jaga flash news

Wednesday 15 May 2024

யாராவது இறந்து போல் கனவு கண்டீர்களா? பலிக்குமா? பலிக்காதா? சாஸ்திரம் சொல்வது என்ன?


யாராவது இறந்து போல் கனவு கண்டீர்களா? பலிக்குமா? பலிக்காதா? சாஸ்திரம் சொல்வது என்ன?

சென்னை: உங்கள் கனவில் உங்களுக்கு பிடித்தவர்கள் யாராவது இறப்பது போல் வந்தால் அந்த கனவு பலிக்குமா? என்பது குறித்து பார்ப்போம்.



கனவு என்பது மிகவும் முக்கியமானது. பலருக்கு இது நிஜ வாழ்க்கையுடன் தொடர்புடையதாக இருக்கும். கனவுகளில் நிறைய விஷயங்கள் வரும். சிலருக்கு கனவுகள் லாஜிக்கே இல்லாமல் வரும்.


Do you know what will happen if you dream that some one died
பகலில் கனவு வரும், இரவிலும் கனவு வரும். அதாவது நாம் தூங்கினாலே கனவு வரும். சும்மா உட்கார்ந்து கண்ணை மூடினாலும் கனவு உலகத்திற்கு சென்றுவிடுவோம். அங்கு பார்ப்பதை மறுநாள் ஞாபகப்படுத்தி சிலர் சொல்வர்.


சிலருக்கு ஞாபகமே வராது. கனவில் பார்த்த பொருட்களையோ சம்பவங்களையோ ஆட்களையோ நேரில் சந்தித்தால் மட்டும் அவர்களுக்கு நினைவுக்கு வரும். பகல் கனவு பலிக்காது என சொல்வதால், இரவில் வரும் கனவுகளுக்குத்தான் சிலர் ஏடாகூடமாக வந்தால் அச்சப்படுவர்.

சிலருக்கு அசரிரி போல் கனவில் வந்து நடப்பதை சொல்வதுண்டு. சிவன்மலை ஆண்டவர் கோயில் உத்தரவுப்பெட்டியில் வைக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பலன் உள்ளது. பக்தர்கள் கனவில் சிவன்மலை ஆண்டவர் வந்து சொல்வார். அவர் சொன்னதை மறுநாள் கோயிலில் வந்து பக்தர்கள் சொல்வார்கள். அதை சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைப்பர்.


இப்படி கனவுகள் பல விதம் உள்ளது. கனவில் நல்லதும் வரும் கெட்டதும் வரும். கனவில் சொர்க்கத்தில் வசிப்பது போல் இருக்கும். நாம் நீண்ட நாட்களாக ஏங்கிக் கொண்டிருந்த விஷயம் நமக்கு கனவில் கிடைப்பது போல் இருக்கும். அதே வேலை நமக்கு நெருக்கமானவர்களோ இல்லை பிடித்தமானவர்களோ இறப்பது போல் கனவில் வந்துவிட்டால், மறுநாள் துடித்துவிடுவார்கள்.

அந்த விஷயத்தை சொல்லவும் முடியாது, சொல்லாமல் மெல்லாவும் முடியாது. பொதுவாக யாராவது இறப்பது போல் கனவில் வந்தால் அது நிச்சயம் நடக்குமா? என்பதை பார்க்கலாம். உயிரோடு இருப்பவர்கள் இறந்து போவது போல் கனவு கண்டால் பயப்படவே தேவையில்லை. நமக்கு பிடித்தவர்கள் இறந்து போவது போல் கனவில் கண்டால் அந்த நபருடைய வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும் என்பது அர்த்தம்.


அவர்களுக்கு அனைத்து துன்பங்களும் நீங்கி மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை வாழ்வார்கள். கனவு காண்பவரே இறப்பது போல் கனவு கண்டால் அவர்கள் வாழ்வில் ஏதோ மாற்றம் ஏற்பட போகிறது என்று அர்த்தம். உங்கள் நண்பர்கள் இறப்பது போல் கனவில் வந்தால் நீங்கள் அவர்களை நேசிக்கிறீர்கள் என்று அர்த்தம். கணவன் அல்லது மனைவி இறப்பது போல் கனவு கண்டால் எதிர்பார்த்த குணங்களில் ஏதோ குறை உள்ளது என்று அர்த்தம்.


Tuesday 14 May 2024

குலதெய்வம் அறிவியல்






குலதெய்வம் அறிவியல் உண்மை  நம் முன்னோர்கள் அதாவது நம் தந்தை வழி பாட்டன் பாட்டிமார்கள் 🙏வணங்கி வந்த தெய்வம் தான் நம்குல தெய்வமாகும். இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்துகவனித்தால் உணரலாம். அதுதான்‘ கோத்திரம்’ என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை.  பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழி பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கை துணையாக கை பிடித்திருப்பார்கள். எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால், ரிஷி பரம்பரையானது சங்கிலி கண்ணி போல அறுடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம் இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.  இந்த உலகத்தில் ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன.அந்த கோயில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம் போகாமலும் இருக்கலாம். அதற்கு உத்தரவாதமில்லை. ஆனால், குலதெய்வ கோயிலுக்கு, நாம் பக்தி என்கிற ஒன்றை அறிவதற்கு முன்பே, நம் தாய் தந்தையரால் அங்கு கொண்டு செல்லப்பட்டு, முடி காணிக்கை என்ற முதல் மொட்டை மற்றும் காதுகுத்து என்று தொடர்ந்து வணங்க வைக்கவும் படுகிறோம். இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம்.  இந்த வரிசை தொடர்பை வேறு எங்காவது, எந்த விதத்திலாவது உருவாக்க முடியுமா?அது மட்டுமல்ல. ஒரு மனிதனின் பிறப்புக்கு பின்னே இப்படியொரு பரம்பரை வரிசை இருப்பதை நினைக்க கூட தெரியாமல், அதிகபட்சம் இரு பாட்டன் பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா நம் வாழ்க்கைப்போக்கு உள்ளது?  இந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாக புண்ணியத்தை கட்டியிருக்கலாம். இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே! நாம் அங்கே போய் நின்று நம் பொருட்டு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்களும் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள். இது எத்தனை தூரப்பார்வையோடு, வடிவமைக்கப்பட்டஒரு விஷயம்?”  குலதெய்வம்  குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும். மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும்

Monday 13 May 2024

ஊளி மீன்...


ஊளி மீன்களை உதாசீனப்படுத்தாதீங்க.. ரத்த கட்டி, பக்கவாதம் டேஞ்சரை தடுக்கும் ஊளி மீன்.. வியப்பூட்டுதே
இதய நண்பன் என்று ஊளி மீன்களை ஏன் சொல்கிறார்கள் தெரியுமா? அப்படி என்னதான் இந்த மீனில் உள்ளது?

மீன்களை பொறுத்தவரை, அனைத்து வகையான மீன்களுமே உடலுக்கு நன்மை தரக்கூடியதுதான்.. ஆனால், ஒருசில மீன்களே, நீரிழிவு நோயாளிகள் முதல் இதய நோயாளிகள் வரை பாதுகாப்பை அள்ளி தருகிறது..


மீன்தான் ஊளி.. ஒமேகா 3 அதிகமுள்ள மீன்களில் இதுவும் ஒன்று.. ஷீலா மீன் என்பார்கள்.. சிலர் இதனை மாவுலா மீன் என்றும் சொல்வார்கள்.. உடலில் உள்ள புண்களை ஆற்றக்கூடிய தன்மை இந்த மீனுக்கு உண்டு.


Praveen Gandhi Controversy | கைல நரம்பு ஓட விடுறதுல என்ன சமூக பொறுப்பு இருக்கு? | Pavel Navageethan
உடலில் கெட்ட கொழுப்புகளை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்கும் திறன் ஊளிக்கு இருப்பதால்தான், பலராலும் ஷீலா விரும்பப்படுகிறது.. மூளை சிறப்பாக செயல்பட உதவுகிறது இந்த ஊளி மீன்கள்.. இந்த மீனில் கொழுப்பு குறைவாக உள்ளதாலேயே, இதயத்துக்கு கவசமாக உள்ளது.. இருதய ஆரோக்கியத்தையும் பெருக்குகிறது. குறைவான கலோரிகளும், நிறைய புரோட்டீனும் கொண்டவை ஊளி மீன்கள்.

உடல் வீக்கம்: உடல் வீக்கத்தை குறைப்பதற்கு, ஊளி மீன்களை தாராளமாக பயன்படுத்தலாம்.. அத்துடன் ரத்தக்கட்டிகளை உருவாக்குவதையும் ஆரம்பத்திலேயே தடுத்துவிடுகின்றன இந்த ஊளி மீன்கள்..

மண்ணீரல் வீக்கம்.. இந்த அறிகுறி இருந்தால் கவனமாக இருக்கணும்.. தக்காளியை தொடாதீங்க, ஆப்பிளை விடாதீங்கமண்ணீரல் வீக்கம்.. இந்த அறிகுறி இருந்தால் கவனமாக இருக்கணும்.. தக்காளியை தொடாதீங்க, ஆப்பிளை விடாதீங்க
ஹை புரோட்டீன் உள்ள மீன் இந்த என்பதால், அதாவது, 3-அவுன்ஸ் சுமார் 22 கிராம் புரோட்டீனை கொண்டிருக்கிறதாம். இதயத்துக்கு வலு சேர்க்கக்கூடிய, இதயத்தை பாதுகாக்கக்கூடிய ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த உணவுதான் இந்த மீன்... எனவே, பக்கவாதம், மாரடைப்பு ஆபத்தும் இதனால் குறைக்கப்படுகின்றன.. பாக்டீரியா, வைரஸ் போன்ற உணவுகளினால் அலர்ஜி, தோல் அழற்சி நோய் போன்றவற்றுக்கும் ஊளி மீன்கள் மிகச்சிறந்த நன்மையை தருகிறதாம்.


