jaga flash news

Thursday 30 September 2021

கோபம் எதனால் வருகிறத

கோபம் எதனால் வருகிறது என்று ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது.● அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பதில் தந்திருந்தார்கள். ●ஒருவர் கூறினார், நான் பணிபுரியும் அலுவலகத்தில் நான் கூறுவதை யாரும் கேட்பதில்லை. நான் ஒன்று சொன்னால், அவர்கள் ஒன்று செய்கிறார்கள். இதனால் கோபம் உடனே வந்துடுது என்றார். ●மற்றொருவர், யாராவது என்னை தவறா சொல்லிட்டாங்கன்னா பட்டுன்னு கோபம் வந்துடும் என்றார். ●அடுத்தவர், நான் செய்யாததை செய்த மாதிரி சொல்லிட்டாங்கன்னா அவ்வளவுதான் அவங்க என்கிறார். ●இன்னொருவர், சொன்னதை திரும்ப திரும்ப சொன்னா, நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாதுன்னு சொல்றார். ●வேறொருவரோ, நினைச்சது கிடைக்கலைன்னா சும்மா விடமாட்டேனுட்டார். இப்படி ஒவ்வொருவரும் தங்களுக்கு எதனால் கோபம் வருகிறது என்று கருத்து தெரிவித்தனர். இப்படி அடுத்தவர்கள் ஏதாவது செய்தால் இவர்களுக்கு கோபம் ஏற்படுமாம். அது சரி... நீங்களே ஏதாவது தவறு செய்தால் உங்கள் மீது கோபப்படுவீர்களா? என்றதற்கு, அது எப்படீங்க நம்ம மேலேயே நம்ம கோபப்படுவோமா என்றனர். கோபம்னா என்ன? கோபம் என்பது அடுத்தவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளுக்கு நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் தண்டனைக்கு பெயர் தாங்க கோபம். அதுமட்டுமல்லாமல் நாம் நம் கோபத்தை குறைக்க அடுத்தவர்களிடம் இதே கோபத்துடன் செயல்பட்டால் நட்பு நசுங்கி விடும். உறவு அறுந்து போகும். உரிமை ஊஞ்சலாடும். நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் தண்டனை என்ன? சவுக்கு எடுத்து சுளீர்...சுளீர்ன்னு நம்மளையே அடித்துக்கொண்டால் மட்டும் அதுக்கு பெயர் தண்டனை இல்லீங்க. கோபம் ஏற்படுவதால் பதட்டம்( டென்ஷன்) உண்டாகிறது. இதனால் நமது உடல், மனம் இரண்டும் பாதிக்கப்படுகிறது. இந்த பாதிப்பால் நரம்புத்தளர்ச்சி, ரத்த அழுத்தம், மன உளைச்சல், நடுக்கம் போன்ற உபாதைகள் உண்டாகிறது. இதை தடுக்க டாக்டரிடம் சென்று மாத்திரை மருந்து சாப்பிடுவோம். இதே நிலை நீடித்தால் ஒரு மன நோயாளி போல் ஆகி விடுவோம். இது பொய்யல்ல. சத்தியமான உண்மை இது. அன்பின் வேறொரு விதமான வெளிப்பாடுதான் கோபம். முதல்ல அடுத்தவங்களுக்கு கோபம் வர்ற மாதிரி நீங்க நடக்காதீங்க. அடுத்தவங்கள குறை சொல்லாதீங்க. எதையும் அடுத்தவர்களிடம் எதிர்பார்க்காதீங்க. அவங்க உங்க மேல கோபப்பட்டா முதல்ல சாரின்னு மன்னிப்பு கேளுங்க... ஈகோ பார்க்காதீங்க. நீங்க கோபப்படுற மாதிரி அடுத்தவங்க நடந்து கொள்கிறார்கள் என்று வைத்து கொள்வோமே. முதல்ல பிளீஸ் என்னை கொஞ்சம் யோசிக்க விடுங்கன்னு அமைதியாயிடுங்க. யார்மேல தவறுன்னு சிந்தியுங்க... கொஞ்ச நேரத்தில் எல்லாம் சரியாயிடும். அப்படி இல்லைன்னா அந்த இடத்தை விட்டு நகருங்க... தனியா உக்காந்து யோசிங்க. அடிக்கடி யாரிடம் கோபப்படுகிறீர்களோ அவர்களிடம் மனம் விட்டு சந்தோஷமாக சிரித்து பேசுங்கள். அடுத்தவர்களே தவறு செய்திருந்தால் கூட நீங்க நல்லது பண்ணுங்க. அடுத்தவங்க என்ன செஞ்சுட்டாங்கன்னு கோபப்படுறோம். என்ன நடந்துருச்சு பெருசா. என்னத்த இழந்துட்டோம். மரணம் ஒன்று தான் மாபெரும் இழப்பு. அதை தவிர வேறொன்றுமே இழப்பு கிடையாது. எல்லாத்தையும் சமாளிச்சுடலாம்ங்ற முடிவுக்கு வாங்க. வீட்டு பெரியவர்கள் திட்டும் போது கவனித்திருப்பீர்கள் என்னத்த பெரிசா சாதித்து கிழிச்சன்னு. நாட்காட்டியில் உள்ள தேதி பேப்பரைக் கிழிச்சால் மட்டும் போதாது. ஒவ்வொரு நாளும் தூங்கச் செல்லும் முன் இன்றைக்கு என்ன சாதிச்சோம்னு யோசிச்சிட்டு தூங்குங்க. அடுத்தவர்களுக்கு நல்லது பண்ணாட்டியும் கோபம்ங்ற கொடிய நோயைப் பரப்பாமல் இருந்தாலே, நீங்க அவங்களுக்கு நல்லது செஞ்ச மாதிரிதான். நமக்கோ ஆறு அறிவை ஆண்டவன் கொடுத்துள்ளான். இதில் ஆறாவது அறிவை அப்பப்ப யோசிக்கிறதுக்கு யூஸ் பண்ணுங்க... கோபம் வரவே வராது. நாமெல்லாம் சாதிக்கப்பிறந்தவர்கள். கோபப்படாமல் இருப்பதே ஒரு மாபெரும் சாதனை தான். வாழ்வது இந்த பூமியில் ஒரு முறை தான். அதை கோபப்படாமல் சிறந்த முறையில் வாழ்ந்து சாதிப்போம்.. கோபம் வராதிருக்க யோசிப்போம்...

Wednesday 29 September 2021

கெட்ட கொழுப்பை கரைத்து எடையை குறைக்கச் செய்யும் கருஞ்சீரக டீ!

நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோய்கள் என பல உடல் நலப் பிரச்சினைகளுக்கு பெரும்பாலும் காரணமாக இருப்பது இந்த உடல் பருமன் பிரச்சினை தான். உடலில் கொழுப்பு எதுவும் சேராமல் பார்த்துக் கொள்வது உடல் பருமனை மட்டுமல்லாது அதனால் ஏற்படும் பிற விளைவுகளில் இருந்தும் தவிர்க்க உதவும். அதற்கு கருஞ்சீரகம் அதிக அளவில உதவுகிறது. கருஞ்சீரகத்தில் தினமும் சிறிதளவு உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நம் உடலில் தோன்றும் ஏராளமான பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். ரத்த சர்க்கரை அளவைக் குறைப்பது, தலைமுடி உதிர்தலைத் தடுப்பது, சருமப் பிரச்சினை, உடல் எடையைக் குறைப்பது, சிறுநீரகப் பிரச்சினை, இதய நோய்கள் வராமல் தடுப்பது, உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது என பல பிரச்சினைகளுக்கும் கருஞ்சீரகம் தீர்வாக அமையும். அதனால் கருஞ்சீரகத்தைப் பொடியாகவோ அல்லது சூப்பில் கலந்தோ குடிக்கலாம். உடலில் அகட்ட கொழுப்புகளைத் தேங்க விடாமல் உடல் எடையையும் தொப்பையையும் குறைக்க உதவும். ​கருஞ்சீரக டீ தேவையான பொருள்கள் கருஞ்சீரகம் - 2 ஸ்பூன் புதினா - 1 கைப்பிடியளவு இஞ்சி - 1 துண்டு தேன்- 2 ஸ்பூன் செய்முறை முதலில் ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் கருஞ்சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வையுங்கள். கருஞ்சீரகம் நன்கு கொதித்து அதன் சாறு தண்ணீரில் இறங்க ஆரம்பித்ததும் அதில் இஞ்சியைத் தட்டி சேர்க்க வேண்டும். இஞ்சியும் கருஞ்சீரகமும் சேர்த்து கொதித்து வரும்போது கழுவி சுத்தம் செய்து வைத்திருந்த புதினாவை அதில் சேர்த்து விடுங்கள். புதினா சேர்த்ததும் கொதிக்க வைக்கத் தேவையில்லை.

Tuesday 28 September 2021

திருப்பதி சென்று வந்தால் நிச்சயம் திருப்பம் கிடைக்குமா கிடைக்காதா? விஞ்ஞான பூர்வமான ஆதாரத்துடனான பதிவு!

🤲 திருப்பதி சென்று வந்தால் நிச்சயம் திருப்பம் கிடைக்குமா கிடைக்காதா? விஞ்ஞான பூர்வமான ஆதாரத்துடனான பதிவு!

🤲 யாரெல்லாம் திருப்பதி சென்றால் அதிக பலன்கள் பெற முடியும் எந்த ராசி காரர்களுக்கு நன்மை செய்யும் என்பதை இந்தப்பதிவில் தெளிவாக பார்க்கலாம் வாருங்கள்...

🤲 இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும்.

🤲 சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது.

🤲 திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவமாகும் ..

🤲 ஸ்ரீராமானுஜர் யந்திரசக்ரங்கள் பதித்துள்ளதால் அவற்றின் சக்தி கடல் அளவு என்பர் .

🤲 கந்த புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும்போது பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும், செய்வினை தோஷம், வறுமை போக்கும் மற்றும் சந்ததி விருத்தி உண்டாகும்.

🤲 பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமமாக இயங்குவதால் நமது மூளை பல மடங்கு வேகத்துடன் செயல்படுகிறது ,இதனால் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கிறது.

🤲 வாஸ்துப்படி வட கிழக்கில் அருவி அமைந்து பள்ளமாக உள்ளது தெற்கே உயரமான மலைகள் உள்ளன.

🤲 வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தால் அந்த இடம் மிகவும் பிரபலம் அடையும் மக்கள் கூட்டம் அலைமோதும்..

🤲 செல்வம் மலை போல குவியும்.

🤲 உலகிலேயே சந்திரனை முதலில் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள்தான் சந்திரன் கதிர்கள் அதிகளவில் ஈர்த்து கொள்வதால்தான் அவர்கள் அறிவாற்றல், நுண்ணறிவு, பொருளாதார வளர்ச்யுடன் உள்ளார்கள்.

🤲 அதுபோல இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும்.

🤲 சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது.

🤲 மூலிகைகள் அதிகம் இருப்பதால் ஆரோக்கியம் உண்டாகிறது. மகான்கள் நிறைந்த பூமி என்பதால் அருளாசியும் நிறைந்து காணப்படுகிறது.

🤲 வாஸ்துப்படி மிக பலமாக இருப்பதால் இத்திருக்கோயில் மிக அதிக சக்தியுடன் உள்ளது.

🤲 இந்தியாவின் அதிக செல்வம் உள்ள கோயில் இதுதான்.

🤲 கலி காலத்திலும் பெருமாள் பக்தர்களுக்கு உதவி செய்வதை பலர் பக்தியுடன் சொல்கின்றனர்.

🤲 குல தெய்வம் இல்லாதவர்கள் திருப்பதி பெருமாளை தங்கள் குல தெய்வமாக வணங்குகிறார்கள்.

🤲 நடந்து நாம் மலை ஏறினால் அக்குபஞ்சர் சிகிச்சையாக உடல் ஆரோக்யத்திற்கு உதவுகிறது.

🤲 நிமிர்ந்து மலை ஏறுவதால் நமது உடலில் மூலாதார சக்கரங்கள் நன்கு சுழலும்.

