jaga flash news

Friday, 24 April 2026

LPG, PNG, CNG, LNG... வித்தியாசம் என்ன? எது பாதுகாப்பானது? எங்கு பயன்படுத்தப்படுகிறது?


LPG, PNG, CNG, LNG... வித்தியாசம் என்ன? எது பாதுகாப்பானது? எங்கு பயன்படுத்தப்படுகிறது?

LPG, PNG, CNG மற்றும் LNG போன்ற பெயர்களைக் கேட்டவுடன் பலருக்கும் குழப்பமாக இருக்கிறது. இவற்றுக்கு இடையே உள்ள வித்தியாசம், எந்த எரிவாயு எதற்கு சிறந்தது என்று மக்கள் குழம்புகிறார்கள்.


1/8
LPG, PNG, CNG, LNG.. வித்தியாசம் என்ன? எது பாதுகாப்பானது?
இன்றைய காலகட்டத்தில் எரிவாயு சமையலறைக்கு மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. நம் வீடுகள், வாகனங்கள் மற்றும் பெரிய தொழிற்சாலைகள் என தற்போது அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், LPG, PNG, CNG மற்றும் LNG போன்ற பெயர்களைக் கேட்டவுடன் பலருக்கும் குழப்பமாக இருக்கிறது. இவற்றுக்கு இடையே உள்ள வித்தியாசம், எந்த எரிவாயு எதற்கு சிறந்தது என்று மக்கள் குழம்புகிறார்கள். உண்மையில், இந்த நான்கு வாயுக்களும் ஒரே ஆற்றல் குடும்பத்தைச் சேர்ந்தவை. ஆனால் அவற்றின் பயன்பாடு, சேமிப்பு மற்றும் விநியோக முறைகள் வேறுபட்டவை. இதுப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.


2/8
LPG, PNG, CNG, LNG.. வித்தியாசம் என்ன? எது பாதுகாப்பானது?
மாறிவரும் இந்த ஆற்றல் யுகத்தில், இந்தியாவும் படிப்படியாகத் தூய்மையான மற்றும் திறமையான எரிபொருட்களை நோக்கி நகர்கிறது என்றே சொல்ல வேண்டும். இத்தகைய சூழ்நிலையில், இந்த எரிவாயுவை வெறும் தகவலுக்காக மட்டும் புரிந்து கொள்வதை விட, தற்போது அது அவசியமாகிவிட்டது. ஏனெனில், வரும் காலங்களில் இந்த எரிவாயு உங்கள் வாழ்க்கை முறை மற்றும் செலவுகள் இரண்டையும் தீர்மானிக்கும்.


3/8

LPG என்றால் என்ன, எங்கு பயன்படுத்தப்படுகிறது?: திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) என்பது உங்கள் வீட்டு சிலிண்டரில் பயன்படுத்தும் பொதுவான எரிவாயு ஆகும். இந்த எரிவாயு, புரோப்பேன் மற்றும் பியூட்டேன் ஆகியவற்றின் கலவையாகும். மேலும், இது அழுத்தத்தின் கீழ் திரவ வடிவில் வைக்கப்படுகிறது. எல்பிஜியின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், அதை எங்கும் எளிதாகக் கொண்டு செல்ல முடியும். இதனால்தான் இது கிராமங்கள் முதல் நகரங்கள் வரை மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயுவாக உள்ளது. இருப்பினும், சிலிண்டர்களை மாற்றுவதில் உள்ள சிரமம் மற்றும் சேமிப்புக் கட்டுப்பாடுகள் போன்ற சிக்கல்களும் இதில் உள்ளன.


4/8

PNG என்றால் என்ன, ஏன் பிரபலமாகி வருகிறது?: குழாய்வழி இயற்கை எரிவாயு (PNG) என்பது ஒரு குழாய் மூலம் நேரடியாக வீடுகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. இதற்கு சிலிண்டர்கள் தேவையில்லை. மேலும், எரிவாயு விநியோகம் தொடர்ச்சியாக இருக்கும். பிஎன்ஜியின் மிகப்பெரிய நன்மை, அதன் வசதி மற்றும் பாதுகாப்பு ஆகும். எரிவாயு தீர்ந்துவிடும் என்ற அச்சம் இல்லை. மேலும், கசிவு ஏற்படும் அபாயமும் குறைவு. இதனால்தான் பெரிய நகரங்களில் எல்பிஜிக்கு பதிலாக பிஎன்ஜி பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
advertisement

5/8

CNG என்றால் என்ன, எங்கு பயன்படுத்தப்படுகிறது?: அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) என்பது முக்கியமாக வாகனங்களில் பயன்படுத்தப்படுகிறது. இது அதிக அழுத்தத்தில் சேமிக்கப்படுகிறது. மேலும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மலிவான மற்றும் தூய்மையான மாற்றாக இது கருதப்படுகிறது. சிஎன்ஜியில் இயங்கும் வாகனங்கள் குறைந்த மாசுபாட்டை ஏற்படுத்துவதோடு, அதிக மைலேஜையும் தருகின்றன. இதனால்தான் இந்தியாவில் பொதுப் போக்குவரத்து மற்றும் தனியார் வாகனங்களில் இதன் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது.


