*ஆன்மா என்பது ஒரு நாள் முழுவதும் உடம்பை விட்டு பிரிந்து செல்ல மறுக்கும்.
ஆன்மா 12 அடி உயரம் வரை உடம்பைச் சுற்றிக்கொண்டே உடலுக்குள் மறுபடியும் நுழைய முயற்சிக்கும்.
*வருவோர் போவோர்களைக் கண்காணித்துக் கொண்டே இருக்கும்
யார் யார் என்னென்ன பேசுகிறார்கள், என்னென்ன நினைக்கிறார்கள் என்பதை ஆன்மா உணர்ந்து கேட்டுக் கொள்ளும்
*அதனால்தான் யாரும் பேசமாட்டார்கள்.
*உடம்பை எரிக்கும் போது,ஆன்மாவும் கூடவே வந்து, சுற்றும் அலறும். எரிந்து சாம்பலாக ஆன பிறகுதான், வேறு இடம் தேடி செல்லும்
வாவ்... இதைத்தான் பேய் என சொல்வார்களோ? ஆத்தாடி அலறுமாம் சுற்றுமாம்.. ஓலமிடுமா? அடியேன் பேயோடே குடியிருந்து வந்தவள். அட குடும்பத்தை இழுக்கலைங்க நிஜமாகவே திருச்சியில் ஒரு வீட்டில் பேசி உரையாடி வந்திருக்கிறேன். நல்லாவே பேசுவாப்பிலே. நன்கு கீழ்ப்படிவாப்பிலே. அருமையான பாசமுடன் கூடிய பேய்ங்க. அய்யா வெ. சாமி அவர்களே. அந்த காலம் கஷ்ட காலம். இல்லையேல் அந்த வீட்டை விலை பேசியிருப்பேன் அய்யா. நல்ல ப்ரண்ட். எந்த தொந்தரவும் கிடையாது. நானும் அதுவும் தான். அப்போ எனக்கு குழந்தைகள் பிறக்கவில்லை. துணைக்கும் என் அருகில் கணவர் கிடையாது. டூட்டி சென்றிடுவார் வெளி மாவட்டங்களுக்கு. எனவே, குட் ப்ரண்ட் அந்த பேய். வரும் குறிப்பிட்ட நேரத்திற்கு மதியம் சோற்றுப் பானையை திறக்கும். தண்ணீர் குடிக்க தம்ளர் எடுக்கும்.. கொஞ்சம் காப்பி குடித்து தம்ளரை வைக்கும் சத்தம் மட்டும் கேட்கும். கிளம்பலாமே என்பேன்.. சென்றுவிடும். அப்போ சிலுவை தான் எனது நெற்றியில் அடிக்கடி ஜெபம் செய்து நெற்றியில் சிலுவை அடையாளம் இடுவேன். அதன் கதையை கூட என்னிடம் கூறி அழுதது அய்யா. அட கட்டுக் கதை அல்ல. நிஜமாக நடந்தது. வேலை கிடைக்கவில்லை. வாலிப பையன். வீட்டில் உட்கார்ந்து தின்கிறாயே என திட்டினார்களாம். காவல் துறை தேர்வு எழுதி உள்ளான். ஆர்டருக்காக காத்து இருக்கிறான். வரவில்லை, நாம் தேர்வ செய்யப் படவில்லை என அவசர முடிவு எடுத்து, நடு வீட்டிலே தூக்கு மாட்டிக் கொண்டான். அன்றே அவனுக்கு ஆர்டர் வந்திருக்கிறது பயிற்சியில் கலந்து கொள்ள. அதை வாங்க இவன் அன்றுதான் தூக்கில் தொங்கி இவன் முந்திக் கொண்டான் என்ற செய்தியை கூறினான் ஜெபத்தின் போது. அன்றிலிருந்து ஆக்குகிற சமையலில் சிறு பகுதியை வைத்து விடுவேன். வரும்போது