jaga flash news

Monday 30 March 2020

திருவோண_விரதம்


திருவோண_விரதம்
திருவோணம்நோன்பு_என்பது_திருவோண நட்சத்திரத்தோடு_கூடிய_நன்னாளில் நோற்கும்_நோன்பாகும். இந்த_விரதம் பெருமாளுக்கு_உகந்தது.

ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் பெருமாளுக்குரிய திருவோணமும்_சிவனுக்குரிய #திருவாதிரையும் மட்டுமே 'திரு" என்ற சிறப்பு அடைமொழியுடன் கூடியது. தசாவதாரங்களில் வாமன அவதாரம் எடுத்த பெருமாள், மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்ட நிகழ்வு, திருவோண நட்சத்திரத்தன்று தான் நிகழ்ந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

சிறப்புகள் :

தோஷங்களில் பலவகையான தோஷங்கள் உள்ளன. அவற்றில் சந்திர தோஷமும் முக்கியமான ஒன்று ஆகும்.

ஜாதகத்தில் சந்திரதோஷம் இருந்தால் அவர்கள் அமாவாசைக்குப் பின்னர் வரக்கூடிய துதியை திதியில் விரதம் இருக்கவேண்டும். விரதம் இருந்த பின்னர் மாலை நேரத்தில் சந்திர தரிசனம் செய்யவேண்டும்.

தெற்கு நோக்கிய அம்பிகையை வழிபடுவதுடன், திருவோண நட்சத்திரமன்று திருவோண விரதம் இருந்தால் சந்திரதோஷம் விலகுவதுடன், சந்தோஷமான வாழ்வு அமையும்.

 எல்லா மாதங்களிலும் வரும் திருவோணம் நட்சத்திரத்தில் பெருமாளை வேண்டி விரதம் இருந்தாலும் ஆவணி திருவோண விரதம் மிக முக்கியமானதாகும்.

திருவோண விரதம் இருக்கும் முறை :

ஒவ்வொரு மாதமும் வரும் திருவோண நட்சதிரத்தன்று அதிகாலையில் தலைக்கு நீராடி, கடவுளைத் துதித்து, பெருமாள் கோவிலுக்குச் சென்று துளசிமாலை அணிவித்து, அல்லது வீட்டில் உள்ள பெருமாளின் படத்திற்கு துளசி கிடைத்தால் அதையோ அல்லது வேறு உகந்த புஷ்பத்தையோ அணிவித்து, மனமார வேண்டிக்கொள்ளவும்.

 பின்னர், அன்று உண்ணப்போகும் உணவுப் பொருள் எதுவாக இருப்பினும், அதில் உப்பு சேர்க்காமல், உண்ண வேண்டும்.

 ஒருவேளை அரிசி உணவும், மற்ற வேளைக்கு, சிற்றுண்டி, பால், பழம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

மிகுந்த பக்தியுடன் இந்த விரதத்தை கடைபிடித்தால் வேண்டியது நிறைவேறும் என்பது திண்ணம்.

பலன்கள் :

காலை வழிபாடு - நோய் குணமாகும்.

 நண்பகல் வழிபாடு - செல்வம் பெருகும்.

 மாலை வழிபாடு - பாவம் நீங்கும்.

 அர்த்தயாம வழிபாடு - முக்தி கிடைக்கும்...



திருச்சி உச்சி பிள்ளையாா் கோவில்




திருச்சி உச்சி பிள்ளையாா் கோவில்
திருச்சியை என்றவுடன் கண் முன்னே தெரிவது மலைக்கோட்டையில் உள்ள உச்சி பிள்ளையாா் கோவிலும் அதன் கம்பீரமும் தான்.

 ஸ்வாமி : உச்சி பிள்ளையாா், தாயுமானஸ்வாமி, மாணிக்க விநாயகா்.

 அம்பாள் : மட்டுவாா்குழலி.

  தீர்த்தம் : காவிரி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம்.

 தலவிருட்சம் : வில்வம்.

  வரலாறு :

1  தென்னிந்தியாவில் உள்ள மாநிலமான தமிழகத்தில் உள்ள திருச்சி மாநகரில் அமைந்துள்ளது உச்சிப்பிள்ளையாா் கோவில். திருச்சீராபுரம் என்ற பெயரே., திருச்சிராப்பள்ளி ஆனது என்கின்றனர்.
2  சுமார் 1800 வருக்ஷங்களுக்கு முன்பே, குணபரன் என்ற மகேந்திர பல்லவ மன்னர் காலத்தில் இதைக் கட்ட ஆரம்பித்து, மதுரை நாயக்க மன்னர்களால் விஜய மன்னர்கள் முன்னிலையில் பூா்த்தி செய்யப்பட்டது. இதைப் பூா்த்தி செய்ய 300 மனிதர்கள் தொடர்ந்து 11 வருடங்கள் உழைத்தாா்கள் என்று வரலாற்றுக் குறிப்பு கூறுகின்றது.

3  இந்த கோவிலுக்கு செல்லும் படிகள் செங்குத்தாக இருக்கிறது. இங்கிருந்து பார்த்தால், திருச்சி நகா் முழுவதும் அழகாய் காணலாம்.
மேலும் ஸ்ரீரங்கம் கோவிலும் காவேரி நதியும், கொள்ளிடமும் நன்கு தெரியும். இது, 150 அடி உயரமும், 437 படிக்கட்டுக்களும் கொண்டது.

4  இம்மலையில் மூன்று நிலைகளில் கோவில்கள் அமைந்துள்ளன. கீழே மாணிக்க விநாயகர் கோவில், மேலே உச்சிப்பிள்ளையாா் கோவில், மற்றும் இடையே தாயுமானவா் கோவில் ஆகியவை உள்ளன. தாயுமானஸ்வாமி  கோவிலில் நூற்றுகால் மண்டபம் உள்ளது., மேலும் தாயுமானஸ்வாமி கோவிலின் விமானம் தங்கத்தால் வேயப்பட்டுள்ளது. இதைத் தவிர பல்லவர் கால குடைவரை கோவிலும்., பாண்டியா் கால குடைவரை கோவிலும் இம்மலையில் உள்ளன.

5  மலைகோட்டையின் தெற்கு பக்கத்தில் பல்லவர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட குகை கோவில்கள் உள்ளன.

6  உலகத்திலேயே மிகவும் பழமையான மலைக்கோவில் இது என்று கூறுகின்றனா். இவைகள் எல்லாம் இங்குள்ள கல்வெட்டுக்கள் மூலம் அறியலாம்.

7 துவாக சமதரை அமைப்பிலேயே உள்ள திருச்சி மாநகரின் மத்தியில் சுமார் 83 மீட்டர் உயரமான இம்மலை அமைந்திருப்பது இயற்கையின் சிறப்பாகும். மிகப் பழமையான மலைகளுள் ஒன்றான இது., ஏறத்தாழ 3400 மில்லியன் வருடங்கள் பழமையானதாகக் கணக்கிடப்படுகிறது.


கோவிலின் சிறப்புகள் :

விநாயகர் என்றாலே வினைகளை களைப்பவா் என்பது பொருள்.
எந்த காரியத்தையும் தொடங்குவதற்கு முன்பு வெற்றியை உறுதி செய்ய., விநாயக பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து, அருகம்புல் சாற்றி பக்தர்கள் வழிபட்டு வருகின்றனா்.


சூர்ய நமஸ்காரத்தின் முக்கிய அம்சங்கள்




சூர்ய நமஸ்காரத்தின் முக்கிய அம்சங்கள்
சூரிய நமஸ்காரம் செய்தால்…
பூமியிலுள்ள அனைத்து படைப்புகளுக்கும், ஆதாரமாக விளங்குவது சூரியன். நாம்இரவில் உறங்கி காலையில் எழும்போது, நம் உடலும் உள்ளுறுப்புகளும் மிகவும்சோர்வான நிலையில் இருக்கும். இரத்த ஓட்டமும் குறைவாக இருக்கும். காலையில்எழுந்து சூரிய நமஸ்காரம் செய்வதால் உடல் புத்துணர்வு பெற்று இரத்த ஓட்டம்அதிகரித்து உடலும் உள்ளமும் சுறுசுறுப்படையும்.
உடல், உள்ளம், மூச்சு, ஆன்மா இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒன்றாகநலமாகச் செயல்பட வைப்பதே சூரிய நமஸ்காரமாகும். சூரிய நமஸ்காரத்தில் உள்ளபன்னிரண்டு யோகாசன நிலைகளை சென்ற இதழ்களில் தெரிந்துகொண்டோம் சூரியநமஸ்காரத்தின் பன்னிரண்டு நிலைகளில் ஒன்றின் தொடர்ச்சியாகவே மற்றொன்றுவரவேண்டும்.
ஐந்து வயது முதல் எண்பது வயதிற்கு உட்பட்டவர்கள் வரை சூரிய நமஸ்காரம்செய்யலாம். அதிகாலையில் செய்வது மிகவும் நல்லது. அதுவும் குறிப்பிட்ட காலைநேரத்தில் செய்வது மனதிற்கு ஒரு ஒழுக்க முறையை கொண்டுவரும். பன்னிரெண்டுஆசனங்களையும் அவரவர் வேகத்திற்கு, உடல் தகுதிக்கு ஏற்ப, 5 முதல் 15நிமிடங்கள் செய்யலாம்.
• முழுமையாக யோகாசனங்கள், பிராணாயாமம், தியானம் செய்ய முடியாதவர்கள் சூர்ய நமஸ்காரம் மட்டுமாவது செய்யலாம். ஏனைய ஆசனங்கள் செய்ததின் போல் பலன்கள் கிடைக்கும்.
• 12 ஆசனங்கள் இணைந்திருப்பதால், உடற்பயிற்சி, யோகாசனங்களின் பலன்கள் கிட்டும். 12 ஆசனங்களும் முதுகுத்தண்டுக்கு பயிற்சி அளிக்கின்றன.
• காலையில் எழும் சூரியனை நோக்கி செய்வது உத்தமம்.
• உயர் ரத்த அழுத்தம், ஆர்த்தரைடீஸ் உள்ளவர்கள் யோகா குருவை அணுகி அவரின் ஆலோசனைப் படி செய்யவும்.
செய்முறை
நிலை 1
கிழக்கு திசையை நோக்கி நிமிர்ந்து நிற்கவும். இது தடாசன நிலையாகும்.
• மூச்சை உள்ளிழுத்து கைகளை கூப்பிக் கொண்டு மார்பை ஒட்டினாற் போல் வைத்துக் கொள்ளவும்.
• நார்மலாக மூச்சுவிட்டுக் கொண்டு சூரியனை நோக்கவும்.

நிலை 2
மூச்சை உள்ளிழுத்து கைகளை தூக்கவும்.
• எவ்வளவு முடியுமோ அவ்வளவு பின்னால் வளையவும்.
நிலை 3
முழங்காலை வளைக்காமல், முன்னோக்கி குனியவும். இதை மூச்சை வெளிவிட்டுக் கொண்டு செய்யவும். கைகள் தரையை தொடும் வரை குனியவும். முதலில் முடியாவிட்டாலும், போகப் போக சரியாகி விடும்.
நிலை 4
மூச்சை உள்ளிழுத்துக் கொண்டு இடது முழங்காலை வளைத்து வலது காலை எவ்வளவு முடியுமோ அவ்வளவு நீட்டவும்.
• இரண்டு உள்ளங்கைகளும் தரையில் படிந்திருக்கும்.
நிலை 5
மூச்சை வெளியே விட்டு இடது காலை நீட்டவும், இடது பாதத்தை வலது பாதத்தின் அடியில் வைக்கவும்.
• உள்ளங்கைகளும், பாதங்களும் தரையில் அழுத்தியபடியே வெளி மூச்சு விட்டு ஆசனபகுதியை மேலே தூக்கவும்.
நிலை 6
கால்கள், முழங்கால்கள், மார்பு, கைகள் மற்றும் தாடை தரையை தொடுமாறு தரையில் படுக்கவும்.
• இடுப்பையும், அடிவயிற்றையும் மேலே தூக்கவும்.
• மூச்சை வெளியே விடவும்.
நிலை 7
ஆறாம் நிலையிலிருந்து மூச்சை உள்ளிழுத்து உடலை இடுப்பிலிருந்து மேலே தூக்கவும். இரண்டு கைகளையும் இதற்கு பயன்படுத்தவும்.
• எவ்வளவு பின்னால் குனிய முடியுமோ அவ்வளவு குனிய வேண்டும்.
நிலை 8
மூச்சை வெளியே விட்டு உடலை தூக்கவும், இடுப்பை மேலே உயர்த்தி தலையை இரு கைகளுக்கும் நடுவில் கீழே அழுத்தி இருக்கவும்.
• பாதங்கள், குதிகால்கள் தரையை தொட்டுக் கொண்டு இருக்க வேண்டும்.
நிலை 9
இவை நான்காம் நிலையை போன்றதே. கால்களை மாற்றி வைக்க வேண்டும்.
• மூச்சை உள்ளிழுத்து வலது காலை, கைகளுக்கு எதிராக கொண்டு வர வேண்டும். இடது காலும், முழங்காலும் தரையில் பட வேண்டும்.
• தலையை இலேசாக தூக்கி மேலே பார்க்கவும்.
நிலை 10
மூச்சை வெளியே விட்டு இடது காலை முன்னே கொண்டு வரவும். முழங்கால்களை நேராக வைத்துக் கொள்ள வேண்டும்.
• தலையை மூன்றாவது நிலையில் குறிப்பிட்டவாறு வைத்துக் கொள்ள வேண்டும்.
நிலை 11
இதை இரண்டாம் நிலை ஆசனத்தை போல் திருப்பி செய்ய வேண்டும்.
நிலை 12

