jaga flash news
Saturday, 2 May 2026
AB+ ரத்த வகை கொண்டவர்கள்
AB+ ரத்த வகை கொண்டவர்கள் (AB+ Positive) பொதுவாக புத்திசாலிகள், அமைதியானவர்கள், மற்றும் A, B வகை ரத்த குணங்கள் கலந்த கலவையான ஆளுமை உடையவர்கள். இவர்கள் குளிர்ச்சியான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட (cool and controlled) மனநிலை உடையவர்கள், மற்றும் மற்றவர்களுடன் எளிதாகப் பழகும் தன்மையைக் கொண்டவர்கள்.AB+ ரத்த வகை ஆளுமை பண்புகள் (Tamil):பகுத்தறிவு மற்றும் புத்திசாலித்தனம்: இவர்கள் தர்க்கரீதியாகச் சிந்திக்கக்கூடியவர்கள் மற்றும் கூர்மையான புத்திசாலிகள்.இரட்டை குணம் (Dual Personality): A மற்றும் B குணங்கள் கலந்திருப்பதால், சில சமயம் கூச்ச சுபாவத்துடனும், சில சமயம் மிகவும் நட்பாகவும் இருப்பார்கள்.எளிதில் பழகும் தன்மை: சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளும் திறன் (adaptable) உடையவர்கள்.மறதி மற்றும் பொறுப்பின்மை: புத்திசாலியாக இருந்தாலும், மறதி குணம் அதிகம் மற்றும் சில நேரங்களில் பொறுப்பில்லாமல் செயல்படுவார்கள்.தந்திர மூளை: சிக்கலான சூழ்நிலைகளையும் எளிதாகக் கையாண்டு, தந்திரமாக முடிவெடுக்கும் திறன் கொண்டவர்கள்.கவலை இல்லாதவர்: எப்போதும் கூலாக (Cool) இருப்பார்கள், தேவையற்ற கவலைகளில் சோர்ந்து இருக்க மாட்டார்கள்.குறிப்பு: ரத்த வகைக்கும் ஆளுமைக்கும் இடையிலான தொடர்பு என்பது ஒரு கலாச்சார நம்பிக்கை (குறிப்பாக ஜப்பான்) மட்டுமே
Wednesday, 29 April 2026
Snake Bites Mongoose கீரி கடித்தால் பாம்பு காலி.. பாம்பு கடித்தால் கீரிக்கு ஏன் ஒன்றும் ஆவதில்லை?
கீரி கடித்தால் பாம்பு காலி.. பாம்பு கடித்தால் கீரிக்கு ஏன் ஒன்றும் ஆவதில்லை? பவர்ஃபுல் உண்மை இதுதான்
இயற்கையின் விசித்திரமான படைப்பில் பாம்பு மற்றும் கீரிக்கு இடையிலான பகை என்பது காலங்காலமாகத் தொடரும் ஒரு தீராத போராகும்.. இதற்கு என்ன காரணம் தெரியுமா? பாம்புக்கும் கீரிக்கும் நடக்கும் சண்டையில் பெரும்பாலும் கீரியே வெற்றி பெறுகிறது...இதற்கு என்ன காரணம் தெரியுமா? பாம்பு கடித்தால் கீரிக்கு ஏன் விஷம் ஏறுவதில்லை தெரியுமா? இங்கே அவைகளை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
பாம்பு, கீரி இவை இரண்டுமே நிலப்பரப்பில் வாழும் மிகச்சிறந்த வேட்டையாடிகள்.. அதனால்தான் உணவு மற்றும் இருப்பிடத்திற்காக இவற்றுக்கிடையே அடிக்கடி மோதல்கள் ஏற்படுகின்றன..
Snake Bites Mongoose
தனது குட்டிகளைப் பாம்புகளிடமிருந்து பாதுகாக்கவும் அதே சமயம் பாம்பையே தனது உணவாக மாற்றவும் கீரி துணிச்சலுடன் பாம்பை எதிர்கொள்கிறது,. அபாரமான வேகம் மற்றும் துல்லியமான தாக்குதல் உத்திகளே முக்கிய காரணமாக அமைகின்றன.
பெரியளவில் சரியும்? | "இது" நடந்தால் நிச்சயம் குறையும்! -
கீரி - பாம்பு சண்டை ஏன்
பாம்பின் தாக்குதலை முன்கூட்டியே கணித்து மின்னல் வேகத்தில் விலகி செல்லும் ஆற்றல் கொண்ட கீரி, பாம்பினை அலைக்கழித்து அலைக்கழித்து டயர்ட் ஆக்கிவிடுமாம்.. பிறகு சரியான தருணம் வரும்போது பாம்பின் தலையை தனது கூர்மையான பற்களால் கவ்விப் பிடித்து மண்டை ஓட்டைத் தகர்த்து அதைக் கொன்றுவிடக்கூடி சக்தி படைத்ததாம் கீரி.
அதேபோல பாம்பு எத்தனை முறை தீண்டினாலும் கீரி உடம்பில் விஷம் ஏறுவதில்லை. அது ஏன் தெரியுமா? கீரியின் உடலில் உள்ள தடிமனான முடிகள் ஒரு பாதுகாப்பு கவசம் போலச் செயல்பட்டு பாம்பின் பற்கள் அதன் தோலை ஆழமாகத் துளைக்காதவாறு பார்த்துக் கொள்கின்றன..
பாம்பின் விஷம்
அதுமட்டுமல்ல, பொதுவாக நமது நரம்பு மண்டலத்தில் தகவல்களை கடத்தவும் தசை இயக்கம் மற்றும் இதயத் துடிப்பை சீராக வைக்கவும் அசிடைல் கோலின் என்ற என்சைம் தேவையாகும்.
பாம்பின் விஷத்தில் உள்ள "ஆல்பா நியூரோடாக்சின்" என்ற வேதிப்பொருள் இந்த அசிடைல் கோலினைப் போலவே உருமாறி நரம்பு செல்களில் உள்ள ரிசப்டார் என்ற பகுதியை ஆக்கிரமித்துவிடுமாம்.. இதனால் மூளையிலிருந்து செல்லும் தகவல்கள் தடைபட்டு சுவாசம் நின்று மற்ற உயிரினங்களுக்கு மரணம் நிகழ்வதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் கீரியின் உடலில் இயற்கையிலேயே ஏற்பட்டுள்ள ஒரு தனித்துவமான மரபணு மாற்றத்தால் அதன் ரிசப்டார் அமைப்பு மற்ற பாலூட்டிகளை விட மாறுபட்ட வடிவத்தில் காணப்படுகிறது. அதன் உடலமைப்பும் டிஎன்ஏ மாற்றமுமே அதற்கு இயற்கை கொடுத்த மிகப்பெரிய வரமாகும்.
பாம்புகள் கடித்தால் குதிரை இறக்காதா? பாம்பின் விஷம் செலுத்தி எப்படி மருந்து தயாரிக்கிறார்கள்?
பாம்புகள் கடித்தால் குதிரை இறக்காதா? பாம்பின் விஷம் செலுத்தி எப்படி மருந்து தயாரிக்கிறார்கள்?
நரம்பு மண்டலம் அமைப்பு
அதனால்தான் பாம்பின் விஷம் கீரியின் நரம்பு மண்டலத்தோடு ஒட்ட முடியாமல் போகிறது.. விஷம் உள்ளே சென்றாலும் நரம்புத் தகவல்கள் தடையின்றி நடப்பதால் கீரி உயிர் பிழைத்து விடுகிறது.. இதுமட்டுமின்றி கீரியின் ரத்தத்தில் உள்ள ஒரு வகை கிளைகோ புரோட்டீன் ரத்தத்தில் கலக்கும் விஷத்துடன் பிணைக்கப்பட்டு அதன் வீரியத்தை முழுமையாக நடுநிலையாக்க உதவுகிறதாம்.
இருந்தாலும் ஒரு பெரிய பாம்பு அதிகப்படியான விஷத்தை மீண்டும் மீண்டும் செலுத்தினால் கீரியும் உயிரிழக்க வாய்ப்பு உண்டு என்பது இயற்கையின் சமநிலையாகும்.. இந்தியாவில் சாம்பல் நிறக் கீரிகள் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகின்றன என்பதால் அவற்றின் முடிகளுக்காக வேட்டையாடுவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.. இத்தகைய அரிய உயிரினங்களைப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்..!!!
Friday, 24 April 2026
LPG, PNG, CNG, LNG... வித்தியாசம் என்ன? எது பாதுகாப்பானது? எங்கு பயன்படுத்தப்படுகிறது?
LPG, PNG, CNG, LNG... வித்தியாசம் என்ன? எது பாதுகாப்பானது? எங்கு பயன்படுத்தப்படுகிறது?
LPG, PNG, CNG மற்றும் LNG போன்ற பெயர்களைக் கேட்டவுடன் பலருக்கும் குழப்பமாக இருக்கிறது. இவற்றுக்கு இடையே உள்ள வித்தியாசம், எந்த எரிவாயு எதற்கு சிறந்தது என்று மக்கள் குழம்புகிறார்கள்.
1/8
LPG, PNG, CNG, LNG.. வித்தியாசம் என்ன? எது பாதுகாப்பானது?
இன்றைய காலகட்டத்தில் எரிவாயு சமையலறைக்கு மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. நம் வீடுகள், வாகனங்கள் மற்றும் பெரிய தொழிற்சாலைகள் என தற்போது அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், LPG, PNG, CNG மற்றும் LNG போன்ற பெயர்களைக் கேட்டவுடன் பலருக்கும் குழப்பமாக இருக்கிறது. இவற்றுக்கு இடையே உள்ள வித்தியாசம், எந்த எரிவாயு எதற்கு சிறந்தது என்று மக்கள் குழம்புகிறார்கள். உண்மையில், இந்த நான்கு வாயுக்களும் ஒரே ஆற்றல் குடும்பத்தைச் சேர்ந்தவை. ஆனால் அவற்றின் பயன்பாடு, சேமிப்பு மற்றும் விநியோக முறைகள் வேறுபட்டவை. இதுப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
2/8
LPG, PNG, CNG, LNG.. வித்தியாசம் என்ன? எது பாதுகாப்பானது?
மாறிவரும் இந்த ஆற்றல் யுகத்தில், இந்தியாவும் படிப்படியாகத் தூய்மையான மற்றும் திறமையான எரிபொருட்களை நோக்கி நகர்கிறது என்றே சொல்ல வேண்டும். இத்தகைய சூழ்நிலையில், இந்த எரிவாயுவை வெறும் தகவலுக்காக மட்டும் புரிந்து கொள்வதை விட, தற்போது அது அவசியமாகிவிட்டது. ஏனெனில், வரும் காலங்களில் இந்த எரிவாயு உங்கள் வாழ்க்கை முறை மற்றும் செலவுகள் இரண்டையும் தீர்மானிக்கும்.
3/8
LPG என்றால் என்ன, எங்கு பயன்படுத்தப்படுகிறது?: திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) என்பது உங்கள் வீட்டு சிலிண்டரில் பயன்படுத்தும் பொதுவான எரிவாயு ஆகும். இந்த எரிவாயு, புரோப்பேன் மற்றும் பியூட்டேன் ஆகியவற்றின் கலவையாகும். மேலும், இது அழுத்தத்தின் கீழ் திரவ வடிவில் வைக்கப்படுகிறது. எல்பிஜியின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், அதை எங்கும் எளிதாகக் கொண்டு செல்ல முடியும். இதனால்தான் இது கிராமங்கள் முதல் நகரங்கள் வரை மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயுவாக உள்ளது. இருப்பினும், சிலிண்டர்களை மாற்றுவதில் உள்ள சிரமம் மற்றும் சேமிப்புக் கட்டுப்பாடுகள் போன்ற சிக்கல்களும் இதில் உள்ளன.
