jaga flash news

Saturday 17 April 2021

8"-ன் சிறப்பு

"☂8"-ன் சிறப்பு

*"☂எட்டு"* போடுகிறவனுக்கு *"நோய்"* எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி...!
மனித உடல் அவரவர் கை அளவுக்கு எண்ஜான் அளவுமட்டும் இருக்கும்..

*உங்கள் வீட்டின் உள்ளோயோ அல்லது மாடியிலோ இடம் தேர்வு செய்து, * 6 க்கு 12 அடி அல்லது 8 க்கு 16 அடி அளவில் செவ்வக கோடு இட்டு அதற்குள் 8 வடிவில் வரைந்து கொள்ளுங்கள்...! 
*"...இது தெற்கு வடக்காக நீளப் பகுதி இருக்கணும்..."*

காலை அல்லது மாலை , வடக்கு நோக்கி நின்று அந்த *8* வடிவ கோட்டின் மேல் உங்கள் நடை பயிற்சியை ஆரம்பியுங்கள்...!

*ஆண்கள் வலது கை பக்கம் பெண்கள் இடது கை பக்கமும் நடக்க ஆரம்பிக்கணும்.*

ஆரம்பித்த இடத்திற்கே வந்த பின் அதே வழியில் தொடர்ந்து *21 நிமிடம்* நடக்கணும் .

பின்பு மறுமுனையில் தெற்கு நோக்கி நின்று  இதேபோல் *21 நிமிடம்* கையை நன்கு விசிறி மிதமான வேகத்தில் 
நடை பயிற்சி செய்யணும்,  *42 நிமிடம்*.

*1.* பயிற்சி தொடங்கிய 
        அன்றே மார்பு சளி
        கரைந்து வெளியேறுவதை    
        காணலாம்.
*2.* இந்த பயிற்சியைஇருவேளை
        செய்துவந்தால், உள்ளங்கை     
        கை விரல்கள்   
        சிவந்திருப்பதை காணலாம். 
        அதாவது ரத்த ஓட்டத்தை 
        சமன்படுத்துகிறது என்று
        அர்த்தம்.
*3.* நிச்சயம் நீரிழவு நோய் 
        (சர்க்கரை வியாதி) குறைந்து 
        முற்றிலும் குணமாகும்.
        (பின்னர் மாத்திரை, 
        மருந்துகள் தேவை இல்லை).
*4.* குளிர்ச்சியினால் ஏற்படும் 
        தலைவலி, மலச்சிக்கல் 
       போன்றவை தீரும்.
*5.* கண் பார்வை அதிகரிக்கும். 
       ஆரம்ப நிலை கண்ணாடி 
       அணிவதை தவிர்க்கலாம்.
*6.* கேட்கும் திறன் அதிகரிக்கும்.
*7.* உடல் சக்தி பெருகும்- ஆதார 
       சக்கரங்கள் சரியாக 
       செயல்படும்.
*8.* குடல் இறக்க நோய் 
       வருவதை தடுக்கும்.
*9.* ரத்த அழுத்தம் நிச்சயமாக 
       கட்டுப்பாட்டில் வரும்.
*10.* பாத வலி, மூட்டுவலி 
          மறையும்.
*11.* சுவாசம் சீராகும் அதனால் 
          உள் உருப்புக்கள் பலம் 
         பெரும்...!

*"8"* வடிவில் நடை பயிற்சி செய்யும் பொழுது நீங்களே உணர்வீர்கள்...!

அந்த வடிவம் "முடிவில்லாதது" மட்டுமல்ல, நமது ஆதார சக்கரங்களை தட்டி எழுப்பி, சம
நிலை படுத்துகிறது என்பதை நமக்கு உடல் பயிற்சியாக சொல்லித்தந்தனர் சித்தர்கள்.

விருப்பம் உள்ளவர்கள், முயற்சி செய்து பலனடையுங்கள்...!  

நோய் இருப்போரும் நோய் இல்லாதோரும் இந்த *8 வடிவ நடை* பயிற்சி செய்யலாம்,

*1வது 21 நாளில் -* சர்க்கரை நோயால் வரும் உள்ளங்கால் எரிச்சல், குதிவாதம், வடகலை நாடி- இடகலை நாடி புத்துயிர் பெரும்...!

*2 வது 21 நாளில் -*
மூட்டு வலி, ஒட்டுக்கால், பிரச்னை குறையும்...!

*3 வது 21 நாளில் -*
தொடை பகுதி பலம் பெரும்...!

*4 வது 21 நாளில் -* ஆண்மை குறைபாடு, விதைப்பை குறைபாடு சர்க்கரை நோய் அளவு, விந்து நாத அணு குறை பாடு, கல்லீரல் மண்ணீரல் குறைபாடு, கர்ப்ப பை குறைபாடு குழந்தை பேறின்மை, மாதநாள் குறைபாடு, ஆண் பெண் இல்லற நாட்டமின்மை நீங்க ஆரம்பிக்கும் ...!

*5 வது 21 நாளில் -* வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் குறையும்...!

*6 வது 21 நாளில் -* இரத்த அழுத்தம், இதய நோய் , ஆஷ்துமா , காசம், நீர் உடம்பு, உடல் அதிக எடை குறைய ஆரம்பிக்கும்...!

*7 வது 21 நாளில் -* தொண்டை பகுதி பிரச்சனைகள், அடிக்கடி கழுத்து பிடிப்பு, முதுகில் வாய் பிடிப்பு வராது...!

*8 வது 21 நாளில் -* அன்னாக்கு பகுதி விழிப்படையும், வாய் கண் காது  கருவிகள் நோய் தன்மை தாக்காது, 2 நாசியிலும் சுவாசம் ஒரே நேரத்தில் ஓடும், மூளைப் பகுதி விழிப்படையும், மூளைப் பகுதி நோய் தீரும்...!

இதை செய்ய வயது வரம்பு இல்லை,  இப்பயிற்சி 
*"வாசி யோக"த்திற்கு இணையானது,* 
இந்த 8 நிலைகளில் உங்களின் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து உயிர்,  மனம் உடல் ஒன்றாகி காலன் தள்ளி நிர்ப்பான்...,
மெளனமாக நடக்கணும் அல்லது ஏதாவது இறை நாமத்தை மனதில் செபித்தவாறு நடக்கணும் , வாய் வழியாக சுவாசம் கூடாது..
வாழ்க வளமுடன்.

315 comments:

  1. அய்யா...வெ.சாமி. அவர்களுக்கு நமஸ்காரம்.

    அய்யா.. நாடிப் பயிற்சி தங்கள் முகநூலுக்கு தெரியப்படுத்து கிறேன் அய்யா...!


    Mon. 9, May 2022 at 6.56 am.

    நாடிப் பயிற்சி :

    பாடம் − 1

    குருவே துணை.

    அகத்தியப் பெருமானுக்கு நமஸ்காரம்.

    நந்தீசர் மூலரகத்தியருஞ் சட்டை
    நாதரொடு பதஞ்சலி வியாக்காரமபாதர்
    சுந்தரானந்தர் மச்சமுனி புண்ணாக்கீசர்
    சுருதிகண்ட கமலமுனி கொங்கணரும் போகர்
    மந்திரஞ்சேர் கோரக்கர் சண்டாகேசர்
    வாராமர் காலாங்கியார் கூனக் கண்ணர்
    தந்திரஞ்சேர் கருவூரர் ரிஷிகள் தேவர்
    தபோதனர்கள் பாதமாதாரமாமே.

    நோய்நாடி நோய்முதனாடியது தணிக்கும்
    வாய் நாடி வாய்ப்பச் செயல். (திருக்குறள் : 948)

    இத்திருக்குறளுக்கு இணங்க... நோய்நாடல், நோய்முதனாடல் இவ்விரண்டும் பிணியை அறிவதற்கு இன்றியமையாதது. அதன் பிறகே மருந்தைக் குறிப்பிடல் வேண்டும்.

    அதாவது... நோய்களை அறிந்த பின்னரே மருந்துகள் குறிப்பிடல் சரியான முறை ஆகும்.

    மக்களுக்கு நல்வினை, தீவினை என்ற இருவினைப் பயனால் ஏற்படுவது இன்பமும், துன்பமுமாகும்.

    இந்த இன்ப துன்பங்களை நுகர்வது...உயிருடன் கூடிய உடலேயாகும்.

    மேலும், மனிதன் உலகில் தோன்றிய எல்லாப் பொருள்களையும், தன் ஐம்பொறி புலன்களைக் கொண்டே அறிகிறான்.

    ஐம்பொறி, புலன்கள் யாவும் அதனதன் பூதத்தின் இயற்கையளவாயுண்டா னவை.

    பொறி : பொருள்: பூதம்: புலன்
    ----------- ------------ --------- --------

    கண்: உருவம் : தேயு : பார்த்தல்

    காது : ஓசை : வெளி : கேட்டல்

    வாய் : சுவை : நீர் : சுவைத்தல்

    மூக்கு : நாற்றம் : மண் : மோத்தல்

    மெய் : ஊறு : வளி : உணர்தல்

    மேற்கூறிய ஐம்பூதமயமான பொறி, புலன்கள் ஒன்றுபட்டு ஒருவிதத் தன்மையில் கூடி நிற்குங்கால்..அந்நிலையைப் "பரு நிலை" என்றும்,

    ஒன்றுபட்ட நிலையில்லாது குழம்பி நிற்கும் காலத்தில், அந்நிலையை "நுண் நிலை" என்று கூறுவர்.

    பரு நிலைகள் யாவும் ஐம்பொறிகளின் வழியாய் ஐம்பெரும் பூதங்களினால் அறியப்படுவனவாகும்.

    பரு நிலை கெட்டு, நுண்ணிலை இருப்பவை யாவும் நுண்ணிய ஐம்பூதங்களினால் ஐம்புலன்களிடத்தே நிலைபெற்று இருக்கின்றன என அறிந்து கொள்ளுங்கள்.

    நுண்ணிய ஐம்பூதங்கள் − ஐம்பெரும் பூதங்களின் தோற்றமும், பஞ்சீகரிக்கும் விதமும் :

    நித்திய வஸ்து அல்லது சச்சிதானந்த சொருபமாகிய −பிரமம்.

    இதினின்று ... மூலப் பிரகிருதி தோன்றியது.

    இதினின்றும்...சத்துவ, இரசோ, தமோ குணங்கள் என்னும் முப்பண்புகள் தோன்றின.

    மூலப் பிரகிருதியிலிருந்து சத்துவ குணரூபியாய் "மாயா சக்தி" தோன்றியது.

    இம்மாயையிலிருந்து...இரசோ குண ரூபியாய்.. மகதத்துவமென்னும் "ஆவர்ண சக்தி" தோன்றியது.

    இவ்வாவர்ண சக்தியிலிருந்து தமோகுண ரூபியாய்... மகதாங்கார மென்னும் "விட்சேப சக்தி" தோன்றியது.

    விட்சேப சக்தியினின்று.. தன்மாத்திரை கள் உண்டாயின.

    அதாவது முக்குணங் களோடு கூடிய சப்த தன்மாத்திரை யாகிய "ஆகாயம்" தோன்றியது.

    இதற்கு சப்தம் என்ற ஒரே குணமுண்டு.

    ஆகாயத்தின்று பரிச தன்மாத்திரையா கிய.. வாயு தோன்றியது.

    இதற்கு சப்தம், பரிசம் என இரண்டு குணங்கள் உண்டு.

    வாயுவில் இருந்து ரூப தன்மாத்திரை யாகிய...தேயு தோன்றியது.

    ஆகவே இதற்கு சப்தம், பரிசம், ரூபம் என்ற மூன்று குணங்களுண்டு.

    தேயுவிலிருந்து ரச தன் மாத்திரை யாகிய ... அப்பு தோன்றியது.

    ஆதலால் இதற்கு சப்தம், பரிசம், ரூபம், ரசம் என்னும் நான்கு குணங்கள் உண்டு.

    அப்பு−வில் இருந்து கந்த தன்மாத்திரை யாகிய... பிருதிவி தோன்றியது.

    ஆதலால் பிருதிவிக்கு... சப்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்னும் ஐந்து குணங்கள் உண்டு.

    மேலும், பிருதிவி தோற்றுவிக்க மற்ற தாது, தாவர, சங்கமங்கள், சூதனர், நரர் , மக்கள் யாவரும் தோன்றினர்.

    ஆரம்ப பாடம், ஒருமுறைக்கு இருமுறை படித்து புரிய முயற்சி செய்யுங்கள். போக போக எளிதாக இருக்கும்.

    மீண்டும் நாளைய வகுப்பில்...!

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  2. Tue, 10, May, 2022 at 4.48 pm.

    நாடிப் பயிற்சி :

    பாடம் − 2.

    நோய்நாடி நோய் முதல் நாடி.....

    நேற்றைய பாடம் −1−ல் ,

    ஐம்பூதக் கொள்கைகள், ஐம்பொறி, புலன்கள் யாவும் அதனதன் இயற்கையளவாயுண்டானவை ...
    நுண்ணிய ஐம்பூதங்கள்− ஐம்பெரும் பூதங்கள் தோற்றம் வரை பார்த்தோம்.

    இன்று பஞ்சீகரிக்கும் விதம் பற்றிப் பார்க்கலாம்.

    1) ஆகாயாதி பஞ்சபூதங்களின் (ஆகாயம், வாயு, தேயு, அப்பு, பிருதிவி) சத்துவ குணத்தை(சத்துவாம்சத்தை) ..
    நாலு பங்கு பண்ணி...அதில் மூன்று பங்கைக் கொண்டு அந்தக்கரணாதிகளையும், மீதி ஒரு பங்கைக் கொண்டு, ஞானேந்திரியங்களும், அதன் விடயங்களும் சிருஷ்டிக்கபட்டன.

    2) ஆகாயாதி பஞ்ச பூதங்களின் இரசோவாம்சத்தை (முப்பண்புகளான சத்துவ, இரசோ , தமோ−வில் இரசோ)
    நாலு பங்கு பண்ணி... அதில் மூன்று பங்கைக் கொண்டு பஞ்சப் பிராணாதி வாயுக்களையும், அவற்றின் உபபிராணன்களையும், மீதி இருக்கும் ஒரு பங்கைக் கொண்டு கருமேந்திரங்களும் அதன் விடயங்களும் சிருஷ்டிக்கப்பட்டன.

    3) ஆகாயாதி பஞ்ச பூதங்களின் "தமோ" குணவாம்சத்தை(தமோ குணத்தை) "ஒன்வொன்றையும்" இரண்டு பங்கு பண்ணி, ஒருபங்கை அவ்விடத்தில் தானே நிறுத்தி...மறுபாதியை...நாலு பங்கு பண்ணி..ஒவ்வொரு பங்கு வீதம் எதிர் பூதங்களுக்குக் கொடுக்கப்பட்டன.

    என்ன குழப்பமா இருக்கிறதா ? ஒரு குழப்பம் வேண்டாம். அதற்கான விளக்கம் கீழே அளிக்கிறேன்.

    இதற்கான விளக்கம் :

    1) ஆகாயத்தின் அர்த்தாம்சத்தை..
    (அர்த்தம்சம் என்றால் பாதி..) அவ்விடத்தில் தானே நிறுத்தி, மறு பாதியை நாலுபங்கு பண்ணி... வாயு, தேயு, அப்பு, பிருதிவி ஆகிய இந் நான்கு பூதங்களுக்கும்− "அவகாசம்" கொடுக்கப் பட்டது.

    2) வாயுவின் அர்த்தாம்சத்தை, அவ்விடற்றில் தானே நிறுத்தி, மறுபாதியை நாலு பங்கு பண்ணி... ஆகாயம், தேயு, அப்பு, பிருதிவி இந் நான்கு பூதங்களுக்கும்− "சலனம்" கொடுக்கப்பட்டது.

    3) தேயுவின் அர்த்தாம்சத்தை அவ்விட்டிற்றானே நிறுத்தி, மறுபாதியை
    நாலு பங்கு வைத்து.... ஆகாயம், வாயு, அப்பு, பிருதிவி இந்நான்கு பூதங்களுக் கும் −"உஷ்ணம்"(வெப்பம்) கொடுக்கப் பட்டது.

    4) அப்பு−வின் அர்த்தாம்சத்தை அவ்விடற்றிற்றானே நிறுத்தி, மறுபாதியை நாலு பங்கு வைத்து... ஆகாயம், வாயு, தேயு, பிருதிவி இந் நான்கு பூதங்களுக்கும் − "திரவகம்" கொடுக்கப்பட்டது.

    5) பிருதிவின் அர்த்தாம்சத்தை அவ்விடற்றிற்றானே நிறுத்தி, மறுபாதியை நாலு பங்கு வைத்து... ஆகாயம், வாயு, தேயு, அப்பு இந் நான்கு பூதங்களுக்கும் − "கடினம்" கொடுக்கப் பட்டது.

    இவ்வாறு ஸ்தூல பூதங்கள் ஒன்றுடன் ஒன்று கலப்பதனால்... உலகப் பொருட்கள் யாவும் உருப்பெற்று நிற்கின்றன என அறியலாம்.

    இவை யாவும் அஷ்டப் பிரகிருத ஆத்மாவின் காரண சரீரம் எனப்படும்.

    இதற்கு மேல் காரியங்கள் சிருஷ்டிக்கப் படுகின்றன....!

    எவ்வாறெனில்....!

    * ஆகாயத்தினுடைய அர்த்தாம்சத்திற்கு (பாதி)... பூதப்பிரேத, பைசாச, பிரமராக்கத சரீரங்களையும்...

    * வாயுவினுடைய அர்த்தாம்சத்திற்கு... பட்சிகளையும், சர்ப்பங்களையும்.....

    * அக்னியின்(தேயு) அர்த்தாம்சத்திற்கு....தேவதைகளையும்.....

    * அப்புவின் அர்த்தாம்சத்திற்கு....ஜலஜந்துக்களையும்.....

    * பிருதிவியின் அர்த்தாம்சத்திற்கு.... பர்வதங்களும், விருட்சங்களும் சிருஷ் டிக்கப்பட்டன. மற்ற பாதியைக் கொண்டு, ஒவ்வொன்றுக்கும் எதிர் ஜீவன்கள் சிருஷ்டிக்கப்பட்டது.

    மீண்டும் நாளைய பதிவில்.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  3. Thu, 12, May, 2022 at 9.54 am.

    நாடிப் பயிற்சி :

    பாடம் − 3

    இதுவரை நாம் பார்த்தது....

    ஐம்பூதக் கொள்கை, ஐம்பொறி, புலன்கள் யாவும் அதனதன் பூதத்தின் இயற்கையளவாயுண்டானவை,
    நுண்ணிய ஐமபூதங்கள், ஐம்பெரும் பூதங்கள், தோற்றமும் பஞ்சீகரிக்கும் விதமும், பஞ்ச பூதத் தோற்ற வரிசை என பார்த்தோம்.

    இன்றைய பாடம்....

    சூக்கும சரீரம் பஞ்சீகரிக்கப்படும் விதமும், அவற்றிற்குக் கோளக ஸ்தானங்களும் பார்க்கப் போகிறோம்...!

    (சூக்குமம் என்றால் கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய உடல் என்று பொருள்.

    ஸ்தூலம் என்றால் கண்ணுக்குத் தெரிகிற பரு உடல் எனப் பொருள்.

    பாடம் −2ல் பருநிலை(ஸ்தூலம்) நுண் நிலை (சூக்குமம்) என படித்துள்ளீர்கள்.)

    சூக்கும சரீரம், பஞ்சீகரிக்கப்படும் விதம், அவற்றிற்கு கோளக ஸ்தானங்கள் :

    (1) அந்தகரணங்கள் ஐந்து :

    1) ஆகாயத்தின் அர்த்தாம்சத்துடன் (பாதி) மற்ற வாயு, தேயு, அப்பு, பிருதிவி ஆகிய இவற்றின் அஷ்டாம்சத்தைத் தனித்தனி சேர்த்து முறையே...

    மனதை − கண்டத்திலும்
    புத்தியை − நேத்திரத்திலும்
    சித்தத்தை − நாபியிலும்
    அகங்காரத்தை − இருதயத்திலும்
    சிருஷ்டிக்கப் பட்டதோடு, ஆகாயத்தின் அர்த்தாம்சத்தில் அகண்டாகாரமான "அந்தக்கரணத்தை" பிரமாந்திரம் முதல் புருவ மத்தியம் வரை சிருஷ்டிக்கப் பட்டன.

    வாயு, தேயு, அப்பு, பிருதிவி ஆகாயம் என்பது....

    வாயு − காற்று
    தேயு − தீ
    அப்பு − நீர்
    பிருதிவி − மண்
    ஆகாயம் − வெளி
    என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

    2) பிராணாதி வாயுக்கள் ஐந்து.

    வாயுவின் அர்த்தாம்சத்துடன் மற்ற பிருதிவி, தேயு, அப்பு, ஆகாயம் இவற்றின் அஷ்டம்சத்தைத் தனித்தனியே சேர்த்து முறையே..;

    பிராணனை − இருதயத்திலும்
    அபானனை − குதாலயத்திலும்
    வியானணை − சர்வாங்கத்திலும்
    சமானனை − நாபியிலும்
    மற்ற ...நாகன், கூர்மன், கிருகரன், தனஞ்செயன் என்ற உப பிராணன்களை முறையே மேற்கூறிய பிராணாதி வாயுக்களுடன் (பிராணன், அபானன், வியானன், சமானன்) சிருஷ்டிக்கப் பட்டதோடு வாயுவின் அர்த்தாம்சத்தில் "தேவதத்தன்" என்ற உப பிராணனுடன், உதானவாயுவையும் கண்டத்தில் சிருஷ்டிக்கப்பட்டன.


    3) ஞானேந்திரியங்கள் ஐந்து :

    அக்னியின் (தேயுவின்) அர்த்தாம் சத்தோடு... மற்ற ஆகாயம், வாயு, அப்பு,பிருதிவி இவற்றின் அஷ்டாம்சத்தைத் தனித்தனியே முறையே....

    கேட்டல் − காதிலும்
    உணர்தல் − சருமத்திலும்
    சுவைத்தல் − நாவிலும்
    மோத்தல்(முகர்தல்) − மூக்கிலும்
    சிருஷ்டிக்கப்பட்டதோடு, அக்னியின் அர்த்தாம்சத்தில்பார்த்தல் − கண்ணிலும்
    சிருஷ்டிக்கப்பட்டன.

    4) புலன்கள் (விஷயங்கள்)ஐந்து :

    அப்புவின் அர்த்தாம்சத்தோடு... மற்ற ஆகாயம், வாயு, தேயு, பிருதிவி இவற்றின் அர்த்தாம்சத்தைத் தனித்தனியேயே சேர்த்து முறையே ....

    சப்தம் − காதிலும்
    பரிசம் − தோலிலும்
    ரூபம் − கண்ணிலும்
    கந்தம் − மூக்கிலும் சிருஷ்டிக்கப் பட்டதோடு அப்புவின் அர்த்தாம்சத்தில் ரசத்தை நாவிலும் சிருஷ்டிக்கப்பட்டன.

    5) கருமேந்திரியங்கள் ஐந்தும் அதன் விடயங்கள் ஐந்தும் :

    பிருதிவின் அர்த்தாம்சத்தோடு மற்ற ஆகாயம், வாயு, தேயு, அப்பு இவற்றின் அஷ்டாம்சத்தைத் தனித்தனியே சேர்த்து முறையே....

    வசனம் விஷயத்துடன் வாக்கையும்...
    தானம் விஷயத்துடன் பாணியையும்...
    கமனம் விஷயத்துடன் பாதத்தையும்...
    விசர்க்கம் விஷயத்துடன் பாயுருவையும்(குதம்)...சிருஷ்டிக்கப்பட்ட
    தோடு, பிருதிவியின் அர்த்தாம்சத்தில் ஆனந்தம் விஷயத்துடன் உபஸ்தம் என்ற குறியும் சிருஷ்டிக்கப்பட்டன.

    ஆக மேற்கூறிய....

    அந்தகரணங்கள் − 5
    பிராணாதிகள்(வாயு) − 5
    ஞானேந்திரியங்கள் − 5
    அதன் விஷயங்களாகிய புலன்கள் − 5
    கருமேந்திரியங்கள் − 5
    அதன் விடயங்கள் − 5

    ஆகிய இந்த முப்பது தத்துவங்களும் சிவசூக்கும சரீரங்கள் அல்லது சிவசூக்கும தேகேந்திரியங்கள்...ஆகும்.
    அப்பிராணனான ஐந்தையும் சேர்த்தால்.. முப்பத்தைந்து (35) தத்துவங்கள்..



    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  4. Fri. 13, May, 2022 at 7.20 am.

    நாடிப் பயிற்சி :

    பாடம் − 4.

    பாடம் 3−ல், சூக்கும சரீரங்களைப் பற்றி பார்த்தோம்.

    இன்று ஸ்தூல பஞ்ச பூதங்களின் பஞ்சீகரணம் அல்லது ஐம்பெரும் பூதங்களின் சேர்க்கை மற்றும் தேகம் ஐம்பூதக்கூறு அல்லது புறக்கருவிகள் இருபத்தைந்து பற்றி காணயிருக் கிறோம்.

    ஸ்தூல பஞ்ச பூதங்களின் பஞ்சீகரணம்(ஐம்பெரும் பூதங்களின் சேர்க்கை) :

    பிருதிவியின் கூறு = 1/2.

    அப்பு = 1/8 பங்கு
    தேயு = 1/8
    வாயு = 1/8
    ஆகாயம் = 1/8 என பிரித்து கொடுக்கப் பட்டது.

    அப்புவின் கூறு = 1/2

    தேயு = 1/8, வாயு , ஆகாயம், பிருதிவி என சமமாக பிரித்து கொடுக்கப்பட்டது.

    தேயுவின் கூறு = 1/2

    வாயு = 1/8 , ஆகாயம், பிருதிவி, அப்பு என சமமாக பிரித்து கொடுக்கப்பட்டது.

    வாயுவின் கூறு = 1/2 பங்கு.

    ஆகாயம் = 1/8 பங்கு, பிருதிவி, அப்பு, தேயு என சமமாக பிரித்து கொடுக்கப் பட்டது.

    ஆகாயத்தின் கூறு = 1/2 பங்கு

    பிருதிவி = 1/8 பங்கு, அப்பு, தேயு , வாயு என சமமாக பிரித்துக் கொடுக்கப்பட்டது.

    இதுவே... ஐம்புதங்களின் சேர்க்கை.

    தேகம் ஐம்பூதக் கூறு (புறக்கருவிகள்−25):

    ஆகாயக் கூறு = காம குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம்.

    வாயுக்கூறு = தாண்டல் , ஓடல் , நடத்தல், இருத்தல் , கிடத்தல்.

    தேயுக் கூறு = பயம் , அகங்காரம் , நித்திரை , சோம்பல் , மைதுனம்.

    அப்புக் கூறு = உதிரம் , சுக்கிலம், கொழுப்பு , சிறுநீர் , மூளை.

    பிருதிவிக் கூறு = மயிர், நரம்பு , தோல் , மாமிசம், எலும்பு.

    இவ்வாறாக ..... நான் , எனது என்னும் ஆணவத்தை உண்டாக்கி, கரு தத்துவம், போக தத்துவம் இவற்றை அடைந்து...
    சாக்கிரம், சொற்பனம், சுழுத்தி என்னும் அவஸ்தைகளை அடைந்து, ஜெனன மரணங்களையும் அடைந்து... மறுபடியும் ஞானாசிரியரால் ஞானம் போதிக்கப் பட்டு, ஜீவ அவஸ்த்தையை விட்டு சிற்சொருபமாகிய பிரமம் ஆகிறோம்.

    நன்கு புரிந்து படியுங்கள்.

    மீண்டும் நாளைய பதிவில்.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  5. Sat. 14, May, 2022 at 7.41 am.

    நாடிப் பயிற்சி :

    பாடம் − 5

    இதுவரை...

    ஐம்பூதமான தேகத்தில் மாமிசம் (தசை) போன்ற கடின பதார்த்தங்கள் பிருதிவின் கூறு என்றும் .....

    அமிர்த நீர் போன்றவை யாவும் அப்புவின் கூறு என்றும் ....

    தேகத்தில் வெப்பத்தை உணர்த்துவது தேயுவின் கூறு என்றும் ....

    நாசியின் வழியாய் மூச்சு(சுவாசம்) வாங்கவும், விடவுமாயிருப்பது வாயுவின் கூறு என்றும் ....

    மேற்கூறிய யாவும் நிலைத்து நிற்பதற்கு இடம் கொடுப்பது ஆகாயம் என்றும் அறிந்தோம்.

    இது முக்கியமானவை. அவசியம் ஞாபகத்தில் வைத்திருங்கள்.

    இன்றைய பாடம் ...

    இயங்கும் , இயங்காப் பொருட்கள் :

    இயங்கும் பொருட்கள் .... இரு வகைப்படும்.

    அவை .... உயர்திணை அஃறிணைப் பொருட்கள்.

    உயர்திணைப் பொருட்களாவன ....
    மக்கள் , தேவர்கள் , நரர்கள்.

    அஃறிணைப் பொருட்களாவன ...
    உயர்திணை அல்லாத இயங்கும் பொருட்களும், இயங்காப் பொருட்களும் ஆகும்.

    உயர்திணை அல்லாத இயங்கும் பொருட்கள் அமையும் விதம் ....

    * நகர்வன = பாம்பு முதலியவை.
    * ஊர்வன = அட்டை முதலியவை.
    * நடப்பன = மிருகங்கள் முதலியன.
    * பறப்பன = பறவை முதலியன.
    * நீந்துவன = மீன் முதலியன.

    இயங்காப் பொருட்களாவன ....!

    புல் , பூண்டு , செடி, கொடி , மரம் , ஊலோகம் முதலியன.

    மேலும்... உலகப் பொருட்கள் யாவற்றையும் 3− வகையாகப் பிரித்துள்ளனர்.

    அவை ....

    * தாதுப் பொருட்களாகிய ... ரசம், உபரசம், உப்பு, பாடாணம், உலோகம் முதலியன.

    * தாவரப் பொருட்களாகிய ... மரம், செடி, கொடி, புல், பூண்டு முதலியன.

    * சங்கமம் பொருட்களாகிய ... நடப்பன, நகர்வன, பறப்பன, ஊர்வன, நீர்வாழ்வது முதலியன.

    சைவ சித்தாந்தத்தில் இதற்கான விளக்கம் அதிகம் உண்டு. ஆனால், அதையும், நாடிப் பயிற்சியையும் குழப்பிக்க வேண்டாம் என.. நாடிப் பயிற்சிக்கான விளக்கம் மட்டுமே அளிக்கிறேன்.

    நடத்தியவைகள் யாவையும் மிகத் தெளிவாக மனதில் வைத்திருங்கள்.

    மீண்டும் நாளைய வகுப்பில்..

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  6. Sun. 15, May, 2022 at 8.30 am.

    நாடிப் பயிற்சி :

    பாடம் − 6

    இதுவரை நாம் பார்த்ததை நன்கு அறிந்து வைத்திருப்பீர்கள். அடிப்படை பாடம் மிகவும் முக்கியம்.

    ஞாபகத்திற்காக....

    ஐம்பூதங்கள் : நிலம், நீர், தீ , காற்று , விண்(ஆகாயம்) = 5

    ஞானேந்திரியங்கள் : மெய் , வாய் , கண் , மூக்கு , செவி. = 5

    தன்மாத்திரைகள் : பரிசம் , ரசம் , ரூபம் , கந்தம் , சப்தம் = 5

    கன்மேந்திரியங்கள் : பாதம், பாயுரு , பாணி , உபஸ்தம் , வாக்கு = 5

    அந்தகரணம் : மனம் , புத்தி , சித்தம் , அகங்காரம் = 4

    இவை யாவும் ஆத்ம தத்துவம்.. அல்லது அகத்தத்துவம் ஆகும்.

    இதற்கு ஒரு தேவாரப் பாடல் உண்டு.
    பாடல் :
    ஒன்று ஒன்றொடு ஒன்றும் ஒரு நான்கொடு ஐந்தும்
    இருமூன்றொடு ஏழும் உடனாய்
    அன்றின்றொடு என்றும் அறிவான வர்க்கும்
    அறியாமை நின்ற அரனூர்
    குன்று ஒன்றொடு ஒன்று குலையொன்றொடு ஒன்று
    கொடி யொன்றொடு ஒன்று குழுமிச்
    சென்று ஒன்றொடு ஒன்று செறிவால் நிறைந்த
    திருமுல்லை வாயில் இதுவே.

    இதன் பொருள் :

    1 +1 = 1 ஒன்று ஒன்றொடு ஒன்றும்;
    4 + 5 நான்கொடு ஐந்தும் ;
    3 + 3 இருமூன்று ஆறு + ஏழு 7 ;

    பாருங்க...

    1 + 1 +1 +4 + 5 + 6 + 7 = 25.

    ஆக ஆத்ம தத்துவம் ..... = 24
    ஆன்மா = 1

    = 25.

    ஆத்ம தத்துவம்(அகத்தத்துவம்) 24 .

    என திருமுல்லை வாயிலின் சிறப்பை ஞானசம்பந்தர் நமக்கு உணர்த்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

    சரி.. இன்றைய பாடம்.. ஐம்பூதப் பொருட்களின் சுவை பற்றி பார்க்கலாம்.

    ஐம்பூதப் பொருட்களின் சுவைகளாவன...

    1) இனிப்பு
    2) புளிப்பு
    3) உவர்ப்பு
    4) கைப்பு
    5) கார்ப்பு
    6) துவர்ப்பு ..என அறுவகைப்படும்.

    ஐம்பூதங்கட்கும் அறுசுவைகளுக்கு முள்ள ஒற்றுமை.

    1) இனிப்பு = பிருதிவி & அப்பு (அதாவது மண் + நீர்)

    2) புளிப்பு = பிருதிவி & தேயு ( மண் + தீ)

    3) உவர்ப்பு = அப்பு & தேயு (நீர் + தீ)

    4) கைப்பு = வாயு & ஆகாயம் ( காற்று + வெளி )

    5) கார்ப்பு = தேயு & வாயு ( தீ + காற்று)

    6) துவர்ப்பு = பிருதிவி & வாயு ( மண்+ காற்று )

    அடுத்து... இச்சுவைகளின் மிகுதியைக் கொண்டு..நமது உடம்பில்(அதாவது தேகத்தில்) .. எப்பூதங்களால் எக் குற்றங்கள் நம் உடம்பில் பிணிக்கப் பட்டிருக்கின்றன.. என பார்ப்போம்...!

    ஐம்பூதப் பொருட்கள் யாவுமே... குளிர்ச்சி அல்லது வெப்பத்தைப் பெற்றிருக்கும். ஆதலால்... பொருட்களின் வீரியமானது... சீதவீரியம் , உஷ்ண வீரியம் என இரு வகைக்குள் அடங்கும்.

    * தேயுபூதம் அதிகமுள்ள பொருட்கள் உஷ்ணவீரியமும் ....(தேயு என்றால் அக்னி, அல்லது தீ..அதாவது சூடு)

    * தேயு பூதம் சேராத பொருட்கள் சீதவீரியமும்.... ஆகும்.

    அங்ஙனம் பார்க்கில்... புளிப்பு, உவர்ப்பு, கார்ப்பு...இச்சுவையுள்ள பொருட்களில் தேயு பூதம் கலந்திருப்பதால் இவைகள் உஷ்ணவீரியத்தை உடையவவை ஆகும். ஆகவே... "அழல்" குற்றத்தை மிகுதிப் படுத்தும்.

    இவை அல்லாது மற்ற மூன்று சுவைகளான... இனிப்பு, கைப்பு, துவர்ப்பு பொருட்கள் யாவும் தேயுபூதக் கலப்பில்லாத காரணத்தால்... சீதவிரியம் ஆகும்.

    பாடம் − 6 மிக மிக முக்கியமான பாடம் எனக் கருத்தில் கொள்ளவும்.
    நன்கு புரிந்து கொள்ளுங்கள். அடிப்படைப் பாடம் நன்கு தெரிந்தால் தான்.. பாடம் எளிதாகப் புரியும்.
    மீண்டும் அடுத்தப் பதிவில் ....!
    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  7. Fri. 20, May , 2022 at 8.43 am

    நாடிப் பயிற்சி .....!

    பாடம் − 11

    இன்றைய பாடம்....

    2−ஆம் தத்துவம்− 30−ன் வரலாறு :

    1) நாடிகள் பத்து (தச நாடிகள்.
    2) வாயுக்கள் பத்து தச வாயுக்கள்.
    3) ஆசயம் ஐந்து
    4) கோசம் ஐந்து.

    ஆக..இரண்டாம் தத்துவம் முப்பது ஆகும்.

    இதில்.. தச நாடிகள் பத்து :

    1) இடகலை
    2) பிங்கலை
    3) சுழுமுனை
    4) சிகுவை
    5) புருடன்
    6) காந்தாரி
    7) அத்தி
    8) அலம்புடை
    9) சங்கினி
    10) குரு

    * இடகலை : வலக்காற் பெருவிரலினின்று, கத்திரிக்கோல் மாறலாக... இடது மூக்கைப் பற்றி நிற்பது.

    * பிங்கலை : இடக்காற் பெருவிரலினின்று , கத்திரி்கோல் மாறலாக .... வலது மூக்கைப் பற்றி நிற்பது.

    * சுழுமுனை : மூலாதாரத்தைத் தொடர்ந்து எல்லா நாடிக்கும் ஆதாரமாய் , நடு நாடியாய்ச் சிரசளவு முட்டி நிற்பது.(அதாவது ... குதம் முதல் சிரசு வரை.)

    * சிகுவை : உள்நாக்கில் நின்று சோறு, தண்ணீரை விழுங்கப் பண்ணுவது.

    * புருடன் : வலக் கண்ணளவாய் நிற்பது.

    * காந்தாரி : இடக் கண்ணளவாய் நிற்பது.

    * அத்தி : வலக் காதளவாய் நிற்பது.

    * அலம்புடை : இடக் காதளவாய் நிற்பது.

    * சங்கினி : குறியினளவாய் நிற்பது.

    * குரு : அபானத்தளவாய் நிற்பது.

    இதுவரை மிக மிகத் தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்.

    மீண்டும் நாளைய பதிவில்....!

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  8. Wed. 8, June, 2022, at 10-pm.

    நாடிப் பயிற்சி :

    பாடம் − 17.

    மூன்றாம் தத்துவம் − 36 பார்த்தோம்.

    இன்று ஒவ்வொன்றுக்கும் விளக்கத் தைக் கற்றுக் கொள்ளவிருக்கிறோம்.

    1) ஆதாரம் ஆறு :

    * மூலாதாரம் (மூலம்)
    * சுவாதிட்டானம் (கொப்பூழ்)
    * மணிபூரகம் (மேல் வயிறு)
    * அனாகதம் (நெஞ்சு, நெஞ்சம்)
    * விசுத்தி (மிடறு)
    * ஆக்கினை (புருவ நடு)

    அதாவது...

    * மூலாதாரம் ... குதத்திற்கும், லிங்கத்திற்கும் நடு.

    * சுவாதிட்டானம் .... கொப்புழ்.

    * மணி பூரகம் ... மேல் வயிறு.

    * அனாகதம் ... இருதய் கமலம்.

    * விசுத்தி .... கண்டஸ்தானம்.

    * ஆக்கினை...லலாடத்தானம்.

    <> மூலாதாரம்(மூலம்) : கால் எலும்பு இரண்டும், கதிர் எலும்பும் கூடிய இடம் "குய்யம்". குய்யத்திற்கும், குதத்திற்கும் நடுவே "குண்டலி" வட்டமாய்... அந்த வட்டத்திற்கு நடுவே "திரிகோணமாய்" தோன்றுவது. மாணிக்க நிறத்தை உடையது.

    <> சுவாதிட்டானம் (கொப்பூழ்) : மூலாதாரத்திற்கு 2− விரற்கடைக்கு மேலிருக்கும். நாற்சதுரமுள்ள பொன்னிறம் .

    <> மணிபூரகம்(மேல்வயிறு) : சுவாதிட்டானத்திற்கு மேல் எட்டு விரல் பிரமாணத்திலிருப்பது மணிபூர்கம்.

    இது கோழி முட்டையைப் போன்று...1008−நாடி நரம்பு இரத்தக் குழாய்கள் சூழ... நாடிகளுக்கெல்லாம் வேர்போல உள்ளது.

    இதனை உந்திக்கமலம் என்றும் கூறுவர்.

    இது கொப்பபூழுக்கு நேராக அப்புஸ்தானத்தில் உள்ளன. பச்சை நிறம்.

    <> அனாகதம் (நெஞ்சம்) : மணிபூரகத்திற்கு 10−விரற்கடை பிரமாணமுள்ள இடத்திற்கு மேல் உள்ளது. இதன் மற்றொரு பெயர்..இருதயக் கமலம்.இது...தேயுஸ்தானம்−முக்கோணம்− அக்கினி நிறம்.

    <> விசுத்தி (மிடறு) : அனாகதத்திற்கு 10−விரற்கடை பிரமாணமுள்ள இடத்திற்கு மேல் உள்ளது.
    இது கண்டஸ்தானத்திலே... வாயு ஸ்தானத்தில் உள்ளது. அறுகோணம். கறு(ரு)நிறம்.

    <> ஆக்கினை (புருவ நடு) : இது விசுத்திக்கு 12− விரற்கடை பிரமாணமுள்ள இடத்திற்கு மேல் "ஆக்ஞை" லலாட பீடத்தில் இருக்கிறது.
    நெற்றிப் புருவத்தின் வெளியாய் ஆகாய ஸ்தானத்தில் உள்ளது. படிக நிறம். சட்டம் போன்றது.

    மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.
    மீண்டும் நாளைய பதிவில் ....

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  9. Sun. 12, June. 2022 at 7.23 am.

    நாடிப் பயிற்சி :

    பாடம் − 18.

    இதுவரை மூன்றாம் தத்துவம் 36−ன் வரலாறு..ஆதாரம் −6 வரை நன்றாக கற்று மனதில் பதிய வைத்திருப்பீர்கள்.

    அடுத்ததாக ....

    2) மண்டிலம் மூன்று :

    * அவை...தீ மண்டிலம் அல்லது அக்கினி மண்டிலம்.

    * ஞாயிறு மண்டிலம் அல்லது ஆதித்த மண்டிலம்.

    * திங்கள் மண்டிலம் அல்லது சந்திர மண்டிலம்.

    * தீ மண்டிலம்(அக்கினி மண்டிலம்) :

    இது பிருதிவியும், அப்புவும் கூடிய இடத்தில் நாற்சதுரமாய் நடுவே முக்கோணமாய் உள்ளது. இது மூலாதாரத்திற்கு இரண்டு விரற்கடைக்கு மேல் இருக்கின்றது.(மூலாதாரம் முதல் நாபிக்கமலம் வரையிலுமுள்ள இடம்.)

    * ஞாயிறு மண்டிலம்
    (ஆதித்த மண்டிலம்) :

    இது இருதய கமலத்தில் அறுகோணமாய் வாழைப்பூ போன்று கீழ்நோக்கி இருக்கும்.

    உந்திக்கு நாலு விரற்கடைக்கு மேல் இருக்கின்றது. இருதயகமலம் முதல் கண்டதானம் வரையிலு முள்ள இடம்.

    * திங்கள் மண்டிலம் (சந்திர மண்டிலம்) :

    இது கோடி சந்திரர் உதயமானது போலத் தலை நடுவில் ...நிலையாய் நிற்கும். இதை "அமுதகலை" எனவும் கூறுவர்.

    அமுதம் மேல் நோக்கியும்... அக்கினி கீழ் நோக்கியும் சரியாய் நிற்கும். இது கபாலம் அல்லது லலாடதானம் ஆகும்.

    அடுத்ததாக....

    3) மலம் மூன்று :

    ஆணவம் , மாயை , காமியம்.

    சைவ சித்தாந்தத்தில் இதற்கு விரிவான விளக்கங்கள் உண்டு. நான் தங்களுக்கு சுருக்கமாக அளிக்கிறேன்.

    1) ஆணவம் :

    இது ஆன்மாவின் அறிவை மறைத்து... யான் , எனது , (நான்) என்பவற்றையும், அறீயாமையையும் பிறப்பித்து, ஒருவனுக்கு தன்னுடமை , மபெண்டு, பிள்ளை நண்பர் முதலியவர்களிடம் ஆசையை உண்டாக்கி , எதுவும் தான், தனது என்று இருக்குமாறு செய்வது. (நான் என்ற ஆணவம் )

    2) மாயை :

    வேறொருவருடைய பொருளைத் தனதென்று நினைக்கும் இடையூறை விளைவிப்பதும், துன்பத்தை வருவிக்க முயலுவதாகும்.

    3) காமியம் :

    இது முந்தைய இரண்டு விதத்திற்கும் ஐத்து இருப்பதுமன்றி.. இதனால் புண்ணிய பாவங்களை உண்டாக்
    குவதுமாகும்.

    அதாவது... கண்டவற்றிற்கெல்லாம் ஆசைப்படுதல் என்று கூறலாம்.

    அடுத்ததாக....

    4) தோடம் மூன்று :

    1) வாதம்
    2) பித்தம்
    3) ஐயம்

    * வாதம் என்றால்... வளி. இது வாயுவின் கோபம்.

    * பித்தம் என்றால் அழல். இது தேயுவின் கோபம்.

    * ஐயம் என்றால் கபம். இது அப்புவின் கோபம்.

    இம்மூன்று கோபத்தினால் தான் சகல நோய்களும் உண்டாகும்...என அறிந்து கொள்ளுங்கள்.

    நாடிப்பயிற்சிக்கு முக்கியமான..ஒரு தோடத்தைக் கூறியிருக்கிறேன். அவசியம் ஞாபகத்தில் இருத்தல் வேண்டும்.

    தோடம் என்றால் தோஷம்.

    மீண்டும் அடுத்த பதிவில்...!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  10. Mon. 13, June, 2022 at 7.20 am.

    நாடிப் பயிற்சி :

    பாடம் − 19.

    மூன்றாம் தத்துவம் 36−ன் வரலாறு பார்த்துக் கொண்டு வருகிறோம்.

    இன்றைய பாடம்.....

    5) ஏடணைகள் மூன்று(முப்பற்றுக்கள்) :
    மூன்று வகையான பற்றுக்கள் உள்ளன.
    அவை....

    1) பொருட் பற்று அல்லது அர்த்த வேடணை.

    2) புதல்வர் பற்று அல்லது புத்திர வேடணை.

    3) உலகப் பற்று அல்லது உலக வேடணை.

    * பொருட் பற்று என்பது .....
    பொருள் முதலியவற்றால் வரும் பிணக்கு. அதாவது திரவியத்தைத் தேடி ஆசைப்படுதல்.

    * புதல்வர் பற்று என்பது ....
    பிள்ளைகள் முதல் சுற்றத்தாரால் வரும் பிணக்கு. அதாவது புத்திரனைத் தேடி ஆசைப்படுதல்.

    * உலகப் பற்று என்பது ....
    உலகம் முதலான விட(ஷ)யங்களைத் தேடி ஆசைப்படுவதால் வரும் பிணக்கு.


    6) குணம் மூன்று (முக்குணம்) :

    மூன்று வகையான குணங்கள் ....

    1) சத்துவ −மாவது
    2) இராசத−மாவது
    3) தாமத − மாவது

    * சத்துவம் என்பது ....
    அருள், ஐம்பொறி அடக்கல், ஞானம், தவம், பொறை மேன்மை மோனம் (மெளனம்), வாய்மை, அடக்கம், அன்பு, விவேகம் முதலிய நற்குணங்களில் நாட்டம் கொண்டி ருப்பது.

    * இராசதம் என்பது .....
    ஊக்கம், வீரம், ஞானம், அறம், தவம், கல்வி, சகை, கேள்வி முதலான எண் குணங்களை உடையது.

    * தாமதம் (தாமசம்) என்பது ...
    ஓழுக்கமின்மை, சினம், கொலை, சோம்பு, நீதி வழுவல், நெடுந்துயில் (நீண்ட உறக்கம்), பேருண்டி, காமம், பொய், மறதி, வஞ்சகம் போன்ற தீய குணங்களையுடையது.


    7) வினை இரண்டு :

    1) நல்வினை
    2) தீவினை

    * நல்வினை என்பது .... புண்ணியம் செய்தல்.

    * தீவினை என்பது .... பாவஞ் செய்தல்.

    மீண்டும் அடுத்த பதிவில்...!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  11. Fri. 17, June, 2022 at 6.10 am.

    நாடிப் பயிற்சி :

    பாடம் −22.

    இன்றைய பாடம் ... " சரம் ". :

    சரம் என்பது... பிராண வாயுவின் (சுவாசம்) இயக்கம். அல்லது உயிர்க்காலின் இயக்கம் ஆகும்.

    இ்ச்சுவாசம் மூக்கின் இரண்டு துவாரங்களின் வழியாக உள் நுழைதலும், வெளிச் செல்லலுமாக இருக்கும்.

    மூக்குத் துவாரங்களில்...

    இடப்பக்க துவாரம் "இடகலை" அல்லது சந்திரன் ஆகும்.

    வலப்பக்க துவாரம் என்பது...பிங்கலை அல்லது சூரியன் ஆகும்.

    இந்த பிராணவாயு...ஆறு ஆதார நிலை களிலும் அதாவது... மூலாதாரம் தொடங்கி ஆஞ்ஞை(ஆக்ஞை) வரையிலும் உள்ள உறுப்புகளை வன்மைப்படுத்தி மனதை அலைய ஒட்டாதபடி தடுத்து அறிவினை விளக்கி உடலை அழியாதிருக்கச் செய்வதும், இறைவன் தன்மைகளை மக்களும் பெறக் கூடும் என்பவையே.

    மேலும், இடகலை, பிங்கலைகளில் ஒரே நேரத்தில் மூச்சு உள் நுழைதலும், வெளியிற் செல்லுதலும் நிகழ்வதில்லை.

    ஒவ்வொரு மூக்குத் துவாரங்களிலும்.. 5−நாழிகை அதாவது 2−மணி நேரம் தான் மூச்சு நடக்கும்.

    அவ்வாறு நடப்பதும்...

    * திங்கட் கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் இடகலையிலும்... அவை .விடியற்காலை 4−மணிக்குத் தொடங்கி.. ஐந்து ஐந்து நாழிகைகளாக ஒவ்வொரு மூக்குத் துவாரங்களிலும் மாறி மாறி நடக்கும்.

    * செவ்வாய்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில்.. பிங்கலை யிலும்... அவை விடியற்காலை 4− மணிக்கு தொடங்கி...ஐந்து ஐந்து நாழிகைகளாக ஒவ்வொரு மூக்குத் துவாரங்களிலும் மாறி மாறி நடக்கும்.

    * வியாழக்கிழமையில் வளர்பிறையில் இடகலை(இடது மூக்கு) வழியாகவும்...

    தேய்பிறையில் பிங்கலை(வலது மூக்கு) வழியாகவும்....

    விடியற்காலை 4−மணிக்குத் தொடங்கி, ஐந்து ஐந்து நாழிகைகளாக ஒவ்வொரு மூக்குத் துவாரத்திலும் மாறி மாறி நடக்கும்.

    இவ்வாறு.....

    இடகலையாகிய... சந்திரனில் நடந்தாலும்...

    பிங்கலையாகிய... சூரியனில் நடந்தாலும்...

    பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்னும் 5−பூதங்களிலும் பாய்ந்தே சுவாசம் நடைபெறும்.

    அவ்வாறு நடைபெறுகையில்...

    பிருதிவியில் ... 1 1/2 நாழிகையும்...
    அப்புவில் .... 1 1/4 நாழிகையும்...
    தேயுவில் .... 1 நாழிகையும்....
    வாயுவில் ..... 3/4 நாழிகையும்....
    ஆகாயத்தில்... 1/2 நாழிகை
    என 5−நாழிகையாக 2−மணி நேரம் நடக்கும்.
    (5 நாழிகை என்பது 2−மணி நேரம் ஆகும்.)

    அவ்வாறு நடைபெறுவதும் எவ்வாறெனில்....

    * பிருதிவியில் 1 1/2 நாழிகை மூக்குத் துவாரத்தில் வாழும் வாயு...மூக்குத் தண்டில் தாங்கிக் கொண்டும்...

    * அப்புவில் 1 1/4 நாழிகை கீழ்ப்பக்க மாய் இறங்கியும் ....

    * தேயுவில் 1 நாழிகை மேற்பக்கமாய் ஏறியும் ....

    * வாயுவில் 3/4 நாழிகை மூக்குத் தண்டுக்கு அருகாமையிலும்...

    * ஆகாயத்தில் 1/2 நாழிகை எதிலும் படாமல் நேராக ஓடும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

    கவனிக்க ....

    * பிருதிவி முதல் ஐந்து பூதங்களிலும் அதாவது.. பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்களிலும் சரம் (சுவாசம்) நடைபெற பிறக்கும் குழந்தைக்கு 100− ஆண்டுகள். அதாவது 100 வயது.

    * பிருதிவியை நீக்கி.. ஏனைய 4−பூதங்களில் சுவாசம் நடைபெற பிறக்கும் குழந்தைக்கு 80ஆண்டுகள். (80−வயது).

    மேலும்... சுவாசம் சரியாக நடைபெற்றால்... நாடிகள் மூன்றும் (வாதம், பித்தம் கபம்..அதாவது வளி, அழல், ஐயம்) சரியான மாத்திரை அளவோடு நடைபெறும். அவ்வாறு நடைபெற்றால்...மானிடர்க்குப் பிணியில்லை.

    நன்கு கவனமாக படித்து அறிந்து கொள்ளுங்கள்.

    மீண்டும் அடுத்த பதிவில் ....

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  12. Sun. 19, June, 2022 at 9.34 am.

    நாடிப் பயிற்சி :

    பாடம் − 24.

    பிராணாயாமம் பழகுவோர்... கடை பிடிக்க வேண்டியவை ....!

    பிராணாயாமம் பழகுவோர், உண்ணும் போதும், உறங்கும் போதும், ஸ்திரி சம்போக காலத்திலும், இலை, காய் முதலியவற்றை அருந்தும் போதும்...மற்றும் எல்லாக் காலங்களிலும்...

    வலது நாசியின் வழியாய் சுவாசத்தை உள் இழுத்து , 16−மாத்திரை அளவு மேல் நோக்கி பேணி , அதாவது வலம் மேல் நோக்கி, ஸ்தம்பித்து நிறுத்தி 32−மாத்திரை அளவு அப்பால் வெளியில் விட்டும்...

    16− மாத்திரை அளவு இடது நாசியின் வழியாக சுவாசத்தை நடத்தியும் என நாளடைவில் பழக்கத்தில் சுவாசம் உட் தங்கும்படி அப்பியாசித்து வந்தால்... அவர் நீடுழி காலம் வாழ்வார். எமன் கையில் அகப்பட மாட்டார். அதாவது நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம்.

    *குறிப்பு : வலது நாசியில் மட்டும் சரம் பழகுவது மிக மிக இலாபகரமானது.

    பிராணாயாமம் பழகுவதால் ஏற்படும் நன்மைகள் பார்த்தீர்களானால்...

    மனம் கட்டுப் படும். ஐம்புலன்களை அடக்கி வாழும் தன்மை கிடைக்கும்.
    மனம் கட்டுப்பட்டால் அறிவு தானே விருத்தியாகும்.

    அதாவது..அறிவு என்பது...ஆணவம், மாயை, கன்மம்..என்ற மும்மலங்கள் அழியும். நாம் நினைக்கிற ஒன்றைப் பெறலாம். வறுமையிராது. ஐஸ்வரிய முண்டாகும். அனைத்து வித்தைகளும் கைகூடும்.

    அதாவது சரம் பழகுவோர்... அவரவர் இஷ்ட தெய்வத்தை நினைத்து பழக வேண்டும். இந்துக்களாக இருப்பின்..ஐந்தெழுத்தான ஓம் நமசிவாய என்றோ அல்லது ஓம் சிவாய நம என்று கூறியோ சுவாசப் பந்தனம் செய்தல் வேண்டும்.

    இவ்வாறு சுவாசப் பந்தனத்துடன் ஜெபமும் இரண்டறக் கலந்து மேலான பதவியை அடையலாம்.

    மேலும், சரம் பழகுவோர்க்கு ஆயுள் விருத்தியும், பிணி, மூப்பு, சாவு முதலியவை இல்லை. முக்கியமான ஒன்று... வெளிக் காட்சிகளில்...அதாவது உலக ஆசையினின்று விடுபடலாம்.. அதனால் நாம் நினைத்ததை எளிதில் அடையலாம். நாம் செய்யும் காரியம் யாவும் வாய்க்கும் என்பதே.

    மீண்டும் அடுத்த பதிவில் ....!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  13. Wed., 13, July, 2022 at 9.2 pm.

    நாடிப் பயிற்சி :

    பாடம் : 36.

    நோய் என்றால் என்ன என்று கடந்த பாடத்தில் பார்த்தோம்....

    இன்று.... நோய் நீக்கும் வழிமுறை பற்றி பார்ப்போம்.

    நோயை அணுக ஒட்டாமல் தடுப்பதற்கு மக்கள் ஊண் விஷயத்தில்...அனுசரிக்க வேண்டிய.. அதாவது கடைபிடிக்க வேண்டிய விதி முறைகள் யாதெனில்....

    * ஒருவர் தாம் உண்ட உணவு, நன்றாகச் செரிமானம் ஆயிற்று...என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொண்டு உண்ண வேண்டும். அவ்வாறு வாழ்ந்தால் அவருடைய உடலுக்கு மருந்து எதுவும் தேவையில்லை. பிணி அண்டாது.

    * இரண்டாவது... ஒருவன் முன்பு உண்டது நன்றாகச் செரிமானம் ஆனால்... பின்னர் உண்பதை.. செரிமான அளவறிந்து உண்ண வேண்டும். அளவுக்கு அதிகமாக உண்ணுதல் கூடாது. அதுவே ஒருவனது நீண்ட ஆயுளுக்குரிய வழி முறை ஆகும்.

    * மூன்றாவதாக.... நோய் வராதிருக்க உடல் அடைந்த வேறுபாடுகளையும், தட்ப வெப்ப வேறுபாடுகளையும் நன்கு அறிந்து... அதற்குத் தகுந்தவாறு உணவுகளை அமைத்து, செரிப்புத் தன்மைக்கு ஏற்றவாறு உணவூ கொள்ளல் வேண்டும்.

    * நான்காவதாக ..... உடல் நிலை கெட்டுப் பசித்தீ குறைந்து, செரிப்புத் தன்மை இழந்த காலத்திலும், முன்பு உண்டது போல் பெரிதும் உண்டால்..நோய் பெருகும்.


    * ஐந்தாவதாக..... ஒருவன் தன் உடலுக்கு ஊறு விளைவிக்காத உணவை மிகுதியாக உண்ணாமல், அளவோடு உண்டால்... நோய் வராது.

    அதாவது,வளி, அழல், ஐயம் ஆகிய முக்குற்றங்கள் மாறுபாடில்லாதபடி (மிகுதலாகவோ, குறைவாகவோ) தடுக்க வேண்டுவன தடுத்தும், கூட்டியும் உண்டால்..வளி, அழல், ஐயம் என்னும் முத் தோட(ஷ)ங்களுக்கு துன்பம் நேராது. அதாவது நோய் உண்டாகாது.


    * ஆறாவதாக..... ஒருவன் தான் உண்ணும் முறையும், அளவும் அறிந்து உண்டால் ...எப்போதும் இன்புற்று வாழலாம். அளவில்லாது உண்பவனி
    டம் நோய்களும் பெருகும். உடல் பிணிக்கப்பட்டு, மீளாத் துன்பத்தில் ஆள்வர்.

    மேலும்... நோய்வாய்படின் மருத்துவரின் கடமை.. யாதெனில்..

    வந்த நோய் எதுவென்று தெளிவாகத் தெரிந்து கொண்டு, நோய் வந்த காரணத்தையும், நோயைப் போக்கும் வழிமுறையினையும் ஆராய்ந்து .. அதற்கேற்றவாறு ... முறையான மருத்துவத்தை மேற்கொள்ளல் வேண்டும்.

    * மருத்துவர் நோய்வாய்ப்பட்ட ஒருவரது.. உடல் இயல்பு, வயது ஆகியவற்றையும்....
    நோயின் தாக்க அளவு, பரவும் முறை ஆகியவற்றையும்.....
    நோயுற்ற கால அளவையும் தெளிவாகத் தெரிந்து மருத்துவம் செய்ய வேண்டும்.

    அதாவது...உணவு செயல்களின் மிகுதி, குறைவால்... வளி,அழல், ஐயம் ஈம்மூன்றில் ஒன்றேனும், இரண்டேனும் அல்லது மென்றேனும் மிகுந்து அல்லது குறைந்து பிணிக்கப் படுமாகையில் ... பிணிக்கப்பட்ட குற்றம் யாது..? அதற்கு காரணமாக இருந்தது எது ? அதனைத் தணிப்பதற்கான வழி எது ? என அறிந்து அதன்படி செயல்படுவதே.. ஒரு மருத்துவரின் நற்செயல் ஆகும்.

    மீண்டும் அடுத்த பதிவில்...

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  14. Fri., 15, July, 2022, at 7. 30 am.

    நாடிப் பயிற்சி :

    பாடம் : 37.

    இன்றைய பாடம்....


    நோயின்றி வாழ்வதற்கு காயகற்பம் அவசியம்.....!

    காயகற்பம் :

    காயம் என்பது...உடல்.
    மனம் பழுக்காது காயாகவுள்ள உடல்.

    கற்பம் என்பது... உடலைக் கல் போலாக்கும் முறை எனப் பொருள்.

    அதாவது...மக்கள் நோயின்றி உய்ந்து, பிறவா நிலை எய்தற் பொருட்டு..உடல் (காயம்) அழியாதிருக்க வைக்க பிணிக்கப்பட்ட நோய்களை நீக்கி.. உடலை (காயத்தை) காக்க வந்த முறை காயகற்பம் ஆகும்.

    காயகற்பத்தை மூன்றாக வகுத்துள்ள னர்.

