jaga flash news

Saturday 28 March 2020

தினமும் இந்த 2 வார்த்தைகளை உச்சரித்தால் பணம் சேரும்.

பணம் சேருவதற்காக நாம் எத்தனையோ பரிகாரங்களையும், எத்தனையோ வழிபாட்டு முறையையும் பின்பற்றி பார்க்கின்றோம். தினம் தோறும் நாம் இரண்டு வார்த்தைகளை உச்சரிப்பதன் மூலம் பணம் சேரும் என்று சொன்னால் அதை பின்பற்றி பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது. இது ஒரு சின்ன முயற்சிதான். இந்த இரண்டு வார்த்தையில் என்ன ரகசியம் மறைந்துள்ளது? எப்போது இந்த இரண்டு வார்த்தையை சொல்ல வேண்டும்? என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

curd

பொதுவாகவே தயிர் என்பது மகாலட்சுமிக்கு இணையாக சொல்லப்படும் ஒரு பொருள். இந்தத் தயிரை முடிந்தவரை கடைகளிலிருந்து வாங்காமல், நம் வீட்டிலேயே உறை போடுவது நமக்கு லட்சுமி கலாட்சத்தை தேடித்தரும். இது நிதர்சனமான உண்மை. தினந்தோறும் எந்த வீட்டில் இரவு நேரத்தில் தயிர் உறை ஊற்றப்படுகிறதோ, அந்த வீட்டில் மகாலட்சுமி நிச்சயம் தங்குவாள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த தயிரை உறை போடும் போதும், காலையில் கையில் எடுக்கும் போதும் தான் இந்த வார்த்தையை நாம் சொல்லி மகாலட்சுமியின் அருளைப் பெற போகின்றோம்.

முதல்நாள் இரவு பாலில் உறை போடும்போது ‘சேமிரி’ என்ற வார்த்தையை சொல்லி உறை ஊற்றுங்கள். காலையில் பால் கெட்டிதயிராக மாறியிருக்கும். அதை உங்கள் கைகளில் முதன்முதலில் எடுக்கும்போது ‘பெருகு’ என்ற வார்த்தையை சொல்லி எடுக்க வேண்டும். அதாவது இரவு நேரத்தில் உறை போடுவது சேமிப்பிற்கான அடித் தளத்தையும், மறுநாள் காலை அது பெருகி தயிராக மாறுவது, நம் செல்வத்தை பெருக்குவதையும் குறிக்கிறது. இது உண்மையான ஒன்று

No comments:

Post a Comment