jaga flash news

Monday, 6 July 2026

ஆதிக்கம் மிக்க கரன்சியாக அமெரிக்க டாலர் உருவெடுத்தது எப்படி?



ஆதிக்கம் மிக்க கரன்சியாக அமெரிக்க டாலர் உருவெடுத்தது எப்படி? - ஒரு தெளிவுப் பார்வை
ஆதிக்கம் மிக்க கரன்சியாக அமெரிக்க டாலர் உருவெடுத்தது எப்படி? - ஒரு தெளிவுப் பார்வை

அமெரிக்கா தனது 250-வது சுதந்திர தினத்தை ஜூலை 4-ம் தேதி உற்சாகமாகக் கொண்டாடியது. உலகின் பெரும்பகுதி நாடுகளால் ஏற்கப்பட்ட கரன்சியாக அமெரிக்க டாலர் மாறியிருக்கிறது. அமெரிக்க டாலருக்கு கிடைத்திருக்கும், இந்த அங்கீகாரம், அந்நாட்டின் அரசியல் பரிணாம வளர்ச்சியை மட்டுமல்லாமல் அசாதாரண பொருளாதார ஆதிக்கத்தையும் பிரதிபலிக்கிறது.

அமெரிக்க டாலர் என்பது அந்நாட்டின் தேசிய நாணயம் என்பதை விட வேறு பல முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. உலக நாடுகளின் மத்திய வங்கிகளால், இருப்பு வைக்கப்படும் கரன்சியாக டாலர் மாறிவிட்டது. ஒரு நாட்டுக்கும், மற்றொரு நாட்டுக்கும் இடையே எல்லை கடந்த வர்த்தகம் பெரும்பாலும் டாலரில் நடத்தப்படுகிறது, உலக நாடுகளுக்கு இடையே நடக்கும் வர்த்தகத்துக்கும் டாலர் ஆதாரமாக இருக்கிறது.

அமெரிக்காவில் காலணி ஆதிக்கம் முடிந்து சுதந்திரம் அடைந்தபின் 1792-ம் ஆண்டு நாணயச் சட்டம் இயற்றப்பட்டு, அமெரிக்க டாலர் அதிகாரபூர்வ கரன்சியாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்தச் சட்டம் இயற்றப்பட்டு சில பத்தாண்டுகள் வரை அமெரிக்க டாலர் என்பது அதன் எல்லைக்கு அப்பால் செல்லாமல், செல்வாக்கு பெறாமல்தான் இருந்தது.

அந்தக் காலகட்டத்தில் இப்போது டாலர் இருப்பதைப் போல உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கரன்சியாக பிரிட்டனின் பவுண்ட் ஸ்டெர்லிங் இருந்தது. இது பிரிட்டனின் ஏகாதிபத்தியத்தையும், வர்த்தகத்தின் சக்தியையும் வெளிப்படுத்தியது.

திருப்புமுனை மாற்றம்

முதலாம் உலகப் போரின்போது 1914 மற்றும் 1918-ம் ஆண்டுகளுக்கு இடையே ஐரோப்பிய நாடுகள் உணவு, தொழிற் துறை பொருட்கள், ராணுவத் தளவாடங்கள், மூலப்பொருட்களை அமெரிக்காவிடம் வாங்கத் தொடங்கின. இதுதான் அமெரிக்கா வளர்வதற்கு முதல் காரணமாக அமைந்தது.


பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் அதிகமாக கொள்முதல் செய்ததால் மெதுவாக ஐரோப்பாவின் தங்கம் கையிருப்பு குறைந்தது. உலக நாடுகளுக்கு கடன் கொடுக்கும் லேவாதேவியாக இருந்த பிரிட்டனின் ஆதிக்கம் பலவீனமடைந்தது. உலகளாவிய நிதி மையத்தின் சமநிலை என்பது கொஞ்சம் கொஞ்சமாக அட்லாண்டிக் வரை பரவியது.

பிரிட்டன் தொடர்ந்து உலக நாடுகளுக்கு கடன் கொடுக்கும் தேசமாக இருந்தாலும், முதல் உலகப் போருக்குப் பின் அமெரிக்காவின் வளர்ச்சி அசுரத்தனமாக இருந்து, உலக நாடுகளுக்கு தேவையான அளவு கடன் கொடுக்கும் நாடாக வளர்ந்தது. இந்த மாற்றம் 2-ம் உலகப் போருக்குப் பிந்தைய உலகளாவிய நிதி கட்டமைப்பின் மறுசீரமைப்புக்கு அடித்தளமிட்டது.

பிரெட்டன் உட்ஸ் மாநாடு ஏன் நடந்தது?

அமெரிக்காவின் நியூ ஹெமிஸ்பயர் மாகாணத்தில் உள்ள பிரெட்டன் உட்ஸ் நகரில் உள்ள மவுன்ட் வாஷிங்டன் ஹோட்டலில் 1944-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி இந்த பிரெட்டன் உட்ஸ் (Bretton Woods Conference) மாநாடு நடந்தது. இதற்கு அமெரிக்க நிதி மற்றும் பணவியல் மாநாடு என்ற பெயரும் உண்டு. இந்த மாநாட்டில் 44 சார்பு நாடுகளும், அதன் 700 பிரிதிநிதிகளும் பங்கேற்றனர்.

2-ம் உலகப் போர் முடிந்திருந்த நிலையில், சர்வதேச நிதிச் சூழலை வலுவாகக் கட்டமைக்கவும், புதிய நிதிக் கட்டமைப்பை உருவாக்கவும் இந்த மாநாடு நடந்தது. உலக தங்க இருப்பில் மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்க வைத்திருந்ததால், இந்த மாநாட்டில் அமெரிக்காவின் கை ஓங்கி, வலுவான முடிவுகளை எடுத்தது. 2-ம் உலகப் போரில் ஐரோப்பிய நாடுகள், ஆசிய நாடுகள் பெரும் சேதத்தை எதிர்கொண்டிருந்ததால், அமெரிக்காவின் வார்த்தைகளும், முடிவுகளும்தான் மேலோங்கி இருந்தது.

மாநாட்டில் பங்கேற்ற ஒவ்வொரு நாடும் தங்கள் தேசத்துக்கு கரன்சியை தங்கத்துடன் நேரடித் தொடர்பு வைக்க வேண்டும் என்ற கட்டாயத்தை நீக்கி, தங்கள் கரன்சியை அமெரிக்க டாலருடன் இணைக்க ஒப்புக்கொண்டன. அந்த நாடுகள் வைத்திருக்கும் ஒரு அவுன்ஸ் தங்கத்துக்கு 35 டாலர் நிலையான விலையில் தருவதாக அமெரிக்கா உறுதியளித்தது.


இந்த வசதி சர்வதேச நிதிச் சூழலை மறுக்கட்டமைப்பு செய்து, உலக பணவியல் முறையில் ‘டாலர்’ என்பது மையமாக மாறத் தொடங்கியது, சர்வதேச அளவில் தங்கத்துக்கு மாற்றாக டாலர் என்பது ‘லிக்விட் கரன்சி’யாக ஏற்கப்பட்டது.

சர்வதேச அளவில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்துக்கு அடித்தளமிட்டது இந்த பிரெட்டன் உட்ஸ் மாநாடுதான். இந்த மாநாடு நடந்து முடிந்து 80 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் இதன் தாக்கம் எதிரொலித்து வருகிறது.

நிக்ஸன் முடிவால் என்ன நடந்தது?

1971-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி அமெரிக்காவின் அதிபராக இருந்த ரிச்சார்ட் நிக்ஸன் தொடர்ந்து பல்வேறு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதுதான் ‘நிக்ஸன் ஷாக்’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.

டாலரை நேரடியாக தங்கமாக மாற்றும் திட்டத்தை அதிபர் நிக்ஸன் திடீரென தடை செய்து இன்று வரை நடைமுறையில் இருக்கும் ரிசர்வ் வங்கி கரன்சி வெளியிடும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

‘பெட்ரோடாலர்’ முறை

1974-ம் ஆண்டு சவுதி அரேபியாவுடன் அமெரிக்கா செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, கச்சா எண்ணெய் கொள்முதலுக்கு அமெரிக்க டாலரிலேயே வர்த்தகம் செய்யவும் ஒப்பந்தம் கையொப்பமானது. இந்த ஏற்பாடுதான் ‘பெட்ரோடாலர்’ முறை என அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய தங்கத்தை சார்ந்திருப்பதற்கும், அதில் வர்த்தகம் நடப்பதற்குப் பதிலாக, டாலரில் வர்த்தகம் செய்யப்பட்டது. இதன்மூலம் டாலர் சர்வதேச அளவில் முக்கியத்துவத்தை வளர்த்துக் கொண்டது.



அமெரிக்க டாலரை முன்னிலையில் வைத்திருப்பது எது?

பிரெட்டன் உட்ஸ் மாநாடு, நிக்ஸன் ஷாக் முடிவுகளுக்குப் பின் அமெரிக்க டாலரை பல தசாப்தங்களாக வலுவாக வைத்திருக்க பல கட்டமைப்பு சார்ந்த விஷயங்கள் உதவுகின்றன. அவை:

முதலாவதாக, முதல் உலகப் போருக்குப் பின் உருவாக்கப்பட்ட பணவியல் கட்டமைப்பு முக்கியக் காரணமாகும். 1971-ம் ஆண்டு பிரெட்டன் உட்ஸ் மாநாட்டுக்குப் பின், நிலையான நாணய மாற்று விகிதம் மறைந்துவிட்டது. ஆனால் , அதில் எடுக்கப்பட்ட பல முடிவுகள், உலக நாடுகள் தங்கள் பரிவர்த்தனைக்கு டாலரை சார்ந்திருக்குமாறு செய்ய ஊக்கம் அளிக்கப்பட்டது.

இரண்டாவதாக, ‘பெட்ரோடாலர்’ சிஸ்டம் ஆகும். இது டாலருக்கான தேவையை செயற்கையாக அதிகரிக்கச் செய்தது. கச்சா எண்ணெய் வியாபாரம் டாலரில் நடந்ததால், எரிபொருள் சந்தையில் டாலருக்கான தேவை அதிகரித்தது.

மூன்றாவதாக இன்றுள்ள நிதி அமைப்பாகும். அமெரிக்க முதலீட்டுச் சந்தை பரந்த, ஆழ்ந்ததாக இருப்பதால், ஒவ்வொரு நாட்டு மத்திய வங்கியும், முதலீட்டாளர்களும் எந்த சொத்தை தங்கள் வசம் வைத்திருக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் பணப்புழக்கம் (லிக்குடிட்டி) முக்கியக் காரணமாகும். தங்கள் முதலீட்டை பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்ய அமெரிக்க சந்தை சரியான தேர்வாக இருக்கிறது.

நான்காவதாக, உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களின் கையிருப்பில் அந்நியச் செலாவணியாக 60 சதவீதம் டாலரைத்தான் இருப்பாக வைத்துள்ளன. இது டாலருக்கான முக்கியத்துவத்தை அதிகரித்து வலுப்பெறச் செய்துள்ளது.

by TaboolaSponsored Links

அமெரிக்க சட்டங்கள் மீதான நம்பகத்தன்மை, வலுவான அரசியல் அமைப்புகள் மற்றும் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி சுதந்திரமாக திருத்திக்கொள்ளும் வசதி காரணமாகவே உலகளாவிய நிதி அமைப்புகள் சீராகச் செயல்படுகின்றன.

மகுடத்தை இனி தக்க வைக்குமா டாலர்?

அமெரிக்க டாலர் ஆதிக்கத்தைக் குறைக்க ‘வரும் ஆண்டுகளில் டாலர் பயன்பாட்டைக் குறைத்தல்’ என்ற குரல் எழுப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக பிரிக்ஸ் நாடுகள் தங்களுக்குள் தங்கள் நாட்டு கரன்சியால் வர்த்தகம் செய்வது குறித்து ஆலோசிக்கின்றன.

பெரிய அளவில் இல்லாவிட்டாலும் கூட, அமெரிக்க டாலரின் வலிமை முன்பு இருந்ததைவிட சற்று குறைந்துள்ளது. 2000-ம் ஆண்டில் உலக நாடுகள் தங்கள் அந்நியச் செலாவணி கையிருப்பில் டாலரின் பங்கு 70% இருந்த நிலையில், தற்போது, 58 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. அதற்காக உலகளவில் டாலரின் தாக்கம் குறைந்துவிட்டது என்று கருத முடியாது.

உலக நாடுகள் கையிருப்பில் டாலர் வைத்திருப்பது, டாலரில் கடன் பெறுவது, டாலரில் வர்த்தகம் நடைபெறுவது போன்ற முறைகள் இருக்கும் வரை டாலரின் தாக்கம் இருக்கும்.

அனைத்து நாடுகளாலும் ஏற்கப்பட்ட கரன்சியாக டாலர் மாறியிருப்பதும், நம்பகத்தன்மையான, வலிமையான கரன்சியாக டாலர் இருப்பதாலும், கச்சா எண்ணெய் வர்த்தகம் முழுமையாக டாலரில் நடப்பதாலும் டாலரின் மகுடம் இன்னும் பல தசாப்தங்களுக்கு இறங்க வாய்ப்பில்லை.


Wednesday, 1 July 2026

சுப /அசுப விரயங்களா என்பதையும் அறிய பரல்கள்

மேலும் ராசிச் சக்கரத்தில் சர்வாஷ்டக பரல்கள் மொத்தமாக 12 ராசிகளுக்கும் 337 என்று கொடுக்கப்பட்டுள்ளது.


லக்னத்திலிருந்து கேந்திர மற்றும் திரிகோண வீடுகளின் ( 1, 5, 9, 4, 7, 10) மொத்தப் பரல்கள் குறைந்தது 168 என்று இருக்க வேண்டும்; அதாவது 12 ராசிகளின் கூட்டுத் தொகையான 337 ஐ , 2 ஆல் வகுப்பதால் கிடைப்பது.

அதேபோல் மறைவு ஸ்தானங்களின்( 3,6,8,12) மொத்த மதிப்பு 112 - ஐ தாண்டக்கூடாது. அதாவது 12 ராசிகளின் கூட்டுத் தொகையான 337 ஐ,மூன்றால் வகுத்தால் கிடைப்பது.


மேற்கூறிய சுப, அசுப வீடுகளின் பரல்களைக் கருத்திற்கொண்டு,பூர்வீக இடத்தில் வசிப்பதா,மாற்றுவதா, விற்பனை செய்வதா என்பதையும்;செய்தொழிலில் ஏற்பட்டுள்ள முடக்கம் தீருமா?தீராதா ?வேறு தொழில் செய்யலாமா ?

மேலும் வேலைக்கு செல்லலாமா என்பதையும், வாழ்க்கையில் ஏற்படும் விரயங்கள் சுப /அசுப விரயங்களா என்பதையும் அறிய முடியும்.

பரல்கள் #######



சர்வாஷ்டகவர்க்கப் பரல்கள் என்றால், ஏழு கிரகங்களின் சுயவர்க்கப் பரல்களையும் கூட்டி ஒவ்வொரு ராசிக்கும் கிடைக்கும்.

அப்படிக் கூட்டிவந்த தொகையை ராசிகளில் எழுதி அதை மொத்தமாக கூட்டினால் கிடைப்பதுதான் அந்த 337 என்னும் மந்திர எண்ணாகும்

அந்த எண் உலகில் உள்ள அனைவருக்கும் ஒன்று போல இருக்கும். எவருக்கும் அதை விட ஒரு பரல் கூடவோ அல்லது குறையவோ வராது.

பாரதப் பிரதமருக்கும் அதே 337தான். உங்களுக்கும் 337தான்
தொழிலதிபர் அதே 337தான். உங்களுக்கும் 337தான்
அழகான பெண்ணான அதே 337தான். உங்களுக்கும் 337தான்
கைவண்டி இழுத்துப் பிழைப்பை நடத்தும் அதே 337தான். மூர்த்திக்கும் அதே
337தான்



சரவாஷ்டக வர்க்கப் பலன்கள்

மொத்தப் பலன்கள் 337. ராசிகள் 12 வகுத்தால் சராசரியாக ஒரு ராசிக்கு 28 பரல்கள் வரும்.

ஒரு வீட்டில் (அதாவது ஒரு ராசியில்) சராசரிக்கும் குறைவான பரல்கள் இருந்தால், அந்த வீடு வலிமையாக, சிறப்பாக இல்லை என்ற பொருள்.

1. ஒரு வீட்டில் 25 அல்லது அதற்கு குறைவான பரல்கள் இருந்தால், அந்த வீட்டில் ஜாதகனுக்குப் பெரிய (நல்ல) பலன்கள் இருக்காது.

2. ஒரு வீட்டில் 30 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால், அந்த வீட்டில் ஜாதகனுக்கு மிகவும் நன்மையான பலன்கள் உண்டாகும்.

3. ஜாதகன் ஒரு வீட்டின் முழுப் பலனையும் அடைய விலை
30% அதற்கு மேலான பரல்களும் இருக்க வேண்டும்.