    அவை... மணி , மந்திரம் , அவிழ்தம் என்பன.

    இம்மூன்றும்... வந்த நோயைத் தடுத்தும், போக்கியும், உடலை அழியாது காக்க வைக்கும்.

    1) மணி என்றால்... இரசத்தைக் கட்டி மணி போல் ஆக்கிய இரசமணி ஆகும்.

    இதன் வேறு பெயர்கள்... இரசக் குளிகை, சூதக் குளிகை, ககனக் குளிகை.

    முப்புவைக் கொண்டு இரசத்தை இரசமணியாகவும், இரசச் சுண்ணாம்பாகவும் தயாரிப்பதே சிறந்த முறை. மேன்மையான பலனையும் அளிக்கும்.

    காயகற்ப முறை எதுவாயினும் "முப்பு" இன்றித் தயாரிப்பது... சித்தி பெறாது.

    "முப்பு தொட்டுக் கற்பமுண்டறியா தார்க்கு.... எப்போதும் காலனெமன்" என அறிந்து கொள்ளுங்கள்.

    உடலை வளர்ப்பதற்குக் காயகற்ப முறையில் ... "இரசமணி" முதல் ஸ்தானம் .

    2) மந்திரம் என்பது.... ஐம்பொறிகளை யும் அடக்கி, ஒவ்வோர் நிலையையும் (ஆறு ஆதார நிலைகளில்)
    தன்வயமாக்கும் மார்க்கம் ஆகும்.

    இன்ன பல அரியவாக முடிக்கவல்ல வழிகளைக் கூறுவது...மந்திரம் ஆகும்.

    * பிராணாயாமம் பற்றி (சரம்) தங்களுக்கு ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

    3) அவிழ்தம் என்பது..... மருந்து.
    அவிழ்தம் என்பது... அவிழ்த்தல் தன்மை உடையது.

    அதாவது... அவிழ்த்தல் என்பது, பிணிக்கப்பட்ட முக்குற்றங்கள், ஐங்காற்கள், ஏழு உடற் தாதுக்கள் ஆகியவைகளை அவிழ்க்கும் தன்மை உடையவையே அவிழ்தம் ஆகும்.

    இது...அக மருந்து, புற மருந்து என்று இருப்பினும்.... மூன்று பொருளாக இதனை வகுத்துள்ளனர்.

    அவை.... தாவரப் பொருள், தாதுப் பொருள், சங்கமப் பொருள் ஆகும்.

    இதற்கிணங்க... உடல் நோய்வாய்ப் பட்டு அழியாது உடலைக் காக்க வந்த காயகற்பம்... மூன்று பங்கினை உடையது.

    * மூலி (வேரை உடைய) ... புல், பூண்டு, செடி,கொடி, மரங்கள்.

    * உயிர்ப் பொருள்கள்.

    * இரும்பு, செம்பு, பொன் , வெள்ளி , ஈயம், ரசம், பாடானம், உப்பு ஆகியவற்றினைக் கொண்டு மருந்துகள் செய்து உண்டும் அல்லது முதல் இரண்டினை ஆகாரமாகக் கொண்டும்.. அல்லது... குடிநீர் , சாறு , பொடி, இலேகியம் ஆகியவற்றினை தயாரித்து உட்கொள்வதும்....

    வெளிப் பிரயோகமாக உபயோகித்தும் நோய்களை போக்குவதாகும்.

    மணி மந்திரம் , அவிழ்தம் பற்றிய வேறு கருத்துகளும் உண்டு. அடுத்த பதிவில் அளிக்கிறேன்.

    மீண்டும் அடுத்த பதிவில்....

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  15. Mon. 18, July, 2022 at 8.2 pm.

    நாடிப் பயிற்சி.....!

    பாடம் − 40.

    இதயத்தின் அமைப்பை பற்றி பார்த்து வருகிறோம்..

    நாடி நடை யோடு...சம்பந்தமிருப்பதனால் தான்..இதயத்தை அறிந்து கொள்ளச் செய்கிறேன்.

    தொடர்ச்சி...

    நேற்று வால்வுகள் பார்த்தோம்... இன்று....

    மேற்பெருஞ்சிரை, கீழ்ப்பெருஞ்சிரை மூலம் இதயத்தின் வலது ஆரிக்கினுள் அசுத்த இரத்தம் கொண்டுவரப்படு கிறது.

    மேலும்... வலது வெண்டிரிக்கிளிலி ருந்து, நுரையீரல் தமனியானது, அசுத்த இரத்தத்தை சூத்தம் செய்வதற் காக நுரையீரலுக்கு எடுத்துச் செல்கிறது. சுத்தம் செய்யப்பட்ட இந்த இரத்தமானது... 4 நுரையீரல் சிறை மூலமாக இடது ஆரிக்கிளை அடைகிறது.

    இது வெண்டிரிக்கிளிலிருந்து மகாதமனி மூலம் இரத்தமானது... உடலின் எல்லாப் பாகங்களுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது.

    மகாதமனி, நுரையீரல் தமனி ஆகிய இரு பெரும் இரத்தக் குழாய்களின் திறப்புப் பிறை வடிவ வால்வுகளால் (அர்த்த சல்திர வால்வு) காக்கப்படு கிறது.

    இந்த வால்வு.... ஒரு வழியாக மட்டுமே இரத்தத்தை அனுப்பும் தன்மை கொண்டது.

    * இதயமானது... 3 அடுக்குத் திசுக்களால் ஆனது.

    அவை.....
    1) வெளி பெரிகார்டியம்
    2) நடு மயோகார்டியம்
    3) உள் எண்டோகார்டியம்.

    * வெளி பெரிகார்டியமானது இதயத்தை சூழ்ந்து இருக்கும். இது 2− அடுக்குகளால் ஆனது. இந்த அடுக்கு களுக்கு இடையில், பெரிகார்டியல் திரவம் காணப்படும்.

    *இதயம் எவ்வாறு இயங்குகிறது என பார்ப்போம்...!

    அதாவது...இதயத்தின் நான்கு அறைகளும் ஒரே நேரத்தில் சுருங்குவது இல்லை.

    ஆரிக்கிள்கள் சுருங்கும் போது.. வெண்ட்ரிக்குகள் விரிவடைகின்றன.

    வெண்ட்ரிக்குகள் சுருங்கும்போது.. ஆரிக்கிள்கள் விரிவடைகின்றன.

    இரு அறைகளும் சுருங்கி, விரிவடையும் நிலை தான் இதயத்தின் ஒரு முழு இயக்கம்(Cardiac Cycle) ஆகும்.

    * ஆரிக்கிள்கள் விரிவடையும் பொழுது கீழ்ப் பெருஞ்சிரை மற்றும் மேல் பெருஞ்சிரை மூலமாக... உடலின் எல்லாப் பாகங்களில் இருந்தும் அசுத்த இரத்தமானது..வலது ஆரிக்கிளை வந்தடைகிறது.

    அதே சமயத்தில் நுரையீரலில் சுத்தம் செய்யப்பட்ட இரத்தமானது... 4 நுரையீரல் சிரைகள் மூலமாக இடது ஆரிக்கிளை வந்தடைகிறது.

    * இப்போது...ஆரிக்கிள்கள் சுருங்கி,வெண்ட்ரிக்குகள் விரிவடைகின்றன.
    அப்பொழுது "மூவிதழ் வால்வு" திறந்து வலது ஆரிக்கிளிலிருந்து அசுத்த இரத்தமானது வலது வெண்ட்ரிக்கு களை வந்தடைகிறது.

    அதே நேரத்தில் ஈரிதழ் வால்வு திறப்பதன் மூலம்...இடது ஆரிக்கிளி லிருந்து...இடது வெண்டிரிக்களுக்கு .. சுத்த இரத்தம் வந்தடைகிறது.

    * இந்த ஆரிக்கிளோ வெண்ட்ரிக் குலார் வால்வு திறக்கும் போது ... அர்த்த சந்திர வால்வு மூடிக் கொள்ளும்.

    அடுத்தபடியாக...

    ஆரிக்கிள்கள் விரிவடைகின்றன. வெண்ட்ரிக்குகள் சுருங்குகின்றன.
    இந்த நேரத்தில்...ஆர்க்கிளோ வெண்ட்ரிக்குலார் வால்வு மூடிக் கொள்ளும்... அர்த்த சந்திர வால்வு திறக்கும்.

    வலது வெண்ட்ரிக்கிளில் இருந்து அசுத்த இரத்தம்.... சுத்தம் செய்யப் படுவதற்காக.. "நுரையீரல் தமனி" க்கு சென்று, நுரையீரலுக்குச் செல்லும்.
    அச்சமயத்தில்...இடது வெண்ட்ரிக்கிளி லிருந்து... சுத்த இரத்தம் "மகாதமனி" மூலம் உடலின் எல்லாப் பாகத்திற்கும் எடுத்துச் செல்லப்படுகிறது.

    இவ்வாறு இரத்தமானது... இருதயத் தில் இருந்து ..நுரையீரலுக்கும், அங்கிருந்து இதயத்திற்கும் வந்து உடலின் எல்லா பாகங்களுக்கும் எடுத்துச் செல்லப்படுவது.... தொடர்ந்து இடைவிடாது நடை பெற்றுக் கொண்டே இருக்கும்.

    இவ்வாறு இந்த நிகழ்ச்சி ... 1 முறை நடைபெறுவதற்கு எடுத்துக் கொள்ளப் படும் நேரம்... 0.8 விநாடிகளே ஆகும்.

    இந்த நிகழ்ச்சி 1 நிமிடத்திற்கு... 72 தடவைகள் நடைபெறுகிறது.

    * இப்போ...நாடித் துடிப்பு என்பது...
    இடது வெண்ட்ரிக்கிள் சுருங்கும் சமயத்தில்... இரத்தமானது மகாதமனி வழியாக... கிளை தமனிகள் மூலம் உடலின் எல்லாப் பாகங்களுக்கும் எடுத்துச் செல்லப் படுகிறது.

    இரத்தம் தமனிகளில் அலை அலையாகச் செல்லும் பொழுது... தமனிகள் சுருங்கி விரிவது... "நாடித்துடிப்பு " எனப்படும்.

    ஓய்வு நிலையில் நாடித் துடிப்பானது..
    1 நிமிடத்திற்கு ... 70 முதல் 80 வரை இருக்கும்.

    மீண்டும் அடுத்த பதிவில்....!

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  16. Tue, 19, July, 2022 at 6.38 am

    நாடிப் பயிற்சி....!

    பாடம் − 41.

    இன்றைய பாடத்திற்குள் போகும் முன், நேற்றைய பாடம் நாடித் துடிப்பு வரை நன்கு புரிந்து வைத்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

    இன்று...இருதய ஒலி பற்றி பார்ப்போம்.....!

    இவை இதய வால்வுகளின் இயக்கத்தை உணர்த்துகிறது.

    இதய ஒலிகள் 2− விதமாக இருக்கின்றன.

    அவை....

    * லப் (Lubb)
    * டப் (Dupp)

    * முதல் ஒலியான "லப்" என்பது.... வெண்ட்ரிக்குகள் "சுருங்கும் போது"
    ஆரிக்கிளோ வெண்ட்ரிக்குலார் வால்வு மூடிக் கொள்ளும்போது எழும் ஒலியாகும்.

    * இரண்டாம் ஒலியான "டப்" என்பது... வெண்ட்ரிக்குகள் "விரிவடையும் போது"... அர்த்த சந்திர வால்வு மூடிக் கொள்வதால் எழும் ஒலியாகும்.

    இந்த வால்வுகள் ஒழுங்காக வேலை செய்யாவிட்டால்... முரண் ஒலிகள்(Murmur) எழுகின்றன.

    * அதாவது நாடி....சப்த தாதுக்களுக் கும், இருதயம், நாடி நரம்பு, இரத்தக் குழாய் முதலியவற்றிற்கும் தொடர்பு உண்டென முன்னமே.. தெரிந்திருக் கிறோம்... அல்லவா.

    * அதன்படி... இரத்த அழுத்தம் என்றால் என்ன ?

    இரத்தமானது... இரத்த நாளங்களின் சுவர்களில் ஏற்படுத்தும் அழுத்தம்... இரத்த அழுத்தமாகும். இது சாதாரண மாக 120/80mm Hg என்று கொள்ளப் படுகிறது.

    * இதில் 120 என்பது..."சிஸ்டோலிக்" அழுத்தம்.

    * 80 என்பது... "டயஸ்டோலிக்" அழுத்தம்.

    * சிஸ்டோலிக் அழுத்தம் என்பது... "வெண்ட்ரிக்குகள் சுருங்கும் போது" ஏற்படுகின்றது.

    * டயஸ்டோலிக் அழுத்தம் என்பது...."வெண்ட்ரிக்குகள் விரிவடையும்போது" ஏற்படுகின்றன.

    சாதாரணமாக... சிஸ்டோலிக் அழுத்தம்... 100 முதல் 140 வரை இருக்கலாம்.

    டயஸ்டோலிக் அழுத்தம்... 70 முதல் 90 வரை இருக்கலாம்.

    இதற்கு மேல் அதிகரித்தால் அதிகுருதி அழுத்த நோயும், குறைந்தால் குறைகுருதி அழுத்த நோயும் உண்டாகும்.

    * அடுத்து... இரத்தக் குழாய்கள்(இரத்த நாளங்கள்)....!

    இரத்தக் குழாய்கள் மூன்று வகைப்படும்.

    அவை....

    * தமனி (Artery)
    * சிரை (Vein)
    * தந்துகிகள் ((Capiuary)

    * தமனி : நம் உடலில் நுரையீரல் தமனி தவிர மற்ற அனைத்து தமனிகளும்.. சுத்த இரத்தத்தை எடுத்துச் செல்லும்.

    * சிரை : நம் உடலில் நுரையீரல் சிரை தவிர மற்ற அனைத்து சிரைகளும்... அசுத்த இரத்தத்தை எடுத்துச் செல்லும்.

    * தந்துகிகள் : தமனி மற்றும் சிரைகளின் நுண்ணிய கிளைகள் தந்துகிகள் எனப்படும்.

    இவை ஒவ்வொரு செல்களுக்கும் இரத்தத்தைக் கொண்டு செல்லும்.

    இதுவரை...

    இதயத்தின் அமைப்பு.. அதாவது இதயம் என்றால் என்ன.. இதயம் இயங்கும் விதம்.. நாடித்துடிப்பு என்றால் என்ன... இருதய ஒலிகள் என்றால் என்ன.... இரத்த அழுத்தம் என்றால் என்ன... இரத்தக் குழாய்கள் அதாவது இரத்த நாளங்கள் என்றால் என்ன எனப் பார்த்துள்ளோம்.

    சரி, இப்போ பாடத்திற்குள் வருவோம்..!

    நாடி நடையின் குணங்கள் யாவும்...இருதயத்தின் நடைக்கு ஒத்திருக்கும்.

    எவ்வாறு எனில்...

    இருதயத்தினுடைய நடையின்(துடிப்பு) பேதாபேதங்களை... நாடிகள் மூலம் நமக்கு அறிவிக்கின்றது.

    தேகத்தில் நோய் கண்டால் ...இருதயத் தின் சுபாவமான நடை இழந்துபோம்.

    தேகத்தில் இருக்கும் நோயை... இருதயம் தெரிந்து கொண்டு... நாடிகள் மூலமாக நமக்கு அறிவிக்கின்றது.

    அப்போ...இருதயத்தின் துடிப்பு..அதாவது நாடி நடையின் பேதா பேதங்கள் யாவும் நன்றாகத் தெரியா விட்டால்... தேகத்தில் இருக்கும் வியாதியின் கூறு.. செவ்வையாகத் தோன்றாது.

    நாடி நடையைப் பரீட்சிக்கக் கூடிய இடங்களைப் பற்றி அடுத்த பதிவில் காண இருக்கிறோம்...!

    மீண்டும் அடுத்த பதிவில்...

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  17. Wed, 20, July, 2022 at 7.24 pm.

    நாடிப் பயிற்சி :

    பாடம் − 42.

    மானிடர்க்கு ஏற்பட்ட எழுபத்தீராயிரம் (72,000 ) நாடி நரம்பு ரத்தக் குழாய்
    களிலும் நாடி நடைபெறும்.

    நாடி பரிசோதிக்கும் முக்கிய இடமாகிய, கையின் பெருவிரலுக்கு அடியில், மணிக்கட்டை அண்டையுள்ள, இரத்த நாளத்தின் மேல்... மூன்று விரல்களை வைத்து...

    வாத நாடியை , ஆள்காட்டி விரலாலும்...
    பித்த நாடியை, நடு விரலாலும்....
    கப நாடியை, மோதிர விரலாலும்....
    அறிய வேண்டும்.

    நாடியைக் கணிப்பதற்கு பத்து ஸ்தானங்கள் குறிப்பிடப்பட்டிருக் கின்றன. ஆனால்.... கரத்தின் நாடியே சிறந்தது.

    எளிதில் வளி, அழல், ஐயம் ஆகிய நாடி நடையை எளிதில் பார்த்து அறியக் கூடியது...கரத்தின் நாடியே.

    * நாடியின் நடைகள் ....!

    * வாத நாடியானது... ஒரு சர்ப்பம் விரைந்து, ஊர்ந்து போவதை ஒத்தது.

    * பித்த நாடியானது....தவளைக் குதிப்பது போன்றது.

    * கப நாடியானது.... ஒரு யானை அல்லது அன்னத்தின் நிதானமான நடையைப் போன்றது.

    இவ்வாறு... நாடி நடைகளை அறியலாம்.

    நாடி பார்க்கும் விதம் மீண்டும் தெளிவு படுத்துகிறேன்...!

    வாதம்...!

    பெருவிரல் பக்கமாக மணிக்கட்டுக்கு ஒரு அங்குலத்திற்கு மேல் ஆரை என்பின் மேலோடும், நாடி நரம்பு இரத்தக்குழாயின் மேல் மூன்று விரல்களை வைத்துச் சற்று அழுத்தியும், தளர்த்தியும் பார்க்க....

    * ஆள்காட்டி விரலாகிய முதல் விரலில் உணர்த்துவது.... வாதம்.

    * நடுவிரலில் உணர்த்துவது... பித்தம்.

    * பெளத்திர விரலில் உணர்ததுவது .... கபம் எனவும் அறியவும்.

    ஒரே நாடி நரம்புக் குழாயிலேயே மேற்கண்டபடி நாடியின் துடிப்பை நாம் அறியலாம்.

    நாடி ஓடிக் கொண்டிருக்கும் உறுப்பு... குழல் போன்றது... என அறியவும்.

    * மாத்திரை அளவுகள் :

    வாதம் .... ஒரு மாத்திரை.
    பித்தம் .... அரை மாத்திரை.
    கபம் ..... கால் மாத்திரை

    விகிதமாக மூன்று நாடிகளும் முறையே தன்னிலையில் காண்பிக்கும் அளவாகும்.

    ஒரு மாத்திரை என்பது....ஒரு கை நொடி அல்லது கண் இமைக்கும் கால அளவு.

    ஆனால் நாடி சாஸ்திரப்படி கூறுங்கால்.....
    நாடித் துடிப்பு... ஒரு கோதுமை அரிசிப் பிரமாண உயரம் எழுந்து அடங்குவதற் குரிய கால அளவு எதுவோ.. அதுவே நாடி நடையின் மாத்திர அளவைக் குறிக்கும்.

    மூன்று நாடிகள்(வாதம், பித்தம், கபம்) உண்டாகும் விதமும், மாத்திரைக் கிரமமும், மாத்திரை அளவும் ஒன்றுக் கொன்று வித்தியாசப்படும்.

    நாடி கணிக்கும் மாதங்கள் :

    சித்திரை, வைகாசியில் சூரிய உதயத்திலும்....

    ஆனி, ஆடி, ஐப்பசி, கார்த்திகையில் மத்தியானத்திலும் .....

    மார்கழி , தை , மாசியில் சூரியன் அஸ்தமனத்திலும் ....

    பங்குனி, ஆவணி, புரட்டாசியில் இராத்திரியிலும் .... நாடிகளைக் கணிக்க , நாடி நடை தெளிவாகத் தோன்றும்.

    தமிழ் மாதங்கள் தமிழில் அறிந்து கொள்ளுங்கள்....!

    1) மேழம் = சித்திரை
    2) விடை = வைகாசி
    3) ஆடவை = ஆனி
    4) கடகம் = ஆடி
    5) மடங்கல் = ஆவணி
    6) கன்னி = புரட்டாசி
    7) துவை = ஐப்பசி
    8) நளி = கார்த்திகை
    9) சிலை = மார்கழி
    10) சுறவம் = தை
    11) கும்பம் = மாசி
    12) மீனம் = பங்குனி

    மீண்டும் அடுத்த பதிவில்...!

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  18. Fri. 22, July, 2022 at 10.53 pm.

    நாடிப் பயிற்சி :

    பாடம் − 43.

    இன்றைய பாடமானது.... மூவகை நாடிகளை ஆராய்ந்து அறியும் விதத்தைப் பற்றி பார்க்க இருக்கிறோம்....!

    நாடி நரம்பு... ரத்தக் குழாயின் மேல், மணிக்கட்டுக்கு..ஒரு அங்குலம் தள்ளி, மேலாக.. மூன்று விரல்களால்... சமமாக மெல்லென அழுத்தியும்... தளர்த்தியும் , ஆராய்ந்த பின்பு, விரல்களை மாறி மாறி கூர்ந்து கவனித்து, நாடியின் கதியை ஆராய்ந்து பார்த்து... நோயின் தன்மையை அறிதல் வேண்டும்.

    சிரத்தையுடன் கவனித்து அப்பியாசித்தால்... சுலபமாக நாடி களைப் பற்றிய முக்கியமான குறிப்பு களை அறியலாம்.

    இவற்றுள்...

    * வாதம் அதிகமானால்... அதற்குரிய நோய்களையும்..
    * பித்தம் அதிகமானால்...அதற்குரிய நோய்களையும்...
    * ஐயம் அதிகமானால்...அதற்குரிய பிணிகளையும் உண்டாக்கும்.

    மேலும்...பெருவிரலும், சிறு விரலும் உணர்த்தும் நாடியானது பூதநாடியாகக் கணக்கிடப்படுகிறது. ஆக.. இதனையும் சேர்த்து நாடிகள் ஐந்து. அவை "பஞ்ச நாடி அல்லது பஞ்சபூத நாடி" ஆகும்.

    அடுத்ததாக.....

    எல்லோருக்கும்... வலது, இடது கைகளில் நாடியே ஆராயலாமெனி னும்...

    புருடர்க்கு(ஆண்களுக்கு ) வலது கையிலும்....
    பெண்களுக்கு ...இடது கரத்திலும் நாடிகளை ஆராய வேண்டும்.

    மேலும்...குதிகாலின் உட்புறம், காமியம்(மர்ம ஸ்தானம்), உந்தி, மார்பு,காது, மூக்கு, கண்டம்(கழுத்து) கரம், புருவம், உச்சி போன்று.. பத்து இடங்களில்.. நாடியைப் பரீட்சிக்கலாம்.

    ஆனால்... கை நாடிப் பரீட்சையே பிணிகளைக் கணிப்பதற்கு ... சிறந்தது.

    காரணம்... கையில் நாடி நரம்பின் ரத்தக் குழாயானது...மணிக்கட்டில் சிறுத்து மேல் புறமாகவும், Superficial துலக்கமாகவும் இருப்பதால்... மூன்று விரல்களால்... வளி, அழல், ஐயமாகிய நாடி நடையை எளிதில் அறியலாம்.

    மேலும்... அவசியம் அனைவரும் அறிந்து கொள்ளக் கூடியது...

    *அபானன் முதல் உந்தி வரை... வாத நிலை.

    * உந்தியின் மேல் மார்பு வரை.... பித்த நிலை.

    * மார்பு முதல் உச்சி வரை ... ஐய நிலை என அறியவும்.

    பின்னர்...

    வாதம் ...... மலத்திலும்
    பித்தம் ..... சிறுநிரிலும்
    ஐயம் ..... விந்து−விலும் அடங்கும்...
    எனத் தெரிந்து கொள்ளுங்கள்.

    குறிப்பு :

    நாடிப் பயிற்சியை திரும்ப திரும்ப படித்தால் தான் எளிதில் புரியும். அபானன் என்றால் என்ன..? என்ற சந்தேகம் வராத அளவுக்கு படித்து அறிந்து கொள்ளல் வேண்டும்.

    மீண்டும் அடுத்த பதிவில்.....!

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  19. Sun. 24 , July, 2022 at 7.22 am.

    நாடிப் பயிற்சி :

    பாடம் − 44.

    நேற்றைய பாடத்தில்... ஆண்களுக்கு (புருடருக்கு) ... வலது கரமும், பெண்களுக்கு இடது கையிலும் நாடியை ஆராய வேண்டும் எனப் பார்த்தோம்.

    எதற்காக..அவ்வாறு ஆண்களுக்கு வலது கரமும், பெண்களுக்கு இடது கரமும் பார்க்க வேண்டும் என்றால்...

    பெண்களுக்கு நாபிக் கூர்மையானது... பெண்களுக்கு மேல் நோக்கியும் ....
    ஆண்களுக்குக் கீழ்நோக்கியும் இருக்கிறபடியால்... ஆண், பெண்களுக்குக் கைநாடி வித்தியாசம் இருக்கும்.

    ஆகவே, ஆண், பெண்களுக்கு முறையே...வலது, இடது... கை நாடிகளையே முக்கியமாக ஆராய்தல் வேண்டும்.

    இரண்டாவது... ஞானேந்திரியம் கருமேந்திரியம், மனசு ஆகிய பதினொன்றும் (5+5+1), ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒன்றுபட்டு, பிராண வாயு வலத்தோடில் அதாவது வலது நோசியில் ஓடினால்... ஆண் எனவும்,
    இடத்தோடில்...பெண் எனவும் கரு உற்பத்தியாகும் என்றும்....

    மத்திய கலையாகிய சுழிமுனை இயங்குமாயில் .... அலியாக அமையும் என்றும்... அதற்கேற்றவாறு... உருவமைப்புகளில் வித்தியாசம் ஏற்படுவது இயற்கையாகும்.

    எனவே...வலது, இடது பாரிசமும், நாடி நடையும் வித்தியாசப்படும்.

    சரி... அடுத்ததாக..

    நாடி நடையின் அளவை.. ஜீவ ஜந்துக்களின் நடைக்கு கால அளவாக உபமானதாக முந்தைய பாடத்தில் கூறினேன். அதன்படி..

    வாதத்தின் நடையை...

    மயில், அன்னம், கோழி, ஓணான், குயில், கொக்கு முதலியவற்றின் நடைக்கு ஒப்பிடப்படுகிறது.

    காரணம்... பெரும்பான்மையாக இவை யாவும், நிதானித்து மனிதரைப் போல் அடி வைத்து நடக்கக் கூடியவை. அவைகள் கால்களைச் சுலபமாக உயர்த்தி, மறுபடியும் கீழே வைக்கும் காலயளவை ...ஒரு மாத்திரைக்குரிய அளவாக கருத வேண்டும்.

    பித்தத்தின் நடை ....

    ஆமை, அட்டை ஆகியவற்றின் நடைக்கு உபமானதாகக் கூறப்பட்டு..இவைகள் நகர்ந்து செல்லக் கூடியவையாதலால்..ஒன்றுக்கொன்று பொருத்தமாகும். ஆகவே, இதன் மாத்திரையளவு...அரை (1/2) ஆகும்.

    சிலேத்துமத்தின் நடை(கபம்)....

    தவளை, பாம்பு இவற்றை உதாரண மாகக் கூறப்பட்டு.. குதித்தல், சீறல் என்னும் செய்கை உடையனவாதலால் பொருத்தமாகும். ஆகவே, இதன் மாத்திரை அளவு...கால் (1/4) ஆகும்.

    மீண்டும் அடுத்த பதிவில்...

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  20. Mon. 25, July, 2022 at 9.22 pm.

    நாடிப் பயிற்சி :

    பாடம் − 45.

    நாடி நடையின் இலக்கணம் முன்பே நாம் பார்த்தபடி....

    வாதம் ஒரு மாத்திரை, பித்தம் அரை மாத்திரை, கபம் கால் மாத்திரை அளவு என பார்த்தோம்.

    ஒரு மாத்திரை என்பது...ஒரு கை நொடி அல்லது ஒரு கண் இமை சிமிட்டலின்(மூடித் திறத்தல்) கால அளவைக் குறிக்குமெனச் சிலரது அபிப்பிராயமெனில்.. மருத்துவ நூல்களின் கூற்றுப்படி... மாத்திரை என்றால்...."நாடியின் துடிப்பு, ஒரு கோதுமையரிசிப் பிரமாணம் எழுந்து அடங்குவதற்குரிய கால அளவு எதுவோ அதனையே குறிக்கும்..என கடந்த ஆரம்ப பாடங்களில்.. படித்துள்ளீர்கள்.

    இன்று... தொந்தம் நாடிகளின் மாத்திரை விகிதம் அறியலாம்...!

    1) * வாதபித்த தொந்தம், அதாவது வளி, அழல் கலப்பு... வாதநாடி தன்னளவில் இரண்டு மாத்திரையும் ....

    * பித்த நாடி தன்னளவாகிய அரை மாத்திரைக்கு மேலும் ..அதற்கு இரட் டிப்பாகிய ஒரு மாத்திரைக்குள் அடங்கியும் நடைபெறும்.

    2) வாத ஐய தொந்தம் அதாவது வளி, ஐயம் கலப்பு.... வாத நாடி, தன்னளவில் இரண்டு மாத்திரையும், ஐய நாடி தன் அளவாகிய, கால் மாத்திரைக்கு மேலும், அதற்கு இரட்டிப்பாகிய அரை மாத்திரைக்கு உள் அடங்கியும் நடைபெறும்.

    3) பித்த வாத தொந்தம் அதாவது அழல், வளி கலப்பு...பித்தநாடி தன்னளவில் இரண்டு பங்கு அல்லது தன் இயற்கை மாத்திரையின் இரட்டிப்பாகிய ஒரு மாத்திரையையும், வாத நாடி, தன்னளவில் ஒரு மாத்திரைக்கு மேலும், இரண்டு மாத்தி ரைக்கு உள்ளடங்கியும் நடைபெறும்.

    4) பித்த ஐய தொந்தம் அதாவது... அழலையக் கலப்பு .... பித்த நாடி தன் அளவில் இரண்டு பங்கு அல்லது தன் இயற்கை மாத்திரையின் இரட்டிப் பாகிய ஒரு மாத்திரையும், ஐயநாடி தன்னளவாகிய கால் மாத்திரைக்கு மேலும், அதன் இரட்டிப்பாகிய அரை மாத்திரைக்குள் அடங்கியும் நடை பெறும்.

    5) ஐய, வாத தொந்தம் (ஐய வளிக் கலப்பு) ... ஐய நாடி தன் அளவில் இரண்டு பங்கு அல்லது அதன் இரட்டிப்பான மாத்திரையாகிய அரை மாத்திரை அளவும், வாத நாடி தன் அளவில் ஒரு மாத்திரைக்கு மேலும் இரண்டு மாத்திரைக்குள் அடங்கியும் நடைபெறும்.

    6) ஐய பித்த தொந்தம் அதாவது ஐயழல் கலப்பு.... ஐய நாடி தன் அளவில் இரண்டு பங்கு அல்லது அதன் இரட்டிப்பான மாத்திரையாகிய அரை மாத்திரையும், பித்தம் தன் அளவாகிய அரை மாத்திரைக்கு மேலும், அதன் இரட்டிப்பாகிய ஒரு மாத்திரைக்குள் அடங்கியும் நடக்கும் .

    மேலும்... வாத, பித்த, கப நாடிகள் தொந்தமாக நடைபெறும் காலத்தில்.. தம் மாத்திரை அளவில் இரட்டிப்பாக
    வும் அல்லது இயற்கையளவுக்கு மேலும் இரட்டிப்பு மாத்திரைக்குள் அடங்கியும் இருக்கலாமேயொழிய, இயற்கையில் சொற்ப மோத்திரை அளவாயுள்ள...பித்தமும், ஐயமும் இரண்டு முழு மாத்திரையைப் பெற்றும், வாதம் தன் சுபாவமான ஒரு முழு மாத்திரை அளவைப் பெற்றிருக்கு மானால், இது தொந்தமாகாது.

    இரண்டிரண்டு நாடிகள், தத்தம் அளவில் ஒன்று (முதலில் கூறும் நாடி) இரட்டிப்பாகவும், மற்றொன்று அதன் இயற்கைக்கு மேலும், சற்று இரட்டிப் புக்கு உள்ளடங்கியும் நாடிகள் நடைபெறும் என்பதே.... தொந்த நாடியின் கருத்தாகும்.

    ஆகவே... வாத, பித்த, ஐய நாடிகளின் தன்மை, பிரிவு, மிகுதி, குறைவு, தொந்தம், சன்னிவாதம், மாறி மாறி வரும் செயற்கை ஆகிய இவற்றால் ஏற்படும், பிணிகளை அறிந்து... மருத்துவம் செய்தல் ... சிறந்த முறையாகும் என்பதே இதன் கருத்து ஆகும்.

    நாடிகளைக் கொண்டு பிணிகளின் நேர்மை அறிந்து பரிகாரம் புரிவது அவசியம் என்பதை அறியவும்.

    மீண்டும் தொடர்ச்சி அடுத்த பதிவில்.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  21. Wed. 27, July, 2022 at 10.30 pm.

    நாடிப் பயிற்சி :

    பாடம் − 46.

    தொந்தம் நாடி .. தொடர்ச்சி...!

    "நாடி மூன்றையும் நாடிடுங்காலை
    நடுவிரல் நாடியை நாடியே கணிப்பான்
    நற்றவக்குருவென நவிலு மறையே."

    என்பதனால்... வாத, பித்த, ஐய நாடி களின் தன்மைகள், குறிப்பாக அவற்றின் அளவை அறிய வேண்டின்...மூன்று நாடிகளில் நடுவிரல் நாடி...தராசு முனைக்குச் சமானமாக மத்திய மாக வைத்து, மற்ற இரு விரல்களின் தன்மையைக் கணக்கிடல் சிரமம் என்பதே இதன் பொருள்.

    ஆகவே... மூன்று நாடிகளில் எது அதிகக் குற்றமடைந்திருக்கிறதோ.... அதனை அவசரமாகவும், அவசிய மாகவும் எண்ணி... முதலில் அதற்கேற்ற மருந்துகளைக் கொடுக்க, அந்த மிகுந்த தோடம் நீங்க மார்க்கமாகும்.

    அதாவது... வாத , பித்த , கபம்... இம்மூன்றில் எந்த நாடியில்.. குற்றம் இருக்கிறதோ.. அதற்கான மருந்தைக் கொடுத்து.. உடனே அதனை சரி செய்ய வேண்டும்.

    வியாதியைப் பரிகரிப்பதற்கு அல்லது கணிப்பதற்கு... இது தந்திரமும், சுலபமுமான உபாயமென்பதுமன்றி, பிற்குணங்களாகிய துணை நோய்கள் அதாவது ... complication (கிளை நோய்கள்) எவையும் தொடராவாம் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

    அடுத்து ...

    *பஞ்ச நாடி அல்லது பஞ்ச பூத நாடி....!*

    பஞ்ச நாடி(பஞ்சபூத நாடி) என்பது...

    * பெருவிரலில் உணர்த்தும் துடிப்பு... பூதநாடி.

    * ஆள்காட்டி விரலில் உணர்த்தும் துடிப்பு.... வாதம்.

    * நடு விரலில் உணர்த்துவது.. பித்தம்.

    * அணிவிரல்(மோதிரவிரல்) துடிப்பு... சிலேத்துமம் (கபம்).

    * சிறுவிரல் துடிப்பு உணர்த்துவது...பூதநாடி.

    இவ்வாறு... ஐந்து நாடிகளை, ஐந்து விரல்களிலும்... நாம் அறியலாம்.

    இதுவே.. பஞ்சநாடி அல்லது பஞ்சபூத நாடி என்பது.

    *மிக மிக முக்கியம். எப்போதும் ஞாபகத்தில் வைக்க வேண்டியவை ஆகும்.*

    மீண்டும் அடுத்த பதிவில்...

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  22. Fri. 29, July, 2022 at 10.42 am.

    நாடிப் பயிற்சி :

    பாடம் − 47.

    இன்றைய பாடம் .....

    குருநாடி :

    "குருநாடி" என்பது... முன்னரே கூறியபடி... ஜீவ நாடி (சீவநாடி)அல்லது "உயிர்த்தாது" வையேக் குறிக்கும்.

    * குருநாடி எப்போதும்... பித்தத்தின் முன்னே தான் நிற்கும்.
    * தசநாடி பத்துக்கும் ... திறமாய் நிற்கும்.
    * உடற்குயிராய் நின்ற குருநாடி... வாத, பித்த, ஐயத்திற்கு(கபம்)... நடுவிலிருப்பதைப் பார்க்கில், அது மூவிரலுந்தாண்டி, மூளைமுதலூடுவிப் பாய்ந்து, விசை நரம்பூடே சேர்ந்து, சந்திர மண்டிலம் போய்ச் சார்ந்து, பின்பு பம்பரம்போற் கிறுகிறென்று, வாத, பித்த, ஐயமென்ற நாடி, முதலாடி ஓடி , மண்டலங்கள் மூன்றுஞ் சுற்றிக் கத்திரிக்கோல் மாறலெனக் கட்டிச் சேர்ந்து, வாத, பித்த, ஐயம் நடுவினின்று, இம்மூன்று நாடிகளையும் இயல்பாய் நடத்தி வைக்கும்...பண்புடையது இக் குருநாடி.

    மேலும்..நாம் இதினின்று தெரிந்து கொள்ள வேண்டியது.....வாத, பித்த, ஐயம் என்னும் நாடிகளின் நடை ஏற் படுவதற்கு காரணம்.... "குருநாடி"யின் தத்துவமே ஆகும். இக்குருநாடியே...."ஆத்ம நாடி" யாகும்.

    ஆக... வாத, பித்த, சேத்தும (கபம்) மென்ற மூன்று நாடிகளில்.... பித்த நாடி யானது.... "பூதநாடி,.. "குருநாடி",.... "ஆத்ம நாடி" என வழங்கப் படும்.
    மேலும், சகல நோய்களையும் அகற்றி... நன்மை பயக்கும் நாடி எனவும், அகங்காரம், பிராணன், உயிரக்கினி (ஆரம்பத்தில் உயிரக்கினி படித்துள் ளோம்) இவை எல்லாவற்றிற்கும் குரு
    நாடியே.. ஆதாரமாக உள்ளது.

    இந்தக் குருநாடியை தனி நாடியாக எண்ணினாலும் சரி... அல்லது வாத, பித்த, ஐயம் ஏற்படுவதற்கு ... எது ஆதி காரணமோ அதுவாக வைத்துக் கொண்டாலும் சரி.. இவ்விரண்டையும் ஒன்றாகவே பாவிக்க வேண்டும்.

    ஏனென்றால்.... குரு நாடி... வாத, பித்த,ஐய நாடிகளுக்கு ... வலுவைக் கொடுத்து.... அவற்றின் அதாவது வாத, பித்த, ஐயம் என்ற இயற்கை நடைகளெல்லாம்... குருநாடியின் தத்து வத்தால் நடைபெறுகின்றன.

    ஏற்கெனவே நடத்தின வாத, பித்த, ஐயம் வரலாறுகளை நன்கு அறிந்திருந்தால்.... குருநாடி பற்றிய விவரங்கள் யாவும் அறிந்தது போலாகும்.

    சிலர்... குருநாடி தனி என்று கூறுகிறார்கள்.

    எதை வைத்து அவ்வாறு கூறுகிறார்களெனில்...

    வாத, பித்த, ஐயம் நடைபெற்றுக் கொண்டிருக்கிற தருணத்தில்... குரு நாடியைத் தனித்து அறிய இயலாது.

    காரணம்...குருநாடியானது.. வாத, பித்த, ஐய நாடிகளுக்கு "நடுவில்... தராசு முனை போல் இருந்து...அவற்றிற்கு வலுவைக் கொடுக்கிறதே தவிர... தனி நாடி அல்ல.

    ஒருவேளை ... மூன்று நாடிகளும் ஒடுங்குங் காலத்தில்.. குருநாடி... (அதாவது "ஆத்ம நாடி அல்லது ஜீவ நாடி" நடை) நடையை உற்றுக் கவனித் தால்... ஒருக்கால் பித்தத்தின் முன்னே புலனாகக் கூடும்... இதன் பிரகாரமாய்... குருநாடியைத் தனி நாடியாக கூறலாம்.

    * குருநாடியானது....பஞ்ச நாடிகளிலும் கலந்து நின்று அவற்றை வளர்த்து, வலுப்படுத்தி, நடைபெறச் செய்கிறது.

    * வாத, பித்த, ஐய நாடிகளுக்கு... மத்திபமாய் இருந்து... மூன்றுக்கும் "ஏற்றக் குறைவான" தொழில் ஏற்படா வண்ணம் பாதுகாப்பாகவும் இருக்கிறது.

    * குருநாடி என்பது... வாத, பித்த, சேத்தும நாடிகள் மூன்றுக்கும்... தராசு முனை போன்றது.

    இன்னும் குருநாடியைப் பற்றி கூறுங்கால்...

    தச நாடியில்... இடகலை, பிங்கலை ,சுழிமுனை என்ற மூன்று நாடிகளும்....
    அபானன் , பிராணன் , சமானன் என்ற வாயுக்களின் இயக்கத்தால் சுவாசத்தை உண்டாக்கி... அதினினின்றும்... வாத, பித்த, ஐயம் என்னும் மூன்று நாடிகளும் உண்டாகி, உடலையும், உயிரையும் பொருத்தி தன்னிலையில் வைத்துக் காப்பாற்றி வரக்கூடிய தத்துவத்திற்குக் காரணமான சக்தி எதுவோ.... அதுவே குரு நாடி....ஆகும்.

    மீண்டும்... அடுத்த பதிவில்.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  23. Sun. 31, July, 2022 at 11.07 pm.

    நாடிப் பயிற்சி :

    பாடம் − 48.

    இன்றைய பாடமாக...

    குருநாடியின் தன்மையால் நோய்களைக் குறிக்கும் குணம்...!

    1) குருநாடி, வாதத்தில் அட்டை போல் புரண்டுவரில்... வாய்வு மிகும். (இருமல், சொறி, திணவு இவை மிகுதி உண்டாகும்.)

    குறிப்பு :

    அட்டை போல் புரண்டு வருவது என்பது... வாத நாடி தன் மாத்திரை அளவில்... "குறைவாக" நடந்தால் என அறியவும்.

    2) குரு நாடி.. பித்தத்தில் அன்னம் போல் நடக்கில் ஜுரம் காயும். வாய் நீர் சுழற்றும், வியர்க்கும், நீர் கட்டுப்படும். கை, கால் ஓயும்.

    குறிப்பு :

    அன்னம் போல் பித்த நாடி நடக்கில் என்பது.... தன் மாத்திரை அளவில் "மீறி" நடந்தால்....

    3) குரு நாடி, சிலேத்துமத்தில்... சிங்கம் போல் சீறி நிற்கில்..ஜன்னி தோன்றும்.

    குறிப்பு :

    சிங்கம் போல் சீறி நிற்றல் என்பது... சிலேத்தும நாடி தன்னளவில்... "மீறி" நிற்கில்....

    4) குரு நாடி, சிலேத்துமத்தை ஊடுருவி வருமாகில், அதாவது... வாதம், பித்தம் இவ்விரண்டும் ஒடுங்கி
    ஐயம் மட்டிலும் தனித்துக் கதித்து நின்றால்..அசாத்திய மரணக் குறிகள்...

    5) குரு நாடி மொத்தத்தில் குன்றிப் போகில்... வயிறு கழியும், கடுந்பெடுக் கும், கை, கால் வீங்கும்.

    6) குரு நாடி பக்கம் பாயில், அதாவது...
    அதன் இயற்கை இருப்பிடமாகிய, பித்தத்தின் முன்னே நிற்பதற்குப் பதிலாகப் பக்கத்தில் தோன்றினால்... சிலேத்துமம் அதிகரிக்கும்.

    7) குரு நாடி நேரே நிற்கில்... வோத , பித்த , ஐயம் மூன்றும் சேரும். அதாவது... மூன்று நாடிகளும் தன்னிலைப் படும்.

    8) குரு நாடி பின் வாங்கில்... அசாத்தி யங்கள் உண்டாகும். அதாவது...குரு நாடி இயற்கை அளவாய் நடைபெறா விட்டால்... அசாத்தியங்கள் உண்டாகும்.

    9) குரு நாடி ஐயத்தில் விட்டிலைப் போல் துடிக்கில்... மரணம் உண்டாகும்.

    மீண்டும் அடுத்த பதிவில்....

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  24. Tue, 2, Aug., 2022 at 9.7am.

    நாடிப் பயிற்சி :

    பாடம் − 49.

    கடந்த பாடத்தில் பிராணாயாமம் பழகுவோர்.. கடைபிடிக்க வேண்டியதைப் பற்றி கூறியிருந்தேன்..
    மாத்திரை அளவை சிலர் கேட்டிருந்தனர்..

    அதற்கான மாத்திரை விளக்கம் :

    *பிராணாயாமம் அப்பியாசிக்கும் மந்திரம்... *"ஓம் சிவய நம"* என்னும் அட்சரங்களை... *ஒரு முறை மனத்திற்
    குள்ளேயே செபிக்க... 8−மாத்திரை அளவு. இருமுறை ஜெபித்தால் 16− மாத்திரை. நாலுமுறை ஜெபித்தால்...32−மாத்திரை ஆகும்.*

    இவையே... மாத்திரை என்பதன் அளவாகும். (அவரவர் கடவுளின் நாமத்தையும் கூறலாம். மெதுவாக உச்சரிக்க வேண்டும்.)

    அதாவது... பூரகத்தில் இரு முறையும்,...
    இரேசகத்தில் இருமுறையும்.....
    கும்பத்தில் நான்கு முறையும்...
    இம்மந்திரத்தை மனதிற்குள்ளேயே செபிக்க பிராணாயாம செபம் பூர்த்தி ஆகும்.

    மற்ற விளக்கங்கள் அளித்துள்ளேன்..மீண்டும் ஒருமுறை ஞாபகப் படுத்துகிறேன்...

    * பூரகம் என்பது... பிராணவாயுவை...வெளியிலிருந்து உள்சுவாசித்து இழுப்பது. ( 16−மாத்திரை)

    * இரேசகம் என்பது... உள்ளே இழுத்த பிராணவாயுவை உடலில் நிறுத்தி வைத்து(கும்பித்து) அப்பால் மெதுவாக வெளிவிடுவது. ( 16−மாத்திரை)

    * கும்பம் என்பது... உள்ளே இழுத்த பிராணவாயுவை...உள்ளேயே உடலில் கும்பித்து(நிறுத்தி வைத்தல்) வைப்பது. ( 32−மாத்திரை)

    * சரம் பற்றிய மேலும் சூட்சுமமான (ஆழமான) தகவல்கள்..தங்களுக்கு குறிப்பிடுகிறேன்....!

    வாரம் என்பது...நாள்.
    சரம் என்பது....பிராணன் இயங்கும் தன்மை.

    வெள்ளிக் கிழமை, திங்கட் கிழமை, புதன் கிழமை... இடகலை அதாவது இடப்பக்கமாகவும் .....

    சனிக் கிழமை, ஞாயிற்றுக் கிழமை, செவ்வாய்க் கிழமைகளில்... பிங்கலை அதாவது வலப்பக்கமாகவும் பிராணன் இயங்க வேண்டும்.

    மேலும்....

    வளர்பிறை வியாழக் கிழமைகளில்... இடப் பக்கமாகவும் ....

    தேய்பிறை நாட்களில்.... வலப்பக்கமாகவும...இயங்குவதே முறையான சுவாசம் ஆகும்.

    காரணம் ....

    * வெள்ளி, திங்கள், புதன் ஆகிய மூன்று நாட்களிலும்.... இடப்பக்க மூக்கு வழியாகச் சுவாசம் இயங்குமானால்....ஒள்ளிய காயத்துக்கு ஊனமில்லை. அதாவது..இந்த உடம்புக்கு ஒரு குறையும் இல்லை.

    * செவ்வாய், வியாழன், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில், பிராணன் வலப்பக்கம் இயங்குமானால்...மனதில் மகிழ்ச்சி ததும்பும். அதாவது ... ஆனந்த பரவச நிலை அடைவர்.

    * சந்திர கலை, சூரியகலை...இடமூக்கு வழியாக ஏறி... வலமாக இறங்கியும்...

    வலமாக உள்ளிழுத்து...இடமாக வெளி விட்டும்..இவ்வாறு மாறி மாறி.. நடுநாடி வழியாக ஊர்ந்து செல்லும் உயிர் மூச்சில்...சிவபெருமான் ஒன்றிக் கலந்து இருப்பார்..இவ்வாறு.. மூச்சிப் பயிற்சி செய்ய வேண்டும்...அதாவது தவசித்தி பெறுக என்பதாகும்.

    (சந்திரக் கலை என்பது... பெண் கலை.
    சூரியக் கலை என்பது... ஆண் கலை.)

    இவ்வாறு...; மூச்சுக் காற்றை... இடது பக்கத்து மூக்கின் வழியாக உள்ளே இழுத்தும்... அதாவது...இடமூக்காகிய சந்திர கலை வழியாக...இயங்கும் காற்றை.... வல மூக்கு வழியாக உள்ளே இழுத்தும்..

    என இப்பயிற்சியை முறையாகத் தினந்தோறும் தவறின்றித் தொடர்ந்தால்... இந்த உடம்பு (காயம்) ஆயிரம் ஆண்டுகள் அழியாது நிலைத்து வாழும். அதாவது உடம்பு அழியாது. நோய் வராது.. உடம்பு சுகப்படும் என்பதே.

    இதைப்பற்றின விரிவான தகவல்கள்.. நாடிப் பயிற்சியை முடித்த பின்..ஆரம்பிக்கிறேன்.

    மீண்டும் அடுத்த பதிவில்....

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  25. Wed. 3, Aug. 2022 at 11.45 am.

    நாடிப் பயிற்சி :

    பாடம் − 50.

    இன்றைய பாடமாக...

    முத்தோடங்களின் மாத்திரை விகிதம் சுபாவமான நிலையில்... ஒன்று, அரை, கால் என ஒன்றுக்கொன்று
    வித்தியாசப்படுவதன் காரணம் என்ன என்பதைப் பற்றி அறியப் போகிறோம்..

    ஏற்கெனவே... பாடம் − 33-ல் மாத்திரை யின் விகிதம் படித்துள்ளீர்கள்..என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

    தேகத்தினிடமாக... 72,000 நாடி நரம்பு ரத்தக் குழாய்கள் உள்ளன. அவைகளில்.பெரு நாடிகள் என சொல்லப்படுவது
    தச நாடிகள். இது இயங்குவதற்கு.. தச வாயுக்கள் ஏற்பட்டிருக்கின்றன என பார்த்தோம்.

    தச நாடிகளில்(10) .. மூலாதாரமாக நின்றது... இடகலை, பிங்கலை, சுழி முனை என மூன்று நாடிகள்.

    (இரண்டாம் தத்துவம் 30−ல் விளக்கமாக, தசநாடிகள், தச வாயுக்கள் நடத்தியுள் ளேன்..)

    மேலும், இம்மூன்றுள்... இடகலை, பிங்கலை இரண்டும், வலம், இடமாகிய
    கால் பெரு விரல்களிலிருந்து ஆரம்பித்து, இடம், வலம் நாசி வரையில்... கத்தரிக்கோல் மாறலாக ஓடி நிற்கும்...சுழிமுனை நடுவே மூலாதாரத்திலிருந்து உச்சி வரை அச்சுருவாணியாக நிற்கும். இரு நாசிகளிலும் பகிர்ந்து நடு நாயகமாக ஓடும்.

    இடகலை, பிங்கலை, சுழுமுனை என்ற மூன்று மூலாதார நாடிகளை முறையே...அபாணன், பிராணன், சமானன் என்னும் வாயுக்களின் இயக்கத்தால் விடும் சுவாசம்(பிராணவாயு)... இடகலை + அபானன்வாதம் என்றும்...
    பிங்கலை + பிராணன் = பித்தம் என்றும்....சுழிமுனை சமானன் ஐயமென்றும் அறியப்படும்.

    * இடகலை, அபானன் என்னும் வாதமானது... இடது நாசியின் வழியாய்ப் பதினாறு ( 16 ) அங்குலம் பாய்ந்தும்...

    * பிங்கலை, பிராணன் என்னும் பித்த மானது... வலது நாசியின் வழியாய்... பன்னிரண்டு ( 12 ) அங்குலம் பாய்ந்தும்...

    * சுழிமுனை சமானன் என்னும் ஐயமானது... இரண்டு நாசித் துவாரங்களிலும், நடுநாயகமாக.. உபாயமாக பகிர்ந்தோடும்.

    * இடகலை, பிங்கலை, சுழிமுனை என்ற மூன்று மூலாதார நாடிகளும், அபானன்,பிராணன், சமானன் என்னும் வாயுக்களால் முறையே தூண்டப்பட்டு.. மேற்கூறிய பிரகாரம் சுவாசம் (பிராணவாயு) நடை பெறுங்காலத்தில்...ஒன்றுக்கொன்று வலிவு, மெலிவு, வன்மை, குறைவு ஏற்படுவதால், அம்மாதிரியான வன்மை குறைவு காரணமாக அவற்றால்...

    * பிரதிபலித்த வாதம் மாத்திரை ஒன்றாகவும் ( 1 )...

    * பித்தம் மாத்திரை அரையாகவும் (1/2)..

    * ஐயம் மாத்திரை கால் ஆகவும் ( 1/4)..

    அளவில் வித்தியாசம் ஏற்பட்டதென்று அறிந்து கொள்ளுங்கள்.

    மீண்டும் அடுத்த பதிவில்...

    Jansikannan60@gmail.comத

    ReplyDelete
  26. Fri. 5, Aug. 2022 at 8.10pm.

    நாடிப் பயிற்சி :

    பாடம் − 51.

    இன்று... "முத்தோடங்களின் குணம்" பற்றி பார்க்கலாம்....!

    ஒவ்வொரு தோடத்திற்கும்... ஆறு குணங்கள் உண்டு.

    உண்ணும்.. அன்ன பானாதிகளில் தீய குணங்கள் இருக்கின்றன. அதனால் தோடங்கள் வன்மை பெறும்.

    அவைகளைக் கண்டறிந்து நீக்கிச் சுகம் பெறுமாறு தோடத்திற்கு எதிர் குணங்களை உடைய ஆகாரங்களை அருந்தல் வேண்டும்.

    * வாதம், பித்தம், ஐயம் மூன்றும் தனித்தனியே தன்னளவிற்கு மேல் மீறு கின்றதென அறியக்கூடிய காலம்..."சந்தி சமயம் " என்றும்....

    * மீறி நின்ற போது "பிரகோப சமயம்" என்றும்....

    * அப்பால் மருந்துகளைக் கொடுத்து, குணமாகும் போது... "சம்ன சமயம் என்றும் (அதாவது...தன்னிலையாதல்) அறிந்து கொள்ளல் வேண்டும்.

    சரி...

    வாத தோடம் :

    தோடம் என்றால் தோஷம். வடமொழி எழுத்து தவிர்த்தலால் தோடம் ஆகிறது.

    வாத தோடம் வன்மையடையும் போது உண்டாகக் கூடிய ஆறு குணங்களும்.. வாத தோட வன்மையை நீக்கக் கூடிய எதிர் குணங்களும்..யாதெனில்.....!

    * கடினம் X மிருது
    * வறட்சி X பசுமை
    * இலேசு X பளுவு
    * குளிர்ச்சி X அக்கினி
    * அசைதல் X ஸ்திரம்
    * அணுத்துவம் X கட்டி

    ஒரே எதிர்ப்பதமாக கொடுத்திருக் கிறீங்களே என யோசிக்கிறீங்க தானே!

    இவ்வாறு... மேலே கண்ட வாதகுணம் ஆறுக்கும் எதிரான ஆறு குண ரூபங்களை உடைய ஆகாரம் உட்கொள்ளல் வேண்டும்...என்பதே இந்த எதிர்ப்பதம்.

    * பித்த தோடம் :

    பித்த தோடம் வன்மை அடையும்போது..

    * பசுமை X வறட்சி
    * அக்கினி X குளிர்ச்சி
    * குரூரம் X சாந்தம்
    * சல ரூபம் X கெட்டி
    * புளிப்பு X இனிப்பு
    * காரம் X கசப்பு

    பித்த குணம் ஆறுக்கும் எதிரான இந்த ஆறு குண ரூபங்களை உடைய ஆகாரம் உட்கொள்ளல் வேண்டும்.

    ஐயம் :

    * பளுவு X இலகு
    * குளிர்ச்சி X உட்டணம்(உஷ்ணம்)
    * ஈரம் X வறட்சி
    * மிருது X கடினம்
    * வழுவழுப்பு X கரகரப்பு
    * இனிப்பு X காரம்

    இந்த ஐயத்தோட குணம் ஆறுக்கும் எதிரான இந்த ஆறு குண ரூபங்களை யுடைய ஆகாரங்களைக் கொண்டு ஐய தோடத்தைச் சமனம் செய்யலாம். அதாவது... தன்னிலைப் படுத்தலாம்.

    எவ்வாறு தன்னிலைப் படுத்தலாம் அல்லது சமனம் செய்யலாம் என அடுத்த பதிவில் அறியலாம்.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  27. Mon. 8, Aug. 2022 at 6.22 pm.

    நாடிப் பயிற்சி :

    பாடம் − 52

    இன்றைய பாடமாக...

    முத்தோடங்கள் வன்மையடையும் போது..அவற்றைத் தன்னிலைப் படுத்தக்கூடிய...அதாவது ஒவ்வொன் றின் மிகுதியைச் சமனம் செய்யும் சுவைகளாவன...பற்றிப் பார்க்கலாம்...!

    முக்கியமான பாடம் இது...என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    * வாதம் மேலிட்டால் :

    இனிப்பு, புளிப்பு , உப்பு முதலிய சுவையுள்ள பதார்த்தங்கள் வாத மிகுதியைக் குறைத்துச் சமப்படுத்தும்.

    * பித்தம் அதிகரிப்பின் :
    துவர்ப்பு, இனிப்பு, கைப்பு முதலிய பதார்த்தங்கள் சமனஞ் செய்யும்

    * ஐயம் அதிகமாயின் :
    காரம், துவர்ப்பு, கசப்பு ... சமப்படுத்தும்

    * தொந்த தோடங்கள் மிகுதி அடைந் திருப்பின்..அந்தந்த தோடங்களுக் கேதுவான சுவையுள்ள பதார்த்தங் களைக் கலந்து அருந்தினால் தொந்த தோடங்கள் யாவும், படிப்படியாகக் குறைந்து சமனப்படும்.

    ஆயினும்... புளிப்பு சுவை விருத்திக்கு சாதகமாகயிருப்பினும், அதில் சில நன்மை பயக்கக் கூடியவை ஆகும்.

    எங்ஙனமெனில்....

    மாதுளம் பழம், நெல்லிக்காய், எலுமிச்சம் பழம் இவைகள் புளிப்பாக இருந்த போதிலும் உட்கொள்ளின் பித்தம் சமப்படும். இப்புளிப்புச் சுவை பித்தத்திற்கு அனுகூலமாய் இருந்து விருத்தி செய்யும் குணமாக இருப்பினும்... சீரணகாலத்தில் இனிப்பாக மாறுதல் (பிரிவு) அடையும் இயற்கையுடையவதாதலால்,பரிகார மாகக் கொள்ளப்பட்டது.

    மருத்துவத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டியவை....

    ஓர் வியாதிக்காக மருந்து கொடுத்து நிவர்த்தி செய்யும் போது... அம்மருந்தால் வேறு தோடத்தையுடைய பிணி ஏதேனும் உண்டாகுமாயின்... அது எவ்வளவு உயர்தரமான மருந்தாக இருந்தபோதிலும்... மருத்துவத்திற்கு பிரயோஜனமற்றது..எனத் தெரிந்து கொள்ளுங்கள்.

    அடுத்து... விரேசனத்திற்காக ஓர் மருந்து உட்கொண்டு...அதன் சக்திக் குறைவால், பேதியாகாது சீரணித்து விட்டாலோ அல்லது, அம்மருந்தின் வேகத்தால் வாந்தியாகி விட்டாலோ.. மீண்டும் பேதி மருந்து கொடுக்க லாகாது.

    வாதம், பித்தம், ஐயம் என்னும் மூன்று நாடிகளும்... தம் தம் மாத்திரை அளவு, இடம், பொழுது இவற்றில் வேறுபாடு களில்லாமல் நிலைத்து நடைபெற்றால் பிணியில்லை.

    மாறாக...மிகுதியாகவோ, குறைவா கவோ, கலப்புற்றோ, இடம், காலம் மாறுபட்டோ... நாடிகள் நடைபெறுமா கில் அவ்வவற்குரிய நோய்க் குறி குணங்களை காண்பிக்கும்... என்று தெரிந்து கொள்ளுங்கள்.

    மீண்டும் அடுத்த பதிவில் ....

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  28. Wed.10, Aug. 2022 at 6.20 am

    நாடிப் பயிற்சி :

    பாடம் − 53.

    இன்று நாம் பாடமாக ....

    நாடிகள் மூன்றும்...அதாவது தாதுக்கள் மூன்றும் சிறப்புறும் வாரங்கள் பற்றிக் காணலாம்...!

    * வாதமானது..திங்கள், புதன், வெள்ளி
    ஆகிய இம்மூன்று தினங்களிலும், கிருஷ்ண பட்சத்து வியாழக் கிழமையிலும், காலை நேரத்தில் சிறப் பாக நின்றால் சுகம் .

    * மற்ற தினங்களாகிய... ஞாயிறு, செவ்வாய், சனி இவ்வாரங்களிலும், கிருஷ்ண பட்சத்து வியாழக் கிழமையிலும், காலை நேரங்களில், "பித்தம்" சிறப்பாக நின்றால் சுகம்.

