jaga flash news

Friday, 19 June 2026

துறவு என்பது ஒரு நீண்ட செயல்முறை.

துறவு என்பது உலகத்தை வெறுத்து ஓடுவது அல்ல, மாறாக பற்றுக்களை அறுத்து மன அமைதியை நோக்கிய ஆன்மீகப் பயணத்தை மேற்கொள்வது ஆகும். இதற்குரிய வழிமுறைகள் உங்கள் குறிக்கோளுக்கு ஏற்ப ஆன்மீகப் பயிற்சி, தியானம் மற்றும் பற்றற்ற வாழ்க்கை முறை ஆகிய அடிப்படைகளை உள்ளடக்கியதாக இருக்கும்

1. பற்றின்மை (Vairagya) வளர்த்தல்:குடும்பம், பணம் மற்றும் பொருட்கள் மீதுள்ள அளவுக்கு மீறிய ஆசையைக் குறைத்து, சுயநலமற்ற அன்பை மற்றவர்களுக்கு அளிப்பதே முதல் படியாகும். திருக்குறள் கூறும் துறவறக் கோட்பாடுகளின்படி, “யாதனின் யாதனின் நீங்கியான்” (எந்தப் பொருளில் பற்று இல்லையோ, அந்தப் பொருளால் வரும் துன்பம் இல்லை) என்பதை உணர்ந்து வாழ வேண்டும்

2. தியானம் மற்றும் யோகக் கலை:தங்களை உணரும் ஆன்மீகப் பாதையில் பயணிக்கத் தினமும் தியானம் (Meditation) பழகுங்கள். மனம் மற்றும் புலன்களை அடக்குவது துறவு நிலையின் முக்கியமான அம்சமாகும். இது உங்கள் மனதை ஒருமுகப்படுத்தவும், தீய எண்ணங்களை அகற்றவும் உதவும்.

3. குருவின் வழிகாட்டுதல்:முறையான துறவு வாழ்க்கையை மேற்கொள்ள (சந்நியாசம்), நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஆன்மீக மரபு அல்லது மடத்தின்படி ஒரு குருவின் (ஆன்மீக வழிகாட்டி) கீழ் தீட்சை பெற வேண்டும். அவர்கள் உங்களுக்குத் தேவையான தியான முறைகளையும், வாழ்க்கை நெறிகளையும் கற்றுத் தருவார்கள்

4. சேவையும் எளிமையும்:தன்னலம் கருதாது பிறருக்கு உதவும் தொண்டுள்ளத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். எளிமையான உணவு, ஆடைகள் மற்றும் பழக்கவழக்கங்களை உங்கள் அன்றாட வாழ்வில் கடைப்பிடியுங்கள்.

5. இல்லறத் துறவு:காவி உடை அணிந்து காடுகளுக்குச் செல்வது மட்டுமே துறவு அல்ல; இல்லற வாழ்க்கையில் இருந்தபடியே உலகியல் ஆசைகளைத் தவிர்த்து, அறவழியில் வாழ்வதும் துறவுதான்



துறவு என்பது ஒரு நீண்ட செயல்முறை. அதை நோக்கி நீங்கள் எவ்வாறு செல்ல விரும்புகிறீர்கள் என்பதை அறிந்து செயல்படவேண்டும்.

Thursday, 18 June 2026

வெள்ளை எள்ளு கருப்பு எள்ளு வித்தியாசம்


வெள்ளை எள்ளு கருப்பு எள்ளு  வித்தியாசம்


ஆச்சமனம்,சங்கல்ப,தர்ப்பணம் மந்திரம்

1. ஆச்சமனம் (Āchamanam) மந்திரம்

ॐ அச்ச்யுதாய நமः
ॐ அனந்தாய நமः
ॐ கோவிந்தாய நமः

ॐ அச்ச்யுதாய நமः
ॐ அனந்தாய நமः
ॐ கோவிந்தாய நமः

2.சங்கல்ப மந்திரம் (Sankalpam)
(தர்ப்பணம் செய்வதற்கான நோக்கத்தைச் சொல்லுவது)

மம உபாத்த சமஸ்த துரித க்ஷயத்வாரா  
ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்  
பித்ரு தர்ப்பணம் கரிஷ்யே

