ஒரு சிறு விளக்கம். 

🌼 ஷஷ்டியப்த பூர்த்தி, பீம ரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் போன்ற சடங்குகளை நடத்திக்கொள்வது என்பது எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை.

🌼 பெரும் பாக்கியமும் பூர்வ புண்ணியமும் செய்தவர்களுக்கே இந்த மணவிழா காணும் பாக்கியம் அமைகிறது.

🌼 இது போன்ற வைபவங்கள் பொதுவாக ஆயுள் விருத்தியைப் பிரதானமாகக் கொண்டே அமைகின்றன.

🌼 சகல தேவர்களையும் மகிழ்விக்கும் பொருட்டு அன்றைக்கே வேத பாராயணங்களும், ஹோமங்களும் நடைபெறுகின்றன.

🌼 உறவு முறைகள் கூடி நின்று குதூகலப்படும் போது, ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியரின் மனம் மகிழும்.

🌼 நமக்கென்று இத்தனை சொந்தங்களா என்கிற சந்தோஷம் அவர்களின் மனதில் பரவசத்தை ஏற்படுத்தும்.

🌼 பூமி 360 பாகைகளாகவும் அந்த 360 பாகைகளும் 12 ராசி வீடுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

🌼 இந்த 360 பாகைகளையும் கடந்துசென்று ஒரு வட்டப் பாதையை பூர்த்தி செய்வதற்கு 

⚜சூரியனுக்கு ஓர் ஆண்டும்,
⚜செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டும், ⚜சந்திரனுக்கு ஒரு மாதமும்,
⚜புதனுக்கு ஒரு வருடமும்,
⚜வியாழனுக்கு 12 வருடங்களும்,
⚜வெள்ளிக்கு ஒரு வருடமும்,
⚜சனி பகவானுக்கு 30 வருடங்களும், ⚜ராகுவுக்கு ஒன்றரை வருடங்களும், ⚜கேதுவுக்கு ஒன்றரை வருடங்களும், ஆகின்றன.

🌼 இந்த சுழற்சியின் அடிப்படையில் ஒருவர் ஜனித்து, அறுபது வருடங்கள் நிறைவடைந்த தினத்துக்கு அடுத்த தினம், அவர் பிறந்த நாளன்று இருந்த கிரக அமைப்புகளும் வருடம், மாதம் போன்றவையும் மாறாமல் அப்படியே அமைந்திருக்கும்.

🌼 மிகவும் புனித தினமான அன்றுதான், சம்பந்தபட்டவருக்கு ஷஷ்டியப்த பூர்த்தி வைபவம் மிகவும் ஆச்சாரமான முறையில் தெய்வாம்சத்துடன் நிகழ வேண்டும்.

🌼 ஷஷ்டியப்த பூர்த்தி தினத்தன்று வேத பண்டிதர்களின் முன்னிலையில் நிகழ்த்தப்படும்.

🌼 பூஜையின் போது 84 கலசங்களில் தூய நீரை நிரப்பி மந்திரங்களை உச்சரித்து ஹோமங்கள் நடைபெறும்.

🌼 அங்கே உச்சரிக்கப்படும் வேத மந்திரங்களின் சத்தம் மூலம் கலசத்தில் உள்ள நீர் தெய்வீக சக்தி பெற்று, புனிதம் அடைகிறது.

🌼 பின்னர், அந்தக் கலசங்களில் உள்ள நீரைக் கொண்டு ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியினருக்கு அபிஷேகம் நடைபெறும்.

🌼 அபிஷேகத்துக்குப் பயன்படும் இந்த 84 கலசங்கள் எதைக் குறிக்கின்றன?

🌼 தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது என்பதை நாம் அறிவோம்.

🌼 இந்த அறுபது ஆண்டுகளுக்கான தேவதைகளையும், இந்த தேவதைகளின் அதிபதிகளாகிய...

⚜அக்னி,
⚜சூரியன்,
⚜சந்திரன்,
⚜வாயு,
⚜வருணன்,
⚜அஷ்ட திக் பாலகர்கள் பாலாம்பிகை,
⚜அமிர்த கடேஸ்வரர்,
⚜நவநாயகர்கள்..

சேர்த்து குறிப்பதற்காகத்தான் 84 கலசங்கள் என்பது ஐதீகம்.

🌼 பிரபவ முதல் விஷு வரையான 15 ஆண்டுகளுக்கு அக்னி பகவானும்,

🌼 சித்ரபானு முதல் துன்முகி வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சூரிய பகவானும்,

🌼 ஹேவிளம்பி முதல் விரோதிகிருது வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சந்திர பகவானும்,

🌼 பரிதாபி முதல் அட்சய வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு வாயு பகவானும்..
அதிபதிகள் ஆவார்கள்.

🌼 தன்னுடைய 60-வது வயதில் ஐம்புலன்களால் வரும் ஆசையை வென்ற மனிதன் 60 வயதில் இருந்துதான், தனது என்ற பற்றையும் துறக்க முயல வேண்டும்.

🌼 தன்னுடைய மகன், மகள், சொந்த பந்தம் என்ற கண்ணோட்டம் மறைந்து உற்றார் உறவினர் அனைவரும் தன் மக்களே…. எல்லோரும் ஒரு குலமே என்கிற எண்ணம் 70 வயது நிறைவில் பூர்த்தி ஆக வேண்டும்.

🌼 தான், தனது என்ற நிலை மறந்து அனைவரையும் ஒன்றாகக் காணும் நிலை பெற்றவர்களே 70-வது நிறைவில் பீஷ்ம ரத சாந்தியைக் கொண்டாடும் தகுதியைப் பெறுகிறார்கள்.

🌼 காமத்தை முற்றிலும் துறந்த நிலையே பீஷ்ம ரத சாந்திக்கான அடிப்படை தகுதியாகும்.

🌼 70-வது வயதில் இருந்து ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றி உள்ள எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண முயல வேண்டும்.

