jaga flash news

Sunday 25 December 2022

சந்திரன் இருக்கும் இடத்தின் பலன்

சந்திரன் இருக்கும் இடத்தின் பலன்
1 இல் இருக்கும் போது ஆரோக்கியம் மண தெளிவு, சுகம், பெண் அனுகூலம்.
2இல் இருக்கும் போது காரியதடை, பண விரயம் மானக்கேடு,
3 இல் இருக்கும் போது
லாபம், தைரியம் ஜெயம்.
4இல் இருக்கும் போது
ரோக பீதி, குழப்பம், செயல் நட்டம், நீர் கண்டம் தனவிரயம்
5  இருக்கும் போது
சஞ்சலம், காரிய தோல்வி.
6 இருக்கும் போது
 சுகம், பணவரவு, வெற்றி.
 7இல்இருக்கும் போது
பண வரவு, ஆரோக்கியம், போஜன, சயன சுகம்
8இல் இருக்கும்போது
சோர்வு, மனகுழப்பம், கலகம்.
9இல் இருக்கும்போது
அச்சம் ,காரிய தடங்கல.
10இல் இருக்கும்
போது
தொழில் சிறப்பு, நற்பலன்.
11இல் இருக்கும்போது
லாபம் ,சுகம். உற்றார் நேசம்.

12 இல் இருக்கும் போது
காரிய தன விரயம்

Wednesday 21 December 2022

மன அழுத்தத்திற்கு காரணமான 'Cortisol' என்ற ஹார்மோன்மன அழுத்தம் குறைந்துவிடும்குளிர்ந்த நீரில் குளிப்பதால்

மார்கழி மாசத்துல சூரியன் உதிப்பதற்கு முன் பச்சை தண்ணீரில் குளிப்பதுண்டா

இல்லைங்க காலையில 9 மணிக்கே சுடுதண்ணீ தான் என்கிறீர்களா...

மன அழுத்தத்திற்கு காரணமான 'Cortisol' என்ற ஹார்மோன் காலைப் பொழுதில் அதிகமாக சுரக்கும். குளிர்ந்த நீரில் குளிப்பதால்  இந்த ஹார்மோன் சுரப்பது குறைந்து மன அழுத்தம் குறைந்துவிடும். 

பிசு பிசுப்பு இல்லாத ஆரோக்யமான சருமமாக மாறும். அரித்தல் போன்றவை மறையும்.

வெந்நீரில் குளிப்பது ஆண்மை குறைவை ஏற்படுத்துமாம். ஆனால் குளிர்ந்த நீரில் குளிப்பது ஆண்மை சக்தியை அதிகரிக்கும். 

அது சரி.. ஆனால் தலைக்கு குளித்தால் முடி அதிகமாக உதிருமே… ஆமாம். உதிரும். வெந்நீரில் குளித்தால்.. வெந்நீரில் குளிப்பதால் முடியின் வேர்கள் வலுவிழக்கும். குளிர்ந்த நீரில் குளிப்பதால் முடி உதிராது(உதிர்ந்தவர்களுக்கு அல்ல)

நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடைகிறது.

நுரையீரல் செயல்பாடு அதிகரிக்கும்.

அன்றைய நாளை சுறுசுறுப்பாகவும் புத்துணர்வாகவும் வைத்திருக்கும். சுருக்கமாக சொன்னால் நாய் துரத்தினால் வருமளவுசக்தி குளிர்ந்த நீர் குளியலால் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

Monday 12 December 2022

கடவுளுக்கு ஆகாத தீட்டுக்கள்!

மாதவிலக்கு, குழந்தை பிறப்பு, இறப்பு போன்றவை மிக மோசமான தீட்டு, இந்த நாட்களில் இறை வழிபாடு கூடாது என்ற கருத்து அனைவர் மத்தியிலும் உள்ளது. தீட்டுடன் கடவுளை வழிபட்டால் கடவுள் நம்மை ஏற்கமாட்டார். பாவம் வந்து சேரும். கடவுளின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும் என்ற எண்ணமும் உள்ளது. உண்மையில் இது எல்லாம் தீட்டே இல்லை, காமம், கோபம், சுயநலம், ஆணவம், பொறாமை ஆகிய ஐந்துதான் கடவுளுக்கு ஆகாத தீட்டு என்று ஞானிகள் தெரிவிக்கின்றனர். மாதவிலக்கு என்பது இயற்கை

மாதவிலக்கு, குழந்தை பிறப்பு, இறப்பு போன்றவை மிக மோசமான தீட்டு, இந்த நாட்களில் இறை வழிபாடு கூடாது என்ற கருத்து அனைவர் மத்தியிலும் உள்ளது. தீட்டுடன் கடவுளை வழிபட்டால் கடவுள் நம்மை ஏற்கமாட்டார். பாவம் வந்து சேரும். கடவுளின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும் என்ற எண்ணமும் உள்ளது.

உண்மையில் இது எல்லாம் தீட்டே இல்லை, காமம், கோபம், சுயநலம், ஆணவம், பொறாமை ஆகிய ஐந்துதான் கடவுளுக்கு ஆகாத தீட்டு என்று ஞானிகள் தெரிவிக்கின்றனர்


சுயநலத்துடன் வாழும் ஒருவர் மற்றவர்களுக்கு உதவ முடியாது. இவர்கள் தங்களைப் பற்றி மட்டுமே யோசிப்பார்கள். அப்படி இருக்கும்போது கடவுளை நினைக்க இவர்களுக்கு நேரம் இருக்காது. தான் மட்டும்தான் வாழ வேண்டும் என்று மற்றவர்களின் உடைமைகளை அபகரித்துக்கொள்ளத் தயங்கமாட்டார்கள், அல்லது அடுத்தவர்களுக்கு கிடைக்கக் கூடாது என்று காரியங்களில் இறங்கிவிடுவாரக்ள். இதுவும் கடவுளுக்கு ஆகாத தீட்டாகும்.


ஆணவம், கர்வம் இருக்கும் மனம் மற்றவர்களை மதிக்காது. உடலால், மனதால் மற்றவர்களை காயப்படுத்திக்கொண்டே இருக்கும். அதே போல் மற்றவர்கள் வாழ்வதை, மற்றவர்களுக்கு நல்லது நடந்ததை ஏற்க முடியாது, மற்றவர்களுக்கு கெடுதல் நடக்கவே விரும்புவார்கள் பொறாமை கொண்டவர்கள். இத்தகைய எண்ணம் கடவுளுக்கு பிடிக்காத, தீட்டாக மாறிவிடுகிறது!




விருத்தித் தீட்டு

குழந்தை பிறந்த தீட்டை 'விருத்தித் தீட்டு' என்று சொல்லுவோம்.  பொதுவாகக் குழந்தை பிறந்த தீட்டுக் கணக்கு குடும்பத்துக்குக் குடும்பம் மாறக்கூடியது. அதிகபட்சமாக 10 நாள்களில் இருந்து 16 நாள்கள் வரை இருக்கும். தீட்டு முடிந்துதான் புண்ணியாக வாசனம் செய்து பெயர் இடுவது வழக்கம். அதைச் செய்துவிட்டாலே தீட்டு எல்லாம் முடிந்துவிட்டது என்று பொருள். மூன்று மாதமெல்லாம் தீட்டு என்று எந்தக் கணக்குமில்லை.


