jaga flash news

Tuesday, 28 July 2026

கண்ணாடி வளையல், வாங்க கூடாத நேரங்கள்?



கண்ணாடி வளையல், வாங்க கூடாத நேரங்கள்?

*விளக்கு ஏற்றும் போதும் சாப்பாடு பரிமாறும் போதும் பெண்கள் கைகளில் வளையல் இல்லாமல் இருக்கக் கூடாது.

**தங்கம், பஞ்சலோகம் மற்றும் வெள்ளியில் வளையல் அணிவது சிறப்பு என்றாலும், கூடவே இரண்டு கண்ணாடி  வளையல் அணிந்தால் இன்னும் சிறப்பு.

*வளையல் வாங்கக்கூடாத நேரங்கள்: செவ்வாய்க்கிழமை சனிக்கிழமையில் வாங்காதீர்கள்.

உச்சிப் பொழுது, ராகு காலம், எமகண்டா நேரத்தில், கண்ணாடி வளையல் வாங்க கூடாது.




சுக்கிரன் எங்கு நின்றாலும் அழகுதான்




சுக்கிரன் எங்கு நின்றாலும் அழகுதான்

1. லக்னத்தில் சுக்கிரன் நின்றால் அழகான முகம்,கூந்தல் உண்டு.



2. இரண்டாம் வீட்டில் நின்றால் அழகான கண்கள் கொண்டவர்.

3. மூன்றாம் வீட்டில் நின்றால் இனிமையான குரல் உடையவர்.

4. நான்காம் வீட்டில் நின்றால் அழகான தாய், வீடு,மனை,வாகனம் உண்டு.

5. ஐந்தாம் வீட்டில் நின்றால் அழகான குழந்தைகள் உண்டு.

6. ஏழாம் வீட்டில் நின்றால் அழகான் துணை அமையும்.


7. ஒன்பதாம் வீட்டில் நின்றால் அழகான தந்தை உண்டு. கான 




சனிபகவான் பற்றிய 8 ரகசியங்கள்



சனிபகவான் பற்றிய 8 ரகசியங்கள்

1.சனி புதன் சேர்க்கை கடைசி நிமிடத்தில் தான் ஓடியாடி செய்வார்கள்.

2.3ல் சனி நீசம் _ எளிதில் வெற்றி கிடைக்காது.

3.ஏழரை சனி ஆரம்ப கட்டத்தில், காக்கை தலையில் தட்டும் அல்லது எச்சமிடும்.



4.சனி, ராகு தொடர்பு - ஜாதகர் நிலையான தொழில் செய்ய மாட்டார்.

5.சனி, கேது சேர்க்கை அல்லது தொடர்பு வேலை, தொழிலில் தடை

6.லக்னத்தில் சனி _ உடல் சோர்வு, அசதி அதிகம் இருக்கும்.

7.சனி நீச்சம் _ செய்த தப்பிற்கு தயங்காமல் மன்னிப்பு கேட்பார்கள்.



8.சனி உச்சம் கம்ப்யூட்டர் படிப்பு -வெற்றியைத் தரும்.


பெண்களின் ஜாதகத்தில் செல்வந்த கணவரைக் குறிக்கக்கூடிய அமைப்புகள்:

பெண்களின் ஜாதகத்தில் செல்வந்த கணவரைக் குறிக்கக்கூடிய அமைப்புகள்:

1. சுக்கிரன் (Venus) 7ஆம் அல்லது 8ஆம் பாவத்தில்- வசதியான திருமணம், வாழ்க்கைத்துணையால் கிடைக்கும் சுகவாழ்வு மற்றும் ஆடம்பரம்.

2. குரு (பெண்களுக்கு கணவர் காரகன்) 7ஆம் பாவத்தில் இருப்பது அல்லது 7ஆம் பாவத்தைப் பார்ப்பது - நல்ல நிலை, மதிப்புள்ள மற்றும் பொருளாதார ரீதியாக வலிமையான கணவர்.

3. சூரியன் 7ஆம் பாவத்தில் அல்லது 7ஆம் பாவத்தைப் பார்ப்பது - அதிகாரம், அரசு, தலைமைப் பொறுப்பு அல்லது உயர்ந்த அந்தஸ்துள்ள துணை.

4. ராகு 7ஆம் அல்லது 8ஆம் பாவத்தில் வெளிநாட்டு தொடர்பு, செல்வாக்கு மிக்க குடும்பம் அல்லது அசாதாரண வழியில் செல்வம்.

5. சுக்கிரன்–குரு நல்ல தொடர்பு (சேர்க்கை, திரிகோணம், ) - செல்வம், அதிர்ஷ்டம், வளமான திருமண வாழ்க்கை.

6. வலுவான 8ஆம் பாவம் அல்லது 8ஆம் பாவ அதிபதி நல்ல நிலையில் இருப்பது - திருமணத்திற்குப் பிறகு செல்வ உயர்வு, பரம்பரைச் சொத்து அல்லது x துணையால் கிடைக்கும் நிதி ஆதாயம்.

யார் காலிலும் இந்த ராசிகள் விழக்கூடாது அது ஏன்?



யார் காலிலும் இந்த ராசிகள் விழக்கூடாது அது ஏன்?

27 நட்சத்திரங்களில்...உத்திரட்டாதி, அனுஷம், பூசம் என சனி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் யார் காலிலும் விழக்கூடாது. அதே போன்று, உங்கள் காலிலும் விழுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

மகரம், கும்பம் ராசியில் பிறந்தவர்களும்... கும்பம், மகரம் லக்னத்தில் பிறந்தவர்களும்... மற்றவர் காலில் விழுவதோ, அல்லது மற்றவர் உங்கள் காலில் விழுவதோ கூடாது.

ஏன் என்றால், இந்த ராசி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்... சனியின் ஆதிக்கம் பெற்றவர்கள்...

மகரம்

கும்பம்

இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், இந்த ராசி நட்சத்திரக்காரர்கள் பெற்றோர்கள், குறிப்பாக தாயின் காலை தொட்டு வணங்கும்போது எண்ணற்ற நற்பலன்களை அள்ளிக் கொடுப்பார், சனி பகவான்... இவர்களுக்கு சனியின் தாக்கம் அதிகமாக இருந்தால், தாயின் காலில் விழுந்து ஆசி பெற்றால் போதும்... சனி இவர்களின் கிட்ட நெருங்கவே நெருங்காது...

இவர்கள் பெற்றோரை தவிர வேறு யாரு காலிலும் விழக்கூடாது. அப்படி ஆசி பெறுவதற்காகவே, மற்றவர் காலில் விழுந்தாலும்... அதை ஊக்குவிக்கக் கூடாது. மாறாக அதை ஊக்குவித்தால், அவர்கள் ஜாதகத்தில் இருக்கும் புண்ணிய பலன் பயனற்று போகும்... இது ஆசி கொடுப்பவருக்கும், ஆசி வாங்குபவருக்கும் புண்ணிய பலனை கரைத்து பாவம் வந்து சேரும்...

சனி பகவானின் உரிய பகுதி பாதம் என்பதால்... அது கர்ம வினைகளை கொடுக்கும்.



இவங்க,இந்த தவறு செஞ்சா... கண்டிப்பா தோத்துடுவாங்க...



இவங்க,இந்த தவறு செஞ்சா...

கண்டிப்பா தோத்துடுவாங்க...

மேஷம் - நான் வச்சது தான்,சட்டம்ன்னு ஆதிக்கம் செலுத்துனா... அன்பை இழந்நிடுவாங்க...

ரிஷபம் - தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கலனா, 5 அந்த நொடி உங்க... உறவு உடையும்.

மிதுனம் - வீட்டுக்குள்ள,பேச அலட்சியப்படுத்தினா. குடும்பத்தில்... விரிசல் விழும்.

கடகம் - சந்தேக கண்ணோடு பாத்தா... நிம்மதி கெடும்.

சிம்மம் - ஈகோவை கைவிடலனா... தனி ஆள் தான்...

கன்னி - துருவி துருவி கேள்வி கேட்டா... உறவே... உங்கள தூக்கி போட்டுரும்...

துலாம் - பிரச்சனையை பார்த்து ஒதுங்கிப் போனா... நல்ல வாய்ப்பு கிடைக்காது...



விருச்சிகம் - குடும்பத்துல ஒன்றி இல்லனா... வாழ்க்கை நரகம் தான்...

தனுசு - குடும்ப பொறுப்ப தட்டி கழிச்சா... கூட யாருமே... இருக்க மாட்டாங்க...

மகரம் - உங்களுக்காக வாழும் குடும்பத்த நிராகரிச்சா... நீங்க தேடும்போது உறவு தூரமாகிடும்...

கும்பம் - மனசுல போலியான வாழ்க்கை வாழ்ந்தா... பொழ்ப்பு போலியாகிடும்...

மீனம் - குத்தி காட்டி பேசினா,யாரும் உண்மையா... இருக்க மாட்டாங்க...


புஷ்கராம்சம் என்றால் என்ன?



புஷ்கராம்சம் என்றால் என்ன?


ஒரு ராசியில் குறிப்பிட்ட நட்சத்திரத்தின் குறிப்பிட்ட பாதத்தில் லக்கினம் அல்லது முக்கிய கிரகங்கள் அமைந்தால், அது புஷ்கராம்சம் எனப்படுகிரது.

இந்த அமைப்பு ஜாதகத்தில் பல வித நற்பலன்களை வழங்கும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

இந்த நட்சத்திரங்களில் லக்கினம் ஆனால் கிடைக்கும் சிறப்புகள்

வாழ்க்கையில் முன்னேற்றம் மற்றும் வெற்றி

செல்வ வளம், குடும்ய சுகம், மன நிறைவு

கல்வி, தொழில், திருமணம் ஆகியவற்றில் சிறப்பு

அதிர்ஷ்டம், கௌரவம், புகழ், ஆன்மிக முன்னேற்றம்

தெய்வ அருள் மற்றும் சுப யோக பலன்கள் கிடைக்கும்


பாணிபூரியை கண்டுபிடித்தது மகாபாரத காலத்து திரௌபதி?


பாணிபூரியை கண்டுபிடித்தது மகாபாரத காலத்து திரௌபதி? கொஞ்சூண்டு கோதுமை மாவில்.. சுவாரஸ்ய பின்னணி என்ன?

 
பாணிபூரியை அறிமுகப்படுத்தியது மகாபாரதத்தில் வரும் திரௌபதியா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்மான கதையும் உள்ளது. தெருவுக்கு தெரு விற்கப்படும் இந்த பாணி பூரியில் அப்படி என்ன சுவாரஸ்ய கதை இருக்கிறது என்பதை பார்க்கலாம்.


அந்த காலகட்டத்தில் பள்ளி முடிந்து வீடுகளுக்கு வரும் பிள்ளைகளுக்கு அதிரசம், முறுக்கு, தட்டை, வடை, போண்டா, பஜ்ஜி, சுண்டல் உள்ளிட்ட தீனிகளே கொடுக்கப்பட்டன.


Draupadi invented Pani puri
ஆனால் தற்போது பிரெஞ்ச் பிரைஸ், பர்கர், பீட்சா என குழந்தைகளின் ரசனைக்கேற்ப ஸ்னாக்ஸும் மாறிவிட்டது. அதிலும் பாணிபூரி முக்கிய பங்கு வகிக்கிறது. பாணி பூரி, பேல் பூரி, தயிர் பூரி, சமோசா பூரி, மசாலா பூரி என நிறைய ஐட்டங்கள் வந்துவிட்டன.

மேலும் சன்னா மசாலா உள்ளிட்டவையும் கிடைக்கின்றன. இத்துடன் காளான் எனப்படும் ஒரு உணவும் விற்கப்படுகிறது. இவை எல்லாவற்றையும் விட பாணி பூரிக்குத்தான் ஃபேன்ஸ் அதிகம்.

சிறிய பூரிகளில் உருளைக் கிழங்கு மசாலாவை வைத்துவிட்டு அதில் புளி, உப்பு, பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி கலந்த பச்சை நிற தண்ணீரையும் வெங்காயத்தையும் சேர்த்து கொடுக்கும் போது ஒரே மடக்காக அதை வாயில் போட்டுக் கொண்டால் ஆஹா அற்புதமாக இருக்கும்.

இப்படிப்பட்ட பாணிபூரியின் பின்னணியில் ஒரு கதை இருக்கிறது, அதை பார்க்கலாம். இந்த சம்பவம் அமர்சித்ர கதையில் இடம்பெற்றுள்ளது. அதாவது பாண்டவர்கள் வனவாசத்திற்கும் பாணிபூரிக்கும் ஒரு தொடர்பு இருக்கிறதாம்.

திருமணமான புதிதில் தனது மருமகள் திரௌபதியின் திறனை சோதிக்க பஞ்ச பாண்டவர்களின் தாய் குந்தி தேவி நினைத்தாராம். அதற்காக கொஞ்சம் உருளைக்கிழங்கு மசாலா, ஒரே ஒரு சிறிய சப்பாத்தி செய்யும் அளவிற்கு மட்டுமே கோதுமை மாவையும் கொடுத்தாராம்.

அப்போது "உன் கையில் கொடுத்துள்ள இந்த பொருட்களை வைத்து 5 பேரின் பசியை நீ ஆற்ற வேண்டும். அதே நேரத்தில் அவர்களுக்கு வயிறு நிறைந்து பசியும் என சொல்லக் கூடாது." என்றும் உத்தரவிட்டாராம். மாமியார் உத்தரவை மீறலாமா? உடனே திரௌபதி சமயோஜிதமாக யோசித்தாராம்.



