jaga flash news

Monday 30 November 2020

புத்துணர்ச்சி நல்கும் அசோக மரத்தின் மருத்துவ குணங்களை அறிவோம்.

புத்துணர்ச்சி நல்கும் அசோக மரத்தின் மருத்துவ குணங்களை அறிவோம்.

1. கருப்பைக் கோளாறுகள் தீர...

ஒரு பெண்ணின் முழுமை நிலை என்பது அவள் கருத்தரித்து தாய்மையடைந்த பின்னரே உண்டாகிறது. பிள்ளைப் பேறில்லாப் பெண்களை சமூகம் எள்ளி நகையாடுகிறது. தாய்மையடையாத பெண்கள் மன உளைச்சல், வேதனைக்கு உட்பட்டு, நோய்வாய்ப்பட்டு, கடைசியில் மனம் 

பேதலித்து, வாழ்க்கையை வெறுத்து, யாருடனும் ஒட்டாத வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்குப் பேரமுதமாய் இறைவன் அளித்த மூலிகையே அசோக மரமாகும்.

அசோக மரத்தின் பட்டை கால் கிலோ, கருப்பு எள் 50 கிராம்- இரண்டையும் அரைத் துத் தூள் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதில் ஒரு ஸ்பூன் எடுத்து, இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து பாதியாகச் சுண்டச் செய்யவும். இதனை காலை- மாலை இரு வேளையும் உண்டு வர வேண்டும்.

இதனால் கருப்பை பலவீனம், கருப்பையில் கட்டி, கருப்பை வீக்கம், கருப்பையில் சதை வளர்ச்சி, கரு சரியான நேரத்தில் கருப்பைக்கு வராத நிலை, சினைப்பையில் உண்டாகும் நீர்க்கட்டி, சினைப்பையையும் கருப்பையை யும் இணைக்கும் பாலோப்பியன் டியூப்களில் உண்டாகும் குறைபாடுகள் போன்ற அனைத் தையும் ஓட விரட்டி, உங்கள் வயிற்றிலும் முத்தான பிள்ளைகள் அவதரிப்பார்கள்.

நீங்கள் ஆயிரம் குணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள அசோகினை வழிபட்டு வணங்குங்கள்.

2. மாதவிலக்குக் கோளாறுகள் சீராக...

ஒரு பெண் தாய்மையடைய இயற்கை சில நியதிகளை வைத்துள்ளது. ஒரு பெண்ணுக்கு 28 நாட்களுக்கு ஒருமுறை முறையாக மாதாந் திர ருது சுழற்சியாக வந்து கொண்டிருந்தால், அதுவே அவளின் ஆரோக்கியத்தின் அறிகுறி.

பல்வேறு வகையான உடல் சார்ந்த குறைபாடுகளினால் மாதவிலக்கு முறையாக வராமல் போகலாம். அதற்கெல்லாம் கண் கண்ட மருந்து அசோகுவேயன்றி வேறில்லை.

கால் கிலோ அசோகப் பட்டை, மாவிலங் கப் பட்டை 100 கிராம், சுக்கு 25 கிராம், கருஞ்சீரகம் 25 கிராம் ஆகியவற்றை அரைத்துத் தூள் செய்து பத்திரப்படுத்தவும். இதில் மூன்று கிராம் அளவு காலை- மாலை இரு வேளையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, மாதாந்திர சுழற்சி முறையாக ஏற்படும்.

3. மாதவிடாயில் உண்டாகும் வயிற்றுவலி குணமாக...

100 கிராம் அசோகப் பட்டைத் தூளுடன் 25 கிராம் பெருங்காயத்தூளைக் கலந்து வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு கிராம் எடுத்து பசு வெண்ணெயில் குழைத்து தினமும் மூன்று வேளை சாப்பிட்டு வரவும். இதனால் ஓரிரு மாதங்களில் மாதவிடாயின்போது உண்டாகும் வயிற்றுவலி முற்றிலுமாய் குணமாகிவிடும். இறையாய் பவனி வரும் இயற்கை மருந்தை விட்டொழித்து, நாகரீகம் என்ற பெயரில் கண்டதற்கெல்லாம் நவீன மருந்துகளைப் பயன்படுத்தி வயிற்றைப் புண்ணாக்கிக் கொள்ள வேண்டாம். ஒவ்வொரு மூலிகையும் இறையம்சம் கொண்டதே. நீங்கள்தான் உங்களின் நுண்ணறிவு கொண்டு, அவற்றின் தன்மையை உணர்ந்து மருந்தாக்கிக் கொள்ள வேண்டும்.

4. மாதவிலக்கில் அதிக ரத்தப்போக்கு உண்டாகிறதா?

கருப்பை புண்ணாகிப்போன நிலை, கருப்பையில் உண்டாகும் சில தொற்றுகள், கருப்பை சற்று கீழே இறங்கிவிடுதல், உடம்பில் இயல்பான அளவில் இருக்க வேண்டிய சத்துகள் குறைந்துவிடுதல், ரத்தப் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாத விலக்கில் அதிக ரத்தப்போக்கு உண்டாகலாம்.

ஒரு பெண் என்பவள் செழிப்பான பயிர் களை விளைவிக்கும் வளமையான மண்ணைப் போல் இருக்க வேண்டும். உப்புப் பூத்த நிலத்தில் ஒரு பயிரும் விளைவதில்லை. அதேபோல் இயல்பான உடலமைப்பில் இருந்து ஒரு பெண் மாறி உப்பிப் போயிருந்தால், அவளின் கருத்தரிக்கும் வாய்ப்பு மிகக் குறைந்துவிடும்.

உடம்பு உப்புதல் என்பது, உடல் பருத்தல் என்பதாகும். உடல் பருத்தல் என்பது, உடலில் உள்ள உறுப்புகள் எல்லாம் தன் நிலையில் இருந்து மாறுபட்ட தன்மையாகும். இத்தகைய உடல் மாறுபாடு குழந்தையின்மைக்கு மிக முக்கிய காரணம்.

அதிக ரத்தப்போக்கினை அலட்சியப்படுத் தாமல் அசோகினை சரணடையுங்கள். ஐந்து கிராம் அசோகப் பட்டைப் பொடியை கட்டித் தயிரில் கலந்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வர, ரத்தப்போக்கு உடனே நிற்கும்.

நீங்கள் ஒன்றை மட்டும் கவனியுங்கள். மாதவிலக்கை முறைப்படுத்துவதற்கும், மாத விலக்கில் உண்டாகும் ரத்தப்போக்கை கட்டுப்படுத்துவதற்கும் ஒரே மருந்து அசோகப் பட்டைதான். இதேபோல் முரண்பட்ட இரு பிரச்சினைகளுக்கு ஒரே மருந்தை எந்த மருத்துவ முறையாலும் தர இயலாது.

இது தவிர, பல்வேறு நோய்களைக் குணமாக்கும் தன்மை அசோக மரத்திற்கு உண்டு.

ரத்தபேதி, சீதபேதி, வெள்ளைப்படுதல், சர்க்கரை நோய், பித்த நோய்கள், ரத்த அழுத்தம், அடிக்கடி உண்டாகும் கருச்சிதைவு, சிறுநீரக வியாதிகள், சிறுநீரகக் கல் போன்ற வியாதிகளை அசோக மரம் அதிசயமாய் குணமாக்கும்.

அசோகப் பட்டையைத் தனியாகச் சாப்பிடும்பொழுது, மலச்சிக்கல் உண்டாவதாய் நீங்கள் உணர்ந்தால், அத்துடன் சம அளவு கடுக்காய் கலந்து சாப்பிட்டு வரவும்.

ராகுவின் சுயநலம்..!

ராகுவின் சுயநலம்..!

தலைப்பே ராகுவை பற்றிய ஒரு புரிதலை தரும் என்று நம்புகிறேன், ராகு ஒரு சுயநலவாதி ஜாதகத்தில் ராகு எங்கு நின்றாலும் ராகுவுடன் இணைந்த கிரகம் அதன் சார்ந்த உறவு ராகுவின் சாரம் பெற்ற கிரகம் இப்படி ராகு தொடர்பு பெற்ற பாவ/கிரக காரக உறவுகள்/பொருள்களில் ஜாதகருக்கு சுயநலம் இருக்கும், ராகு நின்ற வீட்டின் ஆதிபதிய பலனை பெருக்குவார், ராகு தொடர்பு பெற்ற வீடு/கிரகம் அனைத்திலும் தீராத பற்றை தருவார், ராகுவுடன் சந்திரன் இணைந்தால் அந்த ஜாதகருக்கு தன் தாய் தன்னை தவிர யாரிடமும் தனக்கு இணையான அல்லது மிஞ்சிய அன்பை செலுத்துவது பிடிக்காது, குடும்பம்/வருமானம் இவைகளுக்கு அதிக முக்கியத்துவம் தருவார், எப்போதுமே ராகு தருவது அதிக ஆசையே அந்த ஆசையே விட இயலாத அடிமைத்தனத்தை தரும், ராகுவால் ஏற்பட்ட பழக்கத்தை அவ்வளவு எளிதில் விட இயலாது, ராகு நின்ற பாவத்தில் சுய நலத்தை தருவார், தன் நலத்தை தான் ராகு அதிகம் விரும்புவார்...

ராகு ஜாதகத்தில் எங்கே நின்றாலும் நின்ற வீட்டில் ஜாதகருக்கு திருப்தி ஏற்படுவது கடினமே, ராகு ஒன்றை அடையும்வரை அதற்காக என்ன வேண்டும் என்றாலும் செய்ய தயங்கமாட்டார், அடைந்த பின்பு வேறொன்றை அடைய ஆசையை தூண்டுவார், அப்போது ஏற்கனவே அடைந்ததை அலட்சியம் செய்வார், ராகுவுக்கு எல்லாவற்றின் அதிகம் வேண்டும், தற்பெருமை/புகழ்ச்சிக்கு மயக்குபவர் ராகு, ராகு எதிலும் தன் நலத்தை சார்ந்தே இயக்குவார், பிரற் நலத்திலும் சுயநலம் நிச்சயம் இருக்கும், ராகுவுக்கு அசுபர்களை தான் மிகவும் பிடிக்கும் அவருக்கு நெருக்கமும் கூட, ஆகவே ராகு அசுபரான சனியுடன் இணையும் போது அல்லது சனியின் தொடர்பை பெறும்போது ஜாதகரை இரக்கம் இல்லாமல் செய்து விடுவார், தன் நலத்தில் நாட்டம் அதிகம் கொண்டு அதற்க்காக எந்த கர்மத்தையும் செய்ய ஜாதகர் தயங்குவதில்லை, இதே ராகு சுபருடன் தொடர்பு பெரும் போது தான் ஏதோ பெரிய மஹான் போல் மற்றவருக்கு அறிவுரை கூறியே தன் காரியத்தை சாதித்து கொள்வார், ராகுவுக்கு அனைத்து கேட்ட வழிகளும்/பழக்கங்களும் மிகவும் விருப்பம், ஒருவர் ஜாதகத்தில் ராகு நின்ற வீட்டில் இவைகளை பிரதிபலிப்பார், ராகு ஒருவருக்கு கற்று தரும் படமானது எது சரி என்பதை தவறான பாதையில் பயணம் செய்யவைத்து அதன் வழியே ஜாதகருக்கு ஆசை காட்டி கர்மம் சேர்க்க வைத்து அதிலேயே உழலும் அமைப்பை ஏற்படுத்திவிடுவார் இதை விட்டு ஜாதகர் வெளியேறும் போது தான் தன் தவறையே உணர்வார்கள், குடிப்பவனை குடிப்பது தவறு என்று கூற சொன்னால் அவன் கூறுவான் ஒரு அளவீட்டில் குடித்தால் அது மருத்துவம் என்று, இப்படித்தான் இருக்கும் ராகுவின் அறிவுரையும் தனக்கு என்றால் எல்லாம் சரியே, அதுவே மற்றவருக்கு என்றால் அதில் தனக்கு என்ன சாதகம் என்பதை பொறுத்தே ராகுவின் செயல்பாடு இருக்கும், பொருளாசை அதிகம் உண்டு ராகுவுக்கு ராகு வலுத்து/யோகி என்றானால் அந்த ஜாதகருக்கு பொருளாசை அதாவது பொருள்களின் மீது ஆசை/பற்று அதிகம், அனாவசிய செலவுகளை அனாயசமாக செய்வார், அப்படி செலவு செய்வதை யாராவது சுட்டிக்காட்டினால் அதனை நியாயப்படுத்த அதற்கு தகுந்த வார்த்தைகளை பிரயோகித்து எதிராளியை அடக்குவார், ராகு 2ல் நின்றால் ஜாதகர் பேசி பேசியே காரியம் சாதிப்பார், ராகு எந்த செயலையும் சுற்றத்தரை நினைத்து செய்வதில்லை யார் எப்படி நினைத்தால் என்ன போனால் என்ன, தனக்கு தன் காரியம் நிறைவேறினால் போதும் என்பதே ராகுவின் வாதம், ராகுவால் கனவுகளை தகுதிக்கு மீறி காணவும் முடியும், அதை அடைய எந்த எல்லைக்கு கொண்டு செல்லவும் முடியும், சுய ஜாதகம்/கிரக நிலைகள் .

உளுந்தங்கஞ்சி...

🔊 *உடல் எவ்வளவு பலவீனமாக இருந்தாலும், 3 நாட்களில் எலும்புகள் உறுதியாக மாறி விடும். இடுப்பு வலி, முதுகு வலி, காணாமல் போய்விடும். இதை மட்டும் 1 டம்ளர் குடிச்சுப் பாருங்க*

நம்முடைய உடலுக்கு அதிகப்படியான சத்தை சேர்ப்பது உளுந்து. அதிலும் தோல் உரிக்காத உளுந்துக்கு பலமடங்கு சக்தி அதிகம் உள்ளது. அந்த உளுந்தை முளைக்கட்டி சாப்பிட்டால் இன்னும் அதனுடைய சக்தி பல மடங்காக பெருகும். இந்த முறைப்படி தொடர்ந்து 3 நாட்கள் கஞ்சி காய்ச்சி குடித்து பாருங்க! அசுரபலம் உங்களுடைய உடம்புக்கு வந்து விடும். அதாவது, அடித்துப்போட்டது போல உடல் வலி இருக்கும். முதுகு வலி, தண்டுவடம், கைகால், மூட்டுவலி, குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் வரக்கூடிய நடு முதுகு வலி, இடுப்பு வலி, எல்லாம் பஞ்சாகப் பறந்து போய்விடும்.

அப்படிப்பட்ட அற்புதமான சக்தியுள்ள ஒரு உளுந்தங்கஞ்சியை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

முதலில் தோல் உரிக்காத உளுந்தை 100 கிராம் அளவு வாங்கி, அதைத் தண்ணீரில் போட்டு மூன்று முறை கழுவி விடவேண்டும். அதன் பின்பு நல்ல தண்ணீரை ஊற்றி ஆறிலிருந்து ஏழு மணி நேரம் அந்த உளுந்தை ஊற விட்டு விடுங்கள். 7 மணி நேரம் கழித்து, அதில் இருக்கும் தண்ணீரை நன்றாக வடிகட்டி விட்டு, ஒரு வெள்ளை காட்டன் துணியில் போட்டு மூட்டை கட்டி, அந்த மூட்டையை, ஒரு சில்வர் குண்டானில் வைத்து மூடி போட்டு, மூடி விடுங்கள். வெறும் 6 மணி நேரத்தில் இந்த உளுந்து முளை விட ஆரம்பித்து இருக்கும்.

இந்த முளைக்கட்டிய உளுந்தை கிரைண்டர் அல்லது மிக்ஸியில் போட்டு நன்றாக தண்ணீர் ஊற்றி மொழுமொழுவென்று அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த இந்த உளுந்தை அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஊற்றி விட வேண்டும். நீங்கள் போட்ட உளுந்துக்கு ஐந்து மடங்கு தண்ணீர் ஊற்றவேண்டும். உளுந்து கட்டியாக இருந்தால், களி போல மாறிவிடும். கஞ்சி போல வராது. அரைத்த உளுந்தில் முதலிலேயே நன்றாக தண்ணீரை ஊற்றி கரைத்து, அடுப்பில் வைத்திருக்கும் பாத்திரத்தில் ஊற்றி கஞ்சியை கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் இருக்கட்டும். அடுத்தபடியாக மற்றொரு அடுப்பில் 150 கிராம் அளவு வெல்லத்தைத் நசுக்கி போட்டு, 50 கிராம் அளவு தண்ணீர்விட்டு, நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும். வெல்வத்தை பாகு காய்ச்ச வேண்டாம். வெல்லம் தண்ணீரில் நன்றாக கரைந்தால் போதும். இதை வடிகட்டி அப்படியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

 மற்றொரு அடுப்பில் உளுந்தை கைவிடாமல் கிளறிக் கொண்டே இருங்கள். உளுந்தின் பச்சை வாடை முழுமையாக நீங்கி, உளுந்து கஞ்சி பதத்திற்கு வரவேண்டும். மொத்தமாக 30 நிமிடங்கள் வரை எடுக்கும். உளுந்த கஞ்சியில் பச்சை வாடை முழுமையாக நீங்கிய பின்பு, கரைத்து வைத்திருக்கும் வெல்லத்தை உளுந்தங்கஞ்சியோடு சேர்த்து, 5 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடுங்கள். வெல்லத்தின் பச்சை வாடை போக வேண்டும் அவ்வளவுதான். இப்போது உளுந்தங்கஞ்சி தயாராக உள்ளது.

 இறுதியாக ஒரு சிறிய தாளிப்பு கரண்டியில் 2 ஸ்பூன் நெய் விட்டு, பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம் உலர் திராட்சை, இவர்களை சேர்த்து வதக்கி இறுதியாக ஒரு கைப்பிடி அளவு தேங்காய் துருவலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, தயாராக இருக்கும் உளுந்தங்கஞ்சியில் போட்டுவிடுங்கள். இறுதியாக ஒரு சிட்டிகை ஏலக்காய் பொடியைத் தூவி உளுந்தங்கஞ்சி பகல் நேரத்தில்தான் கட்டாயம் கொடுக்க வேண்டும். இது ஜீரணமாவதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. வாரத்தில் 3 நாட்கள் இந்த கஞ்சியை குடித்து வந்தாலும் கூட, உங்களது உடம்பு இரும்பு போல வலிமை ஆகிவிடும் என்பதில் சந்தேகமே கிடையாது. முயற்சி செய்து பாருங்கள். 

குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு, வயது வந்த பெண் குழந்தைகளுக்கு இதை கொடுப்பது மிகவும் நல்லது.


து‌ம்பை‌ப் பூ...

மாத‌வில‌க்கு ‌‌சீராக வர!

து‌ம்பை‌ப் பூவை அ‌றியாதவ‌ர்க‌ள் இரு‌க்க மா‌ட்டா‌ர்க‌ள். ‌சி‌றிய வெ‌ள்ளை ‌நிற‌ப் பூவான து‌ம்பை‌க்கு அ‌திக மரு‌‌த்துவ குண‌ங்க‌ள் உ‌ள்ளன.

ந‌ம் தா‌த்தா பா‌ட்டி கால‌த்‌தி‌ல் ‌மிக எ‌ளிதாக‌க் ‌கிடை‌க்கு‌ம் இ‌ந்த‌த் து‌ம்பை‌ப் பூவை பல ‌விஷய‌ங்களு‌க்கு‌ப் பய‌ன்படு‌த்‌தி வ‌‌ந்தன‌ர்.

‌சில பெ‌ண்களு‌க்கு மாத‌வில‌க்கு ச‌ரியாக இரு‌ப்ப‌தி‌ல்லை. மாத‌க்கண‌க்‌கி‌ல் த‌ள்‌ளி‌ப் போவது‌ம், மாத‌வில‌க்கு ஆன‌‌ப் ‌பிறகு பல நா‌ட்களு‌க்கு‌த் தொட‌ர்‌ந்து ஆவது‌மாக இரு‌க்கு‌ம். இ‌ப்படி‌ப்ப‌ட்ட பெ‌ண்களு‌க்கு து‌ம்பை‌ப் பூவை‌க் கொ‌ண்டு ஒரு கை வை‌த்‌திய‌ம் உ‌ள்ளது.

அதாவது து‌ம்பை‌ப் பூ, து‌ம்பை இலை, உ‌த்தாம‌ணி இலை மூ‌ன்றையு‌ம் சம அளவு எடு‌த்து மை போல அரை‌க்கவு‌ம்.

இ‌ந்த ‌விழுதை ஒரு சு‌ண்டை‌க்கா‌ய் அள‌வி‌ற்கு எடு‌த்து காலை, மாலை இருவேளையு‌ம் வா‌யி‌ல் போ‌ட்டு முழு‌ங்‌கி‌ப் பாலை‌க் குடி‌க்கவு‌ம்.

இ‌வ்வாறு தொட‌ர்‌ந்து 3 நா‌ட்க‌ள் சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் பெ‌ண்களு‌க்கு நா‌ள் தவ‌றி வரு‌ம் மாத‌வில‌க்கு ‌சீரா‌கி மாத‌ம் தோறு‌ம் மாத‌வில‌க்கு ஏ‌ற்படு‌ம்

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட நார்த்தங்காய் தரும் நன்மைகள்.:

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட நார்த்தங்காய் தரும் நன்மைகள்.:

நார்த்தங்காயில் வெள்ளை நிறத்தில் உள்ள அடர்த்தியான ஊட்டச்சத்து பல்வேறு சமையல் உணவுகளில் ஜாம், மார்மலேட் மற்றும் ஊறுகாய் என பரவலாகப்  பயன்படுத்தப்படுகிறது.

நார்த்தங்காயில் உள்ள வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் பிற அத்தியாவசிய தாதுக்களின் நன்மை இரத்த அழுத்தத்தை உறுதிப்படுத்துகிறது, இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் தமனிகளின் அழுத்தத்தை குறைக்கிறது. 

நார்த்தங்காய் சாறு உட்கொள்வது இதய நோய்கள், பெருந்தமனி தடிப்பு, பக்கவாதம் ஆகியவற்றின் அபாயத்தைக் குறைக்கிறது மற்றும் இதய ஆரோக்கியத்தை  மேம்படுத்துகிறது.

நார்த்தங்காயில் வலுவான அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி பண்புகள் உடலில் எந்தவொரு கடுமையான அல்லது நாள்பட்ட வலியையும் குறைக்க நன்றாக வேலை செய்கின்றன. 

நார்த்தங்காய் அத்தியாவசிய எண்ணெய்கள் தலைவலி மற்றும் கீல்வாதத்துடன் தொடர்புடைய வலியைக் குறைப்பதில் அற்புதமான குணப்படுத்தும் பண்புகளை  வெளிப்படுத்துகின்றன.

நார்த்தங்காயில் நல்ல அளவு வைட்டமின் சி இருப்பது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. 

நார்த்தங்காயின் தோல் வலுவான பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் தடுப்புகளை கொண்டுள்ளது என்பதையும் சான்றுகள் நிரூபிக்கின்றன, அவை ஈ.கோலை மற்றும் பிற பாக்டீரியா தொற்றுகளைத் தடுக்கும் திறனைக் கொண்டுள்ளன.

நார்த்தங்காயின் சாறு குடலில் உள்ள அமில சுரப்புகளை சமப்படுத்த ஒரு அற்புதமான இயற்கை தீர்வாகும். குடல் செயல்பாட்டை மேம்படுத்தவும், வாய்வு, வீக்கம், குமட்டல் மற்றும் மலச்சிக்கல் போன்ற பொதுவான பிரச்சினைகளிலிருந்து விடுபடவும் உதவுகிறது.

வெற்றிலையின் மருத்துவ குணங்கள்

வெற்றிலையின் மருத்துவ குணங்கள்:

வெற்றிலை-தாம்பூலம், மெல்லிலை என்று அழைக்க கூடிய வெற்றிலையில் அற்புதமான மருத்துவ குணங்கள் உள்ளன.

இது வாயுவை வெளித்தள்ள கூடியது. நோய்கள் வராமல் தடுக்கிறது. நுண்கிருமிகளை போக்க கூடியது.

☬உடல் பருமனை குறைக்கும் மருந்து:

2 வெற்றிலையில் 5 மிளகு வைத்து வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு சாறை மட்டும் விழுங்கிவிட வேண்டும். இதேபோல் இரண்டு மாதங்கள் வரை செய்துவர உடல் எடை குறையும்.

☬நரம்புகளை பலப்படுத்தும் மருந்து:

2 ஸ்பூன் வெற்றிலை சாறுடன், அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டுவர நரம்புகளுக்கு பலம் கிடைக்கும்.

மூளை பலம் பெறுவதுடன் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

☬மூச்சுதிணறல், நெஞ்சக சளியை போக்கும் மேல்பூச்சு மருந்து:

பாத்திரத்தில் சிறிது கடுகு எண்ணெய்யை சூடுபடுத்தவும். இதில் வெற்றிலைகளை வைத்து லேசாக வதக்கவும். இந்த வெற்றிலைகளை இளஞ்சூட்டில் மார்பில் வைக்கும்போது நெஞ்சக சளி கரைந்து வெளியேறும்.

☬யானைக்கால் ஜுரம் விரைவீக்கத்துக்கான மருந்து:

5 வெற்றிலையை துண்டுகளாக்கி, அதனுடன் கால் ஸ்பூனுக்கும் சற்று குறைவாக உப்பு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
இதை வடிகட்டி குடித்து வர யானைக்கால் நோய், விரைவீக்கம் சரியாகும். விட்டுவிட்டு காய்ச்சல் ஏற்பட்டு கால்கள் சிவந்து சிறிது சிறிதாக பருத்து கொண்டே வருவது யானைக்கால் நோய். நுண்கிருமிகளால் இது ஏற்படும்.
இந்த வீக்கத்தை வெற்றிலை தேனீர் குறைக்கும். விரைவாதம் ஏற்படுவதால் நெறிக்கட்டி காய்ச்சல் வரும். இதை தடுக்க இந்த தேனீர் பயன்படுகிறது.

☬கீழ்வாதம், விரைவாதத்துக்கான மேல்பூச்சு மருந்து:

பாத்திரத்தில் சிறிது விளக்கெண்ணெய்யுடன், நீர்விடாமல் அரைத்த வெற்றிலை பசையை சேர்க்கவும்.
இதை பத்தாக போட்டுவர கீழ்வாதம், விரைவாதம் சரியாகும்.
வாய் சிவப்பதற்காக பயன்படுத்த கூடிய வெற்றிலையில் பல்வேறு நன்மைகள் உள்ளன.

வெற்றிலை வயிற்றில் இருக்கும் வாயுவை வெளித்தள்ளும் தன்மை கொண்டது. மூளை, இதயம், கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றை பலப்படுத்தி ஆரோக்கியத்தை தரக்கூடியது.

நரம்பு மண்டலத்துக்கு பலம் கொடுப்பதால் படிக்கும் குழந்தைகளுக்கு வெற்றிலை சாறு கொடுத்துவர ஞாபக சக்தியை அதிகரிக்கும். வெற்றிலை சாறை ஒரு சொட்டு காதில் விட்டால், காதில் ஏற்படும் வலி, சீல் பிடித்தல் போன்றவை குணமாகிறது

பூண்டை இதோட கலந்து தேய்ச்சா முடி கிடுகிடுனு வேகமா வளருமாம்... ட்ரை பண்ணுங்களேன்...

பூண்டை இதோட கலந்து தேய்ச்சா முடி கிடுகிடுனு வேகமா வளருமாம்... ட்ரை பண்ணுங்களேன்... 

 தினமும் தலை சீவும்போது கொத்து கொத்தாக முடி உதிர்கிறதா? இதனை நினைத்து அதிக மன வேதனை அடைகிறீர்களா? உங்கள் முடி உதிர்வதைத் தடுக்கும் ஒரு பொருள் உங்கள் வீட்டு சமயலறையில் உள்ளது. ஆம், உங்கள் கூந்தல் உதிர்வதைக் கட்டுப்படுத்தும் அந்த சிறப்பான பொருள் எது என்று தெரியுமா? அது பூண்டு. இந்திய சமையலில் மிகவும் பிரபலமான ஒரு உணவுப்பொருள் பூண்டு. உணவின் சுவையை அதிகரிக்கும் பூண்டு, மிக அதிக ஊட்டச்சத்து மதிப்பைக் கொண்ட ஒரு உணவுப்பொருள். முடி உதிர்வைக் கட்டுப்படுத்த சிறப்பான முறையில் செயல்புரிகிறது பூண்டு. பூண்டில் உள்ள சில குறிப்பிட்ட பண்புகள் முடி உதிர்வைக் கட்டுப்படுத்துகின்றன. பூண்டு எவ்வாறு வேலை புரிகிறது? பூண்டில் உள்ள சில குறிப்பிட்ட தன்மைகள் காரணமாக, முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் ஒரு முக்கிய மூலப்பொருளாக பூண்டு திகழ்கிறது. அவை, . பூண்டில், ஜின்க், சல்பர் மற்றும் கால்சியம் போன்ற சில முக்கிய மூலப்பொருட்கள் இருப்பதால், முடி உதிர்வதை எதிர்த்து போராட உதவுகிறது. . பூண்டு , நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதால், தலை முடி உதிர்விற்கு காரணமான கிருமிகளையும் பாக்டீரியாக்களையும் அழிக்க உதவுகிறது . பூண்டில் உள்ள செலெனியம் என்னும் கூறு, இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து, முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. . முடியின் வேர்க்கால்களை சுத்தம் செய்து, அடைப்பைப் போக்குகிறது, இதனால் முடியின் வலிமை அதிகரிக்கிறது. . தலையில் உள்ள பொடுகைப் போக்கவும் பூண்டு சிறந்த தீர்வைத் தருகிறது. 

. பூண்டு மற்றும் தேங்காய் எண்ணெய் கூந்தல் ஆரோக்கியத்திற்கு, தேங்காய் எண்ணெய் பல்வேறு நன்மைகளை வாரி வழங்குகிறது. பூண்டுடன் இணைந்து தேங்காய் எண்ணெய், முடி உதிர்வை எதிர்த்து போராடுகிறது. இரண்டு பல் பூண்டை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காய் எண்ணெய்யை மிதமாக சூடாக்கி, அதில் பூண்டைச் சேர்க்கவும். இந்த கலவையை உங்கள் தலையில் நன்றாக மசாஜ் செய்து தடவவும். அரை மணி நேரம் இந்த எண்ணெய் உங்கள் தலையில் ஊறியவுடன், வழக்கமான ஷாம்பூ பயன்படுத்தி தலையை அலசவும்.

துரியன் பழம்

துரியன் பழம் அதிக மருத்துவத் தன்மை கொண்ட பழங்களுள் ஒன்று. இதன் மணம் ஒருவித வெறுக்கத்தக்க நாற்றத்தைக் கொண்டது. ஆனால் சாப்பிட ஆரம்பித்தால் நன்றாக இருக்கும். மேலும் மருத்துவ குணங்கள் கொண்டது. 
உடல் சத்து குறைவினாலும், மது, புகை போதை போன்ற தீய பழக்கங்களினாலும் உடல் வலுவிழந்து காணப்படும். இதற்கு இவர்கள் வாரம் இருமுறை துரியன் பழம் சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
 
இரத்தத்தில் அதிக கொழுப்பு பொருட்கள் படிவதால் இரத்த அடைப்பு ஏற்பட்டு இரத்தம் அசுத்தமாகிறது. இந்த கொழுப்பு சத்தை கரைத்து கலோரிகளாக மாற்றி  இரத்தத்தை சுத்தப் படுத்துவதுடன் இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து காப்பாற்றும்.

ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைவால் குழந்தையின்மை குறை இருக்கும். துரியன் பழம் அணுக்களின் எண்ணிக்கயை அதிகரிக்க வல்லது. எனவே துரியன்  பழம் சாப்பிட்டு வந்தால் தாது பலப்படும்.
 

மலச்சிக்கலை நீக்கும் குணம் துரியன் பழத்திற்கு உண்டு. செரிமான சக்தியை தூண்டி நன்கு பசியைக் ஏற்படுத்தும். கண்களின் பார்வை நரம்புகள் பலப்படும். தோலை பாதுகாத்து சருமத்தை பளிச்சிட செய்யும்.

வீட்டை கோயிலைப் போல் மிக சுத்தமாக வைத்திருக்க வேண்டும்

உடைந்த பொருட்களை வீட்டில் வைத்திருப்பது, உடைந்த கண்ணாடியில் முகம் பார்ப்பது, துளசி செடி வாடிப்போவது, அழுக்கு துணிகளை துவைக்காமல் இருப்பது, மாலை 5 மணிக்கு மேல் துணி துவைத்து காயப்போடுவது, வீட்டின் நுழைவாசலில் செருப்பு, துடைப்பம் போன்றவற்றை வைப்பது, சூரிய ஒளி உள்ளே வராதபடி ஜன்னல்களையும் கதவையும் மூடி வைத்திருப்பது, ஒட்டடை படிவது, அழுக்கு சேர்வது, கெட்ட வாடை வருவது, நிம்மதியான தூக்கம் இல்லாமல் இருப்பது, கெட்ட கனவுகள் வருவது, வீட்டிற்குள்ளேயே அடைந்திருக்க தோன்றுவது, மிதமிஞ்சிய தூக்கம், சோம்பல், கடவுளை வணங்க தோன்றாதது, வீட்டில் விளக்கு ஏற்ற தோன்றாதது இது போன்ற விஷயங்கள் வீட்டில் இருந்தால் அந்த வீட்டில் தெய்வசக்தி குறைந்திருக்கிறது என்று பொருள். வீட்டில் தெய்வசக்தி குறைந்தால், சந்தோஷம் இருக்காது, பிரச்சனைகள் உருவாகும், தொழில், வேலையில் தடைகள் வரும், திருமணம், குழந்தை பிறப்பு, போன்ற சுப நிகழ்வுகள் தடைபடும், செல்வம் சேராது. 
வீட்டை கோயிலைப் போல் மிக சுத்தமாக வைத்திருக்க வேண்டும். 

