jaga flash news

Wednesday, 22 July 2015

THE SCIENCE BEHIND TEMPLE BELLS

THE SCIENCE BEHIND TEMPLE BELLS
Most of the old temples 🚩 have large bells 🔔 at the entrance of the temple 🚩 and you need to ring 🔔 them before you enter temple.
Temple bells🔔 have a scientific phenomena; it is not just your ordinary metal.
It is made of various metals including
🔴cadmium,
🔘lead,
🔶copper,
🔷zinc,
nickel,
🔱chromium
and
🔵manganese.
The proportion at which each one of them mixed ❄ is real science behind a bell. 🔔
Each of these bells 🔔 is made to produce such a distinct sound 🌟 that it can create unity of your 🌜left and right 🌛 brain.
The moment you ring that bell, 🔔 bell produces a sharp but lasting sound which lasts for minimum of seven 7⃣ seconds in echo 📡 mode good enough to touch your seven healing centres 😇 or chakras in your body.
The moment the bell 🔔 is sounded, your brain is emptied of all thoughts.
Invariably you will enter the state where you are very receptive. 😑
This Trans state is the one with awareness.
Your mind is so pre-occupied 😨 that the only way to awaken you is with a Shock!
Bell works as Anti-dote to your mind. Before you enter temple – to awake you and prepare you for taste of awareness is the real reason behind the tradition of ringing the temple bells.

Saturday, 11 July 2015

கோபத்தை வரையறுப்போமா !!!

கோபத்தை வரையறுப்போமா !!!
கோபம் மனதின் எதிர்பாராத வெளிப்பாடாகும். அதனை கீழ்க் கண்டவாறு வரையறுக்கலாம்.
மன வலிமை + ஒவ்வாமை = கோபம்
ஆம் ஒருவருக்கு எப்போது கோபம் வரும் அவர் ஒரளவுக்கு தைரியமாக & வலிமையாக இருக்கும்போது அவருக்கு ஒத்துவராத/ பிடிக்காத ஏதோ ஒரு விசயம் நடக்கும்போது (ஒவ்வாமை) தான் அவருக்கு கோபம் வரும்.
ஆம் ஒருவருக்கு தைரியம் & வலிமை குறையும்போது அவருக்கு ஒத்துவராத/ பிடிக்காத ஏதோ ஒரு விசயம் நடக்கும்போது (ஒவ்வாமை) அவருக்கு கோபத்திற்கு பதிலாக பயம் தான் வரும்.
இப்போது ஜோதிட ரீதியாக சிந்திப்போம், மன வலிமை , ஒவ்வாமை எனும் போது முதலில் நமக்கு வருகிற கோள் செவ்வாய், சற்று இன்னும் உள்ளே போகும்போது அதாவது சந்திரன் வீட்டில் செவ்வாய் நீச்சமாகிறார் அதுபோல செவ்வாய் வீட்டில் சந்திரன் நீச்சமாகிறார். இதன் மூலம் மனம் சாந்தமாக,பாசமாக, அன்பாக (சந்திரனாக) இருக்கும்போது கோபம் / மோடுமுட்டி தனம் இருக்காது. அது போன்று கோபம் / மோடுமுட்டி தனம் இருக்கும்போது மனம் சாந்தமாக,பாசமாக, அன்பாக (சந்திரனாக) இருக்காது. ஆம் ஒன்றிருந்தால் இன்னொன்று இல்லை, ஒன்றுக்கொன்று தொடர்பு உள்ளதால் மனத்திற்காக சந்திரனும் வருவார். மேலும் மன வலிமை , ஒவ்வாமை எனும்போது நமக்கு ஞாபகம் வரும் முக்கிய பாவகம் ஆறாம் பாவகம். அது தானே பகை / விரோதம்/ எரிச்சல் ஆகியவற்றை குறிக்கும் ஆகையால் செவ்வாய் , சந்திரன் & ஆறாம் பாவகம் ஆகிய இவற்றை இணைத்து விதிகள் உருவாக்கலாமா !!!!

Friday, 10 July 2015

மரண‌‌ம்

இதய‌ம் துடி‌ப்பது ‌‌நி‌ன்று‌வி‌ட்டா‌ல் அதை‌த்தா‌ன் மரண‌‌ம் எ‌ன்று நா‌ம் கு‌றி‌ப்‌பிடுவோ‌ம். ஆனா‌ல் மருத‌்துவ உலக‌ம் எ‌ன்ன சொ‌ல்‌கிறது தெ‌ரியுமா?


உட‌ல் செ‌ல்க‌ளி‌ன் இய‌க்க‌ம் ‌நி‌ன்று போவதுதா‌ன் மரண‌ம் எ‌ன்‌கிறது மரு‌த்துவ‌ம்.


இதய‌ம் செய‌ல்படாம‌ல் ‌நி‌ன்று ‌வி‌ட்ட ‌பிறகு‌ம், மூளையானது இய‌ங்‌கி‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம். ‌சில நேர‌ங்க‌ளி‌ல் 2 ம‌ணி நேர‌ம் வரை கூட மூளை இய‌ங்‌கி‌க் கொ‌ண்டிரு‌ப்பது உ‌ண்டு. இது ‌கி‌ளி‌னி‌க்க‌ல் டெ‌த் எ‌ன்று அழை‌க்க‌ப்படு‌கிறது.


‌பி‌ன்ன‌ர்தா‌ன் மூளை‌யி‌ன் இய‌க்கமு‌ம் ‌நி‌ன்று போ‌கிறது. இதை செ‌ரிபர‌ல் டெ‌த் எ‌ன்று கு‌றி‌ப்‌பிடு‌கிறா‌ர்கள‌். இ‌ப்போதுதா‌ன் ஒருவ‌ர் உ‌ண்மை‌யிலேயே மரண‌ம் அடை‌ந்ததாக கருத‌ப்படு‌கிறது.


‌விப‌த்‌தி‌ல் ‌சி‌க்‌கி தலை‌யி‌ல் காய‌ம் அடை‌ந்தவ‌ர்களு‌க்கு ‌சில சமய‌ங்க‌ளி‌ல் மூளை தனது இய‌க்க‌த்தை ‌நிறு‌த்‌தி‌யிரு‌க்கு‌ம். ஆனா‌ல் இதய‌ம் இய‌ங்‌கி‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம். இ‌ப்படி‌ப்ப‌ட்டவ‌ர்களது உட‌ல்க‌ள்தா‌ன் தானமாக அ‌ளி‌க்க‌ப்படு‌கிறது.