    * சந்திரநாட் காலையில்... இடகலை அதாவது சந்திர கலை அல்லது வாதம் சிறப்புறும்.

    * சூரியநாட் காலையில் சூரிய கலை அதாவது பிங்கலை அல்லது பித்தம் சிறப்பாக நடை பெறும்.

    ஐய நாடி சிறப்புறுவதாக.. இல்லை.

    கவனிக்க ...

    சந்திரன் − உடலதிபன்
    சூரியன் − உயிரதிபன்
    சசி − திங்கள் அல்லது சந்திரன்
    புகற் − வெள்ளி
    புத்தி − புதன்
    குரு − வியாழன்
    சந்திர நாடி − வாத நாடி
    சூரிய நாடி − பித்த நாடி
    சுழிமுனை − ஐய நாடி
    இறைவன் − அரசன் , வாத நாடி.

    மேலும்....நாடிகள் மூன்றும் வாரங்களில் மாறி நடந்தால் உண்டாகும் பிணியின் தோற்றம் எங்ஙனமெனில்....

    * வாத நாடி : ஞாயிறு அன்று காலை யில் சிறப்புற்றால்.... சளி, இருமல், இரைப்பு நோய் ஆகியவை உண்டாகும்.

    * செவ்வாய் அன்று காலையில், வாதம் ஓடில் ... சுரம் உண்டாகும்.

    * சனிக்கிழமை காலையில் வாதம் ஓடில்... சீதளமும், சன்னியும் உண்டா கும்.

    * கிருஷ்ண பட்சத்து வியாழக் கிழமை காலையில் வாதம் ஓடில்... விலா முதல் தேகம் எல்லாம் வலி உண்டாகும்.

    அடுத்து... பித்த நாடி :

    * திங்கட் கிழமை காலையில்,, சிறப்புற் றால், ஜலதோஷம் உடனே காணும்.

    * புதன் கிழமை காலையில் பித்தம் ஓடில்.... நீரேற்றம், தலைவலி உண்டா கும்.

    * வெள்ளி அன்று காலையில் பித்தம் ஓடில்.... கண் நோய், காது நோய் உண் டாகும்.

    * சுக்கில பட்சத்து வியாழக் கிழமை காலையில் பித்தம் ஓடில் தாபசுரம், தலைவலி உண்டாகும்.

    அடுத்து... நாடிகள் மூன்றும் சிறப்புறும் மாதங்கள் யாதெனில்...

    * வாதம் ...கடகம் முதல் துலாம் அதாவது ஆடி முதல் ஐப்பசி இம்மாதங்களில்... வாதம் வளர்ச்சி பெறும்.

    * பித்தம் .... மீனம் முதல் மிதுனம் வரை அதாவது பைங்கூனி முதல் ஆனி வரை, இம்மாதங்களில் பித்தம் வளர்ச்சி அடையும்.

    * ஐயம் .... விருச்சிகம் முதல் கும்பம் வரை அதாவது கார்த்திகை முதல் மாசி வரையிலான மாதங்களில் ஐயம் வளர்ச்சி பெறும்.

    இத்தியாதி விவரங்களை மேற்கண்ட சூத்திரத்தில் காணலாம்.

    அதாவது...

    அனிலம் (காற்று) = வாதம்
    மந்திரி = பித்தம்
    சேனாபதி = ஐயம்.

    என்று அறிந்து கொள்ளுங்கள்.

    மீண்டும் அடுத்த பதிவில் ....

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  29. Thu.11, Aug. 2022 at 8.30 am

    நாடிப் பயிற்சி :

    பாடம் − 54.

    இன்றைய பாடமாக....

    எந்தெந்த மாதங்களில், எந்தெந்த நேரங்களில் நாடியைக் கணிப்பது உத்தமம் எனப் பார்க்கலாம்...!

    * சித்திரை , வைகாசியில் சூரியோ தயத்திலும்....

    * ஆனி , ஆடி , ஐப்பசி கார்த்திகையில் மத்தியானத்திலும்....

    * மார்கழி , தை , மாசியில் சூரியன் அஸ்தமனத்திலும்....

    * பைங்கூனி, ஆவணி, புரட்டாசியில் இராத்திரியிலும் (இரவு)......

    நாடிகளைக் கணிக்க நாடி நடைத் தெளிவாகத் தோன்றும்.

    அடுத்து... நாடி நடை (சதக நாடி) யாருக்கு சரியாகக் காணப்படாது என்றால் ...

    நீண்ட காலம் நோயால் வருந்துபவர்,
    அதிகம் உண்டவர், நீர்ப்பாடு, நீரிழிவு, பெருவியாதி முதலியவற்றால் வருந்துபவர், வீக்கம், பயமுற்றோர், கிலேசங்கொண்டோர், விடத் தீண்டியவர், ஓட்டமுற்றோர், எண்ணெய் தேய்த்து முழுகியவர்,மோகங் கொண்டோர், பெருத்த மேனியர், எலும்பு, முறிந்தோற்,சோகை, பிணத்தைத் தொட்டோர், வாந்தி, விக்கல் எடுத்தோர், விரதமிருந்தோர், மழையில் நனைந்தோர், சங்கீதம் படித்தோர், சுவாசபந்தனம் செய்தோர், வெயிலிலேயே நடந்து, தேகம் அலண்டி ருந்தாலும், பசி நேரத்தில் சுடு பதார்த்தங்கள், சாராயம் போன்ற லாகிரி வஸ்துக்கள் அருந்தியவர்கள், நித்திரை பங்கம், மனச் சஞ்சலம், விடாச்சுரம், புகையிலைகள் கொள்ளல், அதிகப் பலவீனம், இரத்தம் வடிதல் ஆகிய இவர்களுடைய நாடி நடை தீவிரமாக விரைவானதாக யிருக்கும், படபடவென்றும் ஓடும். ஆகையால் இவர்களது நாடி நடை சரியாகத் தோன்றாது.

    மேலும், அதிகப் பசி, குளிர், அதிக நித்திரை, விசனம் முதலியவற்றால்
    நாடி நடை குறையும். ஆதலால், நாடா நடை சரியாகத் தோன்றாது.

    பின்னும்...பூமியில் கரத்தை ஊன்றிக் கொண்டிருக்கும் போதும்....

    காலைக் கட்டிக் கொண்டிருக்கும் போதும்....

    நாடி பார்க்கும் ஸ்தானத்திற்கு மேல், யாதொரு கட்டு இருந்தாலும்.. அச்சமயம் நாடியைக் கணிப்பின், நாடி நடை சரியாகத் தோன்றாநு.

    மீண்டும் அடுத்த பதிவில்

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  30. Sat. 13, Aug. 2022, at 8.15 am.

    நாடிப் பயிற்சி :

    பாடம் − 56.

    இன்று நாம் பார்க்கப் போவது...

    வளி, அழல், ஐயம் , தொந்தம் இவற்றின் மிகுதிக் குறி குணங்கள் பற்றி .....!

    * வளி நாடி என்றால் வாதம். இவற்றின் மிகுதியால் வரும் நோய்கள் அல்லது குறி குணங்கள்..இதனை வாதத்தில் வாதம், வாதம் கதித்தல்,வாதம் மீறி நடத்தல் எனவும் கூறலாம்.

    வாத நாடி மீறி நடக்கில்... சீதம் விழல், வயிறு உப்பல், வாயுத் திரட்சி, கிராணி, மகோதரம், நீராமை, வாய்வு, சூலை, வலி, கடுப்பு, வயிற்று நோய், மூலரோகம், வாத சன்னி, உடல் மெலிவு, கே கால் குளைச்சு, விலா, சத்துப் பொருத்துகள் இவை புண் போல் நோதல், மலக்கட்டு குடற்புரட்டல், ஆசனவாய் சுருங்கல், குளிருண்டாதல், தேகமெல்லாம் குத்தல், கை கால்கள் ஒரு பக்கமாக முடங்கல், குனியவும், நிமிரவும் வொட் டாமை, அன்னம் செல்லாமை, விந்து நட்டம், நாப்புளிப்பு, கழிச்சல், உடல் குளிர்ந்தும், முகம், விழி, பல், மலம் யாவும் கறுத்திருத்தல், கண்ணில் நீர் வடிதல், நாவு கறுத்தல், நா வரட்சி, வியர்த்தல், வயிறு மந்தம் ஆகிய இக் குறி குணங்களை(நோய்களை) விளைவிக்கும்.

    * அழல் நாடி என்றால் பித்தம்.. இதன் மிகுதியால் வரும் குறி குணங்கள்... இதனை பித்தத்தில் பித்தம், பித்தம் கதித்தல், பித்தம் மீறி நடத்தல் எனவும் கூறலாம்.

    பித்த நாடி மீறி நடக்கில், தேகவெப்பு, அத்தி சுரம், உஷ்ண வாயு, அதிசாரம், கிறுகிறுப்பு, பயித்தியம், சோபை, பித்த எரிவு, மனக்கலக்கம், மறதி, தாகம், கனவு, அயர்வு, மயக்கம், மூர்ச்சை, பெரும்பாடு, ரத்த பித்தம், பாண்டு(உடல் வெளுத்தல்) , அப்பால் வீக்கம் (ஊதல் நோய்) உண்டாதல், ஈளை, இருமல், பெலக் குறைவு, பெருவாத நோய், வயிற்றில் வாயு, சிந்தித்தல், வாந்தி, வாய் நீருறல், வாய் நீர் ஒழுகல், வாய் கசப்பு, வாய் வேக்காடு, உட்காந்தல், நடுக்கம், தலைவலி, நாவறளல் விக்கல், கிறு கிறுப்பு, காதடைப்பு, வயிறு எரிதல், நெஞ்செரிவு, அக்கினி மந்தம், குளிர் சுரம், விடாச்சுரம், காமாலை, பித்த வெட்டை, விழி குழி விழுதல், கண் இருளல், சிறுநீர் கடுத்து போதல், முகம், விழி, நா, பல், சிறுநீர் இவை மஞ்சளாயும், சிவப்பாயுமிருத்தல்.

    ஐய நாடி, தொந்த நாடிகள் அடுத்த பதிவில்.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  31. அய்யா.. வெ.சாமி அவர்களுக்கு நமஸ்காரம்.
    நாடிப் பயிற்சி பாடம் − 55 (56 என்பது தவறு) என அறிந்து கொள்ளுங்கள்...அய்யா.

    ReplyDelete
  32. Tue. 16, Aug. 2022. at 8. 34 pm.

    நாடிப் பயிற்சி :

    பாடம் − 56.

    இன்றைய பாடமாக..ஐயநாடி, தொந்த நாடி மிகுதிப்படின் உண்டாகும் நோய்கள்..... !

    ஐய நாடி மீறி நடக்கின்.... வெப்புக நோய், ஈளை (இரைப்பு), இருமல்,
    மந்தகாசம், விக்கல், இருத்ரோகம் (தமரக நோய்) விரணம், கரப்பான், மாரடைப்பு, மார்பு வலி, தூக்கம், காமாலை, பாண்டு, சோபை, சுரம், உடல் மெலிவு,, இரத்த வாந்தி, உடல் வெளுத்தல், குளிரும் நடுக்கமும் உண்டாதல், மேல் மூச்சு, அன்னஞ் செல்லாமை, திகைப்பு, வியர்த்தல், கண்ணிற் பீளை கட்டுதல், உடல் திமிர் பிடித்தது போல் இருந்தல், சிறுநீர் அதிகமாக இழிதல், வயிறு பொருமல், மூர்ச்சை ஆகிய இக்குறி குணங்களை உண்டாக்கும் .

    * தொந்த நாடிகள் மிகுதிப்படின் உண்டாகும் பொதுக் குறி குணங்கள்...

    உடல், விழி, பல், முகம், நாவு, நீர், மலம் இவைகளின் நிறமும், தன்மைகளும் கலப்புற்ற குற்றங்களுக்குத் தகுந்தாற் போல் பலவிதமாகத் தோன்றும்.

    அடுத்ததாக...

    *வாத மிகுதியுடன், உஷ்ணமுஞ் சேர்ந்தால் ஏற்படும் குறி குணங்கள்
    யாதெனில் ....*

    அதிசாரம், தேகவுளைச்சல், வாயு, வயிற்றுப் பொருமல், அக்கினி மந்தம், நீர்சிறுப்பு, பிரமேகங்கள், மதகரிநீர், கரப்பான், ரத்தப் பிரமியம், பெரும்பாடு, புறநீர்க்கோவை, சூலை, கபரோகம், மற்றும் பல பிணிகள் உண்டாகும்.

    *பித்த மிகுதியுடன் உட்டிணம் சேர்ந்தால்... உண்டாகும் குறி குணங்கள்...*

    சயம், அத்திசுரம், வெதுப்பு, சத்தி, குன்மம், கீல்களில் உளைச்சல், வயிற் றுக் கடுப்பு, அதிசாரம், நாக்கசப்பு, இராக்கனவு, சங்காதோடம், பயித்தியம், உடல் எரிவு, தாகம் , மற்றும் பல நோய்கள் உண்டாகும்.

    *ஐய மிகுதியுடன் உட்டினம் கூடினால் வரும் நோய்கள்...*

    சயம், இருமல், சுவாசகாசம், கோழை விழல், ரத்தம் விழல், விப்புருதி, நாசிகா பீடம், நாவு நோய், ஆக்கிராண நோய், கொட்டாவி, விக்கல், ஈரல் நோய், ரத்த பித்தம்..முதலிய அநேக ரோகங்கள் உண்டாகும்.

    மீண்டும் அடுத்த பதிவில்...

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  33. Wed. 17, Aug. 2022 at 4.10. pm.

    நாடிப் பயிற்சி :

    பாடம் − 57.

    என் அன்பான வாசகர்கள் அறிந்து கொள்வது....

    நாம் இதுவரை... வாதம், பித்தம், கபம் பற்றி அறிந்து வந்தோம்.

    மனித உடலானது... திரிதோடங்கள், சப்த தாதுக்கள், போன்ற மும்மலங் களால் நிலைத்துள்ளது.

    இதில் திரிதோஷங்கள் என்பது...வாத, பித்த, கபம் ஆகும்.

    சப்த தாதுக்கள் என்பது... இரத்தம்,தசை, கொழுப்பு, எலும்பு, வெண்குருதி, எலும்பு உட்கரு, உயிரணு்கள்..ஆகும்.

    மும்மலங்கள் என்பது ....மலம், சிறுநீர், வியர்வை முதலியவை ஆகும்.

    இதை நாம் பருப்பொருளாக நோக்கு மிடத்து...

    *தோஷங்கள் ஊட்டப் பொருளாகவும்..*
    *தாதுக்கள், அணு அல்லது அணுக் கூட் டங்களாகவும்...*
    *மலங்கள் கழிவுப்பொருட்களாகவும்..* விளங்குகின்றன.

    இம் மூன்றி்ல், மிகுதியாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் ஏற்படுவது தான்... நோய் ஆகும் என கடந்த பாடத்தில் படித்துள்ளோம் என ஞாபகப் படுத்துகிறேன்.

    மருத்துவத்தின் நோக்கம் அவற்றின் நிலையைச் சரிப்படுத்துவதே ஆகும்.

    நோயை மூன்று வழிகளினால் சரிப் படுத்தலாம்.

    *ஒன்று... நோய்க் காரணங்களை ஒழிப்பதாலும்....*

    *இரண்டு... தூக்கம், இளைப்பாறுதல், வேலை முதலிய பழக்க வழக்கங்களை ஒழுங்கு படுத்துவதாலும்..*

    *மூன்றாவதாக... உணவு அல்லது மருந்தின் சிகிச்சையாலும் ...*

    சரிப்படுத்தலாம்.

    எங்ஙனமெனில்...

    1) ஆசனம் மூலம் குடல் சுத்தி.
    2) பேதி கொடுத்தல்.
    3) வாந்தியாக்கல்.

    இவை மூன்றும் உடலைச் சுத்திப்படுத்தும் முக்கிய சாதனம் ஆகும்.

    இவற்றுள்..

    *ஆசன மூலம், குடல் சுத்தி செய்தல்.... வாயுவைக் கண்டிக்கும்.* (வாயு என்பது வாதம்)

    *பேதிக் கொடுத்தல்..... பித்தத்தை சாந்திப்படுத்தும்.*

    *வாந்தி உண்டு பண்ணுதல்... கபத்தைக் கரைக்கும்.*

    * சிகிச்சையில்...

    *வாயுவைக் கண்டிக்க உதவும் பொருள் எண்ணெய். அதுவும் சிறப்பாக சிற்றாமணக்கு எண்ணெய், அல்லது சிற்றாமணக்கு நெய்யே சிறந்தது.*

    *பித்தத்தைத் தணிக்க... சர்க்கரையும், நெய்யும் சிறந்தது.*

    *கபத்தைக் கரைக்க.. தேன் சிறந்தது.*

    *நிற்க.*

    திரிதோஷம் என்பதற்கு உயிர் நூல் மூலம் (Biology) அதிக விளக்கம் கொடுக்கலாம். ஆனாலும் சுருக்கமாக..

    *வாதம் என்பதே... வாயு. அல்லது வாயு என்பதே வாதம்.*

    *வாயு என்பது உயிரைக் குறிப்பதாகும்.*

    ஏனெனில்...

    *பித்த, கபங்களுக்குச் சக்தியைக் கொடுப்பதும் இந்த வாயு தான்.*

    *குழந்தைப் பிறப்பதற்கு காரணமாக இருப்பதும்... இந்த வாயு தான்.*

    *எல்லா மாறுதல்களுக்குக் காரண மாக பெருஞ் சக்தியாக விளங்குவதும் இந்த வாயு தான். காற்று..இதுவே வாயு. இந்த வாயுவே வாதம். இதுவே மூலாதாரம். அதாவது..அனைத்துக்கும் இதுவே சக்தியாகும்.

    *Bios என்றால் "ஜீவன்".* என்ற லத்தீன் மொழிக்கு ஒப்பானது. ஆகவே இது உயிர் நூல். வாயு என்பது உயிரைக் குறிப்பதால்...அதாவது.. உயிருக்கு அனைத்து சக்திகளைகளையும் கொடுக்கக் கூடிய வாயு ...என்பதாகும்.

    திரிதோடம் என்பது.. உதாரணமாக ஒரு இயந்திரத்தை எடுத்துக் கொண்டால்..அதில் மூன்று முக்கிய அமைப்புகள் இருக்குமல்லவா...?

    அதில்... பொறி (Spark)என்பது...மனித உடலின் நரம்பமைப்பை ஒத்ததாகும்.

    அப்பொறியை உருவாக்கும் சக்தி ... வாதத்துக்கு ஒப்பாகும்.

    அச்சக்தியானது.. நாம் கண்ணால் காண முடியாத ஒரு வித சக்தி. இதுவே...உயிர்ப் பிராணன்.

    இவ்வுயிர்ப் பிராணன் தான் வாதம் அல்லது வாயு எனப்படுவதாகும்.

    இவ்வுயிர்சக்தியே... சைதன்யம் அல்லது கிரியா சக்தியாகும்.

    மீண்டும் அடுத்த பதிவில்....

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  34. Fri. 19. Aug. 2022 at 7.24 pm.

    நாடிப் பயிற்சி :

    பாடம் − 58.

    இன்று .....

    முக்குற்றங்களின் இலக்கணங்களை தெரிந்து கொண்டு, மேலும்..நாடியைப் பற்றிய விவரங்களை அறிவது... மேலானது என நினைக்கிறேன்.

    ஆதலால்..முக்குற்றங்களின் வடிவத் தன்மை, வாழிடம், இயற்கை பண்பு,உடலில் செய் தொழில், அதன் பிரிவுகள் என தெரிந்து கொண்டு, நாடியைப் பற்றியதான மேலான செய்திகளை அறிந்து கொள்ளலாம்.

    முக்குற்றங்கள் என்பது... வளி, அழல் ஐயம் என ஏற்கெனவே படித்திருக் கிறோம்.

    இன்று... வாதம் (வளி) பற்றி பார்க்கலாம்.

    1) வளி (வாதம்) வடிவத் தன்மை :

    * நுண்மை = அணுத்துவம்.
    * நொய்மை = கடினமின்மை
    * தண்மை = குளிர்ச்சி
    * வெம்மை = உட்டிணம்.

    *தண்மை , வெம்மை இவ்விரண்டால் வருவது , ஒப்புரவின்மை அதாவது சருச்சரை என்பனவாகும்.

    2) வளி வாழும் இடம் :

    அபானம், மலம் ,இடகலை , உந்தியின் கீழ் மூலம், காமக்கொடி, இடுப்பெலும்பு நரம்புக் கூட்டம், தோல் , மயிர்க்கால் கள், கீல்கள் , ஊன் ஆகிய இடங்களில் வாழும்.

    3) வளியின் இயற்கைப் பண்பு :

    ஊக்கமுண்டாக்கல், மூச்சு விடல் , மூச்சு வாங்கல், மனமொழி செயல்களுக்குச் செயலைத் தரல் மலம் மூதலிய 14−வேகங்களை அதாவது விரைவுகளை வெளிப்படுத் தல் , சாரம் முதலிய 7−உடற்தாதுக் களுக்கும் ஒத்த நிகழ்ச்சியைத் தரல் , ஐம்பொறிகட்கு வன்மையைக் கொடுத் தல் ஆகியவற்றில் இயற்கை நிலை யில் நின்று உடற்குத் துணை புரி கிறது.

    4) வளி...உடலில் செய்தொழில் :

    உடல் நோதல் , குத்தல் , பிளத்தல்போற் காணல் , நரம்பு முதலியன குன்றல், நடுக்கமாதல், இறுக்கமாதல், நீர்ப்பசை யின்மை அதாவது வறட்சி , அசைத்தல், இளைத்தல் , குடைச்சல் , தடி முதலிய வற்றால் அடிபட்டது போன்ற வேதனை, கை அல்லது கால் இடம் விட்டுப் பெயர் தல், அதாவது பூட்டு நழுவல், உறுப்புத் தளர்ச்சி , உறுப்புகள் தொழில் புரியா மல் மரம்போல் கிடத்தல், மலம் , சிறுநீர் முதலியன தீய்தல் அல்லது அடைபடுதல், நீர்வேட்கை, கண்டைக் கால் , தொடை முதலியன நொறுங்கிப் போவது போலத் தோன்றல் , எலும்புக்குள் துளைப்பது போன்ற உணர்ச்சி, மயிர்க்கூச்செரிதல், கை கால்களை நீட்டவும், மடக்கவும் முடியாமை , எந்தச் சுவையும்...துவர்ப் பாக இருத்தல் அல்லது துவர்ப்பாக வாயில் நீரூரல் , தோல் , கண் , மலம் , நீர் முதலியன கருத்துக் காணல்.. ஆகிய இவை அனைத்தும், வளியானது உடலில் செய்யும் தொழில்களாகும்.

    வளியின் (வாதம்) பிரிவுகள் பற்றி மீண்டும் அடுத்த பதிவில் காணலாம்.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  35. Mon. 22, Aug. 2022 at 8.35 pm.

    சிந்தனைக்கு சில துளிகள் :

    * மலேரியாவினால் பாதிக்கப்படும் உள்ளுறுப்பு .....மண்ணீரல்.

    * தண்டுவடத்திலுள்ள எலும்புகளின் எண்ணிக்கை..... 33.

    * மது அருந்துவோர்க்கு உடலில் பாதிக்கப்படும் உறுப்பு .....சிறுமூளை.

    * நீண்ட காலங்களாக அதிகமான மது அருந்துபவர்களுக்கு பாதிக்கப்படும் உறுப்பு .... கல்லீரல்.

    * மனித உடலில் காணப்படும் தசைகளின் எண்ணிக்கை... 700 முதல் 800 தசைகள்.

    * உணவுக் குழாயின் நீளம் ..... 22 செ.மீ.

    * மனித உடலில் உள்ள எலும்புகள்....206.

    * மணிக்கட்டில் உள்ள எலும்புகள் .... 8.

    * கல்லீரலின் எடை ஏறக்குறைய... 1500 கிராம்.

    * மனித உடலில் மிகப் பெரிய சுரப்பி... கல்லிரல். (கல்லீரல் தனி பதிவு அனுப்பி யுள்ளேன்)

    * முக்கியமான கழிவு நீக்க உறுப்பு .....சிறுநீரகம்.

    * சிறுநீரகங்கள்.... முதுகெலும்பின் இரு பக்கத்திலும் அமைந்துள்ளன.

    * சிறுநீரகத்தின் நீளம் + பருமன் = 12 செ.மீ நீளம், 6 செ.மீ அகலம் + 3 செ. மீ பருமன்.

    * மனித வியர்வையில் காணப்படும் கழிவுப் பொருட்கள் ... *யூரியா யூரிக் அமிலம் , லாக்டிக் அமிலம்.

    * இதயத்திலிருந்து புறப்படும் இரத்தக் குழாய்கள் .... தமனிகள்.

    * உணவுக் குழாயின் முக்கியமான 2− சுரப்பிகள் ... *கல்லீரல் , *கணையம்.

    * இதயத்திலிருந்து வரும் இரத்தம் சுத்திகரிக்கப்படும் இடம் ... நுரையீரல்.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  36. Tue. 23, Aug. 2022 at 7.40 am.

    நாடிப் பயிற்சி :

    பாடம் − 59.

    முந்தைய பாடத்தில்.... வளியின் வடிவுத் தன்மை, வளி வாழுமிடம் ,வளியின் இயற்கை பண்பு , வளி உடலில் செய்யும் தொழில் ஆகியன பார்த்தோம்.

    இன்றைய பாடமாக... வளியின்(வாதம்)் பிரிவுகள் பற்றிக் காணலாம் ......!

    வளியின் (வாதம்) பிரிவுகள் :

    வளி ஒன்றாக இருப்பினும், தன் இடம், தொழில் முதலியவற்றால் ..பத்து (10) வகைப்படுத்தலாம்.

    அவை...... !

    1) பிராணன் அதாவது உயிர்க்கால்.
    2) அபானன் அதாவது கீழ் நோக்குங்கால்.
    3) வியானன் அதாவது பரவுகால்.
    4) உதானன் அதாவது மேல் நோக்குங்கால்.
    5) சமானன் அதவது நடுக்கால்.
    6) நாகன்.

    7) கூர்மன்.
    8) கிருகரன்.
    9) தேவதத்தன்
    10) தனஞ்சேயன்

    மேற்கண்ட 7 முதல் 10 வரையிலானது உபபிராணாதி வாயுக்கள். என்பனவாகும்.

    ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

    1) பிராணன் (உயிர்க்கால்) :

    இது மூலாதாரத்தில் இருந்து வெளிப்பட்டு, மூக்கின் வழியாக மூச்சு விடலால்.. 12− அங்குல தூரம் சென்று... மறுபடியும் 8− அங்குலம் உள்ளுக்குள் பாய்ந்து... 4− அங்குலம் வீணாய்ப் போகும். இதன் பணி, மூச்சு வாங்கல், விடுதல் செய்யும். மேலும் புசிக்கும் ஆகாரத்தைச் செறிக்கப் பண்ணும்.

    நாளொன்றுக்கு... 360−சுவாசமாக.. நாளொன்றுக்கு...21,600 சுவாசம் உண் டாகும். இவற்றில்... 14, 400 சுவாசம் உள்வாங்கி, மூலாதாரத்துள் ஒடுங்கும். மீதி... 7,200 சுவாசம் வெளியாகி வீணாப் போகும்.

    இந்த 7,200 − சுவாசம் , வீணாகாமல் உட்செலுத்தினால்... எப்போதும் பாலகராக (இளமையாக) இருக்கலாம்.

    மீண்டும் அடுத்த பதிவில்.

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  37. Tue. 23, Aug. 2022 at 9. 25 am.

    அமிலத் துளிகள் :

    * சிரிப்பூட்டும் வாயு.....
    நைட்ரஸ் ஆக்ஸைடு.

    * வைட்டமின் " சி " − யின் வேதியியல் பெயர் ... அஸ்கார்பிக் அமிலம்.

    * பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைக்கப் பயன்படும் வாயு......
    அசிட்டிலீன்.

    * குடிக்கும் சோடா−வில் இருக்கும் வாயு..
    கார்பன் − டை − ஆ்ஸைடு.

    * மாணிக்கத்தில் கலந்திருக்கும் வேதிப் பொருள் .... அலுமினியம் ஆக்ஸைடு.

    * N P K − இதன் விரிவாக்கம் .... நைட்ரஜன் , பாஸ்பரஸ் , காலியம்.

    * நீர்ம நிலையிலுள்ள உலோகம்... பாதரசம்.

    * நீர்ம நிலையிலுள்ள அலோகம் .... புரோமின்.

    * பேக்கிங் பவுடர் மேலும் பேக்கிங் சோடா என்பது .... சோடியம் − பை − கார்பனேட் .

    * சாதாரண உப்பின் வேதியியல் பெயர் .... சோடியம் குளோரைடு.

    * வாசனை உப்பு என்பது ... அம்மோனியம் கார்பனேட் .

    * காஸ்டிக் சோடா என்பது ...
    சோடியம் ஹைட்ராக்ஸைடு.

    * சாக்பீஸில் உள்ள வேதியியல் பொருள்... கால்சியம் சல்பேட்.

    * அறுவை சிகிச்சையில் மயக்க மருந்தாகப் பயன்படுத்துவது ....
    நைட்ரஸ் ஆக்ஸைடு (அதாவது சிரிப்பூட்டும் வாயு.)

    * சோப்புடன் எளிதில் நுரை தரும் நீர்... மென்னீர்.

    * பாலில் இருக்கும் பொருள்... லாக்டோஸ். (Lactose)

    * சுண்ணாம்புக் கல் என்பது ...
    கால்சியம் கார்பனேட்.

    * குயிக் சில்வர் என்பது ... பாதரசம்.

    * அலுமினியத்தின் முக்கியத் தாது....
    பாக்ஸைட் .

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  38. Wed. 24. Aug. 2022 at 9.15 pm.

    அமிலத் துளிகள்...!

    * அந்து உருண்டையின் வேதியியல் பொருள்.... நாப்தலின்.

    * புகையிலையில் உள்ள ஆல்கஹால் ....நிகோடின்.

    * இரும்புத் துருப்பிடித்தல் என்பது ... ஹைட்ரேட்டட் இரும்பு ஆக்ஸைடு.

    * இரும்பு துருப்பிடிப்பதன் முக்கிய காரணமானது.... ஆக்ஸிஜன்.

    * சோடா சாம்பல் என்பது .... சோடியம் கார்பனேட் .

    * பி.வி.சி. யின் வேதியியல் பொருள்....
    பாலி வினைல் குளோரைடு.

    * டி.டி.டி. யின் விரிவாக்கம்...
    டை− குளோரோ −டை ஃபினைல் − ட்ரை குளோரோ ஈத்தேன்.

    * மிக அதிக எடையுள்ள உலோகம் .... இரிடியம்.

    * செயற்கை மழை செய்விக்கப்படும் விதம்.... மேகங்களில் சில்வர் அயோடைடு தூவப்படுவதால்.

    * நம் மூளையில் ஞாபக சக்திக்கு காரணமாக உள்ள பகுதி....பெருமூளையில் உள்ள லிம்பிக் .

    * கடிகார பெண்டுலத்தில் பயன்படும் உலோகக் கலவை.... இன்வார்.

    * பாதரசத்தில் உலோகம் கரைவது....அமால்கம்.

    * வினிகரில் உள்ள அமிலம்.... அசிடிக் அமிலம்.

    * எலுமிச்சை சாற்றில் உள்ள வேதிப் பொருள்..... கால்சியம் ஹைட்ராக்ஸைடு.

    * கரும்புச் சர்க்கரையின் வேதியியல் பெயர்.... சுக்ரோஸ்.

    * குளிர் பானங்களில் புளிப்புச் சுவையூட்டக் கூடிய அமிலம்....
    ஆர்த்தோ பாஸ்பரிக்.

    * வெள்ளை உலோகம் என்பது... காப்பர் சல்பைடு.

    * வேதிப் பொருள்களின் அரசன் .... கந்தக அமிலம்.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  39. Wed. 24, Aug. 2022 at 6.30 am.

    நாடிப் பயிற்சி :

    பாடம் − 60.

    முந்தைய பதிவில்...வளியின் − 10 பிரிவுகளில்.. பிராணன் பார்த்து விட்டோம்...

    2) அபானன் (கீழ் நோக்குங்கால்) :

    இது தேயுவின் கூறு. இது சுவாதிட்டானத் திலிருந்து வெளிப்பட்டுக் கீழ்நோக்கி மலசலத்தைத் தள்ளும். அதாவது குதத்தினின்று... அடி வயிறு, இடுப்பின் பூட்டு, நீர்ப்பை ,ஆண், பெண் குறிகள், தொடை ஆகிய இவ்விடங்களில் வாழ்ந்து வெண்ணீர்(விந்து) நாதம், மலம், சிறுநீர், கரு இவற்றை வெளிப்படுத்தும். ஆசனவாயை சுருக்கும். அன்னசாரத்தை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்ப்பிக்கும்.

    3) வியானன் (பரவுகால்) :

    இது ஆகாயக் கூறு (வெளி) .

    இது தோலில் இருந்து 72,000 நாடி நரம்பு
    இரத்தக் குழாய்களிலும் சென்று..அவ்விடத்தில் உள்ள, அசையும் பொருள், அசையாப் பொருள், என்னும் இரண்டிலும் இருந்து, உறுப்புக்களை நீட்டவும் மடக்கவும், கண் இமைத்தல், விழித்தல் போன்ற தொழில்களைச் செய்யும். இதன் இருப்பிடம் இருதயம்.

    4) உதானன் (மேல் நோக்குங் கால்) :

    இது... மண்ணின் (பிருதிவி) கூறு.

    மார்பை இடமாகக் கொண்டு.. கொப்பூழ், கழுத்து, மூக்கு இம்மூவிடங்களிலும் வாழ்ந்து, பேச்சுக்கு முதற்காரணமாக இருப்பதோடன்றி, முயற்சி, மனோதிடம், உடல் நிறம், உடல் ஒளி , நினைப்பு ஆகிய இவற்றையும் உண்டாக்கும்.

    5) சமானன் (நடுக்கால்) :

    இது அப்புவின் கூறு. இது நாபியிலி ருந்து கால் வரைக்கும், சமமாகப் பரவிப் பாய்ந்து, மற்ற வாயுக்களை மிஞ்ச வொட்டாமல் மடக்கி , சரிப்படுத்திச் சேரப் பண்ணும். அறுசுவைகளையும், தண்ணீர், அன்னம் ஆகியவற்றையும் சமப்படுத்தி உடலில் சேரும்படிச் செய்யும்.

    மீண்டும் அடுத்த பதிவில்....!

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  40. Tue. 23, Aug. 2022 at 8.40 am.

    தாவரவியல் பெயர்கள்....!
    (அகர வரிசையில்)

    1) அகத்தி :

    வேறு பெயர்கள் : கரீரம் , முனி அச்சம்.
    தாவரவியல் பெயர்:Sesbania - Granfiflora.

    2) அக்கரகாரம் :

    வேறு பெயர்கள் : அக்கிராகாரம் ,அக்ராகாரம்.
    தாவரவியல் பெயர் : Anacylus Pyrethrum (Roof of the Pyrethrum)

    3) அக்ரோட்டு :

    வேறுபெயர்கள் : அக்றோட்.
    தாவரவியல் பெயர் : Juglans Regia.

    4) அம்மான் பச்சரிசி :

    வேறு பெயர்கள் : சித்திரப் பாலாடை, எம்மான் பச்சரிசி , பாலாட்டங் கொளை.
    தாவரவியல் பெயர் : Euphorbia Pilurifera.

    5) அமுக்கிராக் கிழங்கு :

    வேறுபெயர்கள் : அஸ்வகந்தி , அஸ்வகந்தம் , அமுக்கிரி , அமுக்குரவு , அமுக்கினாங் கிழங்கு , வராக கர்ணி , இருளிச் செடி , கிடிச் செவி , அகவம்.

    தாவரவியல் பெயர் : Withania Somnifera

    6) அதிமதுரம் :

    வேறு பெயர்கள் : குன்றி வேர் , மதுரகம், அதிகங்கம், அஷ்டி.
    தாவரவியல் பெயர் : Giycyrrhiza Glabra.

    7) அரரூட் கிழங்கு :

    வேறு பெயர்கள் : கூவைக் கிழங்கு, கூகைக் கிழங்கு, கூவமாக் கிழங்கு.

    தாவரவியல் பெயர் : Maranta - Arundinacea ( Old name : Curcuma Angustifolia.

    8) அவுரி :

    வேறு பெயர்கள் : நீலி.
    தாவரவியல் பெயர் : Indigofera Tinctioria.

    9) அருகம்புல் :

    வேறு பெயர்கள் : மேகாரி , மூதண்டம், தூர்வை ,பதம், அருகு.
    தாவரவியல் பெயர் : Cynodon Dactylon.

    10) அறுகீரை :

    வேறு பெயர்கள் : அறைக் கீரை, அரைக் கீரை.

    தாவரவியல் பெயர் : Amarantus Tristis.

    மீண்டும் அடுத்த பதிவில் ...!

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  41. சிந்தனைக்கு சில துளிகள் :

    * கோதுமையில் இருக்கும் புரதம்... *குளுடெலின்.*

    * உயிரின் மரபுப் பொருளின் பெயர்... *டி.என்.ஏ.*

    * டி.என்.ஏ. யின் அமைப்பை விளக்கி யவர்கள்..... *வாட்சன் மற்றும் கிரீக்.*

    * தாவரங்களுக்கு மட்டுமே சிறப்பாகத் தேவைப்படும் கார்போஹைட்ரேட்டின் வகை.... *செல்லுலோஸ்.*

    * எல்லா வயதினரும் எடுத்துக் கொள்ளக்கூடிய ஒரே வைட்டமின் ....
    *"வைட்டமின் " ஈ ".*

    * மலர்கள், பழங்கள் மற்றும் விதைகளுடன் கூடிய வாஸ்குலார் தாவரங்கள்...... *ஆன்ஜியோஸ்பெர்ம்கள்.*

    * கட்டுப்படுத்தப்படாத செல்பிரிவின் மூலம் தோன்றும் நோய்.... *புற்றுநோய்.*

    * மீன்கள் எதன் மூலம் சுவாசிக்கின் றன.... *செவுள்கள் மூலம்.*

    * மூச்சு விடுதலுக்கு உதவுவது... *உதரவிதானம்.*

    * சூரிய ஒளியிலிருந்து மனிதனைக் காப்பது .... *மெலனின் என்ற நிறமி.*

    * தோலின் நிறத்துக்குக் காரணமான செல்கள் .... *மெலனோசைட்டு.*

    * உடல் பருமனுக்குக் காரணமானது... அதிக அளவிலான கொழுப்பு.

    * சூரிய ஒளியின் உதவியால் வைட்டமின் டி− யைத் தயாரிப்பது..... *அகத்தோல்.*

    * மண்புழுவில் அசைவுக்குப் பயன் படும் உறுப்பு ..... *உடலசீட்டா.*

    * அமீபாவில் அசைவுக்குப் பயன்படும் உறுப்பு ..... *போலிக் கால்கள்.*

    * புறத்தோல்.... *எபிதீலியச் செல்களால்* ஆனது.

    மீண்டும் அடுத்த பதிவில் ...

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  42. Thu. 25, Aug. 2022 at 6.42 am

    தாவரவியல் பெயர்கள் :

    11) அசோகு :

    வேறு பெயர்கள் : பிண்டி, காகோளி,
    அசோகம், ஆயில், செயலை, விசித்திரம், கிருமிகாரகம், சாயை,அங்கணப்பிரியை.

    தாவரவியல் பெயர் : Saraca Asoca (Old Name : Saraca Indica ).

    12) அன்னாசிப் பழம் :

    வேறு பெயர்கள் : பூந்தாழம் பழம்.
    தாவரவியல் பெயர் : Ananas Comosus (Old Name : Ananas Sativus).

    13) அரச மரம் :

    வேறு பெயர்கள் : அஸ்வத்தம், திருமரம், கணவம், பேதி, பிப்பிலம், பணை, கவலை, சராசனம், அச்வத்தம்.

    தாவரவியல் பெயர் : Ficus Religaiosa.

    14) ஆதொண்டை :

    வேறு பெயர்கள் : ஆதண்டை, ஆதண்டம், ஆதொண்டன், ஆதொண்டம், காற்றொட்டி, காத் தொட்டி, காத்தோட்டி, காகதுரத்தி.

    தாவரவியல் பெயர் : Capparis Zeylanica (Old Name : Capparis Horrida).

    15) ஆடாதொடை :

    வேறு பெயர்கள் : ஆடா தோடை, வாசை.

    தாவரவியல் பெயர் : Justicia Beddomei (Old Name :Adhatoda Vasica).

    16) ஆமணக்கு :

    வேறு பெயர்கள் : சித்திரம் , தலரூபம், ஏரண்டம்.

    தாவரவியல் பெயர் : Recinus Communis.

    17) ஆல மரம் :

    வேறு பெயர்கள் : பூதம், கோளி, தொல் மரம், இயக்க ரோதம், வானோக்கி, காமரம், வடம், பழு மரம்.

    தாவரவியல் பெயர் : Ficus Bengalensis.

    18) ஆவாரை :

    வேறு பெயர்கள் : தலபோடம், ஆவாரம், ஆகலி, ஆவதை, ஏமபுட்பி, ஆவிரை.

    தாவரவியல் பெயர் : Cassia Auriculata.

    19) ஆடு தீண்டாப் பாளை :

    வேறு பெயர்கள் : ஆடு தின்னாப் பாளை, பங்கம் பாளை, புழுக் கொல்லி, விரணம் போக்கி, காரி ரத்தம் , ஆடு தொடாப் பாளை.

    தாவரவியல் பெயர் : Aristolochia Bractiata.

    20) இஞ்சி :

    வேறு பெயர்கள் : ஆத்திரகம், நறுமறுப்புமதில், அல்லம்.

    தாவரவியல் பெயர் : Zingiber Officinalis.

    மீண்டும் அடுத்த பதிவில் ....

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  43. Thu. 25 Aug. 2022 at 8.10 pm.

    நாடிப் பயிற்சி :

    பாடம் − 61.

    பதிவு− 60 ன் தொடர்ச்சி.. இன்றைய பாடம்.

    6) நாகன் :

    நாகன் எல்லாக் கலைகளையும் கற்கும்படி அறிவை எழுப்பும். நல்ல பண்களைப் பாடுவிக்கும். கண்களைத் திறக்கும்படிச் செய்யும். கண்களை இமைக்கும்படியும் செய்யும். மயிர்களைச் சிலிர்க்கப் பண்ணும்.

    7) கூர்மன் :

    கூர்மன், இது மனதிலிருந்து கிளம்பிக் கண்ணில் இருந்து இமையைக் கொட்டுவிக்கும். கொட்டாவி விடச் செய்யும். கண்களை திறக்கவும், மூடவும்"பண்ணும். பலம் உண்டு பண்ணும். உலகப் பொருட்கள் யாவற்
    றையும் கண்களுக்குக் காண்பிக்கும். கண்களில் இருந்து நீரை விழப் பண்ணும்.

    8) கிருகரன் :

    கிருகரன்... நாவிலிருந்து நாவிற் கசிவையும், நாசியிற் கசிவையும் உண் டாக்கும். மேலும் பசி உண்டாக்கும். ஒன்றை நினைத்திருக்கச் செய்யும். போதற்றொழிலையும், தும்மலையும், இருமலையும் உண்டாக்கும்.

    9) தேவதத்தன் :

    தேவதத்தன் வளைவு வடிவமாகக் கிளம்பிச் சோம்பலையும், உடல் முரித்தலையும் உண்டாக்கும். உறங்கி எழும்பும்போது அயர்ச்சியை உண்டாக்கும். கண்ணைப் பல இடங்களில் ஒட்டி உலாவுவிக்கும். தாங்குதல், சண்டை கொள்ளல், தர்க்கம் பேசல், மிக்க கொபம் ஆகிய வற்றை உண்டாக்கும். மேலும்...பல பொருள்களைக் குறிக்கச் செய்து.. குதம், குய்யம் என்னுமிடங்களில் இருக்கும்.

    10) தனஞ்சயன் :

    தனஞ்சயன்.... மூக்கிலிருந்து தடித்து, உடம்பு முழுமையும் வீங்கப் பண்ணும். காதில் கடல் போல் இரையும். இறந்து விடின் காற்றெல்லாம் வெளிப்பட்ட பின்னர்... மூன்றாவது நாளில் தலை வெடித்த பின்தான் போகும்.

    மீண்டும் அடுத்த பதிவில்....!


    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  44. Thu. 25, Aug. 2022 at 10.34 pm.

    அமிலத் துளிகள் − 3

    * 1930−ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற இந்திய அறிவியல் அறிஞர்....
    *சர்.சி.வி. இராமன்.*

    * 2005−ஆம் ஆண்டு விண்வெளிக்குச் சென்ற பயணியின் பெயர்... *கிரிகிரி ஆல்சன்.*

    *2006 − ஆம் ஆண்டு விண்வெளிக்கு அழைத்துச் செல்லப்பட்ட பயணி....
    *அனுஷ் அன்சாரி (இவர் முதல் பெண் விண் பயனி).*

    * 2010−ஆம் ஆண்டுக்கான மருத்துவத் துறைக்கான நோபல் பரிசை வென்றவர் .....*இராபர்ட் எட்வர்ட்ஸ்.*

    * 2010−ஆம் ஆண்டு கரிம வேதியியல் கண்டு பிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள்.... * ரிச்சர்ட் ஹெக் (அமெரிக்கா)* *ஐயிஷா நெகிஷி, அகிரா சுஸிகி நெகிஸி (ஜப்பான்).*

    * ஹாலிவால் விண்மீன்... *அடுத்து 2062 ஆண்டு தென்படும்.*

    * மருத்துவ ரீதியான கருக்கலைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு...*1971−ஆம் ஆண்டு.*

    * 1985−ஆம் ஆண்டு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் ....
    *மைக்கேல் ரெளன் (அமெரிக்கா).*
    *ஜோசப் ஹோல்ட்ஸ்டீப் (அமெரிக்கா.*

    * தமிழகத்தில் மருத்துவப் படிப்பு முதன் முறையாக தமிழில் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு .... *2008−2009.*

    * மைக்கேல் ஃபாரடே பென்சீனை கண்டு பிடித்த ஆண்டு .... *1825−ஆம் ஆண்டு.*

    * டி.டி.டி.−ஐக் கண்டுபிடித்தவர்... *பால்முல்லர்.*

    * இன்சுலின்−ஐக் கண்டு பிடித்தவர்....
    *பாண்டிங்* (1932−ஆம் ஆண்டு கண்டு பிடித்தார்).

    * குளோரோபாஃமைக் கண்டு பிடித்தவர்.... *காரிவான் டிரய்ஸ்.*

    * ஊற்றுப் பேனாவைக் கண்டு பிடித்த
    வர்... *வாட்டர்மேன்.*

    * ரிவால்வரைக் கண்டு பிடித்தவர்..... *சாமுவேல் கோல்ட்..*

    * ஹெலிகாப்டரைக் கண்டுபிடித்தவர்... *பிரிக்வுட்.*

    * பிராண வாயுவைக் கண்டுபிடித்த அறிவியல் அறிஞர்....
    *ஜோஸப் ப்ரீஸ்ட்லி.*

    * நெப்டியூன் கிரகம் கண்டு பிடிக்கப் பட்ட ஆண்டு.... *1846−ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23−ஆம் நாள் (தேதி)*

    * ஹெராயின் என்னும்"போதைப் பொருள் கண்டு பிடிக்கப்பட்ட ஆண்டு.... *1890−ஆம் ஆண்டு.*

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  45. Sat. 27, Aug. 2022 at 8.40 m.

    அமிலத் துளிகள் − 4

    * சாக்ரீனைக் கண்டு பிடித்தவர்+ ஆண்டு.... *கான்ஸ்டான்டின் ஃபால்பெர்க். 1879−ஆம் ஆண்டு.*

    * சந்திரனில் கால் பதித்த முதல் மனிதரக.... *நீல் ஆம்ஸ்ட்ராங்.*

    * 1772− ்ஆம் ஆண்டு ஆக்ஸிஜனைப் பிரித்தெடுத்தவர் .... *ஷிலே.*

    * தனிம வரிசை அட்டவணையை முதலில் வெளியிட்டவர்...... *மெண்டலீஃப்.*

    * அனைத்துத் தனிமங்களின் அணுக் களும், ஹைட்ரஜன் அணுக்களால் ஆனவை என்று கூறிய அறிஞர் .... *பிரவுட்.*

    * யூரியாவை முதலில் சோதனைச் சாலையில் தயாரித்தவர் .... *ஹேபர்.*

    * பிளீச்சிங் பவுடரைக் கண்டறிந்தவர் ....
    *டெனன்ட்.* (இங்கிலாந்து)

    * மயக்க மருந்தாக ஈதரைப் பயன்படுத் திய முதல் மருத்துவர் ..... *வில்லியம் மார்ட்டன்.*

    * அமோனியம் சயனைடு + உலோக அலுமினியம் கண்டு பிடித்தவர் ..... *பிரெடிரிக் வொகுலர்.*

    * நடைமுறையில் இருக்கும் ஐசோடோப்
    புகளை வெளிப்படுத்தியவர் .... *ஃபிரடெரிக்சோடி.*

    * பென்சீன் அமைப்பை வெளிப்படுத்திய
    வர் ... *ஆகஸ்டு கெகுளி.*

    * கார்பன் − டை − ஆக்ஸைடு படலத் தைக் கண்டு பிடித்தவர்..... *சி.கே.என். படேல்.*

    * சிரிப்பூட்டும் வாயுவைக் கண்டு பிடித்தவர்..... *ஜோசப் ப்ரீஸ்ட்லி.*

    * நியான் விளக்கைக் கண்டு பிடித்தவர்..*ஜார்ஜஸ் கிளாட்.* (பிரான்ஸ்)

    * வல்கனைஸ்டு இரப்பரைக் கண்டு பிடித்தவர்..... *சார்லஸ் குட்இயர்.*

    * நிலக்கரி வாயுவிலிருந்து முதலில் விளக்கை ஏற்றியவர் .... *ஜார்ஜ் நிக்சன்.*

    * முதல் நவீன வேதியலறிஞர் என்று புகழப்பட்டவர் .... *இராபர்ட் பாயில்.*

    * முதல் ஹைட்ரஜன் பலூனை வடிவமைத்தவர்.... *ஜாக்குயிஸ் சார்லஸ்.*

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  46. Sat. 27. Aug. 2022 at 8.12 pm.

    தாவரவியல் பெயர்கள் :

    21) இண்டு :

    வேறு பெயர்கள் :

    புலித்துடக்கி, இங்கை, ஈகை, ஈயக்
    கொழுந்து.
    தாவரவியல் பெயர் : Mimosa Rubicaulis (Old name : Mimosa Panicullata).

    22) இம்பூறல் :

    வேறு பெயர்கள் :

    இன்புறா வேர், சாயவேர், சிறுவேர், இராமேசுர வேர்.
    தாவரவியல் பெயர் : Oldenlandia Unbellata.

    23) இலவங்கம் :

    வேறு பெயர்கள் :

    கிராம்பு, உற்கடம், வராங்கம், திரளி, அஞ்சுகம், கருவாய்க் கிராம்பு, கோசம்.
    தாவரவியல் பெயர் : Syzygium Aromaticum (Old name : Eugenia Caryyophyllata)

    24) இலவங்கப் பத்திரி :

    வேறு பெயர்கள் :

    தாளிசப்பத்திரி, தமாலபத்திரி.
    தாவரவியல் பெயர் : Cinnamomum Tamala.

    25) இலவங்கப்பட்டை :

    வேறு பெயர்கள் : கருவாப்பட்டை .
    தாவரவியல் பெயர் : Cinnamomum Verum(Old Name : Cinnamomum Zeylanica.

    26) ஈஸ்வர மூலி :

    வேறு பெயர்கள் :

    ஈச்சுர மூலி,தலைச் சுருளி, தராசுக் கொடி, பெரு மருந்து, பெருங்கிழங்கு.
    தாவரவியல் பெயர் : Aristolochia Indica.

    27) உளுந்து :

    வேறு பெயர்கள் : மாஷம், மாடம்.
    தாவரவியல் பெயர் : Vigna Mungo(Old Name : Phaseolus Radiantus.

    28) ஊமத்தை :

    வேறு பெயர்கள் : உன்மத்தம்.
    தாவரவியல் பெயர் : Datura Metel (Old Name : Datura Alba).

    29) எருக்கு :

    வேறு பெயர்கள் : அருக்கன்,எருக்கன் செடி.
    தாவரவியல் பெயர் : Calotropis Gigantea.

    30) எள் :

    வேறு பெயர்கள் : எள்ளு, திலம்.
    தாவரவியல் பெயர் : Sesamum Indicum.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  47. சிந்தனைக்கு சில உயிரியல் துளிகள் :

    பாடம் − 3.

    * மூளையின் மேலுள்ள தோலின் பெயர் .... *மெனின் ஜிஸ்.*

    * குளோனிங் மூலம் எருமைக் கன்றை உருவாக்கிய நாடு ..... *இந்தியா.*

    * பெண்களின் டெஸ்டோஸ்டிரானை உற்பத்தி செய்யும் சுரப்பி... *அட்ரீனல்.*

    * பெண் சூல் அடைவதற்கு காரணமான அணு ... *ஆணின் விந்தணு.*

    * மனிதனின் மூளையிலிருந்து, நரம்பு களின் வழியாக அனுப்பப்படும் செய்திகள்... *200 மைல் வேகத்தில்* செல்கின்றன.

    * நம் தலையில் இருக்கும் நரம்புகளின் எண்ணிக்கை .... *22.*

    * ஒட்டகப் பறவை என்று அழைக்கப் படும் பறவை.... *நெருப்புக் கோழி.*

    * கடல் தங்கம் என ஜப்பானியர்களால் அழைக்கப் படுவது ...... *சுறா மீன்.*

    * நவீன நரம்பியல் துறையின் தந்தை எனப் போற்றப்படுபவர்.... *பால்புரேகா.*

    * யூரியா உரத்தில் அடங்கி இருக்கும் மூலகம் ....... *நைட்ரஜன்.*

    * இந்தியாவில் முதலை வங்கி ... *சென்னையில்* உள்ளது.

    * அனைவருக்கும் பொருந்தக் கூடிய இரத்த வகை.... *O* − வகை.

    * தூக்கம் தரும் மருந்தாகப் பயன்படும் அமிலம்.... *டார்டாரிக்* அமிலம்.

    * கண்ணின் கருவிழிக்கு ஆங்கிலத் தில் ...... *ஐரிஸ்.*

    * மனிதனின் தண்டுவடத்தில் ஏற்படும் நோய்..... *செல்விகஸ் ஸ்பாண்டிலோசில்*

    * மனித உடலில் செரிக்கும் அமிலம்...
    *ஹைட்ரோகுளோரிக் அமிலம்.*

    * ஆங்கிலேயரின் தேசியப் பறவை....
    *அன்னம்.*

    * யானையைப் பிடிக்கும் முறைக்கு....
    *கெத்தா* எனப் பெயர்.

    * நாய்க்கடி நோயின் பெயர்... *ரேபீஸ்.*

    * வேர் இல்லாத மரம் ..... இலுப்பை.

    * மிகக் குறைந்த வாழ்நாளை உடைய பூச்சி..... *ஈசல்.*

    * தாழம்பூவை ஊற வைத்து எடுக்கப் படும் தைலம் ..... *கேயூரத் தைலம்.*

    * சொந்தமாகத் தானே உணவு தயாரிக்காத செடி.... *காளான்கள்.*

    * எறும்புகளின் கூட்டம்.... *காலனி* (தொகுப்பு) என அழைக்கப் படுகிறது.

    * மயில் கூட்டம் .... *மஸ்டர்* என அழைக்கப்படுகிறது.

    * வன விலங்குகளுக்காக அளிக்கப் பட்ட மாதம் ..... *அக்டோபர் முதல் வாரம்.*

    * மிகவும் பழமையான நோய்.... *தொழு நோய்.*

    * இரத்தம் உறைவதற்குத் தேவையான புரதம் ..... *ஃபைப்ரிநோஜென்.*

    * அறுவை சிகிச்சைக் கருவிகள் செய்யப் பயன்படும் உலோகக் கலவை...... *இன்வார்.*

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  48. Sun. 28, Aug. 2022 at 5.30 am.

    இன்றைய பாடமாக.. தீயின் வடிவத் தன்மை... பார்க்கலாம்.

    அழல் என்றால்.... தீ, அனல், பித்தம்.

    தீயின் வடிவத் தன்மை ... வெப்பம், கூர்மை. சேரும் பொருள் வேற்றுமை யால்... இளகல், நீராகல், கட்டல் முதலியன நடைபெறும்.

    அதாவது ... உப்பு வெயிலில் இட்டால்... கட்டலும், வெல்லம் வெயிலில் இட்டால் இளகலும், நெய்யை வெயிலிலிட்டால், நீராகலும் போல... இயக்கம் ஆகிய இவைகள் அழல் வடிவத் தன்மைகள்.

    அழல் வாழும் இடம் :

    பிங்கலை, பிராணவாயு, நீர்ப்பை, மூலாக்கினி, இருதயம், தலை ஆகிய இடங்களிலும்.... கொப்பூழ், உந்தி, இரைப்பை, வியர்வை, செந்நீர், நாவில் ஊறுகின்ற நீர், கண், தோல் போன்ற இடங்களிலும் அழல் வாழும்.

    அழலின் இயற்கைப் பண்பு யாதெனில்.....

    தனது இயற்கை நிலை யினின்று செரிப்பித்தல், வெம்மை, பார்வை, பசி, நீர் வேட்கை, சுவை, ஒளி, நினைப்பு, அறிவு, வன்மை, மென்மை இவைகளை உண்டாக்கி, உடற்குத் துணை புரியும்.

    அழல் உடலில் செய்யும் தொழில்....

    உடலில் வெப்ப முண்டாதல் − செந்நிறம் அல்லது மஞ்சள் நிறம் தோன்றல்....

    உண்ட உணவுப் பொருட் கள் பக்குவமடையும் போதும்....

    செரிக்கும் சமயத்திலும் வெப்பமுண்
    டாதல், வியர்த்தல், மயக்கம் ஏற்படல்...

    செந்நீர் தன்னளவில் மிகுதல்... மிகுந்த செந்நீர் வெளிப்படுதல்....

    தோல், கண், மலம், சிறுநீர் முதலியன மஞ்சள் நிறமடைதல்....

    சீற்றம், அசைவின்மை, வணக்க மின்மை, நினைவு, வெறி, மெலிவு, எரிவு இவை உண்டாதலும்...

    எச்சுவையும் கைப்பாகவும், புளிப்பாக வேனும் காணுதல்.....

    ஆகியவை அழலின் தொழில்கள்.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  49. Sun. 28, Aug, 2022 at 5.40 am.

    அமிலத் துளிகள் −5.

    * கார்பாலிக் அமிலத்தின் முக்கிய வினைச்செயல் தொகுதி .... *COOH*.

    * பாதரசத்தின் குறியீடு.... *Hg*.

    * பொட்டாசியத்தின் குறியீடு.... *K*.

    * சோடியத்தின் குறியீடு.... *Na*.

    * கால்சியத்தின் குறியீடு.... *Ca*.

    * மெக்னீசியத்தின் குறியீடு... *Mg*.

    * அலுமினியத்தின் குறியீடு.... *Al*

    * மாங்கனீசின் குறியீடு..... *Mn*.

    * துத்தநாகத்தின் குறியீடு.... *Zn*.

    * ஃபாரடே மாறிலியின் மதிப்பு ....
    *9.648 × 10(4 ஸ்குவர்ட்).*

    * அணு உட்கருவின் ஆர அளவு ....
    *10.13 செ.மீ.*.

    * பென்சீன் நீர்மத்தின் கொதி நிலை...
    *353K*.

    * டொலுவீன் நீர்மத்தின் கொதி நிலை... *384 K*.

    * அணு எண் குறிக்கப்படும் குறியீடு....
    *Z*.

    * நிறை எண் குறிக்கபடும் குறியீடு....
    *A*.

    * ஹைட்ரஜனின் அணு எண்.... *1*.

    * லித்தியத்தின் அணு எண்... *3*.

    * போரானின் அணு எண் .... *5*.

    * கார்பனின் அணு எண்.... *6*.

    * நைட்ரஜனின் அணு எண்.... *7*

    * புளூரினின் அணு எண்.... *9*.

    * நியானின் அணு எண்.... *10*.

    * சோடியத்தின் அணு எண் ..... *11*.

    * மெக்னீசியத்தின் அணு எண்.... *12*.

    * அலுமினியத்தின் அணு எண்... *13*.

    * பாஸ்பரத்தின் அணு எண் .... *15*.

    * சோடியத்தின் அணு நிறை... *23*.

    * பொட்டாசியத்தின் அணு நிறை... *39*.

    * கால்சியத்தின் அணு நிறை.... *40*.

    * ஸ்ட்ரான்சியத்தின் அணு நிறை... *88*.

    * பேரியத்தின் அணு நிறை.... *137*.

    * ஒரு வட்டப் பாதையில், இடங் கொள்ளும் அதிக பட்ச எலக்ட்ரானின் எண்ணிக்கை காண உதவும் வாய்ப்பாடு.... *2n2 (ஸ்குவர்ட்)*
    (குறிப்பு : n என்பது வட்டப் பாதையின் எண்ணிக்கை.)

    * சோடியம் அணுவின் உட்கருவை சுற்றி வரும் எலக்ட்ரானின் எண்ணிக்கை.... *11*.

    * ஹைட்ரஜன்,ஆக்ஸிஜன், நீர் ஆகிய வற்றின் மோல்களின் ஒப்பீட்டு எண்ணிக்கை விகிதம்.... *2:1:2.*

    * ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், நீர் ஆகியவற்றின் ஒப்பீட்டு நிறைகள்...
    *1:8:9.*

    * காலியம் என்ற உலோகத்தின் உருகு நிலை.... *29.8டிகிரி செல்சியஸ்.*

    * ஆஸ்மியம்.... நீரின் நிறையைப் போல்... *22 1/2 மடங்கு அதிக நிறை* கொண்டது.

