jaga flash news

Wednesday 3 March 2021

அனுமன் வாயு பகவான்...!!! அனுமன் வழிபாட்டு ரகசியம் இதுதான்!!


அனுமன் வாயு பகவான்...!!! அனுமன் வழிபாட்டு ரகசியம் இதுதான்!!

நம் உடலில் 5 விதமான வாயுக்கள் உள்ளன. அவை பிராணவாயு , சமான வாயு , அபான  வாயு, உதான வாயு மற்றும் வியான வாயு. இதில் பிராண மற்றும் சமான வாயுக்கள் முதலில் உடலை விட்டு பிரிகின்றன . இந்த 2 வாயுக்களும் பிரிந்த உடனேயே அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்படுகிறார் . ஆனால் உடல் மட்டும் இன்னும் வளையும் தன்மையுடன் இருக்கும் . இன்னும் சில மணி நேரங்களில் அபானா மற்றும்  உதானா வாயுக்கள் உடலை  விட்டு பிரிகின்றன . இப்போது உடலின் வளையும் தன்மை நீங்கி கட்டை போல் ஆகின்றது .ஆனால் உடலை பாதுகாக்கும் தன்மை கொண்ட வியான வாயு பிரிய சில நாட்கள் எடுத்துக்கொள்ளும். வியான வாயுதான் இறுதியாகப் பிரிவது . இது முழுவதுமாகப் பிரிவதற்கு பொதுவாக 11 ல் இருந்து 14 நாட்கள் வரை  எடுத்துக் கொள்கிறது அதனால் தான் இறப்பு சடங்குகள் அந்த நாட்கள் வரை நீட்டிக்கபடுகின்றன . ஒருவித புரிதலிலிருந்துதான் இது போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டன . ஆனால் துரதிர்ஷ்டவசமாக தற்போது இந்த சடங்குகள் சரியான புரிதல் இல்லாதவர்களால், சரியான அனுபவம் இல்லாதவர்களால்  செய்யப்படுவதால் இந்த சடங்குகள் அதன் தன்மையை இழந்து வருகின்றன. 

வாயுக்களால் ஆன நம் உடல் காற்றடைத்த பையடா என சித்தர்களால் சொல்லப்படுகிறது..வாயு வெளியேறினால் நாம் வெறும் சதைப்பிண்டம்தான்..அந்த வாயுக்களின் அம்சமாகவும், அனுமனை கண்டு வழிபடுகிறோம்..!!   வாலில் மணி கட்டிய அனுமன் படத்தை வீட்டில் வைத்து வழிபடலாம்...மற்ற படங்கள் ஆகாது!!

No comments:

Post a Comment