இறந்தவர்கள் உடலை எரித்தாலும் இந்த ஒரு பாகம் மட்டும் அழியாதாம் - அது எந்த உறுப்பு தெரியுமா? பஞ்சபூதங்களில் ஒன்றான நெருப்பானது பேரழிவவை ஏற்படுத்தக்கூடியது என்பதை நாம் நன்கு அறிவோம். நெருப்பு எப்படி அழிவை ஏற்படுத்தும் சக்தியாக கருதப்படுகிறதோ அதேசமயத்தில் அனைத்து மதங்களிலும் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. அதனால்தான் இறந்த உடல்கள் நெருப்பில் எரிக்கப்படுகின்றன. மனித உடல் என்பது நடமாடும் அதிசயமாகும், இறந்த உடல்கள் நெருப்பில் முழுமையாக எரிக்கப்பட்டாலும் மனித உடலின் ஒரு பாகம் மட்டும் எப்போதும் அழியாது. உடல் தகனத்தின்போதும் பெரிதும் பாதிக்கப்படாமல் இருக்கும் உடலின் ஒரு பகுதி உள்ளது. உயர் வெப்பநிலையில் ஒட்டுமொத்த உடலும் சாம்பலாக மாறினாலும் ஒரு பாகம் மட்டும் பாதிக்கப்படாது. ஆச்சரியமளிக்கும் விதமாக இதைப்பற்றி நம்மில் பலருக்கும் தெரியாது. Also Read 22 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் அதிசய முலாம்பழம் - இந்த பழத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? உடலின் அழியாத பாகம் எது? எவ்வளவு வெப்பத்திலும் உடலின் அழியாத பாகம் மனிதர்களின் பற்கள்தான். கடும் வெப்பம் நிலவினாலும், மனிதப் பற்கள் முழுமையாக எரிந்துபோவதில்லை. அதற்குக் காரணம் கால்சியம் பாஸ்பேட் எனும் வேதிப்பொருளால் பற்கள் உருவாக்கப்பட்டதே ஆகும். ஏனெனில், இப்பொருள் எளிதில் சாம்பலாக மாறுவதில்லை. நெருப்பில் பற்களின் உறுதித்தன்மை உடல் எரிக்கப்படும் போது, உடலின் மென்மையான திசுக்களே முதலில் எரிகின்றன. ஆனால், பற்கள் ஒரு தனித்துவமான அமைப்பைக் கொண்டுள்ளன. பற்களின் மென்மையான திசுக்கள் ஆரம்பத்தில் எரிந்துவிட்டாலும், மிகக் கடினமான திசுவான 'எனாமல்' மட்டும் அழியாமல் எஞ்சியிருக்கும். பற்களில் உள்ள கால்சியம் பாஸ்பேட் சத்து காரணமாகவே பற்கள் இத்தகைய குறிப்பிடத்தக்க உறுதித்தன்மையைக் கொண்டுள்ளன. குறைந்த வெப்பநிலையில் மற்ற எலும்புகளும் எரியாமல் இருக்கலாம் என்றாலும், பற்கள் அவற்றின் அதீத நீடித்து உழைக்கும் தன்மையால் தனித்து நிற்கின்றன.
இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? எப்போது பற்கள் அழியக்கூடும்? எலும்புகளை முழுமையாக எரிப்பதற்கு மிக அதிக வெப்பநிலை தேவைப்படுகிறது. எலும்புகளை முழுமையாகச் சாம்பலாக்க 1292 டிகிரி ஃபாரன்ஹீட் கிட்டதட்ட 700 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அவசியமாகும். இவ்வளவு அதிக வெப்பநிலையிலும் கூட, கால்சியம் பாஸ்பேட் முழுமையாகச் சாம்பலாக மாறுவதில்லை. இதனால்தான் பற்களும் சில எலும்புத் துண்டுகளும் பெரும்பாலும் எஞ்சியிருக்கின்றன. நகங்களும் தகனத்தின் போது எரியாமல் இருக்கின்றன என்று கூறப்பட்டாலும், இது அறிவியல் பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. எலும்புகள் எரிவதில் உள்ள வேறுபாடுகள் ஆய்வுகளின் படி, உடல் எலும்புக்கூடு சீராக எரிவதில்லை. உடலில் கொழுப்பு அமைந்துள்ள விதம் மற்றும் வெப்ப மூலம் போன்றவை, வெவ்வேறு எலும்புகள் எரியும் விதத்தைப் பாதிக்கின்றன. உடலின் மையப்பகுதியில் அதிகளவு கொழுப்பு குவிந்திருப்பதால் அங்குள்ள எலும்புகள் தீவிரமாக எரிகின்றன; ஆனால், கைகள் மற்றும் கால்களில் உள்ள புறப்பகுதி எலும்புகள் ஒப்பிட்டளவில் குறைந்த தீவிரத்துடனேயே எரிகின்றன. ஒவ்வொரு எலும்பும் எந்த வெப்பநிலையில் எரியும்? தகனத்தின்போது உடலில் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். 670 முதல் 810 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையில், உடல் 10 நிமிடங்களுக்குள் உருகத் தொடங்குகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. அடுத்த 20 நிமிடங்களில், மண்டை ஓட்டின் முன்புற எலும்பின் மீதுள்ள மென்மையான திசுக்கள் உருகத் தொடங்குகின்றன. இக்காலகட்டத்திற்குள், மண்டை ஓட்டு அறையின் மெல்லிய வெளிச்சுவரான 'டபுலா எக்ஸ்டர்னா'வில் ( விரிசல்கள் தோன்றுகின்றன. 30 நிமிடங்களுக்குள் தோல் முழுவதும் எரிந்து, அதற்குக் கீழே உள்ள உடல் பாகங்கள் எரியத் தொடங்குகின்றன. முழுமையான உடல் தகனமடைவதற்கு சுமார் 2 முதல் 3 மணிநேரம் வரை ஆகிறது.
Sun. 26, Jul, 2026 at 2.17 pm.
ReplyDelete*Human Anatomy & physiology*
*திசுக்கள் :*
இன்று திசுக்கள் பற்றி சற்று பார்ப்போமா..!*
முதலாவதாக திசுக்கள் என்றால் என்ன என்பது பற்றி பார்ப்போம்..:
*செல்களின் அமைப்பிலும், அவை இயற்றும் செயல்களிலும் ஒன்றுபோல் அமைந்துள்ள செல் தொகுதிக்குத் *திசு* என்று பெயர்.
அடுத்து செல் என்றால் என்ன? இக்கேள்வி எழும்புகிறது அல்லவா?
அப்போ *செல் என்பது - மனிதன் உட்பட எல்லா உயிரினங்களும், கோடிக்கணக்கான நுண்ணணுக்களால் பிணைக்கப்பட்டு இயங்குகின்றன. *உயிர்களின் நுண் அணுவிற்கு செல்* என்று பெயர்.
எனவே... தாவரங்களும், பிராணிகளும், நுண்ணிய செல்களால் ஆனவை என்று முதன் முதலாகக் கண்டறிந்து உலகுக்கு எடுத்துக் கூறியவர் *ராபர்ட்ஹுக்* என்ற ஆங்கில விஞ்ஞானியாவார் *(1665).*
தாவரங்களும், பிராணிகளும் பல்வேறு திசுக்களைப் பெற்றுள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்கிறது.
ஒவ்வொரு திசுவிலுள்ள செல்களும், அவற்றைச் சுற்றிலும் *மாட்ரிக்ஸ்* என்ற செல் இடைவெளிப் பொருளை(Inter - Cellular Substance) உண்டு பண்ணுகின்றன.
இந்த திசுக்கள் தாம் தம் வேலைகளை ஒழுங்காகச் செய்வதற்கு உதவுகின்றன.
*திசுக்கள் 4 - பிரிவுகளாக உள்ளன.*
*1.எப்பித்தீலியல் திசு
*2.இணைப்புத் திசு
3.தசைத் திசு
4.நரம்புத் திசு
என்பன.
1) *எப்பித்தீலியல் திசு* பல பிரிவுகளாக உள்ளன. அவை : *1.தட்டைத் திசு 2. கூம்புத் திசு 3.சிலியேட் திசு 4.சுரப்பித் திசு 5. தூண் திசு* என பிரிக்கலாம்
2) *இணைப்புத் திசு - 1.வலைத் திசு 2.நார்த் திசு 3.கொழுப்புத் திசு 4.குருத்தெலும்பு திசு 5.எலும்புத் திசு* என பிரிக்கலாம்.
3) *தசைத் திசு - 1.வரியுடைய தசை 2.வரியற்ற தசை 3.இருதயத் தசை*
என பிரிக்கலாம்.