    * ஆஸ்மியம், இரும்பைப் போல்..*3* மடங்கு நிறை கொண்டது.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  50. Sun. 28, Aug. 2022, at 8.05 pm.

    சிந்தனைக்கு சில இயல்புத் துளிகள்..!

    * காந்தப் பண்புகளையும், மின் பண்பு
    களையும் ஆராய்ந்தவர்... *வில்லியம் கில்பெர்ட்.*

    * முன்னணுவைக் கண்டறிந்தவர்....
    *ரூதர் போர்டு. 1914−ல்.*

    * எய்சன்பர்க் ஐயப்பாட்டுக் கொள்கை கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு.... *1927.*

    * முன்னணுக்களுக்கும், அல்லணுக் களுக்கும் அமைப்புண்டு என்பதைக் கண்டுபிடித்தவர்.... *இராபர்ட் ஹார்ட்ஸ்டட்டர். 1961.*

    * அல்லணு என்றால்..... *அணுக் கருவி லுள்ள மின்னேற்றமில்லாத் தூள்.*

    * அல்லணுவைக் கண்டறிந்தவர் ...
    *ஜேம்ஸ் சாட்விக். 1932.*

    * மின்னணுவைக் கண்டறிந்தவர் ....
    *ஜே.ஜே. தாம்ஸன். 1897.*

    * மின்னணு ஏற்றத்தைப் பற்றி ஆராய்ந்தவர்... *இராபர்ட் மில்கன். 1911.*

    * மின்னணுச் சார்பு அலைச் சமன் பாட்டைக் கண்டு பிடித்தவர்.... *பால் டிராக். 1928.*

    * அணுக் கருவைக் கண்டறிந்தவர்....
    *ரூதர்போர்டு. 1911.*

    * ஒரு தனி அணுவின் புகைப்படம் முதன் முதலாக வெளியிடப்பட்ட ஆண்டு...... *1980.* ஜெரமன் எய்சன்பர்க் பல்கலைக் கழகத்தில் வெளியிடப்பட்டது.*

    * அணு உலை என்பது .... *அணுக்கள் பிளவுறும் உலை.*

    * முதல் அணு உற்பத்தி உலை நிறுவப்
    பட்டது .... *இடாகோவில் −1951−ல்.*

    * முதல் செயற்கை மாற்றுத் தனிம மாக்கலை உற்று நோக்கியவர்....
    *ரூதர் போர்டு. 1919.*

    * மின் அணுக்களோடு அலைகளை தொடர்புபடுத்தியவர்....... *டி. புரோக்கிளி 1923.*

    * முதல் துகள் முடுக்கியை அமைத்தவர்
    கள்..... *காக்ராபர்ட், வாட்சன். 1929.*

    * துகள் இயற்பியல் என்றால்.... *ஒரு பொருளிலுள்ள துகள்களை ஆராயும் துறை.*

    * சில அடிப்படைத் துகள்கள்....... *லெப்டான்கள், ஹாட்ரான்கள், பேரியன்கள், மீசான்கள், பெர்மியான்கள், போசன்கள்.*

    * லெப்டான் எனும் சொல்லை அறிமுகப் படுத்தியவர்..... *ஆபிரகாம் வாய்ஸ்,
    சி. மோலர் 1946.*

    * இரு மீசான் கொள்கையை மறுபடியும் கண்டறிந்தவர்.... *ஆர்.மர்ஷக், ஹேன்ஸ் பெவதே, எஸ். சாக்கட்டா, டி. இனோயு.*

    * மீசானின் தற்காலப் பெயர்.... *மியுயான்.*

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  51. Mon 29, Aug. 2022 at 9.05 am.
    எளிய கணக்குகள் .....!

    1) 30, 80, 60, 70, 20, 40, 50 ஆகியவற்றின் சராசரி காண்க ?

    சராசரி = மொத்த எண்களின் கூடுதல்
    ----------------------------------------------
    அந்த எண்களின் எண்ணிக்கை

    எண்களின் கூடுதல் =
    30 + 80 + 60 + 70 + 20 + 40 + 50 = 350
    எண்களின் எண்ணிக்கை = 7
    சராசரி = 350 % 7 = 50

    Ans. 50.

    2) இரு எண்களின் கூடுதல் 25, வித்தி சம் 15 எனில் அந்த எண்கள் யாவை ?

    இரு எண்களை... x , y என்க.
    இரு எண்களின் கூடுதல் = 25
    ஃ x + y = 25 (கூடுதல்)
    அதன் வேறுபாடு = 15
    x + y = 25
    x − y = 15
    கூடுதல்... 2x = 40 => x = 20
    x- ன் மதிப்பை பிரதியிட....
    20 + y = 25
    y = 25 − 20 = 5
    Ans. :இரு எண்கள் 20 மற்றும் 5

    3) ஒரு முழு எண், அதன் தலை கீழ் மதிப்பு ஆகியவற்றின் கூட்டுத் தொகை 401/20.
    அதன் முழு எண் என்ன?

    x + 1
    ---- = 401
    x --------
    20

    x + 1
    ------ = 20 + 1
    x ----- x = 20
    20

    *Ans : 20.

    4) ஒரு கடிகாரத்தில் காட்டப்படும் நேரம் மணி 15 நிமிடங்கள் என்றால், கடிகாரத்தின் இரு முட்களுக்கு இடையே உள்ள கோணம் யாது ?

    கடிகாரத்தின் மொத்த கோண
    மதிப்பு => 360 டிகிரி.
    மொத்த எண்கள் => 12
    எனவே அடுத்தடுத்த இரண்டு எண்களுக்கிடையே உள்ள காண மதிப்பு 30 டிகிரி ஆகும்.

    எனவே... நிமிடமுள் மூன்றிலும், மணிமுள் ஐந்திற்குப் பக்கத்திலும் இருக்கும்.

    3க்கும் 5க்கும் இடையேயுள்ள கோணம் = 2 × 30டிகிரி = 60டிகிரி.

    மற்றும் 5க்கும் 6க்கும் இடையே உள்ள கோணத்தின் 4−ல் 1 மடங்கு, = 30டிகிரி பை 4 = 7 1/2 டிகிரி ஆகும்.

    5 மணி 15 நிமிடம் ஆகும்போது இரு முட்களுக்கும் இடையே உள்ள கோணம் = 67 1/2டிகிரி.

    Ans. 67 1/2டிகிரி.


    5) ஒரு சதுரத்தின் பக்கம் அதன் முதலில் இருந்த மதிப்பின் பாதியாகக் குறைக்கப்படுகிறது என்றால், அதன் பரப்பளவு எத்தனை சதவீதம் குறையும்?

    சதுரத்தின் பக்கம் = 2a என்க.
    ஃ பரப்பு = 4a2 .
    அதன் பக்கம் பாதியாகக் குறைகிறது.
    அப்படியானால்... தற்போதைய சதுரத்தின் பக்கம் = a
    தற்போதுள்ள பரப்பு = a2

    ஃ சதுரத்தின் பரப்பளவு குறையும் அளவு = ஆரம்ப பரப்பு − பாதியாக குறைதிறனுள்ள பரப்பு = 4a2 - a2 = 3a2.
    சதுரத்தின் பரப்பு குறையும் சதவீதம்
    = 3a2
    --------- × 100 = 75%
    4a2
    Ans. 75%

    6) A ஒரு வேலையை 24 நாட்களிலும்,B அதே வேலையை 16 நாட்களிலும் முடிக்கக் கூடும். C ன் உதவியுடன் அவ்வேலையை அவர்கள் 8 நாட்களில் முடித்தால்... C மட்டும் தனியாக அவ்வேலையை முடிக்க ஆகும் நாட்கள் எவை ?

    A மட்டும் தனியாக முடித்தால் ஆகும் நாட்கள் = 24
    B மட்டும் தனியாக முடித்தால் ஆகும் நாட்கள் = 16
    எனவே, Aயின் திறன் = 2அலகு/1நாள்.(Bயைப் பொருத்து).
    Bயின் திறன் = 3 அலகு/1 நாள்.(Aயைப் பொருத்து)
    ஃ 24 நாட்களில் A முடிக்கும் வேலையின் அளவு (24 × 2 = 16 நாட்களில் B முடிக்கும் வேலையின் அளவு (16 × 3) = 48 அலகு.
    A, B, C மூவரும் 8 நாளில் 48 அலகு வேலையை முடிக்கின்றனர். அதில்..
    A - யின் பங்கு = 8×2 = 16 அலகு.
    B-யின் பங்கு = 8 × 3 = 24 அலகு
    C - யின் பங்கு"= 48 − (A மற்றும் B - யைப் பொருத்து)
    ஃ 48 அலகு வேலையை C முடிக்க ஆகும் நாட்கள் = &48 × 1 = 48 நாட்கள்.

    *Ans. 48 நாட்கள்.*


    7) ஒருவர் A யிலிருந்து B ஐ 2 மணி நேரத்தில் அடைகிறார். B யிலிருந்து 90 கி.மீ. பயணம் செய்து 30 கி.மீ/மணி வேகத்தில் திரும்பி மீண்டும்
    A ஐ அடைகிறார் எனில் அவரின் சராசரி வேகம் என்ன ?

    செய்முறை :

    A யிலிருந்து B க்கு உள்ள தூரம் = 90 கி.மீ.

    A யிலிருந்து B க்கு சென்ற வேகம்
    = 45 கி.மீ./மணி

    B யிலிருந்து A க்கு சென்ற வேகம்
    = 30 கி.மீ./மணி

    ஃ மொத்த தூரம் = 180 கி.மீ.
    மொத்த பயண நேரம் = 5 மணி.

    180
    ( -------- = 36கி.மீ./மணி )
    5

    அவரது சராசரி வேகம் =
    180 / 5 கி.மீ./மணி = 36 கி.மீ./மணி.

    *Ans. : 36கி.மீ./மணி.*

    """""""""""""""""""""""""""""

    ReplyDelete
  52. 8) 25 ஆடுகள் ரூ.7500க்கு வாங்கப் பட்டன. அவற்றில் 20 ஆடுகளின் சராசரி விலை ரூ.250 எனில், மீதியுள்ள ஆடுகளின் சராசரி விலை என்ன ?

    செய்முறை :

    25 ஆடுகளின் மொ.விலை =ரூ. 7500 −
    20 ஆடுகளின் விலை = ரூ. 5000
    ----------------
    மீதம் 5 ஆடுகளின் விலை = ரூ.2500
    -----------------

    அந்த 5 ஆடுகளின் சராசரி விலை =

    = 2500
    --------- = ரூ.500
    5

    *Ans. : ரூ.500.*

    """""""""""""""""""""""""

    9) ஒரு பொருளின் 6 நாட்களின் விலை ரூ.200, 210, 208,160 , 220, 250 எனில் அதன் வீச்சு யாது ?

    செய்முறை :

    ( வீச்சு என்பது... கொடுக்கப்
    பட்டிருக்கும் எண்களில், பெரிய எண்ணிலிருந்து சிறிய எண்ணைக் கழிப்பதாகும். )

    250 − 160 = 90.

    *Ans. 90.*

    """"""""""""""""""""""""""""

    10) 2, 5, 10, ? 26 என்ற தொடரில் விடுபட்டுள்ள எண் எது ?

    நன்கு கவனிக்கவும்...!

    2 + 3 = 5
    5 + 5 = 10
    10 + 7 = 17
    17 + 9 = 26 என இடைவெளியில் இரண்டு இரண்டாக எண்ணிக்கையில் கூடுகிறது.

    எனவே இதன் விடை 17.

    *Ans. 17.*

    """"""""""""""""""""""""""""""

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  53. Mon. 29, Aug. 2022 at 4. 06 pm.

    சிந்தனைக்கு சில உயிரியல் துளிகள் :

    * மனிதனின் சிறுநீரிலுள்ள அமிலத்தின் பெயர்.... *யூரிக் அமிலம்.*

    * அணிச்சைச் செயலுக்குக் காரண மானது..... *தண்டுவடம்.*

    * இரத்தம் உறைவதற்கு உதவுவது.... *வைட்டமின் "கே".*

    * முடி வளர்வதற்கு உதவும் சுரப்பி....
    *அட்ரீனல்.*

    * மூளையில் நினைவாற்றலை நிலை நிறுத்தக் காரணமான பகுதி...
    *செரிப்ரல் கார்டெக்ஸ்.*

    * கொழுப்பைச் செரிக்கும் என்சைம்.... *அமைலேஸ்.*

    * திடீர் அதிர்ச்சியின் போது உடலில் குறையும் இரத்த அழுத்தம்.... 70 மி.மீ.*

    * தண்டுவடத்திலுள்ள எலும்புகளின் எண்ணிக்கை.... *33.*

    * மலேரியாவினால் பாதிக்கப்படும் உள்ளுறுப்பு ...... *மண்ணீரல்.*

    * குறை நோய்கள் உண்டாகக் காரணம் .... *ஊட்டச்சத்து குறைபாடு.*

    * கருப்புத் தண்ணீர் காய்ச்சல் என்று அழைக்கப்படும் நோய்... *மலேரியா.*

    * மனித மூளை எத்தனை சதவிகிதம் நீரைக் கொண்டுள்ளது.... *80முதல் 85 சதவீதம் வரை.*

    * அதிகமாகச் சாப்பிட்டால் உடல் பெருத்துப் போகும் என்ற மனோவியாதி..... *அனரெக்ஸியா நர்வாஸோ.*

    * தண்ணீரைக் கண்டால் பயப்படும் வியாதி... *ஹைட்ரோஃபோபியா.*

    * இயக்குத் தசைகளை கட்டுப் படுத்துவது.... *சிறுமூளை.*

    * மனித உடலில் அதிக வலிமை கொண்ட உறுப்பு .... *நாக்கு.*

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  54. சிந்தனைக்கு சில இயல்புத் துளிகள் :

    பாடம் − 2.

    * தமிழ் நாட்டில் அணுமின் நிலையம் அமைந்துள்ள இடம் .... *கல்பாக்கம்.*

    * தலை சிறந்த இந்திய அணு விஞ்ஞானி .... *டாக்டர் ஹோமி பாபா.*

    * அமெரிக்க அணு நீர்மூழ்கிக் கப்பல் விடப்பட்ட ஆண்டு.... *1954.*

    * பையானைக் கண்டுபிடித்த ஆண்டு...*1935. (ஹைடகி யுகாவா.)*

    * அணுகுண்டு ஆய்வுகளை சோவியத் ஒன்றியம் செய்தது... *1949.*

    * சோவியத் ஒன்றியத்தில் நீர்வளிக் குண்டு உருவாக உதவியவர்....
    *ஆண்ட்ரி சகரோவ்.*

    * ஹைடிரஜன் குண்டு வெடிக்கப்பட்ட ஆண்டு... *1952−ல்.(நவம்பரில் மார்ஷல் தீவில் அமெரிக்கா வெடித்தது.)*

    * டால்டன் அணுக்கொள்கை வெளியிடப்பட்ட ஆண்டு.... *1808.*

    * கூட்டு அணுக்கருக் கொள்கையை "போர்" வெளியிட்ட ஆண்டு.... *1936.*

    * முதல் அணு விபத்து ஏற்பட்ட ஆண்டு..... *1952 (கனடாவில் ஏற்பட்டது.)*

    * முதல் அணு உலையை உருவாக்கித் தொடர் வினையை நிகழச் செய்தவர்....
    *சிகாகோ−வில் பெர்மி என்பவர் 1942.*

    * 4−ஆம் சிப்ப எண்ணை அறிமுகப் படுத்தியவர்.... *சாமர் பீல்டு. 1920.*

    * சிப்ப நிலை என்றால்.... *சிப்ப எண்களால் விளக்கமுறும், சிப்பத் தொகுதியின் நிலை.*

    * சிப்பக் கொள்கையை வகுத்த ஆண்டு..... *1900. மாக்ஸ் பிளாங்.*

    * அணு அளவைத் தோராயமாகக் கண்டறிந்த ஆண்டு....*1908−1909. (பெரின்.)*

    * X- கதிரைக் கண்டறிந்தவர் ....
    *இராண்ட்ஜன்(1895.)*

    * தொலைநோக்கி அமைக்கும் முயற்சி யைத் தொடங்கியவர்..... *ஹேன்ஸ் லிபர்சே.(1608.)*

    * பிரதிபலிக்கும் தொலைநோக்கி யைப் புனைந்தவர் ..... *நியூட்டன்.(1668.)*

    * நுண்ணோக்கியை செப்பப்படுத்திய
    ஆண்டு.... *1590. டச்சுக்காரராகிய சக்காரியாஸ்.)*

    * புல அயனி நுண்ணோக்கி புனையப்பட்ட ஆண்டு..... *1951. (தனி அணுக்களை படம் பிடிக்க சிறந்தது.)*

    * இந்திய அறிவியலின் தந்தை....
    *சர்.சி.வி. இராமன்.*

    Jansikannan60@gmil.com

    ReplyDelete
  55. Tue. 30, Aug. 2022 at 4.30 am.

    அமிலத் துளிகள் −6.

    * எரிசோடா என்பது.... *சோடியம் ஹைட்ராக்ஸைடு.*

    * நீற்றுச் சுண்ணாம்பு எனப்படுவது....
    *கால்சியம் ஹைட்ராக்ஸைடு.*

    * முகரும் உப்பு என்பதன் வேதிப் பெயர்.... *அம்மோனியம் கார்பனேட். அதாவது... ( NH4 )Co3.*

    * "நீரில் கரையும் காரங்கள்.... *ஆலிகலிகள்.*

    * வாயு எண்ணெய் என்பது.... *டீசல், எண்ணெய்.*

    * பழங்களை கனிய வைக்கப் பயன் படுவது.... *எத்திலின்.*

    * அக்குவா போர்டிஸ் என்றழைக்கப் படுவது..... *நைட்ரிக் அமிலம்.*

    * ஹைட்ரோ குளோரிக் அமிலத்தின் பொதுப் பெயர்..... *மியூரியாட்டிக் அமிலம்.*

    * ஹைட்ரோ குளோரிக் அமிலம்
    தயாரிக்கப் பயன்படும் உப்பு.....
    *சோடியம் குளோரைடு.*

    * மிக எளிமையான தனிமம்.... *ஹைட்ரஜன்.*

    * அண்டத்தில் விரவியிருக்கும் சாதாரண தனிமம்... *ஹைட்ரஜன்.*

    * தோல் புற்று நோயை குணப்படுத்த உதவுவது.... *பாஸ்பரஸ்−32.*

    * செயற்கைத் தோல் தயாரிக்கப் பயன் படுவது.... *அசிட்டோன்.*

    * வைட்டமின் பி1−ஐ வெளிப்படுத்திய வர்.... *மைனட் மற்றும் மர்பி.*

    * பார்மலின் என்பது... *மெத்தனேல் நீர்க்கரைசல்.*

    * கதிரியக்க மாற்றத்தைக் கண்டறிந்த அறிஞர்..... *சாடி.*

    * சாதாரண உப்பில் உள்ள தனிமங்கள்..... *சோடியம், குளோரின்.*

    * நவீன ஆவர்த்தன விதியைக் கூறியவர்...... *மோஸ்லே. 1912.*

    * எண்ம விதியைக் கண்டு பிடித்தவர்... *நியூலாண்ட்.*

    * இயற்கை வாயுவில் முக்கியப் பொருளாக பயன்படுவது... *மீத்தேன்.*

    * சோடியம் கார்பனேட்டின் பயன்....
    *கடின நீரை மென்னீறாக மாற்றும்.*

    * பாரீஸ் சாந்து என்பதன் வேதிப் பெயர்.... *நிரேற்றப்பட்ட கால்சியம் சல்பேட். அதாவது....CaSo4 2H2O.*

    * முடிச்சாயம் தயாரிக்கப் பயன்படும் மருந்து.... *சில்வர் நைட்ரேட்.*

    * காளான் கொல்லியாக பயன்படும் உப்பு...... *காப்பர் சல்பேட்.*

    * மலச்சிக்கலை நீக்கும் பொருளாக பயன்படுவது..... *எப்சம் உப்பு.*

    * தீயணைக்கும் கருவிகளில் பயன்படும் வாயு..... *சோடியம்−பை−கார்பனேட்.*

    * கதிரியக்கத் தன்மை கொண்ட அபூர்வ தனிமம்.... *அஸிட்டடின்.*

    * கருப்பு நிறம் கொண்ட பாகுநிலை மிகுந்த திரவம்.... *பெட்ரோலியம்.*

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  56. Tue. 30, Sug. 2022 at 6.40 am

    31) * எலுமிச்சை :

    வேறு பெயர்கள் :

    தேசிப் பழம், அமிர்த பலை, சம்பீரம், இராஜ கனி.
    தாவரவியல் பெயர் : Citrus Limon. (Old Name : Citrus Acida)

    32) * எட்டி :

    வேறு பெயர்கள் : விடமுட்டி, காஞ்சிரம்.
    தாவரவியல் பெயர் : Strychnos Nux-Vomica.

    33) * ஏலக்காய் :

    வேறு பெயர்கள் : ஆஞ்சி, துடிகோரங்கம்.
    தாவரவியல் பெயர் : Eletaria Cardamomum.

    34) * ஓமம் :

    வேறு பெயர்கள் :

    உக்கர கந்தம், பிரம தர்ப்பை, அக்கினி வர்த்தனம், தீப்பியகம், அசமதா.
    தாவரவியல் பெயர் : Carum Copticum. (Old Name : Carum Roxburghianum)

    35) * ஓமவள்ளி :

    வேறு பெயர்கள் கிடையாது.
    தாவரவியல் பெயர் : Coleus Anomaticus.

    36) * ஓரிதழ் தாமரை :

    வேறு பெயர்கள் : இரத்தின புருஷ், சூரிய காந்தி.
    தாவரவியல் பெயர் : Lonidium -
    Saffrutiocosum.

    37) * கடுகு :

    வேறு பெயர்கள் : ஐயவி.
    தாவரவியல் பெயர் : Brassica Juncea (Old Name : Brassica Nigra)

    38) * கட்டுக் கொடி :

    வேறு பெயர்கள் : தண்ணீரைக் கட்டியாக்கும் மூலிகை.
    தாவரவியல் பெயர் : Cocculus Hirsutus (Old Name : Cocculus Villosus)

    39) * கண்டங்கத்திரி :

    வேறு பெயர்கள் :

    கப நாசினி, சுவாச காசக்கினி, முள் கொடிச்சி, சிங்கினி, கன்னங்கத்திரி,பொன்னிறத்தி, பாப்பார முள்ளி, கறி முள்ளி.
    தாவரவியல் பெயர் : Solanum Surattense. ( Old Name : Solanum Xanthocarpum.

    40) கடுக்காய் :

    வேறு பெயர்கள் :

    திவ்யா, ஜெயா, பூதனா, அமுதம், சிவா, ப்ராணதா, வரிக்காய், காயச்சித்தி, அந்தன், வனதுர்க்கை, மேகம், கடு, பத்தியம், வாத நாசினி, ஜீவப்பிரியா, அம்மை, அமரிதம்.
    தாவரவியல் பெயர் : Terminalia Chebula.

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  57. Tue. 30, Aug. 2022 at 3.40 pm.

    இயல்பியல் துளிகள் :

    படிவம் − 3

    * அணு குண்டு என்றால் ......

    இது பேரழிவை உண்டாக்கும்...ஓர் அணுக்கருப் போர்க்கருவி. இது அணுப்பிளவு அடிப்படையில் செய்யப் பட்டது.

    * மெகாடன் குண்டு என்றால் .....

    போர்க்கருவி. (வெடி திறன் 4 × 10 (15) (10−ன் மூலையில் 15 வர வேண்டும்.) ஜூல்களுக்குச் சமம்.

    * போர் அணு என்றால் .....

    தம் கொள்கையில் "போர்" என்பார் மும்மொழிந்ததற்கேற்ற அமைப்புள்ள அணு மாதிரி... இது போர் சுற்று வழியும், ஆரத்தையுங் கொண்டது.

    * அணுப் பிளவு என்பது.....

    அணுக்கரு வினையில், கன அணுக்கரு, இரு சம துண்டுகளாகச் சிதைந்து, அளப்பரிய ஆற்றலை அளிப்பது.

    * கவர் துகள் என்பது .....

    கருதுகோள் துகளில் நான்காவது.(ஷெல்டன் கிளாஷோ, ஜேம்ஸ் டி. பஜோர்கன் ஆகியோரால் 1964−ல் கண்டுபிடிக்கப்பட்டது.

    * முதல் அணு ஆற்றல் நிலையம் நிறுவப்பட்ட இடம்......
    இந்தியாவில் தாராபூர். (1963−ல்).

    * போசான் என்னும் துகள்......

    இந்திய அணு அறிவியலார் எஸ்.என்.போஸ் என்பவர் பெயரால் அமைந்தது.

    * துகள் என்றால்.......

    சிறியதாக உள்ள அடிப்படைப் பகுதி. உ.ம்: முன்னணு, அல்லணு, மின்னணு.

    * சேயணு என்றால் ......
    கதிரியக்கத்தால் ஏற்படும் கருவைடு, பிரிகையால் உண்டாகும் அயனி.

    * அணுக் கரு என்றால்......

    அணுவின் மையப் பகுதி. முன்னணுவும், அல்லணுவும் கொண்டது. அணு ஆற்றலை அளிப்பது.

    * அணு எண் என்றால் ......

    ஒரு தனிமத்தின் அல்லணுக்களைச் சுற்றிச் சுழலும், மின்அணுக்களின் எண்ணிக்கை.

    * அணு எடை என்றால்.....

    ஒரு தனிமத்தின் ஓர் அணுவின் எடைக்கும், 1/2 பங்கு கரி 12 ஓரிமத்தின் எடைக்குமுள்ள வீதமாகும்.

    * அலகு என்றால்........

    ஒப்பீட்டு அளவு, மதிப்பு அலகு, அதே அளவுகளின் மற்ற மதிப்புகளைத் தெரிவிக்கப் பயன்படுவது.
    உ.ம் : வெப்ப அலகு கலோரி.

    * தனி என்றால்........

    வரம்புகள், நிலைமைகள், தடைகள் முதலியவற்றிலிருந்து தனித்திருத்தல்.

    * பொருள் என்றால்......

    இடத்தை அடைத்துக் கொள்வதும், நிறை உள்ளதுமான பருப்பொருள். கண்ணால் பார்க்கவும் கூடியது.
    உ.ம். உலோகம்.

    * அணு என்றால் .......

    ஒரு தனிமத்தின் மிகச் சிறிய பகுதி. இதை எளிதாகப் பிரிக்க இயலாது. வேதி வினைக்கு உட்படுவது.

    * முதல் அணு ஆற்றல் நிலையத்தைத் தொடர்ந்து வெடிக்கப்பட்ட மற்ற அணுக்கருவி அமைப்புகள்....

    1988− மே−யில் பொக்ரானில் 5−அணுக்கருவி அமைப்புகள் வெடிக்கப்பட்டன.

    * அகடு என்றால்......
    ஓர் ஒலி அலையிலுள்ள பள்ளம்.

    * முகடு என்றால்......
    ஓர் ஒலி அலையிலுள்ள மேடு.

    * கேள்வி மானி என்றால்....
    செவியுணர்வுகளை அளக்கும் கருவி.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  58. Thu. 01. Seb. 2022 at 8.27 am.

    நாடிப் பயிற்சி : 63.

    இன்றைய பாடமாக... அழலின் பிரிவுகள் பார்க்கலாம்.

    அழலின் பிரிவுகள் :

    அழல் தன் இடம், தொழில் வேற்றுமையின் காரணமாக ஐந்து வகைப்படும்.

    அவை ....!

    1) பாசகம் அதாவது அனற் பித்தம்
    2) இரஞ்சகம்
    3) சாதகம்
    4) ஆலோசகம்
    5) பிரகாசம் என்பன.

    * பாசகம் என்பது... தீயின் பண்பு டையது. விரைப்பைக்கும், பக்குவாச யத்திற்கும் இடையில் இருந்து, தீயின் குணத்தை மிகுதியாகப் பெற்று, நீர் வடிவமுள்ள பொருட்களை வறளச் செய்து, உண்ட உணவுப் பொருட்களை செரிக்கும்படிச் செய்யும்.

    * இரஞ்சகம் (இரஞ்சகப் பித்தம்) என்பது... செந்நீரை மிகுதிப்படுத்தும் பண்புடையது. இரைக் குடலிலிருந்து கொண்டு, உணவில் இருந்து பிரிந்து உண்டான சாற்றுக்குச் செந்நிறத்தைத் தருகிறது.

    * சாதகம் அதாவது சாதகப் பித்தம் என்பது.. நிறைவேற்றும் பண்புடையது.
    தமரகத்திலிருந்து தொழிலைச் செய்து முடிக்கும்.

    * ஆலோசகம் அல்லது ஆலோசகப் பித்தம் என்பது... கண்களுக்குப் பொருட்களைத் தெரிவிக்கும் பண்பு
    உடையது. கண்களில் வாழ்ந்து கொண்டு எல்லாப் பொருட்களின், வடிவத்தை அறிதலாகிய காரியத்தைச் செய்யும்.

    * பிரகாசம் அல்லது பிரகாச பித்தம் என்பது.... தோலுக்கு ஒளியைத் தரும் பண்புடையது. தோலில் வாழ்ந்து கொண்டு, தோலுக்கு ஒளியைக் கொடுத்து அதை ஒளிரச் செய்யும்.

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  59. Fri. 2, Sep. 2022 at 8.10 am.

    நாடிப் பயிற்சி : 64

    இன்றை பாடமாக... ஐயப் பிரிவுகள் பார்க்கலாம் .....!

    ஐயத்தின் பிரிவுகள் :

    ஐயம் ஐந்து வகைப்படும்.

    * அவலம்பகம்
    * கிலேதம்
    * போதகம்
    * தற்பகம்
    * சந்திகம் என்பன.

    * அவலம்பகம் :

    இது காற்றுப்பையாகிய நுரையீரலில் இருந்து கொண்டு, தன் இயற்கை வன்மையால், திரிகஸ்தானத்திற்கும், உணவின் சத்தால் தமரகத்திற்கூம் அடிப்படையாக இருந்து, தன் இயற்கை நெகிழ்ச்சித் தன்மையைக் கொண்டு, மற்ற நான்கு ஐயங்கட்கு பற்றுக் கோடாக இருப்பதால்... அவலம்பகம் எனப் பெயர்.

    * கிலேதம் :

    இது இரைப்பையில் இருந்து கொண்டு, உண்ணப்பட்ட உணவுப் பொருளை, நீர் முதலியவைகளை ஈரப் படுத்தி மெத்தனச் செய்யும் தொழிலை
    புரியும்.

    * போதகம் :

    இது சுவைப் பொருளாகிய நாவினின்று, உண்ணுகிற சுவைகளை அறிவிக்கும்.

    * தற்பகம் :

    இது தலையினின்று கண்களுக்கு,குளிர்ச்சியைத் தரும்.

    * சந்திகம் :

    இது கீல்களில்(பூட்டுகளில்) நின்று இயற்கையாய் எல்லாக் கீல்களையும் ஒன்றொடொன்று பொருத்தித் தளரச் செய்யும்.

    ஐய வடிவத் தன்மை :

    * தண்மை
    * நெய்ப்பு
    * மந்தம்
    * வழுவழுப்பு
    * மென்மை
    * திண்மை

    இவை ஐயத்தின் வடிவங்கள்.

    மீண்டும் அடுத்த பதிவில்....

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  60. Fri. 2, sep. 2022 at 11.46 pm.

    சிந்தனைக்கு சில உயிரியல் துளிகள்.

    பாடம் − 5

    * நாக்கின் இனிப்புச் சுவை அறியும் நரம்புகள்..... *நாக்கின் நுனி.*

    * கண்ணில் இருந்து மூளைக்குச் செல் லும் நரம்பின் பெயர் .. *பார்வை நரம்பு.*

    * மனித உடலின் தலைமைச் சுரப்பி..... *பிட்யூட்டரி.*

    * மனித இரத்தத்தில் உள்ள பிளாஸ் மாவின் சதவிகிதம் ..... *65%.*

    * இயல்பான மனிதனின் இதயம், ஒரு நிமிடத்திற்கு.... *70 முறை* துடிக்கிறது.

    * சாதாரணமாக மனித உடலில் இருக்கும் இரத்தத்தின் அளவு....
    *5 முதல் 6 லிட்டர்.*

    * இரத்த வெள்ளை அணுக்களின் முதல் பணி ..... *நோய்க்கிருமிகளை எதிர்த்து போராடுதல்.*

    * மனித மூளையில் நினைவாற்றல் கொண்ட பகுதி.... *கார்டெக்ஸ்.*

    * மனித உடலில் வலிமையான தசைப் பகுதி..... *புட்டம்.*

    * கண்ணீர் வர வைக்கும் சுரப்பி.....
    *லாச்ரிமல்.*

    * பாலில் இல்லாத முக்கியமான சத்து.... *இரும்புச் சத்து.*

    * மனிதன் உறங்கும் போது குறையும் எடை.... *11அவுன்ஸ்.*

    * நகத்தால் கீறினால் தீப்பற்றிக் கொள்ளும் உலோகம்..... *ஸெரியம்.*

    * எலும்புச் சாம்பலில் இருந்து பிரித் தெடுக்கப்படுவது.... *பாஸ்பரஸ்.*

    * தங்க இழை என அழைக்கப்படுவது... *சணல்.*

    * இந்தியாவில் முதன் முதலில் இருதயம் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்....
    *டாக்டர் .கே.எம். செரியன்.*

    * நுரையீரலைத் தாக்கும் நோய்.... *நிமோனியா.*

    * மனித உடலில் உள்ள மிகப் பெரிய சுரப்பி.... *கல்லீரல்.*

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  61. Sat. 3, Sep. 2022 t 3.11 pm.

    அமிலத்துளிகள் − 6

    * அமிலங்களின் சுவை..... *புளிப்பு.*

    * காரங்களின் சுவை..... *கசப்பு.*

    * தேனில் உள்ள அமுதம் .... *டானிக் அமிலம்.*

    * காபியின் PH மதிப்பு... *4.5 − 5.5.*

    * வினிகரின் PH மதிப்பு.... 2.4 − 3.4.*

    * இரைப்பை நீரின் PH மதிப்பு....
    *1.3 − 3.00.*

    * பாலின் P.H மதிப்பு.... *6.5.*

    * கடின நீரை மென்னிராக்கப் பயன் படுவது..."*சோடியம் கார்பனேட்.*

    * சமையல் சோடா, ரொட்டி சோடா, பீங்கான் தயாரிக்கப் பயன்படுவது....
    *சோடியம் − பை − கார்பனேட்.*

    * ஜிப்சத்தை முதன் முதலில் பயன் படுத்தியவர்.... *எகிப்தியர்கள்.*

    * சிமெண்ட், இறுகும் தன்மையை தாமதப்படுத்துவது... *ஜிப்ஸம்.*

    * மருத்துவ மனையில், எலும்பு முறி வைச் சரிசெய்யவும், பல் மருத்துவத் திலும் பயன்படுவது... *பாரிஸ் சாந்து.*

    * குண்டு துளைக்காத கண்ணாடி தயாரிப்பில் பயன்படுவது... *பாதுகாப்பு கண்ணாடி.*

    * மனிதனின் உடல் உள்ளுறுப்புக் களைப் பரிசோதிக்கப் பயன்படுவது...
    *கண்ணாடி இழைகள்.*

    * மாங்கனீசு − டை − ஆக்ஸைடுவின் நிறம்.... *ஊதா.*

    * டின்னின் தாதுப் பெயர்.... *டின்ஸ்டோன். அதாவது, உல்ப்ரோமைட்.*

    * உலோகங்களின் ராஜா என்று அழைக்கப்படுவது... *இரும்பு.*

    * அதிக அளவு இரும்புத் தேவைக்கு தேவையானது.... *கார்பன் மோனாக்ஸைடு.*

    * பூமியின் மேற்பரப்பில் அதிக அளவில் கிடைக்கும் உலோகம்....
    *அலுமினியம்.*

    * அலுமினியத்தின் அரிமானத்தை பாதுகாப்பது.... அலுமினியம் ஆக்ஸைடு.*

    * 22 காரட் தங்கத்தில் உள்ள தங்கம்... *91.6%.*

    * எளிதில் அரிமானம் அடையாத உலோகங்கள்.... *வெள்ளி, தங்கம், பிளாட்டினம்.*

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  62. அய்யா..வெ.சாமி அவர்களுக்கு நமஸ்காரம். மேற்கூறிய அமிலத் துளிகள்..−7 என மாற்றியமைத்
    துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  63. Tue. 6, Sep. 2022 at 2.36 pm.

    சித்தர்கள் :

    சித்தம் என்றால்.... புத்தி, மனம்.

    சித்து என்றால் புத்தியால் ஆகிற காரியம்.

    சித்தர் என்றால்... புத்தியைக் கட்டுப்படுத்தியவர்...!

    இவர்கள் தான் ஆன்மீகப் புரட்சியாளர்கள்.

    சித்தர்கள்.... எந்நாட்டிலும், எந்தக் காலத்திலும் தோன்றுவர்.

    இச்சித்தர்களின் காலத்தை மிகச் சரியாக வரையறுக்கவில்லை.

    சித்தர்கள் கடவுள் நிலை பெற்றவர்கள். அதாவது கடவுளுக்குச் சமமாய் போற்றி வணங்கப்பட்டனர்.

    இச்சித்தர்கள் வழிபாட்டை முதலில் கொண்டு வந்தது... சமணர்கள். அதன்பின்தான் ஏனையோர்.

    சித்தர்கள் பலரும்... ஶ்ரீ பர்வதத் தொடர்பு கொண்டிருந்தனர்.

    அதாவது... பெளத்த மதத்தின் ஒரு பிரிவான மந்திராயனத்தின் பிறப்பிடமான ஆந்திராவிலுள்ள ஶ்ரீ பர்வதம் ... இப் பர்வதத்தோடு தான் சித்தர்கள் பலரும் தொடர்பு கொண்டிருந் தனர்.

    சித்தர்கள் பல்வேறு குலத்தில் பிறந்தவர்களாயினும்..... "சித்தர்" என்ற தனியொரு மரபு இவர்களுக்கு இருந்தது.

    அச்சித்தர்கள்..... 18 பேர்.

    1) கும்பமுனி; 2) நந்திமுனி;
    3) கோரக்கர்; 4) புலிப்பாணி; 5) புகண்ட ரிஷி; 6) திருமூலர்; 7) தேரையர்; 8) யூகி முனி; 9) மச்சமுனி; 10 புண்ணாக்கீசர்; 11) இடைக்காடர்; 12) பூனைக் கண்ணர்; 13) சிவவாக்கியர் 14) சண்டிக்கேசர்;
    15) உரோம ருஷி 16) சட்ட நாதர்;
    17) காலாங்கி; 18) போகர்

    என்று... கருவூரார் எழுதிய "அட்டமா சித்து" என்ற நூல் நமக்கு உரைக்கிறது.

    இவர்களை.....

    1) அகத்தியர்; 2) போகர்; 3) நந்தீசர்
    4) புண்ணாக்கீசர்; 5) கருவூரார்;
    6) சுந்தரானந்தர்; 7) ஆனந்தர்;
    8) கொங்கணர்; 9) பிரம்ம முனி;
    10) உரோம முனி; 11) வாச முனி;
    12) அமல முனி; 13) கமல முனி
    14) கோரக்கர்; 15) சட்டை முனி
    16) மச்ச முனி; 17) இடைக்காடர்;
    18) பிரம முனி

    என்று "நிஜானந்த போதம்" நமக்கு அடையாளம் காட்டுகிறது.

    பின்னும் சித்தர்களை....

    1) அகத்தியர், 2) போகல், 3) கோரக்கர்,
    4) கயிலாச நாதர், 5) சட்டை முனி,
    6) திருமூலர், 7) நந்தி, 8) கூன் கண்ணன், 9) கொங்கணர், 10) மச்சமுனி,
    11) வாசமுனி, 12) கூர்ம முனி, 13) கமல முனி, 14) இடைக்காடர், 15) உரோமருஷி, 16) புண்ணாக்கீசர், 17) சுந்தரானந்தர், 18) பிரம்ம முனி

    என்கிறது... "அபிதான சிந்தாமணி.*

    தமிழ் நாட்டைப் போலவே... வடநாட்டிலும் சித்தர்கள் இருந்திருக்கிறார்கள்.

    அவர்கள்... நவநாத சித்தர் என்றழைக்கப் படுகிறார்கள்.

    அவர்கள்.....

    1) சத்திய நாதர்
    2) சதோக நாதர்
    3) ஆதி நாதர்
    4) வெகுளி நாதர்
    5) மதங்க நாதர்
    6) மச்சேந்திர நாதர்
    7) கடேந்திர நாதர்
    8) அநாதி நாதற்
    9) கோரக்க நாதர்

    ஆகியோர்...

    பெளத்த மத சித்தர்கள்... 6 − 12− ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்திருக்கக் கூடும் என்று தெரிகிறது.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  64. Tue. 6, Sep. 2022 at 9.5 pm.

    நாடிப் பயிற்சி :

    பாடம் − 65.

    இன்றைய பாடமாக " முக்குற்றம்" பற்றிக் காணலாம்....!

    முக்குற்றம் :

    முக்குற்றம் இதற்கு வேறு பெயர்.... *திரிதோடம் அல்லது சன்னி வாதம்* எனவும் கூறலாம்.

    முக்குற்றம் என்பது .... வளி, அழல், ஐயம் இம்மூன்றும் தத்தம் அளவில் மிகுந்தேனும், அல்லது குறைந்தேனும் ஒன்று கூடி நிற்பது... முக்குற்றம் என்பதாகும்.

    முக்குற்றங்கள் மேலும் உடற்தாதுக்கள் ஏழு − இவற்றின் சேர்க்கையால் உண்டாகும் வேற்றுமை....

    வளி, அழல், ஐயம்...இவற்றுள் ஒன்று அல்லது பல தன்னிலை, தன்னிலை விருத்தி, வேற்று நிலைவிறுத்தி என்னும் இவற்றை அடைவதால்... இவை மிகுந்தேனும் அல்லது குறைந்தேனும், நாடி நடை ஏற்படும்போது... ஏழு உடற் தாதுக்களில்... எண்ணற்ற வேற்றுமை கள் உண்டாகும்.

    இவ்வேழு உடற்தாதுக்களிலுண்டாகும் வேற்றுமைகளை அறிந்தால்... முக்குற்றங்களின் வேற்றுமைகளையும் அறிய முடியும்.

    தன்னிலை என்பது ....

    முக்குற்றங்களும் தத்தம் இடங்களில் இயற்கையாக நிலைப்படுவதாகும்.

    தன்னிலை விருத்தி அல்லது தன்னிலை வளர்ச்சி என்பது......

    தத்தம் இடங்களில் வளர்ச்சியடைவ தாகும்.

    வேற்றுநிலை விருத்தி அல்லது வே.நிலை வளர்ச்சி என்பது....

    வளர்ச்சி அடைந்த முக்குற்றங்கள், தம்தம் இடம் விட்டு மீறி, வேற்று இடங்களில் பரவுமாயின்... அது வேற்று நிலை விருத்தி ஆகும்.

    மீண்டும் அடுத்த பதிவில்...

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  65. Tue. 6, Sep. 2022 at 10.12 pm.

    Thirup pullirukku veloor :

    Behold ! It is Civan, our Lord at Thirup- pullirukku - veloor.

    The devotees who are very sincere in Saiva culture and follow its principles and worship our Lord at Thirup -pullirukku - veloor are protected always by our Lord.

    He graces them and prevents sufferings from reaching His devotees. The divine virtues attached to Saiva culture were explained by our Lord to the four sages
    sitting under the stone banyan tree.

    Raavanan... the king of Sri Lanka was dependent on his own mightiness rather than virtues. He carried away Sita in his flying chariot from the forest to Sri Lanka.

    On his way the eagle king Jadaayusaw him and inflicted several injuries on him.

    This eagle king worshipped our Lord Civan in Thirup- pullirukku - veloor where He was manifested Himself.

    *-*-*-*-*-*-*-*-*-*

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  66. Wed. 7, Sep. 2022 at 6.49 am.

    சைவ சித்தாந்தம் ....!

    * தீட்சை என்ற சொல்லின் பொருள்.... ஞானத்தைக் கொடுத்துப் பாசத்தைத் தணித்தல்.

    * தீட்சையின் வகைகள்..... சமயம், விசேடம், நிர்வாணம் என்னும் மூவகை.மேலும் சட்சு, பரிசம், மானசம்..என மூவகை.

    * சைவ சமயி ஆவதற்கு தரும் தீட்சை..... சமய தீட்சை.

    ;* சமய தீட்சை பெற்றவர்களுக்கு உரிய உரிமைகள்..... மந்திரங்களை உச்சரித்தல், சரியைத் தொண்டு செய்தல்.

    * சிவபூஜை செய்வதற்கு அதிகாரம் அளிக்கும் தீட்சை.... விசேட தீட்சை.

    * விசேட தீட்சை பெற்றவர்களுக்கு உரிய உரிமைகள்..... மந்திரம் உச்சரித்தல், சிவபூஜை செய்தல், யோகம் செய்தல்.

    * பாசங்களை அறவே நீக்கிச் சிவனடியை அடைவதற்கு அளிக்கும் தீட்சை...... நிர்வாண தீட்சை

    * குருநாதர் தனது கண் பார்வையால் அளிக்கும் தீட்சை.... சட்சு தீட்சை. (சட்சு − கண்).

    * சட்சு தீட்சைக்குக் காட்டும் உவமை.... மீன் தன் முட்டையை நோக்குதல்.

    குருநாதர் தனது கையின் தொடுகை யால் அளிக்கும் தீட்சை .... பரிச தீட்சை. (பரிசம்− தொடுதல்).

    * பரிச தீட்சைக்குக் காட்டும் உவமை.... கோழி தன் முட்டையை அடைகாத்தல்.

    * குருநாதர் தனது மனத்தால் நினைத்து செய்யும் தீட்சை.... மானத தீட்சை.

    * மானத தீட்சைக்குக் காட்டும் உவமை.... ஆமை மண்ணில் புதைத்த தன் முட்டையை நினைத்தல்.

    * இறைவனை வழிபடுவதற்கு உரிய இரண்டு இடங்கள்.... தாபரம், சங்கமம்.

    * தாபரம் என்பது.....இலிங்கத் திருமேனி.

    * சங்கமம் என்பது..... அடியார் கூட்டம்.

    * இலிங்க வழிபாடாவது.... ஆன்மார்த்த லிங்கம், ஆலயத்தில் உள்ள பரார்த்த லிங்கம் என்பவற்றை வழிபடுவது.

    * ஆலயத்தின் கோபுரம்..... தூல லிங்கம்.

    * கருவறையில் உள்ள லிங்கம்..... சூக்கும லிங்கம்.

    * ஆலயத்தில் கொடியேற்றுவது.... உலக நன்மைக்காக.

    * கொடியேற்றத்தின் பயன்..... ஆன்மாக்களுக்கு இம்மையில் சுகபோகமும், மறுமையின் பரபோகமும் கிடைப்பதற்காக.

    * கொடி மரம் நினைவூட்டுவது...... பாதாளத்தை ஊடுருவிய திருவடியை யும், வானத்தை ஊடுருவிய திருமுடியை யும் உடைய சிவனை.

    * கொடி மரத்தைச் சுற்றிச் சுற்றி மேலேறும் கொடிச்சீலை குறிப்பது.... சிவனை விட்டுப் பிரியாத திருவருளை.

    * கொடிச் சீலையின் மேல் பாகத்தில் வரைந்த இடபம் குறிப்பது...... ஆன்மாவை.

    * அடியார்களின் திருவேடம்..... திருநீறும், கண்மணியும். ( கண்மணி என்பது... கண்டிகை. அதாவது உருத்திராக்கம்.)

    * அடியாரையும், வேடங்களையும எவ்வாறு கருத வேண்டும் ...... சிவனாகவே.

    * இறைவன் ஆன்மாக்களுக்கு மானுட சரீரத்தைத் தந்தது.... மனம், வாக்கு, காயங்களால், சிவனை வழிபடுவதற் காக....!

    மீண்டும் அடுத்த பதிவில்.....

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  67. Wed. 7, Sep. 2022 at 3.2 pm.

    சிந்தனைக்கு சில உயிரியல்
    துளிகள்......!

    பாடம் − 6


    * இடது நுரையீரலில் உள்ள மடிப்பு
    கள்.... *2.*

    * வலது நுரையீரலில் உள்ள மடிப்பு கள்.... *3.*

    * மனிதனின் முக்கியமான சுவாச உறுப்பு..... *ஓரிணை நுரையீரல்கள்.*

    * நுரையீரல்களின் வடிவம்..... *கூம்பு வடிவம்.*

    * நுரையீரல்கள் வைக்கப்பட்டுள்ள இடம்........ *மார்பகக் கூட்டினுள்.*

    * நுரையீரல்கள் சூழப்பட்டுள்ள உறை..*புளூரா.* அதாவது இரட்டைச் சுவரால் ஆன உறை.

    * நுரையீரல்கள் நிமிடத்திற்கு சுருங்கி விரியும் அளவு..... *12 முதல் 15 வரை.*

    * உடலின் பாதுகாப்பு போர் வீரர்கள்....
    *வெள்ளை அணுக்கள்.*

    * வெள்ளை அணுக்களின் வாழ்நாள்.... *4 வாரங்கள்.*

    * வெள்ளை அணுக்கள் உற்பத்தியா கும் இடம்..... *எலும்புகளின் மஞ்சள் மஜ்ஜையிலும், நிணநீர் முடிச்சுகளி லும்.*

    .* ஒரு கன மி. மீட்டர் இரத்தத்தில் உள்ள இரத்தத்தட்டுகள்.... *2,00,000 முதல் 4,00,000 வரை.*

    * தொண்டையின் கீழ்ப் பகுதியில் காணப்படும் குருத்தெலும்பு வளையத் தின் பெயர்..... *கரினா.*

    * இரத்தம் உரைதலில் பங்கேற்பவை...
    *இரத்தத் தட்டுகள்.*

    * உடலின் வெப்ப நிலையைச் சீராக வைத்துக் கொள்ள உதவுவது.... *இரத்தம்.*

    * இதயத்திலிருந்து புறப்படும் இரத்தக் குழாய்களின் பெயர்..... *தமனிகள்.*

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  68. Wed. 7, Sep. 2022 at 3.54 pm.

    இயற்பியல் துளிகள்....!

    படிவம் − 4

    * இயற்பியல் என்றால் ..... *பருப் பொருள் இயல்பு மற்றும் ஆற்றல் பற்றி ஆராயும் துறை.... இயற்பியல் ஆகும்.*

    * இயற்பியலின் இரு அரும்பெரும் அறிஞர்கள்.... *நியூட்டன், ஐன்ஸ்டீன் (நோபல் பரிசு : 1921).*

    * இயற்பியலில் புகழ்பெற்ற நான்கு இந்திய விஞ்ஞானிகள்....
    (*சா.சி.வி. இராமன் (நோபல் பரிசு 1921).*
    *சந்திரசேகர் (நோபல் பரிசு 1983).*
    *எஸ்.என்.போஸ்.*
    *ஹோமி பாபா.* )

    * அலகின் இரு வகைகள்..... *அடிப்படை அலகுகள், வழியலகுகள்.*

    * அறிவியலார் பெயர் தாங்கிய சில அலகுகள்..... *ஆம்பியர், ஓம், ஜூல், நியூட்டன்.*

    * இயற்பியல் துறையில் முதல் நோபல் பரிசைப் பெற்றவர்..... *ஜெர்மன் அறிவியலார் ராண்ட்ஜன். (1901.)*

    * பொருளின் மூன்று நிலைகள்....
    *திண்மம், நீர்மம், வாயு.*

    * பொருளின் நான்காம் நிலையாகக் கருதப்படுவது.... *பிளாஸ்மா. அதாவது கனிம நிலை.*

    * பருமன் என்றால்.... *இடத்தை அடைத்துக் கொள்வது.*

    * பரப்பு என்றால்.... *நீளம் × அகலம் = பரப்பு.*

    * சார்பு என்றால்... *ஒன்றை ஒன்று சார்ந்து இருப்பது. உதாரணமாக சார்புக் கொள்கை.*

    * சமன்பாடு என்றால்.... *ஒன்று, மற்றொன்றுக்குச் சமம். எ.கா. E=mc2 (ஸ்குவர்ட்).*

    * வாய்ப்பாடு என்றால்.... *ஒரு பொது விதியைக் குறிகளால் குறிப்பது.*
    *எ.கா. A = r2(ஸ்குவர்ட்) வட்டத்தின் பரப்பு.*

    * கோவை என்றால் ... *ஒரு தொகுதி. அதாவது... குறிகள், எண்கள் முதலியவற்றைக் கொண்டவை.*
    (எ.கா. a= v-u.
    --------
    t

    * கனிம நிலை என்பது.... *உயர் வெப்ப நிலையில், தடையிலா மின்னணுக்களும், அயனிகளும் உள்ள நிலை.*

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  69. Wed. 7, Sep. 2022, at 8.49 pm.

    அமிலத்துளிகள் − 8

    * பாரபின் எண்ணெயின் பொதுப் பெயர்..... *கெரோசின்.*

    * கனிம எண்ணெய் என்பது .... *பெட்ரோலியம்.*

    * மது பானங்களில் இருக்கும் வேதிப் பொருள்..... *எத்தில் ஆல்கஹால்.*

    * வாயுக்கள் மற்றும் திரவங்களுக்கு வழங்கப்படும் பொதுப் பெயர்....
    *நீர்மங்கள்.*

    * சோப்புடன் எளிதில் நுரை தரும் நீர்..
    *மென்னீர்.* எளிதில் நுரை தராத நீர்...
    *கடின நீர்.*

    * பாலில் இருக்கும் பொருள்..... *லாக்டோஸ்.*

    * சலவைக் கல் என்பது... உருமாற்றுப் *பாறை.*

    * வெளி அழுத்தத்தை அறிய உதவும் கருவி..... *பாரா மீட்டர்.*

    * அலுமினியத்தின் முக்கியத் தாது... *பாக்சைட்.*

    * ஃபாரடே மாறிலியின் மதிப்பு....
    *9.648 × 10four.*

    * லி என்பது.... *சோடியம் ஹைட்ராக்ஸைடு கரைசல்.*

    * வீர உப்புத் திராவகத்தின் அறிவியல் பெயர்.... *ஹைட்ரோகுளோரிக் அமிலம்.*

    * கிரஹங்களில் மிகச் சிறியது....
    *மெர்குரி..அதாவது புதன்.*

    * முட்டையில் வெள்ளைக் கருவின் அளவு.... *முட்டையின் எடையில் 58%.*

    * குளிர்சாதனப் பெட்டியில் பயன்படும் வேதிப் பொருட்கள்.... *ஃபிரியான் வாயு, புளோரின் வாயு, குளோரின் வாயு.*

    * குளோரினை நீரில் கரைப்பதன் காரணம்.... நீரிலுள்ள கிருமிகளை அழிக்க.*

    * பூமியின் மேலோட்டில் அதிகமாகக் கிடைக்கும் வாயு.... *ஆக்ஸிஜன்.*

    * கலீனா என்பது.... *காரியத் தாது.*

    * மருத்துவ இயலின் தந்தை எனப் போற்றப்படுபவர்......
    *ஹிப்போகிரேட்ஸ்.*

    * பூர்ணிமா−2 என்பது.... *பாபா அணு ஆராய்ச்சி மையத்திலுள்ள சிறிய அணு உலை.*

    * கரிம வேதியியலின் தந்தை.....
    *கிறிஸ்டியன் ஒர்ஸ்டட்.*

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  70. Wed. 7, Sep. 2022 at 10.5 pm.

    பதி....!

    பதி என்பதற்குக் காப்பவன் என்று பொருள்.

    தன் கீழ் உள்ள எல்லா உயிர்களுக்கும் வேண்டுவனவற்றைச் செய்து, நல்ல வகையில் காக்கும் தலைவனாதலின் "பதி" எனப்படுகிறான்.

    சைவ சமயம் முதற் பொருளைச் "சிவம்" என்னும் சிறப்புப் பெயரால் குறிப்பிடு கிறது. ஆயினும்.... தத்துவ முறையில் கூறும்பொழுது அம்முதற் பொருளைப் "பதி" என்றே குறிப்பிடுகிறோம்.

    தலைவனாகிய அவனைச் சார்ந்து வாழ்வதற்கு உரிய உயிர்கள் அனைத் தும்.... அவனுக்கு எக்காலத்தும் அடிமை ஆகும்.

    உயிரில்லாத ஏனைய பொருள்கள் அனைத்தும், அவனுக்கு உடமை . சுருங்கக் கூறுமாயின்...,பதிக்குப் பசு அடிமை, பாசம் உடைமை.

    பதியினால்... அறிவு விளங்கப் பெற்று, அவனால் ஆளப்பட்டுத், தமக்கென்று எச்சுதந்தரமும் இன்றி நிற்கும் உயிர்கள், தம்முடைய இந்த நிலையைச் சிறிதும் உணர்வதில்லை.

    .பதிக்குத் தாம் அடிமை என்பதை நினையாமல், உலகப் பொருள்களுக்கு அடிமையாகி வாழ்கின்றன.

    இதுவே "பதி " ஆகும்.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  71. Wed. 7, Sep. 2022 at 10.30 pm.

    அகத்தியர் வாக்கு..!

    மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
    மனமது செம்மையானால் வாயுவைவுயர்த்த வேண்டா
    மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
    மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே.

    யோகம் என்ன, ஞானம் என்ன..?

    மனம் பண்பட்டால், ஆன்மீகத்தில் வெறெந்த முயற்சியும் தேவைப்படாது என்கிறார்... அகத்தியர்.

    கொலை, களவு, கோபத்தை விடுங்கள். மோகம், பொய்தனை விட்டொழியுங்கள். புண்ணியத்தைத் தேடிக் கொள்ளுங்கள்..என்கிறார். அதாவது பூமியில் உத்தம ராய் இருக்கப் பாருங்கள். தகுந்த தருணத்தில் மனதைப் பண்படுத்துங் கள் என்கிறார்.

    நித்திய கர்மங்களை ஒழுங்காகச் செய்து வாருங்கள். நியமங்களில் தவறாதீர்கள்.
    பக்தியோடு இருங்கள். அதனை மதவாத தர்க்கத்திற்குப் பயன்படுத்தாதீர்கள் என்று உபதேசிக்கிறார்.

    சக்தியும் சிவனும் ஒன்று என்பதை... கோடியில் ஒருவன் தான் அறிந்திருக் கிறான்.

    வணங்குதற்கு தெய்வம் ஒன்று தான் என்கிறார்.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  72. Wed. 7, Sep. 2022 at 11.41 pm.

    See there ! He is Civan, our Lord of Thiru-nellikkaa.

    The divine grace of our Lord of Thiru- nellikkaa has two folds.

    One is .....

    He is the protector of virtue.

    Another is....... The valorous divine grace that chastises.

    Our Lord of Thiru- nellikkaa has both the graces....

    * He drank the poison from the sea of milk and saved the entire humanity in the cosmos. This behaviour is as protector of virtue.

    * He destroyed the three flying forts of the asuraas and protected the devaas.

    This is valorius grace that chastised.

    Our Lord of Thiru-nellikkaa with His excellence, exhibited His body with reddish fire; He exhibits His body also in the contrasting white, rubbing the holy ashes all over His body.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  73. Tue. 8, Sep. 2022 at 7.47 am.

    சிவபூஜை ....!

    சமயம், விசேடம், நிருவாணம், அபிஷேகம் என நால்வகை தீட்சை பெற்று முடித்து, சைவ அனுட்டானத் தோடு வாழ்பவரிடம்... சிவதீட்சை பெறல் வேண்டும்.

    நிருவாண தீட்சை பெற்றவரே.... சிவபூஜை செய்ய உரிமை பெற்றவராவர்.

    சிவபூஜை 3− வகைப்படும். அவை....!

    1) சாங்கம்
    2) உபாங்கம்
    3) பிரத்யங்கம்

    * சாங்கம் என்பது....

    அபிஷேகம், பாத்யம், ஆசனம், வஸ்திரம், ஆபரணம், சந்தனம் சாத்துதல் போன்ற பூசை முறைகள்.

    * உபாங்கம் என்பது....

    கற்பூர தீபம், தூபம், குடை, சாமரம், சிரட்டல், திருமுறை, திருமுறை ஓதல், வாத்திய இசைக் கருவிகள் இசைத்தல்.

    * பிரத்யங்கம் என்பது.....

    நைவேத்யம், பின் சுக்குக் கலந்த தண்ணீரைப் படைத்து... கற்பூரம் காட்டல்.

    இதுவே...சிவபூஜை முறையாகும்.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  74. Tue. 8, Sep. 2022, at 8.13 am.

    <>

    பிரதோஷம்....!

    இன்று பிரதோஷம் அல்லவா...!

    ப்ர + தோஷம் = ப்ரதோஷம்.

    ப்ர என்றால்....அளவு கடந்த
    தோஷம் என்றால்.... தீமை

    பாற்கடலைக் கடைந்தபோது முதன் முதலில் *ஆலகால நஞ்சு* தோன்றியது.

    உலகிலுள்ள அனைத்து உயிரினங்களுக்
    கும், அளவு கடந்த தொல்லை தோன்றிய காலம்.

    ஆகவே....

    மக்கள் துயர் நீங்க நஞ்சினை எடுத்து சிவபெருமான் அமிழ்து போல் உண்டார்.

    இறைவன் வயிற்றினுள் அனைத்து உயிர்களும் இருப்பதால்... நஞ்சானது வயிற்றினுள் சென்றால்... எல்லா உயிர்களும் அழிந்து விடுமே ! என்ற அச்சத்தால், அம்மை... அப்பனின் கழுத்தினை இறுகப் பிடித்தார்.

    ஆகவே.. நஞ்சு உட்செல்லவில்லை. கண்டத்திலேயே நின்று விட்டது.

    ப்ரதோஷ காலம் என்பது....

