jaga flash news

Tuesday, 16 March 2021

தீர்க சுமங்கலி பவா என்றல் என்ன? அறிந்துகொள்ளுங்கள்*

🌼  *தீர்க சுமங்கலி பவா என்றல் என்ன? அறிந்துகொள்ளுங்கள்*

🌼 தீர்க சுமங்கலி பவா.....! 
என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்.
🌼 திருமணத்தில் ஒன்று,
🌼 60 வயது ஷஷ்டியப்த பூர்த்தியில் ஒன்று,
🌼 70 வயது பீமரத சாந்தியில் ஒன்று,
🌼 80 வயது சதாபிஷேகத்தில் ஒன்று,
🌼 96 வயது கனகாபிஷேகத்தில் ஒன்று!

🌼 இவைகள் பற்றி ஒரு சிறு விளக்கம். 

🌼 ஷஷ்டியப்த பூர்த்தி, பீம ரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் போன்ற சடங்குகளை நடத்திக்கொள்வது என்பது எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை.

🌼 பெரும் பாக்கியமும் பூர்வ புண்ணியமும் செய்தவர்களுக்கே இந்த மணவிழா காணும் பாக்கியம் அமைகிறது.

🌼 இது போன்ற வைபவங்கள் பொதுவாக ஆயுள் விருத்தியைப் பிரதானமாகக் கொண்டே அமைகின்றன.

🌼 சகல தேவர்களையும் மகிழ்விக்கும் பொருட்டு அன்றைக்கே வேத பாராயணங்களும், ஹோமங்களும் நடைபெறுகின்றன.

🌼 உறவு முறைகள் கூடி நின்று குதூகலப்படும் போது, ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியரின் மனம் மகிழும்.

🌼 நமக்கென்று இத்தனை சொந்தங்களா என்கிற சந்தோஷம் அவர்களின் மனதில் பரவசத்தை ஏற்படுத்தும்.

🌼 பூமி 360 பாகைகளாகவும் அந்த 360 பாகைகளும் 12 ராசி வீடுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

🌼 இந்த 360 பாகைகளையும் கடந்துசென்று ஒரு வட்டப் பாதையை பூர்த்தி செய்வதற்கு 

⚜சூரியனுக்கு ஓர் ஆண்டும்,
⚜செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டும், ⚜சந்திரனுக்கு ஒரு மாதமும்,
⚜புதனுக்கு ஒரு வருடமும்,
⚜வியாழனுக்கு 12 வருடங்களும்,
⚜வெள்ளிக்கு ஒரு வருடமும்,
⚜சனி பகவானுக்கு 30 வருடங்களும், ⚜ராகுவுக்கு ஒன்றரை வருடங்களும், ⚜கேதுவுக்கு ஒன்றரை வருடங்களும், ஆகின்றன.

🌼 இந்த சுழற்சியின் அடிப்படையில் ஒருவர் ஜனித்து, அறுபது வருடங்கள் நிறைவடைந்த தினத்துக்கு அடுத்த தினம், அவர் பிறந்த நாளன்று இருந்த கிரக அமைப்புகளும் வருடம், மாதம் போன்றவையும் மாறாமல் அப்படியே அமைந்திருக்கும்.

🌼 மிகவும் புனித தினமான அன்றுதான், சம்பந்தபட்டவருக்கு ஷஷ்டியப்த பூர்த்தி வைபவம் மிகவும் ஆச்சாரமான முறையில் தெய்வாம்சத்துடன் நிகழ வேண்டும்.

🌼 ஷஷ்டியப்த பூர்த்தி தினத்தன்று வேத பண்டிதர்களின் முன்னிலையில் நிகழ்த்தப்படும்.

🌼 பூஜையின் போது 84 கலசங்களில் தூய நீரை நிரப்பி மந்திரங்களை உச்சரித்து ஹோமங்கள் நடைபெறும்.

🌼 அங்கே உச்சரிக்கப்படும் வேத மந்திரங்களின் சத்தம் மூலம் கலசத்தில் உள்ள நீர் தெய்வீக சக்தி பெற்று, புனிதம் அடைகிறது.

🌼 பின்னர், அந்தக் கலசங்களில் உள்ள நீரைக் கொண்டு ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியினருக்கு அபிஷேகம் நடைபெறும்.

🌼 அபிஷேகத்துக்குப் பயன்படும் இந்த 84 கலசங்கள் எதைக் குறிக்கின்றன?

🌼 தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது என்பதை நாம் அறிவோம்.

🌼 இந்த அறுபது ஆண்டுகளுக்கான தேவதைகளையும், இந்த தேவதைகளின் அதிபதிகளாகிய...

