jaga flash news

Saturday, 7 March 2026

கோளறு பதிகம் விளக்கம்



திருஞானசம்பந்தர் அருளிய கோளறு திருப்பதிகம்
கோளறு பதிகம் விளக்கம்
திருஞானசம்பந்தர் அருளிய கோளறு திருப்பதிகம்
நவ கிரகங்களால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கி மனதில் நினைத்த நல்லன எல்லாம் நிறைவேற தினமும் ஓத வேண்டிய அற்புதமான தேவார பதிகம்:

1. வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே!

2. என்பொடு கொம்பொ(டு) ஆமை இவை மார்பிலங்க எருதேறி ஏழையுடனே
பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடாறும் உடனாய நாள்களவை தாம்
அன்பொடு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே!

3. உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து உமையோடும் வெள்ளை விடை மேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே.

4. மதிநுதல் மங்கையோடு வடவாலி ருந்து மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடுநோய் களான பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.

5. நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும் மிகையான பூத மவையும்
அஞ்சிடும் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.

6. வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர் மடவாள் தனோடும் உடனாய்
நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
கோளரி யுழுவையோடு கொலையானை கேழல் கொடுநாக மோடு கரடி
ஆளரி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.


7. செப்பிள முலைநன்மங்கை ஒரு பாகமாக விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியும்அப்பும் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.

8. வேள்பட விழி செய்தன்று விடைமேலிருந்து மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
Ezoic

ஏழ்கடல் சூழிலங்கை அரையன்றனோடும் இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.

9. பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர் வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.

10. கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்
மத்தமு மதியு(ம்)நாகம் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
புத்தரோடமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

11. தேனமர் பொழில் கொளாலை விளைசெந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய்

ஆன சொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.

கோளறு பதிகம் விளக்கம்
1. (எம்பெருமான்) மூங்கில் போன்ற தோளினை உடைய உமையவளுக்கு தன் உடம்பினில் பாகம் கொடுத்தவன். ஆலகால விடத்தை உயிர்களைக் காக்கும் பொருட்டு அருந்தி திருக்கழுத்தினில் தாங்கியவன். இனிமையான இசையை எழுப்பும் வீணையை வாசித்துக்கொண்டு (இருக்கும் அவன்) களங்கமில்லாத பிறையையும் கங்கையையும் தன் திருமுடி மேல் அணிந்து கொண்டு, என் உளம் முழுவதும் நிறைந்து காணப்படுவதால் (அதாவது நான் சிவசிந்தையில் இருப்பதால்) சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, மற்றும் பாம்பாகிய ராகு- கேது என்னும் ஒன்பது கோள்களும் ஒரு குற்றமும் இல்லாதவையாக (என் போன்ற) சிவனடியாருக்கு என்றும் மிக மிக நல்லதையே செய்யும்!

2. திருமாலின் வாமன, பன்றி, கூர்ம அவதாரங்களின் ஆணவத்தை அடக்கி அணிந்து நிற்கும், எலும்பு, கொம்பு, ஆமை ஓடு முதலானவை தன் திருமார்பில் விளங்க, உமையவளுடன் எருதின் மேல் ஏறி, பொன்போலொளிரும் ஊமத்தை மலர்களாலான மாலை தரித்து, தலையில் கங்கையணிந்து என் உள்ளத்தே நிறைந்ததால், விண்மீனாய் வரும் ஆயில்யம்; ஒன்பதோடு ஒன்று – பத்தாவது விண்மீனான மகம்; ஒன்பதொடு ஏழு – பதினாறாவது விண்மீனான விசாகம்; பதினெட்டாவது விண்மீனான கேட்டை; ஆறாவது விண்மீனான திருவாதிரை; முதலான பயணத்திற்கு விலக்கப்பட்ட நாட்கள் எல்லாமும், சிவனடியார் மீது அன்பொடு அவர்க்கு என்றும் நல்லதையே செய்யும்!

3. பவளம் போன்ற சிவந்த திருமேனியில் ஒளிபொருந்திய வெண்ணீற்றை அணிந்து, சிவபெருமான் உமையம்மையாரோடு வெள்ளை எருதின்மீது ஏறி வந்து, அழகு பொருந்திய கொன்றையையும் சந்திரனையும் தன் முடிமேல் அணிந்து சிவபெருமான், உமையம்மையாரோடு வெள்ளை எருதின் மீது ஏறி வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், இலக்குமி, கலைகளை வாகனமாகக் கொண்ட கலைமகள், வெற்றித் தெய்வமான துர்க்கை, பூமாது, திசைத் தெய்வங்கள் ஆன பலரும் அரிய செல்வம் போல நன்மை அளிப்பர். அடியவர்களுக்கு மிக நல்லதையே செய்வர்.