முதல் நிலையில் சொன்னபடியே செய்ய வேண்டும்.
சூரிய நமஸ்காரத்தின் பயன்கள்
இதயத்தை முடுக்கிவிட்டு இரத்த ஒட்டத்தை வேகப்படுத்தி உடலின் ஆரோக்கியத்தை நிலைநாட்டுவதில் சூரிய நமஸ்காரம் சிறந்த இடம் பெறுகின்றது. இது இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும். இதயத் துடிப்பைச் சமன் செய்யும். கை, கால் போன்ற தூரவெளி உறுப்புகளுக்குச் சூடு கொடுத்துக் காக்கும்.
சூரிய நமஸ்காரம் ஜீரண மண்டலத்திற்கு உயிரூட்டி ஆற்றலை அளிக்கின்றது. கல்லீரல், வயிறு, மண்ணீரல், குடல்கள் எல்லாம் கசக்கி கசக்கிப் பிடித்து விடுவது போன்று மசாஜ் செய்யப்படுகின்றன.
மலச்சிக்கல் பிரச்சனை சரியாகிவிடுகிறது.
பசியின்மை பறந்தோடுகின்றன.
சூரிய நமஸ்காரத்தில் உடல் அசைவுகளும் மூச்சு ஒட்டமும் இணக்கமாக நடைபெறுகின்றன. நுரையீரல்களில் காற்றோட்டம் தாராளமாகின்றது. இரத்தம் உயிர்க்காற்றால் நலம் பெறுகின்றது. ஏராளமான கரிசக்காற்றையும் பிற நச்சுப் பொருள்களையும் மூச்சு மண்டலத்திலிருந்து வெளியேற்றுவதன் மூலம் சூரிய நமஸ்காரம் உடலுக்குப் பெரும் நன்மை விளைவிக்கின்றது.
சிம்பதட்டிக், பாராசிம்பதட்டிக் நரம்புகளின் செயல்களை நெறிப்படுத்துவதன் மூலம் நல்ல ஒய்வுக்கும் உறக்கத்திற்கும் உதவுகின்றது. இதனால் நினைவாற்றல் அதிகரிக்கின்றது.
பிற உயிரணுக்களைக் காட்டிலும் நரம்பு உயிரணுக்கள் மிக மிக தாமதமாகவே விழிப்புற்று உயிராற்றல் பெறுகின்றன. இருப்பினும் இடையறாத முறையான பயிற்சியாலும் சலிக்காத முயற்சியாலும் சிறுகச் சிறுக நரம்பு உயிரணுக்கள் தத்தம் சாதாரணக் காரியங்களைச் செய்யத்தக்க அளவில் வலுவடைகின்றன.
சூரிய நமஸ்காரத்தில் கழுத்து முன் பின் வளைகின்றது. இதனால் தைராயிட், பாராதைராயிட் சுரப்பிகளுக்கு இரத்தம் கிடைக்கின்றது. அவை செயல்படுவதனால் எல்லா எண்டோக்கிரைன் சுரப்பிகளும் தமக்குரிய இயல்பான காரியங்களைச் செய்கின்றன.
தோல் புத்துணர்வு பெற்றுப் பொலிவடைகின்றது. சூரிய நமஸ்காரத்தை முறைப்படி செய்யும் போது வியர்வை உண்டாகும். ஏராளமாக உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் தோலின் வழியே வெளியேறும். நன்றாக வியர்க்கும் வரை இப்பயிற்சி செய்வது நல்லதென சூரிய நமஸ்காரத்தைப் பிரபலப்படுத்திய அவுண்ட் அரசர் கூறுகின்றார். வியர்வை பத்துப் பதினைந்து நிமிடங்களிலேயே வெளிவருவதை அனுபவத்தில் அறியலாம். தோலின் மூலம் வியர்வை வெளிவரும் அளவுக்கு உடல்நலம் ஓங்கும்.
சூரிய நமஸ்காரத்தில் உடலில் உள்ள தசைகள் அனைத்தும் வலுவடைகின்றன. குறிப்பாக கழுத்து, தோள், கை, மணிக்கட்டு, வயிற்றுச்சுவர், தொடை, கெண்டைக்கால், கணுக்கால் முதலிய பகுதிகளில் தசைகள் பயிற்சியால் உரம் பெறுகின்றன.
கொழுப்பால் வயிறு, தொடை, இடுப்பு, கழுத்து, நாடி முதலிய இடங்களில் உண்டாகும் மடிப்புகள் மறையும்.
தோல், நுரையீரல், குடல், சிறுநீரகம் முதலிய பகுதிகள் வழியே சரியாக மலம் (கழிவுப் பொருட்கள்) வெளியேறுவதால் உடலில் விரும்பத் தகாத துர்நாற்றம் ஏற்படுவதில்லை.
சூரிய நமஸ்காரத்தில் உடல் சரியான அளவில் அமையப் பெறுவதால் அது எந்த விளையாட்டுப் பயிற்சி வேலைகளுக்கும் எப்போதும் தயார் நிலையில் இருக்கும். இளமை, நலம், அழகு மூன்றும் ஒருங்கே அமைந்து உடலுக்கும் உயிருக்கும் அழியா இன்பத்தைக் கொடுக்க வல்லது.


மகாலட்சுமி இருக்கும் 26 இடங்கள்





மகாலட்சுமி இருக்கும் 26 இடங்கள்
மகாலட்சுமி இருக்கும் இடங்களை அறிந்து அவற்றை வழிபட்டால் திருவருளைப் பெறலாம்.

1. திருமால் மார்பு

திருமகள் திருமாலின் மார்பில் உறைகிறாள். ஆதலின் திருவுறைமார்பன் -ஸ்ரீநிவாசன் என்று திருமாலுக்குப் பெயர். திருமகளின் அருளைப் பெறத் திருமாலையும் வழிபட வேண்டும். திருமாலை விடுத்துத் திருமகளை மட்டும் வணங்கக் கூடாது. திருமகளைப் புருஷாகாரம் என்பர். அடியாருக்கு அருள்புரியும்படித் திருமாலைத் தூண்டுபவள் திருமகளே.

2. பசுவின் பின்புறம்

பசு தேவராலும், மூவராலும், முத்தேவியராலும் தொழப்பெறும் கோமாதா. காரணம், பசுவின் உடலில் ஒவ்வொரு பாகத்திலும் ஒரு தெய்வம் இருப் பதுதான். பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். காலையில் எழுந்ததும் காணத் தக்கவற்றுள் பசுவின் பின் பக்கமும் ஒன்று. அருகம்புல்லைப் பசுவிற்கு கொடுப்பது 32 வகை அறங்களுள் ஒன்றதாகும். ‘யாவர்க்கும் ஆம் பசுவிற்கு ஒரு வாயிறை’ என்றார் திருமூலர்.

3. யானையின் மத்தகம்

யானையின் மத்தகம் பிரணவம் போன்றது. (ஓங்காரம் போன்றது) அங்கே திருமகள் வீற்றிருக்கிறாள்.

4. தாமரை

மலர்களில் சிறந்தது தாமரை. ‘பூவெனப்படுவது பொறிவாழ் பூவே’ என்றும், ‘பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை’ என்றும் கூறுவர். தாமரை செல்வத்தைக் கொடுக்கும். பொன்னின் அளவைப் பத்மநிதி, சங்கநிதி என்பர். பத்மம் என்றால் தாமரை. எல்லாத் தெய்வங்களுமே பத்மத்தில்தான் அமர்ந்துள்ளனர். பத்மாசனத்தில் அமர்வதே சிறப்பு. திருமகளுக்குரிய இடம் தாமரை. ஆதலின் அவளை மலர்மகள் என்பர்.

5. திருவிளக்கு

விளக்கின்றி பூஜையில்லை. எல்லாத் தெய்வங்களையும் விளக்கொளியில் வழிபடலாம். ஆதலின் வள்ளலார் அருட்பெருஞ்ஜோதியாய் ஆண்டவரைக் கண்டார். எல்லாத் தெய்வகங்களும் விளக்கில் இருப்பினும் விளக்கை லட்சுமியாகக் கருதுவது நம் மரபு.

6. சந்தனம்

மங்கலப்பொருளான சந்தனத்தில் மகாலட்சுமி உறைகிறாள். தெய்வங்களுக்குரிய சோடச உபசரணையில் சந்தனம் அணிவிப்பதும் ஒன்று. சுபகாரியஙக்ளில் சந்தனம் அவசியம்.

7. தாம்பூலம்

தாம்பூலம் மங்களகரமானது. சுபகாரியங்களுக்கும் பூஜைக்கும் தேவையானது. தாம்பூலத்தை மாற்றிக் கொண்டால் சம்மதம் தெரிவித்தாயிற்று என்றே பொருள்.

8. கோமயம்

பசுவிடமிருந்து வெளிப்படும் கோஜலம், கோமயம் (சாணம்) பால், தயிர், நெய் ஆகிய ஐந்தும் இறைவனுக்கு உகந்தவை. இதனைப் பஞ்சகவ்யம் என்பர். ‘ஐந்தாடுவான் அரன்’ என்பார் அப்பர். வாயிலில் சாணம் தெளித்தால் வீட்டைச் சாணத்தால் மெழுகினால் கிருமிகள் வாரா, லட்சுமி வருவாள். பஞ்சகவ்யம் பருகினால் நோய் வராது. பஞ்ச கவ்யம் பரம ஒளஷதம் என்பர்

9. கன்னிப்பெண்கள்

தூய கன்னியர் தெய்வ நலம் பொலிபவர். அவர்களிடத்து லட்சுமி கடாட்சம் உண்டு. பெண்ணைப் பார்த்தால் மகாலட்சுமி மாதிரி இருக்கிறாள் என்று சொல்வது உலக வழக்கு.

10. உள்ளங்கை

உள்ளங்கையில் லட்சுமி உள்ளாள். காலையில் எழுந்ததும் கையைப் பார்க்க வேண்டும். கையை நம்பித்தான் வாழ்க்கையே இருக்கிறது. கையால் உழைத்தால்தான் தனலட்சுமியைக் காண முடியும். கை என்றாலே சக்தி என்றுதான் பொருள். அவர் பெரிய கை என்றால் அவர் செல்வமுடையவர் என்று பொருள்.

11. பசுமாட்டின் கால்தூசு

புனிதமான பசுவின் பாதம் பட்ட இடத்தில் பாவம் நில்லாது. அதன் கால் தூசு பட்ட இடத்தில் செல்வம் கொழிக்கும். மாடு என்றால் செல்வந்தானே!

12. வேள்விப்புகை

வேள்விப் புகை உயிர் காக்கும். போபாலில் வேள்வி நடந்த இரு வீடுகளுக்குள்ளே நச்சுக்காற்று நுழையவில்லை. வேள்விப்புகை ஆரோக்கியம் தரும். வேள்விப் புகையில் வானம் பொழியும். வையகம் செழிக்கும்.

13. சங்கு

சங்கும் அதன் ஒலியும் மங்களகரமானவை. நிதியின் ஓர் அளவை சங்கம் என்பர். ‘சங்கநிதி... பதுமநிதி இரண்டுந்தந்து’ எனும் நாவரசர் சொல் உணர்வோம்.

14. வில்வமரம்

வில்வ மரத்தடியில் ரைவத மன்வந்திரத்தில் மகாலட்சுமி தோன்றி னாள். வில்வம் சிவபெருமானுக்கு உகந்த பத்திரம். அதைவிடச் சிறந்த பத்திரம் ஒன்றும் இல்லை. வைணவத்தலமான ஸ்ரீரங்கத்தில் தல விருட்சம் வில்வம், திருநகரிக்கு வில்வாரண்யம் என்று பெயர். திருவஹிந்திரபுரத்தில் மகாலட்சுமிக்கு வில்வத்தால்தான் அர்ச்சனை. வில்வ மரத்தடியில் செல்வம் தரும் நாயகி வசிக்கிறாள்.

15. நெல்லி மரம்

நெல்லி ஆயுளை வளர்க்கும்: ஆரோக்கியம் தரும். அதனடி யில் மகாலட்சுமி உறைகிறாள். நெல்லிதிருமாலின் அருள் பெற்றது. ஹரிபலம் என்று இதற்கு ஒரு பெயர். நெல்லிக்கனி இருக்கும் வீட்டில் லட்சுமி இருப்பாள். துவாதசியன்று நெல்லிக்காய் சேர்த்தால்தான் ஏகாதசிப் பலன் உண்டு.

16. தர்ம சிந்தனை உடையாரின் உள்ளம்
.

17. வெண்ணிற மாடப் புறாக்கள் வாழும் இடம்

18. கலகமில்லாத மகளிர் வாழும் இடம்

19. தானியக் குவியல்

20. கல்லும் உமியும் இல்லாத அரிசிக் குவியல்

*
21. பணிவுடைமையும் இன்சொல்லும் உடையவர்*

22. பகிர்ந்துண்டு வாழும் மனிதர்

23. நாவடக்கம் உள்ளவர்

24. மிதமாக உண்பவர்

25. பெண்களைத் தெய்வமாக மதிப்பவர்

26. தூய்மையான ஆடை அணிகிறவர் ஆகிய இடங்களிலும் மனிதர்களிடத்தும் மகாலட்சுமி எப்போதும் இருக்கிறாள்.

பொறுமையைவிட மேலான தவமுமில்லை.

திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.

இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.

மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை.



பெருமாள் கோயிலுக்கு செல்பவர்கள் ஒவ்வொரு தெய்வத்திற்கு முன்னும் சொல்ல வேண்டிய மந்திரங்கள் சமஸ்கிருதத்திலும், தமிழிலும் கொடுக்கப்பட்டுள்ளது.





பெருமாள் கோயிலுக்கு செல்பவர்கள் ஒவ்வொரு தெய்வத்திற்கு முன்னும் சொல்ல வேண்டிய மந்திரங்கள் சமஸ்கிருதத்திலும், தமிழிலும் கொடுக்கப்பட்டுள்ளது.
மகாவிஷ்ணு

சாந்தாகாரம் புஜங்க சயநம் பத்மநாபம் ஸுரேசம்
விச்வாகாரம் ககநஸத்ருசம் மேகவர்ணம் சுபாங்கம்
லக்ஷ்மீ காந்தம் கமல நயநம் யோகிஹ்ருத் த்யா நகம்யம்
வந்தே விஷ்ணும் பவ பயஹரம் ஸர்வலோகைக நாதம்
மேகச்யாமம் பீத கௌசேய வாஸம்
ஸ்ரீ வத்ஸாங்கம் கௌஸ்து போத்பாஸிதாங்கம்
புண்யோ பேதம் புண்ட ரீகாய தாக்ஷம்
விஷ்ணும் வந்தே ஸர்வலோகைக நாதம்
ஸசங்க சக்ரம் ஸகிரீட குண்டலம்
ஸபீத வஸ்த்ரம் ஸரஸிரு ஹேக்ஷணம்
ஸஹார வக்ஷஸ்த்தல கௌஸ்துப ச்ரியம்
நமாமி விஷ்ணும் சிரஸா சதுர்ப்புஜம்

அச்சுதன் அமலன் என்கோ!
அடியவர் வினை கெடுக்கும்
நச்சு மாமருந்தும் என்கோ!
நலங்கடல் அமுதம் என்கோ!
அச்சுவைக் கட்டி என்கோ!
அறுசுவை அடிசில் என்கோ!
நெய்ச் சுவை தேறல் என்கோ!
கனிஎன்கோ! பால் என்கேனோ;

லட்சுமி

லக்ஷ்மீம் க்ஷீரஸமுத்ர ராஜ தநயாம் ஸ்ரீ ரங்கதாமேச்வரீம்
தாஸீ பூதஸமஸ்த தேவவநிதாம் லோகைக தீபாங்குராம்
ஸ்ரீ மந்மந்தகடாக்ஷலப்பதவிபவப்ரஹ்மேந்த்ரகங்காதராம்
த்வாம் த்ரைலோக்ய குடும்பிநீம் ஸரஸிஜாம்வந்தே முகுந்தப்ரியாம்
மாநாதீத ப்ரதித விபவாம் மங்களம் மங்களாநாம்
வக்ஷ: பீடீம் மதுவிஜயிநோ பூஷயத்தீம் ஸ்வகாந்த்யா
ப்ரத்யக்ஷõ நுச்ரவிக மஹிமப்ரார்த்தி நீ நயம் ப்ரஜாநாம்
ச்யோ மூர்த்திம் ச்ரியமசரண, த்வாம்சரண்யாம் ப்ரபத்யே
ரக்ஷத்வம் வேததேவேசி தேவ தேவஸ்ய வல்லபே
தாரித்ர்யாத் த்ராஹிமாம் லக்ஷ்மி க்ருபாம் குருமமோபரி.

ராமர்

ஸ்ரீராம சந்த்ர கருணாகர தீனபந்தோ
ஸீதாஸமேத பரதாக்ரஜ ராகவேச
பாபர்த்தி பஞ்ஜன பயாதுர தீனபந்தோ
பாபாம்புதௌ பதித முத்தர மாமநாதம்
ஸ்ரீராகம் தசரதாத்மஜ மப்ரமேயம்
ஸீதாபதிம் ரகுகுலாப்வய ரத்நதீபம்
ஆஜாபுபாஹு மரவிந்த தளாயதாக்ஷம்
ராமம் நிசாசர விநாசகரம் நமாமி.

கிருஷ்ணர்

கோபல ரத்நம் புவனைக ரத்நம்
கோபாங்க நாயௌவந பாக்ய ரத்நம்
ஸ்ரீகிருஷ்ண ரத்நம் ஸுரஸேவ்ய ரத்நம்
பஜா மஹே யாதவ வம்ச ரத்நம்.
லட்சுமி நரசிம்மர்
ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹாய நம; ஹரி ஓம்
பாந்தஸ்மான் புருஸூத வைரிபலவன்
மாதங்க மாத்யத் கடா கும்போச்சாத்ரி
விபாட நாதிகபடு ப்ரத்யேக வஜ்ராயுத;

அனுமான்

வாமே கரே வைரிபிதம் வஹந்தம்
சைலம் பரே ச்ருங்கல ஹாரிடங்கம்
ததாந மச்சச்சவி யஜ்ஞ ஸூத்ரம்
பஜே ஜ்வலத் குண்டலம் ஆஞ்ஜநேயம்.
ஸபீத கௌபீந முதஞ்சிதாங் குளிம்
ஸமுஜ்வலந் மௌஜியஜி நோபவீதிநம்
ஸகுண்டலம் லம்பசிகா ஸமாவ் ருதம்
தமரஞ்ஜநேயம் சரணம் ப்ரபத்யே.

