jaga flash news

Wednesday 19 October 2022

தாய் மொழி vs மாநிலங்கள்

தாய் மொழி

தமிழ்நாடு- தமிழ்

கேரளா- மலையாளம்

ஆந்திரா-
தெலுங்கானா- தெலுங்கு.

கர்நாடகா- கன்னடம்.

மகாராஷ்டிரா- மராத்தி.

குஜராத்- குஜராத்தி.

பஞ்சாப்- பஞ்சாபி.

ராஜஸ்தான்- ராஜஸ்தானி, மார்வாரி, மேவாரி.

ஹரியானா-
ஹரியானி.

இமாசலப்பிரதேசம்-
மஹாசு பஹாரி, மண்டேலி,
காங்கிரி, பிலாஸ்புரி, சாம்பேலி.

ஜம்மு-காஷ்மீர்- காஷ்மீரி, டோக்ரி, பாடி, லடாக்கி.

உத்தர்காண்ட்-
கடுவாலி, குமோனி.

உத்திரப்பிரதேசம்- பிரஸ்பாஷா, கரிபோலி, அவதி, கன்னோஜி,போஜ்புரி, பந்தேலி, பகேலி.

பீஹார்- போஜ்புரி, மைதிலி.

ஜார்கண்ட்- சந்தாலி.

சத்தீஸ்கர்- கோர்பா.

மத்தியப் பிரதேசம்- மால்வி,நிமதி, பகேலி.

மேற்கு வங்கம்- வங்காளி.

ஒடிசா- ஒரியா.

வட கிழக்கு மாநிலங்கள்-
அசாமி,
போடோ காரோ, தாமோங், நேபாளி, பங்காளி, காசி, கொக்பராக், மணிப்பூரி.


Tuesday 18 October 2022

காகத்துக்கு சாதம் வைக்கும் பழக்கமும் ஏப்படி வந்தது

தெய்வ சக்தி நம் வீட்டுக்கு வரவேண்டுமானால் ,சின்ன சின்ன உயிர்களும் நம் வீட்டுக்கு வருகை தரவேண்டும்.வீட்டில் குருவி,குளவி கூடுகளை கலைக்காதீர்கள்..நெற்கதிர்களை கிராமத்து வீடுகளில் கட்டி தொங்க விட்டிருப்பார்கள்..குருவிகள் வீட்டுக்குள் வந்து கொத்தி தின்னும்.அவையெல்லாம் தெய்வீக சக்தியை உண்டாக்கத்தான்.

காகத்துக்கு சாதம் வைக்கும் பழக்கமும் அப்படி வந்ததுதான்.நவகிரக தோசமும் இதனால் விலகும்.பறவைகளுக்கு நீரும்,உணவும் வையுங்கள்.தெய்வ சக்தியை பெருக்குங்கள்..!!செல்வவளத்துடன் வாழுங்கள்!!

லக்னம் vs தரிசனம்

மிதுனம் லக்னத்தில் பிறந்தவர்கள் திருப்பதி சென்று வந்தால் பணம் நிறைய சேரும்...அதே போல இவர்கள் திருவண்ணாமலை கிரிவலம் சென்று வந்தால் சொந்த வீடு அமையும்

சிம்மம்,விருச்சிகம் லக்னத்தார் திருச்செந்தூர் சென்று வந்தால் வருமானம் இரட்டிப்பாகும்...தனுசு லக்னத்தாருக்கு இங்கு சென்று வந்தால் வீடு அமையும்.

கன்னி லக்னத்தார் சபரிமலை சென்று வருவது நல்லது

கடகம் ,சிம்மம் லக்னத்தாருக்கு ஆற்றின் கரை யில் இருக்கும் முருகனை கிருத்திகையில் வழிபட்டால் கடன் தீரும்.

மேசம் ,துலாம் லக்னத்தாருக்கு பழமி முருகனையும் ,அடிவாரத்தில் இருக்கும் முருகனையும் ஒரு சேர தரிசிக்க சகல பிரச்சினைகளும் தீரும்.