*நரம்புத் திசுவை மற்றொரு பதிவில் விரிவாகப் பார்க்கலாம்..!*
1.) A*எப்பித்தீலியல் திசு ( Epithelial tissuses) :*
எப்பித்தீலியல் திசுக்களால் ஆனவை. உடலின் மேல்தோல், உணவுக்குழாயின் உடபுறம் ஆகியவை அடித்தள சவ்வின் மேல், எப்பித்தீலியல் செல்கள் ஒட்டிக்கொண்டு இருக்கின்றன.
இந்த அமைப்பின் காரணமாக, எப்பித்தீலியல் திசுவை பல உட்பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது.
*b. தட்டைத் திசுக்கள்:* தட்டைத் தசுக்கள் தட்டையாக இருக்கும். *புறத்தோலிலும், முதுகெலும்பிலும் ( Vertebrae ), வாயிலும், தொண்டையிலும், இரத்தக் குழாய்களின் உட்புறமும்* உள்ளன. எதுபோன்று என்றால் *தரையின் மேல் போடப்படும் ஓள ஓடுகள் போல்* அமைந்துள்ளது.
C. *கூம்புத் திசு (Cyboidal tissues):*
இத்திசுக்கள்... *உமிழ் நீர்ச் சுரப்பிகள், சிறுநீர்க் குழாய்கள், மற்றும் தைராய்டு சுரப்பிகள் போன்ற உறுப்புகளில் உள்ளன. இது தட்டைத் திசுக்கள் போலவும், சற்றுக் கூம்பியும் உள்ளன.
d. *சிலியேடட் திசுக்கள் ( Cilliated tissues)* :
இத் திசுவின் மேல் பகுதியில் *உரோமம் போன்ற நுண்ணிழைகள் (Cilia) அசைந்துகொண்டே இருக்கும்.*
இவ்வகையான திசுக்கள்.. *இனச்செல் நாளங்களிலும், சுவாச உறுப்புகளின் பாகங்களான மூச்சுக்குழல், சுவாசக் குழாய் மற்றும் கிளை மூச்சுக்குழல்* போன்ற இடங்களிலும் காணப்படுகிறது.
*e. சுரப்பித் திசுக்கள் (Glandular tissues)*
சுரப்பித் திசுக்கள்... ஓர் அடுக்குச் செல் (or) பல அடுக்குச் செல் திசுக்களால் ஆனது. *
*எல்லா சுரப்பிகளும் இவ்வகைத் திசுவைச் சார்ந்தவை ஆகும்.*
*இச்சுரப்பிகளானது... "கோழைத் திரவம் (அ) நீர் போன்ற திரவத்தைச் சுரக்கின்றன.
*f. தூண் திசுக்கள்(Colummar tissues):*
இதன் அமைப்பு... *செல்கள் நீண்டும், அடுத்தடுத்து அடுக்காகவும்* காணப்படுகிறது.
*இரைப்பையின் உள்ளடுக்கு, சிறுகுடல் இவைகளில் இத்திசுக்கள் காணப்படுகிறது.
மீண்டும் தொடரலாம்
Jansikannan40@gmail.com
அய்யா வெ. சாமி அவர்களுக்கு நமஸ்காரம். மீண்டும் பதிவைத் தொடர்கிறேன் அய்யா.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteFri. 31, July 2026 at 4.42 pm.
ReplyDelete*கொங்கு நாட்டின் மலைகள் :*
1.கொல்லி மலை
2. வைகைப் பொன் மலை
3. அலைவாய் மலை
4. பழநி மலை
5. பொன்னூதி மலை
6. கொங்கணவர் மலை
7. சேர்வராயன் மலை
8. ஓதியூர் மலை
9. வராக மலை
10. தலைமலை
11. வெண்ணெய் மலை
12. சென்னி மலை
13. கஞ்ச மலை
14. வெள்ளி மலை
15. நாககிரி மலை
16. ஆனை மலை (கொடிகள் அதிகம் நிறைந்தது)
ஆகிய மலைகள் சூழ்ந்துள்ளது கொங்கு மண்டலம் ஆகும்.
Jansikannan40@gmail.com
Fri. 31, July, 2016 at 4.53 pm.