🤲 சந்திர தசை மற்றும் சந்திர புக்தியால் நடப்பவர்கள்,

🤲 தோல் நோய் உள்ளவர்கள், மன அழுத்தம் மற்றும் மன நிலை பாதிக்கபட்டவர்களுக்கு இத்திருக்கோயில் சிறந்த பரிகாரத் தலமாகும்.

🤲 திங்கள் கிழமை அங்கு சென்று தங்குவது மிகவும் சிறப்பு.

🤲 திருப்பதி மலை மீது எவ்வளவு நேரம் இருக்கிறார்களோ அவ்வளவு நன்மையை தரும்.

🤲 அட போங்கய்யா திருப்பதி போனாலே அனைவரையும் போட்டு பூட்டி வைப்பார்கள் நான் வரவே மாட்டேன் என சொல்லும் அன்பர்கள் தான் அதிகம் காரணம் என்ன தெரியுமா உங்களுக்கு..

🤲 அதே போல அங்கு சென்றவுடன் ஜெயிலில் போடுவது போல அனைவரையும் ஒரு அறையில் போட்டு பூட்டி வைப்பதின் நோக்கம் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் பதினோரு மணி நேரம் மலை மேல் இருக்க வேண்டும் என்பது ஐதீகம்

🤲 அதை யாரிடமும் சொல்லி புரிய வைக்க முடியாது ஆகையால் தான் அனைவரையும் போட்டு ஒரு அறையில் பூட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

🤲 அந்த அறையில் மவுனமாக இருந்து உங்கள் வேண்டுதலை செய்யலாம் ஆனால் அங்கு யாரும் அதை செய்வதே கிடையாது .

🤲 மாறாக அங்கு கூச்சலும் குழப்பமாக தான் இருக்கும்...இனிமேல் நீங்கள் திருப்பதி சென்று வந்தால் அங்கு நீங்களாவது அமைதியாக இருங்கள்.

🤲 அதிகம் திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாளை பிடித்து கொள்ளும் லக்னக்காரர்கள் தெரியுமா.?

🤲 மேஷம் , ரிஷபம் , மிதுனம் ,கடகம் , கன்னி , துலாம் .விருச்சிகம் , மகரம், மீனம் லக்னம் உடையவர்கள் அனைவரும் அதிகமாக பிடித்து கொள்ள வேண்டும்.

🤲 வருடம் ஒரு முறை மட்டும் செல்லும் லக்னம் காரர்கள் .சிம்மம் , தனுசு , கும்பம்.

🤲 ஓம் நமோ வேங்கடேசாயா நமஹ சகல ஐஸ்வர்யங்களும் கிட்ட பலன் தரும் ஏழுமலையான் ஸ்லோகம் " 

ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்”

ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித,
வக்ஷஸம் ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே ... !!!

🤲 பொதுப் பொருள்: 

🤲 திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீநிவாஸப் பெருமாளே, நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களையெல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். மகாலட்சுமி வசிக்கும் அழகு மார்புடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளை பொழிபவரே, ஸ்ரீநிவாஸா, நமஸ்காரம்.

🤲 ஸ்ரீவேங்கட ஸ்ரீநிவாஸா உங்கள் திருவடிகளே சரணம் " சரணம் " சரணம்...

👉 அனைவருக்கும் பகிருங்கள்..

Friday 24 September 2021

கொஞ்சம் சாஸ்திரம் தெரிந்து கொள்வோமா !!

கொஞ்சம் சாஸ்திரம் தெரிந்து கொள்வோமா !! 1. கிழக்கு நோக்கிச் சாப்பிட ஆயுள்வளரும். தெற்கு நோக்கிச் சாப்பிட புகழ் உண்டாகும். மேற்கு நோக்கிச் சாப்பிட செல்வம் வளரும். வடக்கு நோக்கிச் சாப்பிடக் கூடாது 2. பித்ருக்களின் திதியன்று வீட்டில் அன்னதானம் செய்ய முடியாவிட்டால் உணவு விடுதியில் (ஹோட்டல்) பத்துடோக்கன் வாங்கி ஏழைகளிடம் கொடுத்து உண்ணச் செய்யலாம். அவர்களிடம் பணமாகக் கொடுக்கக் கூடாது. 3. அன்னத்தால் பிராணனையும் பிராணனால் பலத்தையும் பலத்தால் தவத்தையும் தவத்தால் சிரத்தையையும் சிரத்தையால் புத்தியையும் மனத்தால் சாந்தியால் சித்தத்தையும் சித்தத்தால் நினைவால் ஸ்திதப் பிரக்ஞையால் விஞ்ஞானத்தையும் விஞ்ஞானத்தால் ஆத்மாவையும் பெறுவதால் அன்னத்தைக் கொடுப்பது இவை எல்லாவற்றையும் கொடுத்தாகிறது. என தைத்தரீயோபநிஷத் கூறுகிறது. எனவே முடிந்த போது முடிந்த அளவிற்கு அன்னதானம் செய்யுங்கள். 4. அளவிற்கு அதிகமாக உண்டால் நோய்வரும். ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது. 5. பசிக்கும் போது மட்டுமே தான் சாப்பிட வேண்டும். 6. மிளகு சேர்ப்பதால் உணவில் உள்ள விஷம் நீங்குகிறது. உடலில் உள்ள விஷமும் முறிகிறது. 7. உணவில் சீரகம் (சீர் அகம்) சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல் குளிர்ச்சியை தருகிறது. 8. வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது. 9. கடுகு உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது. 10. இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம் தலை சுற்றல் வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை. 11. உணவு உண்பதற்கு முன்பு கை கால் வாய் போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும். 12. காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும். 13. உணவு உண்ணும் போது பேசக் கூடாது. படிக்கக் கூடாது. இடதுகையை கீழே ஊன்றக் கூடாது 14. வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது. 15. காலணி அணிந்துக் கொண்டு உண்ணக் கூடாது. 16. சூர்ய உதயத்திலும் மறையும் பொழுதும் உண்ணக் கூடாது. 17. உணவு உண்ணும் போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும். 18. நிலவின் ஒளியில் உண்ணக் கூடாது. பௌர்ணமியில் நிலாச் சாப்பாடு தனியாகச் சாப்பிடக் கூடாது. பலருடன் சேர்ந்து சாப்பிடலாம். 19. இருட்டிலோ நிழற்படும் இடங்களிலோ உண்ணக் கூடாது. 20. சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது. நின்று கொண்டு சாப்பிடக் கூடாது. 21. அதிக கோபத்துடன் உணவு உண்ணக் கூடாது. 22. சாப்பிடும் போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணக் கூடாது. தட்டை மடியில் வைத்துக் கொண்டும் படுத்துக் கொண்டும் உண்ணக் கூடாது. 23. இலையைத் துடைத்து வலித்துச் சாப்பிடுவதும் விரலில் ஒட்டி உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும் தரித்திரத்தை வளர்க்கும்;. 24. வெங்கலம் அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது. 25. புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும். 26. வெள்ளித் தட்டில் மற்றும் வாழை இலையில் சாப்பிட்டால் நல்ல அழகு அறிவு மன ஒருமைப்பாடு குடும்ப ஒற்றுமை கிடைக்கும். 27. நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவுப் பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது. 28. இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் ; ஆகியவற்றை சேர்க்கக் கூடாது. 29. உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ அப்பளமோ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக் கூடாது. 30. அதே போல் முதலில் கீரையோ வத்தலோ இலையில் வைக்கக் கூடாது. அசுப காரியத்தில் மட்டுமே பயன்படுத்துவர். வாழ்வில் நாம் செய்யக் கூடாதவை: 1. நம்மை விடப் பெரியவர்கள் முன் கால் மேல் கால் போட்டு அமரக் கூடாது. 2. செவ்வாய், வெள்ளி ஆகிய இரு நாட்களிலும் தலைமுடி வெட்டுதல் நகம் வெட்டுதல் சவரம் செய்து கொள்ளுதல் கூடாது. 3. தலைமுடிக்கு மந்திரங்களை எளிதில் கிரகிக்கும் தன்மை உண்டு. தலைமுடியைக் கொண்டு பில்லி சூனிய ஏவல் வைக்கவும் செய்வர். எனவே தலைமுடியையும் நகத்தையும் எக்காரணம் கொண்டும் பிறர் பார்க்கும் படி வெளியில் எறியலாகாது. 4. நான்காம் பிறைச் சந்திரனைப் பார்க்கக் கூடாது. 5. செப்புப் பாத்திரத்தில் பாலை வைக்கக் கூடாது. பால் திரிந்து விடும். அதிக உப்பு அதிக காரம் அதிக இனிப்பு அதிக புளிப்பு சேர்க்கக் கூடாது. காளானைக் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடக் கூடாது. 6. பட்டு வேட்டி மற்றும் புடவைகளை அணிந்துக் கொண்டு வைதீக காரியங்களைச் செய்யக் கூடாது. 7. கர்ப்பிணி பெண்கள் மாலை வேளையில் சாப்பிடக் கூடாது. 8. மருந்து மாத்திரை ஆகியவற்றை முகர்ந்து பார்க்கக் கூடாது. 9. பெருமூச்சு விடுவது மிகப் பெரும் தவறு அதனால் துன்பங்கள் தான் அதிகரிக்கும் பெருமூச்சு விடுபவரின் மூச்சுக் காற்று அருகில் உள்ளவர் மேல் படக் கூடாது. பட்டால் அவருக்கும் கெடுதல் ஏற்படும். 10. இலவசமாக யாரிடமும் எள் பெறக் கூடாது. 11. நமக்கு ஒருவர் இட்ட உணவைப் பழிக்கக் கூடாது. 12. வீட்டில் எலுமிச்சை மூடியில் விளக்கேற்றக் கூடாது. 13. விளக்கில் அல்லது நெருப்பில் தீப்பற்றிய துணியை மீண்டும் உடுத்திக் கொள்ளக் கூடாது. 14. விளக்கு வைத்த பிறகு தலை வாருதல் முகம் கழுவுதல் பேன் எடுத்தல் போன்றவற்றைச் செய்யக் கூடாது. 15. வெள்ளிக்கிழமை அரிசி புடைப்பது அரிசி வறுப்பது கூடாது. மிளகாய் வறுப்பது மிளகாய் பொடி அரைப்பது கூடாது. இதெல்லாம் ஒரு 80 வருடங்களுக்கு முன்பு மிகச் சரியாக கடைபிடித்து வந்தார்கள். அதனால் தான் அவர்களின் ஆயுள் 120 வயது வரை திட காத்திரமாக இருந்தது.‌ ஆனால் இப்போது பல வகையான நோய்கள் சிறுவயதிலேயே தொற்றிக் கொள்கிறது. முடிந்த வரை வெளி உணவுகளை தவிர்த்து விடுங்கள். இப்போது தான் யூடியூப் இருக்கிறதே நீங்களே அழகாக சமைக்கலாமே !! ஆரோக்கியம் உங்கள் கையில் இருக்கிறது...

Monday 20 September 2021

தொண்டை கரகரப்பா? இதிலிருந்து விடுபட இதோ சூப்பரான எளிய வைத்தியம்

தேவையான பொருள் வால் மிளகு - 50 கிராம் சுக்கு - 50 கிராம் திப்பிலி - 50 கிராம் ஏலரிசி - 50 கிராம் தேன் - தேவையான அளவு செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். பிறகு வால் மிளகு,சுக்கு,திப்பிலி மற்றும் ஏலரிசி ஆகிய நான்கு பொருட்களையும் நன்கு பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். வறுத்த பொருட்களை இடித்து பொடியாக்கி ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும். மேலும் தேனுடன் இடித்த பொடி ஒரு தேக்கரண்டி எடுத்துக்கொண்டு நன்கு கலக்கவும். இதனை தொடர்ந்து குடித்து வந்தால் தொண்டை கரகரப்பு முற்றிலுமாக குணமாகும்.