நாலாயிர திவ்விய பிரபந்தம் 2791 - 4000

ஸ்ரீ நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய் மொழி ஸ்ரீ நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய் மொழி திருவரங்கத்து அமுதனார் அருளிச்செய்த இராமாநுச நூற்றந்தாதி ( 2791 - 4000) ஸ்ரீ நம்மாழ்வார் திருவாய் மலர்ந்தருளிய திருவாய்மொழி ஸ்ரீ ஸ்ரீமதே ராமாநுஜாய நம திருவாய்மொழித் தனியன்கள் நாதமுனிகள் அருளிச்செய்தது பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம் ஸஹஸ்fரசா கோபநிஷத்ஸமாகமம் நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம். வெண்பாக்கள் ஈச்வரமுனிகள் அருளிச்செய்தது திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து. சொட்டை நம்பிகள் அருளிச்செய்தது மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், பாதங்கள் யாமுடைய பற்று. அனந்தாழ்வான் அருளிச்செய்த்து ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், பேராத வுள்ளம் பெற. பட்டர் அருளிச்செய்தவை வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமுனுசன். மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும், ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், யாழினிசை வேதத் தியல். ஸ்ரீமதே ராமாநுஜாய நம நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி. திருவாய் மொழி முதற் பத்து. 2791 உயர்வற வுயர்நலம் முடையவன் யவனவன் மயர்வற மதிநலம் அருளினன் யவனவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன் துயரறு சுடரடி தொழுதெழென் மனனே. (2) 1.1.1 2792 மனனக மலமற மலர்மிசை யெழுதரும் மனனுணர் வளவிலன், பொறியுணர் வவையிலன் இனனுணர், முழுநலம், எதிர்நிகழ் கழிவினும் இனனிலன், னெனனுயிர், மிகுநரை யிலனே. 1.1.2 2793 இலனது வுடையனி தெனநினை வரியவன் நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன் புலனொடு புலனலன், ஒழிவிலன், பரந்த அந் நலனுடை யொருவனை நணுகினம் நாமே. 1.1.3 2794 நாமவ னிவனுவன், அவளிவளுவளெவள் தாமவரிவருவர், அதுவிது வுதுவெது வீமவை யிவையுவை, யவைநலந் தீங்கவை ஆமவை யாயவை, யாய்நின்ற அவரே. 1.1.4 2795 அவரவர் தமதம தறிவறி வகைவகை அவரவர் ரிறையவ ரெனவடி யடைவர்கள் அவரவர் ரிறையவர் குறைவில ரிறையவர் அவரவர் விதிவழி யடையநின் றனரே. 1.1.5 2796 நின்றனர் ரிருந்தனர் கிடந்தனர் திரிந்தனர் நின்றிலர் ரிருந்திலர் கிடந்திலர் திரிந்திலர் என்றுமொ ரியல்வினர் எனநினை வரியவர் என்றுமொ ரியல்வொடு நின்றவெந் திடரே. 1.1.6 2797 திடவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை படர்பொருள் முழுவது மாயவை யவைதொறும் உடல்மிசை யுயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன் சுடர்மிகு சுருதியு ளிவையண்ட சுரனே. 1.1.7 2798 சுரரறி வருநிலை விண்முதல் முழுவதும் வரன்முத லாயவை முழுதுண்ட பரபரன் புரமொரு மூன்றெரித் தமரர்க்கு மறிவியந்து அரனயன் எனவுல கழித்தமைத் துளனே. 1.1.8 2799 உளனெனி லுளனவ னுருவமிவ் வுருவுகள் உளனல னெனிலவன் அருவமிவ் வருவுகள் உளனென விலனென விவைகுண முடைமையில் உளனிரு தகைமையொ டொழிவிலன் பரந்தே. 1.1.9 2800 பரந்ததண் பரவையுள்நீர்தொறும் பரந்துளன் பரந்தஅ ண் டமிதென நிலவிசும் பொழிவற கரந்தசி லிடந்தொறும் இடந்திகழ் பொருடொறும் கரந்தெங்கும் பரந்துள னிவையுண்ட கரனே. 1.1.10 2801 கரவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை வரனவில் திறல்வலி யளிபொறை யாய்நின்ற பரனடி மேல்குரு கூர்ச்சட கோபன்சொல் நிரனிறை யாயிரத் திவைபத்தும் வீடே. (2) 1.1.11 2802 வீடுமின் முற்றவும்--வீடுசெய்து உம்முயிர் வீடுடை யானிடை--வீடுசெய்ம்மினே. (2) 1.2.1 2803 மின்னின் நிலையில--மன்னுயி ராக்கைகள் என்னு மிடத்து இறை--உன்னுமின் நீரே. 1.2.2 2804 நீர்நும தென்றிவை--வேர்முதல் மாய்த்து இறை சேர்மின் உயிர்க்கு அத--னேர்நிறை யில்லே. 1.2.3 2805 இல்லது முள்ளதும்--அல்ல தவனுரு எல்லையி லந்நலம்--புல்குபற் றற்றே. 1.2.4 2806 அற்றது பற்றெனில்--உற்றது வீடுஉயிர் செற்றது மன்னுறில்--அற்றிறை பற்றே. 1.2.5 2807 பற்றில னீசனும்--முற்றவும் நின்றனன் பற்றிலை யாய் அவன்--முற்றி லடங்கே. 1.2.6 2808 அடங்கெழில் சம்பத்து--அடங்கக்கண்டு ஈசன் அடங்கெழி லஃதென்று--அடங்குக வுள்ளே. 1.2.7 2809 உள்ள முரைசெயல்--உள்ளவிம் மூன்றையும் உள்ளிக் கெடுத்து இறை--யுள்ளிலொ டுங்கே. 1.2.8 2810 ஒடுங்க அவன்கண்--ஒடுங்கலு மெல்லாம் விடும்பின்னு மாக்கை--விடும்பொழு தெண்ணே. 1.2.9 2811 எண்பெருக் கந்நலத்து--ஒண்பொரு ளீறில வண்புகழ் நாரணன்--திண்கழல் சேரே. (2) 1.2.10 2812 சேர்த்தடத் தென்குரு--கூர்ச்ட கோபன்சொல் சீர்த்தொடை யாயிரத்து--ஓர்த்தவிப் பத்தே. (2) 1.2.11 2813 பத்துடை யடியவர்க் கெளியவன், பிறர்களுக் கரிய வித்தகன் மலர்மகள் விரும்பும்நம் அரும்பெற லடிகள் மத்துறு கடைவெண்ணெய் களவினில் உ ரவிடை யாப்புண்டு எத்திறம் உரலினோ டிணைந்திருந் தேங்கிய எளிவே. (2) 1.3.1 2814 எளிவரு மியல்வினன் நிலைவரம் பிலபல பிறப்பாய், ஒளிவரு முழுநலம் முதலில கேடில வீடாம், தெளிதரும் நிலைமைய தொழிவிலன் முழுவதும், மிறையோன், அளிவரு மருளினோ டகத்தனன், புறத்தன னமைந்தே. 1.3.2 2815 அமைவுடை யறநெறி முழுவது முயர்வற வுயர்ந்த, அமைவுடை முதல்கெடல் ஒடிவிடை யறநில மதுவாம், அமைவுடை யமரரும் யாவையும் யாவரும் தானாம,f அமைவுடை நாரணன் மாயையை யறிபவர் யாரே? 1.3.3 2816 யாருமோர் நிலைமைய னெனவறி வரிய வெம்பெருமான், யாருமோர் நிலைமைய னெனவறி வெளியவெம் பெருமான், பேருமோ ராயிரம் பிறபல வுடையவெம் பெருமான், பேருமோ ருருவமு முளதில்லை யிலதில்லை பிணக்கே. 1.3.4 2817 பிணக்கற அறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த, கணக்கறு நலத்தனன் அந்தமி லாதியம் பகவன், வணக்குடைத் தவநெறி வழிநின்று புறநெறி களைகட்டு, உணக்குமின் பசையற அவனுடை, யுணர்வுகொண் டுணர்ந்தே. 1.3.5 2818 உணர்ந்துணர்ந் திழிந்தகன் றுயர்ந்துரு வியந்தவிந்நிலைமை, உணர்ந்துணர்ந் துணரிலும் இறைநிலையுணர்வரி துயிர்காள், உணர்ந்துணர்ந் துரைத்துரைத் தரியய னரனென்னுமிவரை, உணர்ந்துணர்ந் துரைத்துரைத் திறைஞ்சுமின் மனப்பட்டதொன்றே. 1.3.6 2819 ஒன்றெனப் பலவென அறிவரும் வடிவினுள் நின்ற, நன்றெழில் நாரணன் நான்முகன் அரனென்னு மிவரை, ஒன்றநும் மனத்துவைத் துள்ளிநும் இருபசை யறுத்து, நன்றென நலஞ்செய்வ தவனிடை நம்முடை நாளே. 1.3.7 2820 நாளு நின் றடு நமபழ மையங் கொடுவினையுடனே மாளும், ஓர் குறைவில்லை மனனக மலமறக் கழுவி, நாளூநந் திருவுடை யடிகள்தம் நலங்கழல் வணங்கி, மாளுமோ ரிடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே. 1.3.8 2821 வலத்தனன் திரிபுர மெரித்தவ னிடம்பெறத் துந்தித் தலத்து, எழு திசைமுகன் படைத்தநல் லுலகமும் தானும் புலப்பட பின்னும்தன் உலகத்தி லகத்தனன் தானே சொலப்புகில் இவைபின்னும் வயிற்றுள இவையவன் துயக்கே. 1.3.9 2822 துயக்கறு மதியில்நல் ஞானத்துள் அமரரைத் துயக்கும், மயக்குடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன், பு<யற்கரு நிறத்தனன் பெருநிலங் கடந்தநல் லடிப்போது , அயர்ப்பில னலற்றுவன் தழுவுவன் வணங்குவ னமர்ந்தே. 1.3.10 2823 அமரர்கள் தொழுதெழ அலைகடல் கடைந்தவன் றன்னை, அமர்பொழில் வளங்குரு கூர்ச்சடகோபன் குற் றேவல்கள், அமர்சுவை யாயிரத் தவற்றினு ளிவைபத்தும் வல்லார் அமரரோ டுயர்விற்சென் றறுவர்தம் பிறவியஞ் சிறையே. (2) 1.3.11 2824 அஞ்சிறைய மடநாராய். அளியத்தாய். நீயும்நின் அஞ்சிறைய சேவலுமாய் ஆவாவென் றெனக்கருளி வெஞ்சிறைப்புள் ளுயர்த்தாற்கென் விடுதூதாய்ச் சென்றக்கால் வன்சிறையில் அவன்வைக்கில் வைப்புண்டா லென்செய்யுமோ? (2) 1.4.1 2825 என்செய்ய தாமரைக்கண் பெருமானார்க் கென்தூதாய் என்செய்யும் உரைத்தக்கால் இனக்குயில்காள். நீரலிரே? முன்செய்த முழுவினையால் திருவடிக்கீழ்க் குற்றேவல் முன்செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே? 1.4.2 2826 விதியினால் பெடைமணக்கும் மென்னடைய அன்னங்காள். மதியினால் குறள்மாணாய் உலகிரந்த கள்வற்கு மதியிலேன் வல்வினையே மாளாதோ வென்று , ஒருத்தி மதியெல்லாம் முள்கலங்கி மயங்குமால் என்னீரே. 1.4.3 2827 என்நீர்மை கண்டிரங்கி யிதுதகா தென்னாத என்நீல முகில்வண்ணற் கென்சொலியான் சொல்லுகேனோ நன்னீர்மை யினியவர் கண் தங்காதென் றொருவாய்ச்சொல் நன்னீல மகன்றில்காள். நல்குதிரோ நல்கீரோ? 1.4.4 2828 நல்கித்தான் காத்தளிக்கும் பொழிலேழும் வினையேற்கே, நல்கத்தா னாகாதொ? நாரணனைக் கண்டக்கால் மல்குநீர்ப் புனற்படப்பை இரைதேர்வண் சிறுகுருகே. மல்குநீர்க் கண்ணேற்கோர் வாசகங்கொண் டருளாயே. 1.4.5 2829 அருளாத நீரருளி யவராவி துவராமுன் அருளாழிப் புட்கடவீர் அவர்வீதி யொருநாள் என்று அருளாழி யம்மானைக் கண்டக்கா லிதுசொல்லி யருள் ஆழி வரிவண்டே. யாமுமென் பிழைத்தோமே? 1.4.6 2830 என்பிழைகோப் பதுபோலப் பனிவாடை யீர்கின்றது என்பிழையே நினைந்தருளி யருளாத திருமாலார்க்கு என்பிழைத்தாள் திருவடியின் தகவினுக் கென் றொருவாய்ச்சொல் என்பிழைக்கும் இளங்கிளியே. யான்வளர்த்த நீயலையே? 1.4.7 2831 நீயலையே சிறுபூவாய். நெடுமாலார்க் கென்தூதாய் நோயெனது நுவலென்ன, நுவலாதே யிருந்தொழிந்தாய் சாயலொடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனியுனது வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே. 1.4.8 2832 நாடாத மலர்நாடி நாள்தோறும் நாரணந்தன், வாடாத மலரடிக்கீழ் வைக்கவே வகுக்கின்று, வீடாடி வீற்றிருத்தல் வினையற்ற தென்செய்வதோ? ஊடாடு பனிவாடாய். உரைத்தீராய் எனதுடலே. 1.4.9 2833 உடலாடிப் பிறப்புவீ டுயிர்முதலா முற்றுமாய், கடலாழி நீர்தோற்றி யதனுள்ளே கண்வளரும் அடலாழி யம்மானைக் கண்டக்கா லிதுசொல்லி விடலாழி மடநெஞ்சே. வினையோமொன் றாமளவே. 1.4.10 2834 அளவியன்ற ஏழுலகத் தவர்பெருமான் கண்ணனை வளவயல்சூழ் வண்குருகூர்ச்சடகோபன் வாய்ந்துரைத்த அளவியன்ற அந்தாதி யாயிரத்துள் இப்பத்தின் வளவுரையால் பெறலாகும் வானோங்கு பெருவளமே. (2) 1.4.11 2835 வளவே ழுலகின் முதலாய் வானோ ரிறையை அருவினையேன் களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா. என்பன், பின்னையும், தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லா னாயர் தலைவனாய், இளவே றேழும் தழுவிய எந்தாய். என்பன் நினைந்துநைந்தே. (2) 1.5.1 2836 நினைந்து நைந்துள் கரைந்துருகி, இமையோர் பலரும் முனிவரும், புனைந்த கண்ணி நீர்சாந்தம் புகையோ டேந்தி வணங்கினால், நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய், முதலில் சிதையாமே, மனஞ்செய் ஞானத் துன்பெருமை மாசூ ணாதோ மாயோனே. 1.5.2 2837 மாயோ னிகளாய் நடைகற்ற வானோர் பலரும் முனிவரும், நீயோ னிகளைப் படை என்று நிறைநான் முகனைப் படைத்தவன் சேயோ னெல்லா அறிவுக்கும், திசைக ளெல்லாம் திருவடியால் தாயோன் எல்லா வெவ்வுயிர்க்கும் தாயோன் தானோ ருருவனே. 1.5.3 2838 தானோ ருருவே தனிவித்தாய்த் தன்னில் மூவர் முதலாய வானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய் தானோர் பெருநீர் தன்னுள்ளே தோற்றி அதனுள் கண்வளரும் வானோர் பெருமான் மாமாயன் வைகுந் தன்எம் பெருமானே. 1.5.4 2839 மானேய் நோக்கி மடவாளை மார்வில் கொண்டாய். மாதவா. கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறித்தாய். கோவிfந்தா. வானார் சோதி மணிவண்ணா. மதுசூ தா.நீ யருளாய் உ ன் தேனே மலரும் திருப்பாதம் சேரு மாறு வினையேனே. 1.5.5 2840 வினையேன் வினைதீர் மருந்தானாய். விண்ணோர் தலைவா. கேசவா. மனைசே ராயர் குலமுதலே. மாமா யன்னே. மாதவா. சினையேய் தழைய மராமரங்கள் ஏழும் எய்தாய். சிரீதரா. இனையா யினைய பெயரினாய். என்று நைவன் அடியேனே. 1.5.6 2841 அடியேன் சிறிய ஞானத்தன், அறித லார்க்கு மரியானை கடிசேர் தண்ணந் துழாய்க்கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை செடியார் ஆக்கை யடியாரைச் சேர்தல் தீர்க்கும் திருமாலை அடியேன் காண்பான் அலற்றுவன், இதனில் மிக்கோர் அயர்வுண்டே? 1.5.7 2842 உண்டா யுலகேழ் முன்னமே, உமிழ்ந்து மாயை யால்புக்கு உண்டாய் வெண்ணெய் சிறுமனிசர் உவலை யாக்கை நிலையெய்தி மண்டான் சோர்ந்த துண்டேலும் மனிசர்க் காகும் பீர் சிறிதும் அண்டா வண்ணம் மண்கரைய நெய்யூண் மருந்தோ? மாயோனே. 1.5.8 2843 மாயோம் தீய அலவலைப் பெருமா வஞ்சப் பேய்வீய தூய குழவி யாய்விடப்பால் அமுதா அமுது செய்திட்ட மாயன் வானோர் தனித்தலைவன் மலராள் மைந்த னெவ்வுயிர்க்கும் தாயோன் தம்மா னென்னம்மான் அம்மா மூர்த்தி யைச்சார்ந்தே. 1.5.9 2844 சார்ந்த இருவல் வினைகளும் சரித்து மாயப் பற்றறுத்து தீர்ந்து தன்பால் மனம்வைக்கத் திருத்தி வீடு திருத்துவான், ஆர்ந்த ஞானச் சுடராகி அகலம் கீழ்மேல் அளவிறந்து, நேர்ந்த வுருவாய் அருவாகும் இவற்றி னுயிராம் நெடுமாலே. 1.5.10 2845 மாலே. மாயப் பெருமானே. மாமா யனே. என்றென்று மாலே யேறி மாலருளால் மன்னு குருகூர்ச் சடகோபன் பாலேய் தமிழ ரிசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின் பாலே பட்ட இவைபத்தும் வல்லார்க் கில்லை பரிவதே. 1.5.11 2846 பரிவதி லீசனைப் பாடி விரிவது மேவ லுறுவீர். பிரிவகை யின்றிநன் னீர்தூய் புரிவது வும்புகை பூவே. (2) 1.6.1 2847 மதுவார் தண்ணந் துழாயான் முதுவே தமுதல் வனுக்கு எதுவே தென்பணி என்னா ததுவே யாட்செய்யு மீடே. 1.6.2 2848 ஈடு மெடுப்புமி லீசன் மாடு விடாதென் மனனே பாடுமென் நாவலன் பாடல் ஆடுமெ னங்கம ணங்கே. 1.6.3 2849 அணங்கென ஆடுமெ னங்கம் வணங்கி வழிபடு மீசன் பிணங்கி யமரர் பிதற்றும் குணங்கெழு கொள்கையி னானே. 1.6.4 2850 கொள்கைகொ ளாமையி லாதான் எள்கலி ராகமி லாதான் விள்கைவிள் ளாமைவி ரும்பி உள்கலந் தார்க்கோ ரமுதே. 1.6.5 2851 அமுதம் அமரகட் கீந்த நிமிர்சுட ராழி நெடுமால் அமுதிலு மாற்ற இனியன் நிமிர்திரை நீள்கட லானே. 1.6.6 2852 நீள்கடல் சூழிலங் கைக்கோன் தோள்கள் தலைதுணி செய்தான் தாள்கள் தலையில் வணங்கி நாள்கள் தலைக்க ழிமினே. 1.6.7 2853 கழிமின்தொண் டீர்கள் கழித்துத் தொழுமின் அவனைத் தொழுதால் வழிநின்ற வல்வினை மாள்வித்து அழிவின்றி யாக்கம் தருமே. 1.6.8 2854 தரும அரும்பய னாய திருமக ளார்தனிக் கேள்வர், பெருமை யுடைய பிரானார், இருமை வினைகடி வாரே. 1.6.9 2855 கடிவார் தீய வினைகள் நொடியா ருமள வைக்கண் கொடியா அடுபுள் ளுயர்த்த வடிவார் மாதவ னாரே. 1.6.10 2856 மாதவன் பால்சட கோபன் தீதவ மின்றி யுரைத்த ஏதமி லாயிரத் திப்பத்து ஓதவல் லார்பிற வாரே. 1.6.11 2857 பிறவித்துயரற ஞானத்துள்நின்று, துறவிச்சுடர்விளக்கம் தலைப்பெய்வார், அறவனை யாழிப் படையந fதணனை, மறவியை யின்றி மனத்துவைப் பாரே. 1.7.1 2858 வைப்பாம்மருந்தா மடியரை, வல்வினைத் துப்பாம் புலனைந்தும் துஞ்சக கொடானவன், எப்பால் யவர்க்கும் நலத்தா லுயர்ந்துயர்ந்து, அப்பால வனெங்க ளாயர் கொழுந்தே. 1.7.2 2859 ஆயர் கொழுந்தா யவரால் புடையுண்ணும், மாயப் பிரானையென் மாணிக்கச் சோதியை, தூய அமுதைப் பருகிப்பருகி, என் மாயப் பிறவி மயர்வறுத் தேனே. 1.7.3 2860 மயர்வறவென்மனத்தே மன்னினான் றன்னை, உயர்வினை யேதரும் ஒண்சுடர்க் கற்றையை, அயர்வில் அமரர்கள் ஆதிக்கொழுந்தை, என் இசைவினையென்சொல்லி யான்விடுவேனே. 1.7.4 2861 விடுவேனோவென் விளக்கைஎன்னாவியை, நடுவேவந்துய்யக் கொள்கின்றநாதனை, தொடுவேசெய்திள ஆய்ச்சியர்க்கண்ணினுள், விடவேசெய்து விழிக்கும்பிரானையே. 1.7.5 2862 பிரான்பெருநிலங் கீண்டவன், பின்னும் விராய்மலர்த்துழாய் வேய்ந்தமுடியன், மராமரமெய்த மாயவன், என்னுள் இரானெனில்பின்னை யானொட்டுவேனோ. 1.7.6 2863 யானொட்டியென்னுள் இருத்துவ மென்றிலன், தானொட்டி வந்தென் தனிநெஞ்சை வஞ்சித்து, ஊனொட்டி நின்றென் உயிரில் கலந்து, இயல் வானொட்டு மோஇனி யென்னை நெகிழ்க்கவே. 1.7.7 2864 என்னை நெகிழ்க்கிலும் என்னுடைf நன்னெஞ்சந் தன்னை, அகல்விக்கத் தானும்கில்லானினி, பின்னை நெடும்பணைத் தோள்மகிழ fபீடுடை, முன்னை யமரர் முழுமுத லானே. 1.7.8 2865 அமரர fமுழுமுத லாகிய ஆதியை, அமரர்க் கமுதீந்த ஆயர் கொழுந்தை, அமர அழும்பத் துழாவியென் னாவி, அமரர்த் தழுவிற் றினிய கலுமோ. 1.7.9 2866 அகலில் அகலும் அணுகில் அணுகும், புகலு மரியன் பொருவல்ல னெம்மான், நிகரில் அவன்புகழ் பாடி யிளைப்பிலம், பகலு மிரவும் படிந்து குடைந்தே. 1.7.10 2867 குடைந்துவண் டுண்ணும் துழாய்முடி யானை, அடைந்த தென் குருகூர்ச்சட கோபன், மிடைந்த சொல் தொடை யாயிரத்திப்பத்து, உடைந்து நோய்களை யோடு விக்குமே. 1.7.11 2868 ஓடும்புள்ளேரி, சூடும fதண்டுழாய், நீடு நின்றவை, ஆடும் அம்மானே. 1.8.1 2869 அம்மானாய்ப் பின்னும், எம்மாண fபுமானான, வெம்மா வாய்கீண்ட, செம்மா கண்ணனே. 1.8.2 2870 கண்ணா வானென்றும், மண்ணோர்விண்ணோர்க்கு, தண்ணார் வேங்கட, விண்ணோர fவெற்பனே. 1.8.3 2871 வெற்பை யொன்றெடுத்து, ஒற்க மின்றியே, நிற்கும் அம்மான்சீர், கற்பன் வைகலே. 1.8.4 2872 வைக லும்வெண்ணெய், கைக லந்துண்டான், பொய்க லவாது, என் - மெய்க லந்தானே. 1.8.5 2873 கலந்தென்னாவி, நலங்கொள் நாதன், புலங்கொள் மாணாய், நிலம்கொண் டானே. 1.8.6 2874 கொண்டா னேழ்விடை, உண்டா னேழ்வையம், தண்டா மஞ்செய்து, என் - எண்டா னானானே. 1.8.7 2875 ஆனா னானாயன், மீனோ டேனமும், தானா னானென்னில், தானா யசங்கே. 1.8.8 2876 சங்கு சக்கரம், அங்கையில் கொண்டான், எங்கும் தானாய, நங்கள் நாதனே. 1.8.9 2877 நாதன்ஞாலங்கொள் - பாதன், என்னம்மான், ஓதம் போல்கிளர், வேதநீரனே. 1.8.10 2878 நீர்புரை வண்ணன், சீர்ச்சடகோபன், நெர்த லாயிரத்து, ஓர்தலிவையே. 1.8.11 2879 இவையும் அவையும் உவையம் இவரும் அவரும் உவரும், அவையும fயவரும்தன் னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும், அவையுள் தனிமுத லெம்மான் கண்ணபிரானென்னமுதம், சுவையன் திருவின் மணாளன் என்னுடைச்சுழலு ளானே. 1.9.1 2880 சூழல fபலபல வல்லான் தொல்லையங் காலத் துலகை கேழலொன் றாகியி டந்த கேசவ னென்னுடை யம்மான், வேழ மருப்பையொ சித்தான் விண்ணவர்க் கெண்ணல் அரியான் ஆழ நெடுங்கடல fசேர்ந்தான் அவனென fனருகலி லானே. 1.9.2 2881 அருகலி லாய பெருஞ்சர் அமரர்கள் ஆதி முதல்வன், கருகிய நீலநன் மேனி வண்ணன்செந fதாமரைக் கண்ணன், பொருசிறைப்புள்ளுவந்தேறும் பூமகளார்தனிக்கேள்வன், ஒருகதியின்சுவைதந்திட் டொழிவிலனென்னோடுடனே. 1.9.3 2882 உடனமர்க்காதல்மகளிர் திருமகள்மண்மகள் ஆயர் மடமகள், என்றிவர்மூவர் ஆளும் உலகமும்மூன்றே, உடனவையொக்கவிழுங்கி ஆலிலைச்சேர்ந்தவனெம்மான், கடல்மலிமாயப்பெருமான் கண்ணனென் ஒக்கலை யானே. 1.9.4 2883 ஒக்கலைவைத்துமுலைப்பால் உண்ணென்றுதந்திடவாங்கி, செக்கஞ்செகவன்றவள்பால் உயிர்செகவுண்டபெருமான், நக்கபிரானோடயனும் இந்திரனும்முதலாக, ஒக்கவும்தோற்றிய ஈசன் மாயனென்னெஞ்சினுளானே. 1.9.5 2884 மாயனென்னெஞ்சினுள்ளன் மற்றும்யவர்க்கும் அதுவே, காயமும்சீவனும்தானே காலுமெரியும் அவனே, சேயன் அணியன்யவர்க்கும் சிந்தைக்கும் கோசர மல்லன், தூயன் துயக்கன்மயக்கன் என்னுடைத்தோளிணையானே. 1.9.6 2885 தோளிணைமேலும் நன்மார்பின்மேலும் சுடர்முடிமேலும், தாளிணைமேலும்புனைந்த தண்ணந்துழாயுடையம்மான் கேளிணையொன்றுமிலாதான் கிளரும்சுடரொளிமூர்த்தி, நாளணைந்தொன்றுமகலான் என்னுடைநாவினுளானே. 1.9.7 2886 நாவினுள்நின்றுமலரும் ஞானக்கலைகளுக்கெல்லாம், ஆவியுமாக்கையும்தானே அழிப்போடளிப்பவன்தானே, பூவியல்நால்தடந்தோளன் பொருபடையாழிசங்கேந்தும், காவிநன்மேனிக்கமலக் கண்ணனென்கண்ணினுளானே. 1.9.8 2887 கமலக்கண்ணனென்கண்ணினுள்ளான்காண்பன் அவன்கண்களாலே, அமலங்க ளாக விழிக்கும் ஐம்புல னுமவன்மூர்த்தி, கமலத்தயன்நம்பிதன்னைக் கண்ணுதலானொடும்தோற்றி அமலத்தெய்வத்தோடுலகம் ஆக்கியென்நெற்றியுளானே. 1.9.9 2888 நெற்றியுள்நின்றென்னையாளும் நிரைமலர்ப்பாதங்கள்சூடி, கற்றைத்துழாய்முடிக்கோலக் கண்ணபிரானைத்தொழுவார், ஒற்றைப்பிறையணிந்தானும் நான்முகனும் இந்திரனும், மற்றையமரருமெல்லாம் வந்தெனதுச்சியுளானே. 1.9.10 2889 உச்சியுள்ளேநிற்கும்தேவ தேவற்குக்கண்ணபிராற்கு, இச்சையுள்செல்லவுணர்த்தி வண்குருகூர்ச்சடகோபன், இச்சொன்ன ஆயிரத்துள் இவையுமோர்பத்தெம்பிராற்கு, நிச்சலும்விண்ணப்பம்செய்ய நீள்கழல்சென்னிபொருமே. 1.9.11 2890 பொருமாநீள்படை யாழிசங்கத்தொடு, திருமாநீள்கழல் ஏழுலகும்தொழ, ஒருமாணிக்குற ளாகிநிமிர்ந்த, அக் கருமாணிக்கமென் கண்ணுளதாகுமே. 1.10.1 2891 கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால்தொழில், எண்ணிலும்வரு மென்னினிவேண்டுவம், மண்ணும்நீரு மெரியும்நல்வாயுவும், விண்ணுமாய்விரியு மெம்பிரானையே. 1.10.2 2892 எம்பிரானையெந்தை தந்தைதந்தைக்கும் தம்பிரானை, தண்தாமரைக்கண்ணனை, கொம்பராவு நுண்ணேரிடைமார்வனை, எம்பிரானைத் தொழாய்மடநெஞ்சமே. 1.10.3 2893 நெஞ்சமேநல்லை நல்லை,உன்னைப்பெற்றால் என்செய்யோம், இனியென்னகுறைவினம்? மைந்தனை மலராள்மணவாளனை, துஞ்சும்போதும் விடாதுதொடர்க்கண்டாய். 1.10.4 2894 கண்டாயேநெஞ்சே கருமங்கள்வாய்க்கின்று, ஓர் எண்டானுமின்றியே வந்தியலுமாறு, உண்டானையுலகேழு மோர்மூவடி கொண்டானை, கண்டு கொண்டனைநீயுமே. 1.10.5 2895 நீயும்நானுமிந் நேர்நிற்கில், மேல்மற்றோர், நோயும்சார்க்கொடான் நெஞ்சமே, சொன்னேன், தாயும்தந்தையுமா யிவ்வுலகினில், வாயுமீசன் மணிவண்ணனெந்தையே. 1.10.6 2896 எந்தையேயென்று மெம்பெருமானென்றும், சிந்தையுள்வைப்பன் சொல்லுவன்பாவியேன், எந்தையெம்பெருமானென்று வானவர், சிந்தையுள் வைத்துச் சொல்லும்செல்வனையே. 1.10.7 2897 செல்வநாரண னென்றசொல்கேட்டலும், மல்கும்கண்பனி நாடுவன்மாயமே, அல்லும்நன்பகலு மிடைவீடின்றி, நல்கியென்னை விடான்நம்பி நம்பியே. 1.10.8 2898 நம்பியைத்தென் குறுங்குடிநின்ற, அச் செம்பொனேதிக ழும்திருமூர்த்தியை, உம்பர்வானவ ராதியஞ்சோதியை, எம்பிரானையென் சொல்லிமறப்பனோ. 1.10.9 2899 மறப்பும்ஞானமும் நானொன் றுணர்ந்திலன், மறக்குமென்றுசெந் தாமரைக்கண்ணொடு, மறப்பற என்னுள்ளே மன்னினான் றன்னை, மறப்பனோவினி யானென்மணியையே? 1.10.10 2900 மணியைவானவர் கண்ணனைத்தன்னதோர் அணியை, தென்குரு கூர்ச்சடகோபன், சொல் பணிசெயாயிரத் துள்ளிவைபத்துடன், தணிவிலர் கற்ப ரேல்கல்விவாயுமே. 1.10.11 &நறஸபஇ திருவாய் மொழி இரண்டாம் பத்து 2901 வாயுந்திரையுகளும் கானல்மடநாராய், ஆயும் அமருலகும்துஞ்சிலும் நீதுஞ்சாயால், நோயும் பயலைமையும் மீதூரவெம்மேபோல், நீயும்திருமாலால் நெஞ்சம்கோட் பட்டாயே. 2.1.1 2902 கோட்பட்டசிந்தையாய்க் கூர்வாய அன்றிலே, சேட்பட்ட யாமங்கள் சேரா திரங்குதியால், ஆட்பட்ட எம்மேபோல் நீயும் அரவணையான், தாட்பட்ட தண்டுழாய்த் தாமம்கா முற்றாயே. 2.1.2 2903 காமுற்ற கையறவோ டெல்லே இராப்பகல், நீமுற்றக் கண்டுயிலாய் நெஞ்சுருகி யேங்குதியால் தீமுற்றத் தென்னிலங்கை யூட்டினான் தாள்நயந்த, யாமுற்ற துற்றாயோ வாழி கனைகடலே. 2.1.3 2904 கடலும்மலையும்விசும்பும் துழாயெம்போல், சுடர்க்கொளிராப்பகல் துஞ்சாயால்தண்வாடாய், அடல்கொள்படையாழி அம்மானைக்காண்பான்நீ, உடலம்நோயுற்றாயோ வூழிதோறூழியே. 2.1.4 2905 ஊழிதோறூழி யுலகுக்குநீர்க்கொண்டு, தோழியரும்யாமும்போல் நீராய்நெகிழ்கின்ற, வாழியவானமே, நீயும fமதுசூதன், பாழிமையிற் பட்டவன்கட்பாசத்தால்நைவாயே. 2.1.5 2906 நைவாய எம்மேபோல் நாண்மதியே நீயிந்நாள், மைவான் இருளகற்றாய் மாழாந்துதேம்புதியால், ஐவாய் அரவணைமே லாழிப்பெருமானார், மெய்வாசகம்கேட்டுன் மெய்ந்நீர்மைதோற்றாயே. 2.1.6 2907 தோற்றோம்மடநெஞ்ச மெம்பெருமான்நாரணற்குஎம் ஆற்றாமைசொல்லி யழுவோமை நீநடுவே, வேற்றோர்வகையில் கொடிதாயெனையூழி, மாற்றாண்மைநிற்றியோ வாழிகனையிருளே. 2.1.7 2908 இருளின்திணிவண்ணம் மாநீர்க்கழியே,போய், மருளுற்றிராப்பகல் துஞ்சிலும்நீதுஞ்சாயால், உருளும்சகடம் உதைத்தபெருமானார், அருளின்பெருநசையா லாழாந்துநொந்தாயே. 2.1.8 2909 நொந்தாராக்காதல்நோய் மெல்லாவியுள்ளுலர்த்த, நந்தாவிளக்கமே நீயுமளியத்தாய், செந்தாமரைத்தடங்கண் செங்கனிவாயெம்பெருமான், அந்தாமத்தண்டுழா யாசையால்வேவாயே. 2.1.9 2910 வேவாராவேட்கைநோய் மெல்லாவியுள்ளுலர்த்த, ஓவாதிராப்பக லுன்பாலேவீழ்த்தொழிந்தாய், மாவாய்பிளந்து மருதிடைபோய்மண்ணளந்த, மூவா முதல்வா இனியெம்மைச்சோரேலே. 2.1.10 2911 சோராதவெப்பொருட்கு ஆதியாம் சோதிக்கே, ஆராதகாதல் குருகூர்ச்சடகோபன், ஓராயிரம்சொன்ன அவற்றுளிவைப்பத்தும், சோரார்விடார்க்கண்டீர் வைகுந்தம்திண்ணெனவே. 2.1.11 2912 திண்ணன்வீடு முதல்முழுதுமாய், எண்ணின்மீதிய னெம்பெருமான், மண்ணும்விண்ணுமெல்லா முடனுண்ட, நங்f கண்ணன் கண்ணல்ல தில்லையோர்க்கண்ணே. 2.2.1 2913 ஏபாவம்,பரமே, யேழுலகும், ஈபாவஞ்செய் தருளாலளிப்பாரார், மாபாவம்விட அரற்குப்பிச்சைபெய், கோபாலகோளரி யேறன்றியே. 2.2.2 2914 ஏறனைப்பூவனைப் பூமகள்தன்னை, வேறின்றிவிண்தொழத் தன்னுள்வைத்து, மேல்தன்னைமீதிட நிமிர்ந்துமண்கொண்ட, மால்தனில்மிக்குமோர் தேவுமுளதே. 2.2.3 2915 தேவுமெப் பொருளும்படைக்க, பூவில்நான் முகனைப்படைத்த, தேவனெம் பெருமானுக்கல்லால், பூவும்பூசனையும் தகுமே. 2.2.4 2916 தகும்சீர்த் தன்தனிமுதலினுள்ளே, மிகும்தேவு மெப்பொருளும்படைக்க, தகும்கோலத் தாமரைக்கண்ணனெம்மான், மிகும்சோதி மேலறிவார்யவரே. 2.2.5 2917 யவரும்யாவையு மெல்லாப்பொருளும், கவர்வின்றித் தன்னுளொடுங்கநின்ற, பவர்க்கொள்ஞான வெள்ளச்சுடர்மூர்த்தி, அவரெம் ஆழியம் பள்ளியாரே. 2.2.6 2918 பள்ளியாலிலை யேழுலகும்கொள்ளும், வள்ளல் வல்வயிற்றுப்பெருமான், உள்ளுளா ரறிவார் அவன்றன், கள்ளமாய மனக்கருத்தே. 2.2.7 2919 கருத்தில்தேவு மெல்லாப்பொருளும், வருத்தித்தமாயப் பிரானையன்றி, ஆரே திருத்தித்திண்ணிலை மூவுலகும் தம்முள் இருத்திக்காக்கு மியல்வினரே. 2.2.8 2920 காக்குமியல்வினன் கண்ணபெருமான், சேர்க்கைசெய்து தன்னுந்தியுள்ளே, வாய்த்ததிசைமுக னிந்திரன்வானவர், ஆக்கினான் தெய்வவுலகுகளே. 2.2.9 2921 கள்வா எம்மையு மேழுலகும், நின் னுள்ளேதோற்றிய இறைவா. என்று, வெள்ளேறன்நான்முக னிந்திரன்வானவர், புள்ளூர்திகழல் பணிந்தேத்துவரே. 2.2.10 2922 ஏத்தவேழுலகுங் கொண்டகோலக் கூத்தனை, குருகூர்ச்சடகோபன்சொல், வாய்த்தவாயிரத்துள் ளிவைபத்துடன், ஏத்தவல்லவர்க் கில்லையோர்ஊனமே. 2.2.11 2923 ஊனில்வாழுயிரே நல்லைபோஉன்னைப்பெற்று, வானுளார்பெருமான் மதுசூதனென்னம்மான், தானும்யானுமெல்லாம் தன்னுள்ளேகலந்தொழிந்தோம், தேனும்பாலும்நெய்யும் கன்னலுமமுதுமொத்தே. 2.3.1 2924 ஒத்தார்மிக்காரை இலையாயமாமாய, ஒத்தாயெப்பொருட்கு முயிராய், என்னைப்பெற்ற அத்தாயாய்த்தந்தையா யறியாதனவறிவித்த, அத்தா, நீசெய்தன அடியேனறியேனே. 2.3.2 2925 அறியாக்காலத்துள்ளே யடிமைக்கணன்புசெய்வித்து, அறியாமாமாயத் தடியேனைவைத்தாயால், அறியாமைக்குறளாய் நிலம்மாவலிமூவடியென்று, அறியாமைவஞ்சித்தா யெனதாவியுள்கலந்தே. 2.3.3 2926 எனதாவியுள்கலந்தபெரு நல்லுதவிக்கைம்மாறு, எனதாவிதந்தொழிந்தே னினிமீள்வதென்பதுண்டே, எனதாவியாவியும்நீ பொழிலேழுமுண்டவெந்தாய், எனதாவியார?fயானார?f தந்தநீகொண்டாக்கினையே. 2.3.4 2927 இனியார்ஞானங்களா லெடுக்கலெழாதவெந்தாய், கனிவார்வீட்டின்பமே யென்கடற்படாவமுதே, தனியேன்வாழ்முதலே, பொழிலேழுமேனமொன்றாய், நுனியார்க்கோட்டில்வைத்தா யுன்பாதம்சேர்ந்தேனே. 2.3.5 2928 சேர்ந்தார்தீவினைகட் கருநஞ்சைத்திண்மதியை, தீர்ந்தார்தம்மனத்துப் பிரியாதவருயிரை, சோர்ந்தேபோகல்கொடாச் சுடரை அரக்கியைமூக் கீர்ந்தாயை, அடியேனடைந்தேன் முதல்முன்னமே. 2.3.6 2929 முன்நல்யாழ்பயில் நூல் நரம்பின்முதிர்சுவையே, பன்னலார்பயிலும் பரனே,பவித்திரனே, கன்னலே,அமுதே, கார்முகிலே,என்கண்ணா, நின்னலாலிலேன்கா ணென்னைநீகுறிக்கொள்ளே. 2.3.7 2930 குறிக்கொள்ஞானங்களா லெனையூழிசெய்தவமும், கிறிக்கொண்டிப்பிறப்பே சிலநாளிலெய்தினன்யான், உறிக்கொண்டவெண்ணெய்பா லொளித்துண்ணுமம்மான்பின், நெறிக்கொண்டநெஞ்சனாய்ப் பிறவித்துயர்க்கடிந்தே. 2.3.8 2931 கடிவார்தண்ணந்துழாய்க் கண்ணன்விண்ணவர்பெருமான், படிவான்மிறந்த பரமன்பவித்திரன்சீர், செடியார்நோய்கள்கெடப் படிந்துகுடைந்தாடி, அடியேன்வாய்மடுத்துப் பருகிக்களித்தேனே. 2.3.9 2932 களிப்பும்கவர்வுமற்றுப் பிறப்புப்பிணிமூப்பிறப்பற்று, ஒளிக்கொண்டசோதியுமா யுடன்கூடுவதென்றுகொலோ, துளிக்கின்றவானிந்நிலம் சுடராழிசங்கேந்தி, அளிக்கின்றமாயப்பிரானடியார்கள்குழாங்களையே. 2.3.10 2933 குழாங்கொள்பேரரக்கன் குலம்வீயமுனிந்தவனை, குழாங்கொள்தென்குருகூர்ச் சடகோபன்தெரிந்துரைத்த, குழாங்கொளாயிரத்து ளிவைபத்துமுடன்பாடி, குழாங்களாயடியீருடன் கூடிநின்றாடுமினே. 2.3.11 2934 ஆடியாடி யகம்கரைந்து, இசை பாடிப்பாடிக் கண்ணீர்மல்கி, எங்கும் நாடிநாடி நரசிங்காவென்று, வாடிவாடு மிவ்வாணுதலெ. 2.4.1 2935 வாணுதலிம்மடவரல், உம்மைக் காணுமாசையுள் நைகின்றாள், விறல் வாணனாயிரந்தோள்துணித்தீர், உம்மைக் காண நீரிரக்கமிலீரே. 2.4.2 2936 இரக்கமனத்தோ டெரியணை, அரக்குமெழுகு மொக்குமிவள், இரக்கமெழி ரிதற்கென்செய்கேன், அரக்கனிலங்கை செற்றீருக்கே. 2.4.3 2937 இலங்கைசெற்றவனே, என்னும், பின்னும் வலங்கொள்புள்ளுயர்த்தாய் என்னும், உள்ளம் மலங்கவெவ்வுயிர்க்கும், கண்ணீர்மிகக் கலங்கிக்கைதொழும் நின்றிவளே. 2.4.4 2938 இவளிராப்பகல் வாய்வெரீஇ, தன குவளையொண்கண்ணநீர் கொண்டாள், வண்டு திவளும்தண்ணந் துழாய்கொடீர், என தவளவண்ணர் தகவுகளே. 2.4.5 2939 தகவுடையவனே யென்னும், பின்னும் மிகவிரும்பும்பிரான் என்னும், என தகவுயிர்க்கமுதே, என்னும், உள்ளம் உகவுருகி நின்றுள்ளுளே. 2.4.6 2940 உள்ளுளாவி யுலர்ந்துலர்ந்து, என வள்ளலேகண்ணனேயென்னும், பின்னும் வெள்ளநீர்க்கிடந்தாய்,என்னும், என் கள்விதான்பட்ட வஞ்சனையே. 2.4.7 2941 வஞ்சனே, என்னும் கைதொழும், தன் நெஞ்சம்வே வநெடிதுயிர்க்கும், விறல் கஞ்சனைவஞ்சனை செய்தீர், உம்மைத் தஞ்சமென்றிவள் பட்டனவே. 2.4.8 2942 பட்டபோதெழு போதறியாள், விரை மட்டலர்தண்துழாய் என்னும், சுடர் வட்டவாய்நுதி நேமியீர், நும திட்டமென்கொ லிவ்வேழைக்கே. 2.4.9 2943 ஏழைபேதை யிராப்பகல், தன கேழிலொண்கண்ணநீர் கொண்டாள், கிளர் வாழ்வைவேவ விலங்கை செற்றீர், இவள் மாழைநோக்கொன்றும் வாட்டேன்மினே. 2.4.10 2944 வாட்டமில்புகழ் வாமனனை, இசை கூட்டிவண்சடகோபன் சொல், அமை பாட்டோ ராயிரத்திப் பத்தால், அடி குட்டலாகு மந்தாமமே. 2.4.11 2945 அந்தாமத்தன்புசெய் தென்னாவிசேரம்மானுக்கு, அந்தாமவாழ்முடிசங் காழிநூலாரமுள, செந்தாமரைத்தடங்கண் செங்கனிவாய்செங்கமலம், செந்தாமரையடிக்கள் செம்பொன்திருவுடம்பே. 2.5.1 2946 திருவுடம்புவான்சுடர் செந்தாமரைகண்கைகமலம், திருவிடமேமார்வ மயனிடமேகொப்பூழ், ஒருவிடமுமெந்தை பெருமாற்கரனேயோ, ஒருவிடமொன்றின்றி யென்னுள்கலந்தானுக்கே. 2.5.2 2947 என்னுள்கலந்தவன் செங்கனிவாய்செங்கமலம், மின்னும்சுடர்மலைக்குக் கண்பாதம்கைகமலம், மன்னுமுழுவேழுலகும் வயிற்றினுள, தன்னுள்கலவாத தெப்பொருளும்தானிலையே. 2.5.3 2948 எப்பொருளும்தானாய் மரகதக்குன்றமொக்கும், அப்பொழுதைத்தாமரைப்பூக் கண்பாதம்கைகமலம், எப்பொழுதும்நாள்திங்க ளாண்டூழியூழிதொறும், அப்பொழுதைக்கப்பொழு தென்னாராவமுதமே. 2.5.4 2949 ஆராவமுதமா யல்லாவியுள்கலந்த, காரார்க்கருமுகில்போ லென்னம்மான்கண்ணனுக்கு, நேராவாய்செம்பவளம் கண்பாதம்கைகமலம், பேராரநீண்முடிநாண் பின்னுமிழைபலவே. 2.5.5 2950 பலபலவேயாபரணம் பேரும்பலபலவே, பலபலவேசோதிவடிவு பண்பெண்ணில், பலபலகண்டுண்டு கேட்டுற்றுமோந்தின்பம், பலபலவேஞானமும் பாம்பணைமேலாற்கேயோ. 2.5.6 2951 பாம்பணைமேல்பாற்கடலுள் பள்ளியமர்ந்ததுவும், காம்பணைதோள்பின்னைக்கா எறுடனேழ்செற்றதுவும், தேம்பணையசோலை மராமரமேழெய்ததுவும், பூம்பிணையதண்துழாய்ப் பொன்முடியம்போரேறே. 2.5.7 2952 பொன்முடியம்போரேற்றை யெம்மானைநால்தடந்தோள், தன்முடிவொன்றில்லாத தண்டுழாய்மாலையனை, என்முடிவுகாணாதே யென்னுள்கலந்தானை, சொல்முடிவுகாணேன்நான் சொல்லுவதென்சொல்லீரே. 2.5.8 2953 சொல்லீரென்னம்மானை யென்னாவியாவிதனை, எல்லையில்சீரென் கருமாணிக்கச்சுடரை, நல்லவமுதம்பெற்றற்கரிய வீடுமாய், அல்லிமலர்விரையொத் தாணல்லன்பெண்ணல்லனே. 2.5.9 2954 ஆணல்லன்பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன், காணலுமாகான் உளனல்லன் இல்லையல்லன், பேணுங்கால்பேணுமுருவாகும் அல்லனுமாம், கோணை பெரிதுடைத்தெம்மானைக்கூறுதலே. 2.5.10 2955 கூறுதலொன்றாராக் குடக்கூத்தவம்மானை, கூறுதலேமேவிக் குருகூர்ச்சடகோபன், கூறினவந்தாதி யோராயிரத்துளிப்பத்தும், கூறுதல்வல்லாருளரேல் கூடுவர்வைகுந்தமே. 2.5.11 2956 வைகுந்தாமணிவண்ணனே, என்பொல்லாத்திருக்குறளா, என்னுள்மன்னி, வைகும்வைகல்தோறும் அமுதாயவானேறே, செய்குந்தாவருந்தீமையுன்னடியார்க்குத்தீர்த்தசுரர்க்குத்தீமைகள் செய்குந்தா, உன்னைநான் பிடித்தேன் கொள்சிக்கெனவே. 2.6.1 2957 சிக்கெனச்சிறுதோரிடமும்புறப்படாத்தன்னுள்ளே, உலகுகள் ஒக்கவேவிழுங்கிப் புகுந்தான்புகுந்ததற்பின், மிக்கஞானவெள்ளச்சுடர்விளக்காய்த் துளக்கற்றமுதமாய், எங்கும் பக்கநோக்கறியானென் பைந்தாமரைக்கண்ணனே. 2.6.2 2958 தாமரைக்கண்ணனைவிண்ணோர் பரவும்தலைமகனை, துழாய்விரைப் பூமருவுகண்ணி யெம்பிரானைப்பொன்மலையை, நாமருவிநன்கேத்தியுள்ளிவணங்கிநாம்மகிழ்ந்தாட, நாவலர் பாமருவிநிற்கத்தந்த பான்மையேவள்ளலே. 2.6.3 2959 வள்ளலே,மதுசூதனா, என்மரகதமலையே, உனைநினைந்து, தெள்கல்தந்த எந்தாய் உ<ன்னையெங்ஙனம்விடுகேன், வெள்ளமேபுரைநின்புகழ்குடைந்தாடிப்பாடிக்களித்துகந்துகந்து உள்ளநோய்களேல்லாம் துரந்துய்ந்து போந்திருந்தே. 2.6.4 2960 உய்ந்துபோந்தென்னுலப்பிலாதவெந்தீவினைகளைநாசஞ்செய்துஉன் தந்தமிலடிமையடைந்தேன் விடுவேனோ, ஐந்துபைந்தலையாடரவணைமேவிப்பாற்கடல்யோகநித்திரை, சிந்தைசெய்தவெந்தாய் உ<ன்னைச்சிந்தைசெய்துசெய்தே. 2.6.5 2961 உன்னைச்சிந்தைசெய்துசெய்துன்நெடுமாமொழியிசைபாடியாடிஎன் முன்னைத்தீவினைகள்முழுவேரரிந்தனன்யான், உன்னைச்சிந்தையினாலிகழ்ந்த இரணியன் அகல்மார்வங்கீண்ட,என் முன்னைகோளரியே, முடியாததென்னெனக்கே?. 2.6.6 2962 முடியாததென்னெனக்கேலினி முழுவேழுலகுமுண்டான்,உகந்துவந் தடியேனுள்புகுந்தான் அகல்வானும் அல்லனினி, செடியார்நோய்களெல்லாம்துரந்தெமர்க்கீழ்மேலெழுபிறப்பும், விடியாவெந்நரகத்தென்றும் சேர்தல்மாறினரே. 2.6.7 2963 மாறிமாறிப்பலபிறப்பும்பிறந் தடியையடைந்துள்ளந்தேறி ஈறிலின்பத்திருவெள்ளம் யான்மூழ்கினன், பாறிப்பாறியசுரர்தம்பல்குழாங்கள்நீறெழ, பாய்பறவையொன் றேறிவீற்றிருந்தாய் உ<ன்னை யென்னுள்நீக்கேலெந்தாய். 2.6.8 2964 எந்தாய்தண்திருவேங்கடத்துள் நின்றாய்இலங்கைசெற்றாய், மராமரம் பைந்தாளேழுருவவொரு வாளிகோத்தவில்லா, கொந்தார்தண்ணந்துழாயினாய், அமுதே,உன்னையென்னுள்ளேகுழைத்தவெf மைந்தா, வானேறே, இனியெங்குப்போகின்றதே? 2.6.9 2965 போகின்றகாலங்கள்போயகாலங்கள்போகுகாலங்கள், தாய்தந்தையுயி ராகின்றாய் உ<ன்னைநானடைந்தேன்விடுவேனோ, பாகின்றதொல்புகழ்மூவுலகுக்கும் நாதனே. பரமா, தண்வேங்கட மேகின்றாய்தண்டுழாய் விரைநாறுகண்ணியனே. 2.6.10 2966 கண்ணித்தண்ணந்துழாய்முடிக் கமலத்தடம்பெருங் கண்ணனை, புகழ் நண்ணித்தென்குருகூர்ச்சடகோபன்மாறன்சொன்ன, எண்ணில்சோர்விலந்தாதியாயிரத் துள்ளிவையுமோர்பத்திசையொடும், பண்ணில்பாடவல்லாரவர் கேசவன்தமரே. 2.6.11 &நறஸபஇ 2967 கேசவன்தமர்க்கீழ்மே லெமரேழெழுபிறப்பும், மாசதிரிதுபெற்று நம்முடைவாழ்வுவாய்க்கின்றவா, ஈசனென்கருமாணிக்கமென் செங்கோலக்கண்ணன்விண்ணோர் நாயகன், எம்பிரானெம்மான்நாராயணனாலே. 2.7.1 2968 நாரணன்முழுவேழுலகுக்கும் நாதன்வேதமயன், காரணம்கிரிசை கருமமிவைமுதல்வனெந்தை, சீரணங்கமரர்பிறர் பலரும்தொழுதேத்தநின்று, வாரணத்தைமருப்பொசித்த பிரானென்மாதவனே. 2.7.2 2969 மாதவனென்றதேகொண் டென்னையினியிப்பால்பட்டது, யாதவங்களும்சேர்க்கொடேனென் றென்னுள்புகுந்திருந்து, தீதவம்கெடுக்குமமுதம் செந்தாமரைக்கட்குன்றம், கோதவமிலென்கன்னற்கட்டி யெம்மானென்கோவிந்தனே. 2.7.3 2970 கோவிந்தன்குடக்கூத்தன்கோவலனென்றென்றேகுனித்து தேவும்தன்னையும்பாடியாடத்திருத்தி, என்னைக்கொண் டென் பாவந்தன்னையும்பாறக்கைத் தெமரேழெழுபிறப்பும், மேவும்தன்மையமாக்கினான் வல்லனெம்பிரான்விட்டுவே. 2.7.4 2971 விட்டிலங்குசெஞ்சோதித் தாமரைபாதம்கைகள்கண்கள், விட்டிலங்குகருஞ்சுடர் மலையேதிருவுடம்பு, விட்டிலங்குமதியம்சீர் சங்குசக்கரம்பரிதி, விட்டிலங்குமுடியம்மான் மதுசூதனன்தனக்கே. 2.7.5 2972 மதுசூதனையன்றிமற்றிலேனென் றெத்தாலும்கருமமின்றி, துதிசூழ்ந்தபாடல்கள் பாடியாட நின்றூழியூழிதொறும், எதிர்சூழல்புக்கெனைத்தோர்பிறப்புமெனக்கேயருள்கள்செய்ய, விதிசூழ்ந்ததாலெனக்கேலம்மான் திரிவிக்கிரமனையே. 2.7.6 2973 திரிவிக்கிரமன்செந்தாமரைக்கணெம்மானேன்செங்கனிவாய் உருவில்பொலிந்தவெள்ளைப்பளிங்குநிறத்தனனென்றென்று, உள்ளிப் பரவிப்பணிந்து பல்லூழியூழிநின்பாதபங்கயமே, மருவித்தொழும்மனமேதந்தாய் வல்லைகாணென்வாமனனே. 2.7.7 2974 வாமனனென்மரகதவண்ணன் தாமரைக்கண்ணினன் காமனைப்பயந்தாய், என்றென்றுன்கழல்பாடியேபணிந்து, தூமனத்தனனாய்ப் பிறவித்துழதிநீங்க, என்னைத் தீமனங்கெடுத்தா யுனக்கென்செய்கேனென்சிரீ தரனே. 2.7.8 2975 சிரீஇதரன்செய்யதாமரைக்கண்ணனென்றென்றிராப்பகல்வாய் வெரீஇ, அலமந்துகண்கள்நீர்மல்கி வெவ்வுயிர்த்துயிர்த்து, மரீஇயதீவினைமாளவின்பம்வளர வைகல்வைகல் இரீஇ, உன்னையென்னுள்வைத்தனை யென்னிருடீகேசனே. 2.7.9 2976 இருடீகேசனெம்பிரா னிலங்கையரக்கர்க்குலம், முருடுதீர்த்தபிரானெம்மா னமரர்பெம்மானென்றென்று, தெருடியாகில்நெஞ்சே,வணங்கு திண்ணமறியறிந்து, மருடியேலும்விடேல்கண்டாய் நம்பிபற்பநாபனையே. 2.7.10 2977 பற்பநாபனுயர்வறவுயரும் பெருந்திறலோன், எற்பரனென்னையாக்கிக் கொண்டெனக்கேதன்னைத்தந்த கற்பகம், என்னமுதம் கார்முகில்போலும்வேங்கடநல் வெற்பன், விசும்போர்பிரா னெந்தைதாமோதரனே. 2.7.11 2978 தாமோதரனைத்தனிமுதல்வனை ஞாலமுண்டவனை, ஆமோதரமறிய வொருவர்க்கென்றெதொழுமவர்கள், தாமோதரனுருவாகிய சிவற்கும்திசைமுகற்கும், ஆமோதரமறிய எம்மானையென்னாழிவண்ணனையே. 2.7.12 2979 வண்ணமாமணிச்சோதியை யமரர்தலைமகனை, கண்ணனைநெடுமாலைத் தென்குருகூர்ச்சடகோபன், பண்ணியதமிழ்மாலை யாயிரத்துள்ளிவைபன்னிரண்டும், பண்ணில்பன்னிருநாமப் பாட்டண்ணல்தாளணைவிக்குமே. 2.7.13 2980 அணைவதரவணைமேல் பூம்பாவையாகம் புணர்வது, இருவரவர்முதலும்தானே, இணைவனாமெப்பொருட்கும் வீடுமுதலாம், புணைவன் பிறவிக்கடல்நீந்துவார்க்கே. 2.8.1 2981 நீந்தும்துயர்ப்பிறவி யுட்படமற்றெவ்வெவையும், நீந்தும்துயரில்லா வீடுமுதலாம், பூந்தண்புனல்பொய்கை யானை இடர்க்கடிந்த, பூந்தண்துழா யென்தனிநாயகன்புணர்ப்பே. 2.8.2 2982 புணர்க்குமயனா மழிக்குமரனாம், புணர்த்ததன்னுந்தியோ டாகத்துமன்னி, புணர்ததிருவாகித் தன்மார்வில்தான்சேர், புணர்ப்பன்பெரும்புணர்ப் பெங்கும்புலனே. 2.8.3 2983 புலனைந்துமேயும் பொறியைந்துநீக்கி, நலமந்தமில்லதோர் நாடுபுகுவீர், அலமந்துவீய வசுரரைச்செற்றான், பலமுந்துசீரில் படிமினோவாதே. 2.8.4 2984 ஒவாத்துயர்ப்பிறவி யுட்படமற்றெவ்வெவையும், மூவாத்தனிமுதலாய் மூவுலகும்காவலோன், மாவாகியாமையாய் மீனாகிமானிடமாம், தேவாதிதேவபெருமா னென்தீர்த்தனே. 2.8.5 2985 தீர்த்தனுலகளந்த சேவடிமேல்பூந்தாமம், சேர்த்தியவையே சிவன்முடிமேல்தான்கண்டு, பார்த்தன்தெளிந்தொழிந்த பைந்துழாயான்பெருமை, பேர்த்துமொருவரால் பேசக்கிடந்ததே? 2.8.6 2986 கிடந்திருந்துநின்றளந்து கேழலாய்க்கீழ்புக் கிடந்திடும், தன்னுள்கரக்குமுமிழும், தடம்பெருந்தோளாரத்தழுவும் பாரென்னும் மடந்தையை, மால்செய்கின்றமாலார்க்காண்பாரே. 2.8.7 2987 காண்பாராரெம்மீசன் கண்ணனையென்காணுமாறு, ஊண்பேசிலெல்லாவுலகுமோர்துற்றாற்றா, சேண்பாலவீடோ வுயிரோமற்றெப்பொருட்கும், ஏண்பாலும்சோரான் பரந்துளனாமெங்குமே. 2.8.8 2988 எங்கும்முளன்கண்ண னென்றமகனைக்காய்ந்து, இங்கில்லையால் என் றிரணியன் தூண்புடைப்ப, அங்கப்பொழுதே அவன்வீயத்தோன்றிய, என் சிங்கப்பிரான்பெருமை யாராயும்சீர்மைத்தே. 2.8.9 2989 சீர்மைகொள்வீடு சுவர்க்கநரகீறா, ஈர்மைகொள்தேவர்நடுவா மற்றெப்பொருட்கும், வேர்முதலாய்வித்தாய்ப் பரந்துதனிநின்ற, கார்முகில்போல்வண்ணனென் கண்ணனைநான்கண்டேனே. 2.8.10 2990 கண்டலங்கள்செய்ய கருமேனியம்மானை, வண்டலம்பும்சோலை வழுதிவளநாடன், பண்டலையில்சொன்னதமி ழாயிரத்திப்பத்தும்வல்லார், விண்டலையில்வீற்றிருந் தாள்வரெம்மாவீடே. 2.8.11 2991 எம்மாவீட்டுத் திறமும்செப்பம், நின் செம்மாபாதபற்புத் தலைசேர்த்தொல்லை, கைம்மாதுன்பம் கடிந்தபிரானே, அம்மாவடியென் வேண்டுவதீதே. 2.9.1 2992 இதேயானுன்னைக் கொள்வதெஞ்ஞான்றும், என் மைதோய்சோதி மணிவண்ணவெந்தாய், எய்தாநின்கழல் யானெய்த, ஞானக் கைதா காலக்கழிவுசெய்யேலே. 2.9.2 2993 செய்யேல்தீவினையென் றருள்செய்யும், என் கையார்ச்சக்கரக் கண்ணபிரானே, ஐயார்க்கண்டமடைக்கிலும் நின்கழல் எய்யாதேத்த, அருள்செய்யெனக்கே. 2.9.3 2994 எனக்கேயாட்செய் யெக்காலத்துமென்று, என் மனக்கேவந் திடைவீடின்றிமன்னி, தனக்கேயாக வெனைக்கொள்ளுமீதே, எனக்கேகண்ணனை யான்கொள்சிறப்பே. 2.9.4 2995 சிறப்பில்வீடு சுவர்க்கம்நரகம், இறப்பிலெய்துகவெய்தற்க, யானும் பிறப்பில் பல்பிறவிப்பெருமானை, மறப்பொன்றின்றி யென்றும்மகிழ்வேனே. 2.9.5 2996 மகிழ்கொள்தெய்வ முலோகம் அலோகம், மகிழ்கொள்சோதி மலர்ந்தவம்மானே, மகிழ்கொள்சிந்தை சொல்செய்கைகொண்டு, என்றும் மகிழ்வுற்றுன்னை வணங்கவாராயே. 