4/8
PNG என்றால் என்ன, ஏன் பிரபலமாகி வருகிறது?: குழாய்வழி இயற்கை எரிவாயு (PNG) என்பது ஒரு குழாய் மூலம் நேரடியாக வீடுகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. இதற்கு சிலிண்டர்கள் தேவையில்லை. மேலும், எரிவாயு விநியோகம் தொடர்ச்சியாக இருக்கும். பிஎன்ஜியின் மிகப்பெரிய நன்மை, அதன் வசதி மற்றும் பாதுகாப்பு ஆகும். எரிவாயு தீர்ந்துவிடும் என்ற அச்சம் இல்லை. மேலும், கசிவு ஏற்படும் அபாயமும் குறைவு. இதனால்தான் பெரிய நகரங்களில் எல்பிஜிக்கு பதிலாக பிஎன்ஜி பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
advertisement
5/8
CNG என்றால் என்ன, எங்கு பயன்படுத்தப்படுகிறது?: அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) என்பது முக்கியமாக வாகனங்களில் பயன்படுத்தப்படுகிறது. இது அதிக அழுத்தத்தில் சேமிக்கப்படுகிறது. மேலும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மலிவான மற்றும் தூய்மையான மாற்றாக இது கருதப்படுகிறது. சிஎன்ஜியில் இயங்கும் வாகனங்கள் குறைந்த மாசுபாட்டை ஏற்படுத்துவதோடு, அதிக மைலேஜையும் தருகின்றன. இதனால்தான் இந்தியாவில் பொதுப் போக்குவரத்து மற்றும் தனியார் வாகனங்களில் இதன் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது.
6/8
LNG என்றால் என்ன, அது ஏன் மிகவும் மேம்பட்டது?: திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) என்பது மிகக் குறைந்த வெப்பநிலையில் திரவமாக மாற்றப்படும் ஒரு வகை இயற்கை எரிவாயு ஆகும். இது வாயுவின் கன அளவை வெகுவாகக் குறைத்து, நீண்ட தூரங்களுக்குக் கொண்டு செல்வதை எளிதாக்குகிறது. LNG பெரிய தொழிற்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் பயன்படுத்தப்படுகிறது. இது அதிக செயல்திறன் மிக்க மற்றும் குறைந்த மாசுபாட்டை ஏற்படுத்தும் எரிபொருளாக இருப்பதால், ஆற்றலின் எதிர்காலமாகக் கருதப்படுகிறது.
7/8
முக்கிய வேறுபாடு என்ன?: எளிமையாகச் சொன்னால், LPG சிலிண்டர்களில் வருகிறது. PNG குழாய்கள் மூலம் வீடுகளுக்கு செல்கிறது. CNG வாகனங்களில் பயன்படுத்தப்படுகிறது மற்றும் LNG பெரிய அளவிலான தொழிற்சாலைகள் மற்றும் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த நான்கிற்கும் இடையிலான மிகப்பெரிய வேறுபாடு அவற்றின் சேமிப்பு மற்றும் பயன்பாடே ஆகும். LPG மற்றும் PNG வீட்டுத் தேவைகளுக்கானதாக இருக்கும் நிலையில், CNG மற்றும் LNG ஆகியவை பெரிய அளவிலான போக்குவரத்து மற்றும் தொழில்துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.
8/8
எது பாதுகாப்பானது?
பாதுகாப்பு, வசதி: பாதுகாப்பைப் பொறுத்தவரை, PNG மற்றும் CNG ஆகியவை பாதுகாப்பானவையாகக் கருதப்படுகின்றன. ஏனெனில், அவை காற்றை விட லேசானவை என்பதால், கசிவு ஏற்பட்டால் காற்றில் விரைவாகப் பரவிவிடும். ஆனால், LPG காற்றை விட கனமானது என்பதால், அது தரையில் படிந்து ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். வசதியைப் பொறுத்தவரை, PNG சிறந்தது. ஏனெனில், அதன் கட்டணமும் பயன்பாட்டின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
திருஷ்டி (பார்வை) என்றால் என்ன?
திருஷ்டி (பார்வை) என்றால் என்ன?
"திருஷ்டி" என்ற சமஸ்கிருத சொல்லின் நேர்பொருள் "பார்வை" அல்லது "கண்ணோட்டம்." ஜோதிடத்தில், ஒவ்வொரு கிரகமும் தனது நிலையிலிருந்து 7-வது பாவத்தைப் பார்க்கிறது.
ஆனால் மூன்று கிரகங்கள் கூடுதல் சிறப்பு பார்வைகளைக் கொண்டுள்ளன: செவ்வாய் 4-வது மற்றும் 8-வது பாவங்களையும், குரு 5-வது மற்றும் 9-வது பாவங்களையும், சனி 3-வது மற்றும் 10-வது பாவங்களையும் பார்க்கிறார்கள்.
பார்வை = தாக்கம். குருவின் பார்வை நன்மை செய்யும் — பாதுகாக்கிறது, விரிவாக்குகிறது. சனியின் பார்வை கட்டுப்படுத்தும் — தாமதிக்கிறது, ஒழுங்குபடுத்துகிறது. செவ்வாயின் பார்வை ஆக்கிரமிப்பு — ஆற்றல் தருகிறது, மோதலை உருவாக்குகிறது
Thursday, 23 April 2026
புளூ கலர் மர்மம்.. வாக்கு போட்டும் அழியாத நீல குறி எப்படி உருவாகுது? தேர்தல் மையின் அறிவியல் உண்மை
புளூ கலர் மர்மம்.. வாக்கு போட்டும் அழியாத நீல குறி எப்படி உருவாகுது? தேர்தல் மையின் அறிவியல் உண்மை
தேர்தல் வந்துவிட்டாலே நம்முடைய எல்லோருடைய விரல்களிலும் இடம்பிடிக்கும் அந்த சிறு நீல நிறக் குறி, வெறும் மை கிடையாது, அது ஒரு நாட்டின் ஜனநாயக நேர்மையை உறுதிப்படுத்தும் மிகச்சிறந்த அறிவியல் ஆயுதம் என்றே சொல்லலாம்.. ஒருமுறை வாக்களித்தவர் மறுபடியும் வாக்களிப்பதைத் தடுக்கும் இந்த "அழியாத மை"யை, ஆங்கிலத்தில் Indelible Ink என்பார்கள்.. இந்த மை எப்படி செயல்படுகிறது? இதன் பின்னணியில் உள்ள சுவாரசியமான அறிவியல் தகவல்கள் என்னென்ன? என்பதைப் பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
தேர்தல் முடிந்ததுமே ஒரு நபர் மீண்டும் ஓட்டு போட முடியாமல் தடுப்பதற்காக இந்தியாவில் பயன்படுத்தப்படும் முக்கியமான முறைகளில் ஒன்று "மறையாத மை ஆகும்.. இந்த மை பொதுவாக வாக்காளரின் வலது கை சுட்டுவிரலில், ஓட்டு பதிவு செய்த உடனே பூசப்படுகிறது..
மேலும் கண்டறிக
இந்த மையின் ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா? இது சாதாரண தண்ணீரால் கழுவினாலும் அழியாது.. சோப்பு போட்டு கழுவினாலும் அழியாது..
இந்த மையின் முக்கிய அடிப்படை ரசாயனம் "சில்வர் நைட்ரேட்" ஆகும்.. இது தோலின் மேல்தோல் பகுதியுடன் வேதியியல் மாற்றம் ஏற்படுத்தி, அழியாத கறை உருவாக செய்கிறது.. இப்படியொரு சூப்பர் யோசனை, முதல் தேர்தல் முறையின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் முக்கிய கருவியாக இது பயன்படுத்தப்பட்டு வருகிறது..
எப்படி மை செயல்படுகிறது
இந்த மை விரலில் வைக்கப்பட்டவுடன், அது தோலில் உள்ள புரதச்சத்துடனும், இயற்கையாக இருக்கும் ஈரப்பதத்துடனும் வினைபுரிகிறது. இந்த வேதிவினையின் விளைவாக, அது தோலில் ஒரு நிரந்தரமான கறையை உருவாக்குகிறது.
இது ஏன் சோப்பு போட்டு கழுவினாலும் போவதில்லை தெரியுமா? ஏனென்றால் இது தோலின் மேல்புறத்தில் ஒட்டிக்கொள்வது கிடையாது.. மாறாக தோலின் செல்களுக்குள்ளேயே ஊடுருவி ஒரு பிணைப்பை ஏற்படுத்திக்கொள்கிறது. அதனால்தான் சோப்பு மட்டுமல்ல, பெட்ரோல் அல்லது எந்த விதமான திரவங்களை கொண்டு தேய்த்தாலும் இந்த கறை நீங்காது.
தோலின் செல்கள் இயற்கையாகவே உதிர்ந்து, புதிய செல்கள் உருவாகும் வரை அப்படியே இருக்கும்.. இப்படி தோலின் செல்கள் உதிர்வதற்கு குறைந்தது சுமார் 2 முதல் 4 வாரங்கள் வரை ஆகும்.. அதுவரை இந்த கறையின் அடையாளம் மறையாது... தோல் இயல்பாக புதிதாக உருவாகும்போது தான் அந்த கறை மெல்ல மெல்ல மறைய துவங்கும்.
மை ஸ்பெஷாலிட்டி
நம்முடைய இந்தியாவில் தேர்தல் முறைகேடுகளைத் தவிர்க்கவும், கள்ள வாக்குகளைத் தடுக்கவும் ஒரு வழிமுறை தேவைப்பட்டது... இதற்காக, இந்தியத் தேர்தல் ஆணையம் ஒரு தீர்வை தேடியபோது, (National Physical Laboratory of India அதாவது தேசிய இயற்பியல் ஆய்வகம் இந்த மையை உருவாக்கியது.
முதன்முதலில் 1962ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில்தான் இந்த மை அறிமுகப்படுத்தப்பட்டது. அன்று முதல் இன்று வரை, இந்தியாவின் ஜனநாயக பயணத்தில் இந்த மை பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டது. இந்த மை செய்யும் வேலையையும், வெற்றியையும் பார்த்து, இன்று கனடா, துருக்கி, தென் ஆப்பிரிக்கா என உலகின் 30-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவிலிருந்து இந்த மையை இறக்குமதி செய்து தங்கள் நாட்டுத் தேர்தல்களுக்குப் பயன்படுத்துகின்றன.
மை உற்பத்தியின் பின்னணி
அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த மையை தயார் செய்வது மிகப்பெரிய பிராசஸ் ஆகும்..இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு தேவையான இந்த மையைத் தயாரிக்கும் பிரத்யேக உரிமையை மைசூர் பெயிண்ட்ஸ் அண்ட் வார்னிஷ் லிமிடெட் (Mysore Paints and Varnish Ltd) பெற்றுள்ளது. இது கர்நாடக அரசுக்கு சொந்தமான ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும்.. பல வருடங்களாகவே இந்திய தேர்தல்களுக்கு தேவையான இந்த சிறப்பு மை இவர்கள் தான் வழங்கி வருகிறார்கள்.
தேர்தல் காலங்களில் கோடிக்கணக்கான பாட்டில்கள் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியா முழுவதும் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பப்படுகின்றன. இதன் ரசாயனக் கலவை, மிக மிக சீக்ரெட்டாகவே பாதுகாக்கப்படுகிறது.
தேர்தல் நேரத்தில் ஏன் இது முக்கியமானது?
வாக்காளர் அடையாள அட்டை முதல் டிஜிட்டல் முறைகள் வரை பல பாதுகாப்பு அம்சங்கள் இருந்தாலும், வாக்குச் சாவடியில் இருக்கும் ஒரு அதிகாரிக்கு, ஒரு நபர் ஏற்கனவே வாக்களித்துவிட்டாரா இல்லையா என்பதை கண்டறிய விரலில் இருக்கும் இந்த அடையாளமே மிக எளிமையான மற்றும் நம்பகமான வழி என்றே சொல்லலாம்.. இது தேர்தல் முறைகேடுகளைத் தடுத்து, "ஒருவருக்கு ஒரு வாக்கு" என்ற ஜனநாயக விதியை உறுதி செய்கிறது...
இந்த சாதாரணமாக தோன்றும் ஊதா நிற மை, ஜனநாயகத்தின் நேர்மையை பாதுகாக்கும் ஒரு முக்கிய அறிவியல் கருவியாக உலகம் முழுவதும் மதிக்கப்படுகிறது..
அந்தவகையில், வாக்குச்சாவடியிலிருந்து வெளியே வரும்போது நம்முடைய விரலில் மின்னும் அந்த நீல நிறக் கறை, நாம் ஒரு பொறுப்புள்ள குடிமகன் என்பதற்கான சான்று மட்டுமே கிடையாது, அது இந்திய அறிவியலின் ஒரு மகத்தான வெற்றியும் கூட...!!!
Monday, 20 April 2026
இந்தியாவுக்குள் இந்தியர்களுக்கே அனுமதி மறுக்கப்படும் இடங்கள்..
இந்தியாவுக்குள் இந்தியர்களுக்கே அனுமதி மறுக்கப்படும் இடங்கள்.. என்னென்ன? தமிழ்நாட்டில் மட்டும் 3 இடம் இருக்குதாம்?