அஞ்சிலே ஒன்று பெற்றான்: அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்றுபெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்: அவன் நம்மை அளித்துக் காப்பான்

சாஸ்தா

யஸ்ய தன்வந்தரீ மாதா பிதாருத்ரோ பிஷக்தம்
தம் சாஸ்தார மஹம் வந்தே மரா வைதயம் தயாநிதிம்.

கருடன்

குங்கு மாங்கித வர்ணாய குந்தேந்து தவளாயச
விஷ்ணு வாஹ நமஸ்துப்யம் பக்ஷிராஜாய நேநம

சக்கரத்தாழ்வார்

ஸஹஸ்ராதித்ய ஸங்காசம் ஸஹஸ்ர வதநாம் பரம்
ஸஹஸ்ர தோஸிஸஹஸ்ராரம்ப்ரபத்யே (அ) ஹம்ஸுதர்சநம்
ஹும் கார பைரவம் பீமம் ப்ரபந்நார்த்தி ஹரம் ப்ரபும்
ஸர்வ பாப ப்ரசமநம் ப்ரபத்யேஹம் ஸுதர்சநம்

பாகவதவோத்தமர்கள்

ப்ரஹ்லாத நாரத தபராசர புண்டரீக
வ்யாஸாம்பரீஷ சுகசௌநக பீஷ்மதால்ம்யாந்
ருக்மாங்க தார்ஜுந வஸிஷ்ட விபீஷணாதீந்
புண்யாநிமாந் பரமபாகவதாந் ஸ்மராபி

திருமால் போற்றி

ஓம் அப்பா போற்றி
ஓம் அறமே போற்றி
ஓம் அருளே போற்றி
ஓம் அச்சுதா போற்றி
ஓம் அரவ சயனா போற்றி
ஓம் அரங்கமா நகராய் போற்றி
ஓம் அற்புத லீலா போற்றி
ஓம் அறுமுகனின் அம்மான் போற்றி
ஓம் அனுமந்தன் தேவே போற்றி
ஓம் ஆதியே அனாதி போற்றி
ஓம் ஆழ்வார்கன் தொழுவாய் போற்றி
ஓம் ஆதி மூலனே போற்றி
ஓம் ஆபத்துச் சகாயா போற்றி
ஓம் ஆனைக்கும் அருள்வாய் போற்றி
ஓம் ஆனந்த மூர்த்தியே போற்றி
ஓம் உமையம்மை அண்ணா போற்றி
ஓம் உலகெலாம் காப்பாய் போற்றி
ஓம் உத்தமர் தொழுவாய் போற்றி
ஓம் உம்பருக் கருள்வாய் போற்றி
ஓம் எங்குமே நிறைந்தாய் போற்றி
ஓம் எண்குண சீலா போற்றி
ஓம் ஏழை பங்காளா போற்றி
ஓம் எழில் நிறவண்ணா போற்றி
ஓம் எழில்மிகு தேவே போற்றி
ஓம் கலியுக வரதா போற்றி
ஓம் கண்கண்ட தேவே போற்றி
ஓம் கருட வாகனனே போற்றி
ஓம் கல்யாண மூர்த்தி போற்றி
ஓம் காமரு தேவே போற்றி
ஓம் காலனைத் தவிர்ப்பாய் போற்றி
ஓம் கோக்களைக் காத்தாய் போற்றி
ஓம் கோவிந்தா முகுந்தா போற்றி
ஓம் சர்வலோகேசா போற்றி
ஓம் சாந்தகுண சீலா போற்றி
ஓம் சீனிவாசா போற்றி
ஓம் சிங்கார மூர்த்தி போற்றி
ஓம் சிக்கலை யறுப்பாய் போற்றி
ஓம் சிவபிரான் மகிழ்வாய் போற்றி
ஓம் தவசிகள் தொழுவாய் போற்றி
ஓம் தரணியைக் காப்பாய் போற்றி
ஓம் திருமகள் மணாளா போற்றி
ஓம் திருமேனி உடையாய் போற்றி
ஓம் திருவேங்கடவா போற்றி
ஓம் தருமலைக் கொழுந்தே போற்றி
ஓம் திருத்துழாய் அணிவாய் போற்றி
ஓம் தீந்தமிழ் அருள்வாய் போற்றி
ஓம் கடலமு தளித்தாய் போற்றி
ஓம் நந்தகோ பாலா போற்றி
ஓம் நான்முகன் பிதாவே போற்றி
ஓம் நாரதர் துதிப்பாய் போற்றி
ஓம் நவமணி தரிப்பாய் போற்றி
ஓம் நரசிம்ம தேவே போற்றி
ஓம் நான்மறை தொழுவாய் போற்றி
ஓம் பாற்கடல் கிடந்தாய் போற்றி
ஓம் பாவலர் பணிவாய் போற்றி
ஓம் தசாவ தாரா போற்றி
ஓம் தயாநிதி ராமா போற்றி
ஓம் தந்தைசொல் காத்தாய் போற்றி
ஓம் தவக்கோலம் பூண்டாய் போற்றி
ஓம் பட்டத்தைத் துறந்தாய் போற்றி
ஓம் பரதனுக் கீந்தாய் போற்றி
ஓம் பாண்டவர் துணைவா போற்றி
ஓம் பரந்தாமா கண்ணா போற்றி
ஓம் பாஞ்சாலி மானம் காத்தாய் போற்றி
ஓம் பார்புகழ் தேவே போற்றி
ஓம் புண்ணய மூர்த்தி போற்றி
ஓம் புலவர்கள் புகழ்வாய் போற்றி
ஓம் வாமன வரதா போற்றி
ஓம் உலகினை அளந்தாய் போற்றி
ஓம் பிரகலாதன் பணிவாய் போற்றி
ஓம் பரகதி அருள்வாய் போற்றி
ஓம் துருவனும் தொழுவாய் போற்றி
ஓம் துருவநிலை தந்தாய் போற்றி
ஓம் சபரியின் கனியே போற்றி
ஓம் நற்கதி தந்தாய் போற்றி
ஓம் வையகம் புகழ்வாய் போற்றி
ஓம் வைகுண்ட வாசா போற்றி
ஓம் முழுமதி வதனா போற்றி
ஓம் மும்மலம் அறுப்பாய் போற்றி
ஓம் கமலக் கண்ணா போற்றி
ஓம் கலைஞான மருள்வாய் போற்றி
ஓம் கஸ்தூரி திலகா போற்றி
ஓம் கருத்தினில் அமர்வாய் போற்றி
ஓம் பவளம்போல் வாயா போற்றி
ஓம் பவப்பணி ஒழிப்பாய் போற்றி
ஓம் நான்கு புயத்தாய் போற்றி
ஓம் நற்கதி அருள்வாய் போற்றி
ஓம் சங்கு சக்கரனே போற்றி
ஓம் சன்மார்க்க மருள்வாய் போற்றி
ஓம் கோபிகள் தலைவா போற்றி
ஓம் கோபமும் தணிப்பாய் போற்றி
ஓம் வேணு கோபாலா போற்றி
ஓம் வேட்கையைத் தணிப்பாய் போற்றி
ஓம் புருடோத் தமனே போற்றி
ஓம் பொன்புகழ் அருள்வாய் போற்றி
ஓம் மாயா வினோதா போற்றி
ஓம் விஜய ராகவனே போற்றி
ஓம் வினையெலாம் ஒழிப்பாய் போற்றி
ஓம் பதும நாபனே போற்றி
ஓம் பதமலர் தருவாய் போற்றி
ஓம் பார்த்த சாரதியே போற்றி
ஓம் பார்வேந்தர் தொழுவாய் போற்றி
ஓம் கரிவரத ராஜா போற்றி
ஓம் கனிவுடன் காப்பாய் போற்றி
ஓம் சுந்தர ராஜா போற்றி
ஓம் சுகமெலாம் தருவாய் போற்றி
ஓம் அனைத்துமே ஆனாய் போற்றி
ஓம் அரி அரி நமோ நாராயணா போற்றி
ராமபிரான் போற்றி
ஓம் அயோத்திக்கு அரசே போற்றி
ஓம் அருந்தவத்தின் பயனே போற்றி
ஓம் அச்சுதானந்த கோவிந்த போற்றி
ஓம் அலவிலா விளையாட்டுடையாய் போற்றி
ஓம் அபயம் அளிக்கும் விரதா போற்றி
ஓம் அறத்தின் நாயகனே போற்றி
ஓம் அன்பர் தம் இதயம் உறைவோய் போற்றி
ஓம் அழகிய திருமுகத்தோய் போற்றி
ஓம் அளவிலா ஆற்றல் படைத்தோய் போற்றி
ஓம் அகிலமெல்லாம் காப்பாய் போற்றி
ஓம் அரிசினம் அகற்றினாய் போற்றி
ஓம் அகலிகை சாபம் தீர்த்தோய் போற்றி
ஓம் அன்பர் அகமகிழும் அற்புத நாமா போற்றி
ஓம் அஞ்ஞான இருள்அகற்றும் அறிவுச்சுடரே போற்றி
ஓம் அளவோடு பேசும் குணநிதியே போற்றி
ஓம் அன்பிலே விளைந்த ஆரமுதே போற்றி
ஓம் அரக்கர்க்குக் கூற்றே போற்றி
ஓம் அனுமன் நினைவகலா தாரக நாமனே போற்றி
ஓம் அங்கதனிடம் அன்பு கொண்டோய் போற்றி
ஓம் அனந்த கல்யாண குணலயா போற்றி
ஓம் அசுவமேத யாக பிரபுவே போற்றி
ஓம் ஆதித்தன் குலக்கொழுந்தே போற்றி
ஓம் ஆண்டகையே போற்றி
ஓம் ஆதரவற்றோர்க்கு ஒரு புகலிடமே போற்றி
ஓம் ஆத்ம-ஞான ஜனகன் திருமகளை மணந்தோய் போற்றி
ஓம் ஆதி மூலமே போற்றி
ஓம் இகல் வெல்லும் இளையவன் அண்ணலே போற்றி
ஓம் இராமநாதனைப் பூஜித்த ஸேதுராமா போற்றி
ஓம் இகபர சுகம் அளிப்பாய் போற்றி
ஓம் உண்மைக்கோர் உருவமே போற்றி
ஓம் உரக சயனா போற்றி
ஓம் உலகம் காக்கும் உத்தமா போற்றி
ஓம் ஊக்கம் கொடுக்கும் <உயிர்ச் சுடரே போற்றி
ஓம் ஊழி முதல்வா போற்றி
ஓம் எழில் நாயகனே போற்றி
ஓம் ஏறுநடையுடை ஏந்தலே போற்றி
ஓம் ஏழு மராமரங்களைத் துளைந்தவனே போற்றி
ஓம் ஏக பாணப்பிரயோகா போற்றி
ஓம் ஏக பத்தினி விரதனே போற்றி
ஓம் ஐம்புலன் வென்றோய் போற்றி
ஓம் ஒப்பிலா ஒளியே போற்றி
ஓம் ஓம்கார தத்துவமே போற்றி
ஓம் ஒளஷத நாம ஸ்வரூபனே போற்றி
ஓம் கவியரசின் உயிர்த் துணைவா போற்றி
ஓம் கபந்தனுக்கு முக்தி கொடுத்தாய் போற்றி
ஓம் கரனை ஒழித்தோய் போற்றி
ஓம் காமகோடி ரூபனே போற்றி
ஓம் காமம் அழிப்பவனே போற்றி
ஓம் காருண்ய மூர்த்தியே போற்றி
ஓம் காலம் எல்லாம் நிலைத்து நிற்கும் கருப்பொருளே போற்றி
ஓம் காசி முக்திக்குக் காரண நாமா போற்றி
ஓம் குரு பக்த ரத்தினமே போற்றி
ஓம் கோசலை மைந்தா போற்றி
ஓம் கோதண்ட பாணியே போற்றி
ஓம் சங்கடம் தீர்க்கும் ஸத்குருவே போற்றி
ஓம் சத்யவாக்கு சத்ய விக்ரமனே போற்றி
ஓம் சரணாகத வத்ஸலா போற்றி
ஓம் சபரிக்கு மோஷம் கொடுத்தாய் போற்றி
ஓம் சோக நாசனா போற்றி
ஓம் சோலைத் திருமலை அழகனே போற்றி
ஓம் சௌபாக்கியம் தருவாய் போற்றி
ஓம் தசரதன் தவப்புதல்வா போற்றி
ஓம் தாய் தந்தை சொல் வேதமெனக் கொண்டோய் போற்றி
ஓம் தியாகப்பரப்பிரம்மம் தொழும் கானமூர்த்தியே போற்றி
ஓம் நிலையானவனே போற்றி
ஓம் நித்ய மங்கள வைபவா போற்றி
ஓம் நீல மேக சியாமளனே போற்றி
ஓம் பரசுராமன் கர்வம் அடக்கினாய் போற்றி
ஓம் பட்டமரம் தளிர்க்க வைக்கும் பாவனநாமா போற்றி
ஓம் பத்துத்தலை தத்தத் கணைதொடுக்கும் பரம்பொருளே போற்றி
ஓம் பண்டரிநாத விட்டலா போற்றி
ஓம் பரத்வாஜ முனிவர் தொழும் பாதனே போற்றி
ஓம் பங்கஜ லோசனா போற்றி
ஓம் பரிமள வாசனா போற்றி
ஓம் பாதுகா பட்டாபிஷேக மூர்த்தியே போற்றி
ஓம் பிறவிப்பெருங்கடல் புணையாவாய் போற்றி
ஓம் மாசிலா மணியே போற்றி
ஓம் மாருதியின் பிரபுவே போற்றி
ஓம் மாதவமுனிவர்தாள் தேடி வணங்குவாய் போற்றி
ஓம் மாயிருள் ஞாலம் மறுவின்றி விளக்குவாய் போற்றி
ஓம் மாதேவன் சந்ததம் சிந்திக்கும் தாரகநாமா போற்றி
ஓம் மாய மாரீசனை மாய்த்தோய் போற்றி
ஓம் முக்குணம் கடந்தோய் போற்றி
ஓம் மூவிரு முகன் செல்வ மாமனே போற்றி
ஓம் ரகு வம்சத்தை நிலை நிறுத்தியவனே போற்றி
ஓம் லவகுசர்களின் அன்புத் தந்தையே போற்றி
ஓம் வசிஷ்ட முனிவரால் முடிசூட்டப் பெற்றாய் போற்றி
ஓம் வாயுகுமாரனின் மனநிறைவே போற்றி
ஓம் வானரர் தொழுது ஏத்தும் வள்ளலே போற்றி
ஓம் விராதனை வதம் செய்தாய் போற்றி
ஓம் விஷயங்களைக் கடந்தவனே போற்றி
ஓம் விருப்பு வெறுப்பு அற்றவனே போற்றி
ஓம் விஜயராகவனே போற்றி
ஓம் விசுவாமித்திரன் வேள்வி காத்தோய் போற்றி
ஓம் வீடணுக்கு அபயமும், அரசும் அளித்தாய் போற்றி
ஓம் வெற்றிக்கு ஒருவனே போற்றி
ஓம் வேண்டுவார்க்கு வேண்டுவன ஈவாய் போற்றி
ஓம் வேடன் குகனோடும் ஐவரானாய் போற்றி
ஓம் வேத முதல்வா போற்றி
ஓம் வேந்தர்க்கு வேந்தனே போற்றி
ஓம் வேதனை தீர்ப்பாய் போற்றி
ஓம் வேதங்கள் தேடும் பாதனே போற்றி
ஓம் வேதாந்த சாரமே போற்றி
ஓம் வைகுண்ட வாசா போற்றி
ஓம் வைதேஹி மணாளா போற்றி
ஓம் வைனதேய பிரபுவே போற்றி
ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி
ஓம் ஸ்ரீ ஸீதா லக்ஷ்மண பரத சத்ருக்ண ஹனுமத் சமேத ஸ்ரீ ராமச்சந்த்ர மூர்த்தியே போற்றி போற்றி
தன்வந்திரி பகவான் போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் திருப்பாற்கடலில் தோன்றியவனே போற்றி
ஓம் தீர்க்காயுள் தருபவனே போற்றி
ஓம் துன்பத்தைத் துடைப்பவனே போற்றி
ஓம் அச்சம் போக்குபவனே போற்றி
ஓம் அஷ்டாங்க யோகியே போற்றி
ஓம் அபயம் அளிப்பவனே போற்றி
ஓம் அன்பு கொண்டவனே போற்றி
ஓம் அமரனே போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் அமரப் பிரபுவே போற்றி
ஓம் அருளை வாரி வழங்குபவனே போற்றி
ஓம் அடைக்கலம் கொடுப்பவனே போற்றி
ஓம் அழிவற்றவனே போற்றி
ஓம் அமிர்தம் அளிப்பவனே போற்றி
ஓம் அமிர்த கலசம் ஏந்தியவனே போற்றி
ஓம் அமிர்தத்தை உற்பத்தி செய்தவனே போற்றி
ஓம் அமிர்தமானவனே போற்றி
ஓம் அனைத்தையும் அறிந்தவனே போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் ஆயுர் வேதமே போற்றி
ஓம் ஆயுர் வேதத்தின் தலைவனே போற்றி
ஓம் ஆயுளை நீட்டிப்பவனே போற்றி
ஓம் ஆயுதக்கலை நிபுணனே போற்றி
ஓம் ஆத்ம பலம் தருபவனே போற்றி
ஓம் ஆசாபாசம் அற்றவனே போற்றி
ஓம் ஆனந்த ரூபனே போற்றி
ஓம் ஆகாயத் தாமரையே போற்றி
ஓம் ஆற்றல் பெற்றவனே போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் உலக ரட்சகனே போற்றி
ஓம் உலக நாதனே போற்றி
ஓம் உலக சஞ்சாரியே போற்றி
ஓம் உலகாள்பவனே போற்றி
ஓம் உலகத்தைக் காத்தருள்பவனே போற்றி
ஓம் உலக மக்களால் பூஜிக்கப்படுபவனே போற்றி
ஓம் உயிர் காப்பவனே போற்றி
ஓம் உயிர்காக்கும் உறைவிடமே போற்றி
ஓம் உண்மையான சாதுவே போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் எமனுக்கும் எமனானவனே போற்றி
ஓம் எழிலனே போற்றி
ஓம் எளியார்க்கும் எளியவனே போற்றி
ஓம் எல்லா ஐஸ்வர்யங்களையும் அணிந்தவனே போற்றி
ஓம் எல்லா நலன்களும் அருள்பவனே போற்றி
ஓம் எல்லோருக்கும் வாரி வழங்குபவனே போற்றி
ஓம் எல்லையில்லா இன்பப் பெருக்கே போற்றி
ஓம் எல்லையில்லா பேரின்பமே போற்றி
ஓம் எல்லையற்ற மகிமை கொண்டவனே போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் கருணைக் கடலே போற்றி
ஓம் கருணைக் அமிர்தக்கடலே போற்றி
ஓம் கருணா கரனே போற்றி
ஓம் காக்கும் தெய்வமே போற்றி
ஓம் காத்தருள் புரிபவனே போற்றி
ஓம் காருண்ய மூர்த்தியே போற்றி
ஓம் காவேரியில் ஸ்நானம் செய்பவனே போற்றி
ஓம் குருவே போற்றி
ஓம் கும்பிடும் தெய்வமே போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் சகல நன்மைகளையும் தருபவனே போற்றி
ஓம் சகல செல்வங்களையும் வழங்குபவனே போற்றி
ஓம் சமத்துவம் படைப்பவனே போற்றி
ஓம் சம தத்துவக் கடவுளே போற்றி
ஓம் சகிப்புத் தன்மை மிக்கவனே போற்றி
ஓம் சங்கு சக்கரம் ஏந்தியவனே போற்றி
ஓம் சர்வேஸ்வரனே போற்றி
ஓம் சர்வ லோக சஞ்சாரியே போற்றி
ஓம் சர்வலோகாதிபதியே போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் சர்வ மங்களம் அளிப்பவனே போற்றி
ஓம் சந்திரனின் சகோதரனே போற்றி
ஓம் சிறந்த ஆற்றல் கொண்டவனே போற்றி
ஓம் சித்தி அளிப்பவனே போற்றி
ஓம் சிறந்த அறநெறியோனே போற்றி
ஓம் சீரங்கத்தில் வாழ்பவனே போற்றி
ஓம் சுகம் அளிப்பவனே போற்றி
ஓம் சுகபோக பாக்யம் தருபவனே போற்றி
ஓம் சுபம் தருபவனே போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் தசாவதாரமே போற்றி
ஓம் தீரனே போற்றி
ஓம் தெய்வீக மருந்தே போற்றி
ஓம் தெய்வீக மருத்துவனே போற்றி
ஓம் தேகபலம் தருபவனே போற்றி
ஓம் தேவாதி தேவனே போற்றி
ஓம் தேவர்களால் வணங்கப்படுபவனே போற்றி
ஓம் தேவாமிர்தமே போற்றி
ஓம் தேனாமிர்தமே போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் பகலவனே போற்றி
ஓம் பக்திமயமானவனே போற்றி
ஓம் பண்டிதர்களின் தலைவனே போற்றி
ஓம் பாற்கடலில் தோன்றியவனே போற்றி
ஓம் பாதபூஜைக்குரியவனே போற்றி
ஓம் பிராணிகளின் ஜீவாதாரமே போற்றி
ஓம் புருஷோத்தமனே போற்றி
ஓம் புராண புருஷனே போற்றி
ஓம் பூஜிக்கப்படுபவனே போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் மரணத்தை வெல்பவனே போற்றி
ஓம் மஹா பண்டிதனே போற்றி
ஓம் மஹா மேதாவியே போற்றி
ஓம் மஹா விஷ்ணுவே போற்றி
ஓம் முக்தி தரும் குருவே போற்றி
ஓம் முழு முதல் மருத்துவனே போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் ஸ்ரீ சக்தியே! தன்வந்திரி பகவானே போற்றி போற்றி.

