jaga flash news

Friday 30 April 2021

விதுரர் சொன்ன நீதி சாஸ்திரம்...



*விதுரர் சொன்ன நீதி சாஸ்திரம்...*

*இந்த மூன்று சமயங்களில் எந்த முடிவும் எடுக்க கூடாது.*

1. பசி வயிற்றை கிள்ளும் போது.
2. தூக்கம் நம் கண்களை சுழற்றும் போது.
3. போதையில் இருக்கும் போது.

*இந்த மூன்று சமயங்களில் யாருக்கும் வாக்குறுதி தரக்கூடாது.*

1. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் போது.
2. மிகவும் துக்கத்தில் இருக்கும் போது.
3. மிகவும் கோபத்தில் இருக்கும் போது.

*இந்த மூன்று விதமானவர்களின் நட்பை ஒதுக்க வேண்டும்.*

1. நம்மைப் பற்றி உணராதவர்கள்.
2. நம்மைக் கண்டு பொறாமை கொள்பவர்கள்.
3. நமக்கு ஈடாக செயல்பட முடியாதவர்கள்.

*இந்த மூன்று பேரை எப்போதும் மறக்கக் கூடாது.*

1. ஆபத்தில் நமக்கு உதவி செய்தவர்கள்.
2. நம் குறைகளை பெரிது படுத்தாதவர்கள். 
3. நம்முடைய நலத்தை நாடுபவர்கள்.

விரோதியை நம்பலாம். ஆனால் துரோகியை ஒரு போதும் நம்பவும் கூடாது. மன்னிக்கவும் கூடாது.

ஒருவருடைய குணம் சரியில்லை என்று அறிந்த பின் அவர்களை விட்டு ஒதுங்கி போவதே நல்லது. இல்லையேல் அவர்கள் தரத்திற்கு நம்மை தாழ்த்தி விடுவார்கள்.

Saturday 24 April 2021

பிரம்மஹத்தி தோஷம் தீர்க்கும் பிராகார வலம்....



பிரம்மஹத்தி தோஷம் தீர்க்கும் பிராகார வலம்; நமசிவாய சொல்லி பலிபிடத்தில் நமஸ்காரம்



சிவ வழிபாடு என்பது சிந்தையில் தெளிவைத் தரும். ஞானத்தையும் யோகத்தையும் தந்தருளும் என்கிறது சிவ புராணம். சிவ வழிபாட்டை பூர்த்தி செய்யும் விதமாக மூன்று முறை பிராகார வலம் வந்து வேண்டிக்கொண்டால், நினைத்த காரியங்கள் அனைத்தும் ஈடேற்றித் தருவார் சிவபெருமான். ஞானமும் யோகமும் கிடைக்கப் பெறலாம்.



சோம வாரம் என்று சொல்லப்படும் திங்கட்கிழமை சிவபெருமான் குடிகொண்டிருக்கும் தலங்களுக்குச் சென்று தரிசிப்பதும் வழிபடுவதும் மிகுந்த பலன்களைத் தந்தருளக் கூடியவை. சித்தமெல்லாம் சிவமயம் என்பார்கள் சிவனடியார்கள். முக்தி கிடைக்க, சிவமே கதியென்பார்கள். மாத சிவராத்திரியில், சிவ வழிபாடு செய்யலாம். நமசிவாய மந்திரம் சொல்லி சிவலிங்கத் திருமேனியை தரிசித்துப் பிரார்த்தனை செய்வது, பீடைகளை விலக்கும்; தரித்திரத்தைப் போக்கும். இல்லத்தில் நல்ல அதிர்வுகளை உண்டுபண்ணும்.

அதேபோல், சிவ வழிபாட்டில் பிரதோஷம் என்பதும் மிக மிக முக்கியமானது. திரயோதசி திதியில் வருகின்ற பிரதோஷத்தன்று சிவனாருக்கும் நந்திதேவருக்கும் பதினாறு வகையான அபிஷேகங்கள் நடைபெறும். இந்த அபிஷேக ஆராதனையைக் கண்ணாரத் தரிசிப்பதே மகா புண்ணியம் என்பார்கள்.

சிவாலயங்களில் பாடல் பெற்ற திருத்தலங்கள் என உண்டு. 274 பாடல் பெற்ற திருத்தலங்கள் உள்ளன என விவரிக்கிறார்கள் சிவாச்சார்யர்கள். அதேபோல், வைப்புத்தலங்கள் என்று இருக்கின்றன. அதாவது அந்த ஆலயத்துக்கு நால்வர்கள் நேரடியாக வராமல், வேறொரு ஆலயத்தில் இருந்தபடியே அந்தத் தலம் குறித்தும் பாடியுள்ளனர். இதனை வைப்புத்தலங்கள் என்று போற்றுகின்றனர்.

பாடல் பெற்ற தலங்கள், வைப்புத் தலங்கள் என்பவற்றுடன் இந்த இரண்டுமில்லாத ஆலயங்களும் ஏராளமாக இருக்கின்றன. எந்த சிவாலயமாக இருந்தாலும் நாம் எத்தனை முறை பிராகார வலம் வருகிறோம் என்பதைக் கொண்டு அவற்றுக்கான பலன்கள் உள்ளன என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

சிவன் கோயிலுக்குச் சென்று பிள்ளையார் தொடங்கி வழிபடுவோம். சிவனாரையும் கோஷ்ட தெய்வங்களையும் வழிபடுவோம். அம்பாளை தரிசிப்போம். இதன்பின்னர், பிராகார வலம் வந்து, கொடிமரம், பலி பீடம் இருக்குமிடத்தில் நமஸ்கரிக்க வேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

சிவ வழிபாட்டை பூர்த்தி செய்யும் விதமாக மூன்று முறை பிராகார வலம் வந்து வேண்டிக்கொண்டால், நினைத்த காரியங்கள் அனைத்தும் ஈடேற்றித் தருவார் சிவபெருமான். ஞானமும் யோகமும் கிடைக்கப் பெறலாம்.

ஐந்து முறை பிராகார வலம் வந்து சிவனாரை நமஸ்கரித்து வேண்டிக்கொண்டால், எடுத்த காரியத்திலெல்லாம் வெற்றிக் கிடைக்கப் பெறலாம். காரியத்தடைகள் அனைத்தும் அகலும். ஏழு முறை பிராகாரத்தை வலம் வந்து கொடிமரத்துக்கு அருகில், பலிபீடத்துக்கு அருகில் நமஸ்கரித்து வேண்டிக்கொண்டால், நற்குணங்கள் கொண்ட வாழ்க்கைத் துணை அமைவார்கள். நல்ல வித்துகளாக வாரிசுகள் இருப்பார்கள். தோஷங்கள் அனைத்தும் விலகிவிடும் என்கிறார் பாஸ்கர குருக்கள்.

ஒன்பது முறை பிராகார வலம் வந்து வேண்டிக்கொண்டால், சந்தான பாக்கியம் கிடைக்கும். சந்ததி, வாழையடி வாழையென செழிக்கும். வளமுடனும் நலமுடனும் வாழச் செய்வார் ஈசன்.

11 முறை பிராகார வலம் வந்து பிரார்த்தனை செய்தால், நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழலாம். சகல சம்பத்துகளுடன் வாழ அருளுவார் தென்னாடுடைய சிவனார்.

பதிமூன்று முறை பிராகார வலம் வந்து நமஸ்கரித்து பிரார்த்தனை செய்தால், குடும்பத்தில் மூதாதையர்களுக்கு இருந்த குலதெய்வ தோஷம், பித்ரு தோஷம் முதலானவையெல்லாம் நீங்கிவிடும்.

பதினைந்து முறை வலம் வந்து நமஸ்கரித்து சிவபெருமானை வேண்டிக்கொண்டால், அசையும் சொத்துக்களும் அசையாச் சொத்துகளும் கிடைக்கப் பெற்று, கடன் தொல்லையில் இருந்து மீண்டு வாழலாம்.

பதினேழு முறை பிராகார வலம் வந்து வேண்டிக்கொண்டால், செல்வம் பெருகும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். மூன்று தலைமுறைக்கான சொத்துகள் சேரும். வம்சம் தழைத்தோங்கும் என்பது உறுதி.

108 முறை பிராகார வலம் வந்தால், பிரம்மஹத்தி முதலான சகல தோஷங்கள் அனைத்தும் விலகும் என்றும் ஆயிரத்து எட்டு முறை பிராகார வலம் வந்து பிரார்த்தனை செய்து நமஸ்கரித்தால், இந்த இப்பிறவிலும் ஏழ் பிறவியிலும் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கப் பெறலாம் என்றும் முக்தி நிச்சயம் .



பிரம்மஹத்தி தோஷம்

பிரம்மஹத்தி தோஷம் எதனால் ஏற்படுகிறது இதற்கு உரிய பரிகாரங்கள் என்ன என்பது பற்றி ஜோதிட நிபுணர் ஶ்ரீரங்கம் கிருஷ்ணனிடம் கேட்டோம்.

''பிரம்மஹத்தி தோஷம் என்பது,  கொடுமையான பாவங்களைச் செய்வதால் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. தாய்க்கு உணவளிக்காமல் விரட்டி அடிப்பது, பசுவைக் கொல்வது, குருவை உதாசீனப்படுத்துவது, உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வது, தெய்வச் சொத்தைத் திருடுவது போன்றவற்றால் இந்த தோஷம் ஏற்படும். குறிப்பாக நன்றி மறப்பதால்தான்  இந்த தோஷம் ஏற்படுகிறது. 

இந்த தோஷம் இருந்தால், ஜாதகர் தனது பிறவியில் என்ன உழைத்தாலும் அதற்கு உரிய பலன் கிடைக்காமல், வறுமையும் தோல்விகளையுமே சந்தித்து  வாழ்வார். வேலை கிடைக்காது, வேலை கிடைத்தாலும் உரிய கூலி கிடைக்காது. கூலி கிடைத்தாலும் முறையான அங்கீகாரம் கிடைக்காது. இந்த நிலை ஓர் ஆண்டு இரண்டு ஆண்டுகள் அல்ல. பல ஆண்டுகள் நீடிக்கும். தொழிலில் உரிய அங்கீகாரம் கிடைக்காது. சமூகத்தில் திறமை இருந்தும் நல்ல நிலையை அடைய முடியாமல் தடுமாறிய வண்ணம் இருப்பார்கள். ஏன் சிலவேளைகளில் அவர்களது குடும்பத்திலே கூட அவர்களுக்கு மரியாதை இருக்காது.  இதற்கு அவர்கள் பெரிய அளவில் செலவில்லாத முறையான எளிய  பரிகாரங்களைச் செய்தாலே போதும். நல்ல பலன்கள் கிடைத்து மேன்மை அடைவார்கள்.

பிரமஹத்தி தோஷம் ஒருவருக்கு இருக்கிறதா? இல்லையா? என்பதை எப்படி அறிந்து கொள்வதெனப் பார்ப்போம்.

லக்னத்துக்கு 4 -ம் இடத்தில் அசுப கிரகங்கள் இருந்து, 6, 8, 12 -ம் இடங்களில் சுபர்கள் இருந்தாலும்,  5, 9 - ம் வீடுகளுக்கு  அதிபதிகளாக அசுப கிரகங்கள் இருந்தாலும், அவர்களுடன் சேர்ந்து இருந்தாலும், அசுபர் வீட்டில் இருந்தாலும் இந்த தோஷம் அவர்களுக்கு உள்ளதென அறியலாம். 

*  ராகுவின் இருக்கும் ராசியில் இருந்து 5 அல்லது 9 - ம் வீட்டில் சனி, குரு சேர்க்கை ஏற்பட்டிருந்தாலும்  (அதாவது சனியும் குருவும் ஒரே பாதத்தில் 10 டிகிரியில் இருக்கவேண்டும்) தோஷமாகும்.

பரிகாரங்கள்: 

* சிவன், பிரம்மா, விஷ்ணு மூவரும் உள்ள தலங்களுக்கு சென்று வழிபாடு நடத்த வேண்டும். இது தவிர  ஒரு பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது  அல்லது வயது முதிர்ந்த ஏழைத் தம்பதியருக்கு வீட்டில் உணவளித்து அவர்களுக்கு புதிய துணிமணிகள் வாங்கிக்கொடுத்து அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொள்ள வேண்டும். 

* உத்தமர்கோவில், கொடுமுடி, கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர், ஸ்ரீவாஞ்சியம் கோயில்களுக்கு புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் சென்று தோஷ நிவர்த்தி பூஜை செய்துகொள்வது நல்லது.

* ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சென்று அங்குள்ள ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சந்நிதியில் எள்ளுச் சாதம் நைவேத்தியம் செய்து எல்லோருக்கும் கொடுத்தால் நல்ல பலன் அளிக்கும்.

* திருபுல்லாணி சென்று, இறந்த மூத்தோருக்கு (தகப்பனார் இல்லாதவர்கள்) பித்ருக் கடன் செய்து அதற்கு அருகே உள்ள தேவிப்பட்டினத்தில் உள்ள நவ பாஷாணத்திலான நவகிரகங்களின் வழிபாட்டை மேற்கொள்ளவேண்டும்'' இவ்வாறு அவர் கூறினார்

Thursday 22 April 2021

அயோத்தியாபட்டணம்

தமிழகத்தின் அயோத்தி! 
சேலம்.
 அயோத்தியாபட்டணம் கோதண்டராமர் திருக்கோயில்!

தமிழகத்தின் சேலம் மாவட்டத்திலும் ஓர் அயோத்தி இருக்கிறது. இந்தத் தலம் வட அயோத்தியின் மகிமைக்கு சற்றும் குறைவில்லாதது என்றே சொல்லலாம். 
 அயோத்தியாவாசிகள் தரிசிப்பதற்கு முன்னதாகவே, ராமபிரான் தமது பட்டாபிஷேகக் கோலத்தைக் காட்டியருளிய திருத்தலம், சேலம் மாவட்டத்தின் அயோத்தியாபட்டணம். இங்குள்ள அருள்மிகு கோதண்டராமர் ஆலயத்துக் குச் சென்றால், நாமும் தரிசிக்கலாம், சக்கரவர்த்தி திருமகனின் பட்டாபிஷேகக் கோலத்தை.

ஆதிகாலத்தில் இந்தப் பகுதியில் பரத்வாஜ முனிவரின் ஆசிரமம் அமைந்திருந்தது. ராவண வதம் முடிந்து திரும்பிய ராமபிரான், இவ்வழியே வரும்போது, முனிவரைச் சந்தித்தார். பரத்வாஜ முனிவரின் வேண்டுகோளின்படியும், விபீஷ்ணனின் பிரார்த்தனையை ஏற்றும் இந்த இடத்தில், சீதாபிராட்டியுடன் சேர்ந்து பட்டாபிஷேகக் கோலத்தை காட்டியருளினாராம் ராமபிரான். ஆக, அயோத்தியில் பட்டாபிஷேக கோலத்தில் காட்சி தருவதற்கு முன்பாகவே, இங்கு முதன்முதலாக பட்டாபிஷேகக் கோலத்தில் காட்சி தந்ததால்தான் இவ்வூர் அயோத்தியா பட்டணம் என்று அழைக்கப்படுவதாகக் கூறுகின்றனர். இங்கே, ராமர் மூன்று நாட்கள் தங்கி இருந்ததாகக் கூறுகின்றனர்.

இன்னொரு விசேஷ அம்சம்... இத்தலத்தில் மட்டுமே ராமரும் சீதையும் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கின்றனர். ராமர் மற்றும் சீதைக்கு பரதன், லட்சுமணன், சத்ருக்னன் ஆகியோர் சேவை சாற்றியபடியும், அங்கதன், சுக்ரீவன், ஆஞ்சநேயர் ஆகியோர் ராமபிரான்-சீதாதேவியை சேவித்தபடியும் உள்ளனர். ராமரின் மகிமைகளை உணர்ந்த கடையெழு வள்ளல்களில் ஒருவரான- தகடூர் என்ற தருமபுரியை ஆண்ட அதியமான்தான்  இத்திருத்தலத்தின் மூலஸ்தானத் தைக் கட்டியதாகச் சொல்கிறார்கள்.

கட்டடச் சிறப்புக்கும் அத்தாட்சியாகத் திகழ்கிறது அருள்மிகு கோதண்டராமர் ஆலயம். இந்தக் கோயிலின் முன்மண்டபமானது தேர்  போன்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வடக்கு வாசல், தெற்கு வாசல் என இரண்டு வாயில்கள் இந்த மண்டபத்தில் இருக்கின்றன. இதன் மேற் கூரையில் திகழும் ராமாவதார மகிமைகளை உணர்த்தும் ஓவியங்கள், மிக அற்புதம்! மூலிகை வண்ணப்பூச்சுகளைக் கொண்டு வரையப்பட்ட இந்த ஓவியங்கள், பக்தர்களின் உடலில் உள்ள பிணிகளைப் போக்குவதாக நம்பிக்கை. 

இங்குள்ள இருபத்தெட்டு தூண்களிலும் ராமரின் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றும் ராமாயண காலத்துக்கே நம்மை அழைத்துச் செல்கின்றன. இந்த 28 தூண்களில், நான்கு மூலைகளில் உள்ளவை இசையை உண்டாக்கும் தூண்களாகத் திகழ் கின்றன. 

மூலஸ்தானத்துக்கு முன்புறம் உள்ள மண்டபத்தை திருமலை நாயக்கர் கட்டியதாகச் சொல்லப்படுகிறது.  மண்டபத்தில் உள்ள கல்தூண்களில் திருமலை நாயக்கர், அவரது மனைவி  மற்றும் அவர்களுடைய பிள்ளைகளின் சிற்பங்களைக் காணலாம். கோயிலின் வடக்கு வாசலுக்கு எதிராக ஆழ்வார் கள் சந்நிதியையும்,  தெற்கு வாசலுக்கு எதிராக சக்கரத்தாழ்வார் சந்நிதியை யும் தரிசிக்கலாம். ஆஞ்சநேயருக்கும் சந்நிதி உண்டு.