மகரம் ,கும்பம் லக்னத்தார் ஸ்ரீரங்கம் பெருமாளை வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு விஸ்வரூப தரிசனமாக பார்க்க எல்லா துன்பங்களும் தீர்ந்து ஆரோக்யம் உண்டாகும் பண பிரச்சினை தீரும்.

ரிசபம் லக்னத்தார் மதுரை மீனாட்சியை வெள்ளிக்கிழமை இரவு கால பூஜையை தரிசிக்க லாபம் உண்டு.

மீனம் லக்னத்தார் மலை மீது இருக்கும் முருகன் வழிபாடு சிறப்பு தரும்.

ராசிக்கு சொல்லவில்லை லக்னத்துக்கு சொல்லி இருக்கிறேன்.

Saturday 15 October 2022

உங்க ராசிப்படி நீங்க எப்படி ..

உங்க ராசிப்படி நீங்க எப்படி ..
மிதுனம்,கன்னி,தனுசு,மீனம்

உபய ராசிகள் என்பது மிதுனம்,கன்னி,தனுசு,மீனம் ஆகும்..இவை நான்கும் ராசிக்கட்டத்தில் ஒவ்வொரு மூலையிலும் இருக்கும் ராசிகளாகும்..நான்கு மூலைகளிலும் போய் சந்தில் மாட்டிக்கொள்கின்றன...அது போலவே இந்த ராசியினரும் எப்போதும் அடைபட்டு இருக்கும் குணமுடையவர்.

ஒரு பிரச்சினை என்றால் மனசு கஷ்டமாகி படுத்துக்கொள்வர்.அதிகம் செயல்படாத ராசி.வீடு தான் இவர்களுக்கு உலகம்.அலுவலகம் விட்டால் வீடு.குழந்தைகள் மீது உயிரையே வைத்திருப்பர்.

நான் வாழ்வதே குழந்தைகளுக்காக என்பர்.அடிக்கடி குழப்பத்தில் ஆழ்ந்து விடுவர்.யார் என்ன சொன்னாலும் நம்புவர்.ஏமாந்தும் விடுவர்....வரவு செலவுக்கு இவங்க ஒத்து வர மாட்டாங்க..கடன் இவங்க யாருக்காவது கொடுத்தா திரும்பி வராது....பிஞ்சு மூஞ்சி என்பது இவர்களுக்குதான்.ஆனா சவுண்ட் பலமா இருக்கும்.

இன்னொரு உபய ராசியினரை கல்யாணம் செய்துகிட்டா பிரச்சினை இல்லை..ஆனா சர ராச்யினரை கல்யாணம் செய்துகிட்டா அவங்க என்ன சொல்றாங்களோ அதைதான் கேட்கனும்.மனைவி சொல்லே மந்திரம் என வாழ்வது இவர்கள்தான்.மாமனார் மாமியார்க்கு கட்டுப்பட்ட மாப்பிள்ளை.

..கல்யாணம் வரைக்கும் அம்மா,அக்கா,அண்ணன் தான் தெய்வம்..கல்யாணத்துக்கு அப்புறம் மனைவி,மாமனார் ,மாமியார்தான் தெய்வம் என வாழ்வது இந்த ராசியினர்தான்..பாசக்காரங்க...மென்மையானவங்க..
கடும் சொல் தாங்காதவர்கள்...கடுமையா உழைக்கவும் முடியாது...

மிகப்பெரும் அறிவாளிகள்..அறிவால்தான் சம்பாதிப்பர்.உடல் உழைப்பு ஆகாது.அது இவங்களுக்கு தெரியாது.....நிறைய சம்பாதிக்கும் வித்தை இவர்களுக்குதான் தெரியும்..

.பங்கு வர்த்தகம்,வங்கி பணி,ஆன்மீகம் சார்ந்தவை,பைனான்ஸ்,வியாபாரம் போன்றவற்றில் இவர்களே இருக்கின்றனர்.உட்கார்ந்து சம்பாதிக்கும் எல்லா துறைகளிலும் இவர்களை பார்க்கலாம் ..மாமியார்,மருமகள் சண்டை அடிக்கடி நடப்பது இந்த நான்கு ராசிக்காரங்க வீட்லதான்.