சிறிய மாவை சிறு உருண்டைகளாக்கி, அதை எண்ணெயில் பொரித்து எடுத்து பூரிகளாக்கி அதில் உருளைக்கிழங்கு மசாலாவை திணித்து பஞ்ச பாண்டவர்களுக்கு பரிமாறினாராம். ஒரு சிறிய அளவிலான மாவை கொண்டு தனது மகன்களின் பசியை போக்கியமைக்காக அந்த உணவுக்கு அழிவே கிடையாது என குந்தி தேவி வரம் அளித்தாராம். அதனால்தான் அந்த பாணி பூரி நிலைத்திருக்கிறது என்கிறார்கள்.

திரௌபதி செய்த பாணிபூரியை பார்த்து குந்தி தேவியே ஆச்சரியப்பட்டாராம். எனவே இன்று அனைவருக்கும் ஃபேவரைட்டாக இருக்கும் பாணி பூரி ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருானது என்கிறார்கள். எனினும் சிலர் பாணிபூரி மகத வம்சத்தால் கண்டுபிடிக்கப்பட்டது என்கிறார்கள். அந்த உணவுக்கு புல்கி என பெயரிடப்பட்டதாம். ஆனால் இதை உருவாக்கியவர்கள் யார் என எந்த வரலாற்றுப் பதிவும் இல்லை என்கிறார்கள்.

திரௌபதி உருவாக்கினாரோ யார் உருவாக்கினாலும் சரி நமக்கு தேவை பாணிபூரி! நாக்கு ஊறுது! சாயங்காலம் 5 மணிக்கு கடை திறந்தும் போய் சாப்பிட்டுருவோமா? 

உங்க ராசியின் உண்மையான குணம் என்ன தெரியுமா?

உங்க ராசியின் உண்மையான குணம் என்ன தெரியுமா?

அழகின் மறுபெயர் - துலாம்

ஆளுமையின் உச்சம் விருச்சிகம்

வெல்ல முடியாதவர் - மகரம்

அமைதியான புயல் - கும்பம்

அமைதியான மிருகம் - ரிஷபம்

அறிவுக்கூர்மையின் பிறப்பிடம் - மிதுனம்



தீர்க்கதரிசன சிந்தனையாளர் - கன்னி

அன்பின் ஊற்று - கடகம்

புரியாத புதிர் - மீனம்



யாருக்கும் அஞ்சான் - தனுசு

நான் தான் ராஜா - சிம்மம்



ஒரு லட்சம் பேர் வந்தாலும் தனியாக எதிர்த்து நிற்பார்கள் - மேஷம்




முதல் இரவுக்கு "சாந்தி முகூர்த்தம்" என்று பெயர் வந்ததற்குக் காரணம் என்ன?

முதல் இரவுக்கு "சாந்தி முகூர்த்தம்" என்று பெயர் வந்ததற்குக் காரணம் என்ன?

அறிவியல் சார்ந்த நம் முன்னோர்களின் செயல்!



கருவறையில் முதல் 5 வாரங்கள் ஆண் & பெண் குரோமோசோம்களுக்கு இடையே போட்டி நடக்கும். 5 வாரங்களுக்குப் பின் ஒன்று விட்டுக்கொடுக்கும் - ஆண் விட்டுக்கொடுத்தால் பெண் குழந்தை, விட்டுக்கொடுத்தால் ஆண் குழந்தை பிறக்கும். இதனால் ஒவ்வொரு ஆணும் தான் இழந்த பெண்மையையும், ஒவ்வொரு பெண்ணும் தான் இழந்த ஆண்மையையும் வாழ்நாள் முழுவதும் தேடுகிறார்கள். இந்தத் தேடலை முடிவுக்குக் கொண்டுவரவே திருமணம் -அந்த இணைப்பின் புனிதத் தருணமே சாந்தி முகூர்த்தம்! கருவறையில் தொலைத்த ஒன்றை மீண்டும்



இணைக்கும் இந்த நிகழ்வு சம்பிரதாயம் மட்டுமல்ல-அறிவியல் சார்ந்தது! 


Zodiac Sign) (Fasting) (Benefit)



 (ZODIAC SIGN) விரதம் மற்றும் பலன் (FASTING & BENEFIT)

(Zodiac Sign)

(Fasting)

(Benefit)



மேஷம்

கந்த சஷ்டி

தடைகள் அகலும்

ரிஷபம்

ஏகாதசி

நினைத்தது நிறைவே


மிதுனம்



பிரதோஷம்

ஐஸ்வர்யம் பெருகும்

கடகம்

கிருஷ்ண ஜெயந்தி

செல்வம் பெருகும்



சிம்மம்

மகா சிவராத்திரி

சகல நன்மைகள்

கன்னி

வரலட்சுமி விரதம் |

பணக்கஷ்டம் நீங்கும்



துலாம்

வைகாசி விசாகம்

தனம் பெருகும்

விருச்சிகம்

கந்த சஷ்டி

வினைகள் விலகும்





தனுசு

சங்கடஹர சதுர்த்தி

வெற்றி கைகூடும்



ஏகாதசி

செனபாக்கியம் உண்ட

கும்பம்

பெளர்ணமி

வருமானம் பெருகும்



மீனம்

விநாயகர் சதுர்த்தி |

தடைகளும் அகலும்

*யார் ஒதவர் இந்த விரதங்களை 15 வருடங்கள் விடாமல் கடைபிடிக்கிறர்களோ, அவர்களுக்கு மோட்சம் கிடைக்கும்.

* 15 வருடங்கள் கடைபிடிக்க முடியவில்லை என்றாலும், குறைந்தபட்சம் 3 வருடம் கடைபிடித்தால், அவர்களுக்கு நல்ல பலனை தரும்


ஒவ்வொரு தானியத்துக்கும் ஒரு தெய்வ ரகசியம்... ஒரு அருள் பலன்...

நம் முன்னோர்கள் காரனமின்றி எதையம் செய்யவில்லை!

ஒவ்வொரு தானியத்துக்கும் ஒரு தெய்வ ரகசியம்... ஒரு அருள் பலன்...

தெய்வம்

தானியம்

மரபு நம்பிக்கையில் கூறப்படும் நன்மை

மகமாயீ -சாமை

மன அமைதி, ஆன்மிக தெளிவு, தெய்வ அருள், குடும்ம ஒற்றுமை

மாரியம்மன் -கம்பு


உடல் நலம், நோய் நீக்கம், மழை வளம், ஊர் பாதுகாப்பு

பச்சையம்மன்-வரகு

நில வளம், பகமை, விவசாய செழிப்பு, விளைச்சல் பெருக்கு

அங்காள பரமேஸ்வரி
-கேழ்வரகு

தைரியம், குடும்ப பாதுகாப்பு, தீய சக்திகள் விலகும், எதிரிகறை சக்தி நீக்கும்.

காளியம்மன்சோளம்

வீரியம், மனவலிமை, வெற்றி, எதிரிகள் விலகும், நம்பிக்கை அதிகரிக்கும்.

எல்லையம்மன்-திணை



குடும்பக் காவல், எல்லை பாதுகாப்பு, பயன நலம், தடைகள் நீங்கும்.

கருப்பண்ணசாமி

கம்பு + சோளம்

நீதி நிலைநிறுத்தம், காவல், தைரியம், எதிரிகள் விலகும்.

ஐயனார்

சாமை + வரகு

கிராம நலம், கால்நடை வளம், விளைச்சல் பெருக்கு, செழிப்பு கிடைக்கும்.

நாக தெய்வம்

திணை

சந்ததி நலம், நில வளம், நாக தோஷ நிவர்த்தி, குடும்ப செழிப்பு,

முனீஸ்வரர்

கேழ்வரகு

மன உறுதி, குடும்ப அமைதி, பாதுகாப்பு, தடைகள் நீக்கும்.

கிரக சேர்க்கை (CONJUNCTION / யுதி)

கிரக சேர்க்கை (CONJUNCTION / யுதி)

எந்த கிரகம் பலம் பெறும்? எது பலவீனமடையும்?

பலமாகும் கிரகங்கள்

பலவீனமடையும் கிரகங்கள்

நல்ல கிரகங்களுடன் சேர்க்கை

குரு, சுக்கிரன், புதன் (நட்பு கிரகங்களுடன்) சேர்ந்தால் பலம் அதிகரிக்கும்.

சூரியனுடன் மிக அருகில் சேர்ந்தால் (தகனம் / Combustion)

→ புதன்

→சுக்கிரன்

→ செவ்வாய்

குரு

→ சனி

தகனம் அடைந்து பலன் குறையும்.

சனி

→ மெதுவான ஆனால் நிலையான பலம் தரும். பாப கிரகங்களுடன் சேர்ந்தால் அவற்றின் தன்மையை அதிகரிக்கும்.

சந்திரன்

சனி, ராரு, கேது போன்ற பாப கிரகங்களுடன் தீவிர சேர்க்கை ஏற்பட்டால் மன அமைதி, சந்திர பலம் பாதிக்கப்படும்.

ராரு, கேது

தங்களுடன் சேர்ந்துள்ள கிரகத்தின் பலன்களை மிககப்படுத்தும்.

பகை கிரகங்களின் சேர்க்கை

பகை கிரகங்கள் சேர்ந்தால் இரு கிரகங்களின் நல்ல பலன்கள் குறைந்து பாதிப்பு தரலாம்.

நட்பு கிரகங்கள் சேர்க்கை

இரு கிரகங்களின் நல்ல பலன்கள் அதிகரிக்கும்.

ஒரு சேர்க்கையில் எந்த கிரகம் பலம் பெறும், எது பலவீனமடையும் என்பது கீழ்க்கண்டவற்களை பொறுத்தது.

* உச்சம் /நீசம்

* பார்கைகள்

* சொந்த வீடு / நட்பு வீடு

* பாவ நிலை

* 5 (Combustion)

* நவாம்ச பலம்

* (Graha Yuddha)

ஆகையால் ஒவ்வொரு ஜாதகத்திலும் சேர்க்கையின் விளைவு மாறுபடும்.

Monday, 27 July 2026

Hotel Vs Inn



Hotel Vs Inn

ஹோட்டல்- "இன்"

 இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

  
எந்த ஊருக்காவது பயணம் மேற்கொள்ளும்போது ஹோட்டல், இன் என இரு வார்த்தைகளில் தங்கும் இடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும். அப்படி என்றால் என்ன என்பதை பார்க்கலாம். அதன் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக ஒவ்வொரு வார்த்தைக்கு இரு பெயர்கள் இருக்கும். அவை ஒன்று போல் இருப்பதாக இருந்தாலும் வெவ்வேறு பயன்பாட்டுக்கு ஏற்றவை. உதாரணமாக ஹோம், ஹவுஸ் என இருக்கும்.

Hotel Vs Inn

அது போல் ஹோட்டல், மோட்டல் என இருக்கும். இந்த நிலையில் நிறைய இடங்களில் Inn (இன்) என்ற சொல் இருக்கும். இப்படியென்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.



அதாவது ஹோட்டல்கள் என்பது பெரிய நகரங்கள், சுற்றுலா தலங்கள் இருக்கும் இடங்களில் பல அடுக்குகளை கொண்ட தங்கும் இடமாகும். இங்கு ஒவ்வொரு தளத்தில் அறைகள் இருக்கும். இவை விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், நகரின் மையப்பகுதிகளில் அமைந்திருக்கும்.

இந்த ஹோட்டல்களில் நீச்சல் குளம், ஸ்பா, ஜிம், மீட்டிங் நடத்தும் வகையில் எண்ணற்ற வசதிகள் இருக்கும். அது போல் Multicuisine உணவகங்களும் இருக்கும். ஓட்டல்களில் அறைகளின் வசதி, ஹோட்டல்களின் ஸ்டார்களுக்கேற்ப வாடகை கூடவோ குறைவோ இருக்கும்.

அது போல் இன் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். "இன்" என்பது அளவில் சிறியதாக இருக்கும். இங்கு ஒன்று அல்லது இரண்டு அடுக்குகள் மட்டுமே இருக்கும். அப்படி பார்த்தால் அதிகபட்சமாக 20 அறைகள் இருக்கலாம். இந்த "இன்"-கள் நெடுஞ்சாலைகள், கிராமப்புறங்கள், சிறிய நகரங்களில் இருக்கும்.


Motel Vs Hotel: மோட்டல், ஓட்டல்- இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? எதில் குறைந்த கட்டணம்?
Motel Vs Hotel: மோட்டல், ஓட்டல்- இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? எதில் குறைந்த கட்டணம்?
அது போல் ஆடம்பரமான வசதிகள் எல்லாம் இருக்காது. தங்குவதற்குத் தேவையான கட்டில், வைஃபை, காலை உணவு உள்ளிட்டவை இருக்கும். இங்கு அறைகளின் வாடகை குறைவாக இருக்கும். சாதாரண வசதிகள் கொண்ட அறைக்கு ரூ 500 முதல் 1200 வரை வாடகை இருக்கும். ஏசி அறை என்றால் 1200 முதல் 2500 வரை வசூலிக்கப்படும். இதில் complementary breakfast கிடைக்கும். பண்டிகை காலங்களில் இங்கு வாடகை சற்று அதிகமாக இருக்கும். எனவே யாருக்கு எது தேவையோ அதை பயன்படுத்துங்கள்.