இத்திருத்தலத்தில், வடதிசையில்  தனியாக சிறு சந்நிதி அமைத்துக்கொண்டு குடிகொண்டுள்ள ஆண்டாளுக்குப் பூரம் நட்சத்திரத் தன்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை கூட்டுப் பிரார்த்தனை நடைபெறுகிறது. அப்போது ‘திருப்பாவை’ பாடப்படுகிறது. திருமணத் தடை உள்ளவர்கள், புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், இந்தக் கூட்டு வழிபாட்டில் கலந்து கொண்டு ஆண்டாளை தரிசித்தால், தங்களுடைய குறைகள் நிவர்த்தி ஆகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இத்தலத்தின் தல விருட்சம்- வன்னி மரம். புரட்டாசி மாதத்தின் ஐந்து சனிக் கிழமைகளிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும். மூன்றாவது சனிக் கிழமை ராமர்-சீதை கல்யாண உற்சவம் நடைபெறும். சித்திரை மாதத்தில் வரும் ராம நவமி அன்று இத்திருத்தலத்தில் மிகப்பெரிய அளவில் சிறப்பான வழிபாடு நடைபெறும். 

இந்த ஆலயத்துக்கு வந்து கோதண்ட ராமசுவாமியை வணங்கினால், திருமணத் தடை உள்ளவர்களுக்குத் தடை நீங்கி, தாலி பாக்கியம் கிடைக்கும்; ராகு கேது தோஷம் நிவர்த்தி ஆகும்; வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்; சொத்துத் தகராறுகள் நிவர்த்தி ஆகும்; குடும்பப் பூசல்கள் நீங்கும்; குழந்தைப் பேறு  கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நீங்களும் ஒருமுறை இந்தத் தலத்துக்குச் சென்று அயோத்தி நாயகனை வழிபட்டு, வாழ்க்கை வளம்பெற வரம்பெற்று வாருங்கள்.

ஸ்வாமி: அருள்மிகு கோதண்டராமர்

திருக்கோலம்:பட்டாபிஷேகத் திருக்கோலம்
சகலவேண்டுதல்களையும்,வேலை கிடைக்க,பதவி உயர்வு கிடைக்க நிறைவேற்றும் தலம் இது.

திருமாங்கல்ய கயிறு மாற்ற வழிமுறைகள்...

திருமாங்கல்ய கயிறு மாற்ற வழிமுறைகள்...

திருமாங்கல்யம்- 16 செல்வங்களும் அளிக்கக்கூடிய மங்கலப்பொருள், 

கயிறு நல்லதா அல்லது செயின் நல்லதா என்றால்: கயிறு
ஏன் கயிறு: 16 திரிகளை ஒன்றாக இணைத்தே தாலி கயிறு செய்கிறார்கள், 16 திரிகளும் 16செல்வங்களை குறிக்கும் ஆகவே தமிழ் முறைப்படி கயிறே உகந்தது, 

உதந்த நாள்: வளர்பிறை தசமி மற்றும் பஞ்சமி திதி நாள் 

உகந்த நேரம்: சூரிய உதயத்திற்கு முன்

ஒரேநாளில் 3திதி, 3 நட்சத்திரம் வரும் நாட்களில் எந்நேரமும் மாற்றலாம்...

வழிமுறை:

1)திசை: வடக்கு அல்லது கிழக்கு பார்த்து அமரவேண்டும்

2)இடம் : பூஜை அறை

3)குளித்து முடித்து, 
4) பஞ்சகவ்யத்தை எடுத்து ஒரு டம்ளரிலோ பஞ்சபாத்திரத்திலோ ஊற்றி கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்
5) கிழக்கு அல்லது வடக்கு திசைபார்த்து அமரவேண்டும்

6) ஒவ்வொரு உருவாக எடுத்து கோர்க்கும்போது " ஓம் ஐம் ஶ்ரீம் வசம் வசங்கரி மங்கலாம்பிகா இரட்சிப்பாய்" என்ற மந்திரத்தை சொல்லவேண்டும், 

7) கோர்த்து முடித்தவுடன் பஞ்சகவ்யத்தினுல் தொய்க வேண்டும் (நனைக்க) அப்போது உங்களுக்கு தெரிந்த அம்பாள் ஸ்தோத்திரங்களை சொல்லலாம், "சர்வ மங்கல மாங்கல்யே சிவே சர்வாதகே" என்ற மந்திரமும் சொல்லலாம்

8) 27 முறை பஞ்சகவ்யத்தில் தொய்த்து எடுக்கவேண்டும் 

9) பின்பு மஞ்சள் நீரில் அதை கழுவ வேண்டும்

10) 11 அம்பாளினுடைய நாமத்தை சொல்லி குங்கும அர்ச்சனை செய்யவேண்டும்

11) தூப தீபங்கள் காட்டவேண்டும் 

12) பின்பு உள் வைத்துக்கொள்ளலாம் 

13) உதவிக்கு உங்கள் தாயை வைத்துக்கொள்ளலாம், இல்லாதவர்கள் மூத்த சுமங்கலியின் உதவியை நாடலாம்,

14) பிறர் உதவியுடன் அணிந்தால், அணிபவர்கள் அல்லது மாற்றிக்கொள்பவர் கிழக்கு நோக்கியும் செய்பவர் வடக்கு நோக்கியும் அமர்ந்து செய்யலாம்

15) இப்போது அணிந்தாயிற்று, பஞ்ச கவ்வியத்தை நீங்களும் உங்கள் கணவரும், பிள்ளைகளும் சாப்பிட்டு மீதம் உள்ளதை கால்படாத இடத்தில் ஊற்ற வேண்டும்
16) மாலை கோவிலுக்கு சென்று அம்பாளுக்கு அர்ச்சனை செய்து ஒன்று அல்லது மூன்று சுமங்கலி பெண்களுக்கு தானம் கொடுக்கவேண்டும்.

சர்வமங்களம் உண்டாகும்.

 

Sunday 18 April 2021

அக்னி மூலையும்., அடுக்களை அறையும்.

அக்னி மூலையும்., அடுக்களை  அறையும்.
.....................................



வாழ்க்கையின் இன்றிமையாத ஒரு பாகம் தான் உணவு  உண்பது.

ஒவ்வொரு ஜீவ ராசிகளுக்கும் பெரும்போராட்ட சம்பவம்  அது,

மனுஷ்ய ஜீவன் மட்டும் தான் சமைப்பதற்காக சமையலறை  உண்டாக்கினான்,

சமையலறையில் சமைக்கும் உணவுகளுக்கும் மனுஷ்ய குணங்களுக்கும்ம், நிறைய சம்பந்தம் உண்டு,

சமைக்கும் சமையலாளியின் சமைக்கும் போது ஏற்படும் மனோநிலை  சமைத்த பக்ஷணங்களில்  கண்டிப்பாக காணப்படும்,

சமைக்கும் ஸ்தலம்,

சமையலாளியின் அப்போதைய மனோநிலை,

சமைக்கும் பொருட்கள்,

சமைப்பவர் கைப்புண்ணியம் போன்றவை தான் 

அந்த பக்ஷணங்களை சாப்பிடும் மனுஷ்யன்மார்களுக்கு,

சாத்வீக குணம்,

தாமஸ குணம்,

ராக்ஷஸ குணம் போன்றவற்றை  
உருவாக்கும்,

பாரதீய ஸாஸ்திரத்தின் படி அக்னிமூலை யில் மட்டுமே  சமையல் செய்ய வேண்டும்

தென் கிழக்கு மூலையில்,

இல்லையென்றால் குடும்ப அங்கத்தவர்களுக்கு ஸரீர. உபத்ரவங்கள்,

மனோ நிலையில் மாற்றங்கள் கண்டிப்பாக. ஏற்படுத்தும், 

முன்பு காலங்களில் தென்கிழக்கு மூலையில் மட்டுமே பாசகம் செய்யப்பட்டிருந்தது,

அன்றைய காலகட்டத்தில்  
வீட்டிற்கு, தென்னை  ஓலை, வைக்கோல் போன்றவற்றை கொண்டு தான் கூரை மேய்வர்,

அப்படியிருக்கும் காலகட்டத்தில்  

"தெக்கன் காற்று "

தென்கிழக்கு  திக்கில் இருந்து

ஒரு காற்று வந்து அடுக்களை கூரையில் தீ பிடித்து  வீடே எரிந்து விடும்,

அப்போது பல குடும்பங்களில் அடுக்களை  அறை வடகிழக்கு பாகத்தில் மாற்றப்பட்டது

இப்போது  ஓலைவீடுகள் இல்லாததால்  மறுபடியும் அக்னி மூலைக்கு அடுக்களை வந்தது.

வடகிழக்கு மீன கூறில்(இராசியில்)
வாஸ்துபுருஷன் தலையும்,

தென்மேற்கு மூலை கன்னி கூறில் (கன்னி  இராசியில்)
நைருதி பாகத்தில்  வாஸ்து புருஷன் கால் பாதமும்  நிலை கொண்டுள்ளது.

அதனால் தான்  வடகிழக்கு திசையிலும்,
தென்மேற்கு திசையிலும்  அடுக்களை  அறை வைக்க கூடாது,  என்றனர்,

வளர்ந்து வரும் நாகரீக காலகட்டத்தில்  
அடுத்த தலைமுறையில் அடுக்களைகள் இருக்காது.

அனைவரும்  உணவகங்களில் வாங்கித்தான் உண்பர்.

ஹஸ்த ரேகைகள்

ஹஸ்த ரேகைகள்.
.....................................

ஹஸ்தம் என்றால் கை என்று அர்த்தமாகும்,
ஹஸ்தரேகைகள் என்றால் கைரேகைகள் ஆகும்,
ஹஸ்தம் என்கிற பெயர் கன்னிராசியில் ஒரு நக்ஷத்ரத்திற்கும் உண்டு,

ஹஸ்தரேகைகள் தெய்வம் மனுஷ்யன்மார்களுக்கு தருகின்ற முன்அறிவிப்புகள் ஆகும்,

மனுஷ்யன்மார் நல்லகாலத்திலும், கஷ்டகாலம் வேட்டையாடும்போதும் கைகளில் புதுபுது ரேகைகள் குறிகள், குழிகள், மருக்கள் தோன்றுவதை கண்கூடாக காணலாம்,

நித்யமும் காலையில படுக்கையிலிருந்து எழுந்ததும் இரண்டுகைகளையும் தேய்த்து, தொழுது  ப்ரார்த்தித்து அதன்பிறகு கண்களை தொற்றி வந்தபின்னர்தான் எழவேண்டும் என்கிறது பாரதீய சம்ஸ்காரதத, சனாதான ஸாஸ்த்ரம்,

கீழே கொடுத்துள்ள,
(01.வலை அடையாளங்கள்)
(02.தாழே வருகின்ற ரேகை)
(03.முறிவு ரேகைகள், )

(04. தீவு ரேகை, )

(05.ரேகையின் மேற்பகுதியில் காணப்படுகின்ற நக்ஷத்ர குறியீடு)

(06.சங்கிலிபோல் காணப்படும் ரேகை)

(07.பிளவுபட்ட குறி)

இவைகளெல்லாம் மனுஷ்யன்மார்கள் தெஸாகாலங்கள்  , மோசமாக வரும்போது கஷ்டமான சூழ்நிலைகள் வாழ்க்கையை வேட்டையாடும் என்று முன்பே உணர்த்துவதுபோல் கைகளில் தோன்றும்,

ஹஸ்தரேகையில் ஒருவரின் கையை பரிசோதிக்கும்போது முதலில் அவரின் ஆயுள்ரேகையை பரிசோதித்து கொள்ளவேண்டும்,
காரணம், ஆயுள்பலம் இல்லாதவருக்கு, பாக்கியரேகை, இருந்தாலன்னே! இல்லாமல் போனால் என்ன?

ஆகையால்தான் முதலில் பிரதமாக கார்யமாக ஆயுள்பலம் ரேகையை பார்த்துதான் மற்றவைகள் தீர்மானிக்கப்படவேண்டும்,

அதன்பிறகு பாக்கியரேகை, இதயரேகை, புத்திரேகை, போன்றவைகள் பரிசோதனை செய்யவேண்டும்,

நம்முடைய எதிர்காலம் நம்முடைய கைகளில் தான் உண்டு.

ஜோதிஷஸாஸ்த்ரத்தை போலவே ஹஸ்தரேகை ஸாஸ்த்ரமும் பிரசித்தி பெற்றதாகும்.

Saturday 17 April 2021

Thank you mom...



My First

1) *My first restaurant* => * my mother's breast *
2) *My first toilet* => * my mother's laps *
3) *My first school* => * Mom's kitchen *
4) *My first teacher* => * my mother *
5) *My first doctor* => * it's my mom *
6) *My first thermometer* => * my mother's fingers *
7) *My first friend* => * it's my mom *
8) *My first dresser* => * it's my mom *
9) *My first vehicle* => * my mom's back *
10) My first lawyer => * it's my mom. *

Thank you mom for all you did for giving me life

* Long live to all mothers*

*A mother can easily maintain 6 children, but it would be difficult for 6 children to maintain a mother?*

*Submitted To all the moms of the world*.

8"-ன் சிறப்பு

"☂8"-ன் சிறப்பு

*"☂எட்டு"* போடுகிறவனுக்கு *"நோய்"* எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி...!
மனித உடல் அவரவர் கை அளவுக்கு எண்ஜான் அளவுமட்டும் இருக்கும்..

*உங்கள் வீட்டின் உள்ளோயோ அல்லது மாடியிலோ இடம் தேர்வு செய்து, * 6 க்கு 12 அடி அல்லது 8 க்கு 16 அடி அளவில் செவ்வக கோடு இட்டு அதற்குள் 8 வடிவில் வரைந்து கொள்ளுங்கள்...! 
*"...இது தெற்கு வடக்காக நீளப் பகுதி இருக்கணும்..."*

காலை அல்லது மாலை , வடக்கு நோக்கி நின்று அந்த *8* வடிவ கோட்டின் மேல் உங்கள் நடை பயிற்சியை ஆரம்பியுங்கள்...!

*ஆண்கள் வலது கை பக்கம் பெண்கள் இடது கை பக்கமும் நடக்க ஆரம்பிக்கணும்.*

ஆரம்பித்த இடத்திற்கே வந்த பின் அதே வழியில் தொடர்ந்து *21 நிமிடம்* நடக்கணும் .

பின்பு மறுமுனையில் தெற்கு நோக்கி நின்று  இதேபோல் *21 நிமிடம்* கையை நன்கு விசிறி மிதமான வேகத்தில் 
நடை பயிற்சி செய்யணும்,  *42 நிமிடம்*.

*1.* பயிற்சி தொடங்கிய 
        அன்றே மார்பு சளி
        கரைந்து வெளியேறுவதை    
        காணலாம்.
*2.* இந்த பயிற்சியைஇருவேளை
        செய்துவந்தால், உள்ளங்கை     
        கை விரல்கள்   
        சிவந்திருப்பதை காணலாம். 
        அதாவது ரத்த ஓட்டத்தை 
        சமன்படுத்துகிறது என்று
        அர்த்தம்.
*3.* நிச்சயம் நீரிழவு நோய் 
        (சர்க்கரை வியாதி) குறைந்து 
        முற்றிலும் குணமாகும்.
        (பின்னர் மாத்திரை, 
        மருந்துகள் தேவை இல்லை).
*4.* குளிர்ச்சியினால் ஏற்படும் 
        தலைவலி, மலச்சிக்கல் 
       போன்றவை தீரும்.
*5.* கண் பார்வை அதிகரிக்கும். 
       ஆரம்ப நிலை கண்ணாடி 
       அணிவதை தவிர்க்கலாம்.
*6.* கேட்கும் திறன் அதிகரிக்கும்.
*7.* உடல் சக்தி பெருகும்- ஆதார 
       சக்கரங்கள் சரியாக 
       செயல்படும்.
*8.* குடல் இறக்க நோய் 
       வருவதை தடுக்கும்.
*9.* ரத்த அழுத்தம் நிச்சயமாக 
       கட்டுப்பாட்டில் வரும்.
*10.* பாத வலி, மூட்டுவலி 
          மறையும்.
*11.* சுவாசம் சீராகும் அதனால் 
          உள் உருப்புக்கள் பலம் 
         பெரும்...!

*"8"* வடிவில் நடை பயிற்சி செய்யும் பொழுது நீங்களே உணர்வீர்கள்...!

அந்த வடிவம் "முடிவில்லாதது" மட்டுமல்ல, நமது ஆதார சக்கரங்களை தட்டி எழுப்பி, சம
நிலை படுத்துகிறது என்பதை நமக்கு உடல் பயிற்சியாக சொல்லித்தந்தனர் சித்தர்கள்.

விருப்பம் உள்ளவர்கள், முயற்சி செய்து பலனடையுங்கள்...!  

நோய் இருப்போரும் நோய் இல்லாதோரும் இந்த *8 வடிவ நடை* பயிற்சி செய்யலாம்,

*1வது 21 நாளில் -* சர்க்கரை நோயால் வரும் உள்ளங்கால் எரிச்சல், குதிவாதம், வடகலை நாடி- இடகலை நாடி புத்துயிர் பெரும்...!

*2 வது 21 நாளில் -*
மூட்டு வலி, ஒட்டுக்கால், பிரச்னை குறையும்...!

*3 வது 21 நாளில் -*
தொடை பகுதி பலம் பெரும்...!

*4 வது 21 நாளில் -* ஆண்மை குறைபாடு, விதைப்பை குறைபாடு சர்க்கரை நோய் அளவு, விந்து நாத அணு குறை பாடு, கல்லீரல் மண்ணீரல் குறைபாடு, கர்ப்ப பை குறைபாடு குழந்தை பேறின்மை, மாதநாள் குறைபாடு, ஆண் பெண் இல்லற நாட்டமின்மை நீங்க ஆரம்பிக்கும் ...!