மம உபாத்த சமஸ்த துரித க்ஷயத்வாரா  

ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்  

3. தர்ப்பணம் மந்திரம் (Tarpana Mantra)
(நீர் அர்ப்பணிக்கும் போது)

ॐ பித்ருப்யோ நமः  
ॐ பிதாமஹேப்யோ நமः  
ॐ பிரபிதாமஹேப்யோ நமः

ॐ பித்ருப்யோ நமः  

ॐ பிதாமஹேப்யோ நமः
  
ॐ பிரபிதாமஹேப்யோ நமः

தர்ப்பணம் (ஆவாஹனம்) செய்யும் மந்திரம்

ஆச்சமனம் (Āchamanam) மந்திரம்
ॐ அச்ச்யுதாய நமः
ॐ அனந்தாய நமः
ॐ கோவிந்தாய நமः
சங்கல்ப மந்திரம் (Sankalpam)
மம உபாத்த சமஸ்த துரித க்ஷயத்வாரா
ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்
பித்ரு தர்ப்பணம் கரிஷ்யே


ॐ பித்ருப்யோ நமः
ॐ பிதாமஹேப்யோ நமः
ॐ பிரபிதாமஹேப்யோ நமः
தர்ப்பணம் மந்திரம்
ॐ பித்ருப்யಃ ஸ்வதா நமः
ॐ பிதாமஹேப்யः ஸ்வதா நமः
ॐ பிரபிதாமஹேப்யः ஸ்வதா நமः

முடிப்பு மந்திரம்
ॐ தத்ஸத் பிரஹ்மார்ப்பணம் அஸ்து

பித்ரு காயத்ரி மந்திரம்

ஓம் பித்ருகணாய வித்மஹே ஜகத் தாரிணே தீமஹிதந்நோ பித்ரு: ப்ரசோதயாத்!!

தர்ப்பணம் முடிந்த பிறகு பித்ருக்களை வேண்டி இந்த காயத்ரி மந்திரத்தை ஜபிக்கலாம்:

Tuesday, 12 May 2026

வீட்டு வாசலில் 7 பச்சை மிளகாயும், ஒரு எலுமிச்சை பழத்தையும் கட்டி தொங்க விடுவது ஏன் தெரியுமா?


வீட்டு வாசலில் 7 பச்சை மிளகாயும், ஒரு எலுமிச்சை பழத்தையும் கட்டி தொங்க விடுவது ஏன் தெரியுமா?

  
வீடுகள், கடைகளில் வாசலில் எலுமிச்சை பழமும் பச்சை மிளகாயையயும் சேர்த்து கட்டி வைத்திருப்பார்களே, அதை நீங்கள் பார்த்திருப்பீர்கள், அதை ஏன் கட்டுகிறார்கள்? என்பதை தெரிந்து கொள்ளலாம்.


இந்தியாவில், தமிழகம் உட்படப் பல மாநிலங்களில், நூற்றாண்டுகளாகவே வீட்டு வாசலிலோ அல்லது கடை வாசலிலோ எலுமிச்சை மற்றும் ஏழு மிளகாய்களைக் கோர்த்துத் தொங்கவிடும் பழக்கம் உள்ளது.


spirituality lemon green chilli
மேலும் கண்டறிக
இந்திய வரலாறு
சிலர் இதை ஒரு பாதுகாப்புக் கவசமாக நம்பினாலும், வேறு சிலரோ வெறும் மூடநம்பிக்கை என்கிறார்கள். எனினும், இந்த 'நிம்பு மிர்ச்சி' வழக்கத்திற்குப் பின்னால் ஆன்மீக நம்பிக்கைகளும், ஒரு சில பண்டைய அறிவியல் தர்க்கங்களும் அடங்கியுள்ளன.


நன்கு நடந்து கொண்டிருந்த வியாபாரம், ஒருவரின் பொறாமைப் பார்வையால் சரிந்துவிட்டது என்பதை 'கண் திருஷ்டி' என்கிறோம். இந்தத் தீய பார்வையிலிருந்து பாதுகாக்கவே வாசலில் எலுமிச்சை- மிளகாய் கொத்து கட்டப்படுகிறது.