மிதுனம் ராசியினர் மனைவி /கணவன் சொல் மட்டும் கேட்டு நடந்து கொண்டால் எந்த ஆபத்தும் இல்லை.குடும்பம் நல்லாருக்கும்...மாமியாரால் ஆதாயம் உண்டு.மாமியார்,மருமகள் சண்டை ,மாமனார் ,மருமகன் ஈகோ பிரச்சினை அடிக்கடி உருவாகும்.

கன்னி ராசியினர் மனைவி ஆன்மீகம் கடவுள் பக்தி கொண்டவர். நல்லவர்.மாமனார்தான் அடிக்கடி வம்பிழுப்பார்.அம்மா போலவே நல்ல பொண்ணு மனைவியா அமைவாங்க.

தனுசு ராசியினர் மனைவி/கணவர் அறிவாளி.அவர்கள் சொல்படி செயல்படுவது உத்தம பலன் தரும்.அம்மா ஆன்மீகவாதி.மனைவி முற்போக்கு சிந்தனையாளர்.அம்மா ம்னூட நம்பிக்கை எனில் மனைவி எதையும் பகுத்தறிந்து செயல்படுபவர்.

மீனம் ராசியினர் கணவன் /மனைவி கலகலப்பானவர் செல்வாக்கானவர்.உங்கள் கடும் சொல்தான் அடிக்கடி அவரை கடுப்பாக்கும்.மாமனாரால் ஆதாயம் உண்டுமனைவியும் அறிவாளி.அம்மாவும் அறிவாளி..இருவரையும் ஒரே வீட்ல இருந்தா அதை திறமையாக சமாளிப்பதுதான் இவர்களது முக்கிய வேலை

நாம் பிறந்த நட்சத்திரம்தெய்வத்தை வழிபட சிறப்பான நாள்..

நாம் பிறந்த நட்சத்திரம் நாள்தான் நமக்கு பிடித்த தெய்வத்தை வழிபட சிறப்பான நாள்....🙏🙏.சாப்பிட்ட பிறகு கோயிலுக்கு போவது பலன் இல்லை...அதிகாலை வழிபாடே சிறப்பு☀️

அபிஷேகம் செய்ய, செய்ய கருவறையில் மின்னூட்டங்கள்

குலதெய்வ வழிபாடு நம் தந்தை ,தாத்தா,அவரது தந்தை என வருடம்தோறும் அவர்கள் பார்த்து வழிபட்டு அவர்களது சக்தி ,ஆகர்ஷணம்,ஆன்ம சக்தி எல்லாம் அந்த சிலையில் ஏற்றி வைத்திருப்பர்.குலதெய்வத்தை நீங்கள் கண்களால் காணும்போதே உங்கள் கண்கள் வழியாக உங்கள் ஆன்ம சக்தி சிலையோடு கலந்து விடும்.இவ்வாறு முன்னோர் ஆன்ம சக்தி கருங்கலால் ஆன அந்த சுவாமி சிலையில் ஊடுருவி இருப்பதால் அவர்கள் காலமான பின்னரும் அதன் தெய்வீக சக்தி உங்கள் ஆன்மாவோடு கலந்து பலன் கொடுக்க உங்களை வழிநடத்த குலதெய்வத்தை அடிக்கடி காண வேண்டும் வருடம் ஒருமுறையாவது பார்த்து வர உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.திருப்பதி ,திருச்செந்தூர் போன்ர ஸ்தலங்களில் சித்தர்கள்,மகான்கள் ஆசி கிடைக்கிறதோ அது போல உங்கள் வம்சாவழியினர் ஆசி கிடைக்க குலதெய்வம் வழிகாட்டும்.