பூட்ஸ் சத்தம் மட்டும் டக் டக் என கேட்கும். பின்னர் கிச்சனில் மட்டும் தான் சத்தம் கேட்கும். சென்றுவிடும். ஒரு ரூம், கதவுடன். ஒரு ஓப்பன் கிச்சன் ஒரு அரை சுவர் எழுப்பிய ரீப்பர் வச் வராண்டா. இது தான் அந்த வீட்டின் அமைப்பு. ஒருமுறை கணவர் வந்திருந்தார். வெப்பத்தின் காரணமாக (அப்போ திருச்சி கந்தகப் பூமியாக காட்சி அளத்த காலம்) வெளியே வராண்டாவில் படுத்திருந்தோம் இருவரும். நான் நன்கு உறங்கிவிட்டேன். அவர் முடியை மட்டும் யாரோ பிடிச்சி இழுத்திட்டாங்கயென உறக்கத்திலேயே ஓங்கி ஒரு அரை விட்டார். அவர் விட்டது சுவரில். நான் என்ன என்றேன். பயந்துவிடுவேன் என நினைத்தார் போலும். ஒன்றுமில்லை.. நாம் உள்ளே போய் வீட்டினுள் படுத்துகிடலாம் எனக் கூறி கதவை அடைத்து ரூமினுள் உறங்கினார். நான் தினசரி பேயோடு தானே பேசி வருகிறேன் என்றேன். பின்னர் நான் கூறாமலே விழுப்பரம் அழைத்து சென்று விட்டார். அட அவர் அங்கே தானே டூட்டி மாற்றலாகி இருக்கிறார். நான் இங்கும், அவர் அங்குமாக. பின்னரே விழுப்புரம் அழைத்து சென்று குவாட்டர்ஸ் கிடைக்கும் வரை (புது குவார்டஸ்) வாடகை வீட்டில் குடி அமர்ந்தோம். இவ்வாறு சரளமாக பேய் என்னோடு பேசும் அய்யா வெ. சாமி அவர்களே.
ReplyDeleteஇன்னொரு சம்பவம் பாருங்க..நெல்லையில் பழைய வீட்டை இடித்து கட்டப் போகிறோம் அதுவரை வெளியே குடியிருங்கள்.. கட்டியபின் இங்கிருந்து வெளியே குடி அமர்ந்தவர்களுக்கு முதலாக வீடு அளித்து.. பின்னரே ஏனையோர்க்கு என்றார்கள்.. எங்கள் காவலதுறை அதிகாரிகளின் உத்தரவுபடி மீனாட்சிபரம் ரயில்வே குவார்டஸில் பழக்கத்தின் பேரிலே ரயில்வேயில் பணி புரியும் காவலருக்கான வீட்டில் வாடகைக்கு அமர்ந்தோம். அவர் வெளியே சொந்த வீட்டில் வசிக்கிறார். அந்த குவார்டஸ் வீட்டில்ஏற்கனவே குடியிருந்த ஒருவர் கக்கூஸ் சென்றிருந்த சமயம் அங்கு வைத்தே அட்டாக் வந்து, அந்த டேங்க் குளிக்குள்ளே அவர் தலை வீழ்ந்து இறந்தும் விட்டார் இந்த சம்பவம் நடந்து ஓருவாரத்தில் நாங்கள் குடி அமர்ந்தோம். கணவர்க்கு இச் செய்தி தெரியாது. எனவே, இறப்பிற்கான சடங்குகள் அந்த வீட்டில் செய்யாமல், மனைவி வீட்டை உடனே காலி செய்து சொந்த ஊருக்கு சென்று விட்டார். பூட்டிய வீட்டை உபகாரம் என்கிற ரீதியில் வாடகைக்கு மற்றொரு ரயில்வே காவலர் என் கணவருக்கு வாடகை பணத்திற்கு ஆசைப்பட்டு அமர வைத்துவிட்டார்.
