jaga flash news

Friday 26 February 2021

கரணம்...

கரணம்:

கரணம் என்பது திதியில் பாதியாகம். அதாவது 6-டிகிரி கொண்டது ஒரு கரணம் ஆகும். கரணங்கள் மொத்தம் 11-ஆகும்.

1. பவம் - சிங்கம்

2. பாலவம் - புலி

3. கௌலவம் - பன்றி

4. தைதிலம் - கழுகு

5. கரம் - யானை

6. வணிஜை - எருது

7. பத்ரம் - கோழி

8. சகுனி - காக்கை

9. சதுஷ்பாதம் - நாய்

10. நாகவம் - பாம்பு

11. கிமுஸ்துக்னம் - புழு


மேலே காணப்படும் 11 கரணங்களில் ஜனிக்கும் மனிதர்கள் அந்த அந்த பறவைகள், மிருகங்களின் குணாதிசயங்களையும், உணர்வுகளையும் தன்னகத்தே பெற்றவர்களாக இருப்பார்கள்.

கீழே தரப்பட்டுள்ள குணாதிசயங்கள் பெற்றிருப்பினும் , அவர்களின் தாம்பத்திய உறவுகளில் அந்தந்த பறவை , மிருகங்களின் காம உணர்வினையே மேலதிகமாக பிரதிபலிக்கின்றார்கள்.

1. பவ கரணம் (சிங்கம் )
எக்காரியத்திலும் பின் வாங்காத தைரியம் உடையவர். கூர்ந்து ஆராய்ச்சி செய்பவரும். சுகமுடையவரும், நன்னடத்தை உடையவரும். மென்மையான தலைமுடி உடையவருமாவர்.

2. பாலவ கரணம் (புலி)
சிற்றின்ப பிரியர். நீங்காத செல்வமுடையவர். அற்பத் தொழில் முறையையுடையவர். தருமம் செய்பவரும், பிறரால் நிந்திக்கப்படாத நற்குணமுடையவரும். தன் உறவினரைப் பேணிக்காக்கும்
குணமுடையவருமாவார்.

3. கெளலவ கரணம் (பன்றி)
அரசாங்கப் பணியாளராக இருப்பவரும். நல்ல ஆச்சாரமுடையவரும், தந்தை தாய் மீது பற்றுள்ளவரும், நிலபுலன்களைச் சம்பாதிப்பவரும், பராக்கிரமம் உடையவரும் வாகன வசதியுடையவருமாவார்.

4. தைதுலை கரணம் (கழுதை)
தருமம் செய்யாத கருமியும், வேசியர் மீது பற்றுள்ளவரும், அரசாங்கத்தின் மூலம் பொருளை பெறுபவரும், அரசாங்கத்தில் பணி புரிபவருமாவார்.

5. கரசை கரணம் (யானை)
அரசாங்க மூலம் பணவரவு உள்ளவரும், பெண் நேயரும், எதிரிகளை எளிதில் வெல்லக்கூடியவரும், எல்லோருக்கும் உதவும் தரும சிந்தனையுடையவருமாவார்.

6. வணிசை கரணம் (எருது)
கற்பனையான வார்த்தைகளைப் பேசுபவரும், பிறருக்கு உதவாதவரும், உலகத்தோடு ஒப்ப ஒழுகாதவரும், பெண் நேயருமாவர்.

7. பத்திரை கரணம் (கோழி-சேவல்)
ஆண்மைக்குறைவுள்ளவர் , மிகுந்த கருமியும், சஞ்சல மனம் படைத்தவருமாவார்.

8. சகுனி கரணம் (காகம்)
நல்ல அறிவு உள்ளவரும், அழகானவரும், மிகுந்த செல்வம் உடையவரும், தைரியம் உள்ளவருமாவார்.

9. சதுஷ்பாத கரணம் (நாய்)
பெண் பிரியரும், வறுமையுடையவரும், சொன்ன சொல்லைக் காப்பாற்றாதவரும், கோபியும், தீய நடத்தையுடையவருமாவார்.

10. நாகவ கரணம் (பாம்பு)
துன்பத்தை ஆள்பவரும், உத்தம குணமும், சுவையான உணவு உண்பவருமாவார்.

11. கிம்ஸ்துக்கினம் கரணம் (புழு)
தாய் தந்தையர் மீது பற்றுள்ளவரும், சகோதரர்களைக் காப்பவரும், வேத சாஸ்திரம் அறிந்தவரும், உலகத்தை நன்கு அறிந்தவருமாவார்.

இவைகள் கரணத்திற்குறிய பொதுவான பலன்களாக இருக்கும்.

இப்போது திருமண முறிவுக்கான காரணங்களை பார்ப்போம் .

கோழி , நாய் , பன்றி , கழுதை , எருது , பாம்பு போன்றவைகள் எதனைப் பற்றியும் கவலையின்றி தனது இன்பத்தினை மட்டுமே கருத்தில் கொண்டு சுகித்திருக்கும்.

மற்ற சிங்கம், புலி, யானை, காகம், புழு போன்றவைகள் தனது இன்பத்தினை யாரும் காணாதவாறு அமைத்துக்கொள்ளும்.

காமத்தில் அதிக ஈடுபாடு கொண்டதாக கோழி, நாய், பன்றி, கழுதை, பாம்பு , புழுக்கள் இருந்தாலும் இவைகள் கலவியில் ஈடுபடும் நேரம் ஒரே மாதிரி இல்லை.

குறுகிய நேரம், நீண்ட நேரம் என மாற்றம் உடையதாக இருக்கின்றது.

உதாரணமாக கோழியின் (சேவலின்) , காகத்தின் கலவி என்பது சில நொடிகளே,

ஆனால் நாய்,பன்றி,கழுதை,புழு போன்றவற்றின் கலவி நேரம் மிக கூடுதலாகும்.

உதாரணத்திற்கு ஒரு கோழி (பத்திரை கரணம்)அல்லது காகத்தின் (சகுனி கரணம்) கரணத்தில் பிறந்த ஆணின் கலவி நேரம் என்பது குறுகிய நேரமாகவே இருக்கும்.