ReplyDelete*கொங்கு மண்டல நதிகள் :*
1. திருமணிமுத்தாறு
2. தொப்பை ஆறு
3. காவிரி ஆறு (புகழ் பெற்றது)
4. பவானி ஆறு
5. செய்யாறு
6. நொய்யலாறு
7. ஆன்பொருநை
8. நள்ளாறு (இவற்றோடு)
9. சண்முக நதி
10. பாலையாறு
11. வாழையாறு
12. பாரத்துவாச நதி
13. குடவன் ஆறு
14. சண்பக ஆறு
15. சிற்றாறு
ஆகிய இவ் ஆறுகள் அனைத்தும் சூழ்ந்துள்ளது கொங்கு மண்டலம் ஆகும்.
Jansikannan40@gmail.com
Fri. 31, July, 2026, at 5.09 pm.
ReplyDelete*கொங்கு மண்டல அற்புதங்கள் :*
1* யானை உயிர் பெற்ற அற்புதம் :*
எறிபத்தர் - கருவூர் பசுபதி கடவுளுக்கு மாலை கட்டிப் போடும் 'சிவகாமி ஆண்டவன்' என்பாரின் பூக்கூடையைப் பிடுங்கி எறிந்ததற்காக மதம் கொண்ட யானையைக் கொன்றார். *கடவுள் அருளால் அந்த யானை மீண்டும் உயிர் பெற்றது.*
2. *வேலன் (முருகர்) மேய்ப்போனாக வந்த அற்புதம் :*
ஒருசமயம்... இது புகழ்மிக்க நாகமலை எனில்... அந்நாகம் படம் விரித்து ஆடாதது ஏன்? என அகங்காரம் கொண்டு கேட்ட புலவன் திடுக்கிடும்படி...*ஆடு மேய்க்கும் இடையனாகத் தோன்றிய முருகக் கடவுள் - நாகம் ஆடினால் முருகனின் வாகனமாகிய மயில்கள் அதனைக் கொத்திவிடும்* என விடையளித்தார்.
3. *பயறு மிளகான அற்புதம் :
ஒரு செட்டியானவன் தனது தொழிலில் ஏற்பட்ட சோர்வினால், சிவபெருமானுக்கு வெறுப்பாக எண்ண முடியாத மிளகுதனை பயறு என பொய் கூறவும்.. அவ்வாறே அம்மிளகுகள் அனைத்துமே பயிறானது. செட்டியார் உண்மையை அறிந்து வேண்ட .....பயறுகள் அனைத்தும் முன்போலவே மிளகானது.
4. *முட்டை என்னும் முருகவேள் பாடிய அற்புதம். :*
பொய்யாமொழிப் புலவரிடம் முட்டை என்பது என் பெயர். உடன்போக்குத் துறையில் ஒரு பாடல் கூறுக என முருகவேள் கேட்கவும், புலவரும் ஒரு வெண்பாவைக் கூற, அது அழகில்லை எனக்கூறிய முருகவேள் *விழுந்துளி* எனும் அழகிய பாடலைப் பாடினார்.
5. *நந்தீஸ்வர் உயிர் பெற்ற அற்புதம் :*
ஒருசமயம் "சிவப்பிரகாசரை" அறிவற்ற பொல்லாதவர்கள் சிலர் அவரை பழித்துப் பேசினர். எனவே, அவர்கள் பார்த்திருக்க... *வில்லார் பொதுச் சபையின் வித்தகா* எனச் சிவபிரகாசர் பாடினார். உடனே கல்லாலான நந்தீஸ்வரர் எழுந்து வைத்திருந்த கடலையை தின்றுவிட்டு... முன்போலானது.
இவ்வாறு வளமிக்க கொங்குமண்டலத்தில் அழகிய தலங்களும், கல்வியில் சிறந்தோரும், சிறப்பான அரசர்களும், வள்ளல்களும், வீரம் மிகுந்த படை வீரரும், சித்தர்களும், மருத்துவர்களும் அமைந்திருந்தன.
Jansikannan40@gmail.com
Fri. 31, July, 2026 at 10.41 pm
ReplyDelete*சூரியன் அஷ்டவர்க்க பரல் 48 க்கு விபரம் :*
1. சூரியன் : 1,2,4,7,8,9,10,11 = 8
2. சந்திரன் : 3, 6, 10, 11 = 4
3. செவ்வாய் : 1,2,4,7,8,9,10,11= 8
4. புதன் : 3,5,6,9,10,11,12 = 7
5. குரு : 5, 6, 9, 11 = 4
6. சுக்கிரன் : 6, 7, 12 = 3
7. சனி : 1,2,4,7,8,9,10,11 = 8
8. லக்கணம் : 3,4,6,10,11,12 = 6
______
மொத்தம் = 48
_________
ஆக மொத்த பரல் = 48.
