jaga flash news

Friday, 24 October 2025

விளையாட்டு துறையில் பிரகாசிக்கக்கூடிய கிரகநிலைகள் ?

விளையாட்டு துறையில் பிரகாசிக்கக்கூடிய கிரகநிலைகள் ?


ஜாதகத்தில் லக்னத்துக்கு 6 பாவம் விளையாட்டு துறையையும் மிதுன ராசி விளையாட்டை குறிக்கும் ராசியாகும் . 

ஒரு சிறந்த விளையாட்டு வீரருக்கு சக்தி செயலாற்றும் திறன் உடனுக்குடன் முடிவெடுக்கும் தன்மை உடல் உறுதி மனபலம் தைரியம் விடாமுயற்சி தோல்விகளை கண்டு துவளாத மனப்பாங்கு இவை அனைத்தும் தேவையே . 
புதன் கிரகம் உடனுக்குடன் முடிவெடுக்கும் திறமையை தருபவர் அதனால் அவரின் துணை அவசியம் தேவை . 

போட்டியில் வெற்றி பெறுவதே விளையாட்டு துறைக்கு ஏற்ற சிறப்பாகும் . அதனால் லக்கினத்திற்கு 6 ம் பாவகம் , 6 ம் இடத்துக்கு அதிபதியான கிரகம் 6 ல் உள்ள கிரகம் பலம் பெரும் அமைப்பு விளையாட்டு துறையில் சாதனை பெறுவதற்கான கிரக அமைப்பாகும் .
 யோகம் :

சுப கிரகங்கள் லக்னத்திற்கு 3 - 6 - 11 ல் இருப்பது . மேலும் இது சந்திரனுக்கு 3 - 6 - 11 ல் அமைவது ஒரு படி மேலான சிறப்பான கிரக அமைப்பாகும் . 
                

                                                       

                                                   அமலா யோகம் :

லக்கினம் அல்லது சந்திரனுக்கு 10 ம் இடத்தில சுப கிரகங்கள் இருப்பது விளையாட்டு துறையில் ராஜயோகத்திற்க்கான கிரக அமைப்பாகும் . 

                                           

                                              

                                              பாரிஜாத யோகம் : 

லக்கினாதிபதி இருக்கும் ராசிக்கு அதிபதி ஆட்சி உச்சம் பெரும் அமைப்பு விளையாட்டு துறையில் பிரகாசிப்பதற்கு மற்றும் ஓர் கிரக அமைப்பாகும் . இந்த பாரிஜாத யோகம் ஒரு புகழ் பெரும் அமைப்பாகும் . அரசாங்கத்தால் பாராட்டை பெரும் ஒரு அமைப்பாகும் . 

உதாரணமாக மீன லக்னம் . இதன் லக்கினாதிபதி குரு கன்னி ராசியில் இருக்கிறார் . கன்னி ராசிக்கு அதிபதி புதன் பலம் பெற்று மிதுனத்தில் ஆட்சி பெற்று லக்கினத்திற்கு கேந்திர அமைப்பை பெறுவது பாரிஜாத யோகம் பெரும் அமைப்பாகும்
செவ்வாய் பகவான் பலம் பெற்று உபஜெய ஸ்தானமான 3 - 6 - 10 - 11 போன்ற இடங்களில் அமைவது சிறப்பாகும் . ராகு பலமுடன் 3 - 6 - 10 - 11 ல் இருப்பது உடல் வலிமையை தரும் . மேலும் செவ்வாய் , புதன் கிரகங்கள் ஆட்சி உச்சம் பெறுவது விளையாட்டு துறையில் பிரகாசிப்பதற்கு ஒரு சிறப்பு அம்சமாகும் . 


மற்றும் ஓர் கிரக அமைப்பாகும் . இந்த பாரிஜாத யோகம் ஒரு புகழ் பெரும் அமைப்பாகும் . அரசாங்கத்தால் பாராட்டை பெரும் ஒரு அமைப்பாகும் . 