2 டீஸ்பூன் சீரகம், ஒரு டீஸ்பூன் ஓமம்! இந்த கலவையை தினமும் குடிச்சு பாருங்க... அற்புத மாற்றங்கள் உடலில் நடக்குமாம்!

தேவையான பொருட்கள்: தண்ணீர் - ஒரு கிளாஸ் சீரகம் - 2 தேக்கரண்டி ஓமம் விதைகள் - 1 தேக்கரண்டி செய்முறை சீரக விதைகள் மற்றும் ஓமம் விதைகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து ஒரே இரவில் ஊறவைக்கவும். காலையில் தண்ணீரை வடிகட்டி, அதனை குடிக்கவும். மற்றொரு முறை தண்ணீரை பாதியாகக் குறைக்கும் வரை கொதிக்க வைத்து பின்னர் தேநீர் போல உட்கொள்ளவும். இதில் சுவை அதிகரிக்க சிறிது துருவிய இஞ்சி மற்றும் எலுமிச்சை சேர்த்து பருகலாம் . நன்மைகளை என்ன? ஓமம் தண்ணீர் உங்கள் வயிறு மற்றும் கருப்பையை சுத்தம் செய்ய உதவுகிறது. இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் வயிறு தொடர்பான பல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க முயற்சிக்கும்போது கூட நல்லது. சீரக விதைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது. உடலில் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. சீரக தண்ணீர் உடலில் உள்ள நச்சு கூறுகளை அகற்ற உதவுகிறது.

வாழைப்பழ தேநீர்

இரவில் தூங்கச் செல்லும்முன் இயற்கையாக தூக்க மாத்திரை போட்டுக் கொள்ளும் அதிகரித்து விட்டது. அப்படி இருப்பவர்கள் தூங்கும்முன் வாழைப்பழ டீ குடித்துவிட்டு தூங்குவது நல்லது . ஏனெனில் வாழைப்பழத்தில் ட்ரிப்டோபன் என்னும் அமினோ அமிலம் உள்ளது. இந்த அமிலம் நமது மூளையில் செரோடோனின் என்ற வேதிப்பொருளை உற்பத்தி செய்கிறது. செரோடோனின் நமது தூக்கத்திற்கு நன்மை பயக்கக்கூடியது. எனவே தற்போது இந்த வாழைப்பழ டீயை எப்படி தயாரிக்கலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம் தேவையானவை வாழைப்பழம் - 1 இலவங்கப்பட்டை தூள் - 1 தேக்கரண்டி ​தயாரிக்கும் முறை வாழைப்பழத்தின் முனைகளை நன்கு வெட்டிக் கொள்ளவும், ஆனால் அதன் தோல்களை அகற்ற தேவையில்லை, ஏனெனில் வாழைப்பழ தோல்களும் பல நன்மைகளை கொண்டவையாகும். பின்னர் வாழைப்பழத்தை தோலுடன் பெரிய பெரிய துண்டுகளாக வெட்டவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு கப் அளவிற்கும் சற்று கூடுதலாக நீரை சேர்த்துக் கொள்ளவும். பிறகு அந்த நீரில் தயாராக வைத்துள்ள இலவங்கப்பட்டை தூள் அல்லது இலவங்கப்பட்டையை சேர்க்கவும். பின்னர் இரண்டையும் கொதிக்க வைக்கவும், பிறகு அதில் வெட்டி வைத்துள்ள வாழைப்பழத்தை சேர்த்து வெப்பத்தை குறைத்து 10 நிமிடங்களுக்கு இளம்சூட்டில் நீரை கொதிக்க வைக்கவும். 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும். பிறகு சிறிது ஆற விட்டு பிறகு வடிக்கட்டியை பயன்படுத்தி அதில் உள்ள நீரை மட்டும்தனியாக பிரித்தெடுக்கவும். இப்போது நமக்கு தேவையான வாழைப்பழம் தேநீர் தயார். இதை படுக்கைக்கு செல்வதற்கு 20 நிமிடங்கள் முன்பாக அருந்தவும். நன்மை சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்கள் சிறந்த தூக்கத்தை பெற தினமும் இந்த தேநீரை செய்து அருந்தலாம். இதன் மூலம் நீங்கள் நல்ல தூக்கத்தை பெற முடியும். எனவே இனி தூங்க செல்வதற்கு முன்பாக வாழைப்பழ தேநீரை எடுத்துக் கொள்ள மறக்க வேண்டாம்.