இந்தியர்களாகிய நாம் இந்தியாவில் எந்த இடத்திற்கும், எந்த பகுதிக்கும் செல்ல அனுமதி உண்டு. சில முக்கிய இடங்களுக்கு செல்ல அரசு அனுமதி பெறவேண்டிய கட்டாயம் உள்ளது. இப்படியான நம் இந்தியாவிற்குள் சில இடங்களுக்கு இந்தியர்களாகிய நமக்கே அனுமதி இல்லை என கூறப்படுகிறது. அப்படியான இடம் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
சென்னையில் உள்ள ரெட் லாலிபாப் விடுதி இந்தியர்களுக்கு அனுமதி இல்லை என கூறப்படுகிறது. அந்த விடுதியில் வெளிநாட்டினர்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்படுவதாகவும் பாஸ்போர்ட் கொடுத்தால் மட்டுமே அனுமதி போன்ற கட்டுப்பாடுகள் உள்ளதாக கூறப்படுகிறது.
லட்சக்கணக்கான வெளிநாட்டினரை ஈர்க்கும் சுற்றுலாத்தலம் கோவா. விதவிதமான கடற்கரைக்கு பெயர்போன கோவாவில், சில கடற்கரைகளில் இந்தியர்களுக்கு அனுமதி இல்லை என கூறப்படுகிறது. வெளிநாட்டு பயணிகளின் ப்ரைவஸியை பாதுகாக்க இவ்வாறு செய்வதாக கூறப்படுகிறது.
1800-களில் ரஷ்யா அரசால் கட்டப்பட்ட இடம் ரஷ்ய காலனி. கூடங்குளத்தில் அமைத்துள்ள இந்த காலனிக்கு இந்தியர்கள் செல்ல அனுமதியில்லையாம். ரஷ்ய அரசிடம் அனுமதிபெற்ற சிலர் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
சென்னையில் அமைந்துள்ள ப்ரண்ட்ஸ்லேண்ட் ஹோட்டலுக்கு இந்தியர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என கூறப்படுகிறது. அதிகாரபூர்வமாக இல்லாவிட்டாலும் வெளிநாட்டினர்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்படும் என கூறப்படுகிறது.
அகமதாபாத்தில் அமைத்துள்ள சகுரா ரியோகான் உணவகம் இந்தியர்களுக்கு அனுமதி இல்லை என கூறப்படுகிறது. ஜப்பான் வாடிக்கையாளர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இமாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ள ஃப்ரீ கசோல் கஃபே, இந்தியர்களுக்கும், உள்ளூர் மக்களுக்கும் அனுமதி கொடுப்பதில்லை என கூறப்படுகிறது. இந்த உணவகம் இஸ்ரேல் சுற்றுலா பயணிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
Friday, 17 April 2026
3x2x1 பெஸ்ட் ஃபார்முலா.. ஆரோக்கிய வாழ்வுக்கு உதவும் 10-3-2-1 விதி! இரவில் நல்ல தூக்கம்
நிம்மதியான உறக்கத்தைப் பெற, உலகத்தரம் வாய்ந்த '3-2-1' மற்றும் '10-3-2-1' ஆகிய எளிய விதிமுறைகள் இப்போது பெரும் தீர்வாக முன்வைக்கப்படுகின்றன. வெறும் தூக்கம் மட்டுமல்லாது, ஜப்பான் நாட்டின் புகழ்பெற்ற இடைவெளி நடைப்பயிற்சியும் இணைந்து ஒரு மனிதனின் வாழ்நாளை ஆரோக்கியமாக மாற்றும் ரகசியங்களை இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
இன்றைய பரபரப்பான இயந்திர வாழ்க்கையில் நிம்மதியான உறக்கமும் முறையான உடற்பயிற்சியும் எட்டாக்கனியாகி வரும் நிலையில், உடல் நலனைப் பேண புதிய எளிய வழிமுறைகள் உலகெங்கும் வைரலாகி வருகின்றன.
குறிப்பாக, 3-2-1 என்ற தூக்க ஃபார்முலாவும், ஜப்பான் நாட்டின் பிரத்யேக நடைப்பயிற்சியும் ஆரோக்கிய ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த நவீன வாழ்வியல் மாற்றங்கள் எவ்வாறு ஒரு மனிதனின் வாழ்நாளை மேம்படுத்துகின்றன என்பதை விரிவாகப் பார்ப்போம்
ஜப்பான் நாட்டு 3-2-1 ஃபார்முலா
ஆரோக்கியமான வாழ்விற்கு அடிப்படை ஆதாரமாக விளங்குவது ஆழ்ந்த உறக்கம். ஒரு மனிதன் தினமும் 6 முதல் 8 மணி நேரம் வரை தடையற்ற தூக்கத்தைப் பெற வேண்டும் என்று டாக்டர்கள் வலியுறுத்துகிறார்கள். இதற்கு தடையாக இருப்பவை நாம் பயன்படுத்தும் எலக்ட்ரானிக் சாதனங்கள் தான்.
கம்ப்யூட்டர், கணினி, செல்போன் போன்றவற்றிலிருந்து வெளியாகும் நீல ஒளியானது, மூளையைத் தூண்டி உறக்கத்தை தள்ளிப்போடுகிறது. இதைத் தவிர்க்கவும், மெலடோனின் என்ற ஹார்மோன் சுரப்பைச் சீராக்கவும் '3-2-1' மற்றும் '10-3-2-1' ஆகிய விதிகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
3-2-1 விதியின்படி, தூங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பே கடினமான உணவுகள் மற்றும் மது குடிப்பதை தவிர்த்துவிட வேண்டும். 2 மணி நேரத்திற்கு முன்பாகவே மனதை அமைதிப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டு, வேலைப்பழுவில் இருந்து விடுபட வேண்டும்.
இன்டர்வெல் வாக்கிங் ட்ரெய்னிங் (IWT)
அதைவிட மிக முக்கியமாக, தூங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பே செல்போன், டிவி பயன்பாட்டை முழுமையாக நிறுத்திவிட வேண்டும். இதற்கும் ஒருபடி மேலே சென்று, தூங்குவதற்கு 10 மணி நேரத்திற்கு முன்பே காஃபின் கலந்த பானங்களை நிறுத்திவிடுவது நரம்பு மண்டலத்திற்கு ஓய்வைத் தரும். மேலும், தூங்கும் முன் பாதங்களில் தேங்காய் அல்லது பாதாம் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதும், சோம்புத் தண்ணீர் குடிப்பதும் செரிமானத்தைச் சீராக்கி ஆழ்ந்த உறக்கத்திற்கு வழிவகுக்கும்.
தூக்கத்தைப் போலவே உடற்பயிற்சியிலும் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது ஜப்பான் நாட்டின் "இன்டர்வெல் வாக்கிங் ட்ரெய்னிங்" (IWT). ஷின்ஷு பல்கலைக்கழக பேராசிரியர்களால் உருவாக்கப்பட்ட இந்த முறை, சாதாரண நடைப்பயிற்சியை விட பல மடங்கு அதிக பலன்களைத் தரக்கூடியது.
3 X 3 ஃபார்முலா
இதன் அடிப்படை '3:3' என்ற சுழற்சியாகும். அதாவது, 3 நிமிடங்கள் மிக வேகமாக நடப்பதும், அடுத்த 3 நிமிடங்கள் மெதுவாக நடப்பதுமாக மாற்றி மாற்றிச் செய்ய வேண்டும். இந்தச் சுழற்சியைத் தினமும் 5 முறை, அதாவது மொத்தம் 30 நிமிடங்கள் செய்தால் போதும்.
தினமும் 10,000 அடிகள் நடப்பதை விட, இந்த 30 நிமிட ஜப்பான் நடைப்பயிற்சி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, தசைகளுக்கு அதிக வலுவூட்டுகிறது.
இது உடலில் கலோரி எரிப்பை அதிகரிப்பதுடன், ரத்த அழுத்தத்தைச் சீராக வைக்கவும் உதவுகிறது. வயதானவர்கள் மற்றும் மூட்டு வலி இருப்பவர்கள் கூட தங்கள் உடல் நிலைக்கு ஏற்ப வேகத்தைக் குறைத்தோ அல்லது கூட்டியோ இந்தப் பயிற்சியைச் செய்யலாம். வாரத்திற்கு 5 நாட்கள் இந்த நடைப்பயிற்சியையும், இரவு நேரங்களில் முறையான தூக்க விதிகளையும் பின்பற்றினால், நோயற்ற நீண்ட ஆயுளைப் பெறுவது உறுதி.
Saturday, 11 April 2026
எந்த இடத்தில் மச்சம் இருந் அதிர்ஷ்டம் தெரியுமா?
எந்த இடத்தில் மச்சம் இருந் அதிர்ஷ்டம் தெரியுமா?
வலது தோள்: தன்னம்பிக்கை, தைரியம்
இடது தோள்: குடும்ப வாழ்வில் வெற்றி
நெற்றி நடுவே: புகழ், பதவி, அந்தஸ்து
நெற்றி வலது: தைரியம், பணிவின்மை
நெற்றி இடது: அற்பகுணம், முன்கோபி
வலது அக்குள்: அதிக காமப்பற்று
இடது அக்குள்: தாய்மை இழப்பு
கீழ் உதடு: ஒழுக்கம், உயர்ந்த குணம்
மேல் உதடு: கூடா நட்பு, ஒழுக்கமின்மை
மூக்கு நுணி: வசதி வாழ்க்கை, ஏமாற்றம்
வலது கன்னம்: படபடப்பு, ஏற்ற இறக்க நிலை
இடது கன்னம்: வசீகரம், விரும்பிய வாழ்க்கை
வலது கழுத்து: பிள்ளைகளால் யோகம்
இடது கழுத்து: வாழ்க்கை துணையால் யோகம்
வலது கண் இமை: கஷ்டம், நஷ்டம்
இடது கண் இமை: வாழ்வில் ஏற்ற இறக்கம்
தொப்புள் மேல்: அமைதி, அன்பான துணை
தொப்புள் கீழ்: நஷ்டம், அமைதியின்மை
வலது மார்பு: படிப்படியாக முன்னேற்றம்
இடது மார்பு: உணர்ச்சிகள் அதிகம்
நடு மார்பு: போராட்ட வாழ்க்கை.
அடிவயிறு: ராஜ யோகம், உயர் பதவி
வலது தொடை: ஆணவம், தலைக்கனம்
இடது தொடை: தடுமாற்றம் தயக்கம்
பிறப்புறுப்பு: திருமணம் கடந்த உறவு
வலது புட்டம்: சுகம், காதல்,அவமானம்
Tuesday, 24 March 2026
முயலகனின் கதை
முயலகனின் கதை (Apasmara Story in Tamil):
அறியாமையின் உருவம்: முனிவர்கள் மற்றும் மக்களிடையே ஆணவம், அறியாமை (Apasmara) தலைதூக்கியபோது, சிவபெருமான் அவற்றை அழிக்க முயன்றார்.
அழிவற்ற வரம்: அபஸ்மரன் பிரம்மனிடமிருந்து அழியாத வரம் பெற்றிருந்தான். அவனை முற்றிலும் கொன்றால், உலகில் உள்ள அறியாமை மறைந்து, ஞானம் மட்டுமே மிஞ்சும். இது உலக சமநிலையை பாதிக்கும் என்பதால், சிவபெருமான் அவனை முழுமையாக அழிக்காமல், தன் காலடியில் போட்டு அமுக்கி (கட்டுப்படுத்தி) வைத்தார்.
நடராஜரின் தாண்டவம்: சிவனார் ஆனந்த தாண்டவம் ஆடும்போது, தன் வலது காலால் அபஸ்மரனை மிதித்து, அஹங்காரத்தை அடக்கி, ஞானத்தை நிலைநாட்டுகிறார். இதுவே சிதம்பரம் நடராஜர் திருக்கோலத்தின் தத்துவம்.
முக்கியத்துவம்:
சின்னம்: நடராஜரின் காலடியில் உள்ள முயலகன், மனிதனின் அகங்காரம் மற்றும் அறியாமையை, ஞானத்தை கொண்டு அடக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
ஆயுர்வேதம்: 'அபஸ்மாரம்' என்பது கால்-கை வலிப்பு நோயைக் குறிக்கும் சொல்லாகவும் கருதப்படுகிறது.