ஸ்ரீ விஷ்ணு அஷ்டோத்தர சதநாமாவளி

ஓம் அச்யுதாய நம:
ஓம் அதீந்தராய நம:
ஓம் அனாதிநிதனாய நம:
ஓம் அளிருத்தாய நம:
ஓம் அம்ருதாய நம:
ஓம் அரவிந்தாய நம:
ஓம் அஸ்வத்தாய நம:
ஓம் ஆதித்யாய நம:
ஓம் ஆதிதேவாய நம:
ஓம் ஆனத்தாய நம:
ஓம் ஈஸ்வராய நம:
ஓம் உபேந்த்ராய நம:
ஓம் ஏகஸ்மை நம:
ஓம் ஓருஸ்தேஜோத்யுதிதராய நம:
ஓம் குமுதாய நம:
ஓம் க்ருதஜ்ஞாய நம:
ஓம் க்ருஷ்ணாய நம:
ஓம் கேஸவாய நம:
ஓம் ÷க்ஷத்ரஜ்ஞாய நம:
ஓம் கதாதராய நம:
ஓம் கருடத்வஜாய நம:
ஓம் கோபதயே நம:
ஓம் கோவிந்தாய நம:
ஓம் கோவிதாம்பதயே நம:
ஓம் சதுர்ப்புஜாய நம:
ஓம் சதுர்வ்யூஹாய நம:
ஓம் ஜனார்த்தனாய நம:
ஓம் ஜ்யேஷ்ட்டாய நம:
ஓம் ஜ்யோதிராதித்யாய நம:
ஓம் ஜயோதிஷே நம:
ஓம் தாராய நம:
ஓம் தமனாய நம:
ஓம் தாமோதராய நம:
ஓம் தீப்தமூர்த்தயே நம:
ஓம் து:ஸ்வப்ன நாஸனாய நம:
ஓம் தேவகீநந்தனாய நம:
ஓம் தனஞ்ஜயாய நம:
ஓம் நந்தினே நம:
ஓம் நாராயணாய நம:
ஓம் நாரஸிம்ஹவபுஷே நம:
ஓம் பத்மநாபாய நம:
ஓம் பத்மினே நம:
ஓம் பரமேஸ்வராய நம:
ஓம் பவித்ராய நம:
ஓம் ப்ரத்யும்னாய நம:
ஓம் ப்ரணவாய நம:
ஓம் புரந்தராய நம:
ஓம் புருஷாய நம:
ஓம் புண்டரீகாக்ஷõய நம:
ஓம் ப்ருஹத்ரூபாய நம:
ஓம் பக்தவத்ஸலாய நம:
ஓம் பகவதே நம:
ஓம் மதுஸூதனாய நம:
ஓம் மஹாதேவாய நம:
ஓம் மஹாமாயாய நம:
ஓம் மாதவாய நம:
ஓம் முக்தானாம் பரமாகதயே நம:
ஓம் முகுந்தாய நம:
ஓம் யக்ஞகுஹ்யாய நம:
ஓம் யஜ்ஞபதயே நம:
ஓம் யஜ்ஞாஜ்ஞாய நம:
ஓம் யஜ்ஞாய நம:
ஓம் ராமாய நம:
ஓம் லக்ஷ்மீபதே நம:
ஓம் லோகாத்யக்ஷõய நம:
ஓம் லோஹிதாக்ஷõய நம:
ஓம் வரதாய நம:
ஓம் வர்த்தனாய நம:
ஓம் வராரோஹாய நம:
ஓம் வஸுப்ரதாய நம:
ஓம் வஸுமனஸே நம:
ஓம் வ்யக்திரூபாய நம:
ஓம் வாமனாய நம:
ஓம் வாயுவாஹனாய நம:
ஓம் விக்ரமாய நம:
ஓம் விஷ்ணவே நம:
ஓம் விஷ்வக்ஸேனாய நம:
ஓம் வ்ரு÷ஷாதராய நம:
ஓம் வேதவிதே நம:
ஓம் வேதாங்காய நம:
ஓம் வேதாய நம:
ஓம் வைகுண்ட்டாய நம:
ஓம் ஸரணாய நம:
ஓம் ஸாந்நாய நம:
ஓம் ஸார்ங்கதன்வனே நம:
ஓம் ஸாஸ்வதஸ்தாணவே நம:
ஓம் ஸிகண்டனே நம:
ஓம் ஸிவாய நம:
ஓம் ஸ்ரீதராய நம:
ஓம் ஸ்ரீநிவாஸாய நம:
ஓம் ஸ்ரீமதே நம:
ஓம் ஸுபாங்காய நம:
ஓம் ஸ்ருதிஸாகராய நம:
ஓம் ஸங்கர்ஷணாய நம:
ஓம் ஸதாயோகினே நம:
ஓம் ஸர்வதோமுகாய நம:
ஓம் ஸர்வேஸ்வராய நம:
ஓம் ஸஹஸ்ராக்ஷõய நம:
ஓம் ஸ்கந்தாய நம:
ஓம் ஸாக்ஷிணே நம:
ஓம் ஸுதர்ஸனாய நம:
ஓம் ஸுரானந்தாய நம:
ஓம் ஸுலபாய நம:
ஓம் ஸூக்ஷ்மாய நம:
ஓம் ஹரயே நம:
ஓம் ஹிரண்யகர்ப்பாய நம:
ஓம் ஹிரண்யநாபாய நம:
ஓம் ஹ்ருஷீகேஸாய நம:

திருமால் புகழ்ப் பாடல்கள்
(கம்பர்)

வேதங்கள் அறைகின்ற உலகெங்கும் விரிந்தனஉன்
பாதங்கள் இவைஎன்னில் படிவங்கள் எப்படியோ
ஒதங்கொள் கடலன்றி ஒன்றினோ (டு) ஒன்றொவ்வாப்
பூதங்கள் தொறும் உறைந்தால் அவையுன்னைப் பொறுக்குமோ ?
தாய்தன்னை அறியாத கன்றில்லை ; தன் கன்றை
ஆயும் அறியும் ; உலகின்தாய் ஆகி, ஐய !
நீயறிதி எப்பொருளும் ; அவை யுன்னை நிலையறியா
மாயை இ(து) என்கொலோ? வாராதே வரவல்லாய் !
(வேறு)
தோய்ந்தும் பொருள் அனைத்தும் தோயாது நின்ற
சுடரே ! தொடக் கறுத்தோர் சுற்றமே ! பற்றி
நீந்த அரிய நெடுங் கருணைக்(கு) எல்லாம்
நிலையமே! வேதம் நெறிமுறையின் நேடி
ஆய்ந்த உணர்வின் உணர்வே ! பகையால்
அலைப்புண்(டு) அடியேம் அடிபோற்ற அந்நாள்
ஈந்த வரம்உதவ எய்தினையே எந்தாய் !
இருநிலத்தவோ? நின் இணையடித்தா மரைதாம் !
மேவாதவர் இல்லை மேவினரும் இல்லை
வெளியோடிருள் இல்லை மேல்கீழும் இல்லை
மூவாமை இல்லை மூத்தமையும் இல்லை
முதல்இடையோ டீறில்லை, முன்னொடுபின் இல்லை !
தேவா ! இங்கு இதுவோ நீ சென்ற நிலை என்றால்,
சிலையேந்தி வந்தெம்மைச் சேவடிகள் நோவக்
காவா தொழியிற் பழிபெரிதோ? அன்றேல்
கருங்கடலில் கண்வளர்வாய் ! கைம்மாறும் உண்டோ ?
நாழி நவைநீர் உலகெலாம் ஆக
நளினத்து நீதந்த நான்முகனார் தாமே
ஊழி பலபலவும் நின்றளந்தால் ஒன்றும்
உலவாப் பெருங்குணத்(த) உத்தமனே ! மேல்நாள்
தாழி தரையாகத் தண்தயிர் நீராகத்
தடவரையே மத்தாகத் தாமரைக்கை நோவ
ஆழி கடைந்தமுதம் எங்களுக்கே ஈந்தாய்
அவுணர்கள்தாம் நின்அடிமை ஆகாமை உண்டே
ஆண்டாள் பாசுரங்கள்
கருப்பூரம் நாறுமோ
கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான்
தித்தித்து இருக்குமோ
மறுப்பு ஒசித்த மாதவன்தன்
வாய்ச் சுவையும் நாற்றமும்
விருப்பு உற்றுக் கேட்கிறேன்
சொல் ஆழி வெண்சங்கே !
நாறு நறும் பொழில் மா
லிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய்
வாய்நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைத்த அக்கார
அடிசில் சொன்னேன்
ஏறுதிரு உடையான் இன்று வந்து
இவை கொள்ளுங் கோலோ !
வாராணமாயிரம்
வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்று எதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான் !
நாளை வதுவை மணம் என்று நாள்இட்டு
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான்ஓர்
காளை புகுதக் கனாக்கண்டேன் தோழீநான் !
மத்தளம் கொட்ட வரிச்சங்கம் நின்று ஊத
முத்தடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ நான் !
திருப்பாவை
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்கு பெரும் செந்நெல் ஊடு கயலுகன
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேல் ஓர் எம்பாவாய் !
தொண்டரடிப் பொடியாழ்வார் பாசுரங்கள்
பச்சைமா மலைபோல் மேனி
பவளவாய்க் கமலச் செங்கண்
அச்சதா அமரர் ஏறே
ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகர் உளானே !
வேதநூல் பிராயம் நூறு
மனிதர்தாம் புகுவ ரேலும்
பாதியும் உறங்கிப் போகும்
நின்றுஅதில் பதினை யாண்டு
பேதை பாலகன் அதாகும்
பிணிபசி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன்
அரங்கமா நகர் உளானே !
திருமங்கை ஆழ்வார் பாசுரங்கள்
வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
பெருந்துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடிஇளையவர் தம்மோடு
அவர்தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால்
உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து
நாடினேன் நாடி நான்கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம் !

குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார்
படுதுயர் ஆயின எல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள்விசும்பு அருளும்
அருளொடு பெருநிலம் அளிக்கும்
வலம்தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்
நலம்தரும் சொல்லை நான்கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம் !
செங்கால் மடநாராய் இன்றே சென்று
திருக்கண்ணபுரம் புக்குஎன் செங்கண் மாலுக்கு
என்காதல் என்துணைவர்க்கு உரைத்தி யாகில்
இதுஒப்பது எனக்கு இன்பம் இல்லைநாளும்
பைங்கான்மீது எல்லாம் உனதே ஆகப்
பழனமீன் கவர்ந்து உண்ணத் தருவன் தந்தால்
இங்கே வந்து இனிது இருந்து உன்பெடையும் நீயும்
இருநிலத்தில் இனிது இன்பம் எய்தலாமே

எளிய பரிகாரங்கள்

எளிய பரிகாரங்கள் அரிய பலன்கள்
எந்த விதமான கிரக பாதிப்புகளுக்கும் கீழ்க்கண்ட பரிஹாரங்களை தொடர்ந்து செய்து வந்தால் கஷ்டங்களின் தாக்கம் வெகுவாகக் குறையும்.

1) காகத்திற்கு உணவிடுதல்.

2) பறவைகளுக்கு தாகம் தீர்க்க மாடியில் நீர் வைத்தல்.

3) பசுவிற்கு அகத்திகீரை, பச்சரிசி வெல்லம் தருதல்.

4) எறும்பு உண்ண பச்சரிசி மாவில் கோலமிடுதல்.

5) சனிக்கிழமை கருப்பு நிற நாய்களுக்கு உணவு,  சப்பாத்தி தருதல்.

6) மீன்களுக்கு பொரி அளித்தல்.

7) மலை மேல் உள்ள கோவில்களில் உள்ள குரங்குகளுக்கு வாழைப்பழம் தருதல்.

8) கோயில் விளக்கிற்கு எண்ணை அளித்தல்.

9) ஊனமுற்றவர்களுக்கு உணவு, உடை வழங்குதல்.

10) அரசமரத்திற்கு நீர் ஊற்றுதல்.

11) அன்னதானம், நீர்ப்பந்தல் போன்றவற்றிற்கு உதவுதல்

நல்வினைக்கான நன்மைகள்-

நல்வினைக்கான நன்மைகள்-கருடபுராணம்!
1 அன்னதானம் செய்தல் விரும்பிய உலகத்தில் ஒரு வருடம் வீதம் சுகித்திருப்பார்.

2 கோ தானம் செய்தல் கோலோகத்தில் வாழ்வர்.

3 பசு கன்றீனும் சமயம் தானம் கொடுத்தவருக்கு கட்டாயம் வைகுண்ட வாசம் உண்டு.

4 குடை தானம் செய்தவர் 1000 ஆண்டுகள் வருணலோகத்தில் சுகம் அனுபவிப்பார்.

5 தாமிரம்; நெய், கட்டில்,; மெத்தை, ஜமுக்காளம், பாய்,; தலையனை இதில் எதை தானம் செய்தாலும் சந்திலலோகத்து சுகங்களை அனுபவிப்பார்.

6 வஸ்திர தானம் கொடுத்தவருக்கு 10000 ஆண்டுகள் வாயுலோகத்தில் வாழ்வார்.

7 இரத்தம்,; கண்,; உடல் தானம் கொடுத்தவருக்கு அக்கினிலோகத்தில் ஆனந்தமாயிருப்பார்.

8 ஆலயத்துக்கு யானை தானம் கொடுத்தவருக்கு இந்திரனுக்கு சமமான ஆசனத்;தில் அமர்ந்திருப்பார்.

9 குதிரையும், பல்லக்கும் தானம் கொடுத்தவருக்கு 14 இந்திரன் காலம் வரை வருணலோகத்தில் வாழ்வார்.

10 நந்தவனங்களை ஆலயத்துக்கு அளிப்பவர் ஒரு மன் வந்தரகாலம் வாயுலோகத்தில் வாழ்வார்.

11 தானியங்களையும், நவரத்தினங்களையும் தானம் கொடுத்தவருக்கு மறு ஜென்மத்தில் அறிவாளியாகவும் தீர்க்காயுள் கொண்டவராயும் வாழ்வர்.

12 பயன் கருதாது தானம்செய்பவரின் மரணம் உன்னதமாயிப்பதோடு மீண்டும் பிறவி வாய்ப்பதில்லை.

13 நற்செயலை விரும்பி செய்கிறவர்கள் சூரியலோகத்திற்கு செல்கிறார்கள்.

14 தீர்த்த யாத்திரை புரிகின்றனர் சத்தியலோக வாசம் கிட்டுகிறது.

15 ஒரு கன்னிகையை ஒழூக்கமாக வளர்த்து விவாகம் செய்து கொடுப்பவருக்கு 14 இந்திர ஆயுட்காலம் வரை அமராவதியில் சுகித்திருப்பர்.

16 பொன் வெள்ளி ஆபரணங்களைத் தானம் கொடுத்தவருக்கு குபேர லோகத்தில் ஒரு மன் வந்தரம் வாழ்வார்.

17 பண உதவி செய்பவர்கள் ஸ்வேத தீபத்தில் நெடுங்காலம் வாழ்வார்கள்.

18 நீர் நிலைகளை சீர்திருத்துபவரும்
உண்டாக்குபவரும் ஜனலோகத்தில் நீண்டகாலம் ; வாழ்வார்கள்.

19 பயனுள்ள மரங்களை நட்டுப் பாதுகாப்பவர் தபோ லோகத்தை அடைகிறார்.

20 புராண நிகழ்ச்சிகளைக் குறிக்கும் சிற்பங்களையுடைய கோபுரம் கட்டும் செலவினை ஏற்றால் 64 ஆண்டுகள் பரமபத்திலிருப்பான்.

21 தெய்வம் பவனி வரும் வீதிகளை செம்மைப்படுத்துபவர் 10000 வருடங்கள் இந்திரலோகத்தில் சுகித்திருப்பார்.

22 பௌர்ணமியில் டோலோற்சவம் செய்பவர் இம்மையிலும் மறுமையிலும் இன்பமடைவார்.

23 தாமிரப்பாத்திரத்தில் எள்ளைத் தானம் கொடுத்தவருக்கு நற்குலத்தில் உதித்து திடகாத்திரமாக கீர்த்தியோடு பிரகாசிப்பார்.

24 சுவையான பழங்களைத் தானம் கொடுத்தவருக்கு ஒரு கனிக்கு ஒரு ஆண்டு வீதம் கந்தர்வ லோகத்தில் சுகித்திருப்பார்.

25 ஒரு சொம்பு நல்ல தண்ணீரை நல்லவர்களுக்குத் தானம் கொடுத்தவருக்கு கைலாய வாசம் கிட்டும்
26 அருணோதயத்தில் கங்கையில் நீராடுபவர் 60000 ஆண்டுகள் பரமபத்திலிருப்பர்.

27 விரதம் நோன்புகளை பக்தியுடன் கடைபிடிப்பவர் 14 இந்திர ஆயுட்காலம் வரை சொர்க்கபுரியில் வாசம் செய்வர்.

28 சுதர்சன ஹோமமும,; தன்வந்திரி ஹோமமும் செய்பவர் ஆரோக்கியவானாக சத்ருக்களில்லாதவராக தீர்க்காயுளுடன் வாழ்வர்
29 ஷோடச மகாலெட்சுமி பூiஐயை முறையோடு செய்பவர் குலம் பதினாறு பேறுகளையும் பெற்று பெருமையுடன் விளங்குவர்.

30 இதைப் படிப்பவரும, கேட்பவரும,; புண்ணிய காலங்களில் தானம் கொடுப்பவரும் தனது அந்திம காலத்தில் நல்ல உலகத்தை அடைந்து இன்புறுவார்கள். அவர்களின் பெற்றோரும் மிதுர்களும் முக்தி பெறுகின்றனர்.

எந்த எந்த சுகத்தை யார் யார் விரும்புகின்றார்களோ அவரவர் அதற்குரிய பொருட்களை உயரிய ஓழுக்கமுள்ளவர்களுக்குத் தானம் செய்தால் அந்தந்த சுகத்தை அடைவார்கள்

காயத்ரி மந்திரம்

காயத்ரி மந்திரம் உடலை இயக்கும் ஒரு ஜிம்
காயத்ரி மந்திரத்தினைப் பற்றி சுவாமி விவேகானந்தர் குறிப்பிடும் பொழுது., "மந்திரங்களின் கிரீடம் காயத்ரி மந்திரம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜேபிஎஸ் ஹால்டேன் என்ற பிரபல விஞ்ஞானி (1892—1964) காயத்ரி மந்திரத்தினைப் பற்றி குறிப்பிடும் பொழுது காயத்ரி மந்திரம் ஒவ்வொரு இரசாயன கூடங்களின் வாயில் கதவிலும் காயத்ரி மந்திரம் பொறிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் "நதிகளில் நான் கங்கையாகவும., மலைகளில் நான் விந்திய மலையாகவும்., மந்திரங்களில் நான் காயத்ரி மந்திரமாகவும் இருக்கின்றேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

சுவாமி இராமகிருஷ்ண பரமஹமஸர் கூறுகையில் "பெரிய பெரிய கடுந்தவ முயற்சிகளில் மனிதர்கள் ஈடுபடுவதனைக் காட்டிலும்., காயத்ரி மந்திரத்தினை ஜபிப்பது மிகப்பெரிய சாதனையாகும். இது மிக சிறிய மந்திரம்தான். ஆனால், மிக மிக சக்தி வாய்ந்தது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல மேலை நாட்டு ஞானி ஆர்தர் கொயெஸ்ட்லர் "காயத்ரி மந்திரம் 1000 ஆட்டம் பாம்களுக்குச் (Atom Bomb) சமம்" எனக் குறிப் பிட்டுள்ளார்.

ஜெர்மன் தத்துவ ஞானி மெக்ஸ் முல்லர் (1823—1900) அவர்கள் "ஒளியினை தவம் செய்து நம் மூளை., மனதினை உயர்த்துவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மகாத்மா காந்தி (1869—1948) அவர்கள் "யார் ஒருவர் காயத்ரி மந்திரத்தினை ஜபிக் கின்றாரோ அவன் நோய்க்கு ஆளாக மாட்டார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

காயத்ரி மந்திரத்தினை சொல்லுவதன் பொருள் "உயர் அறிவு சக்தியினை அளித்து, அறியாமையை நீக்க வேண்டும்" என்பதாகும்.

இம்மந்திரம் சொல்லப்படும் பொழுது எழும் அதிர்வுகள் உடலில் 24 சுரப்பிகளை ஊக்குவிக்கின்றது. இதன் காரணமாக 24 வகை சக்திகள் உடலில் உண்டாகின்றன.
காயத்ரி மந்திரத்திற்கு ஜாதி., மதம் என்ற எந்த பிரிவும் கிடையாது.

தத் — வெற்றி
ச — வீரம்
வி — பராமரிப்பு
து — நன்மை
வ — ஒற்றுமை
ரி — அன்பு
நி — பணம்
யம் — அறிவு
ஃபர் — பாதுகாப்பு
க்கோ — ஞானம்
த்தி — அழுத்தம்
வா — பக்தி
ஸ்யா — நினைவாற்றல்
ஃத்தி — மூச்சு
மா — சுய ஒழுக்கம்
யோ — விழிப்புணர்வு
யோ — உருவாக்குதல்
நஹ — இனிமை
பரா — நல்லது
சோ — தைரியம்
த்தா — ஞானம்
யட் — சேவை

காயத்ரி மந்திரம் என்றால் என்ன..?

வேதத்திலிருந்து வந்த அனைவருக்கும் பொதுவான மந்திரம் தான் காயத்ரி மந்திரம்.
ஓம் — தெய்வீக சக்தி, ஒலி சின்னம்
ப்பூ — உடல் விமானம்
புவஹா — நிழலிடா விமானம்
ஸ்வ — வான விமானம்
தத் — அந்த தலை தெய்வத்தின்
ஸவித்து — பிரபஞ்சம் தயையும் சக்தி
வரேன்யம் — வணங்க வேண்டும்
பர்கோ — பிரபல
தேவஸ்ய — பிரகாசமிக்க
தீமஹி — நம் த்யானம்
தியோ — அறிவினை
யா — யார்
நஹ — எங்கள்
ப்ரசோதயாத் — தெளிவுப்படுத்துங்கள்

"ஓம் பூர் : புவ : ஸீவ :
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ : யோந: ப்ரசோதயாத்"

நம் புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள்.

இம் மந்திரம் ரிஷி விஸ்வாமித்திரரால் கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய பகவானை நோக்கி வழிபடுவதாக இம் மந்திரம் அமைந்துள்ளது. மிக அதிக சக்தி கொண்டது. அதிர்வுகள் மூலம் ஆக்கப்பூர்வ சக்தியினை ஏற்படுத்துவது. வேதங்களின் தாய் தான் காயத்ரி தேவி. இம் மந்திரம் சொல்லப்படும் இடங்களில் எல்லாம் இத்தேவி இருப்பாள். இத் தேவிக்கு சாவித்திரி., சரஸ்வதி என்ற பெயரும் உண்டு.

காயத்ரி ஐம்புலன்களின் அதிபதி. சாவித்திரி ப்ராண சக்தி. சாவித்திரி என்பது உண்மையைக் குறிக்கின்றது. சரஸ்வதி வாக்கின் அதிபதி. ஆக., உண்மையான சிந்தனை., சொல், செயல் இவற்றினை குறிப்பதாக அமைகின்றது. காயத்ரி மந்திரம் வேதத்தின் சாரம். இதனை முழு கவனத்தோடே சொல்ல வேண்டும். காலை., மாலை இருவேளையும் சொல்லலாம். அனைவரும் சொல்லலாம். ஹிருதயம் சுத்தமாகும். தீய எண்ணங்கள்., கவலைகள் நீங்கும். குறிப்பாக., பள்ளி மாணவர் திறமையாகப் படிப்பார்கள்.

காயத்ரி மந்திரம் ஜபிப்பதன் பலன்கள்

★ கம்பீரத் தோற்றம்.
★ தரமான பேச்சு.
★ வறுமை., குறை நீங்குதல்.,
★ பாதுகாப்பு வட்டம்.
★ கண்ணில் அறிவு தெரிதல்.
★ அபாயம்., தேவையற்ற சூழ்நிலை நீங்கும்.
★ நரம்புகளும்., சுரப்பிகளும் ஊக்குவிக்கப்படும்.
மேலும்.,
★ அமைதியாய் இருப்பர்.
★ நற்செயல்களில் ஈடுபடுவர்.
★ காந்த சக்தி ஆகியவை உருவாகும்.
மேலும்.,
★ வாழ்க்கையில் தடைகளை நீக்கும்.
★ மூளையை பிரகாசிக்கச் செய்யும்.
★ உள்ளுணர்வினை தெளிவாக்கும்.
★ உயர் உண்மைகள் தெரிய வரும்.
— என்றும் கூறப்படுகின்றது.