ReplyDeleteஎல்லாம் ஓகே. வந்து குடியேறிவிட்டோம். நான் கக்கூஸ் சென்றேன். ஒரு ஆண் வெள்ளை பனியன் அணிந்து, புளு கலரில் கட்டம் போட்ட லுங்கி அணிந்து, அதிக உயரமில்லாத சதுர முகத்துடன்.. கக்கூசுக்கு வேளியே கைகளை கட்டிக் கொண்டு.. சீக்கிரம் வாங்க.. நான் உள்ளே செல்லணும் என்றார். துல்லியமான முகம். நான் உடனே.. உள்ளே போணுமா.. இந்தா உன் ஜட்டி எடுத்துக்கோ என அங்கு தொங்கிக் கிடந்த ஜட்டியை எடுத்து வீசி நான் இங்கு குடி வந்துவிட்டைன். ஓடிப் போயிடணும் நீ. புரிதா. நான் கிறிஸ்தவள். குடுமி சிக்கிச்சினா உன்னை உண்டு இல்லைனு பண்ணிடுவேன் என ஸ்ட்ராங்கா கூறிவிட்டேன். அன்றிலிருந்து கக்கூசுக்குள் வருவதே இல்லை. பேய் பயந்துவிட்டது அய்யா வெ. சாமி அவர்களே.. அப்புறம் பின்வாசல் அடைக்கு முன்னரே மெதுவாக வீட்டிற்குள் நுழைந்து விடும். அது நுழைவதை என் கண்ணிற்குள் பார்த்தேன்.. அவ்வளவு தான் அந்த ஜட்டியை தேடிப்பிடிச்சி எடுத்து.. கதற கதற அதை விரட்டி அடிச்சேன்.. அதோடு சரி. வீட்டருகையே தலை வச்சி படுக்கலை.. அந்த இறந்தவன். எல்லோரும் நன்கு உறங்கினீர்களா எனக் கேட்டார்கள் அருகில் வசிப்போர். ஆமாமா என்றேன். என்ன விஷயம் என்றேன். நீங்கள் தைரியமான வங்க தானே என்றார்கள். ஆமாமா சும்மா தைரியமாக கூறுங்கள் என்றேன். பின்னரே கூறினார்கள். இவ்வாறு அவர்களோட தானே வசிக்கிறேன். அந்த வீட்டில் ஓஒரு வருடம் வசித்தேன். பின்னரே குவார்டர்ஸ் கட்டி முடித்தும் குடி பெயர்ந்தோம் எங்களது குவார்ட்டஸனஸுக்கு .என் கணவர் மீதுள்ள கோபத்தை எல்லாம் அவரிடம் காட்ட முடியாமல் பேய்களிடம் தான் காடடுவேன் அய்யா. அது அய்யோ, அம்மாடி செத்தேனே, இவாகிட்ட மாட்டிட்டேனே என கதறி பதறி ஓட்டம்பிடிக்கும். அதையும் கண்ணாலே பார்ப்பேன் அய்யா. எல்லாம் ஜெபத்தோட மகிமைதான். குடுமியை பிடிச்சி ஆட்டு ஆட்டுனு ஆட்டிபுடுவேன் பேய் பிடிச்சி ஆடுறவங்களை.. சிலர் சர்ச்சுக்குள்ளே ஆடுவாள். ஜெபம் பண்ணி கையிலே பைபிளை வாங்கமாட்டேனு அடம்பிடிக்கும்.. பல்லை நெறு நெறுனு கடிக்கும் கருமுறுக்கும் ஆனாலும் கேப் விடாமல் ஜெபம் பண்ணி கையிலே பைபிளை வாங்க வச்சிடுவேன். அப்படியே பேய் ஓடி.டும். ஆலயத்துக்கு ஜெபம் பண்ண முதல் நபரா வந்திடுவாள். பேய் ஓடியே போயிடும். குழந்தைகள் இருக்கு அவளுக்கு இப்போ. சந்தோஷமா இருக்கிறா அந்த பெண்.
அதுவென்னவோ அய்யா பேய்களுக்கு என்னைக் கண்டால் ஒரு பயம். ஒருவேளை என்னைப் பார்க்க அதனின் தலைவியாகத் தெரியுதோ என்னவோ? சில இடங்களில் என்னை பாஃலோ பண்ணி வருவது எனக்குத் தெரிய வரும். என்ன... இங்க என்ன வேலை. என் பின்னாடி வராதே. நான் மோசமானவ... குணம் தெரியாம வராத என்பேன். திரும்பி மட்டும் பார்க்க மாட்டேன். என்னைத் தொடமுடியாது. காரணம் எதாவது இறைவனின் ஒரு நாமத்தை என் ஆழ் மனம் எப்போதுமே கூறிக் கொண்டே தான் இருக்கும் வீட்டிலும் சரி வெளியே சென்றாலும் சரி. அதனாலே எல்லாமுமே ஒரு ஸ்டெப் விலகியே தான் இருக்கும். இந்த வீட்டில் என் கண்ணுக்கு இதுவரை எதுவுமே இல்லை... அய்யா. எனது கணவரை பின் தொடர்கிறது எனக்கு தெரிகிறது. என்னைக் காணவும் அப்படியே பின் வாங்கி விட்டுமறைந்துவிடுகிறது. கால் கழுவாமல் வீட்டினுள் நுழையக்கூடாது என கூறி இருக்கிறேன். எனது ரூமிலே தான் நான் இல்லை என்றாலும் உறங்கணும் எனக் கூறிவிட்டேன். ஒரு நாள் முழுவதும் மயங்கியே ஆஸ்பத்திரியில் இருந்திருக்கிறார். ஆஸ்பத்திரியில் ஒன்றுமில்லையே உடம்புக்கு என செக் பண்ணி கூறியிருக்கிறார்கள். நான் கோயம்தூர் சித்தாந்த பயிற்சிக்கு சென்றிருந்த சமயம் பார்த்து.. இவ்வாறு நடந்திருக்கிறது. மகன் எனக்கு போன்பண்ணி நான் அவரது ஆஸ்பத்திரிக்குள் நுழைய அவர் சிரித்துக் கொண்டே அமர்ந்திருந்தார். முகத்தை பார்த்தேன்.. பிரஷ்ஷாக இருக்கிறார். பேய் ஜாலம் என அறிந்தேன். வீட்டிற்கு போகலாமா உங்களுக்கு எதுவுமே இல்லை. க்ஷநீங்கள் நார்மல்தான் என்றேன். ஓகே என கடகடவென காரில் ஏறிக் கொண்டார். இரவு வீடு அழைத்து வந்தேன்.