*5 வது 21 நாளில் -* வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் குறையும்...!

*6 வது 21 நாளில் -* இரத்த அழுத்தம், இதய நோய் , ஆஷ்துமா , காசம், நீர் உடம்பு, உடல் அதிக எடை குறைய ஆரம்பிக்கும்...!

*7 வது 21 நாளில் -* தொண்டை பகுதி பிரச்சனைகள், அடிக்கடி கழுத்து பிடிப்பு, முதுகில் வாய் பிடிப்பு வராது...!

*8 வது 21 நாளில் -* அன்னாக்கு பகுதி விழிப்படையும், வாய் கண் காது  கருவிகள் நோய் தன்மை தாக்காது, 2 நாசியிலும் சுவாசம் ஒரே நேரத்தில் ஓடும், மூளைப் பகுதி விழிப்படையும், மூளைப் பகுதி நோய் தீரும்...!

இதை செய்ய வயது வரம்பு இல்லை,  இப்பயிற்சி 
*"வாசி யோக"த்திற்கு இணையானது,* 
இந்த 8 நிலைகளில் உங்களின் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து உயிர்,  மனம் உடல் ஒன்றாகி காலன் தள்ளி நிர்ப்பான்...,
மெளனமாக நடக்கணும் அல்லது ஏதாவது இறை நாமத்தை மனதில் செபித்தவாறு நடக்கணும் , வாய் வழியாக சுவாசம் கூடாது..
வாழ்க வளமுடன்.

Wednesday 14 April 2021

இரவில் தொப்புளில் தினமும் ஒரு சொட்டு எண்ணெய் - கிடைக்கும் நன்மைகள் என்னென்ன ?

தொப்புளில் நீங்கள் தினமும் எண்ணெய் விட்டால் கண் பார்வை தெளிவடையும் . கம்ப்யூட்டர் , மொபைல் சதா சர்வ காலமும் பார்ப்பதால் நிறைய பேருக்கு கண் வறட்சி உண்டாகிறது. அவர்களுக்கு இந்த வைத்தியம் வரப்பிரசாதம். கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு போன்றவற்றை குணப்படுத்துகிறது. பாதவெடிப்பு, சரும பிரச்சனை : உடல் சூட்டினால் உண்டாகும் பித்த வெடிப்பு குணமாகிறது. சருமம் பளபளக்கிறது. உதடு வறட்சி மறைகிறது. தலை முடி ஆரோக்கியமாக செழித்து வளரும். மூட்டு வலி : முழங்கால் மற்றும் மூட்டு வலிகள் குணமாகிறது. கால் குடைச்சல் சாத சர்வ காலம் சிலருக்கு இருக்கும். இதற்கு நரம்பு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் உண்டாகும். அவர்கள் தொப்புளில் எண்ணெய் விடுவதால் கால் நரம்புகள் ஆசுவாசமடைகின்றன. இதனால் மூட்டு, கால் வலிகள் குணமாகிறது. உடல் சோர்வு : உடல் நடுக்கம், சோர்வு மற்றும் கணைய பாதிப்புகள் குணமாகிறது. கர்ப்பப்பை வலுப்பெறுகிறது. உடல் சூடு குறையும். நல்ல தூக்கம் வரும். எந்த எண்ணெய் எந்த பாதிப்பைப் போக்கும் என இப்போது பார்க்கலாம். நரம்பு பாதிப்புகள் : நம் தொப்புள் ஏதாவது நரம்புகள் துவண்டு போயிருந்தால் இந்த எண்ணெயை அந்த நரம்புகள் வழியாக செலுத்தி அவற்றை வலுப்படுத்தும். இதனால் சீரான ரத்தம் பாய்ந்து உடல் உறுப்புகளை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. தேங்காய் எண்ணெய் : தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒரு இன்ச் அளவிற்கு மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்தால் கண்வலி, சரும வறட்சி குணமாகும். விளக்கெண்ணெய் இரவில் தொப்புளில் விளக்கெண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை இஞ்ச் அளவிற்கு மசாஜ் செய்யும்போது முழங்கால் வலி, மூட்டு வலி , கால் வலி போன்றவை குணமாகின்றன. வேப்பெண்ணெய் : வேப்பெண்ணெயை தொப்புளில் வைப்பதால் சரும வியாதிகளும், தொற்றுக்களும் குறைகின்றன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. நச்சுக்கள் அழிகிறது. எலுமிச்சை எண்ணெய் : எலுமிச்சை என்ணெய் வைத்தால் உடலில் பூஞ்சை தொற்று காரணமாக வரும் வயிற்று வலி குணமாகும்.. தொற்றும் அழிந்துவிடும். பாதாம் எண்ணெய் : சருமம் பளபளக்கிறது. முகம் இளமையாக மாறும். சுருக்கங்கள் மறையும். தினமும் இரவில் தொப்புளில் தடவி மசாஜ் செய்தால் பத்து நாட்களில் முகம் பளபளப்பாகிறது. ஆலிவ் எண்ணெய் : தொப்புளின் மேல் ஒரு துளி ஆலிவ் எண்ணெய் தடவி மசாஜ் செய்தால் பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் உண்டாகும் வலி பறந்து போகும்.

வயலில் பொம்மை எதுக்கு..?

வயலில் பொம்மை எதுக்கு..?

வயலில் நடப்படும் பொம்மை கண் திருஷ்டிக்காகவோ, பறவைகளை விரட்டவோ அல்ல..வயலில் பயிர்கள் நன்கு செழித்து வளர எவ்வளவுதான் தண்னீர் பாய்ச்சி,இயற்கை உரங்கள் போட்டு கண்ணும் கருத்துமாய் பார்த்துக்கொண்டாலும் அவையும் உயிருள்ள குழந்தைகள்தான். ,தன் தாயை போல தன் வயலின் முதலாளியை நினைக்கிறது. விவசாயி நாற்று நட்டது முதல் பயிர் வளர்வது வரை அந்த வயலில் சுற்றிக்கொண்டே இருப்பார் ...அந்த மனித வாடையால்தான் வயலில் விளையும் தாவரத்தில் பச்சையமே உருவாகிறதாம்..

சூழ்நிலை காரணமாக வெளியூர் போகும்போதோ அல்லது அடுத்த வயலில் வேலை செய்யும் போதோ அந்த விவசாயி இல்லாமல் பயிர்கள் சோர்ந்து விடுமாம்...அப்படி ஆகாமல் இருக்க தன் விய்ற்வை படிந்த சட்டையை வேட்டியை ஒரு வைக்கோல் பொம்மையில் சுற்றி காட்டின் நடுவே நட்டுவிட்டால் காற்ரின் மூலம் அவர் துணியில் இருக்கும் வியர்வை பரவி அவர் நடமாடிக்கொண்டிருக்கிறார் என்ற உணர்வை பயிர்களுக்கு தந்து அவைகளுக்கு உற்சாகத்தை கொடுக்குமாம்..

பயிர் நன்கு செழிப்புடன் இருக்குமாம் இதுதான் உண்மை ஒரு முதிய விவசாயி சொன்னது.ஆனால் இப்போது ஏதாவது துணியை சுற்றி பயிருக்கு கண் திருஷ்டி படக்கூடாது என நினைத்து பொம்மை வைக்கிறார்கள் ...பறவை வரக்கூடாதுன்னு நினைச்சு வைக்கிறாங்க..

நடைமுறை ஆன்மீகம்

*🔵🔵🔵🔵🟢🟢🟢🔴🔴🔴🔴நடைமுறை ஆன்மீகம்*🌷🥀🌷🥀🌷🥀🌷🥀🌻🥀🌷🥀
====================

1. காலையில் எவரையும் எழுப்பும்போது வாழ்த்தி எழுப்புங்கள்! மற்ற தவிர்க்க இயலாத கோபதாப சுடுசொற்கள் ஒரு பத்துநிமிடம் கழித்து வைத்துக் கொள்ளுங்கள்!

2. உணவு தயாரிக்கும் போதும் உணவை கட்டிக் கொடுக்கும் போதும் கோபப்படுதல் அபசகுனமாக பேசுதல் தவிர்க்கவும். முடிந்தால் இறைவனின் பேரைச் சொல்லிக் கொண்டே உணவைத் தயாரித்து கட்டிக் கொடுங்கள்! 
கோபதாப எண்ணம் உணவை விஷமாக்கும்! மனதை பாதிக்கும்.

3. குழந்தைகளைத் தூங்கச் சொல்லும்போதும் தீய சொற்களைத் தவிருங்கள். அன்பாக வாழ்த்தி உறங்கச் செய்யுங்கள். எவ்வளவு கோபம் வந்தாலும்!

4. இறைவனின் நாமங்களைச் சொல்லி உறங்கும் பழக்கத்தை நீங்களும் குழந்தைகளும் கடைப்பிடியுங்கள்.

5. பிறர் தூங்கும்போது உரக்க ஒலி எழுப்பாதீர்கள். உறக்கம் ஆன்மா இறையுணர்வில் ஒடுங்கி அமைதிகாணும் நேரம். 

6. எழுப்பும் போது எவ்வளவு ஆத்திரம் இருந்தாலும் நற்சொற்களைச் சொல்லி எழுப்புங்கள். உங்கள் அர்ச்சனைகளை பிறகு வைத்துக் கொள்ளுங்கள். அதிலும் தீய அருவருக்கத்தக்க சொற்களை எந்த நேரத்திலும் தவிருங்கள்.
தீய சொற்கள் வீட்டில் அதிர்வலைகளாக சேமிக்கப்பட்டு வீடு களை இழக்கும். ஏதோ ஒரு மன சோர்வு இறுக்கத்தைக் காலப்போக்கில் ஏற்படுத்தும்.

7. காலை அந்திப் பொழுதில் விளக்கேற்றி ஓரிரு துதிகளை உரக்கச் சொல்லுங்கள். எந்த மொழி எந்த கடவுள் என்பது முக்கியமல்ல. கீதை திருவாசகம் சஷ்டி கவசம் குர்ரான் பைபிள் ... எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

8. பாத்திரங்களைக் கழுவும்போது கோபம் எரிச்சலால் அபரிமிதமான ஓசையுடன் கழுவாதீர்கள். கதவுகளை ஓசையோடு திறக்கவோ மூடவோ செய்யாதீர்கள்.  அந்த தேவையற்ற ஒலி குடும்ப அமைதியை பாதிக்கும்!

9. வாகனங்களை ஓட்டும்போது இன்டிக்கேட்டர் போடாமல் லேன் சேஞ்ச் செய்யாதீர்கள். பல மனங்களின் தேவையற்ற சாபங்களைத் தவிர்க்கலாம்.

10. சட்டென்று தோன்றும் பிறரைப்பற்றிய அபிப்ராயத்தின் பேரில் எந்தச் செயலையும் செய்யாதீர்கள். உங்கள் புரிதல் மாறிய பிறகு குற்ற உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்கலாம்!🙏🙏

Vernal equinox.summer solstice.autumn equinox.winter solstice.



புதுவருட வரலாறு.....
*சூரியன் மிகத் துல்லியமாக கிழக்கில் உதிக்கும் நாள் தான் சித்திரை 1 .*

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் துல்லியமாக கணித்து கூறிய வானியல் சாஸ்திரம்
இந்து சமயம் சொல்லி வைத்த நமக்குத்
தெரியாத உண்மைகள்.

சித்திரை 1
ஆடி 1
ஐப்பசி 1
தை 1

இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்.

நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியலை வச்சிருக்காங்கனு தெரியுமா...?

"சூரியன் உதிக்கும் திசை கிழக்கு"என்று சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறோம்.

என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கிறோமா? என்றால் கண்டிப்பாக இல்லை...என்று தான் சொல்ல வேண்டும்.

வெள்ளையர்கள் நம்ம அறிவியலை அழித்துவிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்தி விட்டான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று....

ஆம் சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாக கிழக்கே உதிக்கும்..!!

பின்னர் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்...

அதன் பின் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்...

இப்படி சரியாக கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு னு போயிட்டு மறுபடியும் கிழக்குக்கு வர ஆகிற நேரம் சரியாக ஒரு வருடம்..!!

சரி... இதுக்கும் தமிழ் மாதத்திற்கும் என்ன சம்பந்தம்?

சூரியன் தன் பயணத்தை கிழக்கில் ஆரம்பிக்கும் நாள் தான் "சித்திரை 1"

அப்புறம் சரியாக வடகிழக்கு புள்ளி தான் "ஆடி 1".ஆடி பிறப்பு.(solstice)

மறுபடியும் கிழக்குக்கு வரும்போது "ஐப்பசி 1". தீபாவளி.(equinox)

மீண்டும் சரியாக தென்கிழக்கு - இப்போது "தை1". பொங்கள். (solistice)

இந்த வானியல் மாற்றங்களையும், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களையும் நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில் தான் திருவிழாக்களாக கொண்டாடினார்கள்...

#சித்திரை (vernal equinox) - புத்தாண்டு.
#ஆடி 18 (summer solstice) - ஆடிப்பிறப்பு.
#ஐப்பசிஅமாவாசை(autumn equinox)- தீபாவளி.
#தை 1(winter solstice) - பொங்கல்.

இது நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதில் மறைந்துள்ள அறிவியலையும் கொண்டு சேர்ப்போம்...


ஓ என்ற சொல்லிருக்கும் மனித உருக்கும்... தொப்புள் ளிருக்கும். தொடர்பு என்ன என்பதின் விளக்கம் .



ஓ என்ற சொல்லிருக்கும் மனித உருக்கும்... தொப்புள் ளிருக்கும். தொடர்பு என்ன என்பதின் விளக்கம் ...

கருப்பையில் இருக்கும் குழந்தை "ஓம்" வடிவில்தான் உள்ளது என்பதே "ஓம்" மந்திர சொல்லுக்கும், மனித வாழ்விற்கும் உள்ள நெருங்கிய தொடர்பினை உணர்த்தும்.. ..

மனிதனின் உடலும் இறைவனின் இயற்கை வடிவான ஓங்கார வடிவத்துடன் அமைந்திருக்கிறது.
மனித வடிவமும் அருள் வடிவம்தான்....

தொப்புளில் பிராணன் எனப்படும் மூச்சுக் காற்று ஒரு மனிதன் எவ்வளவு நாள் வாழ்வான் என்பதற்கு ஏற்ப, அந்தந்த வயதுக்குத் தக்கபடி எவ்வளவு மூச்சுகள் இருக்க வேண்டுமோ அவ்வளவு மூச்சும் அநேக சுற்றுகளாய் சுற்றிப்படுத்துக் கொண்டு, அதிலிருந்து இரவு பகலாய் மூச்சு செலவழிந்து கொண்டே வந்து, இறுதியில் தொப்புளில் மூச்சு எதுவுமில்லாமல் காலியாகிவிடும். மூச்சு தொப்புளில் காலியாகிவிட்டால் உயிர் போய்விட்டது என்று சொல்வார்கள். இந்த மூச்சே உயிர் என்றும், பிராணன் என்றும் சொல்லப்படும்.....

நாம் உயிர் வாழ சுவாசிக்கிறோம். நமக்குத் தேவையான வாயு நாசித்துவாரங்கள் வழியாக (சிலர் வாய் வழியாகவும் சுவாசிப்பதுண்டு) நுரையீரலுக்குச் சென்று அதை இயங்கச் செய்யும். இது நாம் சுவாசிக்கும் முறை. ஆனால் யோகியர்களும் சித்தர்களும் யோக நிலையில் இப்படி வெளிக்காற்றை நாசிகள் வழியாக சுவாசிப்பதில்லை. அவர்கள் சுவாசிக்கும் முறையே வேறு.

கருப்பையில் இருக்கும் குழந்தை சுவாசிப்பதைப் போலவே அவர்கள் சுவாசிப்பர். அதாவது தொப்பு ளைச் சுற்றியிருக்கும் பிராணன் எனப்படும் வாயுவைக் கொண்டு நுரையீரலை இயங்கச் செய்வர்.

தொப்புளில் "ஓ" என்ற எழுத்தின் ஒலி வடிவம் தொடங்குகிறது என்றால், தொப்புளைச் சுற்றி காற்று இருக்கிறது என்பது தெளிவு. அந்த காற்றே உயிர்க்காற்று. அதுவே நம் உடம்பிற்கு உயிரூட்டுவதால் உயிர்மூச்சு. இப்படி உயிரா கிய- பிராணனாகிய வாயுவிலிருந்து உருவெ டுத்து மேலெழும்பி வருவதே "ஓம்" எனும் மந்திரம். பிராணனிலிருந்து வெளிப்படு வதாலேயே இது பிரணவ மந்திரம் என்றாயிற்று.

நாம் சொல்லும் மந்திரங்களிலும் நாமங்களிலும் "ஓம்" என்ற பிரணவத்தை முதலில் கூறக் காரணமே, சொல்லும் மந்திரங்களும் தெய்வங்களின் நாமங்களும் உயிரோட்டமாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான். அநேகமாக நாம் பேசும்போது உள்காற்று வெளியேற்றப்படுகிறது; ஆனால் "ஓம்" என உச்சரிக் கும்போது வெளிக்காற்று உள்வாங்கப்படுகிறது.

அடுத்து, காதுகள் "ஓம்" என்ற பிரணவ எழுத்து வடிவத்திலேயே அமைந்துள்ளன. நமது காதுகளுக்குள்ள தனிச்சிறப்பு என்னவெனில், இது எப்போதும், எக்காலமும் நிறம் மாறாத ஓர் உறுப்பு. குழந்தை கருவறையிலிருந்து வெளி உலகுக்கு வந்தவுடன் செக்கச் செவேரென்றோ, நல்ல வெள்ளையாகவோ இருக்கும்.