ஆனால் ஒரு பன்றியின் (கௌலவம் கரணம்) நாயின் (சதுஷ்பாதம் கரணம்) கரணத்தில் பிறந்த ஒரு பெண்ணின் கலவி பிரியமானது நீண்டநேரம் இருக்கும்.


இதைத்தான் கரணம் தப்பினால் மரணம் என்றார்கள் பெரியோர்.

Wednesday 24 February 2021

அமிர்த பானம் கொத்தமல்லி இலைச்சாறு தயாரிப்பது எப்படி?:



அமிர்த பானம் கொத்தமல்லி இலைச்சாறு தயாரிப்பது எப்படி?:

நாட்டு கொத்துமல்லி இலை - கால் கட்டு,

தேங்காய் - 1 ,

நாட்டு சர்க்கரை - தேவையான அளவு 

சுத்தம் செய்த கொத்துமல்லி இலையுடன் தேங்காய் சேர்த்து அரைத்து வடிகட்டவும்.

இதன் கூட தேவையான அளவு தண்ணீர்,நாட்டு சர்க்கரை கலந்து பருகலாம். 

இந்த சாற்றினை கண்டிப்பாக அடுப்பில் வைக்க கூடாது. 

(1)வெறும் கொத்துமல்லி இலைச்சாறுடன் எலுமிச்சை சாறு,உப்பும்,மிளகு தூளும் சேர்த்து அருந்தலாம்.

(2)கொத்துமல்லி இலைச்சாறுடன்,பசும்மோர், உப்பும் கலந்தும் அருந்தலாம்.

(3)கொத்துமல்லி இலைச்சாறு அருந்தும் நாள் அன்று பசிக்கும் போது மட்டுமே சாப்பிட வேண்டும்.

 இதை தொடர்ந்து பருகுவதால் காமாலை, கேன்சர் போன்ற மிகக் கொடிய நோய்கள் அனைத்தும் குணமாகும்.

உடலில் உள்ள கழிவுகள் அனைத்தையும் வெளியேற்றும்.

வயிறு சம்பந்தபட்ட அனைத்து பிரச்சினைகளையும் குணமாக்கும்.

கல்லீரலை பலப்படுத்தும்.
பித்தம் கட்டுக்குள் இருக்கும்.

இதை தயார் செய்வது மிகவும் எளிதானது.

இதை அனைவரும் பருகலாம்,

தினமும் தண்ணீர்க்கு, டீ, காபிக்கு பதில் இதை அருந்தலாம்.

கொத்துமல்லிக்கு பதில் கருவேப்பிலையும் , புதினாவையும் இதே போன்று சாறு தயார் செய்து  உபயோகிக்கலாம். 

ஆனாலும் கொத்துமல்லி இலைச்சாறுதான் சிறந்தது.

Monday 22 February 2021

பஞ்சகட்சம் கட்டும் முறை.

பஞ்சகாட்சம் கட்டும் முறை. ஒற்றை அடுக்கில் வேஷ்டியை வரிக்கவும்.  வலது பக்க அளவீடுகளை விட இடது பக்கத்தை நீளமாக வைக்கவும். மைய பக்கத்தில்  முடிச்சு போடவேண்டும்.  இடது பக்க ஃப்ரில் கால்களுக்கு இடையில் எடுத்து பின்புறத்தில் செருகப்பட வேண்டும் . வலது பக்க பகுதி முன் பக்கத்திலும் செருகவும்

வீட்டில் அதிகமாக இருக்கும் பல்லிகளை விரட்ட சில எளிய வழிமுறைகள்...

கோடை காலத்தில் ஒருவரின் வீட்டில் பல்லி அதிகமாக இருப்பது மிகவும் பொதுவானது. அத்தகைய சூழ்நிலையில், பல்லிகளை எப்படி நம் வீட்டில் எளிய முறையில் விரட்டுவத

கோடை காலத்தில் ஒருவரின் வீட்டில் பல்லி அதிகமாக இருப்பது மிகவும் பொதுவானது. அத்தகைய சூழ்நிலையில், பல்லிகளை எப்படி நம் வீட்டில் எளிய முறையில் விரட்டுவது...


பல்லிகளைப் பார்துத பயப்படுபவர்கள் பலர் இன்று உள்ளனர். ஆமாம், பல்லியைப் பார்த்தவுடன் மூச்சடக்கி நிற்பவர்கள் இன்றும் பலர் உள்ளனர். எனவே அவர்களுக்கு உதவும் வகையில் பல்லியை வீட்டிலிருந்து எளிய முறையில் வீட்டை வீட்டு விரட்டுவதற்கான சில வழிகளை நாம் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.


1. முட்டை ஓடு - உங்கள் வீட்டிலிருந்து பல்லியை விரட்ட விரும்பினால், முட்டை உடைக்கும் போதெல்லாம், அதை குப்பையில் எறிவதற்கு பதிலாக, பல்லிகள் அதிகம் இருக்கும் இடங்களில் வைக்கவும்.


2. பூண்டு - பல்லியை வீட்டை விட்டு வெளியேற்ற, ஜன்னல்கள் மற்றும் கதவுகளில் பூண்டின் ஒரு சில மொட்டுகளை தொங்க விடுங்கள்.


3. குளிர்ந்த நீர் - பல்லியை வீட்டிலிருந்து விரட்டியடிக்க, பல்லிகள் அதிகம் இருக்கும் பகுதியில் குளிர்ந்த நீரைத் தெளிக்கவும், இதன் பிறகு அந்த இடத்தில் மீண்டும் பல்லிகள் வராது.


4. நாப்தாலீன் பந்துகள்(பூச்சி உருண்டை) - பல்லியை வீட்டை விட்டு வெளியே விரட்ட, நாப்தலின் பந்துகளை பயன்படுத்துங்கள்.



5. காபி பவுடர் - பல்லியை வீட்டிலிருந்து அகற்ற, காபி பவுடர் மற்றும் சமையல் பட்டை ஆகியவற்றைக் கலந்து தடிமனான கரைசலை உருவாக்கவும். இப்போது இந்த கலவையை சிறு உருண்டைகளா உருவாக்கி பல்லி அதிகம் காணும் இடத்தில் வைக்க வேண்டும். பின்னர் இந்த இடத்திற்கு பல்லிகள் வராது.