4. கிரகங்கள் ஜாதகத்தில் உச்சமாக இருந்தாலும் அல்லது கேந்திர,
திரிகோண வீடுகளில் இருந்தாலும், அல்லது சொந்த வீட்டில்
இருந்தாலும் அந்த வீட்டில் சராசரிக்கும் குறைவான பரல்கள்
இருந்தால், அந்தக் கிரகங்கள் முழுமையாகச் செயல்படாது.

5. கிரகங்கள் ஜாதகத்தில் எதிரி நீசமடைந்திருந்தாலும் அல்லது வீட்டில் குடியிருந்தாலும் அல்லது 6ஆம் வீடு, 8ஆம் வீடு அல்லது 12ஆம் வீடு
போன்ற தீய ஸ்தானங்களில் அமர்ந்திருந்தாலும் அந்த வீட்டில்
சராசரிக்கும் அதிகமான பரல்கள் இருந்தால் அவைகள் முழுமையாகச் செயல்படும் ஜாதகனுக்கு நன்மைகள் செய்வார்கள்!.

6. லக்கினத்தில் 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருக்கக்கூடாது. இருந்தால் ஜாதகன் கஷ்டப்படப் பிறந்தவன். வாழ்க்கைப் போராட்டங்கள்
நிறைந்ததாக இருக்கும்

7. ஏழாம் வீட்டில், அதாவது களத்திர ஸ்தானத்தில் 20 பரல்கள் அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருக்கக்கூடாது. இருந்தால் ஜாதகனுக்கு
உரிய வயதில் திருமணம் ஆகாது. திருமணம் அநியாயத்திற்குத்
தாமதமாகும். சற்று தாமதமாகத் திருமணம் நடந்தாலும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியைத் தராது.

8. ஏழாம் வீட்டில் 30 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால், ஜாதகனுக்கு உரிய வயதில் திருமணம் ஆகும். திருமண வாழ்க்கை
மகிழ்ச்சி நிரம்பியதாக இருக்கும்.

9. லக்கினத்தில் இருப்பதைவிட ஏழாம் வீட்டில் அதிகப் பரல்கள்
இருந்தால், ஜாதகனுக்கு, அவன் தகுதியைவிட, அதாவது
அவனைவிட மேலான தகுதியை உடைய பெண் மனைவியாக
அமைவாள். பெண்ணாக இருந்தால், மேலான தகுதியை உடைய
கணவன் அமைவான்.

10. மாறாக லக்கினத்தைவிட ஏழாம் வீட்டில் பரல்கள் குறைவாக
இருந்தால், ஜாதகனின் நினைப்பைவிட, விருப்பத்தைவிட,
தகுதியைவிட (நிலை) குறைவான அமைப்பை உடைய பெண்ணே மனைவியாக அமைவாள். அல்லது கணவன் அமைவான்.

11. பத்தாம் வீட்டில் 32 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால், ஜாதகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். அல்லது நல்ல தொழில் அமையும்

12. பத்தாம் வீட்டில் சராசரிக்கும் குறைவான பரல்கள் இருந்தால்
எடுத்தவுடன் நல்ல வேலை அமைவது சிரமம். கிடைக்கும் வேலையில் சேர்ந்து கொள்ள வேண்டியதுதான். ஜாதகத்தில் உள்ள
லக்கினாதிபதி அல்லது பத்தாம் அதிபதி அல்லது கிராமகாரகன் சனியின் மேன்மையைப் பொருத்து அவர்களுடைய தசா புத்திக் காலங்களில்
நல்ல வேலை கிடைக்கும்.

13. பத்தாம் வீட்டில் 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால், கிடைக்கின்ற வேலையில் அது எப்படி இருந்தாலும், மனதைத் தேற்றிக்
கொண்டு பணியாற்ற வேண்டியதுதான். ஜாதகப்படி நல்ல காலம்
வரும்போது நிலைமை மாறும் என்று நம்பிக்கையோடு இருக்க வேண்டியதுதான்.

14. House of finance இரண்டாம் வீட்டில் 25 குறைவான பரல்கள் இருந்தால் எப்போதும் பணப் பிரச்சினை இருக்கும். வரவிற்கு
மேல் செலவாகும். சுருக்கமாகச் சொன்னால் கையில் காசு தாங்காது. ஓட்டைக்கை என்று சொல்லுவார்கள்.

15. நான்காம் வீட்டில் 25 அல்லது அதற்குக் நிறைய வசதிகள், ஆடம்பரங்கள் எல்லாம் இருக்காது. அதாவது சொத்து
சுகம் எல்லாம் இருக்காது. பிறகு ஜாதகத்தில் லக்கினாதிபதி, சுக்கிரன், செவ்வாய் ஆக்கிய கிரகங்களின் வலிமையைப் பொறுத்து,
அவர்களுடைய தசாபுத்திகளில் சொத்து, சுகங்கள் கிடைக்கும்.
(சுகம் என்றால் என்னவென்று தெரியுமல்லவா? வண்டி, வாகனங்கள், ஸ்பிளிட் ஏர் கண்டிஷனர் போன்றவை)

16. பாக்கிய ஸ்தானத்தில் (அதாவது ஒன்பதாம் வீட்டில்) சராசரி
அல்லது அதற்கு அதிகமான பரல்கள் இருந்தால்தான் பூர்வீகச்
சொத்துக்கள் இருக்கும். அல்லது கிடைக்கும்

.19. ஆறாம் வீட்டில் 32 வயது அல்லது அதற்கு மேலான பரல்கள் இருந்தால், வாழ்க்கையில், நோய், கடன், எதிரி, போன்ற பிரச்சினைகள் இல்லாமல் இருக்கலாம்

20. எட்டாம் வீட்டில் 25 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால், வாழ்க்கையில் பெரும் கஷ்டங்கள் வராது. பெரிய பிரச்சினைகள் வராது .

பரல்கள்

ஜோதிடத்தில் 'பரல்கள்' (Points) என்பது ஒரு ஜாதகரின் அஷ்டவர்க்க (Ashtavarga) கணிதத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ராசியும் அல்லது கிரகமும் பெறும் நற்பலன்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். இதன் மூலம் ஒருவரின் ஆயுள், செல்வம், தொழில் மற்றும் ஆரோக்கியம் போன்ற பலன்களைத் துல்லியமாக அறியலாம்.பரல்களின் பொதுவான பலன்கள்:சராசரி பரல்கள்: ஒரு ஜாதகத்தில் 12 ராசிகளுக்கு மொத்தமாக 337 பரல்கள் உள்ளன. ஒரு ராசிக்கு சராசரியாக 28 பரல்கள் இருக்க வேண்டும்.குறைந்த பரல்கள்: ஒரு வீட்டில் 25 அல்லது அதற்கும் குறைவாக இருந்தால், அந்த வீட்டால் ஜாதகருக்கு பெரிய அளவில் நல்ல பலன்கள் கிடைக்காது.அதிக பரல்கள்: ஒரு வீட்டில் 30 அல்லது அதற்கு மேல் பரல்கள் இருந்தால், அந்த வீட்டில் உள்ள காரகத்துவங்களால் ஜாதகருக்கு மிகவும் நன்மையான பலன்கள் உண்டாகும்.முக்கியமான சில பரல்களின் பலன்கள்:லக்னம் (1-ஆம் வீடு): லக்னத்தில் அதிக பரல்கள் இருந்தால், ஜாதகர் மிகுந்த ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் இருப்பார்.தனம் மற்றும் குடும்பம் (2-ஆம் வீடு): இங்கு அதிக பரல்கள் இருப்பது நிலையான செல்வம், நல்ல வருமானம் மற்றும் நன்மதிப்பைக் கொடுக்கும்.திருமண வாழ்க்கை (7-ஆம் வீடு): 7-ஆம் வீட்டில் பரல்கள் சீராக இருந்தால் திருமண வாழ்க்கை சிறப்பாகவும், மனைவி வழியில் ஆதாயமும் கிடைக்கும்.வரவு - செலவு: லக்னத்திற்கு 1, 2, 4, 9, 10, 11 ஆகிய இடங்களில் உள்ள பரல்களின் கூட்டுத்தொகை 164-க்கு மேல் இருந்தால், செலவை விட வரவு அதிகமாக இருக்கும்.

#. பரல்கள் பலன் #


1 ல் பரல்
லக்ன பாவகத்தில் பரல்கள் 1,5,9 க்கு இணையாக இருக்க வேண்டும்.6,8,12 க்கு குறையக்கூடாது.மேற்படி இருந்தால்தான் லக்னம் பலம் பெற்றுள்ளதாக அர்த்தம்.

2 ல் பரல் குறைந்தால் தனவிருத்தி இல்லை.குடும்ப நிர்வாகம் சுமூகமாக இருக்காது.2 ம் பாவக காரகத்தை ஜாதகர் தடையின்றி அனுபவிக்க இயலாது. 4,7 பாவகத்துக்கு இணையாக இருக்க வேண்டும்.20க்கு குறைந்தால் குடும்பம் அமைய தடை ஏற்படும்.20 முதல் 25க்குள் இருந்தால் தாமதமாகி குடும்பம் அமையும். அதிலும் பிரச்சனைகளை கொடுக்கும்.25க்கு மேல் இருப்பது சிறப்பு

3 ல் பரல் அதிகமானால் இளைய சகோதர ஆதரவு இருக்கும்.
விடாமுயற்சி இருக்கும்.எந்தச் செயலையும் வீரியத்துடன் செய்வார்.அவ்வப்போது மூர்க்கத்தனமான எண்ணங்களையும் கொடுக்கும். பரல் 20 க்கும் குறைந்தால் சோம்பேறித்தனத்தை உண்டாக்கும். தைரியம் குறையும்.எதையும் முடிவெடுக்கும் ஆற்றல் குறையும். எந்த ஊரு காரியத்தையும் முழுமையாக செய்து முடிக்க சிரமப்படுவார்

4 ல் பரல் லக்கினத்திற்கு இணையாக இருக்க வேண்டும்.2,7 பாவகத்திற்க்கு குறையக்கூடாது.20 க்கும் குறைந்தால் வீடு மனை அமைய தடையை ஏற்படுத்தும்.உயர் கல்வியில் தடையை ஏற்படுத்தும். தாய் வழி ஆதாயம் அனுபவிப்பதில் தடையை ஏற்படுத்தும்.மனதில் தேவையற்ற பயம் கவலைகள் இருந்து கொண்டே இருக்கும். மேன்மையான வாழ்க்கை வாழ முடியாது .

5 ல் பரல்கள் 20 க்கும் குறைந்தால் புத்திர மேன்மையை குறைக்கும்.6 ம் பாவகத்தை விட குறைந்தால் கடன் நோய் போன்ற துன்பங்களை கொடுக்கும். 6 க்கு இணையாகவும் இருக்கக் கூடாது.5 ல் பரல்கள் குறைந்தால் போராட்டமான வாழ்க்கையை கொடுக்கும். எதையும் எதிர்கொள்ளும் தைரியத்தை குறைக்கும். குலதெய்வ அனுக்கிரகத்தை குறைக்கும். லக்னத்திற்கு இணையாக இருப்பது நல்லது நண்பர்களே.

6 ல் பரல்கள் லக்னத்திற்கு அதிகமானால் கடன் நோய் பிரச்சனைகளை கொடுக்கும். 4க்கு அதிகமானால் உடல் ஆரோக்கியத்தில் சுகமின்மையை கொடுக்கும்.20 க்கும் குறைந்தால் பிறவியிலேயே ஏதோ ஒரு நோய் இருக்கும். 20 முதல் 25 க்குள் இருப்பதுதான் நன்று.40 க்கும் மேல் பரல்கள் இருந்தால் கடன் நோய் வழக்குகள் ஏதேனும் ஒன்று இறுதி வரை கூடவே இருக்கும்


7 ல் பரல்கள் 2,4 க்கு இணையாக இருக்க வேண்டும்.7 ஐ விட 8 ல் பரல்கள் அதிகமானால் மணவாழ்க்கையில் பிரச்சனைகளைக் கொடுக்கும்.7 ல் பரல்கள் லக்னத்திற்கு இணையாகவோ அதிகமாகவோ இருந்தால் மனைவி வழி ஆதாயம் உண்டு.திருமணத்திற்கு பின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.7 ல் பரல்கள் அதிகமாகும் போது காம வேட்கையை கொடுக்கும்.
மனைவியின் ஜாதகத்தில் இணையாக இருந்தால் சமன்படும். 20 க்கு குறைந்தால் திருமணம் அமைய தடையை ஏற்படுத்தும்.

20க்கு குறையாமல் 30 க்கு அதிகமாகாமல் இருப்பது நல்லது.

கணவனின் பரலை விட மனைவியின் பரல் அதிகமானால் மனைவிக்கு அடங்கிப் போக நேரிடும்

8 ல் பரல்கள் 20 முதல் 25 க்குள் இருப்பதுதான் சிறப்பு.லக்ன பரலை விட அதிகமாக கூடாது. 25 க்கும் அதிகமானால் ஆயுள் தீர்க்கம். ஆனால் பிரச்சனைகள் மிகுதியாக இருக்கும். 30 க்கும் மேல் பரல்கள் இருந்தால் கடும் விபத்துக்கள் தற்கொலை எண்ணத்தை கொடுக்கும்.20 க்கும் குறைந்தால் அற்ப ஆயுளை கொடுக்கும்

9 ல் பரல்கள் 5 க்கு இணையாக இருக்க வேண்டும். 9 ல் பரல்கள் கூடினால் ஆன்மீக ஈடுபாடு மகான்களின் தரிசனம் வெளிநாடு செல்லும் யோகம் பிறரால் மதிக்கப்படும் நிலை மற்றும் நிலையான புகழை கொடுக்கும்.35 க்கு மேல் இருப்பது நல்லது. குருவின் தனி பரலில் 5,9 ல் 5 க்கும் மேற்பட்ட பரல்கள் இருந்தால் ஆன்மீக வழியில் உயர்வை கொடுக்கும். 12 பாவகங்களில் 1,9 பாவகங்களில் பரல்கள் அதிகம் இருந்தால் அல்லது இணையா
இருந்தால் சிறப்பு

10 ல்பரல்கள் 25 முதல் 30 க்குள் இருந்தால் தொழில் நல்ல நிலையில் இருக்கும்.லக்ன பரலுக்கு இணையாக இருக்க வேண்டும்.2,11 க்கு இணையாக இருந்தால் தொழிலில் நல்ல பொருளாதாரத்தை கொடுக்கும்.10 ஐ விட 6 ல் பரல்கள் அதிகமாகவோ இணையாகவோ இருந்தால் தொழிலில் கடனை ஏற்படுத்தும். அடிமைத் தொழிலை செய்ய வைக்கும்.7 ம் பாவக பரலுக்கு இணையாக இருந்தால் கூட்டுத்தொழில் சிறப்பு.20 க்கும் குறைந்தால் சொந்தத்தொழில் சிறப்பாக இருக்காது.

11 ல் பரல்கள் 25 முதல் 30 க்குள் இருக்க வேண்டும். 2,10 க்கு இணையாக இருக்க வேண்டும்.7 ஐ விட 11 ல் பரல்கள் கூடினால் இருதார தோஷத்தை கொடுக்கும். 6,8,12 க்கு இணையாக இருந்தால் நீடித்த பொருளாதாரத்தை கொடுக்காது.
4 க்கு இணையாக இருந்தால் வீடு வண்டி வாகன யோகம் அமையும்.7 க்கு இணையாக இருந்தால் மனைவி வழி ஆதாயத்தை கொடுக்கும்.10 க்கு இணையாக இருந்தால் தொழில் வழி ஆதாயத்தை கொடுக்கும்.5 க்கு இணையாக இருந்தால் புத்தர்கள் வழி மேன்மையை கொடுக்கும். 4 க்கு இணையாக இருந்தால் தாய் வழி ஆதாயமும்,9 க்கு இணையாக இருந்தால் தந்தை வழி பூர்வீக ஆதாயத்தையும் கொடுக்கும்.11 ஐ விட 12 ல் பரல்கள் கூடினால் வரவுக்கு ஏற்ப செலவை கொடுக்கும்

12 ல் பரல்கள் 6,8 க்கு இணையாக இருக்கலாம். 20 க்கும் குறைந்தால் இறுதிக்காலத்தில் தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கையை கொடுக்கும். பிறரைச் சார்ந்து வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தும்.தான் சம்பாதித்த

செல்வங்களை இறுதிக்காலத்தில் ஏதேனும் ஒரு வகையில் இழக்க நேரிடும்

12 பாவகங்களிலும் பரல்கள் சராசரியாக 25 முதல் 30 க்குள் இருப்பது சிறப்பான அமைப்பு


Saturday, 27 June 2026

ஆட்டுக்கறியை ‘மட்டன்’ என சொல்வது ஏன் தெரியுமா?


ஆட்டுக்கறியை ‘மட்டன்’ என சொல்வது ஏன் தெரியுமா? அடடா இவ்வளவு நாள் தெரியாம போச்சே.. சுவாரசியம்

 
 ஆட்டிறைச்சிக்கு எப்படி 'மட்டன்' என்ற பெயர் வந்தது என்பது உங்களுக்கு தெரியுமா? அதுபற்றி இங்கு பார்க்கலாம்.