வெளியுலகம் கண்டவுடன் சூரியனின் கதிர்கள், வெளிக்காற்று களின் தாக்கம் மற்றும் கால நிலைக்கேற்ப அதன் நிறம் சிறிது சிறிதாக மாறுபடும். சிவப்பாக அல்லது வெள்ளையாக இருந்த குழந்தை கறுப்பாக மாறலாம். ஆனால் காதுகள் அப்படியல்ல.

பிறந்த குழந்தை பெரியவனானதும் எந்த நிறத்திலிருக்கும் என்பதை அறிய குழந்தையின் காதுகளின் நிறத்தை வைத்தே தெரிந்துகொள்ளலாம். காரணம் காதுகள் ஒருபோதும் நிறம் மாறுவதில்லை.

ஆக, நாம் கருவில் "ஓம்" என்ற பிரணவத்தின் எழுத்து வடிவத்திலிருந்தோம். ஒலி அதிர்வுகளைக் கேட்க வைக்கும் காதுகள் "ஓம்" என்ற எழுத்து வடிவத்தில் நிலையாக அமைந்துவிட்டது.

இன்றைய நவீன உலகில் தினந்தோறும் நாம் எவ்வளவோ ஒலிகளைக் காதுகளால் கேட்கிறோம். கண்களால் எவ்வளவே காட்சிகளைக் காண்கி றோம். ஆனால் அவற்றிலெல்லாம் கிடைக்காத சுகத்தை, மன அமைதியை "ஓம்" என்ற பிரண வத்தை உச்சரிப்பதாலும் காதுகளால் கேட்பதாலும் பெற முடிகிறது...

ஆலயத்தினுள் எழுப்பப்படும் "ஓம்" என்ற மந்திர அதிர்வலைகள் நம் உடலெங்கும் பாய்ந்து, நம்மை ஒரு பரவச நிலைக்குக் கொண்டு செல்கின்றன. அது மந்திர ஜாலமா, மாயா ஜாலமா, இந்திர ஜாலமா என்பதை நாமறியோம். ஆனால் அது நமது ஐம்புலன்களையும் ஒரு சேர அதிரவைத்து, அடக்கி கட்டுக்குள் வைக்கிறது என்பது மட்டும் உண்மை.

"ஓம்" என்ற பிரணவத்தை உச்சரிக்கும்போது முதல் முதல் நாபியில் அதிர்வலைகள் உருவாகி, உடலெங்கும் மின் ஆற்றல் பாய்வதை உணர முடியும். இந்த அதிர்வலைகளில் ஒருவித காந்த சக்தி இருப்பதை உணரலாம். இன்று மருத்துவ உலகில் மின்காந்த சிகிச்சையினால் பல நோய்கள் குணப்படுத்தப்படும்

Monday 12 April 2021

யுகாதி என்றால் யுகத்தின் ஆதி





யுகாதி என்றால் யுகத்தின் ஆதி  ஆரம்பம் என்று பொருள்
யுகாதி பண்டிகை அன்றுதான் பிரம்மா உலகத்தைப் 
படைத்ததாகக் கூறுவார்கள். 

வசந்தகாலத்தின்பிறப்பாகவும் கொண்டாடப்படுகிறது.
யுகாதி அன்று ஆறு சுவைகள்  கொண்ட உணவாக யுகாதி பச்சடி செய்வார்கள்.

வா‌ழ்‌க்கை‌யி‌ன் த‌த்துவ‌த்தை உண‌ர்‌த்து‌ம் ‌விதமாக யுகா‌தி ப‌ச்சடி - வாழ்க்கை என்பது மகிழ்ச்சி, கவலை, கோபம், அச்சம், சலிப்பு, ஆச்சர்யம் கலந்தது என்பதை உணர்த்தும் வகையில், கசப்புக்கு வேப்பம்பூ, துவர்ப்புக்கு மாங்காய், புளிப்புக்கு புளி பானகம், உரைப்புக்கு மிளகாய் அல்லது மிளகு, இனிப்புக்கு வெல்லம் ஆகிய 6 சுவை கொண்ட பச்சடி செய்து சுவாமிக்கு படைத்து அனைவருக்கும் உணவில் பரிமாறுவா‌ர்க‌ள். 

யுகாதி பச்சடி தயாரித்து இறைவனுக்கு படையல் இட்டு சூரியனை வழிபடுவா‌ர்க‌ள். 
மாலையில் வாசலில் விளக்கேற்றி , கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம் ..
வேப்பம்பூ, மாங்காய், புளி, வெல்லம் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து செய்யப்படுகிறது.

இந்த புத்தாண்டு மகிழ்ச்சி, துக்கம் எல்லாவற்றையும் கொண்டுதான் இருக்கும். மகிழ்ச்சி மட்டுமே வாழ்க்கையில் நிரந்தரம் அல்ல. துக்கமும் சேர்ந்ததுதான் வாழ்க்கை என்று உணர்த்தும் வகையில் யுகாதி பச்சடி அமையும்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில்   தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகை விழா சிறப்பாக கொண்டாட்டத்தில் 40 நாள் நடக்கும் நித்ய உற்சவம் தொடங்கும் ...
மாடவீதியில் தங்க பல்லக்கில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்ப சாமி எழுந்தருளி சகஸ்ர தீப அலங்கார சேவை  நடைபெறுவது வழ்க்கம் ...

வாழ்க்கை என்பது கசப்பும் இனிமையும் கலந்து (சுக துக்கத்துடன்) இருக்க வேண்டும் என்பதற்காகவே கோவிலுக்கு சென்று வழிபட்டு வேப்பிலை, சர்க்கரை கலந்த பிரசாதம் வழங்கப்படுகிறது. 

யுகாதி விருந்தில் பண்டிகையின் முக்கிய இனிப்பு பண்டமான "பூரண் போளி" இடம்பெறுவது சிறப்பம்சமாகும். 

புத்தாண்டு தினத்தை ஒட்டி வீட்டு பெரியவர்களை காலில் விழுந்து நமஸ்கரித்து அவர்களுடைய ஆசிர்வாதத்தை பெறுவது  சிறப்பு ...

தியானம்.....

ஒரு சித்தர் தவம் செய்து கொண்டு இருப்பார்..அவரை சுற்றி புற்று வளர்ந்து அவரையே மூடிவிடும்..நீண்ட கால தவம் என்பதை அப்படி சினிமாவில் காட்டுவர்.சும்மா இருந்தால் என்ன நடக்கும்.எதையும் நினைக்காமல் மனதை அலைபாய விடாமல் தேங்க வைத்தால் என்ன நடக்கும் என இன்றைய விஞ்ஞானிகள் ஆராய்கிறார்கள்..வியப்பான முடிவு கிடைக்கிறது.

நீங்கள் ஒரு வேலை செய்யும்போது மூளை அது சம்பந்தமான கட்டளைகளை மட்டும் உறுப்புகளுக்கு பிறப்பிக்கிறது.அடுத்து அடுத்து என்ன செய்ய வேண்டுமோ அதை செய்கிறது.ஆனால் சும்மா இருக்கும்போது மூளையும் சும்மாதானே இருக்க வெண்டும்..? ஆனால் அப்படி இருக்கவில்லை.மாறாக மிக பரபரப்பாக இயங்குகிறது.எல்லா செல்களும் பிரகாசமாக இருக்கிறது..

.தினமும் பதினைந்து நிமிடங்களாவது தியானம் செய்ய பழகுங்கள்..மூளையில் உள்ள பல புதிய நூற்றுக்கணக்கான செல்கள் தியானத்தினால் ஊக்குவிக்கப்பட்டு இயங்க ஆரம்பிக்கின்றன. இதனால் அறிவு கூர்மை பெறுகிறது. எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் தன்மை அதிகரிக்கிறது.

காலையிலோ மாலையிலோ எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.கவலை தரும் விசயங்களையோ சந்தோசமான நிகழ்வுகளையோ நினைக்காமல் நேராக அமர்ந்து கண்ணை மூடி இருந்தாலே போதும்..வடக்கு திசை பார்த்தபடி அமருங்கள்..மூச்சு உள்ளே போவது வருவதை மட்டும் கவனிங்க..போதும்.

*கடவுள், மந்திரம், ஜோதிடம் உண்மையா? பொய்யா?*

*கடவுள் மந்திரம், ஜோதிடம் உண்மையா? பொய்யா?*

திருநெல்வேலி மாவட்டத்தில் வழக்கத்தில் இருந்துவரும் ஒரு பழமொழி இதற்கு சான்றளிக்கிறது.

*மந்திரம்தான் பொய்யானால், பாம்பை பாரு..*
*மருந்துதான் பொய்யானால் வாணம் பாரு..*
*சாஸ்திரம் பொய்யானால், கிரகணம் பாரு..*
*சாமிதான் பொய்யானால் சாணம் பாரு..*

இதுதான், நமது சந்தேகங்களை தெளிவிக்கும் சூத்திரம்..

இதற்கான விளக்கம்

மந்திரம்தான் பொய்யானால், பாம்பை பாரு

மந்திரங்களில் சக்தியில்லை என்று யாருக்காவது சந்தேகம் இருந்தால் படம் எடுத்தாடும் பாம்பு முன்பாக  மந்திரத்தை உச்சரித்து பார்த்து சந்தேகத்தை தெளிவுபடுத்திக்கொள்ளலாம். பயப்பட வேண்டாம், மந்திரம் சொல்ல தெரிந்தவரை சொல்ல விட்டு நீங்கள் தள்ளி நின்று இதைப் பார்க்கலாம்

மருந்துதான் பொய்யானால் வாணம் பாரு

வாணவேடிக்கை பட்டாசுகளுக்குள் இருக்கும் மருந்து
அந்த வெடியை வானத்துக்கு தூக்கிச் சென்று வண்ண கோலங்கள் காண்பிக்கிறது. மருந்தின் சக்தியை தெரிந்து கொள்ள வாண-வேடிக்கையை பாருங்கள் என்பதுதான் இதன் பொருள்.

சாஸ்திரம்தான் பொய்யானால் கிரகணம் பாரு

ஜோதிட சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூட, பஞ்சாகத்தில் முன்கூட்டியே பவுர்ணமி, அமாவாசை, கிரகண காலகட்டங்கள், நட்சத்திர சுழற்சி போன்றவை இடம் பெற்றிருப்பதைப் பார்த்து வியப்படைந்திருப்பர்.

எனவே ஜோதிடம் பொய் கிடையாது. அது அறிவியல் என்பதை கிரகணம் குறித்து பஞ்சாங்கம் சொல்லியுள்ளதை பார்த்து தெரிந்துகொள்ளலாம் என்பது அதன் பொருள்.

சாமிதான் பொய்யானால் சாணம் பாரு

 இது ரொம்ப சுவாரசியமான விஷயம்.  கிராமங்களில் பசு சாணத்தை எடுத்து அதை விநாயகர் என்று உருவம் பிடித்து வணங்குவார்கள். 

இப்படி விநாயகர் உருவம் பிடித்த சாணத்தை பிறகு தூக்கிப்போட்டு விடுவார்கள்.  அதில்தான் ஆச்சரியம். விநாயகர் என்று கும்பிட்ட அந்த சாணத்தில் மட்டும் கரையான் அரிக்காது. மற்றபடி தெருவில் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகும் கிடக்கும் சாணத்தில் கரையான் குடியேறி,  அதை சாப்பிடும்.

 விநாயகர் என்று நாம் உருவேற்றி விட்ட அந்த சாணத்தில் கரையான் சேட்டை செய்யாது. இதில் இருந்து கடவுள் இருப்பதை பாமரனும் சாணத்தை பார்த்து அறிந்து கொள்ளலாம் என்பது தான் இந்த பழமொழியின் கருத்து.

 

Sunday 11 April 2021

வேலிப்பருத்தி மருத்துவ குணங்கள்

வேலிப்பருத்தி மருத்துவ குணங்கள்:

வேறு பெயர்கள்-: உத்தம கன்னிகை மற்றும் உத்தாமணி.

இதன் இலையை காம்புடன் கிள்ளினால் பால் வரும்.இது நெஞ்சிலே இருக்கின்ற கோழையை அகற்றி வாந்தியை உண்டாக்குவதோடு புழுக்களைக் கொல்லும் தன்மையுடையது.

⚜️இதன் இலையை இடித்துப் பிழிந்த சாற்றை ஒரு தேக்கரண்டி வீதம் அருந்தி வர ஆஸ்த்துமாவுக்கும் பாம்புக் கடிகளுக்கும் குணம் ஏற்படும்.
நாள்பட்ட புண்களுக்கு இதன் இலையை அரைத்துக் கட்டி வந்தால் புண்கள் எளிதில் ஆறும்.

⚜️பெண்களுக்கு மாதவிலக்கின் போது உண்டாகும் வயிற்று வலிக்கு வேலிப் பருத்தி இலைச்சாற்றைத் தேனுடன் கலந்து அருந்தி வர குணம் தரும்.

⚜️குழந்தைகளுக்கு வயிற்றில் புழுத் தொந்தரவு அதிகமாக இருந்தால் இதன் இலையைக் குடிநீரிட்டு ஒரு பாலாடை அளவு கொடுத்து வர புழுக்கள் வெளியாகும்.

⚜️கால் வீக்கங்களுக்கும், உடம்பில் அடிபட்ட வீக்கங்களுக்கும், இதன் இலைச் சாற்றையும், சுண்ணாம்பையும் கலந்து பூசி வர அவை குணமாகும்.
இதன் இலைச்சாற்றுடன் தேன் கலந்து அருந்தி வர இருமல் தணியும்.
இதன் இலையை நன்கு அரைத்து எடுத்த விழுதை நகச்சுற்று, கண்ட மாலை இவைகளுக்குப் பற்றிட்டுவர நல்ல குணம் தரும்.

⚜️கற்ப முறைகளில் கற்ப மூலிகைகள் மனிதனுக்கு ஆரோக்கியம் தரும் அற்புத மூலிகைகளாகும்.  அத்தகைய மூலிகைகளில் வேலிப்பருத்தி என்ற உத்தாமணியும் ஒன்று.

⚜️வேலி ஓரங்களில்  கொடி போல் படர்வதால் இதை வேலிப்பருத்தி என்று அழைக்கின்றனர்.  இதன் இலைகளைக் கிள்ளினால் பால் வரும்.  இதன் இலை, வேர் மருத்துவப் பயன் கொண்டது.
உத்தாமணி வேர், கொடி, இலை, பால் இவைகளை நீரில் கொதிக்க வைத்து அருந்தி வந்தால் ஜலதோஷத்தினால் உண்டாகும் வாத, பித்த மாறுபாடுகள், தோஷ விடங்கள் நீங்கும்.

⚜️வேலிப்பருத்தி பித்ததத்தைத் தணிக்கும் தன்மை கொண்டது.  அதிகாலை அதாவது பிரம்ம முகூர்த்த (காலை 4.30 – 6.00) நேரத்தில் வேலிப் பருத்தி இலைகள் 6 எடுத்து அப்போது கறந்த ஆட்டுப்பால் அல்லது மாட்டுப்பால், இரண்டும் கிடைக்காவிட்டால்,  கொதிக்க வைத்த பால் அரை டம்ளர் சேர்த்து நன்றாக அரைத்து 21 நாட்கள் அல்லது 1 மண்டலம் அருந்தி வந்தால் ரத்தத்தில் கலந்துள்ள பித்தநீர் குறைந்து  ரத்த அழுத்தம் குறையும்.  இம்மருந்து எத்தகைய பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாமல் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் சிறந்த மருந்தாகும்.

⚜️ மேலும் உடல் அசதியைப் போக்கும்.  நரம்புகளை புத்துணர்வு பெறச் செய்யும்.  நெஞ்சுலி குறையும்.

⚜️சிறு குழந்தைகளுக்கு மார்பெலும்புக்கூடு முன்தள்ளி, நோஞ்சான் போல காணப்படுவார்கள்.  இவர்களுக்கு, வேலிப்பருத்தி இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து  1 ஸ்பூன் அளவு எடுத்து அதனுடன் சீரகம் 1 ஸ்பூன்,  அருகம்புல் பொடி 1 ஸ்பூன்  சேர்த்து கஷாயம் செய்து பனங்கற்கண்டு சேர்த்து கொடுத்து வந்தால், நோஞ்சான் தன்மை மாறி, உடல் வலுப் பெறுவார்கள்.

⚜️குழந்தைகளுக்கு வயிற்றில் புழுக்கள் இருந்தால், அவர்களின் வளர்ச்சி பாதிப்படைந்து நோஞ்சான் போல் காணப்படுவார்கள்.  இந்த வயிற்றுப் புழுக்களை நீக்க உத்தாமணியின் இலையை பறித்து நீர்விட்டு அலசி குடிநீராக செய்து வைத்துக்கொண்டு தினமும் ஒரு சங்களவு கொடுத்து வந்தால் வயிற்றுப் புழுக்கள் நீங்கும்.  ஒரு மண்டலம் கொடுத்தால் வயிற்றில் புழுத்தொல்லை முற்றிலும் நீங்கும்.

⚜️உத்தாமணி இலையைச் சாறு எடுத்து இலேசாக சூடாக்கி பின் ஆற வைத்து தினமும் ஒரு ஸ்பூன் அளவு அதாவது 5 மி.லி. என 48 நாட்கள் கொடுத்து வந்தால் சுவாசகாச நோய்கள் நீங்கும்.

⚜️உத்தாமணி இலையை நன்கு அரைத்து பிளவை புண் மீது வைத்து கட்டினால் பிளைவைப் புண் எளிதில் குணமாகும்.

