ஒளவையார் தனிப் பாடல் - யாரோடு எது போகும்
குடும்பத்தோடு வாழ்வதில் ஒரு இன்பம் இருக்கிறது. குடும்பத்தில் ஒவ்வொருவரும் நமக்கு ஒரு விதத்தில் பலம் மற்றும் இன்பம் சேர்க்கிறார்கள்.
ஒளவை சொல்கிறாள்.
பாடல்
தாயோ டறுசுவைபோம் தந்தையொடு கல்விபோம்
சேயோடு தான்பெற்ற செல்வம்போம் – ஆயவாழ்(வு)
உற்றா ருடன்போம் உடற்பிறப்பால் தோள்வலிபோம்
பொற்றாலி யோடெவையும் போம்
பொருள்
தாயோ டறுசுவைபோம் = தாயோடு அறு சுவை போகும்
தந்தையொடு கல்விபோம் = தந்தையோடு கல்வி போகும்
சேயோடு தான்பெற்ற செல்வம்போம் = பிள்ளைகளோடு ஒருவன் பெற்ற செல்வம் போய் விடும்
ஆயவாழ்(வு) = பெரிய வாழ்க்கை
உற்றா ருடன்போம் = உறவினர்களோடு போய் விடும்
No comments:
Post a Comment