மனைவி கருவுற்று 5 மாதங்களுக்கு மேல் ஆகியிருந்தால் ,குழந்தை பிறந்து பெயர் வைக்கும்வரை மலைக்குப் போகக்கூடாது என்பதுதான் விதி. இவருக்குக் குழந்தை பிறந்து ஒரு மாதத்துக்குமேல் ஆகிவிட்டதால் இவர் சபரிமலை போவதில் எந்தத் தடையும் இல்லை. எனவே, இவர் தாராளமாக மலைக்குச் செல்லலாம். ஐயப்பன் அருள் அனைவருக்கும் எப்போதும் உண்டு" 

தீட்டில் நியமங்கள் விருத்தி தீட்டு வரும்போது என்ன என்ன செய்யல்லாம் என்ன என்ன செய்யக்கூடாது




  • தீட்டில் நியமங்கள்

    1. தீட்டுள்ளவன் வீட்டில் தீட்டற்றவன் தெரிந்து சாப்பிட்டால் அன்றையபொழுது அவனுக்குத் தீட்டு.
    2. தீட்டுப்போகும் தினத்தில் சுமார் காலை எட்டரை மணிக்கு (ஸங்கவ காலம்) மேல்தான் தீர்த்தமாடி தீட்டை முடிக்க வேண்டும்.
    3. பிறப்பு, இறப்பு, மாதவிடாய் (தூரம்) இவை சூர்ய உதயத்திற்கு பதினொன்றேகால் நாழிகை(270 நிமிடங்கள்)க்கு முன் ஏற்பட்டால் முதல் நாள் கணக்கு. அதன் பிறகானால் மறுநாள் கணக்கு.
    4. ப்ரேதத்தின் பின் போனாலும் க்ஷவரம் செய்து கொண்டாலும் இரு முறை ஸ்நானம் செய்ய் வேண்டும்.
    5. ஸந்யாசிகளுக்கு (முன் ஆச்ரம) மாதா, பிதாக்களின் மரணத்தில் மட்டும் ஸ்நாநம்.
    6. 88 அடிகளுக்குள் பிணம் (சவம்) இருந்தால், எடுக்கும்வரை, சமைப்பது, சாப்பிடுவது கூடாது.
    7. ஸந்யாசியின் சவமானால் அந்தப் பகுதிக்கே தீட்டுக் கிடையாது.
    8. நகரங்களுக்கு மேற்படி தோஷங்கள் எதுவுமில்லை.
    9. ஸ்நானம் பண்ணமுடியாத அளவிற்கு நோயுள்ள தீட்டுகாரனின் தீட்டுப்போக வேண்டுமானால், தீட்டற்ற ஒருவன் தீட்டுள்ளவனைத் தொட்டுவிட்டு தீர்த்தமாடி பின் தொட்டு தீர்த்தமாடி என பத்து முறை தீர்த்மாடவேண்டும்.
    10. அதுபோல் நோயுள்ள தூர ஸ்த்ரீயை மற்றொருத்தி 12 முறை தொட்டு தீர்த்தமாடி வேறு உடை உடுத்தச் செய்தால் சுத்தி. இரண்டிலும் புண்யாஹவாசனம் முக்கியம்.



    1. ச்ராத்தத்தின் நடுவில் (ச்ராத்த சங்கல்பம் ஆனபின்) தீட்டுத் தெரிந்தால் ச்ராத்தம் முடியும்வரை கர்த்தாவுக்குத் தீட்டில்லை.
    2. வரித்தபின் போக்தா (ச்ராத்த ஸ்வாமி)க்கு தீட்டுத் தெரிந்தால் சாப்பிட்டு முடியும்வரை தீட்டில்லை.
    3. விவாஹத்தில் உத்வாஹ சங்கல்பத்தின் பின் தீட்டுத் தெரிந்தால் சேஷ ஹோமம் வரை தீட்டில்லை.
    4. ஸந்யாசிகளின் மரணத்தினால் அவரின் பங்காளிகளக்குத் தீட்டில்லை, அவப்ருத ஸ்நாநம் மட்டும்.

    மற்ற சில கவனிக்கத் தக்கவை

    • ராஜாங்கத்தால் கொலை தண்டனை விதிக்கப்பட்டவனுக்கு உடனே கர்மா செய்யலாம்.
    • துர் மரணம் செய்து கொண்டவனுக்கு 6 மாதம் கழித்து கர்மா செய்ய வேண்டும் என்பது விதி ஆயினும் 24 நாட்கள் கழித்து செய்வது என்றும் ஒரு விதி உள்ளது.
    • தற்செயலாய் துர்மரணம் அடைவோருக்கு தீட்டு, தர்பணம் முதலியவை உண்டு.
    • தற்கொலை செய்துகொண்டவனுக்கு தீட்டு, தர்பணம் இவை இல்லை.
    • கர்மா செய்பவனுக்கு 11ம் நாள் கர்மாவிற்குப் பின் தீட்டுப் போகும்.
    • கல்யாணமான பெண் இறந்தால் அவள் பிறந்த வீட்டுப் பங்காளிகளுக்கு தீட்டில்லை.
    • பிறப்புத் தீட்டுள்ளவனை 4 நாளைக்கு மேல் தீண்டினால் அதிகம் தோஷமில்லை.
    • ஒரு தீட்டுக் காரன் மற்றொரு தீட்டுக்காரனைத் தொடக் கூடாது.
    • தீட்டுள்ளவன் வீட்டுக்கும் அவன் சாமான்களுக்கும் தீட்டுண்டு.
    • பிரம்மச்சாரிகள் கர்மா செய்தால் அதனுடன் தர்பணம் (உதகதானம்) தனியாக இல்லை.
    • மனைவி கர்பமாக இருக்கும்போது தானம் வாங்குதல், தூரதேச யாத்திரை போதல் கூடாது.
    • சவத்துக்கு முன்னாலும், பக்கவாட்டிலும் போகக் கூடாது.
    • சஞ்சயனம் ஆனபின் துக்கம் விசாரித்தால் ஆசமனம் மட்டும் போதும்.
    • சிராத்த தினத்தன்று துக்கம் விசாரிக்கச் செல்லக் கூடாது.
    • தன் மனைவி கர்பமாய் இருக்கும்போது தாய், தந்தை தவிர மற்றவர்களின் சவத்தை சுமக்கலாகாது.
    • ப்ரம்மச்சாரிகள் தாய் தந்தை சவத்தைத் தவிர மற்வர்கள் சவத்தைச் சுமக்கக்கூடாது.
    • தீட்டுக் காரர்கள் ஆலயத்திற்குள் செல்லக் கூடாது.
    • தீட்டுக்காரர்களை தீட்டில்லாதவர்கள் நமஸ்கரிக்கக் கூடாது. தீட்டுக்காரரும் அப்படியே.
    • ஜனன, மரண தீட்டிலும் ஏகாதசி, துவாதசி விரதம் விடக் கூடாது. உபவாஸம் மட்டும், பூஜை கிடையாது.
    • சாவு தீட்டுக்காரர் மெத்தை போன்றவற்றில் படுக்கக் கூடாது. தினமும் தீர்த்தமாடவேண்டும்.
    • சிசுக்கள் இறந்தால் புதைத்த தினம் முதல்தான் தீட்டு

Sunday 11 December 2022

ஷஷ்டாஷ்டக தோஷம் கண்டறிவது எவ்வாறு?

ஷஷ்டாஷ்டக தோஷம் என்றால் என்ன? ஷஷ்டாஷ்டக தோஷம் கண்டறிவது எவ்வாறு? ஷஷ்டாஷ்டக தோஷம் பாதிப்பு என்ன?


ஷஷ்டாஷ்டக தோஷம் என்றால் என்ன?

வட மொழி சொல்லான ஷஷ்டாஷ்க என்பதற்கு ஒற்றுமை இன்மை என்று தமிழில் பொருள்படும்.

ஷஷ்டாஷ்க தோஷம் என்றால், ஆண் பெண் இராசிக்களின் கோள்கள் அல்லது லக்ன கோள்கள் ஒற்றுமை இல்லா நிலையில் உள்ளன என்பதாகும்.

இராசி அதிபதி பொருத்தம் இல்லாத நிலையும் இந்தகைய தோஷம் எனலாம்.


ஷஷ்டாஷ்டக தோஷம் கண்டறிவது எவ்வாறு?

பெண் ராசியிலிருந்து ஆண் ராசி வரை எண்ணினால்

பெண் ராசிக்கு ஆண் ராசி 6, 8 ஆகவோ அல்லது 8, 6 ஆகவோ வந்தால் சஷ்டாஷ்டக தோஷம் எனப்படும். அதாவது ஒற்றுமை இல்லாத நிலை இருக்கிறது.

