jaga flash news

Tuesday 20 June 2023

சாணக்கிய நீதி படி இந்த 6 விஷயங்களை பாலோ பண்றவங்களுக்கு வாழ்க்கையில் பணக்கஷ்டமே வராதாம்...!

 சாணக்கியரின் கூற்றுப்படி, பணம் மற்றும் பதவியால் மட்டுமே யாரும் வெற்றி பெறுவதில்லை. சமுதாயத்தில் முன்மாதிரியாகவும், மரியாதைக்குரியவர்களாக இருப்பவர்கள் மட்டுமே வெற்றிகரமானவர்களாக மற்றவர்களால் மதிக்கப்படுவார்கள். அந்த வகையில் சாணக்கியர் ஒரு சிறந்த அறிஞர், அரசியல்வாதி மற்றும் பொருளாதார நிபுணர். 
 சாணக்கியரின் இந்த கொள்கைகளை கண்டிப்பாக கடைபிடிப்பவர் வாழ்க்கையில் அனைத்து கஷ்டங்களுக்கும் தீர்வு பெறுவார் என்பது நம்பிக்கை. இன்றைய அவசர உலகத்தில் பணம் ஒரு நல்ல வாழ்க்கைக்கு இன்றியமையாதது. சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் பணத்தைப் பற்றிய சில விஷயங்களைக் குறிப்பிடுகிறார். 
இவற்றை ஒருவர் தன் வாழ்வில் கடைப்பிடித்தால், அவர்கள் வாழ்க்கையில் பணத்திற்கு கஷ்டம் இருக்காது. சாணக்கிய நீதியைப் பின்பற்றி உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தலாம். இந்த விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டால், பணத்தில் எந்த பிரச்சனையும் வராது. 

Saturday 10 June 2023

தொட்டால் சிணுங்கி செடி


ஆரோக்கியம்
தொட்டால் சிணுங்கி செடியை வீட்டில் வளர்ப்பதால் இவ்வளவு நன்மைகள் உள்ளதா..!
By Neve Thitha- October 28, 2022
thotta chinungi plant benefits in tamil
தொட்டால் சிணுங்கி செடியில் உள்ள நன்மைகள்..!
அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் மிகவும் புதுமையான மற்றும் சுவாரசியமான ஒரு தகவல் பற்றித்தான் பார்க்க போகின்றோம். அப்படி என்ன தகவல் என்றால் ஒரு தாவரத்தில் உள்ள சக்தி மற்றும் பயன்கள் பற்றித்தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அது என்ன தாவரம் என்றால் தொட்டால் சிணுங்கி செடித்தான்.


நாம் அனைவரும் சிறுவயதில் இந்த தொட்டால் சிணுங்கி செடியை தொட்டு தொட்டு விளையாடிருப்போம். அப்படி விளையாடும் பொழுது இந்த செடியில் உள்ள நன்மைகள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. அதனை பற்றி இந்த பதிவில் விரிவாக கூறப்பட்டுள்ளது இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.

தொட்டால் சிணுங்கி செடியின் வேறுபெயர்கள்:
இந்த தொட்டால் சிணுங்கி செடியின் வேறுபெயர்கள் தொட்டால் சுருங்கி, தொட்டால் வாடி, வசிய மூலிகை, மாய மூலிகை, ஈர்ப்பு மூலிகை, மந்திர மூலிகை போன்ற பெயர்களினால் அழைக்கப்படுகிறது.


தொட்டால் சிணுங்கி செடியில் உள்ள நன்மைகள்:
thotta sinungi plant in tamil
பொதுவாக கிராமப்புறத்தில் உள்ள நீர்நிலைகளுக்கு அருகில் இந்த தொட்டால் சிணுங்கி செடியை பார்க்கலாம். இதன் பெயருக்கு ஏற்ப இதனை தொட்டீர்கள் என்றால் அதனுடைய இலைகள் சுருங்கி விடும். இதற்கு காரணம் அதனுடைய தண்டுப்பகுதியில் உள்ள ஒரு விதமான அமிலம் தான்.


இந்த தொட்டால் சிணுங்கி செடியை நமது வீட்டில் வளர்த்தால் மிகுந்த நன்மைகளை இந்த செடியிலிருந்து நாம் பெறலாம். இதில் உள்ள காந்த சக்தி நமது வீட்டிற்கும் நமக்கும் மிகுந்த நன்மைகளை அளிக்கிறது.

பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை 03.30 – 05.30 மணி வரை உள்ள நேரத்தில் தொட்டால் சிணுங்கி செடியின் மீது நமது இரண்டு கைகளையும் வைத்து தினமும் தொட்டு வருவதால் நமது உடலில் உள்ள காந்த ஆற்றல் அதிகரிக்கும்.