ஆபத்தான கிரக சேர்க்கைகளும் அவற்றின் எதிர்மறை விளைவுகளும்

ஆபத்தான கிரக சேர்க்கைகளும் அவற்றின் எதிர்மறை விளைவுகளும்
சூரியன் + சனி (ராஜதண்ட யோகம்)

தந்தையுடன் மோதல்கள்
அரசாங்க தடைகள்
தொழில் தாமதங்கள்
பலவீனமான எலும்புகள் மற்றும் பார்வை
சந்திரன் + கேது (கேது கிரகணம்)
உணர்ச்சி ரீதியான விலகல்
தனிமை
சோகம்
தாயிடமிருந்து விலகல்
செவ்வாய் + கேது
மறைந்திருக்கும் கோபம்
திடீர் காயங்கள்
குறைந்த பொறுமை
உள் உளைச்சல்
குரு + ராகு (குரு சண்டாள யோகம்)
தவறான வழிகாட்டுதல்
ஆன்மீகக் குழப்பம்
ஆசிரியர் தொடர்பாள
குழந்தை பாக்கியத்தில் தாமதங்கள்
சுகக்ரன் + அ (விஷ கன்யா யோகம்)
உறவுப் பிரச்சினைகள்
போதைப்பழக்கங்கள்
அதிகப்படியான செலவு
நற்பெயர் சிக்கல்கள்

சனி 02 (சாபித தோஷம்)
தொடர் போராட்டங்கள்
சட்ட சிக்கல்கள்
தொழில் ஸ்திரமின்மை
மன அழுத்தம்
சந்திரன் + ராகு (கிரகண தோஷம்)
அதிகப்படியான சிந்தனை மற்றும் கவலை
உணர்ச்சி ரீதியான குழப்பம்
மனச்சோர்வு
தூக்கக் கோளாறுகள்
செவ்வாய் + ராகு (அங்காரக யோகம்
கோபப் பிரச்சினைகள்
விபத்துகள் மற்றும் காயங்கள்
⚫அடிக்கடி மோதல்கள்
அறுவை சிகிச்சைக்கான சாத்தியக்கூறுகள்
புதன் + கேது (ஜடத்வ யோகம்)
மோசமான கவனம்
தொடர்பு சிக்கல்கள்
கற்றல் சிரமங்கள்
மனக் குழப்பம்
குரு + சனி (விஷ யோகம்)
சோம்பல்
தொழில் தாமதங்கள்
பெரும் பொறுப்புகள்
மெதுவான முன்னேற்றம்
சுக்ரன் + கேது (வைராக்கிய யோகம்)
திருமண தாமதம்
உணர்ச்சி ரீதியான தூரம்`
காதல் குறைபாடு
உறவில் திருப்தியின்மை
சூரியன் + ராகு (கிரகண யோகம்)
ஈகோ மோதல்கள்
அரசாங்க பிரச்சினைகள்"
நற்பெயர் இழப்பு
தந்தை தொடர்பான பிரச்சினைகள்


பணம் வராமல் தடைபடுதா பணத்தடை நீங்க ஐந்து எளிய பரிகாரம்



பணம் வராமல் தடைபடுதா பணத்தடை நீங்க ஐந்து எளிய பரிகாரம்

பணத்தடைக்கு காரணம் பித்ரு சாபம், கண்திருஷ்டி, பூர்வ ஜென்ம கர்மா, மனம் வருந்தி கொடுத்த சாபம் போன்றவற்றால் வரும். இதற்கு பரிகாரம்.....
1.பசுவுக்கு அகத்திக்கீரை கொடுப்பது, பித்ரு சாபம் போகும்.
2.நாய்க்கு உணவு அளிப்பதால் கண் திருஷ்டி கழியும்.
3.பறவைக்கு இரை, தண்ணீர் வைத்தால், சாபம் நீங்கும்.
4.எறும்புக்கு துள்ளு மாவு வைத்தால் கர்மா விலகும்.
5.இவை அனைத்தும் செய்தால் பணத்தட்டுப்பாடு இருக்காது.




Sunday, 26 July 2026

உங்க ராசிக்கு எந்த மோதிரம் போட்டா பணமழை கொட்டும்?



உங்க ராசிக்கு எந்த மோதிரம் போட்டா பணமழை கொட்டும்?

மேஷம்
மோதிர விரல் - 'செம்பு' (Copper)! (எதிர்ப்புகள் விலகி வெற்றி கிட்டும்!)
ரிஷபம் 
கட்டை/சுண்டு விரல் - 'வெள்ளி'! (பண வரவும் ஆடம்பர வாழ்வும் வரும்!)
மிதுனம் 
சுண்டு விரல் - 'தங்கம்' (Gold)! (புத்தி கூர்மையால் பெரும் லாபம் வரும்!)
கடகம்
மோதிர விரல் - 'வெள்ளி / முத்து'! (நிம்மதியான ராஜ வாழ்க்கை அமையும்!)
சிம்மம் 
மோதிர விரல் -‘தங்கம் / செம்பு'! (பெரிய கௌரவமும் பதவியும் கிடைக்கும்!)
கன்னி 
சுண்டு விரல் - 'தங்கம்' (Gold)! (தீராத கடன்கள் தீர்ந்து வறுமை நீங்கும்!)
துலாம்
நடு/மோதிர விரல் - 'வெள்ளி'! (குடும்பத்தில் பண வரவு பலமடங்கு கூடும்!)
விருச்சிகம் 
மோதிர விரல் - 'செம்பு' (Copper)! (சூழ்ச்சிகள் மறைந்து 100% வெற்றி நிச்சயம்!)
தனுசு
ஆள்காட்டி விரல் - 'தங்கம்'! (நினைக்காத பெரும் செல்வம் தேடி வரும்!)
மகரம் 
நடுவிரல் -‘இரும்பு / வெள்ளி! (உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்!)
கும்பம்
நடுவிரல் -‘கருங்காலி / இரும்பு'! (தலையெழுத்தே மாறி அதிர்ஷ்டம் வரும்!)
மீனம் -
ஆள்காட்டி விரல் - 'தங்கம்'! (கேட்டதை எல்லாம் பிரபஞ்சம் அள்ளித் தரும்!)


சின்ன சின்ன ஆன்மீக தகவல்



சின்ன சின்ன ஆன்மீக தகவல்

1.பெண்களுக்கு 108 தோஷங்கள் உள்ளது ஆண்களுக்கு 18 தோஷங்கள் உள்ளது. 2.வீட்டில் பனைமரம் வளர்த்தால், வீட்டில் பண பற்றாக்குறை இருக்கும்.

3.வீட்டில் கூரை மீது நாய் ஏறக்கூடாது. 4.வெள்ளி கிண்ணத்தில் போஜனம் உண்டால், குழந்தைகளுக்கு கீர்த்தி உண்டாகும்.



5.குழந்தைகளை வீடு கட்டும் இடத்தில் அல்லது கிரகப்பிரவேசம் செய்யாத வீட்டில் விளையாட விடக்கூடாது.


6.கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளை சின்ன சின்ன பூ செடிகள் வைக்கலாம் 7.விரதம் இருப்பவர்கள் மெத்தையில் படுத்து உறங்க கூடாது.




Motel Vs Hotel


Motel Vs Hotel: மோட்டல், ஓட்டல்- இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? எதில் குறைந்த கட்டணம்?

 Motel, Hotel ஆகிய இரண்டுக்கும் இருக்கும் வித்தியாசம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். ஹோட்டல் என்றால் சாப்பிடும் இடம் என்று சொல்லலாம். ஊரில் இருந்து தூரப் பகுதிகளுக்குச் செல்லும் போது தங்கும் இடமாகவும் இது அறியப்படுகிறது.

ஆனால் மோட்டல் என்றால் என்ன என்பது பலருக்கு தெரியாமல் இருக்கலாம். அந்த சொல் ஏன் வந்தது, மோட்டலுக்கும் ஓட்டலுக்கும் என்ன வித்தியாசம் என்பதை பார்க்கலாம்.

motel vs hotel

மோட்டல் என்ற சொல் மோட்டரிஸ்ட்ஸ் ஹோட்டல் என்ற ஆங்கில சொல்லாகும். மோட்டார் + ஹோட்டல்= மோட்டல் என்பதாகும். இது முக்கியமாக சாலை பயணிகளின் வசதிக்காக உருவாக்கப்பட்டதாகும்.



இந்த மோட்டல்கள் நெடுஞ்சாலைகளின் ஓரமாகவும், நகரங்களுக்கு வெளியேயும் அமைக்கப்படுகின்றன. இவை முதல்முறையாக அமெரிக்காவில்தான் தொடங்கப்பட்டது. 1925 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் தொடங்கப்பட்டது.

இங்கு வருவோர் வாகனங்களை அறைகளுக்கு நேராக நிறுத்திவிட்டு தங்கலாம். மேலும் குறைந்த செலவில் தங்கும் வசதியும் உள்ளது. ஹோட்டல், மோட்டல் ஆகிய இரண்டும் தங்கும் வசதிகளை வழங்கினாலும் இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது.

ஹோட்டல்கள் பொதுவாக பல மாடிகளை கொண்டது. லிப்ட் வசதி, எஸ்கலேட்டர் வசதிகள் கிடைக்கும். இங்கு எல்லா விதமான வசதிகளும் இருக்கும். உணவகங்கள், ஜிம், ஸ்விம்மிங் பூல், மசாஜ் சென்டர்கள் உள்ளிட்டவை கிடைக்கும். அது போல் அறைகளும் காசுக்கேற்ற வகையில் இருக்கும்.

ஆனால் மோட்டல்கள் நிறைய மாடிகளில் இருக்காது. இங்கு வருவோர் தங்கள் அறைகளுக்கு அருகே நிறுத்திவிட்டு செல்லலாம். அறைகளும் குறைந்த வாடகையில் கிடைக்கும். இங்கு ஸ்விம்மிங் பூல், ஜிம், மசாஜ் உள்ளிட்ட வசதிகள் இருக்காது. இரவில் தங்கிவிட்டு காலையில் காலி செய்துவிட வேண்டும்.

 வெளியூர் தொழிலாளர்கள் உணவுக்காக தவிப்பு
ஓட்டல்கள் சகல வசதிகளுடன் கூடிய நீண்ட கால தங்கும் இடமாகும். ஆனால் மோட்டல்கள் இரவில் ஓய்வெடுத்துவிட்டு பகல் பொழுதில் பயணம் செய்யும் குறுகிய தங்கும் இடமாகும். மோட்டல்களில் கட்டில், கழிப்பிடம், டிவி உள்ளிட்டவை மட்டும் இருக்கும். லிப்ட், எஸ்கலேட்டர் போன்ற வசதிகள் இருக்காது.

தமிழகத்தில் எத்தனை மோட்டல்கள் இருக்கின்றன என்ற புள்ளிவிவரங்கள் தெரியவில்லை. ஆனால் ராணிப்பேட்டை, உளுந்தூர்பேட்டை, தொப்பூர் ஆகிய பகுதிகளில் Highway Motel, Motel Tamil nadu ஆகிய பெயர்களில் உள்ளன.

இவை மட்டுமல்லாது என்எச் 44, 45, 48 போன்ற வழித்தடங்களிலும் காணப்படும். இவை சுற்றுலாத் துறை சார்பில் நடத்தப்படுகிறது. இங்கு வாடகை தோராயமாக 100 முதல் 300 ரூபாய் வரை இருக்கும். ஒரு சில இடங்களில் ரூ 800 முதல் ரூ 1500 -க்கும், ஏசி வசதி கொண்ட அறைகள் ஒரு நாள் இரவு தங்க ரூ 1500 முதல் ரூ 2500 வரையும் கிடைக்கின்றன. அது போல் இரவு முழுவதும் தங்காமல் சில மணி நேரங்கள் மட்டும் ஓய்வெடுக்கும் குறைந்த கட்டண மோட்டல்களும் உள்ளன.


Friday, 24 July 2026

House cleaning rules


அரிசி பானையில் இதைபோட்டு வைக்க


லக்னம் Vs திசை


நோயில்லா வாழ்வு வாழ...


Best directions for comman house elements


பணவரவு பரிகாரங்கள்


7 powerful vasthu items


What not to do from Monday to sunday


Vasthu shastra


What to avoid each day of the week


Vasthu based layout


Food eating direction


திதி வகைகள்


ஆசைப்பட்ட காரியம் வெற்றியடைய


உன்னத, மத்திம, அசுபா,கூடாத நட்சத்திரங்கள்


திருமணம் பொருத்தம்


ஆண்களின் மற்றும் பெண்களின் ஏழு பருவப்பெயர்கள்


ராசிகளின்படி தவிர்க்க வேண்டிய நிறங்கள்


12 ராசி அதிர்ஷ்ட குறியீடு


Monday, 20 July 2026

Hand gestures meaning


திதி Vs அதிபதி


வியப்புடன் அறிகுறிகள்


மதம் vs சின்னம்


Organs alive after death


குணம்,தோற்றம், திறமை யாருடையது...


First in the World

First in the World

First Newspaper

→Germany

First Railway

→United Kingdom

First Postal system

→Egypt

First Paper Money

- Ching

First Hospital

- Sri Lanka

First Democracy

- Greece

First Olympic Games

- Greece

First University

→Morocco

First Bank

- Italy

First TV Broadcast

- United Kingdom

First Internet

- United States

First Car Industry

→Germany

First Atomic Program

- United States

First Airline

- Germany

First Mobile Phone

PAA

How long Organs Stay Alive After Death...