Saturday 18 September 2021

மாளயபட்சம்

மாளயபட்சத்தின் பதினாறு தினங்களிலும் நித்தியத் தர்ப்பணம். தினமும் அன்னதானம் அவசியம். மாளயபட்சத்தில் ஆற்றும் நித்திய அன்னதானத்திற்கும் அன்ன சிரார்த்தம், அன்னத் தர்ப்பணம் என்றே பெயர் உண்டு. இந்த மாளய பட்சத்தில் விநாயகருக்கான சதுராவிருத்தி தர்ப்பணம் எனும் விசேஷமான பூஜையை நிகழ்த்துதல் விசேஷமானது. தாய் அமாவாசை புரட்டாசியின் மாளய அமாவாசை : சூரிய, சந்திர கிரஹ மூர்த்திகள் ஒரே இடத்தில் (ஒரே ராசியில்) கூடும் நாள் அமாவாசை. இவ்விரு கிரஹங்களும் வானில் தொண்ணூறு டிகிரி கோணத்தில் எதிரெதிரே வரும் (எதிர் ராசியில் வரும்) தினம் பௌர்ணமி. மேலும் பௌர்ணமி, அமாவாசையில் சந்திர கிரஹத்தின் உவா ஏற்றம், இறக்கம் என்பதாக - பூமியின் ஆகர்ஷணம், சந்திர கிரஹத்தின் ஆஹர்ஷணத்தில் சில விளைவுகள் உண்டாகி இவை கடலிலும், மனித உடலிலும் பிரதிபலிக்கும். இதை நன்முறையில் சீர்படுத்திடவே இந்நாட்களில் விசேஷமானப் புனிதத் தீர்த்த நீராடல், ஆலய தரிசனம், விளக்கேற்றுதல், பௌர்ணமி விரதம், பௌர்ணமி கிரிவலம், பௌர்ணமி பூஜை. அமாவாசை விரதம், பிதுர்ப் பூஜை. அன்னதான தர்மங்கள் போன்றவற்றைக் கடைபிடிக்கிறோம். இதற்காகவே பௌர்ணமி, அமாவாசையில் புனித நீராடுகிறோம். இக்காரணப்படியாகக் கடலில் தினமும் நீராடலாகாது, குறித்த நாட்களில் மட்டுமே கடலில் நீராட வேண்டும். என்ற ஆன்மக் கட்டுப்பாடும் உள்ளது. கடல் நீரில் ஆசமனம் செய்வது கிடையாது எனும் நியதியும் உண்டு. உண்மையில் ஒவ்வொரு பௌர்ணமியும், ஒவ்வொரு அமாவாசையும் முறையே சந்திர கிரஹணம், சூரிய கிரஹணமும்தான். ரவிச்சந்திர அமாவாசை : பூ லோகத்தில் முதன் முதலாக ஏற்பட்ட அமாவாசை - பாத்ரபத மாதம் எனப்படும் புரட்டாசி தமிழ் மாதத்தில் வரும் மாளய பட்ச அமாவாசைத் திதி தினமாகும். எனவே இதுவே தாய் அமாவாசை, தலைஅமாவாசை. எவ்வாறு சூரிய, சந்திர மூர்த்திகள் கிருஷ்ண பரமாத்மாவின் முன் ஒன்று சேர்ந்து தோன்றிட - சூரிய, சந்திர கிரஹ சங்கமமே அமாவாசை ஆவதால் முதல் ஸ்ரீகிருஷ்ணரின் சங்கல்பப்படியாக அன்று மாலையில் சூரிய சந்திரர்கள் சேர்ந்து (உ)வந்தமையால் அமாவாசைக்கு முதல் நாளில் அமாவாசைத் திதி திகழுமாயின் இது போதாயன அமாவாசை எனும் சாங்க்யமாகக் கடைபிடிக்கப் பெறுகிறது. இதே போல்தான் பூலோகத்தின் முதல் அமாவாசையாகப் புரட்டாசி மாதத்தில் சூரிய, சந்திர சங்கமத்தில் உற்பவித்ததே விசேஷமான ரவிச்சந்திர அமாவாசை எனும் மாளயபட்ச அமாவாசை (ரவி சூரியன்). ஆகவே புரட்டாசி மாதத்தைய அமாவாசை தினமானது அமாவாசைகளுக்கு எல்லாம் தாய் அமாவாசை, தலைஅமாவாசை, மூத்த அமாவாசையாகப் போற்றப்படுகின்றது. மஹாளய அமாவாசை, மஹாலய அமாவாசை, மாளய அமாவாசை, பெரிய அமாவாசை எனப் பல பெயர்களில் பிரசித்தி பெற்றுள்ள புரட்டாசி மாதத்தின் அமாவாசையே வருடத்தின் பன்னிரு அமாவாசைத் திதிகளுக்குமான தலைமைத் திதிப் பீடமாகும். பிரதமை முதல் அமாவாசை / பௌர்ணமி வரை ஒவ்வொரு திதிக்குமான காலதேவதையும் உண்டு. இது பற்றி லலிதா சஹஸ்ரநாமத் துதியிலும் வரும். இதற்கான விளக்கத்தை நவம்பர் 2020 இதழில் அளித்துள்ளோம். சாகாவரந் தரும் அமிர்தத்தை அடைவதற்காக ஆதியுகமொன்றில் தேவர்களும், தேவர்களின் சகோதரர்களான அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது அதிலிருந்து மஹாலக்ஷ்மீ தேவியும், சந்திர மூர்த்தியும் ஏனையோரும் ஏனையவையும் தோன்றினர். இதனால் சந்திர மூர்த்தியைத் திருமகளின் சகோதரராகப் போற்றுவர். இதை லலிதா சஹஸ்ரநாமம் எனப் போற்றும். அமாவாசைத் திதி பிறத்தல்: பாற்கடலில் சந்திர மூர்த்தி தோன்றியப் பல யுகங்களுக்குப் பிறகு தட்சரின் சாபத்தினால் சந்திரனின் ஈரெட்டுப் பதினாறு கலைகளும் தேயலுற்ற போது அமாவாசை எனும் திதி வைபவம் ஏற்பட்டது. இதற்கு முன் வரையில் வானில் சூரிய, நட்சத்திரப் பிரகாசங்களே பொலிந்தன. நாம் பொதுவாக நினைப்பது போல வானில் இருப்பது ஒரே ஒரு இப்பிரபஞ்சத்தில் கோடானு கோடி நட்சத்திரங்கள் திகழ்வது போல் எண்ணற்ற பூமிகளும், லோகங்களும் உள்ளன. சில பூமிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட சூரிய, சந்திரர்கள் இன்றும் ஒளி வீசிக் கொண்டுதாம் உள்ளன. . நம் பூமியிலும் எதிர்காலத்தில் இரண்டாவது சூரியன் வரும் என வேங்கடராம சுவாமிகள் தீர்கதரிசனமாக உரைத்துள்ளார். இவை யாவும் மானுடப் பகுத்தறிவுக்கு இன்னமும் எட்டாத ஆன்மீக ரகசியங்கள். இது இப்போதைக்குப் புலப்படாது. விஞ்ஞானத்துக்கு அப்பாற்பட்ட மெய்ஞ்ஞான விஞ்ஞானமிது. தக்க சத்குரு மூலமாகவே அறியற்பாலது. ஆனால் சத்குருவின் மீதும், சத்குருவின் சர்வஞானத்திலும் ஆழ்ந்த நம்பிக்கை ஏற்பட வேண்டுமே. மாதத்திற்கு ஒரு சூரிய மூர்த்தி : நம் பூமியிலும் ஒவ்வொரு மாதத்திற்கு ஒரு சூரிய மூர்த்தியாக வருடத்திற்குப் பன்னிரு சூரிய மூர்த்திகளின் விஜயமும் அருள்பாலிப்பும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. சூரிய ஒளி இல்லையேல் ஜீவ வாழ்க்கை இல்லை. அமாவாசைத் திதி என்பது சூரிய மூர்த்தியின் நேரடியான அனுகிரஹத்தையும், சந்திர மூர்த்தியின் சூக்கும அனுகிரஹத்தையும் பொழிவதாம். தாய் வழி மாத்ருகாரகர் சந்திர மூர்த்தி. இவரே மனகாரகரும் ஆவார். தந்தை வழி பித்ருகாரகர் சூரியர் எலும்பு அங்கத்துக்குமான மூர்த்தியும் ஆவார். ஆகவே அமாவாசையில் பிதுரர் வழிபாடாக தாய், தந்தை இரு தலைமுறை வகை மூதாதையர்கட்கும் தர்ப்பணம், திவசம், படையல், திதி கொடுத்தல், சிரார்த்தம் போன்றவற்றை நிகழ்த்தி வழிபடுகின்றோம். இதில் தாய் அமாவாசையான புரட்டாசி மாதத்தின் மாளய பட்சத்தின் புனிதச் சிறப்பு யாதெனில் ... பிரபஞ்சத்தின் அத்தனைக் கோடிப் பித்ரு மூர்த்திகளும், வசு, ருத்ர, ஆதித்ய, விஸ்வதேவ, பந்து தரணி பித்ருக்களும் பூலோகத்திற்கு நேரடியாக வருகை தரும் வைபவம். பூமிக்கு நேரடியாக வரும் பிதுர்க்கள் : புரட்டாசி மாதத்தின் தேய்பிறைக் காலமாகிய இந்த இருவாரக் காலத்தைய (15 தினங்கள் பிரதமைத் முதல் அமாவாசைத் திதி வரை) மாளயபட்சத்தில் இந்த பூலோகத்தில் எந்த நாட்டில் எந்த மூலையில் எவர் தர்ப்பணம் அளித்தாலும் அதனை அவரவருக்கு உரித்தான மூதாதையரே - அந்தப் பிதுரரே தற்போது எந்த நிலையிலும் இருந்தாலும் நேரடியாக வந்து தர்ப்பணம், திதி கொடுத்தல், படையலை ஏற்பது மாளய பட்சப் பிதுர்ப் பண்டிகைக் காலத்தின் சிறப்பு. கழிவு படாது மலை போல் நெடுங்காலமாகத் தேங்கி இருக்கும் கர்மவினைகள் : மேலும் வருடம் முழுவதும், தினந்தோறும் நித்திய தர்ப்பணமாகப் பிதுர்ப் பூஜையை ஆற்ற வேண்டிய இவ்வுலக மானுடச் சமுதாயத்தார் - காலப்போக்கில் நித்தியத் தர்ப்பணத்தைக் கை விட்டு விட்டமையால் உலகெங்கும் இப்போது பணக்கஷ்டம், நோய்க கடன்கள், மனக்கஷ்டம், விவாகரத்து, குடும்பத்தில் பிளவு, தொற்று நோய் போன்று பல வகைகளிலும் அல்லல்படுகின்றனர். மூதாதையர்க்கு தினமுமே தர்ப்பணம் அளிக்கும் நித்தியத் தர்ப்பணம் என்பதானது உலக மக்கள் சமுதாயத்தின் அவநம்பிக்கை, அசிரத்தையால் தற்போது மாதாந்திர அமாவாசையில் மட்டும் தர்ப்பணம் என்பதாக மிகவும் குறுகி விட்டது. இதனால் மக்கள் சமுதாயத்தில் முற்காலத்தே துலங்கிய பிறர் நலன்களுக்காகச் சேவை ஆற்றித் தம்மை அர்ப்பணிக்கும் தியாக உணர்வு. பெருந்தன்மையான உள்ளமும் சுருங்கி சுயநலம், பேராசை, முறையற்ற காமம் போன்றவை மனித மனத்துள், மானுடச் சமுதாயத்துள் - ஆட்டிடையில் நரி போல் - புகுந்து விட்டன. இதன் காரணமாக நடப்பு உலகச் சமுதாயமானது பலத்த பிதுர் தோஷங்களுக்கு ஆட்பட்டுத் துன்புறுவதோடு நித்தியத் தர்ப்பணத்தின் மூலம் எளிதில் கழியக் கூடிய, கரைய வேண்டிய கோடானு கோடி கர்மவினைகள் உலகெங்கும் 195 நாடுகளிலும் ஒவ்வொரு குடும்பத்திலும் கழிவு படாமலேயே நெடுங்காலமாகத் தேங்கி உள்ளன. இத்தகையப் பெருங்குறைகள், குற்றங்கள், பாவங்கள் அனைத்திற்கும் தீர்வு தருவதாகப் புரட்டாசி மாதத்தின் மாளயபட்சம் வந்தமைந்திருப்பதும் கடவுளின் பெருங்கருணையால் நாம் பெற்ற பாக்யமே. ஆகவே புரட்டாசி மாதத்தின் மாளய பட்சத்தின் பதினைந்து நாட்களிலும் தினமும் தர்ப்பணம் செய்து - இதுகாறும் வாழ்வில் விடுபட்டுப் போன நித்தியத் தர்ப்பணப் பூசனையை ஓரளவேனும் வாழ்வில் புனரமைத்துத் தாய், தந்தையர், இவ்விரு வர்கத்தினருக்கும் திவசம், சிராத்தம், படையல், தர்ப்பணம், திதி கொடுத்தலை ஆற்றி கர்மவினைகள், பாவங்களைக் களைந்து பக்திமிகு நல்வாழ்வில் உய்ந்திடவும். முக்கியமான மாளயபட்சத் திதிகள் மேலும் பிரதமைத் திதி முதல் அமாவாசைத் திதி வரையில் வரும் இரு வாரக் காலத்தின் பதினைந்து திதிகளில் வரும் மிகவும் முக்கியமான திதி தினங்களிலாவது தர்ப்பணம், திவசம், சிராத்தம், படையல்களை அவரவர்க்கு இயன்ற வகையில் அன்னதான தர்மங்களுடன் நிகழ்த்திடவும். 24.9.2021 மஹாபரணி நட்சத்திர - தினம் - நெடுநாள் மருத்துவ மனையில், படுக்கையில், நோயில் கிடந்து உயிர் துறந்தோர்க்கு விசேஷத் தர்ப்பணம் வீட்டில், கோயிலில் நிறைய விளக்குகளை ஏற்றி வழிபடுதல், 16 வகை ஷோடசோபார தீபாரதனை. 29.9.2021 அஷ்டமித் திதி மத்யாஷ்டமி, புதாஷ்டமி, ருத்ராஷ்டமி - சகோதர, சகோதரிகளுக்கு, விசேஷத் தர்ப்பணம். பெற்றோர்கள் தாம் இழந்த வாரிசுகளுக்குத் தர்ப்பணம் அளிக்கவும். 30.9.2021 - மஹாநவமி - பெண் குலத்தார்க்கு, மாதா வர்கத்தினருக்குக் கூடுதல் தர்ப்பணம் 3.10.2021 - யதிமாளயம் - துறவிகள், சந்நியாசிகள், மஹான்கள், யோகியர், ஞானியர், உத்தமப் பெரியோர், தியாகத்துடன் வாழ்ந்தோர்க்கு அர்க்யம், தர்ப்பணம். மஹான்களின் ஜீவ சமாதிகளில் வழிபாடு. 5.10.2021 சஸ்த்ர ஹதமாளயம், கஜச்சாயா, போதாயன அமாவாசை, கிருஷ்ணாங்காரக சதுர்த்தசி - விபத்து, நெருப்பு, ஆயுதம், போர், தற்கொலை மூலமாக இறந்தோர்க்கு விசேஷப் பிதுர்ப் பூஜை 6.10.2021 ஸர்வ மாளய அமாவாசை எல்லோருக்கும் சகல ஜீவன்களுக்கும் காருண்யத் தர்ப்பணம்

Monday 13 September 2021

உங்களுக்கு குளிக்கும்போது சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருக்கா..?

உண்மையில் சிறுநீர் என்பது ஆரோக்கியமானது என்கிறனர் ஆய்வாளர்கள். அதாவது நாம் கழிக்கும் சிறுநீரில் எலக்ட்ரோலைட்ஸ், யூரியா போன்ற ஆரோக்கியமான சத்துகள் உள்ளன. இதில் பாக்டீரியாக்களும் குறைவாகவே உள்ளது.
 குளிக்கும் போது சிலருக்கு சிறுநீர் கழிக்கும் பழக்கம் உண்டு. அவ்வாறு செய்வது உண்மையில் நல்ல விஷயம் என்கிறார்கள் மருத்துவர்களும், சுற்றுச் சூழல் ஆர்வலர்களும்.. எப்படி..?
1/ 7
குளிக்கும் போது சிலருக்கு சிறுநீர் கழிக்கும் பழக்கம் உண்டு. அவ்வாறு செய்வது உண்மையில் நல்ல விஷயம் என்கிறார்கள் மருத்துவர்களும், சுற்றுச் சூழல் ஆர்வலர்களும்.. எப்படி..?

 உண்மையில் சிறுநீர் என்பது ஆரோக்கியமானது என்கிறனர் ஆய்வாளர்கள். அதாவது நாம் கழிக்கும் சிறுநீரில் எலக்ட்ரோலைட்ஸ், யூரியா போன்ற ஆரோக்கியமான சத்துகள் உள்ளன. இதில் பாக்டீரியாக்களும் குறைவாகவே உள்ளது. எனவே உடலில் படும்படி சிறுநீர் கழிப்பதால் எந்த தொற்றும் ஏற்படாது.
2/ 7
உண்மையில் சிறுநீர் என்பது ஆரோக்கியமானது என்கிறனர் ஆய்வாளர்கள். அதாவது நாம் கழிக்கும் சிறுநீரில் எலக்ட்ரோலைட்ஸ், யூரியா போன்ற ஆரோக்கியமான சத்துகள் உள்ளன. இதில் பாக்டீரியாக்களும் குறைவாகவே உள்ளது. எனவே உடலில் படும்படி சிறுநீர் கழிப்பதால் எந்த தொற்றும் ஏற்படாது.

 அதேசமயம் சிறுநீர் சருமத்திற்கும் நல்லது. அதாவது சருமப் பாதுகாப்பிற்காக காஸ்மெடிக்ஸ் பொருட்களிலும் யூரியா சேர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. எனவே இயற்கையான சிறுநீரில் இது இருப்பது மிகவும் நல்லது. சிலர் சரும அழகுக்கு சிறுநீரை குடிப்பதும் நிகழ்கிறது.
3/ 7
அதேசமயம் சிறுநீர் சருமத்திற்கும் நல்லது. அதாவது சருமப் பாதுகாப்பிற்காக காஸ்மெடிக்ஸ் பொருட்களிலும் யூரியா சேர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. எனவே இயற்கையான சிறுநீரில் இது இருப்பது மிகவும் நல்லது. சிலர் சரும அழகுக்கு சிறுநீரை குடிப்பதும் நிகழ்கிறது.

 அத்லெட்டுகளும் தங்கள் பாதங்களில் உள்ள பூஞ்சைகளை அகற்ற யூரின் தெரப்பி என்ற முறையில் சிறுநீரில் பாதங்களை முக்கி சுத்தம் செய்கின்றனர். ஆனால் இதற்கு எந்தவித ஆதாரமும் நிரூபிக்கப்படவில்லை.
4/ 7
அத்லெட்டுகளும் தங்கள் பாதங்களில் உள்ள பூஞ்சைகளை அகற்ற யூரின் தெரப்பி என்ற முறையில் சிறுநீரில் பாதங்களை முக்கி சுத்தம் செய்கின்றனர். ஆனால் இதற்கு எந்தவித ஆதாரமும் நிரூபிக்கப்படவில்லை.