ஆலய கருவறையில் உள்ள கற்சிலை, பிரபஞ்ச சக்திகளை எல்லாம் ஒருங்கேப் பெற்று அதை ஆலயம் முழுவதும் பரவச் செய்து கொண்டிருப்பதை படித்து இருப்பீர்கள். அபிஷேகம் செய்யப்படும் போது மூலவர் சிலை வெளிப்படுத்தும் சக்தியானது அதாவது அருள் அலைகள் இரட்டிப்பாக உயர்ந்து விடுமாம்.

,தயிர், பால், சந்தனம், தண்ணீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யும்போது மூலவர் சிலையில் அதிக அளவில் மின் கடத்தும் திறன் ஏற்படுவதை குற்றாலம் பராசக்தி கல்லூரி ஆராய்ச்சிக் குழுவினர் சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டு பிடித்தனர். அபிஷேகம் செய்ய, செய்ய கருவறையில் உள்ள காற்று மண்டலத்தில் எதிர் மின்னூட்டங்கள் அதிகரிப்பதையும் கண்டு பிடித்தனர்.

அபிஷேகம் காரணமாக கருவறையில் உள்ள காற்றில் அதிக ஈரப்பதம் இருக்கும். ஈரப்பதத்தில் ஒளி வேகம் அதிகமாக இருக்கும். அதனால்தான் அபிஷேகத்தின் போதும் தீபம் காட்டும்போதும் கருவறை காற்று மண்டலம் அயனியாக்கப்பட்ட மூலக்கூறுகளுடன் வெளியில் வருகிறது. அது பக்தர்களுக்கு உள்ளத்தில் பலத்தை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

திருமஞ்சனம்,பால்,தயிர்,இளநீர்,சந்தனம்,கரும்புசாறு ,பன்னீர்,விபூதி என 16 வித அபிசேக பொருட்களால் அபிசேகம் செய்து ,புது ஆடை அணிவித்து நெய்தீபம் ஏற்றி உங்கள் குலதெய்வத்தை வழிபடவும்.சர்க்கரை பொங்கல் வைத்து நைவேத்யம் செய்யவும்.சர்க்கரை பொங்கலை அங்கு வருவோர்க்கு பிரசாதமாக கொடுக்கவும்.

பெண் தெய்வமாக இருப்பின் பெளர்ணமி வழிபாடு மிக சிறப்பு.ஆண் தெய்வம் அமாவாசை நல்லது ...பெரும்பாலும் பெளர்னமி இரவில் செய்யப்படும் பூஜைக்கு அதிக வலிமை உண்டு.சித்திரா பெளர்ணமி ,வைகாசி விசாகம் ,ஆடி அமாவாசை,ஆடி வெள்ளி,ஆவணி அவிட்டம்,புரட்டாசி அமாவாசை,தை அமாவாசை ,பங்குனி உத்திரம் நாட்கள் எல்லாம் விசேசமானவை.உங்கள் ஜென்ம நட்சத்திர வழிபாடு மிக சிறப்பு.

சொந்தமாக வீடு வாங்க முடியவில்லை நாம் எல்லாம் சொந்த வீடு எங்கே வாங்க போகிறோம் என நினைக்கவே வேண்டாம்

சொந்தமாக வீடு வாங்க முடியவில்லை நாம் எல்லாம் சொந்த வீடு எங்கே வாங்க போகிறோம் என நினைக்கவே வேண்டாம் .உங்கள் சொந்த வீடு எப்படி இருக்க வேண்டும் அதில் எத்தனை அறைகள் இருக்க வேண்டும் முகப்பு எப்படி இருக்கனும் வீட்டின் பெயர் என்ன என்ன நிறத்தில் பெயிண்ட் என நுணுக்கமாக யோசித்து கொண்டே இருங்கள் .நீங்கள் நினைத்தது போலவே அமையும் .ஒரு நாள் சொந்த வீட்டில் வசிப்பீர்கள்.

