jaga flash news

Sunday, 5 November 2023

ராசி vs ஆபரணம்

மேஷ ராசியினர் வைரம், ரத்தக் கல், மாணிக்க நகைகளை அணிவது நல்லது. இது அவர்களின் உள் சக்தியை எழுப்புகிறது மற்றும் அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுகிறது
பூமி ராசியான ரிஷபம் மஞ்சள் நிறத்தில் எந்த உலோக நகைகளையும் அணிவது நல்லது. இந்த ராசிக்காரர்கள் தங்கம், வெள்ளி, தாமிரம் போன்ற எந்த வகையான நகைகளையும் அணியலாம்
மிதுன ராசியினர் சாஸ்திரப்படி, லேசான நகைகளை அணிவது நல்லது. வெள்ளி ஆபரணங்கள் அவர்களின் அழகை அதிகரிக்கும்
இரக்க குணம் கொண்ட கடக ராசிக்காரர்களுக்கு சந்திரன் அதிபதி. வெள்ளி ஆபரணங்கள் நிலவுக்கல் அல்லது மரகதத்துடன் அணிவது சிறந்தது. மோதிரம் மற்றும் நெக்லஸ் அணியலாம்
நெருப்பு ராசி கொண்ட சிம்ம ராசிகள் கல் அல்லது உலோகத்தால் செய்யப்பட்ட நகைகள் சிறப்பாக செயல்படும் என்று அறிவியல் கூறுகிறது
கன்னி ராசிக்காரர்கள் சிந்தனையாளர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். சிறிய இன்பம் வந்தாலே அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். இவர்களுக்கு எளிய இலக்கு ஆபரணம் ஏற்றது.
துலாம் சமநிலையை வைத்திருப்பதற்கான அடையாளம் என்று கூறப்படுகிறது. நகைகளின் லேட்டஸ்ட் ட்ரெண்டை விரும்புகிறார்கள்
விருச்சிக ராசியினர் நீர் அடையாளத்தின் சின்னம். ஸ்படிகம் போன்ற தூய தங்க நகைகள் அவர்களுக்கு பொருந்தும். (Freepik
தனுசு ராசியினர் குரு பகவனால் ஆளப்படுகிறது. அன்பான இதயம் கொண்ட இவர்கள். நீலம் அவர்களின் விருப்பமான நிறம் என்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு நீல நகைகள் பொருந்தும்
மகர ராசிக்கு அதிபதி மகர சனி. எளிய ஒளி ஆபரணங்களை அணிய வேண்டும். அவர்கள் தங்கம் மற்றும் வெள்ளி ஒளி ஆபரணங்களை அணியலாம்
கும்ப ராசிக்காரர்கள் சுதந்திரம் தேடும் மக்களை நேசிப்பார்க: இந்த ராசியினர் வெள்ளி ஆபரணங்களை அணிய வேண்டும்
மீன் இந்த கிரகத்தின் சின்னம். பிளாட்டினம் அல்லது வெள்ளி நகைகள் இந்த ராசிக்கு ஏற்றது

இந்த கலர்ல கார் வாங்குனா தான் நல்ல மைலேஜ் கிடைக்கும்! ஏன் தெரியுமா?

இது ஜோசியம் எல்லாம் இல்ல! இந்த கலர்ல கார் வாங்குனா தான் நல்ல மைலேஜ் கிடைக்கும்! ஏன் தெரியுமா?

கார் வாங்க போகிறீர்களா ? நீங்கள் காருக்கான கலரை தேர்வு செய்யும் முன் காரின் நிறத்திற்கும் காரின் மைலேஜிற்க்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அதைப்பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும் அதன் பின்பு தான் நீங்கள் எந்த நிற காரை வாங்க வேண்டும் என்ற முடிவை எடுக்க வேண்டும். இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

ஒரு குடும்பத்தில் முதன் முறையாக கார் வாங்க வேண்டும் என்றால் அவர்கள் தங்கள் வாழ்நாளில் சேர்த்து வைத்த மிகப் பெரிய பணத்தை அதில் முதலீடு செய்து தங்கள் மிகப்பெரிய கனவான காரை வாங்கும் முடிவை எடுப்பார்கள். கார் வாங்க வேண்டும் என்ற முடிவை எடுத்தவுடன் அவர்களின் பட்ஜெட்டிற்கு ஏற்ப மார்க்கெட்டில் என்ன கார் இருக்கிறது. அவர்களின் தேவை என்ன? என்பதை புரிந்து எந்த கார் வேண்டும் என முடிவு செய்வார்கள்.


ஆனால் பெரும் குழப்பம் என்று வரும்போது கார் நிறத்தை தேர்வு செய்வதில் தான் வரும். கார் நிறத்தை தேர்வு செய்யும்போது வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் நண்பர்களும் ஒவ்வொரு விதமான காரணத்தை சொல்லுவார்கள். இதில் கார் வாங்கும் நபருக்கு எந்த நேரத்தில் காரை வாங்க வேண்டும் என்ற குழப்பமே ஏற்படும். பலர் இப்படியான குழப்பத்தில் இறுதியாக ஜோதிடரிடம் சென்று கூட எந்த கலர் காரை வாங்கலாம் என்ற முடிவை எடுப்பார்கள்.

ஆனால் நீங்கள் வாங்கும் காரின் கலருக்கும் காரின் மைலேஜிற்க்கும் மிகப்பெரிய தொடர்பு இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம் அறிவியல் ரீதியாகவே இப்படியான தொடர்பு இருக்கிறது. இப்படியாக எந்த கலர் கார் அதிக மைலேஜ் தரும் எந்த கலர் கார் கம்மியான மைலேஜ் தரும் என காணலாம் வாருங்கள்.


கருப்பு நிற கார்: மற்ற எல்லா கலரை காட்டிலும் கருப்பு நிற கார் தான் குறைவான மைலேஜ் தரும் காராக இருக்கிறது. இந்த கார் சாலையில் செல்லும்போது நல்ல லுக்கில் இருந்தாலும், மற்ற நிறங்களை ஒப்பிடும்போது இந்த நிற காரில் மைலேஜ் குறைவாக இருக்கும். இதற்கு காரணம் கருப்பு நிறம் வெளியில் உள்ள வெப்பத்தை காருக்குள் ஈர்க்கும் திறன் கொண்டது.
இதனால் காருக்குள் அதிகமாக வெப்பமாகும் இந்த வெப்பத்தை போக்க நாம் அதிகம் ஏசியை பயன்படுத்த வேண்டியது இருக்கும். ஏசி பயன்பாட்டு காரணமாக மைலேஜ் குறையும். அதே நேரம் காரின் இன்ஜின் இருக்கும் பகுதியும் அதிகம் சூடாவதால் அதன் மைலேஜ் அதிகமாக பாதிக்கப்படும்.