எனவே, மூளையு‌ம், இதயமு‌ம் த‌ங்களது இய‌க்க‌த்தை ‌நிறு‌த்துவதே மரணமாகு‌ம்

துன்பம்‏

துன்பம்‏!

பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும்

- ஸ்காட்லாந்து பொன்மொழி


துன்பம் துன்பம் என்று சலித்துக் கொண்டு என்ன பயன்? உடம்பிலிருக்கும் ஒன்பது ஓட்டைகளோடு அதுவும் பத்தாவது ஓட்டை என்று முடிவு கட்டு : வாழ்வுக்கு நியாமும், நெஞ்சிற்கு நிம்மதியும் கிடைக்கும்.

- கவியரசு கண்ணதாசன்


உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை; தீமையையும் விரட்டுகிறது.

- வால்டேர்


அழகான பெண், கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம், இரண்டாமவள் ஒரு புதையல்

- நெப்போலியன்

ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கிவிடுகிறாள்.

 - ஆஸ்கார் ஒயில்ட்


பெண்களில் இரண்டே பிரிவினர் தாம் இருக்கிறார்கள். ஒன்று அழகானவர்கள். மற்றொன்று அழகானவர்கள் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள்

- பெர்னாட்ஷா

அழகான பெண்களுக்குப் பிறக்கும்போதே நிச்சய தார்த்தம் நடந்து விடுகிறது.

- ஹாபர்ட்.

பெண் இல்லாத வீடும், வீடு இல்லாத பெண்ணும் மதிப்பு இல்லாதவை!

 - பாலஸ்தீனப் பழமொழி

ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

- ப்ரெட்ரிக் நீட்சே

நீங்கள் போருக்குச் செல்லும்போது ஒரு தடவை பிரார்த்தனை செய்யுங்கள். கடல் பயணத்திற்குச் செல்லும்போது இரண்டு தடவை பிரார்த்தனை செய்யுங்கள் ஒரு பெண்ணை மனைவியாக ஏற்கும் போது மூன்று தடவை பிரார்த்தனை செய்யுங்கள்.

 - வின்ஸ்டர் லூயிஸ்

தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறுப்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்


குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்


சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான்


வெற்றியின் ரகசியம் - எடுத்த கரியத்தில் நிலையாக இருத்தல் *) பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.


மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!


அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!


செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை


நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை!

பறக்க விரும்புபவனால் படர முடியாது.

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.

ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்

தலைமுடி சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு!

தலைமுடி சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு!

 >> முருங்கை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு வரா மல் தடுக்கலாம்.


 >> முருங்கை கீரையுடன் மிளகு சேர்த்து அரைத்து தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டால் ரத்தசோகை குணமாகும்.


 >> மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் கலந்து அரைத்து தலையில் புழு வெட்டு உள்ள இடத்தில் பூசினால் அந்த இடத்தில் முடி முளைக்கும்.


 >> மருதாணி இலை, அவுரி இலை இரண்டையும் தேங் காய் எண்ணெயில் காய்ச்சி வடிகட்டி தலையில் தேய்த்து வந்தால் முடி கருப்பாக மாறும்.


 >>மருதாணி இலைகளை நன்றாக அரைத்து சிறு சிறு உருண்டைகளாக வெயிலில் காய வைத்து தினமும் ஒரு உருண்டையை தேங்காய் எண்ணெயில் கரைத்து தலையில் தடவி வந்தால் முடிவளரும்.


 >> பொடுதலைக் கீரைச்சாற்றில் வசம்பு, வெள்ளை மிளகு இரண்டையும் சம அளவில் எடுத்து ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி ஒரு ஸ்பூன் பொடியை நல்லெண்ணெயில் குழைத்து தலைக்குத் தேய்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து குளித்தால் பொடுகு தொல்லை தீரும்

தினமும் தயிர் சாப்பிடுவது நல்லதா? யாரெல்லாம் சேர்த்துக்கொள்ளக் கூடாது?

புரதம், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி 12, ரிபோஃப்ளோவின் எனப்படும் வைட்டமின் பி2, கொழுப்புச் சத்து எனப் பல சத்துகள் தயிரில் உண்டு. 100 மி.லி தயிரில் 60 கலோரி கிடைக்கிறது. 


ஒல்லியாக இருப்பவர்கள், நுரையீரலில் பிரச்னை உள்ளவர்கள் நிச்சயம் தயிர் சாப்பிட வேண்டும். மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகள் செரிமானமாக நேரம் எடுத்துக்கொள்ளும் உணவுகள், பிரியாணி போன்ற உணவைச் சாப்பிடும்போது தயிர் அல்லது மோர் சாப்பிட்டால் நல்லது. ஏனெனில், இவை உணவு செரிக்கத் தேவையான பாக்ட்டீரியாக்களை உருவாக்குகின்றன. 


அதனால்தான் தமிழர்கள் தங்கள் உணவில் கடைசியாக தயிர் அல்லது மோர் சேர்த்துக் கொள்கின்றனர். எடை அதிகரிக்க விரும்புபவர்கள், தயிரில் சர்க்கரை கலந்து லஸ்ஸி போல் சாப்பிடலாம். 


ஆனால், இரவில் தயிர் சேர்த்துக்கொண்டால், உடனடியாகத் தூங்க செல்லாமல், 10 நிமிடம் நடைப் பயிற்சி செய்தபின்னர்தான் படுக்கைக்குச் செல்லவேண்டும். உடல் பருமன் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் அதிக அளவு தயிர் சேர்த்துக்கொள்ளக் கூடாது

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது

தமிழக கலாச்சாரங்களில்முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது. இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது.


விருந்தினர்களை அதில் உட்காரவைத்து பரிமாறுவதுதான் நாகரீகம் சௌகரியம் என ஆகிவிட்டது ... .முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவதுதான் கெளரவம்..ஆனால் இப்போது டைனிங் டேபிள்....இது சரியா தவறா ?!!


முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன?

சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும்.


சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது. காலை மடக்கி சுக ஆசனத்தில் அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும்.

இஞ்சிப் பால்

கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க.


ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி?
ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும்.


அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும்.


அட. இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்?