டாக்டர் ஹெவார்ட் ஸ்டியன் கெரில் என்ற அமெரிக்க விஞ்ஞானி காயத்ரி மந்திர பலன்களாக பல செய்திகளை வெளியிட்டுள்ளார். ஆனால்., இதற்கு மேலும் ஆதாரப்பூர்வம் தேவைப்படுகின்றது....
கடந்த சில ஆண்டுகளில் சில வெளிநாடுகளில் காலை 7 மணிக்கு சுமார் 15 நிமிடங்கள் தொடர்ந்து காயத்ரி மந்திரத்தினை ஒலிபரப்புவதாக கூறப்பட்டுள்ளது

எந்த ராசிக்காரர்கள் எந்த தெய்வத்திற்கு வெற்றிலையை வைத்து வழிப்பட்டால் துன்பம் தீரும்

எந்த ராசிக்காரர்கள் எந்த தெய்வத்திற்கு வெற்றிலையை வைத்து வழிப்பட்டால் துன்பம் தீரும்!
நம் அனைவருக்கும் வெற்றிலை என்பது தாம்பு ல தட்டில் வைக்கும் ஒரு பொருள். ஆனால் வெற்றிலையை கொண்டு பரிகாரம் செய்யலாம் என்பது தெரியாத விஷயம். எந்த ராசிக்காரர்கள் எந்த தெய்வத்திற்கு வெற்றிலையை வைத்து வழிப்பட்டால் துன்பம் தீரும் என்பதை பற்றி பார்ப்போம்.

மேஷம்

வெற்றிலையில் மாம்பழம் வைத்து முருகனை செவ்வாய் கிழமையில் வழிப்பட்டால் துன்பங்கள் அகலும்.

ரிஷபம்

வெற்றிலையில் மிளகு வைத்து செவ்வாய் கிழமை ராகுவை வழிப்பட்டால் துன்பம் விலகி இன்பம் கிட்டும்.

மிதுனம்

வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து இஷ்ட தெய்வத்தை புதன் கிழமையில் வழிப்பட்டால் துன்பம் விலகும்.

கடகம்

வெற்றிலையில் மாதுளம்பழம் வைத்து வெள்ளிக்கிழமை காளி தெய்வத்தை வழிப்பட்டால் கஷ்டம் விலகும்.

சிம்மம்

வியாழக்கிழமை வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து இஷ்ட தெய்வத்தை வழிப்பட்டால் கஷ்டம் விலகும்.

கன்னி

வெற்றிலையில் மிளகு வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிப்பட்டால் கவலைகள் தீரும்.

துலாம்

வெள்ளிக்கிழமை வெற்றிலையில் கிராம்பு வைத்து இஷ்ட தெய்வத்தை வழிப்பட்டால் துன்பம் தீரும்.

விருச்சிகம்

வெற்றிலையில் பேரிச்சப்பழம் வைத்து செவ்வாய் கிழமை இஷ்ட தெய்வத்தை வழிப்பட்டால் துயரம் தீரும்.

தனுசு

வெற்றிலையில் கற்கண்டு வைத்து வியாழக் கிழமை இஷ்ட தெய்வத்தை வழிப்பட்டால் கவலை நீங்கும்.

மகரம்

வெற்றிலையில் அச்சு வெல்லம் வைத்து சனிக்கிழமை காளி தெய்வத்தை வழிப்பட்டால் கவலை தீரும்.

கும்பம்

வெற்றிலையில் நெய் வைத்து சனிக்கிழமை காளி தெய்வத்தை வழிப்பட்டால் கவலை தீரும்.

மீனம்

ஞாயிற்றுக்கிழமை வெற்றிலையில் சர்க்கரை வைத்து இஷ்ட தெய்வத்தை வழிப்பட்டால் நோய் தீரும்.

ஏகாதசிகளும்... அதன் பலன்களும்

விரதங்களில் தலைசிறந்தது ஏகாதசி விரதமே. இந்த விரத மகிமையினால் ஆகாதது ஒன்றுமே இல்லை. ஆண்டிற்கு 25 ஏகாதசிகள் வருகின்றன. அவை முறையே கிருஷ்ண பட்சத்தில் (தேய்பிறை), சுக்ல பட்சத்தில் (வளர்பிறை) வரும். சில ஆண்டுகள் ஓர் ஏகாதசி அதிகமாக வரலாம். அதை கமலா ஏகாதசி என்று அழைப்பார்கள். மேற்கண்ட 25 ஏகாதசிகளுக்கும் ஒவ்வொரு கதை உண்டு. இவற்றில் சிறப்பு வாய்ந்தது வைகுண்ட ஏகாதசி என்பதாகும். அந்த ஏகாதசிகளின் பெயர்களையும் அந்த விரதத்தால் ஏற்படும் பயன்களையும் அறிவோம்.

01 சித்திரை_மாதம்_கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி "பாப மோகினி" என்று அழைக்கப்படுகிறது.

02 சித்திரை_மாதம்_சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசியை "காமதா" என்கிறார்கள்.

03 வைகாசி_மாதம்_கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி "வருதித்" எனப்படும்.

04 வைகாசி_மாதம்_சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசியை "மோகினி" என்பார்கள்.

05 ஆனி_மாதம்_கிருஷ்ண பட்சத்தில் வருவது "அபார" ஏகாதசியாகும்.

06 ஆனி_மாதம்_சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி "நிர்ஜலா" என்றழைக்கப்படும்.

07 ஆடி_மாதம்_கிருஷ்ண பட்சத்தில் வருவது "யோகினி" ஏகாதசியாகும்.

08 ஆடி_மாதம்_சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி "சயனி" என்று அழைக்கப்படுகிறது.

09 ஆவணி_மாதம்_கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசியை "காமிகா" என்பார்கள்.

10 ஆவணி_மாதம்_சுக்ல பட்சத்தில் வருவது "புத்ரஜா" ஏகாதசியாகும்.

11 புரட்டாசி_மாதம்_கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி "அஜா" எனப்படும்.

12 புரட்டாசி_மாதம்_சுக்ல பட்சத்தில் வருவது "பத்மநாபா" ஏகாதசியாக உள்ளது.

13 ஐப்பசி_மாதம்_கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி "இந்திரா" ஏகாதசி என்றழைக்கப்படுகிறது.

14 ஐப்பசி_மாதம்_சுக்ல பட்சத்தில் வருவது "பாபங்குசா" ஏகாதசியாகும்.

15 கார்த்திகை_மாதம்_கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி "ரமா" ஏகாதசி எனப்படும்.

16 கார்த்திகை_மாதம்_சுக்ல பட்சத்தில் வருவது "பிரபோதின" ஏகாதசியாகும்.

17 மார்கழி_மாதம்_கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசியை "உற்பத்தி" என்றழைப்பார்கள்.

18 மார்கழி_மாதம்_சுக்ல பட்சத்தில் வருவது "மோட்ச" (வைகுண்ட) ஏகாதசி எனப்படுகிறது.

19 தை_மாதம்_கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசியானது "சுபலா" எனப்படும்.

20 தை_மாதம்_சுக்ல பட்சத்தில் வருவது "புத்ரதா" ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.
.
21 மாசி_மாதம்_கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசியை "ஷட்திலா" என்கிறார்கள்.

22 மாசி_மாதம்_சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசியானது "ஜயா" எனப்படுகிறது.

23 பங்குனி_மாதம்_கிருஷ்ண பட்சத்தில் வருவது "விஜயா" ஏகாதசி என்றழைக்கப்படும்.

24 பங்குனி_மாதம்_சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி "ஆமலகி" எனப்படும்.

25 ஆண்டில் கூடுதலாக வரும் ஏகாதசி "கமலா ஏகாதசி" எனப்படும். அன்று மகாலட்சுமியை வழிபடுவது சிறப்பு.

அம்பரிஷன் என்னும் மன்னன் விஷ்ணுவின் மீது அதீத பக்தி கொண்டிருந்தான். ஒரு வருடம் முழுவதும் ஏகாதசி விரதம் இருந்து விஷ்ணுவின் அருளைப் பெற்றான். 🍀ஒருமுறை மன்னன் ஏகாதசி விரதம் இருந்து அதை முடிக்கும் வேளையில் துர்வாச முனிவர் அங்கு வந்தார். மன்னன் அவரை வரவேற்று உணவு உண்ண வரும்படி அழைத்தார். முனிவரும் சம்மதித்து ஆற்றில் நீராடி விட்டு வருவதாக கூறிச் சென்றார்.

வெகு நேரமாகியும் முனிவர் வரவில்லை. விரதம் முடிவதற்குள் மன்னன் சாப்பிடவில்லை என்றால் விரத பங்கம் ஏற்பட்டு விடும். இதனால் அவர் துளசி தீர்த்தத்தை அருந்தி உபவாசத்தை முடித்துக்கொண்டார். இதை அறிந்த துர்வாச முனிவர் கடும் கோபம் கொண்டார். தனது சிகையில் இருந்து ஒரு முடியை பிடுங்கி அதை அம்பரிஷனை கொல்வதற்கு ஏவினார். அது பூதமாக மாறி மன்னனை துரத்தியது.

மன்னன் விஷ்ணுவை பிரார்த்தனை செய்தான். உடனே விஷ்ணுவின் சக்கராயுதம் துர்வாசரை துரத்தியது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மும்மூர்த்திகளிடம் சரண் அடைந்தான். 

சயனா தோஷம் என்றால் என்ன

சயனா தோஷம் என்றால் என்ன?

 

சயனா தோஷம் திருமண சிக்கல்களுடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் இது முக்கியமாக தம்பதிகளுக்கு இடையிலான பாலியல் பொருந்தாத தன்மையைக் குறிக்கிறது. ஆனால் இது டோமினோ விளைவாக குழந்தை பிறப்பதில் தாமதத்தையும் ஏற்படுத்தும்.

 

சொந்தக்காரருக்கு பலவீனமான 12 வது வீடு இருக்கும்போது, ​​அவர் திருமண சிக்கல்களைக் கொண்டிருக்கலாம். பலவீனமான 12 வது வீடு என்பது 12 வது வீட்டில் ஒரு ஆண் இருப்பதைக் குறிக்கிறது. 12 வது வீட்டிற்கு ஒரு சக்திவாய்ந்த வியாழன் அல்லது செவ்வாய் அம்சம் இருக்கும்போது, ​​அத்தகைய கிரகம் ஏறுபவருக்கு யோககரமாக இருக்கும்போது, ​​இந்த தோஷம் ரத்து செய்யப்படும்.

 

12 வது வீட்டிற்கு ஒரு தவறான கிரகம் அல்லது அம்சம் இருந்தாலும், அது பயப்பட ஒன்றுமில்லை. ஏனென்றால் அந்த குறிப்பிட்ட மஹா தசா அல்லது புக்தி காலத்தில் மட்டுமே பிரச்சினைகள் எழும். சுறுசுறுப்பான வயதில் அத்தகைய மகா தசா இல்லை அல்லது அத்தகைய மகா தசா ஏற்கனவே முடிந்துவிட்டால், எந்த பிரச்சினையும் இருக்காது.

 

வைத்தியம்:

 

12 ஆம் ஆண்டவரின் புக்தி காலம் (அந்தர் தாசா) அல்லது 12 வது வீட்டைக் குறிக்கும் தீங்கிழைக்கும் கிரகம் இயங்கினால், பூர்வீகம் பாலியல் மற்றும் உறவு பிரச்சினைகளில் மோதல்களையும் வாதங்களையும் அனுபவிப்பார். புக்தி காலம் பொதுவாக குறுகியதாக இருப்பதால், தம்பதியினரில் ஒருவரையாவது (பையன் அல்லது பெண்) ஆளும் கிரக ஆதரவு இருந்தால், பிரச்சினையின் தீவிரம் குறையும். இல்லையெனில், தம்பதியினரிடையே ஒவ்வொரு ஆண்டும் வியாழன் சாதகமாக இருப்பதால் 6 மாதங்கள் முதல் 1 ஆண்டுகள் வரை தம்பதிகள் பாதிக்கப்படுவார்கள்.

 

மற்ற முக்கியமான விஷயம் என்னவென்றால், மரகா தாசா இயங்கும் போது, ​​தம்பதிகள் தங்கள் திருமண வாழ்க்கையில் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். ஆனால் மரகன் துலா லக்னம் மற்றும் மேஷா லக்னத்திற்கு மட்டுமே முழுமையாக பயனுள்ளதாக இருக்கும். மற்ற லக்னத்தில் பிறந்தவர்கள் எந்த பெரிய பிரச்சினைகளையும் அனுபவிக்க மாட்டார்கள்.

 

சயனா தோஷம் என்பது பயப்பட ஒன்றுமில்லை, ஆனால் பிரச்சினைகளைப் பற்றி அறிந்து கொள்வதும், தம்பதிகளிடையே ஆழமான புரிதலைப் பெறுவதும் ஆகும்

8 வடிவ நடைப்பயிற்சி

உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும் உடற்பயிற்சிகளில் மிகவும் சிறப்பான பயிற்சி வாக்கிங். ஒருவர் வாக்கிங் மேற்கொள்ளும் போது எவ்வித இடையூறுமின்றி, நல்ல ரிலாக்ஸான மனநிலையில் இருக்க வேண்டும். இப்படி இருந்தால், உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தற்போதைய மார்டன் உலகில் அதிகாலை வாக்கிங் மேற்கொள்வது ஃபேஷனாகிவிட்டது. ஆனால் ஏராளமானோர் நண்பர்களுடன் பேசிக் கொண்டே வாக்கிங் பயிற்சியை மேற்கொள்கிறார்கள்.



Benefits Of  
ஆனால் வாக்கிங் பயிற்சியிலேயே 8 வடிவ வாக்கிங் பயிற்சி மிகவும் சிறப்பானது. இந்த பயிற்சியால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். இது சித்தர்கள் மற்றும் யோகிகள் பரிந்துரைக்கும் ஓர் நடைப்பயிற்சி முறை. இதனை ஒருவர் தினமும் 15-30 நிமிடம் மேற்கொள்ள வேண்டும். பொதுவாக நாம் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக இரண்டு சக்கர வாகனத்தில் 8 போடுவோம். ஆனால் வாகனம் ஏதுமின்றி, ஒருவர் 8 வடிவ கோட்டில் நடந்தால், உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இக்கட்டுரையில் 8 வடிவ நடைப்பயிற்சியை எப்படி மேற்கொள்வதென்றும், அதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து நீங்களும் தினமும் முயற்சி செய்து நன்மைப் பெறுங்கள்.


"8" வடிவ நடைப்பயிற்சி செயல்முறை!
#1

"8" வடிவ நடைப்பயிற்சியை காலையில் வெறும் வயிற்றில் அல்லது மாலையில் செய்வது நல்லது. அதிலும் திறந்த வெளியில் அல்லது ஒரு பெரிய அறையினுள் இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம். இந்த நடைப்பயிற்சியை வடக்கு-தெற்கு திசைகளில் தான் மேற்கொள்ள வேண்டும். வடக்கு திசையில் கிழக்கில் இருந்து மேற்கு அல்லது மேற்கில் இருந்து கிழக்காக ஓர் இணைக் கோடு வரையவும் மற்றும் 10 அடி இடைவெளி விட்டு 8 வடிவத்தை வரைய வேண்டும்.


#2
"8" வடிவ நடைப்பயிற்சியை ஆரம்பிக்கும் போது, முதலில் வடக்கில் இருந்து தெற்காகவும், பின் தெற்கில் இருந்து வடக்காகவும் நடக்க வேண்டும். ஒவ்வொரு திசையையும் 15 நிமிடம் என மொத்தம் 30 நிமிடம் நடக்க வேண்டும்.



#3
தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இருந்தால், முதலில் 8 வடிவ நடைப்பயிற்சியை மேற்கொண்ட பின், எந்த ஒரு உடற்பயிற்சியிலும் ஈடுபடுங்கள். முக்கியமாக இந்த நடைப்பயிற்சி 8 வடிவத்தில் இருப்பதால், யாருடனும் பேச வேண்டிய அவசியம் இருக்காது. சொல்லப்போனால் மொபைலைக் கூட பார்க்க முடியாது. இந்த நடைப்பயிற்சியை மேற்கொள்ளும் போது சரியாக சுவாசிக்கலாம்.