Jansikannan40@gmail.com
Fri. 31, July, 2026 at 10.42 pm.
ReplyDelete1) ஏகாதி பத்திய வீடுகள் என்றால் என்ன?
மேஷ விருச்சிகமும், ரிஷப துலாமும், மிதுன கன்னியும், தனுஷ் மீனமும், மகர குடும்பமும் ஆகிய ஜோடி வீடுகள் ஏகாபத்திய வீடுகள் எனப்படும்.
*******
2) ஏகாதிபத்திய சோதனை என்றால் என்ன? எவ்வாறு காண வேண்டும் ?
*இரண்டு வீடுகளிலும் பிந்துக்கள் இருந்தால் தான் சோதிக்க வேண்டும்.
* இரண்டு வீடுகளிலும் கிரகங்கள் இருந்தால் எப்பொழுதும் சோதனை தேவையில்லை.
*கிரகம் இருக்கும் ராசியில் பரல்கள் அதிகமாகவும், கிரகம் இல்லாத ராசியில் பரல்கள் குறைவாகவும் இருந்தால் அவை யாவற்றையும் எடுத்து விட வேண்டும்.
*கிரகம் உள்ள ராசியிலும் அது இல்லாத ராசியில் உள்ள பிந்து சமமாக இருந்தால் கிரகம் இல்லாத ராசியில் உள்ள எல்லாப் பிந்துக்களையும் எடுத்து விடவும்
* கிரகம் இருக்கும் ராசியில் பிந்துக்கள் குறைவாகவும் இது இல்லாத ராசியில் பிந்துக்கள் அதிகமாகவும் இருந்தால் கிரகம் இல்லாத ராசியின் பிந்துக்களை சரி செய்து கொள்ள வேண்டும்.
* இரண்டு வீடுகளிலும் கிரகங்கள் இல்லாது இருந்து பிந்துக்கள் சமமாக இருந்தால் எல்லாவற்றையும் எடுத்து விட வேண்டும்.
* சோதிக்கப்பெற்று மிகுந்த பரல்களை அந்தந்த ராசி சங்கியையிலும், அந்தந்த கிரகங்களின் சங்கியைகளிலும் பெருக்க வேண்டும்.
* குறிப்பு : கிரகம் இருந்த ராசி என்று பேசும்போது, ராகு கேதுவை நீக்கி மற்றக் கிரகங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* எப்போதுமே திரிகோண சோதனை செய்த பின்னரே ஏகாதி பத்திய சோதனை செய்ய வேண்டும்.
* இவ்வாறு மேற்கண்ட விதியின்படி சரி செய்தால் இது ஏகாதிபத்திய சோதனை எனப்படும்.
Jansikannan40@gmail.com.
*Fri. 31, July, 2026 at 4.35 pm.
ReplyDelete*கொங்கு மண்டலம் :*
*கொங்கு மலிந்தால் எங்கும் மலியும்* இது பழமொழி.
*கொங்கு மண்டலம் - 24 நாடுகளைக் கொண்டது.
1. பூந்துறை நாடு
2. தென்கரை நாடு
3. காங்கேய நாடு
4. பொன்கலூர் நாடு
5. ஆறை நாடு
6. வாரக்கனாடு
7. திருவாவினன்குடி நாடு
8. மணனாடு
9. தலையனாடு
10. தட்டயனாடு
11. பூவாணிய நாடு
12. அரையனாடு
13. ஒருவங்க நாடு
14. வடகரை நாடு
15. கிழங்கு நாடு
16. நல்லுருக்க நாடு
17. வாழவந்தி நாடு
18. அண்டநாடு
19. வெங்கால நாடு
20. காவடிக்கனாடு
21. ஆனைமலை நாடு
22. இராசிபர நாடு
23. காஞ்சிக்கோயினாடு
24. குறுப்பு நாடு
*மேலும் இணை நாடுகள் :*
1. பருத்திப்பள்ளி நாடு
2. ஏழூர் நாடு
3. விமலை நாடு
4. தூசூர் நாடு
5. சேல நாடு
6. இடைப்பிச்சனாடு
என்பன.
*Jansikannan40@gmail.com*
நமஸ்காரம் அய்யா வெ. சாமி அவர்களுக்கு
ReplyDelete