வருமானம் இல்லை சேமிப்பு இல்லை என துவள வேண்டாம் தினசரி அலது மாதம் எவ்வளவு தொகை வேண்டும் என பெரிய தொகையை கற்பனை செய்யுங்கள் அதை எப்படி பயனுள்ளதாக செலவழிக்க வேண்டும் முதலீடு செய்ய வேண்டும் பெருக செய்ய வேண்டும் என்பதை பற்றி தினசரி இரவு தூங்கும் முன் பத்து நிமிடம் திட்டமிடுங்கள் 

அந்த தொகை நிச்சயம் வந்தடையும் .இது பேராசை அல்ல.பெரும் பணத்தை நிர்வகிக்க உங்கள் மனம் முதலில் தயாராக இருக்க வேண்டும் அதன் பின்பே இறையருள் உங்களுக்கு அதனை வழங்குகிறது தயாராக இல்லாதவரிடத்தில் பெரும் பணம் வந்தாலும் தங்குவதில்லை.

பறவைகளுக்கு நீரும்,உணவும் வையுங்கள்.தெய்வ சக்தியை பெருக்குங்கள்..!!

தெய்வ சக்தி நம் வீட்டுக்கு வரவேண்டுமானால் ,சின்ன சின்ன உயிர்களும் நம் வீட்டுக்கு வருகை தரவேண்டும்.வீட்டில் குருவி,குளவி கூடுகளை கலைக்காதீர்கள்..நெற்கதிர்களை கிராமத்து வீடுகளில் கட்டி தொங்க விட்டிருப்பார்கள்..குருவிகள் வீட்டுக்குள் வந்து கொத்தி தின்னும்.அவையெல்லாம் தெய்வீக சக்தியை உண்டாக்கத்தான்.

காகத்துக்கு சாதம் வைக்கும் பழக்கமும் அப்படி வந்ததுதான்.நவகிரக தோசமும் இதனால் விலகும்.பறவைகளுக்கு நீரும்,உணவும் வையுங்கள்.தெய்வ சக்தியை பெருக்குங்கள்..!!செல்வவளத்துடன் வாழுங்கள்!!

லக்னம் vs வழிபாடு

மிதுனம் லக்னத்தில் பிறந்தவர்கள் திருப்பதி சென்று வந்தால் பணம் நிறைய சேரும்...அதே போல இவர்கள் திருவண்ணாமலை கிரிவலம் சென்று வந்தால் சொந்த வீடு அமையும்

சிம்மம்,விருச்சிகம் லக்னத்தார் திருச்செந்தூர் சென்று வந்தால் வருமானம் இரட்டிப்பாகும்...தனுசு லக்னத்தாருக்கு இங்கு சென்று வந்தால் வீடு அமையும்.

கன்னி லக்னத்தார் சபரிமலை சென்று வருவது நல்லது

கடகம் ,சிம்மம் லக்னத்தாருக்கு ஆற்றின் கரை யில் இருக்கும் முருகனை கிருத்திகையில் வழிபட்டால் கடன் தீரும்.

மேசம் ,துலாம் லக்னத்தாருக்கு பழமி முருகனையும் ,அடிவாரத்தில் இருக்கும் முருகனையும் ஒரு சேர தரிசிக்க சகல பிரச்சினைகளும் தீரும்.

மகரம் ,கும்பம் லக்னத்தார் ஸ்ரீரங்கம் பெருமாளை வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு விஸ்வரூப தரிசனமாக பார்க்க எல்லா துன்பங்களும் தீர்ந்து ஆரோக்யம் உண்டாகும் பண பிரச்சினை தீரும்.

ரிசபம் லக்னத்தார் மதுரை மீனாட்சியை வெள்ளிக்கிழமை இரவு கால பூஜையை தரிசிக்க லாபம் உண்டு.

மீனம் லக்னத்தார் மலை மீது இருக்கும் முருகன் வழிபாடு சிறப்பு தரும்.

ராசிக்கு சொல்லவில்லை லக்னத்துக்கு சொல்லி இருக்கிறேன்.

Wednesday 5 October 2022

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஊர்கள் மற்றும் பெயர் கராரணகள்.

