jaga flash news

Tuesday, 29 April 2025

சிலந்தி வலைகள்


வீட்டில் சிலந்தி வலை இருக்கா? விரட்டி விட்டாலும் மீண்டும் வருதா? பணம் கையில் நிக்காது.. இதை பாருங்க
 வீட்டில் சிலந்தி வலை இருப்பது நல்லதா? கெட்டதா? சிலந்திகள் வீட்டிற்குள் ஆகாத பூச்சியினமானும்.. வாஸ்துபடி வீடுகளில் சிலந்தி வலை இருந்தால், பணம் நிற்காது.. சிலந்தி வலைகள் எதிர்மறை ஆற்றலை வீட்டிற்குள் ஈர்க்கக்கூடியவை.. எவ்வளவு பணம் சம்பாதித்தாலும், அவை கரைந்து கொண்டேயிருக்கும். சிலந்திகள் வீட்டிற்குள் இருப்பதால் வேறு என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்? சிலந்திகளை அகற்ற என்ன செய்யலாம்?


சிலந்தி வலைகள் எப்போதுமே நல்ல விஷயமாக கருதப்படுவதில்லை.. வீட்டில் எதிர்மறை ஆற்றலை, நெகட்டிவ் எனர்ஜியை அதிகப்படுத்திவிடும்.. ஒற்றுமையாக இருக்கும்போதுகூட, பிரிவினைக்குள் ஆளாக நேரிடும்..




நிதிநிலை பற்றாக்குறை
தேவையில்லாமல், பணம் கரைந்து கொண்டேயிருக்கும்.. காரணமே இல்லாமல் கோபப்படுவது, சோம்பல், குழப்பம், பதட்டம் அனைத்துமே ஏற்படும். அதாவது, வீட்டிற்குள் சிலந்தி வலைஇருந்தால், நிதிநிலை பற்றாக்குறை, செலவுகள், வீண் விரயம் ஏற்படும்.. படுக்கை அறையில் சிலந்தி வலைகள் இருந்தால், அது தம்பதியிடையே பிணக்கத்தை தரும்.


பூஜை அறையில் சிலந்தி வலை இருந்தால், குடும்பத்தில் தீரா கஷ்டங்கள் ஏற்படும். சமையலறையில் சிலந்தி வலை பின்னப்பட்டிருந்தால், குடும்பத்தில் யாருக்காவது உடல்நலம் பாதிக்கப்படலாம். எனவே, சுத்தம் செய்து, சிலந்தி வலைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

சிலந்தி வலைகள்


அப்படி சுத்தம் செய்தும் மீண்டும் மீண்டும் சிலந்திகள் வீட்டிற்குள் வந்தால், புதினா எண்ணெய் பயன்படுத்தலாம்.. காரணம், சிலந்திகளுக்கு புதினா வாசனை பிடிக்காது. சில துளிகள் புதினா எண்ணெயை நீரில் கலந்து, ஜன்னல்கள், கதவுகள், மற்றும் சிலந்தி வலை பின்னும் இடங்களில் தெளித்துவிடலாம்.


Thursday, 24 April 2025

முடவாட்டுக்கால் சூப்...


முடவாட்டுக்கால் சூப்பை குடிங்க! கம்பை தூக்கி போட்டுட்டு நடங்க! சூப் செய்வது எப்படி?
முடவாட்டுக்கால் சூப்பை எப்படி தயார் செய்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் அந்த முடவாட்டுக்காலில் என்னென்ன நன்மைகள் இருக்கின்றன என்பதையும் பார்க்கலாம். முட்டி வலியால் அவதிப்படுவோருக்கு இது ஒரு வரப்பிரசாதம்.


mudavattukaal
இந்த சூப்பை குடித்தால் வயதானாலும் முட்டி வலி வராது என்கிறார்கள். இந்த முடவாட்டுக்கால் 4000 வியாதிகளை குணப்படுத்தும் என சொல்கிறார்கள். இதை சைவ ஆட்டுக்கால் என்றும் சொல்கிறார்கள்.


