jaga flash news

Saturday 29 July 2023

வாஸ்து சாஸ்திரத்தின் படி, சாப்பிடும் அறைக்கும், சாப்பிடும் திசைக்கும் சில ஐதீகங்கள் உள்ளன.

வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டின் சாப்பாட்டு அறை மேற்கு திசையில் இருக்க வேண்டும். மேற்கு திசை சாப்பிடுவதற்கு மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது.

2. சூரியன் உதிக்கும் கிழக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் கல்வியும் நீண்ட ஆயுளும் கிடைக்கும்
3.நீங்கள் வடக்கு திசையில் அமர்ந்து சாப்பிட்டால், அது உங்களுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். மேலும் வடக்கு திசையில் அமர்ந்து சாப்பிட்டால் நோய் தீராது என்கிறது வாஸ்து சாஸ்திரம்.
4.வடக்கு திசையை விட தெற்கு திசை சிறந்ததாக கருதப்படுகிறது. தெற்கு பார்த்து சாப்பிட்டால் நித்திய புகழ் கிடைக்கும் என்கிறது சாஸ்திரம்.

5. வாஸ்து படி மேற்கு திசையை நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் செல்வம் பெருகும்.எனவே இந்த திசை மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறதுநீங்கள் வடக்கு திசையில் அமர்ந்து சாப்பிட்டால், அது உங்களுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். மேலும் வடக்கு திசையில் அமர்ந்து சாப்பிட்டால் நோய் தீராது என்கிறது வாஸ்து சாஸ்திரம்.
6.செல்வத்தின் அதிபதி மேற்கு திசை மகாலட்சுமி அம்சம். தெற்கு என்பது மனிதனின் திசை. வடக்கு திசை சிவனாகவும், கிழக்கு திசை இந்திரனாகவும் கருதப்படுகிறது
7.அதே சமயம் உறவினர்கள் வீட்டிற்கு வரும்போது மேற்கு திசையில் அமர்ந்து சாப்பிடக் கூடாது. நீங்கள் மேற்கு திசையில் அமர்ந்து சாப்பிட்டால், அவர்களுடனான உங்கள் உறவு மோசமடையக்கூடும்.

நட்சத்திரங்கள் - கிரகம் - தெய்வம்

நட்சத்திரங்கள் - கிரகம் - தெய்வம்

கார்த்திகை, உத்திரம், உத்திராடம் - சூரியன் (ஞாயிறு) - சிவன்

ரோகிணி, அஸ்தம், திருவோணம் - சந்திரன் (திங்கள்) - சக்தி

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் - செவ்வாய் - முருகன்

திருவாதிரை, சுவாதி, சதயம் - ராகு - காளி, துர்க்கை

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி - குரு (வியாழன்) - தட்சிணாமூர்த்தி

பூசம், அனுஷம், உத்திரட்டாதி - சனி - சாஸ்தா

ஆயில்யம், கேட்டை, ரேவதி - புதன் - விஷ்ணு

மகம், மூலம், அசுவினி - கேது - வினாயகர்

பரணி, பூரம், பூராடம் - சுக்கிரன் (வெள்ளி) - மகாலட்சுமி

Monday 17 July 2023

கனவுகளும் பலன்களும்

நம்முடைய மறைந்த முன்னோர்கள் தாத்தா, பாட்டி, சித்தப்பா, பெரியப்பா என யாராவது ஒருவர் கனவில் வந்து எதையாவது சொல்ல முயற்சி செய்வார்கள். செத்துப்போனவர்கள் கனவில் வருவது நல்லதா? கெட்டதா? ஏதேனும் பிரச்சினை வருமா? என்றெல்லாம் பலரும் யோசிப்பார்கள். கனவில் இறந்து போனவர்கள் வந்தால் என்ன பலன் நடைபெறும் என்று பார்க்கலாம்.


கனவுகளும் பலன்களும்: கனவுகளை உளவியல் ரீதியாக முதன்முதலில் அணுகி விளக்கம் கொடுத்தவர் சிக்மண்ட் ஃபிராய்ட். அதற்கு பின் பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றன. கனவுகள் என்பவை நாம் நடக்கவேண்டுமென்று நினைப்பது மட்டுமல்ல, நாம் செய்யத் தவறியதாகவும், அதை அறியாமலும் கூட இருக்கலாம். கனவுகள் நமக்கு அவற்றை நினைவுபடுத்தலாம். சுருக்கமாக கனவுகள் ஒரு சம்பவத்தின், ஆசையின், உணர்வின் விளைவாகவும் இருக்கலாம், காரணமாகவும் இருக்கலாம். பகலில் கனவு பலிக்காது அதே நேரத்தில் அதிகாலையில் காணும் கனவு நிச்சயம் பலிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. சிலருக்கு தினம் தினம் புதிது புதிதாக கனவு வரும். சிலருக்கு பெரும்பாலும் கெட்ட கெட்ட கனவுகள், அகோரமான பயங்கரமான கனவுகளும் வந்து அச்சுறுத்தும். என்ன மாதிரியான கனவுகள் வந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்.


