jaga flash news

Wednesday, 1 July 2026

பரல்கள் #######



சர்வாஷ்டகவர்க்கப் பரல்கள் என்றால், ஏழு கிரகங்களின் சுயவர்க்கப் பரல்களையும் கூட்டி ஒவ்வொரு ராசிக்கும் கிடைக்கும்.

அப்படிக் கூட்டிவந்த தொகையை ராசிகளில் எழுதி அதை மொத்தமாக கூட்டினால் கிடைப்பதுதான் அந்த 337 என்னும் மந்திர எண்ணாகும்

அந்த எண் உலகில் உள்ள அனைவருக்கும் ஒன்று போல இருக்கும். எவருக்கும் அதை விட ஒரு பரல் கூடவோ அல்லது குறையவோ வராது.

பாரதப் பிரதமருக்கும் அதே 337தான். உங்களுக்கும் 337தான்
தொழிலதிபர் அதே 337தான். உங்களுக்கும் 337தான்
அழகான பெண்ணான அதே 337தான். உங்களுக்கும் 337தான்
கைவண்டி இழுத்துப் பிழைப்பை நடத்தும் அதே 337தான். மூர்த்திக்கும் அதே
337தான்



சரவாஷ்டக வர்க்கப் பலன்கள்

மொத்தப் பலன்கள் 337. ராசிகள் 12 வகுத்தால் சராசரியாக ஒரு ராசிக்கு 28 பரல்கள் வரும்.

ஒரு வீட்டில் (அதாவது ஒரு ராசியில்) சராசரிக்கும் குறைவான பரல்கள் இருந்தால், அந்த வீடு வலிமையாக, சிறப்பாக இல்லை என்ற பொருள்.

1. ஒரு வீட்டில் 25 அல்லது அதற்கு குறைவான பரல்கள் இருந்தால், அந்த வீட்டில் ஜாதகனுக்குப் பெரிய (நல்ல) பலன்கள் இருக்காது.

2. ஒரு வீட்டில் 30 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால், அந்த வீட்டில் ஜாதகனுக்கு மிகவும் நன்மையான பலன்கள் உண்டாகும்.

3. ஜாதகன் ஒரு வீட்டின் முழுப் பலனையும் அடைய விலை
30% அதற்கு மேலான பரல்களும் இருக்க வேண்டும்.

4. கிரகங்கள் ஜாதகத்தில் உச்சமாக இருந்தாலும் அல்லது கேந்திர,
திரிகோண வீடுகளில் இருந்தாலும், அல்லது சொந்த வீட்டில்
இருந்தாலும் அந்த வீட்டில் சராசரிக்கும் குறைவான பரல்கள்
இருந்தால், அந்தக் கிரகங்கள் முழுமையாகச் செயல்படாது.

5. கிரகங்கள் ஜாதகத்தில் எதிரி நீசமடைந்திருந்தாலும் அல்லது வீட்டில் குடியிருந்தாலும் அல்லது 6ஆம் வீடு, 8ஆம் வீடு அல்லது 12ஆம் வீடு
போன்ற தீய ஸ்தானங்களில் அமர்ந்திருந்தாலும் அந்த வீட்டில்
சராசரிக்கும் அதிகமான பரல்கள் இருந்தால் அவைகள் முழுமையாகச் செயல்படும் ஜாதகனுக்கு நன்மைகள் செய்வார்கள்!.

6. லக்கினத்தில் 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருக்கக்கூடாது. இருந்தால் ஜாதகன் கஷ்டப்படப் பிறந்தவன். வாழ்க்கைப் போராட்டங்கள்
நிறைந்ததாக இருக்கும்

7. ஏழாம் வீட்டில், அதாவது களத்திர ஸ்தானத்தில் 20 பரல்கள் அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருக்கக்கூடாது. இருந்தால் ஜாதகனுக்கு
உரிய வயதில் திருமணம் ஆகாது. திருமணம் அநியாயத்திற்குத்
தாமதமாகும். சற்று தாமதமாகத் திருமணம் நடந்தாலும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியைத் தராது.

8. ஏழாம் வீட்டில் 30 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால், ஜாதகனுக்கு உரிய வயதில் திருமணம் ஆகும். திருமண வாழ்க்கை
மகிழ்ச்சி நிரம்பியதாக இருக்கும்.

