jaga flash news

Friday, 4 September 2026

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் ஏன்?

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் ஏன்?

1. முதல் மூன்று ஆண்டுகள் தெய்வம் கருவரையில் இருக்கும்.

2.அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தெய்வம் பலிபீடத்தில் இருக்கும்.



3. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தெய்வம் கொடி மரத்தில் இருக்கும்.



4. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தெய்வம் கோபு கலசத்திற்கு செல்லும்.



5.கோபுர கலசத்தில் தெய்வத்தை மீண்டும் கருவரைக்கு அழைத்து வரவே,

முழுக்கு செய்யப்படுகிறது.

கும்பாபிஷேகம்

Wednesday, 2 September 2026

8-ம் பாவத்தில் எந்த கிரகம் இருந்தால் என்ன பலன்?



8-ம் பாவத்தில் எந்த கிரகம் இருந்தால் என்ன பலன்?
எந்தக் கிரகமும், இருக்கும் நட்சத்திரத்தின் தன்மை, குணம் இருக்கும் ஸ்தானபலம், தாராபலம்...




எந்தக் கிரகமும், இருக்கும் நட்சத்திரத்தின் தன்மை, குணம் இருக்கும் ஸ்தானபலம், தாராபலம் ஆதிபத்ய பலம் இவற்றை பொறுத்தே பலன் தரும் என்பது முக்கிய விதியாகும். கீழே காணும் பலன்கள் யாவும் பொதுப்பலன்களே.

சூரியன்

8-ம் பாவத்தில் சூரியன் இருந்து அந்த இடம் மேஷம், சிம்மமாக அமைந்தால் நீண்ட ஆயுளையும், சிறந்த பேச்சாற்றலையும் தரும். இந்த பாவத்தில் உள்ள சூரியன் 6, 8, 11-ம் அதிபதிகளுடன் சம்பந்தம் பெற்றால் போட்டி, பந்தயங்களில் வெற்றியும், சூதாட்டத்தில் ரேஸ், பரிசுச்சீட்டில் எதிர்பாராத லாபமும் தரும் அமைப்பாகும். 

சந்திரன்
8-ம் பாவத்தில் சந்திரன் பலமற்று இருப்பது மூளைக் கோளாறு, சஞ்சலமுடைய குணம், இவற்றைத் தரும். உடல் நலமும் பாதிக்கப்படும். இளமையில் தாயைவிட்டு பிரியவோ அல்லது இழக்கவோ நேரிடலாம். பாவிகளின் சம்பந்தம் இங்குள்ள சந்திரனுக்கு ஏற்பட்டால், கண்நோய் எப்பொழுதும் நோயால் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். சுபரின் பார்வை, சம்பந்தம் ஏற்பட்டால் நன்மையான பலன்களைத் தரும்.

பூரண சந்திரன் அல்லது ஆட்சி உச்சம் பெற்ற சந்திரனாக இந்த பாவத்தில் அமைந்தால் தொழில் மேன்மைதரும் 8-ம் பாவம் என்பது 10-ம் பாவத்திற்கு லாப ஸ்தானமாகிய 11-ம் பாவமாக அமைவதால்)



செவ்வாய்
செவ்வாய் 8-ம் பாவத்தில் இருப்பது பொதுவாக நலம் தராது. பாவிகளின் சம்பந்தம் பெற்று, 7-ம் அதிபதியின் சம்பந்தமும் ஏற்பட்டால் திருமணமானவுடன் கணவரை இழக்கும் நிலையோ, பிரிந்து வாழும் நிலையோ ஏற்படலாம். பின் தான் விரும்பியவருடன் சேர்ந்து வாழும் யோகத்தையும் தரும். சொந்தம் என்னும் உறவும் கூட பாதிக்கப்படும்.