எனவே, அபஸ்மரன் என்பவர் சிவபெருமானின் கருணையால் முழுமையாக அழிக்கப்படாமல், மனிதனின் மனதில் உள்ள அறியாமையை கட்டுப்படுத்தும் சக்தியாகவே நிலைத்திருக்கிறார்.
Saturday, 7 March 2026
கோளறு பதிகம் விளக்கம்
திருஞானசம்பந்தர் அருளிய கோளறு திருப்பதிகம்
கோளறு பதிகம் விளக்கம்
திருஞானசம்பந்தர் அருளிய கோளறு திருப்பதிகம்
நவ கிரகங்களால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கி மனதில் நினைத்த நல்லன எல்லாம் நிறைவேற தினமும் ஓத வேண்டிய அற்புதமான தேவார பதிகம்:
1. வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே!
2. என்பொடு கொம்பொ(டு) ஆமை இவை மார்பிலங்க எருதேறி ஏழையுடனே
பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடாறும் உடனாய நாள்களவை தாம்
அன்பொடு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே!
3. உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து உமையோடும் வெள்ளை விடை மேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே.
4. மதிநுதல் மங்கையோடு வடவாலி ருந்து மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடுநோய் களான பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.
5. நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும் மிகையான பூத மவையும்
அஞ்சிடும் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.
6. வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர் மடவாள் தனோடும் உடனாய்
நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
கோளரி யுழுவையோடு கொலையானை கேழல் கொடுநாக மோடு கரடி
ஆளரி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.
7. செப்பிள முலைநன்மங்கை ஒரு பாகமாக விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியும்அப்பும் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.
8. வேள்பட விழி செய்தன்று விடைமேலிருந்து மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
Ezoic
ஏழ்கடல் சூழிலங்கை அரையன்றனோடும் இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.
9. பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர் வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.
10. கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்
மத்தமு மதியு(ம்)நாகம் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
புத்தரோடமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
11. தேனமர் பொழில் கொளாலை விளைசெந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய்
ஆன சொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.
கோளறு பதிகம் விளக்கம்
1. (எம்பெருமான்) மூங்கில் போன்ற தோளினை உடைய உமையவளுக்கு தன் உடம்பினில் பாகம் கொடுத்தவன். ஆலகால விடத்தை உயிர்களைக் காக்கும் பொருட்டு அருந்தி திருக்கழுத்தினில் தாங்கியவன். இனிமையான இசையை எழுப்பும் வீணையை வாசித்துக்கொண்டு (இருக்கும் அவன்) களங்கமில்லாத பிறையையும் கங்கையையும் தன் திருமுடி மேல் அணிந்து கொண்டு, என் உளம் முழுவதும் நிறைந்து காணப்படுவதால் (அதாவது நான் சிவசிந்தையில் இருப்பதால்) சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, மற்றும் பாம்பாகிய ராகு- கேது என்னும் ஒன்பது கோள்களும் ஒரு குற்றமும் இல்லாதவையாக (என் போன்ற) சிவனடியாருக்கு என்றும் மிக மிக நல்லதையே செய்யும்!
2. திருமாலின் வாமன, பன்றி, கூர்ம அவதாரங்களின் ஆணவத்தை அடக்கி அணிந்து நிற்கும், எலும்பு, கொம்பு, ஆமை ஓடு முதலானவை தன் திருமார்பில் விளங்க, உமையவளுடன் எருதின் மேல் ஏறி, பொன்போலொளிரும் ஊமத்தை மலர்களாலான மாலை தரித்து, தலையில் கங்கையணிந்து என் உள்ளத்தே நிறைந்ததால், விண்மீனாய் வரும் ஆயில்யம்; ஒன்பதோடு ஒன்று – பத்தாவது விண்மீனான மகம்; ஒன்பதொடு ஏழு – பதினாறாவது விண்மீனான விசாகம்; பதினெட்டாவது விண்மீனான கேட்டை; ஆறாவது விண்மீனான திருவாதிரை; முதலான பயணத்திற்கு விலக்கப்பட்ட நாட்கள் எல்லாமும், சிவனடியார் மீது அன்பொடு அவர்க்கு என்றும் நல்லதையே செய்யும்!
3. பவளம் போன்ற சிவந்த திருமேனியில் ஒளிபொருந்திய வெண்ணீற்றை அணிந்து, சிவபெருமான் உமையம்மையாரோடு வெள்ளை எருதின்மீது ஏறி வந்து, அழகு பொருந்திய கொன்றையையும் சந்திரனையும் தன் முடிமேல் அணிந்து சிவபெருமான், உமையம்மையாரோடு வெள்ளை எருதின் மீது ஏறி வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், இலக்குமி, கலைகளை வாகனமாகக் கொண்ட கலைமகள், வெற்றித் தெய்வமான துர்க்கை, பூமாது, திசைத் தெய்வங்கள் ஆன பலரும் அரிய செல்வம் போல நன்மை அளிப்பர். அடியவர்களுக்கு மிக நல்லதையே செய்வர்.
4. பிறைபோன்ற நெற்றியை உடைய உமையம்மையாரோடு ஆலமரத்தின்கீழ் இருந்து (வடம் – ஆலமரம்) வேதங்களை அருளிய எங்கள் பரமன், கங்கை நதியையும் கொன்றை மாலையையும் முடிமேல் அணிந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், ஆத்திரமுடையதான காலம், அக்கினி, யமன், யமதூதர், கொடிய நோய்கள் எல்லாம் மிக நல்ல குணமுடையன ஆகி நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிகவும் நல்லனவே செய்யும்.
5. விடத்தைக் கழுத்தில் அணிந்த நீலகண்டனும், என் தந்தையும், உமையம்மையாரோடு இடபத்தின் மேல் ஏறி வரும் நம் பரம்பொருள் ஆகிய சிவபெருமான், அடர்ந்து கறுத்த வன்னிமலரையும், கொன்றை மலரையும் தன் முடிமேல் அணிந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், கொடிய சினத்தை உடைய அசுரர்கள், முழங்குகிற இடி, மின்னல், துன்பந்தரும் பஞ்ச பூதங்கள் முதலானவையெல்லாம் (நம்மைக் கண்டு) அஞ்சி நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிக நல்லனவே செய்யும்.
6. ஒளியும் வரியும் பொருந்திய புலித்தோல் ஆடையும் (வாள் -வரி – அதள் – அது -ஆடை; அதள் -புலித்தோல்), வரிந்து கட்டிய கோவணமும் அணியும் சிவபெருமான் அன்றலர்ந்த மலர்கள், வன்னி இலை, கொன்றைப்பூ, கங்கை நதி ஆகியவற்றைத் தன் முடிமேல் சூடி, உமையம்மையாரோடும் வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், கொல்லும் வலிய புலி (கோளரி உழுவை), கொலையானை, பன்றி (கேழல்), கொடிய பாம்பு, கரடி, சிங்கம் ஆகியன நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிக நல்லனவே செய்யும்.
7. செம்பு போன்ற இளந்தனங்களை உடைய உமையவளைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு, இடபத்தின் மேல் ஏறிவரும் செல்வனாகிய சிவபெருமான் தன்னை அடைந்த அழகிய பிறைச்சந்திரனையும், கங்கையையும் தன் முடிமேல் அணிந்தவனாய், என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், காய்ச்சல் (சுரம்), குளிர்காய்ச்சல், வாதம், மிகுந்த பித்தம் , அவற்றால் வருவன முதலான துன்பங்கள் நம்மை வந்து அடையா. அப்படி அவை நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு அவை நல்லனவே செய்யும்.
8. அன்று மன்மதன் அழியும்படி நெற்றிக்கண்ணைத் திறந்து எரித்த சிவபெருமான், இடபத்தின் மேல் உமையம்மையாரோடு உடனாய் இருந்து, தன் முடிமேல் ஒளி பொருந்திய பிறைச்சந்திரன், வன்னி இலை, கொன்றை மலர் ஆகியனவற்றைச் சூடி வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், ஏழ் கடல்களால் சூழப்பட்ட இலங்கையின் மன்னன் ஆன இராவணன் (பிறன்மனை நாடியதாலேற்பட்டது) போன்ற இடர்களும் வந்து நம்மைத் துன்புறுத்தா. ஆழமான கடலும் நமக்கு நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு அவை நல்லனவே செய்யும்.
9. பல்வேறு கோலங்கள் கொள்கிற பரம்பொருள் ஆகிறவனும், மாதொருபாகனும், எருதின் மேல் ஏறிவரும் எங்கள் பரமனுமாகிய சிவபெருமான், தன் முடிமேல் கங்கை, எருக்கமலர் ஆகியவற்றை அணிந்து வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், தாமரைமலர் மேல் உறையும் பிரமன், திருமால், வேதங்கள், தேவர்கள் ஆகியோரும், எதிர்காலம், அலையுடைய கடல், மேரு முதலான மலைகள் ஆகியவையும் நமக்கு நல்லனவே செய்வர். அடியவர்களுக்கு அவை மிகவும் நல்லனவே செய்யும்.
10. கூந்தலில் மலர்க்கொத்துகள் அணிந்த உமையம்மையாரோடு வேட வடிவில் சென்று அருச்சுனனுக்கு அருள்புரிந்த தன்மை கொண்ட சிவபெருமான், தன் முடி மேல் ஊமத்தை மலர், பிறைச்சந்திரன், பாம்பு ஆகியவற்றை அணிந்து வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், புத்தர்களையும் சமணர்களையும் ஈசனின் திருநீறு வாதில் தோற்றோடச் செய்யும். அதன் பெருமை நிச்சயமே. எல்லாம் அப்படிச் சிறந்த நல்லனவற்றையே செய்யும். அவை மிகவும் நல்லனவே செய்யும்.
11. தேன் நிறைந்த பூங்காக்களைக் கொண்டதும், கரும்பும் (ஆலை), விளைகிற செந்நெல்லும் நிறைந்துள்ளதும், பொன் போல் ஒளிர்வதும், நான்முகன் (வழிபட்ட) காரணத்தால் பிரமாபுரம் என்ற ஊரில் தோன்றி அபரஞானம் பரஞானம் ஆகிய இரு வகை ஞானங்களையும் உணர்ந்த ஞானசம்பந்தனாகிய யான், தாமே வந்து சம்பவிக்கும் நவக்கிரகங்கள், நாள் நட்சத்திரம், போன்றன எல்லாம் அடியவரை வந்து வருத்தாதவாறு பாடிய இப்பதிகத்தை ஓதும் அடியவர்கள் வானுலகில் அரசு புரிவர். இது நமது ஆணை.
…திருச்சிற்றம்பலம்…
Tuesday, 24 February 2026
அனாயாசேன மரணம், விநா தைன்யேன ஜீவனம்"
அனாயாசேன மரணம், விநா தைன்யேன ஜீவனம்" என்பது காஞ்சி மகாபெரியவா மற்றும் பல மகான்களால் பரிந்துரைக்கப்பட்ட, ஒரு நிம்மதியான வாழ்வு மற்றும் மரணத்திற்காக சிவபெருமானை வேண்டிப் பாடும் ஒரு சிறந்த ஸ்லோகம் ஆகும். இது துன்பமில்லா மரணத்தையும், பிறரைச் சார்ந்திராத வாழ்வையும் கோரும் பக்தி ஸ்லோகம்.
ஸ்லோகம்:
அனாயாசேன மரணம், விநா தைன்யேன ஜீவனம்
தேஹிமே கிருபையா சம்போ, த்வயீ பக்திம் அசஞ்சலாம்
பொருள்:
அனாயாசேன மரணம்: கஷ்டம்/வேதனை இல்லாத மரணம்.
விநா தைன்யேன ஜீவனம்: பிறரைச் சார்ந்து வாழாத (மானத்தோடு கூடிய) வாழ்க்கை.
தேஹிமே கிருபையா சம்போ: சம்புவே (சிவனே), கிருபையுடன் எனக்கு அருளுங்கள்.
த்வயீ பக்திம் அசஞ்சலாம்: உன்னிடத்தில் அசஞ்சலமான (அசைக்க முடியாத) பக்தி.
பயன்கள்:
தினமும் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி பிரார்த்தித்தால் நற்கதி அடையலாம்.
வாழும் காலத்தில் துன்பமில்லாத வாழ்வையும், மரணத்தின் போது வேதனையற்ற மரணத்தையும் (இறப்பு) இது வேண்டிப் பெறுகிறது.
சைதன்ய பாகவதத்திலும் இந்த கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.