4. பிறைபோன்ற நெற்றியை உடைய உமையம்மையாரோடு ஆலமரத்தின்கீழ் இருந்து (வடம் – ஆலமரம்) வேதங்களை அருளிய எங்கள் பரமன், கங்கை நதியையும் கொன்றை மாலையையும் முடிமேல் அணிந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், ஆத்திரமுடையதான காலம், அக்கினி, யமன், யமதூதர், கொடிய நோய்கள் எல்லாம் மிக நல்ல குணமுடையன ஆகி நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிகவும் நல்லனவே செய்யும்.

5. விடத்தைக் கழுத்தில் அணிந்த நீலகண்டனும், என் தந்தையும், உமையம்மையாரோடு இடபத்தின் மேல் ஏறி வரும் நம் பரம்பொருள் ஆகிய சிவபெருமான், அடர்ந்து கறுத்த வன்னிமலரையும், கொன்றை மலரையும் தன் முடிமேல் அணிந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், கொடிய சினத்தை உடைய அசுரர்கள், முழங்குகிற இடி, மின்னல், துன்பந்தரும் பஞ்ச பூதங்கள் முதலானவையெல்லாம் (நம்மைக் கண்டு) அஞ்சி நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிக நல்லனவே செய்யும்.

6. ஒளியும் வரியும் பொருந்திய புலித்தோல் ஆடையும் (வாள் -வரி – அதள் – அது -ஆடை; அதள் -புலித்தோல்), வரிந்து கட்டிய கோவணமும் அணியும் சிவபெருமான் அன்றலர்ந்த மலர்கள், வன்னி இலை, கொன்றைப்பூ, கங்கை நதி ஆகியவற்றைத் தன் முடிமேல் சூடி, உமையம்மையாரோடும் வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், கொல்லும் வலிய புலி (கோளரி உழுவை), கொலையானை, பன்றி (கேழல்), கொடிய பாம்பு, கரடி, சிங்கம் ஆகியன நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிக நல்லனவே செய்யும்.


7. செம்பு போன்ற இளந்தனங்களை உடைய உமையவளைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு, இடபத்தின் மேல் ஏறிவரும் செல்வனாகிய சிவபெருமான் தன்னை அடைந்த அழகிய பிறைச்சந்திரனையும், கங்கையையும் தன் முடிமேல் அணிந்தவனாய், என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், காய்ச்சல் (சுரம்), குளிர்காய்ச்சல், வாதம், மிகுந்த பித்தம் , அவற்றால் வருவன முதலான துன்பங்கள் நம்மை வந்து அடையா. அப்படி அவை நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு அவை நல்லனவே செய்யும்.

8. அன்று மன்மதன் அழியும்படி நெற்றிக்கண்ணைத் திறந்து எரித்த சிவபெருமான், இடபத்தின் மேல் உமையம்மையாரோடு உடனாய் இருந்து, தன் முடிமேல் ஒளி பொருந்திய பிறைச்சந்திரன், வன்னி இலை, கொன்றை மலர் ஆகியனவற்றைச் சூடி வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், ஏழ் கடல்களால் சூழப்பட்ட இலங்கையின் மன்னன் ஆன இராவணன் (பிறன்மனை நாடியதாலேற்பட்டது) போன்ற இடர்களும் வந்து நம்மைத் துன்புறுத்தா. ஆழமான கடலும் நமக்கு நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு அவை நல்லனவே செய்யும்.

9. பல்வேறு கோலங்கள் கொள்கிற பரம்பொருள் ஆகிறவனும், மாதொருபாகனும், எருதின் மேல் ஏறிவரும் எங்கள் பரமனுமாகிய சிவபெருமான், தன் முடிமேல் கங்கை, எருக்கமலர் ஆகியவற்றை அணிந்து வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், தாமரைமலர் மேல் உறையும் பிரமன், திருமால், வேதங்கள், தேவர்கள் ஆகியோரும், எதிர்காலம், அலையுடைய கடல், மேரு முதலான மலைகள் ஆகியவையும் நமக்கு நல்லனவே செய்வர். அடியவர்களுக்கு அவை மிகவும் நல்லனவே செய்யும்.