இரத்த சம்பந்தமான நோயால் அவதிப்பட நேரிடலாம். நிம்மதியில்லாத மணவாழ்க்கையும் அமையலாம். சுபரின் சம்பந்தம் ஏற்படுமானால் தீயபலன்கள் குறைந்து காணப்படும். 


புதன்
8-ம் பாவத்தில் புதன் இருப்பது நல்ல பலன் தரும் என்பது பல ஜோதிட அறிஞர்களின் கருத்தாகும். செல்வமும், புகழும் தரும் அமைப்பாகும். மேலும் சிறந்த கல்வியைத் தரும். நீண்ட ஆயுளையும் தரும். ஆனால் உடல் எப்பொழுதும் மெலிந்த நிலையிலேயே இருப்பார்கள். மேலும் சூரியனுடன் 10 டிகிரிக்கு மேல் இணைந்து புதன்-மிதுனம், கன்னியில் இருந்து அது 8-ம் பாவமாக அமைந்தால் புத ஆதித்ய யோகம் பெற்று, சிறந்த கல்விமானாக, தான்கற்ற கல்வியாலே செல்வமும், புகழும் பெறும் அமைப்பாகும். ஆனால் சூரியன் புதன் 10 டிகிரிக்குள் அமைந்தால் சிறந்த கல்வியைத் தராது. சூரியனுக்கு முன் புதன் 10 டிகிரிக்குள் அமைவது யோகத்தை தராது. ஆரம்ப கல்வியைக் கூட தராத நிலையாகும். 

குரு


குரு பகவான் 8-ம் பாவத்தில் இருந்தால் தயாள குணம் பெற்றிருப்பார்கள். நீண்ட ஆயுளைத் தரும். குரு உச்சமோ, ஆட்சிபெறும் நிலை ஏற்பட்டால் அங்கிருந்து 12, 2-4ம் பாவங்களைப் பார்க்கும் நிலை ஏற்படுவதால் சயன சுகத்தையும், நிம்மதியான தூக்கத்தையும், நல்ல குடும்பத்தையும், உலகியல் சுகங்களையும் தரும் நிலையாகும். இறுதிக் காலத்தை நிம்மதியாகக் கழிப்பதே அதிர்ஷ்டமாகும்.

சுக்கிரன்
8-ம் பாவத்தில் சுக்கிரன் இருப்பது செல்வம், புகழ், அதிகாரம் செய்யும் தகுதி இவற்றையும் தரும். பலம் பெற்று அமைந்தால் இவ்வுலகில் அனுபவிக்கும் அனைத்து சுகத்தையும் அனுபவிக்கும் யோகத்தையும் தரும். பாவிகளின் சம்பந்தம் பெற்றிருந்தாலும் மற்றவரின் கீழ் பணியாற்றும் நிலையைத் தரும். இன்ப-துன்பம் இரண்டையும் அனுபவிக்கும் நிலையாகும். 



சனி
சனீஸ்வர பகவான் 8-ம் பாவத்தில் இருப்பது நீண்ட ஆயுளைத் தரும். பல பொறுப்புக்களையும் தரும். குழந்தை செல்வம் குறைவாகவே அமையும். பல பெண் நண்பர்கள் அமைவார்கள். நுரையீரல் நோயினால் அதிகம் பாதிப்பு ஏற்படும். பெற்றெடுத்த பிள்ளைகளால் துன்பமும் நேரும். பாவிகளுடன் இணைந்ததோ, பார்க்கப்படும் நிலையில் இருந்தால் ஜெனன உறுப்புகள் பாதிக்கப்படும்.

நம்பத்தகாதவராகவும் இருப்பார்கள். பலம் பெற்று சனி இந்த பாவத்தில் இருப்பது எண்ணெய் சம்பந்தமான தொழில், இரும்புப் பொருள், பழைய துணி, காகிதம், சுரங்கப் பொருள், வியாபாரம், பெட்ரோல் பங்க் அமைந்தால் லாபம் பெருகும். 



