jaga flash news

Tuesday 16 January 2024

துளசி செடி....

தோட்ட பராமரிப்பு வீட்டில் துளசி செடி இருக்கா? அப்ப இந்த தவறுகளை செய்யாதீங்க.. பண கஷ்டம் வாட்டி எடுத்துடும்... இந்தியாவின் பெரும்பாலான இந்துக்களின் வீடுகளில் காணப்படும் ஒரு மங்களகரமான செடி தான் துளசி. ஏனெனில் துளசி செடியில் செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவி வாசம் செய்வதாக நம்பப்படுகிறது. எனவே லட்சுமி வாசம் செய்யும் துளசி செடியை வீட்டில் வைத்து வளர்க்கும் போது, அந்த வீட்டில் லட்சுமி தேவி எப்போதும் இருப்பதாக மக்கள் நம்புகின்றனர். ஆனால் வீட்டில் துளசி செடியை வளர்த்து வந்தால், அதை தினமும் வழிபட வேண்டும். அப்படி வழிபட்டால் தான் லட்சுமி தேவியின் அருளைப் பெற முடியும். Today Rasi Palan 15 January 2024: பொங்கல் நாள் இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் சந்தோஷம் பொங்கப்போகுதாம்.! வாஸ்து சாஸ்திரத்தில் கூட, வீட்டில் துளசி செடியை வைத்திருந்தால் ஒருசில விதிகளை பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த விதிகளை பின்பற்றாமல் இருந்தால் அது வீட்டிற்கு வறுமையைக் கொண்டு வருவதோடு, துரதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும். இப்போது துளசி செடியுடன் தொடர்புடைய வாஸ்து விதிகளைக் காண்போம். Gyser Ke Pani Se Nahane Se Kya Hota Hai |Memory Loss से लेकर Heart Fail...|Boldsky * துளசி செடியை எப்போதும் இருட்டான பகுதியில் வைக்கக்கூடாது. சூரிய அஸ்தமனத்திற்கு பின் துளசி செடிக்கு அருகில் ஒரு விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். மேலும் துளசி செடி வைக்கும் இடத்தில் எப்போதும் வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். * துளசி செடியை எப்போதும் திறந்த வெளியில் தான் வைக்க வேண்டும். அப்படி வைத்தால் தான் சூரிய ஒளி நேரடியாக அதில் படும், செடியும் செழிப்பாக வளரும். * துளசி செடிகளில் காய்ந்த இலைகள் இருந்தால், அதன் இலைகளை அவ்வப்போது அகற்றிவிட வேண்டும். அதுவும் அந்த காய்ந்த இலைகளை தூக்கி எறிந்துவிடாமல், அந்த செடிக்கு கீழே அருகிலேயே போட வேண்டும். மகர ராசிக்கு செல்லும் சூரியனால் இந்த 5 ராசிக்காரங்க பெரிய ஆபத்துகளை சந்திக்கப் போறாங்களாம்.! * வீட்டில் வைத்த துளசி செடிகள் காய்ந்து போனால், அவற்றை உடனே அப்புறப்படுத்திவிட வேண்டும். ஏனெனில் காய்ந்த துளசி செடியானது வீட்டிற்கு வறுமையையும், துரதிர்ஷ்டத்தையும் கொண்டு வரும். * முக்கியமாக துளசி செடியை வீட்டில் வைக்கும் போது சரியான திசை பார்த்து வைக்க வேண்டும். எப்போதும் துளசி செடியை தெற்கு அல்லது தென்கிழக்கு திசையில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். துளசி செடியை வைக்க சிறந்த திசை வடக்க அல்லது வடகிழக்கு திசை தான். * துளசி செடியை எப்போதும் தொட்டியில் வைத்து தான் வளர்க்க வேண்டும். நேரடியாக தரையில் ஊற்றி வளர்க்கக்கூடாது. மேலும் சூரிய அஸ்தமனத்திற்கு பின் துளசி இலைகளைப் பறிப்பதைத் தவிர்க்க வேண்டும். நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்தும் நிறம் மற்றும் மணமற்ற ரேடான் வாயு. இது நம்ம வீட்டிலேயே இருக்காம்.! * ஞாயிற்று கிழமைகளில் துளசி செடிக்கு நீரை ஊற்ற வேண்டாம். அதேப் போல் இந்நாளில் துளசி இலைகளைப் பறிப்பதும் அபசகுனமாக கருதப்படுகிறது. * துளசி செடியை தொடும் போது எப்போதும் கைகள் சுத்தமாக இருக்க வேண்டும். எப்போதும் துளசி இலைகளைப் பறிப்பதாக இருந்தால், அவற்றை கைகளில் தான் பறிக்க வேண்டும். கத்தரிக்கோல், கத்தி போன்ற எவற்றையும் பயன்படுத்தக்கூடாது. * முக்கியமாக தேவையில்லாத துளசி செடியைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக குளிக்காமல் துளசி செடியைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டு. அப்படி குளிக்காமல் தொடும் துளசி இலைகள் வழிபட்டால் ஏற்றுக் கொள்ளப்படாது. எனவே இந்த விஷயத்தில் சற்று கவனமாக இருங்கள்.

No comments:

Post a Comment