 சுற்றுசூழல்படி பார்க்கும் போது, குளிக்கும்போதே சிறுநீர் கழிப்பதால் தண்ணீர் மிச்சமாகிறது. அதைக் கழுவ ஃபிளஷ் செய்ய கூடுதல் நீரும் தேவைப்படாது. உலக நாடுகளில் தண்ணீர் தட்டுப்பாட்டின் போது இந்த ட்ரிக்ஸை பயன்படுத்துவார்கள்.
5/ 7
சுற்றுசூழல்படி பார்க்கும் போது, குளிக்கும்போதே சிறுநீர் கழிப்பதால் தண்ணீர் மிச்சமாகிறது. அதைக் கழுவ ஃபிளஷ் செய்ய கூடுதல் நீரும் தேவைப்படாது. உலக நாடுகளில் தண்ணீர் தட்டுப்பாட்டின் போது இந்த ட்ரிக்ஸை பயன்படுத்துவார்கள்.

 எனவே குளிக்கும்போது சிறுநீர் மட்டுமல்ல உடல் வெளியிடும் மற்ற திரவங்களான வியர்வை, சளி, மாதவிடாய் இரத்தம் ஏன் மலம் கூட கழிக்கலாம் என்கிறது ஹெல்த் லைன் இதழ்.
6/ 7
எனவே குளிக்கும்போது சிறுநீர் மட்டுமல்ல உடல் வெளியிடும் மற்ற திரவங்களான வியர்வை, சளி, மாதவிடாய் இரத்தம் ஏன் மலம் கூட கழிக்கலாம் என்கிறது ஹெல்த் லைன் இதழ்.

 இதில் முக்கிய விஷயம் அவற்றை செய்யும்போது மற்றவர்களும் அந்த பாத்ரூமை பயன்படுத்துகிறார்கள் எனில் சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம். எனவே இனி குளித்துக் கொண்டிருக்கும்போது சிறுநீர் வந்தால் தயங்காமல் கழிக்கலாம்.
7/ 7
இதில் முக்கிய விஷயம் அவற்றை செய்யும்போது மற்றவர்களும் அந்த பாத்ரூமை பயன்படுத்துகிறார்கள் எனில் சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம். எனவே இனி குளித்துக் கொண்டிருக்கும்போது சிறுநீர் வந்தால் தயங்காமல் கழிக்கலாம்.




Saturday 11 September 2021

வாஸ்து படி பாசிட்டிவ் எனர்ஜி கொடுக்கும் மணி பிளான்ட் செடியை வீட்டில் தவறியும் இந்த திசையில் மட்டும் வைத்து விடவே கூடாது

பலரது வீட்டு வாசலில் மணிபிளான்ட் செடி இருப்பதை பார்த்திருப்போம். பெரும்பாலானோர் அவர்களது வீட்டில் அதிர்ஷ்டம் உண்டாவதற்காக மணி பிளான்ட் செடியை வளர்த்து வருவார்கள். ஆனால் ஒரு சில வீடுகளில் என்னதான் முயற்சித்தாலும் சீக்கிரத்தில் இந்த செடி வளர்ந்து விடாது. இதற்கு காரணம் என்னவென்றால் மணி பிளான்ட் செடி வைப்பதற்கென்று உரிய இடம் இருக்கிறது. அந்த இடத்தில் வைத்து வளர்த்தால் மட்டுமே இந்தச் செடி நன்றாக தழைத்து வளர்ந்து உங்கள் வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இவ்வாறு உங்கள் வீட்டிற்கும் அதிர்ஷ்டம் உண்டாக இந்த மணி பிளான்ட் செடியை எந்த திசையில் வைத்து வளர்க்க வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.




மணி பிளான்ட் செடி தென்கிழக்கு ஆசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கொடி வகையாகும். மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இந்த செடி மிகவும் பிரபலம் வாய்ந்தாக உள்ளது.வன பகுதிகளில் வளரும் மணி பிளான்ட் ஐம்பதிலிருந்து அறுபது அடி உயரத்திற்கு வளரும். ஆனால் வீட்டில் சிறிய தொட்டியில் வளர்க்கப்படும் மணிபிளான்ட் 15 முதல் 20 அடி மட்டுமே வளரும். ஒரு சிலர் மணி பிளான்ட் செடியை வீட்டை அலங்கரிப்பதற்காகவும் வளர்க்கின்றனர். இதனை வளர்ப்பதற்கு பெரிதாக செலவுகள் ஒன்றும் ஆகாது. ஆனால் வாஸ்துப்படி இதனை சரியான இடத்தில் வைத்து வளர்ப்பது என்பது மிகவும் அவசியமாகும்.


மணி பிளான்ட் வைக்க வேண்டிய திசை:
வாஸ்து நிபுணர்களின் கூற்று படி இந்தச் செடியை தென்கிழக்கு திசையில் வைத்துதான் வளர்க்கவேண்டும். ஏனென்றால் தென் கிழக்கு திசையில்தான் பாசிட்டிவ் எனர்ஜி அதிகமாக கிடைப்பதாகவும், இந்த திசையில் மணிபிளான்ட் செடி வைத்து வளர்ப்பதன் மூலம் அது நன்றாக வளர்ந்து, அதன் வேகமான வளர்ச்சி போலவே வீட்டில் செல்வ வளமும் பெருகும் என்பது வாஸ்து நிபுணர்களின் கூற்றாக உள்ளது 

தென்கிழக்கு திசை விநாயகருக்கு உரிய திசையாகவும், சுக்கிரன் பிரதிநிதித்துவம் செய்யும் திசையாகவும் கருதப்படுகிறது. எவ்வாறு விக்னம் என்னும் சொல்லிற்கு ஏற்றவாறு விநாயகர் நமது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக இருக்கிறாரோ, அதுபோல இந்த திசையில் வைக்கப்படும் மணிபிளான்ட் செடியும் நமது வீட்டில் உள்ள பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கும் வல்லமை பெற்றதாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் சுக்ரனுக்கு உரிய திசை என்பதால் செல்வ வளமும் பெருகும் என்பது அனைவரின் நம்பிக்கையாக உள்ளது.



மணி பிளான்ட் வைக்கக்கூடாத திசை:
மணிபிளான்ட் செடியை எக்காரணம் கொண்டும் வடகிழக்கு திசையில் மட்டும் வைத்து விடக்கூடாது. ஏனென்றால் இந்த திசை எதிர்வினையை அதிகரிக்கும் திசை என்பதால நமது வீட்டில் நஷ்டம் தான் அதிகரிக்கும். வீண் விரயங்களும் ஏற்படும்.


மணி பிளான்ட் வளர்க்க வேண்டிய முறை:
வீட்டில் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் மணி பிளான்ட் செடியை மண் அல்லது நீரில் வைத்து வளர்த்தாலும் நன்றாக வளரும். அவ்வாறு வீட்டின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் இவ்வாறு உங்களுக்கு விருப்பமான எந்த இடத்தில் வைத்தும் வளர்க்கலாம். ஆனால் நீங்கள் வைக்கும் திசையை மட்டும் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும். இந்த செடியில் இருக்கும் இலைகள் ஏதேனும் ஒன்றிரண்டு வாடி இருந்தாலும் அதனை உடனே அகற்றி விட வேண்டும். இல்லையென்றால் அவை முழுச் செடியையும் பாதித்துவிடும். இவ்வாறு இந்தச் செடி பாதிப்படைவதென்பது வீட்டிற்கு நன்மையை கொடுத்திடாது.

Friday 10 September 2021

காலில் விழுந்து ஆசி ...

வலது கையில் சுக்கிரனும்,வளர்பிறை சந்திரனும் இருக்கிறார்கள்...சுக்கிரன்,சந்திரன் பலம் பெற்றவர்கள் காலில் விழுந்து ஆசி பெற்று அவர்கள் நம் தலையில் கை வைத்தோ அட்சதை தூவியோ ஆசி செய்யும்போது நம்மை சுற்றி உள்ள கெட்ட சக்திகள்,கண் திருஷ்டிகள் விலகுகின்றன...நல்ல எண்ணம் கொண்டவர்கள் கால் கட்டை விரலை தொட்டு வணங்கும்போது அவர்கள் பாசிடிவ் எனர்ஜி நமது மூளைக்கு புத்துணர்ச்சி தருகிறது.

தாயிடம் தந்தையிடம் ஆசி பெறும் போதும் நம்மை சுற்றியிருக்கும் துர் சக்திகள் விலகி அதிர்ஷ்டம் பெருகும்

Tuesday 7 September 2021

புதினாக்கீரை பயிரிடும் முறைகள் மற்றும் பயன்கள்

புதினாக்கீரை
 
புதினாக்கீரை பயிரிடும் முறைகள் மற்றும் பயன்கள்
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

கீரை வகைகளில் ஒன்றான புதினா நல்ல நறுமணம் கொண்ட ஒரு மருத்துவ மூலிகையாகும்.

கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை போலவே புதினாவும் உணவுக்கு மணமூட்டுவதற்காக பயன்படுத்தப்படுகிறது.

புதினா வருடம் முழுவதும் அறுவடை செய்யக்கூடிய பயிர்களில் ஒன்றாகும். இதற்கு காலநிலை எதுவும் கிடையாது. ஆனால் ஜூன் – ஜூலை மாதங்களில் நடவு செய்ய சிறந்த பருவம் ஆகும்.

பயிரிடும் முறை:👇👇👇

நிலத்தை நன்கு பண்படுத்தி மக்கிய தொழு உரம் இட வேண்டும். பின்பு சாகுபடிக்கு ஏற்றவாறு பாத்திகள் அமைத்துக் கொள்ளவேண்டும். பாத்தி கட்டி புதினா நாற்றை நடவு செய்ய வேண்டும்.
இது பொதுவாக பத்தியங்கள் மூலம் இனப்பெருக்கம் செய்யக்கூடியது. சிறிது வேர் இருந்தாலும் நன்கு தழைத்து வளரும் தன்மை உடையது.
தயார் செய்துள்ள பாத்திகளில் 40 x 40 செ.மீ இடைவெளியில் புதினாவை நடவு செய்ய வேண்டும். புதினா சாகுபடிக்கு உப்பு நீரை பாய்ச்சினால், அது விளைச்சலை பாதிக்கும். எனவே நல்ல நீரை மட்டும் பாய்ச்ச வேண்டும். பின்னர் மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
ஒரு எக்டருக்கு தழைச்சத்து 30 கிலோ, மணிச்சத்து 60 கிலோ மற்றும் சாம்பல் சத்து 10 கிலோ கொடுக்கக்கூடிய உரங்களை அடியுரமாக இட வேண்டும்.
நடவு செய்த 60 மற்றும் 120 வைத்து நாளில் ஒரு எக்டருக்கு 30 கிலோ தழைச்சத்து உரத்தை இரண்டு முறை பிரித்து இடவேண்டும். ஒவ்வொரு அறுவடைக்கு பின்னரும் உரமிட வேண்டும்.
தேவைக்கேற்ப கைகளை எடுத்து களைகளை கட்டுப்படுத்த வேண்டும்.
பூச்சி தாக்குதல் அதிகமாக இருக்காது. சில இடங்களில் வெள்ளை பூச்சி அல்லது புரோட்டான் கருப்புப் புழு தாக்குதல் காணப்பட்டால் இஞ்சி பூண்டு கரைசல் தெளிக்கலாம்.
நடவு செய்த 5 வைத்து மாதத்தில் முதல் அறுவடையும் அதன் பின்னர் மூன்று மாத கால இடைவெளியிலும் அறுவடை செய்ய வேண்டும். நல்ல முறையில் பராமரிப்பு செய்தால் நான்கு ஆண்டுகள் வரை மகசூல் எடுக்கலாம்.
ஒரு வருடத்திற்கு ஒரு எக்டரிலிருந்து 15 – 20 டன் புதினா கிடைக்கும்.