வெள்ளை நிற கார்: இந்தியாவில் அதிகம் விற்பனையாவது வெள்ளை நிற காரர்கள் தான். வெள்ளை நிற கார்கள் வெப்பத்தை புறம்தள்ளும் திறன் கொண்டது. இதனால் காரின் உள்ளே வெப்பம் அவ்வளவு சுலபமாக வராது. இதனால் ஏசி பயன்பாடு குறைவாக இருக்கும். இதனால் மற்ற நிற கார்களை விட வெள்ளை நிறக்காரர்கள் தான் அதிகமான மைலேஜ் தரும் திறன் கொண்ட கார்களாக இருக்கிறது.

ADVERTISEMENT

நீல நிற கார்: நீல நிற கார்கள் மார்க்கெட்டில் விற்பனையாவது பெரும்பாலும் மெட்டாலிக் நிற கார்களாக இருக்கின்றன. இந்த மெட்டாலிக் நிறை பெயிண்ட் எல்லாமே வெப்பத்தை தன்வசம் ஈர்க்கும் திறன் கொண்டதுதான். இதனால் இந்த கார்களிலும் மைலேஜ் பாதிக்கப்படும். கருப்பு நிற கார்கள் அளவுக்கு மைலேஜ் பாதிக்கப்படாவிட்டாலும், இதில் ஓரளவுக்கு மைலேஜ் பாதிப்பு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இந்த மெட்டாலிக் நீல கலர் காருக்கு நல்ல லுக்கை கொடுக்கும்.

car color and mileage
சில்வர் நிறக்கார்: சில்வர் நிறம் என்பது ஒரு சிறந்த கார் கலர் தேர்வாக இருக்கிறது. இந்த காரில் அழுக்கு பட்டாலும் வெள்ளை நிற கார் போல அவ்வளவு ஈசியாக வெளியே தெரியாது. அதே நேரம் இந்த கார் வெள்ளை நிற காருக்கு நிகரான மைலேஜ் வழங்கும் திறன் கொண்டதாக இருக்கிறத

இந்த கார் அதிகமாக வெப்பத்தை உள்ளே இருக்காது. இதனால் ஏசி பயன்பாடு குறைவாக இருக்கும். இஞ்சின் பகுதியும் சுலபமாக கூல் ஆகும் என்பதால் இந்த கார் நிச்சயம் ஒரு நல்ல சாய்ஸாக இருக்கும். இந்த நிறம் பார்க்கவும் நல்ல லுக்கை தரும் பாராமரிப்பும் குறைவாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார் வாங்கும் பலருக்கு இப்படி காரின் நிறம் காரின் மைலேஜ் பாதிக்கும் என்ற விவரம் தெரியாமல் இருக்கும் மைலேஜ் வித்தியாசத்தை பார்த்தால் ஏதோ சிறிய அளவு மைலேஜ் வித்தியாசம் தான் உங்கள் கண்ணுக்கு தெரியும். இதனால் என்ன நஷ்டம் வரப்போகிறது என நீங்கள் நினைக்கலாம்.


ஆனால் இதை நீண்ட நாட்கள் பயன்படுத்தும் போது பெரிய அளவிலான பணத்தை நீங்கள் காரின் கலரால் ஏற்படும் மைலேஜ் பாதிப்பிற்காக செலவு செய்ய வேண்டியது இருக்கும். இதனால் காரின் நிறத்தை தேர்வு செய்யும் போது கவனமாக இருங்கள். வெள்ளை மற்றும் சில்வர் நிற கார்கள் சிறப்பான மைலேஜ் தரும் கார்களாக உள்ளன.


Friday, 3 November 2023

Maruthani Plant: மருதாணி செடி

Maruthani Plant: உங்கள் வீட்டில் பலவிதமான செடிகளை வளர்க்கிறீர்களா? குறிப்பாக உங்கள் வீட்டில் மருதாணி செடி உள்ளதா? நிறைய பேருக்கு வீட்டில் மருதாணி செடியை வளர்க்கலாமா என்ற கேள்வி மனதில் இருக்கும். ADVERTISEMENT மருதாணி செடியானது லட்சுமி தேவியின் அம்சத்தைக் குறிக்கிறது. இது தவிர மருதாணி செடியின் ஒவ்வொரு பகுதியும் பலவித நன்மைகளை வழங்குகின்றன. வீட்டில் மருதாணி செடி இருந்தால், அது அந்த வீட்டில் கெட்ட சக்தி நுழைவதைத் தடுக்கும். ADVERTISEMENT இதற்கு காரணம் மருதாணியின் வாசனை தான். இந்த வாசனைக்கு எந்த கெட்ட சக்தியும் மட்டுமின்றி, பூச்சிகளும் வராது. உங்கள் வீட்டில் மருதாணி செடி இருந்தால், அதன் ஒவ்வொரு பகுதியையும் எப்படி பயன்படுத்தலாம் மற்றும் மருதாணி செடியை வைத்திருந்தால் செய்யக்கூடாத தவறுகள் குறித்து இப்போது காண்போம். Next Orhan Awatramani Big Statement,App log Mera Majak... வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் நீங்க.. வீட்டில் உள்ள கெட்ட சக்திகளை நீக்க விரும்பினால், மருதாணி செடியின் விதைகளை எடுத்து வெயிலில் நன்கு காய வைத்து, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வீட்டில் சாம்பிராணி போடும் போது, அதில் சிறிது இந்த விதைகளை சேர்த்து தூபம் போட்டால், அதன் வாசனைக்கு கெட்ட சக்திகள் நீங்குவதோடு, வீட்டில் பூச்சிகள் வராமலும் இருக்கும். நிம்மதியான தூக்கத்தைப் பெற... மருதாணி செடியின் பூக்கள் நல்ல மணத்தைக் கொண்டது. நீங்கள் இரவு நேரத்தில் தூக்கம் வராமல் அவதிப்படுவீர்களா? அப்படியானால் மருதாணி செடியில் உள்ள பூக்களை பறித்து, அதை ஒரு துணியில் போட்டு கட்டி, அதை தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால், அதிலிருந்து வரும் மணம் மனதை ரிலாக்ஸ் அடையச் செய்து, நல்ல தூக்கத்தைப் பெற உதவும். ADVERTISEMENT வாஸ்து தோஷம் நீங்க.. உங்கள் வீட்டில் வாஸ்து தோஷம் இருந்தால், அந்த தோஷத்தைப் போக்கும் சக்தி மருதாணி செடிக்கு உள்ளது என்பது தெரியுமா? அதுவும் நீங்கள் வாடகை வீட்டில் இருந்து, அந்த வீட்டில் உள்ள வாஸ்து தோஷத்தை எளிதில் நீக்க நினைத்தால், ஒரு சிறிய தொட்டியில் மருதாணி செடியை வைத்து வளர்த்து வந்தால் வாஸ்து தோஷம் நீங்குவதோடு, வீடும் செல்வ செழிப்போடு இருக்கும். செய்யக்கூடாத தவறுகள் மருதாணி செடியை வீட்டில் வைத்திருப்பவர்கள், யாருக்காவது மருதாணி இலைகளைப் பறித்து கொடுப்பதாக இருந்தால், அதை இலவசமாக கொடுக்காதீர்கள். ஒரு ரூபாயாவது வாங்கிக் கொண்டு கொடுங்கள். மருதாணி செடியானது லட்சுமி தேவியாக கருதப்படுவதால், யாருக்கும் இலவசமாக கொடுக்காதீர்கள். அதேப் போல் மருதாணி செடியின் இலைகளை மாலை வேளையில் விளக்கு வைத்த பின் தானமாக கொடுக்க வேண்டாம். ஏன் காசு கொடுத்தால் கூட மருதாணி இலைகளை கொடுத்துவிடாதீர்கள். அப்படி கொடுத்தால், அது வீட்டில் உள்ள லட்சுமி தேவியை வீட்டில் இருந்து வெளியேற்றுவதற்கு சமம். எனவே இந்த தவறை செய்யாதீர்கள்.

