jaga flash news

Sunday, 7 March 2021

குளிர்வித்தலே மருவி குளியல் ஆனது.*


 
*உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை.*

*அழுக்கு போகவா.....! நிச்சயம் கிடையாது.....!*

*சரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா....?*

*குளியல் = குளிர்வித்தல்*

*குளிர்வித்தலே மருவி குளியல் ஆனது.*

*மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம்.*

*இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் தேங்கியிருக்கும்.*

*காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்தநீரில் குளிக்கிறோம்.*

*வெந்நீரில் குளிக்க கூடாது.*

*எண்ணெய் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும்.*

*குளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு.*

*நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை.*

*எதற்கு இப்படி?*
*காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி விழி மற்றும் காது வழியாக வெளியேறும்.*

*நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.*

*இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கண்முன்னே கொண்டு வாருவோம்.*

*குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி குளிரும்.. வெப்பம் கீழ் இருந்து மேல் எழும்பி இறுதியில் தலை முங்கும் போது கண், காது வழியே வெப்பக் கழிவு வெளியேறிவிடும்.*

*இறங்கும் முன் ஒன்று செய்வார்கள் கவனித்ததுண்டா??*

*உச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு இறங்குவார்கள்.*

*இது எதற்கு... உச்சந்தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது. சிரசு எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வோண்டும்.*

*எனவே உச்சியில் சிறிது நினைத்து விட்டால் குளத்தில் இறங்கும் போது கீழ் இருந்து மோலாக எழும் வெப்பம் சிரசை தாக்காமல் காது வழியாக* *வெளியேறிவிடுகிறது.*
*வியக்கவைக்கிறதா... !*

*நம் முன்னோர்களின் ஒவ்வொறு செயலுக்கும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.*

*குளித்து விட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு இருப்பது மிக நல்லது.*

*பித்தம் நீங்கி பிராணவாயு அதிகரித்தால் அனைத்து நோய்களும் ஓடிவிடும்.*

*புத்தி பேதலிப்பு கூட சரியாகும்.*

*குளியலில் இத்தனை விஷயங்கள் இருக்கும் போது. குளியல் அறை என்றாலே அதில் ஒரு ஹீட்டர் வேர, இப்படி சுடு தண்ணீரில் சோப்பும், ஷாம்பையும் போட்டு குளிச்சிட்டு வந்தா நாம நோயாளியா இல்லாம வேற எப்படி இருப்போம்.*

*குளிக்க மிக நல்ல நேரம் - சூரிய உதயத்திற்கு முன்*

*குளிக்க மிகச் சிறந்த நீர் - பச்சை தண்ணீர்.*

*குளித்தல் = குளிர்வித்தல்*

*குளியல் அழுக்கை நீக்க அல்ல உடலை குளிர்விக்க.*

*இறைவன் கொடுத்த இந்த உடல் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் மாற்றிக் கொள்ளுங்கள்.*


நவகிரகங்கள் ஏற்படுத்தும் நோய்களும் எளிய பரிகாரங்களும



நவகிரகங்கள் ஏற்படுத்தும் நோய்களும் எளிய பரிகாரங்களும             

 நமது வாழ்க்கை ஜாதகத்தில் உள்ள கிரக நிலையைப் பொறுத்துத் தான் அமைகிறது என ஜோதிடம் கூறுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் கிரக நிலைகள் மோசமாக இருந்தால் அவரின் வாழ்க்கை பாழாகிவிடுகிறது. அது சரியாக, சிறப்பாக இருந்தால், அது வறுமையில் இருப்பவனைக் கூட ஒரு ராஜாவாக்குகிறது. இதில் சிறப்பு விஷயம் என்னவென்றால், ஜாதகத்தில் மோசமான கிரக நிலையை சரியாக கண்டறிந்து நிவாரணமாக பரிகாரம், எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொள்வதால் அதிலிருந்து பெரிய பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.
    


ஆரோக்கிய ஜோதிடம் : நமது வாழ்க்கை ஜாதகத்தில் உள்ள கிரக நிலையைப் பொறுத்துத் தான் அமைகிறது என ஜோதிடம் கூறுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் கிரக நிலைகள் மோசமாக இருந்தால் அவரின் வாழ்க்கை பாழாகிவிடுகிறது. அது சரியாக, சிறப்பாக இருந்தால், அது வறுமையில் இருப்பவனைக் கூட ஒரு ராஜாவாக்குகிறது. இதில் சிறப்பு விஷயம் என்னவென்றால், ஜாதகத்தில் மோசமான கிரக நிலையை சரியாக கண்டறிந்து நிவாரணமாக பரிகாரம், எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொள்வதால் அதிலிருந்து பெரிய பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.
​சூரியன் மோசமாக அமைந்தால் என்ன நோய் ஏற்படும்?

sun related diseases astrology: நவகிரகங்களின் தலைவனான சூரியக் கடவுள் ஒவ்வொரு கிரகத்தின் பின்னால் சக்தியாக இருக்கிறது. சூரியன் ஒருவருக்கு மோசமாக அமையும் போது, எலும்புகள் மற்றும் கண்களில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதய நோய், காசநோய் மற்றும் செரிமான அமைப்பில் நோய்கள் ஏற்படலாம் என்று நம்பப்படுகிறது.