சுறுசுறுப்பு: சர்க்கரை நோயாளிகள் தைரியமாக சாப்பிடக்கூடியது இந்த ஊளி மீனிகள்.. சர்க்கரையை தடுக்க உதவுவதுடன், உடல் களைப்பையும் நீக்கி சுறுசுறுப்பை தருகிறது.. ரத்த அழுத்தத்தை குறைக்கவும், ரத்தக் கட்டிகள் உருவாவதை தடுக்கவும் இந்த மீன்கள் உதவுகின்றன.. அத்துடன், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற அபாயத்தையும் தடுத்து நிறுத்துகிறது.

நுரையீரல் தொந்தரவை ஊளிகள் தீர்க்கின்றன.. அவ்வளவு ஏன்? ஆஸ்துமாவையும் சரிசெய்கிறது. ஆண்களின் உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் ஊளி மீன்களுக்கு பெரும்பங்கு உண்டு என்பதையும் குறிப்பிட வேண்டியிருக்கிறது. உடல் எடையை குறைப்பதில் ஊளிக்கு பெரும்பங்கு உண்டு..

கண்ணை மூடிட்டு வெந்தயக்கீரை வாங்கிடுங்க.. சர்க்கரை நோயாளியின் பெஸ்ட் கீரை.. அத்தனையும் ஆச்சரிய நன்மைகண்ணை மூடிட்டு வெந்தயக்கீரை வாங்கிடுங்க.. சர்க்கரை நோயாளியின் பெஸ்ட் கீரை.. அத்தனையும் ஆச்சரிய நன்மை
பதட்டம்: அதேபோல, ஊளியிலுள்ள கால்சியம் சத்துக்கள், நம்முடைய எலும்புகளுக்கும், பற்களுக்கும் உறுதியை தருகின்றன.. ஊளியை சாப்பிட்டு வருபவர்களுக்கு மனச்சோர்வு, பதட்டம் நெருங்குவதில்லை.. பிற மனநல கோளாறுகளின் அபாயத்தையும் இந்த மீன் குறைப்பாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சருமத்துக்கும், தலைமுடி வளர்ச்சிக்கும் ஊளி மீன்கள் நன்மை தருகின்றன.. காரணம், இதிலிருக்கும் வைட்டமின் B 12- நரம்பு செயல்பாட்டை ஊக்குவிக்கிறது..


கண்களை நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது. மீன் வகைகளிலே இந்த மீனில்தான் கொழுப்பு சத்து குறைவாக இருக்கிறது.. குடல் புண்கள் சரிசெய்யக்கூடியது.. பெண்கள் மாதவிடாய் காலத்தில் ஊளி மீன்களை சாப்பிடுவது மிகவும் நன்மை தரக்கூடியது.. அதுமட்டுமல்ல, கண்களில் எந்த பிரச்சனையாக இருந்தாலும், இந்த ஊளியை சாப்பிட்டுவந்தால், அதுவும் சீராகும். அதனால்தான், குழந்தைகளுக்கு இந்த மீனை அடிக்கடி செய்துதர சொல்வார்கள்.

உடல் எடை: உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள், இந்த மீனில் நிறைய மசாலாவை சேர்க்காமல், வெறும் உப்பு, மிளகு, ஆலிவ் எண்ணெயுடன் சேர்த்து வேகவைத்து சாப்பிட்டாலே பெரும்பலன் கிடைக்கும். குறைவான மசாலா பொருட்களை மேரனேட் செய்து, கிரில் செய்து சாப்பிடும்போது, எடை குறைப்பில் பலனை தருகிறது.. அல்லது இந்த ஊளி மீன்களை நெருப்பில் சுட்டும் சாப்பிடலாம்.. அல்லது சாலட் செய்தும் சாப்பிடலாம்.

குப்பை முதல் உணவு வரை.. வீட்டில் இந்த தவறுகளை செய்தால்.. தீராத பண கஷ்டம் வருமாம்.. வாஸ்து சொல்லும் விஷயங்கள் என்ன?


குப்பை முதல் உணவு வரை.. வீட்டில் இந்த தவறுகளை செய்தால்.. தீராத பண கஷ்டம் வருமாம்.. வாஸ்து சொல்லும் விஷயங்கள் என்ன?

வாஸ்து சாஸ்திரத்தின்படி வீடுகளில் இந்தெந்த தவறுகள் செய்தால் பண கஷ்டம் கடுமையாக இருக்கும் என்பதை வாஸ்து சாஸ்திர வல்லுநர்கள் கணித்து கூறியுள்ளனர். அதன்படி வீட்டில் என்னென்ன செய்யவேண்டும்? எதெல்லாம் செய்யக்கூடாது என்பதை இந்த பதிவில் முழுமையாக பார்ப்போம்.

vastu tips
1/6
வீட்டில் வாஸ்து சாஸ்திரம் பார்ப்பது மிகவும் முக்கியம். வீட்டுக்குள் என்னென்ன பொருட்கள் இருக்கவேண்டும் என்பது வரை வாஸ்து சாஸ்திரம் பார்த்தே செய்யவேண்டும், இல்லையென்றால் அதனால் வரும் பிரச்சனைகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதன்படி வீட்டில் வாஸ்து சாஸ்திரத்தில் செய்யும் சின்ன சின்ன தவறுகள் பண சிக்கல்களுக்கும் வழிவகுக்கும். அந்தவகையில் வீட்டில், வாஸ்து சாஸ்திரத்தின்படி செய்யக்கூட சில தவறுகள் எவை எவை என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

vastu tips
2/6
காலி வாளிகள்: வீட்டின் குளியல் அறையில் காலி வாளிகள் இருக்கக்கூடாது. அவ்வாறு இருந்தால் அது வீட்டில் உள்ளவர்களிடையே எதிர்மறையான எண்ணங்களை ஏற்படுத்தி பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்படுத்தும். இதனால் காலி வாளிகளாக வைக்காமல் அதனை தண்ணீர் நீரைப்பியோ அல்லது கவிழ்த்தி வைப்பது நல்லது.
vastu tips
3/6
வீடு சுத்தம்: வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்வதில் மிகவும் கவனம் வேண்டும். கரணம், ஹிந்தி மத நம்பிக்கையின்படி தூய்மையான இடங்களில் லட்சுமி தேவி இருக்கிறார் என்பது நம்பிக்கை. லட்சுமி தேவி இருக்கும் இடத்தில் பண கஷ்டம் இருக்கவே இருக்காது. இதனால் வீட்டை எப்போதும் தூய்மையாக வைத்துக்கொள்வது நல்லது.

vastu tips
4/6
உணவு பழக்கம்: படுக்கையறையில் படுத்துக்கொண்டே ஹாய்யாக உணவு சாப்பிடும் பழக்கம் பலருக்கும் இருக்கும். ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின்படி பெட்டில் படுத்துக்கொண்டு உணவு சாப்பிடுவது வீட்டில் இருக்கும் லட்சுமி தேவியை கோவப்படுத்தும் என்பது நம்பிக்கை. இதனால் வீட்டில் பண கஷ்டம் மிகவும் கடுமையாக இருக்கும்.
vastu tips
5/6
குப்பை தொட்டி: குப்பை தொட்டிகளை எங்கே வைப்பது என்பது மிகவும் முக்கியம், பலரும் எங்கே வைப்பது என்பதை பற்றி ஐடியா இல்லாமல் கிடைத்த இடத்தில் வைத்துவிடுவார்கள். ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் படி குப்பை தொட்டிகளை வீட்டுக்கு வெளியிலே அல்லது விட்டு வாசலிலே வைக்கக்கூடாது. அப்படி செய்தல் அது வீட்டில் பண கஷ்டத்தை அதிகப்படுத்தும்.
vastu tips
6/6
பாத்திரம் கழுவுதல்: இரவில் சாப்பிட்டபின், பாத்திரங்களை அப்படி வைத்துவிட்டு மறுநாள் காலையில் பாத்திரம் கழுவுவது பலரின் பழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் வாஸ்து சாஸ்திரம் சொல்வது என்னவென்றால் இரவு சாப்பிட்டபின், கையேடு பாத்திரங்களை கழுவு வைப்பது நல்லது. அவ்வாறு செய்யவில்லை என்றால் பண கஷ்டம் உங்களை பாடாய்படுத்தும்.
 

Sunday 12 May 2024

பழங்களைப் பார்த்து வாங்குவது எப்படி?




அன்னாசி


நல்ல அன்னாசிப்பழம், எல்லா இடங்களிலும் சமமாகப் பழுத்திருக்காது. பழத்தின் அடிப்பகுதியை அழுத்திப் பார்த்தால், கடினமாக இருக்க வேண்டும். மிருதுவாக இருந்தால், கெட்டுப்போன பழமாகவோ, அதிகமாகப் பழுத்த பழமாகவோ இருக்க வாய்ப்புள்ளது.

 
தர்பூசணி


கர்நாடகா, மகாராஷ்ட்ரா, ஆந்திர மாநிலங்களில் விளையும் மஞ்சள் தர்பூசணி தமிழகத்தில் விற்பனையாகின்றன. இவற்றைவிட இளம் பச்சை நிறம்கொண்ட, `வரி தர்பூசணி’ உடலுக்கு நல்லது. இவை சென்னை, கல்பாக்கம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் விளைகின்றன.   மரபணு மாற்றப்பட்ட, `ஊதா நிற தர்பூசணி’ இந்த ஆண்டு விரைவில் தமிழகக் கடைகளுக்கு வர உள்ளது.
தர்பூசணியைத் தட்டிப் பார்த்து வாங்கவேண்டும். தட்டும்போது 'தங்', 'தங்' எனத் தண்ணீர் சத்தம் வர வேண்டும். 'டப்','டப்' எனச் சத்தம் வந்தால், பழம் அதிகமாகப் பழுத்துவிட்டது என்று அர்த்தம். இதனை வாங்கக் கூடாது.