10. கூந்தலில் மலர்க்கொத்துகள் அணிந்த உமையம்மையாரோடு வேட வடிவில் சென்று அருச்சுனனுக்கு அருள்புரிந்த தன்மை கொண்ட சிவபெருமான், தன் முடி மேல் ஊமத்தை மலர், பிறைச்சந்திரன், பாம்பு ஆகியவற்றை அணிந்து வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், புத்தர்களையும் சமணர்களையும் ஈசனின் திருநீறு வாதில் தோற்றோடச் செய்யும். அதன் பெருமை நிச்சயமே. எல்லாம் அப்படிச் சிறந்த நல்லனவற்றையே செய்யும். அவை மிகவும் நல்லனவே செய்யும்.

11. தேன் நிறைந்த பூங்காக்களைக் கொண்டதும், கரும்பும் (ஆலை), விளைகிற செந்நெல்லும் நிறைந்துள்ளதும், பொன் போல் ஒளிர்வதும், நான்முகன் (வழிபட்ட) காரணத்தால் பிரமாபுரம் என்ற ஊரில் தோன்றி அபரஞானம் பரஞானம் ஆகிய இரு வகை ஞானங்களையும் உணர்ந்த ஞானசம்பந்தனாகிய யான், தாமே வந்து சம்பவிக்கும் நவக்கிரகங்கள், நாள் நட்சத்திரம், போன்றன எல்லாம் அடியவரை வந்து வருத்தாதவாறு பாடிய இப்பதிகத்தை ஓதும் அடியவர்கள் வானுலகில் அரசு புரிவர். இது நமது ஆணை.

…திருச்சிற்றம்பலம்…


Tuesday, 24 February 2026

அனாயாசேன மரணம், விநா தைன்யேன ஜீவனம்"

அனாயாசேன மரணம், விநா தைன்யேன ஜீவனம்" என்பது காஞ்சி மகாபெரியவா மற்றும் பல மகான்களால் பரிந்துரைக்கப்பட்ட, ஒரு நிம்மதியான வாழ்வு மற்றும் மரணத்திற்காக சிவபெருமானை வேண்டிப் பாடும் ஒரு சிறந்த ஸ்லோகம் ஆகும். இது துன்பமில்லா மரணத்தையும், பிறரைச் சார்ந்திராத வாழ்வையும் கோரும் பக்தி ஸ்லோகம். 
ஸ்லோகம்:
அனாயாசேன மரணம், விநா தைன்யேன ஜீவனம்
தேஹிமே கிருபையா சம்போ, த்வயீ பக்திம் அசஞ்சலாம் 
பொருள்:
அனாயாசேன மரணம்: கஷ்டம்/வேதனை இல்லாத மரணம்.
விநா தைன்யேன ஜீவனம்: பிறரைச் சார்ந்து வாழாத (மானத்தோடு கூடிய) வாழ்க்கை.
தேஹிமே கிருபையா சம்போ: சம்புவே (சிவனே), கிருபையுடன் எனக்கு அருளுங்கள்.
த்வயீ பக்திம் அசஞ்சலாம்: உன்னிடத்தில் அசஞ்சலமான (அசைக்க முடியாத) பக்தி. 
பயன்கள்:
தினமும் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி பிரார்த்தித்தால் நற்கதி அடையலாம்.
வாழும் காலத்தில் துன்பமில்லாத வாழ்வையும், மரணத்தின் போது வேதனையற்ற மரணத்தையும் (இறப்பு) இது வேண்டிப் பெறுகிறது.
சைதன்ய பாகவதத்திலும் இந்த கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Friday, 13 February 2026

படுக்கையில ் அமர்ந்த ு அதாவது கட்டிலின ் மேல ் அமர்ந்த ு இதனை எல்லாம ் செய்யக்கூடாது



படுக்கையில ் அமர்ந்த ு அதாவது கட்டிலின ் மேல ் அமர்ந்த ு இதனை எல்லாம ் செய்யக்கூடாது.

மீறினால், நித்ரா தேவியின ் கோபத்திற்க ு ஆளாகி விடுவீர்கள்.

 படுக்கையில ் அமர்ந்த ு சாப்பிடுவத ு என்பது கண்டிப்பாக கூடாது. அதனால ் வறும ை வீட்டுக்குள ் புகும். என்பத ு ஐதீகம்.

• படுக்கையில ் அமர்ந்த ு பணம ் எண்ணுவத ு என்பத ு கூடாது. மீறினால ் மகாலட்சும ி தாயின ் கோபத்துக்க ு ஆளாக நேரிடும்.

படுக்கையில ் அமர்ந்த ு கொண்ட ு வியாபார கணக்குகளை பார்க்க கூடாது. ஏனென்றால், வீட்டில ் எதிர்மற ை ஆற்றல் அதிகரிப்பதோடு, குபேரனின ் அருள ் கிடைக்காமல ் போய்விடும்.