இப்படி சூரிய கிரகம் பிரச்னை தரும் போது அவர்கள் அதிகாலையில் எழுந்து சூரியனை வணங்குதலும். சூரிய நமஸ்காரம் செய்யலாம். கோதுமை கஞ்சியை உணவாக எடுத்துக் கொள்ளலாம். செப்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து குடிக்கவும்.



​சந்திரன் தரும் நோய்கள் : Moon Planets and Diseases
-moon-planets-and-diseases
ஜாதகத்தில் சந்திரனின் குறைபாட்டுடன் இருக்கும் போது, அந்த நபருக்கு மனநோய்கள், மனம் சார்ந்த பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த நபர் தூக்கமின்மை, பதட்டம், அமைதியின்மை ஆகியவற்றால் பாதிக்கப்படலாம்.

இப்படி சந்திரனால் பாதிக்கப்படக்கூடியவர்கள் இரவில் சந்திரனை வணங்கலாம். குறிப்பாக ஒவ்வொரு பெளர்ணமி அல்லது ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இது தவிர, சிவனை வணங்குதலும், வெள்ளி மோதிரம் அல்லது வெள்ளி சங்கிலியையும் அணியலாம். இது லாபகரமானதாக அமையும்.



செவ்வாய்க் கிரகம் தரும் நோய்கள்: Mars ​Planets and Diseases
-mars-planets-and-diseases
ஜாதகத்தில் ஒருவருக்கு செவ்வாய் கிரகம் பிரச்சினையைத் தரக்கூடியதாக இருந்தால் அந்த நபருக்கு இரத்த சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். ஏனெனில் செவ்வாய் ரத்தத்தைக் குறிப்பவர். அதுமட்டுமல்லாமல் இரத்தம் மற்றும் விபத்து சார்ந்த பிரச்சினைகளைத் தருகிறது. இது உயர் மற்றும் தாழ்ந்த இரத்த அழுத்தத்திற்கும் காரணமாக அமைகிறது.

இதற்கு தீர்வாக செவ்வாய்க்கிழமைகளில் சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் சாப்பிடுங்கள். கட்டிலுக்கு பதிலாக தரையில் தூங்குவது நல்லது. முருகப்பெருமானை வணங்கி வருவது நல்லது.




​புதன் கிரகம் ஏற்படுத்தும் நோய்கள் : Mercury ​Planet and Diseases
-mercury-planet-and-diseases
ஜாதகத்தில் புதன் கிரகத்தின் குறைபாடு இருந்தால், அது அந்த ஜாதகதாரருக்கு வாழ்க்கையில் தோல் பிரச்சினைகள் ஏற்படலாம். ஏனெனில் புதன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினைக் குறிக்கிறது. புதன் கிரக பிரச்னையால் தொற்று நோய்களும், காது-மூக்கு மற்றும் தொண்டை நோய்களுடன் தொடர்புடையது.

இதிலிருந்து நிவாரணம் பெற பச்சையாக உண்ணக்கூடிய காய்கறிகள், கீரைகள் உணவில் அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் சூரிய ஒளியில் சிறிது நேரம் உட்கார்ந்து கொள்ளுங்கள். காலையில், வெறும் வயிற்றில் துளசி இலைகளை வாயில் நன்றாக மென்று சாப்பிடுவது நல்லது. புதன் காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பதும் நன்மை பயக்கும்.



வியாழன் (குரு) கிரகம் தரும் நோய்கள்: Jupiter ​Planets and Diseases
-jupiter-planets-and-diseases
ஒருவரின் ஜாதகத்தில் குரு கிரகம் பிரச்னை தருவதாக இருந்தால் அந்த ஜாதகர் கடுமையான நோய்களால் பாதிக்கப்படலாம். புற்றுநோய், ஹெபடைடிஸ் மற்றும் கடுமையான வயிற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

இதிலிருந்து நிவாரணம் பெற, காலையில் குளிக்கும் போது சிறிதளவு மஞ்சள் கலந்து தண்ணீரில் குளிக்கலாம். குடிக்கும் நீரில் கூட சிறிது உணவில் சேர்க்கும் மஞ்சள் போட்டு குடிக்கலாம். ஆள்காட்டி விரலில் தூய தங்க மோதிரத்தை அணிந்துகொள்ளலாம். இது லாபகரமானதாக இருக்கும். மேலும், மஞ்சள் பொட்டை தவறாமல் வைத்துக் கொள்ளவும். விஷ்ணு சஹஸ்திரநாமத்தை படிப்பது புனிதமானது.