மாம்பழம்


இன்று, `மல்கோவா’, `பங்கனப்பள்ளி’ ரக மாம்பழங்கள், கார்பனேட் கல் போட்டு குறுகியகாலத்தில் செயற்கையாகப் பழுக்கவைக்கப்படுகிறன. நல்ல பழங்கள் எவை என சில அறிகுறிகளைவைத்துக் கண்டுபிடித்துவிடலாம். இயற்கையாகப் பழுத்த மாம்பழங்களில் கறுப்புப் புள்ளிகள் இருக்கும். பழத்தின் அனைத்துப் பகுதிகளும் சமமாகப் பழுத்திருக்காது. சில இடங்கள் கடினமாக, பழுக்காமல் இருக்கும். பழத்தின் மேல் பால் கறை இருக்காது. பார்க்க, பளபளப்பாக இருக்காது. இனிப்புச் சுவையுடன் இருக்கும். புளிப்பு சுவை இருக்காது.

வாழை


மரபணு மாற்றப்பட்ட வாழை புத்தம் புதிதாக, கருப்புப் புள்ளிகள் இல்லாமல் பளபளவென இருக்கும். பழத்தோல் அடர்த்தியாக இருக்கும். சுவை குறைவாக இருக்கும். இதனைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், பலவிதமான உடல் உபாதைகள், பாதிப்புகள் ஏற்படலாம். இதனைக் கட்டாயம் தவிர்க்கவேண்டும். நாட்டுப்பழங்களில் பூச்சிகடித்ததன் அடையாளமாக, கறுப்புப் புள்ளிகள் இருக்கும். பழத்தோல் மெல்லியதாக இருக்கும். சதைப்பகுதி அதிகமாக இருக்கும். சுவையும் அதிகமாக இருக்கும். இவை தினமும் சாப்பிட ஏற்றவை

பப்பாளி


நாட்டுப் பப்பாளியே உடலுக்கு ஏற்றது. நாட்டுப் பப்பாளி கறுப்புப் புள்ளிகள் கொண்டது. மரபணு மாற்றப்பட்ட பப்பாளியில் கறுப்புப் புள்ளிகள் இருக்காது. கடைக்காரர்கள், நாட்டுப் பப்பாளியை `நீட்டுப் பப்பாளி' என்று அழைப்பார்கள். இதன் சதைப் பகுதி சிவப்பாக இருக்கும்; விதை இருக்கும்; சுவை அதிகமாக இருக்கும். கனியாத, பச்சையாக உள்ள பப்பாளியை வாங்கக் கூடாது.
மரபணு மாற்றப்பட்ட பப்பாளியில் விதைகள் இருக்காது; உட்பகுதி மஞ்சளாக இருக்கும்; சுவை குறைவாக இருக்கும்.
வீட்டில் பப்பாளியை இரண்டு நாட்களுக்கு மேல் வைத்திருந்தால், ஃபங்கஸ் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதனைத் தவிர்க்க பழத்தைக் காகிதத்தில் சுற்றிவைக்கலாம். 
  
ஆரஞ்சு, சாத்துக்குடி


இவற்றில் இரண்டு வகைகள் உள்ளன. அடர்ந்த மஞ்சள் நிறம்கொண்ட, சிறிதாக இருக்கும் கமலா ஆரஞ்சு; இள மஞ்சள் நிறம்கொண்ட, அளவில் பெரிதாக இருக்கும் சாத்துக்குடி. `கமலா ஆரஞ்சு’ என்று அழைக்கப்படும் நாட்டு ஆரஞ்சு, கொடைக்கானல், பெங்களூரு, நாக்பூர் ஆகிய இடங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. பழுக்காத, பச்சை நிறமுள்ள சாத்துக்குடி சாப்பிட ஏற்றதல்ல. இதை வாங்கக் கூடாது. பழத்தின் மேல் பகுதியை அழுத்திப் பார்க்க வேண்டும். பழத்தின் மேல் மற்றும் அடிப்பகுதி கெட்டியாக இருக்கவேண்டும். மிருதுவாக இருந்தால் அதிகம் பழுத்தது என்று அர்த்தம். இது சீக்கிரம் கெட வாய்ப்புள்ளது. இதனை வாங்கக் கூடாது. பெரிய பழத்தை வாங்கக் கூடாது. இதன் உள்ளே சதை அதிகமாகப் பழுத்திருக்கும். சீக்கிரம் கெட்டுவிடும்.

திராட்சை


சமீபகாலமாக விதையில்லாத மரபணு மாற்றப்பட்ட சிறிய பச்சை திராட்சைகள் பிரபலமைடையத் தொடங்கிவிட்டன. விதையில்லாத பச்சை திராட்சைகளைவிட, விதையுள்ள பெரிய நாட்டு திராட்சை சுவைமிகுந்தது; உடலுக்கு நன்மை தருவது.
திராட்சை வாங்கும்போது அதன் காம்பு பச்சையாக இருக்கிறதா என்று பார்க்கவும். அப்படி இருந்தால், அது நல்ல திராட்சை. காம்பு கறுப்பாக இருந்தால், அதிகம் பழுத்த திராட்சை. திராட்சையை எலுமிச்சைச் சாறு கலந்த தண்ணீர், அல்லது உப்புத் தண்ணீரில் ஊறவைத்துச் சாப்பிடுவது நல்லது. இதனால் கை மூலமாகப் பரவும் கிருமித்தொற்றுகள் நீங்கும்

மாதுளை


கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் விளையும் மாதுளைகள் அதிகத் தரமானவை. சுவைமிக்கவை. அதிக சிவப்பாக இருக்கும் மாதுளைகள் ஆஃப்கானிஸ்தான், காபூலில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவை.இவற்றை வாங்கும்போது கவனம் தேவை.
மாதுளையின் மேல் தோலை நசுக்கிக் பார்க்கவும். தோல் கடினமாக இருந்தால், நல்ல மாதுளை. மிருதுவாக இருந்தால், அதிகம் பழுத்த அல்லது கெட்டுப்போன மாதுளை. கெட்டுப்போன பூச்சி உள்ள மாதுளையில் கருப்புப் புள்ளிகள், துளைகள் இருக்கும்.  

ஆப்பிள்


நம் நாட்டு சிம்லா ஆப்பிள் இளஞ்சிவப்பாக அதிகச் சதையோடு இருக்கும். இதைச் சாதாரணமாக நீரில் கழுவிச் சாப்பிடலாம். ஆனால், ஃபிரான்ஸில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, இங்கே கிடைக்கும் ஆப்பிள், அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும். மேலே ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். இந்த ஆப்பிள்கள், மூன்று மாதங்கள் வரைக்கும் கெடாமல் இருக்க, இவற்றின் தோல் மேல் மெழுகைத் தடவிவிடுகிறார்கள். எனவே, இந்த ஆப்பிள்களை வாங்கினால், தோலை கட்டாயமாக அகற்றிவிட்டுத்தான் சாப்பிட வேண்டும்.   
எந்த ஆப்பிளாக இருந்தாலும் காம்பைக் கிள்ளிப் பார்க்க வேண்டும். உள்ளே லேசான பச்சை நிறம் தெரிந்தால், அது நல்ல ஆப்பிள். இதை வாங்கலாம். சிவப்பாக இருந்தால், அதிமாகப் பழுத்தது; சீக்கிரம் அழுகிவிடும். வாங்கக் கூடாது.

Saturday 11 May 2024

அழுவது உடல் நலத்திற்கு நல்லது.. ஏனென்று தெரியுமா?

அழுவது உடல் நலத்திற்கு நல்லது.. ஏனென்று தெரியுமா?
அழுவது ஆரோக்கியமானது. யாரவது அழுதுகொண்டிருக்கும்போது, அவர்களை நாம் சமாதானப்படுத்த முயற்சி செய்கிறோம். பொதுவாக நாம் மிகவும் சோகமாகவோ, மனச்சோர்வாகவோ அல்லது பயமாகவோ இருக்கும்போது அழுவோம். சோகமாக இருக்கும்போது கண்ணீர் வருவது இயற்கையானது. சில சமயங்களில் ஒருவர் மகிழ்ச்சியாக இருக்கும்போது கண்ணீர் வரும். இவை ஆனந்த கண்ணீர் என்று அழைக்கப்படுவதை நீங்கள் அறிவீர்கள். மனதில் உள்ள உணர்ச்சிகளை வெல்ல முடியாத போது, ​​அது கண்ணீராக வெளிப்படுகிறது. அழுகை எதிர்மறையான செயல்.. ஆனால் அது உடலுக்கும் மனதிற்கும் நல்லது என்று சொன்னால் நம்புவீர்களா?

அழுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், அழுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. உடல் உணர்ச்சிகளுக்கு பதிலளிக்கும் போது, கண்ணீர் சுரப்பியில் இருந்து கண்கள் வழியாக வெளியேறும் நீரை கண்ணீர் என்று அழைக்கிறோம். கண்ணீர் பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ள்லாம் வாங்க...

மன அழுத்தத்தை குறைக்கிறது மனம் அழுத்தம் மற்றும் பதட்டம் இடையே குழப்பமான நிலையில் உள்ளது, இது நம்மை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் இயல்பு நிலைக்கு கொண்டு வருகிறது. கண்ணீரால் மனம் அழுத்தத்திலிருந்து விடுபடுவதாக அறிவியல் ஆய்வுகள் காட்டுகின்றன

உடலை நச்சு நீக்குகிறது சில ஆராய்ச்சிகளின் படி, சில நச்சு பொருட்கள் கண்ணீரில் வெளியிடப்படுகின்றன. இது உடலில் மன அழுத்த ஹார்மோன்களின் உற்பத்தியைக் குறைக்கிறது. இது உடலில் இருந்து நச்சுகளை நீக்குகிறது
இயற்கையான முறையில் சுத்தப்படுத்துதல்  உணர்ச்சிக் கண்ணீரில் லைசோசைம் என்ற நொதி உள்ளது. இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இயற்கையான சுத்தப்படுத்தியாக செயல்படுகிறது.