🌼 ஒவ்வொரு உயிரிலும் உறையும் இறைவனுடன் உரையாடப் பழகிக் கொள்ள வேண்டும்.

🌼 அவனுக்கு ஜாதி, மதம், இன பேதம் எதுவும் இல்லை.

🌼 இப்படி அனைத்திலும் இறைவனை, அனைத்தையும் இறைவனாகக் காணும் நிலையை ஒரு மனிதன் 80 வயதில் பெறும் போதுதான் சதாபிஷேகம் (ஸஹஸ்ர சந்திர தர்ஸன சாந்தி – ஆயிரம் பிறை கண்டவன்) காணும் தகுதியை அவன் அடைகிறார். அப்போது சதாபிஷேகம் செய்துகொள்ள வேண்டும்

🌼 இறையோடு இரண்டரக் கலந்து இறை சிந்தனை கொண்ட தம்பதிகளுக்கு 96 வயதில் கனகாபிஷேகம் செய்து இந்த ஜென்மாவின் ஐந்தாவது மாங்கல்யம் பூட்டி தீர்க்க சுமங்கலி பவா ஆசிக்கு உரியதாக அமைகிறது.

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

Prevent fatiuge and worry and keep your energy and spirits high


Don't worry about critisism


Cultivate &mental attitude that will bring you peace and happiness


Fundamental principles for overcoming worry


Principles To Win Friends & Influence People

Dale Carnegie's 30 Principles To Win Friends & Influence People
1. Don't Criticize, Condemn or Complain
2. Give Honest, Sincere, Appreciation
3. Arouse In The Other Person An Eager Want
4. Become Genuinely Interested In Other People
5. Smile
6. Remember That A Person's Name Is To That Person The Sweetest And Most Important Sound In Any Language
7. Be A Good Listener. Encourage Others To Talk About Themselves
8. Talk In Terms Of The Other Person's Interests
9. Make The Other Person Feel Important - And Do It Sincerely
10. The Only Way To Get The Best Of An Argument Is To Avoid It
11. Show Respect For The Other Person's Opinion. Never Say, "You're Wrong."
12. If You Are Wrong Admit It Quickly And Emphatically
13. Begin In A Friendly Manner
14. Get The Other Person Saying "Yes, Yes"
15. Let The Other Person Do A Great Deal Of The Talking
16. Let The Other Person Feel That The Idea Is His Or Hers
17. Try Honestly To See Things From The Other Person's Point Of View
18. Be Sympathetic With The Other Person's Ideas And Desires
19. Appeal To The Nobler Motives
20. Dramatize Your Ideas
21. Throw Down A Challenge
22. Begin With Praise And Honest Appreciation
23. Call Attention To People's Mistakes Indirectly
24. Talk About Your Own Mistakes Before Criticizing The Other Person
25. Ask Questions Instead Of Giving Direct Orders
26. Let The Other Person Save Face
27. Praise The Slightest Improvement And Praise Every Improvement. Be "Hearty In Your Approbation And Lavish In Your Praise".
28. Give The Other Person A Fine Reputation To Live Up To
29. Use Encouragement. Make The Fault Seem Easy To Correct
30. Make The Other Person Happy About Doing The Thing You Suggest

தீர்க சுமங்கலி பவா என்றல் என்ன?

🌼  *தீர்க சுமங்கலி பவா என்றல் என்ன? அறிந்துகொள்ளுங்கள்*

🌼 தீர்க சுமங்கலி பவா.....! 
என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்.
🌼 திருமணத்தில் ஒன்று,
🌼 60 வயது ஷஷ்டியப்த பூர்த்தியில் ஒன்று,
🌼 70 வயது பீமரத சாந்தியில் ஒன்று,
🌼 80 வயது சதாபிஷேகத்தில் ஒன்று,
🌼 96 வயது கனகாபிஷேகத்தில் ஒன்று!

🌼 இவைகள் பற்றி ஒரு சிறு விளக்கம். 

🌼 ஷஷ்டியப்த பூர்த்தி, பீம ரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் போன்ற சடங்குகளை நடத்திக்கொள்வது என்பது எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை.

🌼 பெரும் பாக்கியமும் பூர்வ புண்ணியமும் செய்தவர்களுக்கே இந்த மணவிழா காணும் பாக்கியம் அமைகிறது.

🌼 இது போன்ற வைபவங்கள் பொதுவாக ஆயுள் விருத்தியைப் பிரதானமாகக் கொண்டே அமைகின்றன.

🌼 சகல தேவர்களையும் மகிழ்விக்கும் பொருட்டு அன்றைக்கே வேத பாராயணங்களும், ஹோமங்களும் நடைபெறுகின்றன.

🌼 உறவு முறைகள் கூடி நின்று குதூகலப்படும் போது, ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியரின் மனம் மகிழும்.

🌼 நமக்கென்று இத்தனை சொந்தங்களா என்கிற சந்தோஷம் அவர்களின் மனதில் பரவசத்தை ஏற்படுத்தும்.

🌼 பூமி 360 பாகைகளாகவும் அந்த 360 பாகைகளும் 12 ராசி வீடுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

🌼 இந்த 360 பாகைகளையும் கடந்துசென்று ஒரு வட்டப் பாதையை பூர்த்தி செய்வதற்கு 

⚜சூரியனுக்கு ஓர் ஆண்டும்,
⚜செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டும், ⚜சந்திரனுக்கு ஒரு மாதமும்,
⚜புதனுக்கு ஒரு வருடமும்,
⚜வியாழனுக்கு 12 வருடங்களும்,
⚜வெள்ளிக்கு ஒரு வருடமும்,
⚜சனி பகவானுக்கு 30 வருடங்களும், ⚜ராகுவுக்கு ஒன்றரை வருடங்களும், ⚜கேதுவுக்கு ஒன்றரை வருடங்களும், ஆகின்றன.