எலுமிச்சை எதிர்மறை ஆற்றல்களைத் தன்னகத்தே ஈர்த்துக் கொண்டு, மிளகாய் தீய எண்ணங்களையும் பொறாமையையும் எரிப்பதாக நம்பப்படுகிறது. இந்தக் கொத்து காய்ந்து கருப்பாக மாறும்போது, அது வீட்டை நோக்கி வந்த அத்தனை கஷ்டங்களையும், கண் திருஷ்டியையும் ஈர்த்துக் கொண்டதாகக் கருதப்படுகிறது.

வீட்டின் பிரதான வாசலில் இந்தக் கொத்தைக் கட்டுவதால், அந்த இடத்தின் சூழல் தூய்மையடைந்து, வாஸ்து தோஷங்கள் நீங்கும் என நம்பப்படுகிறது.

இது எதிர்மறை ஆற்றல் வீட்டுக்குள் வராமல் தடுத்து, தீய சக்திகளை வெளியேவே நிறுத்திவிடுகிறது. இதனால், வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் நிலைத்திருக்கும் என்பது ஒரு நம்பிக்கை.

பழங்காலத்தில் பூச்சி விரட்டும் ஸ்ப்ரேக்கள் இல்லாததால், மண் வீடுகளில் பூச்சிகளின் தொல்லை அதிகம். எலுமிச்சையின் வாசமும், மிளகாயின் கார நெடியும் பூச்சிகளை அண்டவிடாது. எனவே, இது ஒரு இயற்கையான பூச்சிவிரட்டியாகச் (Natural Repellent) செயல்பட்டது என்பது இந்த வழக்கத்தின் விஞ்ஞானப் பின்னணியாகும்.

பாரம்பரிய வழக்கப்படி, இந்த எலுமிச்சை-மிளகாய் கொத்தை வாரத்திற்கு ஒருமுறை, குறிப்பாக சனிக்கிழமைகளில் மாற்ற வேண்டும். எதிர்மறை ஆற்றல்கள் இந்தக் கொத்தில் சிக்கிக் கொள்வதாக நம்பப்படுவதால், ஒவ்வொரு வாரமும் இதைப் புதிதாக மாற்றுவது அவசியம்.

வீட்டு வாசலில் எலுமிச்சை மற்றும் மிளகாய் கட்டுவது ஒரு பாரம்பரிய நம்பிக்கையாகும். இது தீய சக்திகள், கண் திருஷ்டி மற்றும் பொறாமை போன்ற எதிர்மறை ஆற்றல்கள் வீட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும் என்று நம்பப்படுகிறது.

குறிப்பாக, செல்வத்தின் தெய்வமான லட்சுமியின் மூத்த சகோதரி 'அலட்சுமி' (மூதேவி), புளிப்பு மற்றும் காரமான பொருட்களை விரும்புவார் என்பதால், அவர் வாசலிலேயே அவற்றைப் உண்டு திருப்தியடைந்து வீட்டிற்குள் வராமல் திரும்பிச் சென்றுவிடுவார் என்பது ஐதீகம். அறிவியல் ரீதியாகப் பார்த்தால், எலுமிச்சை மற்றும் மிளகாயில் உள்ள சிட்ரிக் அமிலம் மற்றும் காரத்தன்மை பூச்சிகள் மற்றும் கிருமிகளை வீட்டிற்குள் வரவிடாமல் தடுக்கும் இயற்கை கிருமிநாசினியாகச் செயல்படுகிறது.