9. லக்கினத்தில் இருப்பதைவிட ஏழாம் வீட்டில் அதிகப் பரல்கள்
இருந்தால், ஜாதகனுக்கு, அவன் தகுதியைவிட, அதாவது
அவனைவிட மேலான தகுதியை உடைய பெண் மனைவியாக
அமைவாள். பெண்ணாக இருந்தால், மேலான தகுதியை உடைய
கணவன் அமைவான்.

10. மாறாக லக்கினத்தைவிட ஏழாம் வீட்டில் பரல்கள் குறைவாக
இருந்தால், ஜாதகனின் நினைப்பைவிட, விருப்பத்தைவிட,
தகுதியைவிட (நிலை) குறைவான அமைப்பை உடைய பெண்ணே மனைவியாக அமைவாள். அல்லது கணவன் அமைவான்.

11. பத்தாம் வீட்டில் 32 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால், ஜாதகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். அல்லது நல்ல தொழில் அமையும்

12. பத்தாம் வீட்டில் சராசரிக்கும் குறைவான பரல்கள் இருந்தால்
எடுத்தவுடன் நல்ல வேலை அமைவது சிரமம். கிடைக்கும் வேலையில் சேர்ந்து கொள்ள வேண்டியதுதான். ஜாதகத்தில் உள்ள
லக்கினாதிபதி அல்லது பத்தாம் அதிபதி அல்லது கிராமகாரகன் சனியின் மேன்மையைப் பொருத்து அவர்களுடைய தசா புத்திக் காலங்களில்
நல்ல வேலை கிடைக்கும்.

13. பத்தாம் வீட்டில் 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால், கிடைக்கின்ற வேலையில் அது எப்படி இருந்தாலும், மனதைத் தேற்றிக்
கொண்டு பணியாற்ற வேண்டியதுதான். ஜாதகப்படி நல்ல காலம்
வரும்போது நிலைமை மாறும் என்று நம்பிக்கையோடு இருக்க வேண்டியதுதான்.

14. House of finance இரண்டாம் வீட்டில் 25 குறைவான பரல்கள் இருந்தால் எப்போதும் பணப் பிரச்சினை இருக்கும். வரவிற்கு
மேல் செலவாகும். சுருக்கமாகச் சொன்னால் கையில் காசு தாங்காது. ஓட்டைக்கை என்று சொல்லுவார்கள்.

15. நான்காம் வீட்டில் 25 அல்லது அதற்குக் நிறைய வசதிகள், ஆடம்பரங்கள் எல்லாம் இருக்காது. அதாவது சொத்து
சுகம் எல்லாம் இருக்காது. பிறகு ஜாதகத்தில் லக்கினாதிபதி, சுக்கிரன், செவ்வாய் ஆக்கிய கிரகங்களின் வலிமையைப் பொறுத்து,
அவர்களுடைய தசாபுத்திகளில் சொத்து, சுகங்கள் கிடைக்கும்.
(சுகம் என்றால் என்னவென்று தெரியுமல்லவா? வண்டி, வாகனங்கள், ஸ்பிளிட் ஏர் கண்டிஷனர் போன்றவை)

16. பாக்கிய ஸ்தானத்தில் (அதாவது ஒன்பதாம் வீட்டில்) சராசரி
அல்லது அதற்கு அதிகமான பரல்கள் இருந்தால்தான் பூர்வீகச்
சொத்துக்கள் இருக்கும். அல்லது கிடைக்கும்

.19. ஆறாம் வீட்டில் 32 வயது அல்லது அதற்கு மேலான பரல்கள் இருந்தால், வாழ்க்கையில், நோய், கடன், எதிரி, போன்ற பிரச்சினைகள் இல்லாமல் இருக்கலாம்

20. எட்டாம் வீட்டில் 25 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால், வாழ்க்கையில் பெரும் கஷ்டங்கள் வராது. பெரிய பிரச்சினைகள் வராது .

#. பரல்கள் பலன் #


1 ல் பரல்
லக்ன பாவகத்தில் பரல்கள் 1,5,9 க்கு இணையாக இருக்க வேண்டும்.6,8,12 க்கு குறையக்கூடாது.மேற்படி இருந்தால்தான் லக்னம் பலம் பெற்றுள்ளதாக அர்த்தம்.