உதாரணமாக மீன லக்னம் . இதன் லக்கினாதிபதி குரு கன்னி ராசியில் இருக்கிறார் . கன்னி ராசிக்கு அதிபதி புதன் பலம் பெற்று மிதுனத்தில் ஆட்சி பெற்று லக்கினத்திற்கு கேந்திர அமைப்பை பெறுவது பாரிஜாத  யோகம் பெரும் அமைப்பாகும் .  


Sunday, 12 October 2025

மருந்து அட்டை ரகசியம்


உடல்நலக்குறைவு ஏற்பட்டு நாம் மருந்துகளை எடுக்கும்போது சில நேரம் மருத்துவச் சீட்டு மற்றும் மருந்து அட்டைகளில் இருக்கும் சில விஷயங்கள் நமக்குக் குழப்பத்தை ஏற்படுத்தலாம். எனவே, அந்தக் குறியீடுகள் எதைக் குறிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். அப்போது தான் தவறான மருந்துகளை நாம் எடுத்துக் கொள்ள மாட்டோம். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.


நம்மில் பெரும்பாலும் உடம்பு சரியில்லை என்றால் நேரடியாக அருகே உள்ள மருந்துக் கடைக்குச் சென்று, மருந்துகளை வாங்கி சாப்பிடுவோம். ஆனால், எப்போதும் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை எடுத்துக் கொள்ளக்கூடாது என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். மருத்துவர்கள் உடலை முழுமையாகப் பரிசோதனை செய்து அதற்கேற்ப மருந்துகளைக் கொடுப்பார்கள்.


What is Red Line on Medicines means Prescription-Only Drugs to Curb Misuse Know about key details
கவனிக்க வேண்டியவை
மருத்துவர்கள் கொடுக்கும் மருந்தை மட்டுமே நாம் சாப்பிட வேண்டும். அப்படி மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்துச் சீட்டிலும், கடைகளில் நாம் வாங்கும் மருந்துகளிலும் சில விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். அது குறித்துத் தெரிந்து வைத்திருக்கவும் வேண்டும்.. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
சிவப்பு கோடு
சில மருந்து அட்டைகளில் பின்புறம் சிவப்பு நிறக் கோடுகளை நீங்கள் கவனித்திருக்கலாம். இருப்பினும், இந்தக் கோடு மருந்து எதற்காக என்பது பலருக்கும் புரியாது. எனவே, இதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வது மிகவும் அவசியம். இது வெறுமன டிசைனுக்காக இருக்கும் கோடு இல்லை. அவை ஆன்டிபயாட்டிக் மருந்துகளைக் குறிக்கும் வகையிலேயே அந்தச் சிவப்புக் கோடு இருக்கும். மருத்துவச் சீட்டு இல்லாமல் அந்த ஆன்டிபயாட்டிக் மருந்துகளை வாங்க முடியாது என்பதையே இது காட்டுகிறது.

அதாவது மருத்துவரின் பரிந்துரையின்றி இந்த மருந்துகளை நிச்சயம் சாப்பிடக்கூடாது என்பதையே இது காட்டுகிறது. அதேபோல், மருந்துகள் மீது அச்சிடப்பட்டிருக்கும் 'Rx' குறியீடும் இதே தான் குறிக்கிறது. மிகவும் தீவிரமான மருந்துகளை எடுத்துக் கொள்ளும் முன்பு மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும் என்பதை இவை வலியுறுத்துகின்றன.

ரொம்ப முக்கியம்
"Schedule H" எனக் குறிப்பிட்டிருந்தால், அது மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் பயன்படுத்தக்கூடாத மருந்துகள் என்பதைக் குறிக்கிறது. அதேபோல், "Schedule X" என்று இருந்தால் இன்னுமே கடுமையாகக் கட்டுப்படுத்தப்படும் மருந்துகளாகும். பொதுவாக இவை மனநலச் சிகிச்சைக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் மருந்துகளை என்பதைக் குறிக்க இந்தக் குறியீடு பயன்படுத்தப்படும்.