6/8

LNG என்றால் என்ன, அது ஏன் மிகவும் மேம்பட்டது?: திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) என்பது மிகக் குறைந்த வெப்பநிலையில் திரவமாக மாற்றப்படும் ஒரு வகை இயற்கை எரிவாயு ஆகும். இது வாயுவின் கன அளவை வெகுவாகக் குறைத்து, நீண்ட தூரங்களுக்குக் கொண்டு செல்வதை எளிதாக்குகிறது. LNG பெரிய தொழிற்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் பயன்படுத்தப்படுகிறது. இது அதிக செயல்திறன் மிக்க மற்றும் குறைந்த மாசுபாட்டை ஏற்படுத்தும் எரிபொருளாக இருப்பதால், ஆற்றலின் எதிர்காலமாகக் கருதப்படுகிறது.


7/8

முக்கிய வேறுபாடு என்ன?: எளிமையாகச் சொன்னால், LPG சிலிண்டர்களில் வருகிறது. PNG குழாய்கள் மூலம் வீடுகளுக்கு செல்கிறது. CNG வாகனங்களில் பயன்படுத்தப்படுகிறது மற்றும் LNG பெரிய அளவிலான தொழிற்சாலைகள் மற்றும் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த நான்கிற்கும் இடையிலான மிகப்பெரிய வேறுபாடு அவற்றின் சேமிப்பு மற்றும் பயன்பாடே ஆகும். LPG மற்றும் PNG வீட்டுத் தேவைகளுக்கானதாக இருக்கும் நிலையில், CNG மற்றும் LNG ஆகியவை பெரிய அளவிலான போக்குவரத்து மற்றும் தொழில்துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.


8/8
 எது பாதுகாப்பானது?
பாதுகாப்பு, வசதி: பாதுகாப்பைப் பொறுத்தவரை, PNG மற்றும் CNG ஆகியவை பாதுகாப்பானவையாகக் கருதப்படுகின்றன. ஏனெனில், அவை காற்றை விட லேசானவை என்பதால், கசிவு ஏற்பட்டால் காற்றில் விரைவாகப் பரவிவிடும். ஆனால், LPG காற்றை விட கனமானது என்பதால், அது தரையில் படிந்து ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். வசதியைப் பொறுத்தவரை, PNG சிறந்தது. ஏனெனில், அதன் கட்டணமும் பயன்பாட்டின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

திருஷ்டி (பார்வை) என்றால் என்ன?

திருஷ்டி (பார்வை) என்றால் என்ன?
"திருஷ்டி" என்ற சமஸ்கிருத சொல்லின் நேர்பொருள் "பார்வை" அல்லது "கண்ணோட்டம்." ஜோதிடத்தில், ஒவ்வொரு கிரகமும் தனது நிலையிலிருந்து 7-வது பாவத்தைப் பார்க்கிறது.

ஆனால் மூன்று கிரகங்கள் கூடுதல் சிறப்பு பார்வைகளைக் கொண்டுள்ளன: செவ்வாய் 4-வது மற்றும் 8-வது பாவங்களையும், குரு 5-வது மற்றும் 9-வது பாவங்களையும், சனி 3-வது மற்றும் 10-வது பாவங்களையும் பார்க்கிறார்கள்.

பார்வை = தாக்கம். குருவின் பார்வை நன்மை செய்யும் — பாதுகாக்கிறது, விரிவாக்குகிறது. சனியின் பார்வை கட்டுப்படுத்தும் — தாமதிக்கிறது, ஒழுங்குபடுத்துகிறது. செவ்வாயின் பார்வை ஆக்கிரமிப்பு — ஆற்றல் தருகிறது, மோதலை உருவாக்குகிறது

Thursday, 23 April 2026

புளூ கலர் மர்மம்.. வாக்கு போட்டும் அழியாத நீல குறி எப்படி உருவாகுது? தேர்தல் மையின் அறிவியல் உண்மை



புளூ கலர் மர்மம்.. வாக்கு போட்டும் அழியாத நீல குறி எப்படி உருவாகுது? தேர்தல் மையின் அறிவியல் உண்மை

  
 தேர்தல் வந்துவிட்டாலே நம்முடைய எல்லோருடைய விரல்களிலும் இடம்பிடிக்கும் அந்த சிறு நீல நிறக் குறி, வெறும் மை கிடையாது, அது ஒரு நாட்டின் ஜனநாயக நேர்மையை உறுதிப்படுத்தும் மிகச்சிறந்த அறிவியல் ஆயுதம் என்றே சொல்லலாம்.. ஒருமுறை வாக்களித்தவர் மறுபடியும் வாக்களிப்பதைத் தடுக்கும் இந்த "அழியாத மை"யை, ஆங்கிலத்தில் Indelible Ink என்பார்கள்.. இந்த மை எப்படி செயல்படுகிறது? இதன் பின்னணியில் உள்ள சுவாரசியமான அறிவியல் தகவல்கள் என்னென்ன? என்பதைப் பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.


தேர்தல் முடிந்ததுமே ஒரு நபர் மீண்டும் ஓட்டு போட முடியாமல் தடுப்பதற்காக இந்தியாவில் பயன்படுத்தப்படும் முக்கியமான முறைகளில் ஒன்று "மறையாத மை ஆகும்.. இந்த மை பொதுவாக வாக்காளரின் வலது கை சுட்டுவிரலில், ஓட்டு பதிவு செய்த உடனே பூசப்படுகிறது..



மேலும் கண்டறிக
இந்த மையின் ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா? இது சாதாரண தண்ணீரால் கழுவினாலும் அழியாது.. சோப்பு போட்டு கழுவினாலும் அழியாது..