How long Organs Stay Alive After Death:

Kidney - 26 Hours

Liver- 15 Hours

Lungs - 8 Hours

Brain - 20 Minutes

Heart - 10 Minutes

Cornea - 6 Hours

Hair -6 Hours

Skin - 4 Hours

Pancreas - 12 Hours

Small Intestine - 6 Hours

Large Intestine - 4 Hours

Muscles - 2 Hours

Bones - Several Days

Nerves - I Hour

Blood Cells - 6 Hours

Eyes (Retina) - 4 Hours

Bone Marrow-Up to 24 Hours

Heart Valves - up to 24 Hours

Tendons - Several Days

Cartilage - Several Day

வாழ்க்கையின் ரகசியம் இதுதான்...

வாழ்க்கையின் ரகசியம் இதுதான்...

* எவ்வளவு பொறுமையுடன் இருக்கிறோமோ, அவ்வளவு "உயர்நிலை".



* எவ்வளவு தூரமாக இருக்கிறோமோ, அவ்வளவு மரியாதை".

* எவ்வளவு குறைவான பாசத்தைக் காட்டுகிறோமோ, அவ்வளவு "மன அமைதி".

* எவ்வளவு குறைவாக ஆசைப்படுகிறோமோ, அவ்வளவு "நிம்மதி 

* எவ்வளவு குறைவாகப் பேசுகிறோமோ, அவ்வளவு மதிப்பு.


Sunday, 19 July 2026

ஆசைப்பட்ட காரியம் வெற்றி அடைய?



ஆசைப்பட்ட காரியம் வெற்றி அடைய?

எந்த ஒரு காரியமாக இருந்தாலும், தோல்வியை சந்தித்து வருகிறீர்களா? அப்படி என்றால், நீங்கள் கிழமை - திதி தெரியாமல் ஆரம்பித்திருப்பீர்கள். திதி நல்லதாக வரும்போது, கிழமை அகப்படாது. கிழமை நல்லதாக வரும்போது திதி அகபடாது. ஆனால் இந்த கிழமைகளையும், கிழமையில் வரும் திதிகளையும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். எப்பேர்ப்பட்ட நஷ்டமான தொழிலானாலும், இந்த கிழமையில் வரும் திதிகள் கை கொடுக்கும்.

ஞாயிறு:- அஷ்டமி

திங்கள் :- நவமி

செவ்வாய் :- சஷ்டி

புதன் :- திருதியை

வியாழன் :- ஏகாதிசி

வெள்ளி :- துரியோதசி

சனி:- சதுர்த்தசி



குறியீபு :- இத்தகைய நாட்களில் வரும்

வரும் திதிகளில், எந்த ஒரு நல்ல காரியம் செய்தாலும், அது வெற்றியில் முடியும். இந்த நாட்கள் வரும்போது வளர்பிறை, தேய்பிறை பார்க்க தேவையில்லை.


இறந்தவர்கள் உடலை எரித்தாலும் இந்த ஒரு பாகம் மட்டும் அழியாதாம் - அது எந்த உறுப்பு தெரியுமா?

 இறந்தவர்கள் உடலை எரித்தாலும் இந்த ஒரு பாகம் மட்டும் அழியாதாம் - அது எந்த உறுப்பு தெரியுமா?  பஞ்சபூதங்களில் ஒன்றான நெருப்பானது பேரழிவவை ஏற்படுத்தக்கூடியது என்பதை நாம் நன்கு அறிவோம். நெருப்பு எப்படி அழிவை ஏற்படுத்தும் சக்தியாக கருதப்படுகிறதோ அதேசமயத்தில் அனைத்து மதங்களிலும் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. அதனால்தான் இறந்த உடல்கள் நெருப்பில் எரிக்கப்படுகின்றன. மனித உடல் என்பது நடமாடும் அதிசயமாகும், இறந்த உடல்கள் நெருப்பில் முழுமையாக எரிக்கப்பட்டாலும் மனித உடலின் ஒரு பாகம் மட்டும் எப்போதும் அழியாது. உடல் தகனத்தின்போதும் பெரிதும் பாதிக்கப்படாமல் இருக்கும் உடலின் ஒரு பகுதி உள்ளது. உயர் வெப்பநிலையில் ஒட்டுமொத்த உடலும் சாம்பலாக மாறினாலும் ஒரு பாகம் மட்டும் பாதிக்கப்படாது. ஆச்சரியமளிக்கும் விதமாக இதைப்பற்றி நம்மில் பலருக்கும் தெரியாது. Also Read 22 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் அதிசய முலாம்பழம் - இந்த பழத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? உடலின் அழியாத பாகம் எது? எவ்வளவு வெப்பத்திலும் உடலின் அழியாத பாகம் மனிதர்களின் பற்கள்தான். கடும் வெப்பம் நிலவினாலும், மனிதப் பற்கள் முழுமையாக எரிந்துபோவதில்லை. அதற்குக் காரணம் கால்சியம் பாஸ்பேட் எனும் வேதிப்பொருளால் பற்கள் உருவாக்கப்பட்டதே ஆகும். ஏனெனில், இப்பொருள் எளிதில் சாம்பலாக மாறுவதில்லை. நெருப்பில் பற்களின் உறுதித்தன்மை உடல் எரிக்கப்படும் போது, ​​உடலின் மென்மையான திசுக்களே முதலில் எரிகின்றன. ஆனால், பற்கள் ஒரு தனித்துவமான அமைப்பைக் கொண்டுள்ளன. பற்களின் மென்மையான திசுக்கள் ஆரம்பத்தில் எரிந்துவிட்டாலும், மிகக் கடினமான திசுவான 'எனாமல்' மட்டும் அழியாமல் எஞ்சியிருக்கும். பற்களில் உள்ள கால்சியம் பாஸ்பேட் சத்து காரணமாகவே பற்கள் இத்தகைய குறிப்பிடத்தக்க உறுதித்தன்மையைக் கொண்டுள்ளன. குறைந்த வெப்பநிலையில் மற்ற எலும்புகளும் எரியாமல் இருக்கலாம் என்றாலும், பற்கள் அவற்றின் அதீத நீடித்து உழைக்கும் தன்மையால் தனித்து நிற்கின்றன. 
  இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? எப்போது பற்கள் அழியக்கூடும்? எலும்புகளை முழுமையாக எரிப்பதற்கு மிக அதிக வெப்பநிலை தேவைப்படுகிறது. எலும்புகளை முழுமையாகச் சாம்பலாக்க 1292 டிகிரி ஃபாரன்ஹீட் கிட்டதட்ட 700 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அவசியமாகும். இவ்வளவு அதிக வெப்பநிலையிலும் கூட, கால்சியம் பாஸ்பேட் முழுமையாகச் சாம்பலாக மாறுவதில்லை. இதனால்தான் பற்களும் சில எலும்புத் துண்டுகளும் பெரும்பாலும் எஞ்சியிருக்கின்றன. நகங்களும் தகனத்தின் போது எரியாமல் இருக்கின்றன என்று கூறப்பட்டாலும், இது அறிவியல் பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. எலும்புகள் எரிவதில் உள்ள வேறுபாடுகள் ஆய்வுகளின் படி, உடல் எலும்புக்கூடு சீராக எரிவதில்லை. உடலில் கொழுப்பு அமைந்துள்ள விதம் மற்றும் வெப்ப மூலம் போன்றவை, வெவ்வேறு எலும்புகள் எரியும் விதத்தைப் பாதிக்கின்றன. உடலின் மையப்பகுதியில் அதிகளவு கொழுப்பு குவிந்திருப்பதால் அங்குள்ள எலும்புகள் தீவிரமாக எரிகின்றன; ஆனால், கைகள் மற்றும் கால்களில் உள்ள புறப்பகுதி எலும்புகள் ஒப்பிட்டளவில் குறைந்த தீவிரத்துடனேயே எரிகின்றன. ஒவ்வொரு எலும்பும் எந்த வெப்பநிலையில் எரியும்? தகனத்தின்போது உடலில் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். 670 முதல் 810 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையில், உடல் 10 நிமிடங்களுக்குள் உருகத் தொடங்குகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. அடுத்த 20 நிமிடங்களில், மண்டை ஓட்டின் முன்புற எலும்பின் மீதுள்ள மென்மையான திசுக்கள் உருகத் தொடங்குகின்றன. இக்காலகட்டத்திற்குள், மண்டை ஓட்டு அறையின் மெல்லிய வெளிச்சுவரான 'டபுலா எக்ஸ்டர்னா'வில் ( விரிசல்கள் தோன்றுகின்றன. 30 நிமிடங்களுக்குள் தோல் முழுவதும் எரிந்து, அதற்குக் கீழே உள்ள உடல் பாகங்கள் எரியத் தொடங்குகின்றன. முழுமையான உடல் தகனமடைவதற்கு சுமார் 2 முதல் 3 மணிநேரம் வரை ஆகிறது. 

Monday, 13 July 2026

இந்த இரண்டு ராசிகள் சேர்ந்தால்

இந்த இரண்டு ராசிகள் சேர்ந்தால்

கும்பம் - கடகம் = கெட்டி மேளம்

மீனம் - சிம்மம் = விட்டுக்கொடுத்தல் அவசியம்

மேஷம் - சிம்மம் = மாறாத அன்பு

ரிஷபம் - மீனம் = அழகான இல்லறம்

மிதுனம் - மிதுனம் = உயிர் நண்பர்கள்

ரிஷபம் - கடகம் = வெற்றிகரமான கூட்டாளிகள்

ரிஷபம் - மேஷம் = ஒயாத விவாதம்

கும்பம் - மேஷம் = பொருத்தமான இணை

மீனம் - கடகம் = உண்மையான காதல்

மகரம் - மீனம் = அடிக்கடி சிறு மோதல்

மிதுனம் - கன்னி = புரியாத புதிர்

மகரம் - மேஷம் = கெட்டி மேளம்

துலாம் - மிதுனம் = மனமொத்த புரிதல்

விருச்சிகம் - கடகம் = பிரிக்க முடியாத பாசம்

கன்னி - ரிஷபம் = மகிழ்ச்சியான குடும்பம்

துலாம் - கும்பம் = கவலை இல்லாத ஜோடி

விருச்சிகம் - மீனம் = ஆழமான பிணைப்பு

தனுசு - மேஷம் = எல்லையற்ற காதல்

தனுசு - துலாம் = கொண்டாட்டமான வாழ்க்கை

மகரம் - கன்னி = கடமை + கண்ணியம் + கட்டுப்பாடூ 

Saturday, 11 July 2026

SAV பரல்கள்

உயர்தர வாழ்க்கைக்கான சூத்திரம்: ஜாதகத்தில் 1-ஆம் வீடு (லக்னம்), 9-ஆம் வீடு, 10-ஆம் வீடு மற்றும் 11-ஆம் வீடு ஆகிய ஒவ்வொன்றிலும் 30-க்கும் மேற்பட்ட 'பிந்து'கள் (மதிப்பெண்கள்) இருந்தால், அந்த நபர் அளப்பரிய செல்வம், அந்தஸ்து மற்றும் புகழை நிச்சயம் அடைவார்.
தாமதங்கள் மற்றும் சிக்கல்களுக்கு உள்ளாகும் அபாயம் அதிகம். தீய கிரகங்கள் இந்த வீட்டின் வழியாகச் செல்லும்போது (கோசார நிலை), அவை குறிப்பிடத்தக்க சவால்களை உருவாக்கக்கூடும்.
6, 8 மற்றும் 12-ம் வீடுகளின் மதிப்பெண்களைக் கூட்டவும். 'தீர்த்த'த்தின் மொத்த மதிப்பு 'வித்யா'வின் மொத்த மதிப்பை விட அதிகமாக இருந்தால், வருமானத்தை விடச் செலவுகளும் கடன்களும் தொடர்ந்து அதிகமாக இருக்கும்.
உயர்தர வாழ்க்கைக்கான சூத்திரம்: ஜாதகத்தில் 1-ஆம் வீடு (லக்னம்), 9-ஆம் வீடு, 10-ஆம் வீடு மற்றும் 11-ஆம் வீடு ஆகிய ஒவ்வொன்றிலும் 30-க்கும் மேற்பட்ட 'பிந்து'கள் (மதிப்பெண்கள்) இருந்தால், அந்த நபர் அளப்பரிய செல்வம், அந்தஸ்து மற்றும் புகழை நிச்சயம் அடைவார்.

1 ஆம் வீடு 9,10,11 ஆம் வீடு பரல்கள் பலன்

உயர்தர வாழ்க்கைக்கான சூத்திரம்: ஜாதகத்தில் 1-ஆம் வீடு (லக்னம்), 9-ஆம் வீடு, 10-ஆம் வீடு மற்றும் 11-ஆம் வீடு ஆகிய ஒவ்வொன்றிலும் 30-க்கும் மேற்பட்ட 'பிந்து'கள் (பரல்கள்) (மதிப்பெண்கள்) இருந்தால், அந்த நபர் அளப்பரிய செல்வம், அந்தஸ்து மற்றும் புகழை நிச்சயம் அடைவார்.

10 ஆம் வீடு,11 ஆம் வீடு பரல்கள் பலன்

நிதி உபரி அல்லது கூடுதல் வருமானம் கிடைக்க, 10-ஆம் வீட்டில் உள்ள பிந்துக்களின்( பரல்கள்) எண்ணிக்கையை விட 11-ஆம் வீட்டில் (லாப ஸ்தானம்) அதிக பிந்துக்கள்(பரல்கள்) இருப்பதை உறுதி. படுத்தலாம் .