உலர் கண் சிகிச்சை அழுவதன் மற்றொரு ஆரோக்கிய நன்மை என்னவென்றால், அது கண்ணை ஈரப்பதமாக்குகிறது. அழுவதால் கண்கள் வறட்சி, சிவத்தல் மற்றும் அரிப்பு போன்றவற்றைத் தடுக்கலாம். கண்கள் நமது விலைமதிப்பற்ற பொக்கிஷம் அதனால் சில நேரங்களில் அழுவதை புறக்கணிக்காதீர்கள். மனநிலை முன்னேற்றம் அழுகை மூளையில் எண்டோர்பின்கள் அல்லது உணர்வு-நல்ல ஹார்மோன்களை வெளியிடுகிறது. இது மனதை லேசாக்கி மனநிலையை மேம்படுத்துகிறது. மனச்சோர்வில் இருந்து விடுதலை அழுவதன் மற்றொரு ஆரோக்கிய நன்மை என்னவென்றால், அது மனச்சோர்வை நீக்குகிறது. அழுவது எதிர்மறை உணர்ச்சிகளை நீக்குகிறது என்று மருத்துவர்கள் நம்புகிறார்கள். 1. உடலில் உள்ள நச்சுகளை நீக்குகிறது

கண்ணீரில் மூன்று வகைகள் உள்ளன.. பிரதிபலிப்பு கண்ணீர், நிலையான கண்ணீர், உணர்ச்சிக் கண்ணீர்... ரிஃப்ளெக்ஸ் என்பது உங்கள் கண்களில் இருந்து புகை மற்றும் தூசி போன்ற தெளிவான குப்பைகள். நிலையான கண்ணீர் உங்கள் கண்களை உயவூட்டுகிறது மற்றும் தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. உணர்ச்சிக் கண்ணீருக்கு பல ஆரோக்கிய நன்மைகள் இருக்கலாம். தொடர்ந்து வரும் கண்ணீரில் 98 சதவீதம் நீர் இருக்கும் போது, உணர்ச்சிக் கண்ணீரில் மன அழுத்த ஹார்மோன்கள் மற்றும் பிற நச்சுகள் உள்ளன. 2. மன அமைத்திக்கு வழிவகுக்கும் அழுகை என்பது உங்கள் சுய அமைதிக்கான சிறந்த வழிகளில் ஒன்றாகும். அழுவது பாராசிம்பேடிக் நரம்பு மண்டலத்தை (பிஎன்எஸ்) செயல்படுத்துகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். PNS உங்கள் உடலை ஓய்வெடுக்கவும், ஜீரணிக்கவும் உதவுகிறது.

3. மனதில் உள்ள வலி குறையும் அழுவது என்பது நாள்பட்ட கண்ணீரை வெளியிடும் ஆக்ஸிடாஸின் மற்றும் எண்டோஜெனஸ் ஓபியாய்டுகளுக்கு நம்பகமான ஆதாரமாகும், இந்த உணர்வு-உடல் மற்றும் உணர்ச்சி வலியைக் குறைக்க உதவுகின்றன. எண்டோர்பின்கள் வெளியிப்பட்டவுடன், உங்கள் உடல் சற்றே உணர்ச்சியற்ற நிலைக்குச் செல்லலாம். ஆக்ஸிடாஸின் உங்களுக்கு அமைதியான அல்லது நல்வாழ்வின் உணர்வைத் தருகிறது. மற்றொரு உதாரணம், அழுகை தன்னைத் தானே அமைதிப்படுத்தும் செயல். 4. மனநிலையை மேம்படுத்துகிறது வலியைப் போக்க உதவுவதோடு மட்டுமல்லாமல், அழுவது, குறிப்பாக நீங்கள் சோகமாக இருக்கும்போது, நம்பகமான மூலத்திலிருந்து உங்கள் உற்சாகத்தை அதிகரிக்கும். நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது, குளிர்ந்த காற்றை மிக விரைவாக எடுத்துக்கொள்கிறீர்கள். குளிர்ந்த காற்றை சுவாசிப்பது உங்கள் மூளையின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தவும் குறைக்கவும் உதவுகிறது. சூடான மூளையை விட குளிர்ச்சியான மூளை உங்கள் உடலுக்கும் மனதுக்கும் மிகவும் இனிமையானது. இதன் விளைவாக, ஒரு சோகமான சூழ்நிலைக்குப் பிறகு உங்கள் மனநிலை மேம்படும்.