🌼 இந்த சுழற்சியின் அடிப்படையில் ஒருவர் ஜனித்து, அறுபது வருடங்கள் நிறைவடைந்த தினத்துக்கு அடுத்த தினம், அவர் பிறந்த நாளன்று இருந்த கிரக அமைப்புகளும் வருடம், மாதம் போன்றவையும் மாறாமல் அப்படியே அமைந்திருக்கும்.

🌼 மிகவும் புனித தினமான அன்றுதான், சம்பந்தபட்டவருக்கு ஷஷ்டியப்த பூர்த்தி வைபவம் மிகவும் ஆச்சாரமான முறையில் தெய்வாம்சத்துடன் நிகழ வேண்டும்.

🌼 ஷஷ்டியப்த பூர்த்தி தினத்தன்று வேத பண்டிதர்களின் முன்னிலையில் நிகழ்த்தப்படும்.

🌼 பூஜையின் போது 84 கலசங்களில் தூய நீரை நிரப்பி மந்திரங்களை உச்சரித்து ஹோமங்கள் நடைபெறும்.

🌼 அங்கே உச்சரிக்கப்படும் வேத மந்திரங்களின் சத்தம் மூலம் கலசத்தில் உள்ள நீர் தெய்வீக சக்தி பெற்று, புனிதம் அடைகிறது.

🌼 பின்னர், அந்தக் கலசங்களில் உள்ள நீரைக் கொண்டு ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியினருக்கு அபிஷேகம் நடைபெறும்.

🌼 அபிஷேகத்துக்குப் பயன்படும் இந்த 84 கலசங்கள் எதைக் குறிக்கின்றன?

🌼 தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது என்பதை நாம் அறிவோம்.

🌼 இந்த அறுபது ஆண்டுகளுக்கான தேவதைகளையும், இந்த தேவதைகளின் அதிபதிகளாகிய...

⚜அக்னி,
⚜சூரியன்,
⚜சந்திரன்,
⚜வாயு,
⚜வருணன்,
⚜அஷ்ட திக் பாலகர்கள் பாலாம்பிகை,
⚜அமிர்த கடேஸ்வரர்,
⚜நவநாயகர்கள்..

சேர்த்து குறிப்பதற்காகத்தான் 84 கலசங்கள் என்பது ஐதீகம்.

🌼 பிரபவ முதல் விஷு வரையான 15 ஆண்டுகளுக்கு அக்னி பகவானும்,

🌼 சித்ரபானு முதல் துன்முகி வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சூரிய பகவானும்,

🌼 ஹேவிளம்பி முதல் விரோதிகிருது வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சந்திர பகவானும்,

🌼 பரிதாபி முதல் அட்சய வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு வாயு பகவானும்..
அதிபதிகள் ஆவார்கள்.

🌼 தன்னுடைய 60-வது வயதில் ஐம்புலன்களால் வரும் ஆசையை வென்ற மனிதன் 60 வயதில் இருந்துதான், தனது என்ற பற்றையும் துறக்க முயல வேண்டும்.

🌼 தன்னுடைய மகன், மகள், சொந்த பந்தம் என்ற கண்ணோட்டம் மறைந்து உற்றார் உறவினர் அனைவரும் தன் மக்களே…. எல்லோரும் ஒரு குலமே என்கிற எண்ணம் 70 வயது நிறைவில் பூர்த்தி ஆக வேண்டும்.

🌼 தான், தனது என்ற நிலை மறந்து அனைவரையும் ஒன்றாகக் காணும் நிலை பெற்றவர்களே 70-வது நிறைவில் பீஷ்ம ரத சாந்தியைக் கொண்டாடும் தகுதியைப் பெறுகிறார்கள்.

🌼 காமத்தை முற்றிலும் துறந்த நிலையே பீஷ்ம ரத சாந்திக்கான அடிப்படை தகுதியாகும்.

🌼 70-வது வயதில் இருந்து ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றி உள்ள எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண முயல வேண்டும்.

🌼 ஒவ்வொரு உயிரிலும் உறையும் இறைவனுடன் உரையாடப் பழகிக் கொள்ள வேண்டும்.

🌼 அவனுக்கு ஜாதி, மதம், இன பேதம் எதுவும் இல்லை.

🌼 இப்படி அனைத்திலும் இறைவனை, அனைத்தையும் இறைவனாகக் காணும் நிலையை ஒரு மனிதன் 80 வயதில் பெறும் போதுதான் சதாபிஷேகம் (ஸஹஸ்ர சந்திர தர்ஸன சாந்தி – ஆயிரம் பிறை கண்டவன்) காணும் தகுதியை அவன் அடைகிறார். அப்போது சதாபிஷேகம் செய்துகொள்ள வேண்டும்

🌼 இறையோடு இரண்டரக் கலந்து இறை சிந்தனை கொண்ட தம்பதிகளுக்கு 96 வயதில் கனகாபிஷேகம் செய்து இந்த ஜென்மாவின் ஐந்தாவது மாங்கல்யம் பூட்டி தீர்க்க சுமங்கலி பவா ஆசிக்கு உரியதாக அமைகிறது.

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

எதற்காக சாவு வீட்டில் சமைக்க கூடாது என்கிறார்கள்? மீறி சமைத்தால் என்ன விபரீதம் ஏற்படும்.