2 ல் பரல் குறைந்தால் தனவிருத்தி இல்லை.குடும்ப நிர்வாகம் சுமூகமாக இருக்காது.2 ம் பாவக காரகத்தை ஜாதகர் தடையின்றி அனுபவிக்க இயலாது. 4,7 பாவகத்துக்கு இணையாக இருக்க வேண்டும்.20க்கு குறைந்தால் குடும்பம் அமைய தடை ஏற்படும்.20 முதல் 25க்குள் இருந்தால் தாமதமாகி குடும்பம் அமையும். அதிலும் பிரச்சனைகளை கொடுக்கும்.25க்கு மேல் இருப்பது சிறப்பு

3 ல் பரல் அதிகமானால் இளைய சகோதர ஆதரவு இருக்கும்.
விடாமுயற்சி இருக்கும்.எந்தச் செயலையும் வீரியத்துடன் செய்வார்.அவ்வப்போது மூர்க்கத்தனமான எண்ணங்களையும் கொடுக்கும். பரல் 20 க்கும் குறைந்தால் சோம்பேறித்தனத்தை உண்டாக்கும். தைரியம் குறையும்.எதையும் முடிவெடுக்கும் ஆற்றல் குறையும். எந்த ஊரு காரியத்தையும் முழுமையாக செய்து முடிக்க சிரமப்படுவார்

4 ல் பரல் லக்கினத்திற்கு இணையாக இருக்க வேண்டும்.2,7 பாவகத்திற்க்கு குறையக்கூடாது.20 க்கும் குறைந்தால் வீடு மனை அமைய தடையை ஏற்படுத்தும்.உயர் கல்வியில் தடையை ஏற்படுத்தும். தாய் வழி ஆதாயம் அனுபவிப்பதில் தடையை ஏற்படுத்தும்.மனதில் தேவையற்ற பயம் கவலைகள் இருந்து கொண்டே இருக்கும். மேன்மையான வாழ்க்கை வாழ முடியாது .

5 ல் பரல்கள் 20 க்கும் குறைந்தால் புத்திர மேன்மையை குறைக்கும்.6 ம் பாவகத்தை விட குறைந்தால் கடன் நோய் போன்ற துன்பங்களை கொடுக்கும். 6 க்கு இணையாகவும் இருக்கக் கூடாது.5 ல் பரல்கள் குறைந்தால் போராட்டமான வாழ்க்கையை கொடுக்கும். எதையும் எதிர்கொள்ளும் தைரியத்தை குறைக்கும். குலதெய்வ அனுக்கிரகத்தை குறைக்கும். லக்னத்திற்கு இணையாக இருப்பது நல்லது நண்பர்களே.

6 ல் பரல்கள் லக்னத்திற்கு அதிகமானால் கடன் நோய் பிரச்சனைகளை கொடுக்கும். 4க்கு அதிகமானால் உடல் ஆரோக்கியத்தில் சுகமின்மையை கொடுக்கும்.20 க்கும் குறைந்தால் பிறவியிலேயே ஏதோ ஒரு நோய் இருக்கும். 20 முதல் 25 க்குள் இருப்பதுதான் நன்று.40 க்கும் மேல் பரல்கள் இருந்தால் கடன் நோய் வழக்குகள் ஏதேனும் ஒன்று இறுதி வரை கூடவே இருக்கும்


7 ல் பரல்கள் 2,4 க்கு இணையாக இருக்க வேண்டும்.7 ஐ விட 8 ல் பரல்கள் அதிகமானால் மணவாழ்க்கையில் பிரச்சனைகளைக் கொடுக்கும்.7 ல் பரல்கள் லக்னத்திற்கு இணையாகவோ அதிகமாகவோ இருந்தால் மனைவி வழி ஆதாயம் உண்டு.திருமணத்திற்கு பின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.7 ல் பரல்கள் அதிகமாகும் போது காம வேட்கையை கொடுக்கும்.
மனைவியின் ஜாதகத்தில் இணையாக இருந்தால் சமன்படும். 20 க்கு குறைந்தால் திருமணம் அமைய தடையை ஏற்படுத்தும்.