Saturday, 2 May 2026

AB+ ரத்த வகை கொண்டவர்கள்

AB+ ரத்த வகை கொண்டவர்கள் (AB+ Positive) பொதுவாக புத்திசாலிகள், அமைதியானவர்கள், மற்றும் A, B வகை ரத்த குணங்கள் கலந்த கலவையான ஆளுமை உடையவர்கள். இவர்கள் குளிர்ச்சியான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட (cool and controlled) மனநிலை உடையவர்கள், மற்றும் மற்றவர்களுடன் எளிதாகப் பழகும் தன்மையைக் கொண்டவர்கள்.AB+ ரத்த வகை ஆளுமை பண்புகள் (Tamil):பகுத்தறிவு மற்றும் புத்திசாலித்தனம்: இவர்கள் தர்க்கரீதியாகச் சிந்திக்கக்கூடியவர்கள் மற்றும் கூர்மையான புத்திசாலிகள்.இரட்டை குணம் (Dual Personality): A மற்றும் B குணங்கள் கலந்திருப்பதால், சில சமயம் கூச்ச சுபாவத்துடனும், சில சமயம் மிகவும் நட்பாகவும் இருப்பார்கள்.எளிதில் பழகும் தன்மை: சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளும் திறன் (adaptable) உடையவர்கள்.மறதி மற்றும் பொறுப்பின்மை: புத்திசாலியாக இருந்தாலும், மறதி குணம் அதிகம் மற்றும் சில நேரங்களில் பொறுப்பில்லாமல் செயல்படுவார்கள்.தந்திர மூளை: சிக்கலான சூழ்நிலைகளையும் எளிதாகக் கையாண்டு, தந்திரமாக முடிவெடுக்கும் திறன் கொண்டவர்கள்.கவலை இல்லாதவர்: எப்போதும் கூலாக (Cool) இருப்பார்கள், தேவையற்ற கவலைகளில் சோர்ந்து இருக்க மாட்டார்கள்.குறிப்பு: ரத்த வகைக்கும் ஆளுமைக்கும் இடையிலான தொடர்பு என்பது ஒரு கலாச்சார நம்பிக்கை (குறிப்பாக ஜப்பான்) மட்டுமே

Wednesday, 29 April 2026

Snake Bites Mongoose கீரி கடித்தால் பாம்பு காலி.. பாம்பு கடித்தால் கீரிக்கு ஏன் ஒன்றும் ஆவதில்லை?



கீரி கடித்தால் பாம்பு காலி.. பாம்பு கடித்தால் கீரிக்கு ஏன் ஒன்றும் ஆவதில்லை? பவர்ஃபுல் உண்மை இதுதான்

இயற்கையின் விசித்திரமான படைப்பில் பாம்பு மற்றும் கீரிக்கு இடையிலான பகை என்பது காலங்காலமாகத் தொடரும் ஒரு தீராத போராகும்.. இதற்கு என்ன காரணம் தெரியுமா? பாம்புக்கும் கீரிக்கும் நடக்கும் சண்டையில் பெரும்பாலும் கீரியே வெற்றி பெறுகிறது...இதற்கு என்ன காரணம் தெரியுமா? பாம்பு கடித்தால் கீரிக்கு ஏன் விஷம் ஏறுவதில்லை தெரியுமா? இங்கே அவைகளை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.


பாம்பு, கீரி இவை இரண்டுமே நிலப்பரப்பில் வாழும் மிகச்சிறந்த வேட்டையாடிகள்.. அதனால்தான் உணவு மற்றும் இருப்பிடத்திற்காக இவற்றுக்கிடையே அடிக்கடி மோதல்கள் ஏற்படுகின்றன..


Snake Bites Mongoose

தனது குட்டிகளைப் பாம்புகளிடமிருந்து பாதுகாக்கவும் அதே சமயம் பாம்பையே தனது உணவாக மாற்றவும் கீரி துணிச்சலுடன் பாம்பை எதிர்கொள்கிறது,. அபாரமான வேகம் மற்றும் துல்லியமான தாக்குதல் உத்திகளே முக்கிய காரணமாக அமைகின்றன.

பெரியளவில் சரியும்? | "இது" நடந்தால் நிச்சயம் குறையும்! - 
கீரி - பாம்பு சண்டை ஏன்
பாம்பின் தாக்குதலை முன்கூட்டியே கணித்து மின்னல் வேகத்தில் விலகி செல்லும் ஆற்றல் கொண்ட கீரி, பாம்பினை அலைக்கழித்து அலைக்கழித்து டயர்ட் ஆக்கிவிடுமாம்.. பிறகு சரியான தருணம் வரும்போது பாம்பின் தலையை தனது கூர்மையான பற்களால் கவ்விப் பிடித்து மண்டை ஓட்டைத் தகர்த்து அதைக் கொன்றுவிடக்கூடி சக்தி படைத்ததாம் கீரி.