ReplyDeleteஇதை எல்லாம் எதற்காக கூறினேன் என்றால் அய்யா.. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம்பேய். இது பழமொழி. அந்த ஆவிகளோடும் நட்பாக பழகலாம். நமது மனதில் தைரியம் அதாவது ஜபநாட்டம் நம்மை ஆட்கொண்டிருந்தால், நம்மை எதுவும் அணுகாது. ஜெபக் குறைவு என்றால் அங்கு எல்லா நடமாட்டமும் இருக்கும் அய்யா.
ஒரு முறை இரவு 12-மணிக்கு என் அம்மா மெர்ஸி டீச்சர் வந்தாங்க. நான் 108 அஷ்டோத்திரம் முதன் முதலாக ஒரு நோட்டில் எழுதிக் கொண்டிருந்தேன். அழகாக அவர்கள் உருவத்திலேயே வந்தார்கள். வழக்கமான ஆடையோடு. வழக்கமாக தலையில் குட்டும் பாணியிலேயே வந்தார்கள். ஆனால் என் அருகே வந்து நின்றதும்.. என்ன செய்கிறாய் என அதிகாரக் குரல். நான் கிஞ்சித்தும் அசரவில்லை. பல்லைக் கடித்தார்கள். நிஜத்திலேயும் அவர்களுக்கு அந்த பழக்கம் உண்டு. பல்லைக் கடித்தே தான் என்னிடம் பேசுவது வழக்கம். உங்களுக்குப் புரியாது. இது அஷ்டோத்திரம் என்றேன்.. வாய்விட்டே கூறினேன். சிறிது நேரம் அசராமல் நின்று பார்த்தார்கள் எழுதுவதை. தேம்பி தேம்பி அழுதார்கள். எதற்கு அழுகை என்றேன். உங்களைப் பொறுத்தவரை செத்துவிட்டேனே.. எனவே அஷ்டோத்திரம் எழுதுகிறேன்.. என்றேன். சட்டென சிரித்தார்கள். எனக்கு சிரித்து மழுப்புவதுபோல் தோன்றியது... அந்நேரம் அந்த முகம். நான் என்ன.. போகலாமே என்றேன். போகவில்லை.. சிறிது நேரம் என் அருகே தொடமுடியாத அளவுக்கு நின்று கொண்டே இருந்தார்கள். நான் அமருங்கள் எனக் கூறவில்லை. மாறாக எனது சிந்தனை தவறில்லாமல் அஷ்டோத்திரம் எழுது என்றொரு அசரீரி. அதன்படி தானாகவே சிந்தனை எழுதுவதில் மூழ்கியது. ம்கூம் என்றொரு சத்தம். அவ்வளவு தான் இதுவரை என் அம்மா மெர்ஸி டீச்சர் வரவே இல்லை. இடைஇடையே முன்பெல்லாம் இந்த பாடல் படி.. என அம்மா மெர்ஸி டீச்சர் வந்து தடக்கென கூறுவார்கள். அஷ்டோத்திரம் 108 எழுதின பிறகு இதுவரை மெர்ஸி டீச்சர் வருவதில்லை. இதை ஏன் கூறவந்தேன் என்றால்... ஆவிகளுக்குகூட நாம் பேசுவது புரிகிறது என்பது அய்யா. வெ. சாமி அவர்கள் கூறுவது முழுக்க முழுக்க உண்மை என்பதை எனது அனுபவத்தால் உணர்ந்திருக்கிறேன் அய்யா.
ReplyDelete