மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்"
பொருள் : தம்மை மதியாதவர்களின் வீட்டு வாயிலில் அவரையும் ஒரு பொருட்டாகக் கருதிச் சென்று மிதியாதிருத்தல் கோடிபெறும்.
"உண்ணீர் உண்ணீரென்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெரும்"
பொருள் : உண்ணீர் உண்ணீர்” என்று உபசரியாதவர்கள் வீட்டில் உண்ணாதிருத்தல் கோடி பெறும். (“என்றூட்டாதார்” என்பதும் பாடம்.)
"கோடி கொடுப்பினும் குடிப்பிறந்தார் தம்முடனே
கூடுதலே கோடி பெறும்"
பொருள் : கோடிப் பொன் கொடுத்தாயினும் நல்ல குடிப்பிறப்பு உடையவர்களோடு. கூடியிருப்பது கோடி பெறும்.
"கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்"
பொருள் : எத்தனை கோடி தந்தாலும் தன்னுடைய நாவாவது கோணாதிருக்கும் (உண்மையே பேசும் தன்மை) கோடி பெறும்
ஒரு முறை சாேழ மன்னன் தன் அவை
புலவர்களை அழைத்து நாளை காலை விடியும்
பாேது நாலு காேடி பாடல்களை பாட வேண்டும்
என்று கூறுறினார்.ஒரே நாளில்
நாலுக் காேடி
பாடல்களை எப்படி பாடுவது என்று செய்வதறியாமல்
புலம்பிக் காெண்டிருந்தனர்.அப்பாேது
அவ்வழியாக வந்த அவ்வையார் என்ன விசயம்
என்பதை கேட்டறிந்தார். இவ்வளவு தான் விசயமா
என்று மேற்கண்ட பாடலை பாடி புலவர்களிடம்
காெடுத்தார்.அவர்களும் அடுத்த நாள் காலையில்
அந்த பாடலை பாடி மேலும் இது அவ்வையார்
எழுதிய பாடல் என்பதையும்
கூறினர்.இப்பாடலில் கோடி என்பது ஒரு கோடி பொன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பாடலில் ஒவ்வொன்றும் ஒரு கோடி பொன்னுக்கு இணையானவை என்று நான்கு செயல்களை ஒளவையார் குறிப்பிட்டுள்ளார்.
மகிழ்ச்சியடைந்த மன்னன்
அவ்வையாரை அழைத்து பரிசுகளை
வழங்கினார்.
இந்த பாடலின் விளக்கம்,
1. நல்ல பண்புகளை மதித்து நடக்காதவரின் வீட்டின் முன்பகுதியைக் கூட மிதிக்காமல் இருப்பது, செல்லாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும். (நம்மை மதிக்காதவரின் வீட்டுக்குச் செல்லாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது என்றும் பொருள் கூறுவார்கள் அதாவது மதியாதார் தலைவாசல் மிதியாதே!)
2. உண்ணுமாறு விரும்பிக் கேட்டுக் கொள்ளாதவரின் வீட்டில் உண்ணாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.
3. கோடி பொன்னைக் கொடுத்தாவது நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களுடன் சேர்ந்து வாழ்வது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.
4. பலகோடி பொன் கிடைப்பதாக இருந்தாலும் சொன்ன சொல்லிலிருந்து தவறாமல் வாழ்வது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.
No comments:
Post a Comment