படுக்கையில ் பகல ் நேரத்தில ் அதிகம ் தூங்குவத ு என்பத ு கூடாது. அதனால ் வீட்டில ் கடன், வறும ை ஏற்படும். அசத ி வந்தால ் மட்டும், படுத்துக ் கொள்ளலாம்.

படுக்கையில ் ஈர காலுடன ் உறங்குவத ு என்பத ு கூடாது. மீறினால ் வீட்டில ் சண்டை, கலகம ் போன்றவ ை ஏற்படுவதோடு, சனிபகவானின ் கோபத்திற்க ு ஆளாக நேரிடும்.


Friday, 30 January 2026

60 வயதுக்கு மேல் மனைவியுடன் வாழ்ந்தால் என்ன பிராப்தம்

*60 வயதுக்கு மேல் மனைவியுடன் வாழ்ந்தால் தினம் தினம் காலை வணக்கம் சொல்

*65 வயதுக்கு மேல் மனைவியுடன் இருந்தால் தினம் தினம் கால் தொட்டு கும்பிடு
*70 வயதுக்கு மேல் மனைவியுடன் இருந்தால் தினம் தினம் பூ போட்டு கும்பிடு

*80 வயதுக்கு மேல் மனைவியுடன் இருந்தால் இறைவனால் ஆசி பெற்றவன்.

ஒளவையார் தனிப் பாடல் - யாரோடு எது போகும்

ஒளவையார் தனிப் பாடல் - யாரோடு எது போகும் 

குடும்பத்தோடு வாழ்வதில் ஒரு இன்பம் இருக்கிறது. குடும்பத்தில் ஒவ்வொருவரும் நமக்கு ஒரு விதத்தில் பலம் மற்றும் இன்பம் சேர்க்கிறார்கள்.

ஒளவை சொல்கிறாள்.

பாடல்

தாயோ டறுசுவைபோம் தந்தையொடு கல்விபோம்
சேயோடு தான்பெற்ற செல்வம்போம் – ஆயவாழ்(வு)
உற்றா ருடன்போம் உடற்பிறப்பால் தோள்வலிபோம்
பொற்றாலி யோடெவையும் போம்

பொருள்

தாயோ டறுசுவைபோம் = தாயோடு அறு சுவை போகும்

தந்தையொடு கல்விபோம் = தந்தையோடு கல்வி போகும்

சேயோடு தான்பெற்ற செல்வம்போம் = பிள்ளைகளோடு ஒருவன் பெற்ற செல்வம் போய் விடும் 

 ஆயவாழ்(வு) = பெரிய வாழ்க்கை

உற்றா ருடன்போம் = உறவினர்களோடு போய் விடும்

Wednesday, 28 January 2026

தீட்டு காலங்கள்

தீட்டு காலங்கள்

*குடுபத்தினர் இறந்து விட்டால் வீட்டில்  விசேஷங்கள் 
திருமணம்,கிரகப்பிரவேசம் ... செய்வதை சில காலம்  தள்ளி வைத்து விட வேண்டும். 
*தாய், தந்தை இறந்தால் - ஒரு வருடம் 
*மனைவி இறந்தால் - 3 மாதம் 
*சகோதரன் இறந்தால் = 1.5 மாதம் 
*தாய் வழி சொந்தத்தில் இறந்தால் -1 மாதம்

"மாமனார்..  மாமியார் இறந்தால் -தீட்டு இல்லை

* பங்காளி இறந்தால் - 3 மாதம்

*தற்கொலை செய்து இறப்பவருக்கு தீட்டு தர்ப்பணம் தேவை வை இல்லை 
தில ஹோமம் வளர்த்து சாந்தி செய்ய வேண்டும் 

*கரு கலைந்தால் - கரு எத்தனை மாதமோ அத்தனை காலம் தீட்டு

தீட்டு காலங்கள்

தீட்டு காலங்கள்

*குடுபத்தினர் இறந்து விட்டால் வீட்டில்  விசேஷங்கள் 
திருமணம் ஹப்பிரவேசம்... செய்வதை சில காலம்  தள்ளி வைத்து விட வேண்டும். 
*தாய், தந்தை இறந்தால் - ஒரு வருடம் 
*மனைவி இறந்தால் - 3 மாதம் 
*சகோதரன் இறந்தால் = 1.5 மாதம் 
*தாய் வழி சொந்தத்தில் இறந்தால் -1 மாதம்