பொதுவாக இந்த உலகிலில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் மரணித்த ஆக வேண்டும் என்பது விதிக்கப்பட்ட விதியாகும். இதிலிருந்து எவராலும் தப்ப இயலாது. மனிதர்கள் மட்டுமல்ல, அணைத்து ஜீவராசிகளுக்கும் இது பொதுவானது.நமது இந்து மத சடங்குகளில் இந்த இறுதி சடங்கும் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. அதிலும் இறந்தவரின் வீடுகளுக்கு தீட்டு என்று ஒரு விஷயம் கடைபிடிக்கப்படும். அதாவது தீட்டு என்று சொல்லப்படும் நாட்களில் அவர்களது வீடுகளில் உணவு உண்ணவோ இல்லை நீர் அருந்தவோ மாட்டார்கள்.இது எதற்காக கடைபிடிக்கப்பட்டது என்றால், இறந்த உடலில் இருந்து வெளிப்படும் சில நுண்ணுயிர் கிருமிகள் அதிகபட்சமாக 16 நாட்கள் வரையில் உயிர் வாழக்கூடியது. அந்த தீட்டு நாட்களில் இறந்தவர் வீடுகளில் சமைக்க மாட்டார்கள். 16 நாட்கள் கழிந்து வீடுகளுக்கு சுண்ணாம்பு பூசி, படைத்த பின்னர் தான் அவர்கள் சமைக்க தொடங்குவார்கள்.இப்படி செயும்போது கிருமிகள் அழிந்து சுத்தமான சூழ்நிலை உருவாகும். அதனால் தான் இறந்தவர்களின் வீடுகளில் சமைக்க மாட்டார்கள். அருகில் இருக்கும் உறவினர்களின் வீடுகளிலோ  கடைகளிலோ வாங்கி உண்ணுவார்கள்.

கரித்துண்டு என்பது விஷத்தை உறிஞ்சும்

கரிக்குழம்பை வெளியே கொண்டு செல்லும் போது ஏன் கரித்துண்டு, வேப்பலை, ஆணி, பயன்படுதுக்கிறோம் என உங்களுக்கு தெரியுமா? பொதுவாக இந்த கேள்வியை யாராவதிடம் கேட்டால் பதில் என்னவோ ஒன்றுதான் பேய் புடித்துவிடுமாம். பேய்க்கு என்ன வேற வேலையில்லையா எவன் பைல எதகொண்டு போறானு பார்க்கறது தான் வேலையா? அதுதான் இல்லைங்க! நம் முன்னோர்கள் கரித்துண்டு என்பது விஷத்தை உறிஞ்சும் தன்மை உண்டு என்பதை காலம் காலமாக நம்பி வாழ்க்கையில் பின்பற்றியுள்ளார்கள். 

Wednesday 9 June 2021

வர்க்க Vs Area of influence


ராசி கட்டம் Vs நவம்ச கட்டம்


பிரம்ம ஹததி தோஷம் என்ன செய்யும்


30 திதிகள்


நட்சத்திரம் Vs அதிபதி


சனிதேவரின் நாமம்


கிரகம்,காரகன்,நவதுவரங்கள், காது,உறவுகள்


ராசிகளின் தன்மைகள்


ராசி நிலையில் உடல் உறுப்புகள்


நட்சத்திரமும் தமிழ் அர்த்தமும்


நட்சத்திரம் Vs அதிதேவதைகள்


ராசி மண்டலம்


ராசி Vs உச்சம் ,நீச்சம்,ஆட்சி, நட்பு,பகை.


தோஷங்கள் நீக்கும் இறைகவசம்


நட்சத்திரம் Vs ருத்ராட்சம்


பண பெட்டி இருக்க வேண்டிய திசைகள்



ராசி கற்கள்


நவ கிரக கோலங்கள்


கேது நின்ற பலன்கள்



கை ரேகைகள்




சிவராத்திரியின் மகிமை என்ன?

சிவராத்திரியின் மகிமை என்ன?

பதில் : "லூமினிபெரஸ் ஈத்தர்" ( Luminiferous Eather ) எனப்படும் ஒரு  பிரம்மாண்ட சக்தி மகா சிவராத்திரி அன்று மட்டுமே ராக்கெட் வேகத்தில் ஸ்பிரிங் என்ற தன்மையில் பூமியை நேரடியாக வந்து இறங்கும். இந்த நேரத்தில் முதுகை நேராக வைத்து  தூங்காமல் இருந்தால் அபரிமிதமான சக்தி கிடைக்கும். இதனால் பல நன்மைகள் உண்டு. இந்த சக்தி வேறு எந்த நாளும் கிடைக்காது.  எனவேதான் மகாசிவராத்திரியன்று தூங்காமல் விழித்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

அறிவியல் பூர்வமாக ஆதாரம் வேண்டும் என்றால் இங்கே நான் கொடுத்திருக்கும் சில படங்களை பார்த்துக்கொண்டே நான் சொல்வதைக் கேளுங்கள்.

ஈத்தர் எனப்படும் சக்தி தான் இந்த உலகத்தை இயக்குகிறது. இந்த ஈத்தர் உலகம் முழுவதும், அண்டவெளி முழுவதும் நிறைந்து இருக்கிறது. மேலும் பூமியை நோக்கி ஒவ்வொரு வினாடியும் வந்துகொண்டே இருக்கிறது.

பூமி சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது. இதில் இரண்டு நீள்வட்ட பாதையில் உள்ளது. ஓன்று சிறிய நீள்வட்டப் பாதை, மற்றொன்று பெரிய நீள்வட்டப் பாதை. பூமி பெரிய நீள்வட்டப்பாதையில் இருந்து சிறிய நீள்வட்ட பாதிக்கும் மாறும் நேரம் தான் இந்த மகா சிவராத்திரி நேரம். ( படம் பார்க்கவும் )

மேலும் ஈத்தர் என்ற சக்தி எப்பொழுதும் பூமியை நோக்கி வந்து கொண்டே இருக்கிறது. வருடத்தில் ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி வரும். ஒவ்வொரு மாதமும் வரும் சிவராத்திரியில் ஈத்தர் சக்தி சற்று அதிகமாக இருக்கும். ஆனால் வருடத்தில் ஒருமுறை வரும் மாசி மாத சிவராத்திரி மட்டும் அபரிமிதமாக, அளவுக்கு அதிகமாக சக்தி இருக்கும். இதற்கு நிகர் வேறு எந்த மதமும் இருப்பதில்லை. எனவேதான் இந்த சிவராத்திரியை மகா சிவராத்திரி என்று அழைக்கிறார்கள். 