இந்த மையின் முக்கிய அடிப்படை ரசாயனம் "சில்வர் நைட்ரேட்" ஆகும்.. இது தோலின் மேல்தோல் பகுதியுடன் வேதியியல் மாற்றம் ஏற்படுத்தி, அழியாத கறை உருவாக செய்கிறது.. இப்படியொரு சூப்பர் யோசனை, முதல் தேர்தல் முறையின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் முக்கிய கருவியாக இது பயன்படுத்தப்பட்டு வருகிறது..

எப்படி மை செயல்படுகிறது
இந்த மை விரலில் வைக்கப்பட்டவுடன், அது தோலில் உள்ள புரதச்சத்துடனும், இயற்கையாக இருக்கும் ஈரப்பதத்துடனும் வினைபுரிகிறது. இந்த வேதிவினையின் விளைவாக, அது தோலில் ஒரு நிரந்தரமான கறையை உருவாக்குகிறது.

இது ஏன் சோப்பு போட்டு கழுவினாலும் போவதில்லை தெரியுமா? ஏனென்றால் இது தோலின் மேல்புறத்தில் ஒட்டிக்கொள்வது கிடையாது.. மாறாக தோலின் செல்களுக்குள்ளேயே ஊடுருவி ஒரு பிணைப்பை ஏற்படுத்திக்கொள்கிறது. அதனால்தான் சோப்பு மட்டுமல்ல, பெட்ரோல் அல்லது எந்த விதமான திரவங்களை கொண்டு தேய்த்தாலும் இந்த கறை நீங்காது.

தோலின் செல்கள் இயற்கையாகவே உதிர்ந்து, புதிய செல்கள் உருவாகும் வரை அப்படியே இருக்கும்.. இப்படி தோலின் செல்கள் உதிர்வதற்கு குறைந்தது சுமார் 2 முதல் 4 வாரங்கள் வரை ஆகும்.. அதுவரை இந்த கறையின் அடையாளம் மறையாது... தோல் இயல்பாக புதிதாக உருவாகும்போது தான் அந்த கறை மெல்ல மெல்ல மறைய துவங்கும்.

மை ஸ்பெஷாலிட்டி
நம்முடைய இந்தியாவில் தேர்தல் முறைகேடுகளைத் தவிர்க்கவும், கள்ள வாக்குகளைத் தடுக்கவும் ஒரு வழிமுறை தேவைப்பட்டது... இதற்காக, இந்தியத் தேர்தல் ஆணையம் ஒரு தீர்வை தேடியபோது, (National Physical Laboratory of India அதாவது தேசிய இயற்பியல் ஆய்வகம் இந்த மையை உருவாக்கியது.

முதன்முதலில் 1962ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில்தான் இந்த மை அறிமுகப்படுத்தப்பட்டது. அன்று முதல் இன்று வரை, இந்தியாவின் ஜனநாயக பயணத்தில் இந்த மை பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டது. இந்த மை செய்யும் வேலையையும், வெற்றியையும் பார்த்து, இன்று கனடா, துருக்கி, தென் ஆப்பிரிக்கா என உலகின் 30-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவிலிருந்து இந்த மையை இறக்குமதி செய்து தங்கள் நாட்டுத் தேர்தல்களுக்குப் பயன்படுத்துகின்றன.


மை உற்பத்தியின் பின்னணி
அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த மையை தயார் செய்வது மிகப்பெரிய பிராசஸ் ஆகும்..இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு தேவையான இந்த மையைத் தயாரிக்கும் பிரத்யேக உரிமையை மைசூர் பெயிண்ட்ஸ் அண்ட் வார்னிஷ் லிமிடெட் (Mysore Paints and Varnish Ltd) பெற்றுள்ளது. இது கர்நாடக அரசுக்கு சொந்தமான ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும்.. பல வருடங்களாகவே இந்திய தேர்தல்களுக்கு தேவையான இந்த சிறப்பு மை இவர்கள் தான் வழங்கி வருகிறார்கள்.

தேர்தல் காலங்களில் கோடிக்கணக்கான பாட்டில்கள் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியா முழுவதும் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பப்படுகின்றன. இதன் ரசாயனக் கலவை, மிக மிக சீக்ரெட்டாகவே பாதுகாக்கப்படுகிறது.

தேர்தல் நேரத்தில் ஏன் இது முக்கியமானது?
வாக்காளர் அடையாள அட்டை முதல் டிஜிட்டல் முறைகள் வரை பல பாதுகாப்பு அம்சங்கள் இருந்தாலும், வாக்குச் சாவடியில் இருக்கும் ஒரு அதிகாரிக்கு, ஒரு நபர் ஏற்கனவே வாக்களித்துவிட்டாரா இல்லையா என்பதை கண்டறிய விரலில் இருக்கும் இந்த அடையாளமே மிக எளிமையான மற்றும் நம்பகமான வழி என்றே சொல்லலாம்.. இது தேர்தல் முறைகேடுகளைத் தடுத்து, "ஒருவருக்கு ஒரு வாக்கு" என்ற ஜனநாயக விதியை உறுதி செய்கிறது...

இந்த சாதாரணமாக தோன்றும் ஊதா நிற மை, ஜனநாயகத்தின் நேர்மையை பாதுகாக்கும் ஒரு முக்கிய அறிவியல் கருவியாக உலகம் முழுவதும் மதிக்கப்படுகிறது..

அந்தவகையில், வாக்குச்சாவடியிலிருந்து வெளியே வரும்போது நம்முடைய விரலில் மின்னும் அந்த நீல நிறக் கறை, நாம் ஒரு பொறுப்புள்ள குடிமகன் என்பதற்கான சான்று மட்டுமே கிடையாது, அது இந்திய அறிவியலின் ஒரு மகத்தான வெற்றியும் கூட...!!!


