jaga flash news

Monday, 3 August 2026

பிள்ளை பிறந்த பிறகு தந்தைக்கு யோகம்



பிள்ளை பிறந்த பிறகு தந்தைக்கு யோகம்

1. தனுசு,அல்லது சிம்மம் லக்னத்தில் பிள்ளை பிறந்து சூரியன் தசை நடந்தால் தந்தைக்கு யோகம்.

-

2. பிள்ளையின் ஜாதகத்தில் சூரியன் பத்தாம் வீட்டில் திக் பலம் பெற்றால் அந்த பிள்ளை பிறந்ததில் இருந்து தந்தைக்கு யோகம்.

3. சுக்கிரன் சூரியன் சேர்ந்து பிள்ளையின் ஜாதகத்தில் இருந்தால் அந்த தந்தைக்கு யோகம் தான். 

4. பிள்ளையின் ஜாதகத்தில் ஒன்பதாம் வீட்டில் குரு,சுக்கிரன், அல்லது லக் சுபர்கள் நின்று தசை நடந்தால் தந்தைக்கு ராஜயோகம் கொடுக்கும். --


48 ரூல் என்றால் என்ன..?

48 ரூல் என்றால் என்ன..? அமேசான், பிளிப்கார்ட், ஜெப்டோ, பிளிங்க்கிட் என எந்த தளமாக இருந்தாலும் சரி.. ஒரு பொருளை தேர்வு செய்து Cartல் போட்டுவிடுங்கள் (அத்தியாவசிய பொருட்களை தவிர அல்லது நீங்கள் Adult Money என நினைக்கும் பொருட்கள்) அதை 48 மணிநேரம் அதாவது 2 நாள் பேமெண்ட் செய்யாமல் உங்களுடைய Cartலேயே வைத்திருங்கள்.. 48 மணிநேரம் கழித்து உண்மையிலேயே அந்த பொருள் தேவை என்று உங்களுக்கு தோண்றினால் மட்டும் Buy பட்டனை கிளிக் செய்து பேமெண்ட் நிலைக்கு செல்லுங்க.
இந்த 48 மணிநேர காலம் Cooling off காலத்தில் 80% அது வெறும் தற்காலிக ஆசை என்பது உங்களுக்கே புரியும், இப்படி புரிந்தால் Cart-ஐ கிளியர் செய்துவிட்டு அடுத்த வேலையை பார்க்க போய்விடுவீர்கள். 20 சதவீதம் மட்டுமே அந்த பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த 48 மணிநேர ரூல்ஸ்-ஐ பாலோ செய்தாலே மாதம் மாதம் பல ஆயிரங்களை நீங்கள் சேமிக்கலாம்.


செவ்வாய் யாருடன் சேர்ந்தால் தீய பலனை செய்யும்?



செவ்வாய் யாருடன் சேர்ந்தால் தீய பலனை செய்யும்?

1. செவ்வாய் எப்போதும் சனி,ராகு போன்ற பாவருடன் சேரவே கூடாது!  சேர்ந்தால் தீய பலனை, தான் நின்ற வீட்டின் வழியாக ஜாதகருக்கு செய்யும்.

2. செவ்வாய் சனி சேர்க்கையில் பெரும்பாலும் தீய பலனே நடக்கும், கு சில சமயம் மருத்துவம்,ரியல்எஸ்டேட், போன்ற தொழில் மேன்மையை தரும்.

3. செவ்வாயும் ராகு சேர்ந்தால் மிகபெரிய சிக்கலை சேர்க்கை பெற்ற வீட்டின் வழியாக ஜாதகருக்கு நடக்கும் சுபர் பார்வை இல்லாத போது.

4. செவ்வாய் கேது சேர்ந்து சனி பார்ை பெற்றால் மிகபெரிய சிக்கலை ஜாதகர் சந்திக்க நேரிடும்.'




காதல் திருமணம் (அல்லது) பெற்றோர் நிச்சயிக்கும் திருமணம்



காதல் திருமணம் (அல்லது)

பெற்றோர் நிச்சயிக்கும் திருமணம்

1. சுக்கிரன் தசை நடந்து அது யோகமாக இருந்தால் காதல் திருமணம்.