ஈத்தர் சக்தி இரண்டு விதமான தன்மைகளில் பூமியை நோக்கி வரும் ஒன்று ஸ்பிரிங் (SPRING ) , இரண்டு ஃபால் ( FALL ). இதில் ஸ்பிரிங்க்கு சக்தி அதிகம். ஃபால்க்கு சக்தி குறைவு. ( படம் பார்க்கவும் )

மாசி மாசம் மகா சிவராத்திரியில் வரும் ஈத்தர் ஸ்பிரிங் தன்மைகொண்டது. இதற்குத் தான் அதிக சக்தி உண்டு. ஏனென்றால் ஈத்தர் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி நகரும், பூமி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சுற்றிக்கொண்டிருக்கும். எனவே நேரடியாக முழு சக்தியை இந்த மகாசிவராத்திரியில் மட்டுமே கிடைக்கும்.

அதேசமயம் 180 கேண மாற்றத்தில், ஆவணி மாதத்திலும் ஈத்தர் கிடைக்கும் ஆனால் அது ஃபால் என்ற தன்மையில் இருக்கும் அதற்கு சக்தி குறைவு மேலும் பூமி சுற்றி நகரும் அதே திசையில் ஈத்தரும் பின்தோடர்ந்து வருவதால் சக்தி குறைவாக இருக்கிறது.

புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், ஈத்தர் 24 மணி நேரமும் பூமியை நோக்கி சைக்கிள் வேகத்தில் வரும். ஒவ்வொரு மாதமும் வரும் சிவராத்திரியில் புல்லட் வேகத்தில் வரும். ஆவணி, ஆடி மாதத்தில் கார் வேகத்தில் வரும். மாசி மாசம் மட்டும் ராக்கெட்டில் வேகத்தில் வரும்.

மகா சிவராத்திரி அன்று  பூமி, நிலா, சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் நடு இரவு 12 :15 AM முதல் 12: 45 AM வரை உச்சகட்ட ஈத்தர் சக்தி கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. எனவே இந்த நேரம் சிறப்பான நேரம். இந்த நேரம் ஒவ்வொரு நாட்டிற்கும் மாறும்.

இந்த லூமினிபெரஸ் ஈத்தர்" ( Luminiferous Eather ) பல மதங்களில், பல மார்க்கங்களில் இறைவன்,கடவுள், பிரமாண்டம், இறைத்துகள் ஆற்றல், பேரறிவு, பிரபஞ்சம், பரமாத்மா மற்றும் அண்டம் என்றும் பல்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள்.

இதற்கு ஆதாரமாக கிமு நான்காம் நூற்றாண்டில் அரிஸ்டாட்டில் பல கண்டுபிடிப்புகளை கொடுத்துள்ளார். மேலும் 17 ம்  நூற்றாண்டு முதல் ஐசக் நியூட்டன், ஐன்ஸ்டீன் மற்றும் அகஸ்டின் போன்ற பல்வேறு விஞ்ஞானிகளும் இதைப்பற்றி வேறு வேறு பெயர்களில் கூறியிருக்கிறார்கள்.

மகாசிவராத்திரி அன்று விரதம் இருந்து, தூங்காமல், முதுகை நேராக வைத்து, விழித்திருந்து தியானம் செய்வது மிக மிக மிக மிக மிக சிறப்பு.

ஈதர் உச்சந்தலையில் உள்ள சகஸ்ரார சக்கரத்தின் வழியாக பீனியல் கிளாண்ட் என்ற ஆனந்த சுரப்பி என்ற ஆனந்த மூளையை அடைந்து பலவிதமான நல்ல ஹார்மோன்களை சுரக்கும். இந்த நேரத்தில் நமக்கு நாமே நம்மை ஆசிர்வாதம் ( Self Blessing )
செய்து கொள்ளும் பொழுது இது நமது டி என் ஏ (  DNA ) ல்  கெட்ட பதிவுகளை  ( கர்மா ) அழிக்கும் வல்லமை உள்ளது.

மகா சிவராத்திரியில் பகலில் சக்தி கிடைக்காதா?

பகலில் சூரிய வெளிச்சம் இருப்பதால் ஈத்தர்  சக்தி சற்று குறைவாக இருக்கும். இரவில் சூரிய வெளிச்சம் இல்லாததால் சக்தி அதிகமாக இருக்கும். இரவு 9 மணிக்குத்தான் மெலடோனின்  ( Melatonin ) என்ற ஒரு திரவம் நமது உடலில்  சுரக்கும். மேலும் காலை 2 மணிக்குத்தான் நாம் பிரபஞ்சத்தோடு மிகவும் நெருக்கமாக இணைந்திருக்கும் நேரம். எனவே இரவு 9 மணி காலை 2 மணி வரை தான் அதிக சக்தி பெறும் நேரம் எனவே இரவில் கண் விழிக்கிறார்கள்.

அதை சிர்காட

ியன் ரிதம் என்று அழைப்பர். ( Circadian Rhythm ) 

மகா சிவராத்திரி ஏன் இந்தியாவில் மட்டும் இருக்கிறது மற்றும் நாடுகளில் இல்லை?

நமது நாட்டில் மட்டும்தான் ஆசான்கள் உள்ளதை உள்ளபடி அனைவருக்கும் ஓபனாக சொல்கிறார்கள். பல நாடுகளில் இந்த விஷயத்தை ஆசான்கள் மட்டும் புரிந்து தான் மட்டும் பயிற்சி செய்து சக்தியை எடுத்துக் கொள்கிறார்கள். மேலும் பல நாடுகளில் இதுபோன்ற விஷயங்கள் யாருக்கும் தெரிவதில்லை.

நண்பர்களே, இதை தான் "தூக்கம்" என்ற தலைப்பில், இரவு படுத்து தூங்குவதை விட உட்கார்ந்து தூங்குவதே சிறப்பு என்று நான் பத்து வருடமாக பேசி வருகிறேன். ( https://youtu.be/RSIzI1lR5Vs ).