பயன்கள்:👇👇👇

உடலுக்கு நோய் எதிர்புச் சக்தி அளிக்கக்கூடியது. உணவை செரிமானம் செய்யவும், உணவு செரிமானம் சம்மந்தமாக வரும் வெப்பத்தையும் ஜூரத்தையும் நீக்கவல்லது.
வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சமயம் புதினாக்கீரை துவையலை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.
மூச்சுத்திணறல் நிற்க புதினா இலையைச் சிறிதளவு எடுத்து மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து பின் அந்த நீரை குடித்தால் மூச்சுத்திணறல் பிரச்னை நீங்கும்.
புதினாவை உலர்த்திப் போடி செய்து பற்பொடியாக உபயோகப்படுத்தினால் பற்களுக்கு நல்லது. ஈறுகளும் வலிமை பெரும்.
மஞ்சள் காமாலை, வாதம்,வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

Friday 3 September 2021

நாகலாபுரம் மச்ச அவதார ஸ்ரீவேதநாரயணபெருமாள்...

நாகலாபுரம் மச்ச அவதார ஸ்ரீவேதநாரயணபெருமாள்... பெருமாளையும் தாயாரையும் ஒரே இடத்தில் நிம்மதியாக தரிசனம் செய்வதற்கு உதவும் ஆலயம் அமைந்துள்ள ஆலயம் பற்றி உங்களுக்கு தெரியுமா? திருப்பதி தரிசனத்திற்கு சமமான பத்மாவதி, ஸ்ரீநிவாசப்பெருமாளுக்கு திருமணம் நடந்த இடம் என்ற வரலாற்று பெருமையுடைய நாராயணவனம் தலத்திற்கும் மற்றும் அத்தி வரதருக்கு சமமான தரிசனம் பெறக்கூடிய ஒரு ஆலயம் என்கிற பெருமை உடையதுமான நாகலாபுரம் ஸ்ரீவேதநாரயண பெருமாள் தலத்திற்கும் தான் இந்த பதிவின் மூலம் நாம் பயணம் செல்ல போகிறோம்! சந்திரனை அடிப்படையாக கொண்ட சந்திர மாஸ கணக்குபடி வைகாசி மாத சுக்ல பட்ச தசமி திதியன்று நாராயணவனம் என்கிற இடத்தில்தான் பத்மாவதி ஸ்ரீநிவாசப்பெருமாளுக்கு திருமணம் நடந்துள்ளது அப்படிபட்ட வரலாற்று பெருமையுடைய தலத்தையும் ஆயிரம் அத்தி வரதர்க்கு சமமான வேத நாராயண பெருமாள் கோவில் தலத்தையும் இன்று நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம். பெரும்பாலானோருக்கு ஒரு சந்தேகம் இருக்கும். பொதுவாக நாம் எந்த பெருமாள் கோயிலுக்குச் சென்றாலும் அங்கே அருகிலேயே தாயார் சன்னதியும் இருக்கும். ஆனால் திருப்பதியில் மட்டும் தாயார் எங்கோ தொலைவில் திருச்சானூரில் இருக்கிறாரே! ஏன் இப்படி? இதற்கு விடை, திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாளின் ஊர். திருச்சானூர் பத்மாவதி தாயாரின் ஊர். பெருமாள் தாயாரைப் பார்க்க திருச்சானூருக்கு வந்தார். அதனால் அங்கு பெருமாளுக்கு தனி சன்னதி இருக்கிறது. ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கும், பத்மாவதி தாயாருக்கும் திருமணம் நடந்த இடம் நாராயண வனம். இங்கு பெருமாளும், தாயாரும் ஒரு சேரக் காட்சியளிக்கின்றனர். தலசிறப்பு: இங்கு பெருமாளும் தாயாரும் மணம் முடித்தக் காரணத்தால் இது கல்யாணக் களையுடன் மகிழ்ச்சியைக் குறிக்கும் மங்களகரமான இடம். இங்கு பெருமாள் மணமகன் அலங்காரத்திலும், தாயார் மணமகள் அலங்காரத்திலும் அருள்பாலிக்கின்றனர். திருப்பதியிலும், திருச்சானூரிலும் தனித்தனியாக இருக்கும் இவ்விருவரும் ஒன்று சேர்ந்து எழுந்தருளியிருப்பது காணக் கிடைக்காத அற்புதக் காட்சி நாராயணவனத்தில் உள்ள கல்யாண ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் திருப்பதியை விட பழமையான கோவிலாகும். இது தான் பத்மாவதி தாயாரின் அவதார ஸ்தலம். நாராயணவனத்தில் தான் பெருமாளுக்கும், பத்மாவதி தாயாருக்கும் திருமணம் நடந்தது. உடைவாள், கையில் திருமண காப்போடு பெருமாள் அருளும் இந்த க்ஷேத்ரம் தான் உலகின் முதல் வெங்கடாஜலபதி கோவில். இரண்டாவதுதான் திருப்பதி! திருப்பதி வெங்கடாஜலபதி பத்மாவதி தாயாரை இங்கு தான் மணந்தார். பத்மாவதி தாயாரின் அவதார ஸ்தலம் இது. இடுப்பில் உடைவாளோடு, கையில் கல்யாண காப்போடு பெருமாள் இருக்கும் கோவில்கள் இரண்டு. ஒன்று குணசீலம் இன்னொன்று நாராயணவனம். திருப்பதி கோவிலை காட்டிலும் இந்த கோவில் மிக பழமையானது. இந்த கோவிலை திருமணம் ஆகாதவர்கள் தரிசித்தால் திருமணம் தடை விலக்கும் ஸ்தலம் இது. சுருக்கமாக நாராயணவனம் கல்யாண பெருமாள் என்று சொன்னால் தான் அனைவர்க்கும் இங்கே தெரியும் இந்த நாராயணவனம் க்ஷேத்ரத்தை ஒருமுறை தரிசித்தால் திருப்பதிக்கு 100 முறை சென்று வந்த புண்ணியம் கிடைக்கும். கையில் திருமண காப்போடு இருக்கும் இந்த பெருமாள் திருமண தடையை நீக்குவதில் வல்லவர். திருப்பதியில் ஸ்ரீநிவாசப்பெருமானை தரிசனம் செய்ய அருகில் செல்லும்போதே ஜருகண்டி, ஜருகண்டி என்று சொல்லி நம்மை நிம்மதியாக தரிசனம் செய்ய விடமாட்டார்கள். ஆனால் இந்த நாராயணவனத்தில் இப்படிபட்ட நாம் நிம்மதியாக பெருமாள் மற்றும் தாயாரின் தரிசனத்தை பெற முடிகிறது. திருமலையில் பெருமாளை நீண்டநேரம் காத்திருந்து தரிசிக்க முடியாத குறையைப் போக்க விரும்புபவர்கள், இந்தத் நாராயணபுரம் தலத்துக்கு வந்து, தாங்கள் விரும்பும் அளவுக்கு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பெருமாளையும் தாயாரையும் ஒருசேர தரிசித்து மகிழலாம் உள்ளே சென்று பெருமாளை வணங்கிவிட்டு, வெளியே வரும்போது ஸ்ரீ பத்மாவதி தாயார் திருமணத்திற்கு மாவு அரைத்த இயந்திரம் ஒன்றை பார்க்கலாம்! இப்போதெல்லாம் இது போன்ற கையால் மாவு அரைக்கின்ற இயந்திரம் எங்கே இருக்கிறது? என்று தேடும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விட்டோம். தரிசனம் முடித்து வெளியே வந்ததும்,அருமையான ருசியோ ருசியான கோயில் பிரசாதம் புளியோதரையை சிந்தாமல் சிதறாமல் தொன்னையில் அள்ளிக் கொடுக்கின்றார்கள். பக்தர்கள் தங்களுக்கு திருமணம் கைக்கூடவும், கடன்தொல்லையில் இருந்து விடுபடவும், சகல செல்வங்களும் கிடைக்க பெருமாளை வேண்டி செல்கின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் பெருமாளுக்கும், தாயாருக்கும் அபிஷேகம் செய்து திருமஞ்சனம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர். ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர ஸ்வாமி திருக்கோயில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு உட்பட்டது. மிக மிக அழகாய் பராமரித்துக் கொண்டு வருகின்றார்கள். பெயர்ப்பலகை அனைத்தும் மின்னும் வண்ண செப்பேட்டில், திருப்பதியில் உள்ளது போன்றே இங்கும் உள்ளது. திருப்பதியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நாராயண வனம் உள்ளது இந்த நாராயண வனத்தில் அருணா நதி பள்ளத்தாக்கு உள்ளது. பத்மாவதி என்று அழைக்கப்படும் தாயார் இந்த இடத்தில்தான் வளர்ந்தார்கள். திரு வெங்கடேசப் பெருமானின் திருமணம் இந்த இடத்தில்தான் நடந்தது. அந்த திருமணத்தை காண 33 கோடி கடவுள்களும் அணிவகுத்து நின்றார்களாம் . வெங்கடேசப்பெருமான் மற்றும் பத்மாவதி தேவி அவர்கள் திருமணம் முடிந்த பின்பு திருப்பதிக்கு செல்லும் வழியில் அப்பலயகுண்ட என்ற ஊரில் ஓய்வெடுத்துவிட்டு சென்றுள்ளார்கள். இந்த ஊர் திருப்பதியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் திருச்செந்தூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது. திருப்பதிக்கு செல்லும் வழியில் இது அமைந்திருப்பதால் இதை மறக்காமல் பார்த்து விட்டு செல்ல வேண்டும். இது மிக அழகான முறையில் கட்டப்பட்ட கோவில்களில் ஒன்றாகும் இந்தக் கோவிலில் உள்ள தெய்வங்கள் கம்பீரமாகவும் அழகாகவும் காட்சியளிக்கின்றார்கள். இந்த கோவிலில் மிக முக்கியமான இரண்டு கடவுள் யார் என்றால் பத்மாவதியும் ஆண்டாளும் ஆவார்கள். இந்தக் கோவிலில் தரிசனம் பெறுவது மிக சுலபமான ஒன்றாகும். பத்மாவதி தாயாருக்கும் சீனிவாச பெருமாளுக்கும் நாராயணவனம் என்னும் இடத்தில் திருமணம் நடந்து முடிந்ததும், சீனிவாச பெருமாள் பத்மாவதி தாயாருடன் திருமலைக்குப் புறப்பட்டார். அப்போது மணமக்கள் இருவரும் வேங்கட மலைக்கு செல்லும் வழியில் அகத்தியர் ஆஸ்ரமத்திற்கு சென்றனர். அவர்களுக்கு அகத்தியர் தடபுடலாக விருந்தளித்தார். அப்போது அகத்தியர், ‘திருமணமான தம்பதிகள் ஆறு மாதத்துக்கு மலையேறக் கூடாது’ என கூறிவிட்டார். மகரிஷியின் வார்த்தைக்கு மறுப்பேது? அகத்திய மகரிஷி கூறியபடி, பெருமாளும், பத்மாவதி தாயாரும் திருமலைக்கு செல்லாமல் அங்கேயே தங்கிவிட்டனர். அப்படி பெருமாள் தங்கிய தலம்தான் இப்போதைய சீனிவாசமங்காபுரம் என்று கூறப்படுகிறது. சீனிவாசனும், அலமேலு மங்கையாகிய பத்மாவதியும் தங்கியதால் இருவரின் பெயராலும் சீனிவாசமங்காபுரம் என அழைக்கப்படுகிறது. புராதன காலத்தில் சித்புருஷர்கள் தவம் செய்த இடமானதால் சித்தர் கூடம் என்றும் அழைக்கப்படுகிறது. தனக்கு திருமணம் நடந்த நாராயண வனத்தில் 5அடி உயரத்தில் பால்ய வடிவிலும், சீனிவாசமங்காபுரத்தில் 8 அடி உயரத்தில் கம்பீரமான வாலிப வடிவத்திலும், திருமலையில் 6அடி உயரத்தில் குடும்பதலைவர் கோலத்திலும் பெருமாள் காட்சி தருகிறார். இம்மூன்று முர்த்திகளும் சீனிவாச பெருமாளின் ஒரே வடிவங்களே. சீனிவாசமங்காபுரம் கோயிலில் உள்ள கருவறையில் பெருமாள் மூன்று திருக்கோலங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நடுநாயகமாக சீனிவாச பெருமாளாக நின்ற திருக்கோலத்திலும், வலது புறம் லட்சுமி நாராயணராக அமர்ந்த திருக்கோலத்திலும், இடது புறம் ஸ்ரீரங்கநாதரைப் போல் சயனக் கோலத்திலும் சேவை சாதிக்கிறார். நாராயண வனம் எங்கு இருக்கிறது? ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதியிலிருந்து 35 கிமீ தொலைவிலும் புத்தூரிலிருந்து 5 கிமீ தொலைவிலும் உள்ளது. திருச்சானூரிலிருந்து 31கிமீ தொலைவும், சென்னையிலிருந்து 95 கிமீ தொலைவில் ஊத்துக்கோட்டை திருப்பதி சாலையில் உள்ளது. கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 5 மணியிலிருந்து இரவு 8 மணி வரை கோயில் திறந்திருக்கும். இங்கு ஆறு கால பூஜைகளும், பலவிதமான உற்சவங்களும் நடப்பதால் பக்தர்கள் எப்பொழுது சென்றாலும் ஏதேனும் ஒரு பூஜை அல்லது உற்சவத்தில் கலந்து கொள்ளலாம். இத்தலத்திற்கு 7கிமீ தொலைவில் நாகலாபுரம் தலம் உள்ளது. இது மச்சாவதாரத் திருத்தலம். இன்னும் சற்றுத் தொலைவில் பிரதோஷப் பூஜை தோன்றுவதற்கு மூலக்காரணமாக இருந்த தலமான சுருட்டப்பள்ளி பள்ளிக்கொண்டீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. நாராயணவனத்தில் தரிசனம் முடித்து அப்படியே அருகில் நாகலாபுரத்தில் இருக்கின்ற வேதநாராயணப் பெருமாள் திருக்கோயிலுக்கு சென்றால் ஒரே கல்லுல ரெண்டு மாங்கா என்பது போல,ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர ஸ்வாமி தரிசனம் பெற்ற மகிழ்ச்சியுடன் அத்திவரதர் தரிசனத்திற்கு சமமான ஸ்ரீ வேதநாராயண பெருமாளின் தரிசனத்தையும் நாம் பெறலாம். பெருமாளின் பத்து அவதாரங்களில் முதல் அவதாரமான மச்ச அவதாரமாக இறைவன் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் மிக அற்புதமான அரிதான தலம் நாகலாபுரம் தலமாகும். வேதநாராயணப் பெருமாள் என்ற திருநாமம் கேட்ட உடனே வேதத்திற்கும் இத்தலத்திற்கு சம்பந்தம் உண்டு என்று தெரிகின்றது. நமது “ஸநாதன தர்மத்துக்கு’ ஆதாரமானவை வேதங்களே! நான்மறைகள் இல்லையேல் நமது மதமே இல்லை. காக்கும் கடவுளான திருமால், தர்மத்தை நிலை நாட்டப் பல அவதாரங்கள் எடுத்திருப்பினும், அவற்றுள் வேதங்களைக் காத்த பெருமையினால் பெரிதும் போற்றப்படுவது மத்ஸ்ய ரூபத்தில் (மீன் உருவம்) எடுத்த அவதாரமே! ‘தசாவதாரங்களில்’ இதுவே முதன்மையானது. அது மட்டும் அல்லாமல் மிகவும் சிறப்பான அமைப்பான இறைவன் தன கையில் சுதர்சன சக்கரத்தை செலுத்துவதிற்கு தயாராக உள்ள நிலையில் இத்தலத்தில் அருள் பாலிக்கின்றார் . இந்த மச்ச அவதார நோக்கமே அசுரர்களால் திருடப்பட்ட வேதங்களை காப்பாற்ற மஹா விஷ்ணு எடுத்த அவதாரமாகும் . ஒரு யுகம் முடிவு அடைய போகும் கால கட்டத்தில் பிரம்மாவுக்கு உறக்கம் ஏற்பட்டது. அவர் கண்களை மூடி வாயை திறந்து தூங்கும் போது அவர் வாயில் இருந்து வேதங்கள் வெளி வந்து விழுந்தன . அவற்றை அசுரரான சோமகுரு என்ற அசுரன் அதை திருடி எடுத்து சென்றுவிட்டான் . இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பிரம்மா மற்றும் தேவர்கள் இருந்தால் தான் புது யுகத்தை உருவாக்க முடியும் அதில் எல்லா உயிரினங்களை படைக்க முடியும் என்று கூறினார் . மத்திய புராணத்தில் இந்த மச்ச அவதாரத்தை பற்றி கூறியுள்ளார்கள். விஷ்ணுவின் பக்தரான சத்தியவரதா சந்தியா வந்தனம் செய்யும் போது அந்த கமண்டலத்தில் இருந்து சிறிய மீனாக தோன்றிய பெருமாள் படிப்படியாக ஒரே நாளில் பெரிய மீனாக உருவெடுத்தார் . பகவான் தன் மச்ச அவதாரத்தின் மூலம் அசுரன் சோமகுருவை அழித்து வேதங்களை திரும்ப பெற்றார் . அவற்றை பிரம்மாவிடம் ஒப்படைத்தார் . பிரம்மா தன் படைக்கும் தொழிலால் ஒரு புதிய யுகத்தை உருவாக்கினார் . முதல் அவதாரமாகிய மச்சாவதாரக் கோலத்திலேயே திருக்கோயில் கொண்டு அருள்புரியும் திருமால் ஆலயத்தை, இந்த நாகலாபுரத்தில் காணலாம். இத்தகைய கோலம், வேறு எங்கும் காணப்படாத ஒன்று. பிற ஆலயங்களில் புடைப்புச் சிற்பமாகவோ, சித்திரமாகவோ மட்டுமே மீனாகிய தேவனை தரிசிக்க முடியும். மூலவராக தனி சந்நிதி கொண்டு அருள்புரிவது இங்கு மட்டுமே என்கின்றனர். 16ம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயரால், அவர் தம் தாயின் நினைவாக இக்கோயில் கட்டப்பட்டது. மூலவர் வேதநாராயணப் பெருமாள்,ஸ்ரீதேவி-பூதேவி யுடன் காட்சி தருகிறார். திருமாலின் திருப்பாதங்கள் மீனின் அடிப்புறம் போலவே அமைந்துள்ளது. இந்த அற்புதக் காட்சியை இன்றைக்கெல்லாம் கண் குளிர சேவிக்கலாம். இவ்வாலயத்தில் வேதவல்லித் தாயார், லட்சுமி நரசிம்மர், வீரஆஞ்சநேயர், பக்த ஆஞ்சநேயர், ராமபிரான் ஆகிய தெய்வங்களுக்கு தனி சந்நிதிகள் அமைந்துள்ளன. திருச்சுற்று மதிலுடனும், ராஜகோபுரங்களுடனும் ஒரு பெரிய ஆலயமாகவே இது திகழ்கிறது. இந்த ஆலயத்தின் கோபுரம் பார்க்கும் போதே நமக்கு பல்லாண்டு பல்லாண்டு! பல்லாயிரத்தாண்டு! பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா!* உன் சேவடி செவ்வித்திருக்காப்பு என பல்லாண்டு பாடத் தோன்றுகிறது .. வேதநாராயணப் பெருமாள் கோவிலின் அறிவிப்பு பதாகை நம்மை வரவேற்கின்றது, பெருமாள் மச்சாவதார கோலத்தில் அதுவும் சுயம்பு மூர்த்தமாக இவர் இருக்கும் அந்த அழகு இங்கே கிடைக்கும் தெய்வீக அதிர்வலையை வர்ணிக்க வார்த்தைகள் எதுவும் இல்லை. பெருமாள் கோவிலில் சுற்று பிரகாரத்தில் சிவன் சந்நிதியை பார்ப்பது என்பது மிக, மிக அபூர்வம் இங்கே சுற்று பிரகாரத்தில் வீணா தக்ஷிணாமூர்த்தியை பார்க்கலாம். இந்த பெருமாளை வழிபடுவதன் மூலம் பித்ரு தோஷம், சர்ப்ப தோஷம் முதலான பல தோஷங்கள் நீங்கும். இந்த கோவில் அனைத்து ராசியினரும் வழிபட வேண்டிய கோவில், குறிப்பாக மீன ராசியினர் அவசியம் வழிபட வேண்டும். இந்த கோயிலானது கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டது ஆகும் . இவ்வூரான நாகலாபுரம் என்ற பெயரானது தன் அம்மா பெயரான நாகமா என்ற பெயரை ஞாபகப்படுத்துமாறு வைத்தார் . இக்கோயின் மற்றொரு சிறப்பு அம்சம் . இக்கோயில் மேற்கு அமைந்துள்ளது. சூரியனது கதிரானது ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 12 ,13 ,14 ஆம் தேதிகளில் மாலை 6 மணி முதல் 6 .15 மணி வரை இறைவனின் மீது படும் .அதுவும் முதல் நாள் சூரிய கதிர் இறைவனின் கால் பகுதியிலும் ,இரண்டாம் நாள் இறைவனின் மார்பு பகுதியிலும் ,மூன்றாம் நாள் இறைவனின் தலை பகுதியில் படும் . இக்கோயில் திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது . திறந்திருக்கும் நேரம் : காலை 6 .00 -12 .00 ,மாலை 4 .00 -8 .00 செல்லும் வழி: இக்கோயில் சென்னையில் இருந்து சுமார் 80 km தொலைவில் சிறிய கிராமத்தில் அமைந்துள்ளது. சென்னை -திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது சுருட்டப்பள்ளியில் இருந்து சுமார் 15 km தொலைவில் இக்கோயில் உள்ளது... ஓம் நமோ நாராயணா நமஹா