அதேபோல பாம்பு எத்தனை முறை தீண்டினாலும் கீரி உடம்பில் விஷம் ஏறுவதில்லை. அது ஏன் தெரியுமா? கீரியின் உடலில் உள்ள தடிமனான முடிகள் ஒரு பாதுகாப்பு கவசம் போலச் செயல்பட்டு பாம்பின் பற்கள் அதன் தோலை ஆழமாகத் துளைக்காதவாறு பார்த்துக் கொள்கின்றன..



பாம்பின் விஷம்
அதுமட்டுமல்ல, பொதுவாக நமது நரம்பு மண்டலத்தில் தகவல்களை கடத்தவும் தசை இயக்கம் மற்றும் இதயத் துடிப்பை சீராக வைக்கவும் அசிடைல் கோலின் என்ற என்சைம் தேவையாகும்.

பாம்பின் விஷத்தில் உள்ள "ஆல்பா நியூரோடாக்சின்" என்ற வேதிப்பொருள் இந்த அசிடைல் கோலினைப் போலவே உருமாறி நரம்பு செல்களில் உள்ள ரிசப்டார் என்ற பகுதியை ஆக்கிரமித்துவிடுமாம்.. இதனால் மூளையிலிருந்து செல்லும் தகவல்கள் தடைபட்டு சுவாசம் நின்று மற்ற உயிரினங்களுக்கு மரணம் நிகழ்வதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் கீரியின் உடலில் இயற்கையிலேயே ஏற்பட்டுள்ள ஒரு தனித்துவமான மரபணு மாற்றத்தால் அதன் ரிசப்டார் அமைப்பு மற்ற பாலூட்டிகளை விட மாறுபட்ட வடிவத்தில் காணப்படுகிறது. அதன் உடலமைப்பும் டிஎன்ஏ மாற்றமுமே அதற்கு இயற்கை கொடுத்த மிகப்பெரிய வரமாகும்.


பாம்புகள் கடித்தால் குதிரை இறக்காதா? பாம்பின் விஷம் செலுத்தி எப்படி மருந்து தயாரிக்கிறார்கள்?
பாம்புகள் கடித்தால் குதிரை இறக்காதா? பாம்பின் விஷம் செலுத்தி எப்படி மருந்து தயாரிக்கிறார்கள்?
நரம்பு மண்டலம் அமைப்பு
அதனால்தான் பாம்பின் விஷம் கீரியின் நரம்பு மண்டலத்தோடு ஒட்ட முடியாமல் போகிறது.. விஷம் உள்ளே சென்றாலும் நரம்புத் தகவல்கள் தடையின்றி நடப்பதால் கீரி உயிர் பிழைத்து விடுகிறது.. இதுமட்டுமின்றி கீரியின் ரத்தத்தில் உள்ள ஒரு வகை கிளைகோ புரோட்டீன் ரத்தத்தில் கலக்கும் விஷத்துடன் பிணைக்கப்பட்டு அதன் வீரியத்தை முழுமையாக நடுநிலையாக்க உதவுகிறதாம்.

இருந்தாலும் ஒரு பெரிய பாம்பு அதிகப்படியான விஷத்தை மீண்டும் மீண்டும் செலுத்தினால் கீரியும் உயிரிழக்க வாய்ப்பு உண்டு என்பது இயற்கையின் சமநிலையாகும்.. இந்தியாவில் சாம்பல் நிறக் கீரிகள் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகின்றன என்பதால் அவற்றின் முடிகளுக்காக வேட்டையாடுவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.. இத்தகைய அரிய உயிரினங்களைப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்..!!!




Friday, 24 April 2026

LPG, PNG, CNG, LNG... வித்தியாசம் என்ன? எது பாதுகாப்பானது? எங்கு பயன்படுத்தப்படுகிறது?


LPG, PNG, CNG, LNG... வித்தியாசம் என்ன? எது பாதுகாப்பானது? எங்கு பயன்படுத்தப்படுகிறது?