Friday, 13 February 2026
படுக்கையில ் அமர்ந்த ு அதாவது கட்டிலின ் மேல ் அமர்ந்த ு இதனை எல்லாம ் செய்யக்கூடாது
படுக்கையில ் அமர்ந்த ு அதாவது கட்டிலின ் மேல ் அமர்ந்த ு இதனை எல்லாம ் செய்யக்கூடாது.
மீறினால், நித்ரா தேவியின ் கோபத்திற்க ு ஆளாகி விடுவீர்கள்.
படுக்கையில ் அமர்ந்த ு சாப்பிடுவத ு என்பது கண்டிப்பாக கூடாது. அதனால ் வறும ை வீட்டுக்குள ் புகும். என்பத ு ஐதீகம்.
• படுக்கையில ் அமர்ந்த ு பணம ் எண்ணுவத ு என்பத ு கூடாது. மீறினால ் மகாலட்சும ி தாயின ் கோபத்துக்க ு ஆளாக நேரிடும்.
படுக்கையில ் அமர்ந்த ு கொண்ட ு வியாபார கணக்குகளை பார்க்க கூடாது. ஏனென்றால், வீட்டில ் எதிர்மற ை ஆற்றல் அதிகரிப்பதோடு, குபேரனின ் அருள ் கிடைக்காமல ் போய்விடும்.
படுக்கையில ் பகல ் நேரத்தில ் அதிகம ் தூங்குவத ு என்பத ு கூடாது. அதனால ் வீட்டில ் கடன், வறும ை ஏற்படும். அசத ி வந்தால ் மட்டும், படுத்துக ் கொள்ளலாம்.
படுக்கையில ் ஈர காலுடன ் உறங்குவத ு என்பத ு கூடாது. மீறினால ் வீட்டில ் சண்டை, கலகம ் போன்றவ ை ஏற்படுவதோடு, சனிபகவானின ் கோபத்திற்க ு ஆளாக நேரிடும்.
Friday, 30 January 2026
60 வயதுக்கு மேல் மனைவியுடன் வாழ்ந்தால் என்ன பிராப்தம்
*60 வயதுக்கு மேல் மனைவியுடன் வாழ்ந்தால் தினம் தினம் காலை வணக்கம் சொல்
*70 வயதுக்கு மேல் மனைவியுடன் இருந்தால் தினம் தினம் பூ போட்டு கும்பிடு
*80 வயதுக்கு மேல் மனைவியுடன் இருந்தால் இறைவனால் ஆசி பெற்றவன்.
ஒளவையார் தனிப் பாடல் - யாரோடு எது போகும்
ஒளவையார் தனிப் பாடல் - யாரோடு எது போகும்
குடும்பத்தோடு வாழ்வதில் ஒரு இன்பம் இருக்கிறது. குடும்பத்தில் ஒவ்வொருவரும் நமக்கு ஒரு விதத்தில் பலம் மற்றும் இன்பம் சேர்க்கிறார்கள்.
ஒளவை சொல்கிறாள்.
பாடல்
தாயோ டறுசுவைபோம் தந்தையொடு கல்விபோம்
சேயோடு தான்பெற்ற செல்வம்போம் – ஆயவாழ்(வு)
உற்றா ருடன்போம் உடற்பிறப்பால் தோள்வலிபோம்
பொற்றாலி யோடெவையும் போம்
பொருள்
தாயோ டறுசுவைபோம் = தாயோடு அறு சுவை போகும்
தந்தையொடு கல்விபோம் = தந்தையோடு கல்வி போகும்
சேயோடு தான்பெற்ற செல்வம்போம் = பிள்ளைகளோடு ஒருவன் பெற்ற செல்வம் போய் விடும்
ஆயவாழ்(வு) = பெரிய வாழ்க்கை
உற்றா ருடன்போம் = உறவினர்களோடு போய் விடும்
Wednesday, 28 January 2026
தீட்டு காலங்கள்
தீட்டு காலங்கள்
*குடுபத்தினர் இறந்து விட்டால் வீட்டில் விசேஷங்கள்
திருமணம்,கிரகப்பிரவேசம் ... செய்வதை சில காலம் தள்ளி வைத்து விட வேண்டும்.
*தாய், தந்தை இறந்தால் - ஒரு வருடம்
*மனைவி இறந்தால் - 3 மாதம்
*சகோதரன் இறந்தால் = 1.5 மாதம்
*தாய் வழி சொந்தத்தில் இறந்தால் -1 மாதம்
"மாமனார்.. மாமியார் இறந்தால் -தீட்டு இல்லை
* பங்காளி இறந்தால் - 3 மாதம்
*தற்கொலை செய்து இறப்பவருக்கு தீட்டு தர்ப்பணம் தேவை வை இல்லை
தில ஹோமம் வளர்த்து சாந்தி செய்ய வேண்டும்
*கரு கலைந்தால் - கரு எத்தனை மாதமோ அத்தனை காலம் தீட்டு
தீட்டு காலங்கள்
தீட்டு காலங்கள்
*குடுபத்தினர் இறந்து விட்டால் வீட்டில் விசேஷங்கள்
திருமணம் ஹப்பிரவேசம்... செய்வதை சில காலம் தள்ளி வைத்து விட வேண்டும்.
*தாய், தந்தை இறந்தால் - ஒரு வருடம்
*மனைவி இறந்தால் - 3 மாதம்
*சகோதரன் இறந்தால் = 1.5 மாதம்
*தாய் வழி சொந்தத்தில் இறந்தால் -1 மாதம்
"மாமனார்.. மாமியார் இறந்தால் -தீட்டு இல்லை
* பங்காளி இறந்தால் - 3 மாதம்
*தற்கொலை செய்து இறப்பவருக்கு தீட்டு தர்ப்பணம் தேவை வை இல்லை
தில ஹோமம் வளர்த்து சாந்தி செய்ய வேண்டும்
*கரு கலைந்தால் - கரு எத்தனை மாதமோ அத்தனை காலம் தீட்டு
Sunday, 18 January 2026
ராசி vs அதிபதி
ராசிமண்டலம்
மீனம். குரு
மேஷம் செவ்வாய்
ரிஷபம் சுக்கிரன்
மிதுனம் புதன்
கும்பம் சனி
கடகம் சந்திரன்
மகரம் சனி
சிம்மம் சூரியன்
தனுசு. குரு
விருச்சிகம் செவ்வாய்
துலாம் சுக்கிரன்
கன்னி புதன்
செவ்வாய்- பூமி,மனை,ஆற்றல், வேகம்,ரத்தம்
சுக்கிரன்-வீடு,வாகனம்,அழகு,நளினம்,காமம்
புதன் கல்வி,அறிவாற்றல், தொழில்நுட்பம்
சந்திரன்- மனம், உடல்,அன்பு,அம்மா,நீர்
'சூரியன்-அதிகாரம்,தந்தை,அரசாங்கம், ஆன்மா
குரூ-செல்வம்,குழந்தை, ஆன்மீகம்
சனி-ஆயுள்காரகன், தொழில்,
தெய்வத்திடம் கொடுத்து பிள்ளையை வாங்கும் கிரகநிலை யாருக்கு தெரியுமா?
தெய்வத்திடம் கொடுத்து பிள்ளையை வாங்கும் கிரகநிலை யாருக்கு தெரியுமா?
பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பதை அனைவரும் பார்த்திருப்போம்.
ஜாதகத்தில் கிரக நிலை சரியாக அமையாது விட்டால் தான் பெற்ற பிள்ளையை கடவுளிடம் ஒப்படைத்து பின் தத்தெடுத்து வளர்ப்பது சாஸ்திரம்.
நட்சத்திரங்களில் சித்திரை, விசாகம் இவற்றில் பிறந்த ஆண், பெண் குழந்தைகள். மாதங்களில் சித்திரை, ஆடி, ஐப்பசியில் பிறந்த குழந்தைக ளை தெய்வத்திடம் கொடுத்து வாங்கி, பெற்றோர்கள் வளளிப்பது குடும்பத்துக்கு நல்லது.
*பிள்ளைகளின் பிறந்த ஜாதகத்தில் லக்னத்தில் நான்காம் இடமான தாய் வீட்டில் சந்திரன் இருந்தாலும், ஐந்தாம் இடமான தாய்மாமன் வீட்டில் புதன் இருந்தாலும், ஒன்பதாம் இடமான தந்தை வீட்டில் சூரியன் இருந்தாலும், காரக கிரகம் ஸ்தானபலம் ஏறினால் காரகம் பாவநாஸ்தி என்ற வகையில் தத்து கொடுத்து பிள்ளையை வாங்கப்படும்.
Aanmeegamum
லக்கினம் முதல் 12 ஸ்தானங்களின் பலன்கள்
லக்கினம் முதல்
12 ஸ்தானங்களின்
பலன்கள்
லக்கினம் - (இப்பிறவி ) உயிர், தேகம், தோற்றம்
2ம் இடம் - (வாக்குஸ்தானம்), குடும்பம், தனம் , கண
3ம் இடம் -(சகோதர ஸ்தானம் ), பேச்சு வல்லமை, தைரியம், காது, அணிகலன், தம்பி
4ம் இடம் -(சுகஸ்தானம்), வீடு, வாகனம், தாய், நிலம், உறவினர்கள்,கல்வி
5ம் இடம் -(புத்திர ஸ்தானம் ) வாரிசு, புகழ், குலத்தெய்வம்
6.ம் இடம் - (ரோக ஸ்தானம்) விரோதி, கடன், வழக்கு
7ம் இடம் -(களத்திரம் ஸ்தானம்) மனைவி, கூட்டாளிகள்
8.ம் இடம் -(ஆயுள் ஸ்தானம்) ஆயுள், மரணம்
9ம் இடம் -(பாக்கிய ஸ்தானம் ) தந்தை இஷ்ட தெய்வம், தர்மம்
10ம் இடம் -(தொழில் ஸ்தானம் ) கர்மம், தொழில்
11ம் இடம் (லாப ஸ்தானம் ) அண்ணன், லாபம்
12ம் இடம் -(விரய ஸ்தானம் ) செலவ, உறக்கம், மோட்சம்
Friday, 16 January 2026
பணத்தை ஈர்ப்பதற்கு சில பிரபஞ்ச இரகசியங்களை பயன்படுத்தி வந்துள்ளார்கள்.
பணத்தை ஈர்ப்பதற்கு சில பிரபஞ்ச இரகசியங்களை பயன்படுத்தி வந்துள்ளார்கள்.
அந்த வகையில் மகாலட்சுமிக்கும் பெருமாளுக்கும் தொடர்புடைய இயற்கையிலே உள்ள பொருட்களில் இதுவும் ஒன்று. இதை நாம் அணிந்து கொள்வதால் பணத்தை ஈர்க்க முடியும் இது தான் தாமரை மணி மாலை.
லட்சுமி தேவி தாமரையில் வசிப்பதால் வீட்டில் தாமரை விதைகளில் செய்யப்பட்ட ஜெபமாலையை வைத்திருப்பது அவரை நம் வீட்டிற்கு வரவழைக்க செய்யும் தாமரை மணிமாலை பணத்தை வசீகரிக்கும் தன்மை கொண்டாது
விளக்கிற்கு பொட்டு வைக்கும் போது கவனிக்கவேண்டியவை
விளக்கிற்கு பொட்டு வைக்கும் போது கவனிக்கவேண்டியவை'
1. விளக்கிற்கு மேல் இருந்து பொட்டு வைக்கவே கூடாது.
2- விளக்கு, சாமி படங்கள் இரண்டிற்கும் கீழ் இருந்து மேல் நோக்கி பொட்டு வைக்க வேண்டும்.
3- ஞாயிறு, திங்கள், வியாழன் அன்று தான் விளக்கை சுத்தம் செய்ய வேண்டும்.
4 - வீட்டில் ஞாயிற்று கிழமை அசைவம் சமைத்து இருந்தால் அன்று விளக்கை சுத்தம் செய்க கூடாது.
6-அதேபோல் விளக்கிற்கு பொட்டு வைத்து விட்டு தான் விளக்கை ஏற்ற வேண்டும்.
6- மாதவிடாய் காலத்தில் விளக்கை சுத்தம் செய்ய கூடாது
7- தீட்டு வீட்டிற்கு சென்று வரும் போது விளக்கை சுத்தம் செய்ய கூடாது
8- வீட்டில் உள்ளவர்களை தவிர அடுத்தவர் நம்முடைய விளக்கை சுத்தம்
சாமி படத்தை இவ்வாறு துடைத்தால் தரித்திரம் உண்டாகும்.