  undefined Fashion ஃபேஷன் Beauty அழகு Health ஆரோக்கியம் Spirituality ஆன்மீகம் Pregnancy தாய்மை-குழந்தை நலன் Insync உலக நடப்புகள் Relationship உறவுகள் Home & Garden வீடு-தோட்டம் Recipe சமையல் குறிப்புகள் முகப்பு » Insync அழுவது உடல் நலத்திற்கு நல்லது.. ஏனென்று தெரியுமா? By Vaijayanthi S Published: Saturday, May 11, 2024, 18:30 [IST] அழுவது ஆரோக்கியமானது. யாரவது அழுதுகொண்டிருக்கும்போது, அவர்களை நாம் சமாதானப்படுத்த முயற்சி செய்கிறோம். பொதுவாக நாம் மிகவும் சோகமாகவோ, மனச்சோர்வாகவோ அல்லது பயமாகவோ இருக்கும்போது அழுவோம். சோகமாக இருக்கும்போது கண்ணீர் வருவது இயற்கையானது. சில சமயங்களில் ஒருவர் மகிழ்ச்சியாக இருக்கும்போது கண்ணீர் வரும். இவை ஆனந்த கண்ணீர் என்று அழைக்கப்படுவதை நீங்கள் அறிவீர்கள். மனதில் உள்ள உணர்ச்சிகளை வெல்ல முடியாத போது, ​​அது கண்ணீராக வெளிப்படுகிறது. அழுகை எதிர்மறையான செயல்.. ஆனால் அது உடலுக்கும் மனதிற்கும் நல்லது என்று சொன்னால் நம்புவீர்களா? அழுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், அழுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. உடல் உணர்ச்சிகளுக்கு பதிலளிக்கும் போது, ​​​​கண்ணீர் சுரப்பியில் இருந்து கண்கள் வழியாக வெளியேறும் நீரை கண்ணீர் என்று அழைக்கிறோம். கண்ணீர் பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ள்லாம் வாங்க... இந்தியாவில் எத்தனை சென்டிமீட்டர் உயரம் இருந்தால் அது நார்மல் தெரியுமா? நீங்க எத்தனை சென்டிமீட்டர் இருக்கீங்க? கண்ணீரின் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பதைக் கண்டுபிடிப்போம். மன அழுத்தத்தை குறைக்கிறது மனம் அழுத்தம் மற்றும் பதட்டம் இடையே குழப்பமான நிலையில் உள்ளது, இது நம்மை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் இயல்பு நிலைக்கு கொண்டு வருகிறது. கண்ணீரால் மனம் அழுத்தத்திலிருந்து விடுபடுவதாக அறிவியல் ஆய்வுகள் காட்டுகின்றன. ஆண்களே! 30 வயசாகிருச்சா? உடலில் இந்த மாற்றங்கள் இருந்தா நீங்க ஆபத்தில் இருக்கீங்கனு அர்த்தமாம். ஜாக்கிரதை. உடலை நச்சு நீக்குகிறது சில ஆராய்ச்சிகளின் படி, சில நச்சு பொருட்கள் கண்ணீரில் வெளியிடப்படுகின்றன. இது உடலில் மன அழுத்த ஹார்மோன்களின் உற்பத்தியைக் குறைக்கிறது. இது உடலில் இருந்து நச்சுகளை நீக்குகிறது. இயற்கையான முறையில் சுத்தப்படுத்துதல் உங்களுக்கு 'கக்கா' கருப்பா வருதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. இல்ல உயிருக்கே ஆபத்தாயிடும்.. உணர்ச்சிக் கண்ணீரில் லைசோசைம் என்ற நொதி உள்ளது. இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இயற்கையான சுத்தப்படுத்தியாக செயல்படுகிறது. உலர் கண் சிகிச்சை அழுவதன் மற்றொரு ஆரோக்கிய நன்மை என்னவென்றால், அது கண்ணை ஈரப்பதமாக்குகிறது. அழுவதால் கண்கள் வறட்சி, சிவத்தல் மற்றும் அரிப்பு போன்றவற்றைத் தடுக்கலாம். கண்கள் நமது விலைமதிப்பற்ற பொக்கிஷம் அதனால் சில நேரங்களில் அழுவதை புறக்கணிக்காதீர்கள். மனநிலை முன்னேற்றம் அழுகை மூளையில் எண்டோர்பின்கள் அல்லது உணர்வு-நல்ல ஹார்மோன்களை வெளியிடுகிறது. இது மனதை லேசாக்கி மனநிலையை மேம்படுத்துகிறது. மனச்சோர்வில் இருந்து விடுதலை அழுவதன் மற்றொரு ஆரோக்கிய நன்மை என்னவென்றால், அது மனச்சோர்வை நீக்குகிறது. அழுவது எதிர்மறை உணர்ச்சிகளை நீக்குகிறது என்று மருத்துவர்கள் நம்புகிறார்கள். 1. உடலில் உள்ள நச்சுகளை நீக்குகிறது கண்ணீரில் மூன்று வகைகள் உள்ளன.. பிரதிபலிப்பு கண்ணீர், நிலையான கண்ணீர், உணர்ச்சிக் கண்ணீர்... ரிஃப்ளெக்ஸ் என்பது உங்கள் கண்களில் இருந்து புகை மற்றும் தூசி போன்ற தெளிவான குப்பைகள். நிலையான கண்ணீர் உங்கள் கண்களை உயவூட்டுகிறது மற்றும் தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. உணர்ச்சிக் கண்ணீருக்கு பல ஆரோக்கிய நன்மைகள் இருக்கலாம். தொடர்ந்து வரும் கண்ணீரில் 98 சதவீதம் நீர் இருக்கும் போது, ​​உணர்ச்சிக் கண்ணீரில் மன அழுத்த ஹார்மோன்கள் மற்றும் பிற நச்சுகள் உள்ளன. 2. மன அமைத்திக்கு வழிவகுக்கும் அழுகை என்பது உங்கள் சுய அமைதிக்கான சிறந்த வழிகளில் ஒன்றாகும். அழுவது பாராசிம்பேடிக் நரம்பு மண்டலத்தை (பிஎன்எஸ்) செயல்படுத்துகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். PNS உங்கள் உடலை ஓய்வெடுக்கவும், ஜீரணிக்கவும் உதவுகிறது. 3. மனதில் உள்ள வலி குறையும் அழுவது என்பது நாள்பட்ட கண்ணீரை வெளியிடும் ஆக்ஸிடாஸின் மற்றும் எண்டோஜெனஸ் ஓபியாய்டுகளுக்கு நம்பகமான ஆதாரமாகும், இந்த உணர்வு-உடல் மற்றும் உணர்ச்சி வலியைக் குறைக்க உதவுகின்றன. எண்டோர்பின்கள் வெளியிப்பட்டவுடன், உங்கள் உடல் சற்றே உணர்ச்சியற்ற நிலைக்குச் செல்லலாம். ஆக்ஸிடாஸின் உங்களுக்கு அமைதியான அல்லது நல்வாழ்வின் உணர்வைத் தருகிறது. மற்றொரு உதாரணம், அழுகை தன்னைத் தானே அமைதிப்படுத்தும் செயல். 4. மனநிலையை மேம்படுத்துகிறது வலியைப் போக்க உதவுவதோடு மட்டுமல்லாமல், அழுவது, குறிப்பாக நீங்கள் சோகமாக இருக்கும்போது, ​​நம்பகமான மூலத்திலிருந்து உங்கள் உற்சாகத்தை அதிகரிக்கும். நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது, ​​குளிர்ந்த காற்றை மிக விரைவாக எடுத்துக்கொள்கிறீர்கள். குளிர்ந்த காற்றை சுவாசிப்பது உங்கள் மூளையின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தவும் குறைக்கவும் உதவுகிறது. சூடான மூளையை விட குளிர்ச்சியான மூளை உங்கள் உடலுக்கும் மனதுக்கும் மிகவும் இனிமையானது. இதன் விளைவாக, ஒரு சோகமான சூழ்நிலைக்குப் பிறகு உங்கள் மனநிலை மேம்படும். 5. மற்றவர்களின் அரவணைப்பு தெரியாதவர்கள் அழுதால் கூட அருகில் சென்று ஏன் அழுகிறீர்கள் என்று கேட்கும் மனநிலைதான் மனிதனுடைய இயல்பு. அப்படி இருக்க தனக்கு நெருக்கமானவர்கள் அழுதால் பதறி அவர்களுக்கு ஆறுதல் அளித்து அரவணைப்போம். அந்த அரவணைப்பும் அவர்களுக்கு மிகப்பெரும் மன அமைதிதான். அதுவும் மற்றவர்களின் ஆறுதலை எதிர்பார்ப்பதால் வரும் இயல்பான கண்ணீரே. 6. உணர்ச்சி நிலையை மீட்டெடுக்கிறது அழுகை என்பது சோகத்திற்கு பதில் மட்டும் நிகழ்வதில்லை. சில நேரங்களில் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாகவோ, பயமாகவோ அல்லது அழுத்தமாகவோ இருக்கும்போது அழுகிறீர்கள். யேல் பல்கலைக்கழகத்தின் நம்பகமான ஆதார ஆராய்ச்சியாளர்கள் இந்த வழியில் அழுவது உணர்ச்சி சமநிலையை மீட்டெடுக்க உதவுகிறது என்று நம்புகிறார்கள். நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக அல்லது எதைப் பற்றி பயந்து அழுகிறீர்கள் என்றால், அது உங்கள் உடலின் ஒரு வலுவான உணர்ச்சியிலிருந்து மீள்வதற்கான வழியாகும். 7. குழந்தை சுவாசிக்க உதவுகிறது வயிற்றில் இருக்கும் குழந்தையின் முதல் அழுகை மிக முக்கியமான அழுகை. குழந்தைகள் தொப்புள் கொடி வழியாக கருப்பைக்குள் ஆக்ஸிஜனைப் பெறுகிறார்கள். ஒரு குழந்தை பிறந்த பிறகு, அவர்கள் சொந்தமாக சுவாசிக்க ஆரம்பிக்க வேண்டும். முதல் அழுகை குழந்தையின் நுரையீரல் வெளி உலக வாழ்க்கைக்கு ஏற்ப உதவுவதாகும். அழுகை குழந்தைகளுக்கு நுரையீரல், மூக்கு மற்றும் வாயில் உள்ள அதிகப்படியான திரவத்தை வெளியேற்ற உதவுகிறது. 8. நல்ல தூக்கம் வரும் அழுது கொண்டே தூங்கி விடும் குழந்தைகளைப் பார்த்திருப்போம். குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களுக்கும் அழுதால் தூக்கம் வரும். மனம் விட்டு அழுதாலோ, கதறி அழுதாலோ நிச்சயம் உங்களுக்குக் கண்ணீர் வரும். தொடர்ந்து அழுது கொண்டே இருந்தாலும் கண் எரிச்சல் ஏற்பட்டு தூக்கத்தை நாடுவீர்கள். 9. கிருமிகளைக் கொல்லும் அழும்போது கண்களில் ஐசோஸைமி (lysozyme) என்கிற அமிலம் சுரக்கிறது. அது கண்களில் உள்ள கிருமிகள் மற்றும் அழுக்குகளை நீக்கி சுத்தம் செய்கிறது. இதனால் நீண்ட அழுகைக்குப் பின் கண் பார்வையும் தெளிவடைவதாகவும், வறண்ட கண்களில் ஈரப்பதத்தைத் தக்க வைப்பதாகவும் தேசிய கண் மையம் விவரித்துள்ளது. 10. அழுவது உடலுக்கு நல்லது சோப்பு எப்படி உங்கள் உடலை சுத்தப்படுத்துகிறதோ, அதுபோல உங்கள் கண்களை சுத்தப்படுத்த அழுவது நல்லது. சிரிப்பு என்பது நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கான நல்ல மருந்து என்று அடிக்கடி கூறப்படுகிறது. அழுகையும் அதன் சொந்த வழியில் சிறப்பு என்பதை இப்போது நீங்கள் அறிவீர்கள்.


இந்தியாவில் எத்தனை சென்டிமீட்டர் உயரம் இருந்தால் அது நார்மல் தெரியுமா?