​சுக்கிர கிரகம் மோசமாக அமைந்தால்: Venus Planet Disease
ஜோதிடத்தின் படி, சுக ஸ்தானத்தின் அதிபதியாக சுக்கிரன் விளங்குகிறார். உடலின் வேதிப்பொருட்களை ஒழுங்குபடுத்தக் கூடியவர். ஆனால் சுக்கிர கிரகமே மோசமாக அமையும் போது ஹார்மோன்கள் பிரச்னைகள் மற்றும் நீரிழிவு நோயை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் இது கண்களையும் பாதிக்கிறது.

இதிலிருந்து நிவாரணம் பெற, மதிய உணவில் தயிர் சாதம் சேர்த்துக் கொள்ளுங்கள். அரிசி, சர்க்கரை மற்றும் மைதாவை குறைந்தபட்சம் சாப்பிடுங்கள். நிச்சயமாக விடியற்காலையில் நடைப்பயிற்சியில் ஈடுபடுவது அவசியம்.



​சனி கிரகம் தரும் குறைபாடு : Sani ​Planets and Diseases
ஜோதிடத்தின் படி, ஜாதகத்தில் சனி தோஷம் இருந்தால், பல வகையான சிக்கல்கள் ஏற்படக்கூடும். அப்படிப்பட்ட ஜாதகத்தைக் கொண்டவர்கள் நீண்டகால நோய்களால் அவதிப்பட வாய்ப்பு உள்ளது. இது நரம்பு மண்டலம் மற்றும் வலியைத் தரக்கூடிய நோய் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

சனி தோஷம் உள்ளவர்கள், நடைப்பயிற்சி மேற்கொள்வது அவசியம். உடலை சிறப்பாக பராமரிப்பது அவசியம். இவர்கள் சாத்விகமான உணவை அதாவது எப்போதும் எளிய உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கிரகங்களிலேயே மிகவும் பாசமானவர் நீதி அரசர் சனி பகவான்: வழிபடும் முறைகள்

இவர்கள் இருக்கும் இடத்தில் வாழ காற்றோட்டமான மற்றும் சுத்தமான வீடாக இருக்க வேண்டும். இரும்பு வளையம் கையில் அணிந்து கொள்ளலாம். காலையில் 9 மணிக்குள் சிறிது நேரம் அரச மரத்தின் கீழ் உட்கார்ந்து வரவும்.

ராகு மற்றும் கேதுவால் ஏற்படும் பிரச்னைகள் : Rahu Ketu ​Planets and Diseases
ஒரு நபரின் ஜாதகத்தில் ராகுவும் கேதுவும் மோசமாக இருந்தால், பல வகையான பிரச்சினைகள் சந்திக்க நேரிடும். ராகு மர்ம நோய்களைத் தருபவர் என்று கூறப்படுகிறது. இந்த நோய்கள் ஆரம்பத்தில் சிறியவையாக பாதிப்பு குறைவாக இருந்தாலும் பின்னர் தீவிரமாகக் கூடியதாக இருக்கும். அதோடு நோய்களுக்கான காரணம் பெரும்பாலும் சரியாக புலப்படாததாக இருக்கும்.

ராகு கேது தோஷங்கள் விலக எளிய வழி இதோ - இயற்கையே உங்களை வாழ்த்தும்...

ராகு கிரகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து நிவாரணம் பெற, சந்தனத்தை அதிகம் பயன்படுத்துங்கள். சந்தனத்தின் வாசனையை எப்போதும் நீங்கள் நுகர்வது நல்லது. கழுத்தில் ஒரு துளசி மாலை அணிந்து கொள்ளுங்கள். எப்போதும் எளிமையான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பிரகாசமான நீல நிறத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும்.

கேது கிரகத்தின் குறைபாடு இருந்தால், அந்த பிரச்னை ஏற்படக்கூடிய காலத்தில் தினமும் காலையில் குளிக்க வேண்டும். தொடர்ந்து ஆன்மிக செயல்பாடுகளில் பங்கேற்க வேண்டும். தேவைப்படுபவர்களுக்கு நன்கொடைகள் வழங்க வேண்டும்.