⚜️உத்தாமணி இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலை வேளைகளில் 1 ஸ்பூன் அளவு எடுத்து அதில் தேன் கலந்து  ஒரு மண்டலம் காலையில் வெறும் வயிற்றில் உண்டு வந்தால்  வாயுவினால் உண்டான கைகால் குடைச்சல், வீக்கம், நடுக்கம், இரைப்பு, இருமல், கோழைக் கட்டு போன்ற நோய்கள் நீங்கும்.

⚜️பெண்களுக்கு கருப்பையில் உண்டாகும் வலிக்கு உத்தாமணி இலைச்சாறுடன் தேன் கலந்து கொடுத்தால் கருப்பை கோளாறு நீங்கி கருப்பை வலுப்பெறும்.

⚜️காணாக்கடி, அரிப்பு, தடிப்புக்கு இதன் இலைச்சாறு தடவலாம்.
இலையை வதக்கித் துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்கக் கீல் வாதம், முடக்கு வாதம், வாதக் கடைச்சல், இடுப்புவலி மிதலியன குணமாகும்.

⚜️இலைச்சாற்றுடன் சுக்கு, பெருங்காயம்,பொடித்துக் காயச்சி இளஞ்சீட்டில் பற்றிட வாத வலி, வீக்கம் குணமாகும், யானைக்கால் நோய்தொடக்க நிலையில் இருந்தால் 40,50 நாள்களில் குணமாக்கலாம்.

⚜️இதன் வேரை உலர்த்தித் தூள் செய்து 2 முதல் 4 சிட்டிகை வரை பாலில் கொடுக்க குழந்தைகளின் வாயுத் தொல்லைகள் நீங்கிப் பேதியாகும், பூச்சி, கிருமிகள் சாகும்.

⚜️இதன் இலைச்சாற்றில் 7முறை மிளகை ஊறவைத்து வெய்யிலில் உலர்த்தித் தூள் செய்து 2 முதல் 4 அரிசி எடை பால் அல்லது தேனில் கொடுக்கக் குழந்தைகளின் செரியாமை, வாந்தி, மந்தம், மாந்த இழப்பு, கை,கால் சில்லிட்டுப் போதல், சுரம் முதலிய சகல குழந்தை வியாதிகளுக்கும் கொடுக்கலாம்.

⚜️5 கிராம் வேரைப் பாலில் அரைத்துக் கலக்கி வடிகட்டிக் காலை மட்டும் 3 நாள் கொடுக்க நஞ்சுக் கடி, கரப்பான், கிரந்தி, சூலை, பிடிப்பு, வாயு முதலியவை போகும்.

⚜️உந்தாமணி, பொடுதலை, நுணா,நொச்சி ஆகியவற்றின் இலைகளைவகைக்கு 1 பிடி வதக்கிப் பிழிந்த சாறு 10 மி.லி. கொடுக்கச் சளியோடு கூடிய மாந்தம் தீரும்.

⚜️தக்க வயதடைந்தும் பெண் ருதுவாகாவிட்டால் வேலிப்பருத்தி இலைகள் ஆறு எண்ணம் எடுத்துச் சுத்தப்படுத்தி மூன்று மிளகு சேர்த்து அம்மியில் மைபோல் அரைத்து கழற்சிக்காய் அளவு பத்து தினங்கள் தொடர்ந்து உடகொண்டு வர ருதுவாகாத பெண்கள் ருது ஆவார்கள்.

⚜️இந்த இலையையும் , கருஞ் சீரகத்தையும் , நொச்சி இலையையும் எடுத்து நல்லெண்ணையில் பதமுடன் காய்ச்சி சனிக்கிழமையன்று ஆண்களும் வெள்ளிகே கிழமையன்று பெண்களும் தலையில் தேய்த்து என்னை முழுக்கு செய்தால் தலை  சம்பந்தப்பட்ட ஒற்றை தலைவலி, இரட்டை தலைவலி , மற்றும் தலை பாரம் ஆகியவை தீரும்

Saturday 10 April 2021

கிருஷ்ணர் உபயோகிக்கும் பொருள்களின் பெயர்கள்

1) கிருஷ்ணரின் கண்ணாடியின் பெயர் சரதிந்து

2) அவரது ரசிகருக்கு மருமருதா என்று பெயர்.

3) அவரது பொம்மை தாமரை மலருக்கு சதாஸ்மேரா என்று பெயர்

4) அவரது பொம்மை பந்துக்கு சிட்ரகோரகா என்று பெயர்.

4) கிருஷ்ணரின் தங்க வில்லுக்கு விலாசகர்மனா என்று பெயர்.

5) இந்த வில்லின் இரு முனைகளும் நகைகளால் பதிக்கப்பட்டுள்ளன, அதில் மஞ்சுலசரா என்ற வில்லுப்பாடு உள்ளது.

6) அவரது பளபளக்கும் நகைகளைக் கையாளும் கத்தரிக்கோலுக்கு டஸ்டிடா என்று பெயரிடப்பட்டுள்ளது.

7) அவரது எருமை-கொம்பு குமிழிக்கு மாண்ட்ராகோசா மற்றும்

8) அவரது புல்லாங்குழலுக்கு புவனாமோகினி என்று பெயர்.

9) கிருஷ்ணருக்கு மஹானந்தா என்ற மற்றொரு புல்லாங்குழல் உள்ளது, இது ஸ்ரீமதி ராதாராணியின் இதயத்தையும் மனதையும் பிடிக்கும் ஒரு ஃபிஷ்ஹூக் போன்றது.

10) ஆறு துளைகளைக் கொண்ட மற்றொரு புல்லாங்குழல் மதனாஜன்கிருதி என்று அழைக்கப்படுகிறது.

11) சரளா என்ற கிருஷ்ணாவின் புல்லாங்குழல் மென்மையாகப் பாடும் குக்கூவின் ஒலியைப் போல குறைந்த, மென்மையான தொனியை உருவாக்குகிறது.

ராகஸ் க udi டி மற்றும் கர்ஜாரி ஆகியவற்றில் இந்த புல்லாங்குழலை வாசிப்பது கிருஷ்ணருக்கு மிகவும் பிடிக்கும்.

அவர் கோஷமிடும் அற்புதமான புனித மந்திரம் அவரது அன்பான ராதரானியின் பெயர்.

12) அவரது கரும்புக்கு மந்தனா,

13) அவரது வினாவுக்கு தரங்கிணி,

14) அவர் சுமக்கும் இரண்டு கயிறுகளுக்கு பசுவசிகரா என்று பெயர்

15) அவரது பால் வாளிக்கு அம்ர்தடோஹனி என்று பெயர்.

16) அவரது இரண்டு கவசங்களுக்கும் ரங்கடா,

17) அவரது இரண்டு வளையல்களுக்கு சோபனா,

18) அவரது சிக்னெட் மோதிரத்திற்கு ரத்னமுகி என்று பெயர்

19) அவரது மஞ்சள் ஆடைகளுக்கு நிகமசோபனா என்று பெயர்.

20) கிருஷ்ணாவின் சிறிய மணிகள் சரத்திற்கு கலாஜங்கரா என்று பெயர்

21) அவரது இரண்டு கணுக்கால்களுக்கும் ஹம்சகஞ்சனா என்று பெயர்.

இந்த ஆபரணங்களின் இரைச்சலான சத்தங்கள் மான் கண்களைக் கொண்ட கோபிகளின் மனதில் இருக்கும் மான்களை மயக்குகின்றன.

22) கிருஷ்ணாவின் முத்து நெக்லஸுக்கு தாராவளி என்று பெயர்

23) அவரது நகை நெக்லஸுக்கு ததித்பிரபா என்று பெயர்.

24) அவர் மார்பில் அணிந்திருக்கும் லாக்கெட்டுக்கு ஹிருதயமோதனா என்று பெயரிடப்பட்டுள்ளது, அதற்குள் ஸ்ரீமதி ராதாரணியின் படம் உள்ளது.

25) கிருஷ்ணாவின் நகைக்கு க ust ஸ்துபா என்று பெயர்.

கலியா ஏரியில் கலியா பாம்பின் மனைவிகள் இந்த நகையை தங்கள் கைகளால் இறைவனுக்குக் கொடுத்தனர்.

26) கிருஷ்ணரின் சுறா வடிவ காதணிகளுக்கு ரதிராகதிதைவதா,

27) அவரது கிரீடத்திற்கு ரத்னபாரா என்றும் அதன் முகடு-நகைக்கு காமரதாமரி என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

28) கிருஷ்ணாவின் மயில் இறகு கிரீடத்திற்கு நவரத்னவிடம்பா என்று பெயரிடப்பட்டது,

29) அவரது குன்ஜா நெக்லஸுக்கு ராகவல்லி என்று பெயர்

30) அவரது திலகா அடையாளத்திற்கு டிரிஸ்டிமோஹனா என்று பெயர்.

31) கிருஷ்ணாவின் மாலை "காடு பூக்கள் மற்றும் இலைகள், இது அவரது கால்களை அடையும் மற்றும் ஐந்து வெவ்வேறு வண்ணங்களின் பூக்களைக் கொண்டுள்ளது, இது வைஜயந்தி என்று அழைக்கப்படுகிறது.

ஹரே க்ர்ஸ்னா

ரத்த குழாய் அடைப்பு திறந்க...

உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள்.
நீங்கள் குணமடைவீர்கள்!

தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார்.

தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில்,இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.

ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார்.
மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில்

பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல்நாள்ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார்.

நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார்.

ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார்.

இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்.
1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் புண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.
எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள்.
மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும்.
நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

முள்ளங்கியின் மருத்துவப் பயன்கள்

முள்ளங்கியின் மருத்துவப் பயன்கள்:-
முள்ளங்கியில் விட்டமின் சி, இ, பி6, ஃபோலேட்டுகள் அதிகளவு காணப்படுகிறது. இதில் விட்டமின் ஏ, கே, பி2, பி5 (நியாசின்) ஆகியவை காணப்படுகின்றன. தாது உப்புக்களான கால்சியம், காப்பர், இரும்புச் சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, துத்தநாகம், பொட்டாசியம் போன்றவை உள்ளன. மேலும் இதில் குறைந்த எரிசக்தி, கார்போஹைட்ரேட், புரதச்சத்து, அதிகளவு நார்சத்து போன்றவை காணப்படுகின்றன.
முள்ளங்கினை உண்ணும்போது அவை குறைந்த அளவு எரிசக்தியுடன் வயிறு நிரம்பிய உணர்வினை ஏற்படுத்துகின்றது. இக்காயில் நார்சத்து மற்றும் அதிகளவு நீர்ச்சத்தும் உள்ளது. எனவே உடல் எடையை குறைக்க விரும்புவர்களுக்கு இக்காய் சிறந்த தேர்வாகும்.
முள்ளங்கியானது கல்லீரல் மற்றும் செரிமான உறுப்புகளில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சினை நீக்க உதவுகிறது. முள்ளங்கியானது இரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவினை அதிகரித்து இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துகிறது.
இரத்தத்தில் பிலிரூபினின் அளவினை கட்டுப்படுத்துகிறது. மஞ்சள் காமாலையினால் பாதிக்கப்பட்ட கல்லீரல் மற்றும் பித்தப்பையினை இக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சரி செய்து கல்லீரல் மற்றும் பித்தப்பையில் உள்ள செல்கள் நன்கு செயல்பட ஊக்குவிக்கின்றன.
முள்ளங்கியில் அதிகளவு உள்ள நார்ச்த்து மற்றும் நீர்ச்சத்து மலத்தினை இளக்கி கழிவாக எளிதாக வெளியேற்றுகிறது. செரிமான உறுப்புகளில் உள்ள நச்சுப் பொருட்களை இக்காய் நீக்குவதால் மூலநோய், வாயு தொந்தரவு, மலச்சிக்கல் ஆகியவற்றிற்கு இது சிறந்த தீர்வாக உள்ளது.
முள்ளங்கியானது சிறுநீரை நன்கு பெருகச் செய்கிறது. சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சலானது முள்ளங்கிச் சாற்றினை அருந்தும்போது குணமாகிறது. இக்காயானது சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீர் பாதையில் உள்ள நச்சினை வெளியேற்றுகிறது. சிறுநீரகம் மற்றும் சிறுநீர் பாதையில் ஏற்படும் குறைபாடுகளுக்கு இக்காய் நல்ல மருந்தாக உள்ளது.
கெட்ட கொழுப்பைக் கரைக்கும் முள்ளங்கி
1. சிறுநீரகத்தொற்றைச் சரிசெய்யும்.
2. உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.
3. உடலில் உள்ள கழிவுகளை நீக்கும்.
4. மூல நோய் இருப்பவர்கள் அவசியம் சாப்பிட வேண்டும்.
5. புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும்.
6. கெட்ட கொழுப்பைக் கரைக்கும்.
7. நீர்ச்சத்துக்களை உடலில் சேர்க்கும்.
8. மூட்டு வலி, வீக்கத்தைக் குறைக்கும். பற்களுக்கு நல்லது.
9. ரத்தத்தில் உள்ள பிலுருபினை  சீர்செய்வதால், மஞ்சள்காமாலையைக் குணமாக்க உதவும்.
10. மலக்குடலில் உள்ள கழிவை வெளியேற்றி, குடலைச் சுத்தம்செய்யும்.
11. ஆஸ்துமா, சுவாசப் பிரச்னைகள், தொண்டை எரிச்சல், தொற்று, அலர்ஜி சரியாகும்.
12. சிகரெட்டால் பாதித்த நுரையீரலைச் சரிசெய்ய உதவும்.
13. உடல் எடையைக் குறைக்க உதவும்.
14. வைட்டமின் சி, எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

நம் தொப்புள்...



*நம் தொப்புள் என்பது நம்மை படைத்தவர் நமக்கு கொடுத்துள்ள அற்புத பரிசு. 62 வயது முதியவர் ஒருவருக்கு இடது கண் பார்வை மிக மோசமாக இருந்தது. இரவு நேரங்களில் மிகவும் சிரமப்பட்டார். கண் மருத்துவர் பரிசோதனை செய்துவிட்டு அவரது கண்கள் மிகவும் நன்றாக இருப்பதாகவும் ஆனால் கண்களுக்கு இரத்தம் கொண்டு வரும் நரம்புகள் வறண்டுவிட்டதால் மீண்டும் பார்வை ஒருபோதும் வராது என்றும் கூறிவிட்டார்….*

*அறிவியல் படி, கருவுற்றவுடன் முதல் அணு உருவாகும் இடம் தொப்புள் தான். தொப்புள் உருவானவுடன், அது தாயின் நஞ்சுக்கொடியுடன் தொப்புள் கொடி மூலம் இணைக்கப்படுகிறது….*

*நமது தொப்புள் உண்மையிலே ஆச்சரியப்படும் ஒன்று தான். அறிவியல் படி, ஒரு மனிதன் இறந்தவுடன் 3 மணி நேரத்திற்கு தொப்புள் வெதுவெதுப்பாக இருக்குமாம். காரணம் ஒரு பெண் கருவுற்றதும், பெண்ணின் தொப்புள் மூலம் குழந்தையின் தொப்புள் வழியாக கருவிலுள்ள குழந்தைக்கு ஊட்டச்சத்து வழங்கப்படும். முழுமையாக ஒரு கரு குழந்தையாக உருவாவதற்கு 270 நாட்கள் அதாவது 9 மாதங்கள் ஆகின்றன….*

*நமது உடம்பில் உள்ள அனைத்து நரம்புகளும் தொப்புளுடன் இணைவதற்கு இதுவே காரணம். தொப்புளே நமது உடம்பின் குவியப்புள்ளி. அதுவே உயிரும் கூட….*

*தொப்புளுக்குப் பின்னால் 72000 க்கும் அதிகமான நரம்புகள் உள்ளன. நமது உடம்பில் உள்ள இரத்தத்தட்டுகளின் எண்ணிக்கை புவியின் இரு மடங்கு சுற்றளவிற்குச் சமம்…*
*தொப்புளில் எண்ணெய் போடுவதன் மூலம் கண்கள் வறட்சி, குறைந்த கண்பார்வை, கணையம் சீரற்றத் தன்மை, குதிகால் மற்றும் உதடு வெடிப்பு, முகப் பொலிவின்மை, பளபளப்பான முடியின்மை, மூட்டுவலி, நடுக்கம், உடல் சோர்வு, முழங்கால் வலி, வறண்ட சருமம் ஆகியவைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்….*

 
*#கண்கள்_வறட்சி_நீங்க #குறைந்தபார்வை_சரியாக #பளபளப்பான_தலைமுடி_பெற# மெருகூட்டப்பட்ட_ சருமம்_பெற இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் 3 துளி சுத்தமான நெய் அல்லது தேங்காய் எண்ணெய் தொப்புளில்  விட்டு ஒன்றரை இன்ச் தொப்புளைச் சுற்றி பரவவிடவும்…..*

*#முழங்கால்_வலி_குணமடைய இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் 3 துளி விளக்கெண்ணெய் தொப்புளில்  விட்டு ஒன்றரை இன்ச் தொப்புளைச் சுற்றி பரவவிடவும்….*

*#நடுக்கம்_மற்றும்_சோர்வு, #மூட்டுவலி_மற்றும்_வறண்ட_ச மத்திலிருந்து_ நிவாரணம்_பெற இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் 3 துளி  கடுகு எண்ணெய் தொப்புளில்  விட்டு ஒன்றரைஇன்ச் தொப்புளைச் சுற்றி பரவவிடவும்….*
*#தொப்புளில்_ஏன்_எண்ணெய்விட_வேண்டும்?…*
*எந்த நரம்பில் இரத்தம் வறண்டு உள்ளதோ அதனை உங்கள் தொப்புளால் கண்டுபிடிக்க இயலும். அதனால் தொப்புள் அந்த எண்ணெயைக் குறிப்பிட்ட வறண்ட நரம்பிற்கு அனுப்பி திறக்கச் செய்கிறது….*

*சிறு குழந்தைக்கு வயிறு வலியென்றால், பெரியவர்கள் காயப்பொடியுடன் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவுவது வழக்கம். சில நிமிடங்களில் குணமாகும். எண்ணெயும் அவ்வாறே வேலை செய்கிறது….*


வேர்க்கடலையை தொடர்ந்து சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் என்ன...?