இந்த ஈத்தரைத்தான் "ஈசன்" என்று சிலர் அழைக்கிறார்கள். ஈசனை தான் சிவன் என்று அழைக்கிறார்கள். "ஈத்தர் ராத்திரி" என்பது தான் சிவராத்திரி என்று கூறப்படுகிறது. எனவே மகா சிவராத்திரி தூக்கம் முழிப்பது அனைத்து ஜாதி மத மக்களுக்கும் நல்லது.

சிவராத்திரி முட்டாள்தனம் என்று சொல்லும் சிலருக்கு எனது கேள்வி உங்களுக்கு பெயரில் பிரச்சனையா? அறிவில் பிரச்சனையா? அறிவியலில் பிரச்சனையா?.

உங்களுக்கு பெயர் பிரச்சனை என்றால், உங்களுக்கு பிடித்த பெயரை வைத்துக் கொள்ளுங்கள் ஆனால் அறிவையும் அறிவியலை மாற்ற முடியாது.

இப்படி அறிவியல் பூர்வமாக சொன்னால் சிலருக்கு மட்டுமே புரியும் என்பதற்காக,  ஞானிகள் பல கதைகளைச் சொல்லி அனைவரையும் தூங்காமல் முழிக்க வைத்து சக்தி கிடைக்க செய்திருக்கிறார்கள்.


சந்திராஷ்டமம்

சந்திராஷ்டமம்:
ஜோதிடத்தில் ராசிபலன் பார்க்கும்போது பலரும் கவனிக்கும் அம்சங்களில் ஒன்று சந்திராஷ்டமம் ஆகும். சந்திராஷ்டமம் என்றால், அன்றைக்கு எதிலும் எச்சரிக்கையாக  இருக்கவேண்டும். புதிய முயற்சிகளிலும் ஈடுபடக்கூடாது என்று கூறுவார்கள். அதற்குக் காரணம், ஒருவருடைய மனதுக்கு அதிபதி சந்திரன். அவர் ஒரு ராசிக்கு  எட்டாவது வீட்டில் மறைவு பெற்றிருக்கும்போது, மனதில் தேவையற்ற சஞ்சலங்கள் ஏற்படக்கூடும். மனம் அமைதியின்றி தவிக்கவும் நேரிடும். தெளிவான முடிவுகளை எடுக்க முடியாமல் போகும். எனவேதான் பெரும்பாலானோர் சந்திராஷ்டம தினங்களில் எந்த ஒரு புது முயற்சியிலும் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டும் என்று முடிவு செய்வர். உண்மையில் சந்திராஷ்டமம் என்பது எல்லோருக்கும் கெடுதல் செய்யுமா என்றால் அதுதான் இல்லை என்கிறார் ஜோதிட நிபுணர் பெருங்குளம் ராமகிருஷ்ணன். நம்மிடம் சந்திராஷ்டமம் பற்றிப் பேசும்போது 

''சந்திராஷ்டமம் என்றாலே, இன்றைக்கு எல்லோர் மனதிலும் ஒருவித அச்ச உணர்வு ஏற்படுகிறது. ஆனால், அப்படிப் பயப்படத் தேவையில்லை. சந்திராஷ்டமம் எல்லா நட்சத்திரக்காரர்களுக்கும் தொல்லை தராது. மேலும் ரிஷபம் மற்றும் கடக ராசியில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் நல்லது மட்டுமே செய்யும்'' என்று கூறினார். தொடர்ந்து சந்திராஷ்டமம் என்றால் என்ன அதற்கு உரிய பரிகாரங்கள் எவை என்பது பற்றி விவரிக்கிறார் ...
சந்திராஷ்டமம் என்பது ஒரு ராசியில் இருந்து எட்டாவது ராசியில் சந்திரன் சஞ்சரிக்கக்கூடிய காலமாகும். இதை மிகச் சரியாகக் குறிப்பிட்டுச் சொல்வதென்றால் ஒரு நட்சத்திரத்துக்குப் பதினேழாவது நட்சத்திரத்தின் பாதத்தில் சந்திரன் சஞ்சரிக்கும்போது அந்த நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம்.
உதாரணமாக விருச்சிகராசியில் சந்திரன் சஞ்சரிக்கும்போது, அந்த ராசி மேஷ ராசிக்கு எட்டாவது ராசியாக அமைகிறது. எனவே விருச்சிக ராசியில் சந்திரன் இருக்கக்கூடிய இரண்டே கால் நாள்கள் மேஷ ராசிக்கு சந்திராஷ்டம நாள்களாகும். ஆனால், மேஷராசியில் பிறந்தவர்கள் அனைவருக்கும் இரண்டே கால் நாள்கள் சந்திராஷ்டமம் என்று சொல்லிவிட முடியாது. 

துல்லியமாகச் சொல்வதென்றால், மேஷராசியில் அசுவினி, பரணி, கிருத்திகை  முதல் பாதம் என்று இரண்டு நட்சத்திரங்கள் இடம் பெற்றிருக்கின்றன. அதேபோல் விருச்சிக ராசியில் விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை ஆகிய நட்சத்திரங்கள் இடம் பெற்றிருக்கின்றன.  அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் விருச்சிக ராசியில் அனுஷ நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும்போது சந்திராஷ்டம நாளாகும். மேஷ ராசி பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் அதே விருச்சிக ராசியில் கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் நாள் சந்திராஷ்டம நாளாகும்.  மேஷ ராசி கிருத்திகை நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் விருச்சிக ராசியில் கேட்டை நட்சத்திரம் 4-ம் பாதத்தில் சஞ்சரிக்கும் வேளை சந்திராஷ்டம காலமாகும். கிருத்திகை 2, 3, 4 ஆகிய பாதங்களில் பிறந்தவர்களுக்கு சந்திரன் மூலம் நட்சத்திரம் தனுசு ராசியில் சந்திரன் சஞ்சரிக்கும் வேளை சந்திராஷ்டம நாளாகும்.