Sarvashtakavarga (SAV), bindus (benefic points)

In Sarvashtakavarga (SAV), bindus (benefic points) evaluate the exact strength and potential of each zodiac house. A house with 28 or more bindus is considered strong and auspicious, while one with less than 25 bindus indicates weakness, struggle, and potential challenges in that specific area of life.Interpreting Bindu ScoresOut of a total of 337 points in the SAV grid, each house is assessed based on the following scale:> 30 Bindus: Excellent, highly favorable, and represents an area of abundant blessings and success.28 to 30 Bindus: Auspicious and capable of delivering good, balanced results.25 to 27 Bindus: Average, requiring hard work and sustained discipline.< 25 Bindus: Adverse or weak, indicating potential blocks and stress (scores under 20 denote significant weakness).Predictive ApplicationPlanetary Strength: A planet placed in its own house or exalted might still yield poor results if that house holds few bindus. Conversely, a naturally weak or debilitated planet can produce highly beneficial results if it is placed in a house with a high bindu count.Transit Results: When transiting planets move through houses with >30 bindus, they generally bring highly positive outcomes. Transits through houses with fewer than 25 bindus may yield friction and negative effects.Wealth and Prosperity: A high concentration of bindus in the 1st, 9th, 10th, and 11th houses classically indicates a highly prosperous life.If you tell me the specific number of bindus in your chart's houses, I can help interpret what your scores indicate for your wealth, career, or relationships.

கொசுக்கள் நம்மில் சிலரை மட்டும் அதிகம் கடிப்பது ஏன்?

கொசுக்கள் நம்மில் சிலரை மட்டும் அதிகம் கடிப்பது ஏன்?

ஒருவர், “ஐயோ இடைவிடாது கடிக்கும் இந்தக் கொசுக்கள் என்னைப் பாடாய்ப்படுத்துகின்றன” என்று புலம்பும்போது, அவருக்கு அருகில் இருப்பவர், “அப்படியா? என்னை எதுவும் கடிக்கவில்லையே!” என்று கூறலாம். “ஒருவேளை கொசுக்களுக்கு உன் ரத்தம் மிகவும் பிடித்துள்ளது போல” என்று அவர்கள் கேலியாகக்கூட சொல்லலாம்.

பொதுவாக, குறிப்பிட்ட ஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாகக் குறிவைக்கின்றனவா? உண்மை என்ன? இந்தக் காணொளியில் தெரிந்துகொள்வோம்.

இது உண்மையாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். கொசுக்கள் மிக அருகில், குறிப்பாக 10 மீட்டருக்கும் குறைவான தொலைவில், வரும்போது, ஒருவரது சுவாசம், தோலின் வாசனை ஆகியவற்றில் இருந்து வெளிப்படும் வேதிம சிக்னல்களின் அடிப்படையில் யாரைக் கடிக்கலாம் என்பதைத் தீர்மானிப்பதாக பிரிட்டனில் உள்ள டர்ஹாம் பல்கலைக்கழகத்தின் பொது சுகாதார பூச்சியியல் துறையின் பேராசிரியர் ஸ்டீவ் லிண்ட்சே விளக்கினார். இதுபோல சிலர் உடலில் வேதிம சிக்னல்கள் ஒரு காந்தம் போலச் செயல்பட்டு கொசுக்களைத் தன்பால் ஈர்க்கின்றன.

கொசுக்களில் பெண் மட்டுமே மனிதர்களைக் கடிக்கும். தமது முட்டைகளின் வளர்ச்சிக்குத் தேவையான புரதத்தைப் பெற, அவை நம் ரத்தத்தை உணவாகக் கொள்கின்றன. கொசுக்களால், பார்வை மற்றும் வாசனை உணர்வைப் பயன்படுத்தி, சுமார் 10 மீட்டர் தொலைவில் இருந்தே தமது இலக்கை அடையாளம் காண முடியும். நாம் வெளியேற்றும் கரிம வாயுவும் நம் தோலில் இருந்து வெளிப்படும் வாசனைகளும் அவற்றுக்கு முக்கிய சிக்னல்களாக அமைகின்றன.

குழந்தைகளைவிடப் பெரியவர்கள் அதிக கரிம வாயுவை வெளியிடுவதால், அவை பெரியவர்களை நோக்கி அதிகம் ஈர்க்கப்படுகின்றன.

கொசுக்கள் நம்மில் சிலரை மட்டும் கடிக்காமல் தவிர்ப்பது ஏன்?
கொசுக்கள் வெப்பம் மற்றும் ஈரப்பதத்தால் பெரிதும் ஈர்க்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால், கர்ப்பிணிகள் சராசரி பெண்களைவிட அதிகமான கொசுக்களை ஈர்க்கின்றனர். கர்ப்ப காலத்தில் வளர்சிதை மாற்றச் செயல்பாடுகள், சுவாச வேகம் அதிகரிப்பதால், உடல் அதிக வெப்பத்தை உருவாக்கும், அதிக அளவிலான கரிம வாயுவை வெளியேற்றும்.

உடற்பயிற்சி செய்வோரின் உடலில் இருந்து அதிக கரிம வாயு வெளியேறுவதுடன், உடல் வெப்பமடைந்து அதிக வியர்வை உற்பத்தியாகிறது. எனவே அவர்களும் கொசுக்களை அதிகம் ஈர்க்கின்றனர்.

இப்படியாக நம் உடலில் இருந்து வியர்வை, தோலின் வாசனை, சுவாசத்தில் வெளியேறும் கரிம வாயு ஆகியவற்றில் வெளிப்படும் வேதிம சிக்னல்களுக்கு கொசுக்கள் ஈர்க்கப்படுவதாகவும் அவை வேதிம சிக்னல்கள் நிறைந்த சிற்றுலகில் வாழ்வதாகவும் லிண்ட்சே கூறினார்.

அதோடு, நம் உடலில் காணப்படும் அம்மோனியா மற்றும் லாக்டிக் அமிலத்தால் கொசுக்கள் இயற்கையாகவே ஈர்க்கப்படுகின்றன. அதிக அளவில் கார்பாக்சிலிக் அமிலங்களும் இருக்கும்போது அவற்றின் ஈர்ப்பு மேலும் தீவிரமடைகிறது.

அமெரிக்காவின் ராக்ஃபெல்லர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், 64 பேரின் உடல் துர்நாற்றத்தை சேகரிக்க, அவர்களை ஆறு மணிநேரம் நைலான் உறைகளை அணியச் செய்தனர். பின்னர் அந்த துர்நாற்றம் கொசுக்கள் இடையே வெளிப்படுத்தப்பட்டது. இந்த நைலான் மாதிரிகள் 'வாசனை சேகரிக்கும் கருவிகளாக' செயல்பட்டன. இந்தச் சோதனையில், அதிக அளவு கார்பாக்சிலிக் அமிலங்களைக் கொண்ட உடல் துர்நாற்றம் வீசும் நபர்களை நோக்கி கொசுக்கள் அடிக்கடி ஈர்க்கப்பட்டது தெரிய வந்தது.

நமது தோலில் உள்ள நுண்ணுயிரிகளும் நாம் கொசுக்களை எந்த அளவுக்கு ஈர்க்கிறோம் என்பதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நெதர்லாந்தின் வாகெனிங்கன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், மலேரியாவை பரப்பும் கொசுக்களை வலுவாக ஈர்க்கும் நபர்களின் தோலில் ஒரு தனித்துவமான பாக்டீரியா தொகுதி இருப்பதைக் கண்டறிந்தனர்.

குறைவான கொசுக்களை ஈர்ப்பவர்களுடன் ஒப்பிடும்போது, இந்த நபர்களின் தோலில் அதிக பாக்டீரியா சுமை உள்ளது தெரிய வந்தது.


Friday, 10 July 2026

முதல் மூன்று விரல்களில் ரேகை பலன்


டைப்-1 உங்கள் விரல்களில் உள்ள கோடுகள் பெரும்பாலும் நேராக இருந்து, மோதிர விரல் ரேகை மட்டும் கீழிறங்கி இருந்தால், நீங்கள் மிகுந்த புத்திசாலி. கைரேகை சாஸ்திரத்தின் படி, நீங்கள் முடிவெடுக்கும் முன் ஆழ்ந்து சிந்திப்பீர்கள். எப்போதும் அவசரப்பட்டு முடிவெடுக்கமாட்டீர்கள். சூழ்நிலைகளை எப்போதும் கவனமாக ஆராய்வீர்கள். நீங்கள் எப்போதும் அமைதியாக இருக்கலாம். ஆனால் நீங்கள் பேச ஆரம்பித்தால், அந்த பேச்சு அனைவரையும் யோசிக்க வைக்கும் படியும், மிகுந்த அர்த்தமுள்ளவையாகவும் இருக்கும். எதையும் விரைவாகப் புரிந்துகொள்ளும் உங்கள் திறனையும், மற்றவர்கள் காணாதவற்றைக் கவனிக்கும் உங்கள் திறனையும் சுற்றியிருப்பவர்கள் அடிக்கடி போற்றுவார்கள்.


டைப்-2 உங்கள் விரல்களில் உள்ள கோடுகள் நேராக இருந்தால், நீங்கள் நேர்மையானவர். உண்மைக்கும் நேர்மைக்கும் மதிப்பளிப்பவர். தெளிவான தகவல் பரிமாற்றத்தை விரும்புவீர்கள். எதையும் மறைத்து பேசமாட்டீர்கள். உங்களின் நேர்மையான குணத்தால், நண்பர்கள், உடன் வேலை செய்வோர், கூட்டாளி ஆகியோர் உங்களை அதிகமாக நம்புவார்கள். மொத்தத்தில் நீங்கள் நம்பிக்கைக்குரியவராக இருப்பீர்கள்.






டைப்-3 உங்கள் விரல்களில் உள்ள கோடுகள் மேலும் கீழுமாக இருந்தால், நீங்கள் இயல்பாகவே புத்திசாலியாகவும், விரைவில் சிந்தித்து செயல்படக்கூடியவராகவும் இருப்பீர்கள். மேலும் நீங்கள் சூழ்நிலைக்கேற்ப உங்களை மாற்றிக் கொள்ளும் திறனைக் கொண்டவர். பிரச்சனைகளைத் தீர்க்க புத்திசாலித்தனமான வழிகளையும் அடிக்கடி கண்டுபிடிப்பீர்கள். அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்வீர்கள். ஒருமுறை செய்த தவறை மீண்டும் செய்யமாட்டீர்கள். உங்களின் மனம் வேகமாக செயல்படும்  




டைப்-4 உங்கள் விரல்களில் உள்ள கோடுகள் கீழ்-மேல்-கீழ் என்று இருந்தால், நீங்கள் மனவுறுதி மற்றும் வலுவான வெற்றி மனப்பான்மையை கொண்டிருப்பவர். எதையும் எளிதில் விட்டுக் கொடுக்காதவர். எவ்வளவு சவால்களை சந்தித்தாலும், தொடர்ந்து முன்னேறி செல்வீர்கள். போட்டி மனப்பான்மை கொண்டவர், உந்துதல் மிக்கவர், மேலும் உங்கள் இலக்குகளை அடைய ஊக்கமும் கொண்டவர்.



பரல்கள் 1 முதல் 10 ஆம் வீடுவரை

லக்னம் (1-ஆம் வீடு):

லக்னத்தில் அதிக பரல்கள் இருந்தால் ஜாதகர் நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள் மற்றும் ஈர்க்கும் தோற்றம் கொண்டிருப்பார்.

2-ஆம் வீடு:

இதில் அதிக பரல்கள் இருந்தால் தனவரவு, நல்ல குடும்பம், மற்றும் இனிய வாக்கு வன்மை உண்டாகும்.

4-ஆம் வீடு:

அதிக பரல்கள் தாய், பூமி, வீடு, வாகனம், மற்றும் மன அமைதி ஆகியவற்றின் சேர்க்கையைத் தரும்.

5-ஆம் வீடு:

புத்தி கூர்மை, குழந்தைகள் மூலம் பெருமை மற்றும் சிறந்த கல்வியைக் குறிக்கும்.

7-ஆம் வீடு:

லக்னத்தை விட 7-ல் பரல்கள் அதிகமாகவோ அல்லது சமமாகவோ இருந்தால், சிறப்பான மண வாழ்க்கை மற்றும் மனைவி வழி ஆதாயம் கிடைக்கும்.

9 & 10-ஆம் வீடு:

இதில் அதிக பரல்கள் இருந்தால் தொழில், வியாபாரம், மற்றும் தந்தை வழி செல்வங்கள் சிறக்கும்

ஆயுள் பலம்: லக்னத்தில் உள்ள பரல்களை விட 8-ஆம் வீட்டில் உள்ள பரல்கள் குறைவாக இருந்தால் தீர்க்க ஆயுள்.போட்டி, பொறாமை:

லக்னத்து பரல்களை விட 6-ஆம் வீட்டில் உள்ள பரல்கள் குறைவாக இருந்தால் எதிரிகள் தொல்லை இருக்காது.

வாழ்க்கை முறை:

ஒருவர் தன் வாழ்நாளில் எந்தக் காலகட்டத்தில் அதிக ஏற்றம் பெறுவார் என்பதை சர்வ அஷ்டவர்க்க பலன்கள் துல்லியமாக உணர்த்துகின்றன.


Monday, 6 July 2026

ஆதிக்கம் மிக்க கரன்சியாக அமெரிக்க டாலர் உருவெடுத்தது எப்படி?



