jaga flash news

Monday 30 March 2020

ஏகாதசிகளும்... அதன் பலன்களும்

விரதங்களில் தலைசிறந்தது ஏகாதசி விரதமே. இந்த விரத மகிமையினால் ஆகாதது ஒன்றுமே இல்லை. ஆண்டிற்கு 25 ஏகாதசிகள் வருகின்றன. அவை முறையே கிருஷ்ண பட்சத்தில் (தேய்பிறை), சுக்ல பட்சத்தில் (வளர்பிறை) வரும். சில ஆண்டுகள் ஓர் ஏகாதசி அதிகமாக வரலாம். அதை கமலா ஏகாதசி என்று அழைப்பார்கள். மேற்கண்ட 25 ஏகாதசிகளுக்கும் ஒவ்வொரு கதை உண்டு. இவற்றில் சிறப்பு வாய்ந்தது வைகுண்ட ஏகாதசி என்பதாகும். அந்த ஏகாதசிகளின் பெயர்களையும் அந்த விரதத்தால் ஏற்படும் பயன்களையும் அறிவோம்.

01 சித்திரை_மாதம்_கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி "பாப மோகினி" என்று அழைக்கப்படுகிறது.

02 சித்திரை_மாதம்_சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசியை "காமதா" என்கிறார்கள்.

03 வைகாசி_மாதம்_கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி "வருதித்" எனப்படும்.

04 வைகாசி_மாதம்_சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசியை "மோகினி" என்பார்கள்.

05 ஆனி_மாதம்_கிருஷ்ண பட்சத்தில் வருவது "அபார" ஏகாதசியாகும்.

06 ஆனி_மாதம்_சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி "நிர்ஜலா" என்றழைக்கப்படும்.

07 ஆடி_மாதம்_கிருஷ்ண பட்சத்தில் வருவது "யோகினி" ஏகாதசியாகும்.

08 ஆடி_மாதம்_சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி "சயனி" என்று அழைக்கப்படுகிறது.

09 ஆவணி_மாதம்_கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசியை "காமிகா" என்பார்கள்.

10 ஆவணி_மாதம்_சுக்ல பட்சத்தில் வருவது "புத்ரஜா" ஏகாதசியாகும்.

11 புரட்டாசி_மாதம்_கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி "அஜா" எனப்படும்.

12 புரட்டாசி_மாதம்_சுக்ல பட்சத்தில் வருவது "பத்மநாபா" ஏகாதசியாக உள்ளது.

13 ஐப்பசி_மாதம்_கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி "இந்திரா" ஏகாதசி என்றழைக்கப்படுகிறது.

14 ஐப்பசி_மாதம்_சுக்ல பட்சத்தில் வருவது "பாபங்குசா" ஏகாதசியாகும்.

15 கார்த்திகை_மாதம்_கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி "ரமா" ஏகாதசி எனப்படும்.

16 கார்த்திகை_மாதம்_சுக்ல பட்சத்தில் வருவது "பிரபோதின" ஏகாதசியாகும்.

17 மார்கழி_மாதம்_கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசியை "உற்பத்தி" என்றழைப்பார்கள்.

18 மார்கழி_மாதம்_சுக்ல பட்சத்தில் வருவது "மோட்ச" (வைகுண்ட) ஏகாதசி எனப்படுகிறது.

19 தை_மாதம்_கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசியானது "சுபலா" எனப்படும்.

20 தை_மாதம்_சுக்ல பட்சத்தில் வருவது "புத்ரதா" ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.
.
21 மாசி_மாதம்_கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசியை "ஷட்திலா" என்கிறார்கள்.

22 மாசி_மாதம்_சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசியானது "ஜயா" எனப்படுகிறது.

23 பங்குனி_மாதம்_கிருஷ்ண பட்சத்தில் வருவது "விஜயா" ஏகாதசி என்றழைக்கப்படும்.

24 பங்குனி_மாதம்_சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி "ஆமலகி" எனப்படும்.

25 ஆண்டில் கூடுதலாக வரும் ஏகாதசி "கமலா ஏகாதசி" எனப்படும். அன்று மகாலட்சுமியை வழிபடுவது சிறப்பு.

அம்பரிஷன் என்னும் மன்னன் விஷ்ணுவின் மீது அதீத பக்தி கொண்டிருந்தான். ஒரு வருடம் முழுவதும் ஏகாதசி விரதம் இருந்து விஷ்ணுவின் அருளைப் பெற்றான். 🍀ஒருமுறை மன்னன் ஏகாதசி விரதம் இருந்து அதை முடிக்கும் வேளையில் துர்வாச முனிவர் அங்கு வந்தார். மன்னன் அவரை வரவேற்று உணவு உண்ண வரும்படி அழைத்தார். முனிவரும் சம்மதித்து ஆற்றில் நீராடி விட்டு வருவதாக கூறிச் சென்றார்.

வெகு நேரமாகியும் முனிவர் வரவில்லை. விரதம் முடிவதற்குள் மன்னன் சாப்பிடவில்லை என்றால் விரத பங்கம் ஏற்பட்டு விடும். இதனால் அவர் துளசி தீர்த்தத்தை அருந்தி உபவாசத்தை முடித்துக்கொண்டார். இதை அறிந்த துர்வாச முனிவர் கடும் கோபம் கொண்டார். தனது சிகையில் இருந்து ஒரு முடியை பிடுங்கி அதை அம்பரிஷனை கொல்வதற்கு ஏவினார். அது பூதமாக மாறி மன்னனை துரத்தியது.

மன்னன் விஷ்ணுவை பிரார்த்தனை செய்தான். உடனே விஷ்ணுவின் சக்கராயுதம் துர்வாசரை துரத்தியது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மும்மூர்த்திகளிடம் சரண் அடைந்தான். 

No comments:

Post a Comment