2. குரு தசையோகமாக இருந்து நடந்தால் அது நிச்சியிக்கபட்ட திருமணம்

3. ஏழாம் அதிபதி ஆறு,எட்டாம் அதிபதியுடன் தொடர்ப கொண்டால் காதல் திருமணம்.




4. ஏழாம் அதிபதி ஐந்து, ஒன்பதாம் அதிபதியுடன் தொடர்பு கொண்டால் அது நிச்சயிக்கப்பட்ட திருமணம்

5. ராகு, சுக்கிரன் சேர்ந்து நின்று ராகு தசை நடந்தால் காதல் திருமணம்.

6. ராகு, குரு சேர்ந்து நின்று ராகு தசை நடந்தால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்.




சுக்கிரன் (சுக்ரன்) - ஒரு வீரிவான குறிப்பு



சுக்கிரன் (சுக்ரன்) - ஒரு வீரிவான குறிப்பு


சுக்கிரன் என்பது ஜோதிடத்தில் மிகவும் முக்கியமான சுபகிரகங்களி ஒன்றாகும். இது அழகு, காதல், இன்பம், வசதி, செல்வம், கலை, ஆடல், பாடல், வாகனம், ஆடை, ஆபரணம், ஆடம்பரம், செல்வச்செ மற்றும் தாராள மனப்பான்மையை கொடுக்கும் கிரகமாக கருதப்படுகி இது தாந்வீகம், கலைநயம், மனித நேயம், அனுபவ இன்பங்கள் மகிழ்ச்சி, ஒத்துழைப்பு போன்றவற்றைக் குறிக்கிறது.

1. பொதுவான தகவல்கள் :

* சுக்கிரன் ஒரு சுபகிரகம்.

* இது கலை, காதல், செல்வம், இன்பம் ஆகியவற்றின் காரண கிரகம்.

* பெண்கள், ஆடை, ஆபரணம், அழகு சாதனப் பொருட்கள், வாகனம் போன்றவற்றைக் குறிக்கும்.

* இது "அசுராச்சார்யர்" எனப்படும் சுக்கிராச்சாரியாருடன் தொடர்புடையது

* சுக்கிரன் வாரத்தில் வெள்ளிக்கிழமை இதன் நாளாகும்.

* இதன் நிறம் - வெள்ளை.

* ரத்தினம் - வைரம் (Diamond).

வெள்ளி. * தாது

தென்கிழக்கு.

* நீச்சம் - கன்னி (27).

* மூலத்ரிகோணம் - துலாம் (0° முதல் 15° வரை).

* நண்பர்கள் -புதன், சனி.

* சமநிலைவான கிரகங்கள் -ராகு, கேது.

* பகைவர்கள் - சூரியன், சந்திரன், செவ்வாய்.

2. சுக்கிரன் கொடுக்கும் பலன்கள் :

* ஜாதகத்தில் சுக்கிரன் பலமாக இருந்தால் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், கலைநயம், காதல் இன்பம், நல்ல வாழ்க்கை துணை, வாகன வசதி, நகை, ஆடை, கல்வியில் முன்னேற்றம் கிடைக்கும்.

* அழகு, இனிமையான பேச்சு, சமூகத்தில் மதிப்பு, வசதியான வாழ்க்ை கிடைக்கும்.

* பெண்களிடம் மரியாதை, நட்பு, ஒத்துழைப்பு, நல்ல உறவுகள் உண்ட

* கலைத்துறையில், சினிமா, இசை, நடனம், அலங்காரம், வடிவமைப்பு

போன்ற துறைகளில் வெற்றி கிடைக்கும்.

3. சுக்கிரன் பலவீனமாக இருந்தால்

* இன்பங்களில் அளவுக்கு மீறுதல், காம ஆசை அதிகரிப்பு.

* காதல் தோல்வி, திருமண தாமதம் அல்லது தாம்பத்திய பிரச்சனைக. கண், சிறுநீரகம், சர்க்கரை நோய், வெள்ளை பேட்டை போன்ற நோய்க

செலவில் கட்டுப்பாடின்மை, கடன் பிரச்சனை ஏற்படும்.