இது திருமணம் முடிப்பதற்கு ஒவ்வாத நிலையாகும்.

ஷஷ்டாஷ்டக தோஷம் விதிவிலக்கு


பெண் ராசி பிள்ளை ராசி

மேஷம் கன்னி

தனுசு ரிஷபம்

துலாம் மீனம்

கும்பம் கடகம்

சிம்மம் மகரம்

மிதுனம் விருச்சிகம்

-ஆக இருந்தால் சஷ்டாஷ்டக தோஷம் கிடையாது.


அதே வேளையில் கும்பம் - சிம்மம் என்றால் முற்றிலும் பகை.


ஷஷ்டாஷ்டக தோஷம் பாதிப்பு என்ன?


இத்தகைய தோஷ முரன்பாட்டுடன் ஆண் பெண் இனைந்தால், அந்த தம்பதிகள் மட்டும் இன்றி இரு வீட்டின் மொத்த குடும்பமும் பகை நிலையில் வாழும்.

மேலும் திடீர் விபத்துக்களால் ஆண் அல்லது பெண் பலியாகலாம்.

இந்த தோஷம் இருப்பவர்களை மனம் முடிப்பதால் மன முறிவு ஏற்படாது. ஆனால் வாழ் நாள் முழுவதும் பகை நிலை இருந்து கொண்டே இருக்கும்

Saturday 10 December 2022

திருமண பொருத்தம் -மாமனார் மாமியார் பொருத்தம்

திருமண பொருத்தம் -மாமனார் மாமியார் பொருத்தம் 

3ல் ராகு சனி செவ்வாய் போன்ற கிரகங்கள் இருந்தால் மாமனார் மருமகன் உறவு அப்படியே தாமரை இலை தண்ணீர் போலத்தான் ஏதாவது சுப கிரகங்கள் பார்த்தால் இன்னும் கொஞ்சம் நெருக்கமாகும் 

பெரும்பாலும் மாமனார் வீட்டுக்கு போக மாட்டாங்க வருசம் ஒரு தடவை போவதே அரிது.மாமனார் ஆரோக்கியமாக இருக்க மாட்டார் ..சனி மூன்றில் மாமனார்க்கு வறுமை.குரு அல்லது சுக்கிரன் 3ல் மாமனார் பணக்காரர் செல்வாக்கானவர்…3ல் செவ்வாய் மாமனார் கோபக்காரர் ..3ல் கேது மாமனார் பல சிக்கல் உடையவர் வழக்கு விபத்து சந்திப்பார் விரக்தியானவர்.

 சுபரே அங்கு இருந்தால் 3ஆம் அதிபதி வலுவாக இருந்தா என் மாமனார் போல வருமா என ஊருக்குள் பெருமை பேசும் மருமகன் கிடைப்பார் மருமகள் கிடைப்பாள்.

2ஆம் அதிபதி திசை நடந்து 2ஆம் அதிபதி 12ல் வலுத்து பாவருடன் இருந்தால் மாமனார்க்கு தொடர் விழ்ச்சி…பத்தாம் அதிபதி கெட்டு இருந்தால் மாமியார் சதிகாரியா மாறிடுவாங்க..பத்தில் சுபர் இருந்தால் என்னொட மாமியார் என்னோட அம்மா மாதிரி என்பார்கள்..பத்தில் பாவர் மாமியார்க்கு கேடு..மாமியார் கொடுமை நடக்கும் பத்தாம் அதிபதி 6,8ல் இருந்தால் மாமியார்தான் முதல் எதிரி.

12 ஆம் அதிபதியும் பத்தாம் அதிபதியும் ஒண்ணா இருந்தால் மாமனார் தன்னுடைய தொழிலில் பங்கு தாரராக சேர்த்துக்கொள்வார்…சுகாதிபதி திசை நடந்தால் மாமனார் தன்னுடைய சொத்துக்களில் ஒன்றை மருமகன்/மருமகள் பெயரில் எழுதி வைப்பார்

3ஆம் அதிபதி லக்னாதிபதி ஒன்றாக 1,4,5,7,9,10,11 ஆம் இடங்களில் இருப்பின் மாமனார் மருமகன் எப்போதும் ஒற்றுமையா இருப்பாங்க..

10 ஆம் அதிபதி லக்னாதிபதி ஒன்றாக 1,4,5,7,9,10,11 ஆம் இடங்களில் இருந்தால் மருமகளும் மாமியாரும் ஒற்றுமையா இருப்பாங்க…10 ல் சுக்கிரன் மாமியார் வசதியானவர் அழகானவர் செல்வாக்கு நிறைந்தவர். அழகான பெரிய வீடு இருக்கும்.

லக்னத்தில் சுப கிரகம் இருந்தாலே அதாவது குரு,சுக்கிரன்,புதன்,சந்திரன் இவர்களில் ஒருவர் இருந்தாலே சிரித்த முகம்.மாமனார் மாமியார்க்கு பொதுவாகவே பிடிக்கும்.

லக்னத்தில் சுக்கிரன் உள்ளூரில் அல்லது பக்கத்து தெருவில் மாமனார் வீடு இருக்கும்..உறவில் திருமணம் ஆகி இருக்கும்

Friday 11 November 2022

கோதுமை புல் சாறு

கோதுமை புல்- ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கோதுமை புல் தூள் ஒரு ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் துணைப் பொருளாகும். இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி3, வைட்டமின் பி6, வைட்டமின் பி12 மற்றும் ஃபோலிக் அமிலம், வைட்டமின் ஈ, வைட்டமின் கே, கால்சியம், இரும்புச்சத்து மற்றும் குளோரோபில் உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் அவற்றின் இயற்கையான வடிவங்களில் கிடைக்கின்றன மற்றும் இயற்கையாகவே உடலுக்கு ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. உலகின் முதல் மல்டிவைட்டமின் மற்றும் சூப்பர் உணவு. கோதுமை புல் தூள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, பல நோய்களைத் தடுக்கிறது மற்றும் குணப்படுத்துகிறது. இது கோதுமையின் மிகவும் மென்மையான தளிர்களை பாதுகாப்பாக நீரிழப்பு செய்வதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. செயற்கையான மல்டி வைட்டமின்கள், மல்டி மினரல்கள் மற்றும் பல உடல்நலப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான துணைப் பொருளின் வரம்புகளுக்கு விடைக்காக உலகம் கோதுமை புல் தூளை எதிர்நோக்குகிறது.


நன்மைகள்: பாதுகாப்பானது மற்றும் நீண்ட கால பயன்பாட்டிற்கு பரிந்துரைக்கப்படுகிறது. வயதான எதிர்ப்பு உங்களை இளமையாக வைத்திருக்க உதவுகிறது. நச்சுத்தன்மை குடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். ஆற்றல் மட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. புற்றுநோய் சிகிச்சையை ஆதரிக்கிறது. இரத்த அணுக்களின் ஆரோக்கியத்தையும் ஹீமோகுளோபின் அளவையும் மேம்படுத்துகிறது. தீங்கு விளைவிக்கும் மற்றும் ஈறுகளில் இருந்து பாதுகாக்கிறது. உடலின் துர்நாற்றத்தை நீக்கி சுவாசிக்கவும். ஆரோக்கியமான இரத்த நாளங்கள் மற்றும் இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது.


எப்படி எடுத்துக்கொள்வது: 1 டீஸ்பூன் (2 கிராம்.) பால், பழச்சாறு, மோர் அல்லது தண்ணீரில் கலந்து சுவையான கோதுமைப் புல் சாறு, வெறும் வயிற்றில். நீண்ட கால பயன்பாட்டிற்கு பரிந்துரைக்கப்படுகிறதுமேம்படுத்துகிறது. தீங்கு விளைவிக்கும் மற்றும் ஈறுகளில் இருந்து பாதுகாக்கிறது. உடலின் துர்நாற்றத்தை நீக்கி சுவாசிக்கவும். ஆரோக்கியமான இரத்த நாளங்கள் மற்றும் இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது.

Tuesday 1 November 2022

மணி பிளாண்ட் !!