ராகு
8-ம் பாவத்தில் ராகு அமைவது சிறந்த அமைப்பில்லை. எப்பொழுதும் சண்டைப் பிரியராகவோ, கோள் மூட்டுபவராகவோ இருப்பார்கள். தொல்லைகள், துன்பங்களை அனுபவிக்க வேண்டிய நிலையாகும். 8-ம் பாவம் மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், மகரமாக அமைந்தால் பாதிப்புகள் குறைவாகும். பாவிகளின் சம்பந்தம் மேலும் பாதிப்பைத் தரும். சந்திரன் பலமற்று, ராகுவுடன் 10 டிகிரிக்குள் இணைந்திருந்தால் மனம் பேதலிக்கும். மூளைக்கோளாறு ஏற்படும் மனம் பேதலிக்கும். மூளைக்கோளாறு ஏற்படும். ராகு 12-யிலும் அமையுமானால் மஹா சக்தியோகத்தை தந்து பராசக்தியின் அருளைப் பெறும் யோக சாலியாகவும் ஆவார்கள். ஆன்மீகத் துறையில் அதிக ஈடுபாட்டையும், காம யோகியாகவும் இருப்பார்கள். 

கேது
கேது 8-ம் பாவத்தில் இருந்து சுபருடன் சம்பந்தம் ஏற்பட்டால் நீண்ட ஆயுளையும், செல்வத்தையும் தரும். ஆன்மீக ஈடுபாட்டை அதிகம் தரும். பாவிகளுடன் சம்பந்தப்பட்டால் பல பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டு, அவர்களின் சொத்தை அனுபவித்து அதனால் உடல் நலம் கெட்டு, பல தொல்லைகளை அனுபவிக்கும் நிலை ஏற்படும். 

 

ராசி லக்னத்திற்கு எட்டாம் பாவத்தில் சனி இருந்தால்,

ராசி லக்னத்திற்கு எட்டாம் பாவத்தில் சனி இருந்தால்,

8ம் இடத்தில் சனி இருப்பின் அவருக்கு நீண்ட ஆயுள் இருக்கும் என்றாலும் பொருளாதர ரீதியான பிரச்னை, ஏழை குடும்பத்தில் திருமணம், எதிரிகளால் பிரச்னையும், கண்டமும், கண்களில் பாதிப்பு,,

நீண்ட ஆயுள் என்பதும்கூட இந்த காலத்தில் ஒருவித சாபம் என்றே கூறலாம் .
?8 ல் இருக்கும் சனி தன்னுடைய மூன்றாம் பார்வையால் 10-ம் வீட்டை பார்ப்பார் .தொழில் செய்வதில் அல்லது தொழில் ஆரம்பிக்கும் பொழுது ஜாதகருக்கு தயக்கமும் சுணக்கம் ஏற்படும் பத்தாம் பாவகம் கர்ம ஸ்தானம், சனி எட்டாம் வீட்டிலிருந்து தசா நடத்தும் பொழுது,ஜாதகர் ஏதேனும் ஒரு கர்ம காரியங்களில் கலந்து கொள்ள வேண்டி இருக்கும் ..

சனி எட்டில் வக்ரம் பெற்று இருக்கும்பொழுது, அல்லது பரிவர்த்தனை அடைந்திருந்தாலும் வேறு ஏதேனும் ஒரு சுபர் தொடர்பு பெற்று இருக்கும் பொழுதும் தசாவில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும் கூட ,அதன்மூலம் வருமானத்திற்கான வழி ஏற்படுத்திக் கொடுப்பார் .