குறிப்பு : சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால் வாழ்க்கை செழிக்கும். அளவான இன்பம், அன்பு, கலை, அழகு, செல்வம் அனைத்தையும் தரும் அதனால் சுக்கிரனை வலுப்படுத்துவது வாழ்க்கையில் வளத்தை தரும்.




விதி(லக்னம்), மதி(சந்திரன்), கதி(சூரியன் இருக்கும் இட பலன்)



ஆயில்யம், பூரட்டாதி, அனுஷம், அஸ்வினி

இந்த நான்கும் சூரியனின் சாபம் பெற்ற நட்சத்திரங்கள்.

இந்த நட்சத்திரங்களில் ஒருவருக்கு விதி(லக்னம்), மதி(சந்திரன்), கதி(சூரியன்) அமைந்திருந்தாலோ அல்லது இந்த நட்சத்திரங்களின் தசை நடைபெற்றுக் கொண்டிருந்தாலோ, சூரியன் தொடர்பான பல சிக்கல்கள் அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும். தந்தை, மாமனார் மற்றும் சூரியன் சம்பந்தப்பட்ட நபர்களால் உதவிகள் கிடைக்காது.

அதாவது, இவர்களுக்கு தந்தையின் முழு அருள் அல்லது ஆதரவு கிடைக்காமல் இருக்கும்.

கர்ணன் கதையைப் பார்த்தால், அவர் சூரியனின் மகன். ஆனால், சூரியன் நேரடியாக அவருக்கு உதவி செய்யும் நிலையில் இருந்ததில்லை. சூரியனே தந்தை என்ற உண்மை கூட அவருக்குத் தெரியாமல் இருந்தது.

உண்மையில், அவர் ஒரு சக்கரவர்த்தி வம்சத்தைச் சேர்ந்தவர். அரச பரம்பரையில் பிறந்தவராக இருந்தும், குந்தி அவரை ஆற்றில் விட்டதால், அவர் தேரோட்டியின் மகனாக வளர்க்கப்பட்டார். அதனால் வாழககை முழுவதும் அவமானங்களையே சந்தித்தார்.

அவ்வளவு திறமையுடையவராக இருந்தும், சூரிய சாபத்தின் காரணமாக வாழ்க்கையில் பல இழப்புகளையும் துன்பங்களையும் அனுபவித்தார்.



அதனால்தான் கடன் சுமையால் அவதிப்படுபவர்கள் கர்ணனின் வாழ்க்கையை அறிந்து கொள்ள வேண்டும் என்றும், குபேரனின் வரலாற்றையும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

கர்ணனும், குபேரனும் இருவருமே தலைமை, மரியாதை போன்றவற்றிற்காக போராடியவர்கள்.

கர்ணன் வாழ்க்கை முழுவதும் கடுஞ்சொல், இகழ்ச்சி, அவமானம் ஆகியவற்றையே எதிர்கொணடார். அதுபோல, இந்த நட்சத்திரச் சேர்க்கை உள்ளவர்களும் வாழ்க்கையில் பல அவமானங்களைச் சந்திக்க நேரிடலாம்.


அதனால் இந்த நட்சத்திரத்தில் விதி மதி கதி உள்ளவர்கள் அவமானத்தை வைராக்கியமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

இவர்களுக்கெல்லாம் ஒரு தன்மான உணர்வு (ஈகோ) இருக்கும். சூரியன் என்பவர் தன்னம்பிக்கை, கம்பீரம், சுயமரியாதை ஆகியவற்றின் அடையாளம். எனவே, சுயமரியாதை குறைவதை இவர்களால் எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாது.

பணம், பொருள், உறவுகள் என எதையும் விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பார்கள். ஆனால், கவரவத்தை மட்டும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அவர்களுக்கு மரியாதையும் கண்ணியமும் மிகவும் முக்கியம்.

அதனால், நாம் அதிகமாக சூரிய பகவானை வழிபட வேண்டும்.

சூரியன் தொடர்புடையவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

அவர்களை திட்டக்கூடாது.