1)உக்கடம்= புக்கிடம்(பாலகாட்டு காணவாய்க்கு புகும் இடம்)
2) காரைமரம் நிறைந்த நீர் மடை காரமடை
கரடி இறங்கும் மடை கரடிமடை
அற்று வெள்ளத்தில் முதலை வந்தால் முதலைமடை
ஈட்டிமரம் நிறை மடை எட்டிமடை

3) கோவை கோட்டை இருந்த இடம் கோட்டை மேடு & கோட்டை ஈஸ்வரன் கோவில்
4) பாலகாட்டு கணவாய்க்கு மாற்றுவழி கணுவாய்
5) சின்ன நீர் தடாகம்+ பெரிய நீர
தடாகம் உள்ள ஊர் தடாகம்
6) அனுமனுக்கு வாவி தோண்டி சுப்பிரமணியர் கோவில் அனுவாவி சுப்பிரமணிய கோவில்
7) சிங்க பெருமாள் மற்றும் உலகளந்த பெருமாள் அக்ரகாரம் நிறைந்த ஊர் சிங்காநல்லூர்
8)வெள்ளம் நிறைந்த கிணறு உள்ள பகுதி வெள்ளகிணறு
9) பாலைமரம் நிறைந்த மலை பாலமலை
10) மருதமரம் நிறைந்த மலை மருதமலை
11) மதுரை போல் பழமையான விருத்தீஸ்வரர் அலயம் கொணடது வடமதுரை
12) வள்ளி மலை போல் வடக்கு வள்ளி தேவானை கோயில் உள்ள இடம் வடவள்ளி
13) சோழன் வல்லவன் கட்டிய குளம் வல்லன்குளம்
14) வடஇந்தியர் எழைகளுக்கு உணவு அளித்த இடம் லங்கர்கானா(இன்று பூமார்கெட்)
15) இடிந்த கரை கண்மாய்/ஓடை உள்ள ஊர் இடிகரை
16) வீரகேரளன் எனும் சேரமன்னன் எற்படுத்திய ஊர் வீரகேரளம்
17) குறுஞ்சி நிலத்து ஊர்+குளம் குறுச்சி& குறுச்சி குளம்
18)கரிகாலன்பட்டிஸ்வரர் பேரூர்
இப்போது பேரூர்
19) வெள்ளியங்கிரி ஆண்டவர் பூண்டி இப்போது பூண்டி
20) ஓன்பது (நவ) ஊர் + புதூர் நவாவூர்புதூர்
21)ஒக்கலிக மக்கள் வாழ்ந்த வழிபாடு நடத்திய பகுதி நஞ்சுடாபுரம், நஞ்சே கவுண்டர் பூதூர், காசி நஞ்சே கவுண்டர் பூதூர்
22) உடையான் பாளையம்
உடையார்மக்கள் வாழ்ந்த வழிபாடு நடத்திய பகுதி
23) கவுண்டர் உரித்தான பாளைய ஜமீன் கவன்டம்
மக்கள் வாழ்ந்த வழிபாடு நடத்திய
பகுதி
24) நாயகர்
பாளைய ஜமீன் நாக்கன்பாளயங்கள்
25) பாண்டிய மன்னர்கள் காலத்தில் வந்த ஊர் வீரபாண்டி, வீரபாண்டிபுதூர்
26) கிராமத்தே மணியத்துக்கு கொடுத்து பாளைய நிலம் மணியகாரபாளைய
27) வெட்டுவ / வெட்டைகார கடவுள்
மக்கள் வாழ்ந்த வழிபாடு நடத்திய
ஊர் வெட்டைகார பூதூர்
28) எல்லா மக்களும் உபயோகிக்க குளம் சர்கார் சாமகுளம், ஆக்கிரகாரத்து சாமகுளம்
29) தேக்கு மரம் நிறைந்த ஊர் தேக்கம் பட்டி
30) நெய்யல் ஆற்றின் ஆலமரம் துறை ஆலந்துறை
31) கல் நிறைந்த ஆற்றின் ஊர் கல்லார்
32)நெல்லிமரம் நிறைந்த பவானி நதியின் துறை நெல்லிதுறை
33) அத்திமரம் நிறை பவானி நதி கடவு அத்திகடவு
34) ஓடம் ஒதுங்கும் துறை ஒடான் துறை