Wednesday, 1 November 2023

ஊன் சோறு=பிரியாணி

இந்தியா பல படையெடுப்பாளர்களைக் கண்டுள்ளது; ஒவ்வொரு படையெடுப்பாளருடனும் வெவ்வேறு கலாச்சாரம் மற்றும் புதிய உணவு வகைகள் வந்தன. துருக்கியர்கள், அரேபியர்கள், பாரசீகர்கள் மற்றும் ஆப்கானியர்கள் போன்ற முஸ்லீம் படையெடுப்பாளர்கள் இந்தியாவிற்கு விருந்து கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தினர். 15 ஆம் நூற்றாண்டிலிருந்து 19 ஆம் நூற்றாண்டு வரை முகலாயர்களின் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட முகலாய உணவு வகைகள் இந்தியாவில் நாளடைவில் பிரபலமாகின. முகலாயர்கள் பிரியாணி, பிலாஃப் மற்றும் கபாப் போன்ற பல சமையல் வகைகளை இந்தியாவுக்கு அறிமுகம் செய்தனர்.

இந்தியாவின் பூர்வீக உணவாகத் தோன்றினாலும், உண்மையில் இந்த உணவு வெகு தொலைவில் உருவானது. பிரியாணி என்பது பாரசீக வார்த்தையான பிரியன் என்பதிலிருந்து பெறப்பட்டது, அதாவது 'சமைப்பதற்கு முன் வறுத்த' மற்றும் அரிசிக்கான பாரசீக வார்த்தையான பிரிஞ்ச். பிரியாணி இந்தியாவிற்கு எப்படி வந்தது என்பது பற்றி பல கோட்பாடுகள் இருந்தாலும், அது மேற்கு ஆசியாவில் தோன்றியது என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது
துர்க்-மங்கோலிய வெற்றியாளரான தைமூர், 1398 இல் இந்தியாவின் எல்லைக்கு வந்தபோது தன்னுடன் பிரியாணிக்கு முன்னோடியைக் கொண்டு வந்ததாக ஒரு புராணக்கதை கூறுகிறது. தைமூரின் இராணுவத்தின் போர் பிரச்சார உணவாக நம்பப்பட்டது, அரிசி நிறைந்த மண் பானை, மசாலாப் பொருட்கள் மற்றும் எந்த இறைச்சிகள் கிடைக்கின்றனவோ அவைகள் ஒரு சூடான குழியில் புதைக்கப்பட்டு, இறுதியில் தோண்டப்பட்டு போர்வீரர்களுக்கு பரிமாறப்படும்.
ADVERTISEMENT
மும்தாஜால் உருவாகியதா பிரியாணி
மும்தாஜ் ஒருமுறை ராணுவ முகாம்களுக்குச் சென்று பார்த்தபோது முகலாய வீரர்கள் பலவீனமாகவும், ஊட்டச்சத்து குறைவாகவும் காணப்பட்டதாக கூறப்படுகிறது. வீரர்களுக்கு சமச்சீரான ஊட்டச்சத்தை வழங்குவதற்காக இறைச்சியையும் அரிசியையும் சேர்த்து ஒரு சிறப்பு உணவை தயார் செய்யும்படி அவள் சமையல்காரரிடம் கேட்டார் எனவும் அதன் விளைவாக பிரியாணி உருவானது என்றும் கூறப்படுகிறது.
biryani
இந்தியர்கள் விரும்பி சாப்பிடும் பிரியாணி
ஒரு காலத்தில் ராயல்டிக்கான உணவாக இருந்த பிரியாணி, இன்று உள்ளூர் உணர்வுகள் மற்றும் மரபுகளைப் பிரதிபலிக்கிறது மற்றும் பிரபலமான மற்றும் பொதுவான உணவாக மாறிவிட்டது. இன்று இந்தியாவில் ஹைதராபாத் பிரியாணி, முகல் பிரியாணி, திண்டுக்கல் பிரியாணி, லக்னோ பிரியாணி, தலசேரி பிரியாணி, பெங்களூர் பிரியாணி, ஆம்பூர் பிரியாணி, கொல்கத்தா பிரியாணி, சிந்தி பிரியாணி என பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் தனித்துவமான சுவையில் நம்மை பிரமிக்க வைக்கின்றன.
ADVERTISEMENT
biryanichennai stores
சென்னையில் அட்டகாசமான பிரியாணி சாப்பிட நீங்கள் செல்ல வேண்டிய கடைகள்
1. சுக்குபாய் பிரியாணி, ஆலந்தூர் 2. யா மொய்தீன் பிரியாணி, பல்லாவரம் 3. பால்ம்ஷோர் ரெஸ்டாரண்ட், ராமாபுரம் 4. சார்மினார் பிரியாணி சென்டர், ராயப்பேட்டை 5. மலபார் பிரியாணி சென்டர், நெல்சன் மாணிக்கம் ரோடு 6. பிஸ்மி பிரியாணி, வள்ளுவர் கோட்டம் ரோடு 7. ஆம்பூர் ஸ்டார் பிரியாணி, குரோம்பேட்டை 8. ஹோட்டல் புஹாரி, வேளச்சேரி 9. ஜூனியர் குப்பண்ணா, பெருங்குடி 10. ஆசிப் பிரியாணி, கோயம்பேடு

Sunday, 29 October 2023

குறைந்த விலையில் விமான டிக்கெட் புக் செய்வது எப்படி!