LPG, PNG, CNG மற்றும் LNG போன்ற பெயர்களைக் கேட்டவுடன் பலருக்கும் குழப்பமாக இருக்கிறது. இவற்றுக்கு இடையே உள்ள வித்தியாசம், எந்த எரிவாயு எதற்கு சிறந்தது என்று மக்கள் குழம்புகிறார்கள்.


1/8
LPG, PNG, CNG, LNG.. வித்தியாசம் என்ன? எது பாதுகாப்பானது?
இன்றைய காலகட்டத்தில் எரிவாயு சமையலறைக்கு மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. நம் வீடுகள், வாகனங்கள் மற்றும் பெரிய தொழிற்சாலைகள் என தற்போது அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், LPG, PNG, CNG மற்றும் LNG போன்ற பெயர்களைக் கேட்டவுடன் பலருக்கும் குழப்பமாக இருக்கிறது. இவற்றுக்கு இடையே உள்ள வித்தியாசம், எந்த எரிவாயு எதற்கு சிறந்தது என்று மக்கள் குழம்புகிறார்கள். உண்மையில், இந்த நான்கு வாயுக்களும் ஒரே ஆற்றல் குடும்பத்தைச் சேர்ந்தவை. ஆனால் அவற்றின் பயன்பாடு, சேமிப்பு மற்றும் விநியோக முறைகள் வேறுபட்டவை. இதுப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.


2/8
LPG, PNG, CNG, LNG.. வித்தியாசம் என்ன? எது பாதுகாப்பானது?
மாறிவரும் இந்த ஆற்றல் யுகத்தில், இந்தியாவும் படிப்படியாகத் தூய்மையான மற்றும் திறமையான எரிபொருட்களை நோக்கி நகர்கிறது என்றே சொல்ல வேண்டும். இத்தகைய சூழ்நிலையில், இந்த எரிவாயுவை வெறும் தகவலுக்காக மட்டும் புரிந்து கொள்வதை விட, தற்போது அது அவசியமாகிவிட்டது. ஏனெனில், வரும் காலங்களில் இந்த எரிவாயு உங்கள் வாழ்க்கை முறை மற்றும் செலவுகள் இரண்டையும் தீர்மானிக்கும்.


3/8

LPG என்றால் என்ன, எங்கு பயன்படுத்தப்படுகிறது?: திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) என்பது உங்கள் வீட்டு சிலிண்டரில் பயன்படுத்தும் பொதுவான எரிவாயு ஆகும். இந்த எரிவாயு, புரோப்பேன் மற்றும் பியூட்டேன் ஆகியவற்றின் கலவையாகும். மேலும், இது அழுத்தத்தின் கீழ் திரவ வடிவில் வைக்கப்படுகிறது. எல்பிஜியின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், அதை எங்கும் எளிதாகக் கொண்டு செல்ல முடியும். இதனால்தான் இது கிராமங்கள் முதல் நகரங்கள் வரை மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயுவாக உள்ளது. இருப்பினும், சிலிண்டர்களை மாற்றுவதில் உள்ள சிரமம் மற்றும் சேமிப்புக் கட்டுப்பாடுகள் போன்ற சிக்கல்களும் இதில் உள்ளன.


4/8

PNG என்றால் என்ன, ஏன் பிரபலமாகி வருகிறது?: குழாய்வழி இயற்கை எரிவாயு (PNG) என்பது ஒரு குழாய் மூலம் நேரடியாக வீடுகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. இதற்கு சிலிண்டர்கள் தேவையில்லை. மேலும், எரிவாயு விநியோகம் தொடர்ச்சியாக இருக்கும். பிஎன்ஜியின் மிகப்பெரிய நன்மை, அதன் வசதி மற்றும் பாதுகாப்பு ஆகும். எரிவாயு தீர்ந்துவிடும் என்ற அச்சம் இல்லை. மேலும், கசிவு ஏற்படும் அபாயமும் குறைவு. இதனால்தான் பெரிய நகரங்களில் எல்பிஜிக்கு பதிலாக பிஎன்ஜி பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
advertisement

5/8

CNG என்றால் என்ன, எங்கு பயன்படுத்தப்படுகிறது?: அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) என்பது முக்கியமாக வாகனங்களில் பயன்படுத்தப்படுகிறது. இது அதிக அழுத்தத்தில் சேமிக்கப்படுகிறது. மேலும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மலிவான மற்றும் தூய்மையான மாற்றாக இது கருதப்படுகிறது. சிஎன்ஜியில் இயங்கும் வாகனங்கள் குறைந்த மாசுபாட்டை ஏற்படுத்துவதோடு, அதிக மைலேஜையும் தருகின்றன. இதனால்தான் இந்தியாவில் பொதுப் போக்குவரத்து மற்றும் தனியார் வாகனங்களில் இதன் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது.