    சுக்கில பட்சம் அதாவது வளர்பிறை, கிருஷ்ண பட்சம் அதாவது தேய்பிறை என்னும் இரண்டு பட்சங்களிலும் வருகின்ற *திரியோதசி* திதியில், சூரிய அஸ்தமனத்திற்கு மூன்றே முக்கால் ( 3 3/4 ) நாழிகைக்கு முன்னிருந்து, விண்ணில் நட்சத்திரங்கள் தோன்றும்வரை உள்ள காலம் அதாவது... மோலை சுமார் 4.45 முதல் 6.30 வரை ப்ரதோஷ காலம்.

    குறிப்பாக... அமாவாசை, பெளர்ணமி நாள்களின் முன்னே மூன்றாம் நாளில் ப்ரதோஷம் வரும்.

    ப்ரதோஷ கால தரிசனம்....

    ப்ரதோஷ வேளையில், சிவபெருமானுக் கும், நந்தி தேவருக்கும் நடக்கும் அபிஷேகம், அலங்காரம், தூப, தீப வழிபாடுகளைக் கண்டும், பின்னர் ரிஷப வாகனத்தில் , அம்மையுடன் ஐயன் கூடிய சந்திர சேகர மூர்த்தியாய் அலங்கரித்து, வேதபாராயணம் தேவாரப் பாடல்கள், மங்கல வாத்தியங்கள் என்ற முறையில், மூன்று சுற்றுக்கள் சுற்றிவர வேண்டும். அல்லது..இங்ஙனம் சுற்றி வரும்போது தரிசிப்பவர்... ப்ரதோஷ கால முழுப் பயனையும் பெறுவர் என்பது உறுதி.

    இப் ப்ரதோஷத்தின் மகிமை....

    ப்ரதஷ காலம் சூரியன் மறைந்த உடன் தொடங்குகின்றது. எனவே... எல்லாம் வல்ல சிவ பரம்பொருளைத் தியானம் செய்து வணங்குதற்குரிய காலம் இதுவே. உலகம் ஒடுங்கும் மாலைப் பொழுதே .. இறைவனோடு நாமும் ஒடுங்க நல்ல நேரம் ஆகும்.

    ப்ரதோஷ வேளையில்... சிவபெருமான், உலக சக்தி முழுமையையும் தன்வசம் ஒடுக்கி, ஆனந்தத் தாண்டவம் புரியும் வேளையில் ... நாமும் அவனைப் போற்றி வணங்கி நற்கதி அடைவோம்.

    இவ்வேளையில்... திருநீலகண்டப் பதிகம், நமசிவாயப் பதிகங்கள், சிவபுராணம், நஞ்சுண்ட தேவாரப் பகுதிகளைப் பாராயணம் செய்தல் சிறப்பு.

    பர்தோஷங்களில் மூவகை உண்டு.

    * உத்தமப் ப்ரதோஷம்
    * மத்திமப் ப்ரதஷம்
    * அதமப் ப்ரதோஷம்.

    உத்தமப் ப்ரதோஷம் என்பது ...

    சூரியன் உதயமானது முதல் மறுநாள் சூரிய உதயம் வரை திரியோதசி திதி இருந்தால்... அந்நாள் உத்தமப் ப்ரதோஷம்.

    * மத்திமப் ப்ரதோஷம் என்பது....

    சூரியன் மறைந்த நேரம் முதல், மறுநாள் சூரியன் மறையும் வரை, திரியோதசி திதி இருந்தால்... அது மத்திமப் ப்ரதோஷம்.

    * அதமப் ப்ரதோஷம் என்பது....

    சூரியன் மறைவிற்குப் பின்னால், திரியோதசி வந்து, மறுநாள் 25−நாழிகைக்குள் இத்திதி மறையு மானால்... அது அதமப் ப்ரதோஷமாகும்.

    திருச்சிற்றம்பலம்.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  75. Thiru-nellikkaa :

    see translation.....

    எம்பெருமான், அறக்கருணை கொண்டு உயிர்களைக் காத்தருளு கிறான். மறக்கருணை கொண்டு, முப்புரங்களை அழித்தருளுகிறான்.

    அறக்கருணையும், மறக்கருணையும் பொருந்தி இருப்பதை விளக்குவதைப் போன்றே அவன் வெண்ணீறு அணிந்து செம்மேனியனாய் திருநெல்லிக்கா என்ற தலத்தில் காட்சி யளிக்கின்றான்.

    ReplyDelete
  76. அய்யா..வெ.சாமி அவர்களுக்கு நமஸ்காரம். அய்யா, சிவபூஜை & ப்ரதோஷம் என்ற தலைப்பில்... கிழமை மாறுதலாக எழுதியுள்ளேன். தவறை சரி செய்து கொள்ளமுடியு மானால்.. நலம். அய்யா. அந்த Thu. 8, Sep. 2022 at... என மாற்றிக் கொள்ளுங்கள் அய்யா.

    ReplyDelete
  77. வில்வ இலை....!

    வேறு பெயர்கள் : சிவத்துருமம், மாதுரம், நின்மலி, குசாபி, கூவிளம், கூவிளை.

    தாவரவியல் பெயர் : Aegle Marmelos.
    குடும்பப் பெயர் : Rutaceae.;

    தாவர வேதிப் பொருள் :

    இதன் கனியில்... Pectin, Tannin போன்ற கசப்புப் பொருள் உள்ளன .

    இலையில்.... Marmelosin என்ற நறுமண எண்ணெய் உள்ளது.

    பயன்படும் பகுதி.... சமூலம். (இலை, பூ, பிஞ்சி, காய், வேர், பழம், இதுவே சமூலம் என்பது.)

    மருத்துவ குணம்.... பசி, மந்தம், தாது இழப்பு, நீர் வேட்கை, காய்ச்சல், உடல் வலி, விக்கல், வாந்தி, அனைத்து வித மேக நோய்கள், கண் சிவப்பு.. குணமாகும்.

    நோய் தீர்க்க சில முறைகள்......!

    * வில்வம் வேரை உலர்த்திப் பொடி செய்து, 2 கிராம் வீதம் தேனுடன் உட்கொள்ள, பசியின்மை, சுவையின்மை, இடைவிடாத வாந்தி, விக்கல், பெருங்கழிச்சல், உடல் இளைத்தல் குணமாகும்.

    * 5கிராம் வில்வ இலையுடன், சுக்கு, மிளகு, சீரகம் (சீர்+அகம்) வகைக்கு 10 கிராம் வீதம் பொடி செய்து.. 500 மி.லி. நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, தினமும் 2−வேளைகள் கொடுத்து வர அனைத்துக் காய்ச்சலும் தீரும். உடலிற்கு அழகையும், மெருகையும் கொடுக்கும். மயக்கம், குழறிப் பேசும் தன்மை முதலியன நீங்கும்.

    வாழ்க நலமுடன்....!

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  78. சீரகம்....!

    சீரகம் இருக்க சிரமம் ஏன் ? வாங்க பார்க்கலாம்....!

    சீரகத்தின் வேறு பெயர்கள் :

    மேத்தியம், துத்த சாம்பலம், பித்த நாசினி, போஜன குடோரி, நற்சீரி,
    உபகும்ப பீசம், அசை, சீரி.

    தாவரவியல் பெயர் : Cuminum Cyminum.
    குடும்பப் பெயர் : Apiaceae.
    பயன்படும் பகுதி : விதை.

    தாவர வேதிப் பொருட்கள் :

    உலர்கனியில் Thymene என்ற நறுமண எண்ணெய் உள்ளது.

    இதில்... Cuminol, Cymene ஆகிய டெர்பீன்கள் உள்ளன.

    மருத்துவ குணங்கள்....! வயிற்று நோய்கள், பித்த சம்பந்தமான நோய்கள், ஈரல் நோய், காச நோய், கல் அடைப்பு, தும்மல், மூக்கு நீர் பாய்தல், வெறி வாத நோய்கள், அஜீரணம், சீதக் கழிச்சல், சுவையின்மை, மூலம், கண் எரிச்சல், வாய் நோய்கள் முதலியன குணமாகும்.

    மருத்துவக் குறிப்புகள் சில....!

    * வேண்டிய அளவு சீரகத்தை எடுத்து... எலுமிச்சை சாறு, இஞ்சிச் சாறு, நெல்லிக்காய் சாறு, ஆகிய ஒவ்வொன்றிலும், மும்மூன்று முறை ஊற வைத்து, உலர்த்திப் பொடி செய்து, 3−கிராம் வீதம், தினமும் 2− வேளைகள் கொடுத்து வர.... அஜீரணம், கண் எரிச்சல், உடல் சூடு, வயிற்று வலி, மூலம், பித்த மயக்கம், சுவையின்மை, சீதக் கழிச்சல் முதலியன குணமாகும்.

    * சீரகம், குறுந்தொட்டி வேர் சம அளவு எ, எடுத்து, குடிநீர் செய்து, காலை, மாலை 3− நாட்கள் பருகிவர, குளிர்காய்ச்சல் நீங்கும்.

    * 50 கிராம் சீரகத்தை... 1500மி.லி.நல்லெண்ணெயில் விட்டுக் காய்ச்சி, சீரகம் ஒடியும் பக்குவத்தில் வடித்து எடுத்துக் கொண்டு, தினமும் தேயத்து தலை முழுகிவர... வாந்தி, மயக்கம், மாந்தம், கண்நோய்கள், தலைவலி குணமாகும்.

    * சீரகத்தை உலர்த்தி தூள் செய்து 2 கிராம் வீதம் பால் அல்லது தேனுடன் கலந்து தினமும் 2−வேளைகள் கொடுத்துவர.... பித்தம், வாயு, உதிரச் சிக்கல், அஜீரணக் கழிச்சல், சீதக்கழிச்சல், கண் நோய்கள் குணமாகும்.

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  79. Thu. 8, Sep. 2022 at 9.5 pm.

    இதயம் .....!

    இதயத்தின் அமைப்பு. :

    தசைத் திசுவாலான, கூம்பு வடிவமான, உள் வெற்றிடம் கொண்ட ஒர் உறுப்பா கும்.

    இதன் அகன்ற பாகம் மேற்பக்கமாகவும், குறுகிய பாகம் கீழ்ப்பக்கமாகவும் உள்ளது.

    மேலும்... இது சற்று இடப்புறம் சாய்ந்தும், இரு நுரையீரல்களுக்கு இடையிலும் அமைந்துள்ளது.

    இதயமானது... இடது, மற்றும் வலது பக்கம் என 2−பாகங்களாக செப்டத்தால் (பிரிசுவர்) பிரிக்கப்பட்டுள்ளது.

    மேலும், இது 4−அறைகளாக பிரிக்கப் பட்டுள்ளது .

    அவை.... வலது ஆரிக்கிள், இடது ஆரிக்கிள், வலது வெண்ட்ரிக்கிள், இடது வெண்டிரிக்கிள்.

    ஆரிக்கிள்கள் மேலாகவும், வெண்ட்ரிக்கு கள் கீழாகவும் அமைந்துள்ளது.

    ஆரிக்கிள்கள், மெல்லிய சுவரால் ஆனது.
    வெண்ட்ரிக்குகள், மிகவும் தடித்த சுவரால் ஆனது.

    ஆரிக்கிள்களுக்கும், வெண்ட்ரிக்கிள் களுக்கும் இடையில், ஆரிக்கிளோ வெண்ட்ரிக்குலார் திறப்பு உள்ளது.

    வலது ஆரிக்கிளோ வெண்ட்ரிக்குலார் வால்வு "மூவிதழ் வால்வு" (Tricuspid valve) என்றும்.....

    இடது ஆரிக்கிளோ வெண்ட்ரிக்குலார் வால்வு "ஈரிதழ் வால்வு" (Bicuspid valve) என்றும் அழைக்கப்படும்.

    இந்த வால்வுகள் ஒரு போக்கு வால்வு களாகச் செயல்படுகின்றது.

    அதாவது.... இவை இரத்தத்தை ஆரிக்கிளிலிருந்து, வெண்ட்ரிக்களுக்கு அனுப்புமே தவிர, வெண்ட்ரிக்கிளி லிருந்து ஆரிக்கிள்களுக்கு செல்ல விடாது .

    வெண்ட்ரிக்கிள் சுவரின் உட்பக்கமானது தடித்த தசையாலானது.

    இவை.... பேப்பிலரி தசைகளாக நீட்டிக் கொண்டிருக்கிறது.

    இதன் முடிவில் மெல்லிய தசைநார்கள் உள்ளது. இதற்கு "கார்டே டெண்டினே" என்று பெயர்.

    இவைகள்... ஆரிக்கிளோ வெண்ட்ரிக் குலார் வால்வுகளின் அடிப்பாகத்தில் இரண்டாம் இணைப்பைக் கொண்டுள் ளது.

    இது வெண்ட்ரிக்குகள் சுருங்கும்போது வால்வுகளை ஆரிக்கிளுடன் அழுத்தி விடாதபடி தடுக்கின்றது.

    மேற்பெருஞ்சிரை, கீழ்ப்பெருஞ்சிரை மூலம், இதயத்தின் வலது ஆரிக்கினுள்
    அசுத்த இரத்தம் கொண்டுவரப்
    படுகிறது.

    மேலும், வலது வெண்ட்ரிக்கிளிலிருந்து, நுரையீரல் தமனியானது, அசுத்த இரத்தத்தை சுத்தம் செய்வதற்காக நுரையீரலுக்கு எடுத்துச் செல்கிறது.

    சுத்தம் செய்யப்பட்ட இந்த இரத்தமானது 4 நுரையீரல் சிறை மூலமாக , இடது ஆரிக்கிளை அடைகிறது .

    பின்னர்...இடது வெண்ட்ரிக்கிளிலிருந்து மகாதமனி மூலம் இரத்தமானது உடலின் எல்லாப் பாகங்களுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது .

    மகாதமனி , நுரையீரல் தமனி ஆகிய இருபெரும் இரத்தக் குழாய்களின் திறப் பும், பிறை வடிவ வால்வுகளால்(அர்த்த சந்திர வால்வு) காக்கப்படுகிறது.

    இந்த வால்வு ஒரு வழியாக மட்டுமே இரத்தத்தை அனுப்பும் தன்மை கொண்டது.

    இதயமானது ...3−அடுக்குத் திசுக்களால் ஆனது .

    * வெளி பெரிகார்டியம்
    * நடு மயோகார்டியம்
    * உள் எண்டோகார்டியம்

    இதயவெளி உறையான பெரிகார்டியம், இதயத்தை சூழ்ந்து இருக்கும்.

    இது... 2−அடுக்குகளால் ஆனது. இந்த அடுக்குகளுக்கு இடையில், பெரிகார்டியல் திரவம் காணப்படும்.

    மீண்டும் அடுத்த பதிவில்...

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  80. Fri. 9, Sep. 2022 at 10.43 pm.

    நாடிப் பயிற்சி :

    பாடம் − 66.

    இன்றைய பாடமாக... வேகங்கள் (விரைவுகள்) பற்றிப் பார்க்கலாம்.

    வேகங்கள் :

    வேகங்கள் பதினான்கு (14). அவை....

    1) அபான வாயு,
    2) தும்மல்
    3) சிறுநீர்
    4) மலம்
    5) கொட்டாவி
    6) பசி
    7) நீர்வேட்கை(தாகம்)
    8) இருமல்
    9) இளைப்பு
    10) தூக்கம்
    11) வாந்தி
    12) கண் நீர்
    13) சுக்கிலம்
    14) உயிர்ப்பு (மூச்சு) என்பனவாம்.

    இப்பதினான்கில்.... மலம், அபானவாயு என்னும் கீழ்வாய்வளி, தும்மல், சிறுநீர்
    என்னும் ஈவை நாள் தவறாமல் வெளிப் படுவனவாகும்...

    இவற்றிற்கான அளவு...

    மலமும், சிறுநீரும் முறையே, 1 நாளைக்கு 3 முறையும், ஆறு முறையும் கழிக்க வேண்டும். (அதாவது..மும்மலம் அறுநீர்).

    தொடர்ச்சி அடுத்த பதிவில்....

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  81. Fri. 9, Sep. 2022 at 11.25 pm.

    நேற்று நாம்..இதயத்தின் அமைப்பு பார்த்தோம். இன்று... இதயம் எவ்வாறு இயங்குகிறது..எனப் பார்ப்போம்.

    இதயம் இயங்கும் விதம் :

    இதயத்தில் 4 அறைகள் முந்தின பதிவில் தெரிந்து கொண்டோம்.

    இந்த இதயத்தின் நான்கு அறைகளும், ஒரே நேரத்தில் சுருங்குவதில்லை.

    ஆரிக்கிள்கள் சுருங்கும் போது வெண்ட்ரிக்குகள் விரிவடைகின்றன. வெண்ட்ரிக்குகள் சுருங்கும் போது ஆரிக்கிள்கள் விரிவடைகின்றன.

    இரு அறைகளும் சுருங்கி விரிவடையும் நிலை தான் இதயத்தின் ஒரு முழு இயக்கமாகும். அதாவது.... Cardiac Cycle.

    மேலும்... ஆரிக்கிள்கள் விரிவடையும் போது, கீழ்பெருஞ்சிரை மற்றும் மேல்பெருஞ்சிரை மூலமாக, உடலின் எல்லா பாகங்களில் இருந்தும் அசுத்த இரத்தமானது வலது ஆரிக்கிளை வந்தடைகிறது.

    அதே சமயத்தில், நுரையீரலில் சுத்தம் செய்யப்பட்ட இரத்தமானது, 4 நுரையீரல் சிரைகள் மூலமாக... இடது ஆரிக்கிளை வந்தடைகிறது.

    இப்பொழுது... ஆரிக்கிள்கள் சுருங்கி, வெண்ட்ரிக்குகள் விரிவடைகின்றன. அப்பொழுது, மூவிதழ் வால்வு திறந்து வலது ஆரிக்கிளிலிருந்து அசுத்த இரத்தமானது, வலது வெண்ட்ரிக்களை வந்தடைகிறது.

    அதே சமயத்தில்... ஈரிதழ் வால்வு திறப்பதன் மூலம், இடது ஆரிக்கிளிலி
    ருந்து, இடது வெண்ட்ரிக்களுக்கு சுத்த இரத்தம் வந்தடைகிறது.

    இந்த ஆரிக்கிளோ வெண்ட்ரிக்குலார் வால்வு திறக்கும்போது, அர்த்த சந்திர வால்வு மூடிக்கொள்ளும்.

    அடுத்தபடியாக......

    ஆரிக்கிள்கள் விரிவடைகின்றன. வெண்ட்ரிக்குகள் சுருங்குகின்றன. இந்த நேரத்தில் ஆரிக்கிளோ வெண்ட்ரிக்
    குலார் வால்வு மூடிக் கொள்ளும். அர்த்த சந்திர வால்வு திறக்கும்.

    வலது வெண்ட்ரிக்கிளிலிருந்து அசுத்த இரத்தம்... சுத்தம் செய்யப்படுவதற்காக,
    நுரையீரல் தமனிக்கு சென்று, நுரையீர லுக்குச் செல்லும்.

    அதே சமயத்தில்... இடது வெண்ட்ரிக்கிளி லிருந்து, சுத்த இரத்தம் மகாதமனி மூலம் உடலின் எல்லா பாகத்திற்கும் எடுத்துச் செல்லப்படுகின்றது.

    இவ்வாறு... இரத்தமானது... இருதயத்தி லிருந்து நுரையீரலுக்கும், அங்கிருந்து இதயத்திற்கும் வந்து, உடலின் எல்லாப் பாகங்களுக்கும் எடுத்துச் செல்லப் படுவது... தொடர்ந்து இடைவிடாது நடைபெற்றுக் கொண்டேயிருக்கும்.

    இவ்வாறு...இந்த நிகழ்ச்சி, ஒருமுறை நடைபெறுவதற்கு எடுத்துக் கொள்ளப் படும் நேரம்... 0.8 விநாடிகள் ஆகும். ஒரு நிமிடத்திற்கு 72−தடவைகள் நடைபெறுகிறது.

    நாடித் துடிப்பு அடுத்த பதிவில் பார்க்கலாம்.....

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  82. Sat. 10, Sep. 2022 at 7.55 am.

    Thiru-Th-Thuruthi.....!

    Our Lord Civa is highly enthusiastic to say in the temple of Thiru-th-thuruthi city.

    The river Cauvery brings from the mountain gold particles and rare gems and pushes them forward.

    They make gushing noise and waves are formed in the river. On the bank of this river our Lord is manifest.

    You the Lord, have the ability to understand what we think, but may not express to you with clarity.

    Therefore, we lack the ability to make you realise; but you, being the Lord, are efficient in knowing our thoughts fully well, without our effort.

    *-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  83. Sun. 11, Sep. 2022 at 9.40 am.

    சிவன் .....!

    சிவனார் தழல் வண்ணமேனியர்; சிவந்த வண்ணர்... அதனால் "சிவன்" என்னப்பட்டார்.

    சிவன் என்னும் நாமம்...தனக்கே உடைய செம்மேனியம்மான், சிவன் என்னும் செம்மேனிப் பேராளன் என்றெல்லாம் திருமுறைப் புகழ்ந்து கூறும்.

    இவருக்கு மூன்று நிலை.

    * அரூப நிலை − உருவமற்ற நிலை.
    * ரூப நிலை − உருவ நிலை.
    * ரூபா ரூப நிலை − அருவுருவம்

    "சிவலிங்கமே அருவுருவ நிலை ஆகும்."

    பன்னிரு ஜோதி லிங்கங்கள் பின்வருமாறு......

    1) மல்லிகார்ச்சுனம் − ஶ்ரீசைலம் −
    ஆந்திரா.

    2) திரியம்பக லிங்கம் − திரியம்பகம் − ஆந்திரா.

    3) இராம லிங்கம் − இராமேஸ்வரம் − தமிழ்நாடு.

    4) வைத்தியநாத லிங்கம் − வைத்திய நாதம் − மகாராஷ்டிரம்.

    5) பீமசங்கார லிங்கம் − பீம சங்காரம் − மகாராஷ்டிரம்.

    6) குஸ்மேஸ லிங்கம் − குஸ்மேஸம்"− மகாராஷ்டிரம்.

    7) நாகேஸ்வர லிங்கம் − நாகேசம் − மகாராஷ்டிரம்.

    8) மாகாள லிங்கம் − உஜ்ஜைனி − மத்தியப் பிரதேசம்.

    9) ஓங்கார லிங்கம் − ஓங்காரம் − மத்தியப் பிரதேசம்.

    10) விஸ்வேஸ்வர லிங்கம் − விஸ்வேஸம் − காசி.

    11) கேதார லிங்கம் − கேதாரம் − உத்தர பிரதேசம்.

    12) சோமநாத லிங்கம் − சோம நாதம் − குஜராத்.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  84. "வியோமாசுரன்... கோவர்த்தன கிரியில், திருடன், காவலன் என விளையாடிய சிறுவர்களை.. "இடைச் சிறுவனாக" நடித்து கொல்ல முயற்சித்த அரக்கன்.

    ReplyDelete
  85. "விருந்தாவனத்து தாமரைகள்... கஹ்லார, கஞ்ச, உத்பல என்பனவாம். விருந்தாவனம் என்பது... கிருஷ்ணரின் வசிப்பிடம்.

    ReplyDelete
  86. "தேனுகாசுரன்" என்பவன் தாளவனம் எனும் காட்டிலுள்ள ஈச்சமரத்துப் பழங்களை சாப்பிடவிடாது தடுத்து, கழுதை உருவில் கிருஷ்ணரையும், பலராமனையும் அழிக்க வந்த அரக்கன்.

    ReplyDelete
  87. "வத்ஸாசுரன்" என்பது... கிருஷ்ணரையும், பலராமனையும், கன்று வடிவில் கொல்ல வந்த ஒரு அரக்கன்.

    ReplyDelete
  88. "கைஷோர" என்பது... 10க்கு மேல் 15 வயது வரை உள்ளவர்கள்.

    ReplyDelete
  89. "கெளமார" என்பது... 5-வயதுக்குட்பட்ட சிறுவர்கள்.

    ReplyDelete
  90. அகாசுரன் என்பவன் ஒரு அரக்கன். பூதனா, பகாசுரனின் சகோதரன். மஹிமா எனும் யோக சித்தியைப் பெற்றவன். மஹிமா என்பது , தன் உருவத்தை பெரிதாக்கிக் கொள்வது. கிருஷ்ணரைக் கொல்ல... பாம்பு வடிவம் கொண்டவன்.

    ReplyDelete
  91. 5−ஸ்தூலப் பொருட்கள்...மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்.

    ReplyDelete
  92. விஷ்ணுவின் சின்னங்கள்... சங்கு, சக்கரம், கதை, தாமரை.

    ReplyDelete
  93. "சுக்லம்" என்றால்... வெண்மை என்று பொருள்.

    ReplyDelete
  94. "கமானிக்யா" என்பது....ஒரு சோதிட நூல்.

    ReplyDelete
  95. "சதுர்மாஸ்யம்" என்பது.... மழைக்கால நான்கு மாதங்கள் ஆகும்.

    ReplyDelete
  96. ப்ரஹ்மவிதாம் என்றால்...பரம் பொருளை நன்கு அறிந்தவன் என்று பொருள்.

    ReplyDelete
  97. "ஸத்ராஜித்" ஸததன்வன் வதம்....என்பது... ஸத்ராஜித் என்பவர் கிருஷ்ணருக்கு மாமனார். (சத்யபாமாவைத் திருமணம் செய்த வகையில்.) துவாரகையில் "சியமந்தக" மணியை அபகரிக்க, ஸததன்வன் என்ற ஒரு கொடும்பாவி, இரவில், ஸத்ராஜித்தின் மாளிகையில் நுழைந்து, உறங்கிக் கொண்டிருந்த ஸத்ராஜித்தை வெட்டிக் கொன்றுவிட்டதால்.. கிருஷ்ணர் கோபம் கொண்டு, கருடக் கொடி உடைய ரதத்தின் சக்கரத்தால்... ஸததன்வனின் தலையை துண்டிக்கிறார். இதுவே அந்த வதம்.

    ReplyDelete
  98. "வியோமாசுரன்" என்றால்...ஆகாயத்தில் பறக்கும் அசுரன். மாயச் செயல்கள் பல புரியக்கூடிய அரக்கன் எனப் பொருள்.

    ReplyDelete
  99. பூதனா வதத்தில்... பூதனா என்பவள் சூனியக்காரி. கோரமான விதத்தில் சிறு குழந்தைகளைக் கொல்பவள்.

    ReplyDelete
  100. Mon. 12, Sep. 2022 at 7.25 am

    அமிலத்துளிகள் − 9

    * பென்சிலின் மருந்துக்கு வழங்கப்படும் சிறப்புப் பெயர்..... *மருந்துகளின் அரசி.*

    * கம்பியாக இழுக்கவும், தகடாக அடிக்கவும் இயலாத உலோகங்கள்.... *பாதரசம், பிஸ்மத்.*

    * சோடியம் கண்டுபிடித்தவர்....
    *சர்.ஹம்பிரி டேவி.*

    * பச்சை உப்பு என அழைக்கப்படுவது....
    *ஃபெரஸ் சல்பேட்.*

    * வானிலை ஆய்வு பலூன்களில் பயன்படும் வாயு..... *ஹீலியம்.*

    * கனரக இயந்திரங்களில் உயவுப் பொருளாகப் பயன்படும், தனிமம்....
    *கார்பன் மற்றும் கிராபைட்.*

    * அடர்ப்பிக்கப்பட்ட யுரேனியம் ..... *மஞ்சள் கேக்* என அழைக்கப்படுகிறது.

    * ஓர் அணுவின் உட்கருவில் இருப்பவை, *நியூட்ரான்கள் மற்றும் புரோட்டான்கள்.*

    ;* நிக்ரோம் கம்பியில் சூடாவதற்கான தனிமம்..... *அதிக மின்தடை.*

    * எதிர்மின் சுமை உடைய துகள்கள்..... *எலக்ரான்கள்.*

    * நேர்மின் சுமை உடைய துகள்கள்..... *புரோட்டான்கள்.*

    * உட்கருவை வட்டப் பாதைகளில் சுற்றி வரும் துகள்கள்... *எலக்ட்ரான்கள்.*

    * புரோட்டான்களைப் போன்றே அணுவின் உட்கருவில் உள்ள துகள்கள்...
    *நியுட்ரான்கள்.*

    * அணுவின் பகுதிப் பொருள்கள்....
    *எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான்.*

    * மின்சுமை அற்ற துகள்கள்.... *நியூட்ரான்கள்.*

    * புற்றுநோய் சிகிச்சையில் பயன்படும் ஐசோடோப்பு..... *கோபால்ட்−60.*

    * இரத்தசோகை நோய் சிகிச்சையில் பயன்படும் ஐசோடோப்பு.... *இரும்பு−59.*

    * முன்கழுத்துக் கழலை நோய்க்கான சிகிச்சையில் பயன்படும் ஐசோடோப்பு...*அயோடின்−131.*

    * வைட்டமின் P -ன் வேதிப்பெயர்..... *சிட்ரின்.*

    * வைட்டமின் B -4ன் வேதிப்பெயர்.... *கோலைன்.*

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  101. Mon. 2, Sep. 2022 at 9.2 am.

    இதயம் பற்றி பார்த்து வருகிறோம்.

    இன்று.. நாடித் துடிப்பு பார்க்கலாம்.

    நாடித் துடிப்பு என்பது.... இரத்தம் தமனிகளில் அலை அலையாகச் செல்லும்போது தமனிகள் சுருங்கி விரிவது நாடித்துடிப்பாகும்.

    நாடித் துடிப்பானது...ஓய்வு நிலையில் ஒரு நிமிடத்திற்கு 70 முதல் 80 வரை இயங்கும்.

    இடது வெண்ட்ரிக்கிள் சுருங்கும் போது, இரத்தமானது மகாதமனி வழியாக கிளை தமனிகள் மூலம் உடலின் எல்லாப் பாகங்களுக்கும் எடுத்துச் செல்லப் படுகிறது.

    அடுத்து... இதய ஒலிகள் :

    இதய வால்வுகளின் இயக்கத்தைத் தெளிவாக உணர்த்துவது இரண்டு வித இதய ஒலிகள் ஆகும்.

    ஒன்று லப் (Lubb)., மற்றொன்று டப். (Dupp).

    லப் என்பது.... வெண்ட்ரிக்குகள் சுருங்கும் போது ஆரிக்கிளோ வெண்ட்ரிக்குலார் வால்வு மூடிக் கொள்ளும் போது எழும் ஒலியாகும்.

    டப் என்பது... வெண்ட்ரிக்கிள்கள் விரிவடையும் போது, அர்த்த சந்திர வால்வு மூடிக் கொள்ளும்போது...எழும் ஒலியாகும்.

    இவ்வால்வுகள் ஒழுங்காக வேலை செய்யாவிடின்... முரண் ஒலிகள் (Murmur) எழுகின்றன.

    இரத்த அழுத்தம் :

    இரத்த அழுத்தம் என்பது.... இரத்தமானது இரத்த நாளங்களின் சுவர்களில் ஏற்படுத்தும் அழுத்தம் இரத்த அழுத்தமாகும்.

    இது சாதாரணமாக.... 120 / 80 mm Hg என்ற அளவில் கொள்ளப்படுகிறது. இதில் 120 என்பது... "சிஸ்டோலிக்" அழுத்தம். 80 என்பது... "டயஸ்டோலிக்" அழுத்தம்.

    சிஸ்டோலிக் அழுத்தம் என்பது... வெண்ட்ரிக்குகள் சுருங்கும் போது ஏற்படுகின்றது.

    டயஸ்டோலிக் அழுத்நம் என்பது வெண்ட்ரிக்கிள்கள் விரிவடையும் போது ஏற்படுகின்றது.

    சாதாரணமாக... சிஸ்டோலிக் அழுத்தம் 100 முதல் 140 வரை இருக்கும்.

    டயஸ்டோலிக் அழுத்தம் 70 முதல் 90 வரை இருக்கலாம்.

    இதற்கு மேல் அதிகரித்தால் "அதிகுருதி" அழுத்த நோயும்...

    குறைந்தால்... "குறைகுருதி" அழுத்த நோயும் உண்டாகும்.

    அடுத்து...

    இரத்த நாளங்கள்... அதாவது இரத்தக் குழாய்கள்....!

    இரத்தக் குழாய்கள் 3− வகைப்படும்.

    * தமனி (Artery)

    * சிரை ( Vein )

    * தந்துகிள் (Capiuary)

    தமனி :

    நம் உடலில் நுரையீரல் தமனி தவிர மற்ற அனைத்து தமனிகளும், சுத்த இரத்தத்தை எடுத்துச் செல்லும்.

    சிரை :

    நம் உடலில் நுரையீரல் சிரை தவிர மற்ற அனைத்து சீரைகளும், அசுத்த இரத்தத்தை எடுத்துச் செல்லும்.

    தந்துகிகள் :

    தமனி மற்றும் சிரைகளின் நுண்ணிய கிளைகள், தந்துகிகள் எனப்படும். இவை ஒவ்வொரு செல்களுக்கும் இரத்தத்தைக் கொண்டு செல்லும்.

    இதுவரை.... இதயத்தின் அமைப்பு, இதயம் இயங்கும் விதம், நாடித்துடிப்பு, இருதய ஒலிகள், இரத்த அழுத்தம், இரத்த குழாய்கள்(இரத்த நாளங்கள்) என இதயத்தைப் பற்றி முழுமையும் அறிந்து கொண்டோம்.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  102. Mon.12, Sep. 2022 at 11 pm.

    இயற்பியல் − 5.

    * தராசு என்பது..... *ஒரு பொருளைத் துல்லியமாக நிறுக்கப் பயன்படும் கருவி.*

    * தராசின் வகைகள்.... *இயற்பியல் தராசு, வேதியியல் தராசு.*

    * கோளமானி என்பது.... *ஒரு பரப்பின் வளைவைக் கண்டறியுங் கருவி.*

    * அழுத்தம் என்பது.... *ஓர் அலகுப் பரப்பின் மீது ஏற்படும் இறுக்கம்*

    * விரவலுக்கு ஓர் எடுத்துக்காட்டு... *நீரில் ஒரு துளி மை மெதுவாகப் பரவுதல்.*

    * இயக்கம் என்பது.... *ஒரு பொருள் நிலையாக இல்லாமல், தொடர்ந்து இடம் பெயர்வது இயக்கமாகும்.*

    * தடுப்பி என்பது.... *பேருந்து முதலிய தானியங்கி இயக்கத்தை நிறுத்தும் கருவியமைப்பு.*

    * கனற்சி என்பது..... *ஆக்ஸிஜன் ஏற்றத்தால் அல்லது அதை ஒத்த செயலினால், வெப்பம் அல்லது ஒளி உண்டாதல்.

    * வெப்ப மாற்றி என்பது .... *பாய்மங்கள், ஒன்றோடு மற்றொன்று கலவாமல் அவை ஒவ்வொன்றிற்கும் வெப்பம் செலுத்தும் கருவி.*

    * கொதி நிலை என்பது...... *திட்டக் காற்று வெளி அழுத்தத்தில், ஒரு நீர்மம் தடையின்றிக் கொதிக்கும் வெப்ப நிலை.

    * ஜூல் விளைவு என்பது.... *ஒரு தடையின் வழியாக மின்னோட்டம் செல்லும்போது, அது உண்டாக்கும் வெப்ப விளைவு.*

    * சமநீர் எடை என்பது..... *E = ms;
    E − சம எடை . M - நிறை. S − வெப்ப எண்.அதாவது... ஒரு பொருளின் சமநீர் எடை என்பது... அதே வெப்ப ஏற்புத் திறனுள்ள நீரின் நிறையாகும்.*

    * மின்னணுக்களோடு அலைகளை தொடர்பு படுத்தியவர்....
    *1923−ல்.... டி. புரோக்கிளி.*

    * இந்தியாவில் அமைக்கப்பட்ட மூன்று அணு உலைகள்.... *ஆஸ்பரா, சிரஸ், சர்பனா.*

    *சுவடறி நுட்பம் என்பது.... *வழியறியும் முறை, வேதி நுணுக்கம்.*

    * சுழல் என்பது.... *அணுக்கள் அல்லது துகள்களின் சுழற்சி இயக்கம்.*

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  103. Tue. 13, Sep. 2022 at 6.12 am.

    * திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் இவர்களுக்கு "முற்பட்ட நாயன்மார்"
    (கி.பி.300−600)

    1) அமர்நீதியார், 2) எறிபத்தர்,
    3) கண்ணப்பர், 4) அறிவாட்டாயர்,
    5) மூர்த்தியார், 6) சண்டேசுரர், 7) காரைக் காலம்மையார், 8) நமிநந்தியடிகள்,
    9) திருமூலர் 10) தண்டியடிகள், 11) சாக்கியர், 12) கூற்றுவர் 13) புகழ்ச் சோழர், 14) ஐயடிகள் காடவர்கோன், 15) கணம்புல்லர், 16) புகழ்த்துணையார், 17) கோச்செங்கட்சோழர்.

    * திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் இவர்களது காலத்து நாயன்மார்
    (கி.பி.600 − 660).....

    1) குங்குலியக்கலயர், 2) முருகர், 3) குலச் சிறையர், 4) அப்பூதியடிகள், 5) திருநீல நக்கர், 6) சிறுத்தொண்டர், 7) நின்றசீர் நெடுமாறர், 8) மங்கையர்க்கரசியார்,
    9) திருநீலகண்ட யாழ்ப்பாணர்.

    * திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் காலத்திற்கும், சுந்தரர் காலத்திற்கும் இடைப்பட்ட நாயன்மார் (கி.பி.660−840)....

    1) திருநீலகண்டர், 2) இயற்பகையார்,
    3) இளையான்குடிமாறர், 4) மெய்ப் பொருளார், 5) ஏனாதிநாதர், 6) ஆனாயர்
    7) உருத்திர பசுபதியார் 8) திருநாளைப் போவார் 9) திருக்குறிப்புத் தொண்டர்
    10) மூர்க்கர் 11) சிறப்புலியார்
    12) கணநாதர் 13) அதிபத்தர் 14) கலிக் கம்பர் 15) கலியர் 16) சத்தியார்
    17) காரியார் 18) வாயிலார்
    19) முனையடுவார் 20) இடங்கழியார்
    21) பூசலார் 22) நேசர்.

    * சுந்தரர் காலத்து நாயன்மார்
    (கி.பி.840 − 865).......

    1) விரன்மிண்டர் 2) மானக்கஞ்சாறர்
    3) பெருமிழலைக் குறும்பர்
    4) ஏயர்கோன் கலிக்காமர் 5) சோமாசி மாறர் 6) கழற்றறிவார், 7) நரசிங்க
    முனையரையர் 8) கழற்சிங்கர்
    9) செருத்துணையார் 10) கோட்புலியார்
    11) சடையனார் 12) இசைஞானியார்.

    * கால வரம்பினைக் கடந்த தொகையடியார்.....

    1) தில்லைவாழந்தணர்
    2) பொய்யடிமையில்லாத புலவர்
    3) பத்தராய் பணிவார்
    4) பரமனையே பாடுவார்
    5) சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்
    6) திருவாரூர்ப் பிறந்தார்
    7) முப்போதுந் திருமேனி தீண்டுவார்
    8) முழுநீறு பூசிய முனிவர்
    9) அப்பாலும் அடிச்சார்ந்தார்.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  104. Tue. 13, Sep. 2022 at 7.25 am.

    இரத்த ஓட்ட மண்டலம் − 1

    இரத்தம் கொடுப்பது மற்றும் பெற்றுக் கொள்வது பற்றிய விபரம்...!

    பல ஆண்டுகளாக இரத்த இழப்பினால் ஏற்படும் விளைவுகளிலிருந்து நோயாளிகளுக்கு இரத்தம் உட்செலுத்தி காப்பதற்காக ... மருத்துவ அறிவியலறி ஞர்கள் பெரும் முயற்சி செய்து... கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் என்பவரால் ABC முறைப்படி இரத்தத்தை வகைப்படுத்தி உட்செலுத்துவது கண்டு பிடிக்கப் பட்டது.

    மனிதர்களின் இரத்தத்தில் 4− வகை இரத்தப் பிரிவுகள் உள்ளன. அவை...
    A , B , AB மற்றும் O ஆகும்.

    * A வகை இரத்தப் பிரிவை உடையவர்..
    A மற்றும் AB இரத்தப் பிரிவினருக்கு கொடுக்கலாம்.

    * B வகை இரத்தப் பிரிவை உடையவர்...
    B மற்றும் AB இரத்தப் பிரிவினருக்கு கொடுக்கலாம்.

    * AB வகை இரத்தப் பிரிவை உடையவர்.AB இரத்தப் பிரிவினருக்கு மட்டுமே வழங்க முடியும். எனவே, இவ்வகை இரத்தப் பிரிவை உடையவர்கள் அனைவரிடத்தும் பெற்றுக் கொள்பவர்
    (Universel Recipient) என்று அழைக்கப் படுவர்.

    * O வகை இரத்தப் பிரிவை உடையவர், அனைத்து வகை இரத்தப் பிரிவின ருக்கும் வழங்கலாம். எனவே, இவ்வகை இரத்தப் பிரிவை உடையவர்கள் "உலகக் கொடையாளி" (Universel Donor) என்று அழைக்கப்படுவர்.

    * A பிரிவு இரத்தம் உடையவர்"... A மற்றும் O பிரிவு இரத்தத்தைப் பெறலாம்.

    * B பிரிவு இரத்தம் உடையவர் B மற்றும் O பிரிவு இரத்தத்தைப் பெறலாம்.

    * O பிரிவு இரத்தம் உடையவர் O பிரிவு உடையவரிடம் இருந்து மட்டுமே பெற முடியும்.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  105. ஐந்து வகையான மலங்கள் ...!
    ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி ஆகும். தி.மூ. 1481.

    ReplyDelete
  106. நால்வகை சைவம் :
    சுத்த சைவம், அசுத்த சைவம், மார்க்க சைவம், கடுஞ் சுத்த சைவம்.. (தி.மூ. 1419 )

    ReplyDelete
  107. ஆகமங்கள் −9. இதிலிருந்து தோன்றியவை −28 ஆகமங்கள். இந்த 28−ம் மூன்றாகப் பிரிந்தன.அவை : சைவம், ரெளத்திரம், ஆரிடம் ஆகும். (தி.மூ. 1429)

    ReplyDelete
  108. துரியம் −7.
    சுத்தத்தில் கனவு, நனவு. அசுத்தத்தில் கனவு, நனவு, உறக்கம். பேருறக்கம், உயிர்ப்படங்கல் என்ற ஏழு. (தி.மூ. 1430).

    ReplyDelete
  109. குற்றங்கள் −6.

    காமம், வெகுளி, பொறாமை, பேராசை, ஆணவம், கர்வம் ஆகும். (தி.மூ. : 1439.)

    ReplyDelete
  110. ஐம்பொறிகள் :

    மெய், வாய், கண், மூக்கு, செவி. (தி.மூ. 1439)

    ReplyDelete
  111. ஐம்பூதங்கள் :

    நீர், நெருப்பு, காற்று, நிலம், ஆகாயம். தி.மூ. : 1439

    ReplyDelete
  112. Tue. 13, Sep. 2022 at 9. 30 pm.

    இதய கோளாறுகள் நீங்க....!

    சிறிய அளவு இஞ்சி எடுத்து தோல் நீக்கி, அரைத்து, ஒரு தம்ளர் வெந்நீரில் கலக்கி தெளிய வைத்து, தெளிந்த அந்நீரில்..1−ஸ்பூன் தேன், 1/2 ஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து, தினமும் அதிகாலையில், அல்லது சாப்பிடுவதற்கு 1 மணி நேரத்திற்கு முன் குடிக்க, இதயம் பலப்படும் . இதயக் கோளாறு மீண்டும் வராது.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  113. நால் வகைப் பூசை :

    ஞான பூசை, தவயோகப் பூசை, புறப்பூசை, சிவ பூசை, ஆகும்.

    ReplyDelete
  114. Wed. 14, Sep. 2022, at .5.57 am.

    நாடிப் பயிற்சி :

    பாடம் − 67.

    கடந்த பாடத்தில்....14 வேகங்கள் பற்றி பார்த்தோம்.

    இன்று, இப்பதினான்கு வேகங்களைத் தடுத்தலாலுண்டாகும் நோய்கள் பற்றிக் காணலாம்....!

    1) வாதம் (கீழ்நோக்குங்கால்) :

    இது அபனவாயு என்னும் கீழ் வாய் வழி அல்லது கீழ் நோக்குங்கால் அல்லது கீழ்க்கால் எனப்படும்.

    இதனைத் தடுத்தலால் உண்டாகும் நோய்கள்.... !

    மார்பு நோய், வாயு குன்மம், குடல் வாதம், உடம்பு முழுவதும் குத்தல், குடைச்சல்,அல்லை. மலசலத் தனமை பசித்தீமந்தம் ஆகிய இவை, மிகுதியுண்டாகும்.

    * வாதக்குன்மத் தன்மைகள் :

    ஈரல், மார்பு, இவற்றிலுள்ள ஈரம் வற்றல், வயிற்றில் எரிச்சல், பக்கங்களில் உரைதல், தலைகனத்தல், நோதல், தலை மயக்கம் கொண்டு, புளிப்பாய் வாந்தி உண்டாதல், குடலில் வலியுண்டாதல் போன்றவை, வாதத்தின் குறிகுணங் களாம்.

    * குடல் வாதத் தன்மைகள் :

    ஒரு பக்கம் விதை உள்ளுக்கு இழுத்துக் கொள்ளல், அண்டத்தில் வளி சேர்ந்து துருத்திபோல உப்புதல், பின் அவ்வாயு வயிற்றில் ஏறுவதால் விதை காணப்படல் . இதனால் மிக வருத்தம் உண்டாதல் என்பவையாம்.

    * வல்ல வாதத் தன்மைகள் :

    வாள் போல் வயிற்றில் குறுக்கே வளர்ந்து சதைப்பற்றுள்ளதாயிருக்கும். நீளமாய்க் கோல் போல், நேராய்க் கிடப்பதுமுண்டு. ஆகாரம் செல்லாது செரித்திடாது, துன்பத்தை தருவிக்கும்.

    தொடர்ச்சி அடுத்த பதிவில்....!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  115. Wed. 14, Sep. 2022 at 7.55 pm.

    இரத்த ஓட்ட மண்டலம் −2

    இரத்த ஓட்ட மண்டலத்தில் உள்ள முக்கியப் பிரிவுகள்.....!

    * இரத்தம்
    * இருதயம்
    * இரத்தக் குழாய்கள்.

    மேலும்...

    * சிரை
    * தமனி
    * வெள்ளையணுக்கள்
    * சிவப்பணுக்கள்
    * இரத்தத் தட்டுகள்
    * தந்துகிகள்
    * அர்த்த சந்திர வால்வு
    * அசுத்த இரத்தம்
    * சுத்த இரத்தம்
    * இரத்த சிவப்பு நிறமிகள்.

    * சிரை :

    அசுத்த இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய். (Veins)

    * தமனி :

    சுத்த இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய். (Artery)

    * வெள்ளையணுக்கள் − WBC ( White Blood Corpuscles, Leucocyte).

    * இரத்தத் தட்டுகள் − Platelets, Thrombocyte.

    * சிவப்பணுக்கள் − RBC ( Red Blood Corpuscles, Erythrocyte ).

    * தந்துகிகள் − Capillaries.

    * அர்த்த சந்திர வால்வு − Semilunar Valve.

    * அசுத்த இரத்தம் − Deoxygenated Blood.

    * சுத்த இரத்தம் − Oxygenated Blood.

    * இரத்த சிவப்பு நிறமிகள் − Haemoglobin.

    இரத்தம் :

    நம் உடலில் மொத்த இரத்த எடை
    1 1/2 பங்கு அல்லது 5 லிட்டர் காணப் படுகிறது. இதில்.... 55% பிளாஸ்மாவும், 45% இரத்த அணுக்களும் காணப்படு கின்றன.

    பிளாஸ்மா :

    பிளாஸ்மா, ஒரு வைக்கோல் நிற திரவ மாகும். இதில் 91% நீரும்,7% பிளாஸ்மா புரதமும் உள்ளது.

    பிளாஸ்மாவில் காணப்படும் புரதங்கள் :

    * ஆல்புமின்.... இது இரத்தத்திற்கு பாகு போன்ற பிசுபிசுப்புத் தன்மையைக் கொடுக்கும்.

    * குளோபுலின்.... இது நோயணுக்களை எதிர்க்கக்கூடிய எதிர்ப்புப் பொருளை உருவாக்கும்.

    * புரோத்ராம்பின் மற்றும் பைபிரினோஜன்.... இது இரத்தம் உறைதலில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    மீண்டும் அடுத்த பதிவி்ல்....

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  116. சித்தர்கள் வாழுமிடம்....!

    * திருமூலர் = சிதம்பரம்
    * இராமதேவர் = அழகர் மலை
    * கும்பமுனி = திருவனந்தபுரம்
    * இடைக்காடர் = திருவண்ணாமலை
    * வான்மீகர் = எட்டுக்குடி
    * பாம்பாட்டிச் சித்தர் = விருத்தாச்சலம்
    * குதம்பைச் சித்தர் = மயிலாடு துறை
    * கமல முனி = திருவாருர்
    * தன்வந்திரி = வைத்தீஸ்வரன் கோயில்.
    * போகர் = பழனி
    * மச்சமுனி = திருப்பரங்குன்றம்
    * கொங்கணவர் = திருப்பதி
    * பதஞ்சலி = இராமேஸ்வரம்
    * நந்தி = காசி
    * காங்கேயர்(கருவூர்த் தேவர்) = கரூர்
    * கோரக்கர் = பொய்யூர்
    * சட்டைமுனி = ஶ்ரீரங்கம்
    * சுந்தரானந்தர் = மதுரை.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  117. Wed. 14, Sep. 2022, at 10.50 pm.

    லிங்கங்கள் :

    லிங்கங்கள் யாரால் அமைக்கப் பெற்று பூஜை செய்யப்பட்டனவோ.... அவர்கள் பெயராலேயே அந்த லிங்கங்கள் அழைக்கப்படுகின்றன.

    எவ்வாறு எனப் பார்க்கலாம்....!

    * தானே தோன்றிய லிங்கம் − சுயம்பு லிங்கம்.

    * தேவர்களால் பூஜிக்கப்பட்டது − தைவிக லிங்கம்.

    * முனிவர்களால் பூஜிக்கப்பட்டது − ஆரிட லிங்கம்.

    * மனிதர்களால் பூஜிக்கப்பட்டது − மானுட லிங்கம்

    * அசுரர்களால் பூஜிக்கப்பட்டது − ஆசுர லிங்கம்.

    * நீர் நிலைகளிலிருந்து கிடைத்தது − பாணலிங்கம்.

    *அம்பிகையால் பூஜிக்கப்பட்டது − தேவிக லிங்கம்.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  118. காசிக்குச் சமமான தலங்கள்....!

    திருவெண்காடு, திருவையாறு, மயிலாடுதுறை, திருவிடைமருதூர், திருச்சாய்க்காடு, திருவாஞ்சியம்..ஆகும்.

    ReplyDelete
  119. Thu. 15, Sep. 2022 at 6.45 am.

    உயிரியல் துளிகள்− 7

    * 50 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் மலர்..... *கார்டஸ்.*

    * மூளை அறுவை சிகிச்சையை முதலில் செய்தவர்..... *ஹார்வி குஷிங்.*

    * உயிர்களை உண்ணும் செடி...... *பாப்பி.*

    * வெள்ளை ஓணான் என்று அழைக்கப் படுவது..... *கண்ணாடிப் பாம்பு.*

    * பூக்களுக்கு சிவப்பு நிறமளிக்கும் பொருள்..... *ஆந்தோஸயானின்.*

    * வைட்டமின் ஏ−ஐக் கண்டு பிடித்தவர் கள்..... *மெகல்லம் மற்றும் டேவிஸ்.*

    * மருந்து வைக்கப்படும் கேப்சூல்கள் (குப்பிகள்) தயாரிக்கப்படுவது.... *செல்லுலோஸ்.*

    * மனித உடம்பின் மிகச் சிறிய தசை....
    *ஸ்டாபிடியஸ்* (காதுக்கு அருகில் உள்ளது).

    * டி. என். ஏ−ஐக் கண்டு பிடித்தவர்.....
    *வாட்சன் அண்ட்கிரிக்.*

    * ஒளிச் சேர்க்கையில் பச்சையத்தின் முக்கியப் பங்கினை விவரித்தவர்....
    *ஏங்கல்மன்.*

    * காது கேட்காத வீலங்கு..... *ஒட்டகச் சிவிங்கி.*

    * சதுர மரங்கள் காணப்பட்ட நாடு .... *சீனா.*

    * சந்தன மரத்தின் அறிவியல் பெயர்...
    *சண்டாலம் ஆல்பம்.*

    * மரபியலின் தந்தை என அழைக்கப்படுபவர்..... *கிரிகோர் மெண்டல்.*

    * வயிறும், ஜீரண உறுப்பும் இல்லாத உயிரி.... *ஈசல்.*

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  120. *சிவனுக்குப் பிள்ளை கந்தன்.*

    கந்தன் என்றால்... ஒன்றானவன் என்று பொருள்.

    கந்தன் உருவில் சிவபெருமான் கலந்து இருப்பதால், சிவனுக்குப் பிள்ளை கந்தன்.

    எம் தந்தையாகிய சிவப் பரம்பொருளிட மிருந்து ஆறு பொறிகள் தோன்றின.

    ஆறு பொறிகளும் ஆறு வட்டமாக, ஆறுமுகம் கொண்ட கந்தப் பெருமான் ஆயினான்.

    ஆகவே, சிவனுக்குப் பிள்ளை கந்தன்,ஆனான்.

    பாடல்.... தி.ம.1026

    எந்தை பிரானுக்கு இருமூன்று வட்டமாய்த்
    தந்தைதன் முன்னே சண்முகந் தோன்றலால்
    கந்தன் சுவாமி கலந்தங்கு இருந்தலான்
    மைந்தன் இவனென்று மாட்டிக்கொள் ளீரே.

    சண்முகம் என்றால் ஆறுமுகம்.
    ஆறும் ஒன்றானவன் கந்தன்.

    மாட்டிக் கொள்வீரே என்றால் மனதில் பதித்துக் கொள்க எனப் பொருள்.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  121. சாதனை நாலு தழல்மூன்று வில்வயம்
    வேதனை வட்டம் விளையாறு பூநிலை
    போதனை போதைஞ்சு பொற்கய வாரண
    நாதனை நாடு நவகோடி தானே.

    சாதனை நாலு − நாற்கோணம்
    தழல் மூன்று − முக்கோணம்
    வில்வயம் − பிறைச் சந்திர வடிவம்
    வேதனை வட்டம் − வட்ட வடிவம்
    விளை ஆறு − அறுகோணம்
    பூநிலை − எண்கோணம்
    போதைஞ்சு − யோனி
    பொற்கயவாரணம் − நீள்வட்டம்
    போதனை (பதுமம்) தாமரைப் பூ வடிவம்

    என்ற இந்த ஒன்பதும், நாதன் அருள் பெற உதவும் நவகுண்ட அமைப்புகள்.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  122. Sat. 17, Sep. 2022 at 7.18 am.

    நாடிப்பயிற்சி −68

    பதினான்கு வேகங்களைத் தடுத்தலால் உண்டாகும் நோய்களைப் பற்றி பார்த்து வருகிறோம்.

    இன்றைய பாடமாக... தும்மலைத் தடுத்தலால் உண்டாகும் நோய்களைப் பற்றிக் காணலாம்.

    தும்மல் :

    மூக்கிலிருக்கும் கிருகரனான வாயுவின் தொழிலாகிய தும்மலைத் தடுத்தால்...

    அவ்வாயு வெம்மையுற்றை அடைந்து, இலேசாகி மேலுக்குக் கிளம்பி தலை முழுமையும் நோதல், இயல்பாயுள்ள இருவகையான பத்து இந்திரியங்களும் தெரித்து விழுவது போலத் தோன்றல், முகம் இழுத்தல், இடுப்பு வாயு முதலிய நோய்கள் உண்டாகும்.

    குறிப்பு : பத்து இந்திரியங்கள் என்பது...
    ஞானேந்திரியமும், கருமேந்திரியமும். ஆரம்ப பாடத்தில் படித்துள்ளோம்.

    அடுத்து... இடுப்பு வளி (இடுப்பு வாயு) அல்லது அரை மேல் வளியின் தன்மைகள்....

    வயிற்றுப் பொருமல், விந்து நீர்த்தல், இடுப்பு, கைகள், கால்கள், பூட்டுகள் இவை கடுத்தல். சீதத்துடன் மலம் (பவ்வீ) கொஞ்சங் கொஞ்சமாய்க் கழிதல், சிறுநீர்க் கடுப்புடன் கொஞ்சங் கொஞ்சமாயிறங்கல் முதலயவைகளா கும்.

    அடுத்ததாக... சிறுநீர்.

    சிறுநீரை அடக்கினால்... நீரடைப்பு, நீரிறங்கும் புழை புண்ணாதல், கீல்கள் நோதல், ஆண்குறி சோர்வுடன் குத்தல், கீழ்வாய்வளி வயிற்றினில் சேர்தல் , நீர்த்துவாரத்தில் சீழ், குருதி முதலியவை சேர்ந்து, இறைச்சியைப் பொய்யாவி அவித்தது போன்று புண் உண்டாதல், மேலும் ஆண்குறியின் துவாரம் நெருப்பு பட்டாற்போல் எரியும்.

    அடுத்ததாக... பவ்வி. (மலம்)....!

    மலத்தை அடக்கினால்... மலத்தைக் கீழ் தள்ளும் அபான வாயுவின் செயலை எதிரிக்கும்படி ஆகும். அவ்வாறு அடக்கும்போது, அவ் அபானம் பெருகி அடக்கப் பெற்ற மலத்தைத் தள்ளும். அவ்வளியின் தன்மையூற்றால் சலதோடம், முழங்காலின் கீழ்த் தண்மையான நோய் உண்டாக்கும். மேலுக்குக் கிளம்பித் தலையிற் சேர்ந்து, தலை வலித்தல், ஒலியுடன் கீழக்கால் பறிதல், உடல் வன்மைக் குறைவு , மேலும் பல நோய்களும் தோன்றி, வருத்தும்.
    வாயுவால்... மலச்சிக்கல், தலைவலி, கண்ணில் நீர் சொறிதல் ஆகியவை உண்டாகும்.

    கொட்டாவி ....!

    கொட்டாவியை அடக்கினால்...முகம் வதங்கல், இளைப்புக் குறி காணப்படல், அளவோடு உண்ணினும் செரியாமை, நீர்நோய், வெள்ளை நோய் என்னும் இவற்றால்.....அறிவு மயங்கல், வயிற்றில் நோய் வருதல் ஆகியவை உண்டாகும்.

    மீண்டும் அடுத்த பதிவில்...!

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  123. Sat. 17, Sep. 2022 at 8.17 am.

    வேதியியல் துளிகள்−10.

    * வேகமாக இயங்கும் இயந்தரங்களில் உயவுப் பொருளாக பயன்படுவது.... *கிராஃபைட்.*

    * பென்சில் லெட் செய்யப் பயன்படுவது... *கிராஃபைட்.*

    * நிறமற்ற ஒளி ஊடுறவக் கூடிய பொருள்... *வைரம்.*

    * உயர் நுட்ப வெப்பமானிகளில் பயன்படுவது... *வைரம்.*

    * சிலைகள் மற்றும் இயந்திர பாகங்கள் செய்யப் பயன்படும் உலோகக் கலவை ... *வெண்கலம்.*

    * ஆணிகள், ஜன்னல்கள் மற்றும் கதவுச் சட்டங்கள் செய்யப் பயன்படும் உலோகக் கலவை... *பித்தளை.*

    * டின், காப்பருடன் சேர்ந்து உருவாகும் உலோகக் கலவை.... *வெண்கலம்.*

    * இரும்பு காற்றில் எரிந்து கிடைப்பது... *இரும்பு ஆ்க்ஸைடு.*

    * மெக்னீசியம் காற்றில் எரிந்து கிடைப்பது... *மெக்னீசியம் ஆக்ஸைடு.*

    * பாஸ்பரஸ் காற்றில் எரிந்து ."*பாஸ்பரஸ் பென்டாக்ஸைடு* −வாக மாறுகிறது.

    * மெக்னீசியத்தின் குறியீடு... Mg.
    * கால்சியத்தின் குறியீடு..... Ca.
    * சோடியத்தின் குறியீடு.... Na.
    * பொட்டாசியத்தின் குறியீடு..... K.
    * அலுமினியத்தின் குறியீடு.... Al.
    * மாங்கனீசின் குறியீடு.... Mn.
    * துத்ததாகத்தின் குறியீடு ... Zn.

    * அலுமினியம் காற்றில் எரிந்து கிடைப்பது.... *அலுமினியம் ஆக்ஸைடு.*

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  124. Sat. 17, Sep. 2022 at 7.37 pm.