வேர்க்கடலையை தொடர்ந்து சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் என்ன...?

வேர்க்கடலையில் புரதங்கள், எண்ணெய் மற்றும் நார்ச்சத்துகள் மிகுந்த அலவில் இருக்கிறது. வேர்க்கடலை நம் தோலை மென்மையாக வைத்திருப்பதுடன் காயங்களை குணப்படுத்தும் செயல்முறையிலும் உதவுகிறது.

வேர்க்கடலை எச்.டி.எல் அதிகரிக்கும்போது எல்.டி.எல்.ஐ குறைக்க உதவுகிறது. இது ஒரு நல்ல வகை கொழுப்பு வகையை சேர்ந்தது. வேர்க்கடலையை தொடர்ந்து சாப்பிடுவது, பித்த அமிலங்களின் உற்பத்தியில் குறுக்கீடு செய்வதன் காரணமாக பித்தப்பை கற்களை தடுக்க உதவும்.
 
வேர்க்கடலை சாப்பிட்டால் அதிலுள்ள உயிர் வேதிப் பொருள்கள் இப்படித் தேவையில்லாமல் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பொருட்களை கல்லீரலுக்குள்  தள்ளிவிட்டுவிடும். தேவையில்லாத அந்தப் பொருட்கள் கழிவாகி வெளியேறிவிடும்.
 
வேர்க்கடலை சாப்பிட்டால் நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய நோய்கள் குறைந்துவிடும். பார்க்கின்ஸன், அல்ஸ“மர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல்  தடுக்க வேர்க்கடலை உதவும். வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருள்கள் நரம்பு செல்களை நன்றாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. அதனால் நரம்புகள்  நன்றாகக் செயல்படுகின்றன.
 
சுத்திகரிக்கப்பட்ட கடலை எண்ணெய்யில் உடலுக்குக் கெடுதி தரும் கொழுப்பு இருப்பதற்கு வாய்ப்புள்ளது. ஏனென்றால் எந்தவொரு எண்ணெய்யையும் சுத்திகரிப்பதற்காக பலமுறை அதிக வெப்பத்தில் கொதிக்க வைக்கிறார்கள். இதனால் உடலுக்குத் தீங்கு செய்யும் கெட்ட கொழுப்புகள் அதில் உருவாகக் கூடிய  வாய்ப்பு உள்ளது.
 
வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதைவிட, வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ஆனால் வேர்க்கடலையை எண்ணெய்யில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது. வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அதில்தான் நிறையச் சத்துகள் உள்ளன.
 
வேர்க்கடலையைச் சாப்பிடும்போது கசப்புச் சுவை வந்தால் அந்த வேர்க்கடலையைச் சாப்பிடக் கூடாது. கசப்பேறிய வேர்க்கடலையில் அஃப்லோடாக்ஸின் என்ற பொருள் இருக்கிறது. இது வயிற்றின் ஜீரணத்தைப் பாதிக்கக் கூடியது. எனவே புத்தம் புதிதான வேர்க்கடலையையே சாப்பிட வேண்டும்.

வெந்தயக் கீரை - மருத்துவ பயன்கள்

குடல் புண்களுக்கும் மற்றும் குடலின் அனைத்து நோய்களுக்கும் குணம் தரும் வெந்தயக் கீரை - மருத்துவ பயன்கள்

சாதாரணமாகச் சமையலில் பயன்படுத்தப்படும் வெந்தயத்தின் தழைதான் வெந்தயக்கீரை எனப்படுகிறது. இது சத்து நிறைந்த கீரை. வெந்தயம் விதைகளின் மூலம் பயிரடப்படுகிறது. 

வெந்தயக்கீரையில் ஏ வைட்டமின் சத்தியும், சுண்ணாம்புச்சத்தும் இருப்பதால் இதைப் சாப்பிடும் போது மாரடைப்பு, கண்பார்வை குறை, வாதம், சொறி சிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடையவும், பசியைப்போக்கவும் பயன்படுகிறது. குடல் புண்களும் குணமாகின்றன

👉🏼வெந்தயக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் இருக்கின்றன. சொறி, சிரங்கை நீக்குகிறது. பார்வைக்கோளாறுகளைச் சரி செய்கின்றது. வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் காசநோயும் குணமாவதாகக் கூறுகின்றனர். இந்தக் கீரை வயிற்று நோய்களையும் குணப்படுத்துகின்றது. 

👉🏼வெந்தயக் கீரையை வேக வைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து உண்டால் மலம் சுத்தமாகும். உடல் சுத்தமாகும். குடல் புண்களும் குணமாகின்றன. மலம் கழிக்கும்போது ஏற்படும் உளைச்சலையும் எரிச்சலையும் வெந்தயக்கீரை குணப்படுத்துகின்றது. 

👉🏼மூலநோய், குடல் புண் போன்ற நோய்களுக்கும் இந்தக் கீரை சிறந்த மருந்தாகத் திகழ்கிறது. வெந்தயக் கீரையை அரைத்துச் சூடு செய்து வீக்கங்கள் மீது பூசினால் வீக்கம் குறையும். இவ்வாறு செய்வதால் தீப்புண்களும் குணமாகும். 

👉🏼இந்தக் கீரையைத் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும். எனவே, நீரிழிவு உள்ளவர்கள் வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவது நல்லது. வெந்தயக் கீரை ஜீரண சக்தியை அதிகரித்து, பசியைத் தூண்டுகிறது. சிறுநீர் உறுப்புகளை சுத்தம் செய்கிறது. மூளை நரம்புகளைப் பலப்படுத்துகிறது. வயிற்றுக் கட்டி, உடல் வீக்கம், சீதபேதி, குத்திருமல், வயிற்று வலி ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது. 

👉🏼வெள்ளைப் பூசணிக்காய் சாம்பாரில் வெந்தயக் கீரையைச் சேர்த்துச் சாப்பிட்டால் பெருத்த உடல் இளைக்கும். வயதுக்கு வரும் பெண்கள் இதைச்சாப்பிட்டால் இரத்த விருத்தியுண்டாகும்.

பிரண்டை துவையல்



கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவாரமாக வலி சுத்தமாக இல்லை என்பது மட்டுமின்றி உடல் சோர்வு அறவே இல்லாமல் இருக்கிறது என்றார்கள் எங்கம்மா ஏர் உழுவும் காலங்களில் கால் வலியை போக்க.
பிரண்டையை சிறிது நேரம் மோரில் ஊற வைத்து பிறகு அதில்,மல்லிதலை,தூதுவளை, கறிவேப்பிலை சேர்த்து துவையல் செய்து தந்த ஞாபகம் அதையே இங்கு செய்தோம் ......
பிரண்டையில் உள்ள மிகையான சுண்ணாம்பு சத்து(கால்சியம்) தான் எலும்பு மச்சையில் திரவம் அதிகமாக சுரக்க கால்சியம் தேவை அதுமட்டுமின்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை என போகர் நிகண்டுவில் குறிப்பிடபட்டுள்ளது குறிப்பாக சிறுகுடலில் ஏற்படும் குறைபாடுகள் பிரண்டையால் உடனடியாக நிவர்த்தியாகும் இதை எனது அனுபவத்தில் உணர்ந்தேன் ......
பிரண்டை உப்பை சுமார் 300mg தேனில் அல்லது நெய்யில் தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றபட்டு உடல் குறைப்பு ஏற்படுகிறது சிறுகுடல் மற்றும் வயிற்றில் உள்ள வாயு முழுவதும் வெளியேறுவதை உடனடியாக உணரலாம்......
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல்(அ)உப்பை பயன்படுத்தினால் வலி இல்லாமல் போகும் பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது அரு மருந்து.....
நிறைய குறைபாடுகள் பிரண்டையால் குணமாகும்போது எதற்கு கால்சியம் மாத்திரை சாப்பிட்டு சிறுநீரகத்தை பாழ் பண்ணனும் யோசிங்க.....
வைரம் பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று போகர் ஏழாயிரத்தில் உள்ள குறிப்பை கவனிக்கவும் உலகிலேயே கடினமான பொருள் வைரம் தானே அதில் உள்ள கார்பன் பிணைப்பை உடைக்கும் தன்மை இதன் சாற்றுக்கு உண்டு எனும்போது ........
இதற்கு மற்றொரு பெயர் "வஜ்ஜிரவல்லி" தேகத்தை வஜ்சிரமாக்கும் என்பதனால் தானோ என்னவோ...

உடலில் தேங்கும் கழிவுகள் நீக்குதல்

உடலில் தேங்கும் கழிவுகளைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் கழிவுகளை வெளியேற்றும் நீக்குதல் பணியைப் பற்றி புரிந்துகொள்ள இயலாது.

எனவே நம்மையும் அறியாமல் நமது உடலில் தேங்கும் கழிவுகள் என்பது மிகவும் கொடியது.

அவைகள் பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது... 

* உடலில் தேங்கும் கழிவுகள் *

1. உப்பு

2. புளி

3. வெள்ளை சர்க்கரை

4. வெங்காயம், பூண்டு

5. ஆங்கில மருந்து

6. கெமிக்கல் உணவு

7. உருளைக்கிழங்கு

8. அசைவ கொழுப்பு

9. பால் பதார்த்தங்கள்

10. பச்சை, வர மிளகாய்

11. ரீபைண்டு ஆயில்

12. மைதா, முட்டை

மேலே கொடுக்கப்பட்டவைகள் வெகு நாட்கள் கழிவுகளாக உடலிலேயே தேங்குவதால்தான் "நோய்" என்று பெயரிடப்பட்டுள்ள உடல் உபாதைகள் மனிதனுக்கு ஆரம்பமாகிறது.

சரி, இந்த கழிவுகளை உடலிருந்து வெளியேற்ற முடியாதா? என்றால் நிச்சயம் முடியும். 

இயற்கையான முறையில் விளைவிக்கபட்டு நாம் அன்றாடம்  பயன்படுத்தும் நாட்டு காய்கறிகளுக்கு அந்த மகத்துவம் உண்டு. 

*எந்த கழிவை எந்த காய்கறியின் மூலம் நீக்க முடியும் என்ற பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. *

உப்பை வெளியேற்றும் விதி

ஒரு வாரத்திற்கு... காலை, பிற்பகல், இரவு மூன்று முறை பச்சையாக நான்கு வெண்டைக்காயை உணவுக்கு முன் நன்கு மென்று அரைத்து வாயிலேயே கூழாக்கி பருகவும்.

புளி அதிகம் எடுப்பதால் "உடல் தளர்ச்சி" வேகமாக நடைபெறுகிறது. அதனை வெளியேற்றும் விதி

பத்து நாட்களுக்கு.... ஒரு வாழைக்காயை தோலை நீக்கிவிட்டு பச்சையாக நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

வெள்ளை சர்க்கரையின் கழிவுகளை உடலிருந்து வெளியேற்றும் விதி

பத்து நாட்களுக்கு... தினமும் காலை 200 கிராம் வெண்பூசணிக்காயை அதன் தோல், விதை, சதை, நார் ஆகியவையுடன் அரைத்து வடிகட்டி சிறிது மிளகு சேர்த்து பருகவும்.

வெங்காயம் மற்றும் வெள்ளைப்பூண்டின் கழிவுகளை வெளியேற்றும் விதி

ஒரு வாரத்திற்கு... காலை இரவு இருமுறை இரண்டு ஊதா நிறத்தில் வரி வரியாக இருக்கும் நாட்டு கத்திரிக்காய் மற்றும் இரண்டு தக்காளி ஆகிய இரண்டையும் மிக்சியில் அரைத்து வடித்து சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து குடிக்கவும்.

கடுமையான பின்விளைவுகளை தரும் ஆங்கில மருந்தின் நச்சுகளை உடலிருந்து வெளியேற்றும் விதி

ஒரு வாரத்திற்கு காலை இரவு இருமுறை 6 கொத்தவரை மற்றும் முழு எலுமிச்சை தோலுடன் சேர்த்து மிக்சியில் அரைத்து சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து வடிகட்டாமல் குடிக்கவும்.

கடைகளிலும், இதர இடங்களிலும் விற்கும் பாக்கெட்டுகளில் உள்ள செயற்கை வேதிக்கலவைகள் கொண்ட உணவுப்பொருட்கள் மற்றும் முக்கியமாக அரிசி உட்பட உணவுகளில் கலந்துள்ள நச்சுக்களை வெளியேற்றும் விதி

பத்து நாட்களுக்கு.... இரவு தூங்கும் முன் 250 கிராம் புடலங்காய் விதை மற்றும் ஒரு முழு எலுமிச்சை பழம் (தோலுடன்) ஆகிய இரண்டையும் மிக்சியில் அரைத்து வடிகட்டி சிறிது மஞ்சள், கல்உப்பு சேர்த்து பருகவும்.

உருளைக்கிழங்கு உட்பட்ட கிழங்கு வகைகள் மற்றும் இதர உணவு வகைகளால், குடலில் அதிகம் தேங்கி ஒட்டியுள்ள மாவுச்சத்தை உடலிருந்து வெளியேற்றும் விதி

ஒரு வாரத்திற்கு... தினமும் காலை 50 கிராம் அரசாணிக்காய்(பரங்கிகாய் எனப்படும் மஞ்சள் பூசனிக்காய்) மற்றும் 50 கிராம் அரசாணிக்காய் "விதைகள்" ஆகிய இரண்டையும் பச்சையாக மென்று சாப்பிடவும்.

நார்சத்தே இல்லாத அசைவ உணவானது, குடலில் ஒட்டிக்கொண்டு வராமல் இறுகி கட்டியாகிறது. அதனை வெளியேற்றும் விதி

ஒரு வாரத்திற்கு... காலை, பிற்பகல், இரவு மூன்று முறை 6 கோவைக்காயை பச்சையாக நன்கு மென்று சாப்பிடவும்.

அதிகமாக பால், தயிர், மோர், பால் மற்றும் இதர பதார்த்தங்களை உண்ணுவதால் உடலில் புளிப்புத்தன்மை மிகுந்து குடலில் பூச்சிகள் உருவாகிறது. அதனை வெளியேற்றும் விதி

பத்து நாட்களுக்கு... காலை, பிற்பகல், இரவு மூன்று முறை உணவுக்கு பின் முற்றிய முருங்கை விதை இரண்டை உடைத்து அதனுள் இருக்கும் பருப்பினை  15 நிமிடம் சப்பி விட்டு, இறுதியில் மென்று முழுங்கவும்.

பச்சை மிளகாய், வரமிளகாய் ஆகிய இரண்டையும் உபயோகித்ததால் ஏற்பட்ட இழப்பை மாற்றி, மீண்டும் உடல் உறுப்புகளை பழைய நிலைக்கு கொண்டு வரும் விதி

ஒரு வாரத்திற்கு... தினமும் காலையில் ஒரு முழு பீர்கங்காய் தோலுடன் மற்றும் ஒரு முழு எலுமிச்சை பழம் தோலுடன் ஆகிய இரண்டையும் மிக்சியில் அரைத்து வடிகட்டி சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து குடிக்கவும்.

உடலுக்கு தேவையில்லாத ரீபைண்டு ஆயிலை உட்கொண்டதால் கெட்ட கொழுப்பு அதிகரிக்கிறது. அதனை வெளியேற்றும் விதி

பத்து நாட்களுக்கு... காலை, பிற்பகல், இரவு மூன்று முறை நன்கு எண்ணெய் பதம் கொண்ட 50 கிராம் அளவு கொப்பரை தேங்காயை நன்கு மென்று உமிழ் நீருடன் கலந்து சாப்பிடவும்.

மைதா மற்றும் முட்டையை வெளியேற்றும் விதி

ஒரு வாரத்திற்கு... காலை மற்றும் இரவு இருமுறை ஒரு முழு எலுமிச்சை பழத்தை பச்சையாக தோலுடன் மிக்சியில் நீர் விட்டு அரைத்து வடிக்காமல் சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து பொறுமையாக, நிறுத்தி நிதானமாக சப்பி, சப்பி குடிக்கவும

மிளகில்_இருக்கு_சூட்சுமம்



#மிளகில்_இருக்கு_சூட்சுமம்

 ஒரே ஒரு மிளகு போதும்... உண்ணும் உணவு சுவையாக.

இரண்டு மிளகெடுத்து இரண்டொரு ஆடாதோடா இலை சேர்த்தால் இருமல், சளி காணாமல் போகும்.

மூன்று மிளகெடுத்து வெங்காயம் சேர்த்து தலைக்கு தேய்த்தால் கேசம்கூட முசு முசுவென்று வளரும்.

 நான்கு மிளகும், சுக்கும் சிறிது கலந்தால் நெஞ்சுவலி சொல்லாமல் போகும்.

ஐந்து மிளகும் சுக்கும் திப்பிலியும் இணைந்தால் கோழை ஓடியே போகும்.

ஆறு மிளகெடுத்து பெருஞ்சீரகம் (சோம்பு) இடித்து உண்ண, மூலநோய் வந்த சுவடின்றி தானே மறையும்.

ஏழு மிளகை பொடி செய்து நெய் கலந்து அன்னம் பிசைந்து உண்டால் நல்ல பசி எடுக்கும். தொண்டைப்புண்ணும் தொண்டைக்கட்டும் விட்டுப் போகும்.

எட்டு மிளகோடு பெருங்காயம் சேர்த்துக்கொண்டால் வாந்திகூட எட்டி நிற்கும்.

ஒன்பது மிளகும் துளசியும், ஒவ்வாமையை (அலர்ஜி) துரத்தியடிக்கும்.