6/8

LNG என்றால் என்ன, அது ஏன் மிகவும் மேம்பட்டது?: திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) என்பது மிகக் குறைந்த வெப்பநிலையில் திரவமாக மாற்றப்படும் ஒரு வகை இயற்கை எரிவாயு ஆகும். இது வாயுவின் கன அளவை வெகுவாகக் குறைத்து, நீண்ட தூரங்களுக்குக் கொண்டு செல்வதை எளிதாக்குகிறது. LNG பெரிய தொழிற்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் பயன்படுத்தப்படுகிறது. இது அதிக செயல்திறன் மிக்க மற்றும் குறைந்த மாசுபாட்டை ஏற்படுத்தும் எரிபொருளாக இருப்பதால், ஆற்றலின் எதிர்காலமாகக் கருதப்படுகிறது.


7/8

முக்கிய வேறுபாடு என்ன?: எளிமையாகச் சொன்னால், LPG சிலிண்டர்களில் வருகிறது. PNG குழாய்கள் மூலம் வீடுகளுக்கு செல்கிறது. CNG வாகனங்களில் பயன்படுத்தப்படுகிறது மற்றும் LNG பெரிய அளவிலான தொழிற்சாலைகள் மற்றும் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த நான்கிற்கும் இடையிலான மிகப்பெரிய வேறுபாடு அவற்றின் சேமிப்பு மற்றும் பயன்பாடே ஆகும். LPG மற்றும் PNG வீட்டுத் தேவைகளுக்கானதாக இருக்கும் நிலையில், CNG மற்றும் LNG ஆகியவை பெரிய அளவிலான போக்குவரத்து மற்றும் தொழில்துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.


8/8
 எது பாதுகாப்பானது?
பாதுகாப்பு, வசதி: பாதுகாப்பைப் பொறுத்தவரை, PNG மற்றும் CNG ஆகியவை பாதுகாப்பானவையாகக் கருதப்படுகின்றன. ஏனெனில், அவை காற்றை விட லேசானவை என்பதால், கசிவு ஏற்பட்டால் காற்றில் விரைவாகப் பரவிவிடும். ஆனால், LPG காற்றை விட கனமானது என்பதால், அது தரையில் படிந்து ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். வசதியைப் பொறுத்தவரை, PNG சிறந்தது. ஏனெனில், அதன் கட்டணமும் பயன்பாட்டின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

திருஷ்டி (பார்வை) என்றால் என்ன?

திருஷ்டி (பார்வை) என்றால் என்ன?
"திருஷ்டி" என்ற சமஸ்கிருத சொல்லின் நேர்பொருள் "பார்வை" அல்லது "கண்ணோட்டம்." ஜோதிடத்தில், ஒவ்வொரு கிரகமும் தனது நிலையிலிருந்து 7-வது பாவத்தைப் பார்க்கிறது.

ஆனால் மூன்று கிரகங்கள் கூடுதல் சிறப்பு பார்வைகளைக் கொண்டுள்ளன: செவ்வாய் 4-வது மற்றும் 8-வது பாவங்களையும், குரு 5-வது மற்றும் 9-வது பாவங்களையும், சனி 3-வது மற்றும் 10-வது பாவங்களையும் பார்க்கிறார்கள்.

பார்வை = தாக்கம். குருவின் பார்வை நன்மை செய்யும் — பாதுகாக்கிறது, விரிவாக்குகிறது. சனியின் பார்வை கட்டுப்படுத்தும் — தாமதிக்கிறது, ஒழுங்குபடுத்துகிறது. செவ்வாயின் பார்வை ஆக்கிரமிப்பு — ஆற்றல் தருகிறது, மோதலை உருவாக்குகிறது