இது குடித்தால் ஆட்டுக்கால் போன்ற சுவையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த கிழங்கு பாறைகளுக்கு இடுக்கே வளரக் கூடியது. இது மலைப் பகுதிகளிலும் குளிர்பிரதேசங்களிலும் மட்டுமே வளரக் கூடியது.


தமிழகத்தில் எங்கு
இந்த கிழங்கு தமிழகத்தில் கொல்லிமலையிலும் சேரவராயன் மலையிலும் கிடைக்கிறது. இதற்கு வேர்கள் கிடையாது. இந்த கிழங்குகள் செம்பு, தங்கம், இரும்பு, கால்சியம், பாறைகளில் இருக்கும் சிலிக்காவை உறிஞ்சும் தன்மை கொண்டது. வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை விரட்ட சித்தர்கள் இதை 48 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தனர்.



300 ரூபாய்
இந்த கிழங்கு ஒரு கிலோ 300 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதை 6 மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம் என்கிறார்கள். ஆனால் பிரிட்ஜில் வைக்கக் கூடாது. ஃபேன் காற்றில் வைக்கக் கூடாதாம். குழந்தைகளின் வாத நோய்க்கு இது அருமருந்து. கழுத்து வலி, தோள்பட்டை வலி, முதுகு வலி போன்றவற்றை குணப்படுத்தும். முடக்குவாதம் வந்து முடங்கியவர்கள் இந்த கிழங்கின் சூப் வைத்துக் குடிக்கலாம்.


மூட்டு வலி
மூட்டு வலி, முழங்கால் வலி, குதிகால் வலி, கெண்டைக்கால் வலி, தசை பிடிப்பு உள்ளிட்டவைகளுக்கு இந்த கிழக்கு அற்புதமான மருந்து. கர்ப்பப்பை சுருங்குதல், சிறுநீரகம் சுருங்குதல், உள்ளுறுப்பு சுருங்குதல், புற்றுநோய் உள்ளிட்டவைகளுக்கு நல்ல மருந்து என்கிறார்கள். முடவாட்டுக்கால் கிழங்கை போட்டு குழந்தையை குளிக்க வைத்தால் வாத நோய் நீங்கும்.

சுடுநீரில் போட்டு குளிக்கணும்
இந்த கிழங்கில் உள்ள முடி போன்ற தோலை எடுத்து சுடுநீரில் போட்டு குளித்து வந்தால் தோல் அலர்ஜி, தேம்பல், அரிப்பு போன்றவை நீங்கும். ஏற்காட்டிற்கு சுற்றுலா வரும் மக்கள் இந்த முடவாட்டுக்கால் சூப்பை வாங்கி குடிக்கிறார்கள். அருவிக்கு சென்றுவிட்டு வருவோர் இந்த சூப்பை குடித்தால் புத்துணர்ச்சி பெறுகிறார்கள் என்கிறார்கள்.


கொடைக்கானல்
அது போல் கொடைக்கானலில் பூம்பாறையிலிருந்தும் இந்த முடவாட்டுக்கால் பல்வேறு இடங்களில் விற்கப்படுகிறது. இந்த முடவாட்டுக்காலை எப்படி சூப் வைக்கலாம் என்பதை பார்க்கலாம்.

தோல் சீவி
முடவாட்டுக்காலின் தோலை சீவி நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த முடவாட்டுக்காலை வெட்டினால் அதிலிருந்து திரவம் வரும். அப்படியென்றால் அது ஃபிரஷ்ஷாக இருக்கிறது என்று அர்த்தம். தோல் நீக்கிய முடவாட்டுக்காலை துண்டு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

20 நிமிடங்கள்
அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து சின்ன வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, மிளகு , சீரகம், கருவேப்பிலை சேர்த்து விழுதாக அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கனமான பாத்திரத்தில் இந்த விழுதை சேர்த்து தேவையான அளவுக்கு தண்ணீர் விட்டு, உப்பு போட்டு 20 நிமிடங்களாவது கொதிக்க வைக்க வேண்டும்.