    உயிரியல் துளிகள் −8

    * உலக இதய தினமாக கொண்டாடப் படும் நாள்... *செப்டம்பர் −29.*

    * ஹோமியோபதி வைத்திய முறையைக் கண்டுபிடித்தவர் .... *ஹானிமான்.*

    * இரத்தத்திலுள்ள சிவப்பணுக்களின் பெயர்..... *எரித்ரோசைட்டுகள்.*

    * உடலில் தேவையின்றி நீண்டிருக்கும் உறுப்பு... *குடல்வால்.*

    * நமது உடலில் மிகவும் தூய்மையான இரத்தம் இருக்கும் இடம்.... சிறுநீரகச் சிறை.*

    * இரத்தம் உறையாமை நோய்க்கு பெயர்.... *ஹீமோபிலியா.*

    * அணிலின் கூட்டுக்குப் பெயர்.... *டிரே.*

    * கக்குவான் இருமலை உண்டாக்கும் கிருமி.... *பார்டடெல்லா பெர்டுஸிஸ்.*

    * தொண்டை அடைப்பான் என்னும் நோயை உண்டாக்கும் கிருமி....
    *கார்னி பாக்டீரியம் டிஃப்தீரீயா.*

    * 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை அதிகம் பாதிக்கும் நோய்..... *தொண்டை அடைப்பான்.*

    * மலேரியா நோய் பரவல் குறித்துக் கண்டறிந்து சொன்னவர் .....
    *சர். ரோனால்டு ராஸ்.*

    * கொசுவினால் பரப்பப்படும் நோய்களுள் மிக முக்கியமானது... *மலேரியா.*

    * மனிதனுக்கு இணை விலா எலும்புகள்... *12.*

    * காது பக்கங்களில் உள்ள உமிழ்நீர்ச் சுரப்பிகளைத் தாக்கி, அழற்சியுண்டாக் கும் நோய்... *புட்டாலம்மை.*

    * பொன்னுக்கு வீங்கி என அழைக்கப் படும் நோய்.... *புட்டாலம்மை.*

    * இன்சுலினைச் சுரக்கக் கூடிய நாளமில்லா சுரப்பியின் பெயர்...
    *பாங்க்ரியாஸ்.*

    * அயோடின் குறைவினால் ஏற்படும் நோய்.... *கழுத்துக் கழலை.*

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  125. Sat. 17, Sep. 2022 at 8.53 pm.

    இரத்த ஓட்ட மண்டலம் −3

    இன்றைய பாடமாக... இரத்த அணுக்கள் பற்றிப் பார்க்கலாம்...!

    இரத்த அணுக்கள்.... பிளாஸ்மாவில் மிதக்கும் பொருட்கள் ஆகும்.

    [[ பிளாஸ்மா பற்றி... பதிவு இரண்டில் கடைசியாக கொடுத்துள்ளேன்..மீண்டுமொருமுறை படித்து அறிந்து கொள்ளுங்கள். ]]

    இரத்த அணுக்கள் 3−வகைப்படும். அவை..

    * இரத்தச் சிவப்பணுக்கள்
    * இரத்த வெள்ளை அணுக்கள்
    * இரத்தத் தட்டுகள்.

    * இரத்த சிவப்பணுக்கள் :

    * இரத்தச் சிவப்பணுக்கள்.... எலும்பு மஜ்ஜையில் உருவாகும்.

    இவை வட்ட வடிவத்துடனும், நியூக்ளியஸ் அற்றும், மையப்பகுதி மேற்பரப்பைவிட மெல்லியதாகவும் காணப்படும்.

    ஒரு கன மி.மீ. இரத்தத்தில் 4 முதல் 5.5 மில்லியன் வரை உள்ளது.

    இது சாதாரணமாக 100 மி.லி இரத்தத் தில் 14 முதல் 15 கிராம் வரை இருக்க வேண்டும்.

    இந்த அளவைவிட குறைந்தால் .... இரத்த சோகையும்,.....

    அதிகரித்தால்....பாலிசைத் தீமியாகவும் வரும்.

    மேலும், இவற்றுள் ஹீமோகுளோபின் எனப்படும் "சிவப்பு நிறமிகள்" காணப்படும்.

    இதற்கு ஆக்ஸிஜனுடன் இருக்கின்ற ஈர்ப்பு சக்தியின் காரணமாக இது ஆக்ஸிஜனை உடலில் கடத்த உதவுகின்றது.

    மீண்டும் அடுத்த பதிவில்....!

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  126. Sat. 17, Sep, 2022 at 9.35 pm.

    இயற்பியல் துளிகள் − 6.

    * ஈ.சி.ஜி. சுதர்சனுடன் தொடர்பு கொண்ட உலகப் புகழ் பெற்ற அறிவியலார்கள்....
    *டிராக் , பவு , எம்.ஜி.மேயர்.*

    * நியூட்ரினோ எனப் பெயர் அளித்தவர்...
    *பெர்மி − 1931.*

    * நியூட்ரினோக்கள் என்பன ...
    *மின்னணு சார்ந்தவை.*
    *மியூரான் சார்ந்தவை.*
    *டோ நியூட்ரினோ என மூவகை ஆகும்.

    * அணுவில் அடிப்படைத் துள்கள் ... *3.*

    * காற்று வெளி என்பது..."புவியைச் சூழந்துள்ள வளியடுக்கு.*

    * காற்று வெளி இரைச்சல் என்பது.... *காற்று வெளித் தடையினால் வானொலி ஏற்பியில் ஏற்படும் இரைச்சல்.*

    * வானிலை என்பது..... *காற்று வெளியின் நிலமை , கதிரவன் , வெப்ப நிலை , ஒளி , மப்பு நிலை , ஈரநிலை , காற்றழுத்தம் ஆகிய காரணங்களை உள்ளடக்கியது.*

    * காற்று வெளி அழுத்தம் என்பது...
    *புவி மேற்பரப்பில் எப்புள்ளியிலும் காற்று எடையினால் அதற்கு மேல் உண்டாக்கப்படும் அழுத்தம்.*

    * காற்று வெளி அழுத்தத்தின் அளவு....
    *கடல் மட்டத்தில் 76 செ.மீ பாதரசத்தைக் காற்று வெளி தாங்கும். (மலை உயரத்தில் அழுத்தம் குறைவு.)

    * தாழ்வழுத்தம் என்பது, இதனின விளைவு.... காற்று மண்டல அழுத்தம் 76−செ.மீ−க்குக் குறைவாக அதாவது..கீழ் செல்லுதல். இதன் விளைவால்... மழையும், புயலும் ஏற்படும்.*

    * பனி என்பது.... *குளிர்ந்த பரப்பில் காற்றிலிருந்து நீர்த் துளிகள் சுருங்குதல். மேலும், காற்றின் வெப்பநிலை, நீரின் உறைநிலைக்குக் கீழ் இருக்கும்போது, காற்று நீராலிப் படிகமாக உறைவது பனி.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  127. Mon. 19 Sep. 2022 at, 10 50 am.

    சைவ சித்தாந்தப் பரல்கள்....!

    * முத்தி என்ற சொல்லின் பொருள்....*கட்டிலிருந்து விடுபடுதல்.*

    * முத்தி நிலையின் இருவகைகள்.... *பதமுத்தி , பரமுத்தி.*

    * பதமுத்திகள்.... *சாலோகம் , சாமீபம் , சாரூபம்.*

    * பரமுத்தியாவது.... சாயுச்சியம், திருவடிப்பேறு.

    * பதமுத்திக்கும், பரமுத்திக்கும் உள்ள வேறுபாடு....
    பதமுத்தி ஒரு வழிப் பிறவியைத் தரக்கூடும்.

    பரமுத்தி மீண்டும் பிறவிக்கு வாரா நெறி.

    * சரியையில் நின்றோர் பெறும் முத்தி.... *சாலோக பதமுத்தி.*

    * கிரியையில் நின்றோர் பெறும் முத்தி... சாமீப பதமுத்தி.

    * யோக நெறியில் நின்றோர் பெறும் முத்தி.... சாரூப பதமுத்தி.

    * ஞான நெறியில் நின்றோர் பெறும் முக்தி... *சாயுச்சிய பரமுத்தி.

    * பிரணவத்தின் கலைகள்.... *அகரம் , உகரம் , மகரம், விந்து, நாதம்.

    * பிரணவத்தில் அடங்கிய மூன்று எழுத்துக்கள் ... *அகரம் , உகரம் , மகரம்.*

    * பிரணவ கலைகளுக்குரிய அதிதெய்வங்கள்....
    *அகரம் = பிரமன்*
    *உகரம் = விஷ்ணு*
    *மகரம் = உருத்திரன்*
    *விந்து = மகேசன்*
    *நாதம் = சதாசிவம்.*

    * திருவைந்தெழுத்தில் ஊனநடம் குறிக்கும் நிலை.... *பெத்த நிலை.*

    * திருவைந்தெழுத்தில் ஞான நடம் குறிக்கும் நிலை.... *முத்தி நிலை.*

    * சிவாயநம என்பதில் சி -கரம் குறிப்பது... *சிவத்தை.*

    * வ -கரம் குறிப்பது.... *திருவருளை.*

    * ய - கரம் குறிப்பது... *ஆன்மாவை.*

    * ந - கரம் குறிப்பது.... திரோதான, மற்றும் மாயா, கன்ம மலங்களை. *

    * ம - கரம் குறிப்பது.... *ஆணவ மலத்தை.*

    சிவாயநம என்பதில் சிவ − என்பது குறிக்கும் நடம்....... *ஞான நடம்.*

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  128. * நம... என்பதைக் குறிக்கும் நடம்.... *ஊனநடம்.*

    ReplyDelete
  129. Sun. 18, Sep. 2022 at 6.9 am.

    தாவரவியல் துளிகள்....!

    41) *கஸ்தூரி மஞ்சள் :*

    வேறு பெயர்கள் : காட்டு மஞ்சள்.
    தாவரவியல் பெயர் : *Curcuma Aromatica.*

    42) *கரிசலாங்கண்ணி :*

    வேறு பெயர்கள் :

    கரிப்பான், கரிசாலை, பிருங்கராஜம், கைகேசி, கரிசலை, கையாந்தகரை, கையான், தேகராஜம், கரசனாங்கண்ணி, கரியசாலை, பொற்கொடி, பொற்றலைப் பாவை, கைவீசி இலை.

    *தாவரவியல் பெயர் : Ecliptaalba.*

    43) *கருவேப்பிலை* :

    வேறு பெயர்கள் : கறி வேம்பு, கறியபிலை.
    தாவரவியல் பெயர் : *Murraya Koenigii*

    44) *கருவேலம்* :

    வேறு பெயர்கள் : கண்டாலு , கருவேலம்.
    தாவரவியல் பெயர் : *Acacia Nilotica (Old Name : Acacia Arabica)*

    45) *கருங்காலி* :

    வேறு பெயர் : உடுக்கை மரம்.
    தாவரவியல் பெயர் : *Acacia Catechu (Old Name : Diospyros Melanoxylon)*

    46) *கற்றாழை* :

    வேறு பெயர்கள் : குமரி, சோற்றுக் கற்றாழை, கள்ளி.
    தாவரவியல் பெயர் : *Aloe vera.*

    47) *கானா வாழை* :

    வேறு பெயர்கள் : கன்றுக் குட்டிப் புல், கோழிக் கானான் கீரை.
    .தாவரவியல் பெயர் : *Commelina Benghalensis.*

    48) *கீழாநெல்லி* :

    வேறு பெயர்கள : கீழ்வாய் நெல்லி , கீழக்காய் நெல்லி.

    தாவரவியல் பெயர் : Phyllanthus Amarus (Old Name : Phyllanthus Niruri).

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  130. Mon. 19, Sep. 2022 at, 8.35 pm.

    உயிரியல் துளிகள் − 9

    * இரத்தச் சிவப்பணுக்களின் வாழ்நாள்..*120−நாட்கள்.*

    * இரத்தச் சிவப்பணுக்கள் உற்பத்தி யாகும் இடம்.... *எலும்புகளின் சிவப்பு மஜ்ஜையில்.*

    * சிவப்பணுக்களின் சிவப்பு நிறத்திற் குக் காரணம்..... *ஹீமோகுளோபின் பெற்றிருப்பதால்.*

    * இரத்தச் சிவப்பணுக்கள் அழிக்கப்படு
    வது...... *கல்லீரலிலும், மண்ணீரலிலும்.*

    * அளவில் பெரியவை *வெள்ளையணுக்
    கள்.*

    * பிளாஸ்மாவில் காணப்படும் பொருள்கள்.... *புரதங்கள், நொதிகள், ஹார்மோன்கள், கழிவுகள், தனிமங்கள்.*

    *பிளாஸ்மா என்பது.... *காரத்தன்மை கொண்ட வெளிர் மஞ்சள் நிறத் திரவம்.*

    * மனித இரத்தத்தில் காணப்படும் திரவப்பகுதி... *பிளாஸ்மா.*

    * இரத்தச் செல்லுக்கு வெளியே காணப் படும் திரவம்..... *பிளாஸ்மா.*

    * இரத்தத்தில் காணப்படும் பிளாஸ்மா
    வின் அளவு.... 55%

    * ஒரு கன மில்லி மீட்டர் இரத்தத்தில் உள்ள இரத்தச் சிவப்பணுக்கள்...
    *5 மில்லியன்.*

    * இரத்தச் செல்களின் வகைகள்...... *சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், இரத்தத் தட்டுகள்.*

    * பூனையின் கர்ப்ப காலம் ...... *50−நாட்கள்.*

    * நாயின் கர்ப்ப காலம்.... *60−நாட்கள்.*

    * யானையின் கர்ப்ப காலம்... *615−நாட்கள்.*

    * குதிரையின் கர்ப்ப காலம்..... *345−நாட்கள்.*

    * பன்றியின் கர்ப்ப காலம்.... *115−நாட்கள்.*

    * வெளவால் மணிக்கு பறக்கும் வேகம்... *64−கி.மீ.*

    * நாயை விடப் பன்மடங்கு மோப்ப சக்தி கொண்ட உயிரினம்... *விலாங்கு மீன்.*

    * பழங்களில் இருக்கும் வைட்டமின்...
    *வைட்டமின் −சி.*

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  131. Mon. 19, Sep. 2022 at, 9.55 pm.

    வேதியியல் துளிகள்−11.

    * பற்களின் எனாமல் ... *கால்சியம் பாஸ்பேட்*−ஆல் ஆனது.

    * அலுமினியம் பிரித்தெடுக்கப்படும் தாது... *பாக்ஸைட்.*

    * சால்கோஜென்கள் என்பது எக்குடும்ப தனிமங்கள்..... *ஆக்ஸிஜன் குடும்பம்.*

    * உலகிலேயே முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட உலோகம்.... *தாமிரம்.*

    * யுத்தநிமித்த உலோகம் என்பது.... *குரோமியம்.*

    * அணு ஆற்றலைப் பெற பயன்படும் உலோகம்.... *யுரேனியம்.*

    * பாதரசத்தின் தாது.... *சின்னபார் ஏஞ்கு.*

    * தாதுக்களில் கலந்துள்ள மாசுப் பொருட்களின் பெயர்.... *தாதுக்கூளம்.*

    * தாமிரத்தாது செறிவூட்டப்படும் முறை... *நுரை மிதப்பு முறை.*

    * தாமிர உலோகம் ரோமானியர்களால் அழைக்கப் பெறுவது... *குப்ரம்.*

    * சைப்ரஸ் தீவில் எடுக்கப்பட்ட உலோகம்... *தாமிரம்.*

    * கலோரி மீட்டர் உருவாக்கப் பயன்படும் உலோகம்.... *தாமிரம்.*

    * உலோகவியலில் இளக்கியாகப் பயன்படுவது.... *கால்சியம் ஆக்ஸைடு.*

    * சர்க்கரை ஆலைகளில் சர்க்கரையை தூய்மையாக்க பயன்படுவது... *சல்பர் − டை − ஆக்ஸைடு.*

    * ஜாம் மற்றும் உலர்ந்த பழங்களில் பாக்டீரியா வளர்ச்சியைத் தடுப்பதற்கு பயன்படுவது.. *சல்பர்− டை−ஆக்ஸைடு.*

    * வேதிப் பொருட்களின் அரசன் .... *சல்பியூரிக் அமலம்.*

    * கண்ணாடி எண்ணெய் என்று அழைக்கப்படுவது... *சல்பியூரிக் அமிலம்.*

    * வணிக ரீதியில் கண்ணாடி தயாரிக்கப் பயன்படுவது.... *சல்பியூரிக் அமிலம்.*

    * அழுகிய மணமுடைய வாயு.... *ஹைட்ரஜன் சல்பைடு.*

    * நொதித்தலுக்கு பயன்படும் நுண்ணியிரி... *ஈஸ்ட்.*

    * ஈஸ்ட்டுகளில் உணவாகப் பயன்படுவது... *அம்மோனியம் சல்பேட்.*

    * கோகினூர் வைரத்தின் கேரட் மதிப்பு...
    *105.*

    * இரப்பர் பாலை உறையச் செய்யப் பயன்படுவது... *அசிட்டிக் அமிலம்.*

    * ஆட்டம் என்பதன் பொருள்... *பிரிக்க முடியாதது.*

    ;* அழைப்பு மணிகள் செய்யப் பயன்படும் உலோகக் கலவை... *வெண்கலம்.*

    Jsnsikannan60@gmail.com

    ReplyDelete
  132. Tue. 20, Sep. 2022 at 7.40 am.

    காயத்ரி மந்திரங்கள் :

    * கணபதி :

    ஏகதந்தாய வித்மஹே சூர்ப்பகர்ணாய தீமஹி
    தந்நோ தந்தி: ப்ரசோதயாத்(து)

    * சுப்ரமணியர் :

    கார்த்திகேயாய வித்மஹே சக்திஹஸ்தாய தீமஹி
    தன்ன: ஷண்முக ப்ரசோதயாத்.

    * சிவன் :

    தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி
    தன்னோ ருத்ர: ப்ரசோதயாத்

    தன்மஹேசாய வித்மஹே பாக்விசுத்தாய தீமஹி
    தன்னச்சிவப்பரசோதயாத்.

    * பார்வதி :

    மஹாதேவ்யைச வித்மஹே ருத்ரபத்னீச தீமஹி
    தன்னோ கெளரி: ப்ரசோதயாத்.

    * துர்க்கை :

    காத்யாயனாய வித்மஹே ருத்ரபத்னிச தீமஹி
    தன்னோ துர்க்கி: ப்ரசோதயாத்.

    * சூரியன் :

    பாஸ்கராய"வித்மஹே மஹத்யுதிகராய தீமஹி
    தன்னோ ஆதித்ய: ப்ரசோதயாத்.

    * சந்திரன் :

    சீதப்ரபாய வீத்மஹே சோடசகலாய தீமஹி
    தன்ன ஸ்ஸோம: ப்ரசோதயாத்.

    * அங்காரகன் (சசெவ்வாய்) :

    ஆங்கீரஸாய வித்மஹே சக்திஹஸ்தாய தீமஹி
    தன்னோ பெளம: ப்ரசோதயாத்.

    * புதன் :

    ஆத்ரேயாய வித்மஹே ஸோமபுத்ராய தீமஹி
    தன்னே ஸெளம்ய :ப்ரசோதயாத்.

    * குரு :

    ஆங்கீரஸாய வித்மஹே ஸுராசார்யாய தீமஹி
    தன்னோ குரு: ப்ரசோதயாத்.

    * சுக்ரன் :

    பார்க்கவாய வித்மஹே ஸுராசார்யாய தீமஹி
    தன்னோ சுக்ர: ப்ரசோதயாத்.

    * சனி :

    சனைச்சராய வித்மஹே சாயாபுத்ராய தீமஹி
    தன்னோ மந்த: ப்ரசோதயாத்.

    * ராகு :

    பிரும்ம புத்ராய வித்மஹே சாயாபுத்ராய தீமஹி
    தன்னோ ராஹு: ப்ரசோதயாத்.

    * கேது :

    ஜைமினி கோத்ராய வித்மஹே தூம்வர்ணாய தீமஹி
    தன்ன: கேது: பர்சோதயாத்.

    * மஹாலெட்சுமி :

    மஹாலெ௯்ஷமீச வித்மஹே விஷ்ணுபத்னீச தீமஹி
    தன்னோ லெ௯்ஷமீ: ப்ரசோதயாத்.

    * சரஸ்வதி :

    வாக்தேவீச வித்மஹே விரிஞ்சி பத்னிச தீமஹி
    தன்னோ வாணீ: ப்ரசோதயாத்.

    * நந்திகேசர் :

    வேத்ரஹஸ்தாய வித்மஹே டங்க ஹஸ்தாய தீமஹி
    தன்னோ வ்ருஷப: ப்ரசோதயாத்.

    * சண்டிகேசர் :

    டங்க ஹஸ்தாய வித்மஹே சிவசிந்தாய தீமஹி
    தன்னோ சண்ட: ப்ரசோதயாத்.

    * காளி :

    பிசாசத்வஜாய வித்மஹே சூலஹஸ்தாய தீமஹி
    தன்னோ காளீ: ப்ரசோதயாத்.

    * விருஷபம் :

    தீ௯்ஷணசிருங்காய வித்மஹே வேதஹஸ்தாய தீமஹி
    தன்னோ விருஷப: ப்ரசோதயாத்.

    * சாஸ்தா :

    கஜத்வஜாய வித்மஹே ஸ்ருணி ஹஸ்தாய தீமஹி
    தன்னோ சாஸ்த : ப்ரசோதயாத்.

    * கஜம் (யானை) :

    சுவேதவர்ணாய வித்மஹே வேதஹஸ்தாய தீமஹி
    தன்னோ கஜ: ப்ரசோதயாத்.

    * மயூரம் (மயில்) :

    ப௯ஷிராஜாய வித்மஹே சுக்ல பங்காய தீமஹி
    தன்னோ சிகி: ப்ரசோதயாத்.

    * சுதர்சனர் :

    சக்ரராஜாய வித்மஹே சஹஸ்ர ஜ்வாலாய தீமஹி
    தன்ன:சக்ர: ப்ரசோதயாத்.

    * சுதர்சன மூலமந்த்ரம் :

    ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் கிருஷ்ணாய கோவிந்தாய
    கோபி ஜனவல்லபாய பராய பர புருஷாய
    பரமாத்மனே பர கர்ம மந்த்ர, யந்த்ர, தந்த்ர
    ஒளஷத, அஸ்த்ர சஸ்த்ராணி ஸம்ஹர ஸம்ஹர
    குருத்யோர் மோசய மோசய ஓம் நமோபகவதே
    மஹாசுதர்ஸனாய தீப்த்ரேஜ்வால பரிதாய
    ஸர்வதிக் சோபன கராய ஹும்பட் பிரும்மணே
    பிரம்ம ஜோதிஷே ஸ்வாஹர்.

    * பிரும்மா :

    ஹம்ஸரூடாய வித்மஹே கூர்ச்சஹஸ்தாய தீமஹி
    தன்னோ பிரும்ம: ப்ரசோதயாத்.

    Jansikannan60@gmail.com

    .

    ReplyDelete
  133. Wed. 21, Sep. 2022, at 8.21 am.

    THIRU-CH-CHITRAMBALAM

    THIRU - NAALOOR - MAYAANAM.

    See! It is our Lord in Thiru-naaloor -mayaanam.

    When Raavanan with his ten heads tried to lift mount Kailash, our Lord pressed the mountain with His toe and subdued him.

    Later Raavanan realised his mistake and begged for pardon.

    Our Lord excused him and blessed him with Mandrakasa sword and longevity in life. This Lord is manifest in Thiru-naaloor-
    mayaanam where echo of the sound of conches is heard ceaselessly.

    Those devotees who think always of this Lord will have no suffering in their life ever.

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  134. Wed. 21, Sep, 2022 at 8. 01 am.

    திருச்சிற்றம்பலம்

    திருநாலுர் மயானம்....!

    திருநாலுர் மயானம் என்னும் இத்திருத்தலமானது... கும்பகோணத் திற்கு தென்கிழக்கே 16 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

    இது காவிரிக்குத் தென்கரையில் 96−ஆவது திருத்தலம் ஆகும். நான்கு வேதங்களும் வணங்கிய பதியாகும்.

    சிவபெருமான் திருமேனியில் , பாம்பு ஊர்வதாகக் கூறி , "பாலூருமலைப் பாம்பும் பனிமதியுமத்தமும் மேலூரும் செஞ்சடையான்" என்னும் இவ்வூர்த் தேவாரப் பகுதியைக் காட்டுவர்.

    இறைவனது திருப்பெயர் "பலாசவனநாதர்" . இறைவி திருப்பெயர் "பெரியநாயகி."

    இதற்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உண்டு.

    பத்துத்தலையோனைப் பாதத்து ஒரு விரலால்
    வைத்து மலை அடர்த்து வாளோடு நாள் கொடுத்தான்
    நத்தின் ஒலி ஓவா நாலூர்மயானத்து என்
    அத்தன்; அடி நினைவார்க்கு அல்லல் அடையாவே. (பெ.பு. 403)

    பொருள் :

    பத்துத் தலைகளைக் கொண்ட இராவணனின் தோளைத் தன் கால்விரலால் அடர்த்து, இறுதியில் அவனுக்கு, "மந்திரகாசம்" என்ற வாளைக் கொடுத்து அருளியன் சிவபெருமான்.

    அவன் சங்கின் ஒலி எப்பொழுதும் நிறைந்திருக்கும், நாலூர் மயானத்தில் பொருந்தியிருப்பான்.

    அவனது திருவடிகளை எப்போதும் நினைப்பவர்களுக்கு அல்லலே அடையாவாம்.

    அல்லல் − துன்பங்கள்.
    வாளோடு நாள் − வாளும், ஆயுளும்
    நத்து − சங்கு
    அத்தன் − பிதா, அத்தை.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  135. Wed. 21, Sep. 2022, at 9.01 am

    இரத்த ஓட்ட மண்டலம் −4

    இன்றைய பாடமாக...

    இரத்த வெள்ளையணுக்கள் பற்றிப் பார்க்கலாம்.....!

    இரத்த வெள்ளையணுக்கள் என்பது....
    ஒளி ஊடுருவக்கூடிய, நிறமற்ற, நியூக்ளியஸ் உள்ள செல்கள்.. ஆகும்.

    1−கன மில்லி மீட்டர் இரத்தத்தில்...
    8000 முதல் 10000 வரை காணப்படும்.

    இரத்தத்தில் வெள்ளையணுக்கள் அதிகரித்தால்.... இரத்தப் புற்று நோய் உண்டாகும்.

    குறைந்தால்..... நம் உடலில் நோய்க் கிருமிகள் தாக்கப்படும்.

    வெள்ளையணுக்களின் வகைகள்....

    i) துகள்களுள்ள வெள்ளையணுக்கள்.

    எவையென்றால்...

    * நியூட்ரோபில்
    * ஈஸினோஃபில்
    * பேஸோஃபில் ..... ஆகும்.

    ii) துகள்களற்ற வெள்ளையணுக்கள்.

    எவையென்றால்...

    * மோனோசைட்
    * லிம்போசைட்.

    இவைகள்... நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்று நோய்க் கிருமிகளிடமிருந்து நமது உடலைப் பாதுகாக்கிறது.

    அடுத்ததாக....

    இரத்தத் தட்டுகள் :

    இந்த இரத்தத் தட்டுகள்.... காயம் ஏற்பட்ட வுடன், அதிகமாக இரத்தப் போக்கு ஏற்படாமல் கட்டுப்படுத்துவதோடு,... இரத்தம் உறைதலிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

    இவைகள் வட்ட வடிவத்தோடு நியூக்ளியஸ் அற்றுக் காணப்படும்.

    ஒரு கன மி. மீட்டர் இரத்தத்தில் சுமார் 2 முதல் 4 இலட்சம் வரை இந்த இரத்தத் தட்டுகள் உள்ளன.

    மீண்டும் அடுத்த பதிவில் காணலாம்...!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  136. Wed. 21, Sep. 2022 at 10.40 am.

    சைவ சித்தாந்தப் பரல்கள்...

    திருச்சிற்றம்பலம்

    * சிவ தத்துவங்கள் 5....

    *நாதம் , விந்து , சாதாக்கியம் , ஈசுவரம் , சுத்த வித்தை.*

    * வித்யா தத்துவங்கள் 7.....

    *காலம் , நியதி , கலை , வித்தை , அராகம் , புருடன் , மாயை.*

    * ஆன்ம தத்துவங்கள் 24.....

    *அந்தக்கரணம் −4 , ஞானேந்திரியம் − 5 ,
    கன்மேந்திரியம் − 5, தன்மாத்திரை−5 , பூதம் −5 ஆக 24.*

    * தத்துவங்கள் 96.....
    *தத்துவம் 36 , தாத்துவிகம் 60 = 96.*

    * தத்துவங்கள் 36....
    *சிவ தத்துவம் 5; வித்யா தத்துவம் 7; ஆன்ம தத்துவம் 24 ஆக... 36.*

    * தாத்துவிகம் என்பது....
    *தத்துவங்களின் காரியங்கள்.*

    * பிறப்பிடங்கள் 4.....
    *முட்டை, வியர்வை, வித்து, கருப்பை.*

    * பிறப்பின் வகைகள் 7.....
    *தாவரம், ஊர்வன, நீந்துவன, பறப்பன, விலங்கு, மனிதர், தேவர் என ஏழு.*

    * அகப் பூதங்கள்.....
    *ஓசை முதலிய தன்மாத்திரைகள்.*

    * அகப்புறப் பூதங்கள்....
    *செவி முதலிய அறிகருவிகள்.*

    * புறப்புறப் பூதங்கள்....
    *மண் முதலிய ஐம்பூதங்கள்.*

    * அந்த கரணங்கள் 4....
    *மனம் , புத்தி , அகங்காரம் , சித்தம்.*

    * அகங்கார தத்துவத்தின் 3−வகைகள்...
    *தைசதம், வைகாரிகம், பூதாதி.*

    * தைசத அகங்கரத்தில் தோன்றும் தத்துவங்கள்....
    *ஞானேந்திரியம் −5; மனம் − 1.*

    * வைகாரிக அகங்காரத்தில் தோன்றும் தத்துவங்கள்.....
    *கன்மேந்திரியங்கள் −5.*

    * பூதாதி அகங்காரத்தில் தோன்றும் தத்துவங்கள்....
    *தன்மாத்திரை−5; பூதங்கள் − 5.*

    * புறக் கருவிகளான தத்துவங்கள்....
    *மெய் , வாய் , கண் , முக்கு , செவி.*

    * புறக் கருவிகளின் வேறு பெயர்கள்....
    *ஞானேந்திரியங்கள்.*

    * ஞானேந்திரியத்தின் வேறுபெயர்....
    *அறிகருவிகள்.*

    * உட்கருவிகளான தத்துவங்கள்....
    *மனம் , புத்தி , அகங்காரம் , சித்தம்.*

    * உட்கருவிகளின் வேறு பெயர்கள்.....
    *அந்தக் கரணம்.*

    * உட்கருவிகள் யாவை.....
    *கலை, வித்தை, அராகம்.*

    * கன்மேந்திரியங்கள் எவை....
    *வாக்கு , பாதம் , பாணி, பாயு , உபத்தம்.*

    *கன்மேந்திரியத்தின் வேறு பெயர்.....
    *செயற்கருவிகள்.*

    * வாக்கு, பாதம் −இவற்றின் தமிழ்ப் பெயர்....
    *வாய், கால், கை, எருவாய், கருவாய்.*

    * தன் மாத்திரை 5......
    *சப்த , பரிச , ரூப , ரச , கந்தம்.*

    * சப்த , பரிசம் இவற்றின் தமிழ்ப் பெயர்...
    *ஓசை , ஊறு , ஒளி , சுவை , நாற்றம்.*

    * பிருதிவி − தமிழ்ப் பெயர்கள்....
    *மண் , நீர் , நெருப்பு , காற்று , வானம்.*

    * ஐம்பூதங்கள்.....
    *பிருதிவி , அப்பு , தேயு , வாயு , ஆகாசம்.*

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  137. Thu. 22, Sep. 2022 at 6.47 am.

    இயற்பியல் துளிகள் −7.

    * மின் அணு சார்பு அலைச் சமன்பாட்டை கண்டுபிடித்தவர்.... *பால் டிராக் (1928).*

    * முதல் செயற்கை மாற்றுந் தனிம மாக்கலை உற்று நோக்கியவர்.....
    *ரூதர்போர்டு (1919).*

    * டாக்டர் பாபாவுக்கு அடுத்ததாக உள்ள இரு இந்திய அணு விஞ்ஞானிகள்.....
    *டாக்டர் இரா.சிதம்பரம், டாக்டர், ஏ.பி.ஜே.
    அப்துல்கலாம்.*

    * ஒரு தனி அணுவின் புகைப்படம் முதன் முதலாக வெளியிடப்பட்டது....
    *ஜெர்மன் எய்சன்பர்க் பல்கலைக்கழகத் தில்.(1980).*

    * மீள் இயல்பாகும் சிப்பக் கொள்கையை (QED) உருவாக்கியவர்கள்...
    *ரிச்சர் பெயின்மன், ஜீயன் சிமர் சிவன்கர் (1948).*

    * மீள் இயல்பாகும் சிப்பக் கொள்கை ஆய்வை முதலில் செய்தவர்...
    ஜப்பான் அறிவியலார் டொமோன்கா (1943).*

    * சிப்புப் புளளியியல் சிப்ப எந்திர அடிப் படைகளை அளித்தவர்.... *பால் டிராக் (1960).*

    * நியூட்ரினோக்கள் முதன் முதலாக உற்று நோக்கப்பட்டது... *1956−ல்.*

    * டோக்கியான்கள் இருப்பதை முன்மொழிந்தவர்..... *உலகப் புகழ்பெற்ற இயற்பியல் அறிஞர் ஈ.சி.ஜி. சுதர்சன்.(கேரளா).*

    * தொலை இயக்கி (ரொபோட்) என்பது....
    *தானியங்கு கருவித் தொகுதி , எந்திர மனிதன்.*

    * மின்னணுத் துப்பாக்கி என்பது......
    *நிலையான மின்னணுக் கற்றையை உண்டாக்குங் கருவி.*

    * சொல் செயல் முறையாக்கி என்பது....
    *கணிப்பொறி வழியமைந்த தட்டச்சுப் பொறி.*

    * வெளிப்பாட்டுக் கருவியமைப்பு என்பது...
    *செய்திகளை வெளியனுப்பும் கருவி.*

    * வெளிப்பாடு (அவுட்புட்)என்பது..... *விடுவரல் செய்திகளை வெளி அனுப்புதல்.*

    * உட்பாடு (இன்புட்) என்பது..... *இடுவரல் செய்திகளை உள் அனுப்பல்.*

    * கிலோ டன் குண்டு என்பது..... *அணுக்குண்டு. இதன் வெடிதிறன்
    4 × 10(13) (பத்தின் மேல் 13) ஜூல்களுக் குச் சமம்.*

    * அணுப்பிளவிற்கு இயற்கை உலையாக இருப்பது...... *கதிரவன்.*

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  138. Mon. 26, Sep. 2022 at 4.35 pm.

    வேதியியல் துளிகள் −12

    * சோடா பாட்டிலைத் திறந்தவுடன் வரும் சத்தத்திற்குக் காரணம்.... *கார்பன்−டை−ஆக்ஸைடு குமிழ்.*

    * சோடியத்தின் இலத்தீன் பெயர்..... *நேட்ரியம்.*

    * பொட்டாசியத்தின் இலத்தீன் பெயர்... *காலியம்.*

    * சால் அம்மோனியம் என்பது.... *அம்மோனியம் குளோரைடு.*

    * மாணிக்கத்தில் கலந்திருக்கும் வேதிப் பொருள்... *அலுமினியம் ஆக்ஸைடு.*

    * பாக்சைட் என்பது.... *அலுமினியத்தின் முக்கியமான தாது.*

    * பிரைன் என்பது.... *சோடியம் குளோரைடு கரைசல்.*

    * கார்போரண்டம் என்பதன் வேதியியல் பெயர்.... *சிலிகான் கார்பைடு.*

    * கடுங்கார பொட்டாசின் வேதியியல் பெயர்.... *பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடு.*

    * நீலக் கந்தகத் திராவகம் என்பது.... *தாமிர சல்பேட்.*

    * பச்சைக் கந்தகத் திராவகம் என்பது.... *இரும்பு சல்பேட்.*

    * எப்சம் உப்பு என்பது.... *மக்னிசியம் சல்பேட்.*

    * அமில மின்கலத்தில் பயன்படும் அமிலம்... *கந்தக அமிலம்.*

    * ஹேமடைட் என்பது.... *இரும்புத் தாது.*

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  139. Tue. 27, Sep. 2022 at 7.47 am.

    உயிரியல் துளிகள்−10.

    * செரிக்கும் பைகள், தற்கொலைப் பைகள், என்று அழைக்கப்படுபவை...
    "லைசோ சோம்கள்.*

    * பாலி சோம்களை உருவாக்குபவை...
    *ரைபோ சோம்கள்.*

    * புரத உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிப்பவை..... *ரைபோ சோம்கள்.*

    * செல்லின் புரதத் தொழிற்சாலைகள் என அழைக்கப்படுபவை....
    *ரைபோ சோம்கள்.*

    * கார்பன் துகள்களைச் சுபாசிப்பதனால் உருவாகும் நோய்..... *நுரையீரல் புற்றுநோய்.*

    * ஒரு மணி நேரம் வேகமாக நடந்தால் செலவழிக்கப்படும் கலோரி.....
    *சுமார் 300 கலோரி.*

    * பால் வெண்மையாக இருப்பதன் காரணம் ... *ரெனின்.*

    * பென்சிலின் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருள்.... *பூஞ்சை.*

    * வெப்பத்தால் சுலபமாக அழியக்கூடிய வைட்டமின்.... *வைட்டமின்−சி.*

    *நெற்பயிரின் தாவரவியல் பெயர்......
    *ஒரைசா சட்டைவா.*

    * "ஜிம் கார்பெட்" தேசிய பூங்கா......
    *உத்தரப் பிரதேசம்.*

    * தோள்பட்டையில் உள்ள தமனி.....
    *ஹ்யூமரல்.*

    * லூகோசைட்டுகள் என்பது....
    *இரத்த வெள்ளணுக்கள்.*

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  140. Tue. 27, Sep. 2022 at 9.27am.

    திருச்சிற்றம்பலம்.

    திருவிரும்பூளை(Thiru- Irum-Poolai)

    திருத்தல வரலாறு :

    பூளை என்ற செடி, தலத்துக்குறியதாக உடையமையால் இது இப்பெயர் பெற்றது.

    இத்தலம்...இப்பொழுது "ஆலங்குடி"
    என்று வழங்கப் பெறுகிறது. மேலும்... இது காவிரியின் தென்கரையிலுள்ள 98−ஆவது பதி.

    இறைவனின் திருப்பெயர் : காசியாரணியர்.
    (வடமொழியில்... *ஆபத் சகாயர்." )

    இறைவியாரின் திருப்பெயர் : ஏலவார் குழலி.

    விசுவாமித்திரர் பூசித்துப் பேறு பெற்ற பதி. திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற பதிகம் ஒன்று இருக்கிறது.

    கோயிலில் , குருஸ்தலம் தட்சிணாமூர்த்தி விழா சிறப்பானது.

    அவருக்கு உற்சவரும், மூலவரும் உண்டு. அம்மன் கோயில் தனி. இரண்டிற்கும் இடையில் ஒரு மண்டபமும் உண்டு.

    ஆளுடைய பிள்ளையார் திருவாறை வடதளியினின்றும் எப்பொருளுமாய் நின்ற இறைவரது இரும்பூளை என்னும் தலத்தை எய்தித் தொண்டர் தொழ, அண்டபிரான் கோயிலை அடைந்து, இறைஞ்சி, அடியவர்களை வினவியவாற்றால் அருமறையின் பொருள் விரியப் பாடியது இத்திருப்பதிகம்.

    சுற்று ஆர்ந்து அடியே தொழுவீர்: இது சொல்லீர்
    நல் − தாழ்குழல் நங்கையொடும் உடன் ஆகி,
    எற்றே இரும்பூளை இடம் கொண்ட ஈசன்
    புற்று ஆடுஅரவோடு என்பு பூண்ட பொருளே ?

    பொருள் :

    நீண்டக் கூந்தலைக் கொண்ட உமாதேவியுடன் உடனாகிய ஈசன் இரும்பூளைத் தலத்தில் கோயில் கொண்டுள்ளான்.

    அவன் புற்றில் பொருந்தி வாழும் பாம்பினை ஆபரணமாக அணிந்து உள்ளானே..... ஏன் ?

    அடியார்களாகிய சுற்றத்தாருடன் கூடியிருந்து அவனையே போற்றும் அன்பர்களே..... ! கூறுங்கள்.

    You holy people you worship our Lord Civan with ardent devotion. Then answer my point.

    Our Lord selected the city, Thiru-irum-poolai, as His abode a per His desires.

    Goddess Umaa wear as on ornaments the snake, a dreadful creature... ?

    The devotees of our Lord, who worship Him with your kith and kin, may explain
    this strange behaviour of our Lord.

    Thiru-ch-Chitrambalam.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  141. Tue. 27, Sep. 2022 at 3.56 pm.

    இரத்த ஓட்ட மண்டலம் − 5

    இதுவரை இரத்தத் தட்டுகள் வரை பார்த்துள்ளோம். இன்று நாம் பார்க்கப் போவது....

    இரத்தத்தின் முக்கிய வேலைகள் (பணிகள்) .......!

    * இரத்தம் சீரண உறுப்புகளிலிருந்து உணவுச் சத்துக்களை செல்களுக்கு எடுத்துச் செல்கிறது.

    * பிராண வாயுவை... நுரையீரல்களி
    லிருந்து, உடலின் எல்லா செல்களுக்கும் எடுத்துச் செல்வதுடன், எல்லா செல்களி லும் உள்ள கரியமில வாயுவை நுரையீர லுக்கும் கொண்டு செல்கிறது.

    * செல்களிலிருந்து கழிவுப் பொருட் களை சிறுநீர்கம், நுரையீரல், வியர்வைச் சுரப்பிகளுக்கு எடுத்துச் செல்கிறது.

    * ஹார்மோன்களை நாளமில்லா சுரப்பி களிலிருந்து, செல்களுக்கு எடுத்துச் செல்கிறது.

    * நொதிகளை பல்வகைச் செல்களுக்கு அனுப்புகிறது.

    * இரத்தம் உறைதலின் மூலமாக உடலின் திரவ இழப்பு தடுக்கப்படுகிறது.

    * இரத்தத்தில் அதிக அளவு நீர் அடங்கியிருப்பதால், உடலின் வெப்ப நிலையை ஒழுங்குபடுத்துகிறது.

    * நிணப் பொருட்கள், அன்னிய நுண்ணியிரிகள் உடலினுள் புகாமல் இருக்கும்படி, இரத்தப் பிளாஸ்மாவில் காணப்படக்கூடிய வெள்ளணுக்கள் உடலைப் பாதுகாக்கின்றன.

    அடுத்து... இரத்தம் உறைதல்.....!

    இரத்தம் உறைதலுக்கு நான்கு முக்கிய காரணிகள் உள்ளன.

    அவை.....

    * புரோத்ராம்பின்
    * த்ராம்போ பிளாஸ்டின்
    * கால்சியம்
    * ஃபைபிரினோஜன் என்பவை.

    இவற்றில் புரோத்ராம்பின், கால்சியம், ஃபைபிரினோஜன் இரத்தத்திலும்....

    த்ராம்போ பிளாஸ்டின் திசுக்களிலும் காணப்படுகிறது.

    இரத்தம் வெளியேறும்போது... காயமடைந்த திசுக்களிலிருந்து த்ராம்போ பிளாஸ்டின் விடுவிக்கப் படுகிறது.

    இத்திராம்போ பிளாஸ்டின் இரத்தத்திலுள்ள செயல்படாத புரோத்ராம்பினை கால்சியம் (அதாவது...
    Ca++ ) முன்னிலையில், செயல்படக் கூடிய த்ராம்பினாக மாற்றுகிறது.

    இந்த செயல்படும் த்ராம்பினானது கரையக்கூடிய பிஸாஸ்மா புரத ஃபைபிரினோஜனுடன் செயல் புரிந்து, கரையாத நேர்த்தியான ஃபைபிரின் இழைகளை உருவாக்குகிறது.

    இந்த ஃபைபிரின் இழைகள் தாம் காயத் தின் மீது படிந்து, இரத்த அணுக்களை வெளியேறா வண்ணம் தடுக்கிறது.

    இரத்தம் உறையும் விதம் கவனியுங்கள்..!

    * புரோத்ராம்பின்(செயல்படாத)--------> த்ராம்பின்(செயல்படும்)
    +த்ராம்போ பிளாஸ்டின் (Ca++).

    * த்ராம்பின்(செயவ்படும்)----------> ஃபைபிரின் இழைகள்(கரையாத) + ஃபைபிரினோஜன்(கரையும்).

    மீண்டும் அடுத்த பதிவில்....

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  142. Tue. 27, Sep. 2022 at 8.10 pm.

    அமிலத் துளிகள் − 13

    * இரத்தத்தில் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கனிமம்... *குரோமியம் உப்பு.*

    * வைட்டமின்−டி யின் வேதிப்பெயர்....
    *கால்சிஃபெரால்.*

    .* வைட்டமின்−கே−யின் வேதிப்பெயர்...
    *நாப்தாகுயினான்.*

    * வைட்டமின்−பி3−யின் வேதிப்பெயர்...
    *பென்தனிட் அமிலம்.*

    * பென்சீன் அமைப்பை வெளிப்படுத்திய வர்.... *ஆகஸ்டு கெகுளி.*

    * கார்பன்−டை−ஆக்ஸைடு படலத்தைக் கண்டுபிடித்தவர்... *சி.கே.என். படேல்.*

    * சிரிப்பூட்டும் வாயுவைக் கண்டுபிடித்த
    வர்.... *ஜோசப் ப்ரீஸ்ட்லி.*

    * முதல் ஹைட்ரஜன் பலூனை வடிவமைத்தவர்... *ஜாக்குயிஸ் சார்லஸ்.*

    * அழுகிய முட்டையின் மணமுடைய வாயு.... *ஹைட்ரஜன் சல்ஃபைடு.*

    * முதல் நவீன வேதியியலறிஞர் எனப் புகழப்பட்டவர்..... *இராபர்ட் பாயில்.*

    * நிலக்கரி வாயுவிலிருந்து முதலில் விளக்கை ஏற்றியவர்... *ஜார்ஜ் நிக்ஸன்.*

    * நியான் விளக்கைக் கண்டுபிடித்தவர்...
    *ஜார்ஜஸ் க்ளாட்(பிரான்ஸ்).*

    * வல்கனைஸ்டு இரப்பரைக் கண்டு பிடித்தவர்.... *சார்லஸ் குட்இயர்.*

    * ஹீலியம் கண்டு பிடித்தவர்....
    *ஜோசப் நார்மன் லாக்பெயர்.*

    * மீத்தேன் வாயுவின் வேறு பெயர்.... *மார்ஷ்.*

    * நீர் நீங்கும்போது உடல் இழக்கும் பொருள்.... *சோடியம் குளோரைடு.*

    * செயற்கை முறையில் தயரிக்கப்படும் மூலகம்.... *கலிபோர்னியம்.*

    * குடிக்கும் சோடாவின் தன்மை... *அமிலம்.*

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  143. Tue. 27, Sep. 2022 at 8.54 pm.

    நாடிப் பயிற்சி − 69

    கடந்த பாடத்தில், தும்மலைத் தடுத்தலால் உண்டாகும் பிணிகள் பற்றி கொட்டாவி அடக்குவது வரை பார்த்து வந்துள்ளோம்.
    அதன் தொடர்ச்சி...

    பசி & தாகம் (நீர்வேட்கை) ......!

    பசியையும், நீர் வேட்கையையும் அடக்கினால்.... உடலும், உடலில் அமைந்திருக்கிற கருவிகளும் தத்தம் தொழில்களைச் சரிவர செயல்படுத்தாது.

    ஆகவே... சூலை, பிரமை, முகவாட்டம்,இளைப்பு, சந்துக்களில் எல்லாம் நோவு ஆகியவற்றை ஏற்படுத்தும்.

    இளைப்பு எவ்வாறு உண்டாகுமென் றால்... தக்க உணவு கிடைக்காவிடினும், பல நாட்களாகப் பசியை அடக்கி வருந்துவதாலும்.... மூலத்தில் சூடு கொண்டு, அச்சூட்டால், ஏழு உடற்தாதுக்களும் வற்றி.... அதனால் வரக்கூடிய "௯ஷயம்" என்னும் இளைப்பு நோய் உண்டாகும்.

    அடுத்ததாக... காசம் (இருமல்) & இளைப்பு (ஆயாசம்) :

    காசம் என்னும் ஈளை இருமலை அடக்கினால்.....

    மிகுதியாக இருமல் நோய் உண்டாகி நம்மை வருத்தும்.

    மூசசு விடும்போது... அம்மூச்சில் கெட்ட வாடை(மணம்) வீசும். மட்டுமின்றி.. மார்பின் உட்கருவியாகிய இருதய நோயும் உண்டாகும்.

    இளைப்பு என்னும் ஆயாசத்தை அடக்கினால்.....

    வெப்பத்தில் உண்டாகும் நீர்மேகம் பெருகும். குன்ம நோய் உண்டாகும்.

    திடீரென்று அறிவைக் கெடுத்து, தன்னை அறியாதபடி செய்கிற மூர்ச்சை நோயும், குளிரும் உண்டாகும்

    காசம் என்னும் சொல்... களைப்பையும், இருமலையும் உணர்த்தும் சொல். இங்கு இது இருமலை உணர்த்துகிறது.

    மீண்டும் அடுத்த பதிவில்...

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  144. This comment has been removed by the author.

    ReplyDelete
  145. Fri. 30, Sep. 2022 at 7.18 pm.

    இயற்பியல் துளிகள் −8

    * முதல் அறிவியல் கழகத்தை நிறுவியவர்.... *ஜியாம்பட்டீஷ்டோ டெல்லா போர்ட்டா. 1560 (இத்தாலிய இயற்பியலார்.)*

    * வினாடி ஊசல் என்றால்.........
    *2−வினாடி அலைவு நேரமும், 100 செ.மீ நீளமுமுள்ள ஊசல்.*

    * தனி ஊசல் என்றால்...... *முறுக்கற்ற
    மெல்லிய நூலில் பளுவாகத் தொங்கவிடப்பட்டிருக்கும் குண்டு.*

    * காற்று என்றால்.... *பல வளிகளின் கலவை.*

    * காற்றுகளின் வகைகள்......
    *வாணிபக் காற்று, பருவக் காற்று, முனைக் காற்று, நிலக் காற்று, கடல் காற்று.*

    * காற்றின் வேலைகள் .....
    *அரித்தல், கடத்தல், படிய வைத்தல்.

    * பாரமானி என்றால்....
    *காற்றழுத்தத்தை அளக்க உதவும் கருவி.*

    * ஏரோசால்..அதாவது கூழ்மப் படலம் என்றால்... *இது ஒரு கூழ்மத் தொகுதி. இதில் சிதறிய ஊடகம் "வளி". எ.கா. பனி, மூடுபனி.*

    * ஈரநிலைமானி என்றால்....
    *காற்றிலுள்ள ஈரப்பதத்தை அளக்கும் கருவி.*

    * ஈரநிலையின் வகைகள்....
    *தனி ஈரநிலை, ஒப்பு ஈரநிலை.*

    * விரைவு என்றால்.....
    *ஒரு வினாடியில் பொருள் கடக்கும் தொலைவு.*

    * கவர்னர் அதாவது ஆளி என்றால்....
    *எந்திரங்களின் விரைவைச் சீராக்கும் கருவி.*

    * விசையாழி என்றால்.....
    *காற்று, நீர், நீராவி முதலியவற்றின் உந்துதலால் இயக்கப்படும் ஊர்தி.*

    * விசையாழியின் வகைகள்.....
    *கற்றாழி, நீராழி, நீராவியாழி.*

    * வெப்ப ஓட்டம் என்றால்.....
    *ஓரலகு நேரத்தில், ஓரலகு பரப்பில், இடமாற்றம் பெரும் வெப்பம்.*

    * நீரின் உள்ளுறை வெப்பம்.....
    *1 கிராமுக்கு 80 கலோரி.*

    * நீராவியின் உள்ளுறை வெப்பம்.....
    *1 கிராமுக்கு 537 கலோரி.*

    * உள்ளுறை வெப்பத்தைக் கண்டறிந்தவர்.... *ஜோசப் பிளேக் (1761).*

    * நீராவியால் ஏற்படும் புண் கடுமையாக இருப்பதன் காரணம்..... *வெப்பம் 537 கலோரியாக இருப்பதால்.*

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  146. Sat. 01, Oct, 2022 at 6.15.

    இரத்த ஓட்ட மண்டலம் − 6

    கடந்த பாடத்தில்... இரத்தம் உறைதல் பற்றி பார்த்தோம்.

    இன்றைய பாடமாக... இரத்தத்தின் வகைகள் பற்றிப் பார்க்கலாம்.

    மனிதர்களின் இரத்தத்தில், 4− வகை இரத்தப் பிரிவுகள் உள்ளன. மேலும், இரத்த இழப்பினால் ஏற்படும் விளைவு களில் இருந்து காப்பதற்காக நோயாளி களுக்கு இரத்தத்தை உட்செலுத்த , மருத்துவ அறிவியலறிஞர்கள் பல ஆண்டுகளாக பெருமுயற்சி செய்து.. "கார்ல் லேண்ட்ஸ்டெய்னர்" என்பவரால் ABO முறைப்படி இரத்தத்தை வகைப்படுத்தி உட்செலுத்துவது கண்டு பிடிக்கப்பட்டது.

    மனிதர்களின் இரத்தத்தில் நான்கு வகை இரத்தப் பிரிவுகளாவன... A, B, AB, மற்றும் O ஆகும்.

    சரி, இரத்தம் கொடுப்பது மற்றும் இரத்தம் பெற்றுக் கொள்வது எவ்வாறு ?

    * A - வகை இரத்தப் பிரிவை உடையவர்...
    A மற்றும் AB - இரத்தப் பிரிவினருக்கு கொடுக்கலாம்.

    * B- வகை இரத்தப் பிரிவை உடையவர்....
    B மற்றும் AB- இரத்தப் பிரிவினருக்கு கொடுக்கலாம்.

    * AB- வகை இரத்தப் பிரிவை உடையவர்... AB − இரத்தப் பிரிவினருக்கு மட்டுமே வழங்க முடியும். எனவே, இவ்வகை இரத்தப் பிரிவையுடையவர்கள் அனைவரிடத்தும் பெற்றுக் கொள்பவர் (Universel Recipient) என்று அழைக்கப்படுபவர்.

    O− வகை இரத்தப் பிரிவை உடையவர்... அனைத்து வகை இரத்தப் பிரிவினருக்கும் வழங்கலாம். எனவே, இவ்வகை இரத்தப் பிரிவையுடைய வர்கள் உலகக் கொடையாளி (Universel - Donor) என்று அழைக்கப்படுவர்.

    கவனிக்க.....!

    * A − பிரிவு இரத்த முடையவர்... A மற்றும் O - பிரிவு இரத்தத்தைப் பெறலாம்.

    * B- பிரிவு இரத்த முடையவர்.... B மற்றும் O- பிரிவு இரத்தத்தைப் பெறலாம்.

    * O− பிரிவு இரத்தமுடையவர் O − பிரிவு உடையவரிடமிருந்து மட்டுமே பெற முடியும்... என அறிந்து கொள்ளுங்கள்.

    இரத்த ஓட்ட மண்டலம் நடத்தப்பட்டு
    விட்டது.

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  147. Tue. 04, Oct. 2022 at 11.55 am.

    அமிலத் துளிகள் −14

    * பால் புளிக்கும் போது உருவாகும் அமிலம்.... *லாக்டிக் அமிலம்.*

    * இலேசான தனிமம் ..... *நைட்ரஜன்.*

    * சாதாரண நிலையில் காற்றாலும், நீராலும் பாதிக்கப்படாத உலோகங்கள்.... *பிளாட்டினம் மற்றும் தங்கம்.*

    * பிளீச்சிங் பவுடரின் வேதியியல் பெயர்.... *கால்சியம் குளோரோ ஹைப்போ குளோரேட்.*

    * சிகரெட் லைட்டரில் பயன்படும் வாயு...
    *பியூட்டேன்.*

    * தக்காளி கூட்டுத் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பொருள்...
    *சோடியம் பென்சோட்.*

    *குடிக்கும் சோடாவில் இருக்கும் வாயு.... *கார்பன்−டை−ஆக்ஸைடு.*

    * பென்சிலின் முனை தயாரிக்கப் பயன்படும் பொருள்... *கிராபைட்.

    * கிராபைட் என்பது... *தனிம கார்பன்.*

    * கிராபைட் மற்றும் வைரத்திற்கு இடையேயுள்ள தொடர்புக்கு பெயர்... *அல்லோட்ரோப்ஸ்.*

    * பொட்டாசியத்தின் குறியீடு.... *K.*

    * புருசிக் அமிலம் என்பது....
    *நைட்ரஜன் சயனைடு.*

    * இரும்புத் தகடுகளைத் துத்தநாக முலாம் பூசி பாதுகாப்பதற்கு பெயர்.... *கால்வானிகேசன்.*

    * இரும்பின் லத்தீன் பெயர்..... *ஃபெர்ரம்.*

    * போலி நிறப் பொன்... *இரும்பு பைரைட்டுகள்.*

    * அணுநிறை 2− கொண்ட ஹைட்ரஜன் ஐசோடோப்பின் பெயர்....
    *டியூட்டீரியம்.*

    * கிளாபர் உப்பு என்பது....
    *கிளிஸ்டாலின் சோடியம் சல்பேட்.*

    * ஹேமடைட் என்பது... *இரும்புத் தாது.*

    * வேதியியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர்.... *லவாய்சியர்.*

    * வாயுக்களால் நிரப்பப்பட்ட கோள்கள்....
    *செவ்வாய், புதன், வெள்ளி, பூமி, நெப்டியூன், யுரேனஸ்.*

    * பாக்சைட் மிகுதியாக உற்பத்தி செய்யப்படும் மாநிலம்... *தமிழ்நாடு.*

    * ஊடுருவும் திறன் கொண்ட கதிர்கள்... *காமா கதிர்கள்.*

    * ஹோமியோபதியின் தந்தை எனப் போற்றப்படுபவர்.... *சார்லஸ் ஹனிமேன்.*

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  148. Tue. 04, Oct, 2022 at 12.45 pm.

    சரஸ்வதி பூஜையாகிய இந்நன்னாளில்... புதிதாக ஒரு தலைப்பு கொடுக்க விரும்புகிறேன்..

    நமது உடலுக்கு உருவத்தைக் கொடுத்து, அழகைத் தரக்கூடிய...
    "எலும்பு மண்டலம்" பற்றிப் பார்க்கலாம்.

    எலும்பு மண்டலம் :

    மனித உடலில்...எலும்பு மண்டலத்தில் சுமார்... 206 எலும்புகள் உள்ளன.

    உடலுக்கு உருவத்தைக் கொடுக்கக் கூடிய ஒரு உருவமைப்புச் சட்டமாக இவ்வெலும்பு மண்டலம் அமைந்துள்ளது.

    இவ்வெலும்பு மண்டலம்... உடலின் மென்மையான உள் உறுப்புகளைப் பாதுகாக்கிறது.

    எலும்பு மண்டலம்... 2− வகையாகப் பிரிக்கப்படுகிறது.
    * மைய எலும்பு மண்டலம்.
    * இணை உறுப்பு எலும்பு மண்டலம்.

    இந்த மைய எலும்பு மண்டலத்தில் உள்ள எலும்புகள் உடலின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.

    இவ் மைய எலும்பு மண்டலத்தின் பகுதிகள்....கபால எலும்பு, ஹையாய்டு (Hyoid) எலும்பு, கேள்வி உணர்வு எலும்பு (auditary), விலா எலும்புகள், மார்பு எலும்புகள் மற்றும் முதுகெலும்பு ஆகியனவை ஆகும்.

    * இணை உறுப்பு எலும்பு மண்டலத்தில் அடங்கியுள்ளவை.... கை , தோள்பட்டை ,கால் , இடுப்பு எலும்புகள் ஆகும்.

    மைய எலும்பு மண்டலம் ....!

    கபாலம் :

    கபால எலும்புகள் தலைப் பகுதியில் உள்ளன.. இவை இரு பிரிவுகளைக் கொண்டது...

    ஒன்று... கபால எலும்புகள். இவை மொத்தம் 8− எலும்புகள்.

    மற்றொன்று... முகம். முகத்தில் மொத்தம் 14− எலும்புகள் உள்ளன.

    கபால எலும்புகளாவது...!

    * நெற்றி எலும்பு − 1
    * மண்டை பக்க எலும்புகள் − 2
    * பொட்டு எலும்புகள் − 2
    * பின் மண்டை எலும்பு − 1
    * ஆப்பு எலும்பு − 1
    * சல்லடை எலும்பு − 1

    மீண்டும் அடுத்த பதிவில்....

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  149. Thu. 06, Oct. 2022 at 6.57 am.

    நாடிப் பயிற்சி − 70

    தும்மலை அடக்குவதால் ஏற்படும் பிணிகளைப் பற்றி பார்த்து வருகிறோம்.

    தொடர்ந்து....

    * தூக்கம் அதாவது நித்திரை :

    நித்திரையை அடக்கினால் ஏற்படும் நோய்கள்.. நாள்தோறும் தலைக்கனம், கண்கள் சிவத்தல், செவிடு, அரைப் பேச்சு முதலியவை உண்டாகும்.

    * வாந்தி :

    வாந்தியை அடக்கினால், பாண்டு, நமை, கண் நோய்கள், காய்ச்சல், இருமல், புழுக் கடியினால் உண்டாகும் தடிப்புக் குட்டம் போன்ற தடிப்புகள் இவைகள் உண்டாகும். மேலும் பித்தத்தைக் குறைக்கிற வாந்தியை அடக்கினால்...மேலும் பித்தம் மிகுந்து, அதன் செயலால் வரக்கூடியத் தடிப்புக் குட்டம் போன்ற நோய்கள் உண்டாகும்.

    இத் தடிப்புக் குட்டம் இரண்டு விதத்தில் உருவாகும்.

    ஒன்று பித்தத்தைக் குறைக்கிற வாந்தியை அடக்கி, அதன் விளைவால் பித்தம் மிகுந்தாலும்...தடிப்புக் குட்டம் உண்டாகும்.

    இரண்டாவதாக... புழுக் கடியினாலும் இத் தடிப்புக் குட்டம் உண்டாகும்.

    இப்புழுக்கடியால் வரும் தடிப்புக் குட்டம்... *காலில் கடித்தால்... திமிருண்டாகும்.
    *கையில் கடித்தால்... விரல் குன்றும்.
    *உடம்பில் கடித்தால்... தடிப்பு உண்டாகும்.
    கழுத்தில் கடித்தால்.... பொரிந்து காணும்.