2.9.6 2997 வாராயுன் திருப்பாதமலர்க்கீழ், பேராதேயான் வந்தடையும்படி தாராதாய், உன்னையென்னுள்வைப்பிலென்றும் ஆராதாய், எனக்கென்றுமெக்காலே. 2.9.7 2998 எக்காலத்தெந்தையா யென்னுள்மன்னில், மற் றெக்காலத்திலும் யாதொன்றும்வேண்டேன், மிக்கார்வேத விமலர்விழுங்கும், என் அக்காரக்கனியே, உன்னையானே. 2.9.8 2999 யானேயென்னை அறியகிலாதே, யானேயென்தனதே யென்றிருந்தேன், யானேநீயென் னுடைமையும்நீயே, வானேயேத்து மெம்வானவரேறே. 2.9.9 3000 ஏறேலேழும்வென் றேர்க்கொளிலங்கையை, நீறேசெய்த நெடுஞ்சுடர்ச்சோதி, தேறேலென்னையுன் பொன்னடிச்சேர்த்தொல்லை, வேறேபோக எஞ்ஞான்றும்விடலே. 2.9.10 3001 விடலில்சக்கரத் தண்ணலை, மேவல் விடலில்வண்குருகூர்ச் சடகோபன்சொல், கெடலிலாயிரத்துள் ளிவைபத்தும், கெடலில்வீடுசெய்யும் கிளர்வார்க்கே. 2.9.11 3002 கிளரொளியிளமை கெடுவதன்முன்னம், வளரொளிமாயோன் மருவியகோயில், வளரிளம்பொழில்சூழ் மாலிருஞ்சோலை, தளர்விலராகில் சார்வதுசதிரே. 2.10.1 3003 சதிரிளமடவார் தாழ்ச்சியை மதியாது, அதிர்க்குரல்சங்கத் தழகர்தம்கோயில், மதிதவழ்குடுமி மாலிருஞ்சோலை, பதியதுவேத்தி யெழுவதுபயனே. 2.10.2 3004 பயனல்லசெய்து பயனில்லைநெஞ்சே, புயல்மழைவண்ணர் புரிந்துறைகோயில், மயல்மிகுபொழில்சூழ் மாலிருஞ்சோலை, அயன்மலையடைவததுகருமமே. 2.10.3 3005 கருமவன்பாசம் கழித்துழன்றுய்யவே, பெருமலையெடுத்தான் பீடுறைகோயில், வருமழைதவழும் மாலிருஞ்சோலை, திருமலையதுவே யடைவதுதிறமே. 2.10.4 3006 திறமுடைவலத்தால் தீவினைபெருக்காது, அறமுயல் ஆழிப் படையவன்கோயில், மறுவில்வண்சுனைசூழ் மாலிருஞ்சோலை, புறமலைசாரப் போவதுகிறியே. 2.10.5 3007 கிறியெனநினைமின் கீழ்மைசெய்யாதே, உறியமர்வெண்ணெ யுண்டவன் கோயில், மறியொடுபிணைசேர் மாலிருஞ்சோலை, நெறிபட அதுவே நினைவதுநலமே. 2.10.6 3008 நலமெனநினைமின் நரகழுந்தாதே, நிலமுனமிடந்தான் நீடுறைகோயில், மலமறுமதிசேர் மாலிருஞ்சோலை, வலமுறையெய்தி மருவுதல்வலமே. 2.10.7 3009 வலம்செய்துவைகல் வலங்கழியாதே, வலம்செய்யும்ஆய மாயவன் கோயில், வலம்செய்யும்வானோர் மாலிருஞ்சோலை, வலம்செய்துநாளும் மருவுதல்வழக்கே. 2.10.8 3010 வழக்கெனநினைமின் வல்வினைமூழ்காது, அழக்கொடியட்டா னமர்பெருங்கோயில், மழக்களிற்றினஞ்சேர் மாலிருஞ்சோலை, தொழுக்கருதுவதே துணிவதுசூதே. 2.10.9 3011 சூதென்றுகளவும் சூதும்செய்யாதே, வேதமுன்விரித்தான் விரும்பியகோயில், மாதுறுமயில்சேர் மாலிருஞ்சோலை, போதவிழ்மலையே புகுவதுபொருளே. 2.10.10 3012 பொருளேன்றிவ்வுலகம் படைத்தவன்புகழ்மேல், மருளில்வண்குருகூர் வண்சடகோபன், தெருள்கொள்ளச்சொன்ன வோராயிரத்துளிப்பத்து, அருளுடையவன்தா ளணைவிக்கும்முடித்தே. 2.10.11 திருவாய் மொழி மூன்றாம் பத்து 3013 முடிச்சோதி யாயுனது முகச்சோதி மலந்ததுவோ, அடிச்சோதி நீநின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ, படிச்சோதி யாடையொடும் பல்கலனாய், நின்பைம்பொன் கடிச்சோதி கலந்ததுவோ? திருமாலே. கட்டுரையே. (2) 3.1.1. 3014 கட்டுரைக்கில் தாமரைநின் கண்பாதம் கையொவ்வா, கட்டுரைத்த நன் பொன்னுள் திருமேனி ஒளி ஒவ்வாது, ஒட்டுரைத்திவ் வுலகுன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும், பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதீ. 3.1.2. 3015 பரஞ்சோதி. நீபரமாய் நின்னிகழ்ந்து பின், மற்றோர் பரஞ்சோதி யின்மையில் படியோவி நிகழ்கின்ற, பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த,எம் பரஞ்சோதி கோவிந்தா. பண்புரைக்க மாட்டேனே. 3.1.3. 3016 மாட்டாதே யாகிலுமிம் மலர்தலைமா ஞாலம்,நின் மாட்டாய மலர்ப்புரையும் திருவுருவும் மனம்வைக்க மாட்டாத பலசமய மதிகொடுத்தாய், மலர்த்துழாய் மாட்டேநீ மனம்வைத்தாய் மாஞாலம் வருந்தாதே? 3.1.4. 3017 வருந்தாத அருந்தவத்த மலர்க்கதிரின் சுடருடம்பாய், வருந்தாத ஞானமாய் வரம்பின்றி முழுதியன்றாய், வருங்காலம் நிகழ்காலம் கழிகால மாய்,உலகை ஒருங்காக அளிப்பாய்சீர் எங்குலக்க ஓதுவனே? 3.1.5. 3018 ஓதுவார் ஓத்தெல்லாம் எவ்வுலகத் தெவ்வெவையும், சாதுவாய் நின்புகழின் தகையல்லால் பிறிதில்லை, போதுவாழ் புனந்துழாய் முடியினாய், பூவின்மேல் மாதுவாழ் மார்ப்பினாய். என்சொல்லியான் வாழ்த்துவனே? 3.1.6. 3019 வாழ்த்துவார் பலராக நின்னுள்ளே நான்முகனை, மூழ்த்தநீ ருலகெல்லாம் படையென்று முதல்படைத்தாய் கேழ்த்தசீ ரரன்முதலாக் கிளர்தெய்வ மாய்க்கிளர்ந்து, சூழ்த்தமரர் துதித்தாலுன் தொல்புகழ்மா சூணாதே? 3.1.7. 3020 மாசூணாச் சுடருடம்பாய் மலராது குவியாது, மாசூணா ஞானமாய் முழுதுமாய் முழுதியன்றாய், மாசூணா வான்கோலத் தமரர்க்கோன் வழிபட்டால், மாசூணா உன்பாத மலர்சோதி மழுங்காதே? 3.1.8. 3021 மழுங்காத வைந்நுதிய சக்கரநல் வலத்தையாய், தொழுங்காதல் களிறளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே, மழுங்காத ஞானமே படையாக, மலருலகில் தொழும்பாயார்க் களித்தாலுன் சுடர்ச்சோதி மறையாதே? 3.1.9. 3022 மறையாய நால்வேதத் துள்நின்ற மலர்சுடரே, முறையாலிவ் வுலகெல்லாம் படைத்திடந்துண் டுமிழ்ந்தளந்தாய், பிறையேறு சடையானும் நான்முகனும் இந்திரனும் இறையாதல் அறிந்தேத்த வீற்றிருத்தல் இதுவியப்பே? 3.1.10. 3023 வியப்பாய வியப்பில்லா மெய்ஞ்ஞான வேதியனை, சயப்புகழார் பலர்வாழும் தடங்குருகூர் சடகோபன், துயக்கின்றித் தொழுதுரைத்த ஆயிரத்து ளிப்பத்தும், உயக்கொண்டு பிறப்பறுக்கும் ஒலிமுந்நீர் ஞாலத்தே. (2) 3.1.11 3024 முந்நீர் ஞாலம் படைத்தவெம் முகில்வண்ணனே, அந்நாள்நீ தந்த ஆக்கையின் வழியுழல்வேன், வெந்நாள்நோய் வீய வினைகளைவேர் அறப்பாய்ந்து, எந்நாள்யான் உன்னை இனிவந்து கூடுவனே? (2) 3.2.1. 3025 வன்மா வையம் அளந்த எம் வாமனா,நின் பன்மா மாயப் பல்பிறவியில் படிகின்றயான், தொன்மா வல்வினைத் தொடர்களை முதலரிந்து, நின்மாதாள் சேர்ந்து நிற்பதெஞ் ஞான்றுகொலோ? 3.2.2. 3026 கொல்லா மாக்கோல் கொலைசெய்து பாரதப்போர், எல்லாச் சேனையும் இருநிலத் தவித்தவெந்தாய், பொல்லா ஆக்கையின் புணர்வினை அறுக்கலறா, சொல்லாய்யா னுன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே. 3.2.3. 3027 சூழ்ச்சி ஞானச் சுடரொளி யாகி,என்றும் ஏழ்ச்சிக்கே டின்றி எங்கணும் நிறைந்தவெந்தாய், தாழ்ச்சிமற் றெங்கும் தவிர்ந்துநின் தாளிணக்கீழ் வாழ்ச்சி,யான் சேரும் வகையருளாய் வந்தே. 3.2.4. 3028 வந்தாய்போ லேவந்தும் என்மனத் தினைநீ, சிந்தாமல் செய்யாய் இதுவே யிதுவாகில், கொந்தார்க்கா யாவின் கொழுமலர்த் திருநிறத்த எந்தாய்,யா னுன்னை எங்குவந் தணுகிற்பனே? 3.2.5. 3029 கிற்பன் கில்லேன் என்றிலன் முனநாளால், அற்பசா ரங்கள் அவைசுவைத் தகன்றொழிந்தேன், பற்பல் லாயிரம் உயிர்செய்த பரமா,நின் நற்பொற்fசோ தித்தாள் நணுகுவ தெஞ்ஞான்றே? 3.2.6. 3030 எஞ்ஞான்று நாமிருந் திருந்திரங்கி நெஞ்சே. மெய்ஞ்ஞான மின்றி வினையியல் பிறப்பழுந்தி, எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்துநின்ற, மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை மேவுதுமே? 3.2.7. 3031 மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன், ஓவுத லின்றி உன்கழல் வணங்கிற்றிலேன், பாவுதொல் சீர்க்கண்ணா. என் பரஞ்சுடரே, கூவுகின்றேன் காண்பாலன்f எங்கொய்தக் கூவுவனே? 3.2.8. 3032 கூவிக்கூவிக் கொடுவினைத் தூற்றுள் நின்று பாவியேன் பலகாலம் வழிதிகைத் தலமர்க்கின்றேன், மேவியன் றாநிரை காத்தவ னுலகமெல்லாம், தாவிய அம்மானை எங்கினித் தலைப்பெய்வனே? 3.2.9. 3033 தலைப்பெய் காலம் நமன்தமர் பாசம்விட்டால், அலைப்பூ ணுண்ணுமவ் வல்லலெல் லாமகல, கலைப்பல் ஞானத்தென் கண்ணனைக் கண்டுகொண்டு, நிலைப்பெற்றென் னெஞ்சம் பெற்றது நீடுயிரே. 3.2.10. 3034 உயிர்க ளெல்லா உலகமு முடையவனை, குயில்கொள் சோலைத் தென்குருகூர்ச் சடகோபன், செயிரில்சொல் இசைமாலை ஆயிரத்து ளிப்பத்தும், உயிரின்மே லாக்கை ஊனிடை ஒழிவிக்குமே. (2) 3.2.11 3035 ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி, வழுவிலா அடிமை செய்ய வேண்டும்நாம், தெழிகு ரல்அரு வித்திரு வேங்கடத்து, எழில்கொள் சோதி எந்தைதந்தை தந்தைக்கே (2) 3.3.1 3036 எந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை, வானவர் வானவர் கோனொடும், சிந்துபூ மகிழும் திருவேங் கடத்து, அந்த மில்புகழ்க் காரெழில் அண்ணலே. 3.3.2 3037 அண்ணல் மாயன் அணிகொள்செந் தாமரைக் கண்ணன், செங்கனி வாய்க்கரு மாணிக்கம், தெண்ணி றைச்சுனை நீர்த்திரு வேங்கடத்து, எண்ணில் தொல்புகழ் வானவ ரீசனே. 3.3.3 3038 ஈசன் வானவர்க் கென்பனென் றால்,அது தேச மோதிரு வேங்கடத் தானுக்கு?, நீச னென்நிறை வொன்றுமி லேன்,என்கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே. 3.3.4 3039 சோதி யாகியெல் லாவுல கும்தொழும், ஆதி மூர்த்தியென் றாலள வாகுமோ?, வேதி யர்முழு வேதத் தமுதத்தை, தீதில் சீர்த்திரு வேங்கடத் தானையே. 3.3.5 3040 வேங்க டங்கள்மெய்ம் மேல்வினை முற்றவும், தாங்கள் தங்கட்கு நல்லன வேசெய்வார், வேங்க டத்துறை வார்க்கு நமவென்ன லாங்க டமை,அ துசுமந் தார்க்கட்கே. 3.3.6 3041 சுமந்து மாமலர் நீர்சுடர் தீபம்கொண்டு, அமர்ந்து வானவர் வானவர் கோனொடும், நமன்றெ ழும்திரு வேங்கடம் நங்கட்கு, சமன்கொள் வீடு தரும்தடங் குன்றமே. 3.3.7 3042 குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன், அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன் சென்று சேர்திரு வேங்கட மாமலை, ஒன்று மேதொழ நம்வினை ஓயுமே. (2) 3.3.8 3043 ஓயு மூப்புப் பிறப்பிறப் புப்பிணி, வீயு மாறுசெய் வான்திரு வேங்கடத் தாயன், நாண்மல ராமடித் தாமரை, வாயுள் ளும்மனத் துள்ளும்வைப் பார்கட்கே. 3.3.9 3044 வைத்த நாள்வரை எல்லை குறுகிச்சென்று, எய்த்தி ளைப்பதன் முன்னம் அடைமினோ, பைத்த பாம்பணை யான்திரு வேங்கடம், மொய்த்த சோலைமொய் பூந்தடம் தாழ்வரே. 3.3.10 3045 தாள்ப ரப்பிமண் வதாவிய ஈசனை, நீள்பொ ழில்குரு கூர்ச்சட கோபன்சொல், கேழில் ஆயிரத் திப்பத்தும் வல்லவர், வாழ்வர் வாழ்வெய்தி ஞாலம் புகழவே. (2) 3.3.11 3046 புகழுநல் ஒருவன் என்கோ. பொருவில்சீர்ப் பூமி யென்கோ, திகழும்தண் பரவை என்கோ. தீயென்கோ. வாயு என்கோ, நிகழும்ஆ காச மென்கோ. நீள்சுடர் இரண்டும் என்கோ, இகழ்விலிவ் வனைத்தும் என்கோ கண்ணனைக் கூவுமாறே. (2) 3.4.1 3047 கூவுமா றறிய மாட்டேன் குன்றங்கள் அனைத்தும் என்கோ, மேவுசீர் மாரி என்கோ. விளங்குதா ரகைகள் என்கோ, நாவியல் கலைகள் என்கோ. ஞானநல் லாவி என்கோ, பாவுசீர்க் கண்ணன் எம்மான் பங்கயக் கண்ண னையே. 3.4.2 3048 பங்கையக் கண்ணன் என்கோ. பவளச்செவ் வாயன் என்கோ, அங்கதிர் அடியன் என்கோ. அஞ்சன வண்ணன் என்கோ, செங்கதிர் முடியன் என்கோ. திருமறு மார்வன் என்கோ, சங்குசக் கரத்தன் என்கோ. சாதிமா ணிக்கத் தையே. 3.4.3 3049 சாதிமா ணிக்கம் என்கோ. சவிகோள்பொன் முத்தம் என்கோ, சாதிநல் வயிரம் என்கோ, தவிவில்சீர் விளக்கம் என்கோ, ஆதியஞ் சோதி என்கோ. ஆதியம் புருடன் என்கோ, ஆதுமில் காலத் தெந்தை அச்சுதன் அமல னையே. 3.4.4 3050 அச்சுதன் அமலன் என்கோ, அடியவர் வினைகெடுக்கும், நச்சுமா மருந்தம் என்கோ. நலங்கடல் அமுதம் என்கோ, அச்சுவைக் கட்டி என்கோ. அறுசுவை அடிசில் என்கோ, நெய்ச்சுவைத் தேறல் என்கோ. கனியென்கோ. பாலென் கேனோ. 3.4.5 3051 பாலென்கோ. நான்கு வேதப் பயனென்கோ, சமய நீதி நூலென்கோ. நுடங்கு கேள்வி இசையென்கோ. இவற்றுள் நல்ல மேலென்கோ, வினையின் மிக்க பயனென்கோ, கண்ணன் என்கோ. மாலென்கோ. மாயன் என்கோ வானவர் ஆதி யையே. 3.4.6 3052 வானவர் ஆதி என்கோ. வானவர் தெய்வம் என்கோ, வானவர் போகம் என்கோ. வானவர் முற்றும் என்கோ, ஊனமில் செல்வம் என்கோ. ஊனமில் சுவர்க்கம் என்கோ, ஊனமில் மோக்கம் என்கோ. ஒளிமணி வண்ண னையே. 3.4.7 3053 ஒளிமணி வண்ணன் என்கோ. ஒருவனென் றேத்த நின்ற நளிர்மதிச் சடையன் என்கோ. நான்முகக் கடவுள் என்கோ, அளிமகிழ்ந் துலகமெல்லாம் படைத்தவை ஏத்த நின்ற, களிமலர்த் துளவ னெம்மான் கண்ணனை மாய னையே. 3.4.8 3054 கண்ணனை மாயன் றன்னைக் கடல்கடைந் தமுதங் கொண்ட, அண்ணலை அச்சு தன்னை அனந்தனை அனந்தன் தன்மேல், நண்ணிநன் குறைகின் றானை ஞாலமுண் டுமிழ்ந்த மாலை, எண்ணுமா றறிய மாட்டேன், யாவையும் யவரும் தானே. 3.4.9 3055 யாவையும் யவரும் தானாய் அவரவர் சமயந் தோறும், தோய்விலன் புலனைந் துக்கும் சொலப்படான் உணர்வின் மூர்த்தி, ஆவிசேர் உயிரின் உள்ளால் அதுமோர் பற்றி லாத, பாவனை அதனைக் கூடில் அவனையும் கூட லாமே. 3.4.10 3056 கூடிவண் டறையும் தண்தார்க்கொண்டல்போல் வண்ணன் றன்னை மாடலர் பொழில்கு ருகூர் வண்சட கோபன் சொன்ன, பாடலோர் ஆயி ரத்துள் இவையுமோர் பத்தும் வல்லார், வீடில போக மெய்தி விரும்புவர் அமரர் மொய்த்தே (2) 3.4.11 3057 மொய்ம்மாம் பூம்பொழில் பொய்கை முதலைச் சிறைப்பட்டு நின்ற, கைம்மா வுக்கருள் செய்த கார்முகில் போல்வண்ணன் கண்ணன், எம்மா னைச்சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும்துள் ளாதார், தம்மால் கருமமென் சொல்லீர் தண்கடல் வட்டத்துள் ளீரே. (2) 3.5.1 3058 தண்கடல் வட்டத்துள் ளாரைத் தமக்கிரை யாத்தடிந் துண்ணும், திண்கழற் காலசு ரர்க்குத் தீங்கிழைக் கும்திரு மாலை, பண்கள் தலைக்கொள்ளப் பாடிப் பறந்தும் குனித்துழ லாதார், மண்கொள் உலகில் பிறப்பார் வல்வினை மோத மலைந்தே. 3.5.2 3059 மலையை யெடுத்துக்கல் மாரி காத்துப் பசுநிரை தன்னை, தொலைவு தவிர்த்த பிரானைச் சொல்லிச்சொல் லிநிறெப் போதும், தலையினோ டாதனம் தட்டத் தடுகுட்ட மாய்ப்பற வாதார், அலைகொள் நரகத் தழுந்திக் கிடந்துழைக் கின்ற வம்பரே. 3.5.3 3060 வம்பவிழ் கோதை பொருட்டா மால்விடை யேழும் அடர்த்த, செம்பவ ளத்திரள் வாயன் சிரீதரன் தொல்புகழ் பாடி, கும்பிடு நட்டமிட் டாடிக் கோகுகட் டுண்டுழ லாதார், தம்பிறப் பால்பய னென்னே சாது சனங்க ளிடையே? 3.5.4 3061 சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்ப தற்கு, ஆதியஞ் சோதி யுருவை அங்குவைத் திங்குப் பிறந்த, வேத முதல்வனைப் பாடி வீதிகள் தோறும்துள் ளாதார், ஓதி யுணர்ந்தவர் முன்னா என்சவிப் பார்ம னிசரே? 3.5.5 3062 மனிசரும் மற்றும் முற்றுமாய் மாயப் பிறவி பிறந்த, தனியன் பிறப்பிலி தன்னைத் தடங்கடல் சேர்ந்த பிரானை, கனியைக் கரும்பினின் சாற்றைக் கட்டியைத் தேனை அமுதை, முனிவின்றி ஏத்திக் குனிப்பார் முழுதுணர் நீர்மையி னாரே. 3.5.6 3063 நீர்மை நூற்றுவர் வீய ஐவர்க் கருள்செய்து நின்று, பார்மல்கு சேனை அவித்த பரஞ்சுட ரைநினைந் தாடி. நீர்மல்கு கண்ணின ராகி நெஞ்சம் குழைந்துநை யாதே, ஊர்மல்கி மோடு பருப்பார் உத்தமர்க்கட் கென்செய் வாரே? 3.5.7 3064 வார்ப்புனல் அந்தண் ணருவி வடதிரு வேங்கடத் தெந்தை, பேர்ப்பல சொல்லிப் பிதற்றிப் பித்தரென் றேபிறர் கூற, ஊர்ப்பல புக்கும் புகாதும் உலோகர் சிரிக்கநின் றாடி, ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப்படு வாரே. 3.5.8 3065 அமரர் தொழப்படு வானை அனைத்துல குக்கும் பிரானை, அமரர் மனத்தினுள் யோகு புணர்ந்தவன் தன்னோடொன் றாக, அமரத் துணியவல் லார்கள் ஒழியஅல் லாதவ ரெல்லாம், அமர நினைந்தெழுந் தாடி அலற்றுவ தேகரு மமே. 3.5.9 3066 கருமமும் கரும பலனும் ஆகிய காரணன் தன்னை, திருமணி வண்ணனைச் செங்கண் மாலினைத் தேவ பிரானை, ஒருமை மனத்தினுள் வைத்து உள்ளங் குழைந்தெழுந் தாடி, பெருமையும் நாணும் தவிர்ந்து பிதற்றுமின் பேதமை தீர்ந்தே. 3.5.10 3067 தீர்ந்த அடியவர் தம்மைத்திருத்திப் பணிகொள்ள வல்ல, ஆர்ந்த புகழச் சுதனை அமரர் பிரானையெம் மானை, வாய்ந்த வளவயல் சூழ்தண் வளங்குரு கூர்ச்சடகோபன், நேர்ந்தவோ ராயிரத் திப்பத் தருவினை நீறு செய்யுமே. (2) 3.5.11 3068 செய்ய தாமரைக் கண்ண னாயுல கேழு முண்ட அவன்கண்டீர், வையம் வானம் மனிசர் தெய்வம் மற்றும் மற்றும் மற்றும் முற்றுமாய், செய்ய சூழ்சுடர் ஞான மாய்வெளிப் பட்டி வைபடைத் தான்பின்னும், மொய்கொள் சோதியொ டாயி னானொரு மூவ ராகிய மூர்த்தியே. (2) 3.6.1 3069 மூவ ராகிய மூர்த்தி யைமுதல் மூவர்க் குமுதல் வன்றன்னை, சாவ முள்ளன நீக்கு வானைத் தடங்க டல்கிடந் தான்தன்னைத், தேவ தேவனைத் தென்னி லங்கை எரியெ ழச்செற்ற வில்லியை, பாவ நாசனைப் பங்க யத்தடங் கண்ண னைப்பர வுமினோ. 3.6.2 3070 பரவி வானவ ரேத்த நின்ற பரம னைப்பரஞ் சோதியை, குரவை கோத்த குழக னைமணி வண்ண னைக்குடக் கூத்தனை, அரவ மேறி யலைக டலம ரும்து யில்கொண்ட அண்ணலை, இரவும் நன்பக லும்வி டாதென்றும் ஏத்து தல்மனம் வைம்மினோ. 3.6.3 3071 வைம்மின் நும்மனத் தென்று யானுரைக் கின்ற மாயவன் சீர்மையை எம்ம னோர்க ளுரைப்ப தென்? அது நிற்க நாfடொறும், வானவர் தம்மை யாளும் அவனும் நான்முக னும்ச டைமுடி அண்ணலும், செம்மை யாலவன் பாத பங்கயம் சிந்தித் தேத்தி திரிவரே. 3.6.4 3072 திரியும் கற்றொ டகல்வி சும்பு திணிந்த மண்கிடந் தகடல், எரியும் தீயொ டிருசு டர்தெய்வம், மற்றும் மற்றும் முற்றுமாய், கரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன் கண்ணன்விண் ணோரிறை, சுரியும் பல்கருங் குஞ்சி யெங்கள் சுடர்மு டியண்ணல் தோற்றமே. 3.6.5 3073 தோற்றக் கேடவை யில்ல வனுடை யான வனொரு மூர்த்தியாய், சீற்றத் தோடருள் பெற்ற வனடிக் கீழ்ப்பு கநின்ற செங்கண்மால், நாற்றத் தோற்றச் சுவையொ லிஊ றல் ஆகி நின்ற,எம் வானவர் ஏற்றை யேயன்றி மற்றொ ருவரை யானி லேனெழு மைக்குமே. 3.6.6 3074 எழுமைக் குமென தாவிக் கின்னமு தத்தி னைஎன தாருயிர், கெழுமி யகதிர்ச் சோதி யைமணி வண்ண னைக்குடக் கூத்தனை, விழுமி யவம ரர்மு நிவர்வி ழுங்கும் கன்னல் கனியினை, தொழுமின் தூயம னத்த ராயிறை யும்நில் லாதுய ரங்களே. 3.6.7 3075 துயர மேதரு துன்ப இன்ப வினைக ளாய்அ வை அல்லனாய், உயர நின்றதோர் சோதி யாயுல கேழு முண்டுமிழ்ந் தான்தன்னை, அயர வாங்கு நமன்த மர்க்கரு நஞ்சி னையச்சு தன்தன்னை, தயர தற்கும கனறன் னையன்றி மற்றி லேன்தஞ்ச மாகவே. 3.6.8 3076 தஞ்ச மாகிய தந்தை தாயொடு தானு மாயவை அல்லனாய், எஞ்ச லிலம ரர்க்கு லமுதல் மூவர் தம்முள்ளு மாதியை, அஞ்சி நீருல கத்துள் ளீர்கள். அவனி வனென்று கூழேன்மின், நெஞ்சி னால்நினைப் பான்ய வனவன் ஆகும் நீள்கடல் வண்ணனே. 3.6.9 3077 கடல்வண் ணன்கண்ணன் விண்ண வர்க்கரு மாணிக் கமென தாருயிர் படவ ரவின ணைக்கி டந்த பரஞ்சு டர்ப்பண்டு நூற்றுவர், அடவ ரும்படை மங்க ஐவர்க்கட் காகி வெஞ்சமத்து, அன்றுதேர் கடவி யபெரு மான்க னைகழல் காண்ப தென்றுகொல் கண்களே? 3.6.10 3078 கண்கள் காண்டற் கரிய னாய்க்கருத் துக்கு நன்றுமெ ளியனாய், மண்கொள் ஞாலத்து யிர்க்கெல் லாமருள் செய்யும் வானவ ரீசனை, பண்கொள் சோலை வழுதி நாடன் குருகைக் கோன்சட கோபன்சொல், பண்கொள் ஆயிரத் திப்பத் தால்பத்த ராகக் கூடும் பயலுமினே. (2) 3.6.11 3079 பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனை, பயில இனியநம் பாற்கடல் சேர்ந்த பரமனை, பயிலும் திருவுடை யார்யவ ரேலும் அவர்க்கண்டீர், பயிலும் பிறப்பிடை தோற்றெம்மை யாளும் பரமரே. (2) 3.7.1 3080 ஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான்றன்னை, தோளுமோர் நான்குடைத் தூமணி வண்ணனெம் மான்தன்னை தாளும் தடக்கையும் கூப்பிப் பணியும் அவர்க்கண்டீர், நாளும் பிறப்பிடை தோறு எம்மை யாளுடை நாதரே. 3.7.2 3081 நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும் நறுந்துழாய்ப் போதனை, பொன்னெடுஞ் சக்கரத் தெந்தை பிரான்தன்னை பாதம் பணியவல் லாரைப் பணியும் அவர்க்கண்டீர், ஓதும் பிறப்பிடை தோறெம்மை யாளுடை யார்களே. 3.7.3 3082 உடையார்ந்த வாடையன் கண்டிகை யன்உ டை நாணினன் புடையார்ப்பொன் னூலினன் பொன்முடி யன்மற்றும் பல்கலன், நடையா வுடைத்திரு நாரணன் தொண்டர்தொண் டர்க்கண்டீர், இடையார் பிறப்பிடை தோறெமக் கெம்பெரு மக்களே. 3.7.4 3083 பெருமக்க ளுள்ளவர் தம்பெரு மானை, அமரர்கட் கருமை யொழியஅ ன் றாரமு தூட்டிய அப்பனை, பெருமை பிதற்றவல் லாரைப் பிதற்றும் அவர்க்கண்டீர், வருமையு மிம்மையும் நம்மை யளிக்கும் பிராக்களே. 3.7.5 3084 அளிக்கும் பரமனை கண்ணனை ஆழிப் பிரான்தன்னை, துளிக்கும் நறுங்கண்ணித் தூமணி வண்ணனெம் மான்தன்னை, ஒளிக்கொண்ட சோதியை உள்ளத்துக் கொள்ளும் அவர்க்கண்டீர், சலிப்பின்றி யாண்டெம்மைச் சன்மசன் மாந்தரங் காப்பரே. 3.7.6 3085 சன்மசன் மாந்தரங் காத்தடி யார்களைக் கொண்டுபோய், தன்மை பொறுத்தித்தன் தாளிணைக் கீழ்க்கொள்ளும் அப்பனை, தொன்மை பிதற்றவல் லாறைப் பிதற்றும் அவர்கண்டீர், நம்மை பெறுத்தெம்மை நாளுய்யக் கொள்கின்ற நம்பரே. 3.7.7 3086 நம்பனை ஞாலம் படைத்தவ னைதிரு மார்பனை, உம்பர் உலகினில் யார்க்கும் உணர்வரி யான்தன்னைக், கும்பி நரகர்கள் ஏத்துவ ரேலும் அவர்கண்டீர், எம்பல் பிறப்பிடை தோறெம் தொழுகுலம் தாங்களே. 3.7.8 3087 குவலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழிழிந்து, எத்தனை நலந்தா னிலாதசண் டாளசண் டாளர்க ளாகிலும், வலந்தாங்கு சக்கரத் தண்ணல் மணிவண்ணற் காளென்றுள் கலந்தார், அடியார் தம்மடி யாரெம் மடிகளே. 3.7.9 3088 அடியார்ந்த வையமுண் டாலிலை யன்ன சஞ்செய்யும், படியாது மில்குழ விப்படி யெந்தைபி ரான்றனக்கு, அடியார் அடியார் தமடி யார்அ டி யார்தமக் கடியார் அடியார் தம்,அடி யாரடி யோங்களே. 3.7.10 3089 அடியோங்கு நூற்றவர் வீயஅ ன் றைவருக் கருள்செய்த நெடியோனை, தென்குரு கூர்ச்சட கோபன்குற் றேவல்கள், அடியார்ந்த ஆயிரத் துள்ளிவை பத்தவன் தொண்டர்மேல் முடிவு,ஆரக் கற்கில் சன்மம்செய் யாமை முடியுமே. (2) 3.7.11 3090 முடியானே. மூவுலகும் தொழுதேத் தும்சீர் அடியானே, ஆழ்கடலைக் கடைந்தாய். புள்ளூர் கொடியானே, கொண்டல்வண் ணா.அண்டத் துமபரில் நெடியானே., என்று கிடக்குமென் நெஞ்சமே. (2) 3.8.1 3091 நெஞ்சமே. நீள்நக ராக இருந்தவென் தஞ்சனே, தண்ணிலங் கைக்கிறை யைச்செற்ற நஞ்சனே, ஞாலங்கொள் வான்குற ளாகிய வஞ்சனே, என்னுமெப் போதுமென் வாசகமே. 3.8.2 3092 வாசகமே ஏத்த அருள்செய்யும் வானவர்தம் நாயகனே, நாளிளந் திங்களைக் கோள்விடுத்து, வேயகம் பால்வெண்ணெய் தொடுவுண்ட ஆனாயர் தாயவனே, என்று தடவுமென் கைகளே. 3.8.3 3093 கைகளால் ஆரத் தொழுது தொழுதுன்னை, வைகலும் மாத்திரைப் போதுமோர் வீடின்றி, பைகொள் பாம்பேறி உறைபர னே,உன்னை மெய்கொள்ளக் காண விரும்புமென் கண்களே. 3.8.4 3094 கண்களால் காண வருங்கொலைன் றாசையால், மண்கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்துசெல், பண்கொண்ட புள்ளின் சிறகொலி பாவித்து, திண்கொள்ள ஓர்க்கும் கிடந்தென் செவிகளே. 3.8.5 3095 செவிகளால் ஆரநின் கீர்த்திக் கனியென்னும் கவிகளே காலப்பண் தேனுறைப் பத்துற்று, புவியின்மேல் பொன்னெடுஞ் சக்கரத் துன்னையே அவிவின்றி யாதரிக் கும்என தாவியே. 3.8.6 3096 ஆவியே. ஆரமு தே.என்னை ஆளுடை, தூவியம் புள்ளுடை யாய்.சுடர் நேமியாய், பாவியேன் நெஞ்சம் புலம்பப் பலகாலும், கூவியும் காணப் பெறேனுன கோலமே. 3.8.7 3097 கோலமே. தாமரைக் கண்ணதோர் அஞ்சன நீலமே, நின்றென தாவியை யீர்கின்ற சீலமே, சென்றுசொல் லாதன முன்நிலாம் காலமே, உன்னையெந் நாள்கண்டு கொள்வனே? 3.8.8 3098 கொள்வன்நான் மாவலி மூவடி தா என்ற கள்வனே, கஞ்சனை வஞ்சித்து வாணனை உள்வன்மை தீர,ஓ ராயிரம் தோள்துணித்த புள்வல்லாய், உன்னையெஞ் ஞான்று பொருந்துவனே? 3.8.9 3099 பொருந்திய மாமரு தின்னிடை போயவெம் பெருந்தகாய், உன்கழல் காணிய பேதுற்று, வருந்திநான் வாசக மாலைகொண்டு உன்னையே இருந்திருந் தெத்தனை காலம் புலம்புவனே. 3.8.10 3100 புலம்புசீர்ப் பூமி அளந்த பெருமானை, நலங்கொள்சீர் நன்குரு கூர்ச்சட கோபன்,சொல் வலங்கொண்ட ஆயிரத் துள்ளிவை யுமோர்ப்பத்து, இலங்குவான் யாவரும் ஏறுவர் சொன்னாலே. (2) 3.8.11 3101 சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவேன் கேண்மினோ, என்னாவில் இன்கவி யானொருவர்க்கும் கொடுக்கிலேன், தென்னா தெனாவென்று வண்டு முரல்திரு வேங்கடத்து, என்னானை என்னப்பன் எம்பெருமானுள னாகவே. 3.9.1 3102 உளனாக வேயெண்ணித் தன்னையொன்றாகத்தன் செல்வத்தை வளனா மதிக்குமிம் மானிடத்தைக்கவி பாடியென், குளனார் கழனிசூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே, உளனாய எந்தையை எந்தைபெம்மானை ஒழியவே? 3.9.2 3103 ஒழிவொன்றில் லாதபல் ஊழிதோறூழி நிலாவ,போம் வழியைத் தரும்நங்கள் வானவர் ஈசனை நிற்கப்போய், கழிய மிகநல்ல வான்கவி கொண்டு புலவீர்காள், இழியக் கருதியோர் மானிடம் பாடலென் னாவதே. 3.9.3 3104 என்னாவ தெத்தெனை நாளைக்குப் போதும் புலவீர்காள், மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும்பொருள்?, மின்னார் மணிமுடி விண்ணவர் தாதையைப் பாடினால், தன்னாக வேகொண்டு சன்மம்செய்யாமையும் கொள்ளுமே. 3.9.4 3105 கொள்ளும் பயனில்லைக் குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை, வள்ளல் புகழ்ந்துநும் வாய்மை இழக்கும் புலவீர்காள், கொள்ளக் குறைவிலன் வேண்டிற்றெல் லாம்தரும் கோதில்,என் வள்ளல் மணிவண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ. 3.9.5 3106 வம்மின் புலவீர்.நும் மெய்வருத்திக்கை செய் துய்ம்மினோ, இம்மன் னுலகில் செல்வரிப்போதில்லை நோக்கினோம், நும்மின் கவிகொண்டு நும்நு_மிட்டாதெய்வம் ஏத்தினால், செம்மின் சுடர்முடி என்திருமாலுக்குச் சேருமே. 3.9.6 3107 சேரும் கொடைபுகழ் எல்லையிலானை,ஓ ராயிரம் பேரும் உடைய பிரானையல்லால்மற்று யான்கிலேன், மாரி யனையகை மால்வரையொக்கும்திண் தோளென்று, பாரிலோர் பற்றையைப் பச்சைப்பசும்பொய்கள் வேயவே. 3.9.7 3108 வேயின் மலிபுரை தோளிபின்னைக்கு மணாளனை, ஆய பெரும்புகழ் எல்லையிலாதன பாடிப்போய், காயம் கழித்துஅ வன் தாளிணைக்கீழ்ப்புகுங் காதலன், மாய மனிசரை என்சொல்லவல்லேனென் வாய்கொண்டே? 3.9.8 3109 வாய்கொண்டு மானிடம் பாடவந்தகவி யேனல்லேன், ஆய்கொண்ட சீர்வள்ளல் ஆழிப்பிரானெனக் கேயுளன், சாய்கொண்ட இம்மையும் சாதித்து வானவர் நாட்டையும், நீகண்டு கொள் என்று வீடும் தரும்நின்று நின்றே. 3.9.9 3110 நின்றுநின் றுபல நாளுய்க்கும் இவ்வுடல் நீங்கிப்போய், சென்றுசென் றாகிலும் கண்டுசன் மங்கழிப் பானெண்ணி, ஒன்றியொன் றியுல கம்படைத் தாங்கவி யாயினேற்கு, என்றுமென் றுமினி மற்றொரு வர்க்கவி யேற்குமே? 3.9.10 3111 ஏற்கும் பெரும்புகழ் வானவர் ஈசன்கண் ணன்தனக்கு, ஏற்கும் பெரும்புகழ் வண்குரு கூர்ச்சட கோபன் சொல், ஏற்கும் பெரும்புகழ் ஆயிரத் துள்ளிவையும் ஓர்ப்பத்து ஏற்கும் பெரும்புகழ் சொல்லவல்லார்க்கில்லை சன்மமே. 3.9.11 3112 சன்மம் பலபல செய்து வெளிப்பட்டுச் சங்கொடு சக்கரம்வில், ஒண்மை யுடைய வுலக்கையொள் வாள்தண்டு கொண்டுபுள் ளூர்ந்து,உலகில் வன்மை யுடைய அரக்கர் அசுரரை மாளப் படைபொருத, நன்மை யுடையவன் சீர்ப்பர வப்பெற்ற நானோர் குறைவிலனே. (2) 3.10.1 3113 குறைவில் தடங்கடல் கோளர வேறித்தன் கோலச்செந் தாமரைக்கண், உறைபவன் போலவோர் யோகு புணர்ந்த ஒளிமணி வண்ணன் கண்ணன், கறையணி மூக்குடைப் புள்ளிக் கடாவி அசுரரைக் காய்ந்தவம்மான், நிறைபுகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் யானொரு முட்டிலனே. 3.10.2 3114 முட்டில்பல் போகத் தொருதனி நாயகன் மூவுல குக்குரிய, கட்டியைத் தேனை அமுதைநன் பாலைக் கனியைக் கரும்புதன்னை, மட்டவிழ் தண்ணந்து ழாய்முடி யானை வணங்கி அவன்திறத்துப் பட்டபின் னை,இறை யாகிலும் யானென் மனத்துப் பரிவிலனே. 3.10.3 3115 பரிவின்றி வாணனைக் காத்தும் என் றன்று படையொடும் வந்தெதிர்ந்த திரிபுரம் செற்றவ னும்மக னும்பின்னும் அங்கியும் போர்தொலைய, பொருசிறைப் புள்ளைக் கடாவிய மாயனை ஆயனைப் பொற்சக்கரத் தரியினை, அச்சுத னைப்பற்றி யானிறை யேனும் இடரிலனே. 3.10.4 3116 இடரின்றி யேயொரு நாளொரு போழ்திலெல் லாவுல கும்கழிய, படர்ப்புகழ்ப் பார்த்தனும் வைதிக னுமுடன் ஏறத்திண் தேர்க்கடவி, சுடரொளி யாய்நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை, உடலொடும் கொண்டு கொடுத்தவ னைப்பற்றி ஒன்றும் துயரிலனே. 3.10.5 3117 துயரில் சுடரொளி தன்னுடைச் சோதி நின்ற வண்ணம் நிற்கவே, துயரில் மலியும் மனிசர் பிறவியில் தோன்றிக்கண் காணவந்து, துயரங்கள் செய்து நன் தெய்வ நிலையுலகில் புக வுய்க்குமம்மான், துயரமில் சீர்க்கண்ணன் மாயன் புகழ்துற்ற யானோர்து ன்பமிலனே. 3.10.6 3118 துன்பமும் இன்பமு மாகிய செய்வினை யாயுல கங்களுமாய், இன்பமில் வெந்நர காகி இனியநல் வான் சுவர்க் கங்களுமாய், மன்பல் லுயிர்களு மாகிப் பலபல மாய மயக்குகளால், இன்புரும் இவ்விளை யாட்டுடை யானைப்பெற் றேதுமல் லலிலனே. 3.10.7 3119 அல்லலில் இன்பம் அளவிறந் தெங்கும் அழகமர் சூழொளியன், அல்லி மலர்மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்குமம்மான், எல்லையில் ஞானத்தன் ஞானமஃதேகொண்டெல் லாக்கரு மங்களும்செய், எல்லையில் மாயனைக் கண்ணனைத் தாள்பற்றி யானோர்துக் கமிலனே. 3.10.8 3120 துக்கமில் ஞானச் சுடரொளி மூர்த்தி துழாயலங் கல்பெருமான், மிக்கபன் மாயங்க ளால்விகிர் தம்செய்து வேண்டும் உருவுகொண்டு, நக்கபி ரானோ டயன்முத லாகஎல் லாரும் எவையும்,தன்னுள் ஒக்கவொ டுங்கவி ழுங்கவல் லானைப்பெற் றொன்றும் தளர்விலனே. 3.10.9 3121 தளர்வின்றி யேயென்றும் எங்கும் பரந்த தனிமுதல் ஞானமொன்றாய், அளவுடை யைம்புலன் களறி யாவகை யாலரு வாகிநிற்கும், வளரொளி ஈசனை மூர்த்தியைப் பூதங்கள் ஐந்தை யிருசுடரை, கிளரொளி மாயனைக் கண்ணனைத் தாள்பற்றி யானென்றும் கேடிலனே. 3.10.10 3122 கேடில்வி ழுப்புகழ்க் கேசவ னைக்குரு கூர்ச்சட கோபன் சொன்ன, பாடலோ ராயிரத் துளிவை பத்தும் பயிற்றவல் லார்கட்கு,அவன் நாடும் நகரமும் நன்குடன் காண நலனிடை யூர்தி பண்ணி, வீடும்பெ றுத்தித்தன் மூவுல குக்கும் தருமொரு நாயகமே. (2) 3.10.11 திருவாய் மொழி நான்காம் பத்து 3123 ஒருநா யகமாய் ஓட,வுலகுட னாண்டவர், கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர், பெருநாடு காண இம்மையிலேபிச்சை தாம்கொள்வர், திருநாரணன்தாள் காலம் பெறச்சிந்தித் துய்ம்மினோ. 4.1.1 3124 உய்ம்மின் திறைகொணர்ந் தென்றுலகாண்டவர், இம்மையே தம்மின் சுவைமட வாரைப்பிறர் கொள்ளத் தாம்விட்டு வெம்மி னொளிவெயில் கானகம்போய்க்குமை தின்பர்கள், செம்மின் முடித்திரு மாலைவிரைந்தடி சேர்மினோ. 4.1.2 3125 அடிசேர் முடியின ராகியரசர்கள் தாம்தொழ, இடிசேர் முரசங்கள் முற்றத்தியம்ப இருந்தவர், பொடிசேர் துகளாய்ப் போவர்களாதலின் நொக்கென கடிசேர் துழாய்முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ. 4.1.3 3126 நினைப்பான் புகில்கடல் எக்கலின் நுண்மண லிற்பலர், எனைத்தோ ருகங்களும் இவ்வுல காண்டு கழிந்தவர், மனைப்பால் மருங்கற மாய்தலல்லால்மற்றுக் கண்டிலம், பனைத்தாள் மதகளி றட்டவன் பாதம் பணிமினோ. 4.1.4 3127 பணிமின் திருவருள் என்னும்அஞ்சீதப் பைம்பூம்பள்ளி, அணிமென் குழலார் இன்பக்கலவி அமுதுண்டார், துணிமுன்பு நாலப்பல் லேழையர் தாமிழிப் பச்செல்வர், மணிமின்னு மேனிநம் மாயவன் பேர்சொல்லி வாழ்மினோ. 4.1.5 3128 வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மாமழை மொக்குளின் மாய்ந்துமாய்ந்து, ஆழ்ந்தாரென் றல்லால் அன்று முதலின் றறுதியா, வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பரென் பதில்லை நிற்குறில், ஆழ்ந்தார் கடல்பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ. 4.1.6 3129 ஆமின் சுவையவை ஆறொடடிசிலுண் டார்ந்தபின், தூமென் மொழிமட வாரிரக்கப்பின்னும் துற்றுவார், ஈமின் எமக்கொரு துற் றென்றிடறுவ ராதலின், கோமின் துழாய்முடி ஆதியஞ்சோதி குணங்களே. 4.1.7 3130 குணங்கொள் நிறைபுகழ் மன்னர்க்கொடைக்கடன் பூண்டிருந்து, இணங்கி யுலகுட னாக்கிலும் ஆங்கவ னையில்லார், மணங்கொண்ட கோபத்து மன்னியு மீள்வர்கள் மீள்வில்லை, பணங்கொள் அரவணை யான்திரு நாமம் படிமினோ. 4.1.8 3131 படிமன்னு பல்கலன் பற்றோடறுத்துஐம் புலன்வென்று, செடிமன்னு காயம்செற்றார்களு மாங்கவ னையில்லார், குடிமன்னு மின்சுவர்க்க மெய்தியுமீள்வர்கள் மீள்வில்லை, கொடிமன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ. 4.1.9 3132 குறுக மிகவுணர் வத்தொடு நோக்கியெல் லாம்விட்ட, இறுக லிறப்பென்னும் ஞானிக்கும் அப்பய னில்லையேல், சிறுக நினைவதோர் பாசமுண்டாம்பின்னும் வீடில்லை, மறுபகலில் ஈசனைப் பற்றி விடாவிடில் வீடஃதே. 4.1.10 3133 அஃதே உய்யப் புகுமாறென்று கண்ணன் கழல்கள்மேல், கொய்பூம் பொழில்சூழ் குருகூர்ச்சடகோபன் குற்றேவல், செய்கோலத் தாயிரம் சீர்த்தொடைப்பாடல் இவைபத்தும், அஃகாமற் கற்பவர் ஆழ்துயர் போயுய்யற் பாலரே. (2) 4.1.11 3134 பாலனா யேழுல குண்டு பரிவின்றி, ஆலிலை யன்னவ சஞ்செய்யும் அண்ணலார், தாளிணை மேலணி தண்ணந் துழாயென்றே மாலுமால், வல்வினை யேன்மட வல்லியே. (2) 4.2.1 3135 வல்லிசேர் நுண்ணிடை யாய்ச்சியர் தம்மொடும், கொல்லைமை செய்து குரவை பிணைந்தவர், நல்லடி மேலணி நாறு துழாயென்றே சொல்லுமால், சூழ்வினை யாட்டியேன் பாவையே. 4.2.2 3136 பாவியல் வேதநன் மாலை பலகொண்டு, தேவர்கள் மாமுனி வரிறைஞ் சநின்ற சேவடி மேலணி செம்பொற் றுழாயென்றே கூவுமால், கோள்வினை யாட்டியேன் கோதையே. 4.2.3 3137 கோதில வண்புகழ் கொண்டு சமயிகள், பேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான்பரன், பாதங்கள் மேலணி பைம்பொற் றுழாயென்றே ஓதுமால், ஊழ்வினை யேன்தடந் தோளியே. 4.2.4 3138 தோளிசேர் பின்னை பொருட்டெரு தேழ்தழீஇ க் கோளியார் கோவல னார்க்குடக் கூத்தனார், தாளிணை மேலணி தண்ணந்து ழாயென்றே நாளுநாள், நைகின்ற தால்எ ன்தன் மாதரே. 4.2.5 3139 மாதர்மா மண்மடந் தைபொருட் டேனமாய், ஆதியங் காலத் தகலிடம் கீண்டவர், பாதங்கள் மேலணி பைம்பொற் றுழாயென்றே ஓதும்மால், எய்தினள் என்தன் மடந்தையே. 4.2.6 3140 மடந்தையை வண்கம லத்திரு மாதினை, தடங்கொள்தார் மார்பினில் வைத்தவர் தாளின்மேல், வடங்கொள்பூந் தண்ணந் துழாய்மலர்க் கேயிவள் மடங்குமால், வாணுத லீர்.என் மடக்கொம்பே. 4.2.7 3141 கொம்புபோல் சீதை பொருட்டிலங் கைநகர் அம்பெரி யுய்த்தவர் தாளிணை மேலணி, வம்பவிழ் தண்ணந்து ழாய்மலர்க் கேயிவள் நம்புமால், நானிதற் கென்செய்கேன் நங்கைமீர். 4.2.8 3142 நங்கைமீர். நீரும்ஒ ர் பெண்பெற்று நல்கினீர், எங்ஙனே சொல்லுகேன் யான்பெற்ற ஏழையை, சங்கென்னும் சக்கர மென்னும் துழாயென்னும், இங்ஙனே சொல்லும் இராப்பகல் என்செய்கேன்? 4.2.9 3143 என்செய்கேன் என்னுடைப் பேதையென் கோமளம், என்சொல்லும் என்வச முமல்லள் நங்கைமீர், மின்செய்பூண் மார்பினன் கண்ணன் கழல்துழாய், பொன்செய்பூண் மென்முலைக் கென்று மெலியுமே. 4.2.10 3144 மெலியுநோய் தீர்க்கும்நங் கண்ணன் கழல்கள்மேல், மலிபுகழ் வண்குரு கூர்ச்சட கோபன்சொல், ஒலிபுகழ் ஆயிரத் திப்பத்தும் வல்லவர், மலிபுகழ் வானவர்க் காவர்நற் கோவையே.(2) 4.2.11 3145 கோவை வாயாள் பொருட்டேற்றின் எருத்தம் இறுத்தாய், மதிளிலங்கைக் கோவை வீயச் சிலைகுனித்தாய். குலநல் யானை மருப்பொசித்தாய், பூவை வீயா நீர்தூவிப் போதால் வணங்கே னேலும்,நின் பூவை வீயாம் மேனிக்குப் பூசும் சாந்தென் னெஞ்சமே. (2) 4.3.1 3146 பூசும் சாந்தென் னெஞ்சமே புனையும் கண்ணி எனதுடைய, வாச கம்செய் மாலையே வான்பட் டாடை யுமஃதே, தேச மான அணிகலனும் என்கை கூப்புச் செய்கையே, ஈசன் ஞால முண்டுமிழ்ந்த எந்தை யேக மூர்த்திக்கே. 4.3.2 3147 ஏக மூர்த்தி இருமூர்த்தி மூன்று மூர்த்தி பலமூர்த்தி ஆகி, ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி, நாகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற நாரா யணனே,உன் ஆகம் முற்றும் அகத்தடக்கி ஆவி யல்லல் மாய்த்ததே. 4.3.3 3148 மாய்த்தல் எண்ணி வாய்முலை தந்த மாயப் பேயுயிர் மாய்த்த, ஆய மாயனே. வாம னனே மாதவா, பூத்தண் மாலை கொண்டுன்னைப் போதால் வணங்கே னேலும்,நின் பூத்தண் மாலை நெடுமுடிக்குப் புனையும் கண்ணி எனதுயிரே. 4.3.4 3149 கண்ணி யெனதுயிர் காதல் கனகச் சோதி முடிமுதலா, எண்ணில் பல்க லன்களும் ஏலு மாடை யுமஃதே, நண்ணி மூவு லகும்நவிற்றும் கீர்த்தி யுமஃதே, கண்ண னெம்பி ரானெம்மான் கால சக்கரத் தானுக்கே. 4.3.5 3150 கால சக்க ரத்தோடு வெண்சங் கம்கை யேந்தினாய், ஞால முற்று முண்டுமிழ்ந்த நாரா யணனே. என்றென்று, ஓல மிட்டு நானழைத்தால் ஒன்றும் வாரா யாகிலும், கோல மாமென் சென்னிக்குன் கமலம் அன்ன குரைகழலே. 4.3.6 3151 குரைக ழல்கள் நீட்டிமண் கொண்ட கோல வாமனா, குரைக ழல்கை கூப்புவார்கள் கூட நின்ற மாயனே, விரைகொள் பூவும் நீரும்கொண்டேத்த மாட்டே னேலும்,உன் உரைகொள் சோதித் திருவுருவம் என்ன தாவி மேலதே. 4.3.7 3152 என்ன தாவி மேலையாய் ஏர்கொள் ஏழு லகமும், துன்னி முற்று மாகிநின்ற சோதி ஞான மூர்த்தியாய், உன்ன தென்ன தாவியும் என்ன துன்ன தாவியும் இன்ன வண்ண மேநின்றாய் என்று ரைக்க வல்லேனே? 4.3.8 3153 உரைக்க வல்லேன் அல்லேனுன் உலப்பில் கீர்த்தி வெள்ளத்தின் கரைக்கண் என்று செல்வன்நான்? காதல் மையல் ஏறினேன், புரைப்பி லாத பரம்பரனே. பொய்யி லாத பரஞ்சுடரே, இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த யானும் ஏத்தினேன். 4.3.9 3154 யானும் ஏத்தி ஏழுலகும் முற்றும் ஏத்தி, பின்னையும் தானும் ஏத்தி லும்தன்னை ஏத்த ஏத்த எங்கெய்தும், தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகித் தித்திப்ப, யானு மெம்பி ரானையே ஏத்தி னேன்யா னுய்வானே. 4.3.10 3155 உய்வு பாயம் மற்றின்மை தேறிக் கண்ணன் ஒண்கழல்கள்மேல் செய்ய தாம ரைப்பழனத் தென்னன் குருகூர்ச் சடகோபன், பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள், வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே. (2) 4.3.11 3156 மண்ணை யிருந்து துழாவி வாமனன் மண்ணிது என்னும், விண்ணைத் தொழுதவன் மேவு வைகுந்த மென்றுகை காட்டும், கண்ணையுள் நீர்மல்க நின்று கடல்வண்ணன் என்னும் அன்னே.என் பெண்ணைப் பெருமயல் செய்தாற் கென்செய்கேன் பெய்வளை யீரே (2) 4.4.1 3157 பெய்வளைக் கைகளைக் கூப்பிப் பிரான்கிடக் கும்கடல் என்னும், செய்யதோர் ஞாயிற்றைக் காட்டிச் சிரீதரன் மூர்த்தியீ தென்னும், நையும்கண் ணீர்மல்க நின்று நாரணன் என்னும்அ ன் னே,என் தெய்வ வுருவில் சிறுமான் செய்கின்ற தொன்றறி யேனே. 4.4.2 3158 அறியும்செந் தீயைத் தழுவி அச்சுதன் என்னும்மெய் வேவாள், எறியும்தண் காற்றைத் தழுவி என்னுடைக் கோவிந்தன் என்னும், வெறிகொள் துழாய்மலர் நாறும் வினையுடை யாட்டியேன் பெற்ற செறிவளை முன்கைச் சிறுமான் செய்கின்ற தென்கண்ணுக் கொன்றே. 4.4.3 3159 ஒன்றிய திங்களைக் காட்டி ஒளிமணி வண்ணனே என்னும் நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமாலே. வா என்று கூவும், நன்றுபெய் யும்மழை காணில் நாரணன் வந்தான் என் றாலும், என்றின மையல்கள் செய்தார் என்னுடைக் கோமளத் தையே. 4.4.4 3160 கோமள வான்கன்றைப் புல்கிக் கோவிந்தன் மேய்த்தன என்னும், போமிள நாகத்தின் பின்போய் அவன்கிடக் கையீ தென்னும், ஆமள வொன்றும் அறியேன் அருவினை யாட்டியேன் பெற்ற, கோமள வல்லியை மாயோன் மால்செய்து செய்கின்ற கூத்தே. 4.4.5 3161 கூத்தர் குடமெடுத் தாடில் கோவிந்த னாம் எனா ஓடும், வாய்த்த குழலோசை கேட்கில் மாயவன் என்றுமை யாக்கும், ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில் அவனுண்ட வெண்ணெயீ தென்னும், பேய்ச்சி முலைசுவைத் தாற்கென் பெண்கொடி யேறிய பித்தே. 4.4.6 3162 ஏறிய பித்தினோ டெல்லா வுலகும்கண் ணன்படைப் பென்னும் நீறுசெவ் வேயிடக் காணில் நெடுமால் அடியார் என் றோடும், நாறு துழாய்மலர் காணில் நாரணன் கண்ணியீ தென்னும், தேறியும் தேறாது மாயோன் திறத்தன ளேயித் திருவே. 4.4.7 3163 திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும், உருவுடை வண்ணங்கள் காணில் உலகளந் தான் என்று துள்ளும், கருவுடைத் தேவில்க ளெல்லாம் கடல்வண்ணன் கோயிலே என்னும் வெருவிலும் வீழ்விலும் ஓவாக்f கண்ணன் கழல்கள் விரும்புமே. 4.4.8 3164 விரும்பிப் பகைவரைக் காணில் வியலிடம் உண்டானே. என்னும், கரும்பெரு மேகங்கள் காணில் கண்ணன் என் றேறப் பறக்கும், பெரும்புல ஆநிரை காணில் பிரானுளன் என்றுபின் செல்லும், அரும்பெறல் பெண்ணினை மாயோன் அலற்றி அயர்ப்பிக்கின் றானே. 4.4.9 3165 அயர்க்கும்சுற் றும்பற்றி நோக்கும் அகலவே நீள் நோக்குக் கொள்ளும், வியர்க்கும் மழைக்கண் துளும்ப வெவ்வுயிர்க் கொள்ளும்மெய் சோரும், பெயர்த்தும் கண் ணா. என்று பேசும், பெருமானே. வா. என்று கூவும், மயல்பெருங் காதலென் பேதைக் கென்செய்கேன் வல்வினை யேனே. 4.4.10 3166 வல்வினை தீர்க்கும் கண்ணனை வண்குரு கூர்ச்சட கோபன், சொல்வினை யால்சொன்ன பாடல் ஆயிரத் துள்ளிவை பத்தும், நல்வினை யென்றுகற் பார்கள் நலனிடை வைகுந்தம் நண்ணி, தொல்வினை தீரவெல் லாரும் தொழுதெழ வீற்றிருப் பாரே. (2) 4.4.11 3167 வீற்றிருந் தேழுலகும் தனிக்கோல் செல்ல, வீவில்சீர், ஆற்றல்மிக் காளும் அம்மானைவெம்மா பிளந்தான்தன்னை, போற்றி யென்றே கைகளாரத் தொழுது சொல்மாலைகள், ஏற்ற நோற்றேற் கினியென்னகுறை யெழுமையுமே? (2) 4.5.1 3168 மைய கண்ணாள் மலர்மேலுறைவா ளுறைமார்பினன், செய்ய கொலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான்தன்னை மொய்ய சொல்லா லிசைமாலைகளேத்தி யுள்ளப் பெற்றேன், வெய்ய நோய்கள் முழுதும் வியன்ஞாலத்து வீயவே. 4.5.2 3169 வீவி லின்ப மிகஎல்லை நிகழ்ந்தநம் அச்சுதன், வீவில் சீரன் மலர்க்கண்ணன் விண்ணோர் பெருமான்தன்னை, வீவில் காலம் இசைமாலைகள் ஏத்தி மேவப்பெற்றேன், வீவி லின்பமிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே. 