கரம் மசாலா
பிறகு அந்த சூப்பில் சிறிது கரம் மசாலைா போட்டு கொதி வந்ததும் அடுப்பை அணைந்துவிட்டு வடிக்கட்டிக் கொள்ளவும். வடிகட்டியதில் கொத்தமல்லி தழை தூவி, தேவைப்பட்டால் மிளகுத் தூளையும் சேர்த்து சூடாக குடிக்கலாம். இவ்வாறு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடித்து வரலாம் என்கிறார்கள். இந்த கிழங்கு சென்னையில் கூட விற்பனைக்கு வந்துள்ளது.


மேலும் இதை ஏற்காடு, கொடைக்கானல் வியாபாரிகளிடம் இருந்து ஆன்லைனில் கூட வாங்கிக் கொள்ளலாம். இந்த சூப் குடித்ததும் ஒரு மணி நேரத்திற்கு எதையும் சாப்பிடக் கூடாது. மேலும் இதை கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாது என்கிறார்கள்.


Sunday, 20 April 2025

பாம்புகள் பால் குடிக்குமா?


பாம்புகள் பால் குடிக்குமா? புற்றுக்கு பால் வைப்பது ஏன்? இந்த சம்பவத்திற்கு பின்னால் இருக்கும் நம்பிக்கையையும் உண்மையையும் அறிவியல் காரணங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.


இதுகுறித்து சமூகவலைதளத்தில் யுவி என்பவர் செய்திருந்த பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ் சினிமாவில் பாம்பு புற்றிலிருந்து வந்து பால் குடிக்கின்றன காட்சியை வைத்து இந்த கேள்வியை கேட்டுள்ளீர்கள் என்று நான் கருதுகிறேன்.


பாம்புகளின் சட்டையை பார்த்துள்ளீர்களா? பாம்புகள் தோல் உரிக்காவிட்டால் என்னவாகும்?
"பாம்புகளின் சட்டையை பார்த்துள்ளீர்களா? பாம்புகள் தோல் உரிக்காவிட்டால் என்னவாகும்?"
பாம்பு பால் குடிக்குமா என்ற கேள்விக்கு அறிவியல் காரணத்தை அறியும் முன் இந்து சமயத்தோடு இந்த கேள்வி தொடர்புடையதால் முதலில் இந்து சமயத்திலிருந்து பதிலை தொடங்குகிறேன்.


இந்து சமய புராணத்தின்படி நம்பப்படும் காரணங்கள்
சிவன் மற்றும் பாம்பு மற்றும் பால் தொடர்பான ஒரு இந்து புராணம் இருப்பதாக நான் நம்புகிறேன். இந்து மதத்தில் பால் மிகவும் புனிதமானதாகவும் தூய்மையானதாகவும் கருதப்படுகிறது.

நம்முடைய ஆத்மா எல்லா கர்மங்களிலிருந்தும் விடுபட்டுள்ளது. சிவனுக்கு நம் ஆத்மாவை வெவ்வேறு காலத்திலிருந்து விடுவித்து, நித்தியத்தை (மோக்ஷத்தை) வழங்குவதற்கான அதன் பிரதிநிதித்துவம்.



இரண்டாவது காரணம், தேவர்கள் அமிர்தத்தை பால் பெருங்கடலில் இருந்து துடைக்க விரும்பியபோது, வாசுகி கயிற்றைக் கசக்கினார்.

மற்றொரு காரணம்
பால் இறைவன் சிவனிடமிருந்து வருகிறது.
வேத காலத்தில், மக்கள் சிவலிங்கத்தை வணங்கத் தொடங்கியபோது. பால் வழங்குவதன் மூலம், சிவன் பாம்புகளைச் சுற்றிலும் வாழ்கிறார் என்றும் பால் அந்த பாம்புகளால் நுகரப்படும் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள்.