1. நுரையீரல் சுத்தமாகும்.

2. சளியை ஒழுச்சு கட்டிடும்.

3. வாயுத் தொல்லை என்பதே வராது.

4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும்.

5. தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம்.

6. அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும்.

7. ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்.

8. இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி இதுக்கு இருக்கு.

9. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும்.

10. தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்மில்லே.

அதுசரி, இந்த பாலை எல்லாருமே சாப்பிடலாமா?

3 வயசுக்கு மேல யார் வேணுமின்னாலும் சாப்பிடலாம்.

ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், மலவாயில் புண், எரிச்சல் இருப்பவர்கள் தவிர்க்கனும்.

மூக்குத்தி

மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை,காற்றை வெளியேற்றுவதற்கு. கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம். ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும். ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள். 


இதற்கு காரணம் இடதுகாலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம், பிராத்தனைஎல்லாம் கண்டிப்பாக பலன் தரும். அதனால் இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும். அதேமாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி. நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதலாமஸ் என்ற பகுதி இருக்கிறது.


நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன. அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன.இதனைச் செயல்படுத்துவதற ்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது. இப்படிஇந்தப் பகுதியை அதிகமாக செயல் படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாகசெயல் படவைக்கும். 


இடது பக்கத்தில் முளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும். இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்துவலது பக்கமாக வேலை செய்யவைக்கிறோம். அதனால்வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது.


பெண்கள் முக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல்சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும். இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வுபோல மெல்லிய துவாரங்களாக இருக்கும். ஆலம் விழுதுகள் போல உள்ளமூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ளவெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும்

Wednesday, 8 July 2015

ஊதியக்காரகன் சூரியன்

ஊதியக்காரகன் சூரியன்
------------------------------
ஒருவரின் சம்பளம் அல்லது ஊதிய பலம் சூரியன் கொண்டே நிர்ணயம் செய்யப்பட்டுகிறது. கீழ்கண்ட நிலைகளில் சூரியன் இருக்க வேலை கிடைப்பதில் சிரமம், ஊதியம் பெறுதலில் சிரமம் அல்லது ஊதிய உயர்வு பாதிக்கப்படும்.
1. சூரியன் அசுப ஆதிபத்ய அதிபதி சாரம் பெறுதல்
2. சூரியன் சனி பார்வையில் இருத்தல்.
3. சூரியன் ராகு கேதுவால் பாதிக்கப்படுதல்
4. சூரியன் பாதகஸ்தானத்தில் இருத்தல்
5. சூரியன் பாதகாதிபதி சாரம் பெறுதல்.
6. சூரியன் உடன் சஷ்ட அஷ்ட அதிபதிகள் சேர்க்கை.
7. சூரியன் நீச்சம்.
8. சூரியன் விரையத்தில் (12) இருத்தல்.
9. சூரியன் சுக்கிரன் உடன் சேர்க்கை
10. சூரியன் சாரம் கொடுத்த நட்சத்திர அதிபதி வக்கிரமடைதல்.
விதிவிலக்குகள்
--------------------
சூரியன் குருவுடன் சேர்க்கை அல்லது பார்வையில் இருத்தல். சூரியன் திக்பலம் பெறல்.
பரிகாரம்
-----------
அதிகாலை சூரிய நமஸ்காரம், 48 முறை சூரிய காயத்ரி ஜெபம். வருடத்தில் ஒருமுறை ஞாயிறு அன்று சூரிய ஹோரையில் சிவபெருமான் வழிபாடு. பிரதோச வழிபாடு. தந்தையிடம் ஆசி பெறல்.
நன்றி

வழக்கை

சனி லக்கனத்திற்கு அருகில் இருந்தால் 'வழக்கை' விழாது

பகவத் கீதையில் சாதி.