அதேபோல "1-0-1" என்று குறிப்பிட்டிருந்தால், காலை மற்றும் இரவில் மட்டும் மாத்திரை சாப்பிட வேண்டும். மதியம் எடுத்துக் கொள்ளக்கூடாது என அர்த்தம். எப்போது மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பொறுத்து இது மாறும். அடுத்து மருந்துச் சீட்டில் "SOS" என்று மருத்துவர் குறிப்பிட்டால் தேவைப்படும்போது மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும் என அர்த்தம். உதாரணமாக வலி அல்லது அசிடிட்டி ஏற்பட்டால் இருந்த மருந்துகளைச் சாப்பிட வேண்டும் எனப் பொருள்.இந்த மருந்துகளை நோய் எதிர்ப்புச் சக்திக்கு பயன்படுத்த முடியாது.

இதேபோல், "OD" என்று இருந்தால், ஒரு நாளைக்கு ஒரு முறை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், "BD" என்று இருந்தால், ஒரு நாளைக்கு இருமுறை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அர்த்தம். மேலும், "TDS" என்பது ஒரு நாளைக்கு மூன்று முறை மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கிறது.



சரவாஷ்டக வர்க்கப்பரல்களின் பலன்கள்

சரவாஷ்டக வர்க்கப்பரல்களின் பலன்கள்

மொத்தப் பரல்கள் 337. ராசிகள் 12 வகுத்தால் சராசரியாக ஒரு ராசிக்கு 28 பரல்கள் வரும்.

ஒரு வீட்டில் (அதாவது ஒரு ராசியில்) சராசரிக்கும் குறைவான பரல்கள் இருந்தால், அந்த வீடு வலிமையாக, சிறப்பாக இல்லை என்று பொருள்.
1. ஒரு வீட்டில் 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால், அந்த வீட்டால் ஜாதகனுக்குப் பெரிய (நல்ல) பலன்கள் இருக்காது.

2. ஒரு வீட்டில் 30 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால், அந்த வீட்டால் ஜாதகனுக்கு மிகவும் நன்மையான பலன்கள் உண்டாகும்.

3. ஜாதகன் ஒரு வீட்டின் முழுப் பலனையும் அடைய வேண்டுமென்றால்
அந்த வீட்டில் 30ம் அல்லது அதற்கு மேலான பரல்களும் இருக்க வேண்டும்.

4. கிரகங்கள் ஜாதகத்தில் உச்சமாக இருந்தாலும் அல்லது கேந்திர,
திரிகோண வீடுகளில் இருந்தாலும், அல்லது சொந்த வீட்டில்
இருந்தாலும் அந்த வீட்டில் சராசரிக்கும் குறைவான பரல்கள்
இருந்தால், அந்தக் கிரகங்கள் முழுமையாகச் செய்லபடாது.

5. கிரகங்கள் ஜாதகத்தில் நீசமடைந்திருந்தாலும் அல்லது எதிரி வீட்டில் குடியிருந்தாலும் அல்லது 6ஆம் வீடு, 8ஆம் வீடு அல்லது 12ஆம் வீடு
போன்ற தீய ஸ்தானங்களில் அமர்ந்திருந்தாலும் அந்த வீட்டில்
சராசரிக்கும் அதிகமான பரல்கள் இருந்தால் அவைகள் முழுமையாகச் செயல்பட்டு ஜாதகனுக்கு நன்மைகளை செய்வார்கள்!.

6. லக்கினத்தில் 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருக்ககூடாது. இருந்தால் ஜாதகன் கஷ்டப்படப் பிறந்தவன். வாழ்க்கை போராட்டங்கள்
நிறைந்ததாக இருக்கும்

7. ஏழாம் வீட்டில், அதாவது களத்திர ஸ்தானத்தில் 20 பரல்கள் அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருக்கக்கூடாது. இருந்தால் ஜாதகனுக்கு
உரிய வயதில் திருமணம் ஆகாது. திருமணம் அநியாயத்திற்குத்
தாமதமாகும். அத்துடன் தாமதமாகத் திருமணம் நடந்தாலும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியைத் தராது.

8. ஏழாம் வீட்டில் 30 அல்லது அதற்கு அதிகமான பரல்கள் இருந்தால், ஜாதகனுக்கு உரிய வயதில் திருமணம் ஆகும். திருமண வாழ்க்கை
மகிழ்ச்சி நிரம்பியதாக இருக்கும

9. லக்கினத்தில் இருப்பதைவிட ஏழாம் வீட்டில் அதிகப் பரல்கள்
இருந்தால், ஜாதகனுக்கு, அவன் தகுதியைவிட, அதாவது
அவனைவிட மேலான தகுதியை உடைய பெண் மனைவியாக
அமைவாள். பெண்ணாக இருந்தால், மேலான தகுதியை உடைய
கணவன் அமைவான்.