பத்து மிளகை வாயில் போட்டு கடித்து மென்று விட்டு, பகைவன் வீட்டிலும் பயமேயின்றி விருந்துண்ணலாம்.....நன்றி.

Thursday 8 April 2021

திருமலை....

திருமலையில் தங்குவதற்கு ஒரு அறை கண்டுபிடிக்க கடினமாக இருந்தால், இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் பயன்படுத்தி கொள்ளுங்கல் நண்பர்களே .*கோவிலுக்கு மிக அருகிலேயே கீழ் கண்ட மடங்கள் உள்ளன.அவற்றில் தங்கலாம்.ஹோட்டலுக்குரிய ரூம் வசதிகளோடு உள்ளன.

மூல் மட் மின்: +918772277499 0877-2277499.
புஷ்பா மாண்டபம் ப: 0877-2277301.
ஸ்ரீ வல்லபச்சரிய ஜீ மட் பி: 0877-2277317.
உத்ததி மட் (திருப்பதி) பி 0877-2225187.
ஸ்ரீ திருமல காஷி மட் Ph-0877-2277316.

ஸ்ரீ ராகவேந்திர
ஸ்வாமி மட் Ph-0877-2277302.
ஸ்ரீ வைகனச திவ்யா சித்தன்டா
விவேர்டினினி சபை Ph: 0877-2277282.

ஸ்ரீ காஞ்சி
காமகோடி மட் மின் : 0877-2277370.
ஸ்ரீ புஷ்பகிரி மட் Ph-0877-2277419.
ஸ்ரீ உட்டாரடி மட் Ph-0877-2277397.
உடுப்பி மட் Ph-0877-2277305.

ஸ்ரீ ரங்கம் ஸ்ரீமத்
ஆத்வான் ஆசிரமம் ப: 0877-2277826.

ஸ்ரீ பரகலா ஸ்மிமி மட் பி: 0877-2270597,2277383.
ஸ்ரீ திருப்பதி ஸ்ரீமன்னாரயன 
ராமானுஜா ஜீயர் மட் பி: 0877-2277301.

ஸ்ரீ சிருங்கரி சாரதா 
மடம் Ph: 0877-2277269,2279435.
ஸ்ரீ அஹோபீதா மட் ப. 0877-2279440.

ஸ்ரீ திருமல 
காஷி மத் தொலைபேசி: 222 77316
உடுபி மட் பி: 0877 222 77305

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீதந்தி 
ராமனுஜீயர் மட் பீ: 0877 222 77301)

ஸ்ரீ காஞ்சி காமகோடி 
பீட்டம் மட் / சர்வா மங்கலா கல்யாண மண்டபம் ப., 0877 222 77370)

ஸ்ரீ வல்லபச்சரிய மடம் 
தொலைபேசி: 222 77317
மந்திராலயா ராகவேந்திர சுவாமி மட் / பிருன்தாவனம் ப: 0877 222 77302
ஆர்யா வைசியா சமாஜம் எஸ்.வி.ஆர்.
ஏ.வி.டி.எஸ்.எஸ்.டி: 0877 222 77436

ஸ்ரீரங்கம் ஸ்ரீமதி 
ஆதித்யான் ஆஷ்ரம் ப. 0877 222 77826
ஸ்ரீ வைகநாத ஆசிரமம்: 0877 222 77282
ஸ்ரீ அஹோபில மட் பட்: 0877-2279440
ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடம் / சாரதா கல்யாண மண்டபம் பி: 0877 222 77269
ஸ்ரீ வைசராஜர் மடம் மோதிலால் 
பன்சிலால் தர்மசாலா ஃபீ: 0877 222 77445

ஹோட்டல் நரிலமா 
சௌல்ரி பி: 0877 222 77784
ஸ்ரீ சீனிவாச சொல்ரி டி: 0877 222 77883
ஸ்ரீ ஹதிராம்ஜி மட் மின்: 0877 222 77240

கர்நாடகா விருந்தினர் 
மாளிகை பி : 0877 222 77238
தக்ஷிணா இந்தியா 
ஆர்யா வியா கபு முனிரட்ணம் 
அறநெறிகள் பி: 0877 222 77245

ஸ்ரீ சிருங்கேரி 
சங்கர நீலம் ப: 0877 222 79435
ஸ்ரீ ஸ்வாமி 
ஹதிராஜ் முட்டம் ப: 0877-2220015

வயதில் மூத்த குடிமக்களும் ஜருகண்டி சொல்லித் தள்ளிடும் திருப்பதிகோவில் பாதுகாவலர்கள் இனி யாரைத் தள்ளும் என்று முழிக்கும் காலம் வந்துவிட்டது.

65 வயது கடந்த மூத்த குடிமக்கள் நாள் ஒன்றுக்கு 700 பேர் இலவசமாக தரிசனம் செய்யலாம் என்பது எப்படி?

நிபந்தனைகள் :
******************

1) ஆதார் அட்டை அவசியம்.
2) 65 வயது முடிந்திருக்க வேண்டும்
3) காலை எட்டு மணிக்கு குறிப்பிட்ட இடத்தில் அறிக்கை செய்ய வேண்டும்.
4) காலை 10 மணி முதல் 
மாலை 3 மணி வரை தரிசனம் நேரம்.
5) தினம் 700 பேருக்கும் அனுமதி உண்டு.
6.) உதவி செய்வதெற்கென 
உடனொருவர் செல்ல அனுமதி உண்டு அவளுக்கும் ஆதார் அவசியம்.
7) காலை உணவு பால் இலவசம்.
8.) அவர்களுக்கு 70 ரூபாய்க்கு 4 லட்டுகள் வழங்கப்படும்.
9) ஒருமுறை சென்றவர் 3 மாத காலத்திற்கு பின்னரே மீண்டும் அனுமதிக்கப்படுவர்.
10) இவை அனைத்தும் இலவச சேவையாகும். பயனுள்ள தகவலை பகிரலாமே. இந்த தகவல்கள்அனைத்தும் திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை ! 

🙏 ௐ நமோ நாராயணா....!

🤲 திருப்பதி சென்று வந்தால் நிச்சயம் திருப்பம் கிடைக்குமா கிடைக்காதா? விஞ்ஞான பூர்வமான ஆதாரத்துடனான பதிவு!

🤲 யாரெல்லாம் திருப்பதி சென்றால் அதிக பலன்கள் பெற முடியும் எந்த ராசி காரர்களுக்கு நன்மை செய்யும் என்பதை இந்தப்பதிவில் தெளிவாக பார்க்கலாம் வாருங்கள்...

🤲 இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும்.

🤲 சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது.

🤲 திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவமாகும் ..

🤲 ஸ்ரீராமானுஜர் யந்திரசக்ரங்கள் பதித்துள்ளதால் அவற்றின் சக்தி கடல் அளவு என்பர் .

🤲 கந்த புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும்போது பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும், செய்வினை தோஷம், வறுமை போக்கும் மற்றும் சந்ததி விருத்தி உண்டாகும்.

🤲 பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமமாக இயங்குவதால் நமது மூளை பல மடங்கு வேகத்துடன் செயல்படுகிறது ,இதனால் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கிறது.

🤲 வாஸ்துப்படி வட கிழக்கில் அருவி அமைந்து பள்ளமாக உள்ளது தெற்கே உயரமான மலைகள் உள்ளன.

🤲 வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தால் அந்த இடம் மிகவும் பிரபலம் அடையும் மக்கள் கூட்டம் அலைமோதும்..

🤲 செல்வம் மலை போல குவியும்.

🤲 உலகிலேயே சந்திரனை முதலில் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள்தான் சந்திரன் கதிர்கள் அதிகளவில் ஈர்த்து கொள்வதால்தான் அவர்கள் அறிவாற்றல், நுண்ணறிவு, பொருளாதார வளர்ச்யுடன் உள்ளார்கள்.

🤲 அதுபோல இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும்.

🤲 சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது.

🤲 மூலிகைகள் அதிகம் இருப்பதால் ஆரோக்கியம் உண்டாகிறது. மகான்கள் நிறைந்த பூமி என்பதால் அருளாசியும் நிறைந்து காணப்படுகிறது.

🤲 வாஸ்துப்படி மிக பலமாக இருப்பதால் இத்திருக்கோயில் மிக அதிக சக்தியுடன் உள்ளது.

🤲 இந்தியாவின் அதிக செல்வம் உள்ள கோயில் இதுதான்.

🤲 கலி காலத்திலும் பெருமாள் பக்தர்களுக்கு உதவி செய்வதை பலர் பக்தியுடன் சொல்கின்றனர்.

🤲 குல தெய்வம் இல்லாதவர்கள் திருப்பதி பெருமாளை தங்கள் குல தெய்வமாக வணங்குகிறார்கள்.

🤲 நடந்து நாம் மலை ஏறினால் அக்குபஞ்சர் சிகிச்சையாக உடல் ஆரோக்யத்திற்கு உதவுகிறது.

🤲 நிமிர்ந்து மலை ஏறுவதால் நமது உடலில் மூலாதார சக்கரங்கள் நன்கு சுழலும்.

🤲 சந்திர தசை மற்றும் சந்திர புக்தியால் நடப்பவர்கள்,

🤲 தோல் நோய் உள்ளவர்கள், மன அழுத்தம் மற்றும் மன நிலை பாதிக்கபட்டவர்களுக்கு இத்திருக்கோயில் சிறந்த பரிகாரத் தலமாகும்.

🤲 திங்கள் கிழமை அங்கு சென்று தங்குவது மிகவும் சிறப்பு.

🤲 திருப்பதி மலை மீது எவ்வளவு நேரம் இருக்கிறார்களோ அவ்வளவு நன்மையை தரும்.

🤲 அட போங்கய்யா திருப்பதி போனாலே அனைவரையும் போட்டு பூட்டி வைப்பார்கள் நான் வரவே மாட்டேன் என சொல்லும் அன்பர்கள் தான் அதிகம் காரணம் என்ன தெரியுமா உங்களுக்கு..

🤲 அதே போல அங்கு சென்றவுடன் ஜெயிலில் போடுவது போல அனைவரையும் ஒரு அறையில் போட்டு பூட்டி வைப்பதின் நோக்கம் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் பதினோரு மணி நேரம் மலை மேல் இருக்க வேண்டும் என்பது ஐதீகம்

🤲 அதை யாரிடமும் சொல்லி புரிய வைக்க முடியாது ஆகையால் தான் அனைவரையும் போட்டு ஒரு அறையில் பூட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

🤲 அந்த அறையில் மவுனமாக இருந்து உங்கள் வேண்டுதலை செய்யலாம் ஆனால் அங்கு யாரும் அதை செய்வதே கிடையாது .

🤲 மாறாக அங்கு கூச்சலும் குழப்பமாக தான் இருக்கும்...இனிமேல் நீங்கள் திருப்பதி சென்று வந்தால் அங்கு நீங்களாவது அமைதியாக இருங்கள்.

🤲 அதிகம் திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாளை பிடித்து கொள்ளும் லக்னக்காரர்கள் தெரியுமா.?

🤲 மேஷம் , ரிஷபம் , மிதுனம் ,கடகம் , கன்னி , துலாம் .விருச்சிகம் , மகரம், மீனம் லக்னம் உடையவர்கள் அனைவரும் அதிகமாக பிடித்து கொள்ள வேண்டும்.

🤲 வருடம் ஒரு முறை மட்டும் செல்லும் லக்னம் காரர்கள் .சிம்மம் , தனுசு , கும்பம்.

🤲 ஓம் நமோ வேங்கடேசாயா நமஹ சகல ஐஸ்வர்யங்களும் கிட்ட பலன் தரும் ஏழுமலையான் ஸ்லோகம் " 

ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்”

ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித,
வக்ஷஸம் ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே ... !!!

🤲 பொதுப் பொருள்: 

🤲 திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீநிவாஸப் பெருமாளே, நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களையெல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். மகாலட்சுமி வசிக்கும் அழகு மார்புடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளை பொழிபவரே, ஸ்ரீநிவாஸா, நமஸ்காரம்.

🤲 ஸ்ரீவேங்கட ஸ்ரீநிவாஸா உங்கள் திருவடிகளே சரணம் " சரணம் " சரணம்...

உலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து

உலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில் ?

👌பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்lதை பள்ளிக்குச் செல்லத் 
தொடங்குகிறது...

😰ஒன்றரை வயதில் ப்ளே ஸ்கூல்.., இரண்டரை வயதில் ப்ரீ-கே.ஜி.., மூன்று வயதில் எல்.கே.ஜி., நான்கு வயதில் யு.கே.ஜி என்ற சித்ரவதை அங்கே இல்லை...

😢கருவறையில் இருந்து வெளியில் வந்ததுமே குடுகுடுவென ஓடிச்சென்று பள்ளியில் உட்கார்ந்து கொள்ளும் எந்த அவசரமும் அவர்களுக்கு இல்லை...

👍எல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின் சின்னஞ்சிறு மூளை, தனது சுற்றத்தின் ஒவ்வோர் அசைவில் இருந்தும் ஒவ்வோர் ஒலியில் இருந்தும் கற்கிறது. இலை உதிர்வதும், செடி துளிர்ப்பதும், இசை ஒலிப்பதும், பறவை பறப்பதும் குழந்தைக்குக் கல்விதான்...

👊இவற்றில் இருந்து வேரோடு பிடுங்கி வகுப்பறைக்குள் நடுவதால், அறிவு அதிவேக வளர்ச்சி அடையும் என எண்ணுவது மூடநம்பிக்கை...

👏ஏழு வயதில் பள்ளிக்குச் செல்லும் பின்லாந்து குழந்தை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ஆண்டின் பாதி நாட்கள்தான் பள்ளிக்கூடம் செல்கிறது. மீதி நாட்கள் விடுமுறை...

👌ஒவ்வொரு நாளும் பள்ளி இயங்கும் நேரமும் குறைவு தான். அந்த நேரத்திலும்கூட, படிப்புக்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இசை, ஓவியம், விளையாட்டு, மற்றும் பிற கலைகளுக்கும் முக்கியத்துவம் உண்டு...

👍 ஒவ்வொரு பள்ளியிலும் ஓர் ஓய்வறை இருக்கும். படிக்கப் பிடிக்கவில்லை அல்லது சோர்வாக இருக்கிறது என்றால், மாணவர்கள் அங்கு சென்று ஓய்வு எடுக்கலாம்...

👌முக்கியமாக, 13 வயது வரை ரேங்கிங் என்ற தரம் பிரிக்கும் கலாசாரம் கிடையாது... 
பிராக்ரசு ரிப்போர்ட் தந்து பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வரச் சொல்லும் வன்முறை கிடையாது...

👊தங்கள் பிள்ளையின் கற்றல் திறன் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என பெற்றோர்கள் விரும்பினால், தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம்...

👌கற்றலில் போட்டி கிடையாது என்பதால், தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் மன உளைச்சல்கள் மாணவர்களுக்கு இல்லை...

💪சக மாணவர்களைப் போட்டியாளர்களாகக் கருதும் மனப்பாங்கும் இல்லை...

👏இவர்களுக்கு வீட்டுப்பாடம் தரப்படுவது இல்லை...

👌மாணவர்களுக்கு எந்தப் பாடம் பிடிக்கிறதோ அதில் இருந்து அவர்களே வீட்டுப்பாடம் செய்து வரலாம்...

👍ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மருத்துவர் இருப்பார். அவர், மாணவர்களின் உடல்நிலையை தனிப்பட்ட முறையில் கவனித்து ஆலோசனைகள் வழங்குவார்...

👌ஒரு பள்ளியில் அதிகபட்சமாக 600 மாணவர்கள் இருக்கலாம்; அதற்கு அதிக எண்ணிக்கை கூடவே கூடாது...

👍முக்கியமாக பின்லாந்தில் தனியார் பள்ளிக்கூடமே கிடையாது. அங்கு கல்வி என்பது முழுக்க முழுக்க அரசின் வசம்...

👏கோடீசுவரராக இருந்தாலும், நடுத்தர வர்க்கத்தினராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும்… அனைவரின் குழந்தைகளும் ஒரே பள்ளியில்தான் படிக்க வேண்டும்... 
‘என் பொண்ணு இன்டர்நேசுனல் சுகூல்ல படிக்கிறா’ என சீன் போட முடியாது...

👍அனைவருக்கும் சம தரமுள்ள கல்வி என்ற உத்தரவாதம் உள்ளது...

👌அதனால்தான் பின்லாந்தில் 99 சதவிகிதம் குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப் பெற்றுவிடுகின்றனர்...

👊அதில் 94 சதவிகிதம் பேர் உயர்கல்விக்குச் செல்கின்றனர்... ‘டியூஷன்’என்ற அருவருப்பான கலாசாரம், அந்த நாட்டுக்கு அறிமுகமே இல்லை...

👍தேர்வுகளை அடிப்படை முறைகளாக இல்லாத இந்தக் கல்வி முறையில் பயின்றுவரும் மாணவர்கள்தான், உலகளாவிய அளவில் நடைபெறும் பல்வேறு தேர்வுகளில் முதல் இடங்களைப் பிடிக்கின்றனர்...

😳"இது எப்படி?" என்பது கல்வியாளர்களுக்கே புரியாத புதிர்...

✅அந்தப் புதிருக்கான விடையை, ஐ.நா சபையின் ஆய்வு முடிவு அவிழ்த்தது...

😀உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள் பற்றிய தரவரிசை ஆய்வு ஒன்றை, ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வோர் ஆண்டும் வெளியிடுகிறது. இதில் பின்லாந்து எப்போதும் முன்னணியில் இருக்கிறது...

👌மகிழ்ச்சியின் நறுமணத்தில் திளைக்கும் குழந்தைகள், அறிவை ஆர்வத்துடன் சுவைப்பதில் புதிர் எதுவும் இல்லை...

