jaga flash news

Wednesday 4 January 2017

மஞ்சளின் மகிமையும் முக்கியத்துவமும்:

மஞ்சளின் மகிமையும் முக்கியத்துவமும்:
மனிதனின் குடும்ப வாழ்க்கைக்கு உப்பும் மஞ்சளும் மிக அவசியமான ஒன்றாகும். ஆண்களுக்கு உப்பும்,பெண்களுக்கு மஞ்சளும் பலம் தரும்.பெண்களின் அடக்க சக்திக்கும் மனவலிமைக்கும் மஞ்சள்தான் காரணம்.
மஞ்சளில்கறிமஞ்சள்,பொன்
குறட்டுமஞ்சள்,கடுக்காய் மஞ்சள், பழுக்காய் மஞ்சள், குட மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், மர மஞ்சள், காட்டு மஞ்சள், குரங்கு மஞ்சள், பலா மஞ்சள், காஞ்சிரத்தின் மஞ்சள், நாக மஞ்சள் என பல வகைகள் உண்டு.
சுத்தமில்லாத பெண்களின் தொப்புள் வழியாக கெட்ட ஆவிகள் உடலுக்குள் நுழைந்துவிடும்.பிறகு அந்த பெண்ணுடன் சூட்சுமமாக உடலுறவில் ஈடுபடும். கணவனுடன் எதற்கெடுத்தாலும் சண்டை போட வைக்கும்.இது பல்லாயிரக் கணக்கான வருடங்களாக நிகழ்ந்துவரும் ஒரு நிகழ்வு ஆகும்.
தீய ஆவிகள் சாந்தி முகூர்த்தத்தின்போது படுக்கை அறைக்குள் வராமலிருக்க மணமகனுக்கும் மணமகளுக்கும் மஞ்சள்காப்புகட்டுகின்றனர் மணமேடைகளில் இருக்கும்போது மஞ்சள் தோய்த்த ஆடைகளை உடுத்துகின்றனர். திருமாங்கல்யக்கயிறும் மஞ்சள்தான்.
மஞ்சள் குங்குமம் என்பது மஞ்சள்பொடி, எலுமிச்சைசாறு, குங்குமப்பூ, பச்சைக்கற்பூரம், பசுநெய்போட்டுத் தயார்செய்வது. இது நெற்றியில் வடு ஏற்படுத்தாது.
எவ்வளவு உயர்ந்த படிப்பு படித்திருந்தாலும் வளமான செல்வங்கள் இருந்தாலும் கணவன் மனைவிக்கிடையே கருத்துவேறுபாட்டுக்குக் காரணம் பெண்கள் மஞ்சள் தேய்த்துக்குளிக்காததும்,அசைவ உணவு சாப்பிடுவதாலும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.மேற்கூறிய காரணங்களால் பெண்களின் உடலில் எதிர்ப்புக்கதிர்வீச்சுகள் கூடுதலாகி பெண்களுக்கே உண்டான வசீகரசக்தி மற்றும் ஆகர்ஷணசக்தி குறைகிறது.(தமிழ்நாட்டில் தெருவுக்கு சில முத்தழகுகள் இருப்பதன் காரணம்புரிகிறதா? தோற்றத்தில் பெண்ணாகவும், நடவடிக்கைகளில் ஆணாகவும் இருப்பதற்கு முக்கிய காரணம் இதுதான்)
மஞ்சள் பூசி குளிக்காத பெண்களின் கணவன்மார்களுக்கு நரம்பு தளர்ச்சியும், ஆண்மைக் குறைவும் உண்டாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. காரணம், பெண்களுக்கு மூன்று மடங்கு உஷ்ணம் அவர்கள் உடலில் இயற்கையாக உள்ளது தான்.
ஒன்று... உணவு சீரணமாவதற்கும், இரண்டு ... மாதவிலக்கு ஆவதற்கும், மூன்று ... கருத்தரிப்பதற்கும் என்று இந்த உஷ்ணத்தை இயற்கையே பெண்களின் உடலில் உருவாக்கி வைத்துள்ளது.
கணவனும், மனைவியும் தாம்பத்திய உறவில் ஈடுபடும்போது, மனைவி உடலில் உள்ள அதிகப்படியான உஷ்ணம் கணவனின் உடலுக்கு கடத்தப்படுகிறது. இதனால், அந்த கணவனுக்கு நரம்பு தளர்ச்சியும், ஆண்மைக் குறைவும் உண்டாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
பெண்கள் மஞ்சள் பூசி குளிக்கும்போது அவர்களது உடலில் உள்ள அதிகப்படியான உஷ்ணம் கட்டுப்படுத்தப்படுகிறது.
அவர்கள், கணவனுடன் உடலுறவு வைத்துக் கொள்ளும்போது, அவர்களது உடல் வெப்பம் கணவனது உடலுக்கு அதிகம் கடத்தப்படாது.
அதனால், கணவனுக்கு ஆண்மைக் குறைவு, நரம்பு தளர்ச்சி போன்ற குறைபாடுகள் ஏற்படுவது தவிர்க்க படுகிறது.
இயற்கையான மஞ்சள்பட்டுத்துணியில் மின்சார சக்தி உள்ளது.இரண்டு கைகளுக்கிடையில் ஒரு சிறிய மஞ்சள் பட்டுக் கைக்குட்டையை வைத்து என்ன மந்திரம் ஜபித்தாலும் அம்மந்திரத்தை ஈர்த்துக்கொள்ளும் சக்தி அக்கைக்குட்டைக்கு உண்டு.மேலும் மேலும் உள்ளங்கைக்கிடையில் வைத்து மந்திரங்களை ஜெபித்து சக்தியூட்டிப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டால் நமக்குப் பாதுகாப்பு.மேற்படி மந்திரங்கள் உருவேற்றியமஞ்சள்பட்டு
கைக்குட்டையை நீரில் நனைக்ககூடாது.துவைக்ககூடாது.
வேறு எந்த வகையிலும் சலவை செய்யக்கூடாது.செய்தால் மந்திரசக்தி போய்விடும்.
பெண்கள் மஞ்சள் அரைத்து உடலெங்கும் பூசி நீராடுவது நல்லது.இதனால், அவர்களுக்கு உடலில் காணும் காந்தல்,தூக்கமின்மை போய்விடும்.மேலும் உடல் சுத்தமடையும்.முகத்தில் களை வரும்.
குழந்தைகள் கறுப்பாக இருந்தாலும்மஞ்சள் பூசிக்குளிக்க வைத்தால் அவர்களின் மேனி பொன்னிறமாக பளபளப்படையும்.

2 comments:

  1. இதற்கு முன்னாலும், மஞ்சளின் மகிமை வந்துள்ளன. வித்யாசமான தகவல் கொடுத்ததாக ஞாபகம்.

    மஞ்சள் ஒரு கிருமி நாசினி. மங்களகரமான செயலுக்கு மஞ்சள் உகந்ததே.

    ReplyDelete