ஒரு காலத்தில் ஏதேனும் விசேஷ நாட்களில் மட்டும் வீட்டில் 'மட்டன்', 'சிக்கன்' எடுத்து சமைக்கும் வழக்கம் இருந்தது. ஆனால் இப்போது நினைத்த உடன் அசைவ உணவு வாங்கி சாப்பிடுவது கிராமம் முதல் நகரம் வரை வந்துவிட்டது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை என்றால் 'மட்டன்', 'சிக்கன்', 'மீன்' உள்பட பிற அசைவ உணவுகளில் ஒன்று தான் என்ற நிலை பல வீடுகளிலும் வந்துவிட்டது.


mutton goat meat

இப்படி நாம் ருசித்து உண்ணும் இந்த ஆட்டிறைச்சியை 'மட்டன்' என்று அழைப்பது ஏன்? பெயர் காரணத்தின் பின்னணி என்ன? என்பது பற்றி என்றாவது யோசித்து இருக்கிறீர்களா? என்று சிந்தித்து பார்த்தால் பலரது பதிலும் இல்லை என்பதாக தான் இருக்கும். அப்படியான பதிலை இப்போது மனதில் சொல்லி கொள்ளுங்கள் உங்களுக்கு இந்த செய்தியில் விடையை தருகிறோம்.





'மட்டன்' (Mutton) என்ற சொல் 'மொட்டோன்' (Moton அல்லது Mouton) என்ற பழைய பிரெஞ்சு வார்த்தையில் இருந்து உருவானது. இதற்கு உண்மையில் 'செம்மறி ஆடு' என்று பொருள். அதன்பிறகு தான் இந்த வார்த்தை இங்கிலாந்துக்குள் நுழைந்தது. கி.பி 1066-ல் நார்மானியர்கள் இங்கிலாந்தை கைப்பற்றிய பிறகு ஆங்கிலத்தில் பிரெஞ்சு மொழி அதிகமாக கலந்தது. இதனால் 'மட்டன்' என்ற சொல் இங்கிலாந்தில் பயன்பாட்டில் வந்ததோடு அது 'செம்மறி ஆட்டு' இறைச்சியை இன்று வரை குறிக்கிறது.

சரி இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். 'மட்டன்' என்றால் அது செம்மறியாட்டு கறி என்றால் வெள்ளாட்டு கறிக்கு என்ன பெயர்? என்று நீங்கள் கேட்கலாம். வெள்ளாட்டு இறைச்சிக்கு 'செவோன்' (Chevon) என்று பெயர் உள்ளது. அதேபோல் குட்டி வெள்ளாடு இறைச்சிக்கு 'காப்ரிட்டோ' (Cabrito) என்ற பெயர் உள்ளது. இதுவும் பிரெஞ்சு மொழியில் இருந்து வந்தது தான். ஆனால் இந்த வார்த்தைகள் அவ்வளவாக புழக்கத்தில் இல்லை. அனைத்து நாடுகளிலும் வெள்ளாட்டு இறைச்சியை 'Goat Meat' என்று சொல்லும் வழக்கம் இருந்ததால் 'செவோன், காப்ரிட்டோ என்ற 2 வார்த்தைகளும் பிரபலம் அடையவில்லை.

அதேவேளையில் 'மட்டன்' என்ற சொல் ஒவ்வொரு நாடுகளிலும் வெவ்வேறு இறைச்சியை குறிக்கும். பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் ஒவ்வொரு ஆட்டுக்கறிக்கும் வெவ்வேறு பொருள் உள்ளது. இந்த நாடுகளில் முதிர்ந்த செம்மறியாட்டின் இறைச்சியை 'மட்டன்' என்பார்கள். இளம் செம்மறியாட்டின் இறைச்சி 'லேம்ப்' (Lamb) என்றும், வெள்ளாட்டு இறைச்சியை 'கோட் மீட்' (Goat meat) என்று அழைப்பார்கள். இதனால் பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் 'மட்டன்' என்று கறிக்கடையில் கேட்டால் செம்மறியாட்டின் கறியும், உணவகங்களில் 'மட்டன்' உணவு என்று கேட்டால் செம்மறியாட்டின் இறைச்சி கறியை தான் தருவார்கள்.

அதேவேளையில், ஐரோப்பாவிற்கு வெளியே சில குறிப்பிட்ட பிராந்தியங்களில் 'மட்டன்' என்ற சொல் வெள்ளாட்டு இறைச்சியை குறிக்க பயன்படுத்தப்பட்டது. இது அப்படியே ஆங்கிலேயே படையெடுப்பின்போது நம் நாட்டுக்கும் பரவியது. நம் நாட்டில் செம்மறியாடுகளை விட வெள்ளாடு தான் அதிகம் வளர்க்கப்படுகிறது. செம்மறியாட்டை ஒப்பிடும்போது வெள்ளாடு வளர்ப்பது மிகவும் எளிது. அதேபோல் பெரும்பாலான மக்கள் வெள்ளாட்டு இறைச்சியை தான் அதிகம் சாப்பிட்டு வருகின்றனர். குறிப்பிட்ட மக்கள் தான் செம்மறியாட்டு இறைச்சியை விரும்பி சுவைக்கிறார்கள். இதனால் ஆங்கிலேயர் காலத்தில் நம் நாட்டில் எளிதாகவும், அதிகமாக கிடைக்கும் வெள்ளாட்டு கறியை குறிக்க 'மட்டன்'என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.

இதனால் தான் நம் நாட்டில் மட்டன் கறி, மட்டன் பிரியாணி அல்லது மட்டன் ரோகன் ஜோஷ் போன்ற உணவுகள் பொதுவாக வெள்ளாட்டு கறியை மையப்படுத்தி உருவாக்கப்படுகிறது. அதன்பிறகு காலப்போக்கில் வெள்ளாட்டு கறி மட்டுமின்றி செம்மறியாட்டு கறியையும் குறிக்க 'மட்டன்' பயன்படுத்தப்பட்டது. இதனால் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எங்கு சென்றாலும் 'மட்டன்' என்று கேட்டால் உடனடியாக அவர்கள் ஆட்டிறைச்சியை தான் தருவார்கள். பெரும்பாலும் இது வெள்ளாட்டு கறியாக இருக்கும். செம்மறியாட்டு கறி வேண்டும் என்றால் அதனை குறிப்பிட்டு வாங்கி கொள்ள ே வண்டுடும். இதனால் நம் நாட்டில் 'மட்டன்' என்ற சொல்லில் எந்த குழப்பமும் இல்லை. ஆனால் வெளிநாடு செல்லும்போது அதன் வேறுபாடுகளை அறிந்து வைத்து கொள்வது நல்லது.


அநாதை ஒரே துணை!

அநாதை ஒரே துணை!

          விடுமுறையில் வீட்டிற்கு வந்த தன்மகனிடம் தங்களையும் அழைத்துப்போகச் சொல்லிய பெற்றோர்களிடம் நாங்கள் சுற்றுலா சென்று அப்படியே செல்ல இருக்கின்றோம். நீங்கள் அப்புறமாக வாருங்கள் எனக் கூறிச் சென்றுவிட, தங்களின் செல்ல மகள் வீட்டிலாவது சென்று தங்கலாம் எனக் கிளம்பினர். நாட்கள் செல்லச் செல்ல மகளின் பேச்சுகளும், உபசாரங்களும் திசைமாறவே, ஆண் என்ற முறையில் வேலைத்தேட ஆரம்பித்தார். ஒரு கல்யாண உதவி அமைப்பில் பணியாளராக வேலை கிடைக்கவே, அங்கு கிடைக்கும் எல்லா வேலைகளையும் தலைமேற்கொண்டு கிடைக்கும் பணத்தை தன் மகளிடம் கொடுத்துவந்தார். வேலையில்லா நாளில் ஒன்றும் கிடைக்காமலும் இருப்பதுண்டு. அப்படி ஓர்நாள் வேலையின்றி மனம் வருந்தி வீடுசென்றவருக்கு அவரின் மகள், மனைவியிடம் பேசியது கேட்கவே சிறிது தயக்கத்திற்குப்பின் உள்ளே சென்றார். சோர்ந்து படுத்தார்.
           அடுத்தநாள் காலை வேலைதேடிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பலநாட்கள் சென்றும் அவரைப்பற்றிய தகவல் ஏதுமில்லை. ஒரு வருடம் சென்றபின் பக்கத்து ஊரின் ஆசிரமத்திலிருந்து உடன் வரச்சொல்லித் தகவல் வரவே அங்கு சென்ற அந்த அம்மாளுக்கு அவரின் கணவரின் பெயரைச் சொல்லி அவர் இறந்து பலநாட்கள் ஆகிவிட்டன எனக்கூறினர். இங்கு வரும்போது நான் அநாதை எனச் சொல்லித்தான் சேர்ந்தார். தனக்கு ஏதாவது ஆகிவிட்டால் ஆசிரம அன்பர்களே காரியங்கள் அனைத்தும் செய்யச் சொல்லி கடிதம் கொடுத்துள்ளார். எனவே அவர் இறந்ததும் அடக்கம் செய்துவிட்டோம். பின்னர் அவர் பெட்டியை திறந்து பார்த்தபோது ஒரு டைரி இருந்தது. அதில் உங்கள் பெயரும் விலாசமும் இருந்தது. ஆகவே உங்களுக்கு தகவல் அனுப்பினோம். இந்தாருங்கள் அந்த டைரி எனக் கொடுத்தனர்.
அன்புள்ள மனைவிக்கு, நான் உன்னை விட்டு ஓடி வந்துவிட்டேன் என நினைக்காதே! அன்று நம் மகள், அம்மா நீ சமையல்வேலை, துணி துவைத்தல் என வீட்டு வேலைகளில் மிகவும் ஒத்தாசையாக இருக்கின்றாய், ஆனால் உங்களிருவருக்கும் சேர்த்து எங்களால் செலவு செய்யமுடியவில்லை, அப்பாவை எங்காவது ஆசிரமத்தில் சேர்ந்துக்க சொல், என்ற வார்த்தைகளைக் கேட்டபின், நீயாவது அங்கு நன்றாக இருப்பாய் என்ற எண்ணத்தில்தான் இப்படி வந்துவிட்டேன். என்னை மண்ணித்துவிடு. நமக்கு மகன், மகள் என்ற ஆதரவு அற்றுப் போய்விட்டது. நமது குலதெய்வம் அங்காளபரமேஸ்வரிதான் உனக்கு துணை. உன்னிடம் ஒர் வேண்டுகோள். இதைப் படித்தப்பின் எனக்காக ஒன்றுசெய். அந்த அம்மையின் வாயிலில் பிச்சை எடுத்தாவது ஜீவி. பிள்ளைகள் வாசலை மிதிக்காதே. என எழுதியதைப் படித்தபின் மனம்பிசைந்தது. அழுகை நிறைந்த கண்கள் குளமாயின.
        கணவரின் விருப்பப்படி அந்த அம்மாள் கோவிலின் வாயிலில் பிச்சை எடுத்து வாழத் தொடங்கினார். ஓர் நாள் அவரது மகன் அந்த கோவிலுக்கு வந்து சென்றபோது காலத்தின் கோலத்தால் சிதைந்து போயிருந்த அந்தமூதாட்டியை அடையாளம் தெரியாமலே, மகன், மருமகள், பேரக்குழந்தைகள் அனைவரும் பிச்சையிட்டு சென்றனர். அந்த அம்மனே இறுதிவரை துணை என வாழ்ந்து இறந்தார். அவர் யாருமில்லா அநாதையா!

அன்பின் ஆழம்!

அன்பின் ஆழம்!

 

அன்பு மனதில் தோன்றும் மன வெழுச்சியாகும். அது ஒரு தீவிர உணர்ச்ச்சி, மனக் கிளர்ச்சியாகும், பல நிலைகளைக் கொண்டது. மற்ற மனங்களை உருக்கும் தன்மை கொண்டது. வாழ்வுப் பாதையில் வாழ்க்கையை வாழ்வதற்கு மிகவும் முக்கியமானது அன்பே. உலகில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் அது பொதுவானது, பொருமையான அன்பில் அமைதியிருக்கும். அமைதியான அன்பில் ஆழமிருக்கும். ஆழமான அன்பில் பண்புகள் குடியிருக்கும். அடித்து அடக்கி வெல்வதைவிட அன்பினால் சுலபமாக வெற்றி கொள்ளலாம். துப்பாக்கி முனைகள் சாதிக்காததை அன்பின் வழி கண்கள் சாதிக்கும். இந்த அதிசய அன்பின் ஆழத்தை ஒவ்வொரு உயிரும் உணர வேண்டும். உலகில் உள்ள பழமையான ஆனால் அதி நவீன சக்திகளைக் கொண்ட கருவி அன்பு ஒன்றேயாம். உலக உயிர்களின் இதயங்களை மனதை நாம் அன்பால் வெல்லலாம்.
நான், என்னுடையது எனும் தன்னுணர்ச்சியால், சுயநலத்தால் பெறும் வெற்றிகள் எல்லாம் வெற்றியாகாது. அப்படி சுய நலத்தால் வென்றாலும் அது உண்மையான வெற்றியாகாது. ஆனால் அன்பினால் தோல்வி ஏற்பட்டிருந்தாலும் அது தற்காலிகமானதுதான், மீண்டும் அதில் தானாக வெற்றி கிட்டும் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து நம் உள்ளார்ந்த மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

மிகவும் துன்பங்களைக் கொண்ட நேரங்களில் யாரும் அன்பை பற்றி நினைக்க முடியாது, ஆனாலும் நாம் இவ்வுலகில் வாழ்வுப்பயணம் எனும் நிகழ்வை தொடர்ந்து நடத்த வேண்டும். அதற்கு அன்பு மிக உதவியாய் இருக்கும். ஓன்று நீங்கள் கொண்ட அன்பு. மற்றது மற்றவர்கள் உங்கள்மேல் கொண்ட அன்பாகும். எனவே துன்பங்களிலிருந்து விடுபட வன்முறைகளை கையில் எடுக்காதீர்கள். அப்படி எடுத்துக் கொண்டு அதிலிருந்து வெளிவர மறுக்கும் அன்பர்களை விட்டு விடுங்கள். அவரின் முடிவு வேறு விதமாய்த்தான் இருக்கும்.

எந்நிலையிலும் அமைதியான அன்பு அளவிற்கதிகமான சக்தியுடையது. உள்ளார்ந்த மன நிம்மதியை உறுதியைத் தரும். நாம் முழு மன நிம்மதி மற்றும் அமைதியான அன்புடன் இருக்கும்போது நம்மைச்சுற்றி ஓர் அன்பு வட்டத்தை ஏற்படுத்துகின்றோம். அது நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு பயனை அளிக்கக் கூடியது. நம் நண்பர்களோ, உறவினர்களோ துன்பத்தில் வாடும் போது அதை நாம் நினைத்து அதிலிருந்து அவர்கள் விடுபடவேண்டும் என உண்மையான அன்பினால் அன்பு கொண்டு நாமும் நம்மை சுற்றியுள்ளவர்களும் நினைக்கும்போது அந்த உணர்வுகள் மின் காந்த அலைகளாக மாறி காற்றில் பரவி பாதிக்கப்பட்ட நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் சென்றடைந்து நலம் விளைவிக்கும்
இதை நாம் உணர்ந்து செயல் பட்டால் நலம். இது போன்ற அன்பை ஒவ்வொருவரும் மனதில் கொள்வதற்கும் மற்றவர் துன்பம் போக்கும் வல்லமையை அடையவும் வாழ்வில் அன்பு மிக கொண்டு மனதளவில் மனித நேயம் கொண்டு நம்பிக்கையுடன் நம் ஆழ் மனத்தில் இருக்கும் அன்பை அடிக்கடி தூய்மை கொள்ளச்செய்ய வேண்டும். நாம் அமைதியாக இருந்து நம்பிக்கையுடன் தியானம் செய்தால் அந்த நிலை துன்பத்தில் துயரப்படும் ஒருவருக்கு கண்டிப்பாக உதவி புரியும். அந்த நிலைக்கு எல்லோரும் வாருங்கள். அன்பு கொண்டவராகுங்கள். 

அதற்கு நான் என்ன செய்ய வேண்டும். உலகமே துன்ப துயரத்தில் மூழ்கியிருக்கும்போது நான் என்ன செய்ய முடியும் என நினையாது, என்னாலும் ஏதாவது செய்ய முடியும் என்ற நம்பிக்கை முதலில் கொள்ள வேண்டும். 

ஒரு சிட்டிகை அளவு மருந்து பல கிலோ எடையுள்ள ஒரு மானுடத்தினுள் மாற்றம் செய்யும் போது கோடிக்கணக்கான உயிர்களைக் கொண்ட இவ்வுலகில் ஒரு துரும்பாக நீங்களும் உங்களால் முடிந்ததை இவ்வுலகுக்கு செய்யலாம் வருங்கள் அன்புகொண்டு.