சாமி படத்தை இவ்வாறு துடைத்தால் தரித்திரம் உண்டாகும்.
1- வீட்டில் உள்ள சாமி படத்தை மற்றும் பழைய துணிகளை வைத்து துடைக்க கூடாது
2- எப்பொழுதும் சாமி படங்களை சுத்தம் செய்வதற்கென்று தனியாக சுத்தமான துணியை வைத்துக்கொள்ள வேண்டும்
3- சாமி படங்களில் இருக்கும் சந்தனம் குங்குமங்களை முதலில் ஒரு துணியை வைத்து துடைத்துக் கொள்ள வேண்டும்
4 - பின் தண்ணீரில் சிறிது பச்சை கற்பூரம் ஜவ்வாது கலந்து அந்த தண்ணீரை வைத்து சாமி படங்களை துடைத்தால் எப்பொழுதும் பூஜை அறை தெய்விக நறுமணத்துடன் இருந்து கொண்டே இருக்கும்
6 - செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை தவிர மற்ற நாட்களில் சாமி படங்களை சுத்தம் செய்யலாம்
7-அது போல் மாலை 6 மணிக்கு மேல் சாமி படங்களை சுத்தம் செய்யக்கூடாது
கோயிலுக்கு இதை மட்டும் தானமாக கொடுத்துப் பாருங்கள்.! வாழ்க்கையே மாறுமாம்.!
கோயிலுக்கு இதை மட்டும் தானமாக கொடுத்துப் பாருங்கள்.! வாழ்க்கையே மாறுமாம்.!
சாஸ்திரப்படி துடைப்பத்தை யாருக்கும் தானமாக கொடுக்கக் கூடாது என்று கூறுவார்கள்.
ஆனால் மகாலட்சுமி வாசம் செய்யும் துடைப்பத்தை கோயிலுக்கு தானமாக கொடுத்தால் உங்கள் வாழ்க்கையே மாற்றுமாம்.
எனவே அருகிலுள்ள கோயிலுக்கு க்கு ஒரு துடைப்பம் அல்லது ஒட்டடை கொம்பு வாங்கி கொடுங்கள். இந்த சிறிய தானம் மூலம் வீட்டில் லட்சுமி கலை தங்கி, சுத்தமும் சாந்தியும் நிலைத்து இருக்கும்.
மேலும், நீங்கள் மனதிலும் அமைதியுடனும், பொறுப்புடனும் மாறுவீர்கள்.
LG
நீங்கள் எந்த கேதியில் பிறந்திர்கள்
நீங்கள் எந்த கேதியில் பிறந்திர்கள்
கடின
உழைப்பாளி
7,5,2,23,16,1
வலுவானவர்கள்
12.8,19,30,9,3
அன்பானவர்கள்
4,10,24,11,21,13
புத்திசாலிகள்
6,29,31,14,17,20
இறக்க
குணமுடையவர்கள்
22,25,15,18, 26, 27,
இரவு முழுவதும் விழித்திருந்து இறந்தவர்களின் உடலை பார்த்து கொள்வது ஏன்?
இரவு முழுவதும் விழித்திருந்து இறந்தவர்களின் உடலை பார்த்து கொள்வது ஏன்?
*ஆன்மா என்பது ஒரு நாள் முழுவதும் உடம்பை விட்டு பிரிந்து செல்ல மறுக்கும்.
ஆன்மா 12 அடி உயரம் வரை உடம்பைச் சுற்றிக்கொண்டே உடலுக்குள் மறுபடியும் நுழைய முயற்சிக்கும்.
*வருவோர் போவோர்களைக் கண்காணித்துக் கொண்டே இருக்கும்
யார் யார் என்னென்ன பேசுகிறார்கள், என்னென்ன நினைக்கிறார்கள் என்பதை ஆன்மா உணர்ந்து கேட்டுக் கொள்ளும்
*அதனால்தான் யாரும் பேசமாட்டார்கள்.
*உடம்பை எரிக்கும் போது,ஆன்மாவும் கூடவே வந்து, சுற்றும் அலறும். எரிந்து சாம்பலாக ஆன பிறகுதான், வேறு இடம் தேடி செல்லும்
சர்பா கிரக சேர்க்கை நிற்குமிடம் தரும் தோஷம்
சர்பா கிரக சேர்க்கை
நிற்குமிடம் தரும் தோஷம்
* காலசர்ப்ப தோஷம் -ராகு/கேதுவிற்குள் அனைத்து கிரகங்களும் இருத்தல்
* நாக தோஷம் - 1,2, 5.8, 9.ல் ராகு/கேது
* கிரகண தோஷம் -சூரியன்+ ராகு/கேது ,
சந்திரன்+ராகு/கேது
* தார தோஷம் - 7ல் ராகு/கேது
* மாங்கல்ய தோஷம்- 8ல் ராகு/கேது
* புத்திர தோஷம் - 5,9 ல் ராகு/கேது , குரு +ராகு/கேது
*பிதுர் தோஷம் - சூரி +ராகு/கேது
* மாதுர் தோஷம் - சந் +ராகு/கேது
* குடும்ப ஸ்தான தோஷம் -2, 8ல்ராகு/கேது
* கர்ம தோஷம் - சனி + ராகு/கேது
* குருதோஷம் - குரு +ராகு/கேது
* மாதுல தோஷம் - புதன் +ராகு/கேது
Thursday, 15 January 2026
மாந்திக்கு பரிகாரம்
மாந்திக்கு பரிகாரம்
மாந்தி ஒருவர் ஜாதகத்தில் 11, 10,6 இருந்தால் நல்லது. குரு மாந்திை பார்த்தால் மாந்தி கெடுதல் செய் சுக்கிரனும், புதனும் பலமாக இருந்தால் மாந்தி அதிக கெடுபல தர மாட்டார்.
* சிவனுக்கு உத்திரம் நட்சத்திரநா பாலபிஷேகம் செய்தால் மாந்தி கெடுதல் குறைந்திடும்
* திருநறையூர் கும்பக்கோணம் நாச்சியார் கோவில் அருகில் உள்ள பர்வதவர்த்தினி உடனுறை ராமநா சுவாமி கோவில் மாந்திக்கு பரிகார ஸ்தலம்
*திருவாலங்காடு வடரென்ஷவர் கோவில் சென்று சனிக்கிழமை பரிகார பூஜை செய்யலாம்.
Wednesday, 14 January 2026
யார் மீது பிரியம் ஜாஸ்தி ?
யார் மீது பிரியம் ஜாஸ்தி ?
லக்கினாதிபதி நிற்கும் இடம் பிரியமான உறவை காட்டும்.
லக்கினாதிபதி நிற்கும் இடம்
* 4ல் நின்றால் அம்மாவின் மீது
* 9ல் நின்றால் தந்தையின் மீது
* 7ல் நின்றால் மனைவி/கணவன் மீது
* 5ல் நின்றால் குழந்தைகளின் மீது
* 10 நின்றால் செய்கின்ற தொழில் மீது
* 2ல் மாமா, பெரியம்மா மீது
* 3ல் தம்பி மீது
* 11ல் அண்ணன் /அக்கா மீது
மரணம் பயம் உங்களுக்கு எப்போதும் வரும் தெரியுமா?
மரணம் பயம் உங்களுக்கு எப்போதும் வரும் தெரியுமா?
இறந்தவர்கள் கனவில் வந்து பசிக்கிறது சாப்பாடு போடு என்றால்.. (இறந்தவர் ஒரு வருடம் ஆவதற்கு முன் கனவில் வந்தால்)
இறந்தவர் கனவில் பேசுவது போல் வந்தால் (என்னுடன் தீயும் வா போகலாம் என்றால்)
இறந்தவர் உங்கள் வீட்டில் தூங்குவது போல் கனவு கண்டால் (நான் உன்னோடு சேர்ந்து தூங்குகிறேன் என்று சொன்னால்)
இறைச்சிகளை வெட்டுவது போல் கனவு கண்டால் (அதுவும் இறந்தவர் இறைச்சியை வெட்டுவது போல்)
*இறந்தவர் சத்தம் போட்டு அழுவது போல் கனவு கண்டால் (இறந்தவரோடு சேர்ந்து நீங்களும் அழுதால்)
இப்படி எல்லாம் நீங்கள் கனவு கண்டால் உங்களுக்கு ஏதோ ஒரு காரணத்திற்காக மரண பயம் உங்களுக்கு அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம்.
(பயம் கொள்ள தேவையில்லை.இது உங்களின் மன பிரம்மை தான்.)
இதையெல்லாம் கண்டிப்பாக வெளியே சொல்லாதீர்கள்
இதையெல்லாம் கண்டிப்பாக வெளியே சொல்லாதீர்கள்
உங்கள் வீட்டில் திருமணம் நடக்க உள்ளது என்றால் திருமணதேதி குறிக்கும் வரைக்கும் வெளியே சொல்லாமல் ஏகசியமா வைங்க
வீட்டுக்கு திடீர் பணம் வரவு வந்தால், அதை கண்டிப்பாக யாரிடமும் சொல்லாதீர்கள்.
*கணவன் மனைவி பரஸ்பர அன்பு சண்டைஉரையாடல்.காதல் என எதையும் வெளிப்படுத்தாதீர்கள்.
ஏழைக்கு கொடுத்த உதவியை வெளியே சொல்லாதிங்க. அவர்களுக்கு தெரிந்தால்,மிகவும் வேதனை அடைவார்கள்.
இது யாருக்கும் பிடிக்காத கசப்பான உண்மைதான்.கணவன் வீட்டு விஷயங்களை தாய் வீட்டுக்கு சொல்லாதிங்க. ஆனா நீங்க கேட்க மாட்டீங்க
மகன் தவறான பழக்கத்தில் சிக்கினால்,அதை ஒருபோதும் வெளியே தெரிய விடாதீர்கள்.என்றாவது ஒருநான் அவன் மாறுவான். ஒரு முறை கெட்ட பெயர் எடுத்து விட்டால்,அதை மீண்டும் சரி செய்ய முடியாது
வேறு வழி இல்லாமல் கடன் வாங்கினால்.அதை ஒருபோதும் வெளி காட்டாதீர்கள் முக்கியமாக உங்கள் வீட்டு கஷ்டநிலைகளை யாரிடமும் பயிர்ந்து கொள்ளாதீர்கள் உங்கள் கஷ்ட நிலை தெரிந்தால்,உங்களுக்கு உதவி செய்ய மனமில்லாமல் போகும்.
விளக்கு ஏற்றும் போது நினைவில்கொள்ள வேண்டிய
விளக்கு ஏற்றும் போது நினைவில்கொள்ள வேண்டிய
7 விஷயங்கள்
வீட்டில் யாரேனும் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது காமாட்சி அம்மன் தீபத்தை அணைக்க கூடாது.
சுவாமிக்கு வலது பக்கம் தீபம் ஏற்ற வேண்டும், இடது பக்கம் ஏற்ற கூடாது.
* காமாட்சி அம்மன் தீபத்திற்கு துணை தீபாமாக மண் தீபம் ஏற்றலாம்.
விளக்கு ஏற்றி விட்டு உச்சரிக்க வேண்டிய மந்திரம் (ஓம் தீப லட்சுமியே நமோ நமஹ)
விளக்கு ஏற்றி அரை மணிநேரம் கழித்து தான் மலை ஏற்றவேண்டும் .அதற்கு மேல் எறிவது அவரவர் விருப்பம்.
* விளக்கை எப்பொழுதும் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி ஏற்ற வேண்டும்.
* எந்த காரணத்தை கொண்டும் தெற்கு நோக்கி விளக்கு ஏற்ற கூடாது.
உடலில் உப்பு அதிகமானால் என்ன விளைவுகள்
உடலில் உப்பு அதிகமானால் என்ன விளைவுகள்
1- இரத்தத்தில் சோடியம் அதிகரிப்பதால் ரத்தக் குழாய்கள் நெருங்கி, அழுத்தம் உயரும்.
2- நீண்டநாள் உப்பு அதிகம் எடுத்தால் இதய நோய்களின் அபாயம் அதிகரிக்கும்.
3 - முகம், கால், கைகள் போன்ற இடங்களில் நீர் தங்கல் ஏற்படும்.
4- கிட்னி அதிக உப்பை வெளியேற்ற முயலும்போது அதில் சுமை அதிகரிக்கும்.
5 - உடலில் உப்பு அளவு அதிகமாக இருந்தால் தாகம் அடிக்கடி ஏற்படும்.