Monday, 20 April 2026

இந்தியாவுக்குள் இந்தியர்களுக்கே அனுமதி மறுக்கப்படும் இடங்கள்..



இந்தியாவுக்குள் இந்தியர்களுக்கே அனுமதி மறுக்கப்படும் இடங்கள்.. என்னென்ன? தமிழ்நாட்டில் மட்டும் 3 இடம் இருக்குதாம்?

இந்தியர்களாகிய நாம் இந்தியாவில் எந்த இடத்திற்கும், எந்த பகுதிக்கும் செல்ல அனுமதி உண்டு. சில முக்கிய இடங்களுக்கு செல்ல அரசு அனுமதி பெறவேண்டிய கட்டாயம் உள்ளது. இப்படியான நம் இந்தியாவிற்குள் சில இடங்களுக்கு இந்தியர்களாகிய நமக்கே அனுமதி இல்லை என கூறப்படுகிறது. அப்படியான இடம் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம். 

சென்னையில் உள்ள ரெட் லாலிபாப் விடுதி இந்தியர்களுக்கு அனுமதி இல்லை என கூறப்படுகிறது. அந்த விடுதியில் வெளிநாட்டினர்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்படுவதாகவும் பாஸ்போர்ட் கொடுத்தால் மட்டுமே அனுமதி போன்ற கட்டுப்பாடுகள் உள்ளதாக கூறப்படுகிறது.



லட்சக்கணக்கான வெளிநாட்டினரை ஈர்க்கும் சுற்றுலாத்தலம் கோவா. விதவிதமான கடற்கரைக்கு பெயர்போன கோவாவில், சில கடற்கரைகளில் இந்தியர்களுக்கு அனுமதி இல்லை என கூறப்படுகிறது. வெளிநாட்டு பயணிகளின் ப்ரைவஸியை பாதுகாக்க இவ்வாறு செய்வதாக கூறப்படுகிறது.


1800-களில் ரஷ்யா அரசால் கட்டப்பட்ட இடம் ரஷ்ய காலனி. கூடங்குளத்தில் அமைத்துள்ள இந்த காலனிக்கு இந்தியர்கள் செல்ல அனுமதியில்லையாம். ரஷ்ய அரசிடம் அனுமதிபெற்ற சிலர் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
சென்னையில் அமைந்துள்ள ப்ரண்ட்ஸ்லேண்ட் ஹோட்டலுக்கு இந்தியர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என கூறப்படுகிறது. அதிகாரபூர்வமாக இல்லாவிட்டாலும் வெளிநாட்டினர்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்படும் என கூறப்படுகிறது.


அகமதாபாத்தில் அமைத்துள்ள சகுரா ரியோகான் உணவகம் இந்தியர்களுக்கு அனுமதி இல்லை என கூறப்படுகிறது. ஜப்பான் வாடிக்கையாளர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.


இமாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ள ஃப்ரீ கசோல் கஃபே, இந்தியர்களுக்கும், உள்ளூர் மக்களுக்கும் அனுமதி கொடுப்பதில்லை என கூறப்படுகிறது. இந்த உணவகம் இஸ்ரேல் சுற்றுலா பயணிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.


Friday, 17 April 2026

3x2x1 பெஸ்ட் ஃபார்முலா.. ஆரோக்கிய வாழ்வுக்கு உதவும் 10-3-2-1 விதி! இரவில் நல்ல தூக்கம்

நிம்மதியான உறக்கத்தைப் பெற, உலகத்தரம் வாய்ந்த '3-2-1' மற்றும் '10-3-2-1' ஆகிய எளிய விதிமுறைகள் இப்போது பெரும் தீர்வாக முன்வைக்கப்படுகின்றன. வெறும் தூக்கம் மட்டுமல்லாது, ஜப்பான் நாட்டின் புகழ்பெற்ற இடைவெளி நடைப்பயிற்சியும் இணைந்து ஒரு மனிதனின் வாழ்நாளை ஆரோக்கியமாக மாற்றும் ரகசியங்களை இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
இன்றைய பரபரப்பான இயந்திர வாழ்க்கையில் நிம்மதியான உறக்கமும் முறையான உடற்பயிற்சியும் எட்டாக்கனியாகி வரும் நிலையில், உடல் நலனைப் பேண புதிய எளிய வழிமுறைகள் உலகெங்கும் வைரலாகி வருகின்றன.
குறிப்பாக, 3-2-1 என்ற தூக்க ஃபார்முலாவும், ஜப்பான் நாட்டின் பிரத்யேக நடைப்பயிற்சியும் ஆரோக்கிய ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த நவீன வாழ்வியல் மாற்றங்கள் எவ்வாறு ஒரு மனிதனின் வாழ்நாளை மேம்படுத்துகின்றன என்பதை விரிவாகப் பார்ப்போம்

ஜப்பான் நாட்டு 3-2-1 ஃபார்முலா
ஆரோக்கியமான வாழ்விற்கு அடிப்படை ஆதாரமாக விளங்குவது ஆழ்ந்த உறக்கம். ஒரு மனிதன் தினமும் 6 முதல் 8 மணி நேரம் வரை தடையற்ற தூக்கத்தைப் பெற வேண்டும் என்று டாக்டர்கள் வலியுறுத்துகிறார்கள். இதற்கு தடையாக இருப்பவை நாம் பயன்படுத்தும் எலக்ட்ரானிக் சாதனங்கள் தான்.