Saturday, 6 March 2021

கோவிலில் வாசற்படியை எவ்வாறு கடந்து செல்ல வேண்டும்

கோவிலில் வாசற்படியை எவ்வாறு கடந்து செல்ல வேண்டும் என்பது பற்றிய பதிவுகள் 

கோவில் செல்லும் அனைவருக்கும் மனதில் எழும் ஒரே கேள்வி கோவிலுக்கு போகும் முன் கோவில் நுழைவு வாசலை மிதித்து செல்லவேண்டுமா? இல்லை படிக்கட்டை தாண்டி செல்ல வேண்டுமா என்ற குழப்பம் இன்றும் அனைவரின் மனதில் எழுந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த குழப்பத்தை பற்றி முழு விவரத்தையும் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவில் மூலம் தெளிவாக படித்து தெரிந்துக்கொள்ளலாம்..!

*கோவில் செல்லும் முன் எப்படி செல்ல வேண்டும்:*

கோவிலுக்கு செல்லும் முன் பக்தர்கள் கோவிலுக்கு அருகாமையில் ஏதேனும் தண்ணீர் குழாய்கள் கண்டிப்பாக இருக்கும். கை, கால்களை சுத்தமாக கழுவிய பிறகு தான் கோவில் உள்ளே செல்ல வேண்டும். குறிப்பாக கை, கால்களை கழுவிய பிறகு ஒரு சொட்டு நீரை தலையில் தெளித்து கொள்ளவேண்டும்.

அடுத்து கோவிலுக்குள் செல்லும் முன்பு அங்குள்ள கோவில் கோபுரத்தையும், கலசத்தையும் வணங்கி விட்ட பிறகுதான் கோவில் உள்ளே செல்ல வேண்டும். அடுத்து கோவிலில் இருக்கும் துவாரபாலகரின் அனுமதி பெற்று செல்ல வேண்டும்.

கோவிலுக்கு செல்லும் முன் அனைவரும் கோவில் படிக்கட்டை குனிந்து வலது கை விரல்களால் படிக்கட்டை தொட்டு புருவத்தின் இடையில் தொட்டு அழுத்த வேண்டும். இப்படி செய்வதால் நாம் கோவிலுக்குள் சென்றதும் நமது பாதத்தின் வழியே கோவில் நேர்மறை ஆற்றல்கள் நமது உடலில் செயல்பட தூண்டும்.

*கோவில் வாசல்படிக்கட்டை எப்படி கடக்க வேண்டும்:*

கோவிலில் குறுக்கே இருக்கும் வாசற்படியை நாம் தாண்டித்தான் செல்ல வேண்டும். கோவில் படியை தாண்டி செல்வதால் நமது மனதில் இருக்கும் கவலைகள், கெட்ட விஷயங்கள், எதிர்மறை எண்ணம் அனைத்தையும் வெளியில் விட்டு செல்வதாக ஐதீகம் கூறுகிறது. அதாவது நமது பிரச்சினைகளை தாண்டி செல்கிறோம் என்று பொருள்.

*வாசற்படியை மிதித்து சென்றால் என்ன அர்த்தம்:*

கோவில் படிக்கட்டை தாண்டாமல் மிதித்து சென்றால் மனதில் உள்ள பிரச்சனைகளை கூடவே கோவிலுக்குள் அழைத்து செல்வதாக ஐதீகம் கூறப்படுகிறது
 
கோவிலில் தினந்தோறும் அர்ச்சகர்கள் கூறும் மந்திர ஒலி, நாதஸ்வரம், மேள சத்தங்கள் போன்றவை கோவிலில் நிறைந்து இருக்கும் 

இதனால் கோவில் வாசற்படியை மிதித்து செல்லாமல் பக்தர்கள் கட்டாயமாக தாண்டித்தான் கோவிலுக்கு செல்ல வேண்டும்

Friday, 5 March 2021

கோவைக்காய்...!

அற்புத மருத்துவ நன்மைகள் கொண்ட கோவைக்காய்...!

கோவக்காயில் இரும்பு சத்து அதிகம் உள்ளது இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடல் சோர்வு நீங்கி, நீண்ட நேரம் செயலாற்றும் திறன்  ஏற்படுகிறது.

சிறுநீரக கற்கள் தண்ணீர் அதிகம் அருந்தாமை, உப்பு தன்மை அதிகமாக இருக்கும் நீர் அருந்துவது, நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைப்பது குடிப்பது போன்ற காரணங்களால் இன்று பலருக்கும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிறது.
 
வாரத்தில் இருமுறை கோவக்காய் பொரியல், கூட்டு போன்றவற்றை செய்து சேர்த்து சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறுகள், மலச்சிக்கல்  பிரச்சனை தீரும். 
 