4.5.3 3170 மேவி நின்று தொழுவார் வினைபோக மேவும்பிரான், தூவியம் புள்ளு டையான் அடலாழியம் மான்றன்னை, நாவிய லாலிசை மாலைக ளேத்திநண் ணப்பெற்றேன், ஆவியென் னாவியை யானறியேன்செய்த வாற்றையே. 4.5.4 3171 ஆற்ற நல்ல வகைகாட்டும் அம்மானை, அமரர்தம் ஏற்றை யெல்லாப் பொருளும் விரித்தானை எம்மான்தன்னை, மாற்ற மாலை புனைந்தேத்தி நாளும் மகிழ்வெய்தினேன், காற்றின் முன்னம் கடுகி வினைநோய்கள் கரியவே. 4.5.5 3172 கரிய மேனிமிசை வெளிய நீறுசிறி தேயிடும், பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான்தன்னை, உரிய சொல்லா லிசைமாலைகள் ஏத்தியுள்ளப் பெற்றேற்கு, அரிய துண்டோ எனக்கின்று தொட்டுமினி யென்றுமே? 4.5.6 3173 என்றும் ஒன்றாகி யொத்தாரும்மிக்கார்களும், தன்றனக் கின்றி நின்றானை யெல்லாவுலகும் உடையான் தன்னை, குன்ற மொன்றால் மழைகாத்தபிரானைச்சொன் மாலைகள், நன்று சூட்டும் விதியெய்தினம் என்ன குறைநமக்கே? 4.5.7 3174 நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை, ஞாலத்தார் தமக்கும் வானத் தவர்க்கும் பெருமானை, தண்டாமரை சுமக்கும் பாதப் பெருமானைச் சொன்மாலைகள், சொல்லுமா றமைக்க வல்லேற் கினியாவர் நிகரகல் வானத்தே? 4.5.8 3175 வானத்தும் வானத்துள் ளும்பரும் மண்ணுள்ளும் மண்ணின்கீழ்த் தானத்தும், எண்டிசை யும்தவி ராதுநின் றான்தன்னை, கூனற்சங் கத்தடக் கையவனைக் குடமாடியை வானக் கோனைக், கவிசொல்ல வல்லேற் கினிமா றுண்டோ ? 4.5.9 3176 உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும்நின்றும், கொண்ட கோலத் தொடுவீற் றிருந்தும் மணங்கூடியும், கண்ட வாற்றால் தனக்கே யுலகென நின்றான்தன்னை, வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க் கின்பமாரியே. 4.5.10 3177 மாரி மாறாத தண்ணம்மலை வேங்கடத் தண்ணலை, வாரி வாறாத பைம்பூம் பொழில்சூழ் குருகூர்நகர், காரி மாறன் சடகோபன் சொல்லாயிரத் திப்பத்தால், வேரி மாறாத பூமே லிருப்பாள் வினைதீர்க்குமே. (2) 4.5.11 3178 தீர்ப்பாரை யாமினி யெங்ஙனம் நாடுதும் அன்னைமீர், ஓர்ப்பாலிவ் வொண்ணுதல் உற்றநன் னோயிது தேறினோம், போர்ப்பாகு தான்செய்தன் றைவரை வெல்வித்த, மாயப்போர்த் தேர்ப்பாக னார்க்கிவள் சிந்தை துழாய்த்திசைக் கின்றதே. 4.6.1 3179 திசைக்கின்ற தேயிவள் நோயிது மிக்க பெருந்தெய்வம், இசைப்பின்றி நீரணங் காடும் இளந்தெய்வம் அன்றிது, திசைப்பின்றி யேசங்கு சக்கர மென்றிவள் கேட்க,நீர் இசைக்கிற்றி ராகில்நன் றேயில் பெறுமிது காண்மினே. 4.6.2 3180 இதுகாண்மின் அன்னைமீர். இக்கட்டு விச்சிசொற் கொண்டு,நீர் எதுவானும் செய்தங்கோர் கள்ளும் இறைச்சியும் தூவேல்மின், மதுவார் துழாய்முடி மாயப் பிரான்கழல் வாழ்த்தினால், அதுவே யிவளுற்ற நோய்க்கும் அருமருந் தாகுமே. 4.6.3 3181 மருந்தாகும் என்றங்கோர் மாய வலவைசொற் கொண்டு,நீர் கருஞ்சோறும் மற்றைச் செஞ்சோறும் களனிழைத் தென்பயன்? ஒருங்காக வேயுல கேழும் விழுங்கி உமிழ்ந்திட்ட, பெருந்தெவன் பேர்சொல்ல கிற்கில் இவளைப் பெறுதிரே. 4.6.4 3182 இவளைப் பெறும்பரி சிவ்வணங் காடுதல் அன்றந்தோ, குவளைத் தடங்கண்ணும் கோவைச்செவ்வாயும் பயந்தனள், கவளக் கடாக்களி றட்டபிரான்திரு நாமத்தால், தவளப் பொடிக்கொண்டு நீரிட்டிடுமின் தணியுமே. 4.6.5 3183 தணியும் பொழுதில்லை நீரணங்காடுதிர் அன்னைமீர், பிணியும் ஒழிகின்ற தில்லை பெருகு மிதுவல்லால், மணியின் அணிநிற மாயன் தமரடி நீறுகொண்டு, அணிய முயலின்மற் றில்லைகண்டீரிவ் வணங்குக்கே. 4.6.6 3184 அணங்குக் கருமருந் தென்றங்கோர் ஆடும்கள் ளும்பராய் துணங்கை யெறிந்துநுந் தோள்குலைக்கப்படும் அன்னைமீர், உணங்கல் கெடக்கழு தையுதடாட்டம்கண் டென்பயன்? வணங்கீர்கள் மாயப் பிரான்தமர் வேதம்வல் லாரையே. 4.6.7 3185 வேதம்வல் லார்களைக் கொண்டுவிண்ணோர்பெரு மான்திருப் பாதம் பணிந்து,இவள் நோயிது தீர்த்துக்கொள் ளாதுபோய் ஏதம் பறைந்தல்ல செய்துகள்ளூடு கலாய்த்தூய், கீத முழவிட்டு நீர் அணங் காடுதல் கீழ்மையே. 4.6.8 3186 கீழ்மையினா லங்கோர் கீழ்மகனிட்ட முழவின்கீழ், நாழ்மை பலசொல்லி நீரணங்காடும்பொய் காண்கிலேன், ஏழ்மைப் பிறப்புக்கும் சேமமிந் நோய்க்குமீ தேமருந்து, ஊழ்மையில் கண்ணபி ரான்கழல் வாழ்த்துமின் உன்னித்தே. 4.6.9 3187 உன்னித்து மற்றொரு தெய்வம்தொழாளவ னையல்லால், நும்மிச்சை சொல்லிநும் தோள்குலைக்கப்படும் அன்னைமீர், மன்னப் படும்மறை வாணனை வண்துவ ராபதி மன்னனை, ஏத்துமின் ஏத்துதலும்தொழு தாடுமே. 4.6.10 3188 தொழுதாடி தூமணி வண்ணனுக்காட்செய்து நோய்தீர்ந்த வழுவாத தொல்புகழ் வண்குருகூர்ச்சட கோபன், சொல் வழுவாத ஆயிரத் துள்ளிவை பத்து வெறிகளும், தொழுதாடிப் பாடவல் லார்துக்க சீலம் இலர்களே. 4.6.11 3189 சீலம் இல்லாச் சிறிய னேலும் செய்வினை யோபெரிதால், ஞாலம் உண்டாய் ஞானமூர்த்தி நாராய ணா. என்றென்று, காலந் தோறும் யானிருந்து கைதலை பூசலிட்டால் கோல மேனி காண வாராய் கூவியும் கொள்ளாயே. (2) 4.7.1 3190 கொள்ள மாளா இன்ப வெள்ளம் கொதில தந்திடும்,என் வள்ள லேயோ. வையங் கொண்ட வாமனா வோ. என்றென்று, நள்ளி ராவும் நண்பகலும் நானிருந் தோலமிட்டால், கள்ள மாயா. உன்னை யென்கண் காணவந் தீயாயே. 4.7.2 3191 ஈவி லாத தீவினைகள் எத்தனை செய்த னன்கொல்? தாவி வையம் கொண்ட எந்தாய். தாமோதரா. என்றென்று கூவிக் கூவி நெஞ்சுருகிக் கண்பனி சோர நின்றால், பாவி நீயென் றொன்று சொல்லாய் பாவியேன் காணவந்தே. 4.7.3 3192 காண வந்தென கண்முகப்பே தாமரைக் கண்பிறழ, ஆணி செம்பொன் மேனியெந்தாய். நின்றருளாய் என்றென்று, நாண மில்லாச் சிறுதகையேன் நானிங் கலற்றுவதென், பேணி வானோர் காணமாட்டாப் பீடுடை யப்பனையே? 4.7.4 3193 அப்ப னே.அட லாழியானே, ஆழ்கட லைக்கடைந்த துப்ப னே,உன் தோள்கள் நான்கும் கண்டிடக்கூடுங் கொலென்று, எப்பொ ழுதும் கண்ண நீர்கொண் டாவி துவர்ந்துவர்ந்து, இப்போ ழுதே வந்தி டாயென் றேழையேன் நோக்குவனே. 4.7.5 3194 நோக்கி நோக்கி உன்னைக் காண்பான் யானென தாவியுள்ளே, நாக்கு நீள்வன் ஞான மில்லை நாடோ று மென்னுடைய, ஆக்கை யுள்ளூ மாவி யுள்ளும் அல்லபு றத்தினுள்ளும், நீக்க மின்றி யெங்கும் நின்றாய். நின்னை யறிந்தறிந்தே. 4.7.6 3195 அறிந்த றிந்து தேறித் தேறி யானென தாவியுள்ளே, நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மல மாகவைத்து, பிறந்தும் செத்தும் நின்றிடறும் பேதைமை தீர்ந்தொ ழிந்தேன் நறுந்து ழாயின் கண்ணி யம்மா. நானுன்னைக் கண்டுகொண்டே. 4.7.7 3196 கண்டு கொண்டென் கைக ளார நின்திருப் பாதங்கள்மேல், எண்டி சையு முள்ள பூக்கொண் டேத்தி யுகந்துகந்து, தொண்ட ரோங்கள் பாடி யாடச் சூழ்கடல் ஞாலத்துள்ளே, வண்டு ழாயின் கண்ணி வேந்தே. வந்திட கில்லாயே. 4.7.8 3197 இடகி லேனோன் றட்ட கில்லேன் ஐம்புலன் வெல்லகில்லேன், கடவ னாகிக் காலந் தோறும் பூப்பறித் தேத்தகில்லேன், மடவன் நெஞ்சம் காதல் கூர வல்வினை யேன்அயர்ப்பாய், தடவு கின்றே னெங்குக் காண்பன் சக்கரத் தண்ணலையே? 4.7.9 3198 சக்க ரத்தண் ணலேயென்று தாழ்ந்து கண்ணீர் ததும்ப, பக்கம் நோக்கி நின்ற லந்தேன் பாவியேன் காண்கின்றிலேன், மிக்க ஞான மூர்த்தி யாய வேத விளக்கினை,என் தக்க ஞானக் கண்க ளாலே கண்டு தழுவுவனே. 4.7.10 3199 தழுவி நின்ற காதல்தன்னால் தாமரைக் கண்ணன்தன்னை, குழுவு மாடத் தென்குரு கூர்மா றன்சட கோபன்,சொல் வழுவி லாத வொண்தமிழ்கள் ஆயிரத்து ளிப்பத்தும், தழுவப் பாடி யாட வல்லார் வைகுந்த மேறுவரே. (2) 4.7.11 3200 ஏறாளும் இறையோனும் திசைமுகனும் திருமகளும், கூறாளும் தனியுடம்பன் குலங்குலமா அசுரர்களை, நீறாகும் படியாக நிருமித்துப் படைதொட்ட, மாறாளன் கவராத மணிமாமை குறைவிலமே. (2) 4.8.1 3201 மணிமாமை குறைவில்லா மலர்மாதர் உறைமார்வன், அணிமானத் தடவரைத்தோள் அடலாழித் தடக்கையன், பணிமானம் பிழையாமே யடியேனைப் பணிகொண்ட, மணிமாயன் கவராத மடநெஞ்சால் குறைவிலமே. 4.8.2 3202 மடநெஞ்சால் குறைவில்லா மகள்தாய்செய் தொருபேய்ச்சி, விடநஞ்ச முலைசுவைத்த மிகுஞானச் சிறுகுழவி, படநாகத் தணைக்கிடந்த பருவரைத்தோள் பரம்புருடன், நெடுமாயன் கவராத நிறையினால் குறைவிலமே. 4.8.3 3203 நிறையினாற் குறைவில்லா நெடும்பணைத்தோள் மடப்பின்னை, பொறையினால் முலையணைவான் பொருவிடைஏழ் அடர்த்துகந்த, கறையினார் துவருடுக்கை கடையாவின் கழிகோல்கை, சறையினார் கவராத தளிர்நிறத்தால் குறைவிலமே. 4.8.4 3204 தளிர்நிறத்தால் குறைவில்லாத் தனிச்சிறையில் விளப்புற்ற, கிளிமொழியாள் காரணமாக் கிளரரக்கன் நகரெரித்த, களிமலர்த் துழாயலங்கல் கமழ்முடியன் கடல்ஞாலத்து, அளிமிக்கான் கவராத அறிவினால் குறைவிலமே. 4.8.5 3205 அறிவினால் குறைவில்லா அகல்ஞாலத் தவரறிய, நெறியெல்ல மெடுத்துரைத்த நிறைஞானத் தொருமூர்த்தி, குறியமாண் உருவாகிக் கொடுங்கோளால் நிலங்கொண்ட, கிறியம்மான் கவராத கிளரொளியால் குறைவிலமே. 4.8.6 3206 கிளரொளியால் குறைவில்லா அரியுருவாய்க் கிளர்ந்தெழுந்து, கிளரொளிய இரணியன தகல்மார்பம் கிழிந்துகந்த, வளரொளிய கனலாழி வலம்புரியன் மணிநீல, வளரொளியான் கவராத வரிவளையால் குறைவிலமே. 4.8.7 3207 வரிவளையால் குறைவில்லாப் பெருமுழக்கால் அடங்காரை, எரியழலம் புகவூதி யிருநிலமுன் துயர்தவிர்த்த, தெரிவரிய சிவன்பிரமன் அமரர் கோன் பணிந்தேத்தும், விரிபுகழான் கவராத மேகலையால் குறைவிலமே. 4.8.8 3208 மேகலையால் குறைவில்லா மெலிவுற்ற அகலல்குல், போகமகள் புகழ்த்தந்தை விறல்வாணன் புயம்துணித்து, நாகமிசைத் துயில்வான்போல் உலகெல்லாம் நன்கொடுங்க, யோகணைவான் கவராத வுடம்பினால் குறைவிலமே. 4.8.9 3209 உடம்பினால் குறைவில்லா உயிர்பிரிந்த மலைத்துண்டம், கிடந்தனபோல் துணிபலவா அசுரர் குழாம் துணித்துகந்த, தடம்புனல சடைமுடியன் தனியொருகூ றமர்ந்துறையும், உடம்புடையான் கவராத உயிரினால் குறைவிலமே. 4.8.10 3210 உயிரினால் குறைவில்லா உலகேழ்தன் உள்ளொடுக்கி, தயிர்வெண்ணெ யுண்டானைத், தடங்குருகூர்ச் சடகோபன், செயிரில்சொல் லிசைமாலை யாயிரத்து ளிப்பத்தால் வயிரம்சேர் பிறப்பறுத்து வைகுந்தம் நண்ணுவரே. (2) 4.8.11 3211 நண்ணாதார் முறுவலிப்ப நல்லுற்றார் கரைந்தேங்க, எண்ணாராத் துயர்விளைக்கும் இவையென்ன உலகியற்கை?, கண்ணாளா. கடல்கடைந்தாய். உனகழற்கே வரும்பரிசு, தண்ணாவா தடியேனைப் பணிகண்டாய் சாமாறே. (2) 4.9.1 3212 சாமாறும் கெடுமாறும் தமருற்றார் தலைத்தலைப்பெய்து, ஏமாறிக் கிடந்தலற்றும் இவையென்ன உலகியற்கை?, ஆமாறொன் றறியேன்நான் அரவணையாய். அம்மானே, கூமாறே விரைகண்டாய் அடியேனைக் குறிக்கொண்டே. 4.9.2 3213 கொண்டாட்டும் குலம்புனைவும் தமருற்றார் விழுநிதியும், வண்டார்பூங் குழலாளும் மனையொழிய வுயிர்மாய்தல், கண்டாற்றேன் உலகியற்கை கடல்வண்ணா. அடியேனைப் பண்டேபோல் கருதாதுன் அடிக்கேகூய்ப் பணிகொள்ளே. 4.9.3 3214 கொள்ளென்று கிளர்ந்தெழுந்த பெருஞ்செல்வம் நெருப்பாக, கொள்ளென்று தமம்மூடும் இவையென்ன உலகியற்கை? வள்ளலே. மணிவண்ணா. உனகழற்கே வரும்பரிசு, வள்ளல்செய் தடியேனை உனதருளால் வாங்காயே. 4.9.4 3215 வாங்குநீர் மலருலகில் நிற்பனவுமீ திரிவனவும், ஆங்குயிர்கள் பிறப்பிறப்புப் பிணிமூப்பால் தகர்ப்புண்ணும், ஈங்கிதன்மேல் வெந்நரகம் இவையென்ன உலகியற்கை? வாங்கெனைநீ மணிவண்ணா. அடியேனை மறுக்கேலே. 4.9.5 3216 மறுக்கிவல் வலைப்படுத்திக் குமைத்திட்டுக் கொன்றுண்பர், அறப்பொருளை யறிந்தோரார் இவையென்ன உலகியற்கை? வெறித்துளவ முடியானே. வினையேனை யுனக்கடிமை அறக்கொண்டாய், இனியென்னா ரமுதே.கூய் அருளாயே. 4.9.6 3217 ஆயே.இவ் வுலகத்து நிற்பனவும் திரிவனவும் நீயேமற் றொருபொருளும் இன்றிநீ நின்றமையால், நோயேமூப் பிறப்பிறப்புப் பிணியேயென் றிவையொழியக், கூயேகொள் அடியேனைக் கொடுவுலகம் காட்டேலே. 4.9.7 3218 காட்டிநீ கரந்துமிழும் நிலநீர்தீ விசும்புகால், ஈட்டீநீ வைத்தமைத்த இமையோர்வாழ் தனிமுட்டைக், கோட்டையினில் கழித்தெனையுன் கொழுஞ்சோதி யுயரத்து, கூட்டரிய திருவடிக்க ளெஞ்ஞான்று கூட்டுதியே? 4.9.8 3219 கூட்டுதிநின் குரைகழல்கள் இமையோரும் தொழாவகை செய்து, ஆட்டுதிநீ யரவணையாய். அடியேனும் அஃதறிவன், வேட்கையெல்லாம் விடுத்தெனையுன் திருவடியே சுமந்துழல, கூட்டரிய திருவடிக்கள் கூட்டினைநான் கண்டேனே. 4.9.9 3220 கண்டுகேட் டுற்றுமோந்துண்டுழலும் ஐங்கருவி கண்டவின்பம், தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம், ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்பக், கண்டசதிர் கண்டொழிந்தேன் அடைந்தேனுன் திருவடியே. 4.9.10 3221 திருவடியை நாரணனைக்கேசவனைப் பரஞ்சுடரை, திருவடிசேர் வதுகருதிச் செழுங்குருகூர்ச் சடகோபன், திருவடிமே லுரைத்ததமிழ் ஆயிரத்து ளிப்பத்தும், திருவடியே அடைவிக்கும் திருவடிசேர்ந் தொன்றுமினே. (2) 4.9.11 3222 ஒன்றுந் தேவு முலகும் உயிரும் மற்றும் யாதுமில்லா அன்று, நான்முகன் தன்னொடு தேவ ருலகோ டுயிர்படைத்தான், குன்றம் போல்மணி மாடம் நீடு திருக்குரு கூரதனுள், நின்ற ஆதிப்பி ரான்நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே. (2) 4.10.1 3223 நாடி நீர்வ ணங்கும் தெய்வமும் உம்மையு முன்படைத்தான், வீடில் சீர்ப்புக ழாதிப்பி ரானவன் மேவி யுறைகோயில், மாட மாளிகை சூழ்ந்தழ காய திருக்குரு கூரதனைப், பாடி யாடிப் பரவிச் செல்மின்கள் பல்லுல கீர்.பரந்தே. 4.10.2 3224 பரந்த தெய்வமும் பல்லுல கும்படைத் தன்றுட னேவிழுங்கிக், கரந்து மிழ்ந்து கடந்தி டந்தது கண்டும் தெளியகில்லீர், சிரங்க ளால்அ மரர்வ ணங்கும் திருக்குரு கூரதனுள், பரன்திற மன்றிப் பல்லுலகீர். தெய்வம் மற்றில்லை பேசுமினே. 4.10.3 3225 பேச நின்ற சிவனுக் கும்பிர மன்தனக் கும்பிறர்க்கும் நாய கனவ னே,க பாலநன் மோக்கத்துக் கண்டுகொள்மின், தேச மாமதிள் சூழ்ந்தழ காய திருக்குரு கூரதனுள், ஈசன் பாலோர் அவம்ப றைதலென் னாவதி லிங்கியர்க்கே? 4.10.4 3226 இலிங்கத் திட்ட புராணத் தீரும் சமணரும் சாக்கியரும் வலிந்து வாதுசெய் வீர்களும் மற்றுநுந் தெய்வமு மாகிநின்றான் மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக்குரு கூரதனுள், பொலிந்து நின்றபி ரான்கண்டீ ரொன்றும் பொய்யில்லை போற்றுமினே. (2) 4.10.5 3227 போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு உம்மையின்னே தேற்றி வைத்ததெல் லீரும் வீடு பெற்றாலுல கில்லையென்றே, சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குரு கூரதனுள், ஆற்ற வல்லவன் மாயம் கண்டீரது அறிந்தறிந் தோடுமினே. 4.10.6 3228 ஓடி யோடிப் பல்பிறப்பும் பிறந்துமற் றோர்தெய்வம், பாடி யாடிப் பணிந்துபல்படிகால் வழியே றிக்கண்டீர், கூடி வானவ ரேத்தனின்ற திருக்குரு கூரதனுள், ஆடு புட்கொடி யாதி மூர்த்திக் கடிமை புகுவதுவே. 4.10.7 3229 புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனை நக்கபிரானுமன் றுய்யக்கொண்டது நாராயணனருளே கொக்கலர் தடந்f தாழை வேலித் திருக்குருகூரதனுள் மிக்க ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் விளம்புதிரே 4-10-8 3230 விளம்பும் ஆறு சமய மும்அ வை யாகியும் மற்றும்தன்பால், அளந்து காண்டற் கரிய னாகிய ஆதிப்பி ரானமரும், வளங்கொள் தண்பணை சூழ்ந்தழ காய திருக்குரு கூரதனை, உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உய்யக்கொண்டு போகுறிலே. 4.10.9 3231 உறுவ தாவ தெத்தேவும் எவ்வுலக கங்களும் மற்றும்தன்பால், மறுவில் மூர்த்தியோ டொத்தித் தனையும் நின்றவண் ணம்நிற்கவே, செறுவில் செந்நெல் கரும்பொ டோ ங்கு திருக்குரு கூரதனுள் குறிய மாணுரு வாகிய நீள்குடக் கூத்தனுக் காட்செய்வதே. 4.10.10 3232 ஆட்செய்த தாழிப்பி ரானைச் சேர்ந்தவன் வண்குரு கூர்நகரான் நாட்க மழ்மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன், வேட்கை யால்சொன்ன பாடல் ஆயிரத் துளிப்பத் தும்வல்லார், மீட்சி யின்றி வைகுந்த மாநகர் மற்றது கையதுவே. (2) 4.10.11 திருவாய் மொழி ஐந்தாம் பத்து 3233 கையார் சக்கரத்தெங்கருமாணிக்க மே. என்றென்று, பொய்யே கைம்மைசொல்லிப்புறமேபுற மேயாடி, மெய்யே பெற்றொழிந்தேன், விதிவாய்க்கின்று காப்பாரார், ஐயோ கண்ணபிரான். அறையோ இனிப்போனாலே. (2) 5.1.1 3234 போனாய் மாமருதின் நடுவேயென்பொல் லாமணியே, தேனே. இன்னமுதே. என்றென்றேசில கூற்றுச்சொல்ல, தானே லெம்பெருமானவனென்னா கியொழிந்தான், வானே மாநிலமேமற்றுமுற்றுமென் னுள்ளனவே. 5.1.2 3235 உள்ளன மற்றுளவாப்புறமேசில மாயஞ்சொல்லி, வள்ளல் மணிவண்ணனே. என்றென்றேயுனை யும்வஞ்சிக்கும், கள்ளம னம்தவிர்ந்தேயுனைக்கண்டுகொண் டுய்ந்தொழிந்தேன், வெள்ளத் தணைக்கிடந்தாயினியுன்னைவிட் டெங்கொள்வனே? 5.1.3 3236 என்கொள்வ னுன்னைவிட்டென் னும்வாசகங் கள்சொல்லியும், வன்கள்வ னேன்மனத்தை வலித்துக்கண்ண நீர் கரந்து, நின்கண் நெருங்கவைத்தே என்தாவியை நீக்ககில்லேன், என்கண் மலினமறுத் தென்னைக்கூவி யருளாய்கண்ணனே. 5.1.4 3237 கண்ணபி ரானைவிண்ணோர் கருமாணிக்கத் தையமுதை, நண்ணியும் நண்ணகில்லேன் நடுவேயோ ருடம்பிலிட்டு, திண்ண மழுந்தக்கட்டிப் பலசெய்வினை வன்கயிற்றால், புண்ணை மறையவரிந் தெனைப்போரவைத் தாய்புறமே. 5.1.5 3238 புறமறக் கட்டிக்கொண்டிரு வல்வினை யார்குமைக்கும், முறைமுறை யாக்கைபுகலொழியக் கண்டு கொண்டொழிந்தேன், நிறமுடை நால்தடந்தோள் செய்யவாய்செய்ய தாமரைக்கண், அறமுய லாழியங்கைக் கருமேனியம் மான்தன்னையே. 5.1.6 3239 அம்மா னாழிப்பிரான் அவனெவ்விடத் தான்?யானார்?, எம்மா பாவியர்க்கும்விதிவாய்க்கின்று வாய்க்கும்கண்டீர், கைம்மா துன்பொழித்தாய். என்றுகைதலை பூசலிட்டே, மெய்ம்மா லாயொழிந்தேனெம்பிரானுமென் மேலானே. 5.1.7 3240 மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் மேவித்தொழும், மாலார் வந்தினநாள் அடியேன்மனத்தே மன்னினார், சேலேய் கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும், மேலாத் தாய்தந்தையும் அவரேயினி யாவாரே. 5.1.8 3241 ஆவா ரார்துணையென்றலைநீர்க்கட லுளழுந்தும் நாவாய் போல்,பிறவிக் கடலுள்நின்று நான்துளங்க, தேவார் கோலத்தொடும் திருச்சக்கரம் சங்கினொடும், ஆவா வென்றருள் செய்தடியேனொடு மானானே. 5.1.9 3242 ஆனான் ஆளுடையானென்றஃதேகொண் டுகந்துவந்து, தானே யின்னருள்செய்தென்னைமுற்றவும் தானானான், மீனா யாமையுமாய் நரசிங்கமு மாய்க்குறளாய், கானா ரெனாமுமாய்க் கற்கியாமின்னம் கார்வண்ணனே. 5.1.10 3243 கார்வண்ணன் கண்ணபிரான் கமலத்தடங் கண்ணன்தன்னை, ஏர்வள வொண்கழனிக்குருகூர்ச்சட கோபன்சொன்ன, சீர்வண்ண வொண் தமிழ்களிவையாயிரத் துளிப்பத்தும் ஆர்வண்ணத் தாலுரைப்பார் அடிக்கீழ்புகு வார்பொலிந்தே. 5.1.11 3244 பொலிக பொலிக பொலிக. போயிற்று வல்லுயிர்ச் சாபம், நலியும் நரகமும் நைந்த நமனுக்கிங் கியாதொன்று மில்லை, கலியும் கெடும்கண்டு கொள்மின் கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல், மலியப் புகுந்திசை பாடி யாடி யுழிதரக் கண்டோ ம். (2) 5.2.1 3245 கண்டோ ம் கண்டோ ம் கண்டோ ம் கண்ணுக் கினியன கண்டோ ம், தொண்டீர். எல்லீரும் வாரீர் தொழுது தொழுதுநின் றார்த்தும், வண்டார் தண்ணந்து ழாயான் மாதவன் பூதங்கள் மண்மேல், பண்டான் பாடிநின் றாடிப் பரந்து திரிகின் றனவே. 5.2.2 3246 திரியும் கலியுகம் நீங்கித் தேவர்கள் தாமும் புகுந்து, பெரிய கிதயுகம் பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருக, கரிய முகில்வண்ண னெம்மான் கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல், இரியப் புகுந்திசை பாடி எங்கும் இடங்கொண் டனவே. 5.2.3 3247 இடங்கொள் சமயத்தை யெல்லாம் எடுத்துக் களைவன போல, தடங்கடல் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்க ளேயாய் கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பலபல பாடி, நடந்தும் பறந்தும் குனித்தும் நாடகம் செய்கின் றனவே. 5.2.4 3248 செய்கின்ற தென்கண்ணுக் கொன்றே ஒக்கின்ற திவ்வுல கத்து, வைகுந்தன் பூதங்க ளேயாய் மாயத்தி னாலெங்கும் மன்னி, ஐயமொன் றில்லை யரக்கர் அசுரர் பிறந்தீருள் ளீரேல், உய்யும் வகையில்லை தொண்டீர். ஊழி பெயர்த்திடும் கொன்றே. 5.2.5 3249 கொன்றுயி ருண்ணும் விசாதி பகைபசி தீயன வெல்லாம், நின்றிவ் வுலகில் கடிவான் நேமிப்பி ரான்தமர் போந்தார், நன்றிசை பாடியும் துள்ளி யாடியும் ஞாலம் பரந்தார், சென்று தொழுதுய்ம்மின் தொண்டீர். சிந்தையைச் செந்நி றுத்தியே. 5.2.6 3250 நிறுத்திநும் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்க ளும்மையுய் யக்கொள் மறுத்து மவனோடே கண்டீர் மார்க்கண் டேயனும் கரியே கறுத்த மனமொன்றும் வேண்டா கண்ணனல் லால்தெய்வ மில்லை, இறுப்பதெல் லாமவன் மூர்த்தி யாயவர்க் கேயி றுமினே. 5.2.7 3251 இறுக்கு மிறையிறுத்துண்ண எவ்வுல குக்கும்தன் மூர்த்தி, நிறுத்தினான் தெய்வங்க ளாக அத்தெய்வ நாயகன் றானே மறுத்திரு மார்வன் அவன்றன் பூதங்கள் கீதங்கள் பாடி, வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார் மேவித் தொழுதுய்ம்மி னீரே. 5.2.8 3252 மேவித் தொழுதுய்ம்மி னீர்கள் வேதப் புனித இருக்கை, நாவிற்கொண் டச்சுதன் றன்னை ஞான விதிபிழை யாமே, பூவில் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து மேவித் தொழுமடி யாரும் பகவரும் மிக்க துலகே. 5.2.9 3253 மிக்க வுலகுகள் தோறும் மேவிக்கண் ணன்திரு மூர்த்தி, நக்கபி ரானோ டயனும் இந்திர னும்முதலாக, தொக்க அமரர் குழாங்கள் எங்கும் பரந்தன தொண்டீர், ஒக்கத் தொழுகிற்றி ராகில் கலியுக மொன்றுமில் லையே. 5.2.10 3254 கலியுக மொன்றுமின் றிக்கே தன்னடி யார்க்கருள் செய்யும், மலியும் சுடரொளி மூர்த்தி மாயப்பி ரான்கண்ணன் றன்னை, கலிவயல் தென்னன் குருகூர்க் காரிமா றன்சட கோபன், ஒலிபுக ழாயிரத் திப்பத்து உள்ளத்தை மாசறுக் கும்மே. (2) 5.2.11 3255 மாசறு சோதியென் செய்ய வாய்மணிக் குன்றத்தை ஆசறு சீலனை யாதி மூர்த்தியை நாடியே, பாசற வெய்தி யறிவிழந் தெனைநா ளையம்?, ஏசறு மூரவர் கவ்வை தோழீ. என்செய்யுமே? (2) 5.3.1 3256 என்செய்யு மூரவர் கவ்வை தோழீ. இனிநம்மை, என்செய்ய தாமரைக் கண்ண னென்னை நிறைகொண்டான், முன்செய்ய மாமை யிழந்து மேனி மெலிவெய்தி, என்செய்ய வாயும் கருங்கண் ணும்பயப் பூர்ந்தவே. 5.3.2 3257 ஊர்ந்த சகடம் உதைத்தபாதத்தன், பேய்முலை சார்ந்து சுவைத்த செவ்வாயன் என்னை நிறைகொண்டான், பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடன்றியோர் சொல்லிலேன், தீர்ந்தவென் தோழீ. என்செய்யு மூரவர் கவ்வையே? 5.3.3 3258 ஊரவர் கவ்வை யெருவிட்டன்னைசொல் நீர்மடுத்து, ஈரநெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ்செய்யுள், பேரமர் காதல் கடல்புரைய விளைவித்த, காரமர் மேனிநங் கண்ணன் தோழீ. கடியனே. 5.3.4 3259 கடியன் கொடியன் நெடியமாலுல கங்கொண்ட அடியன், அறிவரு மேனிமாயத்தன், ஆகிலும் கொடியவென் னெஞ்சம் அவனென்றே கிடக்கு மெல்லே, துடிகொ ளிடைமடத் தோழீ. அன்னையென் செய்யுமே? 5.3.5 3260 அன்னையென் செய்யிலென் ஊரென் சொல்லிலென் தோழிமீர், என்னை யினியுமக் காசை யில்லை யகப்பட்டேன், முன்னை யமரர் முதல்வன் வண்துவ ராபதி மன்னன், மணிவண் ணன்வாசு தேவன் வலையுளே. 5.3.6 3261 வலையுள் அகப்பட்டுத் தென்னைநன் நெஞ்சம் கூவிக்கொண்டு, அலைகடல் பள்ளி யம்மானை ஆழிப் பிரான்தன்னை கலைகொள் அகலல்குல் தோழீ. நம்கண்க ளால்கண்டு தலையில் வணங்க மாங்கொலோ தையலார் முன்பே? 5.3.7 3262 பேய்முலை யுண்டு சகடம் பாய்ந்து மருதிடைப் போய்முதல் சாய்த்து, புள்வாய் பிளந்து களிறட்ட, தூமுறு வல்தொண்டை, வாய்ப்பிரானையெந் நாள்கொலோ, யாமுறு கின்றது தோழீ. அன்னையர் நாணவே? 5.3.8 3263 நாணும் நிறையும் கவர்ந்தென்னை நன்னெஞ்சம் கூவிக்கொண்டு, சேணுயர் வானத் திருக்கும் தேவ பிரான்தன்னை, ஆணையென் தோழீ. உலகு தோறலர் தூற்றி,ஆம் கோணைகள் செய்து குதிரியாய் மடலூர்துமே. 5.3.9 3264 யாமட லூர்ந்தும் எம்மாழியங்கைப் பிரானுடை, தூமடல் தண்ணம் துழாய்மலர் கொண்டு சூடுவோம், யாமட மின்றித் தெருவு தோறயல் தையலார், நாமடங் கப்பழி தூற்றி நாடும் இரைக்கவே. 5.3.10 3265 இரைக்கும் கருங்கடல் வண்ணன் கண்ணபிரான்தன்னை, விரைக்கொள் பொழில்குரு கூர்ச்சட கோபன் சொன்ன, நிரைக்கொளந் தாதி யோரா யிரத்து ளிப்பத்தும், உரைக்கவல் லார்க்கு வைகுந்த மாகும்தம் மூரெல்லாம். (2) 5.3.11 3266 ஊரெல்லாம் துஞ்சி யுலகெல்லாம் நள்ளிருளாய், நீரெல்லாம் தேறியோர் நீளிரவாய் நீண்டதால், பாரெல்லா முண்டநம் பாம்பணையான் வாரானால், ஆரெல்லே. வல்வினையேன் ஆவிகாப் பாரினையே? (2) 5.4.1 3267 ஆவிகாப் பாரினியார்? ஆழ்கடல்மண் விண்மூடி, மாவிகார மாயோர் வல்லிரவாய் நீண்டதால், காவிசேர் வண்ணனென் கண்ணனும் வாரானால், பாவியேன் நெஞ்சமே. நீயும்பாங் கல்லையே? 5.4.2 3268 நீயும்பாங் கல்லைகாண் நெஞ்சமே. நீளிரவும், ஓயும் பொழுதின்றி யூழியாய் நீண்டதால், காயும் கடுஞ்சிலையென் காகுத்தன் வாரானால், மாயும் வகையறியேன் வல்வினையேன் பெண்பிறந்தே. 5.4.3 3269 பெண்பிறந்தார் எய்தும் பெருந்துயர்காண் கிலேனென்று, ஒண்சுடரோன் வாரா தொளித்தான்,இம் மண்ணளந்த கண்பெரிய செவ்வாயெங் காரேறு வாரானால், எண்பெரிய சிந்தைநோய் தீர்ப்பாரார் என்னையே? 5.4.4 3270 ஆரென்னை யாராய்வார்? அன்னையரும் தோழியரும், நீரென்னே? என்னாதே நீளிரவும் துஞ்சுவரால், காரன்ன மேனிநங் கண்ணனும் வாரானால், பேரென்னை மாயாதால் வல்வினையேன் பின்நின்றே. 5.4.5 3271 பின்நின்ற காதல்நோய் நெஞ்சம் பெரிதடுமால், முன்நின் றிராவூழி கண்புதைய மூடிற்றால், மன்னின்ற சக்கரத்தெம் மாயவனும் வாரானால், இந்நின்ற நீளாவி காப்பாரார் இவ்விடத்தே? 5.4.6 3272 காப்பாரார் இவ்விடத்து? கங்கிருளின் நுண்துளியாய், சேட்பால தூழியாய்ச் செல்கின்ற கங்குல்வாய், தூப்பால வெண்சங்கு சக்கரத்தன் தோன்றானால், தீப்பால வல்வினையேன் தெய்வங்காள். என்செய்கேன்? 5.4.7 3273 தெய்வங்காள். என்செய்கேன்?ஓரிரவேழ் ஊழியாய், மெய்வந்து நின்றென தாவி மெலிவிக்கும் கைவந்த சக்கரதென் கண்ணனும் வாரானால், தைவந்த தண்தென்றல் வெஞ்சுடரில் தானடுமே. 5.4.8 3274 வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண்துளியாய், அஞ்சுடர வெய்யோன் அணிநெடுந்தேர் தோன்றாதால், செஞ்சுடர்த் தாமரைக்கண் செல்வனும் வாரானால், நெஞ்சிடர்தீர்ப் பாரினியார்? நின்றுருகு கின்றேனே. 5.4.9 3275 நின்றுருகு கின்றேனே போல நெடுவானம், சென்றுருகி நுண்துளியாய்ச்செல்கின்ற கங்குல்வாய், அன்றொருகால் வையம் அளந்தபிரான் வாரானென்று, ஒன்றொருகால் சொல்லாதுலகோ உறங்குமே. 5.4.10 3276 உறங்குவான் போல்யோகு செய்த பெருமானை, சிறந்தபொழில் சூழ்குரு கூர்ச்சட கோபன்சொல், நிறங்கிளர்ந்த அந்தாதி யாயிரத்து ளிப்பத்தால், இறந்துபோய் வைகுந்தம் சேராவா றெங்ஙனேயோ? 5.4.11 3277 எங்ஙனேயோ அன்னை மீர்காள். என்னை முனிவதுநீர்?, நங்கள்கோலத் திருக் குறுங்குடி நம்பியை நான்கண்டபின், சங்கினோடும் நேமி யோடும் தாமரைக் கண்களொடும், செங்கனிவா யொன்றி னொடும் செல்கின்ற தென்நெஞ்சமே. (2) 5.5.1 3278 என்நெஞ்சி னால்நோக்கிக் காணீர் என்னை முனியாதே, தென்னன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான்கண்டபின் மின்னும் நூலும் குண்டலமும் மார்வில் திருமறுவும், மன்னும் பூணும் நான்குதோளும் வந்தெங்கும் நின்றிடுமே. 5.5.2 3279 நின்றிடும் திசைக்கும் நையுமென்று அன்னைய ரும்முனிதிர், குன்ற மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான்கண்டபின், வென்றி வில்லும் தண்டும் வாளும் சக்கரமும்சங்கமும், நின்று தோன்றிக் கண்ணுள்நீங்கா நெஞ்சுள்ளும் நீங்காவே. 5.5.3 3280 நீங்கநில்லாக் கண்ண நீர்களென்று அன்னையரும் முனிதிர், தேன்கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான்கண்டபின், பூந்தண் மாலைத் தண்டுழாயும் பொன்முடி யும்வடிவும், பாங்கு தோன்றும் பட்டும்நாணும் பாவியேன் பக்கத்தவே. 5.5.4 3281 பக்கம்நோக்கி நிற்கும் நையுமென்று அன்னைய ரும்முனிதிர், தக்ககீர்த்திக் திருக்கு றுங்குடி நம்பியை நான்கண்டபின் தொக்கசோதித் தொண்டை வாயும் நீண்ட புருவங்களும், தக்கதாமரைக் கண்ணும் பாவியேf னாவியின் மேலனவே. 5.5.5 3282 மேலும் வன்பழி நங்குடிக்கிவள் என்றன்னை காணக்கொடாள் சோலைசூழ் தண்திருக் குறுங்குடி நம்பியை நான்கண்டபின், கோலநீள் கொடிமூக்கும் தாமரைக் கண்ணும் கனிவாயும், நீலமேனியும் நான்கு தோளுமென் நெஞ்சம் நிறைந்தனவே. 5.5.6 3283 நிறைந்த வன்பழி நங்குடிக்கிவள் என்றன்னை காணக்கொடாள் சிறந்தகீர்த்தித் திருக்கு றுங்குடி நம்பியை நான்கண்டபின், நிறைந்தசோதி வெள்ளஞ் சூழ்ந்த நீண்டபொன் மேனியொடும் நிறைந்தென் னுள்ளே நின்றொழிந்தான் நேமியங் கையுளதே. 5.5.7 3284 கையுள்நன் முகம்வைக்கும் நையுமென்று அன்னைய ரும்முனிதிர், மைகொள் மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான்கண்டபின், செய்யதாமரைக் கண்ணு மல்குலும் சிற்றிடை யும்வடிவும், மொய்யநீள்குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன்னிற்குமே. 5.5.8 3285 முன்னின் றாயென்று தோழிமார்களும் அன்னைய ரும்முனிதிர், மன்னு மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான்கண்டபின், சென்னி நீண்முடி யாதியாய உலப்பி லணிகலத்தன், கன்னல் பாலமு தாகிவந்தென் நெஞ்சம் கழியானே. 5.5.9 3286 கழியமிக்கதோர் காதல ளிவளென் றன்னை காணக்கொடாள், வழுவில் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான்கண்டபின், குழுமித் தேவர் குழாங்கள்தொழச் சோதிவெள் ளத்தினுள்ளே, எழுவதோ ருருவென் னெஞ்சுள்ளெழும் ஆர்க்கு மறிவரிதே. 5.5.10 3287 அறிவரிய பிரானை யாழியங்கையனை யேயலற்றி, நறியநன் மலர்நாடி நன்குருகூர்ச்சடகோபன் சொன்ன, குறிகொளா யிரத்துள் ளிவைபத்தும் திருக்குறுங் குடியதன்மேல் அறியக் கற்றுவல்லார் வைட்டணவராழ்கடல் ஞாலத்துள்ளே. 5.5.11 3288 கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும் கடல்ஞாலம் ஆவேனும் யானே என்னும், கடல்ஞாலம் கொண்டேனும் யானே என்னும் கடல்ஞாலம் கீண்டேனும் யானே என்னும், கடல்ஞாலம் முண்டேனும் யானே என்னும் கடல்ஞாலத் தீசன்வந் தேறக் கொலோ?, கடல்ஞா லத்தீர்க் கிவையென் சொல்லுகேன் கடல்ஞா லத்தென் மகள்கற் கின்றனவே? 5.6.1 3289 கற்கும்கல் விக்கெல்லை யிலனே என்னும் கற்கும்கல்வி யாவேனும் யானே என்னும், கற்கும்கல்வி செய்வேனும் யானே என்னும் கற்கும்கல்வி தீர்ப்பேனும் யானே என்னும், கற்கும்கல்விச் சாரமும் யானே என்னும் கற்கும்கல்வி நாதன்வன் தேறக் கொலோ?, கற்கும் கல்வியீர்க் கிவையென் சொல்லுகேன் கற்கும் கல்வியென் மகள்காண் கின்றனவே? 5.6.2 3290 காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும் காண்கின்ற விசும்பெல்லாம் யானே என்னும், காண்கின்ற வெந்தீயெல்லாம் யானே என்னும் காண்கின்ற இக்காற்றெல்லாம் யானே என்னும், காண்கின்ற கடலெல்லாம் யானே என்னும் காண்கின்ற கடல்வண்ண னேறக் கொலோ? காண்கின்ற வுலகத் தீர்க்கென் சொல்லுகேன் காண்கின்ற வென்கா ரிகைசெய் கின்றனவே? 5.6.3 3291 செய்கின்ற கிதியெல்லாம் யானே என்னும் செய்வானின் றனகளும் யானே என்னும், செய்துமுன் னிறந்தனவும் யானே என்னும் செய்கைப்பய னுண்பேனும் யானே என்னும், செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும் செய்யகம லக்கண்ண னேறக் கொலோ? செய்யவுல கத்தீர்க் கிவையென் சொல்லுகேன் செய்ய கனிவா யிளமான் திறத்தே? 5.6.4 3292 திறம்பாமல் மண்காக்கின்றேன் யானே என்னும் திறம்பாமல் மலையெடுத் தேனே என்னும், திறம்பாமல் அசுரரைக்கொன் றேனே என்னும் திறங்காட்டி யன்றைவரைக் காத்தேனே என்னும், திறம்பாமல் கடல்கடைந் தேனே என்னும் திறம்பாத கடல்வண்ண னேறக் கொலோ? திறம்பாத வுலகத் தீர்க்கென் சொல்லுகேன் திறம்பா தென்திரு மகளெய் தினவே? 5.6.5 3293 இனவேய்மலை யேந்தினேன் யானே என்னும் இனவேறுகள் செற்றேனும் யானே என்னும், இனவான்கன்று மேய்த்தேனும் யானே என்னும் இனவாநிரை காத்தேனும் யானே என்னும், இனவாயர் தலைவனும் யானே என்னும் இனத்தேவர் தலைவன்வந் தேறக் கொலோ?, இனவேற்கண் நல்லீர்க் கிவையென் சொல்லுகேன் இனவேற் கண்ணி யென்மக ளுற்றனவே? 5.6.6 3294 உற்றார்க ளெனக்கில்லை யாரும் என்னும் உற்றார்க ளெனக்கிங்கெல் லாரும் என்னும், உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும் உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும், உற்றார்களுக் குற்றேனும் யானே என்னும் உற்றாரிலி மாயன் வந்தேறக் கொலோ?, உற்றீர்கட் கென்சொல்லிச் சொல்லு கேன்யான் உற்றென் னுடைப்பே தையுரைக் கின்றனவே? 5.6.7 3295 உரைக்கின்ற முக்கட்பிரான் யானே என்னும் உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும், உரைக்கின்ற அமரரும் யானே என்னும் உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும், உரைக்கின்ற முனிவரும் யானே என்னும் உரைக்கின்ற முகில்வண்ண னேறக் கொலோ?, உரைக்கின்ற உலகத் தீர்க்கென் சொல்லுகேன் உரைக்கின்ற வென்கோ மளவொண் கொடிக்கே? 5.6.8 3296 கொடிய வினையாது மிலனே என்னும் கொடியவினை யாவேனும் யானே என்னும், கொடியவினை செய்வேனும் யானே என்னும் கொடியவினை தீர்ப்பேனும் யானே என்னும், கொடியா னிலங்கைசெற் றேனே என்னும் கொடியபுள் ளுடையவ னேறக் கொலோ?, கொடிய வுலகத்தீர்க் கிவையென் சொல்லுகேன் கொடியேன் கொடியென் மகள்கோ லங்களே? 5.6.9 3297 கோலங்கொள் சுவர்க்கமும் யானே என்னும் கோலமில் நரகமும் யானே என்னும், கோலம்திகழ் மோக்கமும் யானே என்னும் கோலங்கொ ளுயிர்களும் யானே என்னும், கோலங்கொள் தனிமுதல் யானே என்னும் கோலங்கொள் முகில்வண்ண னேறக் கொலோ? கோலங்கொ ளுலகத் தீர்க்கென் சொல்லுகேன் கோலந் திகழ்கோ தையென்கூந் தலுக்கே. 5.6.10 3298 கூந்தல்மலர் மங்கைக்கும் மண்மடந் தைக்கும் குலவாயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை வாய்ந்த வழுதி நாடன் மன்னு குருகூர்ச் சடகோபன் குற்றே வல்செய்து, ஆய்ந்த தமிழ்மாலை ஆயி ரத்துள் இவையுமோர் பத்தும்வல் லார்,உலகில் ஏந்து பெருஞ்செல்வந் தாராய்த் திருமால் அடியார் களைப்பூ சிக்கநோற் றார்களே. 5.6.11 3299 நோற்ற நோன்பிலேன் நுண்ணறி விலேனாகிலும் இனி யுன்னைவிட்டு,ஒன்றும் ஆற்ற கின்றிலேன் அரவினணை யம்மானே, சேற்றுத் தாமரை செந்நெ லூடுமலர் சிரீவர மங்கலநகர், வீற்றிருந்த எந்தாய். உனக்கு மிகையல்லே னங்கே. 5.7.1 3300 அங்குற்றே னல்லே னிங்குற்றே னல்லேன் உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து,நான் எங்குற் றேனுமல் லேனிலங்கைசெற்ற அம்மானே, திங்கள் சேர்மணி மாடம் நீடு சிரீவர மங்கல நகருறை, சங்கு சக்கரத் தாய்.தமி யேனுக் கருளாயே. 5.7.2 3301 கருள புட்கொடி சக்க ரப்படை வான நாட.எங் கார்முகில் வண்ணா, பொருளல் லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய், தெருள்கொள் நான்மறை வல்லவர் பலர்வாழ் சிரீவர மங்கலநகர்க்கு, அருள்செய்தங்கிருந் தாயறி யேனொரு கைம்மாறே. 5.7.3 3302 மாறு சேர்படை நூற்றுவர் மங்க வோரைவர்க்கு ஆயன்று மாயப்போர் பண்ணி, நீறு செய்த எந்தாய். நிலங்கீண்ட அம்மானே, தேறு ஞானத்தர் வேத வேள்வியறாச் சிரீவர மங்கலநகர், ஏறிவீற் றிருந்தாய். உன்னை எங்கெய்தக் கூவுவனே? 5.7.4 3302 எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு? எவ்வதெய் வத்து ளாயுமாய் நின்று, கைத வங்கள்செய் யும்கரு மேனியம் மானே, செய்த வேள்வியர் வையத் தேவரறாச் சிரீவர மங்கலநகர், கைத்தொழ இருந்தாய் அதுநானும் கண்டேனே. 5.7.5 3304 ஏன மாய்நிலங் கீண்டவென் அப்பனே. கண்ணா. என்று மென்னை யாளுடை, வானநா யகனே. மணிமா ணிக்கச் சுடரே, தேன மாம்பொழில் தண்சிரீ வரமங்கலத் தவர்க்கை தொழவுறை வான மாமலை யே.அடி யேன்தொழ வந்தருளே. 5.7.6 3305 வந்தருளி யென்னெஞ் சிடங்கொண்ட வானவர் கொழுந்தே, உலகுக்கோர் முந்தைத் தாய்தந்தை யே.முழு ஏழுலகு முண்டாய், செந்தொ ழிலவர் வேத வேள்வியறாச் சிரீவர மங்கலநகர், அந்தமில் புகழாய். அடியேனை அகற்றேலே. 5.7.7 3306 அகற்ற நீவைத்த மாயவல் லைம்புலங்களாம் அவை நன்கறிந்தனன், அகற்றி என்னையும் நீஅருஞ் சேற்றில் வீழ்த்தி கண்டாய், பகற்கதிர் மணிமாடம் நீடு சிரீவர மங்கை வாணனே, என்றும் புகற்கரிய எந்தாய்.புள்ளின்வாய் பிளந்தானே. 5.7.8 3307 புள்ளின்வாய் பிளந்தாய். மருதிடை போயினாய். எருதேழ் அடர்த்த,என் கள்ள மாயவனே.கருமாணிக்கச் சுடரே, தெள்ளியார் திருநான் மறைகள் வல்லார் மலிதண் சிரீவர மங்கை, உள்ளிருந்த எந்தாய். அருளாய் உய்யுமா றெனக்கே. 5.7.9 3308 ஆறெ னக்குநின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய், உனக் கோர் கைம் மாறு நானொன் றிலேனென தாவியு முனதே, சேரு கொள்கரும் பும்பெருஞ் செந்நெல்லும் மலிதண் சிரீவர மங்கை நாறு பூந்தண் துழாய்முடி யாய்.தெய்வ நாயகனே. 5.7.10 3309 தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணைமிசை, கொய்கொள் பூம்பொழில் சூழ்குரு கூர்ச்சட கோபன் செய்த ஆயிரத் துள்ளிவை தண்சிரீ வரமங்கை மேய பத்துடன், வைகல் பாட வல்லார் வானோர்க் காரா அமுதே. 5.7.11 3310 ஆரா அமுதே. அடியேன் உடலம் நின்பால் அன்பாயே, நீராய் அலைந்து கரைய வுருக்குகின்ற நெடுமாலே, சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்க் திருகுடந்தை, ஏரார் கோலம் திகழக் கிடந்தாய். கண்டேன் எம்மானே. 5.8.1 3311 எம்மா னே.என் வெள்ளை மூர்த்தி. என்னை ஆள்வானே, எம்மா வுருவும் வேண்டு மாற்றால் ஆவாய் எழிலேறே, செம்மா கமலம் செழுநீர் மிசைக்கண்மலரும் திருக்குடந்தை, அம்மா மலர்க்கண் வளர்கின் றானே.என்நான் செய்கேனே. 5.8.2 3312 என்நான் செய்கேன். யாரே களைகண்? என்னையென் செய்கின்றாய்? உன்னால் அல்லால் யாவ ராலும் ஒன்றும் குறைவேண்டேன், கன்னார் மதிள்சூழ் குடந்தைக் கிடந்தாய். அடியேன் அருவாழ்ணாள், சென்னா ளெந்நாள். அந்நா ளுன்தாள் பிடித்தே செலக்காணே. 5.8.3 3313 செலக்காண் கிற்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய், உலப்பி லானே. எல்லா வுலகும் உடைய ஒருமூர்த்தி, நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய். உன்னைக் காண்பான்நான் அலப்பாய்,ஆகா சத்தை நோக்கி அழுவன் தொழுவனே. 5.8.4 3314 அழுவன் தொழுவன் ஆடிக் காண்பன் பாடி அலற்றுவன், தழுவல் வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன், செழுவொண் பழனக் குடந்தைக் கிடந்தாய். செந்தா மரைக்கண்ணா, தொழுவன் னேனை யுன்தாள் சேரும் வகையே சூழ்கண்டாய். 5.8.5 3315 சூழ்கண் டாயென் தொல்லை வினையை அறுத்துன் அடிசேரும் ஊழ்கண் டிருந்தே, தூராக் குழிதூர்த்து எனைநாள் அகன்றிருப்பன்?, வாழ்தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய். வானோர் கோமானே, யாழி னிசையே. அமுதே. அறிவின் பயனே. அரியேறே. 5.8.6 3316 அரியே றே.என் அம்பொற் சுடரே. செங்கட் கருமுகிலே, எரியே. பவளக் குன்றே. நாற்றோள் எந்தாய். உனதருளே, பிரியா அடிமை யென்னைக் கொண்டாய் குடந்தைத் திருமாலே, தரியே னினியுன் சரணந் தந்தென் சன்மம் களையாயே. 5.8.7 3317 களைவாய் துன்பம் களையா தொழிவாய் களைகண் மற்றிலேன், வளைவாய் நேமிப் படையாய். குடந்தைக் கிடந்த மாமாயா, தளரா வுடலம் என்ன தாவி சரிந்து போம்போது, இளையா துனதாள் ஒருங்கப் பிடித்து போத இசைநீயே. 5.8.8 3318 இசைவித் தென்னை யுன்தாள் இணைகீழ் இருத்தும் அம்மானே, அசைவில் அமரர் தலைவர் தலைவா ஆதி பெருமூர்த்தி, திசைவில் வீசும் செழுமா மணிகள் சேரும் திருக்குடந்தை, அசைவில் உலகம் பரவக் கிடந்தாய். காண வாராயே. 5.8.9 3319 வாரா வருவாய் வருமென் மாயா. மாயா மூர்த்தியாய், ஆரா அமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய், தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய். திருக்குடந்தை ஊராய்.உனக்காட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ? 5.8.10 3320 உழலை யென்பின் பேய்ச்சி முலையூடு அவளை யுயிருண்டான், கழல்கள் அவையே சரணாக் கொண்ட குருகூர்ச் சடகோபன், குழலில் மலியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும் மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே. 5.8.11 3321 மானேய் நோக்குநல்லீர். வைகலும்வினை யேன்மெலிய, வானார் வண்கமுகும் மதுமல்லிகை யுங்கமழும், தேனார் சோலைகள்சூழ் திருவல்ல வாழுறையும் கோனா ரை,அடியேண் அடிகூடுவ தென்றுகொலோ? 5.9.1 3322 என்றுகொல் தோழிமீர்காளெம்மைநீர்நலிந் தென்செய்தீரோ? பொன்திகழ் புன்னைமகிழ் புதுமாதவி மீதணவி, தென்றல் மணங்கமழும் திருவல்ல வாழ்நகருள் நின்றபி ரான்,அடிநீ றடியோங்கொண்டு சூடுவதே? 5.9.2 3323 சூடும் மலர்க்குழலீர். துயராட்டியே னைமெலிய, பாடுநல் வேதவொலி பரவைத்திரை போல்முழங்க, மாடுயர்ந் தோமப்புகை கமழும்தண் திருவல்லவாழ் நீடுறை கின்றபிரான் கழல்கண்டுங்கொல் நிச்சலுமே? 5.9.3 3324 நிச்சலும் தோழிமீர்காள். எம்மைநீர்நலிந் தென்செய்தீரோ? பச்சிலை நீள்கமுகும் பலவும்தெங்கும் வாழைகளும், மச்சணி மாடங்கள்மீ தணவும்தண் திருவல்லவாழ் நச்சர வினணைமேல் நம்பிரானது நன்னலமே. 5.9.4 3325 நன்னலத் தோழிமீர்காள். நல்லவந்தணர் வேள்விப்புகை, மைந்நலங் கொண்டுயர்விண் மறைக்கும்தண் திருவல்லவாழ், கன்னலங் கட்டிதன்னைக் கனியையின் னமுதந்தன்னை, என்னலங் கொள்சுடரை என்றுகொல்கண்கள் காண்பதுவே? 5.9.5 3326 காண்பதெஞ் ஞான்றுகொலொ வினையேன்கனி வாய்மடவீர், பாண்குரல் வண்டினோடு பசுந்தென்றலு மாகியெங்கும், சேண்சினை யோங்குமரச் செழுங்கானல் திருவல்லவாழ், மாண்குறள் கோலப்பிரான் மலர்த்தாமரைப் பாதங்களே? 