பாம்புகளுக்கு பால் வழங்கினால் இறைவன் சிவன் மகிழ்ச்சி அடைவான் என்பது ஒரு புதிய கோட்பாடாக மாறியதுடன், புராணம் நாகபஞ்சாமியில் பாம்புகளுக்கு பால் கொடுக்கும் ஒரு மரபுவழி சடங்காக மாறியது.


நாக பஞ்சமி
இந்த கேள்விக்கு பின்னால் உள்ள முக்கிய காரணம் இதுதான். நாக பஞ்சமிக்கு முன்பு பாம்பு மந்திரவாதிகள் அல்லது பாம்பாட்டிகள் பொதுவாக தங்கள் பாம்புகளுக்கு தண்ணீர் மற்றும் உணவைக் கொடுப்பதில்லை.

எனவே, அந்த குறிப்பிட்ட நாளில், பாம்புகளுக்கு பாலை வைக்கின்றனர். பல நாள் நீர் அருந்தாமல் பாம்புக்கு கடுமையாக நீரிழப்பு ஏற்பட்டு இருக்கும். கடுமையாக நீரிழப்பு ஏற்பட்டால் அது நல்லதல்ல.

பாம்பு பாலைக் கண்டதும் நீரிழப்பை தவிர்க்க ஒருவேளை பாம்பு பாலை குடிக்கலாம். அடிப்படையில், அவர்களுக்கு பால் குடிப்பதைத் தவிர வேறு வழியில்லை, ஏனென்றால் அது உயிர் வாழும் வேண்டும். பின்னர், பாம்பு அதை ஜீரணித்துவிட்டால், அது மீண்டும் பாலை குடிக்காது.

அறிவியல் ரீதியான காரணங்கள்
பால் என்பது பாலூட்டிகளால் தங்கள் சந்ததியினருக்கு உணவளிக்க பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இது பாலூட்டியின் வரையறுக்கும் பண்பு.
பாம்புகள் ஊர்வன. அவர்களுக்கு பால் சுரப்பிகள் இல்லை. அவைகளால் பாலை உற்பத்தி செய்ய முடியாது.

எனவே பால் குடிப்பதற்கு பரிணாம ரீதியாக சுட்டிக்காட்டப்படவில்லை. பாம்புகள் அனைத்து மாமிச உண்ணிகள். அவை மற்ற உயிரினங்களை சார்ந்து மட்டுமே வாழ முடியும்.

அவற்றின் உணவு வகையான எலிகள், பூச்சிகள், முட்டைகள், தவளைகள், தேரைகள் மற்றும் நத்தைகள் வரை இருக்கும்.

பாம்பு ஒருபோதும் உணவு, தண்ணீருக்கு பதிலாக பால் குடிப்பதில்லை. பாம்புகள் பால் குடிக்கும் என்பதற்கு அறிவியல் சான்றுகள் இல்லை. இவ்வாறு அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.



Wednesday, 9 April 2025

சாணக்ய நீதி: கணவன் - மனைவி உறவில் வயது வித்தியாசம் எவ்வளவு இருக்க வேண்டும்?



சாணக்ய நீதி: கணவன் - மனைவி உறவில் வயது வித்தியாசம் எவ்வளவு இருக்க வேண்டும்?



சாணக்கியர் இந்தியாவில் வாழ்ந்த ஒரு சிறந்த அரசியல்வாதி மற்றும் ராஜதந்திரி ஆவார். இவர், அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் ஆழ்ந்த அறிவைக் கொண்டவர். பலரும் வாழ்க்கையில் சாணக்கியரின் நெறிமுறைகளை பின்பற்றுகின்றனர். அப்படி கணவன் மனைவிக்குள் எவ்வளவு வயது வித்தியாசம் இருக்க வேண்டும், எது வாழ்க்கைக்கு சிறந்தது என்பது பற்றி அவர் கூறிய கருத்துக்களை பார்க்கலாம்