6 - தலைவலி மற்றும் சோர்வு ரத்த அழுத்தம் மாற்றம் காரணமாக இதுபோன்ற அறிகுறிகள் தோன்றும்.
7 -அதிக உப்பு எடுத்தால் கால்சியம் சிறுநீருடன் வெளியேறும்.
8-உடல் நீர் சமநிலை குலைவதால் தோல் பிரச்சனைகள் ஏற்படும்.
இரவில் சாப்பிடும் போது செய்யக்கூடாதவை
இரவில் சாப்பிடும் போது செய்யக்கூடாதவை!!
இரவில் பால் சாதம் சாப்பிட்டால் செல்வம் பெருகும், தயிர் சாதம் சாப்பிட்டால், தரித்தரம் வந்து சேரும்.
தாமரை இலையில் மட்டும் பின்புறத்தில் உணவை வைத்து உண்ணலாம்.
மாலை கருக்கல் வேளையிலும், நள்ளிரவிலும் சாப்பிடக் கூடாது. சாப்பிடும் இடம் வெளிச்சமாக இருக்க வேண்டும்.
பச்சைக் காய்கறி, பழம், வடை தவிர மற்ற பொருட்களை கையால் பரிமாறக் கூடாது.
இரவில் எள் சாதமும், பகலில் பால் சாதமும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
தினமும் சாப்பிடும் முன் காகத்திற்கு சோறு வைப்பது வழக்கம். அதற்கு முன் பூஜையறையில் வைப்பது சிறப்பு.
இருட்டிலோ நிழல் விழும் இடங்களிலோ சாப்பிட கூடாது. வெளிச்சத்தில் சாப்பிட வேண்டும்.
16
மாங்கல்யம் தந்துனானே என்பதன் அர்த்தம் :
மாங்கல்யம் தந்துனானே என்பதன் அர்த்தம் :
மாங்கல்யம் தந்துனானேன;
மமஜீவன ஹேதுநா; கண்டே பத்நாமி ஸுபகே;
த்வம ஜீவ சரதஸ்சதம்...
இது தாலி கட்டும் நேரத்தில் சொல்லும் மந்திரம். இதன் பொருள் புரிந்தால் மண வாழ்வின் மகத்துவம் புரியும்.
மங்களகரமானவளே உன்னோடு இல்லற வாழ்வு நல்ல முறையில் நடத்த வேண்டும் என்பதற்காக இந்த திருமாங்கல்யத்தை கழுத்தில் அணிவிக்கிறேன். என் மனைவியாக என்னுடைய சுக துக்கங்களில் பங்கு கொள்பவளாக சுபயோகங்களுடன் நாறாண்டு காலம் வாழ்க" என்பதே பொருள்.
இந்த கருத்தை உணர்ந்து மணமகனும் தாலி கட்டினால் மணவாழ்க்கை இனிமையாக அமையும்.
படி பாவ புண்ணிய பரிமாற்றம்
படி பாவ புண்ணிய பரிமாற்றம்
குழந்தைகள்:
14 வயது வரை செய்யும் புண்ணியம் அவர்களையும், பாவங்கள் பெற்றோரையும் சேரும் அதன் பிறகு இரண்டும் அவர்களுக்கு சேரும்.
கணவன்:
செய்யும் புண்ணியத்தில் சரி பாதி மனைவிக்கு சேரும், பாவம் முழுவதும் கணவனையே சேரும்.
மனைவி :
செய்யும் புண்ணியம் முழுவதும் மனைவியை சேரும் மனைவி செய்யும் பாவத்தில் சரிபாதி கணவனை சேரும்.
5ல், 10ல், 12 ல் சனியா?
5ல், 10ல், 12 ல் சனியா?
கோச்சாரசனி அதிக பாடுபடுத்தும்
5ல்,10ல்,12ல் சனி உள்ளவர்கள் வைராக்கியம் கொண்டவர்கள்
* வந்த சண்டையை விடமாட்டார், வம்பு சண்டைக்கு போக மாட்டார்கள்.
*தொழில், வேலையில் பெருத்த நஷ்டத்தையும் கஷ்டத்தையும் சந்திப்பார்கள்
* கோச்சார சனி அஷ்டமம், ஏழரை, கண்டக சனி காலத்தில் பெரும் துன்பத்திற்கு ஆளாவர்கள்
* ஆனால் வாழ்கையின் பிற்பகுதியில் சனிபகவான் உயர்த்தி விடுவார்.
* பரிகாரம் வருடத்திற்கு ஒருமுறை சிவன் கோவிலில் 27 பேர்க்கு அன்னதானம் செய்ய வேண்டும்.
Tuesday, 13 January 2026
நீர் ராசிகள்,காற்று ராசிகள்,நிலராசிகள்,நெருப்பு ராசிகள்
உங்கள் வாழக்கையில் அடுத்தது என்ன தெரியுமா?
நீர் ராசிகள்-கடகம், விருச்சிகம், மீனம்
உங்கள் வாழ்க்கையில் ஒரு பெரியமாற்றம் வரப்போகிறது. நீங்கள் வெளிப்படுத்த முயற்சிக்கும் ஒன்று உண்மையாக மாறும். நீங்கள் கொடுத்த அனைத்து அன்பும் உங்களுக்குத் திரும்பக்கிடைக்கும்
காற்று ராசிகள்-மிதுனம், துலாம், கும்பம்
பணம் வரப்போகிறது. புதிய வீடு வரப்போகிறது. நிதி சுதந்திரம் வரப்போகிறது. நல்ல ஆரோக்கியம் வரப்போகிறது, காதல் வரப்போகிறது. ஒரு திருப்புமுனை வரப்போகிறது.
நிலராசிகள்-ரிஷபம், கன்னி, மகரம்
உங்களுக்கு ஒரு அழகான புதிய அத்தியாயம் தொடங்க உள்ளது. இந்த வாரம் ஒவ்வொரு நாளும்... உங்கள் வாழ்க்கை சிறப்பாகப் போகிறது. மனதளவில், நிதி ரீதியாக, மற்றும் ஆற்றல் ரீதியாக நீங்கள் முன்னேறப் போகிறீர்கள்.
நெருப்பு ராசிகள் -மேஷம், சிம்மம், தனுசு
நீங்கள் எதற்காக பிரார்த்தனை செய்கிறீர்களோ, அதை வாழப்போகிறீர்கள். இதைப் படிக்கும்போதுேஉங்கள் கனவு வாழ்க்கை நிஜமாகிறது. உங்களுக்குத் தேவையான வேலை, நீங்கள் விரும்பும் வீடு,நீங்கள் தகுதியான காதல் - அனைத்தும் வரப்போகிறது. நம்பிக்கையுடன் இருங்கள், தொடர்ந்து முன்னேறுங்கள் A#
வேலை சொன்னா உடனே செய்றவங்க யார்?!
வேலை சொன்னா உடனே செய்றவங்க யார்?!
மேஷம். உடனே
ரிஷபம். 3 நாள்
மிதுனம். 2 மணி
கடகம. 1நாள்
சிம்மம். உடனே
கன்னி. 5 நாள்
துலாம். 1 வாரம்
விருச்சிகம். 2 நாள்
தனுசு. 1 மணி நேரம்
மகரம். 3 நாள்
கும்பம். 6 மணி
மீனம். 2 நாள்
நல்லதே நினை நல்லதே நடக்கும்!!
Monday, 12 January 2026
திருமணத்தில் சேர்க்க கூடாத கிரக சேர்க்கைகள்
திருமணத்தில் சேர்க்க கூடாத கிரக சேர்க்கைகள்
* சுக்ரன் + கேது ஆண் ஜாதகத்தில் இருந்தால் செவ்வாய் + கேது பெண் ஜாதகத்தில் இருக்ககூடாது
* குரு + ராகு இருக்கும் ஆண் ஜாதகருக்கு செவ்வாய் + ராகு இருக்கும் பெண் ஜாதகியை சேர்க்க கூடாது
* சூரியன் + சனி உள்ள ஆண் ஜாதகருக்கு சூரியன் + செவ்வாய் உள்ள பெண்ணை மண முடிக்க கூடாது
Sunday, 11 January 2026
மூன்று கிரக சேர்க்கைக்கு வழிபடவேண்டிய தெய்வம் -
மூன்று கிரக சேர்க்கைக்கு வழிபடவேண்டிய தெய்வம்
*சனி+ குரு+ சுக்கிரன் - வராகி
சனி+குரு+ ராகு - சரபேஸ்வரர்
*சனி+குரு + கேது- தட்சிணாமூர்த்தி
* சனி + குரு+சந்திரன் + கேது -சந்திர மௌலீஸ்வரர் (திருவக்கரை)
* சனி+சுக்கிரன்+ கேது - லட்சுமி
*குரு+சூரியன்+புதன்- தத்தாத்ரேயர்
சந்திரன் + செவ்வாய்+ராகு - காளி
சூரியன்+ செவ்வாய்+ராகு - சிவன்
புதன்+செவ்வாய்+ராகு - நரசிம்மர்
குரு+செவ்வாய்+ராகு - சரபேஸ்வரர்
சுக்கிரன்+ செவ்வாய்+ கேது -துர்க்கை
புதன்+செவ்வாய்+கேது - ராமன்
சூரியன் + செவ்வாய்+ கேது -முருகன்
விதியை மாற்றும் திதி தேவதைகள் மந்திரங்கள்
விதியை மாற்றும் திதி தேவதைகள் மந்திரங்கள்
நீங்கள் பிறந்த திதியின் மந்திரங்களை "தினமும் சொல்லி கொண்டு வந்தால் உங்கள் வாழ்க்கையின் போக்கை நல்ல விதமாக மாற்றி விடலாம்.
பெளர்ணமி- ஓம் சோமாய நமஹ
பிரதமை - ஓம் அக்னேயே நமஹ
துவிதியை - ஓம் பிரம்மனே நமஹ
திரிதியை - ஓம் கௌரியாய நமஹ
சதுர்த்தி - ஓம் கணபதயே நமஹ
பஞ்சமி -ஓம் நாகாய நமஹ
சஷ்டி - ஓம் கார்த்திகேயாய நமஹ
சப்தமி -ஓம் சூர்யாய நமஹ
அஷ்டமி - ஓம் சிவாய நமஹ
நவமி - ஓம் துர்காய நமஹ
தசமி -ஓம் யமாய நமஹ
ஏகாதசி -ஓம் குபேராய நமஹ
துவாதசி- ஓம் விஷ்ணுவே நமஹ
சதுர்த்தசி-ஓம் ருத்ராய நமஹ
அமாவாசை -ஓம் பித்ருப்யோ நமஹ
சனியுடன் இணையும் கிரகங்கள் பலன்கள்
இணையும் கிரகங்கள் பலன்கள்
1)சனி + சூரியன் தகப்பன் & அதிகாரம் பாதிப்பு
2) சனி + சந்திரன் மனம் மற்றும் தாய் பாதிப்பு
3) சனி + செவ்வாய்
சகோதரன் மற்றும் தைரியம் பாதிப்பு
4) சனி + புதன்
கல்வி அறிவு கணித அறிவு பாதிப்பு
5) சனி + குரு
ஆண் வாரிசு மற்றும் தனம் பாதிப்பு
6) சனி + சுக்கிரன்
இணை மற்றும் திருமண வாழ்க்கை பாதிப்பு
7) சனி + ராகு
இணையும் வீடுகளைப் பொறுத்து
சர்வநாசம்
8) சனி + கேது
கேதுவால் சனி சூட்சம வலுவையும் சனியால் கேது பாவத்துவத்தையும் அடைவார்.
உங்கள் ராசிக்கு எதை தானமசெய்தால் செல்வம் பெருகும்.
உங்கள் ராசிக்கு எதை தானம
செய்தால் செல்வம் பெருகும்.