பழைய பொருள் காகிதம் குப்பைகள் கழிவுகள் இதன் மூலம் வருமானம், பழைய (Scraps)பொருட்களின் உதிரிபாகங்கள் அதன் மூலம் பெரிய அளவில் லாபம்

பொதுவாக எட்டில் சனி இருந்து தசா நடக்கும் பொழுது, உறவினர்கள் நட்பு வட்டாரங்கள் போன்றவற்றின் மூலம் அசிங்கம் அவமானம் முதலானவற்றை உருவாக்கி அதன் மூலம் ஒரு தெளிவை கொடுப்பார்
3,7,10 ஆகிய பார்வைகளில், ஏழாம் பார்வையாக குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால் குடும்பம் அமைவதில் தாமதம் அல்லது குடும்பம் அமைந்தால் அதில் சிக்கல்களை உருவாக்கும் ..,
10 - ம் பார்வையாக ஐந்தாம் பாவகத்துடன் தொடர்பு கொள்வதால், புத்திரப்பேறு தாமதத்தை உருவாக்குவார் அல்லது புத்திரர்களால் மன சஞ்சலத்தை கொடுக்கும் .



ஆயுள்காரகன் சனி ராசி லக்னத்திற்கு எட்டாம் பாவகத்தில் தசா நடத்தும் பொழுதும் எட்டில் சனி இருந்தாலும் வாழ்க்கை ஜாதகருக்கு போராட்டமாகவே இருக்கும் நீண்ட ஆயுளும் ஒரு போராட்டமே ,,

இவர்கள் வாழ்வின் சம்பாதிக்கும் வருமானத்தின் ஒரு பகுதி எப்பொழுதும்
சனியின் காரகத்துவ பொருள்களாக வாங்கி தானம் தருதல் இவர்களுடைய வாழ்வியல் பரிகாரமாகும் ..

இஸ்திரி பெட்டி, காலணிகள் ,நல்லெண்ணெய், தயிர் சாதம் ,ஊனமுற்றவர்களுக்கு ஏதேனும் ஒரு தேவையைப் பூர்த்தி செய்தல் போன்றவை .

Thursday, 27 August 2026

நெற்றி அகலத்தை வச்சு உங்களோட குணம் என்னன்னு தெரிஞ்சக்கலாமா?



நெற்றி அகலத்தை வச்சு உங்களோட குணம் என்னன்னு தெரிஞ்சக்கலாமா?

சாமுத்ரிகா லட்சணம் சொல்ற ரகசியம் இதோ!

4விரல் அகல நெற்றி:

நீங்க செம்ம புத்திசாலி! மிகுந்த ஞானமும், சிறந்த பொது அறிவும் கொண்டவங்க சமுதாயத்துல உங்களுக்கு தளி மரியாதை இருக்கும்!





3 விரல் அகல நெற்றி:

உங்களுக்கு டடிள் ஜாக்பாட்! ஞானமும் செல்வமும் ஒருங்கே பெற்ற அதிர்ஷ்டசாலி நீங்க. வாழ்க்கையில எப்பவும் நிறைவா இருப்பீங்க!


2 விரல் அகல நெற்றி:

நீங்க ஒரு பக்கா பிசிளஸ் மேண்ட்! அதிக செல்வம் சேர்க்கும் யோகம் உங்களுக்கு இருக்கு. குறநிய காலத்துல பெரிய நிலையை அடைவீங்க!



1 விரல் அகல நெற்றி:



கொஞ்சம் அவசர புத்தி!

எதயுைம் யோசிக்காம முடிவு எடுப்பாங்க பிடிவாதத்தை குறைச்சு, பெரியவங்க பேச்சைக் கேட்டா லைஃப் சூப்பரா இருக்கும்!




Wednesday, 26 August 2026

செல்வ செழிப்பு அதிகரிக்கும் வாஸ்து ரகசியங்கள்

செல்வ செழிப்பு அதிகரிக்கும் வாஸ்து ரகசியங்கள்

அக்னி மூலை மேடாகவும் வாயு மூலை பள்ளமாக இருப்பது நல்லது தான். பெண்களுக்கு வளர்ச்சி அதிகரிக்கும் ஆரோக்கியம் மேம்படும்.