5.9.6 3327 பாதங்கள் மேலணிபூத் தொழக்கூடுங்கொல் பாவைநல்லீர், ஓதநெ டுந்தடத்துள் உயர்தாமரை செங்கழுநீர், மாதர்கள் வாண்முகமும் கண்ணுமேந்தும் திருவல்லவாழ், நாதனிஞ் ஞாலமுண்ட நம்பிரான்தன்னை நாடோ றுமே? 5.9.7 3328 நாடொறும் வீடின்றியே தொழக்கூடுங்கொல் நன்னுதலீர், ஆடுறு தீங்கரும்பும் விளைசெந்நெலு மாகியெங்கும், மாடுறு பூந்தடஞ்சேர் வயல்சூழ்தண் திருவல்லவாழ், நீடுறை கின்றபிரான் நிலந்தாவிய நீள்கழலே? 5.9.8 3329 கழல்வளை பூரிப்பயாம் கண்டுகைதொழக் கூடுங்கொலோ, குழலென்ன யாழுமென்னக் குளிர்சோலையுள் தேனருந்தி, மழலை வரிவண்டுகள் இசைபாடும் திருவல்லவாழ், சுழலின் மலிசக்கரப் பெருமானது தொல்லருளே? 5.9.9 3330 தொல்லருள் நல்வினையால் சொல்லக்கூடுங்கொல் தோழிமீர்காள், தொல்லருள் மண்ணும்விண்ணும் தொழநின்ற திருநகரம், நல்லரு ளாயிரவர் நலனேந்தும் திருவல்லவாழ், நல்லருள் நம்பெருமான் நாராயணன் நாமங்களே? 5.9.10 3331 நாமங்க ளாயிர முடையநம்பெரு மானடிமேல், சேமங்கொள் தென்குருகூர்ச்சடகோபன் தெரிந்துரைத்த, நாமங்க ளாயிரத்துள் இவைபத்தும் திருவல்லவாழ், சேமங்கொள் தென்னகர்மேல் செப்புவார்சிறந் தார்பிறந்தே. 5.9.11 3332 பிறந்த வாறும் வளர்ந்த வாறும் பெரிய பாரதம் கைசெய்து, ஐவர்க்குத் திறங்கள் சாட்டி யிட்டுச் செய்து போன மாயங்களும், நிறந்த னூடுபுக் கெனதாவியை நின்றுநின்று உருக்கி யுண்கின்ற,இச் சிறந்த வான்சுட ரே.உன்னை யென்றுகொல் சேர்வதுவே. 5.10.1 3333 வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும் மாய மாவினை வாய்பி ளந்ததும் மதுவைவார் குழலார் குரவை பிணைந்த குழகும், அதுவிது உதுவென்ன லாவன வல்ல என்னையுன் செய்கை நைவிக்கும், முதுவைய முதல்வா.உன்னை யென்று தலைப் பெய்வனே? 5.10.2 3334 பெய்யும் பூங்குழல் பேய்முலை யுண்ட பிள்ளைத் தேற்றமும், பேர்ந்தோர் சாடிறச் செய்ய பாதமொன் றால்செய்த நின்சிறுச் சேவகமும், நெய்யுண் வார்த்தையுள், அன்னை கோல்கொள்ள நீயுன் தாமரைக் கண்கள் நீர்மல்க, பையவே நிலையும் வந்தென் னெஞ்சை யுருக்குங்களே. 5.10.3 3335 கள்ள வேடத்தைக் கொண்டுபோய்ப் புறம்புக்க வாறும், கலந்தசுரரை உள்ளம் பேதம்செய் திட்டுயி ருண்ட உபாயங்களும், வெள்ள நீர்ச்சடை யானும் நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும், உள்ளமுள் குடைந்தென் உயிரை யுருக்கி யுண்ணுமே. 5.10.4 3336 உண்ண வானவர் கோனுக் காயர் ஒருப்ப டுத்த அடிசி லுண்டதும், வண்ணமால் வரையை யெடுத்து மழைகாத்ததும், மண்ணை முன்படைத் துண்டு மிழ்ந்துக டந்தி டந்து மணந்த மாயங்கள், எண்ணுந் தோறுமென் னெஞ்செரி வாய் மெழு கொக்குநின்றே. 5.10.5 3337 நின்ற வாறு மிருந்த வாறும் கிடந்த வாறும் நினைப்பரியன ஒன்றலா வுருவாய் அருவாயநின் மாயங்கள், நின்று நின்று நினைக்கின் றேனுன்னை எங்ங னம்நினை கிற்பன், பாவியேற்கு ஒன்றுநன் குரையாய் உலக முண்ட ஒண்சுடரே. 5.10.6 3338 ஒண்சுடரோ டிருளுமாய் நின்ற வாறும் உண்மையோ டின்மையாய் வந்து,என் கண்கொ ளாவகை நீகரந் தென்னைச் செய்கின்றன, எண்கொள் சிந்தையுள் நைகின்றேனென் கரிய மாணிக்க மே.என் கண்கட்குத் திண்கொள்ள வொருநாள் அருளாயுன் திருவுருவே. 5.10.7 3339 திருவுருவு கிடந்த வாறும் கொப்பூழ்ச் செந்தா மரைமேல், திசைமுகன் கருவுள்வீற் றிருந்து படைத்திட்ட கருமங்களும், பொருவி லுந்தனி நாயகமவை கேட்குந் தோறுமென் னெஞ்சம் நின்று நெக்கு, அருவி சோரும் கண்ணீ ரென்செய்கேன் அடியேனே. 5.10.8 3340 அடியை மூன்றை யிரந்த வாறும் அங்கேநின்றாம் கடலும் மண்ணும் விண்ணும் முடிய, ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியமும், நொடியு மாறவை கேட்குந் தோறுமென் நெஞ்சம் நின்தனக் கேக ரைந்துகும், கொடியவல் வினையேன் உன்னை யென்றுகொல் கூடுவதே? 5.10.9 3341 கூடி நீரை கடைந்த வாறும் அமுதம் தேவர் உண்ண, அசுரரை வீடும் வண்ணங்க ளேசெய்து போன வித்தகமும், ஊடு புக்கென தாவியை யுருக்கி யுண்டிடு கின்ற, நின்தன்னை நாடும் வண்ணம் சொல்லாய் நச்சுநா கணையானே. 5.10.10 3342 நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் நமக் கென்று, நாடொறும் ஏக சிந்தைய னாய்க்குரு கூர்ச்சட கோபன் மாறன், ஆக நூற்ற அந் தாதி யாயிரத்துள் இவையுமோர் பத்தும் வல்லார், மாக வைகுந்தத்து மகிழ்வெய்துவர் வைகலுமே. 5.10.11 திருவாய் மொழி ஆறாம் பத்து 3343 வைகல்பூங் கழிவாய் வந்து மேயும் குருகினங்காள், செய்கொள் செந்நெ லுயர்திருவண்வண் டூருறையும், கைகொள் சக்கரத் தென்கனி வாய்பெரு மானைக்கண்டு, கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே. 6.1.1 3344 காதல் மென்பெடை யோடுடன் மேயும் கருநாராய், வேத வேள்வி யொலிமுழங்கும் தண் டிருவண்வண்டூர், நாதன் ஞாலமெல் லாமுண்ட நம்பெரு மானைக்கண்டு, பாதம் கைதொழுது பணியீ ரடியேன் திறமே. 6.1.2 3345 திறங்க ளாகியெங் கும்செய்களூடுழல் புள்ளினங்காள், சிறந்த செல்வம் மல்கு திருவண்வண் டூருறையும், கறங்கு சக்கரக் கைக்கனி வாய்ப்பெரு மானைக்கண்டு, இறங்கி நீர்தொழுது பணியீரடியே னிடரே. 6.1.3 3346 இடரில் போகம் மூழ்கி யிணைந்தாடும் மடவன்னங்காள், விடலில் வேத வொலிமுழங்கும்தண் திருவண்வண்டூர், கடலில் மேனிப் பிரான்கண் ணணைநெடு மாலைக்கண்டு, உடலம் நைந்தொருத் தியுரு கும் என் றுணர்த்துமினே. 6.1.4 3347 உணர்த்த லூட லுணர்ந்துடன் மேயும் மடவன்னங்காள், திணர்த்த வண்டல்கள் மேல்சங்கு சேரும் திருவண்வண்டூர், புணர்த்த பூந்தண் டுழாய்முடி நம்பெரு மானைக்கண்டு, புணர்த்த கையினரா யடியேனுக்கும் போற்றுமினே. 6.1.5 3348 போற்றியான் இரந் தேன்புன்னை மேலுறை பூங்குயில்காள், சேற்றில் வாளை துள்ளும் திருவண்வண் டூருறையும், ஆற்ற லாழியங் கையம ரர்பெரு மானைக்கண்டு, மாற்றங் கொண்டரு ளீர்மையல் தீர்வ தொருவண்ணமே. 6.1.6 3349 ஒருவண் ணம்சென்று புக்கெனக்கு ஒன்றுரை யொண்கிளியே, செருவொண் பூம்பொழில் சூழ்செக்கர் வேலை திருவண்வண்டூர், கருவண்ணம் செய்யவாய் செய்யகண் செய்யகை செய்யகால், செருவொண் சக்கரம் சங்கடை யாளம் திருந்தக் கண்டே. 6.1.7 3350 திருந்தக் கண்டெனக் கொன்றுரை யாயொண் சிறுபூவாய். செருந்தி ஞாழல் மகிழ்புன்னை சூழ்தண் டிருவண்வண்டூர், பெருந்தண் தாமரைக் கண்பெரு நீண்முடி நாள்தடந்தோள், கருந்திண் மாமுகில் போல்திரு மேனி யடிகளையே. 6.1.8 3351 அடிகள் கைதொழு தலர்மேல் அசையும் அன்னங்காள், விடிவை சங்கொலிக் கும்திரு வண்வண் டூருறையும், கடிய மாயன்தன் னைக்கண்ணனை நெடு மாலைக்கண்டு, கொடிய வல்வினை யேன்திறம் கூறுமின் வேறுகொண்டே. 6.1.9 3352 வேறு கொண்டும்மை யானிரந் தேன்வெறி வண்டினங்காள், தேறு நீர்ப்பம் பைவட பாலைத் திருவண்வண்டூர், மாறில் போரரக் கன்மதிள் நீறெழச் செற்றுகந்த, ஏறுசேவக னார்க்கென்னை யுமுளள் என்மின்களே. 6.1.10 3353 மின்கொள் சேர்புரி நூல்குற ளாயகல் ஞாலம்கொண்ட, வன்கள் வனடி மேல்குரு கூர்ச்சட கோபன்சொன்ன, பண்கொள் ஆயிரத் துள்ளிவை பத்தும் திருவண்வண்டூர்க்கு, இன்கொள் பாடல் வல்லார் மதனர்மின் னிடையவர்க்கே. 6.1.11 3354 மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்புநா னதஞ்சுவன், மன்னுடை இலங்கை யரண்காய்ந்த மாயவனே, உன்னுடைய சுண்டாயம் நானறிவன் னினியது கொண்டு செய்வதென், என்னுடைய பந்தும் சுழலும் தந்து போகு நம்பீ. 6.2.1 3355 போகுநம் பீ.உன்தாமரை புரைகண் ணிணையும் செவ்வாய் முறுவலும், ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோ மேயாம்?, தோகைமா மயிலார்கள் நின்னருள் சூடுவார் செவியோசை வைத்தெழ, ஆகள் போகவிட்டுப் குழலூது போயிருந்தே. 6.2.2 3356 போயி ருந்தும்நின் புள்ளுவம் அறியாத வர்க்குரை நம்பி, நின்செய்ய வாயிருங் கனியுங் கண்களும் விபரீத மிந்நாள், வேயி ருந்தடந் தோளினா ரித்திரு வருள்பெறு வார்யவர் கொல் மாயிருங் கடலைக் கடைந்த பெருமானாலே? 6.2.3 3357 ஆலி னீளிலை யேழுலக முண்டன்று நீகிடந் தாய்,உன் மாயங்கள் மேலை வானவரு மறியா ரினியெம் பரமே? வேலி னேர்த்தடங் கண்ணினார் விளையாடு சூழலைச் சூழவே நின்று காலி மேய்க்கவல் லாய்.எம்மைநீ கழறேலே. 6.2.4 3358 கழறேல் நம்பீ.உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கறியும், திண்சக்கர நீழறு தொல்படை யாய்.உனக் கொன்றுணர்த் துவன் நான், மழறு தேன்மொழி யார்கள் நின்னருள் சூடுவார் மனம் வாடி நிற்க,எம் குழறு பூவையோடும் கிளியோடும் குழகேலே. 6.2.5 3359 குழகி யெங்கள் குழமணன் கொண்டு கோயின்மை செய்து கன்மமொன் றில்லை, பழகி யாமிருப் போம்பர மேயித் திருவருள்கள்?, அழகி யாரிவ் வுலகுமூன் றுக்கும் தேவிதமை தகுவார் பலருளர், கழக மேறேல் நம்பீ.உனக்கும் இளைதே கன்மமே. 6.2.6 3360 கன்மமன் றெங்கள் கையில் பாவை பறிப்பது கடல்ஞா முண்டிட்ட, நின்மலா. நெடியாய். உனக்கேலும் பிழைபிழையே, வன்மமே சொல்லி யெம்மைநீ விளையாடுதி அதுகேட்கில் என்னைமார், தன்ம பாவமென் னாரொரு நான்று தடிபிணக்கே. 6.2.7 3361 பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதி யாதது,ஓர் கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர்ஞான மூர்த்தியினாய், இணக்கி யெம்மையெந் தோழிமார் விளையாடப் போதுமின் என போந்தோமை, உணக்கி நீவளைத் தாலென்சொல் லாருக வாதவரே? 6.2.8 3362 உகவையால் நெஞ்சம் உள்ளுருகி உன்தாமரைத் தடங்கண் விழிகளின், அகவலைப் படுப்பான் அழித்தாயுன் திருவடியால், தகவு செய்திலை எங்கள் சிற்றிலும் யாமடு சிறுசோறுங் கண்டு,நின் முகவொளி திகழ முறுவல் செய்து நின்றிலையே. 6.2.9 3363 நின்றிலங்கு முடியினாய். இருபத் தோர் கால் அரசு களை கட்ட, வென்றி நீண்மழுவா. வியன்ஞாலம் முன்படைத்தாய், இன்றிவ் வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கருமா ணிக்கச்சுடர், நின்றன்னால் நலிவே படுவோ மென்றும் ஆய்ச்சி யோமே. 6.2.10 3364 ஆய்ச்சி யாகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள், சீற்ற முண்டழு கூத்த அப்பன் தன்னைக் குருகூர்ச் சடகோபன், ஏத்திய தமிழ்மாலை யாயிரத்துள் இவையு மோர்பத் திசையோடும், நாத்தன்னால் நவில வுரைப்பார்க் கில்லை நல்குரவே. 6.2.11 3365 நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய், வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய், பல்வகையும் பரந்தபெரு மானென்னை யாள்வானை, செல்வம்மல்கு குடித்திரு விண்ணகர்க் கண்டேனே. 6.3.1 3366 கண்டவின்பம் துன்பம் கலக்கங்களும் தேற்ற முமாய், தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய், கண்டுகோ டற்கரிய பெருமானென்னை யாள்வானூர், தெண்டிரைப் புனல்சூழ் திருவிண்ணகர் நன்னகரே. 6.3.2 3367 நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமுமாய், நிகரில்சூழ் சுடராயிரு ளாய்நில னாய்விசும்பாய், சிகரமா டங்கள்சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான், புகர்கொள் கீர்த்தியல்லாலில்லை யாவர்க்கும் புண்ணியமே. 6.3.3 3368 புண்ணியம் பாவம் புணர்ச்சிபிரி வென்றிவையாய் எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மயாயல்லனாய், திண்ணமா டங்கள்சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான், கண்ணனின் னருளேகண்டு கொண்மின்கள் கைதவமே. 6.3.4 3369 கைதவம் செம்மை கருமை வெளுமையுமாய், மெய்பொய் யிளமை முதுமைபுதுமை பழமையுமாய், செய்யதிண் மதிள்சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான், பெய்தகாவு கண்டீர் பெருந்தேவுடை மூவுலகே. 6.3.5 3370 மூவுலகங் களுமாய் அல்லனாயுகப் பாய்முனிவாய், பூவில்வாழ் மகளாய்த் தவ்வையாய்ப்பு ழாய்பழியாய், தேவர்மே வித்தெழும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான், பாவியேன் மனத்தே யுறைகின்ற பரஞ்சுடரே. 6.3.6 3371 பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குபதித்த வுடம்பாய், கரந்தும்தோன் றியும்நின்றும் கைதவங்கள் செய்யும்,விண்ணோர் சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான், வரங்கொள்பாத மல்லாலில்லை யாவர்க்கும் வன்சரணே. 6.3.7 3372 வன்சரண் சுரர்க்காய் அசுரர்க்குவெங் கூற்றமுமாய், தன்சரண் நிழற்கீ ழுலகம்வைத்தும் வையாதும், தென்சரண் திசைக்குத் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான், என்சரணென் கண்ணன் என்னையாளுடை என்னப்பனே. 6.3.8 3373 என்னப்பன் எனக்காயிகுளாய் என்னைப் பெற்றவளாய், பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பனென் அப்பனுமாய், மின்னப்பொன் மதிள்சூழ்திரு விண்ணகர்ச் சேர்ந்தவப்பன், தன்னொப்பா ரில்லப்பன் தந்தனன்தன தாள்நிழலே. 6.3.9 3374 நிழல்வெயில் சிறுமைபெருமை குறுமை நெடுமையுமாய், சுழல்வனநிற் பனமற்று மாயவை அல்லனுமாய், மழலைவாழ் வண்டுவாழ் திருவிண்ணகர் மன்னுபிரான், கழல்களன்றி மற்றோர் களைகணிலம் காண்மின்களே. 6.3.10 3375 காண்மின்க ளுலகீர். என்று கண்முகப் பேநிமிர்ந்த, தாளிணையன் தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன, ஆணையா யிரத்துத்திரு விண்ணகர்ப்பத் தும்வல்லார், கோணையின்றி விண்ணோர்க் கொன்றுமாவர் குரவர்களே. 6.3.11 &நறஸபஇ 3376 குரவை யாய்ச்சிய ரோடு கோத்ததும் குன்றமொன் றேந்தியதும் உரவுநீர்ப் பொய்கை நாகம் காய்ந்ததும் உட்பட மற்றும்பல, அரவில் பள்ளிப் பிரான்தன் மாய வினைகளை யேயலற்றி, இரவும் நன்பக லும்த விர்கிலம் என்ன குறைவெனக்கே? 6.4.1 3377 கேயத் தீங்குழ லூதிற்றும் நிரைமேய்த்த தும்,கெண்டை யொண்கண் வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும்பல, மாயக் கோலப் பிரான்தன் செய்கை நினைந்து மனம்குழைந்து, நேயத் தோடு கழிந்த போதெனக் கெவ்வுல கம்நிகரே? 6.4.2 3378 நிகரில் மல்லரைச் செற்ற தும்நிரை மேய்த்ததும் நீணெடுங்கைச், சிகர மாகளி றட்டதும் இவை போல்வனவும் பிறவும், புகர் கொள் சோதிப் பிரான்தன் செய்கை நினைந்து புலம்பி,என்றும் நுகர் வைகல் வைகப்பெற் றேன் எனக்கு என்இ னி நோவதுவே? 6.4.3 3379 நோவ ஆய்ச்சி யுரலோ டார்க்க இரங்கிற்றும் வஞ்சப்பெண்ணைச், சாவப் பாலுண் டதும்ஊ ர் சகடம் இறச்சா டியதும், தேவக் கோல பிரான்தன் செய்கை நினைந்து மனம்குழைந்து, மேவக் காலங்கள் கூடி னேன்எ னக்கு என்இ னி வேண்டுவதே? 6.4.4 3380 வேண்டி தேவ ரிரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள்வாய், பூண்டன் றன்னை புலம்பப் போயங்கோர் ஆய்க்குலம் புக்கதும், காண்ட லின்றி வளர்ந்து கஞ்சனைத் துஞ்சவஞ் சம்செய்ததும், ஈண்டு நான்அ லற் றப்பெற் றென்எ னக்கு என்ன இகலுளதே? 6.4.5 3381 இகல்கொள் புள்ளை பிளந்த தும்இ மில் ஏறுகள் செற்றதுவும், உயர்கொள் சோலைக் குருந்தொ சித்ததும் உட்பட மற்றும்பல, அகல்கொள் வையம் அளந்த மாயனென் அப்பன்றன் மாயங்களே, பகலிராப் பரவப் பெற்றேன் எனக்கென்ன மனப்ப ரிப்பே? 6.4.6 3382 மனப்பரி போட ழுக்கு மானிட சாதியில் தான்பிறந்து, தனக்கு வேண்டுருக் கொண்டு தான்றன சீற்றத்தினை முடிக்கும், புனத்து ழாய்முடி மாலை மார்பனென் அப்பன்தன் மாயங்களே, நினைக்கும் நெஞ்சுடை யேனெ னக்கினி யார்நிகர் நீணிலத்தே? 6.4.7 3383 நீணிலத் தொடுவான் வியப்ப நிறைபெரும் போர்கள் செய்து, வாண னாயிரம் தோள்து ணித்ததும் உட்பட மற்றும்பல, மாணி யாய்நிலம் கொண்ட மாயனென் அப்பன்றன் மாயங்களே, காணும் நெஞ்சுடை யேனெனக் கினியென கலக்க முண்டே? 6.4.8 3384 கலக்க வேழ்கட லேழ்மலை யுலகே ழும்கழி யக்கடாய், உலக்கத் தேர் கொடு சென்ற மாயமும் உட்பட மற்றும்பல, வலக்கை யாழி யிடக்கை சங்கம் இவையுடை மால்வண்ணனை, மலக்குநா வுடையேற்கு மாறுள தோவிம் மண்ணின் மிசையே? 6.4.9 3385 மண்மிசைப் பெரும்பாரம் நீங்கவோர்பாரத மாபெ ரும்போர், பண்ணி, மாயங்கள் செய்து, சேனையைப் பாழ்பட நூற்றிட்டுப்போய், விண்மி சைத்தன தாம மேபுக மேவிய சோதிதன்தாள், நண்ணி நான்வணங் கப்பெற் றென்எனக் கார்பிறர் நாயகரே? 6.4.10 3386 நாய கன்முழு வேழுல குக்குமாய் முழுவே ழுலகும்,தன் வாய கம்புக வைத்துமிழ்ந் தவையாய் அவையல் லனுமாம், கேசவன் அடியிணை மிசைக்குரு கூர்ச்சட கோபன் சொன்ன தூய வாயிரத் திப்பத்தால் பத்தராவர் துவளின்றியே. 6.4.11 3387 துவளில் மாமணி மாட மோங்கு தொலைவில் லிமங்க லம்தொழும் இவளை, நீரினி யன்னை மீர்.உமக் காசை யில்லை விடுமினோ, தவள வொண்சங்கு சக்க ரமென்றும் தாம ரைத்தடங் கணென்றும், குவளை யொண்மலர்க் கண்கள் நீர்மல்க நின்று நின்று குமுறுமே. 6.5.1 3388 குமுறு மோசை விழவொ லித்தொலை வில்லி மங்கலம் கொண்டுபுக்கு, அமுத மென்மொழி யாளை நீருமக் காசை யின்றி அகற்றினீர், திமிர்க்கொண் டாலொத்து நிற்கும் மற்றிவள் தேவ தேவபி ரானென்றே, நிமியும் வாயொடு கண்கள் நீர்மல்க நெக்கொ சிந்து கரையுமே. 6.5.2 3389 கரைகொள் பைம்பொழில் தண்ப ணைத்தொலை வில்லி மங்கலம் கொண்டுபுக்கு, உரைகொ ளின்மொழி யாளை நீருமக் காசை யின்றி அகற்றினீர், திரைகொள் பௌவத்து சேர்ந்த தும்திசை ஞாலம் தாவி யளந்ததும், நிரைகள் மேய்த்தது மேபி தற்றி நெடுங்கண் ணீர்மல்க நிற்குமே. 6.5.3 3390 நிற்கும் நான்மறை வாணர் வாழ்தொலை வில்லி மங்கலங் கண்டபின், அற்க மொன்றும் அறிவு றாள்மலிந் தாள்கண் டீரிவள் அன்னைமீர், கற்கும் கல்வியெல் லாம்க ருங்கடல் வண்ணன் கண்ணபி ரானென்றே, ஒற்க மொன்றுமி லள்உகந்துகந்து உள்மகிழ்ந்து குழையுமே. 6.5.4 3391 குழையும் வாள்முகத் தேழை யைத்தொலை வில்லி மங்கலம் கொண்டுபுக்கு, இழைகொள் சோதிச்செந் தாம ரைக்கட்f பிரானி ருந்தமை காட்டினீர், மழைபெய் தாலொக்கும் கண்ண நீரினொடு அன்று தொட்டும்மை யாந்து,இவள் நுழையும் சிந்தையள் அன்னை மீர்.தொழும் அத்தி சையுற்று நோக்கியே. 6.5.5 3392 நோக்கும் பக்கமெல் லாம்க ரும்பொடு செந்நெ லோங்குசெந் தாமரை, வாய்க்கும் தண்பொரு நல்வ டகரை வந்தொ லைவில்லி மங்கலம், நோக்கு மேல்அ த் திசையல் லால்மறு நோக்கி லள்வைகல் நாள்டொறும், வாய்க்கொள் வாசக மும்ம ணிவண்ணன் நாம மேயிவள் அன்னைமீர். 6.5.6 3393 அன்னை மீர்.அணி மாம யில்சிறு மானி வள்நம்மைக் கைவலிந்து, என்ன வார்த்தையும் கேட்கு றாள்தொலை வில்லி மங்கலம் என்றல்லால், முன்னம் நோற்ற விதிகொ லோமுகில் வண்ணன் மாயங்கொ லோ,அவன் சின்ன மும்திரு நாம முமிவள் வாய னகள்தி ருந்தவே. 6.5.7 3394 திருந்து வேதமும் வேள்வி யும்திரு மாம களிரும் தாம்,மலிந், திருந்து வாழ்பொரு நல்வ டகரை வண்தொ லைவில்லி மங்கலம், கருந்த டங்கண்ணி கைதொ ழுதஅ ந் நாள்தொ டங்கியிந் நாள்தொறும், இருந்தி ருந்து தர விந்த லோசன. என்றேன் றேநைந்தி ரங்குமே. 6.5.8 3395 இரங்கி நாள்தொறும் வாய்வெ ரீஇ யிவள் கண்ண நீர்கள் அலமர, மரங்க ளுமிரங் குவ கை மணி வண்ண வோ. என்று கூவுமால், துரங்கம் வாய்பிளந் தானு றைதொலை வில்லி மங்கல மென்று,தன் கரங்கள் கூப்பித் தொழுமவ் வூர்த்திரு நாமங் கற்றதற் பின்னையே. 6.5.9 3396 பின்னை கொல்நில மாம கள்கொல்? திரும கள்கொல்? பிறந்திட்டாள், என்ன மாயங்கொ லோ?இ வள்நெடு மாலென் றேநின்று கூவுமால், முன்னி வந்தவன் நின்றி ருந்துறை யும்தொ லைவில்லி மங்கலம் சென்னி யால்வணங் கும்அ வ் வூர்த்திரு நாமம் கேட்பது சிந்தையே. 6.5.10 3397 சிந்தை யாலும்சொல் லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே, தந்தை தாயென் றடைந்த வண்குரு கூர வர்சட கோபன்சொல், முந்தை யாயிரத் துள்ளி வைதொலை வில்லி மங்கலத் தைச்சொன்ன, செந்தமிழ்பத்தும் வல்லாரடிமை செய் வார்திரு மாலுக்கே. 6.5.11 3398 மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு, நீலக் கருநிற மேக நியாயற்கு, கோலச்செந் தாமரைக் கண்ணற்கு,என் கொங்கலர் ஏலக் குழலி யிழந்தது சங்கே. 6.6.1 3399 சங்குவில் வாள்தண்டு சக்கரக் கையற்கு, செங்கனி வாய்ச்செய்ய தாமரை கண்ணற்கு, கொங்கலர் தண்ணந் துழாய்முடி யானுக்கு,என் மங்கை யிழந்தது மாமை நிறமே. 6.6.2 3400 நிறங்கரி யானுக்கு நீடுல குண்ட, திறம்கிளர் வாய்ச்சிறு கள்ள னவற்கு, கறங்கிய சக்கரக் கையவ னுக்கு,என் பிறங்கிருங் கூந்தல் இழந்தது பீடே. 6.6.3 3401 பீடுடை நான்முக னைப்படைத் தானுக்கு, மாடுடை வையம் அளந்த மணாளற்கு, நாடுடை மன்னர்க்குத் தூதுசெல் நம்பிக்கு,என் பாடுடை அல்குல் இழந்தது பண்பே. 6.6.4 3402 பண்புடை வேதம் பயந்த பரனுக்கு, மண்புரை வையம் இடந்த வராகற்கு, தெண்புனல் பள்ளியெந் தேவப் பிரானுக்கு,என் கண்புனை கோதை இழந்தது கற்பே. 6.6.5 3403 கற்பகக் காவன நற்பல தோளற்கு, பொற்சுடர்க் குன்றன்ன பூந்தண் முடியற்கு, நற்பல தாமரை நாண்மலர்க் கையற்கு,என் விற்புரு வக்கொடி தோற்றது மெய்யே. 6.6.6 3404 மெய்யமர் பல்கலன் நன்கணிந் தானுக்கு, பையர வினணைப் பள்ளியி னானுக்கு, கையொடு கால்செய்ய கண்ண பிரானுக்கு,என் தையல் இழந்தது தன்னுடைச் சாயே. 6.6.7 3405 சாயக் குருந்தம் ஒசித்த தமியற்கு, மாயச் சகடம் உதைத்த மணாளற்கு, பேயைப் பிணம்படப் பாலுண் பிரானுக்கு,என் வாசக் குழலி இழந்தது மாண்பே. 6.6.8 3406 மாண்பமை கோலத்தெம் மாயக் குறளற்கு, சேண்சுடர்க் குன்றன்ன செஞ்சுடர் மூர்த்திக்கு, காண்பெருந் தோற்றத்தெங் காகுத்த நம்பிக்கு,என் பூண்புனை மென்முலை தோற்றது பொற்பே. 6.6.9 3407 பொற்பமை நீண்முடிப் பூந்தண் டுழாயற்கு, மற்பொரு தோளுடை மாயப் பிரானுக்கு, நிற்பன பல்லுரு வாய்நிற்கு மாயற்கு,என் கற்புடை யாட்டி யிழந்தது கட்டே. 6.6.10 3408 கட்டெழில் சோலைநல் வேங்கட வாணனை, கட்டெழில் தென்குரு கூர்ச்சட கோபன்சொல், கட்டெழில் ஆயிரத் திப்பத்தும் வல்லவர், கட்டெழில் வானவர் போகமுண் பாரே. 6.6.11 3409 உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும்வெற் றிலையுமெல்லாம் கண்ணன், எம்பெருமான் னென்றென் றேகண்கள் நீர்மல்கி, மண்ணினுள் அவன்சீர் வளம்மிக் கவனூர் வினவி, திண்ண மென்னிள மான்புகு மூர்திருக் கோளூரே. 6.7.1 3410 ஊரும் நாடும் உலகும் தன்னைப்போல், அவனுடைய பேரும் தார்களு மேபிதற்றக் கற்பு வானிடறி, சேருநல் வளஞ்சேர் பழனத் திருகோ ளூர்க்கே, போருங் கொலுரை யீர்க்கொடி யேன்கொடி பூவைகளே. 6.7.2 3411 பூவை பைங்கிளிகள் பந்து தூதைபூம் புட்டில்கள், யாவையும் திருமால் திருநாமங் களேகூவி யெழும்,என் பாவை போயினித் தண்பழனத் திருக்கோ ளூர்க்கே, கோவைவாய் துடிப்ப மழைக்கண்ணோ டென்செய் யுங்கொலோ? 6.7.3 3412 கொல்லை யென்பர்கொ லோகுணம் மிக்கனள் என்பர்கொலோ, சிலலை வாய்ப்பெண் டுகளயற் சேரியுள் ளாருமெல்லே, செல்வம் மல்கி யவன்கிடந்த திருக்கோ ளூர்க்கே, மெல்லிடை நுடங்க இளமான் செல்ல மேவினளே. 6.7.4 3413 மேவி நைந்து நைந்துவிளை யாடலுறா ளென்சிறுத் தேவிபோய், இனித்தன் திருமால் திருக்கோ ளூரில், பூவியல் பொழிலும் தடமும் அவன்கோ யிலுங்கண்டு, ஆவியுள் குளிர எங்ஙனே யுகக்குங்கொல் இன்றே? 6.7.5 3414 இன்றெனக் குதவா தகன்ற இளமான் இனிப்போய், தென்திசைத் திலத மனைய திருக்கோ ளூர்க்கே சென்று,தன் திருமால் திருக்கண்ணும் செவ்வாயும் கண்டு, நின்று நின்று நையும் நெடுங்கண்கள் பனிமல்கவே. 6.7.6 3415 மல்குநீர் கண்ணோடு மையலுற்ற மனத்தனளாய், அல்லுநன் பகலும் நெடுமாலென்றழைத் தினிப்போய், செல்வம் மல்கி அவன்கிடந்த திருக்கோ ளூர்க்கே, ஒல்கி யொல்கி நடந்தெங்ஙனே புகுங்கொ லோசிந்தே? 6.7.7 3416 ஒசிந்த நுண்ணிடை மேல்கையை வைத்து நொந்துநொந்து, கசிந்த நெஞ்சின ளாய்க்கண்ண நீர்த்துளும்பச் செல்லுங்கொல், ஒசிந்த வொண்மல ராள்கொழுநன் திருக்கோ ளூர்க்கே, கசிந்த நெஞ்சின ளாயெம்மை நீத்தஎ ம் காரிகையே? 6.7.8 3417 காரியம் நல்லன களவை காணிலென் கண்ணனுக்கென்று, ஈரியா யிருப்பாளி தெல்லாம் கிடக்க இனிப்போய், சேரி பல்பழி தூயிரைப்பத் திருக்கோ ளூர்க்கே, நேரிழை நடந்தா ளெம்மை யொன்றும் நினைத்திலளே. 6.7.9 3418 நினைக்கிலேன் தெய்வங்காள் நெடுங்கண் இளமான் இனிப்போய், அனைத்து லகுமு டைய அரவிந்த லோசனனை, தினைத்தனை யும்விடா ளவன்சேர் திருக்கோ ளூர்க்கே, மனைக்கு வான்பழியும் நினையாள் செல்ல வைத்தனளே. 6.7.10 3419 வைத்த மாநிதி யாம்மது சூதனை யேயலற்றி, கொத்த லர்பொழில் சூழ்குரு கூர்ச்சட கோபன்சொன்ன, பத்து நூறு ளிப்பத் தவன்சேர் திருக்கோளூர்க்கே, சித்தம் வைத்து ரைப்பார் திகழ்பொன் னுலகாள்வாரே. 6.7.11 3420 பொன்னுல காளீரோ? புவனிமுழு தாளீரோ?, நன்னலப் புள்ளினங்காள். வினையாட்டியேன்நானிரந்தேன், முன்னுல கங்களெல்லாம் படைத்தமுகில்வண்ணன்கண்ணன், என்னலங் கொண்டபிரான் தனக்கென் நிலைமையுரைத்தே? 6.8.1 3421 மையமர் வாள்நெடுங்கண் மங்கைமார்முன்பென் கையிருந்து, நெய்யம ரின்னடிசில் நிச்சல்பாலோடு மேவீரோ, கையமர் சக்கரத்தென் கனிவாய்ப்பெரு மானைக்கண்டு மெய்யமர் காதல்சொல்லிக் கிளிகாள்.விரைந் தோடிவந்தே? 6.8.2 3422 ஓடிவந் தென்குழல்மேல் ஒளிமாமல ரூதீரோ, கூடிய வண்டினங்காள். குருநாடுடை ஐவர்கட்காய் ஆடிய மாநெடுந்தேர்ப் படைநீறெழ செற்றபிரான், சூடிய தண்டுளவ முண்டதூமது வாய்கள்கொண்டே? 6.8.3 3423 தூமது வாய்கள்கொண்டு வந்தென்முல்லைகள் மேல்தும்பிகாள், பூமது வுண்ணச்செல்லில் வினையேனைப் பொய்செய்தகன்ற, மாமது வார்தண்டுழாய் முடிவானவர் கோனைக்கண்டு, யாமிது வோதக்கவா றென்னவேண்டும்கண் டீர்நுங்கட்கே. 6.8.4 3424 நுங்கட்கி யானுரைக்கேன் வம்மின்யான்வளர்த் தகிளிகாள், வெங்கட்புள் ளூர்ந்துவந்து வினையேனைநெஞ் சம்கவர்ந்த, செங்கட் கருமுகிலைச் செய்யவாய்ச்செழுங் கற்பகத்தை, எங்குச்சென் றாகிலும்கண் டிதுவோதக்க வாறென்மினே. 6.8.5 3425 என்மின்னு நூல்மார்வ னென்கரும்பெரு மானென்கண்ணன், தன்மன்னு நீள்கழல்மேல் தண்டுழாய்நமக் கன்றிநல்கான், கன்மின்க ளென்றும்மையான் கற்பியாவைத்த மாற்றம்சொல்லி, சென்மின்கள் தீவினையேன் வளர்த்தசிறு பூவைகளே. 6.8.6 3426 பூவைகள் போல்நிறத்தன் புண்டரீகங்கள் போலும்கண்ணன், யாவையும் யாவருமாய் நின்றமாயனென் ஆழிபிரான், மாவைவல் வாய்பிளந்த மதுசூதற்கென் மாற்றம்சொல்லி, பாவைகள். தீர்க்கிற்றிரே வினையாட்டியேன் பாசறவே. 6.8.7 3427 பாசற வெய்தியின்னே வினையேனெனை யூழிநைவேன்?, ஆசறு தூவிவெள்ளைக் குருகே.அருள் செய்யொருநாள், மாசறு நீலச்சுடர் முடிவானவர் கோனைக்கண்டு, ஏசறும் நும்மையல்லால் மறுநோக்கிலள் பேர்த்துமற்றே. 6.8.8 3428 பேர்த்துமற் றோர்களைகண் வினையாட்டியேன் நானொன்றிலேன், நீர்த்திரை மேலுலவி யிரைதேரும்பு தாவினங்காள், கார்த்திரள் மாமுகில்போல் கண்ணன்விண்ணவர் கோனைக்கண்டு, வார்த்தைகள் கொண்டருளி யுரையீர்வைகல் வந்திருந்தே. 6.8.9 3429 வந்திருந் தும்முடைய மணிச்சேவலும் நீருமெல்லாம், அந்தர மொன்றுமின்றி யலர்மேலசை யுமன்னங்காள், என்திரு மார்வற்கென்னை யின்னாவாறிவள் காண்மினென்று, மந்திரத் தொன்றுணர்த்தி யுரையீர்வைகல் மறுமாற்றங்களே. 6.8.10 3430 மாற்றங்க ளாய்ந்துகொண்டு மதுசூதபி ரானடிமேல், நாற்றங்கொள் பூம்பொழில்சூழ் குருகூர்ச்சட கோபன்சொன்ன, தோற்றங்க ளாயிரத்துள் இவையுமொரு பத்தும்வல்லார், ஊற்றின்கண் நுண்மணல்போல் உருகாநிற்பர் நீராயே. 6.8.11 3431 நீராய் நிலனாய் தீயாய்க் காலாய் நெடுவானாய், சீரார் சுடர்க்க ளிரண்டாய்ச் சிவனாய் அயனாய், கூரார் ஆழி வெண்சங் கேந்திக் கொடியேன்பால் வாராய், ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே. 6.9.1 3432 மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் வலங்காட்டி, மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானே, நண்ணி யுனைநான் கண்டு கந்து கூத்தாட, நண்ணி யொருநாள் ஞாலத் தூடே நடவாயே. 6.9.2 3433 ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும், சாலப் பலநாள் உகந்தோ றுயிர்கள் காப்பானே, கோலத் திருமா மகளோ டுன்னைக் கூடாதே, சாலப் பலநாள் அடியேன் இன்னம் தளர்வேனோ? 6.9.3 3434 தளர்ந்தும் முறிந்தும் சகட வசுரர் உடல்வேறா, பிளந்து வீயத் திருக்கா லாண்ட பெருமானே, கிளர்ந்து பிரமன் சிவனிந் திரன்விண் ணவர்சூழ, விளங்க வொருநாள் காண வாராய் விண்மீதே. 6.9.4 3435 விண்மீதிருப்பாய். மலைமேல் நிற்பாய். கடல்சேர்ப்பாய், மண்மீதுழல்வாய். இவற்றுளெங்கும் மறைந்துறைவாய், எண்மீதியன்ற புறவண்டத்தாய். எனதாவி, உண்மீதாடி உருக்காட்டாதே யொளிப்பாயோ? 6.9.5 3436 பாயோர் அடிவைத் ததன்கீழ்ப் பரவை நிலமெல்லாம் தாய்,ஓர் அடியாய் எல்லா வுலகும் தடவந்த மாயோன், உன்னைக் காண்பான் வருந்தி யெனைநாளும், தீயோடுடன்சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ? 6.9.6 3437 உலகில் திரியும் கரும கதியாய் உலகமாய், உலகுக் கேயோ ருயிரு மானாய் புறவண்டத்து, அலகில் பொலிந்த திசைபத் தாய அருவேயோ, அலகில் பொலிந்த அறிவி லேனுக் கருளாயே. 6.9.7 3438 அறிவி லேனுக் கருளாய் அறிவா ருயிரானாய், வெறிகொள் சோதி மூர்த்தி. அடியேன் நெடுமாலே, கிறிசெய் தென்னைப் புறதிட் டின்னம் கெடுப்பாயோ, பிறிதொன் றறியா அடியே னாவி திகைக்கவே? 6.9.8 3439 ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம், பாவி யேனைப் பலநீ காட்டிப் படுப்பாயோ, தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே, கூவிக் கொள்ளும் கால மின்னம் குறுகாதோ? 6.9.9 3440 குறுகா நீளா இறுதி கூடா எனையூழி, சிறுகா பெருகா அளவி லின்பம் சேர்ந்தாலும், மறுகா லின்றி மாயோ னுனக்கே யாளாகும், சிறுகா லத்தை யுறுமோ அந்தோ தெரியிலே? 6.9.10 3441 தெரிதல் நினைதல் எண்ணல் ஆகாத் திருமாலுக்கு, உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன், தெரியச் சொன்ன ஓரா யிரத்து ளிப்பத்தும் உரிய தொண்ட ராக்கும் உலகம் உண்டாற்கே. 6.9.11 3442 உலகம் உண்ட பெருவாயா. உலப்பில் கீர்த்தி யம்மானே, நிலவும் சுடர்சூ ழொளிமூர்த்தி. நெடியாய். அடியே னாருயிரே, திலதம் உலகுக் காய்நின்ற திருவேங் கடத்தெம் பெருமானே, குலதொல் லடியேன் உன்பாதம் கூடு மாறு கூறாயே. 6.10.1 3443 கூறாய் நீறாய் நிலனாகிக் கொடுவல் லசுரர் குலமெல்லாம் சீறா எறியும் திருநேமி வலவா. தெய்வக் கோமானே, சேறார் சுனைத்தா மரைசெந்தீ மலரும் திருவேங் கடத்தானே, ஆறா அன்பில் அடியேனுன் அடிசேர் வண்ணம் அருளாயே. 6.10.2 3444 வண்ண மருள்கொள் அணிமேக வண்ணா. மாய அம்மானே, எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே. இமையோர் அதிபதியே, தெண்ணல் அருவி மணிபொன்முத் தலைக்கும் திருவேங் கடத்தானே, அண்ண லே.உன் அடிசேர அடியேற் காவா வென்னாயே. 6.10.3 3445 ஆவா வென்னா துலகத்தை அலைக்கும் அசுரர் வாணாள்மேல், தீவாய் வாளி மழைபொழிந்த சிலையா. திருமா மகள்கேள்வா, தேவா சுரர்கள் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே, பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்து மாறு புணராயே. 6.10.4 3446 புணரா நின்ற மரமேழன் றெய்த வொருவில் வலவாவோ, புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ, திணரார் மேகம் எனக்களிறு சேரும் திருவேங் கடத்தானே, திணரார் சார்ங்கத் துன்பாதம் சேர்வ தடியே னெந்நாளே? 6.10.5 3447 எந்நா ளேநாம் மண்ணளந்த இணைத்தா மரைகள் காண்பதற்கெ ன்று, எந்நா ளும்நின் றிமையோர்கள் ஏத்தி யிறைஞ்சி யினமினமாய், மெய்ந்நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேங் கடத்தானே, மெய்ந்நா னெய்தி யெந்நாளுன் அடிக்கண் அடியேன் மேவுவதே? 6.10.6 3448 அடியேன் மேவி யமர்கின்ற அமுதே. இமையோர் அதிபதியே, கொடியா அடுபுள் ளுடையானே. கோலக் கனிவாய்ப் பெருமானே, செடியார் வினைகள் தீர்மருந்தே. திருவேங் கடத்தெம் பெருமானே, நொடியார் பொழுதும் உன்பாதம் காண நோலா தாற்றேனே. 6.10.7 3449 நோலா தாற்றேன் நுன்பாதம் காண வென்று நுண்ணுணர்வில், நீலார் கண்டத் தம்மானும் நிறைநான் முகனு மிந்திரனும், சேலேய் கண்ணார் பலர்சூழ விரும்பும் திருவேங் கடத்தானே, மாலாய் மயக்கி யடியேன்பால் வந்தாய் போல வாராயே. 6.10.8 3450 வந்தாய் போலே வாராதாய். வாரா தாய்போல் வருவானே, செந்தா மரைக்கண் செங்கனிவாய் நால்தோ ளமுதே. எனதுயிரே, சிந்தா மணிகள் பகரல்லைப் பகல்செய் திருவேங் கடத்தானே, அந்தோ. அடியேன் உன்பாதம் அகல கில்லேன் இறையுமே. 6.10.9 3451 அகல கில்லேன் இறையும் என் றலர்மேல் மங்கை யுறைமார்பா, நிகரில் புகழாய். உலகமூன் றுடையாய். என்னை ஆள்வானே, நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே, புகலொன் றில்லா அடியேனுன் அடிக்கீ ழமர்ந்து புகுந்தேனே. 6.10.10 3452 அடிக்கீ ழமர்ந்து புகுந்தடியீர். வாழ்மின் என்றென் றருள்கொடுக்கும் படிக்கே ழில்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன், முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திருவேங் கடத்துக் கிவைபத்தும், பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே. 6.10.11 திருவாய் மொழி ஏழாம் பத்து 3453 உண்ணி லாவிய ஐவ ரால்குமை தீற்றி யென்னையுன் பாத பங்கயம், நண்ணிலா வகையே நலிவா னின்ன மெண்ணு கின்றாய், எண்ணி லாப்பெரு மாயனே. இமையோர்கள் ஏத்து முலக மூன்றுடை, அண்ண லே.அமு தே.அப்ப னே.என்னை யாள்வானே. (2) 7.1.1 3454 என்னை யாளும் வங்கோ வோரைந் திவைபெய் திராப்பகல் மோது வித்திட்டு, உன்னை நானணு காவகை செய்து போதி கண்டாய், கன்ன லே.அமு தே.கார் முகில்வண்ண னே.கடல் ஞாலம் காக்கின்ற, மின்னு நேமியி னாய்.வினை யேனுடை வேதியனே. 7.1.2 3455 வேதியா நிற்கும் ஐவரால் வினையேனை மோது வித்து,உன் திருவடிச் சாதி யாவகை நீதடுத் தென்பெறு தியந்தோ, ஆதி யாகி யகலி டம்படைத் துண்டு மிழந்து கடந்திடந் திட்ட, சோதி நீண்முடி யாய்.தொண்ட னேன்மது சூதனனே. 7.1.3 3456 சூது நானறி யாவகை சுழற்றியோர் ஐவரைக் காட்டி,உன் அடிப் போது நானணு காவகை செய்து போதி கண்டாய், யாதும் யாவரு மின்றிநின் னகம்பால் ஒடுக்கியோ ராலி னீளிலை, மீது சேர்குழவி. வினையேன் வினைதீர் மருந்தே. 7.1.4 3457 தீர்மருந் தின்றி யைந்து நோயடும் செக்கி லிட்டுத் திரிக்கும் ஐவரை, நேர்ம ருங்குடைத் தாவடைத்து நெகிழிப்பான் ஒக்கின்றாய், ஆர்ம ருந்தினி யாகுவர்? அடலாழி யேந்தி யசுரர் வன்குலம், வேர்ம ருங்கறுத் தாய்.விண்ணு ளார்பெரு மானேயோ. 7.1.5 3458 விண்ணு ளார்பெரு மாற்க டிமைசெய் வாரை யும்செறும் ஐம்பு லனிவை, மண்ணு ளென்னைப் பெற்றா லெஞ்செய் யாமற்று நீயும்விட்டால்? பண்ணு ளாய்.கவி தன்னு ளாய். பத்தியினுள் ளாய்.பர மீசனே, வந்தென் கண்ணுளாய். நெஞ்சுளாய். சொல்லுளாய். ஒன்று சொல்லாயே. 7.1.6 3459 ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத ஒரைவர் வன்கயவரை, என்று யான்வெல் கிற்பனுன் திருவரு ளில்லையேல்?, அன்று தேவர் அசுரர் வாங்க அலைகட லரவம் அளாவி,ஓர் குன்றம் வைத்த எந்தாய்.கொடியேன் பருகின் னமுதே. 7.1.7 3460 இன்ன முதெனத் தோன்றி யோரைவர் யாவரையும் மயக்க, நீவைத்த முன்ன மாயமெல் லால்முழு வேரரிந்து, என்னையுன் சின்ன மும்திரு மூர்த்தியும் சிந்தித் தேத்திக் கைதொழ வேயரு ளெனக்கு, என்னம் மா.என் கண்ணா. இமையோர்தம் குலமுதலே. 7.1.8 3461 குலமுத லிடும்தீ வினைக்கொடு வன்குழியினில் வீழ்க்கும் ஐவரை வலமுதல் கெடுக்கும் வரமே தந்தருள் கண்டாய், நிலமுத லினீவ் வுலகுக்கும் நிற்பன செல்வன என,பொருள் பலமுதல் படைத்தாய்.என் கண்ணா.என் பரஞ்சுடரே. 7.1.9 3462 என்பரஞ் சுடரே. என்றுன்னை அலற்றியுன் இணைத்தா மரைகட்கு, அன்புருகி நிற்கும் அதுநிற்கச் சுமடு தந்தாய், வன்பரங்க ளெடுத்துஐவர் திசைதிசை வலித்தெற்று கின்றனர் முன்பரவை கடைந்தமுதங் கொண்ட மூர்த்தியோ. 7.1.10 3463 கொண்ட மூர்த்தியோர் மூவராய்க் குணங்கள் படைத்தளித் துக்கெடுக் கும்,அப் புண்ட ரீகப்கொப் பூழ்ப்புனற் பள்ளி யப்பனுக்கே, தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்லா யிரத்து ளிப்பத்தும், கண்டு பாடவல் லார்வினை போம்கங்கு லும்பகலே. (2) 7.1.11 3464 கங்குலும் பகலும் கண் துயி லறியாள் கண்ணநீர் கைகளால் இறைக்கும், சங்குசக் கரங்க ளென்றுகை கூப்பும் தாமரைக் கண் என்று தளரும், எங்ஙனே தரிக்கே னுன்னைவிட்டு என்னும் இருநிலம் கைதுழா விருக்கும், செங்கயல் பாய்நீர்த் திருவரங் கத்தாய். இவள்திறத் தெஞ்செய்கின் றாயே? (2) 7.2.1 3465 எஞ்செய்கின் றாயென் தாமரைக் கண்ணா. என்னும்கண் ணீர்மல்க இருக்கும், எஞ்செய்கே னெறிநீர்த் திருவரங் கத்தாய்? என்னும்வெவ் வுயிர்த்துயிர்த் துருகும் முன்செய்த வினையே. முகப்படாய் என்னும் முகில்வண்ணா. தகுவதோ? என்னும், முஞ்செய்திவ் வுலகம் உண்டுமிழந் தளந்தாய். எங்கொலோ முடிகின்ற திவட்கே? 7.2.2 3466 வட்கிலள் இறையும் மணிவண்ணா. என்னும் வானமே நோக்கும்மை யாக்கும், உட்குடை யசுரர் உயிரெல்லா முண்ட ஒருவனே. என்னுமுள் ளுருகும், கட்கிலீ. உன்னைக் காணுமா றருளாய் காகுத்தா. கண்ணனே. என்னும், திட்கொடி மதிள்சூழ் திருவரங்கத்தாய். இவள்திறத் தென்செய்திட் டாயே? 7.2.3 3467 இட்டகால் இட்ட கையளாய் இருக்கும் எழுந்துலாய் மயங்கும்கை கூப்பும், கட்டமே காதல். என்றுமூர்ச் சிக்கும் கடல்வண்ணா. கடியைகாண் என்னும், வட்டவாய் நேமி வலங்கையா. என்னும் வந்திடாய் என்றென்றே மயங்கும், சிட்டனே. செழுநீர்த் திருவரங் கத்தாய். இவள்திறத் தெஞ்சிந்தித் தாயே? 7.2.4 3468 சிந்திக்கும் திசைக்கும் தேறும்கை கூப்பும் திருவரங் கத்துள்ளாய். என்னும் வந்திக்கும், ஆங்கே மழைக்கண்ணீர் மல்க வந்திடாய் என்றென்றே மயங்கும், அந்திப்போ தவுணன் உடலிடந் தானே. அலைகடல் கடைந்தவா ரமுதே, சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த தையலை மையல்செய் தானே. 7.2.5 3469 மையல்செய் தென்னை மனம்கவர்ந் தானே. என்னும் மா மாயனே. என்னும், செய்யவாய் மணியே. என்னும் தண் புனல்சூழ் திருவரங் கத்துள்ளாய். என்னும், வெய்யவாள் தண்டு சங்குசக் கரம்வில் ஏந்தும்விண் ணோர்முதல். என்னும், பைகொள்பாம் பணையாய். இவள்திறத் தருளாய் பாவியேன் செய்யற்பா லதுவே. 7.2.6 3470 பாலதுன் பங்கள் இன்பங்கள் படைத்தாய். பற்றிலார் பற்றநின் றானே, காலசக் கரத்தாய். கடலிடங் கொண்ட கடல்வண்ணா. கண்ணணே. என்னும், சேல்கொள்தண் புனல்சூழ் திருவரங் கத்தாய். என்னும் என் தீர்த்தனே. என்னும், கோலமா மழைக்கண் பனிமல்க இருக்கும் என்னுடைக் கோமளக் கொழுந்தே. 7.2.7 3471 கொழுந்துவா னவர்கட்கு என்னும் குன்றேந்திக் கோநிரை காத்தவன். என்னும், அழுந்தொழும் ஆவி அனலவெவ் வுயிர்க்கும் அஞ்சன வண்ணனே. என்னும், எழுந்துமேல் நோக்கி யிமைப்பிலள் இருக்கும் எங்ஙனே நோக்குகேன்? என்னும், செழுந்தடம் புனல்சூழ் திருவரங் கத்தாய். என்செய்கேன் என்திரு மகட்கே? 7.2.8 3472 என்திரு மகள்சேர் மார்வனே. என்னும் என்னுடை யாவியே. என்னும், நின்திரு எயிற்றால் இடந்துநீ கொண்ட நிலமகள் கேள்வனே. என்னும், அன்றுரு வேழும் தழுவிநீ கொண்ட ஆய்மகள் அன்பனே. என்னும், தென்திரு வரங்கம் கோயில்கொண் டானே. தெளிகிலேன் முடிவிவள் தனக்கே. (2) 7.2.9 3473 முடிவிவள் தனக்கொன் றறிகிலேன் என்னும் மூவுல காளியே. என்னும், கடிகமழ் கொன்றைச் சடையனே. என்னும் நான்முகக் கடவுளே. என்னும், வடிவுடை வானோர் தலைவனே. என்னும் வண்திரு வரங்கனே. என்னும், அடியடை யாதாள் போலிவள் அணுகி அடைந்தனள் முகில்வண்ணன் அடியே. 7.2.10 3474 முகில்வண்ணன் அடியை அடைந்தருள் சூடி உய்ந்தவன் மொய்புனல் பொருநல், துகில்வண்ணத் தூநீர்ச் சேர்ப்பன்வண்பொழில்சூழ் வண்குரு கூர்ச்சட கோபன், முகில்வண்ணன் அடிமேல் சொன்னசொன்மாலை ஆயிரத் திப்பத்தும் வல்லார், முகில்வண்ண வானத் திமையவர் சூழ இருப்பர்பே ரின்பவெள் ளத்தே. (2) 7.2.11 3475 வெள்ளைச் சுரிசங்கொ டாழி யேந்தித் தாமரைக் கண்ணனென் னெஞ்சி னூடே, புள்ளைக் கடாகின்ற வாற்றைக் காணீர் எஞ்சொல்லிச் சொல்லுகேன் அன்னை மீர்காள், வெள்ளச் சுகமவன் வீற்றி ருந்த வேத வொலியும் விழா வொலியும், பிள்ளைக் குழாவிளை யாட்டொலி யும் அறாத் திருப்பே ரையில் சேர்வன் நானே. (2) 7.3.1 3476 நானக் கருங்குழல் தோழி மீர்காள். அன்னை யர்காள்.அயல் சேரியீர்காள், நானித் தனிநெஞ்சம் காக்க மாட்டேன் என்வசம் அன்றிதி ராப்ப கல்போய், தேன்மொய்த்த பூம்பொழில் தண்ப ணைசூழ் தெந்திருப் பேரையில் வீற்றி ருந்த, வானப்பி ரான்மணி வண்ணன் கண்ணன் செங்கனி வாயின் திறத்த துவே. 7.3.2 3477 செங்கனி வாயின் திறத்த தாயும் செஞ்சுடர் நீண்முடித் தாழ்ந்த தாயும், சங்கொடு சக்கரம் கண்டு கந்தும் தாமரைக் கண்களுக் கற்றுத் தீர்ந்தும், திங்களும் நாளும் விழாவ றாத தெந்திருப் பேரையில் வீற்றி ருந்த, நங்கள் பிரானுக்கென் னெஞ்சம் தோழீ. நாணும் நிரையு மிழந்த துவே. 7.3.3 3478 இழந்தவெம் மாமை திறத்துப் போன என்னெஞ்சி னாருமங் கே ஒழிந்தார், உழந்தினி யாரைக்கொண் டெனு சாகோ? ஓதக் கடலொலி போல எங்கும், எழுந்தநல் வேதத் தொலிநின் றோங்கு தெந்திருப் பேரையில் வீற்றி ருந்த, முழங்குசங் கக்கையன் மாயத் தாழ்ந்தேன் அன்னையர் காள்.என்னை யென்மு னிந்தே? 7.3.4 3479 முனிந்து சகடம் உதைத்து மாயப் பேய்முலை யுண்டு மருதி டைப்போய், கனிந்த விளவுக்குக் கன்றெ றிந்த கண்ண பிரானுக்கென் பெண்மை தோற்றேன், முனிந்தினி யென்செய்தீர் அன்னை மீர்காள். முன்னி யவன்வந்து வீற்றி ருந்த, கனிந்த பொழில்திருப் பேரை யிற்கே காலம் பெறவென்னைக் காட்டு மினே. 7.3.5 3480 காலம் பெறவென்னைக் காட்டு மின்கள் காதல் கடலின் மிகப் பெரிதால், நீல முகில்வண் ணத்தெம் பெருமான் நிற்குமுன் னேவந்தென் கைக்கும் எய்தான், ஞாலத் தவன்வந்து வீற்றி ருந்த நான்மறை யாளரும் வேள்வி யோவா, கோலச் செந்நெற்கள் கவரி வீசும் கூடு புனல்திருப் பேரை யிற்கே. 7.3.6 3481 பேரெயில் சூழ்கடல் தென்னி லங்கை செற்ற பிரான்வந்து வீற்றி ருந்த, பேரையிற் கேபுக்கென் னெஞ்சம் நாடிப் பேர்த்து வரவெங்கும் காண மாட்டேன், ஆரை யினிங் குடையம் தோழி. என்னெஞ்சம் கூவ வல்லாரு மில்லை, ஆரை யினிக்கொண்டென் சாதிக் கின்றது? என்னெஞ்சம் கண்டது வேகண் டேனே. 