ஒரு கூட்டம் கருத்து வேறுபாடினால் இரண்டாகப் பிரிந்து விரோத மனப்பான்மை கொண்டிருந்தால் நீங்கள் முதலிம் இரு பகுதியினரிடமும் அன்புடன் போசுங்கள். அவர்களிடையே நண்பர்கள், உறவினர்கள், நேசங்கள் என பலதரப்பட்டவர்களும் பிரிந்திருக்கலாம் உண்மை காரணம் தெளிவாகப் புரியாமல், அதைப் புரியவைத்து அவர்களின் பழைய தொடர்புகளை நல்லவைகளை நீங்கள் அறிந்தவற்றை எடுத்துக் கூறி பாச பிணைப்புக்களைத் தோற்றுவிக்க முயற்சி பண்ணுங்கள். பழைய உறவுகளை மீண்டும் புதுப்பியுங்கள். அன்பு கொண்டு அன்பை மலரச் செய்யுங்கள். மலரச்செய்த அன்பு பழைய நினைவுகளால் புதுப் பொலிவு அடைந்து வேற்றுமைகளை வலுவிளக்கச்செய்யும். அது ஆரம்பமானால் நீங்கள் அன்பில் வெற்றி கண்டுள்ளீர்கள் என்பதாகும். அமைதியுடன் அன்பை பரப்புங்கள், வேற்றுமைகள் முற்றிலும் அகன்று மீண்டும் ஒற்றுமை தோன்றி அன்பு பரிமளிக்கும்.
இது போன்றே மதக் கருத்து வேறுபாடுகளையும் அன்பினால் களையலாம். எம்மதமாயினும் அவரவர் தம் மழலைச் செல்வங்களுக்கு உபதேசம் செய்யும்போது தங்களின் பழக்க வழக்கங்களைச் சொல்லிய பின் அருகில் அவர்களைச் சுற்றியுள்ள சமூகத்தினரின் பழக்க வழக்கங்களையும் போதிக்க வேண்டும். இது அவர்களிடையே ஓர் நேசத்தை தோற்றுவிக்கும். ஒரு இன, மதத்துச் சிறுவன் வேறு மதச் சிறுவர்களுடன் நட்பாக இருப்பதை நாம் கண்டிருக்கின்றோம். இந்த நட்பு வளர்ந்து இறுதிவரை கூடி நீடிப்பதுண்டு. இந்த நட்பானது இனக் கருத்து வேறுபாடுகளினால் மாற்றம் அடையாது. கலவரங்கள் ஏற்பட்டாலும் மனித நேயத்துடன் ஓர் அன்புடன் மனித உயிர்களின் மதிப்பை உணர்ந்து நட்புடன் செயல்படும் பண்பாக மலரும். நல்ல நம்பிக்கையும் நற்பண்புகளும் தோன்றும். எந்த இனத்தையும் தாழ்வாக எண்ணாது. ஜாதி, இன பேதம் கொள்ளாது. எல்லா இன கோட்பாடுகளும் அன்பின் எல்லைகளுக்கு உட்பட்டவைகள்தான்.

எல்லா இனத்திலும் அன்பு இல்லாமல் இல்லை. அன்பே உயிர்கள் வாழ ஒருவருக்கொருவர் உதவி செய்ய பயனுள்ளதாகும். ஓர் சுனாமி ஏற்படும்பொழுது அங்கே ஜாதி, இனம், மதம் ஏன் ஆண், பெண் என்றுகூடப் பார்க்கப்படுவதில்லை. அல்லலுற்று துன்பத்தில் வாடும் உயிர்களுக்கு அன்பு என்ற ஒன்றால்தான் ஆறுதல் தர முடியும். நாம் எல்லோருக்கும் பொதுவாக படைக்கப்பட்ட இவ்வுலகில் நம்மிடம் பொதுவாக இருப்பதும் அன்பேயாகும்.
ஓர் நாட்டில், தேசத்தில் தோன்றிய உணவு வகைகளை மற்ற நாட்டினர் சுவைத்து மகிழ்கின்றனர். உலகின் ஓர் பகுதியில் உள்ள இயற்கையைக்காண மற்றவர்கள் உல்லாசமாக பயணிக்கின்றனர், ஒவ்வொரு பகுதியில் தோன்றும் இசை உலக மக்களை கவர்ந்து இழுக்கின்றது அனைவரும் ஆனந்தத்தில் மூழ்குகின்றனர். ஒர் பகுதியின் கலாச்சரங்கள் மற்ற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அவர்கள் அதை மிகவும் விரும்பி இரசனை கொள்கின்றனர்.

இப்படி உலகின் ஒவ்வொரு இடத்தும் உள்ள சிறந்த உபயோகமான ஒன்று உலகின் அடுத்த பக்கத்திற்கு, எல்லைக்குச் செல்லும்போது ஏன் மனித உயிர்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றான அனைவருக்கும் பொதுவான ஒன்று ஏன் செல்லாது, மருகி விரோதங்கள் மாற்று எண்ணங்கள் தோன்றி பிடிவாத குணங்களால் அன்பை மறந்து செயல்படும் விழிப்புணர்வு இல்லா நிலையில் நொண்டியடித்துக் கொண்டிருப்பதை காண்கிறோம். சில எண்ணங்கள் விளைவால் உள அன்பை விடுத்து துப்பாக்கி முனையில் அன்பை தேடும் பிடிவாத முட்டாள் தனம் தெரிகின்றது. அன்பைவிட சிறந்த துப்பாக்கி இல்லை என அவர்கள் உணரும் காலம் உங்கள் உணர்வில் தோன்றட்டும்.
எத்தனை எத்தனை நிகழ்வுகள். இடத்துக்கு இடம், தேசத்திற்கு தேசம் தினசரி நிகழ்கின்றது.. நேசம் கொண்டவர்களே நினைப்பீர்கள் இதனை. செயல் காணுங்கள், எங்கும் மனித நேய அன்பு மலர ஆவன செய்ய நினைவு கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் மனதில் முதலில் விதை விதைத்து உரமிடுங்கள். ஒரு பூ மலர்ந்து பல பூக்கள் மலர வழிவகுக்கட்டும். அன்பு மலர்ந்து பூந்தோட்டமாகட்டும் இந்த அன்பு பூமி.

நாம் ஒவ்வொருவரும் தற்பெருமை கொள்வதில் நிகரில்லாமல் இருக்கின்றோம். அதனால் என்ன பயன். இரக்க உணர்வு இருந்தாலும் அதை வெளிப்படுத்த தயங்குகின்றோம். நமக்கு ஏன் இந்த வம்பு என விலகிச் செல்கின்றோம். நான் மிகுந்த இரக்ககுணமுடையவன். அதனால் உயிர்களிடம் அன்புடன் இருப்பேன் என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன் என்று தற்பெருமை கொள்ளுங்கள். நீங்கள் மனித நேயம் கொண்டவராக மாறுவீர்கள். ஒரு மனிதனுக்கு இரக்க உணர்ச்சியுடன் கூடிய அன்பு இயற்கையிலே இருக்கின்றது, அதை மலர விடுங்கள். மணம் வீசட்டும், அதன் பயனை யாவரும் நுகருட்டும், அதுவே உங்களுக்குப் பெருமை. அந்த தற்பெருமை கொள்ளுங்கள்.

 

உங்களைச் சுற்றியுள்ள நண்பர்கள், சுற்றத்தினர் அனைவரையும் இதுபோன்றே தற்பெருமை கொள்ள வையுங்கள். அங்கு ஓர் புதிய உலகம் உருவாகட்டும். அன்புமழை பொழியட்டும். தளிர்கள் வளரட்டும், உலக உயிர்கள் பயன் பெறட்டும். எல்லா உலக உயிர்களும் உணர்ச்சிமிக்க வாழ்வுப்பாதையின் ஆனந்த வாழ்விற்கு திருப்ப முயற்சிக்க வேண்டும்

 நீங்கள் ஒருநாளில் சந்திக்கும் நண்பர்கள், உறவினர்கள், மற்றோர் ஆகிய முகங்களில் மகிழ்ச்சியின் சாயலை எத்தனை முகங்களில் பார்க்க முடிந்தது என்றால் நீங்கள் யோசனை செய்து தேட வேண்டியிருக்கும். நம்மைச் சுற்றியுள்ளவர்களின் முகங்கள் ஒரு சோர்வு, களைப்பு, துக்கம், வெறுப்பு, தூக்கமின்மை முதலிய செய்திகளை சொல்லுவதாக இருக்கும், சந்தோஷ முகங்களைக் காண்பது என்பது அரிதாகிக் கொண்டிருக்கின்றது
ஓர் ஆய்வில் குழந்தையாயிருக்கும்போது பல நூறு தடவை சிரிக்கும் அது இளமையில் பத்தாகி பருவத்தில் ஒன்றுகூட இல்லாமல் இருப்பதன் காரணம் என்னவென்றால் மனதில் தேவையற்றவைகளை நிரப்பி இறுத்திக் கொண்டு தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்புவதால் தான் அந்நிலை.

 சிலர் சிரிக்கவேண்டிய இடத்தில்கூட சிரிப்பதில்லை. மனம் இறுகிப்போன நிலையில் எப்படி சிரிப்புத் தோன்றும். சிரித்த முகமே அழகு, அகத்தின் அழகு முதத்தில், அகம் இருளின்றி வெளிச்சமுடன், சிந்தனைகளால் குழப்பங்களின்றி தெளிவுடன் இருந்தால் அது முகத்தில் பிரதிபலிக்கும் ஒவ்வொரு புன்னகையும் நரம்புகளை செயல் படுத்தி நல்ல சுறு சுறுப்பான இயக்கத்தைக் கொடுக்கும். புன்னகை ஓர் தொற்றாகும். ஒருவரின் மலர்ந்த முகத்தைப் பார்த்த ஒருவருக்கு அது காரணமில்லாமல் தொற்றி மலரவைக்கும், காரணம் கண்டால் மேலும் மலரும். அது பலருக்கும் நன்மை பயக்கும். ஒரு முகம் மலர்ந்து மற்றமுகத்தை அது பற்றினால் முதலில் மலர்ந்திருந்த முகத்தையுடையவருக்கு என்ன தீமை விளையப் போகின்றது, நன்மையைத்தவிர வேறொன்றுமில்லை என்பதாகும்.

தீயவைகளைப்பற்றி நினையாது நல்ல செயல்களை சிந்தித்து மனம் எண்ணினால் அது அமைதி பெற்று குழப்பங்கள் குறைந்து முகத்தில் தெளிவை காட்டி மலரவைக்கும், இப்படியிருக்கும் முகத்தைப் பார்த்துதான் நாம் “இன்று நீ மிகவும் சந்தோஷமாக இருக்கின்றாய் போலிருக்கின்றது” என பழகிய ஒருவரை கேட்கமுடியும். இதுவே முகமலர்ச்சிக்கு ஆதாரம், அங்கு அன்பு மலரும். ஒளிரும். முகம் மிளிரும்.
உங்களது வாழ்க்கையில் நீங்கள் அன்புடன் ஆனந்தத்துடன் வாழ வாழ்ந்திருக்க அன்பு கொள்ளுங்கள். அன்பு காட்டுங்கள். அன்பே பிரதானம். அன்பே உலகம். உயிர்கள் ஒவ்வொன்றும் ஒரு சில பல வருடங்கள் வாழலாம் அதற்கு பின் வாழ்வு முடிவுபெற்று விடும் என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் இதுகாறும் நாம் அடைந்தவைகளைப் பற்றியும் அடைய முடியாதவைகளைப் பற்றியும் நினைந்து மிக மிக வருத்தம் அடைகின்றோம். அந்த எண்ணங்களே நம்மை துயரத்தில் ஆழ்த்தும். மன அழுத்தம் ஏற்பட்டு துன்புறுவதைவிட்டு அதனின்று வெளிவர வேண்டிய விழிப்புணர்வு நமக்குத் தேவை. அதற்கு மன அமைதி தேவை. அன்பு உள்ளம் தேவை. நம் உள்ளத்தில் அந்த அன்பிருந்தால் நம்மைச்சுற்றி அதைப் படரவிடமுடியும்.

நீங்கள் எதுவாக நினைகின்றீர்களோ அதுவாகவே ஆகின்றீர்கள். நீங்களே அது. நீங்களே அன்பு என நினையுங்கள். நீங்கள் அதுவாகவே ஆகுவீர்கள்.

சந்தோஷங்களை செயல்களால் அனுபவத்தால் உணர்ந்தால் உங்கள் மூளை விரிவடைந்து சிறப்பான செயல்பாடுகளையுடையது ஆகும்.துன்பங்கள் துயரங்களை உணர்ந்தால் அதனால் மூளையின் செயல்பாடுகள் தாக்கம் குறைந்து செயல்திறன் குறைந்துவிடும்.வாழ்வு முழுவதும் துயரங்கள் இருக்கும் அதை நாம் தீர்க்க, குறைத்துவிட, கொன்றுவிட முயலவேண்டும். அதை விடுத்து அதையே நினைவு கொண்டு அதனுள் மூழ்கி விடக்கூடாது.அன்பினால் வலி ஏற்பட்டாலும் அது ஒரு சுகமான ஆழமான நல் அனுபவத்தை நம்முள் ஏற்படுத்தும். சந்தோஷம் நம் வளர்சிக்கு உதவும். சந்தோஷம் அன்பான உணர்வுகளை எண்ணங்களை ஏற்படுத்தும். அன்பு எல்லோருக்கும் வளமான சந்தோஷங்களைத் தரும்.துன்பங்கள் நம்மை துயரத்தில் மூழ்கடித்துவிடும். துன்பத்தால் நம் உடலில் சேமித்த சக்திகள் விரையமாகிவிடும், புத்தி கூர்மை மழுங்கிவிடும். துன்பங்கள் நம்மையும் மற்றவரையும் காயப்படுத்தும்.
அன்பு மென்மையானது. யாரையும் காயப்படுத்தாது. அன்பு ஒரு தூதுவன். அது நமக்குள் தூதுபோகும். நமக்காகவும் தூது போகும். ஒருவர்மேல் கொண்ட அன்பால் நம் உள்ளம் சில செயல்களில் இணக்கம் கொண்டு தடுமாறினாலும் அந்த அன்பு உறுதியான அன்பாகும். அத்தகைய அன்பு போற்றத்தக்கது. நீங்கள் அன்பு கொண்டிருக்கும் போதும் அதை மற்றவரிடத்து காண்பிக்கும் போதும் மிகவும் மென்மைத் தன்மையுடையவராக மாறிவிடுவீர்கள். நீங்கள் முழுவதும் அர்ப்பணிக்ககூடிய பொருளாக மாறுவீர். இளகிய தன்மையுடையவராக ஆவீர். மாறாக துன்பத்தில் நீங்கள் ஓர் கடுமையான பாறை உள்ளம் கொண்டவராக திகழ்வீர்,

ஆன்மீக உலகில் அன்பும் அதன் அனுபவமும் ஆன்மீக தூதும் ஆகாயத்தைப் போன்று பரந்து விரிந்தது. எனவே “அன்பே கடவுள்’” கடவுளே அன்பு என்றார்கள். இது வானளாவிய ஒரு தத்துவமடங்கிய சொல்லாகும்.

பெரியவர் ஒருவரின் அருகில் அமர்ந்து அன்பை ஒருவன் அறிந்து கொள்ள முடிந்தால் அதனால் அவன் ஒரு தூய்மையான உடம்பை உடையவன் என்றோ, வளமான எண்ணங்களை உடையவன் என்றோ, நிறைய திட்டங்களை உடையவன் என்றோ, எழுச்சியுடையவன் என்றோ கூறமுடியாது. அப்படி நினைப்பது தவறு.

நீ நினைக்கும் அன்பு உன்னுள் ஏற்பட்ட அன்பு அது உண்ணால் ஏற்பட்டது. பெரியவரின் அருகாமை அதை உன்னுள் நினைவு கொண்டு வந்தது, அவ்வளவே. கண்களை மூடி அமைதியுடன் உங்களுக்குள் சென்று பாருங்கள். இதுகாறும் மறைந்திருந்த அன்பு பெட்டகம் திறந்திருக்கும். நீங்கள் அதை அறிந்து கொள்வீர்
நீங்கள் அன்புடன் படைக்கப்பட்டுள்ளீர்கள். அதை இப்போது உணர்ந்துள்ளீர்கள். உங்கள் உள்ளே உள்ள அன்பே கடவுள் என்பதை உணர்ந்துள்ளீர் என்பதாகும். எனவே நீங்கள் அன்பானவர். எப்போதும் அதனுடன் இருந்து சிறப்படைவீர். அன்பே சிவம்.

 நம்மிடையே தோன்றும் அன்பை மூன்று வகையாகச் சொல்லலாம். முதல் வகை- அழகு, கவர்ச்சி ஆகியவற்றால் ஏற்படுவது. அழகும் கவர்ச்சியும் நிலையானது அல்ல. அது ஒரு மாயை. எப்போது வேண்டுமானாலும் எதோ ஒரு காரணத்திற்காகவும் மாற்றம் பெறும். நிலை மாறினால் அழகும் கவர்ச்சியும் குறைந்து விடுமானால் புதிய தோற்றத்தின் நிலை பழைய தோற்றத்தைக் கண்டவருக்கு இதற்காகவா இத்தனை கஷ்டங்கள் இன்னல்கள் பட்டோம் என்ற சலிப்பை வெறுப்பை ஏற்படுத்தி அன்பை மெல்ல மெல்ல குறைத்திடும்.