Sunday 21 February 2021

பஞ்ச கச்சம் வேஷ்டி கட்டுவது எப்படி?

பஞ்சகச்சம் = பஞ்ச + கச்சம்
பஞ்ச எனில் ஐந்து. கச்சம் எனில் செருகல்.
ஆடவர் வேட்டியை ஐந்து இடங்களிற் செருகிஉடுத்தும் வகை

A mode of wearing cloth by Brahmin males mostly.
பஞ்சகச்சம் எனில் ஐந்து செருகல் கொண்ட ஆடை.
வலது இடுப்பில் ஒரு செருகல், இடது இடுப்பில் ஒன்று, பின்புறத்தில் ஒன்று, தொப்புள் பகுதியில் இரண்டு என்று ஐந்து செருகுதல் முறையையே பஞ்சகச்சம் என்று பெரியோர்களால் கூறப்படுகிறது

 பாரம்பரியத்துக்கும்,  ஆச்சாரத்துக்கும் உரிய திருமணமான ஆண்கள் அணிய வேண்டிய அவசியமான பஞ்சகச்சத்தின் பெருமையையும், முக்கியத்தையும் உணர்ந்து தெய்வீக, வைதீக நிகழ்ச்சிகளில் மற்றும் கோவிலுக்கு போகும்போது  பஞ்சகச்சம் அணிந்து செல்லலாம்.
சரியாக புரிந்து கொண்டால் மிகவும் எளியது.
 சந்த்யாவந்தனம் போன்ற நித்யகர்மாக்கள் , பூஜைகள் விசேஷங்கள் , பஜனை நிகழ்ச்சிகள் என பல சந்தர்பங்களில் பஞ்ச கச்சம் அணிந்து வரலாம் . பஞ்சகச்சம் கட்டிகொள்ளும்.

பஞ்ச கச்சம் உடுத்திக்கொள்ள
பஞ்சகச்சம் கட்டிகொள்ள ஒன்பது முழம் வேஷ்டியும் .
ஐந்து முழம் துண்டும்
(அங்க வஸ்த்ரம்/ உத்தரீயம்) தேவை
எட்டு முழம் வேஷ்டி அளவு கம்மியாக இருக்கும்.

இங்கு சொல்லப்படும் அளவுகள் தோராயமானவை அவரவர்கள் உயரம், உடல்பருமனுக்கு தகுந்தபடி மாற்றிக்கொள்ளவும் .
1) 9 முழ வேஷ்டியை முழுதாகப் பிரித்து இடுப்பின் பின்புறம் தொட்டுக்கொண்டிருக்கும்படி இரு கைகளாலும் பிடித்துக்கொள்ளவும்..
2) இடது பக்கம் உள்ள பகுதியை,வயிற்றுப்பக்கம் கொண்டுவந்து, வயிற்றுக்கு வலதுபக்கம் சுமார் ஒரு சாண் ( 9 அங்குலம் ) இருக்கும்படி பிடித்துக்கொண்டு அங்கிருந்து பாதம் வரை (சுமார் 3முழம்) தொங்கும்படி பிடித்துக்கொண்டு அதன்மேல் மீதி உள்ள ஆறு முழம்பகுதியை, வயிற்றின் மையப்பகுதி வரை கொண்டுவந்து , கொஞ்சமாக ( தேவையான அளவு ) இறுக்கி, வேஷ்டி இடுப்பிலிருந்து , நழுவாதபடி மேலிருந்து கீழாக உருட்டி விட்டுக்கொள்ளவும்.
3) இடதுபுரம் உள்ளே தொங்கும் சிறிய பகுதியை எடுத்து, உள்ளங்கையில் நாலு விரல் அளவு அகலமாக மடித்து , மடிப்புகளை நீவி ஒழுங்கு படுத்திக்கொண்டு, அதைக் கால்களின் நடுவாக பின்புரம் கொண்டு சென்று, முதுகுப்பக்கம் சொருகிக்கொள்ளவும். இப்போது இடது பக்கம் பாதம் வரை வேஷ்டி இருக்கவேண்டும்.
4) முன்புரம் தொங்கும் நீளமான 5 to 6 முழம் பகுதியை எடுத்துக்கொள்ளவும். நடு வயிற்றுப்பகுதியில் தொங்கும் , வேஷ்டியின் வர்ணமான கரை.உள்ள பாகத்தில், கீழே தொங்கும் நுனியில் ஆரம்பித்து ,நாலு விரல் அளவுக்கு ( முன்பு Step No.3-ல் உள்பக்கம் தொங்கும் பாகத்தை மடித்தது போல ) மடித்து ,வயிற்றின் நடுப்பகுதியில் சொருகிக்கொள்ளவும் .
5) பாதம் வரை கீழே தொங்கும் பகுதியை எடுத்து, , அதையும் முன்பு போல நாலு விரல் அளவு மடித்துக்கொள்ளவும். அதை வயிற்றின் நடுப்பகுதியில், தேவயான உயரம் , இறுக்கம்  உள்ளபடி சொருகிக்கொண்டு, முன்புரம் தொங்கும் கரைப்பகுதியை விரல்களால் நீவி ஒழுங்கு படுத்தவும்.
6) இரு கால் பக்கங்களிலும் பாதம் வரை தொட்டுக் கொண்டிறுக்கும்படி, வெளிப்பக்கம் தெரியும் வர்ணக் கரைப் பகுதியை , லேசாக , இங்கும் அங்கும் இழுத்து சரி செய்யவும்.
7) தேவைப்பட்டால் வேஷ்டி அவிழ்ந்துவிடுமோ என்ற பயம் இருந்தால் பெல்ட் அல்லது வேறு ஒரு துண்டு, இடுப்பில் கட்டிக்கொள்ளவும்.
8) ஐந்து முழம் அங்கவஸ்த்திரத்தை, தேவையான அகலத்துக்கு ஆக மடித்துக்கொண்டு, இடது தோளின்மீது போட்டுக்கொண்டு, , பின்பக்கம் தொங்கும் பகுதியை வலதுபுறம் தோளின் கீழாக ( அக்குள் வழியாக ), இடது தோள்மேல் போட்டுக்கொள்ளவும் . இது உத்தரீயம் எனப்படும்.
9) அல்லது இடுப்பில் வட்டமாக சுற்றிக்கட்டிக்கொள்ளவும் .
அவ்வளவுதான். பஞ்சகச்சம் ரெடி ! வீடியோவிலும் பார்த்து தெரிந்து கொள்ளலாம்