வறுமையை அதிகரிக்கும் மணி பிளாண்ட் !! மணி பிளாண்ட் செடியை வளர்க்கும் தப்பி தவறி கூட இந்த தவறை செய்யாதீங்க இப்படி செய்தால் வீட்டில் வறுமை மேல் வறுமை ஏற்படும்.


வீட்டில் சில செடிகளை நடுவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.

ஒன்று மணி பிளாண்ட். அதன் பெயருக்கு ஏற்ப இந்த செடியை வீட்டில் நடுவதற்கு பணத்திற்கு பஞ்சம் இருக்காது என்பது நம்பிக்கை.


வீட்டில் வறுமையை அதிகரிக்கும் மணி பிளாண்ட்: இந்த தவறை மட்டும் செய்யாதீங்க


பண பிரச்சினையை கொடுக்கும் மணி பிளாண்ட்

சிலரது வீட்டில் மணி பிளாண்ட் இருந்தாலும் பணப்பிரச்சினை ஏற்படும்.

இதற்கு காரணத்தினை தற்போது தெரிந்து கொண்டு இனி அந்த தவறை செய்யாமல் இருப்பது நலம்.

மணி பிளாண்டை சரியான திசையில் வைக்க வேண்டும்.

பல சமயங்களில் வாஸ்துப்படி தென்கிழக்கு பகுதியில் மணி பிளாண்ட் வைப்பது சிறந்தது.

இது அக்னி மூலை என்றும் அழைக்கப்படுகிறது.

வீட்டில் வறுமையை அதிகரிக்கும் மணி பிளாண்ட்.

தரையில் விழாமல் பார்த்துக் கொள்ளவும்.

மணி பிளாண்டை நடும் போது அதன் இலைகள் தரையில் விழாமல் இருக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

இதற்காக, மணி பிளாண்டின் தண்டு பகுதியை கயிற்றால் உயரமாக தூக்கி கட்டலாம்.


மணி பிளாண்டை வீட்டிற்கு வெளியே வைக்காமல் வீட்டில் வைக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதால் வீட்டில் நேர்மறை ஆற்றல் கிடைக்கும்.

வீட்டிற்குள் நேரடியாக யாரும் பார்க்க முடியாத இடத்தில் செடியை வைக்கவும். மணி பிளாண்டை வீட்டிற்கு வெளியே நட்டால், அதன் நேர்மறையான விளைவை ஏற்படுத்தும்.


வீட்டில் வறுமையை அதிகரிக்கும் மணி பிளாண்ட்.
இந்த தவறை மட்டும் செய்யாதீங்க

மற்றவர்களுக்கு பரிசளிக்க வேண்டாம்

வாடிய மணி பிளாண்டை வீட்டில் வைத்திருப்பதால் பலன் ஏதும் இல்லை. அவ்வாறு செய்வது வறுமையை வீட்டிற்குள் வரவழைக்கும்.

உங்கள் வீட்டில் நிறுவப்பட்ட மணி பிளாண்டை மற்றவர்களுக்கு பரிசளிக்க கூடாது

அவ்வாறு செய்வதால், லட்சுமி வேறொருவரின் வீட்டிற்குச் செல்கிறாள், அதனால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்காது.
மணி பிளான்ட்டை செடியை விட பணத்தை அதிவிரைவாக ஈர்க்கும் சக்தி இந்த செடிக்கு உண்டு. வீட்டில் இந்த செடியை இந்த திசையில் வைத்தால் போதும் நீங்கள் வேண்டாம் என்று சொன்னாலும் செல்வம் உங்கள் வீடு தேடி வரும்..



Wednesday 19 October 2022

தாய் மொழி vs மாநிலங்கள்

தாய் மொழி

தமிழ்நாடு- தமிழ்

கேரளா- மலையாளம்

ஆந்திரா-
தெலுங்கானா- தெலுங்கு.

கர்நாடகா- கன்னடம்.

மகாராஷ்டிரா- மராத்தி.

குஜராத்- குஜராத்தி.

பஞ்சாப்- பஞ்சாபி.

ராஜஸ்தான்- ராஜஸ்தானி, மார்வாரி, மேவாரி.

ஹரியானா-
ஹரியானி.

இமாசலப்பிரதேசம்-
மஹாசு பஹாரி, மண்டேலி,
காங்கிரி, பிலாஸ்புரி, சாம்பேலி.

ஜம்மு-காஷ்மீர்- காஷ்மீரி, டோக்ரி, பாடி, லடாக்கி.

உத்தர்காண்ட்-
கடுவாலி, குமோனி.

உத்திரப்பிரதேசம்- பிரஸ்பாஷா, கரிபோலி, அவதி, கன்னோஜி,போஜ்புரி, பந்தேலி, பகேலி.

பீஹார்- போஜ்புரி, மைதிலி.

ஜார்கண்ட்- சந்தாலி.

சத்தீஸ்கர்- கோர்பா.

மத்தியப் பிரதேசம்- மால்வி,நிமதி, பகேலி.

மேற்கு வங்கம்- வங்காளி.

ஒடிசா- ஒரியா.

வட கிழக்கு மாநிலங்கள்-
அசாமி,
போடோ காரோ, தாமோங், நேபாளி, பங்காளி, காசி, கொக்பராக், மணிப்பூரி.


Tuesday 18 October 2022

காகத்துக்கு சாதம் வைக்கும் பழக்கமும் ஏப்படி வந்தது

தெய்வ சக்தி நம் வீட்டுக்கு வரவேண்டுமானால் ,சின்ன சின்ன உயிர்களும் நம் வீட்டுக்கு வருகை தரவேண்டும்.வீட்டில் குருவி,குளவி கூடுகளை கலைக்காதீர்கள்..நெற்கதிர்களை கிராமத்து வீடுகளில் கட்டி தொங்க விட்டிருப்பார்கள்..குருவிகள் வீட்டுக்குள் வந்து கொத்தி தின்னும்.அவையெல்லாம் தெய்வீக சக்தியை உண்டாக்கத்தான்.

காகத்துக்கு சாதம் வைக்கும் பழக்கமும் அப்படி வந்ததுதான்.நவகிரக தோசமும் இதனால் விலகும்.பறவைகளுக்கு நீரும்,உணவும் வையுங்கள்.தெய்வ சக்தியை பெருக்குங்கள்..!!செல்வவளத்துடன் வாழுங்கள்!!

லக்னம் vs தரிசனம்

மிதுனம் லக்னத்தில் பிறந்தவர்கள் திருப்பதி சென்று வந்தால் பணம் நிறைய சேரும்...அதே போல இவர்கள் திருவண்ணாமலை கிரிவலம் சென்று வந்தால் சொந்த வீடு அமையும்

சிம்மம்,விருச்சிகம் லக்னத்தார் திருச்செந்தூர் சென்று வந்தால் வருமானம் இரட்டிப்பாகும்...தனுசு லக்னத்தாருக்கு இங்கு சென்று வந்தால் வீடு அமையும்.

கன்னி லக்னத்தார் சபரிமலை சென்று வருவது நல்லது

கடகம் ,சிம்மம் லக்னத்தாருக்கு ஆற்றின் கரை யில் இருக்கும் முருகனை கிருத்திகையில் வழிபட்டால் கடன் தீரும்.

மேசம் ,துலாம் லக்னத்தாருக்கு பழமி முருகனையும் ,அடிவாரத்தில் இருக்கும் முருகனையும் ஒரு சேர தரிசிக்க சகல பிரச்சினைகளும் தீரும்.

மகரம் ,கும்பம் லக்னத்தார் ஸ்ரீரங்கம் பெருமாளை வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு விஸ்வரூப தரிசனமாக பார்க்க எல்லா துன்பங்களும் தீர்ந்து ஆரோக்யம் உண்டாகும் பண பிரச்சினை தீரும்.

ரிசபம் லக்னத்தார் மதுரை மீனாட்சியை வெள்ளிக்கிழமை இரவு கால பூஜையை தரிசிக்க லாபம் உண்டு.

மீனம் லக்னத்தார் மலை மீது இருக்கும் முருகன் வழிபாடு சிறப்பு தரும்.