கம்ப்யூட்டர், கணினி, செல்போன் போன்றவற்றிலிருந்து வெளியாகும் நீல ஒளியானது, மூளையைத் தூண்டி உறக்கத்தை தள்ளிப்போடுகிறது. இதைத் தவிர்க்கவும், மெலடோனின் என்ற ஹார்மோன் சுரப்பைச் சீராக்கவும் '3-2-1' மற்றும் '10-3-2-1' ஆகிய விதிகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

3-2-1 விதியின்படி, தூங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பே கடினமான உணவுகள் மற்றும் மது குடிப்பதை தவிர்த்துவிட வேண்டும். 2 மணி நேரத்திற்கு முன்பாகவே மனதை அமைதிப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டு, வேலைப்பழுவில் இருந்து விடுபட வேண்டும்.

இன்டர்வெல் வாக்கிங் ட்ரெய்னிங் (IWT)
அதைவிட மிக முக்கியமாக, தூங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பே செல்போன், டிவி பயன்பாட்டை முழுமையாக நிறுத்திவிட வேண்டும். இதற்கும் ஒருபடி மேலே சென்று, தூங்குவதற்கு 10 மணி நேரத்திற்கு முன்பே காஃபின் கலந்த பானங்களை நிறுத்திவிடுவது நரம்பு மண்டலத்திற்கு ஓய்வைத் தரும். மேலும், தூங்கும் முன் பாதங்களில் தேங்காய் அல்லது பாதாம் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதும், சோம்புத் தண்ணீர் குடிப்பதும் செரிமானத்தைச் சீராக்கி ஆழ்ந்த உறக்கத்திற்கு வழிவகுக்கும்.

தூக்கத்தைப் போலவே உடற்பயிற்சியிலும் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது ஜப்பான் நாட்டின் "இன்டர்வெல் வாக்கிங் ட்ரெய்னிங்" (IWT). ஷின்ஷு பல்கலைக்கழக பேராசிரியர்களால் உருவாக்கப்பட்ட இந்த முறை, சாதாரண நடைப்பயிற்சியை விட பல மடங்கு அதிக பலன்களைத் தரக்கூடியது.

3 X 3 ஃபார்முலா
இதன் அடிப்படை '3:3' என்ற சுழற்சியாகும். அதாவது, 3 நிமிடங்கள் மிக வேகமாக நடப்பதும், அடுத்த 3 நிமிடங்கள் மெதுவாக நடப்பதுமாக மாற்றி மாற்றிச் செய்ய வேண்டும். இந்தச் சுழற்சியைத் தினமும் 5 முறை, அதாவது மொத்தம் 30 நிமிடங்கள் செய்தால் போதும்.

தினமும் 10,000 அடிகள் நடப்பதை விட, இந்த 30 நிமிட ஜப்பான் நடைப்பயிற்சி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, தசைகளுக்கு அதிக வலுவூட்டுகிறது.

இது உடலில் கலோரி எரிப்பை அதிகரிப்பதுடன், ரத்த அழுத்தத்தைச் சீராக வைக்கவும் உதவுகிறது. வயதானவர்கள் மற்றும் மூட்டு வலி இருப்பவர்கள் கூட தங்கள் உடல் நிலைக்கு ஏற்ப வேகத்தைக் குறைத்தோ அல்லது கூட்டியோ இந்தப் பயிற்சியைச் செய்யலாம். வாரத்திற்கு 5 நாட்கள் இந்த நடைப்பயிற்சியையும், இரவு நேரங்களில் முறையான தூக்க விதிகளையும் பின்பற்றினால், நோயற்ற நீண்ட ஆயுளைப் பெறுவது உறுதி.

Saturday, 11 April 2026

எந்த இடத்தில் மச்சம் இருந் அதிர்ஷ்டம் தெரியுமா?

எந்த இடத்தில் மச்சம் இருந் அதிர்ஷ்டம் தெரியுமா?

வலது தோள்: தன்னம்பிக்கை, தைரியம்

இடது தோள்: குடும்ப வாழ்வில் வெற்றி

நெற்றி நடுவே: புகழ், பதவி, அந்தஸ்து

நெற்றி வலது: தைரியம், பணிவின்மை

நெற்றி இடது: அற்பகுணம், முன்கோபி

வலது அக்குள்: அதிக காமப்பற்று

இடது அக்குள்: தாய்மை இழப்பு

கீழ் உதடு: ஒழுக்கம், உயர்ந்த குணம்

மேல் உதடு: கூடா நட்பு, ஒழுக்கமின்மை

மூக்கு நுணி: வசதி வாழ்க்கை, ஏமாற்றம்

வலது கன்னம்: படபடப்பு, ஏற்ற இறக்க நிலை

இடது கன்னம்: வசீகரம், விரும்பிய வாழ்க்கை

வலது கழுத்து: பிள்ளைகளால் யோகம்

இடது கழுத்து: வாழ்க்கை துணையால் யோகம்

வலது கண் இமை: கஷ்டம், நஷ்டம்

இடது கண் இமை: வாழ்வில் ஏற்ற இறக்கம்

தொப்புள் மேல்: அமைதி, அன்பான துணை

தொப்புள் கீழ்: நஷ்டம், அமைதியின்மை

வலது மார்பு: படிப்படியாக முன்னேற்றம்

இடது மார்பு: உணர்ச்சிகள் அதிகம்

நடு மார்பு: போராட்ட வாழ்க்கை.