அப்படி இந்த காந்த ஆற்றல் அதிகரிப்பதால் நமக்கு வருங்காலத்தை கணித்து கூறக்கூடிய ஆற்றல் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த செடியை வீட்டில் வளர்ப்பதால் வீட்டில் நிலவுகின்ற சண்டைகள் இல்லாமல் இருக்கும்இந்த தொட்டால் சிணுங்கி செடியை கசாயம்போல் செய்து பருகி வருவதால் நமது உடலுக்கு பல நன்மைகளை அளிக்கின்றது. முதலில் இந்த தொட்டால் சிணுங்கி கசாயம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
தொட்டால் சிணுங்கி – 1 கைப்பிடி அளவு
சீரகம் – 1 டீஸ்பூன்
மிளகு – 6
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
தண்ணீர் 1/4 லிட்டர்
முதலில் நாம் எடுத்துவைத்திருக்கும் 1 கைப்பிடி அளவு தொட்டால் சிணுங்கியை நன்கு பொடிப்பொடியாக நறுக்கி அதனை நன்கு சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நாம் சுத்தம் செய்து வைத்திருந்த தொட்டால் சிணுங்கியை சேர்த்து அதனுடன் 1/4 லி தண்ணீரை சேர்த்து கொள்ளவும். அதில் 1 டீஸ்பூன் சீரகம், 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் நாம் எடுத்துவைத்திருந்த மிளகை நன்கு பொடியாக்கி சேர்த்து கொள்ளவும். இதனை நன்கு கொதிக்கவைத்து பிறகு வடிக்கட்டி பருக வேண்டும்.

இந்த தொட்டால் சிணுங்கி கஷாயத்தை வாரம் இருமுறை பருகுவதால் நமது உடலில் உள்ள அனைத்து வலிகளும் நீங்கும். தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் இந்த கஷாயத்தை குடிப்பது நல்ல தீர்வை தரும். மேலும் சிறுநீரகம் சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த கஷாயம் ஒரு சிறந்த மருந்தாகும்.

Thursday 1 June 2023

இந்த நாளில் நகம் வெட்டாதீங்க..! லட்சுமி தேவியின் கோபத்தால் வீட்டில் வறுமை அதிகரிக்குமாம்

வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகத்துடன் தொடர்புடையது. எனவே தான் நாம் செய்யும் ஒவ்வொரு புதிய செயலையும் நாள் கிழமை பார்த்து செய்யுமாறு கூறுகின்றனர். நாம் அன்றாடம் செய்யும் வேலைகளை, சில தினங்களில் செய்யக்கூடாது என கூறப்படுகிறது. அதில், நகம் வெட்டுதல், தலைக்கு குளித்தல், முடி வெட்டுதல், அசைவம் சமைக்க கூடாது என அனைத்தும் அடங்கும்.

இந்த வேலைகளை ஒரு குறிப்பிட்ட நாட்களில் செய்தால் லட்சுமி தேவியின் கோபத்தால் வீட்டில் வறுமை அதிகரிக்கும் மற்றும் அவர் நிதி நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என ஜோதிட சாஸ்த்திரம் கூறுகிறது. இந்த வேலைகளை செய்ய எந்த நாள் சிறந்தது என இந்த தொகுப்பில் காணலாம்
சனிக்கிழமை : ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒரு நபர் சனிக்கிழமையன்று தனது நகங்களை வெட்டினால், அது அவரது ஆயுளைக் குறைக்கிறது மற்றும் அவரது வீட்டில் வறுமையை அதிகரிக்கிறது என்று நம்பப்படுகிறது.

செவ்வாய் கிழமை : ஜோதிட சாஸ்திரத்தின்படி, செவ்வாய்கிழமையன்று ஒருவர் நகங்களை வெட்டினால், அந்த நபர் தனது சகோதரனுடன் பிரிந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அவர்களின் தைரியம் மற்றும் வீரம் குறையலாம். இது தவிர, நபர் நகங்கள் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
வியாழன் கிழமை : ஜோதிட சாஸ்திரத்தின்படி, வியாழன் அன்று ஒருவர் நகங்களைக் கடித்தால், அந்த நபரின் கல்வி மற்றும் அறிவாற்றல் குறைவதோடு, வயிறு தொடர்பான பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும்.

ஜோதிட சாஸ்திரத்தின்படி, மாலை அல்லது இரவில் நகங்களை வெட்டக்கூடாது. இப்படி செய்வதால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் பெருகும். நம்பிக்கையின் படி, மாலை நேரம் லட்சுமி தேவியின் வருகை செய்யும் நேரம். இந்த நேரத்தில், அவள் கோபமடைந்து உங்கள் வீட்டை விட்டு வெளியேறுவார் என கூறப்படுகிறது. இதனால் வீட்டில் வறுமை ஏற்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மாலையில் நகங்களை வெட்டக்கூடாது, ஏனென்றால் இந்த நேரத்தில் நகங்கள் மிகவும் கடினமாகிவிடும்.
ஜோதிட சாஸ்திரப்படி மேலே குறிப்பிட்ட மூன்று நாட்களைத் தவிர வாரத்தின் மற்ற நாட்களில் வேண்டுமானாலும் நகங்களை வெட்டலாம். நகங்களை வெட்ட சிறந்த நேரம் குளித்த பிறகு என கூறப்படுகிறது. குளித்த பிறகு, நகங்கள் மென்மையாக மாறும், இது வெட்டுவதில் எந்த சிக்கலையும் ஏற்படுத்தாது.