⚜அக்னி,
⚜சூரியன்,
⚜சந்திரன்,
⚜வாயு,
⚜வருணன்,
⚜அஷ்ட திக் பாலகர்கள் பாலாம்பிகை,
⚜அமிர்த கடேஸ்வரர்,
⚜நவநாயகர்கள்..

சேர்த்து குறிப்பதற்காகத்தான் 84 கலசங்கள் என்பது ஐதீகம்.

🌼 பிரபவ முதல் விஷு வரையான 15 ஆண்டுகளுக்கு அக்னி பகவானும்,

🌼 சித்ரபானு முதல் துன்முகி வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சூரிய பகவானும்,

🌼 ஹேவிளம்பி முதல் விரோதிகிருது வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சந்திர பகவானும்,

🌼 பரிதாபி முதல் அட்சய வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு வாயு பகவானும்..
அதிபதிகள் ஆவார்கள்.

🌼 தன்னுடைய 60-வது வயதில் ஐம்புலன்களால் வரும் ஆசையை வென்ற மனிதன் 60 வயதில் இருந்துதான், தனது என்ற பற்றையும் துறக்க முயல வேண்டும்.

🌼 தன்னுடைய மகன், மகள், சொந்த பந்தம் என்ற கண்ணோட்டம் மறைந்து உற்றார் உறவினர் அனைவரும் தன் மக்களே…. எல்லோரும் ஒரு குலமே என்கிற எண்ணம் 70 வயது நிறைவில் பூர்த்தி ஆக வேண்டும்.

🌼 தான், தனது என்ற நிலை மறந்து அனைவரையும் ஒன்றாகக் காணும் நிலை பெற்றவர்களே 70-வது நிறைவில் பீஷ்ம ரத சாந்தியைக் கொண்டாடும் தகுதியைப் பெறுகிறார்கள்.

🌼 காமத்தை முற்றிலும் துறந்த நிலையே பீஷ்ம ரத சாந்திக்கான அடிப்படை தகுதியாகும்.

🌼 70-வது வயதில் இருந்து ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றி உள்ள எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண முயல வேண்டும்.

🌼 ஒவ்வொரு உயிரிலும் உறையும் இறைவனுடன் உரையாடப் பழகிக் கொள்ள வேண்டும்.

🌼 அவனுக்கு ஜாதி, மதம், இன பேதம் எதுவும் இல்லை.

🌼 இப்படி அனைத்திலும் இறைவனை, அனைத்தையும் இறைவனாகக் காணும் நிலையை ஒரு மனிதன் 80 வயதில் பெறும் போதுதான் சதாபிஷேகம் (ஸஹஸ்ர சந்திர தர்ஸன சாந்தி – ஆயிரம் பிறை கண்டவன்) காணும் தகுதியை அவன் அடைகிறார். அப்போது சதாபிஷேகம் செய்துகொள்ள வேண்டும்

🌼 இறையோடு இரண்டரக் கலந்து இறை சிந்தனை கொண்ட தம்பதிகளுக்கு 96 வயதில் கனகாபிஷேகம் செய்து இந்த ஜென்மாவின் ஐந்தாவது மாங்கல்யம் பூட்டி தீர்க்க சுமங்கலி பவா ஆசிக்கு உரியதாக அமைகிறது.

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

Monday, 15 March 2021

மதில் சுவர் வாஸ்து

🪔

🏛️ வாஸ்து தகவல் :

வீட்டின் சுவர், தாய் சுவர் என்று அழைக்கப்படும் Mother wall.

மதில் சுவர் | என்பது தந்தை சுவர் என்று அழைக்கப்படும் (Father Wall )

மதில் சுவரானது, வெளியிலிருந்து வரும் தாக்கங்களை தாங்கிக்கொண்டு, ஒரு பாதுகாப்பு அரணாக நம்மை பாதுகாக்கும் .

வீட்டில் நான்கு புறமும் சரியான அளவுகளில் காலியிடம் வீடு கட்டுவது சிறப்பு.

ஒரு வீட்டின் மதில் சுவர் மற்றொரு வீட்டில் மதில் சுவருடன் ஒட்டக் கூடாது.  யாருடனும் கூட்டு வைத்துக் கொள்ளக் கூடாது. அது தந்தையை பகிர்ந்து கொள்வது போல் ஆகிவிடும்.

தாய் சுவரும், தந்தை சுவரும் எந்த இடத்திலும் தொடக்கூடாது. அதாவது, இரண்டு பக்கம் அல்லது மூன்று பக்கம் மதில் சுவர் அமைத்துவிட்டு ஒருபகுதியை தாய்சுவருடன் இணைக்க கூடாது.