ராசிக்கு சொல்லவில்லை லக்னத்துக்கு சொல்லி இருக்கிறேன்.

Saturday 15 October 2022

உங்க ராசிப்படி நீங்க எப்படி ..

உங்க ராசிப்படி நீங்க எப்படி ..
மிதுனம்,கன்னி,தனுசு,மீனம்

உபய ராசிகள் என்பது மிதுனம்,கன்னி,தனுசு,மீனம் ஆகும்..இவை நான்கும் ராசிக்கட்டத்தில் ஒவ்வொரு மூலையிலும் இருக்கும் ராசிகளாகும்..நான்கு மூலைகளிலும் போய் சந்தில் மாட்டிக்கொள்கின்றன...அது போலவே இந்த ராசியினரும் எப்போதும் அடைபட்டு இருக்கும் குணமுடையவர்.

ஒரு பிரச்சினை என்றால் மனசு கஷ்டமாகி படுத்துக்கொள்வர்.அதிகம் செயல்படாத ராசி.வீடு தான் இவர்களுக்கு உலகம்.அலுவலகம் விட்டால் வீடு.குழந்தைகள் மீது உயிரையே வைத்திருப்பர்.

நான் வாழ்வதே குழந்தைகளுக்காக என்பர்.அடிக்கடி குழப்பத்தில் ஆழ்ந்து விடுவர்.யார் என்ன சொன்னாலும் நம்புவர்.ஏமாந்தும் விடுவர்....வரவு செலவுக்கு இவங்க ஒத்து வர மாட்டாங்க..கடன் இவங்க யாருக்காவது கொடுத்தா திரும்பி வராது....பிஞ்சு மூஞ்சி என்பது இவர்களுக்குதான்.ஆனா சவுண்ட் பலமா இருக்கும்.

இன்னொரு உபய ராசியினரை கல்யாணம் செய்துகிட்டா பிரச்சினை இல்லை..ஆனா சர ராச்யினரை கல்யாணம் செய்துகிட்டா அவங்க என்ன சொல்றாங்களோ அதைதான் கேட்கனும்.மனைவி சொல்லே மந்திரம் என வாழ்வது இவர்கள்தான்.மாமனார் மாமியார்க்கு கட்டுப்பட்ட மாப்பிள்ளை.

..கல்யாணம் வரைக்கும் அம்மா,அக்கா,அண்ணன் தான் தெய்வம்..கல்யாணத்துக்கு அப்புறம் மனைவி,மாமனார் ,மாமியார்தான் தெய்வம் என வாழ்வது இந்த ராசியினர்தான்..பாசக்காரங்க...மென்மையானவங்க..
கடும் சொல் தாங்காதவர்கள்...கடுமையா உழைக்கவும் முடியாது...

மிகப்பெரும் அறிவாளிகள்..அறிவால்தான் சம்பாதிப்பர்.உடல் உழைப்பு ஆகாது.அது இவங்களுக்கு தெரியாது.....நிறைய சம்பாதிக்கும் வித்தை இவர்களுக்குதான் தெரியும்..

.பங்கு வர்த்தகம்,வங்கி பணி,ஆன்மீகம் சார்ந்தவை,பைனான்ஸ்,வியாபாரம் போன்றவற்றில் இவர்களே இருக்கின்றனர்.உட்கார்ந்து சம்பாதிக்கும் எல்லா துறைகளிலும் இவர்களை பார்க்கலாம் ..மாமியார்,மருமகள் சண்டை அடிக்கடி நடப்பது இந்த நான்கு ராசிக்காரங்க வீட்லதான்.

மிதுனம் ராசியினர் மனைவி /கணவன் சொல் மட்டும் கேட்டு நடந்து கொண்டால் எந்த ஆபத்தும் இல்லை.குடும்பம் நல்லாருக்கும்...மாமியாரால் ஆதாயம் உண்டு.மாமியார்,மருமகள் சண்டை ,மாமனார் ,மருமகன் ஈகோ பிரச்சினை அடிக்கடி உருவாகும்.

கன்னி ராசியினர் மனைவி ஆன்மீகம் கடவுள் பக்தி கொண்டவர். நல்லவர்.மாமனார்தான் அடிக்கடி வம்பிழுப்பார்.அம்மா போலவே நல்ல பொண்ணு மனைவியா அமைவாங்க.

தனுசு ராசியினர் மனைவி/கணவர் அறிவாளி.அவர்கள் சொல்படி செயல்படுவது உத்தம பலன் தரும்.அம்மா ஆன்மீகவாதி.மனைவி முற்போக்கு சிந்தனையாளர்.அம்மா ம்னூட நம்பிக்கை எனில் மனைவி எதையும் பகுத்தறிந்து செயல்படுபவர்.

மீனம் ராசியினர் கணவன் /மனைவி கலகலப்பானவர் செல்வாக்கானவர்.உங்கள் கடும் சொல்தான் அடிக்கடி அவரை கடுப்பாக்கும்.மாமனாரால் ஆதாயம் உண்டுமனைவியும் அறிவாளி.அம்மாவும் அறிவாளி..இருவரையும் ஒரே வீட்ல இருந்தா அதை திறமையாக சமாளிப்பதுதான் இவர்களது முக்கிய வேலை

நாம் பிறந்த நட்சத்திரம்தெய்வத்தை வழிபட சிறப்பான நாள்..

நாம் பிறந்த நட்சத்திரம் நாள்தான் நமக்கு பிடித்த தெய்வத்தை வழிபட சிறப்பான நாள்....🙏🙏.சாப்பிட்ட பிறகு கோயிலுக்கு போவது பலன் இல்லை...அதிகாலை வழிபாடே சிறப்பு☀️

அபிஷேகம் செய்ய, செய்ய கருவறையில் மின்னூட்டங்கள்

குலதெய்வ வழிபாடு நம் தந்தை ,தாத்தா,அவரது தந்தை என வருடம்தோறும் அவர்கள் பார்த்து வழிபட்டு அவர்களது சக்தி ,ஆகர்ஷணம்,ஆன்ம சக்தி எல்லாம் அந்த சிலையில் ஏற்றி வைத்திருப்பர்.குலதெய்வத்தை நீங்கள் கண்களால் காணும்போதே உங்கள் கண்கள் வழியாக உங்கள் ஆன்ம சக்தி சிலையோடு கலந்து விடும்.இவ்வாறு முன்னோர் ஆன்ம சக்தி கருங்கலால் ஆன அந்த சுவாமி சிலையில் ஊடுருவி இருப்பதால் அவர்கள் காலமான பின்னரும் அதன் தெய்வீக சக்தி உங்கள் ஆன்மாவோடு கலந்து பலன் கொடுக்க உங்களை வழிநடத்த குலதெய்வத்தை அடிக்கடி காண வேண்டும் வருடம் ஒருமுறையாவது பார்த்து வர உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.திருப்பதி ,திருச்செந்தூர் போன்ர ஸ்தலங்களில் சித்தர்கள்,மகான்கள் ஆசி கிடைக்கிறதோ அது போல உங்கள் வம்சாவழியினர் ஆசி கிடைக்க குலதெய்வம் வழிகாட்டும்.

ஆலய கருவறையில் உள்ள கற்சிலை, பிரபஞ்ச சக்திகளை எல்லாம் ஒருங்கேப் பெற்று அதை ஆலயம் முழுவதும் பரவச் செய்து கொண்டிருப்பதை படித்து இருப்பீர்கள். அபிஷேகம் செய்யப்படும் போது மூலவர் சிலை வெளிப்படுத்தும் சக்தியானது அதாவது அருள் அலைகள் இரட்டிப்பாக உயர்ந்து விடுமாம்.

,தயிர், பால், சந்தனம், தண்ணீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யும்போது மூலவர் சிலையில் அதிக அளவில் மின் கடத்தும் திறன் ஏற்படுவதை குற்றாலம் பராசக்தி கல்லூரி ஆராய்ச்சிக் குழுவினர் சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டு பிடித்தனர். அபிஷேகம் செய்ய, செய்ய கருவறையில் உள்ள காற்று மண்டலத்தில் எதிர் மின்னூட்டங்கள் அதிகரிப்பதையும் கண்டு பிடித்தனர்.