இரண்டாம் வகை ஒருவரின் புகழ், பழக்கவழக்கங்களினால் தோன்றுவது. இதுவும் நிலையானது அல்ல, மாற்றம் கொள்ளக்கூடியது ஆகும். புகழ் என்பது எதாவது ஒரு காரணத்தால் எப்போதோ ஒரு சமயத்தில் வந்தது என்றால் காலப்போக்கில் அதன் மதிப்பு குறைந்துவிடும். புகழ் அவ்வப்போது தொடர்ந்து வந்து கொண்டிருக்கவேண்டும், அப்போதுதான் அந்த புகழுக்கும் மதிப்பு. அல்லது யாராலும் அதுபோன்ற சாதனை செய்ய இயலாது என்றவகை புகழாக இருக்க வேண்டும் அது நிரந்தரமானது. அப்படி திறமைகளை வெளிப்படுத்துவது என்பது பலருக்கு இயலாதது ஆகும். ஆகவே புகழனினால் ஏற்படும் அன்பும் மாற்றம் கொள்ளக்கூடியது ஆகும். ஒருவருடைய பழக்க வழக்கங்கள் எதோ ஒருவகையில் ஒருவருக்கு பிடித்திருந்தால் அதனால் அன்பு மலரலாம். அதனால் அவரது மற்ற பழக்க வழக்கங்கள் மற்றவருக்கும் பிடிக்கும் என்ற கட்டாய நிலை இல்லாததால் இதனால் ஏற்பட்ட அன்பும் மாறக்கூடியதாகும்
மேற்கண்ட இரண்டுவகை அன்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டது இந்தவகை அன்பாகும். அது தெய்வீக அன்பாகும். தெய்வத்தின் மேல் கொள்ளும் அன்பு, அதனால் மற்றவர்களின் மேல் கொள்ளும் அன்பு எனப்படும். ஆன்மீக அன்பு சிறப்பானது. எப்போதும் புதியதாக இருக்கும். மிக நெருக்கமாக அதனருகில் சென்றால் அது மிக ஆழமாக கவர்ந்திழுக்கும். அது வசதியாகவும் உற்சாகமூட்டுவதாகவும் மற்றவருக்கு துன்பம் தராததாகவும் இருக்கும். அதனால் வெறுமை ஏற்படாது. பொதுவாக அன்பு கடலைப் போல் ஆழமானது. கடலுக்கு அடிமடி உண்டு. ஆனால் அன்பிற்கு ஆழம் என்ற எல்லை கிடையாது, வானம் போன்று எல்லையற்றது.

நாம் ஏன் அப்படிப்பட்ட அன்பை ஒருவர்மேல் செலுத்த வேண்டும். இந்த உலகில் வாழ ஒவ்வொரு உயிரையும் நேசிக்க வேண்டும். அதற்கு அன்பு தேவையாயிருப்பதால் மற்றவரிடம் அன்பு கொள்கின்றோம். அன்பு செலுத்த காரணம் இரத்த சம்பந்தமான உறவாக இருக்கலாம், நம் விருப்பத்தினால் இருக்கலாம், ஆசையினால் இருக்கலாம், நட்பினால் இருக்கலாம், அல்லது இதுகாறும் சந்திக்காத அழகு, திறமை, புத்திசாலித்தனம் இவைகளில் ஒன்றாக இருக்கலாம். இந்த வகைக் காராணங்களால் ஏற்படும் அன்பு நிரந்தரமானது அல்ல. நாம் கொண்ட அன்பு அப்போது இருந்த சூழ்நிலையில் அப்போதைக்கு மட்டும்தான் என்ற நிலையாக இருக்கலாம்.

 பின் உறவு என்ற நிலையில்லாமல் நட்பாகி, சொந்தமாகி புதிய உறவாகி தினம்தினம் ஒருவர்மேல் கொள்ளும் பாசத்தினால் ஊறும் அன்பே நிரந்தரமானது.

கடவுளின்மேல் நமக்கு மிகுந்த நம்பிக்கை. கஷ்டங்கள் வந்தாலும் துன்ப துயரங்கள் ஏற்பட்டாலும் வாழ்வில் சொந்தங்களை இழந்தாலும் மீதி இருக்கும் வாழ்விற்கு அவன் உதவி செய்வான் என்ற நம்பிக்கையின் உணர்வில் தோன்றும் அன்பு மாறாததாகிவிடுகின்றது
அதைப்போன்றே நண்பர்களாயிருந்தாலும் சொந்தங்களாக இருந்தாலும் உறவுகளாக இருந்தாலும் அவர்கள் நம் வாழ்வின் பயணத்திற்கு உதவுவார்கள் என்ற நம்பிகையினால் ஏற்படும் உறுதி கொண்ட பாசம் பினைந்த அந்த ஆழமான அன்பு என்றும் மாறாது. உயர்ந்து நிற்கும். அந்த அன்பே மிக அதிக பலத்தினை ஒருவனுக்கு கொடுக்கக்கூடியது.

இப்படிப்பட்ட ஒப்புயர்வில்லா மாசில்லா தூய அன்பை அனைத்து உயிர்களும் அடைந்து வாழ்வில் ஆனந்த சந்தோஷம் கண்டு வாழ வாழ்த்தும்

அதிர்ஷ்டம்

அதிர்ஷ்டம்!

    அதிர்ஷ்டத்தைத் தேடிக்கொண்டிருக்கும் ஒருவனிடம் துளையிட்ட ஓர்காசு கிடைக்க அதிர்ஷ்டம் மிகுந்தது என நம்பி அதை தன் சட்டைப்பையில் வைத்துக் கொண்டான். அந்த நாணயத்தால் தன் வெற்றி நிச்சயம் என் நம்பினான். எல்லோரும் பாராட்டும்படி வேலை செய்தான். எல்லா பிரச்சனைகளுக்கும் சுலபமாகத் தீர்வு கண்டான். தினமும் பணிக்குப் போகும்போது அந்த நாணயம் தன் சட்டைபையில் மனைவி வைத்துவிட்டாளா, இருக்கின்றதா என தடவிப்பார்த்து உறுதி செய்து நம்பிக்கை மகிழ்வுடன் சென்றான். வாழ்வில் பலபடிகள் முன்னேறினான்.
    ஒருநாள் தன் சட்டைப்பையில் உள்ள நாணயத்தை. தனக்கு வாழ்வில் முன்னேற உதவிய அதிர்ஷ்டத்தை எடுத்துப் பார்க்க விரும்பினான். அவன் மனைவி தடுத்தும் கேளாமல் எடுத்துப் பார்த்தான். அப்போது அந்த நாணயத்தில் துளையில்லை. அதிர்ந்து போனான். அதைப்பற்றி மனைவியிடம் கேட்டபோது, பலநாட்களுக்கு முன்னால் அந்த சட்டையை எடுத்து உதறியபோது அந்த நாணயம் உருண்டோடி காணாமல் போனது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவன் வருத்தப்படுவான் என நினைத்து ஓர் துளையில்லா நாணயத்தை சட்டைப் பையில் மற்றி மாற்றி வைத்துள்ளாள் என தெரியவந்தது.
    துளையிட்ட நணயம்- அதிர்ஷ்டமானது அது தன்னிடம் இருக்கின்றது என்ற நம்பிக்கை கொடுத்த பலம்தான் அவன் வெற்றிக்குக் காரணம். நாணயத்தில் ஏதுமில்லை! நம்பிக்கைதான் வேலை செய்திருக்கின்றது.
    இந்த நிகழ்வு நம்பிக்கை என்பது நீங்கள் ஒன்று உங்கள் மேல் வைப்பது, மற்றொன்று மற்றவர்கள் மேல் வைப்பது. உங்கள்மேல் நம்பிக்கையிருந்தாலும், உங்கள் செயலில் உறுதியான நம்பிக்கை இருந்தாலும் சூழ்நிலை என்ற ஒன்று உங்களை சிக்கலில் சிக்கவைத்திட வாய்ப்புண்டு.

விதி வலியது!

விதி வலியது!

    வலிமையானது விதி என்பதற்கு நிறைய சான்றுகள் உண்டு. அபிமன்யுவின் மகனான பரீஷித் பாண்டவர்களுக்குப்பின் அரியணையில் ஏறியவன். நல்லவன். மனிதநேயம் மிக்கவன். காட்டில் வேட்டையாடும் போது ஓர் மானைத் துரத்திச் சென்றான். அங்கே முனி ஒருவர் தவமிருந்தார். அவரைப் பார்த்து தான் துரத்திய மான் இப்பக்கம் வந்ததா என் வினவினான். அவர் மௌனமாக இருக்கவே எரிச்சலடைந்தவன் அருகில் இறந்து கிடந்த பாம்பை தூக்கி அவர்மேல் வீசிவிட்டு சென்றான். அது அவன் கர்மபலன்.
    அந்த ரிஷியின் மகன் தன் தந்தையை அவமதித்தவன் பாம்பரசனால் தீண்டப்பட்டு 7இரவுக்குள் இறப்பான் எனச் சாபம் தந்தான். இதையறிந்த பரீஷித் ஒற்றைத் தூணின்மேல் மாளிகை எழுப்பி 7நாட்கள் தங்க முடிவு செய்தான். மூலிகை வைத்தியர்கள், காவலர்கள் சூழ 6நாள் கழிந்தது. மன்னன் பசியாற பழங்கள் வந்தன. அவைகளை மந்திரிகளுக்கும் கூட இருந்தோருக்கும் பகிர்ந்து அளித்து ஒரு பழத்தை எடுத்து உண்ண ஆரம்பித்தான். புழு வடிவில் உள்ளே இருந்த பாம்பரசன் தீண்ட பரீஷித் இறந்தான். எப்படி பாதுகாப்பாக இருந்தாலும் விதி எந்த வடிவத்திலும் தொடரும் என்பதே இதன் பொருள்

Friday, 19 June 2026

துறவு என்பது ஒரு நீண்ட செயல்முறை.

துறவு என்பது உலகத்தை வெறுத்து ஓடுவது அல்ல, மாறாக பற்றுக்களை அறுத்து மன அமைதியை நோக்கிய ஆன்மீகப் பயணத்தை மேற்கொள்வது ஆகும். இதற்குரிய வழிமுறைகள் உங்கள் குறிக்கோளுக்கு ஏற்ப ஆன்மீகப் பயிற்சி, தியானம் மற்றும் பற்றற்ற வாழ்க்கை முறை ஆகிய அடிப்படைகளை உள்ளடக்கியதாக இருக்கும்

1. பற்றின்மை (Vairagya) வளர்த்தல்:குடும்பம், பணம் மற்றும் பொருட்கள் மீதுள்ள அளவுக்கு மீறிய ஆசையைக் குறைத்து, சுயநலமற்ற அன்பை மற்றவர்களுக்கு அளிப்பதே முதல் படியாகும். திருக்குறள் கூறும் துறவறக் கோட்பாடுகளின்படி, “யாதனின் யாதனின் நீங்கியான்” (எந்தப் பொருளில் பற்று இல்லையோ, அந்தப் பொருளால் வரும் துன்பம் இல்லை) என்பதை உணர்ந்து வாழ வேண்டும்

2. தியானம் மற்றும் யோகக் கலை:தங்களை உணரும் ஆன்மீகப் பாதையில் பயணிக்கத் தினமும் தியானம் (Meditation) பழகுங்கள். மனம் மற்றும் புலன்களை அடக்குவது துறவு நிலையின் முக்கியமான அம்சமாகும். இது உங்கள் மனதை ஒருமுகப்படுத்தவும், தீய எண்ணங்களை அகற்றவும் உதவும்.

3. குருவின் வழிகாட்டுதல்:முறையான துறவு வாழ்க்கையை மேற்கொள்ள (சந்நியாசம்), நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஆன்மீக மரபு அல்லது மடத்தின்படி ஒரு குருவின் (ஆன்மீக வழிகாட்டி) கீழ் தீட்சை பெற வேண்டும். அவர்கள் உங்களுக்குத் தேவையான தியான முறைகளையும், வாழ்க்கை நெறிகளையும் கற்றுத் தருவார்கள்

4. சேவையும் எளிமையும்:தன்னலம் கருதாது பிறருக்கு உதவும் தொண்டுள்ளத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். எளிமையான உணவு, ஆடைகள் மற்றும் பழக்கவழக்கங்களை உங்கள் அன்றாட வாழ்வில் கடைப்பிடியுங்கள்.

5. இல்லறத் துறவு:காவி உடை அணிந்து காடுகளுக்குச் செல்வது மட்டுமே துறவு அல்ல; இல்லற வாழ்க்கையில் இருந்தபடியே உலகியல் ஆசைகளைத் தவிர்த்து, அறவழியில் வாழ்வதும் துறவுதான்



துறவு என்பது ஒரு நீண்ட செயல்முறை. அதை நோக்கி நீங்கள் எவ்வாறு செல்ல விரும்புகிறீர்கள் என்பதை அறிந்து செயல்படவேண்டும்.

Thursday, 18 June 2026

வெள்ளை எள்ளு கருப்பு எள்ளு வித்தியாசம்


வெள்ளை எள்ளு கருப்பு எள்ளு  வித்தியாசம்


ஆச்சமனம்,சங்கல்ப,தர்ப்பணம் மந்திரம்

1. ஆச்சமனம் (Āchamanam) மந்திரம்

ॐ அச்ச்யுதாய நமः
ॐ அனந்தாய நமः
ॐ கோவிந்தாய நமः

ॐ அச்ச்யுதாய நமः
ॐ அனந்தாய நமः
ॐ கோவிந்தாய நமः

2.சங்கல்ப மந்திரம் (Sankalpam)
(தர்ப்பணம் செய்வதற்கான நோக்கத்தைச் சொல்லுவது)

மம உபாத்த சமஸ்த துரித க்ஷயத்வாரா  
ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்  
பித்ரு தர்ப்பணம் கரிஷ்யே

மம உபாத்த சமஸ்த துரித க்ஷயத்வாரா  

ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்  

3. தர்ப்பணம் மந்திரம் (Tarpana Mantra)
(நீர் அர்ப்பணிக்கும் போது)

ॐ பித்ருப்யோ நமः  
ॐ பிதாமஹேப்யோ நமः  
ॐ பிரபிதாமஹேப்யோ நமः

ॐ பித்ருப்யோ நமः  

ॐ பிதாமஹேப்யோ நமः
  
ॐ பிரபிதாமஹேப்யோ நமः

தர்ப்பணம் (ஆவாஹனம்) செய்யும் மந்திரம்

ஆச்சமனம் (Āchamanam) மந்திரம்
ॐ அச்ச்யுதாய நமः
ॐ அனந்தாய நமः
ॐ கோவிந்தாய நமः
சங்கல்ப மந்திரம் (Sankalpam)
மம உபாத்த சமஸ்த துரித க்ஷயத்வாரா
ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்
பித்ரு தர்ப்பணம் கரிஷ்யே


ॐ பித்ருப்யோ நமः
ॐ பிதாமஹேப்யோ நமः
ॐ பிரபிதாமஹேப்யோ நமः
தர்ப்பணம் மந்திரம்
ॐ பித்ருப்யಃ ஸ்வதா நமः
ॐ பிதாமஹேப்யः ஸ்வதா நமः
ॐ பிரபிதாமஹேப்யः ஸ்வதா நமः

முடிப்பு மந்திரம்
ॐ தத்ஸத் பிரஹ்மார்ப்பணம் அஸ்து

பித்ரு காயத்ரி மந்திரம்

ஓம் பித்ருகணாய வித்மஹே ஜகத் தாரிணே தீமஹிதந்நோ பித்ரு: ப்ரசோதயாத்!!

தர்ப்பணம் முடிந்த பிறகு பித்ருக்களை வேண்டி இந்த காயத்ரி மந்திரத்தை ஜபிக்கலாம்:

Tuesday, 12 May 2026

வீட்டு வாசலில் 7 பச்சை மிளகாயும், ஒரு எலுமிச்சை பழத்தையும் கட்டி தொங்க விடுவது ஏன் தெரியுமா?


வீட்டு வாசலில் 7 பச்சை மிளகாயும், ஒரு எலுமிச்சை பழத்தையும் கட்டி தொங்க விடுவது ஏன் தெரியுமா?

  
வீடுகள், கடைகளில் வாசலில் எலுமிச்சை பழமும் பச்சை மிளகாயையயும் சேர்த்து கட்டி வைத்திருப்பார்களே, அதை நீங்கள் பார்த்திருப்பீர்கள், அதை ஏன் கட்டுகிறார்கள்? என்பதை தெரிந்து கொள்ளலாம்.


இந்தியாவில், தமிழகம் உட்படப் பல மாநிலங்களில், நூற்றாண்டுகளாகவே வீட்டு வாசலிலோ அல்லது கடை வாசலிலோ எலுமிச்சை மற்றும் ஏழு மிளகாய்களைக் கோர்த்துத் தொங்கவிடும் பழக்கம் உள்ளது.


spirituality lemon green chilli
மேலும் கண்டறிக
இந்திய வரலாறு
சிலர் இதை ஒரு பாதுகாப்புக் கவசமாக நம்பினாலும், வேறு சிலரோ வெறும் மூடநம்பிக்கை என்கிறார்கள். எனினும், இந்த 'நிம்பு மிர்ச்சி' வழக்கத்திற்குப் பின்னால் ஆன்மீக நம்பிக்கைகளும், ஒரு சில பண்டைய அறிவியல் தர்க்கங்களும் அடங்கியுள்ளன.


