jaga flash news

Tuesday, 28 July 2026

யார் காலிலும் இந்த ராசிகள் விழக்கூடாது அது ஏன்?



யார் காலிலும் இந்த ராசிகள் விழக்கூடாது அது ஏன்?

27 நட்சத்திரங்களில்...உத்திரட்டாதி, அனுஷம், பூசம் என சனி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் யார் காலிலும் விழக்கூடாது. அதே போன்று, உங்கள் காலிலும் விழுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

மகரம், கும்பம் ராசியில் பிறந்தவர்களும்... கும்பம், மகரம் லக்னத்தில் பிறந்தவர்களும்... மற்றவர் காலில் விழுவதோ, அல்லது மற்றவர் உங்கள் காலில் விழுவதோ கூடாது.

ஏன் என்றால், இந்த ராசி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்... சனியின் ஆதிக்கம் பெற்றவர்கள்...

மகரம்

கும்பம்

இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், இந்த ராசி நட்சத்திரக்காரர்கள் பெற்றோர்கள், குறிப்பாக தாயின் காலை தொட்டு வணங்கும்போது எண்ணற்ற நற்பலன்களை அள்ளிக் கொடுப்பார், சனி பகவான்... இவர்களுக்கு சனியின் தாக்கம் அதிகமாக இருந்தால், தாயின் காலில் விழுந்து ஆசி பெற்றால் போதும்... சனி இவர்களின் கிட்ட நெருங்கவே நெருங்காது...

இவர்கள் பெற்றோரை தவிர வேறு யாரு காலிலும் விழக்கூடாது. அப்படி ஆசி பெறுவதற்காகவே, மற்றவர் காலில் விழுந்தாலும்... அதை ஊக்குவிக்கக் கூடாது. மாறாக அதை ஊக்குவித்தால், அவர்கள் ஜாதகத்தில் இருக்கும் புண்ணிய பலன் பயனற்று போகும்... இது ஆசி கொடுப்பவருக்கும், ஆசி வாங்குபவருக்கும் புண்ணிய பலனை கரைத்து பாவம் வந்து சேரும்...

சனி பகவானின் உரிய பகுதி பாதம் என்பதால்... அது கர்ம வினைகளை கொடுக்கும்.



No comments:

Post a Comment