    * விழி நீர் :

    கண்களிலிருந்து வரும் நீரை அடக்கினால்.... பீளிசம், தலையில் புண், கண் நோய், தமாக வாயுவும், தலைப் புண்களில் நீர் கூடினால்... குன்ம நோயும் உண்டாகும்.

    மீண்டும் அடுத்த பதிவில்....

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  150. Thu. 06, Oct. 2022 at 8.37 pm.

    இயற்பியல் துளிகள் − 9

    * ஒளியின் வகைகள்...
    *இயற்கை ஒளி(சூரிய ஒளி)*
    *செயற்கை ஒளி (மின்னொளி).*

    * ஒளியிலுள்ள நிறங்கள்.......
    *ஊதா , அவுரி , பச்சை , நீலம் , மஞ்சள், சிவப்பு , கிச்சிலி (7−நிறங்கள்).*

    * நிறமாலையிலுள்ள நிறங்கள்.....
    *ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள் கிச்சிலி, சிவப்பு(விப்ஜியார்).*

    * நிறமாலையின் வகைகள்.....
    *தூய நிறமாலை, மாசு நிறமாலை, தொடர் நிறமாலை.*

    * ஆடி என்பது.... *ஒளி பிரதிபலிக்கும் பரப்பு ஆகும்.*

    * கண்ணாடி வில்லையின் வகைகள்......
    *குழிவில்லை, குவிவில்லை.*

    * மின்காந்த நிறமாலையில் அடங்கு பவை........ *X கதிர்கள், புற ஊதாக் கதிர்கள், அகச் சிவப்புக் கதிர்கள், வானொவி அலைகள்.*

    * ஒளியின் நேர்விளைவை அளக்க ஆய்வு செய்தவர்கள்..... *மைக்கல்சன், மார்லி (1887).*

    * குதிகுடை என்பது..... *விண்குடை. வான ஊர்தியிலிருந்து இறங்கவும், வான வெளிக்கலம் காற்று வழியாக மீளும் போது, தரையை அடைய பயன்படும் குடை போற்ற அமைப்பு.*

    * எலக்ட்ரானைக் கண்டறிந்தவர்......
    *ஜே.ஜே. தாம்சன்.*

    * எதிர் ஏற்றத் துகள் உள்ளது...என்பதை முன்மொழிந்தவர்........ *பால் டிரக் என்பவர்.(1930−ல்).*

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  151. Thu. 06, Oct. 2022 at 9.32 pm.

    உயிரியல் துளிகள் − 11

    * புறாவின் இதயம் .... *4−அறைகளைக் கொண்டது.*

    * பறவைகளுக்கு வியர்வைச் சுரப்பி..... *இல்லை.*

    * நாய்க் குடைக்கு வேர் என்பது... *இல்லை.*

    * சுறா மீனுக்கு கருப்பைகள் என்பது... *இரண்டு.*

    * சலூகி என்பது.... *ஒரு வகை நோய்.*

    * இறக்கைகள் இல்லாத பறவை... *கிவி.*

    * சிங்கம் மணிக்கு.... *80 கி.மீ. ஓடும்.*

    * உலகிலேயே பெரிய பூங்கா.....
    *எல்லோஸ்டோன் தேசியப் பூங்கா.*

    * இந்தியன் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பறவை.... *சிவப்பு புல் புல்.*

    * எடை மிகுந்த பறவை.....
    *கோரி பஸ்டர்டு.*

    * கூடு கட்டும் மீன்.... *ஸ்டிக்கிள் பேக்ஸ்.*

    * வேகமாக ஓடக்கூடிய பறவை.......
    *ஸ்விஃப்ட்.*

    * பறவைக் குஞ்சுகள் பறக்கும் பருவத்தில் அழைக்கப்படுவது......
    *ஃப்ளட்க்ளிங்.*

    * நீண்ட இறக்கைகளைக் கொண்ட பறவை.... *அல்பட்ரோஸ்.*

    * இளமையான கங்காரு அழைக்கப் படுவது... *ஜோப்.*

    * ஆண் கழுதை அழைக்கப்படுவது... *ஜாக்.*

    * நாதசுரம் தயாரிக்கப்படும் மரம்... *ஆச்சா மரம்.*

    * நீச்சல் அடிக்க தன் இறக்கைகளை பயன்படுத்தும் பறவை.... *பெங்குவின்.*

    * உயிரியின் இயற்பியல் தளம்... *புரோட்டோபிளாசம்.*

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  152. Fri. 07, Oct2022 at 6.45 am.

    அமிலத் துளிகள் − 15

    * எலுமிச்சையில் உள்ள அமிலம்.... *சிட்ரிக் அமிலம்.*

    * கண்ணாடியில் ரசம் பூஅசப் பயன்படும் கரிமச் சேர்மம்..... *அஸிட்டால்டிஹைடு.*

    * செயற்கை மழையை உண்டாக்க பயன்படும் பொருள்.... *வெள்ளி அயோடைடு.*

    * உலர் பனிக்கட்டி என்பது.... *திடநிலை கார்பன்−டை−ஆக்ஸைடு.*

    * சமையல் எரிவாயுவில், வாயுக் கசிவை கண்டறியப் பயன்படுத்தப்படும் பொருள்..... *மெர்காப்டன்கள்.*

    * சூடான எண்ணெய் மீது நீர்த்துளிகள் விழும்போது சிறிய வெடிச்சப்தம் கேட்பது.... *எண்ணெயின் கொதிநிலை, நீர் கொதிநிலையைவிட உயர்வு என்பதனால்.*

    * தீப்பெட்டியின் பக்கங்களில் உள்ள பொருள்.... *சிவப்பு பாஸ்பரஸ்.*

    * சோடா நீரில் கலந்துள்ள வாயு.... *கார்பானிக் அமிலம்.*

    * தூக்க மருந்தாக பயன்படும் அமிலம்.... *டார்டாரிக் அமிலம்.*

    * கண்ணாடியைக் கரைக்கும் அமிலம்...
    *ஹைட்ரோ புளோரிக் அமிலம்.*

    * பூண்டு−வின் மணமுடைய வாயு.... *பாஸ்பீன்.*

    * உணவுத் தானியங்களை சேமித்து பாதுகாக்க உதவும் பொருள்.. *வினிகர்.*

    * காஃபி, தேநீரில் உள்ள முக்கிய வேதிப்பொருள்.... *நிகோடின்.*

    * வாகனங்களில் இருந்து வெளியேறும், சுற்றுப் புறச் சூழலை மாசுபடுத்தும் வாயு.... *நைட்ரஜன் ஆக்ஸைடு.*

    * உயிரியல் சோதனைச் சாலையில் உடல்களைப் பதப்படுத்தி வைக்கப் பயன்படும் வேதிப் பொருள்.... *பென்சால்டிஹைடு.*

    * கரும்பலகை சாக்குக் கட்டியில் (சாக்பீஸ்) அடங்கியுள்ள பொருள்...."*கால்சியம் குளோரைடு.*

    * சோடியம் தயோசல்பைடு என்பது....
    *சலவை சோடா.*

    * ரேயான் என்பது.. *செயற்கை இரப்பர்.*

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  153. Fri. 7, Oct. 2022 at 4. 02 pm.

    எலும்பு மண்டலம் − 2

    கடந்த பாடத்தில்.. எலும்பு மண்டலத்தில் கபால எலும்புகளைப் பற்றி பார்த்தோம்.

    இன்றைய பாடமாக... கபால எலும்புகளுக்கு இடையேயுள்ள பொருத்து வாய்கள் பற்றி பார்க்க இருக்கிறோம்.

    பொருத்துவாய்கள் என்பது.... கபால எலும்புகளை ஒன்றோடொன்று அசையாது இணைக்கும் ஒரு அமைப்பாகும்.

    இவ்வமைப்பு பொருத்துவாய்களுக்கு இடையில் சிறிதளவு இணைப்புத் திசுக்கள் இதனில் காணப்படும்.

    இதன்படி... 4−கபால எலும்புகளுக்கு இடையேயுள்ள, முக்கியமான பொருத்துவாய்களைப் பற்றிப் பார்ப்போம்....!

    1) கரோனல் இணைப்பு
    2) சாஜிட்டல் இணைப்பு
    3) லாம்ப்டாய்ட்டல் இணைப்பு
    4) ஸ்குவாமோசல் இணைப்பு

    * கரோனல் இணைப்பு (Cornonoal sutures) :

    கரோனல் இணைப்பானது... நெற்றி எலும்பிற்கும், இருபக்க மண்டை எலும்பிற்கும் இடையே அமைந்துள்ளது.

    அடுத்து... சாஜிட்டல் இணைப்பு (Sagittal sutures) :

    சாஜிட்டல் இணைப்புகள்....இருபக்க மண்டை எலும்புகளுக்கு இடையே உள்ள இணைப்பாகும்.

    அடுத்ததாக... லாம்ப்டாய்ட்டல் இணைப்பு (Lambdoidal sutures ) :

    இவ்விணைப்பு... மண்டை பக்க எலும்பு களுக்கும், பின் மண்டை எலும்பிற்கும் இடையேயுள்ள.. இணைப்பாகும்.

    அடுத்து... ஸ்குவாமோசல் இணைப்பு (Squamosal sutures ) :

    இந்த ஸ்குவாமோசல் இணைப்பானது.. இரண்டு மண்டை பக்க எலும்புகளுக்கும், பொட்டெலும்புகளுக்கும் இடையே உள்ளது.

    மீண்டும் அடுத்த பதிவில்...!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  154. Fri. 07, Oct. 2022 at 9.11pm.

    உபநிடதங்கள் − 18

    * ஈசம்
    * மாண்டுக்யம்
    * மைத்திரீ
    * கடம்
    * ஸ்வேதாஸ்வதம்
    * பைங்கலம்
    * ஜாபநூலம்
    * வஜ்ரசூசிகம்
    * ப்ருஹதாரண்யகம்
    * கெளஷிதகி
    * தைத்தீரியம்
    * ஐதேரேயம்
    * ப்ரச்சனம்
    * முண்டகம்
    * சாந்தோக்யம்
    * கபாலம்
    * கைவல்யம்
    * ககனம்

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  155. Fri. 7, Oct. 2022 at 9.10 pm.

    சிவனைப் போற்றும் புராணங்கள்..!

    1) சிவபுராணம்
    2) இலிங்கப் புராணம்
    3) ஸ்கந்த புராணம்
    4) மார்க்கண்டேய புராணம்
    5) அக்னி புராணம்
    6) மதஸ்ப புராணம்
    7) கூர்ம புராணம்.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  156. Fri. 07, Oct. 2022 at 9.23 pm.

    குருவருளால் முத்தி பெற்றவர் − 12.

    * சுந்தரமூர்த்தி சுவாமிகள்
    * திருநாவுக்கரசு சுவாமிகள்
    * குலச்சிறை நாயனார்
    * பெருமிழலைக் குறும்பர்
    * அப்பூதியடிகள்
    * திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள்
    * திருமூலர்
    * சோமாசிமாறர்
    * கணநாத நாயனார்
    * நெடுமாறர்
    * மங்கையர்க்கரசியார்
    * திருநீலகண்ட யாழ்ப்பாணர்

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  157. Fri. 07, Oct. 2012 at 9.34 pm.

    சிவனடியாரை வழிபட்டு முத்தி பெற்றவர் − 19

    * திருநீலகண்டர்
    * இயற்பகையார்
    * இளையான்குடிமாறர்
    * மெய்ப்பொருளார்
    * விறன்மிண்டர்
    * அமர்நீதியார்
    * ஏனாதிநாதர்
    * மானக்கஞ்சாறர்
    * திருக்குறிப்புத் தொண்டர்
    * காரைக்காலம்மையார்
    * மூர்க்கர்
    * சிறுதொண்டர்
    * புகழ்ச்சோழர்
    * நரசிங்கமுனையரையர்
    * கலிக்கம்பர்
    * சத்தியார்
    * முனையாடுவார்
    * இடங்கழியார்
    * நேசர்

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  158. Fri. 07, Oct. 2022 at 9.49 pm.

    சிவலிங்கத்தால் முத்தி பெற்றவர் − 30

    * எறிபத்தர்
    * கண்ணப்பர்
    * குங்குலியர்
    * அரிவாட்டாயர்
    * ஆனாயர்
    * மூர்த்தியார்
    * முருகனார்
    * உருத்திரபசுபதியார்
    * திருநாளைப்போவார்
    * சண்டேசுரர்
    * திருநீலநக்கர்
    * நமிநந்தியடிகள்
    * ஏயர்கோன் கலிக்காமர்
    * தண்டியடிகள்
    * சாக்கியர்
    * சிறப்புலியார்
    * சேரமான் பெருமாள்
    * கூற்றுவர்
    * அதிபத்தர்
    * கலியர்
    * ஐயடிகள் காடவர்கோன்
    * கணம்புல்லர்
    * காரியார்
    * வாயிலார்
    * கழற்சிங்கர்
    * செருத்துணையார்
    * புகழ்த்துணையார்
    * கோட்புலியார்
    * பூசலார்
    * கோச்செங்கர்

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  159. சுந்தரமூர்த்தி சுவாமிகளைப் பெற்றதால் பெருமை கொண்டவர்... சடையனார், இசைஞானியார்.

    எனவே....
    குருவருளால் முத்தி பெற்றவர் −12
    சிவலிங்கத்தால் முத்தி பெற்றவர் − 30
    சிவனடியாரை வழிபட்டு முத்தி பெற்றவர் − 19

    ஆக... 12+30+19+2 = 63 பேர்

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  160. Sat. 08, Oct. 2022 at 5.21 am.

    முத்தி பெற்றவர் − 63

    குருவருளால் முத்தி பெற்றவர் − 12.

    * சுந்தரமூர்த்தி சுவாமிகள்
    * திருநாவுக்கரசு சுவாமிகள்
    * குலச்சிறை நாயனார்
    * பெருமிழலைக் குறும்பர்
    * அப்பூதியடிகள்
    * திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள்
    * திருமூலர்
    * சோமாசிமாறர்
    * கணநாத நாயனார்
    * நெடுமாறர்
    * மங்கையர்க்கரசியார்
    * திருநீலகண்ட யாழ்ப்பாணர்

    சிவலிங்கத்தால் முத்தி பெற்றவர் − 30

    * எறிபத்தர்
    * கண்ணப்பர்
    * குங்குலியர்
    * அரிவாட்டாயர்
    * ஆனாயர்
    * மூர்த்தியார்
    * முருகனார்
    * உருத்திரபசுபதியார்
    * திருநாளைப்போவார்
    * சண்டேசுரர்
    * திருநீலநக்கர்
    * நமிநந்தியடிகள்
    * ஏயர்கோன் கலிக்காமர்
    * தண்டியடிகள்
    * சாக்கியர்
    * சிறப்புலியார்
    * சேரமான் பெருமாள்
    * கூற்றுவர்
    * அதிபத்தர்
    * கலியர்
    * ஐயடிகள் காடவர்கோன்
    * கணம்புல்லர்
    * காரியார்
    * வாயிலார்
    * கழற்சிங்கர்
    * செருத்துணையார்
    * புகழ்த்துணையார்
    * கோட்புலியார்
    * பூசலார்
    * கோச்செங்கர்

    சிவனடியாரை வழிபட்டு முத்தி பெற்றவர் − 19

    * திருநீலகண்டர்
    * இயற்பகையார்
    * இளையான்குடிமாறர்
    * மெய்ப்பொருளார்
    * விறன்மிண்டர்
    * அமர்நீதியார்
    * ஏனாதிநாதர்
    * மானக்கஞ்சாறர்
    * திருக்குறிப்புத் தொண்டர்
    * காரைக்காலம்மையார்
    * மூர்க்கர்
    * சிறுதொண்டர்
    * புகழ்ச்சோழர்
    * நரசிங்கமுனையரையர்
    * கலிக்கம்பர்
    * சத்தியார்
    * முனையாடுவார்
    * இடங்கழியார்
    * நேசர்

    சுந்தரமூர்த்தி சுவாமிகளைப் பெற்றதால் பெருமை கொண்டவர்... சடையனார், இசைஞானியார்.

    எனவே....
    குருவருளால் முத்தி பெற்றவர் −12
    சிவலிங்கத்தால் முத்தி பெற்றவர் − 30
    சிவனடியாரை வழிபட்டு முத்தி பெற்றவர் − 19

    ஆக... 12+30+19+2 = 63 பேர்

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  161. Sun. 09, Oct. 2022 at 7.19 am.

    எலும்பு மண்டலம் − 3

    கடந்த பாடத்தில் கபாலத்தில் அமைந்துள்ள பொருத்துவாய்களைப் பற்றிப் பார்த்தோம்.

    இன்று நாம் பார்க்கவிருக்கிறது.... நம் முகத்தில் உள்ள மொத்த எலும்புகள்....!

    மொத்தம் 14 எலும்புகள் நம் முகத்தில் உள்ளன. ஆச்சரியமாக இருக்கிறதா மேலும் காண்போம்...

    அவை....

    * மூக்கு எலும்புகள் (Nasal Bones − 2
    * மேல்தாடை எலும்பு (Maxillae ) − 2
    * பொட்டெலும்பு (Zygomatic Bone) − 2
    * கீழ்தாடை எலும்பு (Mandible) - 1
    * அண்ண எலும்பு (Palatine Bones - 2
    * கீழ் மூக்கு எலும்பு (Inferior nasal
    conchae - 2
    * கண்ணீர் எலும்பு(Lacrimal Bones) - 2
    * இடைநாசி எலும்பு (Vomer) - 1

    அடுத்ததாக...

    முதுகெலும்புத் தொடர்(Vertebral column):


    முதுகெலும்புத் தொடர் அல்லது முள்ளெலும்புத் தொடரானது... பல எலும்புகளால் ஆன வளையும் அமைப் புடையதாகும்.

    இது நம் உடலுக்கு உருவச் சட்டமாக விளங்குகிறது. பல வளையங்களால் ஆன எலும்புகளைக் கொண்டுள்ளது. இதனோடு மற்ற அனைத்து எலும்புகளும் இணைந்து இருக்கின்றன.

    இது 3 − முக்கியமான பணிகளைச் செய்கிறது.

    * வளையும் தன்மையைக் கொண்ட உடலைத் தாங்குகிறது.

    * வளையும் அசைவுகளைக் கொண்ட உடல் தசைகளின் இணைப்பிற்கு உதவுகிறது.

    * தண்டு வடத்தைப் பாதுகாக்கிறது.

    முதுகெலும்புத் தொடரில்... மொத்தம் 33− முள்ளெலும்புகள் உள்ளன. இவற்றில்... 24− எலும்புகள் தனித்தும்,மற்ற 9−எலும்பு
    கள் ஒன்றோடொன்று இணைந்து... திரிக மற்றும் வால் முள்ளெலும்பு என இரு எலும்புகளாக அமைந்துள்ளன.

    மீண்டும் அடுத்த பதிவில்....!

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  162. Sun. 09, Oct. 2022 at 8.09 am.

    அமிலத்துளிகள் − 16

    * புற்று நோயைக் குணப்படுத்தும் "பெரிலாயில்" ஆல்கஹாலைப் பெற்றிருக்கும் பழம்...... *ஆரஞ்சு.*

    * மனித உடலில் அதிக இரும்புச் சத்து இருந்தால் ஏற்படும் நோய்... *ஸிடோரிஸிஸ்.*

    * அதிக அளவு புகையை வெளியிடும் நிலக்கரி... *பிட்மினஸ்.*

    * இயற்கையில் கிடைக்கும் தாதுப் பொருட்களுடன், மண் அல்லது களிமண் மாசு கலந்திருப்பின் அதன் பெயர்.... *காங்கு.*

    * துருப்பிடிக்காத எஃகீன் உலோக கலவை.... *இரும்பு, நிக்கல், குரோமியம்.*

    * இரும்பின் உருகு நிலை... *2808 செல்வின்.*

    * தூய்மையான இரும்பு.... *தேனிரும்பு.*

    * துருப்பிடித்தலை தடுக்க இரும்பின் மீது பூசப்படும் உலோகம்.... *துத்தநாகம்.*

    * கம்பியாக நீட்டப்படும் உலோகம்.... *காப்பர், அலுமினியம்.*

    * உணவை பாதுகாக்கும் வேதியியல் பொருள்... *சோடியம் கார்பனேட்.*

    * சிறுநீரகக் கல்லில் காணப்படுவது....
    *சோடியம் ஆக்ஸலேட்.*

    * ஆஸ்பிரின் வேதியியல் பெயர்....
    *அஸிடைல் சாலிசிலிக் அமிலம்.*

    * நீல விட்டிரியால் என்பது.... *மயில் துத்தம்.*

    * இயற்கையில் காணப்படும் இருவகை கார்பன்.... * வைரம், கிராஃபைட்.*

    * இயற்கையில் காணப்படும் அனைத் துப் பொருட்களுள் மிகக் கடினமானது... *வைரம்.*

    * கனிமங்களிலேயே மிகவும் விலை உயர்ந்தது.... *வைரம்.*

    * வளி மண்டலத்திலுள்ள மந்த வாயுக்களின் சதவீதம்... *0.95%.*

    * விண்வெளி துணைக்கோள்கள் செய்யப் பயன்படும் உலோகம்... *டியூரா.*

    * புதிய வகை ஆகாய விமானம்...*கான்கார்டு.*

    * ஆகாய விமான டயர்கள் தயாரிக்கப் பயன்படுவது.... *டெரிலீன்.*

    * சிலைகள், பதக்கங்கள், நாணயங்கள் செய்யப் பயன்படும் உலோகம்... *வெண்கலம்.*

    * வெள்ளை நிறத் தங்கத்தின் கலவை.... *நிக்கல் அல்லது பெல்லேடியம்.*

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  163. Mon. 10, Oct. 2022 at 6. 19 am.

    உயிரியல் துளிகள் −12

    * உடலின் உயிர் நாடிக்கு ஆதாரமானது... *புரதச் சத்து.*

    * மூளையின் மிகப் பெரிய பகுதி....
    *பெருமூளை.*

    * விரையின் உள்ளமைப்பில் உள்ள விந்தகக் குழல்கள்.... *ஒவ்வொரு விரையிலும் ஏறத்தாழ 800 முதல் 1000 விந்தகக் குழல்கள் உள்ளன.*

    * புரதத்துடன் எநதச் சத்து சேர்ந்தால் வளர்ச்சிக்கு உதவும் என்றால்.... *மாவுச்சத்து.*

    * மாவுச் சத்துள்ள பொருட்கள் இரண்டு...
    *தானியங்கள், கிழங்குகள்.*

    * புரதங்கள் எந்த சத்துக்களால் ஆனது...
    *அமினோ அமிலங்கள்.*

    * மீன எண்ணெயில் உள்ள அதிக அளவு வைட்டமின்கள்... *வைட்டமின் − ஏ மற்றும் வைட்டமின் − டி.

    * வைட்டமின் − ஏ −யின் அமைப்பைக் கண்டறிந்தவர்... *காரர்.*

    * உடலில் சேமித்து வைக்கக்கூடிய வைட்டமின்கள்.... *வைட்டமின் −ஏ − டி − இ − கே ஆகியவை.

    * 100 மில்லி லிட்டர் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால்... *150 − 250 மி.கிராம்.*

    * இன்றியமையாத கொழுப்பு அமிலங்கள்..... *லினோலிய்க் அமிலம், லினோலெனிக் அமிலம், அராக்கிடோனிக் அமிலம்.*

    * மரபியலுக்கு அடிப்படையானது.... *ஜீன்கள்.*

    * கர்ப்பப்பை வாயில் புற்றுநோயை ஏற்படுத்தும் வைரஸ்.... *ஹியூமன் பாப்பிலோமா.*

    * மார்பகப் புற்று நோயைத் தொடக்கத்திலேயே கண்டு பிடிக்கும் கருவி...... *மேமோகிராஃபி.*

    * பாக்டீரியாக்களைத் தாக்கும் வைரஸ்கள்..... *பாக்டீரியா பேஜ்கள்.*

    * சுவாச மண்டலத்தில் பரவலாக ஏற்படும் நோய்.... *ஆஸ்துமா.*

    * ஹார்மோன் என்ற வார்த்தையை முதலில் பயன்படுத்திய மருத்துவர்கள்....
    *ஸ்டார்லிங் மற்றும் பேலிங்.*

    * மனித மூளையில் உள்ள பசியைத் தூண்டும் பொருள்... *நியூரோபெப்டைட்*

    * எலும்பு வளர்ச்சியைத் தூண்டும் சுரப்பி.... *பாரா தைராய்டு.*

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  164. Mon. 10, Oct. 2022 at 7.29 am.

    இயற்பியல் துளிகள் − 10

    * நிறக் குருடு என்பது....
    *சில நிறங்களைப் பிற நிறங்களில் இருந்து பிரித்தறிய இயலாத நிலை.. உதாரணமாக..சிவப்பு, பச்சை நிறங்கள்.*

    * நோபல் பரிசு பெற்ற முத்ல் இந்திய விஞ்ஞானி..... * இராமன் (1930).*

    * சந்திர கிரகணம் என்பது.... *கதிரவன்,புவி, திங்கள் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும். அச்சமயம்
    புவிநிழல்... திங்களில் விழும். நன்றாகத் தெரியும். இது நிறைநிலாவில் நிகழ்வது.

    * இரு இரயில் தண்டவாளங்களுக் கிடையே சிறிது இடைவெளி விட்டிருப் பது ..... *கோடையில் ஏற்படும் நீள் பெருக்கத்திற்காக.*

    * ஆவியாதலின் பயன்கள்..... *மழை பெய்யக் காரணமாக உள்ளது. மேலும்,ஒரு நீர்மக் கலவையை அதன் பகுதிகளாகப் பிரிக்க முடிகிறது.*

    * X கதிர் என்பது.... *மிகக் குறுகிய அலை நீளமுள்ள கதிர்.*

    * நிழல் என்பது.... ஒரு ஊடுருவாப் பொருள், ஒளியைத் தடுக்கும் பொழுது, ஒரு பரப்பில் உண்டாகும் இருட்டு.*

    * கேள் − காண் கருவி என்பது.....
    *ஒலி − ஒளி கருவிகள். அதாவது ஒரே சமயத்தில் கேட்கக் கூடியதும், பார்க்கக் கூடியதுமான கருவி. (எ.கா. தொலைக் காட்சி, வானொவி.)*

    * ஓசை(இரைச்சல்) என்பது.... *ஒழுங்கற்றதும், சீரற்றதுமான அதிர்வுகளால் உண்டாவது.*

    * மாக் −1 என்பது.... *கடல் மட்டத்தில் ஒலி... 1−மணிக்கு 60 மைல் விரைவில் செல்லும். இதுவே மாக்−1 .

    * மின்சாரம் என்பது.... *நிலையாக உள்ள அல்லது நகரும் மின்னேற்றங் களில் இருந்து உண்டாகும் விளைவு.*

    * கிலோ சைக்கிள் என்பது..... *இது மின்காந்த அலை அதிர்வெண் அளவு ஆகும். ஒரு வினாடிக்கு 1000−சுற்று்கள்.*

    * கிலோவாட் மணி என்பது.... *யூனிட் என்று கூறப்படும். 1மணி நேரத்தில் 1000 வாட்டுகள் மின்சாரம் செலவழித்தல்.*

    * விடுவிப்புக் கருவி என்பது.... *கடிகாரத்தில் வில் சுருளிலிருந்து, முள்ளுக்கு ஆற்றல் செல்வதைக் கட்டுப்படுத்தும் பகுதி.*

    * வெப்பம் என்பது.... * இதன் அலகு கலோரி அல்லது ஜூல். பொருளின் ஆற்றல் வெப்பநிலை வேறுபட்டால் மாறுவது... இயற்கை நிலையில் உள்ளது.*

    * திறப்பி என்பது.... *ஓர் உறுப்பிலோ அல்லது எந்திரத்திலோ ஒரு பக்கம் மட்டுமே திறக்கும் அமைப்பு.*

    * இழுமம் (ஜெல்) என்பது......
    *திண்ம வடிவத்தில் இருக்கும் கூழ்மக் கரைசல். (எ.கா. நெய்).*

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  165. Tue. 11, Oct. 2022 at 8.20 am.

    நரம்பு மண்டலம் − 4

    கடந்த பாடத்தில் முதுகெலும்புத் தொடர் 33 என பார்த்து வந்தோம். அதன் தொடர்ச்சியாக...அந்த முள்ளெலும்புத் தொடர் எங்கெங்கு அமைந்துள்ளன..எனப் பார்க்கலாம்...

    * கழுத்து முள்ளெலும்புகள் (Cervical Vertebrae) :

    முதல் 7 எலும்புகள் கழுத்துப் பகுதியில் அமைந்துள்ளன. அதில் முதல் இரு முள்ளெலும்புகள்... அட்லஸ், ஆகஸின் என அழைக்கப்படும்.

    * முதுகு முள்ளெலும்புகள் (Thoracic Vertebrae) :

    12 முள்ளெலும்புகள் முதுகின் பின் பக்கத்தில் அமைந்துள்ளது.

    * இடுப்பு முள்ளெலும்புகள் (Lumbar Vertebrae) :

    5 முள்ளெலும்புகள் இடுப்புப் பகுதியில் அமைந்துள்ளது.

    * திரிக முள்ளெலும்பு (Sacral Vertebrae) :

    திரிக முள்ளெலும்பு 5−ம் ஒன்றாகச் சேர்ந்து காணப்படுகிறது.

    * வால் முள்ளெலும்பு (Coccygeal Vertebrae)

    4 முள்ளெலும்புகள் ஒன்றாக இணைந்து வால் பகுதியில் காணப்படுகின்றன.

    மேலும்... முதுகு முள்ளெலும்பும், திரிக முள்ளெலும்பும், வால் முள்ளெலும்பும்... அசையாது பொருத்தப்பட்டிருக்கும்.

    கழுத்து மற்றும் இடுப்பு முள்ளெலும்புகள் மட்டும் ... அசையும் முள்ளெலும்புகள் ஆகும்.

    மீண்டும் அடுத்த பதிவில்....!

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  166. Wed. 12, Oct. 2022 at 6.25 am.

    நாடிப் பயிற்சி − 71

    இதுவரை நாம் பதினான்கு வேகங் களைத் தடுத்தலாலுண்டாகும் நோய்களைப் பற்றி பார்த்து வருகிறோம்

    இன்று நாம் பார்க்கவிருப்பது....

    * விந்தினை அடக்கினால்....

    கை, கால்கள், கீல்கள் இவற்றில் நோவுண்டாதல், சுரம், நீர்க்கட்டு, விந்து கசிந்து நீள்சீலை நனைதல், மார்படைப்பு, மார்பு துடிப்பு, வெள்ளை என்னும் ஈவை உண்டாகும்.

    முன்பே பார்த்தபடி... அபானவாயுவின் தொழில்.... மலம், நீர், விந்து ஆகியவற் றைக் கீழ்த்தள்ளும்.

    * சுவாசத்தை அடக்கினால்....

    அதாவது மூச்சை அடக்கினால்... இருமல், வயிற்றுப் பொருமல், சுவை தெரியாமை, சூலை நோய், காய்ச்சல், வெட்டை ஆகியவை உண்டாகும்.

    அடுத்த பாடமாக உடற்றீ விளக்கம் அடுத்த பதிவில் .....

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  167. அய்யா. வெ. சாமி. அவர்களுக்கு நமஸ்காரம். அய்யா எலும்பு மண்டலம்−4 (நரம்பு மண்டலம் 4 அல்ல) என திருத்தம் செய்யணும் அய்யா.

    ReplyDelete
  168. Wed. 12,Oct. 2022 at 7.07 am.

    எலும்பு மண்டலம் − 5

    விலா எலும்புகளும், மார்பெலும்புகளும்..!

    நமது உடலில்..... விலா எலும்புகள் தட்டையாக , வளைந்து காணப்படும்.

    12 ஜோடி அசையக்கூடிய விலா எலும்புகள் சேர்ந்து நம் மார்புக்கூட்டை உருவாக்குகிறது.

    முதுகு முள்ளெலும்புகளும், மார்பெலும்பு, விலா எலும்புகள் என இம்மூன்றும் ஒன்றாக இணைந்து நம் மார்புக்கூடு உருவாகிறது.

    12 ஜோடி எலும்புகளில் முதல் 7 ஜோடி எலும்புகள்... உண்மை விலா எலும்புகள் (True ribs) என்று அழைக்கப்படுகிறது.

    இவ்வெலும்புகள்... முன் பக்கத்தில், மார்பெலும்புடன் குருத்தெலும்பு திசுக்கள் மூலமாக இணைக்கப்பட்டிருக் கின்றன.

    பின் பக்கத்தில், முதுகு முள்ளெலும்புடன் இணைக்கப்பட்டிருக்கின்றன.

    மீதமுள்ள 5 ஜோடி வீலா எலும்புகள்... போலி விலா எலும்புகள்(False ribs)) என்று அழைக்கப்படுகிறது.

    இவ்வெலும்புகளும்... பின்பக்கத்தில் முதுகு முள்ளெலும்புடன் இணைக்கப் பட்டுள்ளன.

    மேலும், எல்லா எலும்புகளும், மார்பு எலும்புடன் இணைக்கப்படவில்லை.

    முன் பக்கத்தில்... 8 −லிருந்து, 10−து ஜோடி வரை உள்ள எலும்புகளும் ஒன்றாக இணைந்து.... 7−வது ஜோடி விலா எலும்பின் குருத்தெலும்பு திசுக்களுடன், மார்பெலும்பு பக்கத்தில் மறைமுகமாக இணைக்கப்பட்டுள்ளன.

    கடைசி இரு ஜோடி எலும்பான.. 11−12 ஜோடி எலும்பு, முன் பக்கத்தில் எதனுடனும் இணையாது... தொங்கிக் கொண்டிருக்கும். இதற்கு மிதக்கும் விலா எலும்புகள் என்று பெயர்.

    மீண்டும் அடுத்த பதிவில்....!

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  169. Sun. 16, Oct. 2022 at 6.49 pm.

    அமிலத்துளிகள் − 17

    * மனித இரத்தம் மற்றும் உயிர் செல்களில் முறையான இயக்கத்திற்கு பயன்படுவது .... *சோடியம் குளோரைடு.*

    * மனித உடலில் காணப்படும் கார்பன் தனிமத்தின் அளவு.... *18%.*

    * இயற்கையில் கிடைக்கும் தனிமங்களின் எண்ணிக்கை.... *91.*

    * சூரியனில் காணப்படும் முக்கியமான தனிமம்.... *ஹைட்ரஜன்.*

    * தைராய்டு புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுவது.... *அயோடின்−123.*

    * தாவரங்கள் உட்கிரகிக்கும் உரத்தின் அளவை அறிய பயன்படுவது... *பாஸ்பரஸ் − 32.*

    * குழாய்களில் ஏற்படும் கசிவினைக் கண்டறியப் பயன்படுவது.... *ரேடியோ ஐசோடோப்பு.*

    * உலோகங்களை வெட்டவும், ஒட்டவும் பயன்படுவது.... *ஆக்ஸி − அசிட்டிலின்.*

    * லத்தின் மொழியில் அமிலம் என்பது.... *அசிடஸ்.*

    * சிமெண்டில் அதிக அளவுள்ள ஆக்ஸைடு.... *கால்சியம் ஆக்ஸைடு.*

    * திரவ நிலையிலுள்ள அலோகம்.... *புரோமின்.*

    * மர உலோகத்தின் கலவை..... *பிஸ்மத், லெட் , டின் , காட்மியம்.*

    * தேசிய ரசாயன ஆய்வுக்கூடம் அமைந்துள்ள இடம்.... *புனே.*

    * வைரத் துறைமுகம் அன அழைக்கப் படுவது.... *கல்கத்தா.*

    * எவர்சில்வர் என்கின்ற உலோகக் கலவை.... *ஸ்டீல் + குரோமியம் + நிக்கல்.*

    * அக்மார்க் நிறுவனம் அமைந்துள்ள இடம்.... *விருதுநகர்.*

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  170. Sun.16, Oct. 2022 at 9.45 pm.

    உயிரியல் துளிகள் −13

    * சிறுநீரகத்தின் நிறம்.... *கருஞ்சிவப்பு.*

    * சிறுநீரகத்தின் எடை..... *ஏறத்தாழ 150 கிராம்.*

    * பெண்களின் சிறுநீர்ப்புறக் குழலின் நீளம்... * சுமார் 4 செ.மீ.*

    * மனித சிறுநீர்ப்பையின் கொள்ளளவு....
    *சராசரியாக 500 முதல் 700 மி.லி.*

    * சிறுநீர்த் தடம் எங்கு தொடங்கி எது வரை நீளுகிறது.... *சிறுநீரகங்களில் தொடங்கி...சிறுநீர்ப்புறக் குழவ் வரை நீளுகிறது.*

    * சிறுநீர் ஓட்டம் தடைபடக் காரணம்.... *சிறுநீர் நாளத்தில் புற்றுநோயால் உண்டாகும் கட்டிகள்.*

    * சிறுகுடலின் மூன்று பகுதிகள்.... *முன் சிறு குடல் , நடுச் சிறு குடல் , பின் சிறு குடல்.*

    * ஒரு மனிதனின் சிறுநீரகங்கள் 1−நாளைக்கு வெளியேற்றும் சிறுநீர்...
    *1 1/2 லி.*

    * உமிழ்நீரில் உள்ள என்சைம்.... *டையலின்.*

    * கல்லீரலில் சுரக்கும் திரவம்.... *பித்த நீர்.*

    * பித்த நீரின் நிறம்.... *பச்சை.*

    * கணையம் சுரக்கும் நீர்..... *கணைய நீர்.*

    * கணைய நீரிலும், குடல் நீரிலும் உள்ள நொதிமங்களில் இரண்டு...... *அமைலேஸ் , மால்டேஸ்.*

    * மனிதன் சிரிக்கும் போது அசையும் தசைகள்..... *17.*

    * இரத்த அழுத்தத்துடன் சம்பந்தப்பட்ட சுரப்பி... *அடரீனல் சுரப்பி.*

    ;* உடலின் வெப்ப நிலையைச் சீர்படுத்துவது... *வியர்வைச் சுரப்பிகள்.*

    * வயதான காலத்தில் வரும் ஞாபக மறதி நோயின் மருத்துவப் பெயர்....
    *அல்ஸிமெர்ஸ்.*

    * நம் உடலில் இரத்த ஓட்டமில்லாத பகுதி.... *விழி வெண்படலம்.*

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  171. Tue. 03, May, 2022 at 9.57 pm.

    சிந்தனைக்கு ....!

    * அதிக அளவு உடல் உழைப்பில் ஈடுபட்டால் கல்லீரல் பாதிக்கப்படும்.

    * அதிக நேரம் படுத்திருந்தால் நுரையீரல் பாதிக்கப்படும்.

    * டி.வி. அல்லது கம்ப்யூட்டரை அதிக நேரம் பார்த்துக் கொண்டு இருந்தால் இரத்தமும், இதயமும் பாதிக்கப்படும்.

    * அதிக நேரம் உட்கார்ந்திருந்தால் மண்ணீரல் பாதிக்கப்படும்.

    * அதிக நேரம் நின்று கொண்டு இருந்தால் அல்லது அதிகமாக பளு தூக்கினால் சிறுநீரகங்கள் பாதிக்கப்படும்.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  172. Mon. 17, Oct. 2022 at 8.37 am.

    எலும்பு மண்டலம் − 6

    கடந்த பாடத்தில்... விலா எலும்புகள் பற்றி பார்த்தோம்.

    இன்றைய பாடமாக... தொடர்ச்சியாக.. மார்பெலும்பும், தோள் வளையமும் பார்த்து..எலும்பு மண்டலத்தை நிறைவு செய்யலாம்...!!

    மார்பெலும்பு :

    மார்பெலும்பு தட்டையான வடிவம் கொண்டது.

    இது 3− பாகங்களை உடையது.
    *மேலே உள்ளப் பகுதி... மானுபிரியம் (Manubrium).
    *நடுப்பகுதி... கிளாடியோலஸ் (Gladiolus).
    *அடிப்பகுதி... சிறிய குறுத்தெலும்பு இணைப்புத் திசுக்களால் ஆனது.

    இது வால் போன்ற வடிவம் உடையதால்... இதற்கு ஸிப்பாய்டு(Zyphoid) என்று பெயர்.

    கழுத்து எலும்பு மார்பெலும்பின் மேற்பகுதியான மானுப்பிரியத்துடன் சுழலும் தன்மை உடையது.

    * தோள் வளையம் (Shoulder or Pectoral Girdles) :

    ஒவ்வொரு தோள் வளையமும் இரு எலும்புகளைக் கொண்டுள்ளது. கைகளை உடலுடன் இணைக்க உதவுகிறது.

    தோள் பட்டைகளை உடலுடன் இணைக்க உதவுவது... காறை எலும்பு (Clavical) மற்றும் தோள்பட்டை (Scalpulae) எலும்புகள் ஆகும்.

    இந்தக் காறை எலும்பு, அல்லது கழுத்து எலும்பானது... நீளமான மெல்லியதான இரு வளைவுகளைக் கொண்ட எலும்பாகும்.

    இரண்டு காறை எலும்புகளும்... மார்பின் மேல் முன் பாகத்திலும், கீழ்பாகத்திலும், முதல் எலும்பிற்கு மேல் குறுக்காக அமைந்திருக்கின்றன.

    இடுப்பு எலும்பும், 3 சிறிய எலும்புகளாக இணைக்கப்பட்டிருக்கின்றன.

    அவை...

    * இலியம் (illium)
    * இஸ்கியம் (ischium)
    * பியூபிஸ் (pubis).

    இலியம் எலும்பானது... இடுப்பெலும்பின் தட்டையான மேல்பகுதியில் உள்ளது. இது "திரிக" எலும்போடு இணைந்துள் ளது.

    இஸ்கியம் என்பது...இடுப்பு எலும்பின் கீழ்ப்பகுதியாகும்.

    எலும்பு மண்டலம் நிறைவு செய்கிறேன்.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  173. Mon. 17, Oct. 2022 at 3.5 pm

    குடும்பத் தலைவியின் அழகைத் தலைவன் வியந்து பாராட்டுதல்....

    எவ்வாறு பார்க்கலாமா...?

    * அனிச்ச மலரே ! நீ வாழ்வாயாக ! மலர்களில் எல்லாம் மெல்லியலாம் நல்லியல்பு கொண்ட உன்னைக் காட்டிலும், என்னைக் கவர்ந்த என் காதலி... மிகவும் மென்மை வாய்ந்தவள் என்று தெரிந்து கொள்வாயாக..!

    * நெஞ்சமே ! நான் கண்டு இன்புற்று மகிழும் என் காதலியின் கண்கள் பலரும் காணும் பூக்களைப் போன்று தோன்றும் என்று, குவளை முதலான மலர்களைப் பார்க்கும்போது மயங்குறார்..! நீ அறியாமையால் அவ்வாறு கருதுகிறாய் !! பிறர் என் காதலியின் கண்களைப் பார்க்க வியலாது!

    * நான் விரும்பும் என் காதலிக்கு மேனி தளிர் போன்று தோன்றும்; பற்கள் முத்துக்கள் போல் மிளிரும்; இயற்கை மணம் பொலியும்; மைதீட்டிய கண்கள் வேல்கள் போன்று விளங்கும்; தோள்...மூங்கில் போலத் திகழும் !

    * குவளை மலர் என் காதலியின் கண்களைப் பார்க்க நேர்ந்தால்.. இவள் கண்களுக்கு இணையாக விளங்க முடியவில்லையே என்று நாணித் தலை குனிந்து நிலத்தைப் பார்க்கும் !

    * என் காதலி என் மெல்லியல்பை அறியாமல், அனிச்ச மலரினைக் காம்புகளோடு சேர்த்துச் சூடினாள்; எனவே அந்த சுமை தாங்காமல் நுண்ணிய இடை ஒடிந்து விடும் என வருந்தி, சாவுப் பறை ஒலிக்கிறது !

    * விண்மீன்கள் வானத்து நிலவுக்கும், என் காதலியின் முகத்துக்கும் வேறுபாடு தெரியாமல் மயங்கி நிலை திரிந்து அலைகின்றன !

    * கறையாகிய குறையனைத்தும் நீங்கிப் புதுப் பொலிவுடன் விளங்குகிறது முழுநிலவு; ஆனால் என் காதலியின் ஒளி முகத்தில், சிறு களங்கம் கூட இல்லை !

    * முழுநிலவே ! என் காதலியின் பேரழகு முகத்தைப் போன்று , நீயும் தோன்ற முடியுமானால்... என் நெஞ்சத்து அன்பை நீயும் பெறலாம் !

    * ஒளிநிலவே ! மலர் போன்ற கண்கள் கொண்ட, என் காதலியின் முகத்துக்கு நிகராக நீயும் விளங்க விரும்பினால் பலரும் காணுமாறு தோன்றாதே ! நான் மட்டும் பார்க்குமாறு நீ தோன்ற வேண்டும் !

    * மென்மையான அனிச்ச மலரும், அன்னப் பறவையின் மெல்லிய இறகும்... என் காதலியின் மெல்லிய நல்லடிகளுக்கு நெருஞ்சி முள் போன்று துன்புறுத்தும் !


    இவ்வாறு குடும்பத் தலைவியின் அழகைத் தலைவன்.... "நலம் புனைந்து உரைத்தல்" என்ற தலைப்பில் திருக்குறள்.. 1111−1120 வரை (10−குறள்) வியந்து பாராட்டி உள்ளார்.

    நாமும் அறிந்து கொள்வோமே !
    உடனே திருக்குறளை திறந்து பார்த்து திருக்குறளை அறிந்து கொள்ளுங்கள்.

    வாழ்க வளமுடன் !

    ReplyDelete
  174. Tue. 18, Oct. 2022 at 7. 04 am.

    இந்துக்களாகிய நாம் சைவத்தைப் பற்றி கொஞ்சம் அறிந்து கொள்ளலாமா...?

    சைவம் :

    * சமயம் என்பது... *மனிதன் வாழ்வை வழிப்படுத்துவது.*

    * சைவம் என்பது.... *சிவ சம்பந்தம் உடையது.*

    * சைவ சமயம் தோன்றியது.... *அநாதி என்றால் ஆதி அற்றது... அதாவது தொடக்கமில் காலம் தொட்டு.*

    * சைவர் என்வர்.... *சிவபெருமானை முழுமுதற் கடவுள் என உணர்ந்து வழிபடுபவரே.*

    * சைவ சமயத்தின் முக்கிய நூல்கள்.... *14 சாத்திரங்களும்,12 திருமுறைகளும்.*

    * சமயக் குரவர்கள் நால்வர்....

    *திருஞான சம்பந்த நாயனார்.*
    *திருநாவுக்கரசு நாயனார்.*
    *சுந்தரமூர்த்தி நாயனார்.*
    *மாணிக்கவாசகர்.*

    * அகச்சந்தானக் குரவர்கள் நால்வர்....

    *திருநந்தி தேவர்.*
    *சனற் குமார முனிவர்.*
    *சத்திய ஞான தரிசினிகள்.*
    *பரஞ்சோதி முனிகள்.*

    * புறச் சந்தானக் குரவர்கள் நால்வர்....

    *ஶ்ரீமெய்கண்டதேவ நாயனார்.*
    *அருள்நந்தி சிவாச்சாரியார்.*
    *மறைஞான சம்பந்தர் சுவாமிகள்.*
    *உமாபதி சிவாச்சாரியார்.*

    * திருமுறை என்ற சொல்லின் பொருள்...

    *முறை என்றால்... சொல் நூல் என்று பொருள். திருமுறை என்பது...மாறாத செல்வத்தை மக்கள் எளிதாகப் பெறுவதற்கு.... வழிகாட்டும் நூல் என்று பொருள்.* இந்நூல்.... 12 பகுதிகளாக தொகுக்கப் பெற்று 'பன்னிரு திருமுறை' என்று போற்றப் பெறுகிறது.*

    * திருமுறையின் அமைப்பு.....

    *சிவபெருமானின் பெருமைகளை விளக்கும் புகழ் நூல்களாக அமைந்திருக் கின்றன.*

    * சாத்திரங்களின் அமைப்பு.....

    *சைவ சமயத்தின் கொள்கைகளை வீளக்குட் "பொருள் நூல்களாக" அமைந்துள்ளன.*

    * திருமுறைகள் பிரணவத்துள் அடங்கும் என்பது......

    *பன்னிரு திருமுறையில்... முதல் பாடல் "தோடு" என்னும் சொல்லுடன் தொடங்கி, இறுதிப் பாடலில் "உலகெலாம்" என்ற சொல்லுடன் முடிகிறது. "தோடு" என்பதில்... முதல் எழுத்து... "ஓ"
    (த்.+ஓ =தோ). உலகெலாம் என்பதில்... ஈற்றெழுத்து "ம்" ஆகும்.*

    * திருமுறைகளை முறையாக வகைப்படுத்தியவர்கள்....

    *திருநாரையூரில்... பொல்லாப் பிள்ளையாருக்குப் பூசைகள் செய்து, அவரிடம் நேரடியாக உபதேசம் பெற்ற நம்பியாண்டார் நம்பிகள், இராசராச சோழர் காலத்தில் பொல்லாப் பிள்ளையார் அருளினால் நம்பியாண்டார் நம்பிகள்.. மறைத்து வைக்கப்பட்டிருந்த தேவாரங்களை எடுத்து, தொகுத்து அருளினார்கள்.*

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  175. Wed. 19, Oct. 2022 at 8.10 am.

    நம் உடம்பில் நோய் வராமல் தடுக்க நாம் கடைபிடிக்க வேண்டியது என்ன என்று.... இன்று நாம் பார்க்கப் போகிறோம்...!

    * மருத்துவ அறிஞர் பெருமக்கள் கூறும்... வாதம், பித்தம், கபம் அல்லது சிலேத்துமம் ஆகிய மூன்றும் ஒருவரிடம் கூடினாலும், குறைந்தாலும் பலவகை நோய்களை உருவாக்கும்.

    * ஒருவர் தாம் உண்ட உணவு நன்றாகச் செரிமானம் ஆயிற்று என்பதைத் தெளிவாக அறிந்து கொண்டு அதன்பின் உண்ண வேண்டும். அவ்வாறு வாழ்ந்தால், அவருடைய உடலுக்கு மருந்து எதுவும் தேவையில்லை.

    * ஒருவன் முன்பு உண்டது நன்றாகச் செரிமானம் ஆனால்... பின்னர் உண்பதைச் செரிமான அளவு நோக்கி உண்ண வேண்டும். (அளவுக்கு அதிகமாக உண்ணக் கூடாது.) அதுவே ஒருவனது நீண்ட ஆயுளுக்கு உரிய வழிமுறை ஆகும்.

    * உண்ட உணவு உடலோடு ஒன்றுவதைப் புரிந்து கொண்டு, கொள்ள வேண்டியதையும், தள்ள வேண்டியதையும் தெரிந்து, பசி வந்த பின் உண்ணுவது இன்றியமையாத தாகும்.(நம் உடம்பிற்கு ஒத்துக் கொள்ளாததை சாப்பிடக் கூடாது.)

    * ஒருவன் தன் உடலுக்கு ஊறு செய்யாத உணவை மிகுதியாக உண்ணாமல் அளவாக உண்டால், அவன் உயிர் வாழ்வதற்குத் துன்பம் எதுவும் நேராது.

    * ஒருவன் தான் உண்ணும் முறையும், அளவும் அறிந்து உண்டால் எப்போதும் இ்ன்புற்று வாழலாம். அதுபோன்று அளவில்லாது உண்பவனிடம் நோய்களும் பெருகும்.

    * பசியாகிய தீயின் அளவு தெரியாமல், மிகுதியாக ஒருவன் உண்டு வந்தால், அவனுக்கு நோய்கள் கணக்கில்லாமல் வந்து சேரும்.

    * வந்த நோய் எதுவென்று தெளிவாகத் தெரிந்து கொண்டு, அது வந்த காரணத்தையும், அதைப் போக்கும் வழி முறையினையும் ஆராய்ந்து, அதற்கு ஏற்றவாறு முறையான மருத்துவத்தை மேற்கொள்ள வேண்டும்.

    * மருத்துவ அறிஞர் நோய்வாய்ப்பட்ட ஒருவரது... உடலியல்பு, வயது ஆகியவற்றையும், நோயின் தாக்க அளவு, பரவும் முறை... போன்றவற்றையும் , நோயுற்ற கால அளவையும், தெளிவாகத் தெரிந்து மருத்துவம் செய்ய வேண்டும்.

    * மருத்துவம் என்பது... நோய்வாய்ப்பட்ட
    வன், நொயைத் தணிக்கும் மருத்துவன், நோயைக் குணமாக்கும் மருந்து, அம்மருந்தை அளவறிந்து பக்குவமாகத் தரும் மருந்தாளுநன் ஆகிய நான்கு வகை உடையதே மருத்துவம் ஆகும்.

    நமது திருவள்ளுவர்... மருந்து என்ற தலைப்பில்... 10 குறள் மூலம் (941−950 வரை) நமக்கு அளித்துள்ளார். உடனே திருக்குறளை எடுத்து பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

    என்றும் வாழ்க வளமுடன்.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  176. Fri. 21, Oct., 2022 at 4.50 pm.

    நம்மை நாமே அறிவது எவ்வாறு ?
    என்று ஒரு வித்யாசமான கேள்வியோடு..இன்றைய பாடம் ஆரம்பிக்கலாமா...!


    மனித உடல் மற்றும் இவ்வுலகம் அனைத்துமே ஐம்பூதங்களால் ஆனது.

    அந்த ஐம்புதமானது... ஆகாயம், காற்று, நெருப்பு, நீர் மற்றும் நிலம் ஆகும். இவ்வுலத்தில் தோன்றிய அனைத்துமே... இவ்வைந்து பூதங்களின் கலவையில் தான் அமைந்து உள்ளன.

    அதில்... எங்கும் இருக்கும் "ஆகாயம்" இவ்வுலத்திற்கு அடித்தளமாக அமைகிறது.

    "காற்று " உயிர் சக்தியான பிராணனாக விளங்குகிறது. காற்று என்பது...இயங்கிக் கொண்டும், அனைத்து உயிர்களுக்கும் மிக முக்கியமான உயிர் சக்தியாகவும் காற்று விளங்குகிறது.

    "நெருப்பு" ஜீரணிப்பதற்கும், ஜீரணித்த உணவிலுள்ள சக்தியை உறிஞ்சி, உடலில் சேர்க்கவும் செய்கிறது.

    "நீரானது" உடலை குளிர்ச்சி செய்து, தொடர்ந்து பாதுகாக்கவும், தாவரங்களை வளரச் செய்வதற்கும் உதவுகிறது.

    "நிலம்" அனைத்து உயிர் இனங்களுக்கும், தங்கும் இடமும், உணவும் அளிக்கிறது.

    இந்த ஐம்பெரும் பூதங்களும்... எல்லா உயிர்க்கும் ஆதாரமாகவும், உலகம் முழுவதையும் ஒருங்கிணைத்தும் செயல்படுகிறது.

    ஆனால்... பஞ்ச பூதங்கள் சமநிலை இழந்தால் நோயும், உயிருக்கு கேடும் ஏற்படுகின்றன.

    இயற்கையாகவே.... ஒவ்வொரு பூதமும் மாறிக்கொண்டேயிருக்கும்.
    உதாரணமாக... வெப்பம், காற்றின் ஈரப்பதம், சீதோஷ்ண நிலை.

    இவ்வாறு... மக்கள் இந்த மாற்றத்துக்கு ஏற்றவாறு தங்களைப் பழக்கப் படுத்திக்கொள்ள வேண்டியதிருக்கிறது.

    ஒவ்வொருவரிடமும்..இந்த ஐம்பெரும் பூதங்கள் இருக்கின்றன. ஆனாலும்... அளவுகளில் அவரவர் உடம்பிற்கேற்ற வாறு மாறுபாடாகும்.

    சிறப்பாக...ஆரோக்கியமான உடல் நலத்திற்கு... இந்த ஐம்பெரும் பூதங்கள், கூடுதலாகவோ, குறைவாகவோ இல்லாமல் ஒரு சரியான சம அளவில் இருக்கும்... இருக்க வேண்டும்.

    உதாரணமாக... நிலம் தன்மை அதிகமானால்... உடல் பருமன் ஆகும்.

    நீர் தன்மை அதிகமானால்.... சளித் தொல்லைகள் அதிகமாகும்.

    நெருப்பு தன்மை அதிகமானால்.... காய்ச்சல், எரிச்சல், கொப்பளங்கள் ஏற்படும்.

    மேலும்... மனதளவிலும்... நிலம் தன்மை அதிகமானால்... சோர்வு மற்றும் விரக்தி ஏற்படும். (

    நான் ஏற்கெனவே முந்தைய பாடமான நாடிப்பயிற்சியில் கூறி இருக்கிறேன் என்பதைக் கவனிக்க.)

    நெருப்புத் தன்மை அதிகமானால்...கோபம் மற்றும் வெறுப்பு ஏற்படும்.

    காற்றுத் தன்மை அதிகமானால்.... பயம் மற்றும் கவலை ஆகியவை ஏற்படும்.

    இந்த ஐந்து பூதங்களின் சமநிலையில் ஏற்படும் மாறுபாட்டைத் தான்... "தோஷங்கள்" என்று கூறுகிறோம்.

    ஆகாயம் மற்றும் நிலம் இயக்கமற்றதாக இருந்தால்... எப்போதும் இயங்கிக் கொண்டும், மாறிக் கொண்டும் இருக்கும்... காற்று நெருப்பு, நீர் ஆகிய இம்மூன்றும் தோஷங்கள் ஆகும்.

    "வாதம் என்பது.. அதிகக் காற்று ஆகும்."

    பஞ்ச பூதங்களின் சமநிலையில் காற்று மற்றும் ஆகாயத்தின் விகிதம் அதிகமானால்... அதுவே வாதம் ஆகும்.

    "பித்தம் என்பது.... அதிக நெருப்பு ஆகும்."

    நெருப்பு மற்றும் நீரின் விகிதாச்சாரம் அதிகமானால்... அதுவே பித்தம் ஆகும்.

    "கபம்" என்பது அதிக நீர்."

    நீர் மற்றும் நிலத்தின் விகிதம் அதிகமானால்.... அதுவே கபம் ஆகும்.

    மேலே பார்த்த யாவுமே....ஏற்கனவே நான் நடத்தியவைதான்..மீண்டும் மீண்டும் தங்களுக்கு ஞாபகப் பாடமாக வித்தியாசமான தலைப்புகளில்... அன்பு வாசகர்களுக்கு புரிய வைக்கிறேன்.

    சரி.....

    நாம் சுகமாகவும்... ஆரோக்கியமாகவும் வாழ்வதற்கு கண்டிப்பாக...நம்மை நாமே அறிந்து கொள்ள வேண்டும்...

    இதுபோல்....அடுத்தவர்களுடன் நட்பாக, அதாவது ஒற்றுமையாக... வாழ்வதற்கு அவர்களையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

    காரணம்.... ஒருவருக்கு மருந்தாக இருப்பது... அடுத்தவருக்கு நஞ்சாக இருக்கலாம்.

    உதாரணமாக... ஒருவர் அதிகமாக காரம் சேர்த்த உணவு சாப்பிட்டால்... அவருக்கு ஒன்றும் நேராது. ,அதேசமயம் மற்றவர்க்கு அந்தக் காரம் குன்ம நோயை உண்டாக்கும். குன்ம நோய் என்றால்... குடல் புண். (Ulcer)

    இதுபோன்றே... மனதளவிலும் கூட... ஒருவருக்கு விருப்பமான விஷயம் மற்றவருக்கு வெறுப்பாக இருக்கும்.

    சிலர் தைரியமாக செயல்படுவர். சிலர் பயந்து நடுங்கி தளர்ந்து விடுவர்.

    ஆகவே... நம்மைப் பற்றி நாம் அறிந்து கொள்ளவில்லையானால்... உடல் மற்றும் மன நோயினால் அவதிப்பட நேரிடும்.

    எந்த ஒரு குறிப்பிட்ட மருந்தும் அனைவருடைய ஒரே தன்மையான நோயைக் குணப்படுத்த முடியாது.

    எனவே, நமது உடம்பு.... வாதமா ? பித்தமா ? கபமா ? என நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

    எவ்வாறு இவற்றை அறிந்து கொள்வது என அடுத்த பதிவில் பார்ப்போம்..!

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  177. Fri. 21, Oct. 2022, at 6.55 pm.

    ஆதி சங்கரர் கயிலையில் இருந்து கொண்டு வந்த 5− லிங்கங்களை ஸ்தாபனம் செய்த இடங்கள்....!

    * முக்தி லிங்கம் − திருக்கேதாரம்
    * வரலிங்கம் − நேபாளிலுள்ள நீலகண்டம்
    * மோட்ச லிங்கம் − சிதம்பரம்
    * போக லிங்கம் − சிருங்கேரி
    * யோக லிங்கம் − காஞ்சி.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  178. Fri. 21, Oct. 2022, at 7.49 pm.

    திருவாசகம்... எண்ணப் பதிகம்.

    ஒழியா இன்பத்து உவகை.

    அடியார் நடுவுள் இருக்கும் பேற்றினை விளைதல்.

    அருஞ்சொற் பொருள் விளக்கம்.

    திருச்சிற்றம்பலம்

    * பார் உரு ஓய, பிறப்பு அற வேண்டும்
    பத்திமையும் பெற வேண்டும்
    சீர்உரு ஆய சிவபெரு மானே
    செங்கமல மலர் போல
    ஆர்உரு ஆய என் ஆர் அமுதே உன்
    அடியவர் தொகை நடுவே
    ஓர்உரு ஆய நின் திருவருள் காட்டி
    என்னையும் உய்யக் கொண்டருளே

    பொருள் :

    பார் உருவாய் − நிலவுலகிலே ஊனடைந்த வடிவமாகிய

    பத்திமையும் − மறவாது உன்னிடத்தில் அன்பு செய்கின்ற தன்மையை

    சீர் உருவாய − சிறப்புமிக்க

    செங்கமல மலர்போல் − செந்தாமரைப் பூ போன்ற

    ஆர்உருவாய − அருமையான செம்மேனி எடுக்கும்

    ஓர்உருவாய − உனது திருவருட் கோலத்தைக் காட்டி

    விளக்கம் ....