20க்கு குறையாமல் 30 க்கு அதிகமாகாமல் இருப்பது நல்லது.

கணவனின் பரலை விட மனைவியின் பரல் அதிகமானால் மனைவிக்கு அடங்கிப் போக நேரிடும்

8 ல் பரல்கள் 20 முதல் 25 க்குள் இருப்பதுதான் சிறப்பு.லக்ன பரலை விட அதிகமாக கூடாது. 25 க்கும் அதிகமானால் ஆயுள் தீர்க்கம். ஆனால் பிரச்சனைகள் மிகுதியாக இருக்கும். 30 க்கும் மேல் பரல்கள் இருந்தால் கடும் விபத்துக்கள் தற்கொலை எண்ணத்தை கொடுக்கும்.20 க்கும் குறைந்தால் அற்ப ஆயுளை கொடுக்கும்

9 ல் பரல்கள் 5 க்கு இணையாக இருக்க வேண்டும். 9 ல் பரல்கள் கூடினால் ஆன்மீக ஈடுபாடு மகான்களின் தரிசனம் வெளிநாடு செல்லும் யோகம் பிறரால் மதிக்கப்படும் நிலை மற்றும் நிலையான புகழை கொடுக்கும்.35 க்கு மேல் இருப்பது நல்லது. குருவின் தனி பரலில் 5,9 ல் 5 க்கும் மேற்பட்ட பரல்கள் இருந்தால் ஆன்மீக வழியில் உயர்வை கொடுக்கும். 12 பாவகங்களில் 1,9 பாவகங்களில் பரல்கள் அதிகம் இருந்தால் அல்லது இணையா
இருந்தால் சிறப்பு

10 ல்பரல்கள் 25 முதல் 30 க்குள் இருந்தால் தொழில் நல்ல நிலையில் இருக்கும்.லக்ன பரலுக்கு இணையாக இருக்க வேண்டும்.2,11 க்கு இணையாக இருந்தால் தொழிலில் நல்ல பொருளாதாரத்தை கொடுக்கும்.10 ஐ விட 6 ல் பரல்கள் அதிகமாகவோ இணையாகவோ இருந்தால் தொழிலில் கடனை ஏற்படுத்தும். அடிமைத் தொழிலை செய்ய வைக்கும்.7 ம் பாவக பரலுக்கு இணையாக இருந்தால் கூட்டுத்தொழில் சிறப்பு.20 க்கும் குறைந்தால் சொந்தத்தொழில் சிறப்பாக இருக்காது.

11 ல் பரல்கள் 25 முதல் 30 க்குள் இருக்க வேண்டும். 2,10 க்கு இணையாக இருக்க வேண்டும்.7 ஐ விட 11 ல் பரல்கள் கூடினால் இருதார தோஷத்தை கொடுக்கும். 6,8,12 க்கு இணையாக இருந்தால் நீடித்த பொருளாதாரத்தை கொடுக்காது.
4 க்கு இணையாக இருந்தால் வீடு வண்டி வாகன யோகம் அமையும்.7 க்கு இணையாக இருந்தால் மனைவி வழி ஆதாயத்தை கொடுக்கும்.10 க்கு இணையாக இருந்தால் தொழில் வழி ஆதாயத்தை கொடுக்கும்.5 க்கு இணையாக இருந்தால் புத்தர்கள் வழி மேன்மையை கொடுக்கும். 4 க்கு இணையாக இருந்தால் தாய் வழி ஆதாயமும்,9 க்கு இணையாக இருந்தால் தந்தை வழி பூர்வீக ஆதாயத்தையும் கொடுக்கும்.11 ஐ விட 12 ல் பரல்கள் கூடினால் வரவுக்கு ஏற்ப செலவை கொடுக்கும்

12 ல் பரல்கள் 6,8 க்கு இணையாக இருக்கலாம். 20 க்கும் குறைந்தால் இறுதிக்காலத்தில் தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கையை கொடுக்கும். பிறரைச் சார்ந்து வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தும்.தான் சம்பாதித்த

செல்வங்களை இறுதிக்காலத்தில் ஏதேனும் ஒரு வகையில் இழக்க நேரிடும்

12 பாவகங்களிலும் பரல்கள் சராசரியாக 25 முதல் 30 க்குள் இருப்பது சிறப்பான அமைப்பு