மதில் சுவர் அமைப்பு சதுரம் செவ்வகம் ஆக மட்டுமே இருக்க வேண்டும்.

மதில் சுவர் என்ன உயர அளவுகளில் அமைக்க வேண்டும் என்ற சில அளவுகள் உள்ளது, அதன்படி அமைப்பது சிறப்பு.

நாயுருவிச் செடி...



பொருளாதாரம் உயர:-


ஞாயிற்றுக்கிழமையும், பூசம் நட்சத்திரமும் கூடிய நாளன்று, அதிகாலையில் நாயுருவிச் செடிக்கு முறைப்படி காப்புக் கட்டி சாபநிவர்த்தி செய்து பிடுங்கி அதைக் கையில் வைத்துக்கொண்டே, சண்டி நவாக்ஷரி மந்திரம் 1008 உரு ஜெபம் செய்து, பின்னர் வெள்ளைநிறப்பட்டு அல்லது பருத்தித் துணியை மஞ்சள் கலந்த தண்ணீரில் நனைத்து அந்தத் துணியால் நாயுருவிச் செடியைச் சுற்றவும். இதைக் கடை,அலுவலகம், வீடுகளில் வைக்க பொருளாதார நிலை உயர்வடையும்.



Saturday, 13 March 2021

பாட்டி சொல்லுவாள்

*பாட்டி சொல்லுவாள்*

1நீரால் கோலம் போடாதே
2நெற்றியைக் காலியாய் விடாதே
3குச்சியைக் கொளுத்தி வீசாதே
4இரவில் ஊசியை எடுக்காதே

5கால் மேல் காலைப் போடாதே
6காலையில் அதிகம் தூங்காதே
7தொடையில் தாளம் போடாதே
8தரையில் வெறுதே கிடக்காதே

9மலஜலம் அடக்கி வைக்காதே
10நகத்தை நீட்டி வளர்க்காதே
11ஆலயம் செல்லத் தவறாதே
12அதிகமாகப் பேசாதே

13எண்ணெய் தேய்க்க மறக்காதே
14சந்தியில் நீயும் உண்ணாதே
15விரிப்பைச் சுருட்ட மறக்காதே
16பகலில் படுத்து உறங்காதே

17குளிக்கும் முன்பு புசிக்காதே
18ஈரம் சொட்ட நிற்காதே
19நாமம் சொல்ல மறக்காதே
20நல்ல குடியைக் கெடுக்காதே

21தீய வார்த்தை பேசாதே
22நின்று தண்ணீர் குடிக்காதே
23எதையும் காலால் தட்டாதே
24எச்சில் பத்தை மறக்காதே

எல்லாம் சொல்லிக் கொடுத்தாரே
எந்தன் குடியில் மூத்தோரே
எல்லாம் கேட்டு வாழ்ந்தோரே
என்றும் வளமாய்த் தீர்வோரே

*என்ன அழகான வரிகள் இதை முதலில் நம் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கலாமே*

Thursday, 11 March 2021

போதாயன அமாவாசை என்றால் என்ன?

போதாயன சூத்ரம்’ என்ற நுாலில் அமாவாசை பற்றி எழுதியவர் போதாயனர் என்ற ரிஷி. இவருக்கும், இவரது சீடரான ஆபஸ்தம்பருக்கும் திதிகளை நிர்ணயம் செய்வதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஆபஸ்தம்பர் குருவிடமிருந்து விலகி தனியாக சூத்ரம் இயற்றினார். இதுவே ஆபஸ்தம்ப சூத்ரம் எனப்பட்டது. இருவர் வழியிலும் வைதிகக் கிரியைகளைச் செய்யும் முறை இன்றளவும் உள்ளது. போதாயனரின் கணக்குப்படி, அமாவாசைக்கு மறுநாள் வரும் பிரதமை திதி, அன்றைய சூரிய அஸ்தமனத்துக்குள் முடிந்து, துவிதியை துவங்கி, வானில் சந்திரப்பிறையும் தெரியும் எனக் கணக்கிட்டால், அமாவாசையின் முதல்நாளான சதுர்த்தசி அன்றே பிதுர்க்கடனை செய்ய வேண்டும் எனக் கூறுகிறார். அதுவே போதாயன அமாவாசை. ஆபஸ்தம்பரின் கணக்குப்படி பிதுர்க்கடன் செய்யும் போது அமாவாசை திதி இருக்க வேண்டும் என்பது கருத்து. இதைப் பின்பற்றுபவர்கள் அமாவாசை திதியிருக்கும் அன்றே பிதுர்க்கடன் செய்கிறார்கள்

Wednesday, 10 March 2021

போர்டிக்கோக்கள் வாஸ்து



🏛️ வாஸ்து தகவல் :

தற்காலத்தில் நாகரீக போக்காக கருதி அமைக்கப்படும் போர்டிக்கோக்கள் அமைக்கும் பொழுது பலசூட்சமங்களை பயன்படுத்தி அதை அமைக்க வேண்டும். அப்படி சரியாக அமைக்காவிட்டால் அழகுக்காக அமைத்த போர்டிகோ ஆபத்தாக முடிந்துவிடும்.