உடல் எடை உடல் எடை அதிகரிப்பது ஒரு கவலைக்குரிய பிரச்சனை ஆகும். உணவு கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், உடலுக்கு தேவையான பல சத்துகள் கொண்ட, கொழுப்பை கரைக்கக்கூடிய கோவக்காய் பதார்த்தங்களை  உணவுகளில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வருவது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் நல்ல பலன் அளிக்கும்.
 
சர்க்கரை வியாதி ஒரு மனிதனின் பரம்பரை காரணமாகவும் மற்றும் அவனது தவறான உணவு பழக்கங்களாலும் நீரிழிவு எனப்படும் சர்க்கரை வியாதி ஏற்படுகிறது. சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அடிக்கடி கோவக்காய் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக  வைப்பதோடு, நீரிழிவு நோயாளிகளின், சிறுநீரில் அதிகளவு சர்க்கரை சத்துகள் வெளியேறாமல் தடுக்கிறது.
 
கோவக்காய் பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கும் கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றுகிறது. எனவே வயிற்றில் புற்று நோய் ஏற்படாமல் இருக்க உணவில் அடிக்கடி கோவக்காய் சேர்த்து சாப்பிட வேண்டும். இதயம் ஒரு வயதிற்கு மேலே அனைவருக்கும்  உடலில் இருக்கும் நரம்புகளில் இறுக்கத்தன்மை ஏற்டுகிறது. 
 
இதய நலத்திற்கும் பொட்டாசியம் சத்து தேவையாக இருக்கிறது. ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து இதயத்திற்கு சரியான அளவில்  ரத்தம் சென்று வர கோவக்காயில் நிறைந்திருக்கும் பொட்டாசியம் அதிகம் உதவுகிறது. 
 
இதய நோய்கள் ஏற்படுவதை தவிர்க்க கோவக்காய்களை அதிகம் சாப்பிட வேண்டும். ஊட்டச்சத்து இரும்புச்சத்து, பொட்டாசியம், போன்ற தாதுக்கள் கோவக்காயில் நிறைந்துள்ளன இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான  இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது.

வேப்ப எண்ணெய்யின் மருத்துவ குணங்கள்.;

வேப்ப எண்ணெய்யின் மருத்துவ குணங்கள்.;

வேப்ப எண்ணெய் அல்லது வேப்ப விதை தூளை  தினமும் முகத்தில் தடவி வர தோல் சுருக்கங்கள் மறைந்து இளமையான தோற்றத்தை பெறலாம்.

தோலில் ஏற்படும் அரிப்பு மற்றும் சிரங்குகளை வேப்ப எண்ணெய் போக்கும்.

குளிர்காலங்களில் ஏற்படும் தோல் வெடிப்பை வேப்ப எண்ணெய் சரிசெய்யும்.

காயம் ஏற்பட்ட இடத்தில் வேப்ப எண்ணெய் தடவினால் சீக்கரம் காயம் சரியாகும்.

வேப்ப எண்ணெய்யில் அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதால் கிருமி தோற்று ஏற்படுவதை தடுக்கிறது.

வேப்ப எண்ணெய் தினமும் பயன்படுத்தினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.

படர் தாமரை, கருவளையம் ஆகியவற்றை வேப்ப எண்ணெய் மருந்தாக பயன்படுகிறது.

தேங்காய் எண்ணெயில் கொஞ்சம் வேப்பெண்ணெய் கலந்து கூந்தலுக்கு தடவி வர பொடுகு தொல்லை நீங்கும்.

தினமும் வேப்ப எண்ணெய்யை தலையில் தடவினால் அடர்த்தியான கூந்தலைப் பெறலாம்.

வேப்ப எண்ணெய் அஜீரண கோளாறு மற்றும் வயிற்றுப் புண்ணுக்கு உகந்தது.

வேப்ப எண்ணெய் புற்று நோய் உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.

வேப்ப எண்ணெய்யை உடலில் தடவி படுத்தால் கொசு தொல்லையில் இருந்து விடுபடலாம். வேப்ப எண்ணெய்யில் விளக்கு ஏற்றினால் கொசுகள் வீட்டை விட்டு ஓடிவிடும்.

சில சொட்டு வேப்ப எண்ணெய்யை நீர் சேமித்து வைக்கும் தொட்டியில் தெளித்தால் கொசு புழுக்கள் உருவாவதை தடுக்கலாம்.