ஆதிக்கம் மிக்க கரன்சியாக அமெரிக்க டாலர் உருவெடுத்தது எப்படி? - ஒரு தெளிவுப் பார்வை
ஆதிக்கம் மிக்க கரன்சியாக அமெரிக்க டாலர் உருவெடுத்தது எப்படி? - ஒரு தெளிவுப் பார்வை

அமெரிக்கா தனது 250-வது சுதந்திர தினத்தை ஜூலை 4-ம் தேதி உற்சாகமாகக் கொண்டாடியது. உலகின் பெரும்பகுதி நாடுகளால் ஏற்கப்பட்ட கரன்சியாக அமெரிக்க டாலர் மாறியிருக்கிறது. அமெரிக்க டாலருக்கு கிடைத்திருக்கும், இந்த அங்கீகாரம், அந்நாட்டின் அரசியல் பரிணாம வளர்ச்சியை மட்டுமல்லாமல் அசாதாரண பொருளாதார ஆதிக்கத்தையும் பிரதிபலிக்கிறது.

அமெரிக்க டாலர் என்பது அந்நாட்டின் தேசிய நாணயம் என்பதை விட வேறு பல முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. உலக நாடுகளின் மத்திய வங்கிகளால், இருப்பு வைக்கப்படும் கரன்சியாக டாலர் மாறிவிட்டது. ஒரு நாட்டுக்கும், மற்றொரு நாட்டுக்கும் இடையே எல்லை கடந்த வர்த்தகம் பெரும்பாலும் டாலரில் நடத்தப்படுகிறது, உலக நாடுகளுக்கு இடையே நடக்கும் வர்த்தகத்துக்கும் டாலர் ஆதாரமாக இருக்கிறது.

அமெரிக்காவில் காலணி ஆதிக்கம் முடிந்து சுதந்திரம் அடைந்தபின் 1792-ம் ஆண்டு நாணயச் சட்டம் இயற்றப்பட்டு, அமெரிக்க டாலர் அதிகாரபூர்வ கரன்சியாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்தச் சட்டம் இயற்றப்பட்டு சில பத்தாண்டுகள் வரை அமெரிக்க டாலர் என்பது அதன் எல்லைக்கு அப்பால் செல்லாமல், செல்வாக்கு பெறாமல்தான் இருந்தது.

அந்தக் காலகட்டத்தில் இப்போது டாலர் இருப்பதைப் போல உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கரன்சியாக பிரிட்டனின் பவுண்ட் ஸ்டெர்லிங் இருந்தது. இது பிரிட்டனின் ஏகாதிபத்தியத்தையும், வர்த்தகத்தின் சக்தியையும் வெளிப்படுத்தியது.

திருப்புமுனை மாற்றம்

முதலாம் உலகப் போரின்போது 1914 மற்றும் 1918-ம் ஆண்டுகளுக்கு இடையே ஐரோப்பிய நாடுகள் உணவு, தொழிற் துறை பொருட்கள், ராணுவத் தளவாடங்கள், மூலப்பொருட்களை அமெரிக்காவிடம் வாங்கத் தொடங்கின. இதுதான் அமெரிக்கா வளர்வதற்கு முதல் காரணமாக அமைந்தது.


பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் அதிகமாக கொள்முதல் செய்ததால் மெதுவாக ஐரோப்பாவின் தங்கம் கையிருப்பு குறைந்தது. உலக நாடுகளுக்கு கடன் கொடுக்கும் லேவாதேவியாக இருந்த பிரிட்டனின் ஆதிக்கம் பலவீனமடைந்தது. உலகளாவிய நிதி மையத்தின் சமநிலை என்பது கொஞ்சம் கொஞ்சமாக அட்லாண்டிக் வரை பரவியது.

பிரிட்டன் தொடர்ந்து உலக நாடுகளுக்கு கடன் கொடுக்கும் தேசமாக இருந்தாலும், முதல் உலகப் போருக்குப் பின் அமெரிக்காவின் வளர்ச்சி அசுரத்தனமாக இருந்து, உலக நாடுகளுக்கு தேவையான அளவு கடன் கொடுக்கும் நாடாக வளர்ந்தது. இந்த மாற்றம் 2-ம் உலகப் போருக்குப் பிந்தைய உலகளாவிய நிதி கட்டமைப்பின் மறுசீரமைப்புக்கு அடித்தளமிட்டது.

பிரெட்டன் உட்ஸ் மாநாடு ஏன் நடந்தது?

அமெரிக்காவின் நியூ ஹெமிஸ்பயர் மாகாணத்தில் உள்ள பிரெட்டன் உட்ஸ் நகரில் உள்ள மவுன்ட் வாஷிங்டன் ஹோட்டலில் 1944-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி இந்த பிரெட்டன் உட்ஸ் (Bretton Woods Conference) மாநாடு நடந்தது. இதற்கு அமெரிக்க நிதி மற்றும் பணவியல் மாநாடு என்ற பெயரும் உண்டு. இந்த மாநாட்டில் 44 சார்பு நாடுகளும், அதன் 700 பிரிதிநிதிகளும் பங்கேற்றனர்.

2-ம் உலகப் போர் முடிந்திருந்த நிலையில், சர்வதேச நிதிச் சூழலை வலுவாகக் கட்டமைக்கவும், புதிய நிதிக் கட்டமைப்பை உருவாக்கவும் இந்த மாநாடு நடந்தது. உலக தங்க இருப்பில் மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்க வைத்திருந்ததால், இந்த மாநாட்டில் அமெரிக்காவின் கை ஓங்கி, வலுவான முடிவுகளை எடுத்தது. 2-ம் உலகப் போரில் ஐரோப்பிய நாடுகள், ஆசிய நாடுகள் பெரும் சேதத்தை எதிர்கொண்டிருந்ததால், அமெரிக்காவின் வார்த்தைகளும், முடிவுகளும்தான் மேலோங்கி இருந்தது.

மாநாட்டில் பங்கேற்ற ஒவ்வொரு நாடும் தங்கள் தேசத்துக்கு கரன்சியை தங்கத்துடன் நேரடித் தொடர்பு வைக்க வேண்டும் என்ற கட்டாயத்தை நீக்கி, தங்கள் கரன்சியை அமெரிக்க டாலருடன் இணைக்க ஒப்புக்கொண்டன. அந்த நாடுகள் வைத்திருக்கும் ஒரு அவுன்ஸ் தங்கத்துக்கு 35 டாலர் நிலையான விலையில் தருவதாக அமெரிக்கா உறுதியளித்தது.


இந்த வசதி சர்வதேச நிதிச் சூழலை மறுக்கட்டமைப்பு செய்து, உலக பணவியல் முறையில் ‘டாலர்’ என்பது மையமாக மாறத் தொடங்கியது, சர்வதேச அளவில் தங்கத்துக்கு மாற்றாக டாலர் என்பது ‘லிக்விட் கரன்சி’யாக ஏற்கப்பட்டது.

சர்வதேச அளவில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்துக்கு அடித்தளமிட்டது இந்த பிரெட்டன் உட்ஸ் மாநாடுதான். இந்த மாநாடு நடந்து முடிந்து 80 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் இதன் தாக்கம் எதிரொலித்து வருகிறது.

நிக்ஸன் முடிவால் என்ன நடந்தது?

1971-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி அமெரிக்காவின் அதிபராக இருந்த ரிச்சார்ட் நிக்ஸன் தொடர்ந்து பல்வேறு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதுதான் ‘நிக்ஸன் ஷாக்’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.

டாலரை நேரடியாக தங்கமாக மாற்றும் திட்டத்தை அதிபர் நிக்ஸன் திடீரென தடை செய்து இன்று வரை நடைமுறையில் இருக்கும் ரிசர்வ் வங்கி கரன்சி வெளியிடும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

‘பெட்ரோடாலர்’ முறை

1974-ம் ஆண்டு சவுதி அரேபியாவுடன் அமெரிக்கா செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, கச்சா எண்ணெய் கொள்முதலுக்கு அமெரிக்க டாலரிலேயே வர்த்தகம் செய்யவும் ஒப்பந்தம் கையொப்பமானது. இந்த ஏற்பாடுதான் ‘பெட்ரோடாலர்’ முறை என அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய தங்கத்தை சார்ந்திருப்பதற்கும், அதில் வர்த்தகம் நடப்பதற்குப் பதிலாக, டாலரில் வர்த்தகம் செய்யப்பட்டது. இதன்மூலம் டாலர் சர்வதேச அளவில் முக்கியத்துவத்தை வளர்த்துக் கொண்டது.



அமெரிக்க டாலரை முன்னிலையில் வைத்திருப்பது எது?

பிரெட்டன் உட்ஸ் மாநாடு, நிக்ஸன் ஷாக் முடிவுகளுக்குப் பின் அமெரிக்க டாலரை பல தசாப்தங்களாக வலுவாக வைத்திருக்க பல கட்டமைப்பு சார்ந்த விஷயங்கள் உதவுகின்றன. அவை:

முதலாவதாக, முதல் உலகப் போருக்குப் பின் உருவாக்கப்பட்ட பணவியல் கட்டமைப்பு முக்கியக் காரணமாகும். 1971-ம் ஆண்டு பிரெட்டன் உட்ஸ் மாநாட்டுக்குப் பின், நிலையான நாணய மாற்று விகிதம் மறைந்துவிட்டது. ஆனால் , அதில் எடுக்கப்பட்ட பல முடிவுகள், உலக நாடுகள் தங்கள் பரிவர்த்தனைக்கு டாலரை சார்ந்திருக்குமாறு செய்ய ஊக்கம் அளிக்கப்பட்டது.

இரண்டாவதாக, ‘பெட்ரோடாலர்’ சிஸ்டம் ஆகும். இது டாலருக்கான தேவையை செயற்கையாக அதிகரிக்கச் செய்தது. கச்சா எண்ணெய் வியாபாரம் டாலரில் நடந்ததால், எரிபொருள் சந்தையில் டாலருக்கான தேவை அதிகரித்தது.

மூன்றாவதாக இன்றுள்ள நிதி அமைப்பாகும். அமெரிக்க முதலீட்டுச் சந்தை பரந்த, ஆழ்ந்ததாக இருப்பதால், ஒவ்வொரு நாட்டு மத்திய வங்கியும், முதலீட்டாளர்களும் எந்த சொத்தை தங்கள் வசம் வைத்திருக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் பணப்புழக்கம் (லிக்குடிட்டி) முக்கியக் காரணமாகும். தங்கள் முதலீட்டை பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்ய அமெரிக்க சந்தை சரியான தேர்வாக இருக்கிறது.

நான்காவதாக, உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களின் கையிருப்பில் அந்நியச் செலாவணியாக 60 சதவீதம் டாலரைத்தான் இருப்பாக வைத்துள்ளன. இது டாலருக்கான முக்கியத்துவத்தை அதிகரித்து வலுப்பெறச் செய்துள்ளது.

by TaboolaSponsored Links

அமெரிக்க சட்டங்கள் மீதான நம்பகத்தன்மை, வலுவான அரசியல் அமைப்புகள் மற்றும் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி சுதந்திரமாக திருத்திக்கொள்ளும் வசதி காரணமாகவே உலகளாவிய நிதி அமைப்புகள் சீராகச் செயல்படுகின்றன.

மகுடத்தை இனி தக்க வைக்குமா டாலர்?

அமெரிக்க டாலர் ஆதிக்கத்தைக் குறைக்க ‘வரும் ஆண்டுகளில் டாலர் பயன்பாட்டைக் குறைத்தல்’ என்ற குரல் எழுப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக பிரிக்ஸ் நாடுகள் தங்களுக்குள் தங்கள் நாட்டு கரன்சியால் வர்த்தகம் செய்வது குறித்து ஆலோசிக்கின்றன.

பெரிய அளவில் இல்லாவிட்டாலும் கூட, அமெரிக்க டாலரின் வலிமை முன்பு இருந்ததைவிட சற்று குறைந்துள்ளது. 2000-ம் ஆண்டில் உலக நாடுகள் தங்கள் அந்நியச் செலாவணி கையிருப்பில் டாலரின் பங்கு 70% இருந்த நிலையில், தற்போது, 58 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. அதற்காக உலகளவில் டாலரின் தாக்கம் குறைந்துவிட்டது என்று கருத முடியாது.

உலக நாடுகள் கையிருப்பில் டாலர் வைத்திருப்பது, டாலரில் கடன் பெறுவது, டாலரில் வர்த்தகம் நடைபெறுவது போன்ற முறைகள் இருக்கும் வரை டாலரின் தாக்கம் இருக்கும்.

அனைத்து நாடுகளாலும் ஏற்கப்பட்ட கரன்சியாக டாலர் மாறியிருப்பதும், நம்பகத்தன்மையான, வலிமையான கரன்சியாக டாலர் இருப்பதாலும், கச்சா எண்ணெய் வர்த்தகம் முழுமையாக டாலரில் நடப்பதாலும் டாலரின் மகுடம் இன்னும் பல தசாப்தங்களுக்கு இறங்க வாய்ப்பில்லை.


Thursday, 2 July 2026

பரல்கள் மூலம் இளமை, நடு முதுமை பருவம் பற்றி அறிந்து கொள்ள உதவும்



ஒரு ராசியில் 25 முதல் 30 பரல்கள் இருந்து அந்த ராசியில் எந்த கிரகம் கோச்சார ரீதியாக சஞ்சரித்தாலும் நற்பலனையே கொடுக்கும்.