அபிஷேகம் காரணமாக கருவறையில் உள்ள காற்றில் அதிக ஈரப்பதம் இருக்கும். ஈரப்பதத்தில் ஒளி வேகம் அதிகமாக இருக்கும். அதனால்தான் அபிஷேகத்தின் போதும் தீபம் காட்டும்போதும் கருவறை காற்று மண்டலம் அயனியாக்கப்பட்ட மூலக்கூறுகளுடன் வெளியில் வருகிறது. அது பக்தர்களுக்கு உள்ளத்தில் பலத்தை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

திருமஞ்சனம்,பால்,தயிர்,இளநீர்,சந்தனம்,கரும்புசாறு ,பன்னீர்,விபூதி என 16 வித அபிசேக பொருட்களால் அபிசேகம் செய்து ,புது ஆடை அணிவித்து நெய்தீபம் ஏற்றி உங்கள் குலதெய்வத்தை வழிபடவும்.சர்க்கரை பொங்கல் வைத்து நைவேத்யம் செய்யவும்.சர்க்கரை பொங்கலை அங்கு வருவோர்க்கு பிரசாதமாக கொடுக்கவும்.

பெண் தெய்வமாக இருப்பின் பெளர்ணமி வழிபாடு மிக சிறப்பு.ஆண் தெய்வம் அமாவாசை நல்லது ...பெரும்பாலும் பெளர்னமி இரவில் செய்யப்படும் பூஜைக்கு அதிக வலிமை உண்டு.சித்திரா பெளர்ணமி ,வைகாசி விசாகம் ,ஆடி அமாவாசை,ஆடி வெள்ளி,ஆவணி அவிட்டம்,புரட்டாசி அமாவாசை,தை அமாவாசை ,பங்குனி உத்திரம் நாட்கள் எல்லாம் விசேசமானவை.உங்கள் ஜென்ம நட்சத்திர வழிபாடு மிக சிறப்பு.

சொந்தமாக வீடு வாங்க முடியவில்லை நாம் எல்லாம் சொந்த வீடு எங்கே வாங்க போகிறோம் என நினைக்கவே வேண்டாம்

சொந்தமாக வீடு வாங்க முடியவில்லை நாம் எல்லாம் சொந்த வீடு எங்கே வாங்க போகிறோம் என நினைக்கவே வேண்டாம் .உங்கள் சொந்த வீடு எப்படி இருக்க வேண்டும் அதில் எத்தனை அறைகள் இருக்க வேண்டும் முகப்பு எப்படி இருக்கனும் வீட்டின் பெயர் என்ன என்ன நிறத்தில் பெயிண்ட் என நுணுக்கமாக யோசித்து கொண்டே இருங்கள் .நீங்கள் நினைத்தது போலவே அமையும் .ஒரு நாள் சொந்த வீட்டில் வசிப்பீர்கள்.

வருமானம் இல்லை சேமிப்பு இல்லை என துவள வேண்டாம் தினசரி அலது மாதம் எவ்வளவு தொகை வேண்டும் என பெரிய தொகையை கற்பனை செய்யுங்கள் அதை எப்படி பயனுள்ளதாக செலவழிக்க வேண்டும் முதலீடு செய்ய வேண்டும் பெருக செய்ய வேண்டும் என்பதை பற்றி தினசரி இரவு தூங்கும் முன் பத்து நிமிடம் திட்டமிடுங்கள் 

அந்த தொகை நிச்சயம் வந்தடையும் .இது பேராசை அல்ல.பெரும் பணத்தை நிர்வகிக்க உங்கள் மனம் முதலில் தயாராக இருக்க வேண்டும் அதன் பின்பே இறையருள் உங்களுக்கு அதனை வழங்குகிறது தயாராக இல்லாதவரிடத்தில் பெரும் பணம் வந்தாலும் தங்குவதில்லை.

பறவைகளுக்கு நீரும்,உணவும் வையுங்கள்.தெய்வ சக்தியை பெருக்குங்கள்..!!

தெய்வ சக்தி நம் வீட்டுக்கு வரவேண்டுமானால் ,சின்ன சின்ன உயிர்களும் நம் வீட்டுக்கு வருகை தரவேண்டும்.வீட்டில் குருவி,குளவி கூடுகளை கலைக்காதீர்கள்..நெற்கதிர்களை கிராமத்து வீடுகளில் கட்டி தொங்க விட்டிருப்பார்கள்..குருவிகள் வீட்டுக்குள் வந்து கொத்தி தின்னும்.அவையெல்லாம் தெய்வீக சக்தியை உண்டாக்கத்தான்.

காகத்துக்கு சாதம் வைக்கும் பழக்கமும் அப்படி வந்ததுதான்.நவகிரக தோசமும் இதனால் விலகும்.பறவைகளுக்கு நீரும்,உணவும் வையுங்கள்.தெய்வ சக்தியை பெருக்குங்கள்..!!செல்வவளத்துடன் வாழுங்கள்!!

லக்னம் vs வழிபாடு

மிதுனம் லக்னத்தில் பிறந்தவர்கள் திருப்பதி சென்று வந்தால் பணம் நிறைய சேரும்...அதே போல இவர்கள் திருவண்ணாமலை கிரிவலம் சென்று வந்தால் சொந்த வீடு அமையும்

சிம்மம்,விருச்சிகம் லக்னத்தார் திருச்செந்தூர் சென்று வந்தால் வருமானம் இரட்டிப்பாகும்...தனுசு லக்னத்தாருக்கு இங்கு சென்று வந்தால் வீடு அமையும்.

கன்னி லக்னத்தார் சபரிமலை சென்று வருவது நல்லது

கடகம் ,சிம்மம் லக்னத்தாருக்கு ஆற்றின் கரை யில் இருக்கும் முருகனை கிருத்திகையில் வழிபட்டால் கடன் தீரும்.

மேசம் ,துலாம் லக்னத்தாருக்கு பழமி முருகனையும் ,அடிவாரத்தில் இருக்கும் முருகனையும் ஒரு சேர தரிசிக்க சகல பிரச்சினைகளும் தீரும்.

மகரம் ,கும்பம் லக்னத்தார் ஸ்ரீரங்கம் பெருமாளை வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு விஸ்வரூப தரிசனமாக பார்க்க எல்லா துன்பங்களும் தீர்ந்து ஆரோக்யம் உண்டாகும் பண பிரச்சினை தீரும்.

ரிசபம் லக்னத்தார் மதுரை மீனாட்சியை வெள்ளிக்கிழமை இரவு கால பூஜையை தரிசிக்க லாபம் உண்டு.

மீனம் லக்னத்தார் மலை மீது இருக்கும் முருகன் வழிபாடு சிறப்பு தரும்.

ராசிக்கு சொல்லவில்லை லக்னத்துக்கு சொல்லி இருக்கிறேன்.

Wednesday 5 October 2022

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஊர்கள் மற்றும் பெயர் கராரணகள்.