அடிவயிறு: ராஜ யோகம், உயர் பதவி

வலது தொடை: ஆணவம், தலைக்கனம்

இடது தொடை: தடுமாற்றம் தயக்கம்

பிறப்புறுப்பு: திருமணம் கடந்த உறவு

வலது புட்டம்: சுகம், காதல்,அவமானம்


Tuesday, 24 March 2026

முயலகனின் கதை

முயலகனின் கதை (Apasmara Story in Tamil):
அறியாமையின் உருவம்: முனிவர்கள் மற்றும் மக்களிடையே ஆணவம், அறியாமை (Apasmara) தலைதூக்கியபோது, சிவபெருமான் அவற்றை அழிக்க முயன்றார்.
அழிவற்ற வரம்: அபஸ்மரன் பிரம்மனிடமிருந்து அழியாத வரம் பெற்றிருந்தான். அவனை முற்றிலும் கொன்றால், உலகில் உள்ள அறியாமை மறைந்து, ஞானம் மட்டுமே மிஞ்சும். இது உலக சமநிலையை பாதிக்கும் என்பதால், சிவபெருமான் அவனை முழுமையாக அழிக்காமல், தன் காலடியில் போட்டு அமுக்கி (கட்டுப்படுத்தி) வைத்தார்.
நடராஜரின் தாண்டவம்: சிவனார் ஆனந்த தாண்டவம் ஆடும்போது, தன் வலது காலால் அபஸ்மரனை மிதித்து, அஹங்காரத்தை அடக்கி, ஞானத்தை நிலைநாட்டுகிறார். இதுவே சிதம்பரம் நடராஜர் திருக்கோலத்தின் தத்துவம். 

முக்கியத்துவம்:
சின்னம்: நடராஜரின் காலடியில் உள்ள முயலகன், மனிதனின் அகங்காரம் மற்றும் அறியாமையை, ஞானத்தை கொண்டு அடக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
ஆயுர்வேதம்: 'அபஸ்மாரம்' என்பது கால்-கை வலிப்பு நோயைக் குறிக்கும் சொல்லாகவும் கருதப்படுகிறது. 

எனவே, அபஸ்மரன் என்பவர் சிவபெருமானின் கருணையால் முழுமையாக அழிக்கப்படாமல், மனிதனின் மனதில் உள்ள அறியாமையை கட்டுப்படுத்தும் சக்தியாகவே நிலைத்திருக்கிறார்.

Saturday, 7 March 2026

கோளறு பதிகம் விளக்கம்



திருஞானசம்பந்தர் அருளிய கோளறு திருப்பதிகம்
கோளறு பதிகம் விளக்கம்
திருஞானசம்பந்தர் அருளிய கோளறு திருப்பதிகம்
நவ கிரகங்களால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கி மனதில் நினைத்த நல்லன எல்லாம் நிறைவேற தினமும் ஓத வேண்டிய அற்புதமான தேவார பதிகம்:

1. வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே!

2. என்பொடு கொம்பொ(டு) ஆமை இவை மார்பிலங்க எருதேறி ஏழையுடனே
பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடாறும் உடனாய நாள்களவை தாம்
அன்பொடு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே!

3. உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து உமையோடும் வெள்ளை விடை மேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே.

4. மதிநுதல் மங்கையோடு வடவாலி ருந்து மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடுநோய் களான பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.

5. நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும் மிகையான பூத மவையும்
அஞ்சிடும் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.

6. வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர் மடவாள் தனோடும் உடனாய்
நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
கோளரி யுழுவையோடு கொலையானை கேழல் கொடுநாக மோடு கரடி
ஆளரி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.


7. செப்பிள முலைநன்மங்கை ஒரு பாகமாக விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியும்அப்பும் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.

8. வேள்பட விழி செய்தன்று விடைமேலிருந்து மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
Ezoic

ஏழ்கடல் சூழிலங்கை அரையன்றனோடும் இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.

9. பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர் வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.

10. கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்
மத்தமு மதியு(ம்)நாகம் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
புத்தரோடமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

11. தேனமர் பொழில் கொளாலை விளைசெந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய்

ஆன சொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.

கோளறு பதிகம் விளக்கம்
1. (எம்பெருமான்) மூங்கில் போன்ற தோளினை உடைய உமையவளுக்கு தன் உடம்பினில் பாகம் கொடுத்தவன். ஆலகால விடத்தை உயிர்களைக் காக்கும் பொருட்டு அருந்தி திருக்கழுத்தினில் தாங்கியவன். இனிமையான இசையை எழுப்பும் வீணையை வாசித்துக்கொண்டு (இருக்கும் அவன்) களங்கமில்லாத பிறையையும் கங்கையையும் தன் திருமுடி மேல் அணிந்து கொண்டு, என் உளம் முழுவதும் நிறைந்து காணப்படுவதால் (அதாவது நான் சிவசிந்தையில் இருப்பதால்) சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, மற்றும் பாம்பாகிய ராகு- கேது என்னும் ஒன்பது கோள்களும் ஒரு குற்றமும் இல்லாதவையாக (என் போன்ற) சிவனடியாருக்கு என்றும் மிக மிக நல்லதையே செய்யும்!