நான்கு வர்ணங்கள்-ஒரு தெளிவு!!!
1)பிராம்மண (அந்தணன்), 
2)க்ஷத்ரிய (அரசன்), 
3)வைஷ்ய (வணிகன்), 
4)சூத்திரர் (வேளாளன்)!!!
------------------------------------------------
கடந்த நூற்றாண்டு வரை இந்தியா சந்தித்த மிகவும் மட்டமான, சாபக்கேடான ஒன்று சாதிப்பாகுபாடுகளும், சாதிக்கொடுமையும். இன்னமும் பல இடங்களில் மனிதன் சாதியின் பெயரால் துன்புறுத்தப்படுவது நம் நாட்டின் துர்பாகியம். இந்தியாவில் மட்டுமல்ல, மேலைநாடுகளிலும் கருப்பு வெள்ளை, போன்ற நிற வெறி, மதரீதியான பிரிவினை போன்ற கொடுமைகள் நடந்து தான் வருகின்றன.
உண்மையில் இந்த வர்ணாஸ்ரம பிரிவுகள் மக்களிடையே ஏற்றத்தாழ்வை உருவாக்க உண்டாக்கப்பட்டதா?
உயர்வு தாழ்வு காட்டி ஒருவரை ஏய்த்து இன்னொருவர் வயிறு வளர்க்க உண்டாக்கப்பட்ட சூழ்ச்சியா?
வர்ணாஸ்ரம கொள்கை ஏன்?? பார்ப்போம்.
பண்டைய காலங்களில் வர்ணங்கள் ஒருவனின் பிறப்பால் கருதப்படவில்லை. அவனின் குணத்தாலும் அவன்செய்யும் தொழிலாலும் கருதப்பட்டது. ஒரு நிர்வாகத்தில் உயர்ந்த பதவியில் இருப்பவர், அவருக்கு கீழிருக்கும் மேலாளர், வருக்கு அடிபணியும் உதவி மேலாளர், இவர்களுக்கு வேலை செய்யும் தொழிலாரர்கள் இருப்பதைப்போன்று, அன்று 
ஒன்றை ஒருவருக்கு கற்பிப்பவர்கள் - பிராமணன்.
மக்களை காக்கும்பொருட்டு போர் செய்பவன் - க்ஷத்ரியன்.
வாணிபம் செய்பவன் - வைஷ்யன். 
மேலுள்ள மூவருக்கும் பணிசெய்பவன் - சூத்திரன். 
ஆக அன்றுமட்டும் இல்லை, இன்றும் ஆசிரியர், நம்மைக்காக்க போர் செய்யும் போர்வீரர்கள், தொழில் செய்பவர்கள், இவர்களுக்கு பணிசெய்பவர்கள் என்று உள்ளது. ஆனால் இதில் ஏற்றத்தாழ்வு காண்பது மகா மகா முட்டாள்தனம்.
*திரு.B.R.அம்பேத்காரின் கருத்து. 
நம் இந்திய அரசியல் சாசனத்தி முன்னின்று இயற்றிய திரு.B.R.அம்பேத்கார் வர்ணாஸ்ரம கொள்கைகளை எதிர்த்து, ஹிந்து மதத்தை வெறுத்து புத்தமதம் புகுந்தவர். அவர் ஒரு இடத்தில் வர்ணாஸ்ரமம் எப்படி உருவாயிற்று என்று கூறுகின்றார்., "வரலாற்றுக் காலங்களில் ஒருவனின் பிரம்மனனா, க்ஷற்றியனா, வைச்யனா, சூத்திரனா? என்பது அவன் பிரப்பைவைத்து நிர்ணயிக்கப்படவில்லை. முதலில் ஐந்து வயது நிரம்பிய குழந்தையை ஒரு நல்ல குருகுலத்தில் கொண்டு சேர்ப்பார். பிறகு அந்தக் குழந்தை குறிப்பிட்ட வருடங்கள் கண்காநிக்கப்டும். அவனுக்கு பொதுவாக அனைத்து கல்விகளும் கற்பிக்கப்டும். வேதம், போர்க்கலைகள், கணிதம், குயவு, விவசாயம், வானவியல்...... போன்ற பொதுக்கல்வி அளிக்கப்படும். குறிப்பிட்ட வயது ஆனவுடன் அக்குழந்தைகளுக்கு அவர்கள் கற்ற அனைத்திலிருந்தும் பொதுத்தேர்வு நடத்தப்படும். அதில் ஒருவருக்கு புத்திக்கூர்மை, பொறுமை, பணம் பொருள் மீது ஆசை இன்மை, உண்மை, வாய்மை, தயை, ஒருவருக்கு புத்தி கூறி அவரை நல்வழிக்கு நடத்தும் திறம் இருந்தால் அவன் பிராம்மணன் எனவும், மனதில் அபார தயிரியமும், வீரம் மிகுந்தும், அனைவரையும் காக்கும் பொருட்டு தன் இன்னுயிரையும் தியாகம் செய்யும் குணம் இருந்தால் அவன் க்ஷத்ரியன் எனவும், பணத்தில் ஆசை அதிகமாய், வியாபார உக்திகள் நிறைந்தவனாய், இருப்பவன் வைஷ்யன் எனவும், உடல் உழைப்பு மிகுந்தவன், இயற்கையை நன்கு அறிந்து மழை, புயல், போன்றவற்றை கணிக்கும் திறம் மிகுந்து இருக்கும் ஆற்றல் பல மிக்கவர் சூத்திரர் எனவும் கூறப்பட்டனர். ஆனால் அன்று ஒருவருக்கொருவர் ஏற்றத்தாழ்வு பார்க்கவில்லை. ஏற்றத்தாழ்வு காலப்போக்கில் வந்தது" என்று அருமையாக கூறுகின்றார். 
இந்த கருத்து நிச்சயம் ஏற்கப்பட வேண்டியதே.
பாரதத்தில் ஒரு சுலோகம் உள்ளது. அது கூறுவதாவது, 
"பிறப்பால் அனைவருமே சூத்திரர் தான்.
அவனுக்கு தகுந்த சம்ஸ்காரங்கள் செய்வித்தால் அவன் துவிஜன் என்றாவான். 
வேதங்களை படித்தான் அவன் விப்ரன் ஆவான்.
எப்பொழுது ஒருவன் வேற்றுமைகளை கடந்து, அனைத்தும் ஒன்றே என்னும் பிரம்ம தத்வத்தை அறிகிறானோ அப்பொழுதே அவன் பிராம்மணன் ஆவான்"
வேதத்தில் புருஷ சூக்தம் என்ற மகத்தான துதி உள்ளது. அதன் கூற்றாவது, "பிராம்மணன் இறைவனின் முகத்தில் இருந்து தோன்றியவன். தோள்களில் இருந்து ராஜாக்கள் (அ) க்ஷத்ரியர் வந்தனர், தொடைகளில் தோன்றியவர் வைஷ்யர், இறைவனின் திருப்பாதங்களில் இருந்து வந்தவர் சூத்திரர் ஆவார்" 
