வாழ்க்கைக்கு உதவும் எளிய பரிகாரங்கள்
வீட்டின் முன் இரண்டு மீன்கள் இருக்கும்படியான படத்தை ஒட்டி வைத்து தினசரி பார்த்து வர நன்மைகள் உண்டாகும். (ஒற்றை மீன் படம் பார்ப்பதை தவிர்க்கவும்.)
தினசரி வீட்டை விட்டு கிளம்பும் முன் நீர் நிரம்பிய பாத்திரமோ அல்லது நீர் நிரம்பிய பக்கெட் பார்த்து செல்ல போகிற விஷயம் சுபமாய் முடியும்.
வழியில் செல்லும் போது எதிரில் பிணம் தென்பட்டாலோ அல்லது பிணம் எரிவதை தற்செயலாக பார்க்க நேரிட்டாலோ சில நாணயங்களை பூமியில் போட்டுவிட்டு அவ்விடக் தை விட்டு செல்ல அந்த ஆத்மாவினால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை ஏற்படாமல் இருக்கும்.
முதல் ஆண் குழந்தையின் அரைநாள் கயிற்றை பணப்பெட்டியில் வைக்க செல்வ வளம் சேரும்.
தனியாகவும் மன சோர்வுடனும் தனக்கு யாருமே இல்லை என்ற மனநிலை காணப்பட்டால் மழைநீரில் நனைய மாற்றம் ஏற்படும்.
வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நல கோளாறுகள் வந்து கொண்டே இருந்தால் கோவிலிலோ அல்லது ஆன்மீக மையங்களிலோ 5 பகல் வேளையில் முழு மஞ்சள் பரங்கிக்காய் தானம் செய்ய குடும்ப உடல் கோளாறுகளில் இருந்து விடுபடும்.
விரயமாகி கொண்டே இருந்தாய் சினமும் காலை வேளையில் பறவைகளுக்கு இனிப்பு பிஸ்கட்டுகளை வழங்க வீண் விரயம் கட்டுப்படும்.
+