1)உக்கடம்= புக்கிடம்(பாலகாட்டு காணவாய்க்கு புகும் இடம்)
2) காரைமரம் நிறைந்த நீர் மடை காரமடை
கரடி இறங்கும் மடை கரடிமடை
அற்று வெள்ளத்தில் முதலை வந்தால் முதலைமடை
ஈட்டிமரம் நிறை மடை எட்டிமடை

3) கோவை கோட்டை இருந்த இடம் கோட்டை மேடு & கோட்டை ஈஸ்வரன் கோவில்
4) பாலகாட்டு கணவாய்க்கு மாற்றுவழி கணுவாய்
5) சின்ன நீர் தடாகம்+ பெரிய நீர
தடாகம் உள்ள ஊர் தடாகம்
6) அனுமனுக்கு வாவி தோண்டி சுப்பிரமணியர் கோவில் அனுவாவி சுப்பிரமணிய கோவில்
7) சிங்க பெருமாள் மற்றும் உலகளந்த பெருமாள் அக்ரகாரம் நிறைந்த ஊர் சிங்காநல்லூர்
8)வெள்ளம் நிறைந்த கிணறு உள்ள பகுதி வெள்ளகிணறு
9) பாலைமரம் நிறைந்த மலை பாலமலை
10) மருதமரம் நிறைந்த மலை மருதமலை
11) மதுரை போல் பழமையான விருத்தீஸ்வரர் அலயம் கொணடது வடமதுரை
12) வள்ளி மலை போல் வடக்கு வள்ளி தேவானை கோயில் உள்ள இடம் வடவள்ளி
13) சோழன் வல்லவன் கட்டிய குளம் வல்லன்குளம்
14) வடஇந்தியர் எழைகளுக்கு உணவு அளித்த இடம் லங்கர்கானா(இன்று பூமார்கெட்)
15) இடிந்த கரை கண்மாய்/ஓடை உள்ள ஊர் இடிகரை
16) வீரகேரளன் எனும் சேரமன்னன் எற்படுத்திய ஊர் வீரகேரளம்
17) குறுஞ்சி நிலத்து ஊர்+குளம் குறுச்சி& குறுச்சி குளம்
18)கரிகாலன்பட்டிஸ்வரர் பேரூர்
இப்போது பேரூர்
19) வெள்ளியங்கிரி ஆண்டவர் பூண்டி இப்போது பூண்டி
20) ஓன்பது (நவ) ஊர் + புதூர் நவாவூர்புதூர்
21)ஒக்கலிக மக்கள் வாழ்ந்த வழிபாடு நடத்திய பகுதி நஞ்சுடாபுரம், நஞ்சே கவுண்டர் பூதூர், காசி நஞ்சே கவுண்டர் பூதூர்
22) உடையான் பாளையம்
உடையார்மக்கள் வாழ்ந்த வழிபாடு நடத்திய பகுதி
23) கவுண்டர் உரித்தான பாளைய ஜமீன் கவன்டம்
மக்கள் வாழ்ந்த வழிபாடு நடத்திய
பகுதி
24) நாயகர்
பாளைய ஜமீன் நாக்கன்பாளயங்கள்
25) பாண்டிய மன்னர்கள் காலத்தில் வந்த ஊர் வீரபாண்டி, வீரபாண்டிபுதூர்
26) கிராமத்தே மணியத்துக்கு கொடுத்து பாளைய நிலம் மணியகாரபாளைய
27) வெட்டுவ / வெட்டைகார கடவுள்
மக்கள் வாழ்ந்த வழிபாடு நடத்திய
ஊர் வெட்டைகார பூதூர்
28) எல்லா மக்களும் உபயோகிக்க குளம் சர்கார் சாமகுளம், ஆக்கிரகாரத்து சாமகுளம்
29) தேக்கு மரம் நிறைந்த ஊர் தேக்கம் பட்டி
30) நெய்யல் ஆற்றின் ஆலமரம் துறை ஆலந்துறை
31) கல் நிறைந்த ஆற்றின் ஊர் கல்லார்
32)நெல்லிமரம் நிறைந்த பவானி நதியின் துறை நெல்லிதுறை
33) அத்திமரம் நிறை பவானி நதி கடவு அத்திகடவு
34) ஓடம் ஒதுங்கும் துறை ஒடான் துறை

Friday 30 September 2022

பாம்பை அடித்தால் சர்ப்ப தோஷம் ஏற்படும் என்பது உண்மையா..! பின்தொடரும் வம்ச பாவங்கள்...

பாம்பை அடிப்பவர்களுக்கு சர்ப்ப தோஷம் ஏற்படும் என்பது தவறான கூற்றாகும். அப்படி பார்த்தால் நிறைய பேர் பாம்பை பார்த்திருக்க கூட மாட்டார்கள். ஆனால் அவர்களுக்கும் சர்பம் சம்பந்தப்பட்ட தோஷங்கள் ஜாதகத்தில் காணப்படும்.

எப்போதோ, என்றோ, முன்னோர்களோ அல்லது நீங்களோ செய்த பாவம் உங்களையும், உங்களுடைய வம்சத்தையும் பின் தொடர்வதாக கூறப்படுகிறது.இதில் சில விஷயங்களை செய்யும் பொழுது சர்ப்ப தோஷம் உண்டாகிறது அவை என்னென்ன? சர்ப்ப தோஷம் எதனால் உண்டாகிறது? மேலும் தீயை அணைத்தால் இந்த தோஷம் ஏற்படும் என்று கூறுவது உண்மையா? அது என்ன தோஷம்? என்பது போன்ற அரிய ஆன்மீக தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பாம்பை அடித்தால் சர்ப்ப தோஷம் ஏற்படும் என்பது உண்மையா..! பின்தொடரும் வம்ச பாவங்கள்...

HoroscopeAstrologyHinduism
4 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
10SHARES
Follow us on Google News

பாம்பை அடிப்பவர்களுக்கு சர்ப்ப தோஷம் ஏற்படும் என்பது தவறான கூற்றாகும். அப்படி பார்த்தால் நிறைய பேர் பாம்பை பார்த்திருக்க கூட மாட்டார்கள். ஆனால் அவர்களுக்கும் சர்பம் சம்பந்தப்பட்ட தோஷங்கள் ஜாதகத்தில் காணப்படும்.

எப்போதோ, என்றோ, முன்னோர்களோ அல்லது நீங்களோ செய்த பாவம் உங்களையும், உங்களுடைய வம்சத்தையும் பின் தொடர்வதாக கூறப்படுகிறது.

இதில் சில விஷயங்களை செய்யும் பொழுது சர்ப்ப தோஷம் உண்டாகிறது அவை என்னென்ன? சர்ப்ப தோஷம் எதனால் உண்டாகிறது? மேலும் தீயை அணைத்தால் இந்த தோஷம் ஏற்படும் என்று கூறுவது உண்மையா? அது என்ன தோஷம்? என்பது போன்ற அரிய ஆன்மீக தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பூமாதேவியின் சாபம்

பாம்பை அடித்தால் சர்ப்ப தோஷம் ஏற்படும் என்பது உண்மையா..! பின்தொடரும் வம்ச பாவங்கள்... | Astrology Tomorrow Today Horoscope Today Rasipalan

பத்தில் ஒருவருக்கு கட்டாயம் ஜாதகத்தில் சர்ப்பம் சம்பந்தப்பட்ட சர்ப்ப தோஷங்கள் இருப்பதை பார்க்க முடிகிறது. இவை ஏன் ஏற்படுகிறது? பொறாமையால் அடுத்தவர்களின் குடியை கெடுப்பது, தம்பதிகளை பிரிப்பது, கூலியை கொடுக்காமல் ஏமாற்றுவது, பெண்களை ஏமாற்றுவது, திருடுவது, வைத்தியம் தெரியாமல் பொய் வைத்தியம் செய்வது, வதந்தி பரப்புவது, கலப்படம் செய்வது, சொத்தை அபகரிப்பது, பசு வதை செய்வது, இயற்கையை சீரழிப்பது, நோயை தேவையில்லாமல் பரப்புவது, கோவில் சொத்தின் மீது ஆசைபடுவது, பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றுவது போன்ற விஷயங்கள் செய்பவர்களுக்கு அவர்களுடைய சந்ததியினருக்கும் கூட பாவத்தில் பங்கு கிடைக்கும். அந்த வகையில் சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் பின் தொடர்கிறது.