Thursday 2 September 2021

குழந்தை வளர்க்க ...

குழந்தை பிறந்த 3 வது மாதம் குழந்தைக்கு சூரியனை காண்பிக்க வேண்டும் ..நான்காவது மாதம் சந்திரனையும் ,பசுவையும் காண்பிக்க வேண்டும்...6வது மாதம் குழந்தைக்கு அன்னம் ஊட்ட வேண்டும்..அது குருவாயூராக இருந்தால் சிறப்பு.

குழந்தை படிக்க துவங்கும்போது கணபதி மந்திரங்கள்,அபிராமி அந்தாதி போன்ற சின்ன சின்ன ஸ்லோகங்களையும் சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும்..குழந்தையின் முன்பு தாய் எப்போதும் குளித்து, சுத்தமாகவும்,நல்ல சிரிப்புடனும்,கலகலப்பாக பழக வேண்டும் தந்தை சுறுசுறுப்புடன் காலை கடமைகளை குழந்தைக்கு பழக்க வேண்டும்..!!

புத்தி கூர்மை, அறிவாற்றல் பெருக

புத்தி கூர்மை, அறிவாற்றல் பெருக கண்ணனை வழிபடுவோம்

கண்ணன் பிறந்த உத்திர பிரதேச மாநிலத்தில் தொழில் வளத்தில் இந்தியாவில் மூன்றாம் இடம் .கண்ணன் ஜீவ சமாதி ஆன குஜராத் மாநிலம் ஐந்தாம் இடத்தில் ஜி.டி.பியில் இருக்கிறது 

தமிழ்நாட்டில் எப்படி அறத்துடன் ஒழுக்கமுடன் நேர்மையுடன் வாழ வேண்டும் என்பதில் தான் நம் முன்னோர்கள் படிப்பினை கொடுத்தார்கள் அந்த உணர்வுதான் நம்மிடம் இருக்கிறது 

ஆனால் குஜராத்திகள் தொழிலில் மிகப்பெரும் தந்திரசாலிகள் ...பிசினஸ் செய்வதில் அசகாய சூரர்கள்..வடநாட்டினர் தமிழகத்தில் பெரும் மொத்த விறபனை குடோன்களை அமைத்து வியாபாரத்தை குவிக்கின்றனர் பங்கு சந்தையில் குஜராத்திகள் லாபம் கொழிக்க காரணம் நினைவாற்றல் மற்றும் தந்திரம் நிரைந்த புதனின் பலம் அவர்களுக்கு அதிகம் .அதற்கு காரணம் கண்ணன் சக்தி அவர்களுக்கு பரிபூரனமாக கிடைத்தது 

கடுமையான உழைப்பு மட்டுமே தொழிலில் வெற்றியை கொடுத்து விடாது அறிவாற்றலும் சாமர்த்தியமும் இணைய வேண்டும் ‘

அறிவாற்றலும் சாமர்த்தியமும் பெருக கண்ணனை தொழுவோம்...