எந்தக் காரணத்திற்காகவும் அவர்களுடைய மனதைப் புண்படுத்தக் கூடாது.

கர்ணன் மற்றும் குபேரன் கதை கொண்ட திரைப்படங்களை பார்க்க வேண்டும்.


Sunday, 2 August 2026

எந்த வளையல் அணிந்தால் என்ன ஆன்மீக பலன்?



எந்த வளையல் அணிந்தால்
என்ன ஆன்மீக பலன்?

கண்ணாடி வளையல்
மாங்கல்ய பலம் அதிகரிக்கும்.

மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது
வீட்டில் சுப அதிர்வலைகள் பெருகும்.

தங்க வளையல்
லக்ஷ்மி கடாட்சம் நிலைக்கும்.

செல்வ வளமும், குடும்ப கௌரவமும் பெருகும்.

ஐஸ்வர்ய யோகம் உண்டாகும்.


வெள்ளி வளையல்
சந்திர பகவானின் அருள் கிடைக்கும்.

மன அமைதி, பொறுமை, நிதானம் அதிகரிக்கும்.

எதிர்மறை சக்திகள் விலகும் என்று நம்பப்படுகிறது
சங்கு வளையல்
திருமகள் அருள் எப்போதும் நிலைக்கும்.

திருமண வாழ்வில் ஒற்றுமை எற்படும்.

தீய திருஷ்டி நீங்கும் என்று நம்பப்படுகிறது
செம்பு வளையல்
சூரிய பகவானின் அருள் கிடைக்கும்.

தன்னம்பிக்கையும், உயிர்சக்தியும் அதிகரிக்கும்.

உடலைச் சற்றியுள்ள எதிர்மறை ஆற்றல் குறையும் என்று கூறப்படுகிறது
பஞ்சலோக வளையல்
நவகிரக அருள் கிடைக்கும்.

தெய்வீக பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

ஆன்மீக முண்ணேற்றத்திற்கு உகந்ததாக கருதப்படுகிறது

“ பெண்களின் கைகளில் வளையல் ஒலித்துக் கொண்டே இருந்தால், அந்த இல்லத்தில் மகாலட்சுமியின் அருள் நிலைத்திருக்கும் "

- நம் முண்ணோர்களின் பாரம்பரிய நம்பிக்கை


தனிக்குடித்தன நட்சத்திரம்



தனிக்குடித்தன நட்சத்திரம்

பொதுவாக கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்க்கையை தொடர முடியாது என்று ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இவர்கள் தனி குடித்தனம் இருப்பது மிகவும் நல்லது. தாயுடன் ஆன கருத்து வேறுபாடுகள் இருப்பதற்கு வாய்ப்புகள் மிகவும் அதிகம். முடிந்தவரை தாயின் முடிவுகளை கேட்டுவிட்டு நீங்கள் உங்களுடைய வாழ்க்கை முடிவுகளை யோசித்து நீங்களே எடுத்தால் சரியானதாக அமையும்.


ஜாதகத்தில் சுக்கிரன் பலமாக அல்லது பலவீனமாக இருந்தால் கிடைக்கும் பலன்!



ஜாதகத்தில் சுக்கிரன் பலமாக அல்லது பலவீனமாக இருந்தால் கிடைக்கும் பலன்!

சுக்கிரனின் பொதுவான காரகத்துவங்கள்

அன்பு, அழகு, கவர்ச்சி, செல்வம், ஆடம்பரம் மற்றும் திருமண சுகத்திற்கு சுக்கிர பகவானே முழுக்காரணம்.

சுக்கிரன் பலமாக இருந்தால் கிடைக்கும் நன்மைகள்!

காதல் மற்றும் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகவும், துணையுடன் நல்ல இணக்கத்துடனும் அமையும்.

செல்வம், சொத்துக்கள், வாகன வசதி மற்றும் எதிர்பாராத பணவரவு (லாட்டரி) போன்ற நன்மைகள் கிடைக்கும்.

சிறந்த அழகு, ஆளுமைத்திறன், மற்றும் எதிர் பாலினத்தவரால் நன்மைகளும் ஆதரவும் உண்டாகும்.