முகூர்த்தக்கால் நடுதல்

இல்லத்தில் திருமணம் நிச்சயக்கப்பட்ட நாள் முதல் திருமணம் முடியும் வரை பலவிதமான சடங்குகள் செய்கிறோம். இந்த சடங்குகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது முகூர்த்தக்கால் நடுதல் ஆகும். இதை பந்தக்கால் நடுதல் என்றும் கூறுவர். இந்த பந்தக்கால் நடும் விழா பிரம்ம முகூர்த்தம் அல்லது ஏதேனும் முகூர்த்த நாளில் நல்ல நேரம் பார்த்து திருமணத்திற்கு முன்பு நடைபெறும்.

இந்த சடங்கில் தனித்தனியே மணமகன் மற்றும் மணமகள் வீட்டில் வடகிழக்கு பகுதியில் பந்தக்கால் ஒன்று நடப்படும். இந்த பந்தக்கால் நடும் விழாவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது கல்யாண முருங்கை மரம் ஆகும். சில வீடுகளில் கல்யாண முருங்கைக்கு பதிலாக பால மரமும் நடுகின்றனர்.பந்தக்கால் நடும் முறை :

கல்யாண முருங்கை மரத்தில் ஒரு கிளையை வெட்டி அதில் உள்ள இலைகளை அகற்றிவிட்டு அந்த மரத்தின் நுனியில் 5 மாவிலைகளை மஞ்சள் பூசிய கயிற்றால் கட்டி, இடையில் ஒரு மஞ்சள் பூசிய வெள்ளைத் துணியில் ஒரு செப்புக்காசு முடிந்து கட்டிவிட வேண்டும்.

உறவினர்கள் அனைவரையும் அழைத்து வீட்டில் உள்ள பெரியவர் அந்த மரத்தை நட வேண்டிய இடத்தில் வைத்து, பின் அதற்கு தேங்காய் உடைத்து சாம்பிராணி கற்பூரம் காட்டி பூஜை செய்ய வேண்டும். அதனடியில் நவதானியத்தோடு நீர் மற்றும் பால் ஊற்றி மரத்திற்கு திருநீறு, சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும்.

மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து வெற்றிலை பாக்கு மற்றும் பழம் வைத்து தேங்காய் உடைத்துத் தீபம் காட்டி பின் பந்தக்காலை நிலத்தில் ஊன்றுவர். பந்தக்கால் நட்ட பிறகு பந்தல் போடும் வேலையும் தொடர்ந்து செய்வர். பின் உறவினர்களுடன் சேர்ந்து இருவீட்டாரும் அவரவர் வீட்டில் விருந்துண்டு மகிழ்வர்.

முகூர்த்தக்கால் ஊன்றிய பின் இருவீட்டாரும் திருமணச் சடங்குகள் முடியும் வரை எந்தவிதமான துக்க நிகழ்ச்சிகளிலும் பங்குபெறுதல் கூடாது.

பந்தக்கால் நடும் முறை வந்தது எப்படி?

முற்காலத்தில் திருமணம் செய்யும்போது அரசனுக்கும் அழைப்பிதழ் அனுப்புவார்கள். அப்படி அழைப்பு தந்த அனைத்து திருமணத்திற்கும் அரசனால் செல்ல இயலாது. எனவே, அவர் தனது ஆணைக்கோலை அனுப்பி வைப்பார். அரசு ஆணைக்கோல் மருவி அரசாணைக்கால் ஆகிவிட்டது. அன்று ஆணைக்கோல் வந்துவிட்டால் அரசனால் அங்கீகரிக்கப்பட்டது. ஆகவே அத்திருமணம் அங்கீகாரம் பெற்றுவிடுகிறது.

Saturday 20 February 2021

சீரக நீரை அன்றாடம் அருந்துவதால்...

சீரக நீரை அன்றாடம் அருந்துவதால் உண்டாகும் பயன்கள் !!

தினமும் காலையில் சீரகத்துடன் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால் பல நன்மைகளை பெறலாம். பல காலமாகவே நம்முடைய பாரம்பரிய மருந்துகளில் சீரகம் பயன்படுத்தப்படுகிறது.

சீரகத்தை தவறாமல் உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. சீரகம் உங்கள் உடலில் உள்ள செரிமான நொதிகளின் செயல்பாட்டை அதிகரிப்பதன் மூலம் உங்கள் செரிமானத்திற்கு உதவும்.
சீரகத்தை கொதிக்கும் நீரில் போட்டு கஷாயம் செய்து கர்ப்பிணிகளுக்கு கொடுத்து வருவது நல்லது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சீரகத்தை லேசாக  வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். 

 
சீரகத்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. ஒரு டீஸ்பூன் சீரகத்தில் சுமார் 1.4 மில்லி கிராம் இரும்புச்சத்து இருக்கும். ஜீரகம் நீரிழிவு நோயை கட்டுக்குள்  வைப்பதற்கும் உதவும்.
 
சீரகம் உடலிலிருந்து கெட்ட கொழுப்பை அகற்ற பயன்படுகிறது. சீரகத்தை சாப்பிடுவது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவும். சீரகம் உடலில் உள்ள  கெட்ட கொழுப்பை குறைப்பதற்கும், எடையை குறைப்பதற்கும் உதவுகிறது. உடல் எடையை குறைப்பதற்கு சீரகத்தை தாராளமாக பயன்படுத்தலாம்.
 
சீரகத்தை அப்படியே சாப்பிடுவதன் மூலமோ, அல்லது சீரகத் தண்ணீரை தினமும் குடிப்பதன் மூலமாகவோ உடலிலிருந்து கொழுப்பை குறைக்க முடியும்.

தலைமுடியின் அடர்த்தியை அதிகரிக்க சில எளிய வழிகள்!

தலைமுடியின் அடர்த்தியை அதிகரிக்க சில எளிய வழிகள்! பாருங்கள் பகிருங்கள்

தலைமுடி ஒருவரின் அழகை அதிகரித்துக் காட்டுவதில் முக்கிய பங்கை வகிக்கிறது. அத்தகைய தலைமுடியில் ஏராளமான பிரச்சனைகளை இன்றைய தலைமுறையினர் சந்திக்கின்றனர். அதில் ஒன்று தலைமுடி அதிகம் உதிர்ந்து, முடியின் அடர்த்தி குறைவாக காணப்படுவது.
இதற்கு காரணம் ஹார்மோன்கள், மோசமான பழக்கவழக்கங்கள், ஆரோக்கியமற்ற உணவுகள் போன்றவையுடன், சரியான பராமரிப்பு கொடுக்காமல் இருப்பதும் முக்கியமானவைகளாகும். தலைமுடி மெலிந்து இருந்தால், அது ஒருவரின் அழகை மோசமாக வெளிக்காட்டும்.
எனவே தமிழ் போல்ட் ஸ்கை தலைமுடியின் அடர்த்தியை அதிகரிக்க சில எளிய வழிகளைக் கொடுத்துள்ளது. அதைப் படித்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.

தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயில் 2 அத்தியாவசிய அமிலங்களான லாரிக் மற்றும் கேப்ரிக் அமிலங்கள் உள்ளது. இவை பாதிக்கப்பட் தலைமுடியை சரிசெய்யவும், பலவீனமான தலைமுடியை வலிமையாக்கவும், முடியின் அடர்த்தியை மேம்படுத்தவும் உதவும். அதற்கு தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி வாரம் 2 முறை மசாஜ் செய்து ஊற வைத்து குளிக்க வேண்டும்

கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல் அனைத்து வகையான தலைமுடி பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வளிக்கும். தலைமுடி மெலிவதற்கு போதிய ஈரப்பசை இல்லாமையும், ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் இருப்பதும் தான் காரணம். ஆனால் கற்றாழை ஜெல்லை வாரத்திற்கு 3 முறை தலையில் தடவி மசாஜ் செய்து 30 நிமிடம் ஊற வைத்து அலசினால், தலைமுடியின் அடர்த்தி அதிகரிக்கும்.

நெல்லிக்காய்
நெல்லிக்காயில் வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை அதிகம் உள்ளது. எனவே அந்த நெல்லிக்காய் பொடியை நீர் கலந்து வாரத்திற்கு ஒருமுறை தலைக்கு தடவி வந்தால், தலைமுடியின் அடர்த்தி அதிகிரிக்கும்

உருளைக்கிழங்கு ஜூஸ்
உருளைக்கிழங்கை சாறு எடுத்து, அதனை வாரத்திற்கு 2-3 முறை தலையில் தடவி ஊற வைத்து அலசி வர, தலைமுடியின் அடர்த்தி அதிகரிப்பதோடு, முடி சம்பந்தமான பிரச்சனைகளும் அகலும்.

விளக்கெண்ணெய்
விளக்கெண்ணெயும் ஓர் அற்புதமான தலைமுடியின் அடர்த்தியை அதிகரிக்க உதவும் பொருள். இதற்கு இதில் உள்ள ஃபேட்டி அமிலங்கள் தான் காரணம். இந்த அமிலங்கள் பாதிக்கப்பட்ட தலைமுடியை சரிசெய்வதோடு, நல்ல பாதுகாப்பையும் வழங்கி, தலைமுடியின் வளர்ச்சியை அதிகரித்து, அடர்த்தியையும் கூட்டும்

முட்டை
பழங்காலம் முதலாக தலைமுடி பிரச்சனைகளைப் போக்க முட்டை பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏனெனில் இதில் முடியின் வளர்ச்சிக்குத் தேவையான புரோட்டீன் அதிகம் உள்ளது. ஆகவே உங்களுக்கு அடர்த்தியான தலைமுடி வேண்டுமானால், நல்லெண்ணெயுடன் முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து கலந்து, வாரம் ஒருமுறை தலையில் தடவி ஊற வைத்து அலசுங்கள்.

கறிவேப்பிலை
கறிவேப்பிலையை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரைக் கொண்டு தலைமுடியை அலசி வந்தால், தலையில் இருக்கும் பொடுகு நீங்குவதோடு, முடி நன்கு கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும்

காதினுள் பூச்சி சென்றுவிட்டால் ...

காதினுள் பூச்சி சென்றுவிட்டால் பேட்டரி லைட் வெளிச்சம் அல்லது செல்போன் லைட் வெளிச்சத்தை காதை நோக்கி பக்கமாக அடிக்கவேண்டும் அந்த வெளிச்சத்தின் ஊடாக பூச்சி வெளியே வர நிறைய வாய்ப்பு உண்டு பூச்சியை சாகடிப்பதால் நமக்கு எந்த பயனும் இல்லை மருத்துவச் செலவு அதிகம்

Tuesday 16 February 2021

மோதிரம் எந்த லக்கினம் எந்த கல்...

அதிர்ஷ்ட ரத்தினம் ராசிக்கு அணிவதா லக்னத்துக்கு அணிவதா என குழப்பம் பலருக்கும் இருக்கும்.புதன் கிரகம்தான் தற்போதைய கலிகாலத்துக்கு வாழ வழிவகை செய்யும் முக்கிய கிரகம் அதாவது புத்தி இருந்தால்தான் வளமுடன் வாழ முடியும் புத்திக்கு அதிபதி புதன்.எனவே மிதுனம் ,கன்னி லக்னத்தில் பிறந்தோர் அவசியம் அணிய வேண்டியது மரகத பச்சைக்கல் பதித்த ஐம்பொன் மோதிரம் ஆகும்.

வெள்ளி மோதிரம் அணியலாமா என கேட்டால் ராசிக்கல் வெள்ளியில் அணியும் அவ்வளவு சிறப்பான பலன் தருவதில்லை.அதனால் ஐம்பொன் மோதிரம் கொடுக்கிறோம்.

இதனை பலருக்கும் செய்து கொடுத்துள்ளேன் .படிப்பதில் தடுமாற்றம் ஞாபக சக்தி குறைவு என குழந்தைகளை நினைத்து வருந்தும் பெற்றோர் குழந்தைகளுக்கு மரகதபச்சைக்கல் பதித்த மோதிரம் அணிய செய்வது நல்லது

நான் பல குழந்தைகளுக்கு நல்ல ஜாதிக்கல் வாங்கி ஐம்பொன்னில் பதித்து கொடுத்திருக்கிறேன்...பூஜை செய்து எப்போது எந்த நேரத்தில் அணியனும் என அவர்கள் ஜாதகம் பார்த்து கொடுப்பதால் நல்ல பலன் கிடைத்திருக்கிறது

மேசம் ,சிம்மம்,விருச்சிகம் ,தனுசு ,மீனம் லக்னத்தார் புஷ்பராகம்,பவழம் இணைத்து அணியலாம்

ரிசபம் ,துலாம் லக்னத்தார் வைரம் அல்லது ஜிர்கான் கல் அணியலாம்

கடகம் லக்னத்தார் புஷ்பராகம் ,முத்து இரண்டும் இணைத்து அணியலாம்

மகரம் ,கும்பம் லக்னத்தார் மரகத பச்சை அணிவதே சிறப்பு

Sunday 14 February 2021

திருவெள்ளறை. புண்டரீகச பெருமாள் கோயில்

ஸ்ரீரெங்கத்தை விட பழமையான கோயில் திருவெள்ளறை. புண்டரீகச பெருமாள் கோயில்.மூன்று யுகங்களாக இருக்கும் ஸ்தலம்.இரு வாசல்கள் இருக்கும் கோயில்.குரு புதன் சக்தி நிரம்பிய ஸ்தலம்.வெளிநாடு வேலையில் இருப்போர் ஒவ்வொரு முறை இந்தியா வந்தபின் மீண்டும் வெளிநாடு செல்லும் போது இங்கு வந்து வழிபட்ட பின்னர் செல்லுங்கள் நல்ல முன்னேற்றம் காணலாம்.வெளிநாட்டுல இருந்தது போதும் நம்ம ஊர்ல செட்டில் ஆகனும்னு நினைச்சா திருச்செந்தூர் போயிட்டு வாங்க.

திருவெள்ளறை .இங்கு பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்..ஆஞ்சநேயர் பக்தர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோயில்.காரணம் இங்கு அனுமன் கண் திறந்த நிலையில் இருக்கிறார் வருடம் வளர்கிறார்.இந்த கோயிலுக்கு ஒரு தடவை போனால் போதாது இருமுறை செல்ல வேண்டும்.உத்திராயணம் ,தட்சியாணயனம் என இரு வாசல் உண்டு.

மிக சக்தி வாய்ந்த அமைதியான பெரிய கோயில்....திருச்சி துறையூர் சாலையில் 20கிமீதொலைவிலிருக்கிறது.

.வாய்ப்பிருப்பவர்கள் சென்று வரவும்...ஸ்வஸ்திக் வடிவில் இருக்கும் கிணறு அமைப்பும்,கோயில் பின்புறம் உள்ள பிரம்மாண்டமான நந்தவனமும் அழகு!

Thursday 11 February 2021

அமாவாசை வழிபாடு

அமாவாசை வழிபாடு
==================

உத்திராயண காலத்தின் முதல் அமாவாசை தை அமாவாசை மற்றும் தட்சிணாயண காலத்தின் முதல் அமாவாசை ஆடி அமாவாசை. இந்த காலங்கள் முன்னோர் வழிபாட்டிற்கு ஏற்றது. உத்திராயண காலம் சூரியன் உச்சமாகும் மேலோகத்தை தொடர்பை குறிப்பதால் நன்றாக வாழ்ந்து சிவபதவி அடைந்த முன்னோர் வழிபாடும், தட்சிணாயண காலம் சூரியன் நீச்சமாகும் பாதாள லோக தொடர்பை குறிப்பதால், சாந்தி அடையாத முன்னோர் ஆத்மாக்கள் வழிபாடும் அனுஷ்டிக்கப்படுகிறது.

மகாளய அமாவாசை என்பது சூரியன் நீச்சநிலைக்கு செல்வதற்கு முன் வரும் அமாவாசை காலம், அதனால் மஹாளய அமாவாசை சாந்தி பெறாத ஆத்மாக்களை சாந்தி பெறும் சிறப்பு வழிபாடுகள் செய்ய உகந்தது.

Wednesday 3 February 2021

வில்வம்... மனஅழுத்தம் குறைக்கும்.:


வில்வம்... மனஅழுத்தம் குறைக்கும்.:

சித்த மருத்துவத்தில், பித்தத்தைத் தணிக்கும் மிக முக்கியமான மூலிகை வில்வம். பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மண்ணில் இருந்துவரும் அரிய மரங்களில் ஒன்று. பண்டைய நாட்களில், `பழங்களின் ராஜா’ எனப் போற்றப்பட்டதும் வில்வம் பழம்தான். வில்வ மரத்தின் இலை, பட்டை, பழம், வேர் அனைத்துமே மருத்துவக் குணம்கொண்டவை.

வில்வம், மஹாவில்வம் என இதில் இரண்டு வகைகள் உண்டு. பெரும்பாலும், மருத்துவத்துக்கு வில்வமே பயன்படுகிறது. சர்க்கரைநோய், வயிற்றுப்போக்கு, பித்தக் கிறுகிறுப்பு, தலைசுற்றல், ஒவ்வாமை (அலர்ஜி), அஜீரணம், வயிறு உப்புசம் எனப் பல நோய்களுக்கும் வில்வம் மிகச் சிறந்த மருந்து.

வில்வம்... விசேஷம்.:
* நாள்பட்ட ஒவ்வாமை நோய் (Atopy), மூக்கில் நீர்வடிதல், நீரேற்றம் உள்ளிட்ட நோய்களுக்கு வில்வ இலை, வேம்பு இலை, துளசி இலை மூன்றையும் சமபங்கு எடுத்து, நிழலில் உலர்த்திப் பொடித்துக்கொள்ள வேண்டும். இதில் அரை டீஸ்பூன் அளவுக்கு எடுத்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால், படிப்படியாக நீரேற்றம் குறையும். ஒவ்வாமையினால் வரும் சைனசிடிஸ் மற்றும் உடல் அரிப்பும் குறையத் தொடங்கும்.

* ஒவ்வாமையால் வரும் இரைப்பு (ஆஸ்துமா) நோய்க்கு, இரவில் ஒன்பது வில்வ இலைகளை ஒரு மண் பாத்திரத்தில் ஒன்றரைக் குவளைத் தண்ணீர்விட்டு வைத்திருந்து, காலையில் இலைகளை அகற்றிவிட்டு, தண்ணீரை மட்டும் குடிக்கலாம். படிப்படியாக ஒவ்வாமையைக் குறைத்து, அதனால் ஏற்படும் மூச்சிரைப்பு நீங்கும்.

* 50 கிராம் வில்வ இலைத்தூளுடன் 10 கிராம் மிளகு சேர்த்து, நன்கு பொடி செய்து கலந்துகொள்ள வேண்டும். காலை, மாலை இரண்டு வேளையும் இதில் அரை டீஸ்பூன் அளவுக்குப் பொடியை எடுத்து, தேனில் குழைத்துச் சாப்பிடலாம். இது, ஈஸ்னோபோலியா (Eosinophilia) என்ற ஒவ்வாமையினால் வரும் நீரேற்றம் மற்றும் மூச்சிரைப்புக்கு நல்ல பயன் அளிக்கும். இந்தப் பழக்கம் இன்றும் தஞ்சை மாவட்டங்களில் ஒரு பாரம்பர்ய முறையாகவே பயன்படுத்தப்பட்டுவருகிறது.

* வயிற்றுப் புண்களுக்கு (கேஸ்ட்ரிக் அல்சர்) வில்வம் பழம் சிறந்த மருந்து. இதன் துவர்ப்புத் தன்மையும் மலமிளக்கித் தன்மையும் பசியை உண்டாக்கும்.

* வில்வம் பழத்தில் மணப்பாகு செய்து, பித்தத்தினால் வரும் குன்ம நோய்க்கு (பெப்டிக் அல்சர்) கொடுக்கலாம். இதை நாமே வீட்டில் செய்துகொள்ளலாம். வில்வம் பழச் சதையை 100 கிராமுக்கு 200 மி.லி தண்ணீர்விட்டு அரைத்து வடிகட்டி, ஒரு பங்கு நாட்டுச் சர்க்கரை சேர்த்து, சிரப் பதத்துக்கு காய்ச்சி, சிறிது தேன் கலந்துகொள்ளவும். காலையில் ஒரு டீஸ்பூன், இரவில் ஒரு டீஸ்பூன் சாப்பிடலாம்.

* அஜீரணம், வயிற்று உப்புசம் இரண்டுக்கும் வில்வப் பட்டையைக் கொண்டு செய்யும் வில்வாதி லேகியம் நல்மருந்து.

* சர்க்கரை நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க, வில்வம் ஓர் அற்புத மூலிகை.

* வில்வ இலை, வில்வம் பழம் இரண்டும் குழந்தைகளுக்கு வயிற்றுப் புழுக்களால் ஏற்படும் பேதிக்கு அருமருந்து.

* வில்வப் பட்டை, விளாப் பட்டை, நன்னாரி, சிறு பயறு, நெற்பொரி, வெல்லம் சேர்த்து, ஒன்றரை லிட்டர் தண்ணீர்விட்டு 200 மி.லியாகக் கொதிக்கவைத்து அந்தக் கஷாயத்தைக் கொடுத்தால் வாந்தியோடு வரும் காய்ச்சல் நீங்கும்.

* வில்வ இலையை நல்லெண்ணெயில் காய்ச்சி, காது நோய்களுக்கு காதில்விடும் பழக்கம் இன்றும் வழக்கத்தில் உள்ளது.

உளவியல் நோய்களில் முதலாவதான மனஅழுத்தம் நீங்க வில்வம் ஒரு தலைசிறந்த மருந்து. வில்வ இலையைக் கொதிக்கவைத்து முன்னர் கூறியதுபோல் ஊறவைத்தோ, கஷாயமாக்கியோ சாப்பிட்டால், மனஅழுத்தம் படிப்படியாகக் குறையும். வில்வம் பழத்தின் `சிரப்’ மணப்பாகு சந்தைகளில் கிடைக்கிறது. அதை வாங்கி, தினமும் ஓரிரு டீஸ்பூன் தண்ணீரில் கலந்து அருந்தலாம்.

வில்வம் சிவனுக்கு மட்டுமல்ல... நம் ஆரோக்கியத்துக்கும் விசேஷம்.

மாசிக்காய் மருத்துவ நன்மைகள்:

மாசிக்காய் மருத்துவ நன்மைகள்:

கருப்பை நலம்

பெண்களுக்கே உண்டான ஒரு இயற்கை வரம் தாய்மை ஆகும். பெண்களுக்கு மாதந்தோறும் வெளியேறும் மாதவிடாய் சம்பந்தமான பிரச்சனைகள் பல பெண்களுக்கு. அவர்கள் இந்த மாசிக்காய் பொடியை தேன் அல்லது நெய்யில் கலந்து சாப்பிட்டு வர மாதவிடாய் காலத்தில் அதிக ரத்த போக்கு ஏற்படுவது நிற்கும். கருப்பையில் இருக்கும் அழுக்குகள், நச்சுக்கள் நீங்கும். கருப்பை பலம் பெறும்.

புண்கள்

மாசிக்காய் பொடியை நீர்விட்டு நன்கு குழைத்து ஆசனவாயில் மூலம் பாதிப்பால் ஏற்பட்ட புண்கள், கட்டிகள் போன்றவற்றின் மீது தடவி வர சிறந்த நிவாரணம் அளிக்கும். தேமல், படை, சொறி, சிரங்கு போன்றவற்றின் மீதும் மாசிக்காய் பொடியை தினமும் நீரில் குழைத்து தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.

வயிற்று போக்கு

கெட்டு போன உணவுகளை உண்பதாலும், சீதோஷண நிலை மாறுவதாலும் சிலருக்கு வயிற்று போக்கு ஏற்ப்பட்டு அவதியுறுவர். இப்படிப்பட்டவர்கள் மாசிக்காய் பொடியை ஒரு சிட்டிகை அளவு எடுத்து அதை தேனில் கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் வயிற்று போக்கு குணமாகும். குழந்தைகளுக்கு ஏற்பட்டும் வயிற்று போக்கு பிரச்சனைக்கும் இது சிறந்த தீர்வாகும்.

ரத்தப்போக்கு

நமது அன்றாட வாழ்க்கையில் சில சமயம் எதிர்பாராத விதமாக நமக்கு அடிபடுகிறது. சமயங்களில் ரத்த காயம் கூட ஏற்படுகிறது. அடிபட்ட காயத்தில் ரத்தம் அதிகம் வெளியேறுவதை தடுக்க, மாசிக்காய்கள் சிலவற்றை நெருப்பில் சுட்டு, அந்த சாம்பலை ரத்த காயத்தின் மீது வைத்து அழுத்த, ரத்தம் வெளியேறுவது நிற்கும்.

விஷ முறிவு

போதைப்பொருட்கள், வேறு சில ரசாயனங்களும் விஷ தன்மை கொண்டவை. இதை உண்டவர்கள் உடலில் இருக்கும் இந்த நச்சை நீக்குவதற்கு மாசிக்காய் தூளை 5 கிராம் அளவில் ஒரு நாளைக்கு மூன்று வேளை கொடுத்து வந்தால் அபின், கஞ்சா, மது, மயில் துத்தம், மர உப்பு போன்ற பொருட்களின் நஞ்சை முறிக்கும்.

சுவாசப்பிரச்னைகள்

குளிர்காலங்களில் பெரும்பாலானவர்களுக்கு ஜலதோஷம் ஏற்படுகிறது. மேலும் டான்சில்ஸ், இருமல், தொண்டைக்கட்டு மற்றும் தொண்டை வலி போன்ற பிரச்சனைகள் நமது சுவாசப்பாதைகளில் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. மாசிக்காய் பொடியை, கற்பூரவள்ளி இலை சாற்றுடன் கலந்து சாப்பிட இப்பிரச்னைகளிலிருந்து சிறந்த நிவாரணம் கிடைக்கும்.

ஆண்மை கோளாறுகள்

இன்றைய காலத்தில் மனஅழுத்தம் மற்றும் உடலில் ஏற்படும் சில குறைபாடுகள் பல ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. மாசிக்காய், ஜாதிகாய், ஆவாரம் பசை, ஏலக்காய் இவற்றை எல்லாம் நன்கு பொடித்து இதனுடன் வல்லாரை இலைப்பொடியை சேர்த்து, நெய்யில் வதக்கி சாப்பிட நரம்புகள் வலுப்பெற்று ஆண்மை குறைபாடுகள்.

சருமம் பாதிப்பு

நமக்கு இளமையான தோற்றம் தருவதில் நமது சருமம் முக்கிய பங்கு வகிக்கிறது. தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுக்கவும், இளமை தோற்றம் பெறவும் மாசிக்காய், ஜாதிக்காய் மற்றும் கிராம்பு ஆகியவற்றின் பொடிகளை ஒன்றாக கலந்து உடலுக்கு பூசி குளித்து வர மேற்கூறிய பலன்கள் கிடைக்கிறது.

வாய்ப்பிரச்சனைகள்

நாம் உணவை உண்பதற்கு வாய், நாக்கு, பற்கள் போன்ற உறுப்புக்கள் உதவி புரிகின்றன. மாசிக்காய் பொடியை குடிநீரில் கலந்து வாய்கொப்பளித்து வர நாக்கில் இருக்கும் புண்கள் ஆறும். ஈறுகள் உறுதிபெறும். ஈறுகளில் ரத்தம் வடிவது நிற்கும். பற்சொத்தை மற்றும் உஷ்ணம் காரணமாக வாயில் ஏற்படும் புண்கள் குணமாகும்.

இதயம்

ஒரு சிலர் மனம் பதட்டமடைவதாலும் அதிகம் உடலை வருத்தி கொள்வதாலும் இதயத்தில் படபடப்பு தன்மை அதிகம் ஏற்படும். இக்குறைபாட்டை போக்க மாசிக்காய் பொடியை சிறிது பசும்பாலில் விட்டு குழைத்து நாக்கில் தடவினால் சிறிது நொடிகளிலேயே இதய படபடப்பு நிற்கும்.

விக்னம்....

விநாயகரும் பாதக ராசிகளும்..!

சோதிடத்தில் ஒவ்வொரு ராசி வீட்டிற்க்கும் பாதக வீடு உண்டு, பாதகம் என்பது தடைகள் ஆகும், பாதகம் என்பதை விக்னம் என்றும் கூறலாம், விக்னத்தை தவிடு பொடியாக்குபவர் விநாயகர், நாரத புராணம் எனும் நூலில் ஒவ்வொரு ராசிக்கும் உரிய விநாயகரின் ரூபத்தை/பெயரை நாரதர் கூறியுள்ளார், அந்த அந்த ராசி பாதகமாக வருபவர் அதன் விக்னத்தை விலக்கும் விநாயகரின் பெயரை கூறி வழிபட்டால் பாதக ஸ்தானத்தின் பலனை எதிர்கொள்ளும் ஆற்றலை பெறலாம்..!

மேஷம்: வக்ரதுண்ட..!
ரிஷபம்: ஏகதந்த..!
மிதுனம்: கிருஷ்ண பிங்காக்ஷா..!
கடகம்: கஜவக்த்ரா..!
சிம்மம்: லம்போதரா..!
கன்னி: விகாதா..!
துலாம்: விக்னராஜா
விருச்சிகம்: தூம்ரவர்ணா..!
தனுசு: பாலச்சந்திரா..!
மகரம்: விநாயகா..!
கும்பம்: கணபதி..!
மீனம்: கஜானனா..!

வழிபடும் முறை: அவரவர் பிறந்த ஹோரையில் தினமும் குறைந்தது 18 முறை கூறி மனதார தடைகள் விலக பிராத்திக்கவும், நல்லதே நடக்கும், அடுத்த பதிவில் சந்திப்போம்..!