நல்ல கனவு: விவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண்டால், சேமிப்பு பெருகும். வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும். கனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும். ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு. திருமணமாகாதவர்கள் பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால், சீக்கிரம் திருமணம் நிகழும். திருமணமானோருக்கு செல்வம் வந்து சேரும். ஆசிரியர் பாடம் நடத்துவதைப் போல் கனவு கண்டால் நாம் நினைத்தது எல்லாம் நிறைவேறும். இறந்தவர்களின் சடலத்தைக் கனவில் கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.


பண வருமானம் வரும்: உயரத்தில் இருந்து விழுவது போல் கனவு கண்டால் பணம், பாராட்டு குவியும். தெய்வங்களை கனவில் கண்டால் புதையல் கிடைக்கும். திருமண கோலத்தை கனவில் கண்டால், சமூகத்தில் நன்மதிப்பு உயரும். சிறு குழந்தைகளை கனவில் கண்டால் நோயிலிருந்து விடுதலை கிடைக்கும். கர்ப்பிணியை கனவில் கண்டால் பொருள் வந்து சேரும், நலம் அதிகரிக்கும். மாமிசம் உண்பது போல் கனவு கண்டால் பெரிய அதிர்ஷ்டம் தேடி வரும். மலத்தை கனவில் கண்டால் பண வரவு வரும். மலத்தை மிதிப்பதை போல் கனவில் கண்டால் சுபச்செலவுகள் ஏற்படும்.


ஜாக்பாட் அடிக்கும்: தற்கொலை செய்து கொள்வதை போல் கனவு கண்டால் நொருங்கி வந்த ஆபத்துகள் நீங்கி, நன்மை பிறக்கும். நண்பன் இறந்ததாக கனவு கண்டால் நண்பனின் ஆயுள் கூடும். இறந்தவர் கனவில் வந்தாலே இறந்தவருடன் பேசுவதைப் போன்று கனவு கண்டால் அதிகாரம் ,பதவி, லாபம் நிச்சயம் கூடி வரும். இறந்தவர்களுடன் பேசுவது போல் கனவு கண்டால் பெயரும், புகழும் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.

நல்ல செய்தி தேடி வரும்: பொதுவாகவே இறந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல செய்தி வரும் மேலும் நீங்கள் நீண்ட காலம் வாழ்வீர்கள் என்று பொருள். இறந்தவர்கள் கனவில் வந்து நம்மை ஆசிர்வதிப்பது போல கனவு கண்டால் நன்மைகள் அதிகரிக்குமாம். இறந்து போனவர்கள் உங்கள் வீட்டில் தூங்குவதை போல கனவு கண்டால் பெரிய கண்டத்தில் இருந்து தப்பிப்பீர்கள் என்று பொருள்.


வரக்கூடாத கெட்ட கனவுகள்: சவபெட்டியை கனவில் கண்டால் நமக்கு நெருங்கியவர்கள் இறக்க போகிறார்கள் என்று அர்த்தம். இறந்தவர்கள் நம் கனவில் வந்து அழுவது போல கனவு கண்டால் நல்லதல்ல, கோவிலில் அர்ச்சனை செய்வது நல்லது. பசுமாடு விரட்டுவதை போல் கனவில் கண்டால் உடல் நலம் கெட்டு நோய்கள் தாக்கும். நோய் பிடித்ததாக கனவு கண்டால், நண்பர் ஏமாற்றுவார். அடிபட்டு ஊனமாவதை போன்று கனவு கண்டால் சோகமான செய்தி வந்து சேரும். முத்தமிடுவது போல் கனவு கண்டால் செல்வாக்கு சரியும். நிர்வாண கோலத்தை கனவில் கண்டால், அவமானம் தேடி வரும். குதிரையில் இருந்து விழுவதை போல் கனவு கண்டால் கொடிய வறுமை வரும்,செல்வாக்கு சரியும். சமையல் செய்வது போல் கனவு கண்டால் அவமானம் வந்து சேரும். முட்டை சாப்பிடுவது போல் கனவு கண்டால் வறுமை பீடிக்கும். ஒருவேளை கெட்ட கனவுகள் வந்தால் நாம் சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் உறங்கி விட வேண்டும். அரை மணி நேரம் கழித்து மீண்டும் எழுந்து வழக்கமான வேலையை பார்க்கத் தொடங்கலாம்.