2. திருமாலின் வாமன, பன்றி, கூர்ம அவதாரங்களின் ஆணவத்தை அடக்கி அணிந்து நிற்கும், எலும்பு, கொம்பு, ஆமை ஓடு முதலானவை தன் திருமார்பில் விளங்க, உமையவளுடன் எருதின் மேல் ஏறி, பொன்போலொளிரும் ஊமத்தை மலர்களாலான மாலை தரித்து, தலையில் கங்கையணிந்து என் உள்ளத்தே நிறைந்ததால், விண்மீனாய் வரும் ஆயில்யம்; ஒன்பதோடு ஒன்று – பத்தாவது விண்மீனான மகம்; ஒன்பதொடு ஏழு – பதினாறாவது விண்மீனான விசாகம்; பதினெட்டாவது விண்மீனான கேட்டை; ஆறாவது விண்மீனான திருவாதிரை; முதலான பயணத்திற்கு விலக்கப்பட்ட நாட்கள் எல்லாமும், சிவனடியார் மீது அன்பொடு அவர்க்கு என்றும் நல்லதையே செய்யும்!

3. பவளம் போன்ற சிவந்த திருமேனியில் ஒளிபொருந்திய வெண்ணீற்றை அணிந்து, சிவபெருமான் உமையம்மையாரோடு வெள்ளை எருதின்மீது ஏறி வந்து, அழகு பொருந்திய கொன்றையையும் சந்திரனையும் தன் முடிமேல் அணிந்து சிவபெருமான், உமையம்மையாரோடு வெள்ளை எருதின் மீது ஏறி வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், இலக்குமி, கலைகளை வாகனமாகக் கொண்ட கலைமகள், வெற்றித் தெய்வமான துர்க்கை, பூமாது, திசைத் தெய்வங்கள் ஆன பலரும் அரிய செல்வம் போல நன்மை அளிப்பர். அடியவர்களுக்கு மிக நல்லதையே செய்வர்.


4. பிறைபோன்ற நெற்றியை உடைய உமையம்மையாரோடு ஆலமரத்தின்கீழ் இருந்து (வடம் – ஆலமரம்) வேதங்களை அருளிய எங்கள் பரமன், கங்கை நதியையும் கொன்றை மாலையையும் முடிமேல் அணிந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், ஆத்திரமுடையதான காலம், அக்கினி, யமன், யமதூதர், கொடிய நோய்கள் எல்லாம் மிக நல்ல குணமுடையன ஆகி நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிகவும் நல்லனவே செய்யும்.

5. விடத்தைக் கழுத்தில் அணிந்த நீலகண்டனும், என் தந்தையும், உமையம்மையாரோடு இடபத்தின் மேல் ஏறி வரும் நம் பரம்பொருள் ஆகிய சிவபெருமான், அடர்ந்து கறுத்த வன்னிமலரையும், கொன்றை மலரையும் தன் முடிமேல் அணிந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், கொடிய சினத்தை உடைய அசுரர்கள், முழங்குகிற இடி, மின்னல், துன்பந்தரும் பஞ்ச பூதங்கள் முதலானவையெல்லாம் (நம்மைக் கண்டு) அஞ்சி நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிக நல்லனவே செய்யும்.

6. ஒளியும் வரியும் பொருந்திய புலித்தோல் ஆடையும் (வாள் -வரி – அதள் – அது -ஆடை; அதள் -புலித்தோல்), வரிந்து கட்டிய கோவணமும் அணியும் சிவபெருமான் அன்றலர்ந்த மலர்கள், வன்னி இலை, கொன்றைப்பூ, கங்கை நதி ஆகியவற்றைத் தன் முடிமேல் சூடி, உமையம்மையாரோடும் வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், கொல்லும் வலிய புலி (கோளரி உழுவை), கொலையானை, பன்றி (கேழல்), கொடிய பாம்பு, கரடி, சிங்கம் ஆகியன நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிக நல்லனவே செய்யும்.


7. செம்பு போன்ற இளந்தனங்களை உடைய உமையவளைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு, இடபத்தின் மேல் ஏறிவரும் செல்வனாகிய சிவபெருமான் தன்னை அடைந்த அழகிய பிறைச்சந்திரனையும், கங்கையையும் தன் முடிமேல் அணிந்தவனாய், என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், காய்ச்சல் (சுரம்), குளிர்காய்ச்சல், வாதம், மிகுந்த பித்தம் , அவற்றால் வருவன முதலான துன்பங்கள் நம்மை வந்து அடையா. அப்படி அவை நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு அவை நல்லனவே செய்யும்.

8. அன்று மன்மதன் அழியும்படி நெற்றிக்கண்ணைத் திறந்து எரித்த சிவபெருமான், இடபத்தின் மேல் உமையம்மையாரோடு உடனாய் இருந்து, தன் முடிமேல் ஒளி பொருந்திய பிறைச்சந்திரன், வன்னி இலை, கொன்றை மலர் ஆகியனவற்றைச் சூடி வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், ஏழ் கடல்களால் சூழப்பட்ட இலங்கையின் மன்னன் ஆன இராவணன் (பிறன்மனை நாடியதாலேற்பட்டது) போன்ற இடர்களும் வந்து நம்மைத் துன்புறுத்தா. ஆழமான கடலும் நமக்கு நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு அவை நல்லனவே செய்யும்.

9. பல்வேறு கோலங்கள் கொள்கிற பரம்பொருள் ஆகிறவனும், மாதொருபாகனும், எருதின் மேல் ஏறிவரும் எங்கள் பரமனுமாகிய சிவபெருமான், தன் முடிமேல் கங்கை, எருக்கமலர் ஆகியவற்றை அணிந்து வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், தாமரைமலர் மேல் உறையும் பிரமன், திருமால், வேதங்கள், தேவர்கள் ஆகியோரும், எதிர்காலம், அலையுடைய கடல், மேரு முதலான மலைகள் ஆகியவையும் நமக்கு நல்லனவே செய்வர். அடியவர்களுக்கு அவை மிகவும் நல்லனவே செய்யும்.