இங்கு முகம் என்பது அறிவையும், தோள் என்பது வலிமையையும், தொடை என்பது சாமர்த்தியத்தையும், பாதம் என்பது உழைப்பையும் குறிக்கும். 
இதன் உட்பொருள் ஆவது, "அறிவுள்ளவன் அந்தணன், வலிமை மிக்கவன் அரசன், சாதுர்யம் மிக்கவன் வாணிகன் , உழைப்பு மிக்கவன் வேளாளன்" என்பது.
மறைகளின் கூற்றும் பிரிவுகள் பிறப்பால் வருவது அல்ல என்பதுதான்.
நம் மத நூல்களை பார்க்கும்போதும் முதலில் இந்த வேறுபாடுகள் இருந்ததாக தெரியவில்லை. வேதங்களை இயற்றிய வியாசர் "ஸ்ரீமத் பாகவதம்" என்னும் மகத்தான புராணம் ஒன்றை இயற்றியுள்ளார். அதில் அவர், "சத்யவ்ரதன் மகாதவம் செய்து பிறகு ஸ்ரார்ததேவ மனுவாகப் பிறந்து, மனுவில் இருந்து உலகம் சிருஷ்டி ஆன போது அனைவருமே பிராமணர்களாக இருந்தனர்" என்று கூறுகின்றார். இங்கு பிராமணர் என்பது "ஞானிகள்" என்பதனை குறிக்கும். வியாசரைப்பொருதவரை, உலகத்தில் ஆரம்பத்தில் மனிதர்கள் அனைவருமே ஜாதி, குல, வர்ண வேறுபாடின்றி அனைவருமே ஞானிகளாக இருந்தனர் என்பதுவே. 
பிறகு மனிதர்களின் குணமும் ஸ்வபாவமும் மாற, உலகின் போக்கு சீர்குலைய, இன்று, நாட்டை இயக்கம் மந்திரிகள், அவர்களுக்கு ஆலோசனை வழங்கும் I.A.S.அதிகாரிகள், அவர்களுக்கு அடிபணியும் காவல்துறை, அரசுக்கு கீழ்படியும் அரசு ஊழியர்கள் இருப்பதைப்போன்று, அன்று ரிஷிகள், பிராம்மண க்ஷத்ரிய வைஷ்ய சூத்ரர் என்னும் பிரிவாக மக்களை பிரித்து உலகின் போக்கை சீர்செய்தனர். ஆனாலும் பிறப்பால் ஒருவன் பிராம்மனனாக்வோ, க்ஷத்ரியனாகவோ, வைஷ்ய சூதிரராகவோ கருதப்படவில்லை. அவர்களின் குணமே ஒருவரின் வர்னாஸ்ராமத்தை நிர்ணயித்தது. 
அதற்க்கு ஆதாரம், 
வேதங்களை இயற்றிய வியாசரின் தாய் ஒரு மீனவப்பெண்.
ஆதிகவியாக விளங்கும் வால்மீகி முற்காலத்தில் ஒரு திருடன்.
மிகவும் உயர்ந்த "காயத்ரி" மந்திரத்தை உலகோருக்கு தந்த விஸ்வாமித்ரர், பிறப்பால் கௌசிகன் என்னும் ஒரு க்ஷத்ரிய ராஜன். 
பிறப்பால் இவர்கள் பிராமணர்கள் இல்லையானாலும் இவர்களின் குணத்தால் இவர்கள் பிராமணர்கள் ஆனார்கள். 
பரசுராமரும், ராஜகுரு துரோணாச்சாரியாரும் பிறப்பால் அந்தணர்கள். அவர்களின் போர் செய்யும் குணத்தால் க்ஷத்ரியராக கருதப்பட்டனர். 
இராவணன் பிறப்பால் பிராம்மணன். ஆனாலும் அவனது மோகத்தாலும், வெறியாலும், ஆசையின் மிகுதியாலும், அதர்மத்தாலும் அவன் அசுரனாக ஆனான்.
பாகவதத்தில் "ரிஷபதேவர்" என்னும் மகா ராஜஞானியின் சரித்திரம் இடம்பெற்றுள்ளது. அவர் பிறப்பால் க்ஷத்ரியர். ஆனாலும் அவரின் ஞானத்தால் அவர் பிராம்மனராகவே கருதப்படுகிறார். அவருக்கு நூறு ஆண் பிள்ளைகள். அவர்களில் 81 பிள்ளைகள் தவம் செய்ய இச்சைபூண்டதால் அவர்கள் பிராமணர்கள் ஆனார்கள். ஒன்பது பேர் நாட்டை ஆளும் க்ஷத்ரியர் ஆனார்கள். மற்றயோர் வர்ணங்கள் அனைத்தையும் துறந்து, பெயர், ஊர், ஜாதி, கோத்திரம் ஏதும் அற்ற அவதூதர்கள் ஆனார்கள். 
இவைகளை ஆதாரமாககொண்டே, பிரிவுகள் பிறப்பால் வருவது இல்லை என ஆணித்தனமாக கூறலாம். 
குணத்தால் ஒருவர் அங்கீகரிக்கப்பட வேண்டுமே தவிர பிறப்பால் அல்ல. 
இன்றைய காலகட்டத்தில் வர்ணங்கள், ஜாதிகள் ரீதியாக வித்தியாசம் பார்ப்பது மகா முட்டாள்தனம். இன்று மட்டும் அல்ல என்றுமே ஒருவனை பிறப்பால் ஏற்றத்தாழ்வு பார்ப்பது மிகவும் பாவமான, மனிதத்தன்மை அற்ற ஒரு செயல். அவரவர் திறமைக்கு ஏற்ப அவனவன் உயர்வான். பிறக்கும்போது அனைவருமே சமம் தான். நீ பிறந்தாற்போல தான் நானும், அனைவரும் பிறந்தோம். இதில் ஏற்றத்தாழ்வு எங்கிருந்து வந்தது?? மனிதனின் மனதில் இருந்துதான். மனிதனின் சுயநலத்தில் இருந்துதான். 
எவ்வாறு அரசாங்கம் இயற்றும் சட்டத்தை அதில் உள்ள ஓட்டையை வைத்தே நமது சுயநலத்திற்காக சட்டத்தை மீறுகிறோமோ, அவ்வாறே வர்ணாஸ்ரம கொள்கைகளும் மீறப்பட்டன.
வர்ணாஸ்ரம கொள்கைகள், ஜாதி பாகுபாடுகள் ஏதோவொரு காலகட்டதிர்க்காக, அன்றைய சமூக சூழலை சீர்செய்ய உருவாக்கப்பட்டவை. ஆனால், அவைகளே இன்றைய சமூக நிம்மதியை சீர்குலைத்து, மக்களிடையே பிரிவினையை உண்டக்குமேயனால் அவைகள் நிச்சயம் குப்பையில் போடப்படவேண்டியவையே. கல்வியாலும், அறிவாலும் அனைவருமே சமாக கருதப்படும் இன்றைய சூழலில், அன்றைய கொள்கைகள் பயனற்றவை!!!!