உடல் உறுப்புகள் அட்டவணை



விடியற்காலை 3 முதல் 5 மணி வரை - நுரையீரல் நேரம். இந்த நேரத்தில் தியானம், மூச்சுப் பயிற்சி செய்தால் ஆயுள் நீடிக்கும். காலை 5 முதல் 7 வரை பெருங்குடல் நேரம். இந்த நேரத்தில் காலைக்கடன்களை முடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கலே ஏற்படாது. காலை 7 முதல் 9 வரை வயிற்றின் நேரம். இந்த நேரத்தில் சாப்பிடுவது நன்கு ஜீரணமாகும். காலை 9 முதல் 11 வரை மண்ணீரல் நேரம். வயிற்றில் விழும் உணவைச் செரிக்கச் செய்யும் நேரம். இந்த நேரத்தில் எதையும் சாப்பிடக் கூடாது. தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது.

காலை 11 முதல் 1 வரை இதயத்தின் நேரம். இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய நேரம். சத்தமாகப் பேசுதல், படபடத்தல், கோபப்படுதலை அறவே தவிர்க்க வேண்டும். பிற்பகல் 1 முதல் 3 வரை சிறுகுடல் நேரம். மிதமான சிற்றுண்டியுடன் ஓய்வு எடுக்க வேண்டும். பிற்பகல் 3 முதல் 5 வரை சிறுநீர்ப் பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்றச் சிறந்த நேரம்.

மாலை 5 முதல் 7 வரை சிறுநீரகங்களின் நேரம். தியானம், இறைவழிபாடு செய்வதற்கு ஏற்றது. இரவு 7 முதல் 9 வரை பெரிகார்டியத்தின் நேரம். பெரிகார்டியன் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு. இரவு உணவுக்கேற்ற நேரம். இரவு 9 முதல் 11 வரை - உச்சந்தலை முதல் அடிவயிறு வரை உள்ள மூன்று பாதைகள் இணையும் நேரம். அமைதியாக உறங்கலாம். இரவு 11 முதல் 1 வரை - பித்தப்பை நேரம். அவசியம் உறங்க வேண்டும். இரவு 1 முதல் 3 வரை - கல்லீரல் நேரம். ரத்தத்தை கல்லீரல் சுத்தப்படுத்தும் நேரம். கட்டாயம் தூங்க வேண்டும்.

Wednesday, 3 March 2021

அனுமன் வாயு பகவான்...!!! அனுமன் வழிபாட்டு ரகசியம் இதுதான்!!


அனுமன் வாயு பகவான்...!!! அனுமன் வழிபாட்டு ரகசியம் இதுதான்!!

நம் உடலில் 5 விதமான வாயுக்கள் உள்ளன. அவை பிராணவாயு , சமான வாயு , அபான  வாயு, உதான வாயு மற்றும் வியான வாயு. இதில் பிராண மற்றும் சமான வாயுக்கள் முதலில் உடலை விட்டு பிரிகின்றன . இந்த 2 வாயுக்களும் பிரிந்த உடனேயே அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்படுகிறார் . ஆனால் உடல் மட்டும் இன்னும் வளையும் தன்மையுடன் இருக்கும் . இன்னும் சில மணி நேரங்களில் அபானா மற்றும்  உதானா வாயுக்கள் உடலை  விட்டு பிரிகின்றன . இப்போது உடலின் வளையும் தன்மை நீங்கி கட்டை போல் ஆகின்றது .ஆனால் உடலை பாதுகாக்கும் தன்மை கொண்ட வியான வாயு பிரிய சில நாட்கள் எடுத்துக்கொள்ளும். வியான வாயுதான் இறுதியாகப் பிரிவது . இது முழுவதுமாகப் பிரிவதற்கு பொதுவாக 11 ல் இருந்து 14 நாட்கள் வரை  எடுத்துக் கொள்கிறது அதனால் தான் இறப்பு சடங்குகள் அந்த நாட்கள் வரை நீட்டிக்கபடுகின்றன . ஒருவித புரிதலிலிருந்துதான் இது போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டன . ஆனால் துரதிர்ஷ்டவசமாக தற்போது இந்த சடங்குகள் சரியான புரிதல் இல்லாதவர்களால், சரியான அனுபவம் இல்லாதவர்களால்  செய்யப்படுவதால் இந்த சடங்குகள் அதன் தன்மையை இழந்து வருகின்றன. 

வாயுக்களால் ஆன நம் உடல் காற்றடைத்த பையடா என சித்தர்களால் சொல்லப்படுகிறது..வாயு வெளியேறினால் நாம் வெறும் சதைப்பிண்டம்தான்..அந்த வாயுக்களின் அம்சமாகவும், அனுமனை கண்டு வழிபடுகிறோம்..!!   வாலில் மணி கட்டிய அனுமன் படத்தை வீட்டில் வைத்து வழிபடலாம்...மற்ற படங்கள் ஆகாது!!