நன்கு நடந்து கொண்டிருந்த வியாபாரம், ஒருவரின் பொறாமைப் பார்வையால் சரிந்துவிட்டது என்பதை 'கண் திருஷ்டி' என்கிறோம். இந்தத் தீய பார்வையிலிருந்து பாதுகாக்கவே வாசலில் எலுமிச்சை- மிளகாய் கொத்து கட்டப்படுகிறது.

எலுமிச்சை எதிர்மறை ஆற்றல்களைத் தன்னகத்தே ஈர்த்துக் கொண்டு, மிளகாய் தீய எண்ணங்களையும் பொறாமையையும் எரிப்பதாக நம்பப்படுகிறது. இந்தக் கொத்து காய்ந்து கருப்பாக மாறும்போது, அது வீட்டை நோக்கி வந்த அத்தனை கஷ்டங்களையும், கண் திருஷ்டியையும் ஈர்த்துக் கொண்டதாகக் கருதப்படுகிறது.

வீட்டின் பிரதான வாசலில் இந்தக் கொத்தைக் கட்டுவதால், அந்த இடத்தின் சூழல் தூய்மையடைந்து, வாஸ்து தோஷங்கள் நீங்கும் என நம்பப்படுகிறது.

இது எதிர்மறை ஆற்றல் வீட்டுக்குள் வராமல் தடுத்து, தீய சக்திகளை வெளியேவே நிறுத்திவிடுகிறது. இதனால், வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் நிலைத்திருக்கும் என்பது ஒரு நம்பிக்கை.

பழங்காலத்தில் பூச்சி விரட்டும் ஸ்ப்ரேக்கள் இல்லாததால், மண் வீடுகளில் பூச்சிகளின் தொல்லை அதிகம். எலுமிச்சையின் வாசமும், மிளகாயின் கார நெடியும் பூச்சிகளை அண்டவிடாது. எனவே, இது ஒரு இயற்கையான பூச்சிவிரட்டியாகச் (Natural Repellent) செயல்பட்டது என்பது இந்த வழக்கத்தின் விஞ்ஞானப் பின்னணியாகும்.

பாரம்பரிய வழக்கப்படி, இந்த எலுமிச்சை-மிளகாய் கொத்தை வாரத்திற்கு ஒருமுறை, குறிப்பாக சனிக்கிழமைகளில் மாற்ற வேண்டும். எதிர்மறை ஆற்றல்கள் இந்தக் கொத்தில் சிக்கிக் கொள்வதாக நம்பப்படுவதால், ஒவ்வொரு வாரமும் இதைப் புதிதாக மாற்றுவது அவசியம்.

வீட்டு வாசலில் எலுமிச்சை மற்றும் மிளகாய் கட்டுவது ஒரு பாரம்பரிய நம்பிக்கையாகும். இது தீய சக்திகள், கண் திருஷ்டி மற்றும் பொறாமை போன்ற எதிர்மறை ஆற்றல்கள் வீட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும் என்று நம்பப்படுகிறது.

குறிப்பாக, செல்வத்தின் தெய்வமான லட்சுமியின் மூத்த சகோதரி 'அலட்சுமி' (மூதேவி), புளிப்பு மற்றும் காரமான பொருட்களை விரும்புவார் என்பதால், அவர் வாசலிலேயே அவற்றைப் உண்டு திருப்தியடைந்து வீட்டிற்குள் வராமல் திரும்பிச் சென்றுவிடுவார் என்பது ஐதீகம். அறிவியல் ரீதியாகப் பார்த்தால், எலுமிச்சை மற்றும் மிளகாயில் உள்ள சிட்ரிக் அமிலம் மற்றும் காரத்தன்மை பூச்சிகள் மற்றும் கிருமிகளை வீட்டிற்குள் வரவிடாமல் தடுக்கும் இயற்கை கிருமிநாசினியாகச் செயல்படுகிறது.


Saturday, 2 May 2026

AB+ ரத்த வகை கொண்டவர்கள்

AB+ ரத்த வகை கொண்டவர்கள் (AB+ Positive) பொதுவாக புத்திசாலிகள், அமைதியானவர்கள், மற்றும் A, B வகை ரத்த குணங்கள் கலந்த கலவையான ஆளுமை உடையவர்கள். இவர்கள் குளிர்ச்சியான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட (cool and controlled) மனநிலை உடையவர்கள், மற்றும் மற்றவர்களுடன் எளிதாகப் பழகும் தன்மையைக் கொண்டவர்கள்.AB+ ரத்த வகை ஆளுமை பண்புகள் (Tamil):பகுத்தறிவு மற்றும் புத்திசாலித்தனம்: இவர்கள் தர்க்கரீதியாகச் சிந்திக்கக்கூடியவர்கள் மற்றும் கூர்மையான புத்திசாலிகள்.இரட்டை குணம் (Dual Personality): A மற்றும் B குணங்கள் கலந்திருப்பதால், சில சமயம் கூச்ச சுபாவத்துடனும், சில சமயம் மிகவும் நட்பாகவும் இருப்பார்கள்.எளிதில் பழகும் தன்மை: சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளும் திறன் (adaptable) உடையவர்கள்.மறதி மற்றும் பொறுப்பின்மை: புத்திசாலியாக இருந்தாலும், மறதி குணம் அதிகம் மற்றும் சில நேரங்களில் பொறுப்பில்லாமல் செயல்படுவார்கள்.தந்திர மூளை: சிக்கலான சூழ்நிலைகளையும் எளிதாகக் கையாண்டு, தந்திரமாக முடிவெடுக்கும் திறன் கொண்டவர்கள்.கவலை இல்லாதவர்: எப்போதும் கூலாக (Cool) இருப்பார்கள், தேவையற்ற கவலைகளில் சோர்ந்து இருக்க மாட்டார்கள்.குறிப்பு: ரத்த வகைக்கும் ஆளுமைக்கும் இடையிலான தொடர்பு என்பது ஒரு கலாச்சார நம்பிக்கை (குறிப்பாக ஜப்பான்) மட்டுமே

Wednesday, 29 April 2026

Snake Bites Mongoose கீரி கடித்தால் பாம்பு காலி.. பாம்பு கடித்தால் கீரிக்கு ஏன் ஒன்றும் ஆவதில்லை?



கீரி கடித்தால் பாம்பு காலி.. பாம்பு கடித்தால் கீரிக்கு ஏன் ஒன்றும் ஆவதில்லை? பவர்ஃபுல் உண்மை இதுதான்

இயற்கையின் விசித்திரமான படைப்பில் பாம்பு மற்றும் கீரிக்கு இடையிலான பகை என்பது காலங்காலமாகத் தொடரும் ஒரு தீராத போராகும்.. இதற்கு என்ன காரணம் தெரியுமா? பாம்புக்கும் கீரிக்கும் நடக்கும் சண்டையில் பெரும்பாலும் கீரியே வெற்றி பெறுகிறது...இதற்கு என்ன காரணம் தெரியுமா? பாம்பு கடித்தால் கீரிக்கு ஏன் விஷம் ஏறுவதில்லை தெரியுமா? இங்கே அவைகளை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.


பாம்பு, கீரி இவை இரண்டுமே நிலப்பரப்பில் வாழும் மிகச்சிறந்த வேட்டையாடிகள்.. அதனால்தான் உணவு மற்றும் இருப்பிடத்திற்காக இவற்றுக்கிடையே அடிக்கடி மோதல்கள் ஏற்படுகின்றன..


Snake Bites Mongoose

தனது குட்டிகளைப் பாம்புகளிடமிருந்து பாதுகாக்கவும் அதே சமயம் பாம்பையே தனது உணவாக மாற்றவும் கீரி துணிச்சலுடன் பாம்பை எதிர்கொள்கிறது,. அபாரமான வேகம் மற்றும் துல்லியமான தாக்குதல் உத்திகளே முக்கிய காரணமாக அமைகின்றன.

பெரியளவில் சரியும்? | "இது" நடந்தால் நிச்சயம் குறையும்! - 
கீரி - பாம்பு சண்டை ஏன்
பாம்பின் தாக்குதலை முன்கூட்டியே கணித்து மின்னல் வேகத்தில் விலகி செல்லும் ஆற்றல் கொண்ட கீரி, பாம்பினை அலைக்கழித்து அலைக்கழித்து டயர்ட் ஆக்கிவிடுமாம்.. பிறகு சரியான தருணம் வரும்போது பாம்பின் தலையை தனது கூர்மையான பற்களால் கவ்விப் பிடித்து மண்டை ஓட்டைத் தகர்த்து அதைக் கொன்றுவிடக்கூடி சக்தி படைத்ததாம் கீரி.

அதேபோல பாம்பு எத்தனை முறை தீண்டினாலும் கீரி உடம்பில் விஷம் ஏறுவதில்லை. அது ஏன் தெரியுமா? கீரியின் உடலில் உள்ள தடிமனான முடிகள் ஒரு பாதுகாப்பு கவசம் போலச் செயல்பட்டு பாம்பின் பற்கள் அதன் தோலை ஆழமாகத் துளைக்காதவாறு பார்த்துக் கொள்கின்றன..



பாம்பின் விஷம்
அதுமட்டுமல்ல, பொதுவாக நமது நரம்பு மண்டலத்தில் தகவல்களை கடத்தவும் தசை இயக்கம் மற்றும் இதயத் துடிப்பை சீராக வைக்கவும் அசிடைல் கோலின் என்ற என்சைம் தேவையாகும்.

பாம்பின் விஷத்தில் உள்ள "ஆல்பா நியூரோடாக்சின்" என்ற வேதிப்பொருள் இந்த அசிடைல் கோலினைப் போலவே உருமாறி நரம்பு செல்களில் உள்ள ரிசப்டார் என்ற பகுதியை ஆக்கிரமித்துவிடுமாம்.. இதனால் மூளையிலிருந்து செல்லும் தகவல்கள் தடைபட்டு சுவாசம் நின்று மற்ற உயிரினங்களுக்கு மரணம் நிகழ்வதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் கீரியின் உடலில் இயற்கையிலேயே ஏற்பட்டுள்ள ஒரு தனித்துவமான மரபணு மாற்றத்தால் அதன் ரிசப்டார் அமைப்பு மற்ற பாலூட்டிகளை விட மாறுபட்ட வடிவத்தில் காணப்படுகிறது. அதன் உடலமைப்பும் டிஎன்ஏ மாற்றமுமே அதற்கு இயற்கை கொடுத்த மிகப்பெரிய வரமாகும்.


பாம்புகள் கடித்தால் குதிரை இறக்காதா? பாம்பின் விஷம் செலுத்தி எப்படி மருந்து தயாரிக்கிறார்கள்?
பாம்புகள் கடித்தால் குதிரை இறக்காதா? பாம்பின் விஷம் செலுத்தி எப்படி மருந்து தயாரிக்கிறார்கள்?
நரம்பு மண்டலம் அமைப்பு
அதனால்தான் பாம்பின் விஷம் கீரியின் நரம்பு மண்டலத்தோடு ஒட்ட முடியாமல் போகிறது.. விஷம் உள்ளே சென்றாலும் நரம்புத் தகவல்கள் தடையின்றி நடப்பதால் கீரி உயிர் பிழைத்து விடுகிறது.. இதுமட்டுமின்றி கீரியின் ரத்தத்தில் உள்ள ஒரு வகை கிளைகோ புரோட்டீன் ரத்தத்தில் கலக்கும் விஷத்துடன் பிணைக்கப்பட்டு அதன் வீரியத்தை முழுமையாக நடுநிலையாக்க உதவுகிறதாம்.

இருந்தாலும் ஒரு பெரிய பாம்பு அதிகப்படியான விஷத்தை மீண்டும் மீண்டும் செலுத்தினால் கீரியும் உயிரிழக்க வாய்ப்பு உண்டு என்பது இயற்கையின் சமநிலையாகும்.. இந்தியாவில் சாம்பல் நிறக் கீரிகள் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகின்றன என்பதால் அவற்றின் முடிகளுக்காக வேட்டையாடுவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.. இத்தகைய அரிய உயிரினங்களைப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்..!!!




Friday, 24 April 2026

LPG, PNG, CNG, LNG... வித்தியாசம் என்ன? எது பாதுகாப்பானது? எங்கு பயன்படுத்தப்படுகிறது?


LPG, PNG, CNG, LNG... வித்தியாசம் என்ன? எது பாதுகாப்பானது? எங்கு பயன்படுத்தப்படுகிறது?

LPG, PNG, CNG மற்றும் LNG போன்ற பெயர்களைக் கேட்டவுடன் பலருக்கும் குழப்பமாக இருக்கிறது. இவற்றுக்கு இடையே உள்ள வித்தியாசம், எந்த எரிவாயு எதற்கு சிறந்தது என்று மக்கள் குழம்புகிறார்கள்.


1/8
LPG, PNG, CNG, LNG.. வித்தியாசம் என்ன? எது பாதுகாப்பானது?
இன்றைய காலகட்டத்தில் எரிவாயு சமையலறைக்கு மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. நம் வீடுகள், வாகனங்கள் மற்றும் பெரிய தொழிற்சாலைகள் என தற்போது அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், LPG, PNG, CNG மற்றும் LNG போன்ற பெயர்களைக் கேட்டவுடன் பலருக்கும் குழப்பமாக இருக்கிறது. இவற்றுக்கு இடையே உள்ள வித்தியாசம், எந்த எரிவாயு எதற்கு சிறந்தது என்று மக்கள் குழம்புகிறார்கள். உண்மையில், இந்த நான்கு வாயுக்களும் ஒரே ஆற்றல் குடும்பத்தைச் சேர்ந்தவை. ஆனால் அவற்றின் பயன்பாடு, சேமிப்பு மற்றும் விநியோக முறைகள் வேறுபட்டவை. இதுப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.


2/8
LPG, PNG, CNG, LNG.. வித்தியாசம் என்ன? எது பாதுகாப்பானது?
மாறிவரும் இந்த ஆற்றல் யுகத்தில், இந்தியாவும் படிப்படியாகத் தூய்மையான மற்றும் திறமையான எரிபொருட்களை நோக்கி நகர்கிறது என்றே சொல்ல வேண்டும். இத்தகைய சூழ்நிலையில், இந்த எரிவாயுவை வெறும் தகவலுக்காக மட்டும் புரிந்து கொள்வதை விட, தற்போது அது அவசியமாகிவிட்டது. ஏனெனில், வரும் காலங்களில் இந்த எரிவாயு உங்கள் வாழ்க்கை முறை மற்றும் செலவுகள் இரண்டையும் தீர்மானிக்கும்.


3/8

LPG என்றால் என்ன, எங்கு பயன்படுத்தப்படுகிறது?: திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) என்பது உங்கள் வீட்டு சிலிண்டரில் பயன்படுத்தும் பொதுவான எரிவாயு ஆகும். இந்த எரிவாயு, புரோப்பேன் மற்றும் பியூட்டேன் ஆகியவற்றின் கலவையாகும். மேலும், இது அழுத்தத்தின் கீழ் திரவ வடிவில் வைக்கப்படுகிறது. எல்பிஜியின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், அதை எங்கும் எளிதாகக் கொண்டு செல்ல முடியும். இதனால்தான் இது கிராமங்கள் முதல் நகரங்கள் வரை மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயுவாக உள்ளது. இருப்பினும், சிலிண்டர்களை மாற்றுவதில் உள்ள சிரமம் மற்றும் சேமிப்புக் கட்டுப்பாடுகள் போன்ற சிக்கல்களும் இதில் உள்ளன.


4/8

PNG என்றால் என்ன, ஏன் பிரபலமாகி வருகிறது?: குழாய்வழி இயற்கை எரிவாயு (PNG) என்பது ஒரு குழாய் மூலம் நேரடியாக வீடுகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. இதற்கு சிலிண்டர்கள் தேவையில்லை. மேலும், எரிவாயு விநியோகம் தொடர்ச்சியாக இருக்கும். பிஎன்ஜியின் மிகப்பெரிய நன்மை, அதன் வசதி மற்றும் பாதுகாப்பு ஆகும். எரிவாயு தீர்ந்துவிடும் என்ற அச்சம் இல்லை. மேலும், கசிவு ஏற்படும் அபாயமும் குறைவு. இதனால்தான் பெரிய நகரங்களில் எல்பிஜிக்கு பதிலாக பிஎன்ஜி பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
advertisement

5/8

CNG என்றால் என்ன, எங்கு பயன்படுத்தப்படுகிறது?: அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) என்பது முக்கியமாக வாகனங்களில் பயன்படுத்தப்படுகிறது. இது அதிக அழுத்தத்தில் சேமிக்கப்படுகிறது. மேலும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மலிவான மற்றும் தூய்மையான மாற்றாக இது கருதப்படுகிறது. சிஎன்ஜியில் இயங்கும் வாகனங்கள் குறைந்த மாசுபாட்டை ஏற்படுத்துவதோடு, அதிக மைலேஜையும் தருகின்றன. இதனால்தான் இந்தியாவில் பொதுப் போக்குவரத்து மற்றும் தனியார் வாகனங்களில் இதன் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது.