#4
இந்த 8 வடிவ நடைப்பயிற்சியின் போது, கால்களில் காலணிகள் எதுவும் அணியக்கூடாது. வெறும் காலில் நடப்பதால் பாதத்தின் மையப்பகுதியில் அழுத்தம் சரியாக கொடுக்கப்படுவதால், உள்ளுறுப்புக்கள் நன்கு செயல்பட்டு குறிப்பிட்ட நோய்களின் தாக்குதல்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.


"8" வடிவ நடைப்பயிற்சியின் நன்மைகள்!
#1

8 வடிவ நடைப்பயிற்சியின் போது இடுப்பு, அடிவயிறு போன்ற உடலின் அனைத்து பகுதிகளும் திரிக்கப்படுவதால், ஒட்டுமொத்த உள்ளுறுப்புக்களும் சரியாக செயல்பட ஆரம்பிக்கும்.



#2
8 வடிவ நடைப்பயிற்சியை முடித்த பின்பு, இதுவரை மூக்கடைப்பால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த உங்களால் தங்குதடையின்றி எளிதில் சுவாசிக்கக்கூடும். அதாவது மூக்கடைப்பு பிரச்சனை முற்றிலும் நீங்கும்.


#3
8 வடிவ நடைப்பயிற்சியை மேற்கொண்ட பின் இருமல் வரக்கூடும். ஏனெனில் நுரையீரலில் இருந்த சளி இளகி வெளியேற ஆரம்பிப்பதால், இருமல் வர ஆரம்பிக்கும். மேலும் இந்த பயிற்சியின் போது 5 கிலோ கிராம் ஆக்ஸிஜன் சுவாசிக்கப்படுவதால், நுரையீரலில் இருந்து சளி வெளியேற ஆரம்பித்து, ஒட்டுமொத்த உடலும் ஆற்றலுடன் இருப்பது போல் உணரக்கூடும்.



#4
தலைவலி, செரிமான பிரச்சனைகள், தைராய்டு, உடல் பருமன், முழங்கால் வலி, ருமடாய்டு ஆர்த்ரிடிஸ், மலச்சிக்கல் போன்ற பல பிரச்சனைகள் 8 வடிவ நடைப்பயிற்சியை மேற்கொண்ட பின் மாயமாய் மறையும்.



#5
இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும். அதிலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் காலை மற்றும் மாலையில் இந்த நடைப்பயிற்சியை மேற்கொண்டால், ஒரே வருடத்தில் சர்க்கரை நோய் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.


#6
8 வடிவ நடைப்பயிற்சி பார்வை சக்தியை மேம்படுத்தும். இதற்கு 8 வடிவ நடைப்பயிற்சியை நடக்கும் போது, அந்த கோடுகளை கூர்ந்து கவனித்து செல்வதால், கருவிழி அங்கும் இங்கும் அசைந்து, கண்களில் இரத்த ஓட்டம் அதிகரித்து பார்வை பிரச்சனை நீங்கும்.


#7
இரத்த அழுத்தம் குறையும், கேட்கும் திறன் மேம்படும். அனைத்து வகையான உடல் வலி மற்றும் முழங்கால் வலி, பாத வெடிப்புகள் போன்றவை சரியாகும். முக்கியமாக இந்த பயிற்சியை தினமும் தவறாமல் செய்து வந்தால் இளமையைத் தக்க வைக்கலாம்.


#8
தோள்பட்டை வலி, கழுத்து வலி, முதுகு வலி, முழங்கால் வலி, குதிகால் வலி, கருப்பை பிரச்சனை, மன இறுக்கம், டிஸ்க் பிரச்சனைகள், ஒற்றைத் தலைவலி, எப்லிப்ஸி, சர்க்கரை நோய், இரத்த அழுத்த பிரச்சனை, தைராய்டு பிரச்சனை, சிறுநீரக கற்கள், பித்தக்கற்கள், ஆஸ்துமா, சைனஸ், பைல்ஸ், தூக்கமின்மை, இதய நோய், நரம்பு கோளாறுகள், சிறுநீரக பிரச்சனைகள் போன்ற பல பிரச்சனைகளில் இருந்து 8 வடிவ நடைப்பயிற்சி விடுவிக்கும்.


8 வடிவ நடைப்பயிற்சியின் போது தவிர்க்க வேண்டியவை மற்றும் கவனத்தில் கொள்ள வேண்டியவை!
#1

8 வடிவ நடைப்பயிற்சியை மேற்கொள்ளும் போது வயிறு முழுமையாக நிறைந்திருக்கும் போது அல்லது உணவு உட்கொண்ட உடனேயே மேற்கொள்ளக்கூடாது. வேண்டுமானால் உணவு உட்கொண்ட 2 மணிநேரத்திற்கு பின் இந்த 8 வடிவ நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம்.


#2
முக்கியமான அறுவை சிகிச்சை செய்தவர்கள் 6 மாதம் ஆகாமல் இந்த 8 வடிவ நடைப்பயிற்சியை மேற்கொள்ளக்கூடாது. அறுவை சிகிச்சை செய்து 6 மாதம் ஆகியிருந்தால், மருவரை அணுகி, அவரது அனுமதியுடன் இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம்.


#3
கர்ப்பிணிப் பெண்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வது மிகவும் நல்லது. ஆனால் இந்த 8 வடிவ நடைப்பயிற்சியை கர்ப்பிணிப் பெண்கள் கட்டாயம் செய்யக்கூடாது.


#4
உயர் இரத்த அழுத்தம், இதய பிரச்சனைகள், சர்க்கரை நோய், நரம்பு பிரச்சனைகள், பக்கவாதம், சிறுநீரக பிரச்சனைகள், உயர் கொலஸ்ட்ரால் போன்றவற்றிற்கு மருந்து மாத்திரைகளை எடுப்பவர்கள், இந்த 8 வடிவ நடைப்பயிற்சியை மேற்கொள்ளும் முன் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ள வேண்டும்.


#5
8 வடிவ நடைப்பயிற்சியை வெறும் வயிற்றில் காலையில் எழுந்ததும் மேற்கொள்வதே மிகவும் நல்லது. அதிலும் இந்த நடைப்பயிற்சியை அதிகாலையில் 5 - 8 மணிக்குள் மேற்கொள்வது மிகவும் சிறப்பானது.


#6
8 வடிவ நடைப்பயிற்சியை 18 வயதிற்கு மேலானவர்கள் மேற்கொள்ளலாம். 18 வயதிற்குட்பட்டவர்கள் இந்த 8 வடிவ நடைப்பயிற்சியை மேற்கொள்ளக்கூடாது.



சுண்டைகாயின் மருத்துவ பயன்கள்:

காய்கறிகளுள் மிகவும் சிறிதான காய் சுண்டைக்காய். சுண்டைக்காயை நுண் ஊட்டச் சத்துக்களின் சேமிப்புக் கிடங்கு என்றுகூட சொல்லலாம். உடலிலுள்ள கிருமிகளை அழிப்பதிலிருந்து கொழுப்பைக் கரைப்பதுவரை பெரிய வேலைகளைச் செய்யக்கூடிய மாபெரும் மருத்துவ குணங்களை உள்ளடக்கியது, பார்வைக்கு மிகவும் சிறிதான இந்த சுண்டைக்காய். தேவையற்ற செல் பாதிப்புகள் நம் உடலில் ஏகப்பட்ட வியாதிகளை வரவழைத்து விடும். நீரிழிவு, இதய நோய் எல்லாவற்றுக்கும் ஏதுவாக உடல் பலவீனமடையும். நோயற்ற வாழ்க்கைக்கு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் அவசியம். வைட்டமின் ஏ,சி,இ போன்ற சத்துக்களை எக்கச்சக்கமாக உள்ளடக்கியது. குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்திக்கு முக்கிய தேவையான வைட்டமின் சி-யை அதிகமாகக் கொண்டது. ஆரஞ்ச் , கொய்யா, பப்பாளிக்கு நிகரான விட்டமின்-சி, இந்த சுண்டைக்காயில் உண்டு.

சுண்டைக்காயின் மருத்துவ குணங்கள்:
1. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது. ரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து, அது ரத்தக் குழாய்களில் படிவதைத் தவிர்க்கும் சக்தி இதற்கு உண்டு. ஆன்டி இன்ஃப்ளமேட்டரி குணங்கள் கொண்டது. வெள்ளை ரத்த அணுக்களை அதிகரித்து அதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது.
2. இதில் உள்ள இரும்புச் சத்தானது ரத்த சோகையை எதிர்த்து போராடக்கூடியது. இரும்புச் சத்து என்றதும், கேழ்வரகு, கீரை போன்றவற்றையே நாடுவோருக்கு சுண்டைக்காயில் அது அதிகம் உள்ளது என்பது புதிய விஷயமாகும்.
3. காய்ச்சல் நேரத்தில் சுண்டைக்காயை சேர்த்துக்கொள்வதன் மூலம் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிப்பதுடன் , காயங்களையும் , புண்களையும் ஆற வைக்கும்.
4. தையமின், ரிபோஃப்ளேவின், வாய் புண்களையும் சொத்தைப்பல் உருவாவதையும் தடுக்ககூடியது.
5. நரம்பு மண்டலத்துக்கு சக்தி கொடுக்ககூடியது. பார்வைத்திறன் அதிகரிக்கவும், நினைவாற்றல் கூடவும், இது உதவும்.
6. சித்த மருத்துவத்தில், சுண்டைக்காயின் பயன்பாடு மிக அதிகம். பல மருந்து தயாரிப்புகளுக்கு இதனை உபயோகிக்கிறார்கள்.
7. பிரசவமான பெண்களுக்கு பத்திய சாப்பாட்டின் ஒரு பகுதியாக ‘அங்காயப் பொடி’ என ஒன்று கொடுப்பார்கள். அதில் முக்கியமானதாக சேர்கக்ப்படுவதே சுண்டைக்காய்தான்.
8.தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமான சக்தியைத் தூண்டி , உடலின் நச்சுகளை வெளியேற்றும் சக்தி கொண்டது.ஆஸ்துமா, வறட்டு இருமல், மார்புசளி, காசநோய் தொந்தரவு இருப்பவர்கள், தினம் இருபது சுண்டைவற்றலை சிறிது  நல்லெண்ணெயில் வறுத்து சாப்பிடவேண்டும். நோய் கட்டுப்படும். இது வயிற்றில் உள்ள பூச்சிகளை நீக்கும் இயல்புடையது. மூலத்தில் ஏற்படும் கடுப்பு, மூலச்சூடு மற்றும் வயிற்று கோளாறுகளுக்கும் சிறந்த மருந்தாகின்றது. 
 
சுண்டைக்காயில் வைட்டமின் பி மற்றும் சி சத்து அதிகம் உள்ளது. 100 கிராம் காயில் 22.5 மி.கி. இரும்பு சத்தும், 390 மி.கி.  கால்சியமும், 180 மி.கி. பாஸ்பரசும் உள்ளது.
 
குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து பற்றாக்குறையை போக்க சுண்டைக்காய் உதவும். குழந்தையாக இருக்கும்போதே  அவர்களுக்கு சுண்டைக்காயை உணவில் சேர்த்து, சாப்பிட பழக்கவேண்டும். சுண்டைக்காயை மாதம் இருமுறை உணவில் சேர்த்துக்கொண்டால், வயிற்றில் உள்ள பூச்சிகள் அழிக்கப்பட்டுவிடும். 
 
மூல நோய் உள்ளவர்கள் ஒரு கைபிடி அளவு சுண்டைக்காயை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், மூலத்தில் உள்ள கடுப்பு நீங்கும். மூல நோயால் உண்டாகும் ரத்தக் கசிவும் நீங்கிவிடும். புளித்த ஏப்பம், உடல் சோர்வு, மூட்டுவலி போன்றவைகளுக்கு சுண்டைக்காய் சிறந்த மருந்து. உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளவேண்டும்.
 
சுண்டைவற்றல் சூரணத்தை தினம் ஒரு தேக்கரண்டி மோரில் கலந்து ஒரு மாதம் காலை, மாலை சாப்பிட்டுவந்தால் தொல்லை  தரும் வயிற்று நோய்களில் இருந்து விடுபடலாம். சுண்டைக்காய் சிறுநீரை பெருக்கும் தன்மைகொண்டது. கல்லீரல், மண்ணீரல்  நோய்களையும் நீக்க உதவுகின்றது. 
 
சுண்டைக்காயில் உள்ள கசப்பு தன்மை ரத்தத்தை சுத்தம் செய்வதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும். சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைக்க செய்யும். சுண்டைக்காய் கிடைக்காத காலங்களில் சுண்டை வற்றலை பயன்படுத்தலாம்.வயிற்று பூச்சிகள்

நமது வயிறு என்பது நாம் உண்ணும் உணவை செரிமானம் செய்து நமக்கு சத்து அளிக்க உதவும் ஒரு உறுப்பாகும். நுண்ணுயிரிகள் நிறைந்த உணவுகளை சிலர் அதிலும் குறிப்பாக குழந்தைகள் சாப்பிடுவதால் அவர்களின் வயிற்றில் பூச்சி தொல்லை ஏற்படுகிறது. சுண்டக்காய் பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பூச்சிகளை அழித்து குடல், வயிறு சுத்தமாகும்.

பசியுணர்வு

ஒரு நாளில் மொன்று வேளையும் சாப்பிடுவதற்கு முன்பாக வயிற்றில் பசி உணர்வு ஏற்படுவதே உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு சிறந்த அறிகுறியாகும். சிலருக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்ட காலத்தில் பசி உணர்வு குறைந்து விடும். சுண்டைக்காய்களை அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிடுபவர்களுக்கு பசி உணர்வு அதிகமாகி உடல் ஆரோக்கியம் மேம்படுத்தும்.

- Advertisement -

வயிற்று போக்கு

பலருக்கும் ஏதேனும் ஒரு காரணத்தால் சமயங்களில் கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக சுண்டை வற்றல், நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம், ஓமம், மாதுளை ஓடு, மாம்பருப்பு, கறிவேப்பிலை, சீரகம் இவற்றை சம எடையாக எடுத்து, நன்கு காயவைத்து, வறுத்து, இடித்துத் தூள் செய்துக் கொள்ள வேண்டும். இதனை, 2 சிட்டிகை அளவு, 1 டம்ளர் மோருடன் கலந்து காலை, மாலை வேளைகளில், இரண்டு நாட்களுக்கு சாப்பிட்டு வர வயிற்றுப்போக்கு, சீதபேதி நிற்கும்.

அஜீரணம்

கண்ட கண்ட நேரங்களில் அதிகம் உண்பது, எளிதில் செரிமானம் ஆகாத உணவுகளை இரவில் அதிகம் உண்பது போன்ற காரணங்களால் சிலருக்கு அஜீரணம் ஏற்படுகிறது. சுண்டைக்காய் வற்றல் தூள், 2 சிட்டிகை அளவு, 1 டம்ளர் மோரில் கலந்து பகலில் மட்டும் குடித்து வந்தால் அஜீரண பிரச்சனை விரைவில் தீரும்.

மூலம்

கடுமையான மலச்சிக்கலே மூலம் நோய்க்கு பிரதான காரணமாக இருக்கிறது. அத்துடன் அதீத உடல் உஷ்ணம் மற்றும் கார உணவுகள் அதிகம் சாப்பிடுவதாலும் மூலம் உருவாகிறது. பச்சையான இளம் சுண்டைக்காய்களை மிதமான காரம் பயன்படுத்தி குழம்பு செய்து, சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வருவதால் மூலம் பிரச்சனை விரைவில் நீங்கும்.