நான்கு வர்ணங்கள்-ஒரு தெளிவு!!!

நான்கு வர்ணங்கள்-ஒரு தெளிவு!!!
1)பிராம்மண (அந்தணன்), 
2)க்ஷத்ரிய (அரசன்), 
3)வைஷ்ய (வணிகன்), 
4)சூத்திரர் (வேளாளன்)!!!
------------------------------------------------
கடந்த நூற்றாண்டு வரை இந்தியா சந்தித்த மிகவும் மட்டமான, சாபக்கேடான ஒன்று சாதிப்பாகுபாடுகளும், சாதிக்கொடுமையும். இன்னமும் பல இடங்களில் மனிதன் சாதியின் பெயரால் துன்புறுத்தப்படுவது நம் நாட்டின் துர்பாகியம். இந்தியாவில் மட்டுமல்ல, மேலைநாடுகளிலும் கருப்பு வெள்ளை, போன்ற நிற வெறி, மதரீதியான பிரிவினை போன்ற கொடுமைகள் நடந்து தான் வருகின்றன.
உண்மையில் இந்த வர்ணாஸ்ரம பிரிவுகள் மக்களிடையே ஏற்றத்தாழ்வை உருவாக்க உண்டாக்கப்பட்டதா?
உயர்வு தாழ்வு காட்டி ஒருவரை ஏய்த்து இன்னொருவர் வயிறு வளர்க்க உண்டாக்கப்பட்ட சூழ்ச்சியா?
வர்ணாஸ்ரம கொள்கை ஏன்?? பார்ப்போம்.
பண்டைய காலங்களில் வர்ணங்கள் ஒருவனின் பிறப்பால் கருதப்படவில்லை. அவனின் குணத்தாலும் அவன்செய்யும் தொழிலாலும் கருதப்பட்டது. ஒரு நிர்வாகத்தில் உயர்ந்த பதவியில் இருப்பவர், அவருக்கு கீழிருக்கும் மேலாளர், வருக்கு அடிபணியும் உதவி மேலாளர், இவர்களுக்கு வேலை செய்யும் தொழிலாரர்கள் இருப்பதைப்போன்று, அன்று 
ஒன்றை ஒருவருக்கு கற்பிப்பவர்கள் - பிராமணன்.
மக்களை காக்கும்பொருட்டு போர் செய்பவன் - க்ஷத்ரியன்.
வாணிபம் செய்பவன் - வைஷ்யன். 
மேலுள்ள மூவருக்கும் பணிசெய்பவன் - சூத்திரன். 
ஆக அன்றுமட்டும் இல்லை, இன்றும் ஆசிரியர், நம்மைக்காக்க போர் செய்யும் போர்வீரர்கள், தொழில் செய்பவர்கள், இவர்களுக்கு பணிசெய்பவர்கள் என்று உள்ளது. ஆனால் இதில் ஏற்றத்தாழ்வு காண்பது மகா மகா முட்டாள்தனம்.
*திரு.B.R.அம்பேத்காரின் கருத்து. 
நம் இந்திய அரசியல் சாசனத்தி முன்னின்று இயற்றிய திரு.B.R.அம்பேத்கார் வர்ணாஸ்ரம கொள்கைகளை எதிர்த்து, ஹிந்து மதத்தை வெறுத்து புத்தமதம் புகுந்தவர். அவர் ஒரு இடத்தில் வர்ணாஸ்ரமம் எப்படி உருவாயிற்று என்று கூறுகின்றார்., "வரலாற்றுக் காலங்களில் ஒருவனின் பிரம்மனனா, க்ஷற்றியனா, வைச்யனா, சூத்திரனா? என்பது அவன் பிரப்பைவைத்து நிர்ணயிக்கப்படவில்லை. முதலில் ஐந்து வயது நிரம்பிய குழந்தையை ஒரு நல்ல குருகுலத்தில் கொண்டு சேர்ப்பார். பிறகு அந்தக் குழந்தை குறிப்பிட்ட வருடங்கள் கண்காநிக்கப்டும். அவனுக்கு பொதுவாக அனைத்து கல்விகளும் கற்பிக்கப்டும். வேதம், போர்க்கலைகள், கணிதம், குயவு, விவசாயம், வானவியல்...... போன்ற பொதுக்கல்வி அளிக்கப்படும். குறிப்பிட்ட வயது ஆனவுடன் அக்குழந்தைகளுக்கு அவர்கள் கற்ற அனைத்திலிருந்தும் பொதுத்தேர்வு நடத்தப்படும். அதில் ஒருவருக்கு புத்திக்கூர்மை, பொறுமை, பணம் பொருள் மீது ஆசை இன்மை, உண்மை, வாய்மை, தயை, ஒருவருக்கு புத்தி கூறி அவரை நல்வழிக்கு நடத்தும் திறம் இருந்தால் அவன் பிராம்மணன் எனவும், மனதில் அபார தயிரியமும், வீரம் மிகுந்தும், அனைவரையும் காக்கும் பொருட்டு தன் இன்னுயிரையும் தியாகம் செய்யும் குணம் இருந்தால் அவன் க்ஷத்ரியன் எனவும், பணத்தில் ஆசை அதிகமாய், வியாபார உக்திகள் நிறைந்தவனாய், இருப்பவன் வைஷ்யன் எனவும், உடல் உழைப்பு மிகுந்தவன், இயற்கையை நன்கு அறிந்து மழை, புயல், போன்றவற்றை கணிக்கும் திறம் மிகுந்து இருக்கும் ஆற்றல் பல மிக்கவர் சூத்திரர் எனவும் கூறப்பட்டனர். ஆனால் அன்று ஒருவருக்கொருவர் ஏற்றத்தாழ்வு பார்க்கவில்லை. ஏற்றத்தாழ்வு காலப்போக்கில் வந்தது" என்று அருமையாக கூறுகின்றார். 
இந்த கருத்து நிச்சயம் ஏற்கப்பட வேண்டியதே.
பாரதத்தில் ஒரு சுலோகம் உள்ளது. அது கூறுவதாவது, 
"பிறப்பால் அனைவருமே சூத்திரர் தான்.
அவனுக்கு தகுந்த சம்ஸ்காரங்கள் செய்வித்தால் அவன் துவிஜன் என்றாவான். 
வேதங்களை படித்தான் அவன் விப்ரன் ஆவான்.
எப்பொழுது ஒருவன் வேற்றுமைகளை கடந்து, அனைத்தும் ஒன்றே என்னும் பிரம்ம தத்வத்தை அறிகிறானோ அப்பொழுதே அவன் பிராம்மணன் ஆவான்"
வேதத்தில் புருஷ சூக்தம் என்ற மகத்தான துதி உள்ளது. அதன் கூற்றாவது, "பிராம்மணன் இறைவனின் முகத்தில் இருந்து தோன்றியவன். தோள்களில் இருந்து ராஜாக்கள் (அ) க்ஷத்ரியர் வந்தனர், தொடைகளில் தோன்றியவர் வைஷ்யர், இறைவனின் திருப்பாதங்களில் இருந்து வந்தவர் சூத்திரர் ஆவார்" 