    பெருமை வாய்ந்த உருவத்தை உடைய சிவபெருமானே !

    சிவந்த தாமரை மலரைப் போன்ற உருவாகிய அரிய தேவாமிர்தம் போன்ற இறைவனே !

    நிவலுலகிலே உடம்பு எடுப்பதாகிய பிறப்பு அற்றொழிய வேண்டும்.

    உன்னிடத்தில் அன்பு செய்யும் பக்தியையும் என்றும் அடைய வேண்டும்.

    தேவரீருடைய அடியார்கள் கூட்டத்தின் இடையே நிகரற்ற உருவமாகி.... உன்னுடையத் திருவருளை, அடியேனுக் குக் காண்பித்து, அடியேனையும் என்றும் அழியாமல் ஜீவிக்க...... என்னை ஆட்கொண்டருள்வாயாக.

    இப்பதிகத்தின் பொருளை எனக்கு கற்றுக் கொடுத்த...

    *கயிலை. க. ஆழ்வாரப்பன் (கல்வி முதுநிலை ஆசிரியர்) அய்யா அவர்களுக்கு எனது நன்றியைக் காணிக்கையாக்குகிறேன்.*


    மீண்டும் அடுத்தப் பதிவில்

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  179. Fri. 21, Oct. 2022 at 9.56 pm.

    அமிலத்துளிகள் − 18

    * எலுமிச்சம் சாற்றில் உள்ள வேதியியல் பொருள்.. *கால்சியம் ஹைட்ராக்ஸைடு.*

    * பொருட்கள் வேதியியல் வினைக்கு வேகமாக உட்படுவதற்கு பெயர்.... *கேடலிஸ்ட்.*

    * பிளீச்சிங் பவுடரைக் கண்டறிந்தவர்.... *டெனன்ட் (இங்கிலாந்து).*

    * மயக்க மருந்தாக ஈதரைப் பயன்படுத்திய முதல் மருத்துவர்.... *வில்லியம் மார்ட்டன்.*

    * அதிக அளவு நைட்ரஜனைக் கொண்டுள்ள சேர்மம்.... *அம்மோனியம் சல்பேட்.*

    * திரபடிக்ஸ் என்பது.... *மருந்துகளைப் பற்றி அறிதல்.*

    * நீரின் நிரந்தரமில்லாத கடினத் தன்மைக்குக் காரணம்..... *கால்சியம், மக்னீசியம் − பை − கார்பனேட்.*

    * நைட்ரஜனைக் கண்டறிய உதவும் சோதனை... *ஜெல்டால் சோதனை.*

    * குடிநீரை எளிய முறையில் சுத்தப் படுத்தும் முறைக்குப் பெயர்... *குளோரினேசன்.*

    * மோட்டார் வாகனங்களிலிருந்து வெளிப்படும் நச்சுப் புகை.... *கார்பன் மோனாக்ஸைடு.*

    * எண்ணெய்களில் இருந்து சோப்பு தயாரிக்கும் போது.. கிடைக்கும் துணை வினைப்பொருள்.... *கிளிசரின்.*

    * சோப்புகளில் உப்பாக உள்ள அமிலம்.... *கொழுப்பு அமிலம்.*

    * டைனமைட்டைக் கண்டு பிடித்தவர்.... *ஆல்பிரட் நோபல்.*

    * சிமெண்ட் தயாரித்தலில் அதிக அளவு பயன்படுத்தப்படும் பொருள்... *கால்சியம் ஆக்ஸைடு.*

    * அமில மழைக்கு காரணமான சேர்மம்...*சல்பர் − டை − ஆக்ஸைடு.*

    * நூலிழைகளால் ஆன கண்ணாடிக் கலவைக்கு பெயர்.... *ஃபைபர் க்ளாஸ்.*

    * கெட்டுப்போன வெண்ணெயில் இருந்து தோன்றும் துர்நாற்றத்திற்குக் காரணம்..... *பியூட்ரி்க் அமிலம்.*

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  180. அய்யா வெ.சாமி.அவர்களுக்கு நமஸ்காரம்.
    அய்யா எண்ணப்பதிகத்தில் பார் உரு ஆய (ஓ, அல்ல) என திருத்திக் கொள்ளுங்கள் அய்யா.

    ReplyDelete
  181. Sun. 23, Oct. 2022 at 7.39 am.

    இன்றைய சிந்தனையின் தலைப்பு... பிறரைப் பழித்து பேசாதிருத்தல்.

    எப்படி நம்மால் பிறரைப் பழித்து பேசாதிருக்க முடியும். அன்று உறக்கமே வராதே..நம்மில் பலருக்கு.

    ஆனால்... திருவள்ளுவர்.. பிறரைப் பழித்து பேசாதிருத்தல் நல்லது..இன்பம் தருவது எனக் கூறுகிறார்.

    எவ்வாறு என்று பார்க்கலாமா ?

    * அறமாகப் போற்றப்படுவதைப் பேசாமலும், அறநெறிக்கு மாறாகச் செயல் புரிந்து ஒருவன் இருந்த போதிலும், பிறரைக் குறித்துப் புறத்தே பழித்துப் பேசமாட்டான். அது அவனுக்கு நல்லது ! இன்பம் தருவது ஆகும்.

    * மேலும், ஒருவரைக் காணாதபோது, புறத்தேப் பழித்துப் பேசியும், நேரில் காணும்போது பொய்யாக உறவு பாராட்டி மகிழ்ந்து செல்வதும் அறநெறியைப் புறக்கணித்துப் பொல்லாங்கு செய்வதைக் காட்டினும்.. *தீய செயலாகும்*

    * ஒருவனைக் காணாதபோது பழித்துரைத்தும் , காணும்போது பாராட்டியும் முரண்பாடாக வாழ்வதைக் காட்டிலும்... செத்துப்போவது (இறந்து போவது) மேலானது என அறநூல்கள் கூறுவது உயர்வைத் தரும்.

    * ஒருவர் முகத்துக்கு முன்பே பரிவின்றி கடுமையான சொற்களால் கண்டித் தாலும் தவறில்லை. ஆனால்... ஒருவர் இல்லாத இடத்து, அவரைப் பற்றிப் பின் விளைவை சிந்திக்காது.... அவதூறாகப் பேசுவது ஆகாது.

    * ஒருவன் பிறரைக் குறித்துப் பேசும் சிறுமையைக் கொண்டே.. அவன் அறநெறியில் வாழ்பவன் அல்லன்..என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

    * ஒருவன் மற்றொருவனைப் பற்றிய பழிச் சொற்களை அவன் அறியாமல் சொன்னால்... அவனது பழிச் செயல்களை ஆராய்ந்து, அவற்றுள் கொடுமைமிக்கவற்றைப் பிறர் அவன் மீது கூறுவர்.

    * பிறருடன் இனிமையாகப் பழகி, நட்புறவு பேணத் தெரியாதவரே... இருவரிடமும் புறம்பேசி அவர்தம் நட்புக் கெடுமளவுக்கு உறவினரையும் கூடப் பிரித்து விடுவர்.

    * தம்முடன் பலவகையிலும் நெருங்கிப் பழகிய நண்பரையும் பழித்துரைக்கும் இயல்புடையவர்.... தொடர்பில்லாத பிறரைப் பெரிதும் பழித்துப் பேசுவர் ! அப்படிப்பட்டவர்... பழகிய நண்பனையே இழித்துக் கூறுவர்.

    * இழிவாகப் பிறரைப் பழித்துரைக்கும் புறங்கூறுவாரை... "நிலமகள்" பொறுமையோடு சுமப்பது மிக அரிய செயலாகும். பிறர் இல்லாதபோது அவரைப்பற்றி அவதூறு பேசுவோரின் உடலை *இம்மண் சுமப்பது அறம் கருதிய செயலாகும்.*

    * பிறருடையக் குற்றத்தைத் தான் காண்பது போன்று, ஒருவன் தன் குற்றம், குறைகளைக் காண்பானாயின்... இவ்வுலகத்தே உயிர்வாழும் மக்களுக்குத் *தீமை* எதுவும் நேராது ! இன்பமே நீடித்து நிலைக்கும்.....

    என்று திருவள்ளுவர்... *புறங்கூறாமை* என்ற தலைப்பில்.. பத்துக் குறட்பா நமக்கு அருளிச் செய்துள்ளார்.

    திருக்குறள் : 181−190 வரை திருக்குறளைப் பார்த்து உடனே அறிந்து கொள்ளுங்கள்.

    <> *இனிமே புறங்கூறமாட்டீர்கள் தானே !*

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  182. Sun. 23, Oct. 2022, at 5.27 pm.

    எண்ணப்பதிகம்...!

    திருச்சிற்றம்பலம்

    பாடல் - 2

    உரியேன் அல்லேன் உனக்கு அடிமை
    உன்னைப் பிரிந்துஇங்கு ஒருபொழுதும்
    தரியேன் நாயேன் இன்னது என்று
    அறியேன் சங்கரா கருணையினால்
    பெரியோன் ஒருவன் கண்டுகொள் என்று உன் /பெய்கழல் அடிகாட்டிப்
    பிரியேன் என்று என்று அருளிய அருளும்
    பொய்யோ எங்கள் பெருமானே.

    இதன் பொருள் ...

    உரியேன் அல்லேன் − உனக்கு அடிமையாக இருக்க தகுதியில்லை.

    தரியேன் − சகிக்க மாட்டேன் (பொறுக்க மாட்டேன்)

    பெய்கழல் − செறிந்த சிலம்புகளை அணிந்த திருவடிகள்.

    இதனின் விளக்கம் :

    *எனது பெருமானே ! சங்கரனே ! தேவரீருக்குத் தொண்டனாய் இருத்தற்கு அடியேன் தகுதியானவன் அல்லேன்.

    ஆனால்... தேவரீரை விட்டு நீங்கி... இவ்விடத்துச் சற்று நேரமும் தனியே இருக்க பொறுக்க மாட்டேன்.

    நாயனைய யான்... இது என்ன காரணமென்று தெரிகிலேன். பெரியோன் ஒருவன் என்மீது கருணை கொண்டு... யானே முதற்கடவுளாகிய ஒருவனென்று, என்னைத் தெரிந்து கொள்ளக் கடவாய் என உன்னுடைய
    வீரக்கழலை அணிந்த உன் திருவடிகளைக் காட்டி.. எந்நாளும் பிரியேன் என்று சொல்லி, வரம் தந்து அருள் செய்தருளிய வாக்கும் பொய்மொழிதானோ ?

    மீண்டும் அடுத்த பதிவில்...!

    திருச்சிற்றம்பலம்

    .Jansikannan60@gmail.com

    ReplyDelete
  183. This comment has been removed by the author.

    ReplyDelete
  184. Wed. 26, Oct. 2022 at 6.02 am.

    அமிலத் துளிகள் − 19

    * விளையாட்டு வீரர்கள் உடனடி சக்திக்கு உட்கொள்வது.... *குளுக்கோஸ்.*

    * பசும் பாலில் உள்ள அமினோ அமிலம்... *ட்ரிப்டோபன்.*

    * பாதரசத்தில் இரும்பு ...... *மிதக்கும்.*

    * பாதரசத்தில் இரும்பு மிதப்பதற்கான காரணம்..... *இருமபைவிட பாதரசத்தின் அடர்த்தி அதிகம்.*

    * பாலை 60 டிகிரி சென்ட்டிகிரேட்டில் சூடாக்கினால் கெடாது என்பதைக் கண்டு பிடித்தவர்.... *லூயி பாஸ்டியர்.*

    * ஒரு கரைசலிலுள்ள சர்க்கரையின் அளவை அறிய உதவும் கருவி.... *சாக்கரி மீட்டர்.*

    * முதன் முதலாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்தின் பெயர்.... *DDT (டைகுளோரோ டைஃபினைல் டிரைகுளோரோ ஈத்தேன்.*

    * குளிர்சாதனப் பெட்டியில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் குளிர்விப்பதற்கான பொருளின் பெயர்... *பிரியான்.*

    * புகையிலையை உலராமல் பாதுகாத்து வைக்கப் பயன்படும் பொருள்... *கிளைக்கால்.*

    *புகையிலைத் தாவர வளர்ச்சிக்கு தேவையான உரம்... *பொட்டாசியம்.*

    * பெட்ரோலியத்தில் பெருமளவு காணப்
    படுவது.... *அரோமேட்டிக்.*

    * புதை வடிவ எரிபொருள் எரியும் பொழுது உருவாவது.... *கந்தக ஆக்ஸைடு.*

    * பொதுவாக ராட்சத பலூன்களில்
    நிரப்பப்படும் வாயு.... *ஹீலியம்.*

    * முதன் முதலில் அணுவின் அமைப்பை முன்மொழிந்தவர்.... *ஜான் டால்டன்.*

    * தீப்பெட்டித் தொழிலில் பயன்படும் முதன்மை மூவப்பொருள்.... *பொட்டாசியம் குளோரேட்டு.*

    கண்ணாடியில் அடங்கியுள்ள பொருள்.... *கால்சியம் சில்கேட்.*

    * சாண எரிவாவுவில் அதிகம் காணப் படுவது.... *மீத்தேன்.*

    * "உறவியல் தந்தை" எனப் போற்றப்படுபவர்.... *சிக்மண்ட் ஃபிராய்டு.*

    * நீரில் கலந்துள்ள ஹைட்ரஜன், ஆக்ஸிஜனின் எடை விகிதம்... *1:8.*

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  185. sat. 29, Oct. 2022 at 7.27 am.

    நம்மை நாமே அறிவது எவ்வாறு என பார்த்து வருகிறோம்..

    இன்றைய பாடமாக...

    நமது உடல் தன்மை வாதமா ? பித்தமா ? கபமா என பார்க்கப் போகிறாம்.

    இவற்றைப் பார்க்குமுன் ஒரு சிறிய அறிமுகம்...

    நாம் ஒவ்வொருவருமே தனி தனி தன்மையாளர்கள். ஆயினும்... நாம் அனைவருமே இயற்கை அன்னையைச் சார்ந்தும்..அதனுடையக் கட்டுப்பாட்டின் கீழும் தான் வாழ்கிறாம்.

    வாழ்க்கை என்பதே... அனுபவிப்பதற்குத் தானே. இருந்தபோதிலும்... நாம் வரம்பு மீறினால் அனுபவிக்கும் திறனை இழந்து விடுவோம்.

    எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை வகுக்கப்பட்டிருக்கிறது.

    உதாரணமாக..

    நாம் மூச்சுவிட்டே ஆக வேண்டும். சாப்பிட்டே ஆக வேண்டும். உறங்கியே ஆக வேண்டும், பேசியே ஆக வேண்டும்.


    எனினும்... மிக முக்கியமான வரம்பாக நம் உடல் உறுப்புகளின் திறன் அனுமதிப்பதைச் சார்ந்து தான் நாம் அனுபவிக்க முடியும்.

    ஆகவே... நாம் வரம்பு மீறினால்..இயற்கை அன்னை நம்மைக் கட்டாயப் படுத்தி நம்மை வரம்புக்குள் வைக்கும்.

    இதன்படி... நோய் என்பது.. நம்மை நாமே வரம்புக்குள் கொண்டுவரச் செய்ய இயற்கை அன்னை எடுக்கும் ஒரு வழி ஆகும்.

    ஆகவே தான்... இயற்கை அன்னை, இயற்கைத் தாய் என்று கூறுகிறோம்.

    காரணம்... அவள் உங்களை....நீங்கள் நேசிப்பதை விட அதிகமாக நேசிக்கிறாள். நீங்கள் அழிவதைப் பார்க்கப் பிடிக்காமல்... உங்களுடைய தவறுகளைப் பல வழிகளில் எச்சரிக்கை செய்கிறாள்.

    நீங்கள் அவள் விடுக்கும் எச்சரிக்கை களை மீறும்போது தான்.. தீவிரமான நடவடிக்கைகள் எடுக்க நேரிடுகிறது.

    ஆகவே... வரம்புகளைப் புரிந்து கொண்டு வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும்.

    இப்போ பாடத்துக்குள் வருவோம்...!

    நமது உடலிலுள்ள தோஷங்கள் அவ்வப் போது நிவிர்த்தி செய்யப்பட வேண்டும்.

    இது நாம் உண்ணும் உணவின் சுவையின் அடிப்படையில் தான் தோஷங்கள் அமைகின்றது.

    எவ்வாறு தோஷங்கள் பஞ்சபூத அடிப்படையில் உள்ளதோ... அவ்வாறே சுவையும் பஞ்சபூதங்கள் அடிப்படையில் உள்ளது.

    ஆறு சுவைகள் நாம் அறிந்ததே....

    இருப்பினும்... காரம் , துவர்ப்பு , புளிப்பு , இனிப்பு , உப்பு , கசப்பு ஆகும்.

    நாம் உண்ணும் உணவில் எதை எடுத்துக் கொண்டால்.. வாதம், பித்தம், கபம் அதிகமாகும், குறையும் என்பதை இப்போது பார்க்கலாம்...

    இவை முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று...என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    * காரம் சேர்த்தால்... வாதம் கூடும். பித்தம் கூடும். கபம் குறையும்.

    * துவர்ப்பு சேர்த்தால்... வாதம் கூடும். பித்தம் குறையும். கபம் குறையும்.

    * புளிப்பு சேர்த்தால்.... வாதம் குறையும். பித்தம் கூடும். கபம் கூடும்.

    * இனிப்பு சேர்த்தால்.... வாதம் குறையும். பித்தம் குறையும். கபம் கூடும்.

    * உப்பு சேர்த்தால்... வாதம் குறையும். பித்தம் கூடும். கபம் கூடும்.

    * கசப்பு சேர்த்தால்... வாதம் கூடும். பித்தம் குறையும். கபம் குறையும்.

    மேலும்....

    * காரத்திற்கான சுவை உள்ள பொருட்கள்.....

    மிளகு, மிளகாய், வெங்காயம், பூண்டு, இஞ்சி, வெற்றிலை, துளசி, பெருங்காயம்.

    * துவர்ப்புக்கான சுவை உள்ள பொருட்கள்....

    சோயாபீன்ஸ், பச்சை பட்டாணி, முட்டைக் கோஸ், பாசிப்பருப்பு, காலிஃப்ளவர், கொண்டைக்கடலை, புருக்கோலி, கடுக்காய், வாழைப் பூ , கேரட், அவரை, வாழைக்காய், நெல்லி.

    * புளிப்புக்கான சுவை உள்ள பொருட்கள்....

    எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை, தக்காளி, புளி, பூசணி, தயிர், பாலாடைக்கட்டி, ஸ்ட்ராபெர்ரி, நெல்லி.

    * இனிப்புக்கான சுவை உள்ள பொருட்கள்....

    தேன்., வெல்லம், கோதுமை, சிறு தானியங்கள், பார்லி, ஆப்பிள், திராட்சை, முலாம்பழம், கம்பு, பேரிக்காய், மக்காச்சோளம், வெங்காயம், அத்திப்பழம், கேரட்.

    * உப்புக்கான சுவை உள்ள பொருட்கள்...

    கல் உப்பு, இந்துப்பு, பீர்க்கங் காய், முள்ளங்கி, சுரைக்காய், வாழைத்தண்டு, கோவைக்காய்.

    * கசப்புக்கான சுவை உள்ள பொருட்கள்..

    பாகற்காய், வேப்பிலை, சிறியா நங்கை, கீரை, வெந்தயம், காலே இவைகள், எள், நிலவேம்பு, துதுவளை, வெண்டைக்காய்.

    ஒவ்வொரு சுவையும்... நாக்கிற்கு மட்டுமின்றி... உடல் முழுவதற்கும் விளைவுகளை ஏற்படுத்தும்.

    இதைப் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  186. Mon. 31, Oct. 2022 at 11.15 am.

    உயிரியல் துளிகள் − 14

    * பறவைக் கூட்டத்தை அழைப்பது... *புளோக்.*

    * ஒரு பெண் பறவையால் இடப்படும் முட்டைகளின் மொத்த தொகுதிக்கு பெயர்.... *கிளட்ச்.*

    * இளம் பறவைக்கு முதலில் முளைக்கும் ஒரு இணை இறகுகளுக்குப் பெயர்....
    *ஃபிளட்கிளிங்.*

    * பறவையின் உடலில் உள்ள மொத்தச் சிறகுகளையும் குறிக்கும் ஒரே சொல்....
    *புளுமேஜ்.*

    * தொட்டவுடன் துலங்கும் செடியின் தன்மைக்கு... *ஹாப்டோ டிராபிஷம்.*

    * வேதியியல் பண்பு கொண்ட தாவரவகை ... *செமோடிராபிஷம்.*

    * உயிரினங்களின் பல்வேறு வகைகளைப் பற்றிப் படிப்பதற்கு... சார்லஸ் டார்வின் சென்ற தீவு....
    *காலா பாகஸ்.*

    * சார்லஸ் டார்வின் பயணம் செய்த கப்பல்.... *பிகிள்.*

    * கடற்கரையின் துப்புரவாளர் என அழைக்கப்படுபவை.... *மணல் ஹோப்பர்கள் , நண்டுகள்.*

    * நண்டுகளுக்குப் பற்கள் அமைந்துள்ள இடம்... *வயிறு.*

    * மூக்கில் பல் உள்ள விலங்கு....*முதலை.*

    * வயிறும், ஜீரண உறுப்பும் இல்லாத உயிரி.... *ஈசல்.*

    * பச்சைப் பட்டாணியின் விஞ்ஞானப் பெயர்.... *பைசம் சட்டைவம்.*

    * தாவரப் பேரினங்களின் தந்தை....
    *டோர்னி ஃபோர்ட்.*

    * தோலினால் சுவாசிக்கும் உயிரி... *மண்புழு.*

    * நடக்கத் தெரிந்த ஒரே பறக்கும் பூச்சி.... *வெட்டுக்கிளி.*

    * வெட்டுக்கிளிக்குக் காதுகள்..... *கால்களில்.*

    * இமயமலைத் தொடரில் காணப்படும் பாலுட்டி இனத்தைச் சேர்ந்த மாமிச உண்ணி... *பனிச்சிறுத்தை.*

    * இதயக் கோளாறுடன் பிறக்கும் குழந்தைகள்.... *நீலக் குழுந்தைகள்.*

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  187. Mon. 31, Oct. 2022 at 2.47 pm.

    நாடிப் பயிற்சி − 72.

    கடந்த பாடத்தில் 14− வேகங்களைப் பற்றியும், இவ்வேகங்களைத் தடுத்தலால் உண்டாகும் நோய்களையுப் பற்றியும் பார்த்தோம்.

    இன்று நாம் பார்க்கப் போவது... உடற்றீ.

    உடற்றீ 4− வகைப்படும்.

    * சமான வாயு
    * விஷமாக்கினி
    * தீ௯ஷணக்கினி
    * மந்தாக்கினி.

    * சமான வாயு என்பது... தன் இயற்கையினிடத்தில் இருப்பின் அது சமாக்கினி ஆகும்.

    * விஷமாக்கினி என்பது... சமான வாயு இடந்தப்பின் அது விஷமாக்கினி ஆகும்.

    * தீ௯ணாக்கினி என்பது... விஷமாக்கினி பித்தத்தைச் சூழ்ந்தால்... அது தீ௯ணாக்கினி ஆகும்.

    * மந்தாக்கினி என்பது... பித்தத்தோடு கபமும் சேர்ந்தால்... அது மந்தாக்கினி ஆகும்.

    இன்னும் தங்களுக்குப் புரியும்படியாகக் கூறுகிறேன்...!

    * சமாக்கினி என்பது...

    ஒருவன் வேண்டுமளவு உட்கொள்ளு கின்ற உணவு, நீர் இவைகளை முறைப்படி, கால அளவுக்கு மாறுபடாமல்
    நன்றாகச் சீரணிக்கச் செய்யும் தீயே... சமாக்கினி ஆகும்.

    * விஷமாக்கினி என்பது....

    உண்ணப்பட்ட உணவுகள்.. உடனே சீரணிக்கப்படாமல், நெடுநேரம் கழித்துச் செரிப்பிக்கும். அப்படிச் செரிப்பித்தாலும் அவைகள் விஷமச் சீரணமேயாகும்.

    * தீ௯ஷணாக்கினி என்பது....

    வெந்ததும், வேகாததுமான (அரை வேக்காடு) உணவுப் பொருட்களை புசித்தாலும்... அதன் இரசத்தோடும் (சாரம்) கூடவே செரிப்பிக்கும்.

    * மந்தாக்கினி என்பது....

    விருப்பத்தோடு உண்ட பாகமான உணவுப் பொருட்கள்... உடனே செரிப்பிக்காமல், வாயுவால் வயிற்று இரைச்சல், குடல் இரைச்சல், வயிறு உப்பிசம், உடல் கனத்தல் என்னும் இவைகளை உண்டாக்கி நெடு நேரத்திற்குப் பிறகு செரிப்பிக்கும்.

    இவையே உடற்றீயின் விளக்கம் ஆகும்.

    மீண்டும் அடுத்த பதிவில்...

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  188. Tue. 01, Nov. 2022, at 5.07 pm.

    அமிலத் துளிகள் − 20

    * நைட்ரிக் அமி்லத்தில் இருந்து தயாரிக்கப்படும் உரம்.... *அம்மோனியம் நைட்ரேட்.*

    * தாமிர கார்பனேட்டின் நிறம்.... *பச்சை.*

    * PH அளவீட்டினை அறிமுகப்படுத்திய வர்...."SPL சாரன்சன்.*

    * நெல் விளைச்சலுக்கு ஏற்ற மண்ணின் PH தன்மை... *அமிலத்தன்மை.*

    * பாப் என்ற ஒலியுடன் வெடித்து எரியும் வாயு.... *H2.*

    * புற்று நோய் உருவாக ஏதுவான pH மதிப்பு.... *5.5.*

    * pH + pOH = *14.*

    * வயிற்று உபாதைகளைப் போக்கப் பயன்படும் காரம்.... *Mg (OH)2.*

    * கழிவறைகளை சுத்தம் செய்யப் பயன்படும் அமிலம்.... *HCI.*

    * வெள்ளிக்கொலுசின் நிறம் மங்குவதற்குக் காரணம்.... *Ag2S.*

    * குளிர், இருமல், ஃப்ளு போன்ற நோய்த் தாக்கத்திற்கான pH -ன் மதிப்பு.... *6.9.*

    * தாவரங்களின் பச்சையத்தில் உள்ள உலோகம்.... *Mg.*

    * கேக் மற்றும் ரொட்டிகளை மென்மையாக்குவது.... *NaHCO3.*

    * அலுமினியத்தின் இணைதிறன்.... *3.*

    * யூரியா எந்த சேர்மத்தில் இருந்து முதன் முதலில் தயாரிக்கப்பட்டது...*அம்மோனியம் சயனேட்டு.*

    * யூரியாவை முதன் முதலில் தயாரித்த வேதியலார்.... *ஹோலர்.*

    * ஆல்கஹாலின் மாற்றியங்கள்.... *ஈதர்கள்.*

    * நொதித்தலின் போது பராமரிக்கப்பட வேண்டிய வெப்ப நிலை... *303K.*

    * அணுக்கள் என்பவை பிரிக்க முடியாத கடினமான கோளங்கள் எனக் கூறியவர்..*ஜான் டால்டன்.*

    * ஹைட்ரஜனின் கிராம் அணு நிறை... *1−கிராம்.*

    * கார்பனின் கிராம் அணு நிறை.... *12−கி.*

    * ஆக்ஸிஜனின் கிராம் அணு நிறை... *16−கி.*

    * உலோக அலுமினியத்தை கண்டு பிடித்தவர்.... *பிரெடரிக் வொகுலர்.*

    * நடைமுறையில் இருக்கும் ஐசோடோப்புகளை வெளிப்படுத்தியவர்..*பிரெடரிக்சோடி.*

    * அமைல் நைட்ரேட் என்பது... *மார்பு வலியைப் போக்கும் ஹோமியோபதி மருந்து.*

    * ஆஸ்பிரின் என்பது.... *தலைலியைக் குணப்படுத்தும் மருந்து.*

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  189. Wed. 02, Nov. 2022, at 3.37 pm.

    கணக்குப் பதிவியல் − 3

    * முதல் மீதான வட்டி.... *இலாப நட்டக் கணக்கில்* பற்று வைக்கப்படும்.

    * எடுப்பு மீதான வட்டி..... *முதல்* கணக்கில் பற்று வைக்கப்படும்.

    * இறுதி முதலை அறிவதற்கு, ஆண்டு.... *இறுதியில்* நிலை அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும்.

    * வியாபாரத்தின் முதலினை அறிய... *நிலை அறிக்கை* தயாரிக்க வேண்டும்.

    * கடன் விற்பனையை அறிய .... *மொத்தக் கடனாளிகள் கணக்கு* தயாரிக்க வேண்டும்.

    * ஆண்டுத் தொடக்கத்தில் நிலை அறிக்கையை தயாரிப்பதன் மூலம்... *தொடக்க முதலை* அறியலாம்.

    * ஒரு நிலை அறிக்கை என்பது... *இருப்பு நிலைக் குறிப்பு* போன்று தோற்றமளிக்கும்.

    * நிலை அறிக்கை முறை என்பது.... *நிகர மதிப்பு முறை (அ) முதல் ஒப்பீட்டு.*

    * ஆள்சார் மற்றும் ரொக்கக் கணக்குகள்..... *ஒற்றைப் பதிவு* முறையில் மட்டுமே பதியப்பட வேண்டும்.

    * ஒரு சொத்தின் பயனளிப்புக் காலம் முடிந்த பிறகு, அதை விற்றால் கிடைக்கக் கூடிய தொகை.... *எறி மதிப்பு (அ) இறுதி மதிப்பு.*

    * குத்தகைகள் மீது தேய்மானம் கணக்கிட..... *ஆண்டுத் தொகை* பயன்படுத்த வேண்டும்.

    * தேய்மானத் தொகை, ஒரு செலவாகக் கருதப்பட்டு... *இலாப நட்டக் கணக்கில்* பற்று செய்தல் வேண்டும்.

    * பொறுப்புகளைவிட கூடுதலாக உள்ள சொத்துகள்... *முதல்* ஆகும்.

    * ரொக்கத் திட்டந் பட்டியல் என்பது.... *நிதித் திட்டப் பட்டியல்.*

    * மொத்த இலாபம் மாற்றப்படுவது... *இலாப நட்டக் கணக்கு.*

    * கடன் மீதான கொடுபட வேண்டிய வட்டி கட்டப்பட வேண்டிய கணக்கு... *கடன் கணக்கு.*

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  190. * முதல் மீதான வட்டி அனுமதிக்க வேண்டும் என்பது.... *வியாபார நிறுவனம், முதலினை உரிமையாளரிட மிருந்து.. கடனாகப் பெற்றுக் கொள்ளப்படுவதால்...முதல் மீதான வட்டி அனுமதிக்கப் பட வேண்டும்.

    ReplyDelete
  191. Wed. 02, Nov. 2022, at 7.09 pm.

    நம் இந்தியாவில் பயிராகும் நெற்கள்... உருவத்திலும், குணத்திலும், கனத்திலும், நிறத்திலும் வேறுபட்டிருக்கும்.

    இவ்வாறு அருமையான அரிசியின் பெயர்களையும், அதன் தன்மைகளையும் இன்று நாம் பார்க்கப் போகிறோம்.

    * *கோடைச்சம்பா அரிசி:** :

    இவ்வரிசிரியை சமைத்து உண்கில்... முத்தோஷத்தால் வரும் வாதவலியும், சரீரத்தின் சிற்சில நோய்களும் தீரும்.

    * *குன்றிமணிச்சம்பா அரிசி* :

    சரீர பலமும், சுக்கில தாதுவும் விருத்தியாகும். மேலும்... வாத, ரோக முதலிய நோய்கள் விலகும்.

    * *கைவரைச்சம்பா அரிசி* :

    சுக்கில ஸ்தம்பனமும், சுகமும் உண்டாகும். உடலுக்கு அதிக வன்மையைக் கொடுக்கும். பித்தம் சிறிது அதிகரிக்கும்.

    * *கோரைச்சம்பா அரிசி.* :

    பித்தம், பிரமேகம், ஈட்சூடு, நமைச்சல் இவைகளை நீக்கி செளபாக்கியம் கொடுக்கும். ஆனால் குளிர்ச்சி...என்பர்.

    * *வளைதடிச்சம்பா அரிசி* :

    வாத, பித்த தொந்தம், வயிறு உப்பிசம், வயிறு வலி, கரப்பான், இவைகள் உண்டாம்.

    * *மைச்சம்பா அரிசி* :

    வாத பித்த தொந்தம், தனிவாத கோபம், அரோசகம்...இவைகள் நீங்கும்.

    * *மல்லிகைச்சம்பா அரிசி* :

    சரீரத்திற்கு ஆரோக்கியத்தையும், உறுதியையும் தரும். கரப்பான், பிரமேகம், நேத்திர வெப்பம் இவைகள் நீங்கும்.

    * *மிளகுச் சம்பா அரிசி* :

    ஆரோக்கியத்தைக் கொடுத்து, தீபாக்கினியை வளர்க்கும். மகரவாத போன்ற பலவகை ரோகங்களை தீர்க்கும்.

    மீண்டும் அடுத்த பதிவில்....!

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  192. Thu. 03, Nov. 2022 at 7.11 am.

    அமிலத் துளிகள் −21

    * சூரிய ஒளி பூமியை அடைய எடுத்துக் கொள்ளும் கால அளவு......
    *499 வினாடிகள்.*

    * வியாழன் பூமியை விட ..... *1300 மடங்கு* பெரியது.

    * வளி மண்டலத்தில் இருக்கும் அதிக சதவீத வாயு ..... *நைட்ரஜன்.*

    * காற்றின் கன அளவில் 78% கொண்டு தயாரிக்கப்படும் புதிய வாயுவைக் கண்டுபிடித்தவர்.... *டி. ரூதர்ஃபோர்டு.*

    * ஆக்ஸிஜன் மற்றும் ஓசோனுக்கிடையே யான தொடர்பு .... *அல்லோட்ரோப்ஸ்.*

    * சந்திரனில் கால் பதித்த முதல் மனிதர்.... *நீல் ஆம்ஸ்ட்ராங்.*

    * மனித உடலை அழிக்கும் வேதியியல் மூலக்கூறு ..... *டாக்ஸின் (நச்சு).*

    * அமோனியம் சயனைடு & கால்சியம் கார்பைடு கண்டு பிடித்தவர்..... *பிரெடரிக் வொகுலர்.*

    * ஆல்கஹால் குடிப்பதனால் உடலில் பாதிக்கப்படும் பகுதி .... *கல்லீரல்.*

    * சிகரெட்டில் தீங்கை விளைவிக்கும் பொருள்.... *நிகோடின்.*

    உல்ஃ்ப்ரம் என்னும் தனிமத்தின் ஆங்கிலப் பெயர் ..... *டங்ஸ்டன்.*

    * டி.டி.டி−ஐக் கண்டுபிடித்தவர் ..... *பால்முல்லர்.*

    * டி.டி.டி−யின் விரிவாக்கம் ....
    *டைகுளோரோ−டைஃபினைல்−ட்ரைளோரோ ஈத்தேன்.*

    * புரோமினின் குறியீடு.... *Br.*

    * தூய்மையான மணல் வடிவம் என்பது.... *குவார்ட்ஸ்.*

    * பாலிமரின் வியாபாரப் பெயர் .... *பெர்ஸ்பெக்ஸ்.*

    * பாலின் தூய்மையை அறிய உதவும் கருவி .... *லேக்டோ மீட்டர்.*

    * பென்சீனை கண்டுபிடித்தவர் .... *மைக்கேல் ஃபாரடே.*

    * தோரியம் கண்டறிந்தவர் ....
    *ஜே.ஜே. பெர்ஜீலியஸ்.*

    * அடர்த்தி மிக்க "அலோகம்" .....
    *வைரம்.*

    * இந்தியாவில் பாதரசம் கிடைக்கும் ஒரே மாநிலம் .... *கர்நாடகம்.*

    * ஹைட்ரஜன் என்ற சொல் ...... *கிரேக்க மொழி.*

    * ஹைட்ரஜன் மற்றும் ஆர்கானைக் கண்டறிந்த அறிவியல் அறிஞர்.... *ஹென்றி காவெண்டிஷ்.*

    * செயற்கை கிட்னி செய்யப் பயன்படும் பிளாஸ்டிக் வகை .... *பாலிவினைல்.*

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  193. Thu. 03, Nov. 2022 at 5.30 am.

    கணக்குப் பதிவியல் − 4

    * ஒரு தொழில் உரிமையாளரின் சொத்துக்கள் ரூ.5,00,000.
    அவருடைய பொறுப்புகள்... 3,50,000 .
    அவருடைய முதல்.... *1,50,000.* ஆகும்.

    * வாராக் கடன் என்பது... *திரும்பப் பெற இயலாத கடன்.*

    * சொத்தில் வாழ்நாள் முழுவதும் ஒரு குறிப்பிட்டத் தொகையே ஆண்டு தோறும்..., "தேய்மானமாக" நீக்கப்படுகிறது. "

    தேய்மானத் தொகையும், தேய்மான விகிதமும் கணக்கிடப்படும் முறை...

    *மொத்த அடக்க விலை...*

    *தேய்மானத் தொகை =
    *− இறுதி மதிப்பு / எதிர்நோக்கும் பயனளிப்புக் காலம்.*

    *தேய்மான விகிதம் =*
    *தேய்மானத் தொகை X 100 / மொத்த அடக்க விலை*

    * விற்ற சொத்தின் மீதான இலாப நட்டத்தைக் கணக்கிடும் முறை....

    ஏட்டு மதிப்பு =
    அடக்க விலை − சொத்து விற்கப்படும் நாள் வரையிலான தேய்மானம்.

    ஏட்டு மதிப்பு விற்பனை விலையை விடக் குறைவாக இருந்தால்... அது இலாபம். அதிகமாக இருந்தால் நட்டம்.

    எ. கா.

    ஒரு நிறுமம் ரூ. 28, 000 மதிப்புள்ள அறைகலனை வாங்கியது. ஆண்டு தோறும் நேர்க்கோட்டு முறையில் (நிலைத் தவணை முறை அல்லது உண்மை அடக்க விலையில் குறிப் பிட்ட சதவீத முறை) தேய்மானம் நீக்கப்பட்டது. ,அறைகலனின் பயனளிப்புக் காலம் 5 ஆண்டுகள். அதன் இறுதி மதிப்பு.. ரூ.2,000

    எவ்வாறு கணக்கிடுவது....

    மொத்த அடக்க விலை − இறுதி மதிப்பு / எதிர்நோக்கும் பயனளிப்புக் காலம்.

    ரூ.28,000 − 2000 / 5 = 26,000 / 5 = ரூ.5,200/−



    * நிகர இலாப விகிதம் கணக்கிடும் முறை...!

    முதலாவதாக... நிகர இலாபம் என்றால் என்ன என பார்ப்போம்...!

    நிகர இலாபம் என்பது... ஒரு நிறுவனத் தின் ஒருமித்த திறனை நிர்ணயிக் கிறது. அதாவது... ஒரு வணிக நிறுவனத்தின் இலாப நட்டக் கணக்கிலிருந்து பெறப்படுவதாகும். அல்லது... நிதிசார் செலவுகளை கழித்த பின் கிடைக்கும் இதர வருவாயை கூட்டுவதன் மூலம் கணிக்கப்படுவதாகும்.

    அடுத்து... நிகர இலாப விகிதம் என்பது... நிகர இலாபத்திற்கும், விற்பனைக்கும் இடையேயான உறவே... நிகர இலாப விகிதம் என்கிறோம்.

    இவ்விகிதம் கணக்கிடும் முறை....!

    நிகர இலாப விகிதம் =
    நிகர இலாபம்/விற்பனை X 100.

    எ. கா.

    நிகர இலாபம் ரூ 4000, விற்பனை ரூ.44,000 , விற்பனை திருப்பம் ரூ.4000.

    நிகர இலாப விகிதம் = நிகர இலாபம் X 100 / விற்பனை

    விற்பனை = மொ.விற்பனை − வி.திருப்பம்

    = 44,000 −4000 = 40,000/− ரூ.

    நிகர இலாப விகிதம் = 4000 x 100/ 40,000 = 10%.

    இவ்வாறு கணக்கிடல் வேண்டும்.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  194. Fri. 04, Nov. 2022, at 6.54 am.

    இயற்பியல் துளிகள் − 11

    * பாஸ்கல் விதி.....

    *அசைவற்று இருக்கும் ஒரு நீர்மத்தில், ஒரு புள்ளியில் ஏற்படும் அழுத்தம், அதன் ஏனைய புள்ளிகளுக்கும் சமமாகப் பரவும்.*

    * நீர்மூழ்கிக் கப்பல் இயங்கும் விதம்....

    *இதில் உள்ள நிறைத் தொட்டியில் நீர் நீரப்ப நீரினுள் செல்லும். தொட்டி நீரில் இறுகிய காற்றைச் செலுத்த, அது மீண்டும் நீரின் மேல் வரும்.*

    * விரிவுமானி என்பது......

    *ஒரு பொருளில் தகைவை ஏற்படுத்தி, அது உண்டாக்கும் திரிபை அளக்கும் கருவி.*

    * தனி ஊசலை முதன் முதலில் ஆராய்ந்தவர் ......

    *கலிலியோ. தம் 17−ஆம் வயதில் பைசா நகர ஆலயத்தில் ஆடிய ஒரு விளக்கு−வின் இயக்கத்தைத் தம்முடைய "நாடித் துடிப்பைக்" கொண்டு அளந்தார்.*

    * மின்னல் தடுப்பான்கள் என்பது......

    *கட்டிடங்களில் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டிருக்கும். இது மின்னலி லுள்ள மின்சாரத்தை , நிலத்திற்குக் கடத்திக் கேடு விளையாமல் தவிர்க்கும்.*

    * சுழல் கவராயம் என்பது......

    *இதல் காந்தம் இல்லை. எனவே காந்தப் புயல்களால், இது தாக்குறுவதுதில்லை. அமெரிக்க எல்மர் பெரி 1911−ல் இதனைப் புனைந்தார்.*

    * உலர்ந்த பனிக்கட்டி என்பது....

    *80 டிகிரி சல் உள்ள திண்மக் கரி ஈராக்ஸைடு, வண்டிகளில் செல்லும் பொருள்களைக் குளிர்ச்சியூட்டிப் பாதுகாக்கப் பயன்படுகிறது.*

    * மின் கடத்தல், வெப்பக் கடத்தல் என்பது.....

    *திண்பொருள் வழியே... வெப்பமும், மின்சாரமும் செல்லுதல்.*

    * ஐன்ஸ்டீன் எண் என்பது.....

    *காந்தப் பாய்ம இயக்கவியலில் பயன்படும் பருமனின் எண். இது ஒளி விரைபிற்கும், பாய்ம நேர் விரைவிற்கும் உள்ள வீதத்திற்குச் சமம்.*

    * குண்ட் குழாய் என்பது.....

    *ஆகஸ்ட் குண்ட் என்பவர் பெயரால் 1866−ல் அமைந்த கருவி. இது ஒளியின் விரைவை அளக்கப் பயன்படுகிறது.*

    * கதிரியல் பண்டுவம் என்பது.....

    *X- கதிர்கள், கதிரியக்கம் முதலியவை அடங்கிய கதிர்வீச்சினைப் புற்றுநோய், தோல்நோய் முதலியவற்றை நீக்கப் பயன்படும் பண்டுவம்.*

    * X - கதிர் வானியல் துறை உருவானது.....

    *1962−ல் நடைபெற்ற ஏவுகணைப் பறப்பில் முதல் கதிரவன் "சாரா எக்ஸ் கதிர்" மூலம் கண்டறியப்பட்டது. இத்துறை வளர்ந்து வருகிறது.

    * சோனார் என்பது....

    *ஒலியால் வழியறிதலும், எல்லை காணலும் ஆகும்.

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  195. Fri. 04, Nov. 2022 at 6.25 pm.

    உயிரியல்− 15

    * மனிதனின் கழிவு நீக்க உறுப்புகளில் மிக முக்கியமானது.... *சிறுநீரகம்.*

    * இதயத்திலிருந்து வரும் இரத்தம் சுத்திகரிக்கப்படுவது..... *நுரையீரல்களில்.*

    * முன் சிறுகுடல்... *வளைந்து காணப்படும்.*

    * இரைக்குழம்பைத் தாக்குபவை.... *பித்த நீர், கணைய நீர், குடல்நீர்.*

    * இரைப்பையிலிருந்து சிறுகுடலுக்குள் நுழையும் இரைக்குழம்பின் தன்மை..... *அமிலத்தன்மை* ஆகும்.

    * உமிழ் நீரில் உள்ள என்சைம்...... *டையவின்.*

    * உமிழ் நீரைக் கொழ கொழப்பாகவும், வழவழப்பாகவும் ஆக்குவது.. *மியூசின்.*

    * உணவு இரைப்பைக்குள் இருக்கும் நேரம்... *1மணி நேரம் முதல், 4−மணி நேரம் வரை.*

    * புரதங்களைத் தாக்கும் நொதிமம்....
    *பெப்ஸின்.*

    * கொழுப்பினைத் தாக்கும் நொதிமம்.... *லைபேஸ்.*

    * சிறுநீர் ஓட்டம் தடைபடக் காரணம்...
    *சிறுநீர் நாளத்தில் உண்டாகும் கட்டிகள் மற்றும் புற்றுநோயால்.*

    * உணவுக் குழாயின் முக்கியமான இரண்டு சுரப்பிகள்..... *கல்லீரல் மற்றும் கணையம்.*

    * கல்லிரல் வேலை செய்வது நின்றுவிட்டால் மரணம் நிகழ்வது.....
    *8−மணியிலிருந்து... 24− மணி நேரத்திற்குள்ளாக* நிகழும்.

    * புளித்த பாலில் உள்ள அமிலம்.... *லாக்டிக்.*

    * ஒரு சராசரி மனிதனின் இர்த்த அழுத்தம்.... *120/80.*

    * இதயம் 1−நிமிடத்திற்கு சுருங்கி விரிவது..... *70 முதல் 75 தடவை.*

    .* வயதானவர்களின் இதயம் 1 நிமிடத் திற்கு சுருங்கி விரிவது..... *90 முதல் 95 தடவை.*
    .
    * மனித இதய அறைகள்.... *4.*

    * எலும்பு மஜ்ஜையைத் தாக்கும் புற்றுநோயின் பெயர்.... *லூகேமியா.*

    * செரிமானத்தன் போது கொழுப்பு உடைக்கப்படும் பொருட்கள்.... *கிளிஸரால் மற்றும் கொழுப்பு அமிலங்களாக.*

    * தாவரச் செல்லில் இல்லாததும், விலங்குச் செல்லில் இருப்பதும்....
    *சென்ட்ரியோல்.*

    * பறவையியல் நிபுணர் என அழைக்கப்பெற்ற இந்தியர்..... *சலீம் அலி.*

    * வாழைத் தண்டில் உள்ள வைட்டமின்... *வைட்டமின்−D.*

    * வாழைத் தண்டில் உள்ள சத்து... *நார்ச் சத்து.*

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  196. Sat. 05, Nov. 2022, at 7.05 am

    நம்மை நாமே அறிவது எவ்வாறு....!

    இன்று நாம் பார்க்கப் போவது...

    ஒவ்வொரு சுவையும் நாக்கிற்கு மட்டுமின்றி , உடலில் ஏற்படுத்தும் விளைவுகளைப் பற்றி இன்று பார்க்கலாம்.

    * இனிப்பு (நிலம்−நீர்) :

    இனிப்புச் சுவை கபத்தை அதிகரிக்கும். பித்தம் மற்றும் வாதத்தை குறைக்கின் றது. இச்சுவை குளிர்ச்சி, மற்றும் கபத்தை அதிகரிக்கும். உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சியையும், வளத்தையும் கொடுத்து.... பசி, மற்றும் தாகத்தை நீக்கி, அனைத்து திசுக்களை யும் வளர்க்கின்றது.

    * புளிப்பு (நிலம் − நெருப்பு) :

    கபத்தையும் பித்தத்தையும் அதிகரிக்கும். வாதத்தைக் குறைக்கும். வெப்பம் மற்றும் கனத்தை அதிகரிக்கும். புத்துணர்ச்சியை அளிக்கும். கழிவுப் பொருட்களை வெளியேற்றும். பசி மற்றும் ஜீரண சக்தியை அதிகரிக்கும். நடுக்கம் மற்றும் வலிப்பைக் குறைக்கும்.

    * உப்பு ( நீர் − நெருப்பு ) :

    வாதத்தைக் குறைத்து... கபத்தையும் பித்தத்தையும் அதிகரிக்கின்றது. கழவை வெளியேற்றி உடலை சுத்தப்படுத்துகிறது. பசி மற்றும் ஜீரண சக்தியை அதிகரிக்கும். திசுக்களை மென்மையாக்கும். வெப்பம், கனம் மற்றும் பிசுபிசுப்பானது.

    * காரம் ( காற்று − நெருப்பு ) :

    பித்தம் மற்றும் வாதத்தை அதிகரிக்கும். கபத்தைக் குறைத்து, வெப்பம், லகு மற்றும் உலர்ந்த தன்மையை ஏற்படுத்தும். சுரப்பி நீர்கள் அனைத்தையும் அதிகரிக்கும். விந்து, கொழுப்புத் திசுக்களை குறைத்து... பசியை அதிகரிக்கச் செய்யும்.

    * கசப்பு (காற்று − ஆகாயம் ) :

    வாதத்தை அதிகரித்து, கபம் மற்றும் பித்தத்தைக் குறைக்கும். குளிர்ச்சி, லகு மற்றும் உலர்ந்தது. எவ்வாறு என்றால்... சுரப்பி நீர்களை சுத்திகரித்து உலரச் செய்யும். உடலில் அனைத்து சுவை களையும் சமநிலைப்படுத்துகிறது. பசியை அதிகரிக்கச் செய்யும். காய்ச்சல் மற்றும் தோல் நோய்களைத் தடை செய்யும்.

    * துவர்ப்பு (காற்று − நிலம் ) :

    கபம் மற்றும் பித்தத்தைக் குறைத்து ...வாதத்தை அதிகரிக்கும். அனைத்து உடல் உறுப்புகளையும் சுத்தப்படுத்தி, சுரப்பி நீர்களைச் சரி செய்யும். குளிர்ந்த மற்றும் உலர்ந்த தன்மையை ஏற்படுத்
    தும்.

    இந்த அறுசுவைகளையும் அதிகமாக பயன்படுத்தி னால்...ஏற்படும் வளைவுகளை அடுத்த பதிவில் காணலாம்...!

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  197. Sun. 06, Nov. 2022 at 8.49. pm.

    இன்றைய பாடம்....

    நாளமில்லா சுரப்பிகளில் காணப்படும் தைராய்டு பற்றி பார்க்கலாம்...

    சுரப்பிகள் என்பது... 2− வகைப்படும்.

    ஒன்று... நாளமுள்ள சுரப்பிகள். மற்றொன்று நாளமில்லா சுரப்பிகள்.

    நாளமுள்ள சுரப்பிகளுக்கு உதாரணமாக வியர்வை சுரப்பிகளைக் கூறலாம்.

    கண்ணீர் சுரப்பிகள், பால் சுரப்பிகள், ஜீரண மண்டலத்தில் காணப்படும் சுரப் பிகளின் சுரப்புப் பொருட்கள்..அவற்றிற்கென பிரத்யேகமாக உள்ள குழல்களின் மூலமாக உணவுக்குழலை அடைகின்றன.

    ஆனால்...நாளமில்லா சுரப்பிகளின் சுரப்புப் பொருட்கள் வெளியேற தனி நாளங்கள் காணப்படுவது இல்லை.

    நேரடியாக இரத்த ஓட்டத்தில் விடப்பட்டு திசுக்களை சென்றடைகின்றன.

    இந்த நாளமில்லா சுரப்பிகளால் சுரக்கப்படும் இராயனப் பொருட்கள்... "ஹார்மோன்கள்" எனப்படும்.

    இவை உடலின் பல்வேறு உறுப்புகளை
    யும், அவற்றின் செயல்களையும் கட்டுப் படுத்துகின்றன.

    இந்த ஹார்மோனை முதன் முதலில் கண்டறிந்தவர்.... *பேய்லிஸ் (1903).*

    நமது உடலில் காணப்படும் முக்கியமான நாளமில்லாச் சுரப்பிகள் பின்வருமாறு...!

    * தைராய்டு
    * பாரா தைராய்டு
    * லாங்கர்ஹான்ஸ் திட்டுகள்
    * அட்ரீனல் சுரப்பி
    * பிட்யூட்டரி சுரப்பி
    * இனச் சுரப்பிகள்

    * *தைராய்டு*......!

    தைராய்டு சரப்பியானது.... *தைராக்ஸின்* என்ற ஹார்மோனைச் சுரக்கிறது.

    நாளமில்லாச் சுரப்பிகளிலேயே மிகப் பெரியது... கழுத்துப் பகுதியில் காணப் படுகிறது.

    மூச்சுக் குழலின் இரு பகுதியிலும் அமைந்த இரு மடல்களை (கதுப்பு) உடையது. இவ்விரு மடல்களும்... *இஸ்துமஸ்* என்ற அமைப்பின் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.

    இந்த மொத்த அமைப்பும் ஒரு கேப்சூலுடன் இணைக்கப்பட்டுள்ளன.

    சராசரி முதிர் உயிரியல்... 25 கிராம் எடை உடையது.

    தைராக்ஸின் உற்பத்திக்கு... அயோடின் அவசியமானது. இந்த அயோடினை ..தைராய்டு சுரப்பி, இரத்த ஓட்டத்தில் இருந்து பெறுகிறது.

    இந்த அயோடினானது... அயோடைடு குறைவதால் உருவாகிறது. பின்பு.... அமினோ அமிலத்துடன் இணைந்து ஒற்றை மற்றும் இரட்டை அயோடோ− தைராக்ஸின் கூட்டுப் பொருளை உருவாக்குகிறது. இரண்டு மூலத்துகள் இணைந்து... இத்தைராக்ஸினை உருவாக்குகின்றன.

    அயோடின் நிறைந்த மண்ணில் விளைந்த காய்கறிகளை உண்ணுவதன் மூலம்... அயோடின் தேவையை பூர்த்தி செய்ய இயலும்.

    இந்த தைராய்டு சுரப்பியை தூண்டும் ஹார்மோன் (TSH) பிட்யூட்டரி சுரப்பியின் முன் பகுதியில் சுரக்கப்படுகிறது.

    தைராக்ஸின் அளவு... ஒரு குறிப்பிட்ட அளவுக்கு கீழ் குறையும்போது... இந்த TSH−ஆனது சுரக்கப்பட்டு... தைராய்டு சுரப்பித் தூண்டப்படுகிறது.

    மீண்டும் அடுத்தப் பதிவில்....

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  198. Mon. 07, Nov. 2022 at 7.35 am.

    அமிலத் துளிகள் − 22

    * நம் மூளையில் ஞாபக சக்திக்குக் காரணமாக உள்ள பகுதி.... *பெருமூளையில் உள்ள "லிம்பிக்" பகுதி.

    * மூளை நுண்ணாய்வுச் சிகிச்சைக்குப் பயன்படும் ஐசோடோப்பு..... *கார்பன்11.*

    * புவி ஒரு நீல முத்துப் போல் காட்சி அளிக்கிறது என்று கூறியவர்.... *ஆம்ஸ்ட்ராங்.*

    * யூரியாவை முதன் முதலில் சோதனைச் சாலையில் தயாரித்தவர்... *வோலர்.*

    * யூரியா தயாரிக்கப் பயன்படும் கரிமச் சேர்மம்.... *அம்மோனியம் சயனேட்.*

    * கண் மருத்துவத்தில் பயன்படும் ஐசோடோப்பு ..... *பாஸ்பரஸ் 32.*

    * உலோகங்களில் அதிக மின் கடத்துத் திறன் பண்புடையது..... *சில்வர்.*

    * அறை வெப்ப நிலையில் நீர்மமாக இருக்கும் உலோகம்.... *பாதரசம் (மெர்க்குரி)*

    * உலோகங்கள் மெர்குரியில் கரைந்து கிடைப்பது.... *இரசக் கலவை.*

    * மிகக் குறைந்த உருகு நிலை உடைய உலோகம்.... *பாதரசம்.*

    * அழகு நிலையங்களில் முடிக்கு குறிப்பிட்ட வடிவம் தர பயன்படுவது..... *சல்ஃபர்.*

    * தோல் களிம்பு செய்யப் பயன்படுத்து வது..... *சல்ஃபர்.*

    * மென்மையான பொருட்களாகிய பட்டு , கம்பளி போன்றவற்றை வெளுக்கப் பயன்படுவது....
    *சல்பர் − டை − ஆக்ஸைடு.*

    * கார் பேட்டரிகளில் பயன்படும் அமிலம்.... *நீர்த்த சல்பியூரிக் அமிலம்.*

    * பெட்ரோல் சுத்திகரிப்பிலும், உலோகத்தை தூய்மை செய்யவும் பயன்படுவது... *சல்பியூரிக் அடலம்.*

    * வண்ணப் பூச்சுகள், பித்தளை மெருகுகள், மருந்துகள் இவற்றை தயாரிக்கப் பயன்படுவது.... *எத்தனால்.*

    * பீர் , திராட்சை ரசம் , விஸ்கி மற்றும் இருமல் மருந்து தயாரிக்கப் பயன்படுவது.... *எத்தனால்.*

    * ஆல்கஹால் பயன்படுத்துவதால் பாதிப்படையும் மனித உறுப்பு.... *கல்லீரல்.*

    * சிறுநீரக புரை தடுப்பான்.... *யூரோட்ராபின்.*

    * நகச் சாயங்களை நீக்கப் பயன்படுவது.... *அசிட்டோன்.*

    * புளித்த பாலில் உள்ள அமிலம்.... *லாக்டிக் அமிலம்.*

    * பித்த நீரிவ் உள்ள அமிலம்..... *கோலிக்.*

    * இரத்த சிவப்பணுக்களில் உள்ள இரும்பின் சேர்மம்...
    *ஹீமோ குளோபின்.*

    * இரும்பைத் தங்கமாக மாற்றும் கலை.... *ஆல்கெமி.*

    * ஆல்கலி என்ற சொல் குறிப்பது.... *தாவரச் சாம்பல்.*

    * எரிபொட்டாசு எனப்படுவது....
    *பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடு.*

    * நைட்டர் என்பதன் வேதிப் பெயர்....
    *பொட்டாசியம் நைட்ரேட் (Kno3.*

    * எப்சம் உப்பு என்பதன் வேதிப்பெயர்...
    *நீரேற்றப்பட்ட மெக்னீசியம் சல்பேட் (MgSO4 7H2O).*

    * வெண் துத்தம் அதாவது வெள்ளை விட்ரியால் என்பதன் வேதிப்பெயர்....
    *நீரேற்றப்பட்ட
    ஜிங்க்சல்பேட்(ZNSO4 7H2O).*

    * மீன் , இறைச்சி போன்றவற்றைக் கெடாமல் பாதுகாக்கப் பயன்படும் உப்பு... *சோடியம் குளோரைடு.*

    * சமையல் வாயுவின் கலவை.... பியூட்டேன் மற்றும் பென்டேன்.*

    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  199. Mon. 07, Nov. 2022 at 7.39 pm.

    உயிரியல் துளிகள் −16

    * பழங்களில் இருக்கும் சர்க்கரையின் பெயர்.... *குளுக்கோஸ் , ஃபிரக்டோஸ்..*

    * பாலில் இருப்பதைவிட அதிகமாகக் கால்சியம் உள்ள காய்கறி.... *வெங்காயம்.*

    * வெங்காயத்தின் தாவரவியல் பெயர்....
    *அல்லியம் ஸீபா. (Allium Cepa ( a Variety)

    * பூண்டில் உள்ள அமிலம்.... *பாலிக் அமிலம்.*

    * ஜீன் என்ற சொல்லை அறிமுகம் செய்தவர்.... *வில்லெம் ஜோகன் சென்.*

    * மிதியடிப் பாலிஷ் செய்யப் பயன்படும் எண்ணெய்..... *டர்பென்டைன்.*

    * தவளையின் விலங்கியல் பெயர்.... *ரானா ஹெக்ஸா டாக்டைலா.*

    * மாமரத்தின் தாவரவியல் பெயர்.....
    *மாங்கிஃபெரா இண்டிகா.*

    * புளியமரத்தின் தாவரவியல் பெயர்....
    *டாமிரண்டஸ் இண்டிகா.*

    * கரும்பின் தாவரவியல் பெயர்.... *சுக்காராம் அபிஸினாரம்.*

    * முந்திரியின் தாவரவியல் பெயர்...
    *அனகார்டியம் ஆக்ஸிடெண்டேல்.*

    * இரப்பையின் உள்பகுதியைப் பரிசோதிக்க உதவும் கருவி.... *கேஸ்ட்ரோஸ்கோப்.*

    * உணவின் சுவை அறிய உதவுவது...
    *உமிழ்நீர்.*

    * நாயின் உடலில் வியர்க்கும் உறுப்பு.... *நாக்கு.*

    * கரப்பான் பூச்சியின் விலங்கியல் பெயர்..... *பெரிப் பிளானேட்டா அமெரிக்கானா.*

    * உலகிலேயே மிகப் பெரிய பல்லி....
    *கோமொடோ டிராகன்.*

    * அதிகமான ஒலி எழுப்பும் பூச்சி....
    *ஆண் சிகடா.*

    * கொம்பில் 12 கிளைகள் கொண்ட மான்.... *எல்க் மான்.*

    * எவ்வளவு குளிர்ச்சியான நிலையிலும்... திரவ நிலையிலேயே இருக்கும் திரவம்..... *ஹீலியம்.*

    * லூகோசைட்டுகள் என்பது.... *இரத்த வெள்ளணுக்கள்.*

    * பேனின் அறிவியல் பெயர்.... *பெடிகுலஸ் ஹ்யூமனஸ்.*

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete
  200. This comment has been removed by the author.

    ReplyDelete