மேஷம் உயிர்தானமாக ரத்தம் கொடுத்தல்
ரிஷபம் ஆன்மீக பணி உதவி ,மாணவர்களுக்கு நோட் புத் தனம்
மிதுனம் எழை மாற்றுத் திறனாளிக்கு உதவி,அள்ள தானம்
கடகம் நீர் மோர் மற்றும் தண்ணீர் தானம் செய்யலாம்
சிம்மம்
சமையல் உபகரண தானம்
கன்னி ஆதரவ சரவற்றவர்களுக்கு உதவி
துலாம் கல்வி நல உதவி
விருச்சிகம் பச்சை பயறு
தென்னை, மரக்கன்றுகள் தாளம்
தனுசு மொச்சை சுண்டல்
, பச்சரி தாளம் செய்யலாம் |
மகரம் கோதுமை தானியம் ஏழைகளுக்கு தாளம்
கும்பம் சாம்பிராணி பால் பொங்கல்
மீனம் கல்வி உதவி தனங்கள் தாளம்
கிரகங்களின் உச்சம் மற்றும் நீச்ச வீடுகள்
கிரகங்களின் உச்சம் மற்றும் நீச்ச வீடுகள்
மீனம்
சுக்கிரன்
உச்சம்
புதன்
நீச்சம்
மேஷம்
சூரியன்
உச்சம்
சனி
நீச்சம்
ரிஷபம்
சந்திரன்
உச்சம்
மிதுனம்
கும்பம்
கிரகங்களின்
கடகம்
குரு
உச்சம்
செவ்வாய்நீச்சம்
சிம்மம்
மகரம்
செவ்வாய்
உச்சம் உச்சம்
தனுசு
விருச்சிகம்
சந்திரன்
நீச்சம்
துலாம்
சனி உச்சம்
சூரியன்
நீச்சம்
கன்னி
புதன் உச்சம்
சுக்கிரன்
நீச்சம்
உச்சம்- உச்சம் என்பது கிரகங்கள் முழு பலத்துடன் இருப்பது.
நீச்சம்- நீச்சம் என்பது கிரகங்கள் பலம் இழப்பது.
உங்க தனித்துவ குணம் என்ன தெரியுமா?
உங்க தனித்துவ குணம் என்ன தெரியுமா?
நேர்மை
கன்னி
மேஷம்
மகரம்
சிம்மம்
விசுவாசம்
கடகம்
விருச்சிகம்
மகரம்
கன்னி
SMART
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
தைரியம்
கும்பம்
விருச்சிகம்
மகரம்
தனுசு
கருணை
மீனம்
ரிஷபம்
தனுசு
கன்னி
தன்னம்பிக்கை
மகரம்
விருச்சிகம்
மீனம்
சிம்மம்
பாசம்
கடகம்
விருச்சிகம்
மீனம்
மேஷம்
FUNNY
கடகம்
மேஷம்
மீனம்
சிம்மம்
12 ராசிகளின் இருண்ட பக்கம்
12 ராசிகளின் இருண்ட பக்கம்
மேஷம்
உணர்ச்சி, பிடிவாதம், பயம்
மிதுனம்
மோசடி இரட்ட முகம் பொருளாசை
ரிஷபம்
நக்கல் பேச்சு, சோம்பேறி, பேராசை
கடகம்
எரிச்சல் குத்தல் பேச்சு NO பணிவு
சிம்மம்
தற்பெருமை NO பொறுமை கோபம்
கன்னி
அடக்குமுறை கோள்சொலல் சந்தேகம்
துலாம்
நாடகத்தனம் சந்தேகம் இரட்ட வேடம்
விருச்சிகம்
பொறாமை வாதிப்பது ஆதிக்கம்
தனுசு
யோசிக்காமை மதியாமை குத்தல் பேச்சு மை
கும்பம்
பிடிவாதம் போராளி கோவம்
மீனம்
சோம்பல் ஏமாளி அலட்சியம்
மகரம்
தற்பெருமை சுயநலம் பிடிவாதம்
உங்க மீது எவ்வளவு கண் திருஷ்டி உள்ளது & சிம்பிள் பரிகாரம்
உங்க மீது எவ்வளவு கண் திருஷ்டி உள்ளது & சிம்பிள் பரிகாரம்
மேஷம்
80%
எலுமிச்சை பழம் வச்சுக்குங்க, வரம் வரம் மதிக்குங்க
ரிஷபம்
66%
வேப்பிலை வச்சுக்குங்க, தினம் மதிக்குங்க
மிதுனம்
55%
நெற்றில் சந்தனம் குங்குமம் இட்டு செல்லுங்கள்
*கடகம்
75%
கையில் மணிக்கட்டில் சிகப்பு கயிறு நலம்
சிம்மம்
85%
கையில் மணிக்கட்டில் கருப்பு கயிறு நலம்
கன்னி
60%
கழுத்தில் ருத்திராக்ஷம் நலம் தரும்
துலாம்
70%
நெற்றில் வீபூதி இட்டு செல்லுங்கள்
விருச்சகம்
90%
கழுத்தில் துளசி மலை நலம்
தனுசு
65%
கருப்பு கைக்குட்டை மேல் பாக்கெட்டில் இருக்கட்டும்.
மகரம்
75%
வில்வ இலை எடுத்து செல்வது பலன் தரும்
கும்பம்
60%
வீட்டுக்கு வந்ததும் உப்பு நீரில் கால் கழுவவம்
மீனம்
50%
மணி மணிக்கட்டில் இரும்பு வளயம் நலம்.
Saturday, 10 January 2026
ராசிப்படி உங்க 'BEST CHARACTER' எது தெரியுமா?
ராசிப்படி உங்க
'BEST CHARACTER'
எது தெரியுமா?
மிதுனம்
எல்லோரிடமும் யதார்த்தமாக பழகும் விதம்
கன்னி
நேர்மையை லட்சியமாக கொண்டு செயலாற்றுவது
தனுசு
செய்நன்றி கொல்லாத இருக்கும் விஸ்வாச குணம்
ரிஷபம்
சவால்கள், பின்னடைவுகள் வந்தாலும் விடாமல் முயலும் திறன்
மேஷம்
நேர் வழியில் செயல்படும் மன உறுதி
கும்பம்
ஏற்ற தாழ்வு இன்றி மரியாதை தரும் பாங்கு
மீனம்
பலன் பற்றி கவலைப்படாத உழைப்பு
மகரம்
மனசாட்சிக்கு கட்டுப்பட்ட பயமற்ற செயல்பாடு
சிம்மம்
என்னால் முடியும் என்ற நேர்மறையான எண்ணம்
கடகம்
ஆடம்பரம் அற்ற தோற்றம் மற்றோம் நடத்தை
துலாம்
பொறுப்பை உணர்ந்து செயல் படும் திறன்
விருச்சிகம்
சவால்களை பொறுமையுடன் கையாளும் திறன்
ராசிப்படி, இது போன்ற மனிதர்களை பார்த்தாலே உங்களுக்கு பிடிக்காதூ
ராசிப்படி, இது போன்ற மனிதர்களை பார்த்தாலே உங்களுக்கு பிடிக்காது
ரிஷபம்
பச்சோந்தி மனிதர்களை....
சிம்மம்
உங்களுடன் போட்டி போடுபவரை...
துலாம்
உங்கள் முடிவை விமர்சிப்பவரை...
விருச்சகம்
உங்களிடம் பொய் சொல்பவரை...
மேஷம்
மெதுவாக செயல்படுபவரை..
கும்பம்
உங்களிடம் குறை கண்டுபிடிப்பவரை
கடகம்
கூழைக கும்பிடு போடுபவரை...
மகரம்
உங்களை சந்தேகப்படுபவரை.
உங்களிடம் சத்தமாக பேசுபவரை...
மீனம்
கொடுத்த வாக்கை மீறுபவரை..
தனுசு
உங்களுக்கு அட்வைஸ் செய்பவரை...
மிதுனம்
உங்களை அதிகாரம் செய்பவரை..
ஜோதிடம் 12 ராசிகளின் உடல் பலவீனங்கள்
ஜோதிடம் 12 ராசிகளின் உடல் பலவீனங்கள்
மேஷம். தலை வலி, இரத்த அழுத்தம்
ரிஷபம். கழுத்து, தொண்டை, சுவசம்
மிதுனம்.நரம்பு தளர்ச்சி, கை தோள் வலி
கடகம். செரிமான கோளாறு, வயிரு பிரச்சனைகள், கால்கள்.
சிம்மம். இதயம், முதுகு வலி.
கன்னி. குடல் பிரச்சனை, குடல் சம்பந்தப்பட்ட தொந்தரவுகள்
துலாம். சிறுநீரக பிரச்சனை, தோல் பிரச்சனை
விருச்சிகம். பிரசவ, இன்பெருக்க பிரச்சனைகள்.
தனுசு. பூட்டு வலி, உடல் சோர்வு.
மகரம். எலும்பு, தோல் பிரச்சனைகள்.
கும்பம். கால்கள், ரத்த ஓட்ட பிரச்சனைகள்.
மீனம். மன அழுத்தம், கொழுப்பு அதிகரிப்பு, கால்கள்.
மருமகளை அதிகம் கொடுமைப்படுத்தும் மாமியார் ராசி
மருமகளை அதிகம் கொடுமைப்படுத்தும் மாமியார் ராசி
(RATING 1 TO 10)
கன்னி
2 வெளிப்படை+ பாவம்
மீனம்
2 மென்மை + கண்டிப்பு
7 துலாம் 3 பாசம் + அழுத்தம்
ரிஷபம் 3
அன்பு + உரிமை
தனுசு
4 தந்திரம் + கடமை
கும்பம்
4 ஒப்பீடு + அசட்டை
கடகம்
5 சமநிலை + நடிப்பு
மிதுனம்
6 கடுமை + பரிதாபம்
மேஷம்
7 கோபம் + குறுக்கீடு
சிம்மம்
8கட்டளை + அதிகாரம்
விருச்சிகம்
9 சந்தேகம் + ஆதிக்கம்
மகரம்
9 கட்டுப்பாடு + கட்டாயம்
மனைவியை படாத பாடுபடுத்தும் ஆண் ராசிகள்???
மனைவியை படாத பாடுபடுத்தும் ஆண் ராசிகள்???
மீனம்
மனைவியை கண்டவே பதுங்குவார்கள்
கும்பம்
மனைவி வாக்கு தெய்வ வாக்கு
மகரம்
10/100
தனுசு
20/100
விருச்சிகம்
30/100
துலாம்
50/100.
கன்னி
80/100
சிம்மம்
95/100
கடகம்
99/100
மிதுனம்
100/100
ரிஷபம்
999/100
மேஷம்
1000/100
எந்த ராசிகாரங்க எப்படி?
எந்த ராசிகாரங்க எப்படி?
தெய்வபக்தியோடு இருக்கும் ராசிகள்
மிதுனம்
கும்பம்
தனுசு
மீனம்
சண்டையிட தயாராக இருக்கும் ராசிகள்
மேஷம்
சிம்மம்
விருச்சிகம்
குடும்ப நேரத்தை விரும்பும் ராசிகள்
ரிஷபம் கடகம் கன்னி
துலாம்
மகரம
இந்த ராசிக்காரர்கள் வயிறு எரிந்து சாபமிட்டா. உடனே பலிக்கும்
இந்த ராசிக்காரர்கள் வயிறு எரிந்து சாபமிட்டா. உடனே பலிக்கும்
மேஷம்
500/100
ரிஷபம்
40/100
மிதுனம் -
20/100
கடகம்-
98/100
சிம்மம் -
80/100
கன்னி
60/100
துலாம்
70/100
விருச்சிகம் -
1000/100
தனுசு
90/100
மகரம்
50/100
கும்பம் -
30/100
மீனம் -
100/100
ராசிப்படி உங்களுக்கு 'அரக்ககுண இருக்கும் என்ன தெரியுமா?
ராசிப்படி உங்களுக்கு 'அரக்ககுண இருக்கும் என்ன தெரியுமா?
மேஷம்
பிடிவாதம்
கன்னி
முரட்டுத்தனம்
தனுசு
சந்தேகம்
ரிஷபம்
கோழ்முட்டுதல்
மிதுனம்
நம்பிக்கை துரோகம்
கும்பம்
பழி வாங்குதல்
மீனம்
சோம்பேறித்தனம்
மகரம்
மட்டமாக பேசுவது
சிம்மம்
முன்கோவம்
கடகம்
தலைகனம்
துலாம்
அவமானப்படுத்துவது
விருச்சிகம்
பொறாமைப்படுதல்
அதிக செல்வாக்கு' யாருக்கு தெரியுமா?
அதிக செல்வாக்கு' யாருக்கு தெரியுமா?
செல்வாக்கு என்பது பணத்தால், பதவியால் மட்டும் வருவதல்ல. உங்கள் குணம், பழகும் விதம், நடத்தும் விதம் & கவரும் விதமும் அடங்கும்.
மிதுனம்
95%
கன்னி
80%
தனுசு
75%
ரிஷபம்
99%
ضم
80 %
கும்பம்
70%
மீனம்
85%
மகரம்
55%
சிம்மம்
90%
கடகம்
65%
துலாம்
100%
விருச்சிகம்
60%
Subscribe to:
Posts (Atom)