7.3.7 3482 கண்டது வேகொண்டெல் லாருங் கூடிக் கார்க்கடல் வண்ணனோ டெந்தி றத்துக் கொண்டு,அலர் தூற்றிற் றதுமுத லாக் கொண்டவென் காத லுரைக்கில் தோழீ, மண்டிணி ஞால முமேழ் கடலும் நீள்வி சும்பும் கழியப் பெரிதால், தெண்திரை சூழ்ந்தவன் வீற்றி ருந்த தெந்திருப் பேரையில் சேர்வன் சென்றே. 7.3.8 3483 சேர்வஞ்சென் றென்னுடைத் தோழி மீர்காள். அன்னையர் காள்.என்னைத் தேற்ற வேண்டா, நீர்கள் உரைக்கின்ற தென்னி தற்கு? நெஞ்சும் நிறைவும் எனக்கிங் கில்லை, கார்வண்ணன் கார்க்கடல் ஞால முண்ட கண்ண பிரான்வந்து வீற்றி ருந்த, ஏர்வள வொண்கழ னிப்பழ னத்துத் தென்திருப் பேரை யின்மா நகரே. 7.3.9 3484 நகரமும் நாடும் பிறவும் தேர்வேன் நாணெனக் கில்லையென் தோழி மீர்காள், சிகரம் அணிநெடு மாடம் நீடு தென்திருப் பேரையில் வீற்றி ருந்த, மகர நெடுங்குழைக் காதன் மாயன் நூற்றுவ ரையன்று மங்க நூற்ற, நிகரில் முகில்வண்ணன் நேமி யானென் னெஞ்சம் கவர்ந்தெனை யூழி யானே? 7.3.10 3485 ஊழிதோ றூழி யுருவம் பேரும் செய்கையும் வேறவன் வையங் காக்கும், ஆழிநீர் வண்ணனை யச்சு தன்னை அணிகுரு கூர்ச்சட கோபன் சொன்ன, கேழிலந் தாதியோ ராயி ரத்துள் இவைதிருப் பேரையில் மேய பத்தும், ஆழியங் கையனை யேத்த வல்லார் அவரடி மைத்திறத் தாழி யாரே. (2) 7.3.11 3486 ஆழி யெழச்சங்கும் வில்லு மெழ,திசை வாழி யெழத்தண்டும் வாளு மெழ,அண்டம் மோழை யெழமுடி பாத மெழ,அப்பன் ஊழி யெழவுல கங்கொண்ட வாறே. (2) 7.4.1 3487 ஆறு மலைக்கெதிர்ந் தோடு மொலி,அர வூறு சுலாய்மலை தேய்க்கு மொலி,கடல் மாறு சுழன்றழைக் கின்ற வொலி, அப்பன் சாறு படவமு தங்கொண்ட நான்றே. 7.4.2 3488 நான்றில வேழ்மண்ணும் தானத்த, வே,பின்னும் நான்றில வேழ்மலை தானத்த வே,பின்னும் நான்றில வேழ்கடல் தானத்த வே,அப்பன் ஊன்றி யிடந்தெயிற் றில்கொண்ட நாளே. 7.4.3 3489 நாளு மெழநில நீரு மெழவிண்ணும் கோளு மெழேரி காலு மெழ,மலை தாளு மெழச்சுடர் தானு மெழ,அப்பன் ஊளி யெழவுல கமுண்ட வூணே. 7.4.4 3490 ஊணுடை மல்லர் ததர்ந்த வொலி,மன்னர் ஆணுடை சேனை நடுங்கு மொலி,விண்ணுள் ஏணுடைத் தேவர் வெளிப்பட்ட வொலி,அப்பன் காணுடைப் பாரதம் கையரைப் போழ்தே. 7.4.5 3491 போழ்து மெலிந்தபுன் செக்கரில்,வான்திசை சூழு மெழுந்துதி ரப்புன லா,மலை கீழ்து பிளந்தசிங் கமொத்த தால்,அப்பன் ஆழ்துயர் செய்தசு ரரைக்கொல்லு மாறே. 7.4.6 3492 மாறு நிரைத்திரைக் கும்சரங் கள்,இன நூறு பிணம்மலை போல்புர ள,கடல் ஆறு மடுத்துதி ரப்புன லா,அப்பன் நீறு படவிலங் கைசெற்ற நேரே. 7.4.7 3493 நேர்சரிந் தாங்கொடிக் கோழிகொண் டான்,பின்னும் நேர்சரிந் தானெரி யுமன லோன்,பின்னும் நேர்சரிந் தான்முக்கண் மூர்த்திகண் டீர்,அப்பன் நேர்சரி வாணந்திண் டோ ள்கொண்ட அன்றே. 7.4.8 3494 அன்றுமண் நீரெரி கால்விண் மலைமுதல், அன்று சுடரிரண் டும்பிற வும்,பின்னும் அன்று மழையுயிர் தேவும்மற் றும்,அப்பன் அன்று முதலுல கம்செய் ததுமே. 7.4.9 3495 மேய்நிரை கீழ்புக மாபுர ள,சுனை வாய்நிறை நீர்பிளி றிச்சொரி ய,இன ஆநிரை பாடியங் கேயொடுங் க,அப்பன் தீமழை காத்துக் குன்ற மெடுத்தானே. 7.4.10 3496 குன்ற மெடுத்த பிரானடி யாரொடும், ஒன்றிநின் றசட கோப னுரைசெயல், நன்றி புனைந்த ஓராயிரத் துள்ளிவை வென்றி தரும்பத்தும் மேவிக்கற் பார்க்கே. (2) 7.4.11 3497 கற்பார் இராம பிரானையல்லால்மற்றும் கற்பரோ?, புற்பா முதலாப் புல்லெறும் பாதியொன் றின்றியே, நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும், நற்பாலுக் குய்த்தனன் நான்முக னார்பெற்ற நாட்டுளே. (2) 7.5.1 3498 நாட்டில் பிறந்தவர் நாரணற் காளன்றி யாவரோ, நாட்டில் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா, நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு, நாட்டை யளித்துய்யச் செய்து நடந்தமை கேட்டுமே? 7.5.2 3499 கேட்பார்கள் கேசவன் கீர்த்தியல் லால்மற்றூம் கேட்பரோ, கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுக ளேவையும், சேட்பால் பழம்பகைவன் சிசு பாலன், திருவடி தாட்பால் அடைந்த தன்மை யறிவாரை யறிந்துமே? 7.5.3 3500 தன்மை யறிபவர் தாமவற் காளன்றி யாவரோ, பன்மைப் படர்பொருள் ஆதுமில் பாழ்நெடுங் காலத்து, நன்மைப் புனல்பண்ணி நான்முகனைப்பண்ணி, தன்னுள்ளே தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே? 7.5.4 3501 சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழலன்றிச் சூழ்வரோ, ஆழப் பெரும்புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தை, தாழப் படாமல்தன் பாலொரு கோட்டிடைத் தான்கொண்ட, கேழல் திருவுரு வாயிற்றுக் கேட்டும் உணர்ந்துமே? 7.5.5 3502 கேட்டும் உணர்ந்தவர் கேசவற் காளன்றி யாவரோ, வாட்டமி லாவண்கை மாவலி வாதிக்க வாதிப்புண்டு, ஈட்டங்கொள் தேவர்கள் சென்றிரந் தார்க்கிடர் நீக்கிய, கோட்டங்கை வாமன னாயச்செய்த கூத்துகள் கண்டுமே? 7.5.6 3503 கண்டும் தெளிந்தும்கற் றார்க்கண்ணற் காளன்றி யாவரோ, வண்டுன் மலர்த்தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழுநாள் இண்டைச் சடைமுடி யீசனுடன்கொண்டு சாச்சொல்ல, கொண்டங்குத் தன்னொடும் கொண்டுடன்சென்றதுணர்ந்துமே? 7.5.7 3504 செல்ல வுணர்ந்தவர் செல்வன்றன் சீரன்றிக் கற்பரோ, எல்லை யிலாத பெருந்தவத் தால்பல செய்மிறை, அல்லல் அமரரைச் செய்யும் இரணிய னாகத்தை, மல்லல் அரியுரு வாய்ச்செய்த மாயம் அறிந்துமே? 7.5.8 3505 மாயம் அறிபவர் மாயவற் காளன்றி யாவரோ, தாயம் செறுமொரு நூற்றுவர் மங்கவோ ரைவர்க்காய், தேச மறியவோர் சாரதி யாய்ச்சென்று சேனையை நாசம்செய் திட்டு, நடந்தநல் வார்த்தை யறிந்துமே? 7.5.9 3506 வார்த்தை யறிபவர் மாயவற் காளன்றி யாவரோ, போர்த்த பிறப்பொடு நோயோடு மூப்பொடு இறப்பிவை பேர்த்து, பெருந்துன்பம் வேரற நீக்கித்தன் தாளிங்கீழ்ச் சேர்த்து,அவன் செய்யும் சேமத்தையெண்ணித் தெளிவுற்றே? (2) 7.5.10 3507 தெளிவுற்று வீவன்றி நின்றவர்க் கின்பக் கதிசெய்யும், தெளிவுற்ற கண்ணனை தென்குரு கூர்ச்சட கோபன்fசொல், தெளிவுற்ற ஆயிரத் துள்ளிவை பத்தும்வல் லாரவர், தெளிவுற்ற சிந்தையர் பாமரு மூவுல கத்துள்ளே. (2) 7.5.11 3508 பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ, பாமரு மூவுலகும் அளந்த பற்ப பாதாவோ, தாமரைக் கண்ணாவோ. தனியேன் தனியா ளாவோ, தாமரைக் கையாவோ. உன்னை யென்றுகொல் சார்வதுவே? (2) 7.6.1 3509 என்றுகொல் சேர்வதந் தோஅரன் நான்முக னேத்தும்,செய்ய நின்திருப் பாதத்தை யான்நிலம் நீரெரி கால்,விண்ணுயிர் என்றிவை தாம்முத லாமுற்று மாய்நின்ற எந்தாயோ, குன்றெடுத் தாநிரை மேய்த்தவை காத்தவெங் கூத்தாவோ. 7.6.2 3510 காத்தவெங் கூத்தாவோ. மலையேந்திக் கன்மாரி தன்னை, பூத்தண் டுழாய்முடி யாய்.புனை கொன்றையஞ் செஞ்சடையாய், வாய்த்தவென் நான்முக னே.வந்தென் னாருயிர் நீயானால், ஏத்தருங் கீர்த்தியி னாய்.உன்னை யெங்குத் தலைப்பெய்வனே? 7.6.3 3511 எங்குத் தலைப்பெய்வன் நான்?எழில் மூவுல கும்நீயே, அங்குயர் முக்கட்fபிரான் பிரமன்பெரு மானவன்நீ, வெங்கதிர் வச்சிரக் கையிந் திரன்முத லாத்தெய்வம்நீ, கொங்கலர் தண்ணந் துழாய்முடி யென்னுடைக் கோவலனே. 7.6.4 3512 என்னுடைக் கோவல னே.என் பொல்லாக்கரு மாணிக்கமே, உன்னுடை யுந்தி மலருலகம் அவைமூன் றும்பரந்து, உன்னுடைச் சோதிவெள் ளத்தகம் பாலுன்னைக் கண்டுகொண்டிட்டு, என்னுடை யாருயிரார் எங்ஙனே கொல்வந் தெய்துவரே? 7.6.5 3513 வந்தெய்து மாறறி யேன்மல்கு நீலச் சுடர்தழைப்ப, செஞ்சுடர்ச் சோதிகள் பூத்தொரு மாணிக்கம் சேர்வதுபோல், அந்தர மேல்செம்பட் டோ டடி உந்திகை மார்வுகண்வாய், செஞ்சுடர்ச் சோதி விடவுறை என்திரு மார்பனையே. 7.6.6 3514 என்திரு மார்பன் தன்னையென் மலைமகள் கூறன்தன்னை, என்றுமென் நாமக ளையகம் பால்கொண்ட நான்முகனை, நின்ற சசிபதி யைநிலங் கீண்டெயில் மூன்றெரித்த, வென்று புலம்துரந் தவிசும் பாளியைக் காணேனோ. 7.6.7 3515 ஆளியைக் காண்பரி யாயரி காண்நரி யாய்,அரக்கர் ஊளையிட் டன்றிலங்கைகடந் துபிலம் புக்கொளிப்ப, மீளியம் புள்ளைக் கடாய்விறல் மாலியைக் கொன்று,பின்னும் ஆளுயர் குன்றங்கள் செய்தடர்த் தானையும் காண்டுங்கொலோ? 7.6.8 3516 காண்டுங்கொ லோநெஞ்ச மே.கடி யவினை யேமுயலும், ஆண்டிறல் மீளிமொய்ம் பிலரக்f கன்fகுலத் தைத்தடிந்து, மீண்டுமவன் தம்பிக்கே விரி நீரிலங்கையருளி, ஆண்டுதன் சோதிபுக் கவம ரர்அரி யேற்றினையே? 7.6.9 3517 ஏற்றரும் வைகுந்தத் தையருளும் நமக்கு, ஆயர்குலத்து ஈற்றிளம் பிள்ளையொன் றாய்ப்புக்கு மாயங்க ளேயியற்றி, கூற்றியல் கஞ்சனைக் கொன்றுஐவர்க் காயக்கொடுஞ் சேனைதடிந்து, ஆற்றல்மிக் கான்பெரி யபரஞ் சோதிபுக் கஅரியே. 7.6.10 3518 புக்க அரியுரு வாயவுணனுடல் கீண்டுகந்த, சக்கரச் செல்வன்தன்னைக் குருகூர்ச்சட கோபஞ்சொன்ன, மிக்கவோ ராயிரத் துளிவைபத்தும்வல் லாரவரை, தொக்குப்பல் லாண்டிசைத் துக்கவரி செய்வ ரேழையரே. (2) 7.6.11 3519 ஏழையர் ஆவியுண் ணுமிணைக் கூற்றங்கொ லோவறியேன், ஆழியுங் கண்ண பிராந்திருக் கண்கள்கொ லோவறியேன், சூழவும் தாமரை நாண்மலர் போல்வந்து தோன்றும்கண்டீர், தோழியர் காள்.அன்னை மீர்.என்fசெய் கேந்துய ராட்டியேனே? (2) 7.7.1 3520 ஆட்டியும் தூற்றியும் நின்றன்னை மீரென்னை நீர்நலிந்தென்? மாட்டுயர் கற்பகத் தின்வல்லி யோகொழுந் தோ?அறியேன், ஈட்டிய வெண்ணெயுண் டாந்திரு மூக்கென தாவியுள்ளே, மாட்டிய வல்விளக் கின் சுடரய்நிற்கும் வாலியதே. 7.7.2 3521 வாலிய தோர்கனி கொல்வினை யாட்டியேன் வல்வினைகொல், கோலம் திரள்பவ ளக்கொழுந் துண்டங்கொ லோவறியேன், நீல நெடுமுகில் போல்திரு மேனியம் மான்தொண்டைவாய், ஏலும் திசையுளெல் லாம்வந்து தோன்றுமென் னின்னுயிர்க்கே. 7.7.3 3522 இன்னுயிர்க் கேழையர் மேல்வளையும் இணை நீலவிற்கொல், மன்னிய சீர்மத னங்கருப்புச் சிலை கொல்,மதனன் தன்னுயிர்த் தாதைகண் ணபெருமான் புரு வமவையே, என்னுயிர் மேலன வாய் அடுகின்றன என்று நின்றே. 7.7.4 3523 என்று நின்றேதிக ழும்செய்ய வீன்சுடர் வெண்மின்னுக்கொல், அன்றியென் னாவி யடுமணி முத்தங்கொ லோவறியேன், குன்றம் எடுத்தபி ரான் முறுவலெனதாவியடும், ஒன்றும் அறிகின்றி லேனன்னை மீர்.எனக் குய்விடமே. 7.7.5 3524 உய்விடம் ஏழையர்க் கும் அசுரர்க்கும் அரக்கர்கட்கும் எவ்விடம்? என்றிலங் கிமகரம் தழைக் கும்தளிர்கொல், பைவிடப் பாம்பணை யான் திருக்குண்டலக் காதுகளே? கைவிட லொன்றுமின் றிய் அடுகின்றன காண்மின்களே. 7.7.6 3525 காண்மின்கள் அன்னையர் காள்.என்று காட்டும் வகையறியேன், நாண்மன்னு வெண்திங்கள் கொல். நயந்தார்கட்கு நச்சிலைகொல், சேண்மன்னு நால்தடந் தோள் பெருமான்தன் திருநுதலே?, கோள்மன்னி யாவி யடும்கொடியேன் உயிர் கோளிழைத்தே. 7.7.7 3526 கோளிழைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும், கோளிழைத்தண் முத்தமும் தளிரும் குளிர்வான் பிறையும், கோளிழையாவுடைய கொழுஞ் சோதி வட்டங்கொல், கண்ணன், கோளிழைவாள் முகமாய்க் கொடியேன் உயிர் கொள்கின்றதே? 7.7.8 3527 கொள்கின்ற கோளிரு ளைச்சுகிர்ந் திட்ட கொழுஞ்சுருளின், உள்கொண்ட நீலநன் னூல்தழை கொல்?அன்று மாயங்குழல், விள்கின்ற பூந்தண் டுழாய்விரை நாறவந் தென்னுயிரை, கள்கின்ற வாறறி யீரன்னை மீர்.கழ றாநிற்றிரே. 7.7.9 3528 நிற்றிமுற் றத்துள் என் றுநெரித் தகைய ராயென்னைநீர் சுற்றியும் சூழ்ந்தும் வைதிர்சுடர்ச் சோதி மணிநிறமாய், முற்றவிம் மூவுல கும்விரி கின்ற சுடர்முடிக்கே, ஒற்றுமைக் கொண்டதுள் ளமன்னை மீர்.நசை யென்நுங்கட்கே? 7.7.10 3529 கட்கரி யபிர மஞ்சிவன் இந்திரன் என்றிவர்க்கும், கட்கரி யகண்ண னைக்குரு கூர்ச்சடகோபன்fசொன்ன, உட்குடை யாயிரத் தூளிவை யுமொரு பத்தும்வல்லார், உட்குடை வானவ ரோடுட னாயென்றும் மாயாரே. (2) 7.7.11 3530 மாயா. வாமன னே.மது சூதா. நீயருளாய், தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய்க் காலாய், தாயாய் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய், நீயாய் நீநின்ற வாறிவை யென்ன நியாயங்களே. (2) 7.8.1 3531 அங்கண் மலர்த்தண் டுழாய்முடி அச்சுத னே.அருளாய், திங்களும் ஞாயிறு மாய்ச்செழும் பல்சுட ராயிருளாய், பொங்கு பொழிமழை யாய்ப்புக ழாய்பழி யாய்ப்பின்னும்நீ, வெங்கண்வெங் கூற்றமு மாவிவை யென்ன விசித்திரமே. 7.8.2 3532 சித்திரத் தேர்வல வா.திருச் சக்கரத் தாய்.அருளாய், எத்தனை யோருக முமவை யாயவற் றுள்ளியுலும், ஒத்தவொண் பல்பொருள் களுலப் பில்லன வாய்வியவாய், வித்தகத் தாய்நிற்றி நீயவை யென்ன விடமங்களே. 7.8.3 3533 கள்ளவிழ் தாமரைக்கண்கண்ண னே.எனக் கொன்றருளாய், உள்ளது மில்லது மாயுலப் பில்லன வாய்வியவாய், வெள்ளத் தடங்கட லுள்விட நாகணை மேல்மருவி, உள்ளப்பல் யோகுசெய் தியிவை யென்ன உபாயங்களே. 7.8.4 3534 பாசங்கள் நீக்கியென் னையுனக் கேயுறக் கொண்டிட்டு,நீ வாச மலர்த்தண் டுழாய்முடி மாயவ னே.அருளாய், காயமும் சீவனு மாய்க்கழி வாய்ப்பிறப் பாய்ப்பின்னும்நீ, மாயங்கள்செய்துவைத் தியிவை யென்ன மயக்குகளே. 7.8.5 3535 மயக்கா. வாமன னே.மதி யாம்வண்ணம் ஒன்றருளாய், அயர்ப்பாய்த் தேற்றமு மாயழ லாய்க்குளி ராய்வியவாய், வியப்பாய் வென்றிகளாய்வினை யாய்ப்பய னாய்ப்பின்னும்நீ, துயக்காய் நீநின்ற வாறிவை யென்ன துயரங்களே. 7.8.6 3536 துயரங்கள் செய்யுங்கண்ணா.சுடர் நீண்முடி யாயருளாய், துயரம்செய் மானங்க ளாய்மத னாகி உகவைகளாய், துயரம்செய் காமங்க ளாய்த்துலையாய்நிலை யாய்நடையாய், துயரங்கள் செய்துவைத் தியிவை யென்னசுண் டாயங்களே. 7.8.7 3537 என்னச்சுண்டாயங்களால் நின்றிட்டாயென்னையாளும்கண்ணா, இன்னதோர் தன்மையை என்றுன்னையாவர்க்கும் தேற்றரியை, முன்னிய மூவுல குமவை யாயவற் றைப்படைத்து, பின்னுமுள் ளாய்.புறத் தாய்.இவை யென்ன இயற்கைகளே. 7.8.8 3538 என்ன இயற்கைகளால் எங்ஙனேநின்றிட் டாயென்கண்ணா, துன்னு கரசர ணம்முத லாகவெல் லாவுறுப்பும் உன்னு சுவையொளி யூறொலி நாற்றம் முற்றும்நீயே, உன்னை யுணர வுறிலுலப் பில்லை நுணுக்கங்களே. 7.8.9 3539 இல்லை நுணுக்கங்க ளேயித னில்பிறி தென்னும்வண்ணம் தொல்லைநன் னூலில் சொன்ன வுருவும் அருவும்நியே அல்லித் துழாயலங் கலணி மார்ப.என் அச்சுதனே, வல்லதோர் வண்ணம்சொன்னாலதுவேயுனக் காம்வண்ணமே. 7.8.10 3540 ஆம்வண்ண மின்னதொன் றென்றறி வதரி யஅரியை, ஆம்வண்ணத் தால்குரு கூர்ச்சட கோபன் அறிந்துரைத்த ஆம்வண்ண வொண்டமிழ்களிவை யாயிரத் துளிப்பத்தும், ஆம்வண்ணத் தாலுரைப்பாரமைந் தார்தமக்கென்றைக்குமே. (2) 7.8.11 3541 என்றைக்கும் என்னையுய் யக்கொண்டு போகிய, அன்றைக்கன் றென்னைத்தன் னாக்கியென் னால்தன்னை, இன்றமிழ் பாடிய ஈசனை யாதியாய் நின்றவென் சோதியை, எஞ்சொல்லி நிற்பனோ? (2) 7.9.1 3542 என்சொல்லி நிற்பனென் இன்னுயி ரின்றொன்றாய், என்சொல்லால் யான்சொன்ன இன்கவி யென்பித்து, தன்சொல்லால் தான்தன்னைக் கீர்த்தித்த மாயன்,என் முன்சொல்லும் மூவுரு வாம் முதல்வனே. 7.9.2 3543 ஆம்முதல் வனிவ னென்றுதற் றேற்றி,என் நாமுதல் வந்து புகுந்துநல் லின்கவி, தூமுதல் பத்தர்க்குத் தான்தன்னைச் சொன்ன,என் வாய்முதல் அப்பனை என்று மறப்பனோ? 7.9.3 3544 அப்பனை யென்று மறப்பனென் னாகியே, தப்புத லின்றித் தனைக் கவி தான்சொல்லி, ஒப்பிலாத் தீவினை யேனையுய் யக்கொண்டு செப்பமே செய்து திரிகின்ற சீர்கண்டே? 7.9.4 3545 சீர்கண்டு கொண்டு திருந்துநல் லின்கவி, நேற்பட யான்சொல்லும் நீர்மை யிலாமையில், ஏர்விலா என்னைத்தன் னாக்கி என் னால்தன்னை, பார்பரவு இன்கவி பாடும் பரமரே. 7.9.5 3546 இன்கவி பாடும் பரம கவிகளால், தன்கவி தான்தன்னைப் பாடுவி யாது,இன்று நன்குவந் தென்னுட னாக்கியென் னால்தன்னை, வன்கவி பாடுமென் வைகுந்த நாதனே. 7.9.6 3547 வைகுந்த நாதனென் வல்வினை மாய்ந்தறச், செய்குந்தன் றன்னையென் னாக்கியென் னால்தன்னை, வைகுந்த னாகப் புகழ்வண் தீங்கவி, செய்குந்தன் தன்னையெந் நாள்சிந்தித் தார்வனோ. 7.9.7 3548 ஆர்வனோ ஆழியங் கையெம்பி ரான்புகழ், பார்விண்நீர் முற்றும் கலந்து பருகிலும், ஏர்விலா என்னைத்தன் னாக்கியென் னால்தன்னை, சீர்பெற இன்கவி சொன்ன திறத்துக்கே? 7.9.8 3549 திறத்துக்கே துப்புர வாம்திரு மாலின்சீர், இறப்பெதிர் காலம் பருகிலும் ஆர்வனோ, மறப்பிலா வென்னைத்தன் னாக்கியென் னால்தன்னை, உறப்பல இன்கவி சொன்ன வுதவிக்கே? 7.9.9 3550 உதவிக்கைம் மாறென் னுயிரென்ன வுற்றெண்ணில், அதுவும்மற் றாங்கவன் றன்னதென் னால்தன்னை, பதவிய இன்கவி பாடிய அப்பனுக்கு, எதுவுமொன் றுமில்லை செய்வதிங் குமங்கே. 7.9.10 3551 இங்குமங் கும்திரு மாலன்றி இன்மைகண்டு, அங்ஙனே வண்குரு கூர்ச்சட கோபன் சொல், இங்ஙனே சொன்னவோ ராயிரத் திப்பத்தும், எங்ஙனே சொல்லினும் இன்பம் பயக்குமே. (2) 7.9.11 3552 இன்பம் பயக்க எழில்மலர் மாதரும் தானுமிவ் வேழுலகை, இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந் தாள்கின்ற எங்கள்பிரான், அன்புற் றமர்ந்துறை கின்றா ணிபொழில் சூழ்திரு வாறன்விளை, அன்புற் றமர்ந்து வலம்செய்து கைதொழும் நாள்களும் ஆகுங்கொலோ. (2) 7.10.1 3553 ஆகுங்கொல் ஐயமொன் றின்றி அகலிடம் முற்றவும், ஈரடியே ஆகும் பரிசு நிமிர்ந்த திருக்குறள் அப்பன் அமர்ந்துறையும், மாகம் திகழ்கொடி மாடங்கள் நீடும் மதிள்திரு வாறன்விளை, மாகந்த நீர்கொண்டு தூவி வலஞ்செய்து கைதொழுங் கூடுங்கொலோ. 7.10.2 3554 கூடுங்கொல் வைகலும் கோவிந்த னைமது சூதனைக் கோளரியை, ஆடும் பறவை மிசைக்கண்டு கைதொழு தன்றி யவனுறையும், பாடும் பெரும்புகழ் நான்மறை வேள்வியைந் தாறங்கம் பன்னினர்வாழ், நீடு பொழில்திரு வாறன் விளைதொழ வாய்க்குங்கொல் நிச்சலுமே. 7.10.3 3555 வாய்க்குங்கொல் நிச்சலும் எப்பொழு தும்மனத்து ஈங்கு நினைக்கப்பெற வாய்க்கும் கரும்பும் பெருஞ்செந் நெலும்வயல் சூழ்திரு வாறன்விளை, வாய்க்கும் பெரும்புகழ் மூவுல கீசன் வடமது ரைப்பிறந்த, வாய்க்கும் மணிநிறக் கண்ணபி ரான்றன் மலரடிப் போதுகளே. 7.10.4 3556 மலரடிப் போதுகள் என்னெஞ்சத் தெப்பொழு துமிருத் திவணங்க, பலரடி யார்முன் பருளிய பாம்பணை யப்பன் அமர்ந்துறையும், மலரில் மணிநெடு மாடங்கள் நீடு மதில்திரு வாறன்விளை, உலகம் மலிபுகழ் பாடநம் மேல்வினை ஒன்றும்நில் லாகெடுமே. 7.10.5 3557 ஒன்றும்நில் லாகெடும் முற்றவும் தீவினை யுள்ளித் தொழுமிந்தொண்டீர், அன்றங் கமர்வென் றுருப்பிணி நங்கை யணிநெடுந் தோள்புணர்ந்தான், என்றுமெப் போதுமென் னெஞ்சம் துதிப்பவுள் ளேயிருக் கின்றபிரான், நின்ற அணிதிரு வாறன் விளையென்னும் நீணக ரமதுவே. 7.10.6 3558 நீணக ரமது வேமலர்ச் சோலைகள் சூழ்திரு வாறன்விளை, நீணக ரத்துறை கின்றபி ரான்நெடு மால்கண்ணன் விண்ணவர்கோன் வாண புரம்புக்கு முக்கட்பி ரானைத் தொலையவெம் போர்கள்செய்து, வாணனை யாயிரந் தோள்துணித் தாஞ்சரண் அன்றிமற் றொன்றிலமே. 7.10.7 3559 அன்றிமற் றொன்றிலம் நின்சர ணே. என் றகலிரும் பொய்கையின்வாய், நின்றுதன் நீள்கழ லேத்திய ஆனையின் நெஞ்சிடர் தீர்த்தபிரான், சென்றங் கினிதுறை கின்ற செழும்பொழில் சூழ்திரு வாறன்விளை, ஒன்றி வலஞ்செய்ய ஒன்றுமோ? தீவினை யுள்ளத்தின் சார்வல்லவே. 7.10.8 3560 தீவினை யுள்ளத்தின் சார்வல்ல வாகித் தெளிவிசும் பேறலுற்றால், நாவினுள் ளுமுள்ளத் துள்ளும் அமைந்த தொழிலினுள் ளும்நவின்று, யாவரும் வந்து வணங்கும் பொழில்திரு வாறன் விளையதனை, மேவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொல் என்னுமென் சிந்தனையே. 7.10.9 3561 சிந்தைமற் றொன்றின் திறத்ததல் லாத்தன்மை தேவபி ரானறியும், சிந்தையி னால்செய்வ தானறி யாதன மாயங்கள் ஒன்றுமில்லை, சிந்தையி னால்சொல்லி னால்செய்கை யால்நிலத் தேவர் குழுவணங்கும், சிந்தை மகிழ்திரு வாறன் விளையுறை தீர்த்தனுக் கற்றபின்னே. 7.10.10 3562 தீர்த்தனுக் கற்றபின் மற்றோர் சரணில்லை யென்றெண்ணி, தீர்த்தனுக்கே தீர்த்த மனத்தன னாகிச் செழுங்குரு கூர்ச்சட கோபன்fசொன்ன, தீர்த்தங்க ளாயிரத் துள்ளிவை பத்தும்வல் லார்களை, தேவர்வைகல் தீர்த்தங்க ளேயென்று பூசித்து நல்கி யுரைப்பார்தம் தேவியர்க்கே. (2) 7.10.11 திருவாய் மொழி எட்டாம் பத்து 3563 தேவிமா ராவார் திருமகள் பூமி யேவமற் றமரராட் செய்வார், மேவிய வுலகம் மூன்றவை யாட்சி வேண்டுவேண் டுருவம்நின் னுருவம், பாவியேன் தன்னை யடுகின்ற கமலக் கண்ணதோர் பவளவாய் மணியே, ஆவியே. அமுதே. அலைகடல் கடைந்த அப்பனே. காணுமா றருளாய். 8.1.1 3564 காணுமா றருளாய் என்றென்றே கலங்கிக் கண்ணநீர் அலமர வினையேன் பேணுமா றெல்லாம் பேணிநின் பெயரே பிதற்றுமா றருளெனக் கந்தோ, காணுமா றருளாய் காகுத்தா. கண்ணா. தொண்டனேன் கற்பகக் கனியே, பேணுவார் அமுதே. பெரியதண் புனல்சூழ் பெருநிலம் எடுத்தபே ராளா. 8.1.2 3565 எடுத்தபே ராளன் நந்தகோ பன்றன் இன்னுயிர்ச் சிறுவனே, அசோதைக் கடுத்தபே ரின்பக் குலவிளங் களிறே. அடியனேன் பெரியவம் மானே, கடுத்தபோர் அவுணன் உடலிரு பிளவாக் கையுகி ராண்டவெங் கடலே, அடுத்ததோர் உருவாய் இன்றுநீ வாராய் எங்ஙனம் தேறுவர் உமரே? 8.1.3 3566 உமருகந் துகந்த வுருவம்நின் னுருவம் ஆகியுன் தனக்கன்ப ரானார் அவர்,உகந் தமர்ந்த செய்கையுன் மாயை அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன், அமரது பண்ணி அகலிடம் புடைசூழ் அடுபடை அவித்தாம் மானே, அமரர்தம் அமுதே. அசுரர்கள் நஞ்சே. என்னுடை ஆருயி ரேயோ. 8.1.4 3567 ஆருயி ரேயோ. அகலிடம் முழுதும் படைத்திடந் துண்டுமிழ்ந் தளந்த, பேருயி ரேயோ. பெரியநீர் படைத்தங் குறைந்தது கடைந்தடைத் துடைத்த, சீரிய ரேயோ.மனிசர்க்குத் தேவர் போலத்தே வர்க்கும்தே வாவோ, ஒருயி ரேயோ. உலகங்கட் கெல்லாம் உன்னைநான் எங்குவந் துறுகோ? 8.1.5 3568 எங்குவந் துறுகோ என்னையாள் வானே. ஏழுல கங்களும் நீயே, அங்கவர்க் கமைத்த தெய்வமும் நீயே அவற்றவை கருமமும் நீயே, பொங்கிய புறம்பால் பொருளுள வேலும் அவையுமோ நீயின்னே யானால் மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே வான்புலம் இறந்ததும் நீயே. 8.1.6 3569 இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே நிகழ்வதோ நீயின்னே யானால், சிறந்தநின் தன்மை யதுவிது வுதுவென் றறிவொன்றும் சங்கிப்பன் வினையேன், கறந்தபால் நெய்யே. நெய்யின் சுவையே. கடலினுள் அமுதமே, அமுதில் பிறந்தவின் சுவையே. சுவையது பயனே. பின்னைதோள் மணந்தபே ராயா. 8.1.7 3570 மணந்தபே ராயா. மாயத்தால் முழுதும் வல்வினை யேனையீர் கின்ற, குணங்களை யுடையாய். அசுரர்வன் கையர் கூற்றமே. கொடியபுள் ளுயர்த்தாய், பணங்களா யிரமும் உடையபைந் நாகப் பள்ளியாய். பாற்கடல் சேர்ப்பா, வணங்குமா றாறியேன். மனமும்வா சகமும் செய்கையும் யானும்நீ தானே. 8.1.8 3571 யானும்நீ தானே யாவதோ மெய்யே அருநர கவையும் நீயானால், வானுய ரின்பம் எய்திலென் மற்றை நரகமே யெய்திலென்? எனிலும், யானும்நீ தானாய்த் தெளிதொறும் நன்றும் அஞ்சுவன் நரகம்நா னடைதல், வானுய ரின்பம் மன்னிவீற் றிருந்தாய். அருளுநின் தாள்களை யெனக்கே. 8.1.9 3572 தாள்களை யெனக்கே தலைத்தலை சிறப்பத் தந்தபே ருதவிக்கைம் மாறா, தோள்களை யாரத் தழுவிதென் னுயிரை அறவிலை செய்தனன் சோதீ, தோள்களா யிரத்தாய். முடிகளா யிரத்தாய். துணைமலர்க் கண்களா யிரத்தாய், தாள்களா யிரத்தாய். பேர்களா யிரத்தாய். தமியனேன் பெரிய அப்பனே. 8.1.10 3573 பெரிய அப்பனைப் பிரமன் அப்பனை உருத்திரன் அப்பனை, முனிவர்க் குரிய அப்பனை அமரர் அப்பனை உலகுக்கோர் தனியப்பன் தன்னை, பெரியவண் குருகூர் வண்சட கோபன் பேணின ஆயிரத் துள்ளும், உரியசொல் மாலை இவையும்பத் திவற்றால் உய்யலாம் தொண்டீர்.நங் கட்கே. (2) 8.1.11 3574 நங்கள் வரிவளை யாயங் காளோ. நம்முடை ஏதலர் முன்பு நாணி, நுங்கட் கியானொன்று ரைக்கும் மாற்றம் நோக்குகின் றேனெங்கும் காண மாட்டேன், சங்கம் சரிந்தன சாயி ழந்தேன் தடமுலை பொன்னிற மாய்த்த ளர்ந்தேன், வெங்கண் பறவையின் பாக னெங்கோன் வேங்கட வாணணை வேண்டிச் சென்றே. (2) 8.2.1 3575 வேண்டிச்சென் றொன்று பெறுகிற் பாரில் என்னுடைத் தோழியர் நுங்கட் கேலும், ஈண்டிது ரைக்கும் படியை யந்தோ. காண்கின்றி லேனிட ராட்டி யேன்நான், காண்தகு தாமரைக் கண்ணன் கள்வன் விண்ணவர் கோன்நங்கள் கோனைக் கண்டால், ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான் எத்தனை காலம் இளைக்கின் றேனே. 8.2.2 3576 காலம் இளைக்கிலல் லால்வி னையேன் நானிளைக் கின்றிலன் கண்டு கொண்மின், ஞாலம் அறியப் பழிசு மந்தேன் நன்னுத லீர்.இனி நாணித் தானென், நீல மலர்நெடுஞ் சோதி சூழ்ந்த நீண்ட முகில்வண்ணன் கண்ணன் கொண்ட, கோல வளையொடு மாமை கொள்வான் எத்தனை காலம்கூ டச்சென்றே? 8.2.3 3577 கூடச்சென் றேனினி என்கொ டுக்கேன்? கோல்வளை நெஞ்சத் தொடக்க மெல்லாம், பாடற் றொழிய இழந்து வைகல் பல்வளை யார்முன் பரிச ழிந்தேன், மாடக் கொடிமதிள் தென்கு ளந்தை வண்குட பால்நின்ற மாயக் கூத்தன், ஆடல் பறவை உயர்த்த வெல்போர் ஆழி வலவினை யாதரித்தே. 8.2.4 3578 ஆழி வலவினை ஆதரிப்பும் ஆங்கவன் நம்மில் வரவும் எல்லாம், தோழியர் காள்.நம் முடைய மேதான்? சொல்லுவ தோவிங் கரியதுதான், ஊழிதோ றூழி ஒருவ னாக நன்குணர் வார்க்கும் உணர லாகா, சூழ லுடைய சுடர்கொ ளாதித் தொல்லையஞ் சோதி நினைக்குங் காலே. 8.2.5 3579 தொல்லையஞ் சோதி நினைக்குங் காலென் சொல்லள வன்றிமை யோர்த மக்கும், எல்லையி லாதன கூழ்ப்புச் செய்யும் அத்திறம் நிற்கவெம் மாமை கொண்டான், அல்லி மலர்த்தண் டுழாயும் தாரான் ஆர்க்கிடு கோவினிப் பூசல் சொல்லீர், வல்லி வளவயல் சூழ்கு டந்தை மாமலர்க் கண்வளர் கின்ற மாலே. 8.2.6 3580 மாலரி கேசவன் நார ணஞ்சீ மாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்றென்று, ஒல மிடவென்னைப் பண்ணி விட்டிட் டொன்று முருவும் சுவடும் காட்டான், ஏல மலர்குழல் அன்னை மீர்காள். என்னுடைத் தோழியர் காள்.என் செய்கேன்? காலம் பலசென்றும் காண்ப தாணை உங்களோ டெங்க ளிடையில் லையே. 8.2.7 3581 இடையில் லையான் வளர்த்த கிளிகாள். பூவைகள் காள்.குயில் காள்.ம யில்காள், உடையநம் மாமையும் சங்கும் நெஞ்சும் ஒன்றும் ஒழியவொட் டாது கொண்டான், அடையும் வைகுந்த மும்பாற் கடலும் அஞ்சன வெற்பும் அவைந ணிய, கடையறப் பாசங்கள் விட்ட பின்னை அன்றி யவனவை காண்கொ டானே. 8.2.8 3582 காண்கொடுப் பானல்ல னார்க்கும் தன்னைக் கைசெயப் பாலதோர் மாயந் தன்னால், மாண்குறல் கோல வடிவு காட்டி மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த, சேண்சுடர்த் தோள்கள் பலத ழைத்த தேவ பிராற்கென் நிரைவினோடு, நாண்கொடுத் தேனினி யென்கொடுக்கேன் என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள். 8.2.9 3583 என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள். யானினச் செய்வதென்? என்நெஞ் சென்னை, நின்னிடை யேனல்லேன் என்று நீங்கி நேமியும் சங்கும் இருகைக் கொண்டு, பன்னெடுஞ் சூழ்சுடர் ஞாயிற் றோடு பான்மதி ஏந்தியொர் கோல நீல, நன்னெடுங் குன்றம் வருவ தொப்பான் நாண்fம லர்ப்பா தமடைந் ததுவே. 8.2.10 3584 பாதம் அடைவதன் பாசத் தாலே மற்றவன் பாசங்கள் முற்ற விட்டு, கோதில் புகழ்க்கண் ணன்தன் னடிமேல் வண்குரு கூர்ச்சட கோபன் சொன்ன, தீதிலந்தாதியோ ராயி ரத்துள் இவையுமோர் பத்திசை யோடும் வல்லார், ஆதுமோர் தீதில ராகி யிங்கும் அங்குமெல் லாமமை வார்கள் தாமே. (2) 8.2.11 3585 அங்கு மிங்கும் வானவர் தானவர் யாவரும், எங்கும் இனையையென் றுன்னை அறியகிலா தலற்றி, அங்கம் சேரும் பூமகள் மண்மகள் ஆய்மகள், சங்கு சக்கரக் கையவ னென்பர் சரணமே. (2) 8.3.1 3586 சரண மாகிய நான்மறை நூல்களும் சாராதே, மரணம் தோற்றம் வான்பிணி மூப்பென் றிவைமாய்த்தோம், கரணப் பல்படை பற்றற வோடும் கனலாழி, அரணத் திண்படை யேந்திய ஈசற் காளாயே. 8.3.2 3587 ஆளும் ஆளார் ஆழியும் சங்கும் சுமப்பார்தாம், வாளும் வில்லுங் கொண்டுபின் செல்வார் மாற்றில்லை, தாளும் தோளும் கைகளை யாரத் தொழக்காணேன், நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே. 8.3.3 3588 ஞாலம் போனகம் பற்றியோர் முற்றா வுருவாகி, ஆலம் பேரிலை யன்னவ சஞ்செய்யும் அம்மானே, காலம் பேர்வதோர் காரிரு ளுழியொத் துளதால்,உன் கோலங் காரேழில் காணலுற் றாழும் கொடியேற்கே. 8.3.4 3589 கொடியார் மாடக் கோளு ரகத்தும் புளிங்குடியும், மடியா தின்னே நீதுயில் மேவி மகிழ்ந்ததுதான், அடியார் அல்லல் தவிர்த்த அசைவோ? அன்றேல்,இப் படிதான் நீண்டு தாவிய அசைவோ? பணியாயே. 8.3.5 3590 பணியா அமரர் பணிவும் பண்பும் தாமேயாம், அணியார் ஆழியும் சங்கமு மேந்தும் அவர்காண்மின், தணியா வெந்நோ யுலகில் தவிர்ப்பான், திருநீல மணியார் மேனியோ டென்மனம் சூழ வருவாரே. 8.3.6 3591 வருவார் செல்வார் வண்பரி சாரத் திருந்த,என் திருவாழ் மார்வற் கென்திறம் சொல்லார் செய்வதென், உருவார் சக்கரம் சங்கு சுமந்திங் கும்மோடு, ஒருபா டுழல்வா னோரடி யானு முளனென்றே. 8.3.7 3592 என்றே யென்னையுன் ஏரார் கோலத் திருந்தடிக்கீழ், நின்றே யாட்செய்ய நீகொண் டருள நினைப்பதுதான், குன்றெழ் பாரேழ் சூழ்கடல் ஞாலம் முழுவேழும், நின்றே தாவிய நீள்கழல் ஆழித் திருமாலே. 8.3.8 3593 திருமால் நான்முகன் செஞ்சடை யானென் றிவர்கள்,எம் பெருமான் தன்மையை யாரறி கிற்பார் பேசியென், ஒருமா முதல்வா. ஊழிப் பிரானென் னையாளுடை, கருமா மேனியன் என்பனென் காதல் கலக்கவே. 8.3.9 3594 கலக்க மில்லா நல்தவ முனிவர் கரைகண்டோ ர், துளக்க மில்லா வானவ ரெல்லாம் தொழுவார்கள், மலக்க மெய்த மாகடல் தன்னைக் கடைந்தானை, உலக்க நாம்புகழ் கிற்பதென் செய்வ துரையீரே. 8.3.10 3595 உரையா வெந்நோய் தவிர அருள்நீண் முடியானை, வரையார் மாடம் மன்னு குருகூர்ச் சடகோபன், உரையேய் சொல்தொடை ஓரா யிரத்து ளிப்பத்தும், நிரையே வல்லார் நீடுல கத்துப் பிறவாரே. (2) 8.3.11 3596 வார்கடா அருவி யானைமா மலையின் மருப்பிணைக் குவடிறுத் துருட்டி, ஊர்கொள்திண் பாகன் உயிர்செகுத் தரங்கின் மல்லரைக் கொன்றுசூழ் பரண்மேல், போர்கடா வரசர் புறக்கிட மாட மீமசைக் கஞ்சனைத் தகர்த்த, சீர்கொள்சிற் றாயன் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றெங்கள்செல் சார்வே. (2) 8.4.1 3597 எங்கள்செல் சார்வு யாமுடை அமுதம் இமையவர் அப்பனென் அப்பன், பொங்குமூ வுலகும் படைத்தளித் தழிக்கும் பொருந்துமூ வுருவனெம் அருவன், செங்கயல் உகளும் தேம்பணை புடைசூழ் திருச்செங்குன் றூர்த்திருச் சிற்றாறு அங்கமர் கின்ற, ஆதியான் அல்லால் யாவர்மற் றெனமர் துணையே? 8.4.2 3598 என்னமர் பெருமான் இமையவர் பெருமான் இருநிலம் இடந்தவெம் பெருமான், முன்னைவல் வினைகள் முழுதுடன் மாள என்னையாள் கின்றேம் பெருமான், தென்திசைக் கணிகொள் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றங்கரை மீபால் நின்றவெம் பெருமான், அடியல்லால் சரணம் நினைப்பிலும் பிறிதில்லை எனக்கே. 8.4.3 3599 பிறிதில்லை யெனக்குப் பெரியமூ வுலகும் நிறையப்பே ருருவமாய் நிமிர்ந்த, குறியமாண் எம்மான் குரைகடல் கடைந்த கோலமா ணிக்கமென் எம்மான், செறிகுலை வாழை கமுகுதெங் கணிசூழ் திருச்செங்குன் றூர்த்திருச் சிற்றாறு அறிய,மெய்ம் மையே நின்றவெம் பெருமான் அடியிணை யல்லதோர் அரணே. 8.4.4 3600 அல்லதோர் அரணும் அவனில்வே றில்லை அதுபொரு ளாகிலும், அவனை அல்லதென் ஆவி அமர்ந்தணை கில்லா தாதலால் அவனுறை கின்ற, நல்லநான் மறையோர் வேள்வியுள் மடுத்த நறும்புகை விசும்பொளி மறைக்கும், நல்லநீள் மாடத் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றெனக்குநல் லரணே. 8.4.5 3601 எனக்குநல் லரணை எனதா ருயிரை இமையவர் தந்தைதாய் தன்னை, தனக்குன்தன் தன்மை அறிவரி யானைத் தடங்கடல் பள்ளியம் மானை, மனக்கொள்சீர் மூவா யிரவர்வண் சிவனும் அயனும் தானுமொப் பார்வாழ், கனக்கொள்திண் மாடத் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றதனுள்கண் டேனே. 8.4.6 3602 திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றதனுள் கண்டவத் திருவடி யென்றும், திருச்செய்ய கமலக் கண்ணூம்செவ் வாயும் செவ்வடி யும்செய்ய கையும், திருச்செய்ய கமல வுந்தியும் செய்ய கமலமார் பும்செய்ய வுடையும், திருச்செய்ய முடியும் ஆரமும் படையும் திகழவென் சிந்தையு ளானே. 8.4.7 3603 திகழவென் சிந்தை யுள்ளிருந் தானைச் செழுநிலத் தேவர்நான் மறையோர், திசைகைகூப்பி யேத்தும் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றங்கரை யானை, புகர்கொள்வா னவர்கள் புகலிடந் தன்னை அசுரர்வன் கையர்வெங் கூற்றை, புகழுமா றறியேன் பொருந்துமூ வுலகும் படைப்பொடு கெடுப்புக்காப் பவனே. 8.4.8 3604 படைப்பொடு கெடுப்புக் காப்பவன் பிரம பரம்பரன் சிவபெருமான் அவனே, இடைப்புக்கோ ருருவும் ஒழிவில்லை யவனே புகழ்வில்லை யாவையும் தானே, கொடைப்பெரும் புகழார் இனையர்தன் னானார் கூறிய விச்சையோ டொழுக்கம், நடைப்பலி யியற்கைத் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றமர்ந்த நாதனே. 8.4.9 3605 அமர்ந்த நாதனை யவரவ ராகி அவர்க்கருள் அருளுமம் மானை அமர்ந்ததண் பழனத் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றாற் றங்கரை யானை, அமர்ந்தசீர் மூவா யிரவர்வே தியர்கள் தம்பதி யவனிதே வர்வாழ்வு, அமர்ந்தமா யோனை முக்கணம் மானை நான்முக னையமர்ந் தேனே. 8.4.10 3606 தேனைநன் பாலைக் கன்னலை யமுதைத் திருந்துல குண்டவம் மானை, வானநான் முகனை மலர்ந்தண் கொப்பூழ் மலர்மிசைப் படைத்தமா யோனை, கோனைவண் குருகூர்ச் வண்சட கோபன் சொன்னவா யிரத்துளிப் பத்தும், வானின்மீ தேற்றி யருள்செய்து முடிக்கும் பிறவிமா மாயக்கூத் தினையே. (2) 8.4.11 3607 மாயக் கூத்தா. வாமனா. வினையேன் கண்ணா. கண்கைகால் தூய செய்ய மலர்களாச் சோதிச் செவ்வாய் முகிழதா, சாயல் சாமத் திருமேனி தண்பா சடையா, தாமரைநீள் வாசத் தடம்போல் வருவானே. ஒருநாள் காண வாராயே. (2) 8.5.1 3608 காண வாராய் என்றென்று கண்ணும் வாயும் துவர்ந்து,அடியேன் நாணி நன்னாட் டலமந்தால் இரங்கி யொருநாள் நீயந்தோ, காண வாராய் கருநாயி றுதிக்கும் கருமா மாணிக்க, நாணல் மலைபோல் சுடர்ச்சோதி முடிசேர் சென்னி யம்மானே. 8.5.2 3609 முடிசேர் சென்னி யம்மா.நின் மொய்பூந் தாமத் தண்டுழாய், கடிசேர் கண்ணிப் பெருமானே. என்றென் றேங்கி யழுதக்கால், படிசேர் மகரக் குழைகளும் பவள வாயும் நால்தோளும், துடிசே ரிடையும் அமைந்ததோர் தூநீர் முகில்போல் தோன்றாயே. 8.5.3 3610 தூநீர் முகில்போல் தோன்றும்நின் சுடர்க்கொள் வடிவும் கனிவாயும், தேநீர்க் கமலக் கண்களும் வந்தென் சிந்தை நிறைந்தவா, மாநீர் வெள்ளீ மலைதன்மேல் வண்கார் நீல முகில்போல, தூநீர்க் கடலுள் துயில்வானே. எந்தாய். சொல்ல மாட்டேனே. 8.5.4 3611 சொல்ல மாட்டேன் அடியேனுன் துளங்கு சோதித் திருப்பாதம், எல்லை யில்சீ ரிளஞாயி றிரண்டு போலென் னுள்ளவா., அல்லல் என்னும் இருள்சேர்தற் குபாயம் என்னே?, ஆழிசூழ் மல்லல் ஞால முழுதுண்ட மாநீர்க் கொண்டல் வண்ணனே. 8.5.5 3612 கொண்டல் வண்ணா. குடக்கூத்தா. வினையேன் கண்ணா. கண்ணா,என் அண்ட வாணா. என்றென்னை ஆளக் கூப்பிட் டழைத்தக்கால், விண்டன் மேல்தான் மண்மேல்தான் விரிநீர்க் கடல்தான் மற்றுத்தான், தொண்ட னேனுள் கழல்லாண ஒருநாள் வந்து தோன்றாயே. 8.5.6 3613 வந்து தோன்றா யன்றேலுன் வையம் தாய மலரடிக்கீழ், முந்தி வந்து யான்நிற்ப முகப்பே கூவிப் பணிகொள்ளாய், செந்தண் கமலக் கண்கைகால் சிவந்த வாயோர் கருநாயிறு, அந்த மில்லாக் கதிர்பரப்பி அலர்ந்த தொக்கும் அம்மானே. 8.5.7 3614 ஒக்கும் அம்மா னுருவமென் றுள்ளம் குழைந்து நாணாளும், தொக்க மேகப் பல்குழாங்கள் காணுந் தோறும் தொலைவன்நான், தக்க ஐவர் தமக்காயன்று றீரைம் பதின்மர் தாள்சாய, புக்க நல்தேர்த் தனிப்பாகா. வாராய் இதுவோ பொருத்தமே? 8.5.8 3615 இதுவோ பொருத்தம் மின்னாழிப் படையாய். ஏறும் இருஞ்சிசிறைப்புள், அதுவே கொடியா வுயர்த்தானே. என்றென் றேங்கி யழுதக்கால், எதுவே யாகக் கருதுங்கொல் இம்மா ஞாலம் பொறைதீர்ப்பான், மதுவார் சோலை யுத்தர மதுரைப் பிறந்த மாயனே? 8.5.9 3616 பிறந்த மாயா. பாரதம் பொருத மாயா. நீயின்னே, சிறந்த கால்தீ நீர்வான்மண் பிறவு மாய பெருமானே, கறந்த பாலுள் நெய்யேபோல் இவற்று ளெங்கும் கண்டுகொள், இறந்து நின்ற பெருமாயா. உன்னை எங்கே காண்கேனே? 8.5.10 3617 எங்கே காண்கேன் ஈன்துழாய் அம்மான் றன்னை யான்? என்றென்று அங்கே தாழ்ந்த சொற்களால் அந்தண் குருகூர்ச் சடகோபன், செங்கேழ் சொன்ன வாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள், இங்கே காண இப்பிறப்பே மகிழ்வர் எல்லியும் காலையே. (2) 8.5.11 3618 எல்லியும் காலையும் தன்னை நினைந்தெழ, நல்ல அருள்கள் நமக்கேதந் தருள்செய்வான், அல்லியந் தண்ணந் துழாய்முடி யப்பனூர், செல்வர்கள் வாழும் திருக்கடித் தானமே. (2) 8.6.1 3619 திருக்கடித் தானமும் என்னுடைச் சிந்தையும், ஒருக்கடுத் துள்ளே உறையும் பிரான்கண்டீர், செருக்கடுத் தன்று திகைத்த அரக்கரை, உருக்கெட வாளி பொழிந்த ஒருவனே. 8.6.2 3620 ஒருவ ரிருவரோர் மூவ ரெனநின்று, உருவு கரந்துள் ளுந்தோறும் தித்திப்பான், திருவமர் மார்வன் திருக்கடித் தானத்தை, மருவி யுரைகின்ற மாயப் பிரானே. 8.6.3 3621 மாயப் பிரானென வல்வினை மாய்ந்தற, நேயத்தி னால்நெஞ்சம் நாடு குடிகொண்டான், தேசத் தமரர் திருக்கடித் தானத்தை, வாசப் பொழில்மன்னு கோயில்கொண் டானே. 8.6.4 3622 கோயில்கொண் டான்தன் திருக்கடித் தானத்தை, கோயில்கொண் டானத னேடுமென் னெஞ்சகம், கோயில்கொள் தெய்வமெல் லாம்தொழ, வைகுந்தம் கோயில்கொண் டகுடக் கூத்தவம் மானே. 8.6.5 3623 கூத்தவம் மான்கொடி யேனிடர் முற்றவும், மாய்த்தவம் மான்மது சூதவம் மானுறை, பூத்த பொழில்தண் திருக்கடித் தானத்தை, ஏத்தநில் லாகுறிக் கொண்டமின் இடரே. 8.6.6 3624 கொண்டமின் இடர்கெட வுள்ளத்துக் கோவிந்தன், மண்விண் முழுதும் அளந்தவொண் டாமரை, மண்ணவர் தாம்தொழ வானவர் தாம்வந்து, நண்ணு திருக்கடித் தான நகரே. 8.6.7 3625 தான நகர்கள் தலைசிறந் தெங்கெங்கும், வானிந் நிலம்கடல் முற்றுமெம் மாயற்கே, ஆன விடத்துமென் நெஞ்சும் திருக்கடித் தான நகரும், தனதாயப் பதியே. 8.6.8 3626 தாயப் பதிகள்தலைசிறந் தெங்கெங்கும், மாயத்தி னால்மன்னி வீற்றிருந் தானுறை, தேயத் தமரர் திருக்கடித் தானத்துள், ஆயர்க் கதிபதி அற்புதன் தானே. 8.6.9 3627 அற்புதன் நாரா யணனரி வாமனன், நிற்பது மேவி யிருப்பதென் னெஞ்சகம், நற்புகழ் வேதியர் நான்மறை நின்றதிர், கற்பகச் சோலைத் திருக்கடித் தானமே. 8.6.10 3628 சோலை திருக்கடித் தானத் துறைதிரு மாலை, மதிள்குரு கூர்ச்சடகோபன்fசொல், பாலோ டமுதன்ன ஆயிரத் திப்பத்தும், மேலைவை குந்தத் திருத்தும் வியந்தே. (2) 8.6.11 3629 இருத்தும் வியந்தென்னைத் தன்பொன் னடிக்கீழென்று, அருத்தித் தெனைத்தோர் பலநாள் அழைத்தேற்கு, பொருத்த முடைவா மனன்தான் புகுந்து,என்தன் கருத்தை யுறவீற் றிருந்தான் கண்டுகொண்டே. (2) 8.7.1 3630 இருந்தான் கண்டுகொண் டெனதேழை நெஞ்சாளும், திருந்தாத வோரைவ ரைத்தேய்ந் தறமன்னி, பெருந்தாள் களிற்றுக் கருள்செய்த பெருமான், தருந்தான் அருள்தான் இனியான் அறியேனே. 8.7.2 3631 அருள்தா னினியான் அறியேன் அவனென்னுள், இருள்தான் அறவீற் றிருந்தான் இதுவல்லால், பொருள்தா னெனில்மூ வுலகும் பொருளல்ல, மருள்தானீ தோ?மாய மயக்கு மயக்கே. 8.7.3 3632 மாய மயக்குமயக் கானென்னை வஞ்சித்து, ஆயன் அமரர்க் கரியே றெனதம்மான், தூய சுடர்ச்சோதி தனதென்னுள் வைத்தான், தேயம் திகழும்தன் திருவருள் செய்தே. 8.7.4 3633 திகழுந்தன் திருவருள் செய்துல கத்தார், புகழும் புகழ்தா னதுகாட்டித் தந்து,என்னுள் திகழும் மணிக்குன்ற மொன்றே யொத்துநின்றான், புகழும் புகழ்மற் றெனக்குமோர் பொருளே? 8.7.5 3634 பொருள்மற் றெனக்குமோர் பொருள்தன்னில் சீர்க்கத் தருமேல்,பின் யார்க்கவன் தன்னைக் கொடுக்கும்?, கருமா ணிக்கக் குன்றத்துத் தாமரைபோல், திருமார்பு கால்கண்கை செவ்வாய் உந்தியானே. 8.7.6 3635 செவ்வாயுந்தி வெண்பல் சுடர்க்குழை, தன்னோடு எவ்வாய்ச் சுடரும் தம்மில்முன் வளாய்க்கொள்ள, செவ்வாய் முறுவலோ டெனதுள்ளத் திருந்த, அவ்வா யன்றியான் அறியேன்மற் றருளே. 8.7.7 3636 அறியேன்மற் றருளென்னை யாளும் பிரானார், வெறிதே யருள்செய்வர் செய்வார்கட் குகந்து, சிறியே னுடைச்சிந்தை யுள்மூ வுலகும்,தம் நெறியா வயிற்றிற்கொண்டு நின்றொழிந் தாரே. 8.7.8 3637 வயிற்றிற்கொண்டு நின்றொழிந் தாரும் யவரும், வயிற்றிற்கொண்டு நின்றொரு மூவுல கும்,தம் வயிற்றிற்கொண்டு நின்றவண் ணம்நின்ற மாலை, வயிற்றிற்கொண்டு மன்னவைத் தேன்மதி யாலே. 8.7.9 3638 வைத்தேன் மதியா லெனதுள்ளத் தகத்தே, எய்த்தே யொழிவேனல் லேனென்றும் எப்பொதும், மொய்த்தேய் திரைமோது தண்பாற் கடலுளால், பைத்தேய் சுடர்ப்பாம் பணைநம் பரனையே. 8.7.10 3639 சுடர்ப்பாம் பணைநம் பரனைத் திருமாலை, அடிச்சேர் வகைவண் குருகூர்ச் சடகோபன், முடிப்பான் சொன்னவா யிரத்திப்பத் தும்சன்மம் விட,தேய்ந் தறநோக்கும் தன்கண்கள் சிவந்தே. (2) 8.7.11 3640 கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து கனிந்து,உள்ளே வெண்பல் இலகு சுடரிலகு விலகு மகர குண்டலத்தன், கொண்டல் வண்ணன் சுடர்முடியன் நான்கு தோளன் குனிசார்ங்கன், ஒண்சங் கதைவா ளாழியான் ஒருவன் அடியே னுள்ளானே. (2) 8.8.1 3641 அடியே னுள்ளான் உடலுள்ளான் அண்டத் தகத்தான் புறத்துள்ளான், படியே யிதுவென் றுரைக்கலாம், படியன் அல்லன் பரம்பரன், கடிசேர் நாற்றத் துள்ளாலை இன்பத் துன்பக் கழிநேர்மை, ஒடியா இன்பப் பெருமையோன் உணர்வி லும்ப ரொருவனே. 