Tuesday, 2 March 2021

திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய விதிகள்

திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய விதிகள்

1. முதல் விதி
திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது
இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.)

2. இரண்டாவது விதி
சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

3. மூன்றாவது விதி
இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி.

4. நான்காவது விதி
புதன், வியாழன், வெள்ளிபோன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் மிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல. 

…ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான்

5. ஐந்தாவது விதி 
துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது

6. ஆறாவது விதி 
முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம். முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.

7. ஏழாவது விதி
அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது.

8. எட்டாவது விதி
திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது.

9. ஒன்பதாவது விதி
திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.

10. பத்தாம் விதி.
மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது.

11. பதினொன்றாம் விதி
கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது.



அவரவர் குலதெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் நல்லதொரு நாளைக் குறியுங்கள்.

ஓர் ஆணுக்கு எதுவெல்லாம் லட்சணம் என்று தெரியுமா?



ஓர் ஆணுக்கு எதுவெல்லாம் லட்சணம் என்று தெரியுமா?


லட்சணமான பெண் வேண்டும் என்று சொல்லும் ஒரு ஆணுக்கு எதுவெல்லாம் லட்சணம் என்று தெரியுமா? இது சாமுத்திகா லட்சணத்தைக் கொண்டு தான் சொல்லப்படுகிறது. சாமுத்ரிகா லட்சணம் என்பது அங்கங்களைக் கொண்டு ஒருவரின் குணங்களைக் கூறுவதாகும்.


உதாரணமாக, ஒரு ஆணுக்கு மூக்கு கூர்மையாக இருந்தால், வாய் சிறியதாக இருந்தால் எப்பேற்பட்டவர்களாக இருப்பர் என்பதாகும். இங்கு ஓர் ஆணுக்கு எதுவெல்லாம் லட்சணம் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.


தலை
ஒரு ஆணுக்கு தலை பெரிதாகவோ, உயர்ந்தோ இருந்தால், அவர்களிடம் செல்வம் கொட்டும். அதுவே பின் பகுதி புடைத்து இருந்தால் நல்ல அறிவாளி. தலையில் உள்ள நரம்புகள் புடைத்து இருந்தால் தந்திரமானவர்கள்.


நெற்றி
நெற்றி நன்கு அகலமாகவும், உயர்ந்தும் இருந்தால், அவர்களிடம் அறிவும், செல்வமும் அதிகம் இருக்கும். சிறிய நெற்றியைக் கொண்டவர்கள் சற்று புத்தி மழுங்கியவர்களாக இருப்பர். அதுவே நெற்றியில் ரேகைகள் தெரிந்தால் அவர்களிடம் அதிர்ஷ்டம் அதிகம் உண்டு. ரேகைகள் இல்லாவிட்டால் ஆயுள் குறைவாக இருக்கும்.



கண்கள்
ஒரு ஆணுக்கு கண்கள் அகலமாகவும், சிவப்பாகவும் இருந்தால், அவன் உலகையே ஆளும் திறன் கொண்டிருப்பான். அதுவே சிறிய கண்ணோ கொண்டிருந்தால், அவர்களிடம் அறிவும், ஆற்றலும் சற்று குறைவாக இருக்கும்.


மூக்கு
கூர்மையான மூக்கைக் கொண்ட ஆண்கள் செல்வம், பதவி, புகழ் என்று இருப்பார்கள். சிறிய மூக்கைக் கொண்டவர்கள் ஆன்மீகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களாகவும், கருணை உள்ளம் கொண்டவர்களாகவும் இருப்பர். அதுவே மூக்கின் நுனிப்பகுதி பெரியதாக வீங்கி இருந்தால், அவர்கள் நல்ல சிந்தனையாளர்கள் மற்றும் செல்வந்தர்களாக இருப்பர்.


வாய்
ஒரு ஆணிண் வாய் சிறியதாக இருந்தால், அவர்கள் கருணை உள்ளம் கொண்டவர்களாக, புத்திசாலியானவர்களாக, புகழ் பெற்றவர்களாக இருப்பார்கள். அதுவே வாய் பெரியதாக அகன்று இருந்தால், வெறும் வாய்ப்பேச்சு மட்டுமின்றி, எப்போதும் மற்றவரிடம் குற்றம் காண்பவர்களாக இருப்பார்கள்.



நாக்கு
நீளமான நாக்கைக் கொண்ட ஆண், நல்ல பேச்சாளராக இருப்பான். நாக்கில் கரும்புள்ளிகள் இருந்தால் சொல்வதெல்லாம் பலிக்கும். நாக்கு சிவப்பாக இருந்தால் அதிர்ஷ்டம் கொட்டும்.


