jaga flash news

Friday 10 December 2021

தூங்கும் முன்பு வெதுவெதுப்பான நீருடன் 2 கிராம்பு… என்னென்ன நன்மை இருக்குன்னு பாருங்க!

கிராம்பை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உட்கொள்ளலாம், ஆனால் படுக்கைக்கு முன் அவற்றை உட்கொள்வது அதன் பலன் இரட்டிப்பாகும்.


இந்திய வீடுகளில் உணவுகளின் சுவையை அதிகரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய பொருளாக “கிராம்பு” உள்ளது. உடலுக்கு மந்திரம் போல் செயல்படும் இந்த அற்புத மருத்துவப் பொருளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வயிற்றுக் கோளாறுகள் மற்றும் பல்வலி மற்றும் தொண்டை வலி ஆகியவற்றிலிருந்து நிவாரணம் பெற உதவும் என ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது.

தோற்றத்தில் சிறியதாகவும், சுவையில் சற்று கசப்பாகவும் இருக்கும் கிராம்பு, பல அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்தது. Eugenol எனப்படும் ஒரு தனிமம் கிராம்புகளில் காணப்படுவதால், மன அழுத்தம், வயிற்றுக் கோளாறுகள், பார்கின்சன் நோய், உடல்வலி மற்றும் பிற பிரச்சனைகளில் இருந்து தீர்வு தர உதவுகிறது.




கிராம்புகளில் வைட்டமின் ஈ, வைட்டமின் சி, ஃபோலேட், ரிபோஃப்ளேவின், வைட்டமின் ஏ, தியாமின், வைட்டமின் டி, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் போன்ற அத்தியாவசிய கூறுகளும் உள்ளன.

பொதுவாக, கிராம்பை எந்த நேரத்திலும் உட்கொள்ளலாம், ஆனால் படுக்கைக்கு முன் அதை உட்கொண்டால், அதன் பலன் இரட்டிப்பாகும்.

கிராம்புகளை எப்படி சாப்பிடுவது


கிராம்பு உள் மற்றும் தோலுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதன் பலன்களைப் பெற, இரவில் படுக்கும் முன் 2 கிராம்புகளை மென்று சாப்பிடுங்கள். இதற்குப் பிறகு, 1 கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடிக்கவும். இது முகப்பரு உள்ளிட்ட பல பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும்.



கிராம்பு மற்றும் வெதுவெதுப்பான நீரின் ஆரோக்கிய நன்மைகள்


கிராம்புகளை இரவில் சாப்பிடுவது, மலச்சிக்கல், அமிலத்தன்மை, வயிற்றுப்போக்கு போன்ற வயிற்று பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும். கூடுதலாக, செரிமான அமைப்பு சரியாக வேலை செய்கிறது.

கிராம்புகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. முகப்பருவுக்கு உதவும் ஒரு குறிப்பிட்ட வகை சாலிசிலேட் இதில் உள்ளது.

பற்களில் புழுக்கள் இருந்தால், கிராம்புகளை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து சாப்பிட்டால், பற்களில் புழுக்கள் நீங்கும். இது பல்வலியைப் போக்கவும் உதவுகிறது.



கிராம்புகளை உட்கொள்வதால் வாயில் இருந்து துர்நாற்றம் வீசும் பாக்டீரியாக்கள் அழிக்கப்படுகின்றன. இதனுடன், நாக்கு மற்றும் தொண்டையின் மேல் பகுதியில் உள்ள பாக்டீரியாக்களை சுத்தம் செய்ய உதவுகிறது.

இது தொண்டை புண் மற்றும் வலியிலிருந்து விடுபட உதவுகிறது.

கை, கால் நடுங்கும் பிரச்சனை உங்களுக்கு இருந்தால், படுக்கைக்கு முன் 1-2 கிராம்புகளை வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ளலாம். சில நாட்களில் பலன் கிடைக்கும்.

உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் பலவீனமாக இருந்தால், தினமும் கிராம்புகளை உட்கொள்ளத் தொடங்குங்கவும்.

சளி, இருமல், வைரஸ் தொற்று, மூச்சுக்குழாய் அழற்சி, சைனஸ், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட கிராம்புகளை தினமும் உட்கொள்ள வேண்டும்.