2.அக்னி மூலை தாழ்ந்து வாயு மூலை உயர்ந்து இருந்தால், அந்த வீட்டில் திருட்டு! தீ விபத்து போன்றவை நடக்கும்.


3.கன்னி மூலை உயர்ந்து ஈசானியம் தாழ்ந்து இருந்தால், ஆரோக்கியம் மற்றும் ஆயுள் அதிகரிக்கும். வாழ்க்கையில் செல்வ செழிப்பு அதிகரிக்கும், மகிழ்ச்சி புகழ் அந்தஸ்து நிலைக்கும்.



4.ஈசானியம் உயர்ந்து கன்னி முளைத்தாய்ந்து இருந்தால், பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடும். வாரிசுகளுக்கு கண்டம் ஏற்படும்.


விசித்திரமான உடல் அறிகுறிகள் விளக்கம்

விசித்திரமான உடல் அறிகுறிகள் விளக்கம்

1. அதிகமாக அயார்வு ஆக்சிஜன் குறைவு

2. வழக்கத்திற்கு மாறான குடல் பிரச்சனைகள் மோசமான மூச்சு

3. தொடர்ந்து காதில் ஒலித்தல் உயர் ரத்த அழுத்தம்



4. அதிக முடி கொட்டுதல் இரும்புச் சத்து குறைவு

5. காலில் வீக்கம் இதயம் அல்லது சிறுநீரகம் பிரச்சனை

6. இரவு நேர தசை பிடிப்பு மெக்னீசியம் குறைவு


7. விரல்கள் உணர்விழப்பு
வைட்டமின் B12 குறைவு

8. சர்க்கரை/இனிப்பு மீதான ஏக்கம் மெக்னீசியம் குறைவு

9. அடிக்கடி தலைவலி நீர்ச்சத்து குறைவு

10. கைகள் மற்றும் கால்கள் குளிர்வு இரத்த ஒட்டம் குறைவு



11. நாவு எரிச்சல் / எரிதல் வைட்டமின் B குறைவு

12. நன்றாக வாசனை தெரியாதல் துத்தநாகம் குறைவு

13. ஈறுகளில் இரத்தம் வருதல் வைட்டமின் C குறைவு



14. எளிதில் காயம் மற்றும் இரத்தப்போக்கு

வைட்டமின் K குறைவு

செவ்வாய் தோஷம் பற்றி அறிவோம்....



செவ்வாய் தோஷம் பற்றி அறிவோம்....

செவ்வாய் தோஷம் எத்தனையோ திருமணங்களை நிறுத்தி இருக்கிறது.

ஒரு ஜாதகத்தில் செவ்வாய் 1, 2, 4, 7, 8, 12 ஆகிய வீடுகளில் நின்றால் செவ்வாய் தோஷம் என்பார்கள். இது திருமண வாழ்க்கையை பாதிக்கும் என்று நம்பப் படுகிறது.



இதற்கு நிறைய விதி விலக்குகள் உண்டு. செவ்வாய் ஆட்சி, உச்சம், நீசம் ஆனாலோ, சிம்மத்தில் நின்றாலோ, குருவினால் பார்க்கப்பட்டாலோ, ராகு அல்லது கேதுவுடன் இணைந்தாலோ தோஷ நிவர்த்தி ஆகும்


உங்கள் நட்சத்திரமும், முதல் தசையும



உங்கள் நட்சத்திரமும், முதல் தசையும

நட்சத்திரம்

முதல் திசை

அஸ்வினி, மகம், மூலம் கேது

பரணி, பூரம், பூராடம்
சுக்கிரன்

கார்த்திகை, உத்திரம், உத்திராடம்
சூரியன்



ரோகிணி, அஸ்தம், திருவோணம்
சந்திரன்

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்
செவ்வாய்

திருவாதிரை, ஸ்வாதி, சதயம்
ராகு



புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
குரு



பூசம், அனுஷம் உத்திரட்டாதி
சனி

ஆயில்யம், கேட்டை
புதன்