பல்
பற்கள் சிறியதாகவும், வரிசையாகவும் இருந்தால், கல்வியில் சிறந்தவர்களாக இருப்பர். கூர்மையான பற்களைக் கொண்டிருக்கும் ஆணுக்கு கோபம் அதிகம் வரும். ஒருவேளை பற்கள் வரிசையாக இல்லாமல் முன்னும், பின்னும் இருந்தால், தந்திரமானவர்களாக இருப்பர்.


உதடு
உதடுகள் சிறியதாகவும், சிவப்பாகவும் இருந்தால் நல்ல அந்தஸ்து மற்றும் அதிகாரம் அவர்களிடம் நிலைத்து இருக்கும். ஒருவேளை உதடு கருமையாக, தடித்து இருந்தால் அவர்கள் பல கஷ்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.



கன்னங்கள்
கன்னங்களின் மேல் பகுதி உயர்ந்து இருந்தால், சுயநலமிக்கவர்களாக இருப்பர். சிரிக்கும் போது அல்லது பேசும் போது கன்னங்களில் குழி விழுந்தால், செல்வந்தர்களாகவும், அதிர்ஷ்டமிக்கவர்களாகவும் இருப்பர். ஒருவேளை கன்னங்கள் மிகவும் பரந்து, தசைப்பகுதி மிக்கவர்களாக இருந்தால், நல்ல ஆட்சியாளராகவும், செல்வந்தராகவும் இருப்பர்.


தாடை
ஒரு ஆணின் தாடை நீளமாக இருந்தால், சிறந்த பேச்சாளராக இருப்பர். அதுவே தாடையில் முடி நன்கு அடர்த்தியாக வளர்ந்தால், அவர்கள் சற்று சுயநலமிக்கவர்களாக இருப்பர்.


காது
ஒரு ஆணின் காதுமடலின் மேல் பகுதி அகலமாக இருந்தால், அதிக கோபம் வரும். அதுவே சிறிய காதுகளைக் கொண்டிருந்தால் சாந்தமானவர்களாக இருப்பர்.


தோள்பட்டை
ஒரு ஆணுக்கு தோள்பட்டைகள் உயர்ந்து இருந்தால், அவரிடம் செல்வம் கொழிக்கும். சமமாக இருந்தால் அறிவானவர்களாக இருப்பர். அதுவே தாழ்ந்து இருந்தால் நீண்ட ஆயுளைக் கொண்டவர்களாக இருப்பர். தோள்பட்டையில் ரோமங்களைக் கொண்டவர்களாக இருந்தால், நினைக்கும் எந்த காரியத்திலும் வெற்றி காண முடியாது.


கைகள்
முழங்கால் வரை நீளமான கைகளைக் கொண்ட ஆண்கள் ராஜ வாழ்க்கை வாழ்வார்கள் மற்றும் நல்ல கல்வியறிவைக் கொண்டவர்களாக இருப்பர். குட்டையான கைகளைக் கொண்ட ஆண்களை நம்பக்கூடாது. கைளில் நீளமான ரோமங்கள் கொண்டிருந்தல் அவர்களை செல்வம் தேடி வரும்.


விரல்கள்
நீளமான விரல்களைக் கொண்ட ஆண்களுக்கு கலை ஆர்வம், காம இச்சை அதிகம் இருக்கும். விரல்களுக்கு இடையே அதிகப்படியான இடைவெளி இருந்தால் தரித்திரமாம். உள்ளங்கையின் நான்கு மூலைகளும் சம அளவு உயரத்தில் தட்டையாக இருந்தால் நல்ல பதவியில் இருப்பர். உள்ளங்கையில் குழி அதிகம் விழுந்தால் ஆயுள் காலம் மிகவும் குறைவு.


மார்பு
ஒரு ஆணுக்கு மார்பு பகுதி அகலமாகவும், நல்ல தசைப்பிடிப்போடும் இருந்தால், தான் இருக்கும் இடத்தில் நல்ல புகழ் பெற்றவனாக இருக்கும். மார்பு பகுதியில் ரோமம் இல்லாவிட்டால் நல்லதல்ல. அதுவே ரோமம் அதிகம் இருந்தால் காம உணர்வு அதிகமாக இருக்கும்.


உயரம்
ஒரு ஆண் உயரமாக இருந்தால், அது நல்ல ஆளுமைக்கான அடையாளம். ஒரு உயரமான ஆண் நல்ல உடல் பாகங்களுடன் இருந்தால், அவர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டும் மற்றும் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வார்கள். அதுவே குட்டையான ஆண்களுக்கு காம உணர்வு அதிகம். மேலும் அவர்கள் புத்திசாலி மற்றும் தந்திரமானவர்கள்.