3 comments:

  1. அய்யா.. வெ.சாமி அவர்களே..! மிக மிக அருமை.
    அய்யா.. 2022−ஆம் வருடத்திய.தைத்திருநாள் ஆசீர்வாதங்கள் வேண்டுகிறேன்.என்னை ஆசீர்வதியுங்கள். தங்களுக்கு என் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துகள். எல்லா செளபாக்கியமும் பெற்று, நலமும், வளமும், நீண்ட ஆயுளோடும் இருக்க வாழ்த்துகிறேன் அய்யா.
    திருச்சிற்றம்பலம்..

    ReplyDelete
  2. அய்யா... நமஸ்காரம்.
    கிராம்புக்கு.. கூடுதலான விளக்கம் அளிக்கிறேன்...அய்யா.

    கிராம்பு :

    வேறு பெயர்கள்... இலவங்கம், வராங்கம், உற்கடம், திரளி, அஞ்சுகம், கருவாய்க் கிராம்பு, சோசம்.
    தாவரவியல் பெயர்... Syzygium Aromaticum(Old Name.... Eugenia Caryyophyllata)
    குடும்பப் பெயர் .... Myrtaceae

    தாவரத்தின் புற அமைப்பு :

    தனி இலைகள். இலைகளில் லைஸிஜீனஸ் எண்ணெய் சுரப்பிகள் உள்ளது. எனவே இலைகள் நறுமணமுடையவையாய் இருக்கிறது. மரத்தில் தோன்றும் மொக்குகளைப் பறித்துக் காயவைத்து பயன்படுத்தப் படுகின்றது.

    பயன்படும் பகுதி :

    மலராத பூக்கள்.(வெயிலில் உலர்ந்த மொக்குகள்)

    சுவை : காரமும், விறுவிறுப்பும் உள்ளது.
    தன்மை : வெப்பம்.
    பிரிவு : கார்ப்பு

    தாவர வேதி பொருள் :

    Eugenol, Caryophyllene, Eugenin முதலிய வேதிப் பொருட்கள், இதன் நறுமண எண்ணெயில் உள்ளது.

    செய்கைகள் : இசி வகற்றி, பசித்தீத் தூண்டி.

    மருத்துவ குணம் :

    ஆசனவாய்க்கடுப்பு, மயக்கம், காது நோய்்ள், வாந்தி, இரத்தப்போக்கு, கண்ணில் பூ விழுதல், படை அஜீரணம், தலைவலி, உடல் அசதி தீரும்.

    ReplyDelete
  3. நோய் தீர்க்கும் முறைகள் :

    1) கிராம்புப் பொடியை அரை கிராம் தேனில் குழைத்துக் காலை, மாலை சாப்பிட அக உறுப்புகள் அனைத்தும் பலப்படும்.

    2) கிராம்பை நீர் விட்டு வெண்ணெய் போல் அரைத்து மூக்கிலும், நெற்றியிலும் பற்றுப் போட ... நீர் ஏற்றம், தலைவலி, தலைபாரம் நீங்கும்.

    3) 2.கிராம் கிராம்புப் பொடியைப் பனை வெல்லத்தில் கலந்து மாதவிடாய் காலத்தில் 3−நாட்கள், காலை, மாலை கொடுத்துவர உதிரச்சிக்கலும், அதனால் ஏற்படும் அடிவயிற்று வலியும் தீரும்.

    4) இதன் புகையை வாயின் வழியாகக் கொள்ள... தொண்டைப் புண், தொண்டைக் கம்மல் குணமாகும்.

    5) கிராம்பைத் தணலில் வதக்கி சுவைத்து வர பற்கள் கெட்டிப்படும். வோய்ப்புண், தொண்டைப் புண், ஆசனவாய்க் கடுப்பு குணமாகும்.

    6) கிராம்புப் பொடியைப் பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர வாய் நாற்றம், ஈறுவீக்கம, பல்வலி ஆகியவை குணமாகும்.

    7) கிராம்பு, சுக்கு வகைக்கு (ஒவ்வொன்றிலும்) 10 கிராம், இந்துப்பு, ஓமம் வகைக்கு 12 கிராமும் சேர்த்துப் பொடி செய்து தினமும், காலை, மாலை 3−கிராம் வீதம் கொடுத்துவர அஜீரணம் நீங்கி நன்கு பசியெடுக்கும்.

    வாழ்க வளமுடன்...!

    ReplyDelete