இங்கு முகம் என்பது அறிவையும், தோள் என்பது வலிமையையும், தொடை என்பது சாமர்த்தியத்தையும், பாதம் என்பது உழைப்பையும் குறிக்கும். 
இதன் உட்பொருள் ஆவது, "அறிவுள்ளவன் அந்தணன், வலிமை மிக்கவன் அரசன், சாதுர்யம் மிக்கவன் வாணிகன் , உழைப்பு மிக்கவன் வேளாளன்" என்பது.
மறைகளின் கூற்றும் பிரிவுகள் பிறப்பால் வருவது அல்ல என்பதுதான்.
நம் மத நூல்களை பார்க்கும்போதும் முதலில் இந்த வேறுபாடுகள் இருந்ததாக தெரியவில்லை. வேதங்களை இயற்றிய வியாசர் "ஸ்ரீமத் பாகவதம்" என்னும் மகத்தான புராணம் ஒன்றை இயற்றியுள்ளார். அதில் அவர், "சத்யவ்ரதன் மகாதவம் செய்து பிறகு ஸ்ரார்ததேவ மனுவாகப் பிறந்து, மனுவில் இருந்து உலகம் சிருஷ்டி ஆன போது அனைவருமே பிராமணர்களாக இருந்தனர்" என்று கூறுகின்றார். இங்கு பிராமணர் என்பது "ஞானிகள்" என்பதனை குறிக்கும். வியாசரைப்பொருதவரை, உலகத்தில் ஆரம்பத்தில் மனிதர்கள் அனைவருமே ஜாதி, குல, வர்ண வேறுபாடின்றி அனைவருமே ஞானிகளாக இருந்தனர் என்பதுவே. 
பிறகு மனிதர்களின் குணமும் ஸ்வபாவமும் மாற, உலகின் போக்கு சீர்குலைய, இன்று, நாட்டை இயக்கம் மந்திரிகள், அவர்களுக்கு ஆலோசனை வழங்கும் I.A.S.அதிகாரிகள், அவர்களுக்கு அடிபணியும் காவல்துறை, அரசுக்கு கீழ்படியும் அரசு ஊழியர்கள் இருப்பதைப்போன்று, அன்று ரிஷிகள், பிராம்மண க்ஷத்ரிய வைஷ்ய சூத்ரர் என்னும் பிரிவாக மக்களை பிரித்து உலகின் போக்கை சீர்செய்தனர். ஆனாலும் பிறப்பால் ஒருவன் பிராம்மனனாக்வோ, க்ஷத்ரியனாகவோ, வைஷ்ய சூதிரராகவோ கருதப்படவில்லை. அவர்களின் குணமே ஒருவரின் வர்னாஸ்ராமத்தை நிர்ணயித்தது. 
அதற்க்கு ஆதாரம், 
வேதங்களை இயற்றிய வியாசரின் தாய் ஒரு மீனவப்பெண்.
ஆதிகவியாக விளங்கும் வால்மீகி முற்காலத்தில் ஒரு திருடன்.
மிகவும் உயர்ந்த "காயத்ரி" மந்திரத்தை உலகோருக்கு தந்த விஸ்வாமித்ரர், பிறப்பால் கௌசிகன் என்னும் ஒரு க்ஷத்ரிய ராஜன். 
பிறப்பால் இவர்கள் பிராமணர்கள் இல்லையானாலும் இவர்களின் குணத்தால் இவர்கள் பிராமணர்கள் ஆனார்கள். 
பரசுராமரும், ராஜகுரு துரோணாச்சாரியாரும் பிறப்பால் அந்தணர்கள். அவர்களின் போர் செய்யும் குணத்தால் க்ஷத்ரியராக கருதப்பட்டனர். 
இராவணன் பிறப்பால் பிராம்மணன். ஆனாலும் அவனது மோகத்தாலும், வெறியாலும், ஆசையின் மிகுதியாலும், அதர்மத்தாலும் அவன் அசுரனாக ஆனான்.
பாகவதத்தில் "ரிஷபதேவர்" என்னும் மகா ராஜஞானியின் சரித்திரம் இடம்பெற்றுள்ளது. அவர் பிறப்பால் க்ஷத்ரியர். ஆனாலும் அவரின் ஞானத்தால் அவர் பிராம்மனராகவே கருதப்படுகிறார். அவருக்கு நூறு ஆண் பிள்ளைகள். அவர்களில் 81 பிள்ளைகள் தவம் செய்ய இச்சைபூண்டதால் அவர்கள் பிராமணர்கள் ஆனார்கள். ஒன்பது பேர் நாட்டை ஆளும் க்ஷத்ரியர் ஆனார்கள். மற்றயோர் வர்ணங்கள் அனைத்தையும் துறந்து, பெயர், ஊர், ஜாதி, கோத்திரம் ஏதும் அற்ற அவதூதர்கள் ஆனார்கள். 
இவைகளை ஆதாரமாககொண்டே, பிரிவுகள் பிறப்பால் வருவது இல்லை என ஆணித்தனமாக கூறலாம். 
குணத்தால் ஒருவர் அங்கீகரிக்கப்பட வேண்டுமே தவிர பிறப்பால் அல்ல. 
இன்றைய காலகட்டத்தில் வர்ணங்கள், ஜாதிகள் ரீதியாக வித்தியாசம் பார்ப்பது மகா முட்டாள்தனம். இன்று மட்டும் அல்ல என்றுமே ஒருவனை பிறப்பால் ஏற்றத்தாழ்வு பார்ப்பது மிகவும் பாவமான, மனிதத்தன்மை அற்ற ஒரு செயல். அவரவர் திறமைக்கு ஏற்ப அவனவன் உயர்வான். பிறக்கும்போது அனைவருமே சமம் தான். நீ பிறந்தாற்போல தான் நானும், அனைவரும் பிறந்தோம். இதில் ஏற்றத்தாழ்வு எங்கிருந்து வந்தது?? மனிதனின் மனதில் இருந்துதான். மனிதனின் சுயநலத்தில் இருந்துதான். 
எவ்வாறு அரசாங்கம் இயற்றும் சட்டத்தை அதில் உள்ள ஓட்டையை வைத்தே நமது சுயநலத்திற்காக சட்டத்தை மீறுகிறோமோ, அவ்வாறே வர்ணாஸ்ரம கொள்கைகளும் மீறப்பட்டன.
வர்ணாஸ்ரம கொள்கைகள், ஜாதி பாகுபாடுகள் ஏதோவொரு காலகட்டதிர்க்காக, அன்றைய சமூக சூழலை சீர்செய்ய உருவாக்கப்பட்டவை. ஆனால், அவைகளே இன்றைய சமூக நிம்மதியை சீர்குலைத்து, மக்களிடையே பிரிவினையை உண்டக்குமேயனால் அவைகள் நிச்சயம் குப்பையில் போடப்படவேண்டியவையே. கல்வியாலும், அறிவாலும் அனைவருமே சமாக கருதப்படும் இன்றைய சூழலில், அன்றைய கொள்கைகள் பயனற்றவை!!!!