குறைந்த விலையில் விமான டிக்கெட் புக் செய்வது எப்படி! செவ்வாய்க்கிழமை புக் செய்வது வேலைக்காகாது
விமானத்தில் டிக்கெட் புக் செய்யும் போது குறைந்த விலையில் எப்படி புக் செய்யலாம்.. அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.


இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளாகவே விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிகரிக்கும் போட்டி, வருமானம் அதிகரிப்பு என இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது.


விமானத்தில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நிலையில், அனைவருக்கும் குறைந்த விலையில் டிக்கெட் கிடைப்பதில்லை. ஆனால், குறைந்த விலை டிக்கெட் புக் செய்ய சில டிரிக்குகள் இருக்கவே செய்கிறது.. அது குறித்து நாம் பார்க்கலாம்.

விமான டிக்கெட்: விமான டிக்கெட் விலை எப்போதும் ஒரே ரேஞ்சில் இருக்காது. அவை தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கும். பொதுவாக செவ்வாய்க்கிழமைகளில் விமானங்களை புக் செய்தால் குறைந்த செலவில் பயணிக்க முடியும் என்பார்கள். மேலும், , நள்ளிரவு நேரத்தில் குறிப்பாகத் திங்கள்கிழமை இரவு புக் செய்தால் குறைவாக இருக்கும் என்பார்கள். ஆனால், இதில் பெரும்பாலும் உண்மை இல்லை என்கிறது ஹாப்பர் நிறுவனம்.

அது சரி அப்போது ஏன் செவ்வாய்க்கிழமைகளில் விமானம் டிக்கெட் ரேட் குறைவாக இருக்கும் என்று சொல்கிறார்கள் எனத் தெரியுமா.. இப்போது விமான நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் டிக்கெட்களை மெஷின் லேர்னிங் மூலமாகவே விற்பனை செய்கிறார்கள். அதாவது இத்தனை காலமாக டிக்கெட் விற்பனை மூலம் கிடைத்த டேட்டா அடிப்படையில் விமான நிறுவனங்கள் டிக்கெட்களை விற்கிறார்கள்.


என்ன காரணம்: இந்த டேட்டா மூலம் எந்த ரூட்டில், எப்போது தேவை அதிகமாக இருக்கும் என்பதை அவர்களால் ஓரளவுக்குத் துல்லியமாகக் கண்டறிய முடியும். மேலும், எத்தனை பேர் குறிப்பிட்ட ரூட்டில் விமான டிக்கெட்களை தேடுகிறார்கள். விமான பயணம் எப்போது என்று பல்வேறு விஷயங்களை வைத்தே இப்போது டிக்கெட் ரேட் நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆனால், இந்த மேஷின் லேர்னிங் உள்ளே வருவதற்கு முன்பு, விமான ஊழியர்கள் தான் டிக்கெட் விலையை செட் செய்வார்கள்.

வெள்ளிக்கிழமை டிக்கெட் ரேட்டை நிர்ணயம் செய்யும் அவர்கள், வார விடுமுறை முடிந்து திங்களன்று பணிக்குத் திரும்புவார்கள். அப்போது குறிப்பிட்ட ரூட்டில் டிக்கெட் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனையாகவில்லை என்றால் விலையைக் குறைப்பார்கள். அந்தக் கால செட்அப்பில் இதற்குக் கொஞ்ச நேரம் பிடிக்கும். இதன் காரணமாகவே திங்கள் நள்ளிரவு அல்லது செவ்வாய்க்கிழமைகளில் டிக்கெட் விலை குறைவாக இருக்கிறது.


நிலைமையே வேறு: ஆனால், மெஷின் லேர்னிங் வந்த பிறகு நிலைமையே வேறு.. இதனால் கடந்த 15 ஆண்டுகளாகச் செவ்வாய்க்கிழமைகளில் குறைந்த ரேட் என்பது இல்லாமல் போய்விட்டது. மெஷின் லேர்னிங் உள்ளே வந்த பிறகு டிக்கெட் விலையில் அடிக்கடி மாற்றம் கொண்டு வரப்படுகிறது. ஒரு ரூட்டில் இப்போது ஒரே வாரத்தில் 12க்கும் மேற்பட்ட முறை டிக்கெட் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. இதனால் செவ்வாய் அன்று புக் செய்தால் குறைந்த விலை என்பதில் உண்மையில்லை என்பது தெரிய வருகிறது. டிக்கெட் ரேட் எப்போது வேண்டுமானாலும் மாறும் என்பதே உண்மை.



அப்போ வேறு எப்படி தான் குறைந்த விலையில் டிக்கெட் புக் செய்யலாம் என கேட்கிறீர்களா.. அதற்கும் சில ஆப்ஷன் இருக்கவே செய்கிறது. செவ்வாய்க்கிழமை புக் செய்தால் குறைந்த விலை இல்லை என்றாலும், செவ்வாய்க்கிழமை நீங்கள் பயணத்தைத் திட்டமிட்டால் அப்போது குறைந்த விலையில் டிக்கெட் கிடைக்க வாய்ப்பு இருக்கவே செய்கிறது. செவ்வாய், புதன்கிழமைகளில் பயணித்தால் டிக்கெட் விலை 8 முதல் 15% வரை குறைவாகக் கிடைக்கும்.

பிரத்தியேக தளங்கள்: விமான நிறுவனங்கள் அடிக்கடி விமான ரேட்டை மாற்றும் நிலையில், அதைத் தெரிந்து கொள்ளவும் கூட தனியாக சில சைட்கள் இருக்கிறது. கூகுள் பிளைட்ஸ் உள்ளிட்ட சில தளங்களில் நீங்கள் எங்கிருந்து எங்கே செல்ல வேண்டும் என்பது போன்ற தரவுகளைப் பதிவிட வேண்டும்.