வீட்டின் எந்த திசைகளிலும் வேண்டுமானாலும் போர்டிகோ அமைத்துக் கொள்ளலாம். அதற்கென சில அளவுகள் உண்டு.

வீட்டில் தாய் சுவற்றில் "ட "போன்ற வெட்டுப்பட்ட அமைப்பில் போர்டிகோ அமைப்பது தவறாகும்.

பிரமிடு வடிவ , கூம்பு வடிவ , அரைக்கோள வடிவ ,சரிவான வடிவில் அமைக்கக்கூடாது.

போர்ட்டிகோ வீட்டுக்கு வரும் சூரிய ஒளியைத் தடுக்கும் வண்ணம் அமைக்கக் கூடாது.

வீட்டில் மேற்கூரை மட்டத்தில் அமைத்துக் கொள்வது சிறப்பு.

போர்டிகோவில் முடிந்த அளவு தூண்கள் வராமல் அமைப்பு அமைத்துக் கொள்வது சிறப்பு.


கிரக ஷட் பலம்

ஷட் வலு

 

 கிரக ஷட் பலம் என்பது கிரகங்களின் வலிமையை ஆறு விதங்களில் கணக்கிட்டு அவற்றில் அதிக வலிமையான கிரகம் எது, மிகவும் வலிமை குன்றிய கிரகம் எது என்பதை கண்டறிவது ஆகும். "ஷட்" என்றால் "ஆறு" என பொருள்படும். "பலம்" என்றால் "வலிமை" எனப் பொருள்படும். "ஷட் பலம்" என்றால் "ஆறு வித வலிமை" எனப் பொருள்படும்.

பராசரர் சோதிட முறையில் பாவங்களின் வலிமை அஷ்டக வர்க கணிதம் மூலமாகக் கணக்கிடப்படுகிறது. ஷட் பல கணக்கீடு ராகு, கேதுக்களுக்கு கிடையாது. மற்ற ஏழு கிரகங்களுக்கு மட்டுமே உண்டு. கீழ்க்கண்ட ஆறு விதமான பலங்கள் கிரகங்களின் ஷட் பலம் எனப்படுகிறது.

ஸ்தான பலம்
திக் பலம்
கால பலம்
சேஷ்ட பலம்
நைசார்கிக பலம்
த்ருக் பலம்.
ஏழு கிரகங்களுக்கு ஷட் பலம் கணக்கிட்டு, கிரகங்களை, அவைகளின் வலிமையின் அடிப்படையில் வரிசைப்படுத்துவது வழக்கம். அதில் அதிக வலிமையுடைய கிரகத்திற்கு முதலிடம் வழங்கப்படும். மிகவும் வலுக்குன்றிய கிரகத்திற்கு கடைசி இடமான ஏழாமிடம் வழங்கப்படும். ஷட் பலத்தில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த கிரகங்கள் சாதகத்தில் அதிக வலிமையுடைய கிரகங்களாகும். மூன்று, நான்கு, ஐந்தாம் இடங்களைப் பிடித்த கிரகங்கள் சராசரி வலிமையுடைய கிரகங்களாகும். ஆறு, ஏழாமிடங்களைப் பிடித்த கிரகங்கள் மிகவும் வலுக்குன்றிய கிரகங்களாகும்.

ஷட் பலத்தால் அதிக வலிமை பெற்ற கிரகங்கள் தங்கள் தசா-புக்தி காலங்களில் அனுகூலமான பலன்களைத் தரும். 

ஷட் பலத்தால் வலுக்குன்றிய கிரகங்களுக்கு பரிகாரங்கள் செய்வதன் மூலம் அந்தக் கிரகங்களை வலிமைப்படுத்தலாம். வலுக்குன்றிய கிரகங்கள் சம்பந்தப்பட்ட எந்த ஒரு பொருளையும் பிறரிடமிருந்து தானமாகவோ, இலவசமாகவோ பெறக்கூடாது. ஆனால் ஜாதகர் பிறருக்கு அப்பொருட்களை தானமாகவோ, இலவசமாகவோ கொடுக்கலாம்.