ஒரு ராசியில் 25க்கு குறைவாக பரல்கள் இருந்து, அந்த ராசியில் எந்த கிரகம் கோட்சார ரீதியாக சஞ்சரித்தாலும் தீயபலனையே கொடுக்கும்.

அதனால் லக்கினத்தில் இருந்து அடுத்தடுத்துள்ள பன்னிரெண்டு வீடுகளுக்கும் பரல்களின் குறைந்த அளவு எண்ணிக்கை எவ்வளவு இருக்க வேண்டும் என்று நமது முனிவர்கள் குறித்து வைத்துவிட்டுப்போயிருக்கிறார்கள். அதைக் கீழே கொடுத்துள்ளேன்.

1. லக்கினம் 25

2ஆம் வீடு - 22

3ஆம் வீடு 29

4ஆம் வீடு 24

5ஆம் வீடு 25

6ஆம் வீடு 34

7ஆம் வீடு 19

8ஆம் வீடு 24

9ஆம் வீடு 29

10ஆம் வீடு 36

11ஆம் வீடு 54

12ஆம் வீடு 16

விளக்கம்: லக்கினத்தில் 25 பரல்கள் இருந்தால் போதும். வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கும் 2ஆம் வீட்டில் 22 பரல்கள் இருந்தாலே குடும்ப வாழ்க்கை அமையும்.

4ஆம் வீட்டில் 24 இருந்தாலே போதும் கல்வி கிடைக்கும். 28 பரல்கள் இல்லாமல் போய்விட்டதே என்று மனம் நொடிந்து போகாமல் இருப்பதற்காக, ஆராய்ந்து இதை அவர்கள் கொடுத்திருக்கிறார்கள்.

10ஆம் வீட்டில் 36 பால்கள் என்பது

10ஆம் வீட்டில் 36 பரல்கள் என்பது பெரும்பாலோர்களுக்குச் சாத்தியமில்லை!

அப்படியிருந்தால் நினைத்தபடி, தகுதியான, உயர்வான வேலை அமையும்.

எல்லோருக்கும் எப்படியிருக்கும்? ஆகவே அதை வைத்து ஸீரியசாகி விடாதீர்கள் அங்கே 30 பரல்கள் இருந்தாலே போதும்.

அதே கதைதான் 11ஆம் வீட்டிற்கும்.

அங்கேயும் 30 பரல்கள் இருந்தாலே போதும்

உங்களுக்கு இந்தக் குறைந்த அளவு பரல்கள் இருக்கிறதா என்று பாருங்கள்.

இருந்தால் போதும் சந்தோஷமாக இருங்கள்!

வாழ்க்கையை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்

இளமை, நடு வயது, முதுமை

இந்த மூன்று பிரிவில் எந்தப் பகுதி நமக்கு நன்றாக இருக்கும் என்று தெரிந்து கொள்ள முடியுமா?
முடியும்!

உதாரணமாக மீன லக்கினம் எனில்

1. மீனம், மேஷம், ரிஷபம், மிதுனம் -இந்த நான்கு ராசிகளின் கூட்டல் தொகை இளமைப் பருவம்

2.கடகம், சிம்மம், கன்னி, துலாம் -ஆகிய இந்த ராசிகளின் கூட்டல் தொகை நடு வயதுக் காலம்.

3.விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் -ஆகிய இந்த ராசிகளின் கூட்டல் தொகை

இதில் எந்தப் பருவத்தில் கூட்டல்தொகை அதிகமாக உள்ளதோ அந்தப் பருவம் தான் உங்கள் வாழ்வில் சிறப்பானதாக இருக்கும்

மூன்றில் குறைவானதாக இருக்கும் காலகட்டம் சிரமங்கள் மிகுந்ததாக இருக்கும்

பதவி, பணம், புகழ், மகிழ்ச்சி எல்லாம் உண்டா என்பதற்கு 10ம் வீட்டைவிட 11ஆம் வீட்டில் அதிகப் பரல்கள் இருக்க வேண்டும். ஆனால் 11ஆம் வீட்டை விட 12ஆம் வீட்டில் குறைந்த பரல்கள் இருக்க வேண்டும்.

ஒருவேளை 12ஆம் வீட்டில் 11ஆம் வீட்டைவிட அதிகப் பரல்கள் இருந்தால் கிடைத்தும் பயனில்லை -ஊற்றிக்கொண்டுவிடும்

10th house >11th house <12th house! = நல்லது!

10th house > 11th house >12th house = நல்லதல்ல

லக்கினத்தில் 30 பரல்கள் இருந்து, លក់ 4th or 10th or 11th அதிபதி உடன் சேர்ந்து இருந்தால் ஜாதகன் கலங்கரை விளக்கு போல (Light House) அனைவருக்கும் உதவியாக இருப்பான்.

கேந்திர ஸ்தானங்களில் தீய கிரகங்கள் இருந்து 9,10, 11ஆம் வீடுகளில் 21 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால் நன்மையல்ல! விதி அந்த ஜாதகனைத் திருவோட்டோடு தெருவில் நிறுத்திவிடும்.

லக்கினம், 9, 10, 11 ஆகிய நான்கு வீடுகளிலுமே 30 அல்லது அதற்கு மேற்பட்ட
பரல்கள் இருந்தால், அந்த ஜாதகனுக்கு உயர்ந்த சௌகரியமான வாழ்க்கை அமையும். (Luxurious life) அது அவன் காலம் முடியும்வரை தொடர்ந்து இருக்கும்!

லக்னத்திற்கு 8ஆம் வீட்டில் உள்ள பரல்களை விட லக்னத்தில் உள்ள பரல்கள் அதிகமாக இருந்தால் ஜாதகருக்கு தீர்க்க ஆயுள். லக்னத்திற்கு 8ஆம் வீட்டில் உள்ள பரல்களும் 8ஆம் வீட்டில் உள்ள பரல்களும் சரிசமாக இருந்தால் ஜாதகருக்கு மத்திம ஆயுள். லக்னத்திற்கு 8ஆம் வீட்டில் உள்ள பரல்களை விட லக்னத்தில் உள்ள பரல்கள் குறைவாக இருந்தால் ஜாதகருக்கு அற்ப ஆயுள்.

அதிகபட்ச பரல்கள் பதினோன்றாம் வீட்டில் அல்லது பதினோன்றாம் வீட்டு அதிபதி வ இருக்கும் வீட்டில்
இருந்தால் ஜாதகன் விருப்பங்கள் நிறைவேறும்






Wednesday, 1 July 2026

சுப /அசுப விரயங்களா என்பதையும் அறிய பரல்கள்

மேலும் ராசிச் சக்கரத்தில் சர்வாஷ்டக பரல்கள் மொத்தமாக 12 ராசிகளுக்கும் 337 என்று கொடுக்கப்பட்டுள்ளது.


லக்னத்திலிருந்து கேந்திர மற்றும் திரிகோண வீடுகளின் ( 1, 5, 9, 4, 7, 10) மொத்தப் பரல்கள் குறைந்தது 168 என்று இருக்க வேண்டும்; அதாவது 12 ராசிகளின் கூட்டுத் தொகையான 337 ஐ , 2 ஆல் வகுப்பதால் கிடைப்பது.

அதேபோல் மறைவு ஸ்தானங்களின்( 3,6,8,12) மொத்த மதிப்பு 112 - ஐ தாண்டக்கூடாது. அதாவது 12 ராசிகளின் கூட்டுத் தொகையான 337 ஐ,மூன்றால் வகுத்தால் கிடைப்பது.


மேற்கூறிய சுப, அசுப வீடுகளின் பரல்களைக் கருத்திற்கொண்டு,பூர்வீக இடத்தில் வசிப்பதா,மாற்றுவதா, விற்பனை செய்வதா என்பதையும்;செய்தொழிலில் ஏற்பட்டுள்ள முடக்கம் தீருமா?தீராதா ?வேறு தொழில் செய்யலாமா ?

மேலும் வேலைக்கு செல்லலாமா என்பதையும், வாழ்க்கையில் ஏற்படும் விரயங்கள் சுப /அசுப விரயங்களா என்பதையும் அறிய முடியும்.

பரல்கள் #######



சர்வாஷ்டகவர்க்கப் பரல்கள் என்றால், ஏழு கிரகங்களின் சுயவர்க்கப் பரல்களையும் கூட்டி ஒவ்வொரு ராசிக்கும் கிடைக்கும்.

அப்படிக் கூட்டிவந்த தொகையை ராசிகளில் எழுதி அதை மொத்தமாக கூட்டினால் கிடைப்பதுதான் அந்த 337 என்னும் மந்திர எண்ணாகும்

அந்த எண் உலகில் உள்ள அனைவருக்கும் ஒன்று போல இருக்கும். எவருக்கும் அதை விட ஒரு பரல் கூடவோ அல்லது குறையவோ வராது.

பாரதப் பிரதமருக்கும் அதே 337தான். உங்களுக்கும் 337தான்
தொழிலதிபர் அதே 337தான். உங்களுக்கும் 337தான்
அழகான பெண்ணான அதே 337தான். உங்களுக்கும் 337தான்
கைவண்டி இழுத்துப் பிழைப்பை நடத்தும் அதே 337தான். மூர்த்திக்கும் அதே
337தான்



சரவாஷ்டக வர்க்கப் பலன்கள்

மொத்தப் பலன்கள் 337. ராசிகள் 12 வகுத்தால் சராசரியாக ஒரு ராசிக்கு 28 பரல்கள் வரும்.

ஒரு வீட்டில் (அதாவது ஒரு ராசியில்) சராசரிக்கும் குறைவான பரல்கள் இருந்தால், அந்த வீடு வலிமையாக, சிறப்பாக இல்லை என்ற பொருள்.

1. ஒரு வீட்டில் 25 அல்லது அதற்கு குறைவான பரல்கள் இருந்தால், அந்த வீட்டில் ஜாதகனுக்குப் பெரிய (நல்ல) பலன்கள் இருக்காது.

2. ஒரு வீட்டில் 30 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால், அந்த வீட்டில் ஜாதகனுக்கு மிகவும் நன்மையான பலன்கள் உண்டாகும்.

3. ஜாதகன் ஒரு வீட்டின் முழுப் பலனையும் அடைய விலை
30% அதற்கு மேலான பரல்களும் இருக்க வேண்டும்.

4. கிரகங்கள் ஜாதகத்தில் உச்சமாக இருந்தாலும் அல்லது கேந்திர,
திரிகோண வீடுகளில் இருந்தாலும், அல்லது சொந்த வீட்டில்
இருந்தாலும் அந்த வீட்டில் சராசரிக்கும் குறைவான பரல்கள்
இருந்தால், அந்தக் கிரகங்கள் முழுமையாகச் செயல்படாது.

5. கிரகங்கள் ஜாதகத்தில் எதிரி நீசமடைந்திருந்தாலும் அல்லது வீட்டில் குடியிருந்தாலும் அல்லது 6ஆம் வீடு, 8ஆம் வீடு அல்லது 12ஆம் வீடு
போன்ற தீய ஸ்தானங்களில் அமர்ந்திருந்தாலும் அந்த வீட்டில்
சராசரிக்கும் அதிகமான பரல்கள் இருந்தால் அவைகள் முழுமையாகச் செயல்படும் ஜாதகனுக்கு நன்மைகள் செய்வார்கள்!.

6. லக்கினத்தில் 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருக்கக்கூடாது. இருந்தால் ஜாதகன் கஷ்டப்படப் பிறந்தவன். வாழ்க்கைப் போராட்டங்கள்
நிறைந்ததாக இருக்கும்

7. ஏழாம் வீட்டில், அதாவது களத்திர ஸ்தானத்தில் 20 பரல்கள் அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருக்கக்கூடாது. இருந்தால் ஜாதகனுக்கு
உரிய வயதில் திருமணம் ஆகாது. திருமணம் அநியாயத்திற்குத்
தாமதமாகும். சற்று தாமதமாகத் திருமணம் நடந்தாலும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியைத் தராது.

8. ஏழாம் வீட்டில் 30 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால், ஜாதகனுக்கு உரிய வயதில் திருமணம் ஆகும். திருமண வாழ்க்கை
மகிழ்ச்சி நிரம்பியதாக இருக்கும்.

9. லக்கினத்தில் இருப்பதைவிட ஏழாம் வீட்டில் அதிகப் பரல்கள்
இருந்தால், ஜாதகனுக்கு, அவன் தகுதியைவிட, அதாவது
அவனைவிட மேலான தகுதியை உடைய பெண் மனைவியாக
அமைவாள். பெண்ணாக இருந்தால், மேலான தகுதியை உடைய
கணவன் அமைவான்.

10. மாறாக லக்கினத்தைவிட ஏழாம் வீட்டில் பரல்கள் குறைவாக
இருந்தால், ஜாதகனின் நினைப்பைவிட, விருப்பத்தைவிட,
தகுதியைவிட (நிலை) குறைவான அமைப்பை உடைய பெண்ணே மனைவியாக அமைவாள். அல்லது கணவன் அமைவான்.

11. பத்தாம் வீட்டில் 32 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால், ஜாதகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். அல்லது நல்ல தொழில் அமையும்

12. பத்தாம் வீட்டில் சராசரிக்கும் குறைவான பரல்கள் இருந்தால்
எடுத்தவுடன் நல்ல வேலை அமைவது சிரமம். கிடைக்கும் வேலையில் சேர்ந்து கொள்ள வேண்டியதுதான். ஜாதகத்தில் உள்ள
லக்கினாதிபதி அல்லது பத்தாம் அதிபதி அல்லது கிராமகாரகன் சனியின் மேன்மையைப் பொருத்து அவர்களுடைய தசா புத்திக் காலங்களில்
நல்ல வேலை கிடைக்கும்.