8.8.2 3642 உணர்வி லும்ப ரொருவனை அவன தருளா லுறல்பொருட்டு,என் உணர்வி னுள்ளே யிருத்தினேன் அதுவும் அவன தின்னருளே, உணர்வும் உயிரும் உடம்பும்மற் றுலப்பி லனவும் பழுதேயாம், உணர்வைப் பெறவூர்ந் திறவேறி யானும் தானா யொழிந்தானே. 8.8.3 3643 யானும் தானா யொழிந்தானை யாதும் யவர்க்கும் முன்னோனை, தானும் சிவனும் பிரமனும் ஆகிப் பணைத்த தனிமுதலை, தேனும் பாலும் கன்னலும் அமுதும் ஆகித் தித்தித்து,என் ஊனி லுயிரி லுணர்வினில் நின்ற வொன்றை யுணர்ந்தேனே. 8.8.4 3644 நின்ற ஒன்றை யுணர்ந்தேனுக் கதனுள் நேர்மை அதுவிதுவென்று, ஒன்றும் ஒருவர்க் குணரலாகா துணர்ந்தும் மேலும் காண்பரிது சென்று சென்று பரம்பரமாய் யாது மின்றித் தேய்ந்தற்று, நன்று தீதென் றறிவரிதாய் நன்றாய் ஞானம் கடந்ததே. 8.8.5 3645 நன்றாய் ஞானம் கடந்துபோய் நல்லிந் திரிய மெல்லாமீர்த்து, ஒன்றாய்க் கிடந்த அரும்பெரும்பாழ் உலப்பி லதனை யுணர்ந்துணர்ந்து, சென்றாங் கின்ப துன்பங்கள் செற்றுக் களைந்து பசையற்றால், அன்றே யப்போ தேவீடு அதுவே வீடு வீடாமே. 8.8.6 3646 அதுவே வீடு வீடு பேற்றின்பந் தானும் அதுதேறி, எதுவே தானும் பற்றின்றி யாது மிலிக ளாகிற்கில், அதுவே வீடு வீடு பேற்றின்பந் தானும் அதுதேறாது, எதுவே வீடே தின்பம்? என் றெய்த்தா ரெய்த்தா ரெய்த்தாரே. 8.8.7 3647 எய்த்தா ரெய்த்தா ரெய்த்தாரென் றில்லாத் தாரும் புறத்தாரும் மொய்த்து,ஆங் கலறி முயங்கத்தாம் போகும் போது,உன் மத்தர்போல் பித்தே யேறி யனுராகம் பொழியும் போதெம் பெம்மானோடு ஒத்தே சென்று,அங் குளம்கூடக் கூடிற் றாகில் நல்லுறைப்பே. 8.8.8 3648 கூடிற் றாகில் நல்லுறைப்புக் கூடா மையைக் கூடினால், ஆடல் பறவை யுயர்கொடியெம் ஆய னாவ ததுவதுவே, வீடைப் பண்ணி யொருபரிசே எதிர்வும் நிகழ்வும் கழிவுமாய், ஓடித் திரியும் யோகிகளும் உளரு மில்லை யல்லரே. 8.8.9 3649 உளரு மில்லை யல்லராய் உளரா யில்லை யாகியே, உளரெம் மொருவர் அவர்வந்தென் உள்ளத் துள்ளே யுறைகின்றார் வளரும் பிறையும் தேய்பிறையும் போல் அசைவும் ஆக்கமும், வளரும் சுடரும் இருளும்போல் தெருளும் மருளும் மாய்த்தோமே. 8.8.10 3650 தெருளும் மருளும் மாய்த்துத்தன் திருந்து செம்பொற் கழலடிக்கீழ் அருளி யிருத்தும் அம்மானாம் அயனாம் சிவனாம்,திருமாலால் அருளப் பட்ட சடகோபன் ஓரா யிரத்து ளிப்பத்தால், அருளி யடிக்கீ ழிருத்தும்நம் அண்ணல் கருமா ணிக்கமே. (2) 8.8.11 3651 கருமா ணிக்க மலைமேல்மணித் தடந்தாமரைக் காடுகள்போல், திருமார்வு வாய்கண்கை யுந்திகாலுடை யாடைகள் செய்யபிரான் திருமா லெம்மான் செழுநீர்வயல் குட்டநாட்டுத் திருப்புலியூர், அருமாயன் பேரன்றிப் பேச்சிலள் அன்னைமீரிதற் கென்செய்கேனா. (2)8.9.1 3652 அன்னைமீ ரிதற்கென் செய்கேன்? அணிமேருவின் மீதுலவும், துன்னு சூழ்சுடர் ஞாயிறும் அன்றியும்பல் சுடர்களும்போல், மின்னு நீண்முடி யாரம்பல்கலன் றானுடை யெம்பெருமான், புன்னை யம்பொழில் சூழ்திருப் புலியூர் புகழுமிவளே. 8.9.2 3653 புகழு மிவள்நின் றிராப்பகல் பொருநீர்க்கடல் தீப்பட்டு,எங்கும் திகழு மெரியோடு செல்வதொப்பச் செழுங்கதி ராழிமுதல் புகழும் பொருபடை யேந்திப்போர் புக்கசுரரைப் பொன்றுவித்தான் திகழு மணிநெடு மாடம்நீடு திருப்பூலி யுர்வளமே. 8.9.3 3654 ஊர்வ ளம்கிளர் சோலையும் கரும்பும்பெருஞ் செந்நெலும்சூழ்ந்து ஏர்வ ளம்கிளர் தண்பணைக் குட்டநாட்டுத் திருப்பூலியுர், சீர்வ ளம்கிளர் மூவுல குண்டுமிழ் தேவபிரான், பேர்வ ளம்கிளர்ந் தன்றிப் பேச்சிலளின்றிப் புனையிழையே. 8.9.4 3655 புனையிழைகள் அணிவும் ஆடையுடையும் புதுக்க ணிப்பும், நினையும் நீர்மைய தன்றிவட்கிது நின்று நினைக்கப்புக்கால், சுனுயி னுள்தடந் தாமரை மலரும்தண் திருப்புலியுர், முனைவன் மூவுல காளியப்பன் திருவருள் மூழ்கினளே.8.9.5 3656 திருவருள் மூழ்கி வைகளும் செழுநீர்நிறக் கண்ணபிரான், திருவருள் களும்சேர்ந் தமைக்கடை யாளம் திருந்தவுள, திருவருள் அருளால் அவன்fசென்று சேர்தண் திருப்பூலியுர், திருவருள் கமுகொண் பழத்தது மெல்லியல் செவ்விதழே.8.9.6 3657 மெல்லிலைச் செல்வண் கொடிபுல்க வீங்கிளந் தாள்கமுகின், மல்லிலை மடல்வாழை யீங்கனி சூழ்ந்து மணம்கமழ்ந்து, புல்லிலைத் தெங்கி னூடுகால் உலவும்தண் திருப்பூலியுர், மல்லலம் செல்வக் கண்ணந்தாள் அடைந்தாள் இம் மடவரலே. 8.9.7 3658 மடவரல் அன்னைமீர்கட் கெஞ்சொல்லிச் சொல்லுகேன்? மல்லைச்செல்வ வடமொழி மறைவாணர் வேள்வியுள் நெய்யழல் வான்புகைபோய் திடவிசும் பிலமரர் நாட்டை மறைக்கும்தண் திருப்பூலியுர், படவர வணையான் றன்நாமம் அல்லால் பரவா ளிவளே. 8.9.8 3659 பரவா ளிவள்நின் றிராப்பகல் பனிநீர்நிறக் கண்ணபிரான், விரவா ரிசைமறை வேதியரொலி வேலையின் நின்றொலிப்ப, கரவார் தடந்தொறும் தாமரைக் கயந்தீவிகை நின்றலரும், புரவார் கழனிகள் சூழ்திருப் புலியூர்ப்புக ழன்றிமற்றே. 8.9.9 3660 அன்றிமற் றோருபாய மென்னிவ ளந்தண்டு ழாய்கமழ்தல், குன்ற மாமணி மாடமாளிகைக் கோலக்கு ழாங்கள்மல்கி, தென்தி சைத்தில தம்புரைக் குட்டநாட்டுத் திருப்பூலியுர், நின்ற மாயப்பி ராந்திரு வருளாமிவள் நேர்ப்பட்டதே. 8.9.10 3661 நேர்ப்பட்ட நிறைமூ வுலகுக்கும் நாயகன் றன்னடிமை, நேர்ப்பட்ட தொண்டர்தொண்டர் தொண்டர்தொண்டன் சடகோ பன்,சொல் நேர்ப்பட்ட தமிழ்மாலை யாயிரத்துள் இவையு மோர்பத்தும் நேர்ப்பட் டாரவர், நேர்ப்பட்டார் நெடுமாற்கடி மைசெய்யவே. (2) 8.9.11 அறுசீர் ஆசிரிய விருத்தம் 3662 நெடுமாற் கடிமை செய்வேன்போல் அவனை கருத வஞ்சித்து, தடுமாற் றற்ற தீக்கதிகள் முற்றும் தவிர்ந்த சதிர்நினைந்தால், கொடுமா வினையேன் அவனடியார் அடியே கூடும் இதுவல்லால், விடுமா றென்ப தென்னந்தோ. வியன்மூ வுலகு பெறினுமே? (2)9.9.1 3663 வியன்மூ வுலகு பெறினும்போய்த் தானே தானே யானாலும், புயல்மே கம்போல் திருமேனி அம்மான் புனைபூங் கழலடிக்கீழ், சயமே யடிமை தலைநின்றார் திருத்தாள் வணங்கி, இம்மையே பயனே யின்பம் யான்பெற்ற துறுமோ பாவி யேனுக்கே? 9.9.2 3664 உறுமோ பாவி யேனுக்கிவ் வுலகம் மூன்றும் உடன்நிறைய, சிறுமா மேனி நிமிர்த்தவென் செந்தா மரைக்கண் திருக்குறளன் நறுமா விரைநாண் மலரடிக்கீழ்ப் புகுதல் அன்றி அவனடியார், சிறுமா மனிச ராயென்னை ஆண்டா ரிங்கே திரியவே. 9.9.3 3665 இங்கே திரிந்தேற் கிழக்குற்றென். இருமா நிலமுன் னுண்டுமிழ்ந்த, செங்கோ லத்த பவளவாய்ச் செந்தா மரைக்க ணென்னம்மான் பொங்கேழ் புகழ்கள் வாயவாய்ப் புலன்கொள் வடிவென் மனத்தாய் அங்கேய் மலர்கள் கையவாய் வழிபட் டோ ட அருளிலே? 9.9.4 3666 வழிபட் டோ ட அருள்பெற்று மாயன் கோல மலரடிக்கீழ், சுழிபட் டோ டும் சுடர்ச்சோதி வெள்ளத் தின்புற் றிருந்தாலும், இழிபட் டோ டும் உடலினிற் பிறந்து தன்fசீர் யான்கற்று, மொழிபட் டோ டும் கவியமுத நுகர்ச்சி யுறுமோ முழுதுமே? 9.9.5 3667 நுகர்ச்சி யுறுமோ மூவுலகின் வீடு பேறு தன்கேழில், புகர்ச்செம் முகத்த களிறட்ட பொன்னா ழிக்கை யென்னம்மான், நிகர்ச்செம் பங்கி யெரிவிழிகள் நீண்ட அசுர ருயிரெல்லாம், தகர்த்துண் டுழலும் புட்பாகன் பெரிய தனிமாப் புகழே? 9.9.6 3668 தனிமாப் புகழே யெஞ்ஞான்றும் நிற்கும் படியாத் தான்தோன்றி, முனிமாப் பிரம முதல்வித்தாய் உலகம் மூன்றும் முளைப்பித்த, தனிமாத் தெய்வத் தளிரடிக்கீழ்ப் புகுதல் அன்றி அவனடியார், நனிமாக் கலவி யின்பமே நாளும் வாய்க்க நங்கட்கே. 9.9.7 3669 நாளும் வாய்க்க நங்கட்கு நளிர்நீர்க் கடலைப் படைத்து,தன் தாளும் தோளும் முடிகளும் சமனி லாத பலபரப்பி, நீளும் படர்பூங் கற்பகக் காவும் நிறைபன் னாயிற்றின், கோளு முடைய மணிமலைபோல் கிடந்தான் தமர்கள் கூட்டமே. 9.9.8 3670 தமர்கள் கூட்ட வல்வினையை நாசஞ் செய்யும் சதிர்மூர்த்தி, அமர்கொள் ஆழி சங்குவாள் வில்தண் டாதி பல்படையன், குமரன் கோல ஐங்கணைவேள் தாதை கோதில் அடியார்தம். தமர்கள் தமர்கள் தமர்களாம் சதிரே வாய்க்க தமியேற்கே. 9.9.9 3671 வாய்க்க தமியேற் கூழிதோ றூழி யூழி மாகாயாம் பூக்கொள் மேனி நான்குதோள் பொன்னா ழிக்கை யென்னம்மான், நீக்க மில்லா அடியார்தம் அடியார் அடியார் அடியாரெங் கோக்கள், அவர்க்கே குடிகளாய்ச் செல்லும் நல்ல கோட்பாடே. 9.9.10 3672 நல்ல கோட்பாட் டுலகங்கள் மூன்றி னுள்ளும் தான்நிறைந்த, அல்லிக் கமலக் கண்ணனை அந்தண் குருகூர்ச் சடகோபன், சொல்லப் பட்ட ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள், நல்ல பதத்தால் மனைவாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே. (2) 9.9.11 திருவாய் மொழி ஒன்பதாம் பத்து 3673 கொண்ட பெண்டிர் மக்களுற்றார் சுற்றத் தவர்பிறரும், கண்ட தோடு பட்டதல்லால் காதல்மற்று யாதுமில்லை, எண்டி சையும் கீழும்மேலும் முற்றவு முண்டபிரான், தொண்ட ரோமா யுய்யலல்லா லில்லைகண் டீர்துணையே. (2) 9.1.1 3674 துணையும் சார்வு மாகுவார்போல் சுற்றத் தவர்பிறரும், அணையவந்த ஆக்கமுண்டேல் அட்டைகள்போல்சுவைப்பர், கணையொன் ராலே யேழ்மாமரமு மெய்தேங் கார்முகிலை, புணையென் றுய்யப் போகிலல்லா லில்லைகண் டீர்பொருளே. 9.1.2 3675 பொருள்கை யுண்டாய்ச் செல்லக் காணில் போற்றியென் றேற்றெழுவர், இருள்கொள் துன்பத் தின்மை காணில் என்னேஎன் பாருமில்லை, மருள்கொள் செய்கை யசுரர் மங்க வடமது ரைப்பிறந்தாற்கு அருள்கொள் ஆளாய் உய்யல் அல்லால் இல்லைகண் டீரரணே. 9.1.3 3676 அரணம் ஆவர் அற்ற காலைக் கென்றென் றமைக்கப்பட்டார், இரணம் கொண்ட தெப்பர் ஆவர் இன்றியிட் டாலுமஃஅதே, வருணித் தென்னே வடமது ரைப்பி றந்தவன் வண்புகழே, சரணென் றுய்யப் போகல் அல்லால் இல்லைகண் டீர்சதிரே. 9.1.4 3677 சதுரம் என்று தம்மைத் தாமே சம்மதித் தின்மொழியார், மதுர போக மதுவுற் றவரே வைகிமற் றொன்றுறுவர், அதிர்கொள் செய்கை யசுரர் மங்க வடமது ரைப்பிறந்தாற்கு , எதிர்கொள் ஆளாய் உய்யல் அல்லால் இல்லைகண் டீரின்பமே. 9.1.5 3678 இல்லை கண்டீர் இன்பம் அந்தோ. உள்ளது நினையாதே, தொல்லை யார்க ளெத்த னைவர் தோன்றிக் கழிந்தொழிந்தார்? மல்லை மூதூர் வடம துரைப்பி றந்தவன் வண்புகழே, சொல்லி யுய்யப் போகல் அல்லால் மற்றொன்றில் லைசுருக்கே. 9.1.6 3679 மற்றொன் றில்லை சுருங்கச் சொன்னோம் மாநிலத் தெவ்வுயிர்க்கும், சிற்ற வேண்டா சிந்திப் பேயமை யும்கண் டீர்களந்தோ. குற்றமன் றெங்கள் பெற்றத் தாயன் வடமது ரைப்பிறந்தான், குற்ற மில்சீர் கற்று வைகல் வாழ்தல்கண் டீர்குணமே. 9.1.7 3680 வாழ்தல் கண்டீர் குணமி தந்தோ. மாயவன் அடிபரவி, போழ்து போக வுள்ள கிற்கும் புன்மையி லாதவர்க்கு, வாழ்து ணையா வடம துரைப்பி றந்தவன் வண்புகழே, வீழ்து ணையாய்ப் போமி தனில்யா துமில்லை மிக்கதே. 9.1.8 3681 யாது மில்லை மிக்க தனிலென் றன்ற துகருதி, காது செய்வான் கூதை செய்து கடைமுறை வாழ்கையும்போம், மாது கிலிங்கொ டிக்கொள் மாட வடமது ரைப்பிறந்த, தாது சேர்தாள் கண்ணன் அல்லால் இல்லைகண் டீரிசரணே. 9.1.9 3682 கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரணது நிற்கவந்து, மண்ணின் பாரம் நீக்கு தற்கே வடமது ரைப்பிறந்தான், திண்ண மாநும் முடைமை யுண்டேல் அவனடி சேர்ந்துய்ம்மினோ, எண்ண வேண்டா நும்ம தாதும் அவனன்றி மற்றில்லையே. 9.1.10 3683 ஆதும் இல்லை மற்ற வனிலென் றதுவே துணிந்து, தாது சேர்தோள் கண்ண னைக்குரு கூர்ச்சடகோபன்fசொன்ன, தீதி லாத வொண்தமிழ் கள் இவை ஆயிரத்து ளிப்பத்தும், ஓத வல்ல பிராக்கள் நம்மை யாளுடை யார்கள்பண்டே. (2) 9.1.11 3684 பண்டைநா ளாலே நிந்திரு வருளும் பங்கயத் தாள்திரு வருளும் கொண்டு,நின் கோயில் சீய்த்துப்பல் படிகால் குடிகுடி வழிவந்தாட் செய்யும், தொண்டரோர்க் கருளிச் சோதிவாய் திறந்துன் தாமரைக் கண்களால் நோக்காய், தெண்டிரைப் பொருநல் தண்பணை சூழ்ந்த திருபுளிங் குடிக்கிடந் தானே. (2) 9.2.1 3685 குடிகிடந் தாக்கஞ் செய்துநின் தீர்த்த அடிமைக்குற் றேவல்செய்து, உன்பொன் அடிக்கட வாதே வழிவரு கின்ற அடியரோர்க் கருளி,நீ யொருநாள் படிக்கள வாக நிமிர்த்தநின் பாத பங்கய மேதலைக் கணியாய், கொடிக்கொள்பொன் மதிள்சூழ் குளிர்வயல் சோலைத் திருபுளிங் குடிக்கிடந் தானே. 9.2.2 3686 கிடந்தநாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தியுன் திருவுடம் பசைய, தொடர்ந்துகுற் றவேல் செய்துதொல் லடிமை வழிவரும் தொண்டரோர்க் கருளி, தடந்தோள்தா மரைக்கண் விழித்துநீ யெழுந்துன் தாமரை மங்கையும் நீயும், இடங்கொள்மூ வுலகும் தொழவிருந் தருளாய் திருபுளிங் குடிக்கிடந் தானே. 9.2.3 3687 புளிகுடிக் கிடந்து வரகுண மங்கை இருந்துவை குந்தத்துள் நின்று, தெளிந்தவென் சிந்தை அகங்கழி யாதே என்னையாள் வாயெனக் கருளி, நளிந்தசீ ருலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள்கூத் தாடிநின் றார்ப்ப, பளிங்குநீர் முகிலின் பவளம் போல் கனிவாய் சிவப்பநீ காணவா ராயே. 9.2.4 3688 பவளம் போல் கனிவாய் சிவப்பநீ காண வந்துநின் பன்னிலா முத்தம், தவழ்கதிர் முறுவல் செய்துநின் திருக்கண் டாமரை தயங்குநின் றருளாய், பவளநன் படர்க்கீழ்ச் சங்குறை பொருநல் தண்திருப் புளிங்குடிக் கிடந்தாய், கவளமா களிற்றி னிடர்கெடத் தடத்துக் காய்சினப் பறவையூர்ந் தானே. 9.2.5 3689 காய்சினப் பறவை யூர்ந்துபொன் மலையின் மீமிசைக் கார்முகில் போல, மாசின மாலி மாலிமான் என்றங் கவர்படக் கனன்றுமுன் னின்ற, காய்சின வேந்தே. கதிர்முடி யானே. கலிவயல் திருபுளிங் குடியாய், காய்சின ஆழி சங்குவாள் வில்தண் டேந்தியெம் இடர்கடி வானே. 9.2.6 3690 எம்மிடர் கடிந்திங் கென்னையாள் வானே. இமையவர் தமக்குமாங் கனையாய், செம்மடல் மலரும் தாமரைப் பழனத் தண்திருப் புளிங்குடிக் கிடந்தாய், நம்முடை யடியர் கவ்வைகண் டுகந்து நாம்களித் துளநலம் கூர, இம்மட வுலகர் காணநீ யொருநாள் இருந்திடாய் எங்கள்கண் முகப்பே. 9.2.7 3691 எங்கள்கண் முகப்பே உலகர்கள் எல்லாம் இணையடி தொழுதெழுந் திறைஞ்சி தங்களன் பாரத் தமதுசொல் வலத்தால் தலைதலைச் சிறந்தபூ சிப்ப, திங்கள்சேர் மாடத் திருப்புளிங் குடியாய். திருவைகுந் தத்துள்ளாய். தேவா, இங்கண்மா ஞாலத் திதனுளு மொருநாள் இருந்திடாய் வீற்றிடங் கொண்டே. 9.2.8 3692 வீற்றிடங் கொண்டு வியங்கொள்மா ஞாலத் திதனுளு மிருந்திடாய், அடியோம் போற்றியோ வாதே கண்ணினை குளிரப் புதுமலர் ஆகத்தைப் பருக, சேற்றிள வாளை செந்நெலூ டுகளும் செழும்பணைத் திருப்புளிங் குடியாய், கூற்றமாய் அசுரர் குலமுதல் அரிந்த கொடுவினைப் படைகள்வல் லானே. 9.2.9 3693 கொடுவினைப் படைகள் வல்லையாய் அமரர்க் கிடர்கெட, அசுரர்கட் கிடர்செய், கடுவினை நஞ்சே. என்னுடை அமுதே. கலிவயல் திருப்புளிங் குடியாய், வடிவிணை யில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும்மெல் லடியை, கொடுவினை யேனும் பிடிக்கநீ ஒருநாள் கூவுதல் வருதல்செய் யாயே. 9.2.10 3694 கூவுதல் வருதல் செய்திடாய் என்று குரைகடல் கடைந்தவன் தன்னை, மேவிநன் கமர்ந்த வியன்புனல் பொருநல் வழுதிநா டஞ்சட கோபன், நாவியல் பாடல் ஆயிரத் துள்ளும் இவையுமோர் பத்தும்வல் லார்கள், ஓவுத லின்றி யுலகம்மூன் றளந்தான் அடியிணை யுள்ளத்தோர் வாரே. (2) 9.2.11 3695 ஓரா யிரமாய் உலகேழ் அளிக்கும் பேரா யிரம்கொண் டதோர்பீ டுடையன் காரா யினகா ளநன்மே னியினன், நாரா யணன்நங் கள்பிரான் அவனே. (2) 9.3.1 3696 அவனே அகல்ஞா லம்படைத் திடந்தான், அவனே யஃதுண் டுமிழ்ந்தான் அளந்தான், அவனே யவனும் அவனும் அவனும், அவனே மற்றெல்லா மும் அறிந் தனமே. 9.3.2 3697 அறிந்தன வேத அரும்பொருள் நூல்கள், அறிந்தன கொள்க அரும்பொருள் ஆதல், அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி, அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே. 9.3.3 3698 மருந்தே நங்கள் போகம கிழ்ச்சிக்கென்று, பெருந்தே வர்குழாங் கள்பிதற் றும்பிரான் கருந்தேவ னெம்மான் கண்ணன் விண்ணுலகம் தரும்தே வலைசோ ரேல்கண்டாய் மனமே. 9.3.4 3699 மனமே. உன்னைவல் வினையேன் இரந்து, கனமே சொல்லினேன் இதுசோ ரேல்கண்டாய், புனமே வியபூந் தண்டுழாய் அலங்கல், இனமே துமிலா னையடை வதுமே. 9.3.5 3700 அடைவ துமணி யார்மலர் மங்கைதோள், மிடைவ துமசு ரர்க்குவெம் போர்களே, கடைவ தும்கட லுள் அமுது, என்மனம் உடைவ தும் அவற் கேயொருங் காகவே. 9.3.6 3701 ஆகம் சேர்நர சிங்கம தாகி,ஓர் ஆகங் வள்ளுகி ரால்பிளந் தானுறை, மாக வைகுந்தம் காண்பதற்கு, என்மனம் ஏக மெண்ணும் இராப்பக லின்றியே. 9.3.7 3702 இன்றிப் போக இருவினை யும்கெடுத்து, ஒன்றி யாக்கை புகாமையுய் யக்கொள்வான், நின்ற வேங்கடம் நீணிலத் துள்ளது, சென்று தேவர்கள் கைதொழு வார்களே. 9.3.8 3703 தொழுது மாமலர் நீர்சுடர் தூபம்கொண்டு, எழுது மென்னும் இதுமிகை யாதலில், பழுதில் தொல்புகழ்ப் பாம்பணைப் பள்ளியாய், தழுவு மாறறி யேனுன தாள்களே. 9.3.9 3704 தாள தாமரை யானுன துந்தியான், வாள்கொள் நீள்மழு வாளியுன் ஆகத்தான், ஆள ராய்த்தொழு வாரும் அமரர்கள், நாளும் என்புகழ் கோவுன சீலமே? 9.3.10 3705 சீல மெல்லையி லானடி மேல்,அணி கோல நீள்குரு கூர்ச்சட கோபன்fசொல், மாலை யாயிரத் துள்ளிவை பத்தினின் பாலர், வைகுந்த மேறுதல் பான்மையே. (2) 9.3.11 3706 மையார் கருங்கண்ணி கமல மலர்மேல் செய்யாள், திருமார் வினில்சேர் திருமாலே, வெய்யார் சுடராழி சுரிசங்க மேந்தும் கையா, உனைக்காணக் கருதுமென் கண்ணே. 9.4.1 3707 கண்ணே யுனைக்காணக் கருதி,என் னெஞ்சம் எண்ணே கொண்ட சிந்தையதாய் நின்றியம்பும், விண்ணோர் முனிவர்க் கென்றும்காண் பரியாயை, நண்ணா தொழியே னென்றுநான் அழைப்பனே. 9.4.2 3708 அழைக்கின்ற வடிநாயேன் நாய்கூழை வாலால், குழைக்கின் றதுபோல் என்னுள்ளம் குழையும், மழைக்கன்று குன்றமெடுத்த தாநிரை காத்தாய், பிழைக்கின்ற தருளென்று பேதுறு வேனே. 9.4.3 3709 உறுவதிது வென்றுனக் காட்பட்டு, நின்கண் பெறுவ தெதுகொலென்று பேதையேன் நெஞ்சம், மறுகல்செய்யும் வானவர் தானவர்க் கென்றும், அறிவ தரிய அரியாய அம்மானே. 9.4.4 3710 அரியாய அம்மானை அமரர் பிரானை, பெரியானைப் பிரமனை முன்படைத் தானை, வரிவாள் அரவின் அணைப்பள்ளி கொள்கின்ற, கரியான் கழல்காணக் கருதும் கருத்தே. 9.4.5 3711 கருத்தே யுனைக்காணக் கருதி,என் னெஞ்சத் திருத்தாக இருத்தினேன் தேவர்கட் கெல்லாம் விருத்தா, விளங்கும் சுடர்ச்சோதி யுயரத் தொருத்தா, உனையுள்ளும் என்னுள்ளம் உகந்தே. 9.4.6 3712 உகந்தே யுனையுள்ளு மென்னுள்ளத்து, அகம்பால் அகந்தான் அமர்ந்தே யிடங்கொண்ட அமலா, மிகுந்தான வன்மார் வகலம் இருகூறா நகந்தாய், நரசிங் கமதாய வுருவே. 9.4.7 3713 உருவா கியாஅறு சமயங்கட் கெல்லாம், பொருவாகி நின்றான் அவனெல்லாப் பொருட்கும், அருவாகிய ஆதியைத் தேவர்கட் கெல்லாம், கருவாகிய கண்ணனைக் கண்டுகொண் டேனே. 9.4.8 3714 கண்டுகொண் டேனேகண் ணிணையாரக் களித்து, பண்டை வினையாயின பற்றோ டறுத்து, தொண்டர்க் கமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன், அண்டத் தமரர் பெருமான். அடியேனே. 9.4.9 3715 அடியா னிவனென் றெனக்கா ரருள்செய்யும் நெடியானை, நிறைபுகழ் அஞ்சிறைப் புள்ளின் கொடியானை, குன்றாமல் உலகம் அளந்த அடியானை, அடைந்தடி யேனுய்ந்த வாறே. 9.4.10 3716 ஆற மதயானை அடர்த்தவன் றன்னை, சேறார் வயல்தென் குருகூர்ச் சடகோபன், நூறே சொன்னவோ ராயிரத்து ளிப்பத்தும், ஏறே தரும்வா னவர்தமின் னுயிர்க்கே. (2) 9.4.11 3717 இன்னுயிர்ச் சேவலும் நீரும் கூவிக்கொண்டுயிங் கெத்தனை, என்னுயிர் நோவ மழிற்றேன் மின்குயில் பேடைகாள், என்னுயிர்க் கண்ண பிரானை நீர்வரக் கூவுகிலீர், என்னுயிர்க் கூவிக் கொடுப்பார்க்கும் இத்தனை வேண்டுமோ? (2) 9.5.1 3718 இத்தனை வேண்டுவ தன்றந்தோ. அன்றில் பேடைகாள், எத்தனை நீரும் நுஞ்சே வலும்கரைந் தேங்குதிர், வித்தகன் கோவிந்தன் மெய்ய னல்ல னொருவர்க்கும், அத்தனை யாமினி யென்னு யிரவன் கையதே. 9.5.2 3719 அவன்கைய தேயென தாருயிர் அன்றில் பேடைகாள், எவன்சொல்லி நீர்குடைந் தாடு திர்புடை சூழவே, தவம்செய் தில்லா வினையாட்டி யெனுயி ரிங்குண்டோ , எவன்சொல்லி நிற்றும்நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே. 9.5.3 3720 கூக்குரல் கேட்டும் நங்f கண்ணன் மாயன் வெளிப்படான், மேற்கிளை கொள்ளேன்மின் நீரும் சேவலும் கோழிகாள், வாக்கும் மனமும் கரும மும்நமக் காங்கதே, ஆக்கையு மாவியும் அந்தரம் நின்று ழலுமே. 9.5.4 3721 அந்தரம் நின்றுழல் கின்ற யானுடைப் பூவைகாள், நுந்திரத் தேது மிடையில் லைகுழ றேன்மினோ, இந்திர ஞாலங்கள் காட்டியிவ் வேழுல கும்கொண்ட, நந்திரு மார்பன் நம்மாவி யுண்ணநன் கெண்ணினான். 9.5.5 3722 நன்கெண்ணி நான்வ ளர்த்த சிறுகிளிப் பைதலே, இன்குரல் நீமிழிற் றேலென் னாருயிர்க் காகுத்தன், நின்செய்ய வாயொக்கும் வாயங்கண் ணங்கை காலினன், நின்பசுஞ் சாம நிறத்தன் கூட்டுண்டு நீங்கினான். 9.5.6 3723 கூட்டுண்டு நீங்கி கோலத் தாமரைக் கட்செவ்வாய், வாட்டமி லெங்கரு மாணிக்கம் கண்ணன் மாயன்போல், கோட்டிய வில்லொடு மின்னும் மேகக் குழாங்கள்காள், காட்டேன் மின்நும் முருவென் னுயிர்க்கது காலனே. 9.5.7 3724 உயிர்க்கது காலனென் றும்மை யானிரந் தேற்கு,நீர் குயிற்பைதல் காள்.கண்ணன் நாம மேகுழ றிக்கொன்றீர், தயிர்ப்ப ழஞ்சோற் றொடுபா லடிசிலும் தந்து,சொல் பயிற்றிய நல்வள மூட்டினீர் பண்புடை யீரே. 9.5.8 3725 பண்புடை வண்டொடு தும்பிகாள். பண்மிழற் றேன்மின், புண்புரை வெல்கொடு குத்தாலொக் கும்நும் இன்குரல், தண்பெரு நீர்த்தடந் தாமரை மலர்ந்தா லொக்கும் கண்பெருங் கண்ணன், நம்மாவி யுண்டெழ நண்ணினான். 9.5.9 3726 எழநண்ணி நாமும் நம்வான நாடனோ டொன்றினோம், பழனநன் னாரைக் குழாங்கள் காள்.பயின் றென்னினி, இழைநல்ல வாக்கை யும்பைய வேபுயக் கற்றது, தழைநல்ல இன்பம் தலைப்பெய் தெங்கும் தழைக்கவே. 9.5.10 3727 இன்பம் தலைப்பெய் தெங்கும் தழைத்தபல் லூழிக்கு, தண்புக ழேத்தத் தனக்கருள் செய்த மாயனை, தெங்குரு கூர்ச்சட கோபன்fசொல் லாயிரத் துள்ளிவை, ஒன்பதோ டொன்றுக் கும்மூ வுலகு முருகுமே. (2) 9.5.11 3728 உருகுமால் செஞ்சம் உயிரின் பரமன்றி, பெருகுமால் வேட்கையும் எஞ்செய்கேன் தொண்டனேன், தெருவெல்லாம் காவி கமழ்திருக் காட்கரை, மருவிய மாயன்தன் மாயம் நினைதொறே. (2) 9.6.1 3729 நினைதொறும் சொல்லுந் தொறும்நெஞ் சிடிந்துகும் வினைகொள்சீர் பாடிலும் வேமென தாருயிர், சுனைகொள்பூஞ் சோலைத்தென் காட்கரை யென்னப்பா, நினைகிலேன் நானுனக் காட்செய்யும் நீர்மையே. 9.6.2 3730 நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து,என்னை ஈர்மைசெய் தென்னுயி ராயென் னுயிருண்டான், சீர்மல்கு சோலைத்தென் காட்கரை யென்னப்பன், கார்முகில் வண்ணன்தன் கள்வம் அறிகிலேன். 9.6.3 3731 அறிகிலேன் தன்னுள் அனைத்துலகம் நிற்க, நெறிமையால் தானும் அவற்றுள்நிற் கும்பிரான், வெறிகமழ் சோலைத்தென் காட்கரை என்னப்பன், சிறியவென் னாருயி ருண்ட திருவருளே. 9.6.4 3732 திருவருள் செய்பவன் போலவென் னுள்புகுந்து, உருவமும் ஆருயிரும் உடனே யுண்டான், திருவளர் சோலைத்தென் காட்கரை யென்னப்பன், கருவளர் மேனிஎன் கண்ணங்கள் வங்களே. 9.6.5 3733 எங்கண்ணன் கள்வம் எனக்குச்செம் மாய்நிற்கும், அங்கண்ண னுண்டவென் னாருயிர்க் கோதிது, புங்கண்மை யெய்திப் புலம்பி யிராப்பகல், எங்கண்ண னென்றவன் காட்கரை யேத்துமே. 9.6.6 3734 காட்கரை யேத்தும் அதனுள்கண் ணாவென்னும், வேட்கைநோய் கூர நினைந்து கரைந்துகும், ஆட்கொள் வானொத்தென் னுயிருண்ட மாயனால், கோட்குறை பட்டதென் னாருயிர் கோளுண்டே. 9.6.7 3735 கோளுண்டான் அன்றிவந் தென்னுயிர் தானுண்டான், நாளுநாள் வந்தென்னை முற்றவும் தானுண்டான், காளநீர் மேகத்தென் காட்கரை யென்னப்பற்கு, ஆளன்றே பட்டதென் ஆருயிர் பட்டதே. 9.6.8 3736 ஆருயிர் பட்ட தெனதுயிர் பட்டது, பேரிதழ் தாமரைக் கண்கனி வாயதோர், காரெழில் மேகத்தென் காட்கரை கோயில்கொள், சீரெழில் நால்தடந் தோள்தெய்வ வாரிக்கே. 9.6.9 3737 வாரிக்கொண் டுன்னை விழுங்குவன் காணில் என்று ஆர்வுற்ற என்னை யொழியவென் னில்முன்னம் பாரித்து, தானென்னை முற்றப் பருகினான், காரொக்கும் காட்கரை யப்பன் கடியனே. 9.6.10 3738 கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான்றன்னை, கொடிமதிள் தெங்குரு கூர்ச்சட கோபஞ்சொல், வடிவமை யாயிரத் திப்பத்தி னால்,சன்மம் முடிவெய்தி நாசங்கண் டீர்களெங் கானலே. (2) 9.6.11 3739 எங்கானல் அகங்கழிவாய் இரைத்தேர்ந்திங் கினிதமரும், செங்கால மடநாராய். திருமூழிக் களத்துறையும், கொங்கார்பூந் துழாய்முடியெங் குடக்கூத்தர்க் கென்fதூதாய், நுங்கால்க ளென் தலைமேல் கெழுமீரோ நுமரோடே. (2) 9.7.1 3740 நுமரோடும் பிரியாதே நீரும்நும் சேவலுமாய், அமர்காதல் குருகினங்காள். அணிமூழிக் களத்துறையும், எமராலும் பழிப்புண்டிங் கென்?தம்மால் இழிப்புண்டு, தமரோடங் குறைவார்க்குத் தக்கிலமே. கேளீரே. 9.7.2 3741 தக்கிலமே கேளீர்கள் தடம்புனல்வாய் இரைதேரும், கொக்கினங்காள். குருகினங்காள். குளிர்மூழிக் களத்துறையும், செக்கமலத் தலர்போலும் கண்கைகால் செங்கனிவாய், அக்கமலத் திலைபோலும் திருமேனி யடிகளுக்கே. 9.7.3 3742 திருமேனி யடிகளுக்கு தீவினையேன் விடுதூதாய் திருமூழிக் களமென்னும் செழுநகர்வாய் அணிமுகில்காள், திருமேனி யவட்கருளீர் என்றக்கால், உம்மைத்தன் திருமேனி யொளியகற்றித் தெளிவிசும்பு கடியுமே? 9.7.4 3743 தெளிவிசும்பு கடிதோடித் தீவளைத்து மின்னிலகும், ஒளிமுகில்காள். திருமூழிக் களத்துறையும் ஒண்சுடர்க்கு, தெளிவிசும்பு திருநாடாத் தீவினையேன் மனத்துறையும், துளிவார்கட் குழலார்க்கென் தூதுரைத்தல் செப்பமினே. 9.7.5 3744 தூதுரைத்தல் செப்புமின்கள் தூமொழியாய் வண்டினங்காள், போதிரைத்து மதுநுகரும் பொழில்மூழிக் களத்துறையும், மாதரைத்தம் மார்வகத்தே வைத்தார்க்கென் வாய்மாற்றம், தூதுரைத்தல் செப்புதிரேல் சுடர்வளையும் கலையுமே. 9.7.6 3745 சுடர்வளுயும் கலையுங்கொண்டு அருவினையேன் தோள்துறந்த, படர்புகழான் திருமூழிக் களத்துறையும் பங்கயக்கட், சுடர்பவள வாயனைக்கடு ஒருநாளோர் தூய்மாற்றம், படர்பொழில்வாய்க் குருகினங்காள். எனக்கொன்று பணியீரே. 9.7.7 3746 எனக்கொன்று பணியீர்கள் இரும்பொழில்வாய் இரைதேர்ந்து, மனக்கின்பம் படமேவும் வண்டினங்காள். தும்பிகாள், கனக்கொள்திண் மதிள்புடைசூழ் திருமூழிக் களத்துறையும், புனல்கொள்கா யாமேனிப் பூந்துழாய் முடியார்க்கே. 9.7.8 3747 பூந்துழாய் முடியார்க்குப் பொன்னாழி கையார்க்கு, ஏந்துநீ ரிளங்குருகே. திருமூழிக் களத்தார்க்கு, ஏந்துபூண் முலைப்பயந்தென் இணைமலர்க்கண் ணீர்ததும்ப, தாம்தம்மைக் கொண்டகல்தல் தகவன்றென் றுரையீரே. 9.7.9 3748 தகவன்றென் றுரையீர்கள் தடம்புனல்வாய் இரைதேர்ந்து, மிகவின்பம் படமேவும் மென்னடைய அன்னங்காள், மிகமேனி மெலிவெய்தி மேகலையும் ஈடழிந்து,என் அகமேனி யொழியாமே திருமூழிக் களத்தார்க்கே. 9.7.10 3749 ஒழிவின்றித் திருமூழிக் களத்துறையும் ஒண்சுடரை, ஒழிவில்லா அணிமழலைக் கிளிமொழியாள் அலற்றியசொல், வழுவில்லா வண்குருகூர்ச் சடகோபன் வாய்ந்துரைத்த, அழிவில்லா ஆயிரத்திப் பத்தும்நோய் அறுக்குமே. (2) 9.7.11 3750 அறுக்கும் வினையா யின ஆகத்தவனை, நிறுத்தம் மனத்தொன் றியசிந் தையினார்க்கு, வெறித்தண் மலர்சோ லைகள்சுழ் திருநாவாய், குறுக்கும் வகையுண்டு கொலொகொடி யேற்கே? (2) 9.8.1 3751 கொடியே ரிடைக்கோ கனகத் தவள்கேள்வன், வடிவேல் தடங்கண் மடப்பின்னை மணாளன், நெடியா னுறைசோ லைகள்சூழ் திருநாவாய், அடியேன் அணுகப் பெறு நாள் எவைகொலொ. 9.8.2 3752 எவைகொல் அணுகப் பெறுநாள்? என் றெப்போதும், கவையில் மனமின்றிக் கண்ணீர்கள் கலுழ்வன், நவையில் திருநாரணன்fசேர் திருநாவாய்,, அவையுள் புகலாவ தோர்நாள் அறியேனே. 9.8.3 3753 நாளெல் அறியேன் எனக்குள் ளன,நானும் மீளா அடிமைப் பணிசெய்யப் புகுந்தேன், நீளார் மலர்சோ லைகள்சுழ் திருநாவாய், வாளேய் தடங்கண் மடப்பின்னை மணாளா. 9.8.4 3754 மணாளன் மலர்மங் கைக்கும்மண் மடந்தைக்கும், கண்ணாளன் உலகத் துயிர்தேவர் கட்கெல்லாம், விண்ணாளன் விரும்பி யுறையும் திருநாவாய், கண்ணாரக் களிக்கின்ற திங்கென்று கொல்கண்டே? 9.8.5 3755 கண்டே களிக்கின்ற திங்கென்று கொல்கண்கள், தொண்டே யுனக்கா யொழிந்தான் துரிசின்றி, வண்டார் மலர்சோ லைகள்சுழ் திருநாவாய், கொண்டே யுறைகின்ற எங்கோ வலர்கோவே. 9.8.6 3756 கோவா கியமா வலியை நிலங்கொண்டாய், தேவா சுரம்செற் றவனே. திருமாலே, நாவா யுறைகின்ற என்நா ரணநம்பீ, ஆவா அடியா னிவன் என் றருளாயே. 9.8.7 3757 அருளா தொழிவாய் அருள்செய்து, அடியேனைப் பொருளாக்கி யுன்பொன் னடிக்கீழ்ப் புகவைப்பாய், மருளே யின்றியுன்னை என்னெஞ்சத் திருத்தும், தெருளே தருதென் திருநாவாய் என்தேவே. 9.8.8 3758 தேவர் முனிவர்க் கென்றும்காண் டற்கரியன், மூவர் முதல்வன் ஒருமூ வுலகாளி, தேவன் விரும்பி யுறையும் திருநாவாய், யாவர் அணுகப் பெறுவார் இனியந்தோ. 9.8.9 3759 அந்தோ. அணுகப் பெறுநாளென் றெப்போதும், சிந்தை கலங்கித் திருமாலென் றழைப்பன், கொந்தார் மலர்சோ லைகள்சுழ் திருநாவாய், வந்தே யுறைகின்ற எம்மா மணிவண்ணா. 9.8.10 3760 வண்ணம் மணிமாட நன்னாவாய் உள்ளனை, திண்ணம் மதிள்தென் குருகூர்ச் சடகோபன், பண்ணர் தமிழா யிரத்திப்பத் தும்வல்லார், மண்ணாண்டு மணம்கமழ் வர்மல்லிகையே. (2) 9.8.11 3761 மல்லிகை கமழ்தென்றல் ஈரு மாலோ. வண்குறிஞ் சியிசை தவழு மாலோ, செல்கதிர் மாலையும் மயக்கு மாலோ. செக்கர்நன் மேகங்கள் சிதைக்கு மாலோ, அல்லியந் தாமரைக் கண்ணன் எம்மான் ஆயர்கள் ஏறரி யேறெம் மாயோன், புல்லிய முலைகளும் தோளும் கொண்டு புகலிடம் அறிகிலம் தமிய மாலோ. (2) 9.9.1 3762 புகலிடம் அறிகிலம் தமிய மாலோ. புலம்புறும் அணிதென்றல் ஆம்ப லாலோ, பகலடு மாலைவண் சாந்த மாலோ. பஞ்சமம் முல்லைதண் வாடை யாலோ, அகலிடம் படைத்திடந் துண்டு மிழ்ந்து அளந்தெங்கும் அளிக்கின்ற ஆயன் மாயோன், இகலிடத் தசுரர்கள் கூற்றம் வாரான் இனியிருந் தென்னுயிர் காக்கு மாறென்? 9.9.2 3763 இனியிருந் தென்னுயிர் காக்கு மாறென் இணைமுலை நமுகநுண் ணிடைநு டங்க, துனியிருங் கலவிசெய் தாகம் தோய்ந்து துறந்தெம்மை யிட்டகல் கண்ணன் கள்வன், தனியிளஞ் சிங்கமெம் மாயன் வாரான் தாமரைக் கண்ணும்செவ் வாயும்,நீலப் பனியிருங் குழல்களும் நான்கு தோளும் பாவியேன் மனத்தேநின் றீரு மாலோ. 9.9.3 3764 பாவியேன் மனத்தேநின் றீரு மாலோ. வாடைதண் வாடைவெவ் வாடை யாலோ, மேவுதண் மதியம்வெம் மதிய மாலோ. மென்மலர்ப் பள்ளிவெம் பள்ளி யாலோ, தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டு துதைந்த எம் பெண்மையம் பூவி தாலோ, ஆவியிம் பரமல்ல வகைக ளாலோ. யாமுடை நெஞ்சமும் துணையன் றாலோ. 9.9.4 3765 யாமுடை நெஞ்சமும் துணையன் றாலோ. ஆபுகும் மாலையும் ஆகின் றாலோ, யாமுடை ஆயன்தன் மனம்கல் லாலோ. அவனுடைத் தீங்குழ லீரு மாலோ, யாமுடை துணையென்னும் தோழி மாரும் எம்மின்முன் னவனுக்கு மாய்வ ராலோ, யாமுடை ஆருயிர் காக்கு மாறென்? அவனுடை யருள்பெ றும்போது அரிதே. 9.9.5 3766 அவனுடை யருள்பெ றும்போ தரிதால் அவ்வருள் அல்லன அருளும் அல்ல, அவனருள் பெறுமள வாவி நில்லாது அடுபகல் மாலையும் நெஞ்சும் காணேன் சிவனொடு பிரமன்வண் திரும டந்தை சேர்திரு வாகமெம் மாவி யீரும், எவனினிப் புகுமிடம்? எவஞ்செய் கேனோ? ஆருக்கென் சொல்லுகேன் அன்னை மீர்காள். 9.9.6 3767 ஆருக்கென் சொல்லுகேன் அன்னை மீர்காள். ஆருயிர் அளவு அன்று இக்கூர்தண் வாடை, காரொக்கும் மேனிநங் கண்ணன் கள்வம் கவர்ந்தவத் தனிநெஞ்சம் அவன்fக ணஃதே, சீருற்ற அகிற்புகை யாழ்ந ரம்பு பஞ்சமம் தண்பசுஞ் சாந்த ணைந்து, போருற்ற வாடைதண் மல்லி கைப்பூப் புதுமணம் முகந்துகொண் டெறியு மாலோ. 9.9.7 3768 புதுமணம் முகந்துகொண் டெறியு மாலோ. பொங்கிள வாடைபுன் செக்க ராலோ, அதுமணந் தகன்றநங் கண்ணன் கள்வம் கண்ணினிற் கொடிதினி அதனி லும்பர், மதுமன மல்லிகை மந்தக் கோவை வண்பசுஞ் சாந்தினில் பஞ்ச மம்வைத்து, அதுமணந் தின்னருள் ஆய்ச்சி யர்க்கே ஊதுமத் தீங்குழற் கேயுய் யேன்நான். 9.9.8 3769 ஊதுமத் தீங்குழற் கேயுய் யேன்நான். அதுமொழிந் திடையிடைத் தஞ்செய் கோலத், தூதுசெய் கண்கள்கொண் டொன்று பேசித் தூமொழி யிசைகள்கொண் டொன்று நோக்கி, பேதுறும் முகம்செய்து நொந்து நொந்து பேதைநெஞ் சறவறப் பாடும் பாட்டை, யாதுமொன் றறிகிலம் அம்ம அம்ம. மாலையும் வந்தது மாயன் வாரான். 9.9.9 3770 மாலையும் வந்தது மாயன் வாரான் மாமணி புலம்பல் லேற ணைந்த, கோலநன் னாகுகள் உகளு மாலோ. கொடியென குழல்களும் குழறுமாலோ, வாலொளி வளர்முல்லை கருமு கைகள் மல்லிகை யலம்பிவண் டாலு மாலோ, வேலையும் விசம்பில்விண் டலறு மாலோ. என்சொல்லி யுய்வனிங் கவனை விட்டே? 9.9.10 3771 அவனைவிட் டகன்றுயிர் ஆற்ற கில்லா அணியிழை ஆய்ச்சியர் மாலைப் பூசல், அவனைவிட் டகல்வதற் கேயி ரங்கி அணிகுரு கூர்ச்சட கோபன் மாறன், அவனியுண் டுமிழ்ந்தவன் மேலு ரைத்த ஆயிரத் துள்ளிவை பத்தும் கொண்டு, அவனியுள் அலற்றிநின் றுய்ம்மின் தொண்டீர். அச்சொன்ன மாலை நண்ணித் தொழுதே. (2) 9.9.11 3772 மாலைநண் ணித்தொழு தெழுமினோ வினைகெட, காலைமா லைகம லமலர் இட்டுநீர், வேலைமோ தும்மதிள் சூழ்திருக் கண்ணபுரத்து, ஆலின்மே லாலமர்ந் தானடி யிணைகளே. (2) 9.10.1 3773 கள்ளவி ழும்மலர் இட்டுநீ ரிறைஞ்சுமின், நள்ளிசே ரும்வயல் சூழ்கிடங் கின்புடை, வெள்ளீயேய்ந் தமதிள் சூழ்திருக் கண்ணபுரம் உள்ளி,நா ளும்தொழு தெழுமினோ தொண்டரே. 9.10.2 3774 தொண்டர்.நுந் தந்துயர் போகநீர் ஏகமாய், விண்டுவா டாமலர் இட்டுநீ ரிறைஞ்சுமின், வண்டுபா டும்பொழில் சூழ்திருக் கண்புரத் தண்டவா ணன்,அம ரர்பெரு மானையே. 9.10.3 3775 மானைநோக் கிமடப் பின்னைதன் கேள்வனை, தேனைவா டாமலர் இட்டுநீ ரிறைஞ்சுமின், வானையுந் தும்மதிள் சூழ்திருக் கண்ணபுரம், தான் நயந் தபெரு மான் சர ணாகுமே. 9.10.4 3776 சரணமா கும்தன தாளடைந் தார்க்கெலாம், மரணமா னால்வைகுந் தம்கொடுக் கும்பிரான், அரணமைந் தமதிள் சூழ்திருக் கண்ணபுரம், தரணியா ளன்,தன தன்பர்க்கன் பாகுமே. 9.10.5 3777 அன்பனா கும்தன தாளடைந் தார்க்கெலாம், செம்பொனா கத்தவு ணனுடல் கீண்டவன், நன்பொனேய்ந் தமதிள் சூழ்திருக் கண்ணபுரத் தன்பன்,நா ளும்தன் மெய்யர்க்கு மெய்யனே. 9.10.6 3778 மெய்யனா கும்விரும் பித்தொழு வார்க்கெலாம், பொய்யனா கும்புற மேதொழு வார்க்கெலாம், செய்யில்வா ளையுக ளும்திருக் கண்ணபுரத்து ஐயன்,ஆ கத்தணைப் பார்கட் கணியனே. 9.10.7 3779 அணியனா கும்தன தாளடைந் தார்க்கெலாம், பிணியும் சாரா பிறவி கெடுத்தாளும், மணிபொனேய்ந் தமதிள் சூழ்திருக் கணபுரம் பணிமின்,நா ளும்பர மேட்டிதன் பாதமே. 9.10.8 3780 பாதநா ளும்பணி யத்தணி யும்பிணி, ஏதம்சா ராஎனக் கேலினி யென்குறை?, வேதநா வர்விரும் பும்திருக் கணபுரத்து ஆதியா னை,அடைந் தார்க்கல்லல் இல்லையே. 9.10.9 3781 இல்லையல் லலெனக் கேலினி யென்குறை?, அல்லிமா தரம ரும்திரு மார்பினன், கல்லிலேய்ந் தமதிள் சூழ்திருக் கணபுரம் சொல்ல,நா ளும்துயர் பாடுசா ராவே. 9.10.10 3782 பாடுசா ராவினை பற்றற வேண்டுவீர், மாடநீ டுகுரு கூர்ச்சட கோபஞ்சொல், பாடலா னதமிழ் ஆயிரத்து ளிப்பத்தும் பாடியா டிப்,பணி மினவன் தாள்களே. (2) 9.10.11 திருவாய் மொழி பத்தாம் பத்து 3783 தாள தாமரைத் தடமணி வயல் திரு மோகூர் நாளும் மேவிநன் கமர்ந்துநின் றசுரரைத் தகர்க்கும் தோளும் நான்குடைச் சுரிகுழல் கமலக்கண் கனிவாய் காள மேகத்தை யன் றிமற் றொன் றிலம் கதியே. (2) 10.1.1 3784 இலங்கதி மற்றொன் றெம்மைக்கும் ஈன்தண் துழாயின் அலங்கலங் கண்ணி ஆயிரம் பேருடை அம்மான் நலங்கொள் நான்மறை வாணர்கள் வாழ்திரு மோகூர் நலங்க ழலவன் அடிநிழல் தடமன்றி யாமே. 10.1.2 3785 அன்றி யாமொரு புகலிடம் இலம் என்றென் றலற்றி நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட வென்றிம் மூவுல களித்துழல் வான்திரு மோகூர் நன்று நாமினி நணுகுதும் நமதிடர் கெடவே. 10.1.3 3786 இடர்கெட எம்மைப் போந்தளி யாய் என்றென் றேத்தி சுடர்கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடர படர்கொள் பாம்பணைப் பள்ளிகொள் வான்திரு மோகூர் இடர்கெ டவடி பரவுதும் தொண்டீர். வம்மினே. 10.1.4 3787 தொண்டீர். வம்மின்நம் சுடரொளி யொருதனி முதல்வன் அண்ட மூவுல களந்தவன் அணிதிரு மோகூர் எண்டி சையுமீன் கரும்பொடு பொருஞ்செந்நெல் விளைய கொண்ட கோயிலை வலஞ்செய்திங் காடுதும் கூத்தே. 10.1.5 3888 கூத்தன் கோவலன் குதற்றுவல் லசுரர்கள் கூற்றம் ஏத்தும் நங்கடகும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன் வாய்த்த தண்பணை வளவயல் சூழ்திரு மோகூர் ஆத்தன் தாமரை யடியன்றி மற்றிலம் அரணே. 10.1.6 3789 மற்றி லமரண் வான்பெரும் பாழ்தனி முதலா சுற்று நீர்படைத் ததன்வழித் தொன்முனி முதலா முற்றும் தேவரோ டுலகுசெய் வான்திரு மோகூர் சுற்றி நாம்வலஞ் செய்யநம் துயர்கெடும் கடிதெ. 10.1.7 3790 துயர்கெ டும்கடி தடைந்துவன் தடியவர் தொழுமின் உயர்கொள் சோலையொண் தடமணி யொளிதிரு மோகூர் பெயர்கள் ஆயிர முடையவல் லரக்கர்புக் கழுந்த தயரதன் பெற்ற மரதக மணித்தடத் தினையே. 10.1.8 3791 மணித்த டத்தடி மலர்க்கண்கள் பவளச் செவ்வாய் அணிககொள் நால்தடந் தோள்தெய்வம் அசுரரை யென்றும் துணிக்கும் வல்லரட் டனுறை பொழில்திரு மோகூர் நணித்து நம்முடை நல்லரண் நாமடைந் தனமே. 10.1.9 3792 நாம டைந்தநல் லரண்தமக் கென்றுநல் லமரர் தீமை செய்யும்வல் லசுரரை யஞ்சிச்சென் றடைந்தால் காம ரூபம்கொண் டெழுந்தளிப் பான்திரு மோகூர் நாம மேநவின் றெண்ணுமின் ஏத்துமின் நமர்காள். 10.1.10. 3793 ஏத்து மின்நமர் காள் என்று தான்குட மாடு கூத்தனை குரு கூர்ச்சட கோபன்குற் றேவல் வாய்த்த ஆயிரத் துள்ளிவை வண்திரு மோகூர்க்கு ஈத்த பத்திவை யேத்தவல் லார்க்கிடர் கெடுமே. (2) 10.1.11 3794 கெடுமிட ராயவெல்லாம் கேசவா வென்ன நாளும் கொடுவினை செய்யும்கூற்றின் தமர்களும் குறுககில்லார் விடமுடை யரவில்பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும் தடமுடை வயல் அனந்தபுரநகர்ப் புகுதுமின்றே. (2) 10.2.1 3795 இன்றுபோய்ப் புகுதிராகி லெழுமையும் ஏதம்சார குன்றுனேர் மாடமாடே குருந்துசேர் செருந்திபுன்னை மன்றலர் போழில் அனந்தபுரநகர் மாயன்நாமம் ஒன்றுமோ ராயிரமாம் உள்ளுவார்க் கும்பரூரே. 10.2.2 3796 ஊரும்புட் கொடியுமஃதே யுலகொல்லாமுண்டுமிழ்ந்தான் சேரும்தண் ணனந்தபுரம் சிக்கெனப் புகுதிராகில் தீரும்நோய்வினைகளெல்லாம் திண்ணநாம் அறியச்சொன்னோம் பேரும் ஓராயிரத்துள் ஒன்றுநீர் பேசுமினே. 10.2.3 3797 பேசுமின் கூசமின்றிப் பெரியநீர் வேலைசூழ்ந்து வாசமே கமழுஞ்சோலை வயலணி யனந்தபுரம் நேசம்செய் துறைகின்றானை நெறிமையால் மலர்கள்தூவி பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே. 10.2.4 3798 புண்ணியம் செய்துநல்ல புனலொடு மலர்கள்தூவி எண்ணுமி னெந்தைநாமம் இப்பிறப் பறுக்குமப்பால் திண்ணம்நாம் அறியச்சொன்னோம் செறிபொழில் அனந்தபுரத்து அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரராவார். 10.2.5 3799 அமரராய்த் திரிகின்றார்கட்கு ஆதிசேர அனந்தபுரத்து அமரர்கோன் அர்ச்சிக்கின்றங் ககப்பணி செய்வர்விண்ணோர் நமர்களோ. சொல்லக்கேண்மின் நாமும்போய் நணுகவேண்டும் குமரனார் தாதைதுன்பம் துடைத்தகோ விந்தனாரே. 10.2.6 3800 துடைத்தகோ விந்தனாரே யுலகுயிர் தேவும்மற்றும் படைத்தவெம் பரமமூர்த்தி பாம்பணைப் பள்ளிகொண்டான் மடைத்தலை வாளைபாயும் வயலணியனந்தபுரம் கடைத்தலை சீய்க்கப்பெற்றால் கடுவினை களையலாமே. 10.2.7 3801 கடுவினை களையலாகும் காமனைப் பயந்தகாளை இடவகை கொண்டதென்பர் எழிலணியனந்தபுரம் படமுடை யரவில்பள்ளி பயின்றவன் பாதம்காண நடமினோ நமர்களுள்ளீர். நாமுமக் கறியச்சொன்னோம். 10.2.8 3802 நாமுமக் கறியச்சொன்ன நாள்களும் நணியவான சேமம் நங்குடைத்துக்கண்டீர் செறிபொழிலனந்தபுரம் தூமநல் விரைமலர்கள் துவளற ஆய்ந்துகொண்டு வாமனன் அடிக்கென்றெத்த மாய்ந்தறும் வினைகள்தாமே. 10.2.9 3803 மாய்ந்தறும் வினைகள்தாமே மாதவா என்ன நாளும் ஏய்ந்தபொன் மதிளனந்தபுர நகரெந்தைக்கென்று சாந்தொடு விளக்கம்தூபம் தாமரை மலர்கள்நல்ல ஆய்ந்துகொண் டேத்தவல்லார் அந்தமில் புகழினாரே. 10.2.10. 3804 அந்தமில் புகழனந்தபுர நகர் ஆதிதன்னை கொந்தலர் பொழில்குருகூர் மாறன் சொல் லாயிரத்துள் ஐந்தினோ டைந்தும்வல்லார் அணைவர்போய் அமருலகில் பைந்தொடி மடந்தையர்தம் வேய்மரு தோளிணையே. (2) 10.2.11 3805 வேய்மரு தோளிணை மெலியு மாலோ. மெலிவுமென் தனிமையும் யாதும் நோக்கா காமரு குயில்களும் கூவு மாலோ. கணமயில் அவைகலந்தாலு மாலோ ஆமரு வினநிரை மேய்க்க நீபோக்கு ஒருபக லாயிர மூழி யாலோ தாமரைக் கண்கள்கொண் டீர்தி யாலோ. தகவிலை தகவிலையே நீ கண்ணா. (2) 10.3.1 3806 தகவிலை தகவிலை யேநீ கண்ணா. தடமுலை புணர் தொறும் புணற்ச்சிக் காரா சுகவெள்ளம் விசும்பிறந்து அறிவை மூழ்க்கச் சூழ்ந்தது கனவென நீங்கி யாங்கே அகவுயிர் அகமதந்தோறும் உள்புக் காவியின் பரமல்ல வேட்கை யந்தோ மிகமிக இனியுன்னைப் பிரிவை யாமால் வீவ நின் பசுநிரை மேய்க்கப் போக்கே. 10.3.2 3807 வீவன்நின் பசுநிரை மேய்க்கப் போக்கு வெவ்வுயிர் கொண்டென தாவி வேமால் யாவரும் துணையில்லை யானி ருந்துன் அஞ்சன மேனியை யாட்டம் காணேன் போவதன் றொருபகல் நீய கன்றால் பொருகயற் கண்ணிணை நீரும் நில்லா சாவதிவ் வாய்க்குலத் காய்ச்சி யோமாய்ப் பிறந்தவித் தொழுத்தையோம் தனிமை தானே. 10.3.3 3808 தொழுத்தையோம் தனிமையும் துணைபி ரிந்தார் துயரமும் நினைகிலை கோவிந் தா நின் தொழுத்தனில் பசுக்களை யேவி ரும்பித் துறந்தெம்மையிட்டு அவை மேய்க்கப் போதி பழுத்தநல் லமுதினின் சாற்று வெள்ளம் பாவியேன் மனமகந் தோறு முள்புக் கழுத்த நின் செங்கனி வாயின் கள்வப் பணிமொழி நினை தொறும் ஆவி வேமால். 