நம் ஊரில் மன்னார்குடி ராஜகோபால் வழிபாடு சிறப்பு தரும் .

கழுதையானாலும் காலை பிடி

கம்சன் தன் தங்கை தேவகிக்கு பிறக்கும் எட்டாவது குழந்தையால் தன் உயிருக்கு ஆபத்து என தெரிந்தவுடன் கணவன் ,மனைவி இருவரையும் சிறையில் அடைத்தான்...

இவர்களுக்கு  குழந்தை பிறக்கும் சமயம், ஒரு கழுதையை சிறை வாசலில் கட்டி வைத்தான்.சிறைக்காவலர்களை அவன் நம்பவில்லை.கழுதைக்கு நுகரும் சக்தி மிக அதிகம்..குழந்தை பிறந்ததும் கத்த துவங்கி விடும்.கம்சன் வந்து கொன்று விடுவான்.இப்படி ஏழு குழந்தைகள் இறந்தன..

எட்டாவது குழந்தையாக கிருஷ்ணர் பிறக்கிறார் ..உடனே தேவகி கணவன் வசுதேவன்...தயவு செய்து கத்தி விடாதே என கழுதை காலில் விழுந்து கெஞ்சினான்....கழுதையும் கத்தவில்லை...கிருஷ்ணர் அவதாரம் நிகழ்ந்தது.

எனவேதான் காரியம் ஆகனும்னா கழுதையானாலும் காலை பிடி என்ற பழமொழி வந்தது..!!

கர்நாடகாவில் அமிர்தாபுரத்து அமிர்தேஷ்வரான கோவிலில் வெளிச்சுவரில் வசுதேவர் கழுதை காலில் விழும் சிற்பம் உள்ளது.

வணக்கம் தெரிவித்தால்

இரு கையையும் கூப்பி ஒருவருக்கு வணக்கம் தெரிவித்தால் அவரும் அதே போல கும்பிடுவார்...இந்த பழக்கம் நாம் பெருமூளை,சிறுமூளை இரண்டையும் ஒன்றிணைக்கிறது..மனம் ஒரே இடத்தில் குவிய செய்கிறது...நாம் வணங்கும்போதுதான் வணங்கப்படுகிறோம்..!!

Wednesday 1 September 2021

சமையலில் செய்யக்கூடாதவை.

சமையலில் செய்யக்கூடாதவை. * ரசம் அதிகமாக கொதிக்ககூடாது. * காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது. * மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது. * கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது. * காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது. * சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது. * தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது. * பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது. * பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது. * தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது. * குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது. * குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது. #காய்கறிகளை நறுக்குவதற்கு முன், தண்ணீரில் நன்கு கழுவிய பிறகு நறுக்கவும். நறுக்குவதற்கு முன் ஊற வைப்பதோ, காய்களை நறுக்கிய பிறகு தண்ணீரில் கழுவுவதோ கூடாது. காய்கறிகளிலும் பழங்களிலும் தோலை ஒட்டித்தான் தாதுஉப்புக்களும், உயிர்ச்சத்துக்களும் நிறைந்திருக்கினறன. எனவே, முடிந்தவரை தோலுடன் சமைக்க வேண்டும். கீரை வாங்கும்போது மஞ்சள் நிறமுள்ள இலைகள் அதிகமிருந்தால் வாங்குவதைத் தவிர்க்கவும். ஓட்டைகள் மற்றும் பூச்சிகளின் முட்டைகள் உள்ள கீரைகளையும் வாங்கக்கூடாது. பழங்கள், காய்கறிகள், சிறுதானியங்களில் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருக்கும். எனவே, இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். பாலைத் திரித்து பனீராக்குவதற்கு எலுமிச்சைச் சாறு ஊற்றுவோம். அதற்கு பதில் தயிர் ஊற்றி, பாலைத் திரித்தால் பனீர் புளிக்காமல் சுவையாக ‌இருக்கும். பூரிக்கு மாவு பிசையும்போது கால் டீஸ்பூன் ரவையைச் சேர்த்துக் கொண்டால், பூரி புஸுபுஸுவென உப்பலாக இருக்கும். எலுமிச்சை சாதம் செய்யும்போது தாளித்ததும் சாற்றை ஊற்றிக் கொதிக்கவிட்டால் சாதம் கசந்து போகும். அதற்கு பதில் ஒரு கிண்ணத்தில் எலுமிச்சைச் சாறு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்துகொள்ளவும். அதில் தாளித்ததை ஊற்றிக் கலக்கிய பிறகு, சாதத்தில் சேர்த்துக் கிளறினால், சாதம் கூடுதல் சுவையுடன் இருக்கும். டிப்ஸ்... டிப்ஸ்... கீரையை வேகவிடும்போது சிறிதளவு வெண்ணெய் அல்லது எண்ணெய் சேர்த்து வேகவைத்தால் பச்சை நிறம் மாறாது; ருசியாகவும் இருக்கும். தயிர் வடை போன்றே தயிர் இட்லியும் செய்யலாம்! தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், முந்திரிப்பருப்பு, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை அரைத்து தேவையான தயிரும், உப்பும் சேர்த்து வைக்கவும். இட்லிகளை சதுரமான துண்டுகளாக்கி, இந்தக் கலவையில் சில நிமிடங்கள் ஊறவைத்துப் பரிமாறினால்... மணம், சுவை நிறைந்ததாக இருக்கும். விருப்பப்பட்டால், கேரட் துருவல், காராபூந்தி இவற்றையும் மேலே தூவலாம். வாழைப்பூவை சமையலுக்கு பயன்படுத்தும்போது மோர் கலந்த தண்ணீரில் பொடியாக நறுக்கிப் போட்டு, பின் அதை ஜல்லி கரண்டியால் அரித்தெடுத்து இட்லி பானையில், இட்லி வேகவைப்பது போல் வேகவைத்தெடுத்தால், பூ கறுக்காமல் இருக்கும். தக்காளி சூப் நீர்த்துப் போய்விட்டால் மாவு கரைத்து விடுவதற்கு பதில், வெந்த உருளைக்கிழங்கு ஒன்றை மசித்து சேர்த்தால் ருசியும் கூடும்; சத்தும் அதிகம் கிடைக்கும். தொண்டை கட்டிக்கொண்டால்... கற்பூரவல்லி சாற்றுடன் பனங்கற்கண்டு சேர்த்து பருகினால் சரியாகிவிடும். அதிக அளவு பாலாடை தேவைப்படுகிறவர்கள் கொதித்து ஆறிய பாலை மூடாமல் ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே அதிக அளவு பாலாடை தோன்றிவிடும். கறிவேப்பிலை, கொத்தமல்லியை ஃப்ரிட்ஜில் வைக்கும்போது மஸ்லின் துணியில் சுற்றி வைத்தால், நிறம் மாறாமல் பச்சைப்பசேலென இருக்கும். துவரம்பருப்புடன் இரண்டு மஞ்சள்பூசணித் துண்டுகள் (அ) சர்க்கரை வள்ளிக் கிழங்கு துண்டுகளை சேர்த்து வேகவைத்து, மசித்து, சாம்பாரில் சேர்த்தால்... சாம்பாரும் ருசிக்கும்; துவரம்பருப்பின் அளவையும் குறைத்துக்கொள்ளலாம். கேரட் அல்வா கிளறும்போது பால் ஊற்றுவதற்குப் பதிலாக பால்கோவா போட்டுக் கிளறி, ஏதாவது ஒரு எசென்ஸ் சில துளிகள் சேருங்கள்... பிரமாதமான சுவையில் இருக்கும். வடை தட்டும்போது உள்ளே ஒரு பனீர் துண்டை வைத்து மாவால் மூடி எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுத்தால், வடை வித்தியாசமான ருசியுடன் இருக்கும். பாகற்காய் குழம்பு செய்யும்போது, நாலைந்து துண்டு மாங்காய் சேர்த்து வைத்துப் பாருங்கள்... பாகற்காயின் கசப்பு தெரியாது; ருசியும் கூடும். சிறிதளவு இஞ்சியோடு மிளகு, தேங்காய்த் துருவல், பேரீச்சம்பழம், உப்பு சேர்த்து அரைத்து, தயிரில் கலந்தால், சூப்பர் சுவையில் பச்சடி தயார். குலாப் ஜாமூன் ஜீரா மிகுந்துவிட்டால், அதில் மைதாவை சிறிது சிறிதாக சேர்த்துப் பிசைந்து சப்பாத்தி போல் திரட்டி, சதுர துண்டுகளாக வெட்டி. எண்ணெயில் பொரித்தால்... சுவையான பிஸ்கட் ரெடி! இதை மிக்ஸரிலும் சேர்க்கலாம். ஜவ்வரிசி, ரவை இரண்டையும் சம அளவு எடுத்து வறுத்து, பால் சேர்த்து வேகவிட்டு, வெல்லப்பாகு சேர்த்து, நெய்விட்டுக் கிளறினால், வித்தியாசமான சுவையுடன் சர்க்கரைப் பொங்கல் ரெடி! வற்றல் குழம்பு செய்யும்போது, கடைசியில் வெங்காய வடகத்தை வறுத்துப் பொடித்துப் போட்டு கிண்டிவிட்டால், குழம்பு கனஜோரா இருக்கும்! முருங்கை இலைக் காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதை இடிக்கவும். இஞ்சி, மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை இடித்து அதனுடன் சேர்க்கவும். இதில் தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு, பாதியாக்கி வடிகட்டி, சூப் போல குடித்து வந்தால்... உடல் வலி குணமாகும். மல்லியை (தனியா) சிறிதளவு நெய் விட்டு வறுத்துப் பொடி செய்து... சாம்பார் செய்து முடித்தவுடன் இந்தப் பொடியை போட்டு மூடிவைத்தால், சாம்பார் நல்ல மணத்துடன் இருக்கும். எந்தவிதமான சூப் செய்தாலும், சோள மாவு இல்லாவிட்டால், ஒரு டீஸ்பூன் அவலை வறுத்து, பொடித்து, சலித்து, அதில் சேர்த்துக் கொதிக்கவிட்டால்... சூப் கெட்டியாக, ருசியாக இருக்கும். பீட்ரூட்டையும், ரோஜா இதழையும் அரைத்து அடிக்கடி உதடுகளில் தடவிவந்தால்... நாளடைவில் உதடுகள் நல்ல நிறமாகும். ஈ, கொசு வராமல் தடுக்க சில வழிகள்... புதினா இலையை கசக்கி அறையின் ஒரு மூலையில் வைக்கலாம்; காய்ந்த கறிவேப்பிலையைக் கொளுத்தலாம்; ஒரு ஸ்பூன் காபி பொடியை வாணலியில் போட்டு சூடுபடுத்தலாம். குப்பைமேனி இலையோடு மஞ்சள், கல் உப்பு சேர்த்து அரைத்து தோலில் அரிப்பு, அலர்ஜி, சிரங்கு உள்ள இடங்களில் தடவி வந்தால்... விரைவில் குணமாகும். கற்பூரம், பச்சை கற்பூரம், நாப்தலின் உருண்டை, மிளகு, உப்பு இவற்றை பொடித்து சிறு துணியில் கட்டி அலமாரி, பீரோவில் வைத்துவிட்டால், பூச்சி வராது; நறுமணமாக இருக்கும். சப்பாத்தி தேய்க்கும்போது, தொட்டுக்கொள்ள கார்ன்ஃப்ளார் (சோள மாவு) பயன்படுத்தினால் நன்றாக வரும்; மாவும் கொஞ்ச மாகத்தான் செலவழியும். இட்லிமாவு அரைத்தபின் ஒரு வெற்றிலையைக் கிள்ளிப்போட்டு வைத்தால், மாவு பொங்கி வழியாது.