 

Friday 14 July 2023

மேல்நிலை Vs ஆழ்நிலை

மேல்நிலை  Vs  ஆழ்நிலை
-------------------------------------------

தினமும் பசும்பால் அருந்தினால் உடல் மிகவும் வலிமை பெறும்- அப்படியானால் பூனை ஏன் இன்னும் வலிமை பெறவில்லை?
😂

தினமும் நீண்ட தூரம் நடந்தால் உடல் எடை குறைந்து அழகாக இருக்கும்- அப்படியென்றால் யானை ஏன் எடை குறையவில்லை?
🤣

 தினமும் 2 மணி நேரம் நீச்சலடித்தால் உடல் மெலிந்து ஸ்லிம்மாகும்- அப்படியென்றால் திமிங்கிலம் ஏன் ஸ்லிம் ஆகவில்லை?
🤔

கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை சாப்பிட்டால், உடம்பில் கொழுப்பு அதிகமாகி அவதிப்படுவீர்கள் - அப்படி என்றால், புல்லை மட்டும் சாப்பிடும் ஆட்டின் உடம்புக்குள் அவ்வளவு கொழுப்பு எங்கிருந்து வந்தது?
😥

தினமும் சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்தால் சகல செல்வங்களும் தேடிவரும் - அப்படியென்றால் நியூஸ்பேப்பர் போடுபவர் BMW காரில் அல்லவா சுற்றவேண்டும்?
😆

எனவே நீங்க நீங்களாகவே இருந்து, தினமும் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே கவலைப்படாமல் இருங்கள்... 
💪💪
அதுதான் நல்லது...
நலம் பெறுக
👌👌
நன்றாக சிரித்து பிறரையும் சிரிக்க வையுங்கள்... அது போதும் 😍🥰

0o0o0o0o0o0o 0o0o0o0o0o0o 0o0o0o0o0o0o

1. தினமும் பசும்பால் அருந்தினால் உடல் மிகவும் வலிமை பெறும்- அப்படியானால்  பூனை ஏன் இன்னும் வலிமை பெறவில்லை?

வலிமை என்பது உருவின் அளவில் இல்லை. உருவின் தரத்தில் இருக்கின்றது.

2. தினமும் நீண்ட தூரம் நடந்தால் உடல் எடை குறைந்து அழகாக இருக்கும்- அப்படியென்றால் யானை ஏன் எடை குறையவில்லை?

அழகும் ஆரோக்கியமும் உங்கள் எடையில் இல்லை. எடையின் தன்மை(body mass composition)யில் உள்ளது. பல நேரங்களில் உடல் இளைப்பு என்பது ஏமாற்று வேலை.

3.தினமும் 2 மணி நேரம் நீச்சலடித்தால் உடல் மெலிந்து ஸ்லிம்மாகும்- அப்படியென்றால் திமிங்கிலம் ஏன் ஸ்லிம் ஆகவில்லை?

பூமி சுற்றிச் சுழன்று கொண்டேயிருந்தாலும், சிதையாமல் இருப்பதற்குக் காரணம் அதன் திண்மை. திண்மையாதல் வேறு உடல் இளைத்தல் என்பது வேறு. நீச்சலடித்தால் உடல் இறுகும் என்பதே மெய்.

4. கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை சாப்பிட்டால், உடம்பில் கொழுப்பு அதிகமாகி அவதிப்படுவீர்கள் - அப்படி என்றால், புல்லை மட்டும் சாப்பிடும் ஆட்டின் உடம்புக்குள் அவ்வளவு கொழுப்பு எங்கிருந்து வந்தது?

புல்லைத் தின்றாலும் அதிலிருக்கும் சத்துகள் செரிக்கப்பட்டு, செல்லுலோசுகள் குளுகோசாகி, உபரி குளுகோசு கொழுப்பாகும். ஆனால், ஒப்பீட்டளவில் அதிகமாக உண்ணப்பட வேண்டும். எல்லாமே ஒப்பீடுதான்.

5. தினமும் சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்தால் சகல செல்வங்களும் தேடிவரும் - அப்படியென்றால் நியூஸ்பேப்பர் போடுபவர் BMW காரில் அல்லவா சுற்றவேண்டும்?

BMW கார் வைத்திருப்பவன் நியூசு பேப்பர் போடுபவனுக்கும் முன்னமே எழுபவனாக இருக்கலாம். செல்வம் என்பது, காரில் மட்டுமே இல்லை. மன நலத்திலும் உடல்நலத்திலும் நாளைக் கடந்து செல்லும் இன்புறு அனுபவத்திலும் கூட‌ உள்ளது.