உயர்தர வாழ்க்கை, வெளியூர்/வெளிநாட்டுச் சுற்றுலா மற்றும் உலக இன்பங்களை முழுமையாக அனுபவிக்கும் யோகம் கிடைக்கும்.

சுக்கிரன் பலவீனமாக (அசுப நிலையில்) இருந்தால் ஏற்படும் பாதிப்புகள்



காதல் தோல்வி, எதிர் பாலினத்தவரால் துரோகம், திருமண வாழ்வில் மகிழ்ச்சியற்ற நிலை, விவாகரத்து அல்லது துணையை இழக்கும் அபாயம் ஏற்படலாம்.

வாழ்க்கையில் உற்சாகமின்மை, தனிமை, வறுமை வாட்டும்; மேலும் வசதிகள் இருந்தாலும் அதளை அனுபவிக்க முடியாத நிலை உருவாகும்.

சிறுநீர் தொற்று, சிறுநீரகப் பிரச்சனைகள் போன்ற உடல்நலக் கோளாறுகள் வரக்கூடும்.

தான் அழகாக இல்லை என்ற மனவருத்தம் தோன்றும்; சிறிய வேலைகளை முடிக்கக் கூட கடுமையான உழைப்பு தேவைப்படும்.

பரிகாரம் மற்றும் முக்கிய ஆலோசனைகள்

சுக்கிரனின் பலத்தை அதிகரிக்கவும், நற்பலன்களைப் பெறவும் லக்ஷ்மி தேவியை வழிபட வேண்டும்.

ஜாதகத்தில் லக்னம், 5-ஆம் வீடு அல்லது 9-ஆம் வீட்டின் அதிபதியாக சுக்கிரன் அமைந்தவர்கள் வைரம் அணியலாம்.

வாழ்வில் செல்வமோ அல்லது திருமண மகிழ்ச்சியோ குறையும் போது, சுக்கிரனை மட்டுமே காரணமாக நினைக்கா கூடாது


Saturday, 1 August 2026

வாழ்க்கைக்கு உதவும் எளிய பரிகாரங்கள்



வாழ்க்கைக்கு உதவும் எளிய பரிகாரங்கள்

வீட்டின் முன் இரண்டு மீன்கள் இருக்கும்படியான படத்தை ஒட்டி வைத்து தினசரி பார்த்து வர நன்மைகள் உண்டாகும். (ஒற்றை மீன் படம் பார்ப்பதை தவிர்க்கவும்.)



தினசரி வீட்டை விட்டு கிளம்பும் முன் நீர் நிரம்பிய பாத்திரமோ அல்லது நீர் நிரம்பிய பக்கெட் பார்த்து செல்ல போகிற விஷயம் சுபமாய் முடியும்.

வழியில் செல்லும் போது எதிரில் பிணம் தென்பட்டாலோ அல்லது பிணம் எரிவதை தற்செயலாக பார்க்க நேரிட்டாலோ சில நாணயங்களை பூமியில் போட்டுவிட்டு அவ்விடக் தை விட்டு செல்ல அந்த ஆத்மாவினால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை ஏற்படாமல் இருக்கும்.



முதல் ஆண் குழந்தையின் அரைநாள் கயிற்றை பணப்பெட்டியில் வைக்க செல்வ வளம் சேரும்.

தனியாகவும் மன சோர்வுடனும் தனக்கு யாருமே இல்லை என்ற மனநிலை காணப்பட்டால் மழைநீரில் நனைய மாற்றம் ஏற்படும்.

வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நல கோளாறுகள் வந்து கொண்டே இருந்தால் கோவிலிலோ அல்லது ஆன்மீக மையங்களிலோ 5 பகல் வேளையில் முழு மஞ்சள் பரங்கிக்காய் தானம் செய்ய குடும்ப உடல் கோளாறுகளில் இருந்து விடுபடும்.




விரயமாகி கொண்டே இருந்தாய் சினமும் காலை வேளையில் பறவைகளுக்கு இனிப்பு பிஸ்கட்டுகளை வழங்க வீண் விரயம் கட்டுப்படும்.


+