உலகை உருவாகியது இறைவனா?

உலகை உருவாகியது இறைவனா? 
இல்லை. நாம் தான்!!!
--------------------------------------------------
யாரைக்கேட்டாலும் உலகை படைத்தவர் இறைவன்தான். அவரே அணைத்து தொழில்களையும் செய்பவர். என்று கூறுவார். ஆனால் அது மகா முட்டாள்தனமான வாதம். நமக்கு முதலில் இறைவன் என்றால் என்ன என்றே தெரியாது. பிறகு எப்படி அதன் தொழிலையும், தன்மையையும் நம்மால் தீர்மானிக்க இயக்கும்?!
நாம் அனைவருமே நம் வீட்டில் வசிக்கிறோம். வாஸ்தவத்தில் வீடு என்ற பொருளே உலகில் இல்லை. பல்லாயிர செங்கற்கள், பல லக்ஷம் ஜல்லிக்கல்கள், பல வண்டி மண், பல மூட்டை சிமென்ட்........... முதளியவையின் ஒருங்கிணைப்பே வீடு எனப்படுகிறது, தவிர வீடு என்ற தனிப்பொருள் எங்குமே இல்லை. 
அதே போன்று, நிஜத்தில் உள்ள மான், மீன், மலை, மடு, மனிதன், மிருகம், மரம், உலகம், சூரிய சந்திரன், எண்ணிலடங்கா நக்ஷடிரங்கள், வால்நட்சத்திரங்கள், அனந்தகோடி கோள்கள், இன்னும் நம் கற்பனைக்கே எட்டாத என்னென்ன உண்டோ அந்த ஒட்டுமொத்த ஒருங்கிணைந்த முழுமைக்கு பெயரே கடவுள், தவிர தனியே எந்த லோகத்திலும் கடவுள் என்ற தனி நபர் இல்லை. 
எவ்வாறு பல லக்ஷம் கற்கள் ஒன்று சேர்ந்தவுடன் அந்த அமைப்பு "ஒரே" வீடாக கருப்படுகிறதோ, 
அவ்வாறே, பிரபஞ்சத்தில் என்னென்ன உள்ளதோ அவை அனைத்தின் ஒருங்கிணைப்பே இரண்டுகளற்ற பிரம்மம், கடவுள்....... என்றெல்லாம் கூறப்படுகிறது. 
பிரபஞ்சத்தின் ஒரு அங்கமே உலகம். இறைவன் பிரபஞ்ச வடிவினன். அந்த பூரணமான இறைவனின் ஒரு அங்கமே உலகம். பிறகு எப்படி இறைவன் உலகை படைத்திருப்பார்? தன்னைத் தானே எவ்வாறு கடவுள் படைப்பார்? இருப்பது அனைத்துமே கடவுளாக இருக்க, இங்கு படைப்பேது? காப்பது ஏது? அழிப்பது ஏது???
இயக்கம் அனைத்துமே இறைவனுடயதாக இருக்க, பாவ புண்ணிய வினைகலேது?
ஒரு பொறியாளர் வீடு கட்டுவதற்கு முன், அந்த வீட்டை தன் மனதில் ஒரு கற்பனை வடிவில் கொண்டு வருவார்(plan). பிறகு ஒரு பேப்பரில் தன் கற்பனையை ஒரு ஓவியமாக வரைவார்(sketch). பிறகு அதை வைத்து வீடு கட்டுவார். 
இங்கு கூர்ந்து நுண்ணறிவுள் சிந்தியுங்கள். அந்த வீடு பொறியாளரின் கற்பனையின் வெளிப்பாடே தவிர வேறு இல்லை. வீடாக இங்கு நிற்கும் பொருள், ஒருவரின் கற்பனையே. நிஜத்தில் அங்கு உள்ளது பிரபஞ்ச வடிவினனான இறைவன்தான். இறைவனே இங்கு வீடாக கற்பனை செய்யப்படுகிறான். 
அதே போலத்தான் அனைத்தும். நீங்கள் உபயோகிக்கும் வாகனம் முன்பு ஒருவரின் கற்பனையில் இருந்தே வந்தது. நீங்கள் தலைவாரும் சீப்பு முன்பு ஒருவருடைய கற்பனையே. நீங்கள் எழுதும் எழுதுகோலும், நீங்கள் இதை படிக்கும் கணினியும்,..... எல்லாமுமே முன்பு ஒருவரின் கற்பனே. ஆனால் நிஜத்தில் இங்கு இவையாக இருப்பது. இறைவனே. 
சரி. இவை கற்பனை. ஆனால் தென்னை மரம். மாமரம். கடல், மலை, நாய், நரி, மனிதன்...... இவை எப்படி கற்பனையாகும்???
உங்களுடம் ஒரு நாய் வந்து, Hello. Glad to meet you. என் பெயர் நாய். என்று என்றாவது சொன்னதுண்டா? நீங்கள் தான் அதை நாய் என்கிறேர்கள். ஆகவே நாயும், நரியும் அனைத்துமே நம் கற்பனையே. எதோ ஒன்று அங்கு உள்ளது. அதற்க்கு வெப்ப மரம், புளிய மரம், மலை, மடு என்று பெயர் வைப்பதும், நீர் குளிர்ச்சி, தீ சூடு, இவன் நல்லவன் தீயவன், யோகியன் அயோக்கியம்.... என்று தீர்மானிப்பதும் நாம்தானே!!! இருப்பது அனைத்துமே பிரபஞ்சமே. இறைவனே. அதைத்தவிர்த்து இம்மியளவும் எதுவும் இல்லவே இல்லை. 
இருப்பது அந்த இரண்டிலா, பெயர் உரு இல்லா, குண தோஷம் இல்லா அந்த சத்தியம் மட்டுமே. 
அது எதுவோ தெரியாது. ஆனால் அது மட்டுமே உள்ளது. 
இதை நானாக இருந்து எழுதுவதும் அதுவே. 
நீங்கலாக இருந்து படிப்பதும் அதுவே. 
படிக்க உதவும் கணினியும் அதுவே. 
சொற்களும் அதுவே. பிரபஞ்சமும் அதுவே. அனைத்தும் அது மட்டுமே!!!!