10.3.4 3809 பணிமொழி நினைதொறும் ஆவி வேமால் பகல்நிரை மேய்க்கிய போய கண்ணா பிணியவிழ் மல்லிகை வாடை தூவப் பெருமத மாலையும் வந்தின் றாலோ மணிமிகு மார்வினில் முல்லைப் போதென் வனமுலை கமழ்வித்துன் வாயமு தம்தந்து அணிமிகு தாமரைக் கையை யந்தோ. அடிச்சி யோம்தலை மிசைநீ யணியாய். 10.3.5 3810 அடிச்சி யோம்தலை மிசைநீ யணியாய் ஆழியங் கண்ணா. உன் கோலப் பாதம் பிடித்தது நடுவுனக் கரிவை மாரும் பலரது நிற்கவெம் பெண்மை யாற்றோம் வடித்தடங் கண்ணிணை நீரும் நில்லா மனமும்நில் லாவெமக் கதுதன் னாலே வெடிப்புநின் பசு நிரை மேய்க்கப் போக்கு வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே. 10.3.6 3811 வேமெம துயிரழல் மெழுகில் உக்கு வெள்வளை மேகலை கழன்று வீழ தூமலர்க் கண்ணிணை முத்தம் சோரத் தூணைமுலை பயந்து என தோள்கள் வாட மாமணி வண்ணா உன்செங்கமல வண்ணமென் மலரடி நோவ நீபோய் ஆமகிழ்ந் துகந்தவை மேய்க்கின் றுன்னோடு அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொல் ஆங்கே? 10.3.7 3812 அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொ லாங்கென்று ஆழுமென் னாருயிர் ஆன்பின் போகேல் கசிகையும் வேட்கையும் உள்க லந்து கலவியும் நலியுமென் கைகழி யேல் வசிசெயுன் தாமரைக் கண்ணும் வாயும் கைகளும் பீதக வுடையும் காட்டி ஒசிசெய்நுண் ணிடையிள ஆய்ச்சி யர்நீ உகக்குநல் லவரொடும் உழித ராயே. 10.3.8 3813 உகக்குநல் லவரொடும் உழிதந் துன்றன் திருவுள்ளம் இடர்கெடுந் தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும் எம்பெண்மை யாற்றோம் எம்பெரு மான். பசு மேய்க்கப் போகேல் மிதப்பல அசுரர்கள் வேண்டும் உருவங் கொண்டுநின் றுழிதருவர் கஞ்ச னேவ அகப்படில் அவரொடும் நின்னொ டாங்கே அவத்தங்கள் விளையுமென் சொற்கொள் அந்தோ. 10.3.9 3814 அவத்தங்கள் விளையுமென் சொற்கொள் அந்தோ. அசுரர்கள் வங்கையர் கஞ்ச னேவத் தவத்தவர் மறுக நின்றுழி தருவர் தனிமையும் பெரிதுனக்கு இராமனையும் உவர்த்தலை உடந்திரி கிலையு மென்றென்று ஊடுற வென்னுடை யாவிவேமால் திவத்திலும் பசுநிரை மேய்ப்பு வத்தி செங்கனி வாயெங்கள் ஆயர் தேவே. 10.3.10. 3815 செங்கனி வாயெங்கள் ஆயர் தேவு அத்திருவடி திருவடி மேல் பொ ருநல் சங்கணி துறைவன் வண்தென் குருகூர் வண்சட கோபன்சொல் லாயி ரத்துள் மங்கைய ராய்ச்சிய ராய்ந்த மாலை அவனொடும் பிரிவதற் கிரங்கி தையல் அங்கவன் பசுநிரை மேய்ப்பொ ழிப்பான் உரைத்தன இவையும்பத் தவற்றின் சார்வே. (2) 10.3.11 3816 சார்வேதவ நெறிக்குத் தாமோதரன் தாள்தள், கார்மேக வண்ணன் கமல நயனத்தன், நீர்வானம் மண்ணெரிகா லாய்நின்ற நேமியான், பேர்வா னவர்கள் பிதற்றும் பெருமையனே. (2) 10.4.1 3817 பெருமையனே வானத் திமையோர்க்கும் காண்டற் கருமையனே ஆகத் தணையாதார்க்கு என்றும் திருமெய் யுறைகின்ற செங்கண்மால் நாளும் இருமை வினைகடிந்திங்கு என்னையாள் கின்றானே. 10.4.2 3818 ஆள்கின்றா னாழியான் ஆரால் குறைவுடையம்? மீள்கின்ற தில்லைப் பிறவித் துயர்கடிந்தோம், வாள்கெண்டையொண்கண் மடப்பின்னை தன் கேள்வன், தாள்கண்டு கொண்டு என் தலைமேல் புனைந்தேனே. 10.4.3 3819 தலைமேல் புனைந்தேன் சரணங்கள் ஆலின் இலைமேல் துயின்றான் இமையோர் வணங்க மலைமேல்தான் நின்றென் மனத்து ளிருந்தானை நிலைபேர்க்க லாகாமை நிச்சித் திருந்தேனே. 10.4.4 3820 நிச்சித் திருந்தேனென் நெஞ்சம் கழியாமை கைச்சக் கரத்தண்ணல் கள்வம் பெரிதுடையன் மெச்சப் படான்பிறர்க்கு மெய்போலும் பொய்வல்லன் நச்சப் படும்நமக்கு நாகத் தணையானே. 10.4.5 3821 நாகத் தணையானை நாள்தோறும் ஞானத்தால் ஆகத் தணைப்பார்க்கு அருள்செய்யும் அம்மானை மாகத் திள மதியம் சேரும் சடையானை பாகத்து வைத்தான் தன் பாதம் பணிந்தேனே. 10.4.6 3822 பணிநெஞ்சே. நாளும் பரம பரம்பரனை பிணியொன்றும் சாரா பிறவி கெடுத்தாளும் மணிநின்ற சோதி மதுசூதன் என்னம்மான் அணிநின்ற செம்பொன் அடலாழி யானே. 10.4.7 3823 ஆழியா னாழி யமரர்க்கும் அப்பாலான் ஊழியா னூழி படைத்தான் நிரைமேய்த்தான் பாழியந் தோளால் வரையெடுத்தான் பாதங்கள் வாழியென் நெஞ்சே. மறவாது வாழ்கண்டாய். 10.4.8 3824 கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே விண்டே யொழிந்த வினையா யினவெல்லாம் தொண்டேசெய் தென்றும் தொழுது வழியொழுக பண்டே பரமன் பணித்த பணிவகையே. 10.4.9 3825 வகையால் மனமொன்றி மாதவனை நாளும் புகையால் விளக்கால் புதுமலரால் நீரால் திகைதோ றமரர்கள் சென்றிறைஞ்ச நின்ற தகையான் சரணம் தமர்கடகோர் பற்றே. 10.4.10. 3826 பற்றென்று பற்றிப் பரம பரமபரனை மற்றிண்டோ ள் மாலை வழுதி வளநாடன் சொற்றொடையந் தாதியோ ராயிரத்து ளிப்பத்தும் கற்றார்க்கோர் பற்றாகும் கண்ணன் கழலிணையே. (2) 10.4.11 பத்து வகை பத்தியும் பிரபத்தியும் 3827 கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே. (2) 10.5.1 3828 நாரணன் எம்மான் பாரணங்காளன் வாரணம் தொலைத்த காரணன் தானே. 10.5.2 3829 தானே உலகெலாம் தானே படைத்திடந்து தானே உண்டுமிழ்ந்து தானே யாள்வானே. 10.5.3 3830 ஆள்வான் ஆழிநீர் கோள்வாய அரவணையான் தாள்வாய் மலரிட்டு நாள்வாய் நாடீரே. 10.5.4 3831 நாடீர் நாள்தோறும் வாடா மலர்கொண்டு பாடீர் அவன்நாமம் வீடே பெறலாமே. 10.5.5 3832 மேயான் வேங்கடம் காயா மலர்வண்ணன் பேயார் முலையுண்ட வாயான் மாதவனே. (2) 10.5.6 3833 மாதவன் என்றென்று ஓத வல்லீரேல் தீதொன்று மடையா ஏதம் சாராவே. 10.5.7 3834 சாரா ஏதங்கள் நீரார் முகில்வண்ணன் பேர் ஆர் ஓதுவார் ஆரார் அமரரே. 10.5.8 3835 அமரர்க்கு அரியானை தமர்கட்கு எளியானை அமரத் தொழுவார்கட்கு அமரா வினைகளே. 10.5.9 3836 வினைவல் இருளென்னும் முனைகள் வெருவிப்போம் சுனை நன் மலரிட்டு நினைமின் நெடியானே. 10.5.10. 3837 நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன் நொடி ஆயிரத்திப்பத்து அடியார்க்கு அருள் பேறே. (2) 10.5.11 3838 அருள்பெறுவார் அடியார்தம் அடியனேற்கு ஆழியான் அருள்தருவான் அமைகின்றான் அதுநமது விதிவகையே இருள்தருமா ஞாலத்துள் இனிப்பிறவி யான்வேண்டேன் மருளொழிநீ மடநெஞ்சே. வாட்டாற்றான் அடிவணங்கே. (2) 10.6.1 3839 வாட்டாற்றா னடிவணங்கி மாஞாலப் பிறப்பறுப்பான் கேட்டாயே மடநெஞ்சே. கேசவனெம் பெருமானை பாட்டாய பலபாடிப் பழவினைகள் பற்றறுத்து நாட்டாரோ டியல்வொழிந்து நாரணனை நண்ணினமே. 10.6.2 3840 நண்ணினம் நாரணனை நாமங்கள் பலசொல்லி மண்ணுலகில் வளம்மிக்க வாட்டாற்றான் வந்தின்று விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதிவகையே எண்ணினவா றாகாவிக் கருமங்க ளென்னெஞ்சே. 10.6.3 3841 என்னெஞ்சத் துள்ளிருந்திங் கிருந்தமிழ்நூலிவைமொழிந்து வன்னெஞ்சத் திரணியனை மார்விடந்த வாட்டாற்றான் மன்னஞ்சப் பாரதத்துப் பாண்டவர்க்காப் படைதொட்டான் நன்னெஞ்சே. நம்பெருமான் நமக்கருள்தான் செய்வானே. 10.6.4 3842 வானேற வழிதந்த வாட்டாற்றான் பணிவகையே நானேறப் பெறுகின்றென் நரகத்தை நகுநெஞ்சே தேனேறு மலர்த்துளவம் திகழ்பாதன் செழும்பறவை தானேறித் திரிவான தாளிணையென் தலைமேலே. 10.6.5 3843 தலைமேல தாளிணைகள் தாமரைக்கண் என்னம்மான் நிலைபேரான் என்நெஞ்சத் தெப்பொழுதும் எம்பெருமான் மலைமாடத் தரவணைமேல் வாட்டாற்றான் மதமிக்க கொலையானை மருப்பொசித்தான் குரைகழல்தள் குறுகினமே. 10.6.6 3844 குரைகழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடிகொண்டான் திரைகுழுவு கடல்புடைசூழ் தென்னாட்டுத் திலதமன்ன வரைகுழுவும் மணிமாட வாட்டாற்றான் மலரடிமேல் விரைகுழுவும் நறுந்துளவம் மெய்ந்நின்று கமழுமே. 10.6.7 3845 மெய்ந்நின்று கமழ்துளவ விரையேறு திருமுடியன் கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருதுபுனல் மைந்நின்ற வரைபோலும் திருவுருவ வாட்டாற்றாற்கு எந்நன்றி செய்தேனா என்னெஞ்சில் திகழவதுவே? 10.6.8 3846 திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும் திகழ்கின்ற திருமாலார் சேர்விடம்தண் வாட்டாறு புகழ்கின்ற புள்ளூர்தி போரரக்கர் குலம்கெடுத்தான் இகழ்வின்றி என்னெஞ்சத் தெப்பொழுதும் பிரியானே. 10.6.9 3847 பிரியாதாட் செய்யென்று பிறப்பறுத்தாள் அறக்கொண்டான் அரியாகி இரணியனை ஆகங்கீண் டானன்று பெரியார்க்காட் பட்டக்கால் பெறாதபயன் பெறுமாறு வரிவாள்வாய் அரவணைமேல் வாட்டாற்றான் காட்டினனே. 10.6.10. 3848 காட்டித்தன் கனைகழல்கள் கடுநரகம் புகலொழித்த வாட்டாற்றெம் பெருமானை வளங்குருகூர்ச் சடகோபன் பாட்டாய தமிழ்மாலை யாயிரத்துள் இப்பத்தும் கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லே. (2) 10.6.11 3849 செங்சொற் கவிகாள். உயிர்காத்தாட் செய்மின் திருமா லிருஞ்சோலை வஞ்சக் கள்வன் மாமாயன் மாயக் கவியாய் வந்து என் நெஞ்சு முயிரு முள்கலந்து நின்றார் அறியா வண்ணம் என் நெஞ்சு முயிரும் அவைடுண்டு தானே யாகி நிறைந்தானே. (2) 10.7.1 3850 தானே யாகி நிறைந்தெல்லா உலகும் உயிரும் தானேயாய் தானே யானென் பானாகித் தன்னைத் தானே துதித்து எனக்குத் தேனே பாலே கன்னலே அமுதே திருமாலிருஞ்சோலை கோனே யாகி நின்றொழிந்தான் என்னை முற்றும் உயிருண்டே. 10.7.2 3851 என்னை முற்றும் உயிருண்டென் மாய ஆக்கை யிதனுள்புக்கு என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர் தென்னன் திருமா லிருஞ்சோலைத் திசைகை கூப்பிச் தேர்ந்தயான் இன்னம் போவே னேகொலோ. எங்கொல் அம்மான் திருவருளே? 10.7.3 3852 என்கொல் அம்மான் திருவருள்கள்? உலகும் உயிரும் தானேயாய் நன்கென் னுடலம் கைவிடான் ஞாலத் தூடே நடந்துழக்கி தென்கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமாலிருஞ்சோலை நங்கள் குன்றம் கைவிடான் நண்ணா அசுரர் நலியவே. 10.7.4 3853 நண்ணா அசுரர் நலிவெய்த நல்ல அமரர் பொலிவெய்த எண்ணா தனகள் எண்ணும்நன் முனிவ ரின்பம் தலைசிறப்ப பண்ணார் பாடல் இன்கவிகள் யானாய்த் தன்னைத் தான்பாடி தென்னா வென்னும் என்னம்மான் திருமாலிருஞ்சோலையானே. 10.7.5 3854 திருமாலிருஞ்சோலையானே ஆகிச் செழுமூ வுலகும் தன் ஒருமா வயிற்றி னுள்ளேவைத்து ஊழி யூழி தலையளிக்கும் திருமாலென்னை யாளுமால் சிவனும் பிரமனும்காணாது அருமா லெய்தி யடிபரவ அருளை யீந்த அம்மானே. 10.7.6 3855 அருளை ஈயென் அம்மானே. என்னும் முக்கண் அம்மானும் தெருள்கொள் பிரமன் அம்மானும் தேவர் கோனும் தேவரும் இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை மருள்கள் கடியும் மணிமலை திருமாலிருஞ்சோலைமலையே. 10.7.7 3856 திருமாலிருஞ்சோலைமலையே திருப்பாற் கடலே என்தலையே திருமால்வைகுந்தமே தண் திருவேங்கடமே எனதுடலே அருமா மாயத் தெனதுயிரே மனமே வாக்கே கருமமே ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே. (2) 10.7.8 3857 ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகெல்லாம் ஊழி தோறும் தன்னுள்ளே படைத்துக் காத்துக் கெடுத்துழலும் ஆழி வண்ணன் என்னம்மான் அந்தண் திருமாலிருஞ்சோலை வாழி மனமே கைவிடேல் உடலும் உயிரும் மங்கவொட்டே. 10.7.9 3858 மங்க வொட்டுன் மாமாயை திருமாலிருஞ்சோலைமேய நங்கள் கோனே. யானேநீ யாகி யென்னை யளித்தானே பொங்கைம் புலனும் பொறியைந்தும் கருமேந்திரியும் ஐம்பூதம் இங்கு இவ்வுயிரேய் பிரகிருதி மானாங்கார மனங்களே. 10.7.10. 3859 மானாங்கார மனம்கெட ஐவர் வன்கை யர்மங்க தானாங்கார மாய்ப்புக்குத் தானே தானே யானானை தேனாங் காரப் பொழில்குருகூர்ச் சடகோபன்சொல்லாயிரத்துள் மானாங்காரத்திவைபத்தும் திருமாலிருங்சோலைமலைக்கே. (2) 10.7.11 3860 திருமாலிருஞ்சோலை மலைமென்றேன் என்ன திருமால்வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான் குருமா மணியுந்து புனல்பொன்னித் தென்பால் திருமால்சென்று சேர்விடம் தென் திருப்பேரே. (2) 10.8.1 3861 பேரே யுறைகின்ற பிரான் இன்று வந்து பேரேனென் றென்னெஞ்சு நிறையப் புகுந்தான் காரேழ் கடலேழ் மலையே ழுலகுண்டும் ஆராவ யிற்றானை யடங்கப் பிடித்தேனே. 10.8.2 3862 பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணிசாரேன் மடித்தேன் மனைவாழ்க்கை யுள்நிற்பதோர் மாயையை கொடிக்கோ புரமாடங்கள் சூழ்திருப் பேரான் அடிச்சேர்வதெனெனக்கெளி தாயின வாறே. 10.8.3 3863 எளிதா யினவாறென் றெங்கண்கள் களிப்ப களிதா கியசிந் தையனாய்க் களிக்கின்றேன் கிளிதா வியசோழைகள் சூழ்திருப் பேரான் தெளிதா கியசேண் விசும்புதரு வானே. 10.8.4 3864 வானே தருவா னெனக்காயென் னோடொட்டி ஊனேய் குரம்பை யிதனுள் புகுந்து இன்று தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான் தேனே பொழில்தென் திருப்பேர் நகரானே. 10.8.5 3865 திருப்பேர் நகரான் திருமாலிருஞ்சோலைப் பொருப்பே யுறைகின் றபிரானின்றுவந்து இருப்பேன் என் றென்னேஞ்சு நிறையப் புகுந்தான் விருப்பே பெற்றமுத முண்டு களித்தேனே. 10.8.6 3866 உண்டு களித்தேற் கும்பரென் குறை மேலைத் தொண்டு களித்தந்தி தொழும்சொல்லுப் பெற்றேன் வண்டு களிக்கும் பொழில்சூழ் திருப்பேரான் கண்டு களிப்பக் கண்ணுள்நின் றகலானே. 10.8.7 3867 கண்ணுள்நின் றகலான் கருத்தின்கண் பெரியன் எண்ணில்நுண் பொருளே ழிசையின் சுவைதானே வண்ணநன் மணிமாடங்கள் சூழ்திருப் பேரான் திண்ணமென் மனத்துப் புகுந்தான் செறிந்தின்றெ. 10.8.8 3868 இன்றென்னைப் பொருளாக்கித் தன்னையென் னுள்வைத் தான் அன்றென்னைப் புறம்பொகப் புணர்த்ததென் செய்வான்? குன்றென்னத் திகழ்மாடங்கள் சூழ்திருப் பேரான் ஒன்றெனக் கருள்செய்ய வுணர்த்தலுற் றேனே. 10.8.9 3869 உற்றே னுகந்து பணிசெய் துனபாதம் பெற்றேன் ஈதேயின் னம்வேண் டுவதெந்தாய் கற்றார் மறைவாணர் கள்வாழ் திருப்பேராற்கு அற்றார் அடியார் தமக்கல்லல் நில்லாவே. (2) 10.8.10. 3870 நில்லா அல்லல் நீள்வயல்சூழ் திருப்பேர்மேல் நல்லார் பலர்வாழ் குருகூர்ச் சடகோபன் சொல்லார் தமிழா யிரத்துள் இவைபத்தும் வல்லார் தொண்டராள் வதுசூழ்பொன் விசும்பே. (2) 10.8.11 3871 சூழ்விசும் பணிமுகில் தூரியம் முழக்கின ஆழ்கடல் அலைதிரை கையெடுத் தாடின ஏழ்பொழி லும்வளம் ஏந்திய என்னப்பன் வாழ்புகழ் னாரணன் தமரைக்ககண் டுகந்தே. (2) 10.9.1 3872 நாரணன் தமரைக்கண் டுகந்துநன் னீர்முகில் பூரண பொற்குடம் பூரித்த துயர்விண்ணில் நீரணி கடல்கள்நின் றார்த்தன நெடுவரைத் தோரணம் நிரைத்தெங்கும் தொழுதனர் உலகரே. 10.9.2 3873 தொழுதனர் உலகர்கள் தூபநல் மலர்மழை பொழிவனர் பூழியன் றளந்தவன் தமர்முன்னே எழுமின் என் றிமருங்கிசைத்தனர் முனிவர்கள் வழியிது வைகுந்தற் கென்றுவந் தெதிரே. 10.9.3 3874 எதிரெதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர் கதிரவர் அவரவர் கைந்நிரை காட்டினர் அதிர்குரல் முரசங்கள் அலைகடல் முழக்கொத்த மதுவிரி துழாய்முடி மாதவன் தமர்க்கே. 10.9.4 3875 மாதவன் தமரென்று வாசலில் வானவர் போதுமின் எமதிடம் புகுதுக என்றலும் கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள் வேதநல் வாயவர் வேள்வியுள் மடுத்தே. 10.9.5 3876 வேள்வியுள் மடுத்தலும் விரைகமழ் நறும்புகை காளங்கள் வலம்புரி கலந்தெங்கும் இசைத்தனர் ஆளுமிங்கள் வானகம் ஆழியான் தமர் என்று வாளொண்கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே. 10.9.6 3877 மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும் தொடர்ந்தெங்கும் தோத்திரம் சொல்லினர் தொடுகடல் கிடந்தவென் கேசவன் கிளரொளி மணிமுடி குடந்தையென் கோவலன் குடியடி யார்க்கே. 10.9.7 3878 குடியடி யாரிவர் கோவிந்தன் தனக்கென்று முடியுடை வானவர் முறைமுறை எதிர்கொள்ள கொடியணி நெடுமதிள் கோபுரம் குறுகினர் வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே. 10.9.8 3879 வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர் வைகுந்தன் தமரெமர் எமதிடம் புகுகென்று வைகுந்தத் தமரரும் முனிவரும் வியந்தனர் வகுந்தம் புகுவது மண்ணவர் விதியே. 10.9.9 3880 விதிவகை புகுந்தனர் என்றுநல் வேதியர் பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர் நிதியுநற் சுண்ணமும் நிறைகுட விளக்கமும் மதிமுக மடந்தயர் ஏந்தினர் வந்தே. 10.9.10. 3881 வந்தவர் எதிர்கொள்ள மாமணி மண்டபத்து அந்தமில் பேரின்பத் தடியரோ டிருந்தமை கொந்தலர் பொழில்குரு கூர்ச்சட கோபஞ்சொல் சந்தங்கள் ஆயிரத் திவைவல்லார் முனிவரே. 10.9.11 3882 முனியே. நான்முக னே.முக்கண் ணப்பா என் பொல்லாக் கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே. என்கள்வா தனியேன் ஆருயிரே. என் தலை மிசையாய் வந்திட்டு இனிநான் போகலொட் டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே. (2) 10.10.1 3883 மாயம்செய் யேலென்னை உன்திரு மார்வத்து மாலைநங்கை வாசம்செய் பூங்குழலாள் திருவாணை நின்னாணை கண்டாய் நேசம்செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே கூசம்செய் யாதுகொண் டாயென்னைக் கூவிச்கொள் ளாய்வந்தந்தோ. 10.10.2 3884 கூவிக்கொள் ளாய்வந்தந் தோ.என் பொல்லாக்கரு மாணிக்கமே ஆவிக்கோர் பற்றுக்கொம்பு நின்னலால் அறிகின்றி லேன்யான் மேவித் தொழும்பிரமன் சிவன் இந்திர னாதிக்கெல்லாம் நாவிக் கமல முதற்கிழங்கே. உம்பர் அந்ததுவே. 10.10.3 3885 உம்ப ரந்தண் பாழேயோ. அதனுள்மிசை நீயேயோ அம்பர நற்சோதி. அதனுள் பிரமன் அரன் நீ உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன்நீ எம்பரம் சாதிக்க லுற்றென்னைப் போரவிட் டிட்டாயே. 10.10.4 3886 போரவிட் டிட்டென்னை நீபுறம் போக்கலுற்றால் பின்னையான் ஆரைக்கொண் டெத்தையந்தோ. எனதென்பதென் யானென்பதென் தீர இரும்புண்ட நீரது போலவென் ஆருயிரை ஆரப் பருக,எனக்கு ஆராவமுதானாயே. 10.10.5 3887 எனக்கா ராவமு தாயென தாவியை இன்னுயிரை மனக்கா ராமைமன்னி யுண்டிட்டா யினியுண் டொழியாய் புனக்கா யாநிறத்த புண்டரீ கக்கட்f செங்கனிவாய் உனக்கேற்கும் கோல மலர்ப்பாவைக் கன்பா..என் அன்பேயோ. 10.10.6 3888 கோல மலர்ப்பாவைக் கன்பா கியவென் அன்பேயோ நீல வரையிரண்டு பிறைகவ்வி நிமிர்ந்த தொப்ப கோல வராகமொன் றாய்நிலங் கோட்டிடைக் கொண்டேந்தாய் நீலக் கடல்கடைந் தாயுன்னைப் பெற்றினிப் போக்குவனோ? (2) 10.10.7 3889 பெற்றினிப் போக்குவனோ உன்னை என் தனிப் பேருயிரை உற்ற இருவினையாய் உயிராய்ப் பயனாய் அவையாய் முற்றவிம் மூவுலகும் பெருந் தூறாய்த் தூற்றில்புக்கு முற்றக் கரந்தொளித் தாய்.என் முதல்தனி னித்தேயோ. 10.10.8 3890 முதல்தனி வித்தேயோ. முழுமூ வுலகாதிக் கெல்லாம் முதல்தனி யுன்னையுன்னை எனைநாள் வந்து கூடுவன்நான் முதல்தனி அங்குமிங்கும் முழுமுற் றுறுவாழ் பாழாய் முதல்தனி சூழ்ந்தகன் றாழ்ந்துயர்ந்த முடிவி லீயோ. 10.10.9 3891 சூழ்ந்தகன் றழ்ந்துயர்ந்த முடிவில் பெரும்பா ழேயோ சூழ்ந்தத னில்பெரிய பரநன் மலர்ச்சோ தீயோ சூழ்ந்தத னில்பெரிய சுடர்ஞான வின்ப மேயோ சூழ்ந்தத னில்பெரிய என்னவா அறச்சூழ்ந் தாயே. (2) 10.10.10. 3892 அவாவறச் சூழரியை அயனை அரனை அலற்றி அவாவற்று வீடுபெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன அவாவிலந் தாதிகளால் இவையா யிரமும் முடிந்த அவாவிலந் தாதியிப் பத்தறிந் தார்பிறந் தாருயர்ந்தே. (2) 10.10.11 நம்மாழ்வார் திருவடிகளே சரணம் திருவாய்மொழி நிறைவுற்றது. ஆக பாசுரம் 1102. 3913 நிதியைப் பொழியும் முகில்என்று நீசர்தம் வாசல்பற்றித் துதிகற் றுலகில் துவள்கின்றி லேன், இனித் தூய்நெறிசேர் எதிகட் கிறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம் கதிபெற் றுடைய இராமா னுசனென்னைக் காத்தனனே. 21 3914 கார்த்திகை யானும் கரிமுகத் தானும் கனலும்முக்கண் மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதுகிட்டு மூவுலகும் பூத்தவ னே.என்று போற்றிட வாணன் பிழைபொறுத்த தீர்த்தனை யேத்தும் இராமா னுசனென்றன் சேமவைப்பே. 22 3915 வைப்பாய வான்பொருள் என்று,நல் லன்பர் மனத்தகத்தே எப்போதும் வைக்கும் இராமா னுசனை இருநிலத்தில் ஒப்பார் இலாத உறுவினை யேன்வஞ்ச நெஞ்சில்வைத்து முப்போதும் வாழ்த்துவன் என்னாம் இதுஅவன் மொய்புகழ்க்கே. 23 3916 மொய்த்தவெந் தீவினை யால்பல் லுடல்தொறும் மூத்து,அதனால் எய்த்தொழிந் தேன்முன நாள்களெல் லாம்,இன்று கண்டுயர்ந்தேன் பொய்த்தவம் போற்றும் புலைச்சம யங்கள்நிலத்தவியக் கைத்தமெய்ஞ் ஞானத்து இராமா னுசனென்னும் கார்தன்னையே. 24 3917 காரேய் கருணை இராமா னுச,இக் கடலிடத்தில் ஆரே யறிபவர் நின்னரு ளின்தன்மை அல்லலுக்கு நேரே யுறைவிடம் நான்வந்து நீயென்னை உய்த்தபினுன் சீரே யுயிர்க்குயி ராய், அடி யேற்கின்று தித்திக்குமே. 25 3918 திக்குற்ற கீர்த்தி இராமா னுசனை, என் செய்வினையாம் மெய்க்குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை மேவும்நல்லோர் எக்குற்ற வாளர் எதுபிறப் பேதியல் வாகநின்றோர் அக்குற்றம் அப்பிறப்பு அவ்வியல் வேநம்மை யாட்கொள்ளுமே. 26 3919 கொள்ளக் குறைவற் றிலங்கிக் கொழுந்துவிட் டோ ங்கியவுன் வள்ளல் தனத்தினால் வல்வினை யேன்மனம் நீபுகுந்தாய் வெள்ளைச் சுடர்விடும் உன்பெரு மேன்மைக் கிழுக்கிதென்று தள்ளுற் றிரங்கும் இராமா னுச என் தனிநெஞ்சமே. 27 3920 நெஞ்சில் கறைகொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன் நங்கள் பஞ்சித் திருவடிப் பின்னைதன் காதலன் பாதம்நண்ணா வஞ்சர்க் கரிய இராமா னுசன்புகழ் அன்றியென்வாய் கொஞ்சிப் பரவகில் லாது என்ன வாழ்வின்று கூடியதே. 28 3921 கூட்டும் விதியென்று கூடுங்கொ லோ,தென் குருகைப்பிரான் பாட்டென்னும் வேதப் பசுந்தமிழ் தன்னைத்,தன் பத்தியென்னும் வீட்டின்கண் வைத்த இராமா னுசன்புகழ் மெய்யுணர்ந்தோர் ஈட்டங்கள் தன்னை, என் நாட்டங்கள் கண்டினப மெய்திடவே? 29 3922 இன்பந் தருபெரு வீடுவந் தெய்திலென்? எண்ணிறந்த துன்பந் தருநிர யம்பல சூழிலென்? தொல்லுலகில் மன்பல் லுயிர்கட் கிறையவன் மாயன் எனமொழிந்த அன்பன் அனகன் இராமா னுசனென்னை ஆண்டனனே. 30 3923 ஆண்டிகள் நாள்திங்க ளாய்நிகழ் காலமெல் லாம்மனமே. ஈண்டுபல் யோனிகள் தோறுழல் வோம் இன்றோ ரெண்ணின்றியே காண்டகு தோளண்ணல் தென்னத்தி யூரர் கழலிணைக்கீழ்ப் பூண்டவன் பாளன் இராமா னுசனைப் பொருந்தினமே. (2) 31 3924 பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும்,நல்ல திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறுகலியால் வருந்திய ஞாலத்தை வண்மையி னால்வந் தெடுத்தளித்த அருந்தவன் எங்கள் இராமா னுசனை அடைபவர்க்கே. 32 3925 அடையார் கமலத் தலர்மகள் கேள்வன் கை யாழியென்னும் படையொடு நாந்தக மும்படர் தண்டும்,ஒண் சார்ங்கவில்லும் புடையார் புரிசங் கமுமிந்தப் பூதலம் காப்பதற்கென்று இடையே இராமா னுசமுனி யாயின இந்நிலத்தே. 33 3926 நிலத்தைச் செறுத்துண்ணும் நீசக் கலியை, நினைப்பரிய பலத்தைச் செறுத்தும் பிறங்கிய தில்லை,என் பெய்வினைதென் புலத்தில் பொறித்தவப் புத்தகச் சும்மை பொறுக்கியபின் நலத்தைப் பொறுத்தது இராமா னுசன்றன் நயப்புகழே. 34 3927 நயவேன் ஒருதெய்வம் நானிலத் தேசில மானிடத்தைப் புயலே எனக்கவி போற்றிசெய் யேன், பொன் னரங்கமென்னில் மயலே பெருகும் இராம னுசன்மன்னு மாமலர்த்தாள் அயரேன் அருவினை என்னையெவ் வாறின் றடர்ப்பதுவே? 35 3928 அடல்கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன் றாரணச்சொல் கடல்கொண்ட ஒண்பொருள் கண்டளிப் பப்,பின்னும் காசினியோர் இடரின்கண் வீழ்ந்திடத் தானுமவ் வொண்பொருள் கொண்டவர்பின் படரும் குணன், எம் இராமா னுசன்றன் படியிதுவே. 36 3929 படிகொண்ட கீர்த்தி இராமா யணமென்னும் பத்திவெள்ளம் குடிகொண்ட கோயில் இராமா னுசன்குணங் கூறும்,அன்பர் கடிகொண்ட மாமாலர்த் தாள்கலந் துள்ளங் கனியும்நல்லோர் அடிகண்டு கொண்டுகந்து என்னையும் ஆளவர்க் காக்கினரே. 37 3930 ஆக்கி யடிமை நிலைப்பித் தனையென்னை இன்று,அவமே போக்கிப் புறத்திட்ட தென்பொரு ளா?முன்பு புண்ணியர்தம் வாக்கிற் பிரியா இராமா னுச நின் அருளின்வண்ணம் நோக்கில் தெரிவிரி தால், உரை யாயிந்த நுண்பொருளே. 38 3931 பொருளும் புதல்வரும் பூமியும் பூங்குழ லாருமென்றே மருள்கொண் டிளைக்கும் நமக்கு நெஞ் சே.மற்று ளார்த்தரமோ? இருள்கோண்ட வெந்துயர் மாற்றித்தன் ஈறில் பெரும்புகழே தெருளும் தெருள்தந்து இராமா னுசன்fசெய்யும் சேமங்களே. 39 3932 சேமநல் வீடும் பொருளும் தருமமும் சீரியநற் காமமும் என்றிவை நான்கென்பர், நான்கினும் கண்ணனுக்கே ஆமது காமம் அறம்பொருள் வீடுதற் கென்றுரைத்தான் வாமனன் சீலன், இராமா னுசனிந்த மண்மிசையே. 40 3933 மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே கண்ணுற நிற்கிலும் காணகில் லா, உல கோர்களெல்லாம் அண்ணல் இராமா னுசன்வந்து தோன்றிய அப்பொழுதே நண்ணரு ஞானம் தலைக்கொண்டு, நாரணற் காயினரே. 41 3934 ஆயிழை யார்கொங்கை தங்கும்அக் காதல் அளற்றழுந்தி மாயுமென் ஆவியை வந்தெடுத் தானின்று மாமலராள் நாயகன் எல்லா வுயிர்கட்கும் நாதன் அரங்கனென்னும் தூயவன் தீதில் இராமா னுசன்தொல் லருள்சுரந்தே. 42 3935 சுரக்கும் திருவும் உணர்வும் சொலப்புகில் வாயமுதம் பரக்கும் இருவினை பற்றற வோடும் படியிலுள்ளீர் உரைக்கின் றனனுமக் கியானறஞ் சீறும் உறுகலியைத் துரக்கும் பெருமை இராமா னுசனென்று சொல்லுமினே. 43 3936 சொல்லார் தமிழொரு மூன்றும் சுருதிகள் நான்குமெல்லை இல்லா அறநெறி யாவும் தெரிந்தவன் எண்ணருஞ்சீர் நல்லார் பரவும் இராமா னுசன்திரு நாமம் நம்பிக் கல்லார் அகலிடத் தோர், எது பேறென்று காமிப்பரே. 44 3937 பேறொன்று மற்றில்லை நின்சரண் அன்றி,அப் பேறளித்தற் காறொன்று மில்லைமற் றச்சரண் அன்றி,என் றிப்பொருளைத் தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத்தந்த செம்மைசொல்லால் கூறும் பரமன்று இராமா னுசமெய்ம்மை கூறிடிலே. 45 3938 கூறும் சமயங்கள் ஆறும் குலையக் குவலயத்தே மாறன் பணித்த மரையுணர்ந் தோனை மதியிலியேன் தேறும் படியென் மனம்புதுந் தானைத் திசையனைத்தும் ஏறும் குணனை இராமா னுசனை இறைஞ்சினமே. 46 3939 இறைஞ்சப் படும்பரன் ஈசன் அரங்கனென்று இவ்வுலகத் தறம்செப்பும் அண்ணல் இராமா னுசன்,என் அருவினையின் திறம்செற் றிரவும் பகலும் விடாதென்றன் சிந்தையுள்ளே நிறைந்தொப் பறவிருந் தான், எனக் காரும் நிகரில்லையே. 47 3940 நிகரின்றி நின்றவென் நீசதைக்கு நின்னரு ளின்கணன்றிப் புகலொன்று மில்லை அருட்குமஃ தேபுகல் புன்மையிலோர் பகரும் பெருமை இராமா னுச இனி நாம்பழுதே அகலும் பொருளென், பயனிரு வோமுக்கு மானபின்னே? 48 3941 ஆனது செம்மை அறநெறி பொய்ம்மை அறுசமயம் போனது பொன்றி யிறந்தது வெங்கலி பூங்கமலத் தேனதி பாய்வயல் தென்னரங் கன்கழல் சென்னிவைத்துத் தானதில் மன்னும் இராமா னுசனித் தலத்துதித்தே. 49 3942 உதிப்பன வுத்தமர் சிந்தையுள் ஒன்னலர் நெஞ்சமஞ்சிக் கொதித்திட மாறி நடப்பன கொள்ளைவன் குற்றமெல்லாம் பதித்தவென் புன்கவிப் பாவினம் பூண்டன பாவுதொல்சீர் எதித்தலை நாதன் இராமா னுசன்றன் இணையடியே. 50 3943 அடியைத் தொடர்ந்தெழும் ஐவர்கட் காய்அன்று பாரதப்போர் முடியப் பரிநெடுந் தேர்விடுங் கோனை முழுதுணர்ந்த அடியர்க் கமுதம் இராமா னுசனென்னை ஆளவந்திப் படியிற் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே. 51 3944 பார்த்தான் அறுசம யங்கள் பதைப்ப,இப் பார்முழுதும் போர்த்தான் புகழ்கொண்டு புன்மையி னேனிடைத் தான்புகுந்து தீர்த்தான் இருவினை தீர்த்தரங் கன்செய்ய தாளிணையோ டார்த்தான் இவையெம் இராமா னுசன்செய்யும் அற்புதமே. 52 3945 அற்புதன் செம்மை இராமா னுசன், என்னை ஆளவந்த கற்பகம் கற்றவர் காமுறு சீலன் கருதரிய பற்பல் லுயிர்களும் பல்லுல கியாவும் பரனதென்னும் நற்பொருள் தன்னை, இந் நானிலத் தேவந்து நாட்டினனே. 53 3946 நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன, நாரணனைக் காட்டிய வேதம் களிப்புற் றது,தென் குருகைவள்ளல் வாட்டமி லாவண் டமிழ்மறை வாழ்ந்தது மண்ணுலகில் ஈட்டிய சீலத்து இராமா னுசன்றன் இயல்வுகண்டே. 54 3947 கண்டவர் சிந்தை கவரும் கடிபொழில் தென்னரங்கன் தொண்டர் குலாவும் இராமா னுசனைத், தொகையிறந்த பண்டரு வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்தருளும் கொண்டலை மேவித் தொழும், குடி யாமெங்கள் கோக்குடியே. 55 3948 கோக்குல மன்னரை மூவெழு கால், ஒரு கூர்மழுவால் போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் புவனமெங்கும் ஆக்கிய கீர்த்தி இராமா னுசனை அடைந்தபின்என் வாக்குரை யாது, என் மனம்நினை யாதினி மற்றொன்றையே. 56 3949 மற்றொரு பேறு மதியாது, அரங்கன் மலரடிக்காள் உற்றவ ரேதனக் குற்றவ ராய்க்கொள்ளும் உத்தமனை நற்றவர் போற்றும் இராமா னுசனையிந் நானிலத்தே பெற்றனன் பெற்றபின் மற்றறி யேனொரு பேதைமையே. 57 3950 பேதையர் வேதப் பொருளிதென் னுன்னிப் பிரமம்நன்றென் றோதிமற் றெல்லா உயிரும் அஃதென்று உயிர்கள்மெய்விட் டாதிப் பரனொடொன் றாமென்று சொல்லுமவ் வல்லலெல்லாம் வாதில்வென் றான், எம் இராமா னுசன்மெய்ம் மதிக்கடலே. 58 3951 கடலள வாய திசையெட்டி னுள்ளும் கலியிருளே மிடைதரு காலத் திராமா னுசன், மிக்க நான்மறையின் சுடரொளி யாலவ் விருளைத் துரத்தில னேல்உயிரை உடையவன், நாரணன் என்றறி வாரில்லை உற்றுணர்ந்தே. 59 3952 உணர்ந்தமெய்ஞ் ஞானியர் யோகந் தொறும்,திரு வாய்மொழியின் மணந்தரும் இன்னிசை மன்னும் இடந்தொறும் மாமலராள் புணர்ந்தபொன் மார்பன் பொருந்தும் பதிதொறும் புக்குநிற்கும் குணந்திகழ் கொண்டல் இராமானுசனெங் குலக்கொழுந்தே. 60 3953 கொழுந்துவிட் டோ டிப் படரும்வெங் கோள்வினை யால்,நிரயத் தழுந்தியிட் டேனைவந் தாட்கொண்ட பின்னும், அருமுனிவர் தொழுந்தவத் தோனெம் இராமா னுசன்தொல் புகழ்சுடர்மிக் கெழுந்தது,அத் தால்நல் லதிசயங் கண்ட திருநிலமே. 61 3954 இருந்தேன் இருவினைப் பாசம் கழற்றிஇன் றியான்இறையும் வருந்தேன் இனியெம் இராமா னுசன்,மன்னு மாமலர்த்தாள் பொருந்தா நிலையுடைப் புன்மையி னோர்க்கொன்றும் நன்மைசெய்யாப் பொருந்தே வரைப்பர வும், பெரி யோர்தம் கழல்பிடித்தே. 62 3955 பிடியைத் தொடரும் களிறென்ன யானுன் பிறங்கியசீர் அடியைத் தொடரும் படிநல்க வேண்டும் அறுசமயச் செடியைத் தொடரும் மருள்செறிந் தோர்சிதைந் தோடவந்திப் படியைத் தொடரும் இராமா னுச மிக்க பண்டிதனே. 63 3956 பண்டரு மாறன் பசுந்தமிழ் ஆனந்தம் பாய்மதமாய் விண்டிட எங்கள் இராமா னுசமுனி வேழம் மெய்ம்மை கொண்டநல் வேதக் கொழுந்தண்ட மேந்திக் குவலயத்தே மண்டிவந் தேன்றது வாதியர் காள். உங்கள் வாழ்வற்றதே. 64 3957 வாழ்வற் றதுதொல்லை வாதியர்க்கு என்றும் மறையவர்தம் தாழ்வற் றதுதவம் தாரணி பெற்றது, தத்துவநூல் கூழற் றதுகுற்ற மெல்லாம் பதித்த குணத்தினர்க்கந் நாழற் றது,நம் இராமா னுசந்தந்த ஞானத்திலே. 65 3958 ஞானம் கனிந்த நலங்கொண்டு நாடொரும் நைபவர்க்கு வானம் கொடுப்பது மாதவன் வல்வினை யேன்மனத்தில் ஈனம் கடிந்த இராமா னுசன் தன்னை எய்தினர்க்கத் தானம் கொடுப்பது தன்தக வென்னும் சரண்கொடுத்தே. 66 3959 சரணம் அடைந்த தருமனுக் காப்,பண்டு நூற்றுவரை மரணம் அடைவித்த மாயவன் தன்னை வணங்கவைத்த கரணம் இவையுமக் கன்றென்றி ராமா னுசனுயிர்கட் கரணங் கமைத்தில னேல்,அர ணார்மற்றிவ் வாருயிர்க்கே? 67 3960 ஆரெனக் கின்று நிகர்ச்சொல்லின் மாயனன் றைவர்த்தெய்வத் தேரினிற் செப்பிய கீதையின் செம்மைப் பொருள்தெரியப் பாரினிற் சொன்ன இராமா னுசனைப் பணியும்நல்லோர் சீரினிற் சென்று பணிந்தது, என் னாவியும் சிந்தையுமே. 68 3961 சிந்தையி னோடு கரணங்கள் யாவும் சிதைந்து,முன்னாள் அந்தமுற் றாழ்ந்தது கண்டு,இவை என்றனக் கன்றருளால் தந்த அரங்கனும் தன்சரண் தந்திலன் தானதுதந்து எந்தை இராமா னுசன்வந் தெடுத்தனன் இன்றென்னையே. 69 3962 என்னையும் பார்த்தென் இயல்வையும் பார்த்து,எண்ணில் பல்குணத்த உன்னையும் பார்க்கில் அருள்செய்வ தேநலம் அன்றியென்பால் பின்னையும் பார்க்கில் நலமுள தே?உன் பெருங்கருணை தன்னையென் பார்ப்பர் இராமா னுச உன்னைச் சார்ந்தவரே? 70 3963 சார்ந்ததென் சிந்தையுன் தாளிணைக் கீழ்,அன்பு தான்மிகவும் கூர்ந்ததத் தாமரைத் தாள்களுக்கு உன்றன் குணங்களுக்கே தீர்ந்ததென் செய்கைமுன் செய்வினை நீசெய் வினையதனால் பேர்ந்தது வண்மை இராமா னுச எம் பெருந்தகையே. 71 3964 கைத்தனன் தீய சமயக் கலகரைக் காசினிக்கே உய்த்தனன் தூய மறைநெறி தன்னை,என் றுன்னியுள்ளம் நெய்த்தவன் போடிருந் தேத்தும் நிறைபுக ழோருடனே வைத்தனன் என்னை இராமா னுசன்மிக்க வண்மைசெய்தே. 72 3965 வண்மையி னாலுந்தன் மாதக வாலும் மதிபுரையும் தண்மையி னாலுமித் தாரணி யோர்கட்குத் தான்சரணாய் உண்மைநன் ஞானம் உரைத்த இராமா னுசனையுன்னும் திண்மையல் லாலெனக் கில்லை, மற் றோர்நிலை தேர்ந்திடிலே. 73 3966 தேரார் மறையின் திறமென்று மாயவன் தீயவரைக் கூராழி கொண்டு குறைப்பது கொண்டல் அனையவண்மை ஏரார் குணத்தெம் இராமா னுசனவ் வெழில்மறையில் சேரா தவரைச் சிதைப்பது அப் போதொரு சிந்தைசெய்தே. 74 3967 செய்த்தலைச் சங்கம் செழுமுத்தம் ஈனும் திருவரங்கர் கைத்தலத் தாழியும் சங்கமு மேந்தி,நங் கண்முகப்பே மெய்த்தலைத் துன்னை விடேனென் றிருக்கிலும் நின்புகழே மொய்த்தலைக் கும்வந்து இராமா னுச.என்னை முற்றுநின்றே. 75 3968 நின்றவண் கீர்த்தியும் நீள்புனலும்,நிறை வேங்கடப்பொற் குன்றமும் வைகுந்த நாடும் குலவிய பாற்கடலும் உன்றனக் கெத்தனை இன்பந் தரும்உன் இணைமலர்த்தாள் என்றனக் கும்அது,இராமா னுச இவை யீந்தருளே. (2) 76 3969 ஈந்தனன் ஈயாத இன்னருள் எண்ணில் மறைக்குறும்பைப் பாய்ந்தனன் அம்மறைப் பல்பொரு ளால்,இப் படியனைத்தும் ஏய்ந்தனன் கீர்த்தியி னாலென் வினைகளை வேர்பறியக் காய்ந்தனன் வண்மை இராமா னுசற்கென் கருத்தினியே? 77 3970 கருத்திற் புகுந்துள்ளிற் கள்ளம் கழற்றிக் கருதரிய வருத்தத்தி னால்மிக வஞ்சித்து நீயிந்த மண்ணகத்தே திருத்தித் திருமகள் கேள்வனுக் காக்கிய பின்னென்னெஞ்சில் பொருத்தப் படாது, எம் இராமா னுச மற்றோர் பொய்ப் பொருளே. 78 3971 பொய்யைச் சுரக்கும் பொருளைத் துறந்து,இந்தப் பூதலத்தே மெய்மைப் புரக்கும் இராமா னுசன்நிற்க, வேறுநம்மை உய்யக் கொளவல்ல தெய்வமிங் கியாதென் றுலர்ந்தவமே ஐயப் படாநிற்பர் வையத்துள் ளோர்நல் லறிவிழந்தே. 79 3972 நல்லார் பரவும் இராமா னுசன்,திரு நாமம்நம்ப வல்லார் திறத்தை மறவா தவர்கள் எவர்,,அவர்க்கே எல்லா விடத்திலும் என்றுமெப் போதிலும் எத்தொழும்பும் சொல்லால் மனத்தால் கருமத்தி னால்செய்வன் சோர்வின்றியே. 80 3973 சோர்வின்றி உன்றன் துணையடிக் கீழ்த்,தொண்டு பட்டவர்பால் சார்வின்றி நின்ற எனக்கு,அரங் கன்செய்ய தாளிணைகள் பேர்வின்றி யின்று பெறுத்தும் இராமா னுச.இனியுன் சீரொன் றியகரு ணைக்கு, இல்லை மாறு தெரிவுறிலே. 81 3974 தெரிவுற்ற ஞாலம் செறியப் பெறாது,வெந் தீவினையால் உருவற்ற ஞானத் துழல்கின்ற என்னை, ஒருபொழுதில் பொருவற்ற கேள்விய னாக்கிநின் றானென்ன புண்ணீயனோ. தெரிவுற்ற கீர்த்தி, இராமா னுசனென்னும் சீர்முகிலே. 82 3975 சீர்கொண்டு பேரறம் செய்து,நல்வீடு செறிதும் என்னும் பார்கொண்ட மேன்மையர் கூட்டனல் லேன்,உன் பதயுகமாம் எர்கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன் உன்னுடைய கார்கொண்ட வண்மை இராமா னுச.இது கண்டுகொள்ளே. 83 3976 கண்டுகொண் டேனெம் இராமா னுசன்றன்னை காண்டலுமே தொண்டுகொண் டேன்அவன் தொண்டர்பொற் றாளில்என் தொல்லை வெந்நோய் விண்டுகொண் டேன்அவன் சீர்வெள்ள வாரியை வாய்மடுத்தின் றுண்டுகொண் டேன், இன்னம் உற்றன ஓதில் உவப்பில்லையே. 84 3977 ஓதிய வேதத்தின் உட்பொரு ளய், அதன் உச்சிமிக்க சோதியை நாதன் எனவெறி யாதுழல் கின்றதொண்டர் பேதைமை தீர்த்த இராமா னுசனைத் தொழும்பெரியோர் பாதமல் லாலென்றன் ஆருயிர்க்கு யாதொன்றும் பற்றில்லையை. 85 3978 பற்றா மனிசரைப் பற்றி,அப் பற்று விடாதவரே உற்றா ரெனவுழன் றோடிநை யேனினி, ஒள்ளியநூல் கற்றார் பரவும் இராமா னுசனைக் கருதுமுள்ளம் பெற்றார் எவர், அவ ரெம்மைநின் றாளும் பெரியவரே. 86 3979 பெரியவர் பேசிலும் பேதையர் பேசிலும் தன்குணங்கட் குரியசொல் என்றும் உடையவன் என்றென்று உணர்வில்மிக்கோர் தெரியும்வண் கீர்த்தி இராமா னுசன்மறை தேர்ந்துலகில் புரியுநன் ஞானம் பொருந்தா தவரைப் பொரும்கலியே. 87 3980 கலிமிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப்பெருமான் ஒலிமிக்க பாடலை உண்டுதன் னுள்ளம் தடித்து,அதனால் வலிமிக்க சீயம் இராமா னுசன்மறை வாதியராம் புலிமிக்க தென்று, இப் புவனத்தில் வந்தமை போற்றுவனே. (2) 88 3981 போற்றருஞ் சீலத் திராமா னுச,நின் புகழ்தெரிந்து சாற்றுவ னேலது தாழ்வது தீரில்,உன் சீர்தனக்கோர் ஏற்றமென் றேகொண் டிருக்கிலு மென்மனம் ஏத்தியன்றி ஆற்றகில் லாது, இதற் கென்னினை வாயென்றிட் டஞ்சுவனே. 89 3982 நினையார் பிறவியை நீக்கும் பிரானை,இந் நீணிலத்தே எனையாள வந்த இராமா னுசனை இருங்கவிகள் புனையார் புனையும் பெரியவர் தாள்களில் பூந்தொடையல் வனையார் பிறப்பில் வருந்துவர் மாந்தர் மருள்சுரந்தே. 90 3983 மருள்சுரந் தாகம வாதியர் கூறும்,அவப்பொருளாம் இருள்சுரந் தெய்த்த உலகிருள் நீங்கத்,தன் ஈண்டியசீர் அருள்சுரந் தெல்லா வுயிர்கட்கும் நாதன் அரங்கனென்னும் பொருள்சுரந் தான், எம் இராமா னுசன்மிக்க புண்ணியனே. 91 3984 புண்ணிய நோன்பு புரிந்துமி லேன்,அடி போற்றிசெய்யும் நுண்ணருங் கேள்வி நுவன்றுமி லேன்,செம்மை நூற்புலவர்க் கெண்ணருங் கீர்த்தி இராமா னுச.இன்று நீபுகுந்தென் கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நின்றவிக் காரணம் கட்டுரையே. 92 3985 கட்டப் பொருளை மறைப்பொரு ளென்று கயவர்சொல்லும் பெட்டைக் கெடுக்கும் பிரனல்ல னே,என் பெருவினையைக் கிட்டிக் கிழங்கொடு தன்னருள் என்னுமொள் வாளுருவி வெட்டிக் கிளைந்த இராமா னுசனென்னும் மெய்த்தவனே. 93 3986 தவந்தரும் செல்வம் தகவும் தரும்,சலி யாப்பிறவிப் பவந்தரும் தீவினை பாற்றித் தரும்,பரந் தாமமென்னும் திவந்தரும் தீதில் இராமா னுசன்தன்னைச் சார்ந்தவர்கட் குவந்தருந் தேன், அவன் சீரன்றி யானென்றும் உள்மகிழ்ந்தே. 94 3987 உண்ணின் றுயிர்களுக் குற்றன வேசெய்து அவர்க்குயவே பண்ணும் பரனும் பரிவில னாம்படி பல்லுயிர்க்கும் விண்ணின் தலைநின்று விடளிப் பானெம் இராமானுசன் மண்ணின் தலத்துதித்து உய்மறை நாலும் வளர்த்தனனே. 95 3988 வளரும் பிணிகொண்ட வல்வினை யால்,மிக்க நல்வினையில் கிளரும் துணிவு கிடைத்தறி யாது முடைத்தலையூன் தளரும் அளவும் தரித்தும் விழுந்தும் தனிதிரிவேற் குளரெம் இறைவர் இராமா னுசன்றன்னை உற்றவரே. 96 3989 தன்னையுற் றாட்செய்யும் தன்மையி னோர்,மன்னு தாமரைத்தாள் தன்னையுற் றாட்செய்ய என்னையுற் றானின்று தன்தகவால் தன்னையுற் றாரன்றித் தன்மையுற் றாரில்லை என்றறிந்து தன்னையுற் றாரை இராமா னுசன்குணம் சாற்றிடுமே. 97 3990 இடுமே இனிய சுவர்க்கத்தில் இன்னம் நரகிலிட்டுச் சுடுமே யவற்றைத் தொடர்தரு தொல்லைச் சுழல்பிறப்பில் நடுமே யினிநம் இராமா னுசன்நம்மை நம்வசத்தே விடுமே சரணமென் றால், மன மே நையல் மேவுதற்கே? (2) 98 3991 தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ்சடையோன் சொற்கற்ற சோம்பரும் சூனிய வாதரும் நான்மறையும் நிற்கக் குறும்புசெய் நீசரும் மாண்டனர் நீணிலத்தே பொற்கற் பகம், எம் இராமா னுசமுனி போந்தபின்னே. 99 3992 போந்ததென் னெஞ்சென்னும் பொன்வண்டு உனதடிப் போதில் ஒண்சீர் ஆம்தெளி தேனுண் டமர்ந்திட வேண்டி,நின் பாலதுவே ஈந்திட வேண்டும் இராமா னுச.இது அன்றியொன்றும் மாந்தகில் லாது, இனி மற்றொன்று காட்டி மயக்கிடலே. 100 3993 மயக்கும் இருவினை வல்லியிற் பூண்டு மதிமயங்கித் துயக்கும் பிறவியில் தோன்றிய என்னைத் துயரகற்றி உயக்கொண்டு நல்கும் இராமா னுச.என்ற துன்னையுன்னி நயக்கும் அவர்க்கி திழுக்கென்பர், நல்லவர் என்றும்நைந்தே. 101 3994 நையும் மனமும் குணங்களை உன்னி,என் நாவிருந்தெம் ஐயன் இராமா னுசனென் றழைக்கும் அருவினையேன் கையும் தொழும்கண் கருதிடுங் காணக் கடல்புடைசூழ் வையம் இதனில், உன் வண்மையென் பாலென் வளர்ந்ததுவே? 102 3995 வளர்ந்தவெங் கோட மடங்கலொன் றாய்,அன்று வாளவுணன் கிளர்ந்தபொன் னாகம் கிழித்தவன் கீர்த்திப் பயிரெழுந்து விளைந்திடும் சிந்தை இராமா னுசனென்றன் மெய்வினைநோய் களைந்துநன் ஞானம் அளித்தனன் கையிற் கனியென்னவே. 103 3996 கையிற் கனியென்னக் கண்ணனைக் காட்டித் தரிலும்,உன்றன் மெய்யிற் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான்,நிரயத் தொய்யில் கிடக்கிலும் சோதிவிண் சேரிலும் இவ்வருள்நீ செய்யில் தரிப்பன் இராமா னுச என் செழுங்கொண்டலே. 104 3997 செழுந்திரைப் பாற்கடல் கண்டுயில் மாயன் திருவடிக்கீழ் விழுந்திருப் பார்நெஞ்சில் மேவுநன் ஞானி,நல் வேதியர்கள் தொழுந்திருப் பாதன் இராமா னுசனைத் தொழும்பெரியோர் எழுந்திரைத் தாடும் இடமடி யேனுக் கிருப்பிடமே. (2) 105 3998 இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ் சோலையென்னும் பொருப்பிடம் மாயனுக் கென்பர்நல் லோர்,அவை தன்னொடுவந் திருப்பிடம் மாயன் இராமா னுசன்மனத் தின்றவன்வந் திருப்பிடம் என்றன் இதயத்துள் ளேதனக் கின்புறவே. (2) 106 3999 இன்புற்ற சீலத் திராமா னுச, என்றும் எவ்விடத்தும் என்புற்ற நோயுடல் தோறும் பிறந்திறந்து எண்ணரிய துன்புற்று வீயினும் சொல்லுவ தொன்றுண்டுன் தொண்டர்கட்கே அன்புற் றிருக்கும் படி, என்னை யாக்கியங் காட்படுத்தே. (2) 107 4000 அங்கயல் பாய்வயல் தென்னரங் கன், அணி ஆகமன்னும் பங்கய மாமலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தியெல்லாம் தங்கிய தென்னத் தழைத்துநெஞ் சே நந் தலைமிசையே பொங்கிய கீர்த்தி இராமா னுசனடிப் பூமன்னவே. (2) 108 திருவரங்கத்தமுதனார் திருவடிகளே சரணம் எம்பெருமானார் திருவடிகளே சரணம்