குடும்பத்தில் முக்கிய உறவு என்றால் அது திருமண பந்தம் தான். பலரும் தங்கள் வாழ்க்கையில் கணவன் - மனைவி உறவு நீடிக்க என்ன செய்ய வேண்டும் என கருத்து கேட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் டைவர்ஸ் கலாச்சாரமும் அதிகரித்து வருகிறது. இப்படி ஒரு சூழலில் இந்த பிரச்சனைகளுக்கு வயது வித்தியாசம் காரணமாக இருக்கலாமா என்ற பேச்சுக்களும் எழுந்து வருகிறது. குடும்பம் என்றாலே கணவன் - மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் இருக்க தான் செய்யும். ஆனால் சிலர் வீடுகளில் அது அதிகமாக இருப்பதால் என்ன செய்வதென தெரியாமல் இருப்பார்கள்.


சாணக்கியர், மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு கணவன் மனைவிக்கு இடையே வயது வித்தியாசம் அதிகமாக இருக்கக்கூடாது என்றும், இருவருக்கும் இடையே பெரிய வயது வித்தியாசம் இருந்தால், திருமண வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்படும் எனவ்ம் தெரிவித்துள்ளார். கணவன் மனைவிக்கு இடையிலான உறவு மிகவும் புனிதமானது என்றும், இந்த பந்தத்தைப் பேணுவதற்கு, கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் தேவைகளைப் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். மேலும், கணவன் - மனைவி இடையே அன்பும் நல்லிணக்கமும் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்றும் சாணக்கியர் கூறுகிறார்.






அறிவியல் ரீதியாக, இந்திய சமுதாயத்தில், கணவன் - மனைவியின் வயதில் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் இடைவெளி ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஆண் குழந்தைகளை விட பெண்ணின் வயது குறைவாக இருக்க வேண்டும் என்று சமூகமும் கூறுகிறது. அதுதான் இந்திய திருமண கட்டமைப்பில் உருவாக்கி வைத்துள்ளது. ஆனால், சில நேரங்களில் இந்த இடைவெளி 10 முதல் 15 ஆண்டுகள் வரை இருக்கும்.

Thursday, 3 April 2025

70 வயதை கடந்தாச்சா? இந்த 3 விட்டமின் உணவுகள் முக்கியம்


70 வயதை கடந்தாச்சா? இந்த 3 விட்டமின் டி உணவுகள் முக்கியம்:
70 வயதை கடந்தபின்பு அனைவரும் கட்டாயம் சாப்பிட வேண்டிய வைட்டமின் டி சத்துக்கள் நிறைந்த உணவுகள்
 

எலும்பு உறுதி 

70 வயதுக்கு மேல் எலும்புகள் பலவீனமாகும். அப்போது எலும்பு முறிவு, தேய்மானம், வலி போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று ஹீல் யுவர் ஹார்ட் யூடியூப் பக்கத்தில் டாக்டர் ராமசாமி கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.

70 வயதுக்கு மேல் உடலில் வைட்டமின் டி குறைபாடு இருக்கும். அப்படி இருக்கும்போது நாம் நீண்ட நேரம் வெயிலில் இருக்க வேண்டும். 

அதேபோல பால், முட்டை போன்றவற்றை தினசரி எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் ஆரஞ்சு பழம் சாப்பிட வேண்டும். விட்டமின் டி அதிகம் உள்ள உணவுகளை எடுத்து கொள்வது அவசியம்.

தினமும் ஒரு துண்டு சீஸ் சாப்பிடுவது உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கும். பாலாடைக்கட்டியில் கால்சியம் மட்டுமின்றி, வைட்டமின் டி நிறைந்துள்ளது.

கீரையில் புரதம், கால்சியம், வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் உங்கள் எலும்புகளை வலுவாக்கும். உங்கள் தினசரி கால்சியம் தேவையில் நான்கில் ஒரு பங்கை ஈடுகட்ட ஒரு நாளைக்கு ஒரு கப் கீரை சாப்பிட்டால் போதும்.