பயண தேதியில் சற்று தளர்வாக இருக்கலாம். அதாவது அடுத்த மாதம் 15ஆம் தேதி பயணிக்க வேண்டும் என்று இல்லாமல், 10 முதல் 15 வரை எப்போது வேண்டுமானாலும் பயணிக்கலாம் என்று பதிவிட்டுத் தேடுங்கள். அப்போது உங்களால் மிகக் குறைந்த ரேட்டில் விமான டிக்கெட் கிடைக்க வாய்ப்பிருக்கிறது


Sunday, 1 October 2023

அரைஞாண் கொடி.. இடுப்பை சுற்றி சின்ன கயிறு.. இதில் இத்தனை விசயம் இருக்கா?


அரைஞாண் கொடி அல்லது அரைஞாண் கயிரு அல்லது அரைஞாணம் என்பது சிறு குழந்தைகளின் இடுப்பில் கட்டப்பட்டிருக்கும் கவசம் போன்றது. குழந்தைகள் பிறந்து 5மாதம் வரைக்கும் பெற்றவர்கள் வீட்டில் இருக்கும் பெண்ணை உடல் நலமடையும் வரை வைத்திருக்கும் குழந்தைக்கும் தாய்க்கும் சத்தான ஆகாரங்களை கொடுப்பதோடு புகுந்த வீட்டிற்கு செல்லும் போது பிறந்த குழந்தைக்கு வெள்ளிக்கொலுசும் அரைஞாண் கொடியும் சீதனமாக போட்டு அனுப்புவார்கள்.


அந்த காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தான் கருப்பு கலரில் அரைஞாண் கயிறு கட்டுவது வழக்கம். அதிலும் சிலரோ வெள்ளி அல்லது தங்கத்தில் தங்கள் குழந்தைக்கு கட்டுவார்கள். சொல்லப்போனால் இந்த அரைஞாண் கயிறு தமிழ்நாட்டில் தான் அதிகம் கட்டுவது வழக்கம். பொதுவாகவே, பலர் அரைஞாண் கயிறை கடவுள் நம்பிக்கை, மத நம்பிக்கை காரணமாக சிலர் காட்டுவார்கள். இன்னும் சிலரோ, வீட்டில் பெரியவர்கள் சொல்லி காட்டுவார்கள்.

வயதில் பெரியவர்கள் உள்ள இல்லங்களில், அவர்கள் இன்றைக்கும் தங்களின் பேரக்குழந்தைகளுக்கும் பேத்திகளுக்கும் வெள்ளை எருக்கம் நார் - அரைஞாண் கயிறைக் கட்டி விடுவார்கள். அதற்குக் காரணம் கைக்குழந்தைகளுக்கு இதயத் துடிப்பானது கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். அதன் இதயத் துடிப்பை சீராக்க உதவுவது எது தெரியுமா? குழந்தையின் இடுப்பில் கட்டப்படும் அரைஞாண் கயிறு என்கிறார்கள் முன்னோர்கள். ஒரு சிலர் சாஸ்திரப்படி குழந்தை பிறந்த ஏழாம் நாளில் இடுப்பில் அரைஞாண் கயிரை அணிவிப்பார்கள்.

இடுப்புக்குஅருகில் மட்டுமே ரத்தக் குழாய்கள் மெலிதாக இருக்கும். அதேபோல் தோலின் மிக அருகில் செல்கின்றன. எனவே ஈரம் பட்டாலும் அறுபடாத பொருளான வெள்ளை எருக்கம் பூவின் நாரினை கயிறாகத் திரித்து, அதையே குழந்தைகளின் இடுப்பில் கட்டிவிடுவார்கள்.ஆனால், நம் முன்னோர்கள், அவ்வாறு கட்டுவது பேய், பிசாசு, காத்துக்கறுப்பு அண்டாமல் இருப்பதற்காக என்று கூறினர் முன்னோர்கள். சிலரோ கறுப்பு பாசியை கோர்த்த கயிறு கட்டுவார்கள். சிலரோ சிவப்பு நிற கயிறுடன் பாசி கோர்த்து இடுப்பில் கட்டுவார்கள்

"அரைஞாண் கயிறு".. அதென்ன இடுப்புல கருப்பா..உங்க கிட்ட "இது" ஒன்னு மட்டும் போதும்.. அதிசயத்தை பாருங்க
இடுப்பைச் சுற்றி ஆடை அணிபவர்கள் அரைஞாண் கயிறு அணிய வேண்டும் என்பது விதி. பெண்கள் பாவாடை அணிய நாடாவைப் பயன்படுத்திக்கொண்டு, இந்த விதியைப் பின்பற்றுகிறார்கள். ஆண்களுக்கு சிறுநீரகத்திலிருந்து வரக்கூடிய ரத்தக்குழாய்கள், விதைப்பையிலிருந்து வரக்கூடிய ரத்தக்குழாய்கள் ஒன்று சேரும் இடம் உடலின் அடிவயிற்றுப்பகுதிதான். அதைச் சுற்றியே அரைஞாண் கயிற்றைக் கட்டுவார்கள். அப்போது தான் மேல்வயிற்றுப் பகுதியிலுள்ள குடல் இறங்காமல் இருக்கும்.

ஒரு குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா? இல்லையா என்பதை அரைஞாண் கயிறு வைத்துதான் பெரியவர்கள் கண்டுபிடித்துள்ளனர். சில நேரங்களில் பாம்பு, விஷ பூச்சிகள் கடித்து விட்டால் அரைஞாண் கயிரை அறுத்து எடுத்து பாம்பு தீண்டிய இடத்தில் கட்டி விஷம் ஏறாமல் தடுப்பார்கள். தற்காப்புக்காக அரைஞாண் கயிறு பயன்படுத்தப்பட்டது.

அரைஞாண் கயிறு அணிவது பழைய காலத்து பழக்கம் என்று கருதினாலும் அதில் ஆன்மீக ரீதியாக பல நன்மைகள் இருக்கத்தான் செய்கிறது. சிறையில் கைதிகளுக்கு பாதுகாப்பு கருதி கைதிகளின் அரைஞாண் கயிறை இடுப்பில் இருந்து நீக்கவிடுகிறார்கள். அதே போல ஒருவர் இறந்த பிறகு இறுதிச் சடங்கின் போது அரைஞாண் கயிறு நீக்கப்படுகிறது.