உடல்நலம் இந்தியாவில் எத்தனை சென்டிமீட்டர் உயரம் இருந்தால் அது நார்மல் தெரியுமா? நீங்க எத்தனை சென்டிமீட்டர் இருக்கீங்க? 
உயரமான நபர்களை பொதுவாக அனைவரும் விரும்புவார்கள். ஆனால் மக்களின் சராசரி உயரம் எவ்வளவு என்பதைப் பற்றி எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? சராசரி உயரத்தை அறிந்துகொள்வது, உங்கள் உயரத்தைப் பொருட்படுத்தாமல், உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் நீங்கள் எந்த அளவீடுகளின் கீழ் வருகிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள உதவும். சராசரி உயரத்தின் உலகளாவிய மாறுபாடுகள் மற்றும் சராசரி உயரம் என்ன என்பதைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். சராசரி உயரமாக கருதப்படுவது என்ன? வயது வந்தவரின் சராசரி உயரம் பாலினம், மரபியல், ஊட்டச்சத்து மற்றும் புவியியல் இருப்பிடம் போன்ற காரணிகளைப் பொறுத்து மாறுபடும். அழுவது உடல் நலத்திற்கு நல்லது.. ஏனென்று தெரியுமா? சமீபத்திய ஆய்வின்படி, 2019 ஆம் ஆண்டில் உலகளவில் வயது வந்த ஆண்கள் மற்றும் பெண்களின் சராசரி உயரம் முறையே 171 சென்டிமீட்டர் (5 அடி 7 அங்குலம்) மற்றும் 159 சென்டிமீட்டர் (5 அடி 3 அங்குலம்) ஆகும்.  உலகளாவிய சராசரி என்ன? உலகளாவிய சூழலில், சராசரி உயரம் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு கணிசமாக மாறுபடும். உதாரணமாக, தென்கிழக்கு ஆசியாவில் உள்ளவர்களுடன் ஒப்பிடும்போது வடக்கு ஐரோப்பாவில் வசிப்பவர்களின் சராசரி உயரம் பொதுவாக உயரமாக உள்ளது. நெதர்லாந்து, ஆண்களிடையே சராசரியாக 183 சென்டிமீட்டர் (6 அடி) மற்றும் பெண்களிடையே 170 சென்டிமீட்டர் (5 அடி 7 அங்குலம்) உயரம் கொண்ட உயரமான தேசத்திற்கான பட்டத்தை பெற்றுள்ளது. மறுபுறம், குறைவான சராசரி உயரம் கொண்ட மக்களைக் கொண்ட நாடாக இந்தோனேசியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது, இங்கு ஆண்களின் சராசரி உயரம் 158 சென்டிமீட்டர் (5 அடி 2 அங்குலம்) மற்றும் பெண்களின் சராசரி உயரம் 147 சென்டிமீட்டர் (4 அடி 10 அங்குலம்) உயரமும் உள்ளது. ஆண்களே! 30 வயசாகிருச்சா? உடலில் இந்த மாற்றங்கள் இருந்தா நீங்க ஆபத்தில் இருக்கீங்கனு அர்த்தமாம். ஜாக்கிரதை. இந்தியர்களின் சராசரி உயரம் என்ன? இந்தியாவில், மக்களின் சராசரி உயரம் உலக சராசரியிலிருந்து சற்றே வேறுபடுகிறது. இந்தியர்களிடையே சமீபத்தில் செய்யப்பட்ட ஆய்வின்படி, ஒரு இந்திய ஆணின் சராசரி உயரம் தோராயமாக 164.94 சென்டிமீட்டர் (5 அடி 4.9 அங்குலம்), ஒரு இந்தியப் பெண்ணின் சராசரி உயரம் சுமார் 152.58 சென்டிமீட்டர் (5 அடி 0.05 அங்குலம்) ) இருப்பினும், மரபியல், உணவுமுறை மற்றும் சமூகப் பொருளாதார நிலை போன்ற காரணங்களால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உயரத்தில் குறிப்பிடத்தக்க மாறுபாடுகள் இருக்கலாம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உயரத்தை பாதிக்கும் காரணிகள் மரபியல், ஊட்டச்சத்து, சுற்றுச்சூழல் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் உள்ளிட்ட பல காரணிகள் ஒருவரின் உயரத்தை பாதிக்கின்றன. ஒரு தனிநபரின் உயரத்தை தீர்மானிப்பதில் மரபியல் காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன, குழந்தைகள் பொதுவாக பெற்றோரிடமிருந்து அவர்களின் உயரத்தை பெறுகிறார்கள். போதுமான ஊட்டச்சத்து, குறிப்பாக குழந்தை பருவம் மற்றும் இளமை பருவத்தில் பெறுவது, ஒருவரின் முழு உயரத்தை அடைவதற்கு முக்கியமானது. சுகாதாரம் மற்றும் சமூக பொருளாதார நிலை போன்ற சமூக காரணிகளும் உயரத்தை பாதிக்கலாம். புவியியல் வேறுபாடுகள் கூட ஒரு நபரின் உயரத்தை ஓரளவு பாதிக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. 

Wednesday 8 May 2024

பித்தப்பை கல் ,இந்த அறிகுறிகள் இருக்கா?



பித்தப்பை கல்.. இதுதான் பெரிய தவறு! இந்த அறிகுறிகள் இருக்கா? பித்தப்பையில் கற்கள் கரைய பெஸ்ட் டிப்ஸ்
பித்தப்பையில் கல் இருக்கிறதா? இந்த கல் எதனால் ஏற்படுகிறது? இதற்கு இயற்கையான முறையில் தீர்வு இருக்கிறதா?


பித்தப்பையில் கற்கள் உண்டாக நிறைய காரணங்கள் உள்ளன.. அதாவது, ஈரலுக்கு கீழே அமைந்திருக்கிறது இந்த பித்தப்பை.. இந்த ஈரலில் எதேனும் தொந்தரவு இருந்தால் கற்கள் வரலாம்.

Super 6 Tips to avoid Gallbladder Stones and What are the Fantastic foods to eat to prevent form Gallstones
சத்துக்கள் குறைவான உணவே, கல் உண்டாக அடிப்படை காரணமாகும்.. குறிப்பாக, மாவுச்சத்து நிறைந்த உணவுகளிலுள்ள கார்போஹைட்ரேட்டுகள், சர்க்கரையாகவே உடலில் மாறும்... இந்த கார்போஹைட்ரேட் உணவுகளை அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு பித்தப்பையில் கல் வரும். அதிக கொழுப்பான உணவை சாப்பிடுவதும் கற்கள் தோன்ற காரணமாக இருக்கலாம்..


போதுமான உடலுழைப்பு இல்லாதவர்களுக்கு பித்தப்பையில் கல் வரலாம்.. ஆரோக்கியமற்ற உடல்நிலையும் இதற்கு இன்னொரு காரணமாகும். அனைத்தையும்விட, உடல் எடை அதிகமாக இருப்பதும் முக்கியமான காரணம்..

பித்தநீர்: உடலில் உஷ்ணம் அதிகமானாலும் கற்கள் தோன்றலாம்.. மன அழுத்தம் அதிகமாக உள்ளவர்களுக்கும் பித்தப்பையில் கல் வரலாம்.. அதேசமயம், சரியான நேரத்தில் சாப்பிடாமல் போனாலும், பித்தநீர் பித்த கற்களாக மாறலாம். அதேபோல, உடலில் பித்தம் அதிகமாகிவிட்டாலும், பித்தப்பையில் கற்கள் வரலாம்.. சுருக்கமாக சொல்லப்போனால், ஜீரணமாவதற்கு பித்த நீரின் அளவு அதிகமாக சுரந்துவிடும்போது, இந்த கற்கள் வருகிறதாம்..

பித்தப்பையில் கல் இருப்பதை எப்படி அறிந்து கொள்வது தெரியுமா? ஆரம்பக்கட்டத்தில் இந்த அறிகுறி நமக்கு தெரியாது.. பித்தப்பை கல் பெரிதாகும்போதுதான், வயிறு வலியை உணர முடியும்.. அல்லது முதுகு கீழ்ப்பகுதியிலும் வலி தோன்றலாம்.. அதுவும் நீரிழிவு நோயாளிகளுக்கு, பித்தப்பை கற்கள் தீவிரமாகிவிட்டால், மஞ்சள் காமாலையாகவும் மாறிவிடும்.. அல்லது நீரிழிவு நோய் வரக்கூடும்.


அறிகுறிகள்: இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். அதேபோல முறையான உணவுப்பழக்கத்தையும் கடைப்பிடிக்க வேண்டும்..

சரியான நேரத்துக்கு, சரியான சத்துக்கள் கொண்ட உணவை சாப்பிட வேண்டும். எண்ணெய் அதிகம் சேர்க்காத உணவுகளை தவிர்க்க வேண்டும்.. கெட்ட கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.. சிவப்பு இறைச்சி உணவுகளை தவிர்க்க வேண்டும்.. காஃபின் அதிகமுள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். உப்பு குறைவாக உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

மன உளைச்சல்: ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்யாமல், உடலுழைப்பு இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும்.. மன அழுத்தம், மன உளைச்சல் இல்லாமல் இருக்க வேண்டும்.. நார்ச்சத்து நிறைந்த நிறைந்த காய்கறிகளும், சரியான அளவு தூக்கமும் கட்டாயம் வேண்டும்.


ஓமம் விதைகள்...


இடுப்பு எடை.. கைப்பிடி ஓமம் இருக்கா? சைனஸ் முதல் தலைவலி வரை தீரும்! ஓமத்தில் ஒளிந்திருக்கும் விசேஷம்
ஓமம் விதைகள் கையில் இருந்தாலே, ஆரோக்கியம் நிச்சயம் என்பார்கள்.. வெறும் வயிற்றில் காலையில் இந்த ஓமத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென் தெரியுமா?


ஓம விதைகளை பச்சையாகவோ, தண்ணீரில் கொதிக்க வைத்தோ சாப்பிடலாம். இந்த ஓமம் பெண்களுக்கான மருந்து என்றே சொல்லலாம்.. அந்த அளவுக்கு ஏகப்பட்ட சத்துக்கள் இந்த ஓமத்தில் உள்ளன.. கார்போஹைட்ரேட், கொழுப்புகள், சோடியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.. அதேபோல, குறிப்பாக, நார்ச்சத்தும், புரதச்சத்தும் உள்ளன.


Excellent Health Uses of Ajwain Seeds and Do you know Ajwain Water is the Super Medicine for Stomach pain Belly Fat
அஜீரணம்: அஜீரணம், செரிமானம் போன்றவற்றுக்கு மட்டுமே பிரதானமாக பயன்படுத்தப்படும், இந்த ஓமத்தில், பல்வேறு ஆச்சரிய நன்மைகள் ஒளிந்திருக்கின்றன.. வயிற்று பகுதியை, ஓம விதைகள் பராமரிக்க செய்கின்றன..

குறிப்பாக, வயிறு உப்புசம், வாயு உள்ளிட்ட நச்சுக்களையும், கழிவுகளையும் நீக்குவதுடன், குடல் பாதுகாப்பை தக்க வைக்கிறது இந்த ஓமம். மலச்சிக்கல் இருப்பவர்கள், காலையில் வெறும் வயிற்றில், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஓமத்தை கலந்து குடிக்கலாம்.. இதனால், பசியும் நன்றாக எடுக்கும்..

வயிறு பொருமல்: அதேபோல, வயிற்று பொருமல், அஜீரண கோளாறு இருந்தால், 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக சுண்டியதும், வடிகட்டி குடித்தால், வயிறு சம்பந்தமான கோளாறுகள் நீங்கும். குடல் புண் மற்றும் வயிற்றுப்புண் தொடர்பான பிரச்சினைகளுக்கும் ஓமம் விதைகள் தீர்வு தருவதாக, சமீபத்தில் வெளியான ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.


நுரையீரலுக்கு கவசம் போல இந்த ஓமம் பாதுகாக்கிறது.. அதனால், சளி, காய்ச்சல் இருந்தாலும், இந்த விதையை சாப்பிட்டால் தீர்வு கிடைக்கும்.. அதுமட்டுமல்ல, நுரையீரலிலுள்ள சளியை அகற்றி வெளியே தள்ளிவிடும் தன்மை, இந்த ஓம விதைகளுக்கு உள்ளது.. அதேபோல, ஓமத்தை ஒரு துணியில் கட்டி மூக்கினால் நுகர்ந்து வந்தால், மூக்கடைப்பு விலகும்.

தலைவலி: ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுபவர்கள், ஓமத்தை தூள் செய்து, தேய்த்தால் வலி விலகும்.. மூட்டு வலிகளுக்கு ஓமம் விதைகள் உதவுகின்றன.. ஓமம் விதைகளை, விழுதுபோல அரைத்து, மூட்டுகளில் தடவினால், நிவாரணம் கிடைக்கும்.

ஓமத்திலிருந்து தயாரிக்கப்படும் ஓம வாட்டர், உடல் எடையை குறைக்க உதவுகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ளதால், உடலிருக்கும் கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க செய்கிறது ஓமம்.


மாதவிலக்கு: பெண்களுக்கு மாதவிலக்கு நேரங்களில் வலி அதிகமாக இருந்தால், ஓம வாட்டரை குடிக்கலாம்.. இதனால், வயிற்றில் புண் இருந்தாலும் ஆறிவிடும்.,. இடுப்பு வலி இருந்தால், சிறிது தண்ணீரில் ஒரு ஸ்பூன் ஓமம் சேர்த்து கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மறுபடியும் கொதிக்க விட்டு வடிகட்ட வேண்டும். பிறகு இதில், கற்பூர பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் தேய்த்ல், இடுப்பு வலி உடனே நீங்கும்.


Sunday 5 May 2024

வாழையிலையில் சாப்பிட்டால் ...


வாழை இலை வெற்றி.. வாழை இலையில் சாப்பிட்டால் ஆயுள் பெருகும்.. இதுதான் அந்த சீக்ரெட்.. சூப்பர் டிப்ஸ்
வாழையிலையில் சாப்பிட்டால் ஆயுசு பெருகும் என்பார்கள்.. இதற்கு என்ன காரணம் தெரியுமா?


வாழையை பொறுத்தவரை தண்டு முதல் இலை வரை அத்தனையும் மருத்துவ குணம் நிறைந்தது.. இந்த வாழையிலையில், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், சோடியம், பாஸ்பரஸ், துத்தநாகம், செம்பு என ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன.


Amazing Medicinal Uses of Banana Leaf and Do you know banana leaves are the Best for Ulcer
கண்கள்: கண்கள் உட்பட உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது இந்த வாழையிலை.. பசும் இலையாக இருந்தாலும் சரி, இலை அறுபட்டபிறகும்கூட, எப்போதுமே குளிர்ச்சியாக இருக்கக்கூடியது வாழையிலை.

அதாவது வாழை இலை ஆக்சிஜனை வெளியிட்டுக்கொண்டே இருக்குமாம்.. அதனால்தான், வாழை இலையில் வைக்கப்படும் கீரைகள், காய்கள், பழங்கள், பூக்கள் போன்றவை சீக்கரத்தில் வாடிப்போகாது.. பூக்கடைகளில் கட்டிய பூ வாங்கினால்கூட, வாழைநாரில் கட்டி, அதை வாழை இலையில்தான் கட்டித்தருவார்கள்..

குளிர்ச்சி: கண்களுக்கு குளிர்ச்சி தரக்கூடிய வாழை.. எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வது.. வைட்டமின் A, C., K போன்றவை உள்ளதால், குடற்புண்களை ஆற்றும் தன்மை வாழையிலைகளுக்கு உண்டு.

இந்த இலையின் மேல்புறத்தில், குளோரோபில் என்ற பொருள் நிறைந்திருக்கிறது.. இந்த வாழையிலையில் தண்ணீரை தெளித்து, அதன்மீது நெய்யை ஊற்றி, இலையில் சூடான உணவுகளை பரிமாறும்போது, இலையில் உள்ள சத்துக்களெல்லாம் குளோரோபில்லுடன் கரைந்து, உணவுடன் கலந்து விடுகின்றன. இவைகளை நாம் சாப்பிடும்போது, அனைத்து சத்துக்களும் நமக்குள் சென்று, ஆரோக்கியத்தையும் ஆயுளையும் கூட்டுகின்றன.

ரத்தம் உறைதல்: ரத்தம் உறைவதை தடுக்ககூடியது வாழையிலைகள்... அதுமட்டுமல்ல, இதிலிலிருக்கும் சாலிசிலிக் அமிலம் புற்றுநோய் காரணிகளை அடியோடு அழிக்கின்றன.. இலையில் சாப்பிடுபவர்களுக்கு இளநரை அவ்வளவாக வருவதில்லையாம்..

வாய், இரைப்பை, சிறுகுடல் போன்ற பகுதிகளில் உள்ள என்சைம்கள், செரிமான செல்களின் வளர்ச்சி, உற்பத்திக்கு உதவு செய்கின்றன.. வாழை இலையில் ஆன்டி ஆக்சிடன்ட் அதிக அளவில் உள்ளதால், உடலின் செல் சிதைவு ஏற்படாமல் காக்கின்றன.. இதனால், வயது சுருக்கம் லேசில் ஏற்படுவதில்லை..

தீப்புண்கள்: மன அழுத்தம், புற்றுநோய் மற்றும் இதய நோய்களும் இதனால், தடுக்கப்படுகின்றன. சிறுநீரகம், விதைப்பை தொடர்புடைய பிரச்னைகளுக்கு வாழையிலைகள் மருந்தாகின்றன.. அல்சர் புண்களுக்கும் வாழையிலையே மருந்தாகின்றன.. தீயில் சுட்ட புண்களை ஆற்றுவதற்கும், இந்த வாழை இலையே மருந்தாகின்றன.


அதனால்தான் வாழையில் பரிமாறுவதுடன், வாழையிலையை வைத்தே சமைக்கவும் செய்வார்கள்.. கேரளாவில் மீன் பொழிச்சது இந்த வாழையிலையில்தான் செய்கிறார்கள்..!!


Friday 3 May 2024

குடும்பம் அதிர்ஷ்டம் தரும் குதிரை லாடம்... வீட்டு வாசலில் மாட்டினால் என்ன...



வீடு / குடும்பம்
அதிர்ஷ்டம் தரும் குதிரை லாடம்... வீட்டு வாசலில் மாட்டினால் என்ன ஆகும் தெரியுமா?
Horse Ladam
Horse Ladam


நம் முன்னோர்கள் தங்களை பாதுகாத்து கொள்வதற்காக பலவிதமான பொருட்களை வீட்டின் வாசலிலே கட்டினார்கள். அப்படி வீட்டின் நிலைவாசற்படியில் சில பொருட்களை கட்டினால் அதிர்ஷ்டம் வந்து சேரும், தீயசக்திகள் வீட்டில் நுழையாது என்று நம்பினார்கள். அப்படி அவர்கள் நம்பிக்கையில் இருந்த ஒரு பொருள் தான் குதிரை லாடம். இந்த அதிர்ஷ்டம் தரும் குதிரை லாடத்தை பற்றி தெரியாத பல சுவாரஸ்யமான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.


நம் முன்னோர்கள் குதிரை லாடத்தை 16 ஆம் நூற்றாண்டில் இருந்தே பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த குதிரை லாடத்தை பயன்படுத்தினால் அதிர்ஷ்டம் வந்து சேரும் என்று சொல்லப்படுகிறது. இதை எல்லா மதத்தவருமே தங்கள் வீட்டில் பயன்படுத்தினார்கள் என்பது சிறப்பான விஷயமாகும். வெளிநாட்டவர்களே இதில் அதிகம் நம்பிக்கை வைத்து நிலைவாசல் படியில் பதித்து வைத்தார்கள்.

முன்பெலல்லாம் வீடுகள் அருகிலே அமைந்திருக்காது. இதனால் தீயசக்திகள் பற்றிய பயத்தை மக்கள் போக்க இரும்பு குதிரை லாடத்தை நிலைவாசற்படியில் கட்டிவைப்பார்கள். இது தீயசக்தியிலிருந்து தன் குடும்பத்தைக் காக்கும் என்று நம்பினார்கள்.

Horse Shoe
Horse Shoe
இன்றைக்கும் கிராமப்புர வீடுகளில் கவனித்தால் குதிரை லாடம் வடிவிலேயே கதவை தட்டுவதற்கு 'U' வடிவத்தில் பிடியை அமைத்து வைத்திருப்பார்கள். அதுவே சிறப்பு என்று நம்பினார்கள்.

முன்பொரு காலத்தில் குதிரை லாடம் செய்யும் ஒருவரை தொடர்ந்து வந்து கொண்டிருந்த ஆவி ஒன்று அவரை பிடிப்பதற்காக சரியான தருணத்தை எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருந்தது. ஏனெனில், அவர் செய்வதோ குதிரை லாடத்தை தயரிக்கும் பணி. அதற்கு பயந்து கொண்டு அந்த ஆவி தினமும் அவரை பிடிக்க நோட்டமிட்டு கொண்டிருந்தது. இதை அறிந்த குதிரை லாடம் செய்பவர், அந்த ஆவி கவனக்குறைவாக இருந்த சமயத்தில் அதன் கால்களில் குதிரை லாடத்தை அடித்து விடுகிறார்.

இதனால் வலி தாங்காமல் கத்திய ஆவி, இனி இந்த குதிரை லாடம் இருக்கும் எந்த இடத்திற்கும் நான் செல்ல மாட்டேன் என்று சத்தியம் செய்தது. அதன் பிறகே அவர் அந்த ஆவியை விடுவித்தார் என்று கதை உண்டு. அதனால் இந்த குதிரை லாடத்தை மாட்டி வைக்கும் எந்த வீட்டிற்கும் தீயசக்தி வராது என்பது நம்பிக்கை. குதிரை லாடத்தை நிலைவாசற்படியில் 'U' வடிவத்தில் மாட்டி வைக்க வேண்டும்.

நம்முடைய வீட்டின் நிலைவாசற்படியில் இதை கட்டுவதற்கான காரணம், வாசலை தாண்டி வீட்டிற்குள் செல்லும்போது வெளியிலே சந்தித்துவிட்டு வந்த அனைத்தும் வீட்டின் வாசலிலேயே கழிந்து போயிவிடும். அதனால் அதிர்ஷ்டம், செல்வம் வீட்டிற்குள் வந்து சேரும் என்பதால் நிலைவாசலில் கட்டுவார்கள்.

இதையும் படியுங்கள்:
இந்த தருணத்தில் மகிழ்ச்சியாக இருப்பதற்கான தந்திரங்கள்!
Horse Ladam
இந்த குதிரை லாடங்களெல்லாம் இப்போது பெரிதாக கிடைப்பதில்லை. இதை எவ்வளவுக்கு எவ்வளவு பழமையாக பயன்படுத்துகிறோமோ அவ்வளவு நல்லதாகும். குதிரை லாடத்தை வீட்டில் மாட்டுவதால், ஏழரை சனியின் தாக்கம் குறையும்.

இந்த குதிரை லாடத்தை வாங்கியதும், முதலில் பூஜையறையில் வைத்து சந்தனம், குங்குமம், பூ வைத்துவிட்டு பிறகு ஊதுபத்தி காட்டிவிட்டு வாசலில் கட்டலாம் அல்லது குதிரை லாடத்தில் இருக்கும் ஒவ்வொரு ஓட்டையிலும் ஒவ்வொரு ஆணியை அடித்தும் மாட்டலாம். சிலரது வீட்டில் இரண்டு வாசற்படி இருந்தால் இரண்டிலுமே மாட்டுவது சிறந்ததாகும்.


வீட்டில் 'உருளி மலர்' வைக்கும் முறையை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!




வீட்டில் 'உருளி' வைக்கும் முறையை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!


இப்போதெல்லாம் வீடுகளிலும், கடைகளிலும் உருளியை அதிகம் மக்கள் வைக்க தொடங்கிவிட்டனர். இதனால் என்ன பயன், உருளி வைக்க வேண்டிய முறை ஆகியவற்றை பற்றி தான் இந்த பதிவில் காண உள்ளோம்.

வீட்டின் வாசலிலோ அல்லது பெரிய கடைகளிலோ பார்த்திருக்கலாம். ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அதில் மலர்களை போட்டு வைத்திருப்பார்கள். இதன் பெயர் தான் உருளியாகும்.

உருளியை வீட்டின் வாசலிலே, கடைகளின் வாசலிலே வைக்கலாம். வீட்டினுடைய கன்னி மூலையில், தென்மேற்கு மூலையில், வரவேற்பறையிலும் வைக்கலாம். இதை வைப்பதால் பாசிட்டிவ் வைப்பிரேஷன் கிடைக்கும். இந்த உருளி வைக்கும் பழக்கம் பழங்காலம் முதலாகவே இருக்கிறது. நம் முன்னோர்கள் இதை வீட்டின் வாசலிலே வைத்ததற்கு காரணம் அழகு என்பதையும் தாண்டி பாசிட்டிவ் வைப்பிரேஷன் தருகிறது என்ற காரணத்தாலுமே வைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை கடையிலோ அல்லது வீட்டிலோ வைப்பதனால் வரும் லாபம் என்னவென்று கேட்டால், வியாபாரத்தில் நஷ்டமில்லாமல் லாபம் பெருகிக்கொண்டே வரும். அந்த இடத்திலுள்ள நெகட்டிவ் வைப்பிரேஷன் நீங்கி பாசிட்டிவ் வைப்பிரேஷனை கொடுக்கும். வீட்டிலுள்ள சண்டை சச்சரவு நீங்கி செல்வ செழிப்பு பெருகும்.

இந்த உருளியை மண்ணில் வைக்கலாம், பித்தலையில் பயன்படுத்தலாம், பஞ்சலோகம் பயன்படுத்தலாம், பீங்கான், கண்ணாடியில் வைக்கலாம். இதை எதில் வைக்க கூடாதென்றால், எவர்சில்வர், பிளேஸ்டிக், அலுமினியம், இரும்பு ஆகியவற்றில் வைக்க கூடாது. இதை வீட்டின் நுழைவாயிலில் வலதுபுறத்திலோ அல்லது இடதுப்புறத்திலோ வைக்கலாம். வீட்டினுடைய ஹாலில் எல்லோரும் கூடும் இடத்தில் வைக்கலாம்.


உருளியிலே நல்ல சுத்தமான தண்ணீரை ஊற்றி அதில் மஞ்சள், பச்சை கற்பூரம், வாசனை திரவியமான ஜவ்வாது, வெட்டிவேரை கூட சிலர் சேர்ப்பார்கள்.

உருளியில் வைக்கக்கூடிய மலர் ஒன்று நறுமணம் மிக்கதாக இருக்க வேண்டும் இல்லையேல் மருத்துவ குணம் உள்ளதாக இருக்க வேண்டும்.

உருளிக்கே விசேஷமானது தாமரைப்பூ தான். சாமந்தி, ரோஜாப்பூ, மல்லி என்று கலர் கலராக மலர்களை வைக்க வேண்டும். செவ்வரளியை உருளியில் பயன்படுத்த கூடாது. ஏனெனில் இது வீட்டில் நஷ்டத்தை ஏற்படுத்தும்.


வீட்டில் கெட்ட காலம் தொடங்கியதற்கு இதுதான் அறிகுறி..



சாணக்கிய நீதி: வீட்டில் கெட்ட காலம் தொடங்கியதற்கு இதுதான் அறிகுறி.. கவனமா இருங்க!
சாணக்கிய நீதி: வீட்டில் கெட்ட காலம் தொடங்கியதற்கு இதுதான் அறிகுறி.. கவனமா இருங்க!
Sanakiyar quotes | பலரும் வாழ்க்கையில் சாணக்கியரின் நெறிமுறைகளை பின்பற்றுகின்றனர். அப்படி கெட்ட சகுணத்தை குறிக்கும் சில விஷயங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.




வீட்டில் வரவுள்ள நிதி நெருக்கடியை சில அறிகுறிகள் மூலம் நம்மால் கண்டுபிடிக்க முடியும் என சொல்லப்படுகிறது. சாணக்கிய நிதியில் கூறப்படும் இந்த அறிகுறிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

சாணக்கியர் நம் வாழ்வுடன் தொர்புடைய பல விஷயங்களை கூறியுள்ளார். அவர் தனது நெறிமுறைகளில் இதை பற்றிய நிறைய எழுதியுள்ளார். அவர் சொல்லும் நெறிமுறைகள் நம் வாழ்வில் இலக்குகளை அடைய தூண்டுகிறது. இதனாலேயே பலர் சாணக்கிய வழியை பின்பற்றி வருகின்றனர். அப்படி நம் வாழ்வில் கெட்ட நேரம் தொடங்கிவிட்டதை எப்படி கண்டுகொள்ளலாம் என சாணக்கியரின் கூற்றை பார்க்கலாம்.


வாடும் துளசி செடி:
பொதுவாக துளசி செடியை பலர் வீடுகளில் வைத்திருப்பார்கள். ஆனால் உங்கள் வீட்டில் இருக்கும் துளசி செடி உங்க கெட்ட காலத்தை முன்கூட்டியே உணர்த்தும் என்று சாணக்கியர் கூறுகிறார். அதாவது துளசி செடி வீடுகளில் வாடினால் உங்களுக்கு பொருளாதார பிரச்சனை வரவுள்ளதாக தெரிகிறது. அதனால் துளசி செடி வாடினால் உங்களுக்கான கெட்ட காலத்தை உணர்த்துவதை நினைவில் கொள்ளுங்கள்.

தினசரி சண்டை:
உங்கள் வீட்டில் எப்போதும் சண்டை சச்சரவுகள் இருந்து கொண்டே இருந்தால் அந்த வீட்டில் லட்சுமி தேவி தங்க மாட்டார் என சாணக்கியர் கூற்று கூறுகிறது. இதனால் உங்கள் நிதி நிலை மோசமடைந்து, கெட்ட நேரம் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

கண்ணாடி உடைதல்:
வீட்டில் கண்ணாடி உடைவது ஒரு கெட்ட சகுணத்தை பிரதிபலிக்கிறது. சாணக்கியர் கூற்றுபடி வீட்டில் கண்ணாடி உடைந்தால் யாருக்காவது பிரச்சனை வரும் என்று சொல்லப்படுகிறது.


பூஜை இல்லாத வீடு:
வீட்டில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஏற்பட சாணக்கியர் கூற்றுப்படி தவறாமல் பூஜை செய்வது அவசியமாக கருதப்படுகிறது. தினமும் வீட்டில் பூஜை செய்வதன் மூலம் உங்கள் வீட்டிற்கு லட்சுமி தேவி வருவார் என்று சொல்லப்படுகிறது. பூஜை அறை தூசி படிந்து காணப்படுவதும் கெட்ட சகுணத்தை உணர்த்துவதாகும்.

பெரியோரை அவமரியாதை செய்வது:
சாணக்கியரின் கூற்றுப்படி, பெரியவர்களை மதிக்காத வீட்டில் லட்சுமி வசிக்க மாட்டார் என்று சொல்லப்படுகிறது. மேலும் வீட்டிற்குள் மகிழ்ச்சியும் வராது. அதனால் தான் எப்போதும் உங்களை பெரியவர்களை மதித்து பழக வேண்டும் என்று சொல்கிறார்கள்.