jaga flash news

Tuesday 7 February 2017

கணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் குடும்பத்தில் சொத்து பத்து சேரும் (முன்னோர் மறைத்து வைத்த உண்மை) :

கணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் குடும்பத்தில் சொத்து பத்து சேரும் (முன்னோர் மறைத்து வைத்த உண்மை) :
திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா விஷ்ணுவின் காலை மகா லட்சுமி தாயார் பிடித்து விடுவதாக பல்வேறு கோவில்களில் சிற்பங்கள் மற்றும் உருவப் படங்களைப் பார்த்திருப்போம்.
மகாவிஷ்ணுவும், லட்சுமி தேவியும் தம்பதி சமேதரராக இருப்பதால் இதை நாம் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
ஆனால் இதில் மாபெரும் ஒரு உண்மையை நமது முன்னோர் மறைத்து வைத்திருக்கிறார்கள்.
அதாவது கணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் குடும்பத்தில் சொத்து பத்து சேரும் என்ற உண்மையை மறைத்து வைத்துள்ளனர்.
ஆண்களின் முட்டி பாகம் முதல் பாதத்திற்கு முன்பாக உள்ள கணுக்கால் வரை உள்ள பகுதி சனிகிரகத்தின் ஆளுமைக்கு கீழ் வருகின்றது.
அதே சமயம் பெண்களின் கை பாகத்தை சுக்கிரனின் ஆளுகைக்கு உட்பட்டதாக முன்னோர் ஜோதிட ரீதியாக வகுத்து வைத்துள்ளனர்.
ஆண்களின் முட்டி பாகம் முதல் பாதத்திற்கு முன்பாக உள்ள கணுக்கால் வரை உள்ள பகுதி சனிகிரகத்தின் ஆளுமைக்கு உட்பட்டிருப்பதால், இந்த பகுதியில் பெண் என்ற சுக்கிரனின் கைகள் பட ஆணுக்கு பணம் சிறிது சிறிதாக வந்து சேரும்.
எனவேதான் செல்வத்திற்கு அதிபதியான லட்சுமி தேவி மகாவிஷ்ணுவின் கால்களை பிடித்து விடுவதாக சிற்பங்கள், ஓவியங்கள் வரைந்து வைத்துள்ளனர் நமது முன்னோர்கள்.
கால மாற்றத்தால் ஆண் அதிக்கம், பெண் அடிமைத்தனம் போன்ற பல்வேறு விரும்பத்தகாத நிகழ்வுகளால் இம்முறைக்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியதால் உன்னதமான இந்த நிகழ்வு தற்போது மறைந்து விட்டது வேதனைதான்.
செல்வத்திற்கு அதிபதியான லட்சுமி தேவியே மகாவிஷ்ணுவின் கால்களை பிடித்து விடுவதால் செல்வம் சேரவேண்டும் என அவர்களை வழிபடும் நாமும் குடும்பத்தில் சொத்து பத்து சேர ஜோதிட ரீதியாக நமது முன்னோர் வகுத்து வைத்த உண்மையினை கடைபிடிக்கலாமே!

2 comments:

  1. ஒரு சதவீதம் தவிர, மற்ற குடும்பங்களில், இந்த பழக்கம் இன்னும் தொடரத்தான் செய்கிறது. I mean பண்பான, பழைய பழக்க வழக்கங்களை கடைபிடிக்கிற குடும்பங்களில் இன்னும் தொடர்கிறது என்பது உண்மை.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete