jaga flash news

Sunday 25 December 2022

சந்திரன் இருக்கும் இடத்தின் பலன்

சந்திரன் இருக்கும் இடத்தின் பலன்
1 இல் இருக்கும் போது ஆரோக்கியம் மண தெளிவு, சுகம், பெண் அனுகூலம்.
2இல் இருக்கும் போது காரியதடை, பண விரயம் மானக்கேடு,
3 இல் இருக்கும் போது
லாபம், தைரியம் ஜெயம்.
4இல் இருக்கும் போது
ரோக பீதி, குழப்பம், செயல் நட்டம், நீர் கண்டம் தனவிரயம்
5  இருக்கும் போது
சஞ்சலம், காரிய தோல்வி.
6 இருக்கும் போது
 சுகம், பணவரவு, வெற்றி.
 7இல்இருக்கும் போது
பண வரவு, ஆரோக்கியம், போஜன, சயன சுகம்
8இல் இருக்கும்போது
சோர்வு, மனகுழப்பம், கலகம்.
9இல் இருக்கும்போது
அச்சம் ,காரிய தடங்கல.
10இல் இருக்கும்
போது
தொழில் சிறப்பு, நற்பலன்.
11இல் இருக்கும்போது
லாபம் ,சுகம். உற்றார் நேசம்.

12 இல் இருக்கும் போது
காரிய தன விரயம்

Wednesday 21 December 2022

மன அழுத்தத்திற்கு காரணமான 'Cortisol' என்ற ஹார்மோன்மன அழுத்தம் குறைந்துவிடும்குளிர்ந்த நீரில் குளிப்பதால்

மார்கழி மாசத்துல சூரியன் உதிப்பதற்கு முன் பச்சை தண்ணீரில் குளிப்பதுண்டா

இல்லைங்க காலையில 9 மணிக்கே சுடுதண்ணீ தான் என்கிறீர்களா...

மன அழுத்தத்திற்கு காரணமான 'Cortisol' என்ற ஹார்மோன் காலைப் பொழுதில் அதிகமாக சுரக்கும். குளிர்ந்த நீரில் குளிப்பதால்  இந்த ஹார்மோன் சுரப்பது குறைந்து மன அழுத்தம் குறைந்துவிடும். 

பிசு பிசுப்பு இல்லாத ஆரோக்யமான சருமமாக மாறும். அரித்தல் போன்றவை மறையும்.

வெந்நீரில் குளிப்பது ஆண்மை குறைவை ஏற்படுத்துமாம். ஆனால் குளிர்ந்த நீரில் குளிப்பது ஆண்மை சக்தியை அதிகரிக்கும். 

அது சரி.. ஆனால் தலைக்கு குளித்தால் முடி அதிகமாக உதிருமே… ஆமாம். உதிரும். வெந்நீரில் குளித்தால்.. வெந்நீரில் குளிப்பதால் முடியின் வேர்கள் வலுவிழக்கும். குளிர்ந்த நீரில் குளிப்பதால் முடி உதிராது(உதிர்ந்தவர்களுக்கு அல்ல)

நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடைகிறது.

நுரையீரல் செயல்பாடு அதிகரிக்கும்.

அன்றைய நாளை சுறுசுறுப்பாகவும் புத்துணர்வாகவும் வைத்திருக்கும். சுருக்கமாக சொன்னால் நாய் துரத்தினால் வருமளவுசக்தி குளிர்ந்த நீர் குளியலால் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

Monday 12 December 2022

கடவுளுக்கு ஆகாத தீட்டுக்கள்!

மாதவிலக்கு, குழந்தை பிறப்பு, இறப்பு போன்றவை மிக மோசமான தீட்டு, இந்த நாட்களில் இறை வழிபாடு கூடாது என்ற கருத்து அனைவர் மத்தியிலும் உள்ளது. தீட்டுடன் கடவுளை வழிபட்டால் கடவுள் நம்மை ஏற்கமாட்டார். பாவம் வந்து சேரும். கடவுளின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும் என்ற எண்ணமும் உள்ளது. உண்மையில் இது எல்லாம் தீட்டே இல்லை, காமம், கோபம், சுயநலம், ஆணவம், பொறாமை ஆகிய ஐந்துதான் கடவுளுக்கு ஆகாத தீட்டு என்று ஞானிகள் தெரிவிக்கின்றனர். மாதவிலக்கு என்பது இயற்கை

மாதவிலக்கு, குழந்தை பிறப்பு, இறப்பு போன்றவை மிக மோசமான தீட்டு, இந்த நாட்களில் இறை வழிபாடு கூடாது என்ற கருத்து அனைவர் மத்தியிலும் உள்ளது. தீட்டுடன் கடவுளை வழிபட்டால் கடவுள் நம்மை ஏற்கமாட்டார். பாவம் வந்து சேரும். கடவுளின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும் என்ற எண்ணமும் உள்ளது.

உண்மையில் இது எல்லாம் தீட்டே இல்லை, காமம், கோபம், சுயநலம், ஆணவம், பொறாமை ஆகிய ஐந்துதான் கடவுளுக்கு ஆகாத தீட்டு என்று ஞானிகள் தெரிவிக்கின்றனர்


சுயநலத்துடன் வாழும் ஒருவர் மற்றவர்களுக்கு உதவ முடியாது. இவர்கள் தங்களைப் பற்றி மட்டுமே யோசிப்பார்கள். அப்படி இருக்கும்போது கடவுளை நினைக்க இவர்களுக்கு நேரம் இருக்காது. தான் மட்டும்தான் வாழ வேண்டும் என்று மற்றவர்களின் உடைமைகளை அபகரித்துக்கொள்ளத் தயங்கமாட்டார்கள், அல்லது அடுத்தவர்களுக்கு கிடைக்கக் கூடாது என்று காரியங்களில் இறங்கிவிடுவாரக்ள். இதுவும் கடவுளுக்கு ஆகாத தீட்டாகும்.


ஆணவம், கர்வம் இருக்கும் மனம் மற்றவர்களை மதிக்காது. உடலால், மனதால் மற்றவர்களை காயப்படுத்திக்கொண்டே இருக்கும். அதே போல் மற்றவர்கள் வாழ்வதை, மற்றவர்களுக்கு நல்லது நடந்ததை ஏற்க முடியாது, மற்றவர்களுக்கு கெடுதல் நடக்கவே விரும்புவார்கள் பொறாமை கொண்டவர்கள். இத்தகைய எண்ணம் கடவுளுக்கு பிடிக்காத, தீட்டாக மாறிவிடுகிறது!




விருத்தித் தீட்டு

குழந்தை பிறந்த தீட்டை 'விருத்தித் தீட்டு' என்று சொல்லுவோம்.  பொதுவாகக் குழந்தை பிறந்த தீட்டுக் கணக்கு குடும்பத்துக்குக் குடும்பம் மாறக்கூடியது. அதிகபட்சமாக 10 நாள்களில் இருந்து 16 நாள்கள் வரை இருக்கும். தீட்டு முடிந்துதான் புண்ணியாக வாசனம் செய்து பெயர் இடுவது வழக்கம். அதைச் செய்துவிட்டாலே தீட்டு எல்லாம் முடிந்துவிட்டது என்று பொருள். மூன்று மாதமெல்லாம் தீட்டு என்று எந்தக் கணக்குமில்லை.


மனைவி கருவுற்று 5 மாதங்களுக்கு மேல் ஆகியிருந்தால் ,குழந்தை பிறந்து பெயர் வைக்கும்வரை மலைக்குப் போகக்கூடாது என்பதுதான் விதி. இவருக்குக் குழந்தை பிறந்து ஒரு மாதத்துக்குமேல் ஆகிவிட்டதால் இவர் சபரிமலை போவதில் எந்தத் தடையும் இல்லை. எனவே, இவர் தாராளமாக மலைக்குச் செல்லலாம். ஐயப்பன் அருள் அனைவருக்கும் எப்போதும் உண்டு" 

தீட்டில் நியமங்கள் விருத்தி தீட்டு வரும்போது என்ன என்ன செய்யல்லாம் என்ன என்ன செய்யக்கூடாது




  • தீட்டில் நியமங்கள்

    1. தீட்டுள்ளவன் வீட்டில் தீட்டற்றவன் தெரிந்து சாப்பிட்டால் அன்றையபொழுது அவனுக்குத் தீட்டு.
    2. தீட்டுப்போகும் தினத்தில் சுமார் காலை எட்டரை மணிக்கு (ஸங்கவ காலம்) மேல்தான் தீர்த்தமாடி தீட்டை முடிக்க வேண்டும்.
    3. பிறப்பு, இறப்பு, மாதவிடாய் (தூரம்) இவை சூர்ய உதயத்திற்கு பதினொன்றேகால் நாழிகை(270 நிமிடங்கள்)க்கு முன் ஏற்பட்டால் முதல் நாள் கணக்கு. அதன் பிறகானால் மறுநாள் கணக்கு.
    4. ப்ரேதத்தின் பின் போனாலும் க்ஷவரம் செய்து கொண்டாலும் இரு முறை ஸ்நானம் செய்ய் வேண்டும்.
    5. ஸந்யாசிகளுக்கு (முன் ஆச்ரம) மாதா, பிதாக்களின் மரணத்தில் மட்டும் ஸ்நாநம்.
    6. 88 அடிகளுக்குள் பிணம் (சவம்) இருந்தால், எடுக்கும்வரை, சமைப்பது, சாப்பிடுவது கூடாது.
    7. ஸந்யாசியின் சவமானால் அந்தப் பகுதிக்கே தீட்டுக் கிடையாது.
    8. நகரங்களுக்கு மேற்படி தோஷங்கள் எதுவுமில்லை.
    9. ஸ்நானம் பண்ணமுடியாத அளவிற்கு நோயுள்ள தீட்டுகாரனின் தீட்டுப்போக வேண்டுமானால், தீட்டற்ற ஒருவன் தீட்டுள்ளவனைத் தொட்டுவிட்டு தீர்த்தமாடி பின் தொட்டு தீர்த்தமாடி என பத்து முறை தீர்த்மாடவேண்டும்.
    10. அதுபோல் நோயுள்ள தூர ஸ்த்ரீயை மற்றொருத்தி 12 முறை தொட்டு தீர்த்தமாடி வேறு உடை உடுத்தச் செய்தால் சுத்தி. இரண்டிலும் புண்யாஹவாசனம் முக்கியம்.



    1. ச்ராத்தத்தின் நடுவில் (ச்ராத்த சங்கல்பம் ஆனபின்) தீட்டுத் தெரிந்தால் ச்ராத்தம் முடியும்வரை கர்த்தாவுக்குத் தீட்டில்லை.
    2. வரித்தபின் போக்தா (ச்ராத்த ஸ்வாமி)க்கு தீட்டுத் தெரிந்தால் சாப்பிட்டு முடியும்வரை தீட்டில்லை.
    3. விவாஹத்தில் உத்வாஹ சங்கல்பத்தின் பின் தீட்டுத் தெரிந்தால் சேஷ ஹோமம் வரை தீட்டில்லை.
    4. ஸந்யாசிகளின் மரணத்தினால் அவரின் பங்காளிகளக்குத் தீட்டில்லை, அவப்ருத ஸ்நாநம் மட்டும்.

    மற்ற சில கவனிக்கத் தக்கவை

    • ராஜாங்கத்தால் கொலை தண்டனை விதிக்கப்பட்டவனுக்கு உடனே கர்மா செய்யலாம்.
    • துர் மரணம் செய்து கொண்டவனுக்கு 6 மாதம் கழித்து கர்மா செய்ய வேண்டும் என்பது விதி ஆயினும் 24 நாட்கள் கழித்து செய்வது என்றும் ஒரு விதி உள்ளது.
    • தற்செயலாய் துர்மரணம் அடைவோருக்கு தீட்டு, தர்பணம் முதலியவை உண்டு.
    • தற்கொலை செய்துகொண்டவனுக்கு தீட்டு, தர்பணம் இவை இல்லை.
    • கர்மா செய்பவனுக்கு 11ம் நாள் கர்மாவிற்குப் பின் தீட்டுப் போகும்.
    • கல்யாணமான பெண் இறந்தால் அவள் பிறந்த வீட்டுப் பங்காளிகளுக்கு தீட்டில்லை.
    • பிறப்புத் தீட்டுள்ளவனை 4 நாளைக்கு மேல் தீண்டினால் அதிகம் தோஷமில்லை.
    • ஒரு தீட்டுக் காரன் மற்றொரு தீட்டுக்காரனைத் தொடக் கூடாது.
    • தீட்டுள்ளவன் வீட்டுக்கும் அவன் சாமான்களுக்கும் தீட்டுண்டு.
    • பிரம்மச்சாரிகள் கர்மா செய்தால் அதனுடன் தர்பணம் (உதகதானம்) தனியாக இல்லை.
    • மனைவி கர்பமாக இருக்கும்போது தானம் வாங்குதல், தூரதேச யாத்திரை போதல் கூடாது.
    • சவத்துக்கு முன்னாலும், பக்கவாட்டிலும் போகக் கூடாது.
    • சஞ்சயனம் ஆனபின் துக்கம் விசாரித்தால் ஆசமனம் மட்டும் போதும்.
    • சிராத்த தினத்தன்று துக்கம் விசாரிக்கச் செல்லக் கூடாது.
    • தன் மனைவி கர்பமாய் இருக்கும்போது தாய், தந்தை தவிர மற்றவர்களின் சவத்தை சுமக்கலாகாது.
    • ப்ரம்மச்சாரிகள் தாய் தந்தை சவத்தைத் தவிர மற்வர்கள் சவத்தைச் சுமக்கக்கூடாது.
    • தீட்டுக் காரர்கள் ஆலயத்திற்குள் செல்லக் கூடாது.
    • தீட்டுக்காரர்களை தீட்டில்லாதவர்கள் நமஸ்கரிக்கக் கூடாது. தீட்டுக்காரரும் அப்படியே.
    • ஜனன, மரண தீட்டிலும் ஏகாதசி, துவாதசி விரதம் விடக் கூடாது. உபவாஸம் மட்டும், பூஜை கிடையாது.
    • சாவு தீட்டுக்காரர் மெத்தை போன்றவற்றில் படுக்கக் கூடாது. தினமும் தீர்த்தமாடவேண்டும்.
    • சிசுக்கள் இறந்தால் புதைத்த தினம் முதல்தான் தீட்டு

Sunday 11 December 2022

ஷஷ்டாஷ்டக தோஷம் கண்டறிவது எவ்வாறு?

ஷஷ்டாஷ்டக தோஷம் என்றால் என்ன? ஷஷ்டாஷ்டக தோஷம் கண்டறிவது எவ்வாறு? ஷஷ்டாஷ்டக தோஷம் பாதிப்பு என்ன?


ஷஷ்டாஷ்டக தோஷம் என்றால் என்ன?

வட மொழி சொல்லான ஷஷ்டாஷ்க என்பதற்கு ஒற்றுமை இன்மை என்று தமிழில் பொருள்படும்.

ஷஷ்டாஷ்க தோஷம் என்றால், ஆண் பெண் இராசிக்களின் கோள்கள் அல்லது லக்ன கோள்கள் ஒற்றுமை இல்லா நிலையில் உள்ளன என்பதாகும்.

இராசி அதிபதி பொருத்தம் இல்லாத நிலையும் இந்தகைய தோஷம் எனலாம்.


ஷஷ்டாஷ்டக தோஷம் கண்டறிவது எவ்வாறு?

பெண் ராசியிலிருந்து ஆண் ராசி வரை எண்ணினால்

பெண் ராசிக்கு ஆண் ராசி 6, 8 ஆகவோ அல்லது 8, 6 ஆகவோ வந்தால் சஷ்டாஷ்டக தோஷம் எனப்படும். அதாவது ஒற்றுமை இல்லாத நிலை இருக்கிறது.

இது திருமணம் முடிப்பதற்கு ஒவ்வாத நிலையாகும்.

ஷஷ்டாஷ்டக தோஷம் விதிவிலக்கு


பெண் ராசி பிள்ளை ராசி

மேஷம் கன்னி

தனுசு ரிஷபம்

துலாம் மீனம்

கும்பம் கடகம்

சிம்மம் மகரம்

மிதுனம் விருச்சிகம்

-ஆக இருந்தால் சஷ்டாஷ்டக தோஷம் கிடையாது.


அதே வேளையில் கும்பம் - சிம்மம் என்றால் முற்றிலும் பகை.


ஷஷ்டாஷ்டக தோஷம் பாதிப்பு என்ன?


இத்தகைய தோஷ முரன்பாட்டுடன் ஆண் பெண் இனைந்தால், அந்த தம்பதிகள் மட்டும் இன்றி இரு வீட்டின் மொத்த குடும்பமும் பகை நிலையில் வாழும்.

மேலும் திடீர் விபத்துக்களால் ஆண் அல்லது பெண் பலியாகலாம்.

இந்த தோஷம் இருப்பவர்களை மனம் முடிப்பதால் மன முறிவு ஏற்படாது. ஆனால் வாழ் நாள் முழுவதும் பகை நிலை இருந்து கொண்டே இருக்கும்

Saturday 10 December 2022

திருமண பொருத்தம் -மாமனார் மாமியார் பொருத்தம்

திருமண பொருத்தம் -மாமனார் மாமியார் பொருத்தம் 

3ல் ராகு சனி செவ்வாய் போன்ற கிரகங்கள் இருந்தால் மாமனார் மருமகன் உறவு அப்படியே தாமரை இலை தண்ணீர் போலத்தான் ஏதாவது சுப கிரகங்கள் பார்த்தால் இன்னும் கொஞ்சம் நெருக்கமாகும் 

பெரும்பாலும் மாமனார் வீட்டுக்கு போக மாட்டாங்க வருசம் ஒரு தடவை போவதே அரிது.மாமனார் ஆரோக்கியமாக இருக்க மாட்டார் ..சனி மூன்றில் மாமனார்க்கு வறுமை.குரு அல்லது சுக்கிரன் 3ல் மாமனார் பணக்காரர் செல்வாக்கானவர்…3ல் செவ்வாய் மாமனார் கோபக்காரர் ..3ல் கேது மாமனார் பல சிக்கல் உடையவர் வழக்கு விபத்து சந்திப்பார் விரக்தியானவர்.

 சுபரே அங்கு இருந்தால் 3ஆம் அதிபதி வலுவாக இருந்தா என் மாமனார் போல வருமா என ஊருக்குள் பெருமை பேசும் மருமகன் கிடைப்பார் மருமகள் கிடைப்பாள்.

2ஆம் அதிபதி திசை நடந்து 2ஆம் அதிபதி 12ல் வலுத்து பாவருடன் இருந்தால் மாமனார்க்கு தொடர் விழ்ச்சி…பத்தாம் அதிபதி கெட்டு இருந்தால் மாமியார் சதிகாரியா மாறிடுவாங்க..பத்தில் சுபர் இருந்தால் என்னொட மாமியார் என்னோட அம்மா மாதிரி என்பார்கள்..பத்தில் பாவர் மாமியார்க்கு கேடு..மாமியார் கொடுமை நடக்கும் பத்தாம் அதிபதி 6,8ல் இருந்தால் மாமியார்தான் முதல் எதிரி.

12 ஆம் அதிபதியும் பத்தாம் அதிபதியும் ஒண்ணா இருந்தால் மாமனார் தன்னுடைய தொழிலில் பங்கு தாரராக சேர்த்துக்கொள்வார்…சுகாதிபதி திசை நடந்தால் மாமனார் தன்னுடைய சொத்துக்களில் ஒன்றை மருமகன்/மருமகள் பெயரில் எழுதி வைப்பார்

3ஆம் அதிபதி லக்னாதிபதி ஒன்றாக 1,4,5,7,9,10,11 ஆம் இடங்களில் இருப்பின் மாமனார் மருமகன் எப்போதும் ஒற்றுமையா இருப்பாங்க..

10 ஆம் அதிபதி லக்னாதிபதி ஒன்றாக 1,4,5,7,9,10,11 ஆம் இடங்களில் இருந்தால் மருமகளும் மாமியாரும் ஒற்றுமையா இருப்பாங்க…10 ல் சுக்கிரன் மாமியார் வசதியானவர் அழகானவர் செல்வாக்கு நிறைந்தவர். அழகான பெரிய வீடு இருக்கும்.

லக்னத்தில் சுப கிரகம் இருந்தாலே அதாவது குரு,சுக்கிரன்,புதன்,சந்திரன் இவர்களில் ஒருவர் இருந்தாலே சிரித்த முகம்.மாமனார் மாமியார்க்கு பொதுவாகவே பிடிக்கும்.

லக்னத்தில் சுக்கிரன் உள்ளூரில் அல்லது பக்கத்து தெருவில் மாமனார் வீடு இருக்கும்..உறவில் திருமணம் ஆகி இருக்கும்