"மாமனார்..  மாமியார் இறந்தால் -தீட்டு இல்லை

* பங்காளி இறந்தால் - 3 மாதம்

*தற்கொலை செய்து இறப்பவருக்கு தீட்டு தர்ப்பணம் தேவை வை இல்லை 
தில ஹோமம் வளர்த்து சாந்தி செய்ய வேண்டும் 

*கரு கலைந்தால் - கரு எத்தனை மாதமோ அத்தனை காலம் தீட்டு

Sunday, 18 January 2026

ராசி vs அதிபதி

ராசிமண்டலம்

மீனம். குரு

மேஷம் செவ்வாய்

ரிஷபம் சுக்கிரன்

மிதுனம் புதன்

கும்பம் சனி



கடகம் சந்திரன்

மகரம் சனி



சிம்மம் சூரியன்

தனுசு. குரு

விருச்சிகம் செவ்வாய்

துலாம் சுக்கிரன்

கன்னி புதன்


செவ்வாய்- பூமி,மனை,ஆற்றல், வேகம்,ரத்தம்

சுக்கிரன்-வீடு,வாகனம்,அழகு,நளினம்,காமம்

புதன் கல்வி,அறிவாற்றல், தொழில்நுட்பம்

சந்திரன்- மனம், உடல்,அன்பு,அம்மா,நீர்

'சூரியன்-அதிகாரம்,தந்தை,அரசாங்கம், ஆன்மா

குரூ-செல்வம்,குழந்தை, ஆன்மீகம்

சனி-ஆயுள்காரகன், தொழில்,

தெய்வத்திடம் கொடுத்து பிள்ளையை வாங்கும் கிரகநிலை யாருக்கு தெரியுமா?

தெய்வத்திடம் கொடுத்து பிள்ளையை வாங்கும் கிரகநிலை யாருக்கு தெரியுமா?

பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பதை அனைவரும் பார்த்திருப்போம்.

ஜாதகத்தில் கிரக நிலை சரியாக அமையாது விட்டால் தான் பெற்ற பிள்ளையை கடவுளிடம் ஒப்படைத்து பின் தத்தெடுத்து வளர்ப்பது சாஸ்திரம்.

நட்சத்திரங்களில் சித்திரை, விசாகம் இவற்றில் பிறந்த ஆண், பெண் குழந்தைகள். மாதங்களில் சித்திரை, ஆடி, ஐப்பசியில் பிறந்த குழந்தைக ளை தெய்வத்திடம் கொடுத்து வாங்கி, பெற்றோர்கள் வளளிப்பது குடும்பத்துக்கு நல்லது.

*பிள்ளைகளின் பிறந்த ஜாதகத்தில் லக்னத்தில் நான்காம் இடமான தாய் வீட்டில் சந்திரன் இருந்தாலும், ஐந்தாம் இடமான தாய்மாமன் வீட்டில் புதன் இருந்தாலும், ஒன்பதாம் இடமான தந்தை வீட்டில் சூரியன் இருந்தாலும், காரக கிரகம் ஸ்தானபலம் ஏறினால் காரகம் பாவநாஸ்தி என்ற வகையில் தத்து கொடுத்து பிள்ளையை வாங்கப்படும்.

Aanmeegamum

லக்கினம் முதல் 12 ஸ்தானங்களின் பலன்கள்

லக்கினம் முதல்

12 ஸ்தானங்களின்

பலன்கள்

லக்கினம் - (இப்பிறவி ) உயிர், தேகம், தோற்றம்

2ம் இடம் - (வாக்குஸ்தானம்), குடும்பம், தனம் , கண

3ம் இடம் -(சகோதர ஸ்தானம் ), பேச்சு வல்லமை, தைரியம், காது, அணிகலன், தம்பி

4ம் இடம் -(சுகஸ்தானம்), வீடு, வாகனம், தாய், நிலம், உறவினர்கள்,கல்வி

5ம் இடம் -(புத்திர ஸ்தானம் ) வாரிசு, புகழ், குலத்தெய்வம்

6.ம் இடம் - (ரோக ஸ்தானம்) விரோதி, கடன், வழக்கு

7ம் இடம் -(களத்திரம் ஸ்தானம்) மனைவி, கூட்டாளிகள்

8.ம் இடம் -(ஆயுள் ஸ்தானம்) ஆயுள், மரணம்

9ம் இடம் -(பாக்கிய ஸ்தானம் ) தந்தை இஷ்ட தெய்வம், தர்மம்

10ம் இடம் -(தொழில் ஸ்தானம் ) கர்மம், தொழில்

11ம் இடம் (லாப ஸ்தானம் ) அண்ணன், லாபம்

12ம் இடம் -(விரய ஸ்தானம் ) செலவ, உறக்கம், மோட்சம்