6/8

LNG என்றால் என்ன, அது ஏன் மிகவும் மேம்பட்டது?: திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) என்பது மிகக் குறைந்த வெப்பநிலையில் திரவமாக மாற்றப்படும் ஒரு வகை இயற்கை எரிவாயு ஆகும். இது வாயுவின் கன அளவை வெகுவாகக் குறைத்து, நீண்ட தூரங்களுக்குக் கொண்டு செல்வதை எளிதாக்குகிறது. LNG பெரிய தொழிற்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் பயன்படுத்தப்படுகிறது. இது அதிக செயல்திறன் மிக்க மற்றும் குறைந்த மாசுபாட்டை ஏற்படுத்தும் எரிபொருளாக இருப்பதால், ஆற்றலின் எதிர்காலமாகக் கருதப்படுகிறது.


7/8

முக்கிய வேறுபாடு என்ன?: எளிமையாகச் சொன்னால், LPG சிலிண்டர்களில் வருகிறது. PNG குழாய்கள் மூலம் வீடுகளுக்கு செல்கிறது. CNG வாகனங்களில் பயன்படுத்தப்படுகிறது மற்றும் LNG பெரிய அளவிலான தொழிற்சாலைகள் மற்றும் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த நான்கிற்கும் இடையிலான மிகப்பெரிய வேறுபாடு அவற்றின் சேமிப்பு மற்றும் பயன்பாடே ஆகும். LPG மற்றும் PNG வீட்டுத் தேவைகளுக்கானதாக இருக்கும் நிலையில், CNG மற்றும் LNG ஆகியவை பெரிய அளவிலான போக்குவரத்து மற்றும் தொழில்துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.


8/8
 எது பாதுகாப்பானது?
பாதுகாப்பு, வசதி: பாதுகாப்பைப் பொறுத்தவரை, PNG மற்றும் CNG ஆகியவை பாதுகாப்பானவையாகக் கருதப்படுகின்றன. ஏனெனில், அவை காற்றை விட லேசானவை என்பதால், கசிவு ஏற்பட்டால் காற்றில் விரைவாகப் பரவிவிடும். ஆனால், LPG காற்றை விட கனமானது என்பதால், அது தரையில் படிந்து ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். வசதியைப் பொறுத்தவரை, PNG சிறந்தது. ஏனெனில், அதன் கட்டணமும் பயன்பாட்டின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

திருஷ்டி (பார்வை) என்றால் என்ன?

திருஷ்டி (பார்வை) என்றால் என்ன?
"திருஷ்டி" என்ற சமஸ்கிருத சொல்லின் நேர்பொருள் "பார்வை" அல்லது "கண்ணோட்டம்." ஜோதிடத்தில், ஒவ்வொரு கிரகமும் தனது நிலையிலிருந்து 7-வது பாவத்தைப் பார்க்கிறது.

ஆனால் மூன்று கிரகங்கள் கூடுதல் சிறப்பு பார்வைகளைக் கொண்டுள்ளன: செவ்வாய் 4-வது மற்றும் 8-வது பாவங்களையும், குரு 5-வது மற்றும் 9-வது பாவங்களையும், சனி 3-வது மற்றும் 10-வது பாவங்களையும் பார்க்கிறார்கள்.

பார்வை = தாக்கம். குருவின் பார்வை நன்மை செய்யும் — பாதுகாக்கிறது, விரிவாக்குகிறது. சனியின் பார்வை கட்டுப்படுத்தும் — தாமதிக்கிறது, ஒழுங்குபடுத்துகிறது. செவ்வாயின் பார்வை ஆக்கிரமிப்பு — ஆற்றல் தருகிறது, மோதலை உருவாக்குகிறது

Thursday, 23 April 2026

புளூ கலர் மர்மம்.. வாக்கு போட்டும் அழியாத நீல குறி எப்படி உருவாகுது? தேர்தல் மையின் அறிவியல் உண்மை



புளூ கலர் மர்மம்.. வாக்கு போட்டும் அழியாத நீல குறி எப்படி உருவாகுது? தேர்தல் மையின் அறிவியல் உண்மை

  
 தேர்தல் வந்துவிட்டாலே நம்முடைய எல்லோருடைய விரல்களிலும் இடம்பிடிக்கும் அந்த சிறு நீல நிறக் குறி, வெறும் மை கிடையாது, அது ஒரு நாட்டின் ஜனநாயக நேர்மையை உறுதிப்படுத்தும் மிகச்சிறந்த அறிவியல் ஆயுதம் என்றே சொல்லலாம்.. ஒருமுறை வாக்களித்தவர் மறுபடியும் வாக்களிப்பதைத் தடுக்கும் இந்த "அழியாத மை"யை, ஆங்கிலத்தில் Indelible Ink என்பார்கள்.. இந்த மை எப்படி செயல்படுகிறது? இதன் பின்னணியில் உள்ள சுவாரசியமான அறிவியல் தகவல்கள் என்னென்ன? என்பதைப் பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.


தேர்தல் முடிந்ததுமே ஒரு நபர் மீண்டும் ஓட்டு போட முடியாமல் தடுப்பதற்காக இந்தியாவில் பயன்படுத்தப்படும் முக்கியமான முறைகளில் ஒன்று "மறையாத மை ஆகும்.. இந்த மை பொதுவாக வாக்காளரின் வலது கை சுட்டுவிரலில், ஓட்டு பதிவு செய்த உடனே பூசப்படுகிறது..



மேலும் கண்டறிக
இந்த மையின் ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா? இது சாதாரண தண்ணீரால் கழுவினாலும் அழியாது.. சோப்பு போட்டு கழுவினாலும் அழியாது..



இந்த மையின் முக்கிய அடிப்படை ரசாயனம் "சில்வர் நைட்ரேட்" ஆகும்.. இது தோலின் மேல்தோல் பகுதியுடன் வேதியியல் மாற்றம் ஏற்படுத்தி, அழியாத கறை உருவாக செய்கிறது.. இப்படியொரு சூப்பர் யோசனை, முதல் தேர்தல் முறையின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் முக்கிய கருவியாக இது பயன்படுத்தப்பட்டு வருகிறது..

எப்படி மை செயல்படுகிறது
இந்த மை விரலில் வைக்கப்பட்டவுடன், அது தோலில் உள்ள புரதச்சத்துடனும், இயற்கையாக இருக்கும் ஈரப்பதத்துடனும் வினைபுரிகிறது. இந்த வேதிவினையின் விளைவாக, அது தோலில் ஒரு நிரந்தரமான கறையை உருவாக்குகிறது.

இது ஏன் சோப்பு போட்டு கழுவினாலும் போவதில்லை தெரியுமா? ஏனென்றால் இது தோலின் மேல்புறத்தில் ஒட்டிக்கொள்வது கிடையாது.. மாறாக தோலின் செல்களுக்குள்ளேயே ஊடுருவி ஒரு பிணைப்பை ஏற்படுத்திக்கொள்கிறது. அதனால்தான் சோப்பு மட்டுமல்ல, பெட்ரோல் அல்லது எந்த விதமான திரவங்களை கொண்டு தேய்த்தாலும் இந்த கறை நீங்காது.

தோலின் செல்கள் இயற்கையாகவே உதிர்ந்து, புதிய செல்கள் உருவாகும் வரை அப்படியே இருக்கும்.. இப்படி தோலின் செல்கள் உதிர்வதற்கு குறைந்தது சுமார் 2 முதல் 4 வாரங்கள் வரை ஆகும்.. அதுவரை இந்த கறையின் அடையாளம் மறையாது... தோல் இயல்பாக புதிதாக உருவாகும்போது தான் அந்த கறை மெல்ல மெல்ல மறைய துவங்கும்.

மை ஸ்பெஷாலிட்டி
நம்முடைய இந்தியாவில் தேர்தல் முறைகேடுகளைத் தவிர்க்கவும், கள்ள வாக்குகளைத் தடுக்கவும் ஒரு வழிமுறை தேவைப்பட்டது... இதற்காக, இந்தியத் தேர்தல் ஆணையம் ஒரு தீர்வை தேடியபோது, (National Physical Laboratory of India அதாவது தேசிய இயற்பியல் ஆய்வகம் இந்த மையை உருவாக்கியது.

முதன்முதலில் 1962ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில்தான் இந்த மை அறிமுகப்படுத்தப்பட்டது. அன்று முதல் இன்று வரை, இந்தியாவின் ஜனநாயக பயணத்தில் இந்த மை பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டது. இந்த மை செய்யும் வேலையையும், வெற்றியையும் பார்த்து, இன்று கனடா, துருக்கி, தென் ஆப்பிரிக்கா என உலகின் 30-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவிலிருந்து இந்த மையை இறக்குமதி செய்து தங்கள் நாட்டுத் தேர்தல்களுக்குப் பயன்படுத்துகின்றன.


மை உற்பத்தியின் பின்னணி
அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த மையை தயார் செய்வது மிகப்பெரிய பிராசஸ் ஆகும்..இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு தேவையான இந்த மையைத் தயாரிக்கும் பிரத்யேக உரிமையை மைசூர் பெயிண்ட்ஸ் அண்ட் வார்னிஷ் லிமிடெட் (Mysore Paints and Varnish Ltd) பெற்றுள்ளது. இது கர்நாடக அரசுக்கு சொந்தமான ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும்.. பல வருடங்களாகவே இந்திய தேர்தல்களுக்கு தேவையான இந்த சிறப்பு மை இவர்கள் தான் வழங்கி வருகிறார்கள்.

தேர்தல் காலங்களில் கோடிக்கணக்கான பாட்டில்கள் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியா முழுவதும் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பப்படுகின்றன. இதன் ரசாயனக் கலவை, மிக மிக சீக்ரெட்டாகவே பாதுகாக்கப்படுகிறது.

தேர்தல் நேரத்தில் ஏன் இது முக்கியமானது?
வாக்காளர் அடையாள அட்டை முதல் டிஜிட்டல் முறைகள் வரை பல பாதுகாப்பு அம்சங்கள் இருந்தாலும், வாக்குச் சாவடியில் இருக்கும் ஒரு அதிகாரிக்கு, ஒரு நபர் ஏற்கனவே வாக்களித்துவிட்டாரா இல்லையா என்பதை கண்டறிய விரலில் இருக்கும் இந்த அடையாளமே மிக எளிமையான மற்றும் நம்பகமான வழி என்றே சொல்லலாம்.. இது தேர்தல் முறைகேடுகளைத் தடுத்து, "ஒருவருக்கு ஒரு வாக்கு" என்ற ஜனநாயக விதியை உறுதி செய்கிறது...

இந்த சாதாரணமாக தோன்றும் ஊதா நிற மை, ஜனநாயகத்தின் நேர்மையை பாதுகாக்கும் ஒரு முக்கிய அறிவியல் கருவியாக உலகம் முழுவதும் மதிக்கப்படுகிறது..

அந்தவகையில், வாக்குச்சாவடியிலிருந்து வெளியே வரும்போது நம்முடைய விரலில் மின்னும் அந்த நீல நிறக் கறை, நாம் ஒரு பொறுப்புள்ள குடிமகன் என்பதற்கான சான்று மட்டுமே கிடையாது, அது இந்திய அறிவியலின் ஒரு மகத்தான வெற்றியும் கூட...!!!


Monday, 20 April 2026

இந்தியாவுக்குள் இந்தியர்களுக்கே அனுமதி மறுக்கப்படும் இடங்கள்..



இந்தியாவுக்குள் இந்தியர்களுக்கே அனுமதி மறுக்கப்படும் இடங்கள்.. என்னென்ன? தமிழ்நாட்டில் மட்டும் 3 இடம் இருக்குதாம்?

இந்தியர்களாகிய நாம் இந்தியாவில் எந்த இடத்திற்கும், எந்த பகுதிக்கும் செல்ல அனுமதி உண்டு. சில முக்கிய இடங்களுக்கு செல்ல அரசு அனுமதி பெறவேண்டிய கட்டாயம் உள்ளது. இப்படியான நம் இந்தியாவிற்குள் சில இடங்களுக்கு இந்தியர்களாகிய நமக்கே அனுமதி இல்லை என கூறப்படுகிறது. அப்படியான இடம் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம். 

சென்னையில் உள்ள ரெட் லாலிபாப் விடுதி இந்தியர்களுக்கு அனுமதி இல்லை என கூறப்படுகிறது. அந்த விடுதியில் வெளிநாட்டினர்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்படுவதாகவும் பாஸ்போர்ட் கொடுத்தால் மட்டுமே அனுமதி போன்ற கட்டுப்பாடுகள் உள்ளதாக கூறப்படுகிறது.



லட்சக்கணக்கான வெளிநாட்டினரை ஈர்க்கும் சுற்றுலாத்தலம் கோவா. விதவிதமான கடற்கரைக்கு பெயர்போன கோவாவில், சில கடற்கரைகளில் இந்தியர்களுக்கு அனுமதி இல்லை என கூறப்படுகிறது. வெளிநாட்டு பயணிகளின் ப்ரைவஸியை பாதுகாக்க இவ்வாறு செய்வதாக கூறப்படுகிறது.


1800-களில் ரஷ்யா அரசால் கட்டப்பட்ட இடம் ரஷ்ய காலனி. கூடங்குளத்தில் அமைத்துள்ள இந்த காலனிக்கு இந்தியர்கள் செல்ல அனுமதியில்லையாம். ரஷ்ய அரசிடம் அனுமதிபெற்ற சிலர் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
சென்னையில் அமைந்துள்ள ப்ரண்ட்ஸ்லேண்ட் ஹோட்டலுக்கு இந்தியர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என கூறப்படுகிறது. அதிகாரபூர்வமாக இல்லாவிட்டாலும் வெளிநாட்டினர்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்படும் என கூறப்படுகிறது.


அகமதாபாத்தில் அமைத்துள்ள சகுரா ரியோகான் உணவகம் இந்தியர்களுக்கு அனுமதி இல்லை என கூறப்படுகிறது. ஜப்பான் வாடிக்கையாளர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.


இமாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ள ஃப்ரீ கசோல் கஃபே, இந்தியர்களுக்கும், உள்ளூர் மக்களுக்கும் அனுமதி கொடுப்பதில்லை என கூறப்படுகிறது. இந்த உணவகம் இஸ்ரேல் சுற்றுலா பயணிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.


Friday, 17 April 2026

3x2x1 பெஸ்ட் ஃபார்முலா.. ஆரோக்கிய வாழ்வுக்கு உதவும் 10-3-2-1 விதி! இரவில் நல்ல தூக்கம்

நிம்மதியான உறக்கத்தைப் பெற, உலகத்தரம் வாய்ந்த '3-2-1' மற்றும் '10-3-2-1' ஆகிய எளிய விதிமுறைகள் இப்போது பெரும் தீர்வாக முன்வைக்கப்படுகின்றன. வெறும் தூக்கம் மட்டுமல்லாது, ஜப்பான் நாட்டின் புகழ்பெற்ற இடைவெளி நடைப்பயிற்சியும் இணைந்து ஒரு மனிதனின் வாழ்நாளை ஆரோக்கியமாக மாற்றும் ரகசியங்களை இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
இன்றைய பரபரப்பான இயந்திர வாழ்க்கையில் நிம்மதியான உறக்கமும் முறையான உடற்பயிற்சியும் எட்டாக்கனியாகி வரும் நிலையில், உடல் நலனைப் பேண புதிய எளிய வழிமுறைகள் உலகெங்கும் வைரலாகி வருகின்றன.
குறிப்பாக, 3-2-1 என்ற தூக்க ஃபார்முலாவும், ஜப்பான் நாட்டின் பிரத்யேக நடைப்பயிற்சியும் ஆரோக்கிய ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த நவீன வாழ்வியல் மாற்றங்கள் எவ்வாறு ஒரு மனிதனின் வாழ்நாளை மேம்படுத்துகின்றன என்பதை விரிவாகப் பார்ப்போம்

ஜப்பான் நாட்டு 3-2-1 ஃபார்முலா
ஆரோக்கியமான வாழ்விற்கு அடிப்படை ஆதாரமாக விளங்குவது ஆழ்ந்த உறக்கம். ஒரு மனிதன் தினமும் 6 முதல் 8 மணி நேரம் வரை தடையற்ற தூக்கத்தைப் பெற வேண்டும் என்று டாக்டர்கள் வலியுறுத்துகிறார்கள். இதற்கு தடையாக இருப்பவை நாம் பயன்படுத்தும் எலக்ட்ரானிக் சாதனங்கள் தான்.

கம்ப்யூட்டர், கணினி, செல்போன் போன்றவற்றிலிருந்து வெளியாகும் நீல ஒளியானது, மூளையைத் தூண்டி உறக்கத்தை தள்ளிப்போடுகிறது. இதைத் தவிர்க்கவும், மெலடோனின் என்ற ஹார்மோன் சுரப்பைச் சீராக்கவும் '3-2-1' மற்றும் '10-3-2-1' ஆகிய விதிகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

3-2-1 விதியின்படி, தூங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பே கடினமான உணவுகள் மற்றும் மது குடிப்பதை தவிர்த்துவிட வேண்டும். 2 மணி நேரத்திற்கு முன்பாகவே மனதை அமைதிப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டு, வேலைப்பழுவில் இருந்து விடுபட வேண்டும்.