👍பின்லாந்து கல்வி முறையின் இத்தகைய சிறப்புகள் குறித்து அறிந்து வருவதற்காக, உலகமெங்கும் உள்ள கல்வியாளர்களும், பிரதிநிதிகளும் அந்த நாட்டை நோக்கிக் குவிகின்றனர்...

👍உலகின் 56 நாடுகளில் இருந்து 15,000 பிரதிநிதிகள் ஒவ்வோர் ஆண்டும் செல்கின்றனர்...

👍நாட்டின் அந்நியச் செலாவணியில் கணிசமான சதவிகிதம் கல்விச் சுற்றுலாவின் மூலமே வருகிறது...

👊ஆனால், இப்படி தங்களை நோக்கி வீசப்படும் புகழ்மாலைகளை பின்லாந்தின் கல்வியாளர்களும் அமைச்சர்களும் ஓடோடி வந்து ஏந்திக்கொள்வது இல்லை...

அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், "‘பின்லாந்து கல்வி முறைதான் (Finnish Education system) உலகிலேயே சிறந்தது எனச் சொல்ல முடியாது... ஏனெனில் "OCED" அமைப்பின் ஆய்வில் எல்லா உலக நாடுகளும் பங்கேற்காத நிலையில் இப்படி ஒரு முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது... 
எங்களைவிட சிறந்த கல்விமுறையும் இருக்க வாய்ப்பு உள்ளது"’ என்கிறார்கள்...

👏இல்லாத நாற்காலியைத் தேடி எடுத்து ஏறி அமர்ந்து, தனக்குத்தானே முடிசூட்டிக்கொள்ளும் தற்பெருமையாளர்கள் நிறைந்த உலகத்தில் இது பண்புமிக்க பார்வை...

👏மதிக்கத்தக்க மனநிலை.

👍பின்லாந்தில் ஆசிரியர் பணி என்பது, நம் ஊர் ஐ.ஏ.எஸ் ., ஐ.பி.எஸ் போல மிகுந்த சமூகக் கௌரவம் உடையது...

👌அரசின் கொள்கை வகுக்கும் முடிவுகளில், திட்டங்களின் செயலாக்கத்தில் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு...

👍மூன்றில் ஒரு பின்லாந்து குழந்தைக்கு, ஆசிரியர் ஆவதுதான் தன் வாழ் நாள் லட்சியம்...

அதே நேரம் அங்கு ஆசிரியர் ஆவது அத்தனை சுலபம் அல்ல!..

👌மேல்நிலை வகுப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களில் இருந்து ஆசிரியர் பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்...

👌ஐந்து ஆண்டுகள் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் சேர்ந்து கடும் பயிற்சி எடுக்க வேண்டும்...

👌பிறகு, ஆறு மாத காலம் ராணுவப் பயிற்சி...

👌ஒரு வருடத்துக்கு வெவ்வேறு பள்ளிகளில் நேரடியாக வகுப்பறையில் ஆசிரியர் பயிற்சி...

👌ஏதாவது ஒரு பாடத்தில் புராசெக்ட்...
குழந்தை உரிமைப் பயிலரங்கங்களில் பங்கேற்பது... 
நாட்டின் சட்டத் திட்டங்கள் குறித்த தெளிவுக்காக தேசிய அமைப்புகளிடம் இருந்து சான்றிதழ்... 
தீயணைப்பு, தற்காப்புப் பயிற்சி, முதலுதவி செய்வதற்கான மருத்துவச் சான்று… என ஆசிரியர் பயிற்சிக்கு சுமார் ஏழு வருடங்களைச் செலவிட வேண்டும்...

👍இப்படி ஆசிரியர்களை உருவாக்கும் விதத்தில் பின்லாந்து மேற்கொள்ளும் சமரசம் இல்லாத முயற்சிகள்தான், அங்கு கல்வியில் மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கி இருக்கிறது!...

👏👏👏👏👏👏👏👏

இப்போது நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய தருணம் இது...

பெற்றோர்கள், கல்வியாளர்கள், கல்வி நிறுவனங்கள், ஆட்சியாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது...

குழந்தைகள் வளர்ப்பில் நாம் தான் கற்றுக் கொள்ள வேண்டியது அதிகம் இருக்கிறது...

முதலில், பிள்ளைகளுக்கு நல்ல சிந்தனைகளை ஏற்படுத்துங்கள்!...

ஒரு குழந்தையைவிட நாம் உயர்ந்தவர் என்று நினைக்காதீர்கள்….

01. பிள்ளைகள் எதாவது செய்தால் எப்போதும் குறை கூறுதல், அவர்கள் பாராட்டும்படி செய்தாலும் கண்டு கொள்ளாதிருத்தல் போன்ற செயல்களை பலர் செய்கிறார்கள் இதனால் பிள்ளைகளின் மன வளர்ச்சி குன்றும்.

02. எந்தக் குழந்தையும் பின்னால் எப்படி ஆகுமென எவருமே கூற முடியாது. மூடன், அறிவாளியாகலாம்... பைத்தியம், தெளிந்த சித்தமுடையவனாகலாம்... ஆகவே பிள்ளைகளை ஒருகாலமும் தப்பாக மட்டும்கட்டி அலட்சியம் செய்யக் கூடாது.

03. தாமஸ் ஆல்வா எடிசனை மரமண்டை என்று பாடசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டவர் பின்னாளில் ஆயிரம் கண்டு பிடிப்புக்களுக்கு அவரே அதிபதி.

04. லூயி பாஸ்டியர் சராசரி மாணவனாக பாடசாலையில் இருந்தவர் பின்னாளில் நோபல் பரிசு வாங்கினார்.

05. ஆல்பிரட் ஐன்ஸ்டைனை, அவர் ஆசிரியர், "இவனை போன்ற மூளை அழுகிய மாணவனை நான் பார்த்ததே இல்லை" என்றார் அவர் ஆசிரியர் ஆனால் அவரே 20 ம் நூற்றாண்டின் அதி சிறந்த விஞ்ஞானியானார்.

06. குழந்தைகளுடன் ஒரு நாளில் சிறிது நேரமாவது பேசுங்கள், நல்லதைப் பேசுங்கள் கனிவுடன் பேசுங்கள். அவர்கள் குறைகளைப் பற்றி அதிக நேரம் பேசாதீர்கள் நிறைகளை பற்றிப் பேசுங்கள்.

07. பிள்ளைகளுடன் யாரையும் ஒப்பிட்டு பேசாதீர்கள், அவன் அவனே.. நீங்கள் நீங்களே.. நீங்களே முன்னுதாரணமாக இருங்கள். உங்களைப் பார்த்து அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.

08. வாழ்வில் வெற்றிபெற்றவரைப்பற்றி பேசுங்கள், ஒவ்வொரு துறையிலும் சிறந்தவர்களைப்பற்றி பேசுங்கள்.

09. எப்படி இருக்கக் கூடாது என்று ஒப்பிட்டு பேசுவதைவிட எப்படி இருக்க வேண்டுமென ஒரு முன்னுதாரண மனிதரைப்பற்றிப் பேசுங்கள்.

10. பிள்ளைகளுக்கு வீட்டுக்குள் விலங்கிடாதீர்கள் வீடு ஒரு சிறைச்சாலைக் கூடமல்ல மனிதர்களை தோற்றுவிக்கும் கோயில்.

11. நல்ல மேற்கோள்களை கொடுங்கள், சுதந்திரம் கொடுத்து, கட்டாயப்படுத்தி வழிக்குக் கொண்டு வாருங்கள்.

12. மலர் தூவியுள்ள பாதையைப்பற்றி பிள்ளைகளுக்கு சொன்னால் அவர்கள் முள் நிறைந்த பாதையை புரிந்து கொள்வார்கள்.

13. உழைப்பைப்பற்றி சொல்லிக் கொடுங்கள் அவர்கள் உழைப்பில்லாத கேடுகளை புரிந்துகொள்வார்கள்.

14. வெற்றி பெற்றவர்களை சொல்லும்போது தோல்வியின் காரணங்களை அவன் அறிந்து கொள்வான்.

15. சுறு சுறுப்பை சொல்லிக் கொடுத்தால் அவன் சோம்பலை அடையாளம் காண்பான், விதியை வென்றவர்களை சொல்லும்போது அவன் வேதனையில் நொந்து அழிந்தவர்களை கண்டு கொள்வான் – இது போதும்...

முதலில் நாம் மாற வேண்டும்.

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு...

மாற்றம் ஒன்றே மாறாதது...

நல்ல மாற்றம் தான் வளர்ச்சியை தரும்.

பின்லாந்தின் கல்விமுறையிலிருந்து நாம் கற்றுக் கொண்டு மாறுவோம்!.

குழந்தைகளின் எதிர்காலத்தைப் சிறப்பாக மாற்றுவோம்!.

ஆயுட்காலம்....

உலகில் ஒரு மனிதனின் சராசரி...

ஆயுட்காலம் 70 ஆண்டுகள்.

★பாலிய வயது முதல், பருவ வயது வரை:

முதல் 20 வருடங்கள் வாழ்க்கையின் அர்த்தம் தெரியாமல் விளையாட்டாக ஓடிவிடும்.

★வாழ்வின் கடைசி 20 வருடங்கள்: 

நாம் வாழ்ந்தும் பயனில்லை, 
வீட்டில் இருக்கும் 
Table, 
chair, 
போல் நாமும் ஒரு பழைய பொருள் ஆகி விடுவோம். 

20+20= 40 போக மீதி இருப்பது 30 வருடங்கள்.

★அந்த 30தில் 10 வருடங்கள்: 

குறைந்த பட்சம் தினசரி
8 மணி நேரம்
தூங்கி விடுகிறோம். 

மீதி இருப்பது: 20 வருடங்கள். 

இதில் வேலை, business என்று பணம் சம்பாதிப்பதற்காக 12 மணிநேரம் உழைக்கிறோம்,அதில் 10 வருடங்கள் போய் விடுகிறது. 

மீதி இருப்பதோ:
 10 வருடங்கள். 

இதில்:

மனைவியோடு பிரச்சனைகள், 
குழந்தைகளோடு பிரச்சினைகள்,
உடல் நல குறைபாடுகள், 
என 2 வருடங்கள் போய் விடும். 

மீதி இருப்பது வெறும்: 

8 வருடங்கள். 
அதாவது 2922 நாட்கள். 

நமது மன திருப்திக்காக,
இந்த 2922 நாட்களை வேண்டுமானால் 
'round'டாக 3000 நாட்கள் என வைத்துக் கொள்ளலாம். 

நாம் இந்த உலகத்தில் எந்தவித பிரச்னைகளும் இல்லாமல் ஒரளவு நிம்மதியாக வாழக்கூடிய நாட்கள்,
வெறும் 3000 நாட்கள் மட்டும் தான். 

இந்த_3000_நாட்கள் வாழ்வதற்கு:

மனம் நிறைய…………!!!!!???

வெறுப்பு, 

கோபம், 

துரோகம், 

வன்மம், 

வன்முறை, 

வஞ்சகம், 

அகங்காரம், 

தலைக்கனம்,

ஏளனம், 

சந்தேகம்,

என எத்தனையோ எதிர்மறை குணங்களோடு மட்டும் ஏன் நாம் வாழ வேண்டும்?

வாழ்க்கையில்
இவற்றை
பின்பற்றலாமே……

அன்பு, 

கருணை, 

இரக்கம், 

பாசம், 

அமைதி, 

நட்பு,

நம்பிக்கை, 

காதல், 

இயற்கை,

உதவி, 

புன்னகை,

கனிவு, 

குழந்தை, 

பாராட்டு,

விட்டுக்கொடுத்தல், 

இறை பக்தி, 

குடும்பம், 

தன்னம்பிக்கை,

மகிழ்ச்சி,

சந்தோஷம்,

என எத்தனையோ 
positive வான விஷயங்கள் இருக்கின்றனவே.
இவற்றை பின்பற்றலாமே. 

நெருப்பு தன்னைச்சுற்றி இருக்கின்ற எல்லாவற்றையும் எரித்துவிடும். 

தண்ணீர் தன்னைச்சுற்றி இருக்கின்ற எல்லாவற்றையும் குளிர வைக்கும். 

அது நெருப்பாகவே இருந்தாலும் கூட. 

ஒருபோதும் நம் வாழ்வில் நெருப்பைஉமிழாமல், 

எப்போதுமே நம் மனதை தண்ணீர்போல் வைத்து இருப்போம்.

இரவு நேரத்தில் இறப்பைத் தவிர்க்கவும்

இரவு நேரத்தில் இறப்பைத் தவிர்க்கவும்.
 டாக்டர் ஆலோசனை வழங்குகிறார்.

                         வீட்டை பரிசோதிக்கவோ, 
 அல்லது சிறுநீர் கழிக்கவோ,  இரவில் 
 எழுந்திருக்கும்  ஒவ்வொரு நபரும் 
 மூன்றரை நிமிடங்கள் கவனிக்க 
 வேண்டும். 

                     எப்போதும் ஆரோக்கியமாக 
 இருக்கும் ஒருவர் ஒரு நாள் இரவில் 
 திடீரென காலமானார். 

               "நேற்று, நான் அவருடன் பேசிக் 
 கொண்டிருந்தேன், நல்லாத்தானே 
 இருந்தார்! அவர் ஏன் திடீரென்று 
 இறந்தார்?"

            காரணம்? நீங்கள் கழிப்பறைக்குச் 
 செல்ல இரவில் எழுந்தவுடன், அது 
 பெரும்பாலும் விரைவாக நடக்கும்.

           நீங்கள் உடனடியாக படுக்கையில் இருந்து குதித்து எழும் போது, மூளைக்கு இரத்த ஓட்டம் இருக்காது.

       "மூன்றரை நிமிடங்கள்" ஏன் மிகவும் முக்கியம்?

        நள்ளிரவில், சிறுநீர் கழிக்கும் ஆசை உங்களை எழுப்பும்போது, ​​திடீரென்று எழுந்ததன் மூலம், மூளை இரத்த சோகையாக இருக்கும், 

        மேலும் இது இரத்தம் இல்லாததால் இதய செயலிழப்பை ஏற்படுத்துகிறது.

                      மூன்று நிமிடங்கள் மற்றும் ஒன்றரை நிமிடங்கள் பயிற்சி செய்வது நல்லது, 
அவை யாதெனில்?:

             1. நீங்கள் எழுந்ததும், ஒன்றரை நிமிடம் படுக்கையில் இருங்கள்.

             2. அடுத்த அரை நிமிடத்தில் படுக்கையில் உட்கார்ந்து கொள்ளுங்கள்;

             3. உங்கள் கால்களைக் குறைத்து, படுக்கையின் விளிம்பில் அரை நிமிடம் உட்கார்ந்து கொள்ளுங்கள்.

          மூன்றரை நிமிடங்களுக்குப் பிறகு, உங்கள் மூளை இனி இரத்த சோகைக்கு ஆளாகாது,

          உங்கள் இதயம் பலவீனமடையாது, 
 இது வீழ்ச்சி மற்றும் திடீர் மரணம் 
 ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்.

               

      

பரங்கிக்காயை சாப்பிடுஅதன் நன்மைகள்.:

பரங்கிக்காயை சாப்பிடுஅதன் நன்மைகள்.:

பரங்கியை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் சருமத்தில் உள்ள செல்கள் புதுப்பிக்கப்படுவதுடன் மேலும் பாக்டீரியா தொற்றுக்கு எதிராகப் போராடவும் செய்கிறது. பரங்கியில் உள்ள வைட்டமின் ஈ, சருமக் குறைபாடுகளை சரி செய்கிறது.

பரங்கியில் நமது சருமத்துக்கு தேவையான நல்ல கொழுப்பு அமிலமும் உள்ளது. சருமம் பளபளப்புக்கு காரணமான வைட்டமின் ஈ, துத்தநாகம் மற்றும்  மக்னீசியமும் உள்ளது.

தாமிரம், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகியவற்றை சிறந்த அளவில் உள்ளடக்கிய காய். மேலும் இது ஆல்ஃபா, பீட்டா கரோட்டின், லூட்டின் மற்றும்  ஸியாக்ஸாந்தின் ஆகியவற்றைக் கொண்டது.

வைட்டமின் ஏ அபரிமிதமாக கொண்ட இது, உடலுக்கு தேவையான இயற்கையான ஆன்டி ஆக்சிடென்ட்டாக செயல்படுகிறது. சரும ஆரோக்கியத்தையும் சளி  சவ்வுப் பகுதிகளையும் பாதுகாக்கிறது. பார்வைத்திறன் மேம்படவும் உதவுகிறது

*படிகாரம் நீர்*



அதிக விலை கொடுத்து இனி Sanitiser வாங்க தேவையில்லை

கொராணா மற்றும் பல தொற்று கிருமிகளில் இருந்து பாதுகாத்து கொள்ள ஒரு சிறிய வழி.

*படிகாரம் நீர்*

ஆம் நாம் முடி திருத்தும் கடைகளில் கல்கண்டு போல் உள்ள ஒரு கல் இருக்கும். அதை சவரம் செய்த பின்னர் தடவுவது வழக்கம்.

இதன் இயல்பு அனைத்து கிருமிகளும் பரவாமல் தடுக்கும்.

*படிகாரம் நீர் செய்யும் முறை*

படிகாரம் கல் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். 

அதனை 20 கிராம் எடுத்து 2 லிட்டர் தண்ணீரில் கலந்து விடவும்.பின்னர் 100 கிராம் கல் உப்பு போட்டு நன்கு கலக்கவும். படிகாரம் நீர் தயார்.

*பயன்படுத்தும் முறை*

கை ,முகம் நன்கு தண்ணீரில் கழுவிய பின் படிகாரம் நீரை சிறிதளவு 50 ml கையில் எடுத்து கைகள் மற்றும் முகத்தில் முழுவதும் தடவிவிடவும். இது போதும். 

இனி தாங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.