ஷட் பல கணிதம் செய்வதற்கு அதிக கவனமும், ஈடுபாடும், அதிக கால அவகாசமும் தேவைப்படும்..

இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம். ஷட் வலுவில் அதிக வலுவுடன் இருக்கும் கிரகம். அதனுடைய தசா புக்தி.ஜாதகருக்கு யோகம் செய்யும் நிலையிலிருந்தால் மிகுந்த யோகத்தை செய்யும் ..ஷட் வலுவில் அதிக வலிமை பெற்ற கிரகமே ஒருவரின் குணாதிசயங்களை சொல்லக்கூடியதாக. அமையும்.

எடுத்துக்காட்டாக ஒருவருக்கு செவ்வாய் அதிக வலுவுடன் இருக்கும் ஆனால், இயல்பிலேயே ஜாதகர் தைரியசாலி போராட்டத்தை சந்திக்கக் கூடியவர். எத்தகைய சூழ்நிலையிலும் போராட்ட குணம் இருக்கும்.


பசுவும்_புண்ணியங்களும்



பசுவும்_புண்ணியங்களும்

🐂 பசுவுக்கு நாம் அகத்திக் கீரை in தருவதால் , முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும்.  கொலை , களவு செய்வதால் உண்டாகும் பிரம்ம ஹத்தி தோஷங்கள் விலகிவிடும். நீண்ட நாட்களாக திதி , கர்மா செய்யாமல் இருந்தால் அந்த பாவம் பதினாறு அகத்தி கீரை கட்டை பசுவுக்கு தருவதால் நீங்கும். பித்ரு தோஷங்கள் இருந்தால் நீங்கும்.

🐂பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால்  பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணியம் கிடைக்கும்.

🐂பசுவை பூஜித்தால் பிரம்மா , வி்ஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜித்த புண்ணியம் உண்டாகும்.

🐂 பசு உண்பதற்கு புல் கொடுத்தாலும் ( கோக்ராஸம் ), பசுவின் கழுத்து பகுதியில் சொரிந்து கொடுத்தாலும் ( கோகண்டுயனம் ) கொடிய பாவங்கள் விலகும்.

🐂பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் கோதூளி காலம் ( லக்னம் ) என்று அழைக்கப்படுகிறது.  இது மிக புண்ணியமான காலமாகும்.

🐂பசு நடக்கும் போது எழும் புழுதியானது நம் உடலில் படுவது  8 வகை புண்ணிய ஸ்நானங்களில் ஒன்றாகும். பசுவின் கால் பட்ட தூசியைதான் மாமன்னர்கள் பூசிக்கொண்டார்கள்.

🐂" மா " என்று பசு கத்தும் ஓசை அப்பகுதிக்கு மங்கலத்தை தருகிறது.

🐂பசு வசிக்கும் இடத்தில் , அதன் அருகில் அமர்ந்து சொல்லும் மந்திர ஜபமோ , தர்ம காரியங்களோ 100 மடங்கு பலனைத் தரும்.

🐂மனிதன் கண்களுக்கு புலப்படாத ம்ரத்யு , எமன் ,  எமதூதர்கள் பசுவின் கண்களுக்கு மட்டுமே புலப்படுவார்கள்.

🐂ஒருவர் இறந்த பின் பூலோகத்திற்கு அழைத்து செல்லப்படும் ஜீவன் அஸிபத்ர வனத்தில் வைதரணிய நதியை ( மலம் , சலம் , சளி , சுடு நீர் ஓடும் நதி ) கடக்க இயலாமல் தவிக்கிறது. பசு தானம் செய்பவர்களுக்கு இத்துன்பம் இல்லை.  அவர் தானம் செய்த பசுமாடு அங்கு தோன்றி அதன் வாலைப் பிடித்துக்கொண்டு வைதரணிய நதியை கடந்து விடலாம் என்று கருட புராணம் கூறுகிறது.

🐂உலகத்தில் விஞ்ஞானத்தால் எத்தனை பாதிப்பு நிகழ்ந்தாலும் , பசுக்கள் வசிக்கும் இடத்தி்ல் மட்டும் எவ்வித பாதிப்பும் இருக்காது.

🐂கோமாதாவை காப்போம் , நேசிப்போம் , பூஜிப்போம்...

மகாபெரியவா சரணம்

12 ராசிகளின் பெருமாள் மந்திரங்கள்


நட்சத்திரம் Vs உடல் உறுப்புகள் பாதிப்பை ஏற்படுத்தும் பாகங்கள்.