இன்டர்வெல் வாக்கிங் ட்ரெய்னிங் (IWT)
அதைவிட மிக முக்கியமாக, தூங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பே செல்போன், டிவி பயன்பாட்டை முழுமையாக நிறுத்திவிட வேண்டும். இதற்கும் ஒருபடி மேலே சென்று, தூங்குவதற்கு 10 மணி நேரத்திற்கு முன்பே காஃபின் கலந்த பானங்களை நிறுத்திவிடுவது நரம்பு மண்டலத்திற்கு ஓய்வைத் தரும். மேலும், தூங்கும் முன் பாதங்களில் தேங்காய் அல்லது பாதாம் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதும், சோம்புத் தண்ணீர் குடிப்பதும் செரிமானத்தைச் சீராக்கி ஆழ்ந்த உறக்கத்திற்கு வழிவகுக்கும்.

தூக்கத்தைப் போலவே உடற்பயிற்சியிலும் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது ஜப்பான் நாட்டின் "இன்டர்வெல் வாக்கிங் ட்ரெய்னிங்" (IWT). ஷின்ஷு பல்கலைக்கழக பேராசிரியர்களால் உருவாக்கப்பட்ட இந்த முறை, சாதாரண நடைப்பயிற்சியை விட பல மடங்கு அதிக பலன்களைத் தரக்கூடியது.

3 X 3 ஃபார்முலா
இதன் அடிப்படை '3:3' என்ற சுழற்சியாகும். அதாவது, 3 நிமிடங்கள் மிக வேகமாக நடப்பதும், அடுத்த 3 நிமிடங்கள் மெதுவாக நடப்பதுமாக மாற்றி மாற்றிச் செய்ய வேண்டும். இந்தச் சுழற்சியைத் தினமும் 5 முறை, அதாவது மொத்தம் 30 நிமிடங்கள் செய்தால் போதும்.

தினமும் 10,000 அடிகள் நடப்பதை விட, இந்த 30 நிமிட ஜப்பான் நடைப்பயிற்சி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, தசைகளுக்கு அதிக வலுவூட்டுகிறது.

இது உடலில் கலோரி எரிப்பை அதிகரிப்பதுடன், ரத்த அழுத்தத்தைச் சீராக வைக்கவும் உதவுகிறது. வயதானவர்கள் மற்றும் மூட்டு வலி இருப்பவர்கள் கூட தங்கள் உடல் நிலைக்கு ஏற்ப வேகத்தைக் குறைத்தோ அல்லது கூட்டியோ இந்தப் பயிற்சியைச் செய்யலாம். வாரத்திற்கு 5 நாட்கள் இந்த நடைப்பயிற்சியையும், இரவு நேரங்களில் முறையான தூக்க விதிகளையும் பின்பற்றினால், நோயற்ற நீண்ட ஆயுளைப் பெறுவது உறுதி.

Saturday, 11 April 2026

எந்த இடத்தில் மச்சம் இருந் அதிர்ஷ்டம் தெரியுமா?

எந்த இடத்தில் மச்சம் இருந் அதிர்ஷ்டம் தெரியுமா?

வலது தோள்: தன்னம்பிக்கை, தைரியம்

இடது தோள்: குடும்ப வாழ்வில் வெற்றி

நெற்றி நடுவே: புகழ், பதவி, அந்தஸ்து

நெற்றி வலது: தைரியம், பணிவின்மை

நெற்றி இடது: அற்பகுணம், முன்கோபி

வலது அக்குள்: அதிக காமப்பற்று

இடது அக்குள்: தாய்மை இழப்பு

கீழ் உதடு: ஒழுக்கம், உயர்ந்த குணம்

மேல் உதடு: கூடா நட்பு, ஒழுக்கமின்மை

மூக்கு நுணி: வசதி வாழ்க்கை, ஏமாற்றம்

வலது கன்னம்: படபடப்பு, ஏற்ற இறக்க நிலை

இடது கன்னம்: வசீகரம், விரும்பிய வாழ்க்கை

வலது கழுத்து: பிள்ளைகளால் யோகம்

இடது கழுத்து: வாழ்க்கை துணையால் யோகம்

வலது கண் இமை: கஷ்டம், நஷ்டம்

இடது கண் இமை: வாழ்வில் ஏற்ற இறக்கம்

தொப்புள் மேல்: அமைதி, அன்பான துணை

தொப்புள் கீழ்: நஷ்டம், அமைதியின்மை

வலது மார்பு: படிப்படியாக முன்னேற்றம்

இடது மார்பு: உணர்ச்சிகள் அதிகம்

நடு மார்பு: போராட்ட வாழ்க்கை.

அடிவயிறு: ராஜ யோகம், உயர் பதவி

வலது தொடை: ஆணவம், தலைக்கனம்

இடது தொடை: தடுமாற்றம் தயக்கம்

பிறப்புறுப்பு: திருமணம் கடந்த உறவு

வலது புட்டம்: சுகம், காதல்,அவமானம்


Tuesday, 24 March 2026

முயலகனின் கதை

முயலகனின் கதை (Apasmara Story in Tamil):
அறியாமையின் உருவம்: முனிவர்கள் மற்றும் மக்களிடையே ஆணவம், அறியாமை (Apasmara) தலைதூக்கியபோது, சிவபெருமான் அவற்றை அழிக்க முயன்றார்.
அழிவற்ற வரம்: அபஸ்மரன் பிரம்மனிடமிருந்து அழியாத வரம் பெற்றிருந்தான். அவனை முற்றிலும் கொன்றால், உலகில் உள்ள அறியாமை மறைந்து, ஞானம் மட்டுமே மிஞ்சும். இது உலக சமநிலையை பாதிக்கும் என்பதால், சிவபெருமான் அவனை முழுமையாக அழிக்காமல், தன் காலடியில் போட்டு அமுக்கி (கட்டுப்படுத்தி) வைத்தார்.
நடராஜரின் தாண்டவம்: சிவனார் ஆனந்த தாண்டவம் ஆடும்போது, தன் வலது காலால் அபஸ்மரனை மிதித்து, அஹங்காரத்தை அடக்கி, ஞானத்தை நிலைநாட்டுகிறார். இதுவே சிதம்பரம் நடராஜர் திருக்கோலத்தின் தத்துவம். 

முக்கியத்துவம்:
சின்னம்: நடராஜரின் காலடியில் உள்ள முயலகன், மனிதனின் அகங்காரம் மற்றும் அறியாமையை, ஞானத்தை கொண்டு அடக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
ஆயுர்வேதம்: 'அபஸ்மாரம்' என்பது கால்-கை வலிப்பு நோயைக் குறிக்கும் சொல்லாகவும் கருதப்படுகிறது. 

எனவே, அபஸ்மரன் என்பவர் சிவபெருமானின் கருணையால் முழுமையாக அழிக்கப்படாமல், மனிதனின் மனதில் உள்ள அறியாமையை கட்டுப்படுத்தும் சக்தியாகவே நிலைத்திருக்கிறார்.

Saturday, 7 March 2026

கோளறு பதிகம் விளக்கம்



திருஞானசம்பந்தர் அருளிய கோளறு திருப்பதிகம்
கோளறு பதிகம் விளக்கம்
திருஞானசம்பந்தர் அருளிய கோளறு திருப்பதிகம்
நவ கிரகங்களால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கி மனதில் நினைத்த நல்லன எல்லாம் நிறைவேற தினமும் ஓத வேண்டிய அற்புதமான தேவார பதிகம்:

1. வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே!

2. என்பொடு கொம்பொ(டு) ஆமை இவை மார்பிலங்க எருதேறி ஏழையுடனே
பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடாறும் உடனாய நாள்களவை தாம்
அன்பொடு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே!

3. உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து உமையோடும் வெள்ளை விடை மேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே.

4. மதிநுதல் மங்கையோடு வடவாலி ருந்து மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடுநோய் களான பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.

5. நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும் மிகையான பூத மவையும்
அஞ்சிடும் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.

6. வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர் மடவாள் தனோடும் உடனாய்
நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
கோளரி யுழுவையோடு கொலையானை கேழல் கொடுநாக மோடு கரடி
ஆளரி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.


7. செப்பிள முலைநன்மங்கை ஒரு பாகமாக விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியும்அப்பும் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.

8. வேள்பட விழி செய்தன்று விடைமேலிருந்து மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
Ezoic

ஏழ்கடல் சூழிலங்கை அரையன்றனோடும் இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.

9. பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர் வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.

10. கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்
மத்தமு மதியு(ம்)நாகம் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
புத்தரோடமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

11. தேனமர் பொழில் கொளாலை விளைசெந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய்

ஆன சொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.

கோளறு பதிகம் விளக்கம்
1. (எம்பெருமான்) மூங்கில் போன்ற தோளினை உடைய உமையவளுக்கு தன் உடம்பினில் பாகம் கொடுத்தவன். ஆலகால விடத்தை உயிர்களைக் காக்கும் பொருட்டு அருந்தி திருக்கழுத்தினில் தாங்கியவன். இனிமையான இசையை எழுப்பும் வீணையை வாசித்துக்கொண்டு (இருக்கும் அவன்) களங்கமில்லாத பிறையையும் கங்கையையும் தன் திருமுடி மேல் அணிந்து கொண்டு, என் உளம் முழுவதும் நிறைந்து காணப்படுவதால் (அதாவது நான் சிவசிந்தையில் இருப்பதால்) சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, மற்றும் பாம்பாகிய ராகு- கேது என்னும் ஒன்பது கோள்களும் ஒரு குற்றமும் இல்லாதவையாக (என் போன்ற) சிவனடியாருக்கு என்றும் மிக மிக நல்லதையே செய்யும்!

2. திருமாலின் வாமன, பன்றி, கூர்ம அவதாரங்களின் ஆணவத்தை அடக்கி அணிந்து நிற்கும், எலும்பு, கொம்பு, ஆமை ஓடு முதலானவை தன் திருமார்பில் விளங்க, உமையவளுடன் எருதின் மேல் ஏறி, பொன்போலொளிரும் ஊமத்தை மலர்களாலான மாலை தரித்து, தலையில் கங்கையணிந்து என் உள்ளத்தே நிறைந்ததால், விண்மீனாய் வரும் ஆயில்யம்; ஒன்பதோடு ஒன்று – பத்தாவது விண்மீனான மகம்; ஒன்பதொடு ஏழு – பதினாறாவது விண்மீனான விசாகம்; பதினெட்டாவது விண்மீனான கேட்டை; ஆறாவது விண்மீனான திருவாதிரை; முதலான பயணத்திற்கு விலக்கப்பட்ட நாட்கள் எல்லாமும், சிவனடியார் மீது அன்பொடு அவர்க்கு என்றும் நல்லதையே செய்யும்!

3. பவளம் போன்ற சிவந்த திருமேனியில் ஒளிபொருந்திய வெண்ணீற்றை அணிந்து, சிவபெருமான் உமையம்மையாரோடு வெள்ளை எருதின்மீது ஏறி வந்து, அழகு பொருந்திய கொன்றையையும் சந்திரனையும் தன் முடிமேல் அணிந்து சிவபெருமான், உமையம்மையாரோடு வெள்ளை எருதின் மீது ஏறி வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், இலக்குமி, கலைகளை வாகனமாகக் கொண்ட கலைமகள், வெற்றித் தெய்வமான துர்க்கை, பூமாது, திசைத் தெய்வங்கள் ஆன பலரும் அரிய செல்வம் போல நன்மை அளிப்பர். அடியவர்களுக்கு மிக நல்லதையே செய்வர்.


4. பிறைபோன்ற நெற்றியை உடைய உமையம்மையாரோடு ஆலமரத்தின்கீழ் இருந்து (வடம் – ஆலமரம்) வேதங்களை அருளிய எங்கள் பரமன், கங்கை நதியையும் கொன்றை மாலையையும் முடிமேல் அணிந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், ஆத்திரமுடையதான காலம், அக்கினி, யமன், யமதூதர், கொடிய நோய்கள் எல்லாம் மிக நல்ல குணமுடையன ஆகி நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிகவும் நல்லனவே செய்யும்.

5. விடத்தைக் கழுத்தில் அணிந்த நீலகண்டனும், என் தந்தையும், உமையம்மையாரோடு இடபத்தின் மேல் ஏறி வரும் நம் பரம்பொருள் ஆகிய சிவபெருமான், அடர்ந்து கறுத்த வன்னிமலரையும், கொன்றை மலரையும் தன் முடிமேல் அணிந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், கொடிய சினத்தை உடைய அசுரர்கள், முழங்குகிற இடி, மின்னல், துன்பந்தரும் பஞ்ச பூதங்கள் முதலானவையெல்லாம் (நம்மைக் கண்டு) அஞ்சி நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிக நல்லனவே செய்யும்.

6. ஒளியும் வரியும் பொருந்திய புலித்தோல் ஆடையும் (வாள் -வரி – அதள் – அது -ஆடை; அதள் -புலித்தோல்), வரிந்து கட்டிய கோவணமும் அணியும் சிவபெருமான் அன்றலர்ந்த மலர்கள், வன்னி இலை, கொன்றைப்பூ, கங்கை நதி ஆகியவற்றைத் தன் முடிமேல் சூடி, உமையம்மையாரோடும் வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், கொல்லும் வலிய புலி (கோளரி உழுவை), கொலையானை, பன்றி (கேழல்), கொடிய பாம்பு, கரடி, சிங்கம் ஆகியன நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிக நல்லனவே செய்யும்.


7. செம்பு போன்ற இளந்தனங்களை உடைய உமையவளைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு, இடபத்தின் மேல் ஏறிவரும் செல்வனாகிய சிவபெருமான் தன்னை அடைந்த அழகிய பிறைச்சந்திரனையும், கங்கையையும் தன் முடிமேல் அணிந்தவனாய், என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், காய்ச்சல் (சுரம்), குளிர்காய்ச்சல், வாதம், மிகுந்த பித்தம் , அவற்றால் வருவன முதலான துன்பங்கள் நம்மை வந்து அடையா. அப்படி அவை நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு அவை நல்லனவே செய்யும்.

8. அன்று மன்மதன் அழியும்படி நெற்றிக்கண்ணைத் திறந்து எரித்த சிவபெருமான், இடபத்தின் மேல் உமையம்மையாரோடு உடனாய் இருந்து, தன் முடிமேல் ஒளி பொருந்திய பிறைச்சந்திரன், வன்னி இலை, கொன்றை மலர் ஆகியனவற்றைச் சூடி வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், ஏழ் கடல்களால் சூழப்பட்ட இலங்கையின் மன்னன் ஆன இராவணன் (பிறன்மனை நாடியதாலேற்பட்டது) போன்ற இடர்களும் வந்து நம்மைத் துன்புறுத்தா. ஆழமான கடலும் நமக்கு நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு அவை நல்லனவே செய்யும்.

9. பல்வேறு கோலங்கள் கொள்கிற பரம்பொருள் ஆகிறவனும், மாதொருபாகனும், எருதின் மேல் ஏறிவரும் எங்கள் பரமனுமாகிய சிவபெருமான், தன் முடிமேல் கங்கை, எருக்கமலர் ஆகியவற்றை அணிந்து வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், தாமரைமலர் மேல் உறையும் பிரமன், திருமால், வேதங்கள், தேவர்கள் ஆகியோரும், எதிர்காலம், அலையுடைய கடல், மேரு முதலான மலைகள் ஆகியவையும் நமக்கு நல்லனவே செய்வர். அடியவர்களுக்கு அவை மிகவும் நல்லனவே செய்யும்.


10. கூந்தலில் மலர்க்கொத்துகள் அணிந்த உமையம்மையாரோடு வேட வடிவில் சென்று அருச்சுனனுக்கு அருள்புரிந்த தன்மை கொண்ட சிவபெருமான், தன் முடி மேல் ஊமத்தை மலர், பிறைச்சந்திரன், பாம்பு ஆகியவற்றை அணிந்து வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், புத்தர்களையும் சமணர்களையும் ஈசனின் திருநீறு வாதில் தோற்றோடச் செய்யும். அதன் பெருமை நிச்சயமே. எல்லாம் அப்படிச் சிறந்த நல்லனவற்றையே செய்யும். அவை மிகவும் நல்லனவே செய்யும்.

11. தேன் நிறைந்த பூங்காக்களைக் கொண்டதும், கரும்பும் (ஆலை), விளைகிற செந்நெல்லும் நிறைந்துள்ளதும், பொன் போல் ஒளிர்வதும், நான்முகன் (வழிபட்ட) காரணத்தால் பிரமாபுரம் என்ற ஊரில் தோன்றி அபரஞானம் பரஞானம் ஆகிய இரு வகை ஞானங்களையும் உணர்ந்த ஞானசம்பந்தனாகிய யான், தாமே வந்து சம்பவிக்கும் நவக்கிரகங்கள், நாள் நட்சத்திரம், போன்றன எல்லாம் அடியவரை வந்து வருத்தாதவாறு பாடிய இப்பதிகத்தை ஓதும் அடியவர்கள் வானுலகில் அரசு புரிவர். இது நமது ஆணை.

…திருச்சிற்றம்பலம்…