13. பத்தாம் வீட்டில் 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால், கிடைக்கின்ற வேலையில் அது எப்படி இருந்தாலும், மனதைத் தேற்றிக்
கொண்டு பணியாற்ற வேண்டியதுதான். ஜாதகப்படி நல்ல காலம்
வரும்போது நிலைமை மாறும் என்று நம்பிக்கையோடு இருக்க வேண்டியதுதான்.

14. House of finance இரண்டாம் வீட்டில் 25 குறைவான பரல்கள் இருந்தால் எப்போதும் பணப் பிரச்சினை இருக்கும். வரவிற்கு
மேல் செலவாகும். சுருக்கமாகச் சொன்னால் கையில் காசு தாங்காது. ஓட்டைக்கை என்று சொல்லுவார்கள்.

15. நான்காம் வீட்டில் 25 அல்லது அதற்குக் குறைவாக இருந்தால் நிறைய வசதிகள், ஆடம்பரங்கள் எல்லாம் இருக்காது. அதாவது சொத்து
சுகம் எல்லாம் இருக்காது. பிறகு ஜாதகத்தில் லக்கினாதிபதி, சுக்கிரன், செவ்வாய் ஆக்கிய கிரகங்களின் வலிமையைப் பொறுத்து,
அவர்களுடைய தசாபுத்திகளில் சொத்து, சுகங்கள் கிடைக்கும்.
(சுகம் என்றால் என்னவென்று தெரியுமல்லவா? வண்டி, வாகனங்கள், ஸ்பிளிட் ஏர் கண்டிஷனர் போன்றவை)

16. பாக்கிய ஸ்தானத்தில் (அதாவது ஒன்பதாம் வீட்டில்) சராசரி
அல்லது அதற்கு அதிகமான பரல்கள் இருந்தால்தான் பூர்வீகச்
சொத்துக்கள் இருக்கும். அல்லது கிடைக்கும்

.19. ஆறாம் வீட்டில் 32      பரல்கள்    அல்லது அதற்கு மேலான பரல்கள் இருந்தால், வாழ்க்கையில், நோய், கடன், எதிரி, போன்ற பிரச்சினைகள் இல்லாமல் இருக்கலாம்

20. எட்டாம் வீட்டில் 25 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால், வாழ்க்கையில் பெரும் கஷ்டங்கள் வராது. பெரிய பிரச்சினைகள் வராது .

பரல்கள்

ஜோதிடத்தில் 'பரல்கள்' (Points) என்பது ஒரு ஜாதகரின் அஷ்டவர்க்க (Ashtavarga) கணிதத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ராசியும் அல்லது கிரகமும் பெறும் நற்பலன்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். இதன் மூலம் ஒருவரின் ஆயுள், செல்வம், தொழில் மற்றும் ஆரோக்கியம் போன்ற பலன்களைத் துல்லியமாக அறியலாம்.பரல்களின் பொதுவான பலன்கள்:சராசரி பரல்கள்: ஒரு ஜாதகத்தில் 12 ராசிகளுக்கு மொத்தமாக 337 பரல்கள் உள்ளன. ஒரு ராசிக்கு சராசரியாக 28 பரல்கள் இருக்க வேண்டும்.குறைந்த பரல்கள்: ஒரு வீட்டில் 25 அல்லது அதற்கும் குறைவாக இருந்தால், அந்த வீட்டால் ஜாதகருக்கு பெரிய அளவில் நல்ல பலன்கள் கிடைக்காது.அதிக பரல்கள்: ஒரு வீட்டில் 30 அல்லது அதற்கு மேல் பரல்கள் இருந்தால், அந்த வீட்டில் உள்ள காரகத்துவங்களால் ஜாதகருக்கு மிகவும் நன்மையான பலன்கள் உண்டாகும்.முக்கியமான சில பரல்களின் பலன்கள்:லக்னம் (1-ஆம் வீடு): லக்னத்தில் அதிக பரல்கள் இருந்தால், ஜாதகர் மிகுந்த ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் இருப்பார்.தனம் மற்றும் குடும்பம் (2-ஆம் வீடு): இங்கு அதிக பரல்கள் இருப்பது நிலையான செல்வம், நல்ல வருமானம் மற்றும் நன்மதிப்பைக் கொடுக்கும்.திருமண வாழ்க்கை (7-ஆம் வீடு): 7-ஆம் வீட்டில் பரல்கள் சீராக இருந்தால் திருமண வாழ்க்கை சிறப்பாகவும், மனைவி வழியில் ஆதாயமும் கிடைக்கும்.வரவு - செலவு: லக்னத்திற்கு 1, 2, 4, 9, 10, 11 ஆகிய இடங்களில் உள்ள பரல்களின் கூட்டுத்தொகை 164-க்கு மேல் இருந்தால், செலவை விட வரவு அதிகமாக இருக்கும்.

#. பரல்கள் பலன் #


1 ல் பரல்
லக்ன பாவகத்தில் பரல்கள் 1,5,9 க்கு இணையாக இருக்க வேண்டும்.6,8,12 க்கு குறையக்கூடாது.மேற்படி இருந்தால்தான் லக்னம் பலம் பெற்றுள்ளதாக அர்த்தம்.

2 ல் பரல் குறைந்தால் தனவிருத்தி இல்லை.குடும்ப நிர்வாகம் சுமூகமாக இருக்காது.2 ம் பாவக காரகத்தை ஜாதகர் தடையின்றி அனுபவிக்க இயலாது. 4,7 பாவகத்துக்கு இணையாக இருக்க வேண்டும்.20க்கு குறைந்தால் குடும்பம் அமைய தடை ஏற்படும்.20 முதல் 25க்குள் இருந்தால் தாமதமாகி குடும்பம் அமையும். அதிலும் பிரச்சனைகளை கொடுக்கும்.25க்கு மேல் இருப்பது சிறப்பு

3 ல் பரல் அதிகமானால் இளைய சகோதர ஆதரவு இருக்கும்.
விடாமுயற்சி இருக்கும்.எந்தச் செயலையும் வீரியத்துடன் செய்வார்.அவ்வப்போது மூர்க்கத்தனமான எண்ணங்களையும் கொடுக்கும். பரல் 20 க்கும் குறைந்தால் சோம்பேறித்தனத்தை உண்டாக்கும். தைரியம் குறையும்.எதையும் முடிவெடுக்கும் ஆற்றல் குறையும். எந்த ஊரு காரியத்தையும் முழுமையாக செய்து முடிக்க சிரமப்படுவார்

4 ல் பரல் லக்கினத்திற்கு இணையாக இருக்க வேண்டும்.2,7 பாவகத்திற்க்கு குறையக்கூடாது.20 க்கும் குறைந்தால் வீடு மனை அமைய தடையை ஏற்படுத்தும்.உயர் கல்வியில் தடையை ஏற்படுத்தும். தாய் வழி ஆதாயம் அனுபவிப்பதில் தடையை ஏற்படுத்தும்.மனதில் தேவையற்ற பயம் கவலைகள் இருந்து கொண்டே இருக்கும். மேன்மையான வாழ்க்கை வாழ முடியாது .

5 ல் பரல்கள் 20 க்கும் குறைந்தால் புத்திர மேன்மையை குறைக்கும்.6 ம் பாவகத்தை விட குறைந்தால் கடன் நோய் போன்ற துன்பங்களை கொடுக்கும். 6 க்கு இணையாகவும் இருக்கக் கூடாது.5 ல் பரல்கள் குறைந்தால் போராட்டமான வாழ்க்கையை கொடுக்கும். எதையும் எதிர்கொள்ளும் தைரியத்தை குறைக்கும். குலதெய்வ அனுக்கிரகத்தை குறைக்கும். லக்னத்திற்கு இணையாக இருப்பது நல்லது நண்பர்களே.

6 ல் பரல்கள் லக்னத்திற்கு அதிகமானால் கடன் நோய் பிரச்சனைகளை கொடுக்கும். 4க்கு அதிகமானால் உடல் ஆரோக்கியத்தில் சுகமின்மையை கொடுக்கும்.20 க்கும் குறைந்தால் பிறவியிலேயே ஏதோ ஒரு நோய் இருக்கும். 20 முதல் 25 க்குள் இருப்பதுதான் நன்று.40 க்கும் மேல் பரல்கள் இருந்தால் கடன் நோய் வழக்குகள் ஏதேனும் ஒன்று இறுதி வரை கூடவே இருக்கும்


7 ல் பரல்கள் 2,4 க்கு இணையாக இருக்க வேண்டும்.7 ஐ விட 8 ல் பரல்கள் அதிகமானால் மணவாழ்க்கையில் பிரச்சனைகளைக் கொடுக்கும்.7 ல் பரல்கள் லக்னத்திற்கு இணையாகவோ அதிகமாகவோ இருந்தால் மனைவி வழி ஆதாயம் உண்டு.திருமணத்திற்கு பின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.7 ல் பரல்கள் அதிகமாகும் போது காம வேட்கையை கொடுக்கும்.
மனைவியின் ஜாதகத்தில் இணையாக இருந்தால் சமன்படும். 20 க்கு குறைந்தால் திருமணம் அமைய தடையை ஏற்படுத்தும்.

20க்கு குறையாமல் 30 க்கு அதிகமாகாமல் இருப்பது நல்லது.

கணவனின் பரலை விட மனைவியின் பரல் அதிகமானால் மனைவிக்கு அடங்கிப் போக நேரிடும்

8 ல் பரல்கள் 20 முதல் 25 க்குள் இருப்பதுதான் சிறப்பு.லக்ன பரலை விட அதிகமாக கூடாது. 25 க்கும் அதிகமானால் ஆயுள் தீர்க்கம். ஆனால் பிரச்சனைகள் மிகுதியாக இருக்கும். 30 க்கும் மேல் பரல்கள் இருந்தால் கடும் விபத்துக்கள் தற்கொலை எண்ணத்தை கொடுக்கும்.20 க்கும் குறைந்தால் அற்ப ஆயுளை கொடுக்கும்

9 ல் பரல்கள் 5 க்கு இணையாக இருக்க வேண்டும். 9 ல் பரல்கள் கூடினால் ஆன்மீக ஈடுபாடு மகான்களின் தரிசனம் வெளிநாடு செல்லும் யோகம் பிறரால் மதிக்கப்படும் நிலை மற்றும் நிலையான புகழை கொடுக்கும்.35 க்கு மேல் இருப்பது நல்லது. குருவின் தனி பரலில் 5,9 ல் 5 க்கும் மேற்பட்ட பரல்கள் இருந்தால் ஆன்மீக வழியில் உயர்வை கொடுக்கும். 12 பாவகங்களில் 1,9 பாவகங்களில் பரல்கள் அதிகம் இருந்தால் அல்லது இணையா
இருந்தால் சிறப்பு

10 ல்பரல்கள் 25 முதல் 30 க்குள் இருந்தால் தொழில் நல்ல நிலையில் இருக்கும்.லக்ன பரலுக்கு இணையாக இருக்க வேண்டும்.2,11 க்கு இணையாக இருந்தால் தொழிலில் நல்ல பொருளாதாரத்தை கொடுக்கும்.10 ஐ விட 6 ல் பரல்கள் அதிகமாகவோ இணையாகவோ இருந்தால் தொழிலில் கடனை ஏற்படுத்தும். அடிமைத் தொழிலை செய்ய வைக்கும்.7 ம் பாவக பரலுக்கு இணையாக இருந்தால் கூட்டுத்தொழில் சிறப்பு.20 க்கும் குறைந்தால் சொந்தத்தொழில் சிறப்பாக இருக்காது.

11 ல் பரல்கள் 25 முதல் 30 க்குள் இருக்க வேண்டும். 2,10 க்கு இணையாக இருக்க வேண்டும்.7 ஐ விட 11 ல் பரல்கள் கூடினால் இருதார தோஷத்தை கொடுக்கும். 6,8,12 க்கு இணையாக இருந்தால் நீடித்த பொருளாதாரத்தை கொடுக்காது.
4 க்கு இணையாக இருந்தால் வீடு வண்டி வாகன யோகம் அமையும்.7 க்கு இணையாக இருந்தால் மனைவி வழி ஆதாயத்தை கொடுக்கும்.10 க்கு இணையாக இருந்தால் தொழில் வழி ஆதாயத்தை கொடுக்கும்.5 க்கு இணையாக இருந்தால் புத்தர்கள் வழி மேன்மையை கொடுக்கும். 4 க்கு இணையாக இருந்தால் தாய் வழி ஆதாயமும்,9 க்கு இணையாக இருந்தால் தந்தை வழி பூர்வீக ஆதாயத்தையும் கொடுக்கும்.11 ஐ விட 12 ல் பரல்கள் கூடினால் வரவுக்கு ஏற்ப செலவை கொடுக்கும்

12 ல் பரல்கள் 6,8 க்கு இணையாக இருக்கலாம். 20 க்கும் குறைந்தால் இறுதிக்காலத்தில் தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கையை கொடுக்கும். பிறரைச் சார்ந்து வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தும்.தான் சம்பாதித்த

செல்வங்களை இறுதிக்காலத்தில் ஏதேனும் ஒரு வகையில் இழக்க நேரிடும்

12 பாவகங்களிலும் பரல்கள் சராசரியாக 25 முதல் 30 க்குள் இருப்பது சிறப்பான அமைப்பு