10. மாறாக லக்கினத்தைவிட ஏழாம் வீட்டில் பரல்கள் குறைவாக
இருந்தால், ஜாதகனின் நினைப்பைவிட, விருப்பதைவிட,
தகுதியைவிட (status) குறைவான அமைப்பை உடையே பெண்ணே மனைவியாக அமைவாள். அல்லது கணவன் அமைவான்.

11. பத்தாம் வீட்டில் 32 அல்லது அதற்கு அதிகமான பரல்கள் இருந்தால், ஜாதகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். அல்லது நல்ல தொழில் அமையும்

12. பத்தாம் வீட்டில் சராசரிக்கும் குறைவான பரல்கள் இருந்தால்
எடுத்தவுடன் நல்ல வேலை அமைவது சிரமம். கிடைக்கும் வேலையில் சேர்ந்து கொள்ள வேண்டியதுதான். பிறகு ஜாதகத்தில் உள்ள
லக்கினாதிபதி அல்லது பத்தாம் அதிபதி அல்லது கரமகாரகன் சனியின் மேன்மையைப் பொருத்து அவர்களுடைய தசா புத்திக் காலங்களில்
நல்ல வேலை கிடைக்கும்.

13. பத்தாம் வீட்டில் 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால், கிடைக்கின்ற வேலையில் அது எப்படி இருந்தாலும், மனதைத் தேற்றிக்
கொண்டு பணியாற்ற வேண்டியதுதான். ஜாதகப்படி நல்ல காலம்
வரும்போது நிலைமை மாறும் என்று நம்பிக்கையோடு இருக்க வேண்டியதுதான்.

14. இரண்டாம் வீட்டில் (House of finance) 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால் எப்போதும் பணப் பிரச்சினை இருக்கும். வரவிற்கு
மேல் செலவாகும். சுருக்கமாகச் சொன்னால் கையில் காசு தங்காது. ஓட்டைக்கை என்று சொல்லுவார்கள்.

15. நான்காம் வீட்டில் 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால் வாழ்க்கையில்  comforts, Luxury எல்லாம் இருக்காது. அதாவது சொத்து
சுகம் எல்லாம் இருக்காது. பிறகு ஜாதகத்தில் லக்கினாதிபதி, சுக்கிரன், செவ்வாய் ஆக்கிய கிரகங்களின் வலைமையைப் பொறுத்து,
அவர்களுடைய  தசாபுத்திகளில் சொத்து, சுகங்கள் கிடைக்கலாம்.
 (சுகம் என்றால் என்னவென்று தெரியுமல்லவா? வண்டி, வாகனங்கள், ஸ்பிளிட் ஏர் கண்டிஷனர் போன்றவை)

16. பாக்கிய ஸ்தானத்தில் (அதாவது ஒன்பதாம் வீட்டில்) சராசரி
அல்லது அதற்கு அதிகமான பரல்கள் இருந்தால்தான் பூர்வீகச்
சொத்துக்கள் இருக்கும். அல்லது கிடைக்கும்

17. நான்காம் வீட்டில் 30ம் அல்லது அதற்கு மேலான பரல்களும் இருந்தால்தான் நல்ல, அன்பான, பரிவான, பாசமுள்ள தாய் அமைவாள்

18. ஒன்பதாம் வீட்டில் 30ம் அல்லது அதற்கு மேலான பரல்களும் இருந்தால்தான் நல்ல, நம்மை போற்றி வளர்க்கக்கூடிய, நமக்குப்
பெருமை சேர்க்கக்கூடிய தந்தை அமைவார்.

19. ஆறாம் வீட்டில் 32ம் அல்லது அதற்கு மேலான பரல்கள் இருந்தால், வாழ்க்கையில், நோய், கடன், எதிரி, ஆகிய பிரச்சினைகள் இல்லாமல்
இருக்கலாம்

20. எட்டாம் வீட்டில் 25 அல்லது அதற்கு அதிகமான பரல்கள் இருந்தால், வாழ்க்கையில் பெரும் கஷ்டங்கள் வராது. பெரிய பிரச்சினைகள் வராது

முக்கியமான பரல்கள் பலன்
ஒரு வீட்டில் (அதாவது ஒரு ராசியில்) சராசரிக்கும் குறைவான பரல்கள் இருந்தால், அந்த வீடு வலிமையாக, சிறப்பாக இல்லை என்று பொருள்.

1. ஒரு வீட்டில் 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால், அந்த வீட்டால் ஜாதகனுக்குப் பெரிய (நல்ல) பலன்கள் இருக்காது.

2. ஒரு வீட்டில் 30 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால், அந்த வீட்டால் ஜாதகனுக்கு மிகவும் நன்மையான பலன்கள் உண்டாகும்.

3. ஜாதகன் ஒரு வீட்டின் முழுப் பலனையும் அடைய வேண்டுமென்றால்
அந்த வீட்டில் 30ம் அல்லது அதற்கு மேலான பரல்களும் இருக்க வேண்டும்.

4. கிரகங்கள் ஜாதகத்தில் உச்சமாக இருந்தாலும் அல்லது கேந்திர,
திரிகோண வீடுகளில் இருந்தாலும், அல்லது சொந்த வீட்டில்
இருந்தாலும் அந்த வீட்டில் சராசரிக்கும் குறைவான பரல்கள்
இருந்தால், அந்தக் கிரகங்கள் முழுமையாகச் செய்லபடாது.

5. கிரகங்கள் ஜாதகத்தில் நீசமடைந்திருந்தாலும் அல்லது எதிரி வீட்டில் குடியிருந்தாலும் அல்லது 6ஆம் வீடு, 8ஆம் வீடு அல்லது 12ஆம் வீடு
போன்ற தீய ஸ்தானங்களில் அமர்ந்திருந்தாலும் அந்த வீட்டில்
சராசரிக்கும் அதிகமான பரல்கள் இருந்தால் அவைகள் முழுமையாகச் செயல்பட்டு ஜாதகனுக்கு நன்மைகளை செய்வார்கள்!.
6. லக்கினத்தில் 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருக்ககூடாது. இருந்தால் ஜாதகன் கஷ்டப்படப் பிறந்தவன். வாழ்க்கை போராட்டங்கள்
நிறைந்ததாக இருக்கும்

7. ஏழாம் வீட்டில், அதாவது களத்திர ஸ்தானத்தில் 20 பரல்கள் அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருக்கக்கூடாது. இருந்தால் ஜாதகனுக்கு
உரிய வயதில் திருமணம் ஆகாது. திருமணம் அநியாயத்திற்குத்
தாமதமாகும். அத்துடன் தாமதமாகத் திருமணம் நடந்தாலும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியைத் தராது.

8. ஏழாம் வீட்டில் 30 அல்லது அதற்கு அதிகமான பரல்கள் இருந்தால், ஜாதகனுக்கு உரிய வயதில் திருமணம் ஆகும். திருமண வாழ்க்கை
மகிழ்ச்சி நிரம்பியதாக இருக்கும்.

9. லக்கினத்தில் இருப்பதைவிட ஏழாம் வீட்டில் அதிகப் பரல்கள்
இருந்தால், ஜாதகனுக்கு, அவன் தகுதியைவிட, அதாவது
அவனைவிட மேலான தகுதியை உடைய பெண் மனைவியாக
அமைவாள். பெண்ணாக இருந்தால், மேலான தகுதியை உடைய
கணவன் அமைவான்.

10. மாறாக லக்கினத்தைவிட ஏழாம் வீட்டில் பரல்கள் குறைவாக
இருந்தால், ஜாதகனின் நினைப்பைவிட, விருப்பதைவிட,
தகுதியைவிட (status) குறைவான அமைப்பை உடையே பெண்ணே மனைவியாக அமைவாள். அல்லது கணவன் அமைவான்.
11. பத்தாம் வீட்டில் 32 அல்லது அதற்கு அதிகமான பரல்கள் இருந்தால், ஜாதகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். அல்லது நல்ல தொழில் அமையும்

12. பத்தாம் வீட்டில் சராசரிக்கும் குறைவான பரல்கள் இருந்தால்
எடுத்தவுடன் நல்ல வேலை அமைவது சிரமம். கிடைக்கும் வேலையில் சேர்ந்து கொள்ள வேண்டியதுதான். பிறகு ஜாதகத்தில் உள்ள
லக்கினாதிபதி அல்லது பத்தாம் அதிபதி அல்லது கரமகாரகன் சனியின் மேன்மையைப் பொருத்து அவர்களுடைய தசா புத்திக் காலங்களில்
நல்ல வேலை கிடைக்கும்.

13. பத்தாம் வீட்டில் 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால், கிடைக்கின்ற வேலையில் அது எப்படி இருந்தாலும், மனதைத் தேற்றிக்
கொண்டு பணியாற்ற வேண்டியதுதான். ஜாதகப்படி நல்ல காலம்
வரும்போது நிலைமை மாறும் என்று நம்பிக்கையோடு இருக்க வேண்டியதுதான்.

14. இரண்டாம் வீட்டில் (House of finance) 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால் எப்போதும் பணப் பிரச்சினை இருக்கும். வரவிற்கு
மேல் செலவாகும். சுருக்கமாகச் சொன்னால் கையில் காசு தங்காது. ஓட்டைக்கை என்று சொல்லுவார்கள்.

15. நான்காம் வீட்டில் 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால் வாழ்க்கையில் comforts, Luxury எல்லாம் இருக்காது. அதாவது சொத்து
சுகம் எல்லாம் இருக்காது. பிறகு ஜாதகத்தில் லக்கினாதிபதி, சுக்கிரன், செவ்வாய் ஆக்கிய கிரகங்களின் வலைமையைப் பொறுத்து,
அவர்களுடைய தசாபுத்திகளில் சொத்து, சுகங்கள் கிடைக்கலாம்.
(சுகம் என்றால் என்னவென்று தெரியுமல்லவா? வண்டி, வாகனங்கள், ஸ்பிளிட் ஏர் கண்டிஷனர் போன்றவை



16. பாக்கிய ஸ்தானத்தில் (அதாவது ஒன்பதாம் வீட்டில்) சராசரி
அல்லது அதற்கு அதிகமான பரல்கள் இருந்தால்தான் பூர்வீகச்
சொத்துக்கள் இருக்கும். அல்லது கிடைக்கும்

17. நான்காம் வீட்டில் 30ம் அல்லது அதற்கு மேலான பரல்களும் இருந்தால்தான் நல்ல, அன்பான, பரிவான, பாசமுள்ள தாய் அமைவாள்

18. ஒன்பதாம் வீட்டில் 30ம் அல்லது அதற்கு மேலான பரல்களும் இருந்தால்தான் நல்ல, நம்மை போற்றி வளர்க்கக்கூடிய, நமக்குப்
பெருமை சேர்க்கக்கூடிய தந்தை அமைவார்.

19. ஆறாம் வீட்டில் 32ம் அல்லது அதற்கு மேலான பரல்கள் இருந்தால், வாழ்க்கையில், நோய், கடன், எதிரி, ஆகிய பிரச்சினைகள் இல்லாமல்
இருக்கலாம்

20. எட்டாம் வீட்டில் 25 அல்லது அதற்கு அதிகமான பரல்கள் இருந்தால், வாழ்க்கையில் பெரும் கஷ்டங்கள் வராது. பெரிய பிரச்சினைகள் வராது


12 பாவகங்களின் அஷ்டவர்க்க பரல்களின் பலன்கள்....



12 பாவகங்களின் அஷ்டவர்க்க பரல்களின் பலன்கள்....

லக்ன பாவகத்தில் பரல்கள் 1,5,9 க்கு இணையாக இருக்க வேண்டும்.6,8,12 க்கு குறையக்கூடாது.மேற்படி இருந்தால்தான் லக்னம் பலம் பெற்றுள்ளதாக அர்த்தம்

2 ல் பரல் குறைந்தால் தனவிருத்தி இல்லை.குடும்ப நிர்வாகம் சுமூகமாக இருக்காது.2 ம் பாவக காரகத்தை ஜாதகர் தடையின்றி அனுபவிக்க இயலாது.4,7 பாவகத்துக்கு இணையாக இருக்க வேண்டும்.20க்கு குறைந்தால் குடும்பம் அமைய தடை ஏற்படும்.20 முதல் 25க்குள் இருந்தால் தாமதமாகி குடும்பம் அமையும். அதிலும் பிரச்சனைகளை கொடுக்கும்.25க்கு மேல் இருப்பது சிறப்பு .

3 ல் பரல் அதிகமானால் இளைய சகோதர ஆதரவு இருக்கும்.விடாமுயற்சி இருக்கும்.எந்தச் செயலையும் வீரியத்துடன் செய்வார். அவ்வப்போது மூர்க்கத்தனமான எண்ணங்களையும் கொடுக்கும்.பரல் 20 க்கும் குறைந்தால் சோம்பேறித்தனத்தை உண்டாக்கும். தைரியம் குறையும்.எதையும் முடிவெடுக்கும் ஆற்றல் குறையும்.எந்த ஊரு காரியத்தையும் முழுமையாக செய்து முடிக்க சிரமப்படுவார்


4 ல் பரல் லக்கினத்திற்கு இணையாக இருக்க வேண்டும்.2,7 பாவகத்திற்க்கு குறையக்கூடாது.20 க்கும் குறைந்தால் வீடு மனை அமைய தடையை ஏற்படுத்தும். உயர் கல்வியில் தடையை ஏற்படுத்தும்.தாய் வழி ஆதாயம் அனுபவிப்பதில் தடையை ஏற்படுத்தும். மனதில் தேவையற்ற பயம் கவலைகள் இருந்து கொண்டே இருக்கும். மேன்மையான வாழ்க்கை வாழ முடியாது 

5 ல் பரல்கள் 20 க்கும் குறைந்தால் புத்திர மேன்மையை குறைக்கும்.6 ம் பாவகத்தை விட குறைந்தால் கடன் நோய் போன்ற துன்பங்களை கொடுக்கும்.6 க்கு இணையாகவும் இருக்கக் கூடாது.5 ல் பரல்கள் குறைந்தால் போராட்டமான வாழ்க்கையை கொடுக்கும். எதையும் எதிர்கொள்ளும் தைரியத்தை குறைக்கும். குலதெய்வ அனுக்கிரகத்தை குறைக்கும். லக்னத்திற்கு இணையாக இருப்பது நல்லது 

6 ல் பரல்கள் லக்னத்திற்கு அதிகமானால் கடன் நோய் பிரச்சனைகளை கொடுக்கும். 4க்கு அதிகமானால் உடல் ஆரோக்கியத்தில் சுகமின்மையை கொடுக்கும்.20 க்கும் குறைந்தால் பிறவியிலேயே ஏதோ ஒரு நோய் இருக்கும்.20 முதல் 25 க்குள் இருப்பதுதான் நன்ற 40 க்கும் மேல் பரல்கள் இருந்தால் கடன் நோய் வழக்குகள் ஏதேனும் ஒன்று இறுதி வரை கூடவே இருக்கும் 

7 ல் பரல்கள் 2,4 க்கு இணையாக இருக்க வேண்டும்.7 ஐ விட 8 ல் பரல்கள் அதிகமானால் மணவாழ்க்கையில் பிரச்சனைகளைக் கொடுக்கும்.7 ல் பரல்கள் லக்னத்திற்கு இணையாகவோ அதிகமாகவோ இருந்தால் மனைவி வழி ஆதாயம் உண்டு.திருமணத்திற்கு பின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.7 ல் பரல்கள் அதிகமாகும் போது காம வேட்கையை கொடுக்கும்.மனைவியின் ஜாதகத்தில் இணையாக இருந்தால் சமன்படும்.20 க்கு குறைந்தால் திருமணம் அமைய தடையை ஏற்படுத்தும்.20க்கு குறையாமல் 30 க்கு அதிகமாகாமல் இருப்பது நல்லது. கணவனின் பரலை விட மனைவியின் பரல் அதிகமானால் மனைவிக்கு அடங்கிப் போக நேரிடும்

8 ல் பரல்கள் 20 முதல் 25 க்குள் இருப்பதுதான் சிறப்பு.லக்ன பரலை விட அதிகமாக கூடாது. 25 க்கும் அதிகமானால் ஆயுள் தீர்க்கம்.ஆனால் பிரச்சனைகள் மிகுதியாக இருக்கும்.30 க்கும் மேல் பரல்கள் இருந்தால் கடும் விபத்துக்கள் தற்கொலை எண்ணத்தை கொடுக்கும்.20 க்கும் குறைந்தால் அற்ப ஆயுளை கொடுக்கும்  

9 ல் பரல்கள் 5 க்கு இணையாக இருக்க வேண்டும். 9 ல் பரல்கள் கூடினால் ஆன்மீக ஈடுபாடு மகான்களின் தரிசனம் வெளிநாடு செல்லும் யோகம் பிறரால் மதிக்கப்படும் நிலை மற்றும் நிலையான புகழை கொடுக்கும்.35 க்கு மேல் இருப்பது நல்லது.குருவின் தனி பரலில் 5,9 ல் 5 க்கும் மேற்பட்ட பரல்கள் இருந்தால் ஆன்மீக வழியில் உயர்வை கொடுக்கும். 12 பாவகங்களில் 1,9 பாவகங்களில் பரல்கள் அதிகம் இருந்தால் அல்லது இணையாக இருந்தால் சிறப்பு .

10 ல் 25 முதல் 30 க்குள் இருந்தால் தொழில் நல்ல நிலையில் இருக்கும். லக்ன பரலுக்கு இணையாக இருக்க வேண்டும்.2,11 க்கு இணையாக இருந்தால் தொழிலில் நல்ல பொருளாதாரத்தை கொடுக்கும்.10 ஐ விட 6 ல் பரல்கள் அதிகமாகவோ இணையாகவோ இருந்தால் தொழிலில் கடனை ஏற்படுத்தும்.அடிமைத் தொழிலை செய்ய வைக்கும். 7 ம் பாவக பரலுக்கு இணையாக இருந்தால் கூட்டுத்தொழில் சிறப்பு.20 க்கும் குறைந்தால் சொந்தத்தொழில் சிறப்பாக இருக்காது.

11 ல் பரல்கள் 25 முதல் 30 க்குள் இருக்க வேண்டும்.2,10 க்கு இணையாக இருக்க வேண்டும்.7 ஐ விட 11 ல் பரல்கள் கூடினால் இருதார தோஷத்தை

கொடுக்கும். 6,8,12 க்கு இணையாக இருந்தால் நீடித்த பொருளாதாரத்தை கொடுக்காது.4 க்கு இணையாக இருந்தால் வீடு வண்டி வாகன யோகம் அமையும்.7 க்கு இணையாக இருந்தால் மனைவி வழி ஆதாயத்தை கொடுக்கும். 10 க்கு இணையாக இருந்தால் தொழில் வழி ஆதாயத்தை கொடுக்கும்.5 க்கு இணையாக இருந்தால் புத்தர்கள் வழி மேன்மையை கொடுக்கும். 4 க்கு இணையாக இருந்தால் தாய் வழி ஆதாயமும், 9 க்கு இணையாக இருந்தால் தந்தை வழி பூர்வீக ஆதாயத்தையும் கொடுக்கும்.11 ஐ விட 12 ல் பரல்கள் கூடினால் வரவுக்கு ஏற்ப செலவை கொடுக்கும் .

12 ல் பரல்கள் 6,8 க்கு இணையாக இருக்கலாம்.20 க்கும் குறைந்தால் இறுதிக்காலத்தில் தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கையை கொடுக்கும்.பிறரைச் சார்ந்து வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தும்.தான் சம்பாதித்த செல்வங்களை இறுதிக்காலத்தில் ஏதேனும் ஒரு வகையில் இழக்க நேரிடும் 

12 பாவகங்களிலும் பரல்கள் சராசரியாக 25 முதல் 30 க்குள் இருப்பது சிறப்பான அமைப்பு.