1- வீட்டில் உள்ள சாமி படத்தை மற்றும் பழைய துணிகளை வைத்து துடைக்க கூடாது
2- எப்பொழுதும் சாமி படங்களை சுத்தம் செய்வதற்கென்று தனியாக சுத்தமான துணியை வைத்துக்கொள்ள வேண்டும்
3- சாமி படங்களில் இருக்கும் சந்தனம் குங்குமங்களை முதலில் ஒரு துணியை வைத்து துடைத்துக் கொள்ள வேண்டும்
4 - பின் தண்ணீரில் சிறிது பச்சை கற்பூரம் ஜவ்வாது கலந்து அந்த தண்ணீரை வைத்து சாமி படங்களை துடைத்தால் எப்பொழுதும் பூஜை அறை தெய்விக நறுமணத்துடன் இருந்து கொண்டே இருக்கும்
6 - செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை தவிர மற்ற நாட்களில் சாமி படங்களை சுத்தம் செய்யலாம்
7-அது போல் மாலை 6 மணிக்கு மேல் சாமி படங்களை சுத்தம் செய்யக்கூடாது
Tue. 27, Jan. 2026 at 6.35 pm.
ReplyDelete*பாதராயணர் :*
பாதராயணர் என்பவர் "வியாசதேவர்".
இவருக்குப் பல பெயர்கள் உண்டு. கிருஷ்ண, கிருஷ்ண துவைபாயனர், துவைபாயனர், சத்தியவதி-ஸூதர், பாராசர்யர், பராசராத்மஜர், வேதவியாசர் போன்ற பெயர்களால் இவர் அறியப்படுகிறார்.
*வியாசதேவர் நாராயணனின் சக்தி வாய்ந்த அவதாரமாவார். இவர் வேத ஞானத்தை உலகில் பரப்புகிறவர்.
எனவே.... வேத நூல்களைப் படிக்கும் முன்பாக, முக்கியமாக புராணங்களைப் படிக்கும் முன்பாக முதலில் வியாசத்தேவர் வணங்கப்படுகிறார்.
*மிகச் சிறந்த இதிகாசமாகிய மகாபாரதத்திற்கும், மகச் சிறந்த தெய்வீக இலக்கியமாகிய பாகவதத்திற்கும் இவரே ஆசிரியராவார்.
*பிரம்ம சூத்திரங்கள் அதாவது வேதாந்த சூத்திரங்கள், அல்லது பாதராயண சூத்திரங்கள் இவரால் தொகுக்கப்பட்டவை.
*கடுந் தவத்தின் வலிமையினால், அவர் முனிவர்களிலேயே மிகவும் மரியாதைக்குரிய ஆசிரியராக மதிக்கப்படுகிறார்.
*ஒருமுறை கலி யுக மக்களின் நன்மைக்காக... மிகச் சிறந்த இதிகாசமாகிய மகாபாரதத்தை அவர் பதிவு செய்ய விரும்பினார்.
*எனவே, அவர் சொல்வதை எழுதுவதற்கு சக்தி வாய்ந்த எழுத்தாளர் ஒருவர் தேவைப்படுவதை உணர்ந்தார்.
*ஆகவே, பிரம்ம தேவரின் உத்தரவுப்படி சிரி. கணேசர் அப்பணியைச் செய்யும் பொறுப்பை ஏற்றார். ஆனால் ஒரு நிபந்தனை விடுத்தார்.
என்ன நிபந்தனை என்றால்... வியாயதேவர் சொல்வதை 'ஒரு விநாடி நேரமும் நிறுத்தக்கூடாது' என்பதே அந்நிபந்தனை.
இவ்வாறாக வியாசர் மற்றும் கணேசரின் இணைந்த முயற்சியினால் மகாபாரதம் தொகுக்கப்பட்டது... என்பதாகும்.
Sivajansikannan@gmail.com.