ராகு, கேது ஆகிய இரண்டு பாவ கிரகங்களும் உங்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும். இவர்களை வணங்கும் பொழுது செய்த பாவத்திலிருந்து விமோசனம் கிடைக்கிறது. தீயை அல்லது தீப்பிடித்துள்ள பொருட்களை கீழே தரையில் போட்டு மிதிக்க கூடாது. இவ்வாறு போட்டு மிதிப்பதால் பூமி தோஷம் ஏற்படுகிறது.பூமாதேவியை அவமதிக்கும் செயலாக இவை பார்க்கப்படுவதால் பூமாதேவியின் சாபத்தை பெற்று, அவர்களுக்கு மனை தோஷம் உண்டாகிறது. இதனால் அவர்களுக்கும், அவர்களுடைய வம்சத்திற்கும் பூமி, மனை சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும். சொந்த வீடு கட்டுவதில் காலதாமதம் ஏற்படும். சிலருக்கு அந்த பாக்கியமே கிடைக்காமல் கூட போகும் வாய்ப்பு உண்டு என்று எச்சரிக்கிறது ஜோதிடம்ராகு, கேது தோஷம் ஏற்படுபவர்களுக்கு பரம்பரை பரம்பரையாக செய்த பாவங்களும் பின்தொடர்வதாக நம்பப்படுகிறது. இதற்கு காரணம் ராகு, கேது இரண்டும் மனிதனுடைய குரோமோசோம்களின் கலவையாக கருதப்படுகிறது.

23 குரோமோசோம்கள் தாயிடம் இருந்தும், 23 குரோமோசோம் தந்தையிடம் இருந்தும் நமக்கு கிடைக்கப் பெறுகின்றன. இந்த 46 குரோமோசோம்களும் உயரம், தோல், தலைமுடி, கண் விழிகள், பேச்சாற்றல், தோற்றம், உடல் எடை, பரம்பரை வியாதி, திறமை ஆகியவற்றை நிர்ணயிக்கிறதுஇவை ராகு, கேது ஆகிய ரெண்டு நிழல் கிரகங்களிடம் சிக்கி 33 ஆண்டுகள் தோஷத்தின் பலன்களை அனுபவித்து பின்னர் நிவர்த்தியாகும் என்கிறது ஜோதிடம், எனவே கூடுமானவரை எவருக்கும் பாவம் செய்யாமல், யாரையும் ஏமாற்றாமல், நல்லவையை மட்டும் செய்து நன்மைகளை அனுபவிப்போம்

Monday 26 September 2022

புரட்டாசிமாதம்...

புரட்டாசி எமனின் கோரைப்பல் மாதம்.எமன் அதிக உயிர்களை அறுவடை செய்யும் மாதம்..துலாம் ராசி லக்னத்தார் கவனம்...சிலர் பதவி இழப்பர் சிலர் திடீர்னு கடனாள் நோயாளி ஆகபோகிறார்கள்.புரட்டாசி முடியும் வரை புதிய முதலீடு வேண்டாம்.அதிகமான இருதய நோயாளிகளை உண்டாக்கும் மாதம்....வயதானவர்கள் அவசியம் ஜாக்கிரதையா இருக்கனும்

அதிகம் கோபப்பட்டால் அதிக வருத்தப்பட்டால் இதயம் தன் பணியை நிறுத்தி விடும் என்பதை மனதில் கொள்ளவும் ..இதயத்துக்கு இந்த மாதம் அதிக வலு இல்லை...

Wednesday 21 September 2022

மகாளய பட்சம் 15 திதி தர்ப்பணத்திற்கான பலன்கள்:

முதல் நாள் - பிரதமை - பணம் சேரும்.
2ஆம் நாள் - துவிதியை - ஒழுக்கமான குழந்தைகள் பிறக்கும்
3ஆம் நாள் - திரிதியை - நினைத்தது நிறைவேறும்
4ஆம் நாள் - சதுர்த்தி - பகைவர்களிடமிருந்து தப்பித்தல்
5ஆம் நாள் - பஞ்சமி - சொத்து சேரும்
6ஆம் நாள் - சஷ்டி - புகழ் வந்து சேரும்
7ஆம் நாள் - சப்தமி - பதவி பெறலாம்
8ஆம் நாள் - அஷ்டமி - சமயோசித புத்தி பெறலாம்
9ஆம் நாள் - நவமி - பெண் குழந்தைகள் பிறக்கும், திருமண தடை நீங்கும்.
10ஆம் நாள் - தசமி - நீண்ட நாள் ஆசை நிறைவேறும்

11ஆம் நாள் - ஏகாதசி - கல்வி, கலை வளர்ச்சி, விளையாட்டில் திறன் சிறக்கும்
12ஆம் நாள் - துவாதசி - நகைகள், ஆடைகள் சேரும்
13ஆம் நாள் - திரயோதசி - விவசாயம் செழிக்கும், பசுக்கள் விருத்தியாகும், ஆயுள், அரோக்கியம் கூடும்
14ஆம் நாள் - சதுர்த்தசி - பாவம் நீங்கி, தலைமுறைகளுக்கு நன்மை சேரும்.
15ஆம் நாள் - மகாளய அமாவாசை - முன் சொன்ன அத்தனை பலன்களும் கிடைக்கும்.

Friday 15 July 2022

அறுபதாம் கல்யாணம் ஏன் எப்படி செய்யவேண்டும் தெரியுமா?

குடும்ப தலைவருக்கு 60 வயது அல்லது 60 ஆண்டுகள் மற்றும் தமிழ் வருட சுழற்சியை கடந்து 61-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பது ஒரு வரமாக கருதுகின்றனர். இதனாலேயே 61-ஆம் வயதில் அந்த ஆண் சஷ்டியப்தபூர்த்தி செய்து கொள்ளும் சம்பிரதாயம் போற்றப்படுகிறது.
வயதான தங்களின் பெற்றோர்களின் திருமணத்தை அவர்களின் பிள்ளைகள், பேரக் குழந்தைகள் தற்போது காணும் பாக்கியத்தையும், அதனால் ஏற்படும் மகிழ்ச்சியையும் மற்றும் அவர்களின் சுற்றமும், நட்பும் வயதில் மூத்த தம்பதிகளின் ஆசிகளை பெற்று நலம் பெறவும் இந்த  சஷ்டியப்தபூர்த்தி சடங்கை செய்கின்றனர். 
 
சஷ்டியப்தபூர்த்தி சடங்கு செய்வதற்கு அனுபவம் வாய்ந்த வேதியரிடம் நல்ல நாள், நேரம் ஆகியவற்றை குறித்து கொள்வது முறையான தொடக்கம் ஆகும். இச்சடங்கை கோயிலிலோ, திருமண மண்டபங்களிலோ அல்லது உங்கள் வீட்டிலோ செய்து கொள்ளலாம். பிறகு அந்த  தம்பதிகளின் பிள்ளைகள் உறவினர்களையும், நண்பர்களையும் முறைப்படி சென்று தங்கள் பெற்றோரின் சஷ்டியப்தபூர்த்தி அல்லது மணிவிழாவிற்கு அழைக்க வேண்டும். 
 
சஷ்டியப்தபூர்த்தி செய்யும் நாள் அன்று அந்த வயதான தம்பதிகளுக்கு அவர்களின் திருமணத்தின் போது செய்த சடங்குகளை வேதியரின் அறிவுறுத்தலின் படி, குலதெய்வ பூஜை செய்த பின்பு கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், ஆயுஷ் ஹோமம், அமிர்த ம்ரித்துஞ்சய ஹோமம்,  தன்வந்திரி ஹோமம் முதலிய ஹோமங்கள் செய்யப்பட்டு, கலச பூஜை செய்யப்படும். பிறகு முகூர்த்த நேரத்தில் குடும்பத்தின் 61 வயதை தொடும் ஆண்மகனான மணமகன்புது தாலியை தனது மனைவியின் கழுத்தில் கட்டி சஷ்டியப்தபூர்த்தி சடங்கை நிறைவு செய்வர். 
 
நமது பெற்றோருக்கு சஷ்டியப்பூர்த்தி சடங்கை செய்வதால் அவர்கள் தங்களின் திருமண வாழ்க்கை காலத்தில் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் நீங்கி நன்மைகள் ஏற்படுகின்றன. மேலும் ஹோமங்களின் பலன்களால் அத்தம்பதியருக்கு நோய், ஆரோக்கிய குறைவு  ஏற்படுவதை தடுத்து, நீண்ட ஆயுளையும், உடல் மற்றும் மன பலத்தையும், அவரின் மனைவிக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியத்தை தருகிறது.