சந்திரனைப் பற்றி மற்றுமொரு விஷயத்தையும் குறிப்பிடவேண்டும். சந்திரன் மாத்ருகாரகன். எனவே ஒருவருக்கு சந்திராஷ்டம நாளில் தாயுடன் கருத்துவேறுபாடு, தாய்வழி  உறவினர்களுடன் வீண் மனஸ்தாபம் போன்ற பலன்களும் ஏற்படும். 
ஜோதிட ரீதியாக பொதுவாக ஒரு நாளுக்கு பலன் பார்க்கும் போது சந்திரனை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும்.

அதனால்தான் ஜனன கால சந்திரனுக்கு கோசார சந்திரன் எந்த நிலையில் இருக்கிறாரோ அதை வைத்து முடிவு செய்கிறோம்.  கடகம் மற்றும் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டம நாள் கெடுதல் செய்யாது. காரணம் கடகம் சந்திரன் ஆட்சி பெறும் ராசி என்பதாலும், ரிஷபம் சந்திரன் உச்சம்  பெறும் ராசி என்பதாலும் அந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு சந்திரன் நன்மையே செய்வார்.

அதேபோல் தன்னுடைய நட்சத்திரங்களான ரோகிணி - அஸ்தம் - திருவோணம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டம தினத்தில் நல்லது மட்டுமே நடக்கும்.  வளர்பிறையில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டம தினத்தில் நன்மை நடக்கும். அதனால் சந்திராஷ்டமம் என்றால் எல்லோருக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என்று சொல்லக் கூடாது.

பரிகாரம்:

சந்திராஷ்டம நாளில் எந்த ஒரு செயலையும் ஆரம்பிக்கும் முன் குலதெய்வத்தையும், முன்னோர்களையும்,  இஷ்டதெய்வத்தையும் வணங்கிவிட்டு ஆரம்பிப்பது நன்மை தரும். இப்படிச் செய்தால் காரியத்துக்கு எந்தத் தடையும் வராது.

நக்ஷத்ர விருட்சங்கள் (பாத வாரியாக)

நக்ஷத்ர விருட்சங்கள் (பாத வாரியாக)

அஸ்வினி
1 ம் பாதம் - எட்டி
2 ம் பாதம் - மகிழம்
3 ம் பாதம் - பாதாம்
4 ம் பாதம் – நண்டாஞ்சு

பரணி
1 ம் பாதம் - அத்தி
2 ம் பாதம் - மஞ்சக்கடம்பு
3 ம் பாதம் - விளா
4 ம் பாதம் - நந்தியாவட்டை

கார்த்திகை
1 ம் பாதம் - நெல்லி
2 ம் பாதம் - மணிபுங்கம்
3 ம் பாதம் - வெண் தேக்கு
4 ம் பாதம் - நிரிவேங்கை 

ரோஹிணி
1 ம் பாதம் - நாவல்
2 ம் பாதம் - சிவப்பு மந்தாரை
3 ம் பாதம் - மந்தாரை
4 ம் பாதம் – நாகலிங்கம்

மிருகஷீரிஷம்
1 ம் பாதம் - கருங்காலி
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - வேம்பு
4 ம் பாதம் -  நீர்க்கடம்பு

திருவாதிரை
1 ம் பாதம் - செங்கருங்காலி
2 ம் பாதம் - வெள்ளை
3 ம் பாதம் - வெள்ளெருக்கு
4 ம் பாதம் – வெள்ளெருக்கு

புனர்பூசம்
1 ம் பாதம் - மூங்கில்
2 ம் பாதம் - மலைவேம்பு
3 ம் பாதம் - அடப்பமரம்
4 ம் பாதம் – நெல்லி

பூசம்
1 ம் பாதம் - அரசு
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - இருள்
4 ம் பாதம் - நொச்சி
 
ஆயில்யம்
1 ம் பாதம் - புன்னை
2 ம் பாதம் - முசுக்கட்டை
3 ம் பாதம் - இலந்தை
4 ம் பாதம் – பலா

மகம்
1 ம் பாதம் - ஆலமரம்
2 ம் பாதம் - முத்திலா மரம்
3 ம் பாதம் - இலுப்பை
4 ம் பாதம் – பவளமல்லி

பூரம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - வாகை
3 ம் பாதம் - ருத்திராட்சம்
4 ம் பாதம் - பலா
 
உத்திரம்
1 ம் பாதம் - ஆலசி
2 ம் பாதம் - வாதநாராயணன்
3 ம் பாதம் - எட்டி
4 ம் பாதம் - புங்கமரம்
 
ஹஸ்தம்
1 ம் பாதம் - ஆத்தி
2 ம் பாதம் - தென்னை
3 ம் பாதம் - ஓதியன்
4 ம் பாதம் – புத்திரசீவி

சித்திரை
1 ம் பாதம் - வில்வம்
2 ம் பாதம் - புரசு
3 ம் பாதம் - கொடுக்காபுளி
4 ம் பாதம் - தங்க அரளி

சுவாதி
1 ம் பாதம் - மருது
2 ம் பாதம் - புளி
3 ம் பாதம் - மஞ்சள் கொன்றை
4 ம் பாதம் - கொழுக்கட்டை மந்தாரை

விசாகம்
1 ம் பாதம் - விளா
2 ம் பாதம் - சிம்சுபா
3 ம் பாதம் - பூவன்
4 ம் பாதம் – தூங்குமூஞ்சி

அனுஷம்
1 ம் பாதம் - மகிழம்
2 ம் பாதம் - பூமருது
3 ம் பாதம் - கொங்கு
4 ம் பாதம் – தேக்கு

கேட்டை
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - பூவரசு
3 ம் பாதம் - அரசு
4 ம் பாதம் – வேம்பு

மூலம்
1 ம் பாதம் - மராமரம்
2 ம் பாதம் - பெரு
3 ம் பாதம் - செண்பக மரம்
4 ம் பாதம் – ஆச்சா

பூராடம்
1 ம் பாதம் - வஞ்சி
2 ம் பாதம் - கடற்கொஞ்சி
3 ம் பாதம் - சந்தானம்
4 ம் பாதம் – எலுமிச்சை

