jaga flash news

Thursday 7 March 2019

ஈசனும் தீ யும்:



ஈசனும் தீ யும்:
தீ நெருப்பு என்பது ஈசனால் உருவாக்கப்பட்ட பஞ்ச பூதங்களில் ஒன்று. தீ க்கு கனல்,தணல்,நெருப்பு என்ற பெயர்கள் உண்டு. இது ஒவ்வொன்றுக்கும் ஒரு அர்த்தம் உண்டு. தீ என்றால் தீவிரம்; நெருப்பு என்றால் நேர்மை; கனல் என்றால் கண்டிப்பு; தணல் என்றால்
தண்டிப்பு. இவைகள் கவித்துவமான உவமைகள் அல்ல. உண்மையில் வெப்பத்தின் தன்மையே இயல்பே இதுதான். ஐம்பூதத் தளங்களில் நெருப்புக்கான தளம் திருவண்ணாமலை யாகும். ஈசனால் உருவாக்கப் பட்ட வெப்பம் ஈசனைப் போன்றே கடமை தவறாத போர்வீரன். தீ சிறு பொறி யாக இருப்பினும் நெருப்புக் கோளமாக கதிரவனாக இருந்தாலும் தான் எடுத்துக் கொண்ட பணியை செய்து முடிப்பதில் வெப்பத்திற்கு நிகர் இல்லை.வெப்பத்தை பிரபஞ்சத்தின் இதயம் எனலாம். ஆகவே பிறப்பு முதல் இறப்பு வரை துடித்துக் கொண்டே இருக்கும் இதயத்தை உடம்பின் கதிரவன் எனலாம்.
இதைத்தான் மணிவாசகர் தனது திருவாசக சிவபுராண த்தில் 
" மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
நேசனே தேனாரமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே" என்கிறார். இதையே அவர் திருவாசக திருவார்த்தை யில் 
"மாதிவர் பாகன் மறைபயின்ற
வாசகன் மாமலர் மேயசோதி
.............
தாதி பிரமம் வெளிப்படுத்த
அருளறி வாரெம்பி ரானாவாரே" என்கிறார்
அதாவது "ஈசன் பெண்ணின் இட பாகத்தில் இருப்பவன்; மறைகளை கூறியவன்; மலர் போன்ற இதயத்தில் ஒளி விளக்கானவன்"என்கிறார். 
இதையே திருமூலர் தனது திருமந்திரத்தில் 
"அணைதுணை அந்தனர் அங்கியுள் அங்கி
அணைதுணை வைத்ததன்
உட்பொருள் ஆன
இணைதுணை யாமத்து இயங்கும் பொழுது
துணையணை ஆயதுஓர்
தூயநெறி யாமே" 
இதன் பொருள் "அடியார்கள் வளர்க்கின்ற தீயுனுள் தீயாக
இருக்கக்கூடிய ஈசனே சிவபெருமானே உயிர்களுக்குத் உயிராகவும் துணையாகவும் இருப்பவன்" என்பதாகும். 
நெருப்பைப் போல இருப்பது 
அழிவு குணமல்ல. அது நேர்மையின் கடமையின் அடையாளம். அது ஆக்கத்து க்கான குணம்.வெப்பத்தால் ஒன்று அழிகிறது என்றால் இன்னொன்று பிறக்கிறது என்று பொருள். ஈசன் தனது 
மூன்றாவது கண்ணான நெருப்பினை வெளிப்படுத் துவது என்பது தீயனை அழித்து நன்மையை உரு வாக்கத்தான். வெப்பம் இல்லைஎனில் மழை இல்லை. உண்மைக்கு நேர்மைக்கு ஆக்கல் அழித்தல் காத்தல் அதோடு அருளுவது ஆகியவற்றின் மூலமான ஈசனின் மறு உருவம்தான் ஒளி, நெருப்பு,
கனல், தணல் ஆகும். 
எனவே கோள வடிவிலான ஆதியும் அந்தமுமில்லா
அருட்பெருஞ்ஜோதியான ஈசனை நெஞ்சுருக வேண்டி அவனருளைப் பெறுவோம். 
ஓம்நமச்சிவாய சிவாயநம திருச்சிற்றம்பலம்.

1 comment: