jaga flash news

Monday 28 April 2014

ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது,மூலம் மாமனாருக்கு ஆகாது,ரோகினி தாய்மாமனுக்கு ஆகாது என்ற கருத்து நிலவுகிறது.

ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது,மூலம் மாமனாருக்கு ஆகாது,ரோகினி தாய்மாமனுக்கு ஆகாது என்ற கருத்து நிலவுகிறது.

இது சரி என்றும் தவறு என்றும் இருவேரு கருத்துக்கள் நிலவுகிறது.முதலில் சரி என்பதற்கான காரணத்தையும் பிறகு தவறு என்பதற்கான காரணத்தையும் 
காண்போம்.
ஆயில்யம் ஏன் மாமியாருக்கு ஆகாது?
                                               ஆயில்ய நட்சத்திரம் என்பது புதன் கிரகத்தின் மின் சக்தி அதிகம் உடைய நாள்.இப் புதனின் சக்தி சந்திரனின் சக்திக்கு எதிர் தன்மை உடையது.எனவே தான் புதனின் ஆதிக்கமான ஆயில்யத்தில் பிறந்த பெண்ணை திருமணம் செய்தால் அவ்வாறு திருமணம் செய்த ஆணின் உடலில் இம் மின் சக்தி தாம்பத்யத்தின்போது பரவுகிறது.இந்த புதனின் சக்தி பரவிய உடல் இதற்கு எதிரான சந்திரனின் மின் சக்தி யில் பிறந்த அல்லது சந்திரனின் மின் சக்தி அதிகம் உடையவர்களிடம் எல்லா வகையிலும் மனரீதியாக விலகிச்செல்லும் நிலை ஏற்படுகிறது.இந்த வகையில் சந்திரன் என்பது தாய் ஸ்தானத்தை குறிக்கும்.மேலும் அந்த தாயின் புதல்வன் உடலில் மனைவியின் மூலம் புதனின் மின் சக்திகள் கலந்ததால்,அது தாய் ஸ்தானத்திலுள்ள சந்திரனுக்கு எதிராகிறது."ஆக"
   1.ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை திருமணம் செய்தால் திருமணம் செய்த மாப்பிள்ளைக்கும் அவனது தாய்க்கும் அடிக்கடி சண்டை ஏற்படலாம்,மருமகளுக்கும் மாமியாருக்கும் அடிக்கடி சண்டை ஏற்படும்.                                          
       2.சந்திர ஆதிக்கம் உடைய மனிதர்கள்,பொருட்கள்,போன்றவற்றால் அந்த மாப்பிள்ளைக்கு உபயோகம் இருக்காது.மாற்றாக இழப்பு ஏற்படலாம்.இதன்காரணமாகவே ஆயில்யத்தில் பிறந்த பெண்ணை திருமணம் செய்யக்கூடாது என்ற கருத்து நிலவுகிறது.
ஆனால் இதுவே சரி என கூறமுடியாது.காரணம் புதன்,சந்திரன் இந்த இரு கிரகங்களை வைத்து நாம் இதை திட்டவட்டமாக சொல்லமுடியாது.அவர்களது ஜனன ஜாதகத்திலுள் மற்ற கிரக நிலைகளை வைத்தே இதை தீர்மானிக்கமுடியும். 
மேலும் அப்படியே கடுமையாக இருந்தாலும் ஆயில்யத்தில் பிறந்த பெண்ணை திருமணம் செய்தவர்கள் தாயுடன் வசிக்காமல் தனிக்குடித்தனம் இருந்தால் இது தானாகவே பரிகாரம் ஆகிவிடும் என்பது என்கருத்து.இது குறித்த உங்கள் கருத்துக்களை பதியவும்.

No comments:

Post a Comment