jaga flash news

Saturday 10 May 2014

பிரம்ம விவாகம்,தெய்வ விவாகம்,அர்ஷ விவாகம்,ப்ரஜபத்ய விவாகம்,அசூர் விவாகம்,கந்தர்வ விவாகம்,ரக்ஷாஸ் விவாகம்

பிரம்ம விவாகம்
 எட்டு வகையான திருமணங்களில் இதுவே உச்ச உயர்வான திருமண வகையாக விளங்குகிறது. இந்த வகையான திருமணத்தில், தங்கள் மணமகனின் குடும்பம், தங்கள் மகனுக்கு தகுந்த பெண்ணை தேடுவார்கள். அதன் பின், மணமகளின் தந்தை தகுந்த மணமகனை வீட்டிற்கு அழைப்பார். தனக்கு வரப்போகும் மருமகன் நன்கு படித்து, நல்ல பழக்க வழக்கங்களுடன் இருப்பவரா என்பதை உறுதி செய்த பிறகு, தன மகளை அவருக்கு மணம் முடித்து வைப்பார்.


தெய்வ விவாகம்
 இது ஒரு தாழ்ந்த திருமண வகையாகும். மணமகளின் குடும்பம் தங்கள் பெண்ணுக்கு திருமணம் ஆவதற்கு குறிப்பிட்ட காலம் வரை காத்திருப்பார்கள். அந்த நேரத்திற்குள் அவளுக்கு தனக்குகந்த மணமகன் அமையவில்லை என்றால் தியாகமாக கருதி அவளை சமயகுருவிற்கு மணம் முடித்து வைப்பார்கள்.

அர்ஷ விவாகம் 
இந்த வகையான திருமணத்தில், பெண்ணை முனிவர்களுக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்கள். இரண்டு மாடுகளை வாங்கிக் கொண்டு பெண்ணை மணம் முடித்து விடுவார்கள். இந்த வகையான திருமணத்தில் வணிக பரிமாற்றம் இருப்பதால், இதனை ஒரு உயர்ந்த வகை திருமணமாக கருதுவதில்லை.


ப்ரஜபத்ய விவாகம் 
இந்த வகையான திருமணத்தில், தன் பெண்ணுக்கு தகுந்த பையனை தேடி பெண்ணின் தந்தை செல்வார். பையனை தேடி பெண்ணின் தந்தை செல்வதால், இதுவும் கூட ஒரு வகையில் தாழ்த்தப்பட்ட திருமண வகையாகும்.



அசூர் விவாகம் 
இந்த வகையான திருமணத்தில், மணமகனிடம் இருந்து பரிசுகளையும் பணத்தையும் பெற்றுக் கொள்ளும் பெண்ணின் குடும்பம். இந்த காரணத்தினால், பல நேரங்களில் பெண்ணுக்கு தகுந்த மணமகன் அமைவதில்லை. பெண்ணின் குடும்பம் பணம் பெறுவதால், பொருத்தமில்லாத பையனை திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தப்படுவாள்.



கந்தர்வ விவாகம்
 நாகரீக காலத்தில் இதனை காதல் திருமணம் என்று அழைக்கிறோம். ஒரு ஆணும் பெண்ணும், அவர்கள் குடும்பம் ஏற்றுக் கொண்டாலும் சரி, ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரி, இரகசியமாக மணம் முடிந்து கொள்வார்கள்.



ரக்ஷாஸ் விவாகம் 
இந்த வகையான திருமணத்தில், மணப்பெண்ணின் குடும்பத்தோடு மணமகன் சண்டையிடுவார். பெண்ணின் சம்மதமில்லாமல் அவளை மணம் முடித்து கையோடு அழைத்து செல்வார்.


பிஷாஷ் விவாகம்
 இந்த வகையில், மணப்பெண்ணை கவனமாக மயக்கி, அவள் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவளை மணம் முடித்துக் கொள்வார். இல்லையென்றால் அவளை மயக்கியோ அல்லது ஊனமாக்கியோ அவளை மணம் முடிப்பார்.

No comments:

Post a Comment