காலில் கட்டும் கறுப்பு கயிறு..மறந்தும் கூட இந்த ராசிக்காரர்கள் கட்டக்கூடாது..எச்சரிக்கும் சாஸ்திரம்


 
காலில் கறுப்பு கயிறு கட்டுவது இன்றைக்கு இளைஞர்கள், இளம் பெண்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆகி வந்தாலும் பழங்காலத்தில் இருந்தே நமது முன்னோர்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. எந்த ராசிக்காரர்கள் கறுப்பு கயிறு கட்டலாம் எந்த ராசிக்காரர்கள் கறுப்பு கயிறு கட்டக்கூடாது என்று பார்க்கலாம்.


நம்முடைய வீட்டில் உள்ள பெரியவர்கள் சில அட்வைஸ்களை எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள் அதில் முக்கியமானது மத்தியான நேரத்தில் தனியாக எங்காவது வெளியில் செல்ல நேர்ந்தால் கறுப்பு மை பொட்டு வைக்க வேண்டும். கறுப்பு கயிறு கட்டினால் காத்து கறுப்பு அண்டாது என்று சொல்வார்கள

கழுத்திலோ, கைகளிலோ கறுப்பு கயிறு கட்டுவதை விட கால்களில் கறுப்பு கயிறு கட்டி விடுவார்கள். சிலருக்கு இடுப்பில் அரைஞாண் கயிறு கறுப்பில் கட்டி விடுவார்கள். அதெல்லாம் சாஸ்திர சம்பிரதாயத்திற்காக செய்யப்பட்டது. பெண்கள் கொலுசு, மெட்டி அணிவதை கட்டாயமாக்கினர் நம் முன்னோர்கள்.

குழந்தைகள் பிறந்து சில நாட்களிலேயே குழந்தைக்கும், தாய்க்கும் கருப்பு கயிறு கட்டப்படும். குழந்தைகளுக்கு கண் திருஷ்டி படாமல் இருக்க, அவர்கள் கன்னத்தில் கருப்பு புள்ளி அல்லது காலில் கருப்பு கயிறு கட்டுவதை வழக்கமாக்கினர். கறுப்பசாமி கோவில், காளியம்மன் கோவிலுக்கு சென்று பூசாரி கையால் மந்திரித்து கறுப்பு கயிறு கட்டினார்கள். இந்தக் கயிறு கட்டப்பட்ட கையிலோ, காலிலோ வேறு எந்த நிறக் கயிறும் கட்டக்கூடாது என்ற விதி உள்ளது

இன்றைக்கு இளைஞர்களும் இளம் பெண்களும் கால்களில் கறுப்பு கயிறு கட்டுவதை பேஷனாக செய்து வருகின்றனர். இந்த கறுப்பு கயிறு எல்லாம் கட்டலாமா? கறுப்பு கயிறு எல்லோருக்கும் நல்ல பலன்களைத் தருமா என்று பார்க்கலாம்.

பொதுவாகவே கறுப்பு கயிறு கட்டும்போது சனிபகவானை வேண்டிக்கொண்டு காலில் கருப்பு கயிறு கட்டினால் கண்திருஷ்டி படாது. ஜோதிட சாஸ்திரத்தின்படி காலில் கருப்பு கயிறு கட்டுவதன் மூலம் ராகு, கேது, சனி ஆகிய மூன்று கிரகங்களின் பலன்கள் கிடைக்கும். இந்த கிரகங்கள் வலிமை குறைந்து இருந்தால் அது வலிமையடையும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அஷ்டம சனி, ஏழரை சனி, அர்த்தாஷ்டம சனி காலங்களில் கறுப்பு கயிறு கட்டிக்கொள்வதன் மூலம் சனிபகவானால் ஏற்படும் சங்கடங்கள் நீங்கும்.

சனி பகவான் சன்னதியிலோ அல்லது சிவ ஆலயங்களுக்கோ சென்று சாமி கும்பிட்டு விட்டு சாமியின் பாதத்தில் கறுப்பு கயிறு வைத்து வழிபாடு செய்து இந்த கருப்பு கயிறு கட்டுவது நல்லது. சனிக்கிழமை அன்று வேண்டிக்கொண்டு கையில் கட்டினால் சனி பகவானின் ஆசிகள் கிடைக்கும்.

சனி பகவான் முதலில் ஒருவரின் கால்களை தான் பற்றுவார் எனவும் கூறப்படுகிறது. எனவே, காலில் கருப்பு கயிறு கட்டுவதன் மூலம், சனி தோஷம் நீங்கும். அத்துடன், ராகு, கேது பாதிப்புகள் ஏற்படாது என்பது நம்பிக்கை. கருப்பு கயிறு கட்டிய பிறகு சனி பகவானின் மந்திரத்தை 21 முறை உச்சரிக்க வேண்டும்.

கருப்பு கயிறு கட்டுவதற்கு முன், அதில் 9 முடிச்சுகள் போட வேண்டும். அதன் பிறகு அவர்கள் காலில் அணியலாம்.இந்த கருப்பு கயிறு பெண்கள் இடது காலிலும், ஆண்கள் வலது காலிலும் கட்டிக்கொண்டால் நன்மைகள் நடைபெறும்.


கடன் பிரச்சனை உள்ளவர்கள் நிதி நெருக்கடியில் உள்ளவர்கள் செவ்வாய்கிழமை சனி பகவானை வணங்கி காலில் கருப்பு கயிறு கட்டினால், பணப் பிரச்சனைகள் நீங்கி பணம் வரும் என்பது ஐதீகம். அவர்களுக்கு மட்டுமின்றி அவர்கள் வசிக்கும் வீட்டிலும் பணப் பற்றாக்குறை இருக்காது என்று கூறப்படுகிறது.

துலாம், மகரம், கும்பம், ராசியில் பிறந்தவர்கள் கறுப்பு கயிறு அணிவது நல்லது. இந்த ராசிகளில் பிறந்தவர்கள் எந்த சந்தேகமும் இல்லாமல் கருப்பு நிற ஆடைகள் மற்றும் கருப்பு கயிறுகளை அணியலாம். செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷம், விருச்சிகம் ராசிக்காரர்களும், சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரர்களும் கறுப்பு கயிறு அணிவதையோ கறுப்பு நிற உடை அணிவதையோ தவிர்ப்பது நல்லது.