சளித்தொல்லை

சுண்டக்காய் சற்று உஷ்ண தன்மை கொண்ட ஒரு காய் வகையாகும். ஜலதோஷம் அல்லது சளி பாதிப்புகள் ஏற்பட்டவர்கள் பிஞ்சு சுண்டைக்காயைச் சமைத்து சுண்டைக்காய் காரக்குழம்பு செய்து சாப்பிட்டு வந்தால் சாப்பிட்டு வந்தால் தொண்டை, நெஞ்சில் ஏற்படும் சளிக்கட்டு குறையும்.

ரத்தம் சுத்திகரிப்பு

தினமும் நாம் சாப்பிடுவது, குடிப்பது,அருந்துவது என அனைத்து பொருள்களிலும் மாசு நிறைந்துள்ளன. இந்த மாசு அல்லது நச்சுகள் அனைத்தும் நமது ரத்தத்தில் சேர்ந்து கொண்டு எதிர்காலங்களில் நமது உடல்நலத்திற்கு பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. சுண்டக்காய் குழம்பு, வதக்கல் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் இருக்கும் நச்சுகள் நீங்கி ரத்தம் சுத்தம் பெறும்.

எலும்புகள்

நமது உடலில் எலும்புகள் பலமாக இருக்க வேண்டியது அவசியம். அனைவருக்கும் வயதாகும் காலத்தில் எலும்புகளின் உறுதி தன்மை குறைந்து கொண்டே வரும். சுண்டைக்காயில் கால்சியம் சத்து சற்று அதிகம் உள்ளது. சுண்டைக்காய்க் குழம்பு வைத்து சாப்பிடுவதால் நமது எலும்புகள் உறுதியடையும்.

சுவை திறன்

உடல்நலம் குன்றியிருக்கும் காலத்தில் பலருக்கும் நாக்கில் உணவின் சுவை அறியும் திறன் சற்று குறைந்து விடுகிறது. இப்படிப்பட்ட நிலையில் இருப்பவர்கள் தினமும் சிறிதளவு சுண்டக்காய் பக்குவப்படுத்தி சாப்பிடுவதால் நாக்கில் சுவை அறியும் திறன் மீண்டும் அதிகரிக்கும். உணவை செரிக்க எச்சிலை நன்கு சுரக்க செய்யும்.

குரல்வளம்

நாம் பிறருடன் தொடர்பு கொள்ள நமக்கு உதவுவது நமது குரல் தான். ஜலதோஷம் பீடித்த காலத்தில் சிலருக்கு குரல் கட்டிக்கொண்டு சரி வர பேச முடியாமல் போகிறது. சிலருக்கு வேறு பல காரணங்களால் குரல் வளம் குறைகிறது. சுண்டைக்காய்களை அடிக்கடி பக்குவப்படுத்தி சாப்பிட்டு வந்தால் குரல் வளம் சிறக்கும்.

Sunday 29 March 2020

மறுபிறப்பு

திருவாரூரில் பிறந்த எவருக்கும் மறுபிறப்பு என்பதே கிடையாது என்பதும், இறுதி காலத்துக்கு பின்னர் திருக்கயிலையை அடைந்து சிவன் சேவடியைத் தொழுவர் என்பதும் ஐதீகம். அதனால்தான், ‘பிறக்க முக்தி தரும் தலமிது’ என்று திருவாரூர் போற்றப்படுகிறது.

கண்ணதாசன் >> அனுபவமே கடவுள்

அனுபவமே கடவுள்
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!

Saturday 28 March 2020

தினமும் இந்த 2 வார்த்தைகளை உச்சரித்தால் பணம் சேரும்.

பணம் சேருவதற்காக நாம் எத்தனையோ பரிகாரங்களையும், எத்தனையோ வழிபாட்டு முறையையும் பின்பற்றி பார்க்கின்றோம். தினம் தோறும் நாம் இரண்டு வார்த்தைகளை உச்சரிப்பதன் மூலம் பணம் சேரும் என்று சொன்னால் அதை பின்பற்றி பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது. இது ஒரு சின்ன முயற்சிதான். இந்த இரண்டு வார்த்தையில் என்ன ரகசியம் மறைந்துள்ளது? எப்போது இந்த இரண்டு வார்த்தையை சொல்ல வேண்டும்? என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

curd

பொதுவாகவே தயிர் என்பது மகாலட்சுமிக்கு இணையாக சொல்லப்படும் ஒரு பொருள். இந்தத் தயிரை முடிந்தவரை கடைகளிலிருந்து வாங்காமல், நம் வீட்டிலேயே உறை போடுவது நமக்கு லட்சுமி கலாட்சத்தை தேடித்தரும். இது நிதர்சனமான உண்மை. தினந்தோறும் எந்த வீட்டில் இரவு நேரத்தில் தயிர் உறை ஊற்றப்படுகிறதோ, அந்த வீட்டில் மகாலட்சுமி நிச்சயம் தங்குவாள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த தயிரை உறை போடும் போதும், காலையில் கையில் எடுக்கும் போதும் தான் இந்த வார்த்தையை நாம் சொல்லி மகாலட்சுமியின் அருளைப் பெற போகின்றோம்.

முதல்நாள் இரவு பாலில் உறை போடும்போது ‘சேமிரி’ என்ற வார்த்தையை சொல்லி உறை ஊற்றுங்கள். காலையில் பால் கெட்டிதயிராக மாறியிருக்கும். அதை உங்கள் கைகளில் முதன்முதலில் எடுக்கும்போது ‘பெருகு’ என்ற வார்த்தையை சொல்லி எடுக்க வேண்டும். அதாவது இரவு நேரத்தில் உறை போடுவது சேமிப்பிற்கான அடித் தளத்தையும், மறுநாள் காலை அது பெருகி தயிராக மாறுவது, நம் செல்வத்தை பெருக்குவதையும் குறிக்கிறது. இது உண்மையான ஒன்று

Thursday 19 March 2020

ராசிVsதிதி


Tamil News

ஒவ்வொரு ராசிகளும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய திதிகள் தெரியுமா?
Samayam Tamil | Updated: 18 Mar 2020, 04:24:24 PM
நம் ராசிக்கு எப்படிப்பட்ட பலன்கள் நடக்கும் என்பதை தினப்பலனில் பார்க்க முடியும். நாம் சந்திரஷ்டம நாளில் எப்படி கவனமாக இருக்க வேண்டுமோ அதே போல் உங்களுக்கு ஒத்துவராத சில திதிகள் உள்ளன. அவற்றை அறிந்து நடந்து கொள்வது நல்லது.
Astrology Remedies
Astrology Remedies
   
நாம் தினமும் வாழ்வில் பல பிரச்னைகள், சிக்கல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றோம். நமக்கு இன்றைய தினம் எப்படி அமையும், எப்படி நாம் இந்த நாளை அணுகலாம் என்பதை நாம் தினமும் காலையில் இன்றைய ராசி பலன் பார்த்து நம் ராசிக்கு எப்படிப்பட்ட பலன்கள் இருக்கும் என்பதை அறிந்து கொள்வோம்.


பொதுவாக ஒவ்வொரு நாளும் சிறப்பாக இருந்தாலும், சில நாட்கள் சந்திராஷ்டமம் என குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் நாம் சற்று கவனமாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கும்.

அப்படி சந்திரன் உங்கள் ராசிக்கு அல்லது உங்கள் நட்சத்திரத்திற்கு எட்டாவது இடத்தில் இருக்கும் போது உங்களுக்கு சந்திராஷ்டம ஏற்படுகிறது. அந்த நாட்களில் நாம் மன சஞ்சலம், இறுக்கம் இருக்கும் என்பதால் அந்த நாளில் கவனமாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்படுகிறது.

அதைத்தாண்டி மொத்தம் உள்ள 15 திதிகள் ஒரு மாதத்தில் இரு முறை வருவதுண்டு. சில திதிகள் சில ராசியினருக்கு நற்பலன்கள் தராது அவை என்ன என்ற பட்டியலை இங்கு பார்ப்போம்.

அதிசார குருப்பெயர்ச்சி காலம், குரு வக்கிரம் அடையும் காலம் என்ன?

ராசிகளும், தித்திகளும்
மேஷ ராசி - சஷ்டி திதி

ரிஷப ராசி - சதுர்த்தி, திரயோதசி

மிதுன ராசி- பஞ்சமி, அஷ்டமி, சதுர்த்தசி

கடக ராசி - சப்தமி

சிம்ம ராசி - திருதியை, அஷ்டமி, நவமி, தசமி, திரயோதசி

கன்னி ராசி- பஞ்சமி, அஷ்டமி, சதுர்த்தசி

துலாம் ராசி - பிரதமை, துவாதசி

Guru Vakram 2020: குரு, சனி உள்ளிட்ட கிரகங்களின் வக்ரம், அதிசார பெயர்ச்சி என்றால் என்ன?

விருச்சிக ராசி - நவமி, தசமி

தனுசு ராசி - துவிதியை, சப்தமி, ஏகாதசி, சதுர்த்தசி

மகரம் ராசி - பிரதமை, திருதியை, துவாதசி

கும்பம் ராசி - சதுர்த்தி

மீனம் ராசி - துவிதியை, ஏகாதசி, சதுர்த்தசி

மீன ராசி அதிசார குரு பெயர்ச்சி பலன்கள்: லாப ஸ்தானத்தில் குருவும், சனியும் அமைந்து ஜாக்பாட் அடிக்குது

ஒவ்வொரு திதியும் திதிகளும் வளர்பிறை மற்றும் தேய்பிறை என மாதத்தில் இரு முறை வரக்கூடியது. அதனால் மேலே குறிப்பிட்டுள்ள ராசிகள் உங்களுக்கு நற்பலனைத் தராத இந்த திதிகளில் கவனம் தேவை. 

Tuesday 17 March 2020

Best Direction of accessories As Per Vastu

AccessoriesBest Direction As Per Vastu
FridgeSoutheast
Wash BasinNortheast
ConsoleSouthwest wall of the dining area
Microwave, Radio and TelevisionSoutheast
WindowsNorth or East side
DoorsEast, North, or West

Dinning tips

VASTU TIPS FOR DINING ROOM

There can be several different looks to a dining hall- traditional, glamorous, romantic or modern, but there is one thing that remains the same. Every dining is (or rather should be) built according to the norms set by vastu for dining room. If the interiors of the area are not designed as per this system, your perfect space will transform into a depressing, bad-luck creator. Here are a few tips that will help you create an atmosphere which is not just perfect for meals but also for attracting prosperity and luck.According to the experts a dining room must be located in the West.

Dining Room

Right Direction for Accessories According to Vastu for Dining Room

AccessoriesBest Direction As Per Vastu
FridgeSoutheast
Wash BasinNortheast
ConsoleSouthwest wall of the dining area
Microwave, Radio and TelevisionSoutheast
WindowsNorth or East side
DoorsEast, North, or West

Sitting Arrangement

1. The head of the family must always face east while eating.

2. The rest of the members can face north, east, or west.

3. Avoid the Southern direction

4. Keep the number of dining chairs even to avoid dispute within the family members.

Colors According To Vastu For Dining Room

Vastu colors for home suggests that the color of the dining room walls must be
  • Light green
  • Orange
  • Cream
  • light pink
  • Avoid painting the walls white or black.

    Drawing room entrance

    The main entrance of the house is usually through the drawing room. When locating the entrance, ensure that there is more space towards the right. The direction of the main entrance is significant. Let us see how

    1.North or east entrance: Bestows health, wealth, prosperity and fame.

    2.South, north-east or south-east entrance: Indicates success, but through hard work

    3.West entrance: Ideal for scholars, as it bestows a calming influence.

    4.North-west entrance: Indicates development in all spheres.

    5.South-west entrance:Considered inauspicious. Its negative influence can be countered by shifting the entrance towards the west.

    Things To Keep In Mind:

    1.The dining table in the room must be rectangle or square.

    2.Dining table must never stick to the wall.

    3.The main entrance of the Dining Room and house must never face one another.

    4.Dining room must never be next to the toilet.

    5.Pooja room/toilet door must not open right in front of the dining area.

    6.According to vastu for kitchen, you must make sure the kitchen and dining hall are built on the same floor. They should lye adjacent to one another.

    7.Make sure there is no loft or beam over your head when eating.

    8.Beautiful paintings and portraits hung inside the dining room create an atmosphere of pleasure and happiness.

    As per vastu for dining room, the lighting in the room must be relaxed and easy

    ஜி.டி.நாயுடு

    ஜி.டி.நாயுடு ஒருதரம் சிட்டிசன் வாட்ச் கம்பெனிக்குப் போயிருந்தாராம். உள்ளே போகிறவர்களை எல்லாம் ‘யாரு, என்ன, படிப்புத் தகுதி என்ன’ என்றெல்லாம் கேட்டு சிற்சில இடங்களைப் பார்க்க அனுமதி மறுத்து விடுவது அந்தக் கம்பெனியின் வழக்கமாக இருந்தது. நாயுடுவுக்கு எந்தத் தடையும் சொல்லாமல் எங்கே வேண்டுமானாலும் போகலாம் என்று சொல்லி விட்டார்களாம். ஏன் என்று கேட்டதற்கு ‘எங்கள் தொழிற் நுட்பம் காப்பி அடிக்கப் பட்டு விடக் கூடாது என்பதற்காகத்தான் இத்தனை கட்டுப்பாடுகள். உங்கள் படிப்புத் தகுதிக்கு நீங்கள் அப்படி எதுவும் செய்து விட மாட்டீர்கள் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஆகவே எங்கே வேண்டுமானாலும் போகலாம்’ என்றார்களாம்.
    நாயுடு எதுவும் பேசவில்லை.
    அமைதியாகச் சுற்றிப் பார்த்து விட்டு வந்து விட்டார்.
    இந்தியா வந்த பிறகு, சில நாட்களில் அச்சசல் சிட்டிசன் வாட்ச் போலவே இருக்கும் ஒரு வாட்சை தயாரித்து சிட்டிசன் கம்பெனி நிர்வாகத்துக்கு அனுப்பினாராம். அத்துடன் அவர் அனுப்பியிருந்த கடிதத்தில்,
    “என் நாணயத்தைக் குறித்து நீங்கள் வைத்திருந்த நம்பிக்கை மிகச் சரியானது. ஆனால் என் திறமை குறித்து நீங்கள் வைத்திருந்த நம்பிக்கை தவறானது என்பதை சுட்டிக் காட்ட உங்கள் முதல் நம்பிக்கையை உடைக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டதற்கு வருந்துகிறேன்

    Tuesday 3 March 2020

    Gayathri mantra

    Gayathri Mantra in Tamil is given below:

     

    ஒம் பூர் புவ சவக
    தத் சவிதூர் வரேண்யம்
    பர்கோ தேவச்ய தீமகி பிரசோதயத்


    What is Sayana Dosham?

    What is Sayana Dosham?

     

    Sayana Dosham is connected with Marital Problems and it mainly denotes the sexual incompatibility between the couples. But it can also cause delay in child birth as a domino effect.

     

    When the native has the a weak 12th house, then he may end up having Marital Problems. The weak 12th house meaning that a malefic present on the 12th house. When the there is a powerful Jupiter or Mars aspect to 12th house when such a planet being yogakara for the ascendant, this dosham will get nullified.

     

    Eventhough there is a malefic planet or aspect to 12th house, it is nothing to be feared. Because the problems will rise only during that particular maha dasa or bukthi period. If there is no such maha dasa in active age or such maha dasa is already over, then there will not be any issue.

     

    Remedies:

     

    If bukthi period (Anthar Dasa) of 12th lord or the malefic planet aspecting 12th house is running, the native will experience conflicts and arguments on sexual and relationship issues. Since the bukthi period is usually short, if there is a ruling planet support for at least one of the couple (either the boy or girl), the intensity of the problem would go down. Otherwise the couples will suffer for a period of 6 months to 1 years since Jupiter being favorable for every other year between the couple.

     

    The other important thing is when maraga dasa is running, couples may encounter the problems in their marital life. But Maragan is fully effective only for Thula Lagna and Mesha Lagna. People born in other lagna would not experience any major issues.

     

    Sayana dosham is nothing to be feared but to get to know about the problems and get deep understanding between the couples.