உத்திராடம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - கடுக்காய்
3 ம் பாதம் - சாரப்பருப்பு
4 ம் பாதம் – தாளை

திருவோணம்
1 ம் பாதம் - வெள்ளெருக்கு
2 ம் பாதம் - கருங்காலி
3 ம் பாதம் - சிறுநாகப்பூ
4 ம் பாதம் – பாக்கு

அவிட்டம்
1 ம் பாதம் - வன்னி
2 ம் பாதம் - கருவேல்
3 ம் பாதம் - சீத்தா
4 ம் பாதம் – ஜாதிக்காய்

சதயம்
1 ம் பாதம் - கடம்பு
2 ம் பாதம் - பரம்பை
3 ம் பாதம் - ராம்சீதா
4 ம் பாதம் – திலகமரம்

பூரட்டாதி
1 ம் பாதம் - தேமா
2 ம் பாதம் - குங்கிலியம்
3 ம் பாதம் - சுந்தரவேம்பு
4 ம் பாதம் – கன்னிமந்தாரை

உத்திரட்டாதி
1 ம் பாதம் - வேம்பு
2 ம் பாதம் - குல்மோகர்
3 ம் பாதம் - சேராங்கொட்டை
4 ம் பாதம் – செம்மரம்

ரேவதி
1 ம் பாதம் - பனை
2 ம் பாதம் - தங்க அரளி
3 ம் பாதம் - செஞ்சந்தனம்
4 ம் பாதம் - மஞ்சபலா ரேவதி

ஆயுள்......

ஆயுள்

அஷ்டமாதிபதி அல்லது லக்னத்துக்கு 8-ஆம் வீட்டில் அமையும் கிரகத்தை வைத்தே ஆயுளைக் கூற வேண்டும். ஆயுளுக்குக் காரகனான சனி பகவானையும், பத்தாம் வீட்டு அதிபதியையும் வைத்தே ஆயுளைக் கூற வேண்டும்

லக்னம் எனும் 1-ஆம் வீடு மற்றும் 4, 7 அல்லது 10-ஆம் எனும் கேந்திர வீடுகளில் குரு மற்றும் சுக்கிரன் சேர்ந்திருந்தால், அந்த ஜாதகர் 100 வயது வரை வாழ்வார். 9-ஆம் அதிபதி 11-ல் இருந்தாலும் 100 வயது வரை வாழ்வார். லக்னாதிபதி, 8 மற்றும் 10-ஆம் அதிபதிகள், 11 அல்லது கேந்திர வீடுகள் எனும் 1, 4, 7, 10-ஆம் வீடுகள் அல்லது கோண வீடுகள் எனும் 5, 9-ஆம் வீடுகளில் அமர்ந்தாலும் நீள் ஆயுள் உண்டு. 4, 6, 8, 12-ஆம் வீடுகளில் பாப கிரகங்களாகிய சனி, செவ்வாய், ராகு, கேது, சூரியன் போன்றோர் இருந்தாலும் ஆயுள் கூடும்.

10-ஆம் அதிபதி & உச்சம், மூல திரிகோணத்தில் இருந்தாலும் நல்லது. மேற்படி அமைப்பில் பாபர் 8-ஆம் வீட்டில் இருந்தால் தீர்க்காயுசு தருவார்கள். 3, 6, 11-ஆம் வீடுகளில் பாபர்களும், 1, 5, 9-ஆம் வீடுகளில் சுபர்களும் இருத்தல் நல்லது. பாபர் 3, 6, 9, 12-ஆம் வீடுகளில் தனியாகவோ அல்லது சேர்ந்து இருப்பதும் நீள் ஆயுளைத் தரும்.

லக்னாதிபதியும் 8-ஆம் அதிபதியும், சந்திர ராசி அதிபதி மற்றும் அதன் 8-ஆம் அதிபதியும், சூரியனும் லக்ன அதிபதியும், லக்னாதிபதியும், சந்திரன் நின்ற ராசி அதிபதியும் நட்பாக இருந்தால் நீள் ஆயுளைத் தரும்.

புதன் 8-ல் அமைதல், சனி 3, 6, 11-ஆம் வீடுகளில் ஆட்சியாக இருத்தல்; சூரியன் 11-ல் இருத்தல்; வியாழன் 11-ல் இருத்தல்; சுக்கிரன் 8, 12 போன்ற வீடுகளில் மறைதல்; ராகு 6-ஆம் வீட்டில் அமைதல்; பட்ச பலத்துடன் சந்திரன் 11-ல் இருக்கும்போது, ராத்திரியில் ஜனித்தல்; சூரியன் 11-ஆம் வீட்டில் அமைந்து பகலில் பிறத்தல்; 6, 12-ஆம் அதிபதிகள் 6 அல்லது 12-ல் இருத்தல்; 6,12-ஆம் வீடுகளில் 12-ஆம் அதிபதி இருத்தல்; 6,12-ஆம் அதிபதிகள் லக்னம் அல்லது 8-ல் இருத்தல்; குரு லக்னத்தில் இருத்தல்; கிரகங்கள் பலம் பெற்று லக்ன கேந்திரங்களில் (1, 4, 7, 10) அமைதல்; லக்ன அதிபன் லக்ன கேந்திரத்தில் அமைதல்; சந்திர ராசி அதிபன் அங்கேயே இருத்தல்; அஷ்டமாதிபதி அஷ்டமத்திலேயே இருத்தல் போன்ற நிலைகள் தீர்க்க ஆயுளைத் தரும்’’ எனக் கூறி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட குரு, ‘‘என்ன சிஷ்யா, கிரகங்கள் தரும் ஆயுள் போகங்களைத் தெரிந்து கொண்டாயா? 50 விழுக்காடு அல்ல, 80 விழுக்காடு மக்களுக்கும் மேற்கண்ட அமைப்புகளுள் ஏதேனும் ஒன்று உறுதியாக இருக்கும். எனவே, பதற்றப்படத் தேவையில்லை