உப்ப ஏன் அடுப்பு பக்கத்துல வைக்க கூடாது?


உலகில் அனைவரும் பாகுபாடு இன்றி பயன்படுத்தும் ஒரு பொருள்தான் உப்பு இது இல்லாத வீடே கிடையாது என்றால் மிகையாகாது. பொதுவாக தமிழர்களை பொருத்தவரையில் இது தெய்வமாக பார்க்கப்படுகின்றது.

உப்பு தொடர்பில் பல கருத்துக்கள் பல விதமாக இருந்தாலும் எமது முன்னோர்கள் உப்பு தொடர்பில் பயன்படுத்திய சில வழிமுறைகளில் ஒழிந்திருக்கும் நம்மில் பலரும் அறியாத அறிவியல் உண்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
நமது முன்னோர்கள் பொதுவாகவே உப்பை பீங்கான் பாத்திரத்தில் ஒளி உட்புகாத வகையில் வைக்க வேண்டும் மற்றும் உப்பை அடுப்புக்கு அருகில் வைக்கக் கூடாது என பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லி வைத்திருக்கின்றார்கள் இதற்கு என்ன காரணம்? இது குறித்து எப்போதாவது யோசித்தது உண்டா?
உப்பை களஞ்சியப்படுத்தும் பாத்திரம்... 
நமது முன்னோர்களைப் பற்றி சிந்திக்கும் போது வியப்பாக இருக்கிறது அறிவியல் வளர்ச்சியே இல்லாத காலகட்டத்தில் ஒவ்வொரு விடயத்தையும் அறிவியல் ரீதியாக துள்ளியமாக கணித்தவர்கள் இவர்கள் தான். உப்பை வெறுமனே சுவைக்காக மாத்திரம் பயன்படுத்துவது கிடையாது இதில் உடலுக்கு தேவையான அயோடின் காணப்படுகின

உலகில் அனைவரும் பாகுபாடு இன்றி பயன்படுத்தும் ஒரு பொருள்தான் உப்பு இது இல்லாத வீடே கிடையாது என்றால் மிகையாகாது. பொதுவாக தமிழர்களை பொருத்தவரையில் இது தெய்வமாக பார்க்கப்படுகின்றது.

உப்பு தொடர்பில் பல கருத்துக்கள் பல விதமாக இருந்தாலும் எமது முன்னோர்கள் உப்பு தொடர்பில் பயன்படுத்திய சில வழிமுறைகளில் ஒழிந்திருக்கும் நம்மில் பலரும் அறியாத அறிவியல் உண்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

உப்ப ஏன் அடுப்பு பக்கத்துல வைக்க கூடாது? தெரிஞ்சிக்கோங்க | Why Not Keep Salt Near The Stove

நமது முன்னோர்கள் பொதுவாகவே உப்பை பீங்கான் பாத்திரத்தில் ஒளி உட்புகாத வகையில் வைக்க வேண்டும் மற்றும் உப்பை அடுப்புக்கு அருகில் வைக்கக் கூடாது என பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லி வைத்திருக்கின்றார்கள் இதற்கு என்ன காரணம்? 


உப்பை களஞ்சியப்படுத்தும் பாத்திரம்... 

நமது முன்னோர்களைப் பற்றி சிந்திக்கும் போது வியப்பாக இருக்கிறது அறிவியல் வளர்ச்சியே இல்லாத காலகட்டத்தில் ஒவ்வொரு விடயத்தையும் அறிவியல் ரீதியாக துள்ளியமாக கணித்தவர்கள் இவர்கள் தான். உப்பை வெறுமனே சுவைக்காக மாத்திரம் பயன்படுத்துவது கிடையாது இதில் உடலுக்கு தேவையான அயோடின் காணப்படுகின்றது.

உப்ப ஏன் அடுப்பு பக்கத்துல வைக்க கூடாது? தெரிஞ்சிக்கோங்க | Why Not Keep Salt Near The Stove

இதற்காகவே உணவில் உப்பு அவசியமாகின்றது. இதன் சுவை காலப்போக்கில் எமக்கு இன்றியமையாததாக மாறிவிடுவதனால்

இதனை சுவைக்காக மாத்திரம் பயன்படுத்துவதாக நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். உப்பை பீங்கான் பாத்திரத்தில் ஒளி உட்செல்லாத வகையில் வைக்க காரணம் உப்பில் காணப்படும் அயோடின் ஒரு வேதிப்பொருள் இது உலோக பாத்திரங்களுடன் தாக்கம் புரியக்கூடியது எனவே இதனை வேறு உலோகத்துடன் தாக்கம் புரியாத வகையில் களஞ்சியப்படுத்த வேண்டும்

உப்பை களஞ்சியப்படுத்தும் பாத்திரம் ஒளி உட்புகாத வகையில் இருக்க வேண்டும் என்பதற்கு காரணம் சூரிய வெப்பத்தில் அயோடின் அழிவடையக்கூடியது என்பதனால் தான்.


உப்பு பாத்திரத்தை அடுப்பின் அருகில் வைக்க கூடாது என குறிப்பிட்டமைக்கும் இதுவே காரணம் அயோடின் வெப்பத்தில் அழிவடையக்கூடியது உப்பில் அயோடின் அழிவடைந்த பின்னர் உணவில் சேர்ப்பது பிரையோசணம் அற்றது

சமையலின் போதும் கூட உப்பை உணவு ஆறிய பின்னரே சேர்க்க வேண்டும் என்பது நம்மில் பலரும் அறியாத உண்மை வெப்பம் தணிந்த பின்னர் உப்பை சேர்க்கும் போது மட்டுமே உப்பு சேர்பதன் உண்மையான பலன் கிடைக்கிறது. 

Thursday, 28 September 2023

திருப்பதியில் உள்ள 7 மலைகள்



Tirupati Temple: திருப்பதியில் உள்ள 7 மலைகளும் அதன் சிறப்புகளும் என்னென்ன தெரியுமா?

பல ஆண்டுகளுக்கு முன்னர் திருமலைக்கு சென்று தரிசனம் செய்ய 7 மலைப்பாதைகளை பக்தர்கள் பயன்படுத்தியுள்ளனர். அவற்றின் வரலாற்று சிறப்புகள் பற்றி பார்ப்போம்.
விருஷாத்ரி மலை: விருஷன் என்னும் அரசன் மோட்சத்தை அடைய இம்மலைக்கு வந்து தவம் செய்தார். அவனது பெயரில் இம்மலை 'விருஷாத்ரி' எனப் பெயர் பெற்றது.
(1 / 7)
விருஷாத்ரி மலை: விருஷன் என்னும் அரசன் மோட்சத்தை அடைய இம்மலைக்கு வந்து தவம் செய்தார். அவனது பெயரில் இம்மலை 'விருஷாத்ரி' எனப் பெயர் பெற்றது.