10. கூந்தலில் மலர்க்கொத்துகள் அணிந்த உமையம்மையாரோடு வேட வடிவில் சென்று அருச்சுனனுக்கு அருள்புரிந்த தன்மை கொண்ட சிவபெருமான், தன் முடி மேல் ஊமத்தை மலர், பிறைச்சந்திரன், பாம்பு ஆகியவற்றை அணிந்து வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், புத்தர்களையும் சமணர்களையும் ஈசனின் திருநீறு வாதில் தோற்றோடச் செய்யும். அதன் பெருமை நிச்சயமே. எல்லாம் அப்படிச் சிறந்த நல்லனவற்றையே செய்யும். அவை மிகவும் நல்லனவே செய்யும்.

11. தேன் நிறைந்த பூங்காக்களைக் கொண்டதும், கரும்பும் (ஆலை), விளைகிற செந்நெல்லும் நிறைந்துள்ளதும், பொன் போல் ஒளிர்வதும், நான்முகன் (வழிபட்ட) காரணத்தால் பிரமாபுரம் என்ற ஊரில் தோன்றி அபரஞானம் பரஞானம் ஆகிய இரு வகை ஞானங்களையும் உணர்ந்த ஞானசம்பந்தனாகிய யான், தாமே வந்து சம்பவிக்கும் நவக்கிரகங்கள், நாள் நட்சத்திரம், போன்றன எல்லாம் அடியவரை வந்து வருத்தாதவாறு பாடிய இப்பதிகத்தை ஓதும் அடியவர்கள் வானுலகில் அரசு புரிவர். இது நமது ஆணை.

…திருச்சிற்றம்பலம்…


Tuesday, 24 February 2026

அனாயாசேன மரணம், விநா தைன்யேன ஜீவனம்"

அனாயாசேன மரணம், விநா தைன்யேன ஜீவனம்" என்பது காஞ்சி மகாபெரியவா மற்றும் பல மகான்களால் பரிந்துரைக்கப்பட்ட, ஒரு நிம்மதியான வாழ்வு மற்றும் மரணத்திற்காக சிவபெருமானை வேண்டிப் பாடும் ஒரு சிறந்த ஸ்லோகம் ஆகும். இது துன்பமில்லா மரணத்தையும், பிறரைச் சார்ந்திராத வாழ்வையும் கோரும் பக்தி ஸ்லோகம். 
ஸ்லோகம்:
அனாயாசேன மரணம், விநா தைன்யேன ஜீவனம்
தேஹிமே கிருபையா சம்போ, த்வயீ பக்திம் அசஞ்சலாம் 
பொருள்:
அனாயாசேன மரணம்: கஷ்டம்/வேதனை இல்லாத மரணம்.
விநா தைன்யேன ஜீவனம்: பிறரைச் சார்ந்து வாழாத (மானத்தோடு கூடிய) வாழ்க்கை.
தேஹிமே கிருபையா சம்போ: சம்புவே (சிவனே), கிருபையுடன் எனக்கு அருளுங்கள்.
த்வயீ பக்திம் அசஞ்சலாம்: உன்னிடத்தில் அசஞ்சலமான (அசைக்க முடியாத) பக்தி. 
பயன்கள்:
தினமும் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி பிரார்த்தித்தால் நற்கதி அடையலாம்.
வாழும் காலத்தில் துன்பமில்லாத வாழ்வையும், மரணத்தின் போது வேதனையற்ற மரணத்தையும் (இறப்பு) இது வேண்டிப் பெறுகிறது.
சைதன்ய பாகவதத்திலும் இந்த கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Friday, 13 February 2026

படுக்கையில ் அமர்ந்த ு அதாவது கட்டிலின ் மேல ் அமர்ந்த ு இதனை எல்லாம ் செய்யக்கூடாது



படுக்கையில ் அமர்ந்த ு அதாவது கட்டிலின ் மேல ் அமர்ந்த ு இதனை எல்லாம ் செய்யக்கூடாது.

மீறினால், நித்ரா தேவியின ் கோபத்திற்க ு ஆளாகி விடுவீர்கள்.

 படுக்கையில ் அமர்ந்த ு சாப்பிடுவத ு என்பது கண்டிப்பாக கூடாது. அதனால ் வறும ை வீட்டுக்குள ் புகும். என்பத ு ஐதீகம்.

• படுக்கையில ் அமர்ந்த ு பணம ் எண்ணுவத ு என்பத ு கூடாது. மீறினால ் மகாலட்சும ி தாயின ் கோபத்துக்க ு ஆளாக நேரிடும்.

படுக்கையில ் அமர்ந்த ு கொண்ட ு வியாபார கணக்குகளை பார்க்க கூடாது. ஏனென்றால், வீட்டில ் எதிர்மற ை ஆற்றல் அதிகரிப்பதோடு, குபேரனின ் அருள ் கிடைக்காமல ் போய்விடும்.

படுக்கையில ் பகல ் நேரத்தில ் அதிகம ் தூங்குவத ு என்பத ு கூடாது. அதனால ் வீட்டில ் கடன், வறும ை ஏற்படும். அசத ி வந்தால ் மட்டும், படுத்துக ் கொள்ளலாம்.

படுக்கையில ் ஈர காலுடன ் உறங்குவத ு என்பத ு கூடாது. மீறினால ் வீட்டில ் சண்டை, கலகம ் போன்றவ ை ஏற்படுவதோடு, சனிபகவானின ் கோபத்திற்க ு ஆளாக நேரிடும்.