விருஷபாத்ரி மலை: விருஷபன் என்ற அசுரன் பெருமாளுடன் சண்டையிட்டான். இறுதியில் தன் தவறை உணர்ந்து இதற்கு பரிகாரமாக பக்தர்களின் பாதம் படும் இடத்துக்குத் தன் பெயரை வைக்கும்படி வேண்டினான். அதன்படி, அவனது பெயரில் இது ‘விருஷபாத்ரி மலை’ எனப் பெயர் பெற்றது.
(2 / 7)
விருஷபாத்ரி மலை: விருஷபன் என்ற அசுரன் பெருமாளுடன் சண்டையிட்டான். இறுதியில் தன் தவறை உணர்ந்து இதற்கு பரிகாரமாக பக்தர்களின் பாதம் படும் இடத்துக்குத் தன் பெயரை வைக்கும்படி வேண்டினான். அதன்படி, அவனது பெயரில் இது ‘விருஷபாத்ரி மலை’ எனப் பெயர் பெற்றது.


கருடாத்ரி: கருடாழ்வார் தன் பாவத்தை போக்க இங்கு தவம் செய்தார். அதனால் இது 'கருடாத்ரி மலை' எனப் பெயர் பெற்றது.
(3 / 7)
கருடாத்ரி: கருடாழ்வார் தன் பாவத்தை போக்க இங்கு தவம் செய்தார். அதனால் இது 'கருடாத்ரி மலை' எனப் பெயர் பெற்றது.

அஞ்சனாத்ரி: குழந்தை பாக்கியம் கிடைக்க ஆதிவராகரை வேண்டி அஞ்சனாதேவி தவம் செய்த மலை. அந்தக் குழந்தைதான் ஆஞ்சநேயர். இவளது பெயரில் ஏற்பட்ட மலை 'அஞ்சனாத்ரி மலை' எனப்படுகிறது.
(4 / 7)
அஞ்சனாத்ரி: குழந்தை பாக்கியம் கிடைக்க ஆதிவராகரை வேண்டி அஞ்சனாதேவி தவம் செய்த மலை. அந்தக் குழந்தைதான் ஆஞ்சநேயர். இவளது பெயரில் ஏற்பட்ட மலை 'அஞ்சனாத்ரி மலை' எனப்படுகிறது.

நாராயணாத்ரி மலை: பூலோகத்தில் பெருமாள் தங்குவதற்காக நாராயண மகரிஷியால் அடையாளம் காட்டப்பட்ட மலை இது.
(5 / 7)
நாராயணாத்ரி மலை: பூலோகத்தில் பெருமாள் தங்குவதற்காக நாராயண மகரிஷியால் அடையாளம் காட்டப்பட்ட மலை இது.


வேங்கடாத்ரி மலை: வேம் + கடம் = வேங்கடம். வேம் - பாவம், கடம் - எரிபடுதல். அதாவது இந்த மலையில் நமது பாதங்கள் பட்டதும் பாவங்கள் எரிந்து சாம்பலாகிவிடும் என்பது பொருள். பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இதற்கு 'வேங்கடாத்ரி மலை' என்று பெயர். இம்மலையில் வெங்கடாசலபதியாக (ஸ்ரீனிவாசன்) மகாவிஷ்ணு கோலத்தில் காட்சி தருகிறார்.
(6 / 7)
வேங்கடாத்ரி மலை: வேம் + கடம் = வேங்கடம். வேம் - பாவம், கடம் - எரிபடுதல். அதாவது இந்த மலையில் நமது பாதங்கள் பட்டதும் பாவங்கள் எரிந்து சாம்பலாகிவிடும் என்பது பொருள். பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இதற்கு 'வேங்கடாத்ரி மலை' என்று பெயர். இம்மலையில் வெங்கடாசலபதியாக (ஸ்ரீனிவாசன்) மகாவிஷ்ணு கோலத்தில் காட்சி தருகிறார்.

சேஷாத்ரி மலை: மஹாவிஷ்ணு பாற்கடலில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டுள்ளார். அதைப்போலவே இங்கும் ஆதிசேஷனே மலையாக இருக்கிறார். அதன் மீது வெங்கடேசப் பெருமாள் காட்சி தருகிறார். ஆதிசேஷன் அமைந்ததால் அந்த மலைக்கு பெயர் 'சேஷாத்ரி மலை' என்று அழைக்கப்படுகிறது.
(7 / 7)
சேஷாத்ரி மலை: மஹாவிஷ்ணு பாற்கடலில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டுள்ளார். அதைப்போலவே இங்கும் ஆதிசேஷனே மலையாக இருக்கிறார். அதன் மீது வெங்கடேசப் பெருமாள் காட்சி தருகிறார். ஆதிசேஷன் அமைந்ததால் அந்த மலைக்கு பெயர் 'சேஷாத்ரி மலை' என்று அழைக்கப்படுகிறது.


Friday, 1 September 2023

மேல்,கீழ்,சம நோக்கு நாள்

திருவாதிரை, அவிட்டம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் மேல் நட்சத்திரங்களாகும். இந்த நட்சத்திரங்களை கொண்ட நாட்களே மேல் நோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நாட்களில் மேல்நோக்கி செய்யும் வேலைகளை தொடங்குவது சிறந்தது.
கீழ்நோக்கு நாள்:
கிருத்திகை, பரணி, பூரம் ஆயில்யம், விசாகம், மகம், மூலம், பூராடம், பூரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் கீழ்நோக்கு நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்களை கொண்ட நாட்களே கீழ்நோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நாட்களில் கீழ்நோக்கி செய்யும் வேலைகளை தொடங்குவது சிறந்தது.
சம நோக்கு நாள்:
அஸ்தம், அஸ்வினி, அனுஷம், மிருக சீரிஷம், சுவாதி, புனர்பூசம், சித்திரை, கேட்டை, ரேவதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் சமநோக்கு நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்களை கொண்ட நாட்களே சமநோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நாட்களில் ஓரளவிற்கு சமமாக செய்யும் வேலைகளை தொடங்குவது சிறந்தது.